WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,860
Date uploaded in London – 12 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்
प्रभु पहिचानि परेउ गहि चरना। सो सुख उमा जाइ नहिं बरना॥
पुलकित तन मुख आव न बचना। देखत रुचिर बेष कै रचना॥3
பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டார்.. உடனே அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினார். பக்தரான ஆஞ்சநேயர் தன்னை ஆளும் தலைவனைக் கண்டு கொண்ட அந்தக் காட்சி பார்வதிக்குக் கதை சொல்லிவந்த சிவபெருமான் புளகாங்கிதம் அடைந்து பார்வதியிடம் சொல்கிறார் “பார்வதி! அந்த சுகத்தை வர்ணிக்க முடியாது.. உடல் புளகாங்கிதம் அடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாத நிலை. அவர் பகவானின் அழகிய வேடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”
பாகவதத்தில் சொல்லியபடி
न वै जनो जातु कथञ्चनाव्रजेत्
मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम् ।
स्मरन्मुकुन्दाङ्घ्र्युरपगूहनं पुनः
विहातुमिच्छेन्न रसग्रहो जनः ॥ १९ ॥
முகுந்தனை (விஷ்ணுவை) ஒருமுறை சேவித்தவன்,
அவனைத் தவிர்த்து வேறு வழியில் சஞ்சரிக்க விரும்பமாட்டான்.
அவன் திருவடிகளை நினைத்தவுடன்,
அவனிடமிருந்து விலக விரும்பாதான்,
ஏனெனில் அவன் உண்மையான ரஸத்தை (பரம ஆனந்தத்தை) அனுபவித்துவிட்டான்.
இந்த ஸ்லோகம் பக்தியின் உச்ச நிலையை சித்தரிக்கிறது:- முகுந்தன் என்பது விஷ்ணுவின் முக்தி தரும் வடிவம்.- ஒருவர் முகுந்தனை உண்மையாக சேவித்துவிட்டால்,அவர் சம்சாரம் (பிறவிப் பந்தம்) போன்ற மாயை வழிகளை மீண்டும் நாடமாட்டார்.- முகுந்தனின் திருவடிகளை நினைத்தவுடன்,அந்த பரம ஆனந்தம் அவரை மீண்டும் வேறு எதற்கும் செல்ல முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.- இது ரஸானுபவம் – பக்தியின் அமிர்தம்.
– “रसग्रहो जनः“ – உண்மையான ரஸம் (ஆனந்தம்) பெற்றவன், மாயை, சம்சாரம், வேறு தேவைகள் அனைத்தையும் விட்டு விடுகிறான்.- இது பக்தி யோகத்தின் உச்ச நிலை –அனுபவம், நினைவு, மற்றும் அழிவில்லா ஈர்ப்பு.
முகுந்தன் திருவடி நினைத்தவுடன்,
மாயையின் வலை கிழிந்ததடி!
சஞ்சாரம் எனும் சுழற்சி நின்றது,
சதாசிவம் போல ஆனந்தமடி!
—-
ஒருமுறை முகுந்தனைச் சேவித்தால்,
மீண்டும் பிறவிக்கு இடமில்லை!
திருவடியில் விழும் என் மனம்,
திரும்பிப் போகும் வழியில்லை!
अतिसय प्रबल देव तव माया।
छूटइ राम करहु जौं दाया।।
பகவானை அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். எப்படி கண்டு கொண்டான்? இரண்டுவிதமாக ஒன்று அசரீர் குரல்
कस्यप अदिति महातप कीन्हा। तिन्ह कहुँ मैं पूरब बर दीन्हा॥
ते दसरथ कौसल्या रूपा। कोसलपुरीं प्रगट नर भूपा॥2
இராவணனின் கொடுமையால் தேவர்களும் பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் “கவலையை விடுங்கள். முனிவர் காஷ்யபரும் அவரது மனைவியும் நான் அவர்கட்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்துள்ளனர். அவர்கள் தசரதராகவும் கோசலையாகவும் பிறந்து மனிதர்களாக கோசல நாட்டில் உள்ளனர். அவர்கள் மகனாக நான் அவதாரம் எடுப்பேன்” என்று சொன்னார். தற்பொழுது ஹனுமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் கோசலை அரசன் தசரதனின் மகன்’ என்று சொன்னார். இரண்டையும் இணைத்து வந்திருப்பவன் பகவான் மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இது போக நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது.
நாரதர் இராமனுக்கு சாபம் இட்டார் என்ற கருத்து, அத்யாத்ம ராமாயணம் மற்றும் சிவபுராணம் போன்ற தத்துவ ரீதியான புராணங்களின் ஒரு ஆழமான விளக்கம் ஆகும். இது இறைவன் ஏன் மனிதராக அவதரிக்க வேண்டியது ஏற்பட்டது என்பதை விளக்கும் ஒரு கதை.
