Written by London Swaminathan
Post No. 15,936
Date uploaded in London – 2 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 5; Mantra 31
ந கர்மணா ந ப்ரஜயா தனேன
த்யாகேனை கே அம்ருதத்வ மானசு:
—கைவல்யோபநிஷதம் 2
கர்மத்தினாலன்று, மக்களைப் பெறுவதாலன்று, செல்வத்தாலன்று, தியாகத்தாலேயே பரம்பொருளை அடைந்தனர்
தியாகம் – எல்லாவற்றையும் துறப்பது ; மனமுவந்து வித்துவிடுவது.
न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः परेण नाकं निहितं गुहायां विभ्राजते तद्यतयो विशन्ति
— Kaivalya Upanishad also in Sanyasa suktam
na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .
pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate tadyatayo viśanti||
****
32
உமாஸஹாயம் பரமேச்வரம் ப்ரபும்
த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம்
த்யாத்வா முனிர் கச்சதி பூதயோனிம்
ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத்
—கைவல்யோபநிஷதம் 7
உமா தேவியைத் துணையாகக் கொண்டிருப்பவ
னை, தேவிக்குத் தலைவனை, பரமேஸ்வரனை, ஆண்டவனை, முக்கண்ணனை , நீலகண்டனை, பராமசாந்தி மூர்த்தியை, தியானித்து , உயிர்களுக்கெல்லாம் பிறப்பிடமாயிருக்கிற, அனைத்துக்கும் சாக்ஷியாயிருக்கிற , அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனாயிருக்கிற அந்த சிவனை , ஒரு முனிவன், அடைகிறான்.
कैवल्योपनिषद् (Verse 7)
उमासहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं प्रशान्तम्।ध्यात्वा मुनिर्गच्छति भूतयोनिं समस्तसाक्षिं तमसः परस्तात्॥
Mantra 7 — Kaivalya Upanishad
Umasahayam paramesvaram prabhum, trilochanam nilakantam prasantam |
Dhyatva munirgacchati bhutayonim, samastasakshim tamasah parastat || 7 ||
****
33
தாம் யோகமிதி மன்யந்தே ஸ்திரம் இந்திரிய தாரணாம்
அப்ரமத்த: ததா பவதி யோகோ ஹி ப்ரபவப்யயெள–கடோபநிஷதம் 6-11
உறுதியான இந்திரிய நிக்ரகத்தை ( புலன்களின் கட்டுப்பாட்டினை) யோகம் என்று சொல்லுகின்றனர். அதனால் யோகி கவனமாக இருக்க வேண்டும்.; ஏனெனில் யோகம் பெறவும் இழக்கவும் வல்லது.
Verse 2.3.11 of the Katha Upanishad
तां योगमिति मन्यन्ते स्थिरामिन्द्रियधारणाम् ।
अप्रमत्तस्तदा भवति योगो हि प्रभवाप्ययौ ॥ ११ ॥
tāṃ yogamiti manyante sthirāmindriyadhāraṇām |
apramattastadā bhavati yogo hi prabhavāpyayau || 11 ||
****
34
யுஜேவாம் ப்ரஹ்ம பூர்வ்யம் நமோபிர்
விச்லோக ஏது பத்யேவ ஸூரே:
ச்ருண்வந்து ஸர்வே அம்ருதஸ்ய புத்ரா ஆ
ஏ திவ்யானி தாமானி தஸ்து:
—ஸ்வேதாச்வதரோபநிஷத் 2-5
சான்றோர்களுடைய வழியிலேயே சென்று பரம் பொருளாகிய பிரம்மத்தின் கண் உங்கள் இருவரையும் தியானத்தால் சேர்ப்பேன். போற்றுதற்குரிய பழம்பொருள் எப்போதும் ஒளிவீசட்டும். தேஜோ மண்டலத்தில் வசிப்பவர்களாகிய அம்ருதத்தின் (அழியாத பொருளின் ) புதல்வர்களே! நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள் !
Or
உங்களுடைய பழைய பிரார்த்தனையையும் துதிகளையும் நான் சேர்த்துச் சொல்கிறேன் ; என்னுடைய இந்த துதியானது சான்றோர்களுடைய வழியில் செல்லட்டும்; (மேல் உலகத்தை அடைந்தவர்களும்) அம்ருதத்தின் (அழியாத பொருளின் ) புதல்வர்களே! நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள் !
(from the Rigveda 10.13.1 and Shvetashvatara Upanishad 2.2)
युजे वां ब्रह्म पूर्व्यं नमोभिर्वि श्लोक एतु पथ्येव सूरेः।
शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आ ये धामानि दिव्यानि तस्थुः॥
****
35
திலேஷு தைலம் ததினீவ ஸர்வபிராப :
ஸ்ரோத: ஸ்ரவணீஷு சாக்னி:
ஏவமாத்மா (அ)த்மனி க்ருஹ்யதே (அ)செள
ஸத்யேனைனம் தபஸா யோ(அ)னுபச்யதி
–ஸ்வேதாச்வதரோபநிஷத் 1-15
எள்ளில் எண்ணெய் போன்றும், தயிரில் வெண்ணெய்
போன்றும், மரக்கட்டையில் தீ போன்றும் பரமாத்மன் நம்முள் — ஜீவாத்மாவின்கண் — மறைந்துள்ளான் .

ஒப்பிடுக –
“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”.
—திருநாவுக்கரசர் தேவாரம்
तिलेषु तैलं दधिनीव सर्पि-
रापः स्रोतःस्वरणीषु चाग्निः ।
एवमात्माऽत्मनि गृह्यतेऽसौ
सत्येनैनं तपसायोऽनुपश्यति ॥ १५॥
सर्वव्यापिनमात्मानं क्षीरे सर्पिरिवार्पितम् ।
आत्मविद्यातपोमूलं तद्ब्रह्मोपनिषत् परम् ॥ १६॥
tileṣu tailaṃ dadhinīva sarpi-
rāpaḥ srotaḥsvaraṇīṣu cāgniḥ .
evamātmā’tmani gṛhyate’sau
satyenainaṃ tapasāyo’nupaśyati .. 15..
sarvavyāpinamātmānaṃ kṣīre sarpirivārpitam .
ātmavidyātapomūlaṃ tadbrahmopaniṣat param Shvetashvatara Upanishad 1.15–16;
To be continued………
Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், Part 5, ஸ்வேதாச்வதரோபநிஷத், எள்ளில் எண்ணெய் போன்றும், கைவல்யோபநிஷதம்