HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 79; இந்து மத கலைச்சொல் அகராதி- 79 (Post15,964)

Written by London Swaminathan

Post No. 15,964

Date uploaded in London – 9 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

“P” words continued………………….

பரசுராம்

ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் பிராமணராகப் பிறந்த பரசுராமர் பத்து அவதாரங்களில் ஒருவர் ஆவார் ; சூழ்நிலை காரணமாக க்ஷத்ரிய குணங்களை மேற்கொண்டு 21 க்ஷத்ரியர் தலைமுறைகளை அழித்தார்.

முதல் சம்பவம்

மனைவி ரேணுகாவின் எண்ணம் தவறான வழியில் செல்வதையே அறிந்த பரசுராமர் தாயாரைக் கொள்ளும்படி தனது ஐந்து பிள்ளைகளுக்கு கட்டளை இடுகிறார் ; முத்தாக நமக்கு சகோதரர்களும் மறுத்துவிடவே அவர்களை ஜமதக்கினி மந்திரம் மூலம் வீழ்த்துகிறார் ; கடைசி பிள்ளையான பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லி தாயை வீழ்த்துகிறார் ; மனம் மகிழ்ந்த ஜமதக்கினி மகனே உண்துசெயலை மெச்சினேன் ஏதேனும் ஒரு வரம் கேள் என்கிறார் ; எனது தாயும் நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் ; மேலும் முன்னர் நடந்த அசம்பாவிதம் எதுவும் அவர்களுக்கு நினைவிருக்கக் கூடாது என்று வரம் கே ட்டார்   ஜமதக்கினியும் அப்படியே ஆகுக (ததாஸ்து) என்றார் .

அடுத்த சம்பவம்

கார்த்தவீரியன் என்ற மன்னன் , ஒரு முறை ஜமதக்கினியின் ஆஸ்ரமத்தில் புகுந்து அவரர் வைத்திருந்த பசுவை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றான் .உடனே பரசுராமர், அவன் பின்னால் சென்று அவனைக் கொன்று விடுகிறார் . சிறிது காலம் சென்றபின்னர் கார்த்த வீர்யனின் மகன்களை  கள், ஜமதக்கினி முனிவர் தனியாக இருந்தபோது அவரைக்கொன்று விட்டனர் ; இதை அரித்த பரசுராமர் கார்த்தவீர்யனின் மகன்களையும் துணைக்கு வந்த க்ஷத்ரியர்களையும் வெட்டி வீழ்த்துகிறார் .

அத்தோடு நில்லாமல் 21 க்ஷத்ரியர்களாக்கிக் கொன்று குவிக்கிறார்.  கேரளத்துக்கு  வந்து கடல் சார்ந்த உவர் நிலத்தை மீட்டு, மக்களுக்கு நிலம் அளித்தார். தன்னனுடைய வெறுப்பும் பகைமையும் தணிந்த பின்னர் தன்னுடைய புண்ணியத்தையும் தானம் செய்துவிட்டு, காட்டுக்குப் போய்விடுகிறார் .

ராமரிடம் இவர் தோற்றுப்போன விஷயத்தை உலகப் புகழ்பெற்ற காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் விரிவாக்கப் பாடியிருக்கிறான்.

பல பரசுராமர்கள் !

காலத்துக்குப் பொருந்தாத இரண்டு கதைகள் பரசுராமர் பெயரில் உள்ளன ; பல பரசுராமர் இருந்திருக்க வேண்டும்   என்பது இதனால் தெளிவாகிறது  . அம்பாவின் வேண்டுகோளை ஏற்று இவர் பிபீஷ்மருடன் சண்டை போட்டதாகவும் அது வெற்றி தோல்வி இல்லாமல் நீடிக்கவே இருவரும் ஆயுதங்களைக் கீ ழே போட்டார்கள் என்பதும் ஒரு கதை

பரசுராமர் , ஆயு தங்கள் பற்றிக் கற்பித்தபோது , கர்ணன், பிராமண வேடத்தில் வந்ததை ஒரு சம்பவம் மூலம் கண்டுபிடித்த பரசுராமர் , அவனுக்குச் சாபம் இட்டதாகவும் இன்னுமொரு கதை மஹாபாரதத்தில் உளது ; ராமாயண மஹாபாரத பரசுராமர் ஒரே காலத்தில் இருந்திருக்க முடியாது . ஆகவே இரண்டு அல்லது மூண்டு பரசுராமர் இருந்திருக்க வேண்டும் .

இது போன்ற குழப்பங்கள் ஆஞ்சாசனேயர்- பீமன் மோதல் கதைகளிலும் உண்டு !

***

பசுபதி

சிவபெருமானுக்குள்ள ஒரு பெயர் . பசு என்றால் இப்போது தமிழில் பசு மாடு என்று நினைக்கிறோம் ஆனால் சம்ஸ்க்ருதத்தில் பிராணிகள் என்ற பொதுப்பெயர் அதிகம் புழக்கத்தில் உள்ளது ; சிவா பெருமான், பிராணிகளுக்கு எல்லாம் தலைவன் என்பதே வேதத்தில் உள்ளது சிவபுராணம் போன்ற பிற்காலப் புராணங்களும் அதை உறுதி செய்கின்றன . பிரம்மா விஷ்ணு, இந்திரன் முதலானோர் இதை அறிந்து வெற்றி கோஷமிட்டனர் என்பது புராணக்   கதை. 