கதைச் சூழ்நிலை:
ஒரு முறை, சிவபெருமான் பார்வதிக்கு இராமரின் அவதார ரகசியத்தை விளக்குகிறார். பார்வதி கேட்கிறாள்: “ராமர் ஜய-விஜயன் சாபத்தால் அவதரித்தாரா?”சிவபெருமான் பதிலளிக்கிறார்: “இல்லை, நாரதரின் சாபத்தினால்தான் திருமால் ராமராக அவதரித்தார்”.
சாபக் கதை:
நாரதர், ஒரு சமயம் தபசில் ஈடுபட்டிருந்தார். தபசின் முடிவில், அவர் மனதில் ஒரு சிறிய அகந்தை கொண்டார்: “நான் காமத்தை வென்றவன்!”
அதைக் கண்டு விஷ்ணு, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.
அவர் மாயையால் உருவாக்கினார் — ஒரு அழகிய ராஜகுமாரி, ஒரு மன்னன், ஒரு திருமண சூழ்நிலை.
நாரதர், அந்த ராஜகுமாரியை விரும்பி, திருமணத்திற்காக விஷ்ணுவிடம் அழகான முகம் வேண்டினார்..ஆனால் விஷ்ணு, வானர முகம் (குரங்கு முகம்) கொடுத்தார்..
திருமணத்தில், ராஜகுமாரி மற்றொரு அரசனைத் திருமணம் செய்தாள், நாரதர் உண்மையை உணர்ந்தார். – கோபத்தில், நாரதர் விஷ்ணுவை சபித்தார்:.“நீயும் மனிதராக பிறந்து,மனைவியை இழந்து,வானர உதவியால் தேட வேண்டிய நிலைக்கு வருவாய்!”- இதுவே ராமாவதாரத்தின் தத்துவ ரீதியான காரணம்
இறைவன், சாபத்தின் வழியே தர்மத்தை நிலைநிறுத்த மனிதராக அவதரிக்கிறார்.
தத்துவ விளக்கம்:
-நாரதரின் சாபம் என்பது மனித வாழ்வின் சோதனைகளை இறைவன் தானே அனுபவிக்க வேண்டும் என்பதற்கான தத்துவ அடிப்படை.
அஹங்காரம், மாயை, விரகி, தர்மம், பக்தி — இவை அனைத்தும் இந்தக் கதையில் பின்னப்பட்டுள்ளன.
இறைவன் கூட மனிதனாக, துன்பம் அனுபவித்து, தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கான புராண ரீதியான விளக்கம்.
“बंचेहु मोहि जवनि धरि देहा। सोड़ तनु धरहु
श्राप मम् एहा॥ कापि आकृति तुम्ह कीन्हि हमारी। कारिहहिं कीस सहाय तुम्हारी॥ म्र अपकार कौनह तुम्ह
भारी। नारि बिरह तुम्ह होब दुखारी॥”
இங்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. பத்ம இராமாயணம் என்ற இராமாயணத்தில் இராமனின் இளமைக் கால விளையாட்டுகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் இளம்வயதில் இராமன் குரங்ககுகளுடன் விளையாட ஆசைப்பட்டதாகவும் அதற்காக குரங்குகள் வரவழைக்கப்பட்ட்டதாகவும் ஆனால் இராமனுக்கு அந்த குரங்குகள் பிடிக்காததால் வசிஷ்டர் அஞ்சனையின் மகனான் ஹனுமனைக் கொண்டு வந்ததாகவும். இராமன் ஹனுமனுடன் விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. இராமனுக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்கச் சென்றபோது ஹனுமன் மீண்டும் அஞ்சனையிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.
சில உரையாசிரியர்கள் விஸ்வாமித்திரர் தாடகையின் வாதத்திற்காக இராமனையும் இலக்ஷ்மணனையும் கூட்டிச் சென்றபோது ஹனுமன் அவர்களிடமிருந்து பிரிந்ததாகவும் சொல்லப்படுக்றது. இதனால் ஹனுமனுக்கு இராமனின் அடையாளம் புரிந்தது என்றும் சொல்கிறார்கள்.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சூரியன் ஹனுமனின் குரு. அவருக்கு வேதங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர், ஆப்பொழுது அவர் ஹனுமனிடம் “எனது அம்சமாக சுக்ரீவன் பூமியில் வானரனாகத் தோன்றுவான். அவனுக்கு அசம்பாவிதம் உண்டாகும்.. அப்போது நீ அவனுக்குத் துணை நிற்கவேண்டும். இதனால் உனக்கு நல்லது நடக்கக்கூடும். மாகாவிஷ்ணு பூமியில் மனிதனாக அவதாரம் எடுப்பார், அப்போது அவரது மனைவி அபஹரிக்கப்படுவாள்,, அவளைத் தேடிக்கொண்டு அவர் அங்கு வருவார்” என்று சொல்லி இருந்தார். அதனால் இராமனை எளிதில் அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.
**