மத்திய கிழக்கில் கிடைத்த ஒரு உருவத்தில் அந்த ஊர் தெய்வத்தைச் சுற்றியும் அயர்லாந்திலுள்ள ஒரு உள்ளூர் தெய்வத்தை சுற்றி யும், செயின்ட்  பிரான்சிஸ்  என்ற கிறிஸ்தவ மஹானைச்  சுற்றியும், சிந்து சமவெளியில் ஒரு முத்திரையிலுள்ள கடவுளை சுற்றியும் மிருகங்கள் நிற்கின்றன. அவை எல்லாம் பசுபதி முத்திரைகளே !

***

மயில் PEACOCK

இந்தியாவின் தேசீயப்பறவை  மயில்; இடி முழக்கம் போன்ற டமார ஓசையைக் கேட்டு இது தொகை வித்தாடியதைக் கண்டு பாபிலோனிய மன்னர்கள் அசந்தே போயினர் ; அக்காலத்தில் இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது ; ஈசாப் கதைகளில் மயில் வருவதால் அவர் இந்தியாவிலிருந்து கதைகளைத் திருடியதும்  தெரிகிறது ; மயில் வளர்த்த ஜாதியினரைக்கொண்டு மெளரிய சாம்ராஜ்யத்தை சாணக்கியன் உருவாக்கினான் ; மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பாரி வள்ளல்; முருகனுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம் மயில்.

***

முத்து PEARL

ஆங்கிலத்தில் பேர்ல் PEARL  என்று அழைக்கப்படும் சொல் பரல் , ப்ரவாள என்ற தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது . தமிழ் நாட்டிலிருந்து, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது . பாண்டிய நாடு முத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெயர்பெற்றது . இந்துக்களின் கணக்குப்படி நவத்தினங்களில் முத்தும் பவளமும் அடங்கும் ; ஆயினும் இரண்டும் KATAL பிராணி களிலிருந்து  கிடைப்பவை; யானை, காட்டுப்பன்றி மூங்கில் முதலிய இடங்களிலும் முத்து பிறக்கும் என்றும் சுவாதி நட்ஷத்திரத் தன்று கடலில் பெய்யும் மழை யே முத்து உற்பத்திக்குக் காரணம் என்றும் சம்ஸ்க்ருத நூல்கள் இயம்புகின்றன . முத்து நகைகள் தெய்வங்களையும் மக்களையும் அலங்கரிக்கின்றன ; சம்ஸ்க்ருதத்தில் முக்த என்று சொல்லுவார்கள்.

***

பிங்கல அல்லது  பிங்கள PINK

சம்ஸ்க்ருத நூல்களில் 15-க்கும்  மேலான பிங்கல  பெயர்கள் உள்ளன .

உத்தவ் என்ற யதாவத் தலைவரின் மனைவி பெயர்;

அந்தக என்னும் ராக்ஷஸனின் ரத்தத்தை குடிக்க இறைவி உண்டாக்கிய மானசீக புத்திரனின் பெயர் ; இது மத்ஸ்ய புராணத் தகவல.

சூர்யதேவனின் இருபுறமும் பிங்கல தண்டி என்போர்  நிற்கிறார்கள் ; பிங்கல கைகளில் தாமரை மலர்கள் இருக்கும்;

காஸ்யபருக்கும் கத்ருவுக்கும் பிறந்த ஒரு நாகத்தின் பெயர்;

ஒரு முனிவரின் பெயர்;

யக்ஷர் தலைவன்; சிவபெருமானிடம் மயானத்தில் இருப்பவன்;

பஞ்ச  தந்திரக்கதைகளில் ஒரு சிங்கத்தின் பெயர் ; நிறத்தினால் அமைந்த பெயர்;

பத்ம புராணத்தில் ஒரு பிராமணன் பெயர் ; அவ்னது மனையில் அவனைக் கொள்ளவே இருவரும் கிலியும் பருந்துமாகப் பிறந்து ஒருவரை ஒருவர் பழிவாங்கினர்; கணேச புராணத்தில் ஒரு ராக்ஷஸனின் பெயர்; அவன் ஒரு பயணியை விரட்டி வந்தான். இருவரும் தங்கிய மரத்தின் கீழ் கணேசர் சிலை இருந்ததால் இருவரும் முக்தி பெற்றார்கள்

நான்கு கதைகளில் ஒரு விலைமாதின் பெயர் ;

ஆனந்த ராமாயணத்தில் வரும் பிங்களா ராமபிரானை காம எண்ணத்துடன் அணுகியபோது இந்த இப்பிறப்பில் இறுமாதராய்ச்ஜ் சிந்தையாலும் தொட்டேன்; ஆகையால் கிருஷ்ணாவதாரத்தில் கம்சனின் அரண்மனை பணிப்பெண்ணாக வா; அபோது பிப்  உன்னை ஏற்கிறேன் என்றார் ராமபிரான் .

இவ்வாறு குறைந்தது ௧௫ கதைகளில் பிங்களா வருகிறாள்

ஆங்கிலத்தில் உள்ள பிங்க் என்ற நிறமும் பைங்கிளியின் கழுத்திலுள்ள நிறமும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது ஆகும்!

TO BE CONTINUED…………………..

Leave a comment

Leave a comment