துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 22 (Post.15,969)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,969

Date uploaded in London –   10 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 22

(ஆர், சேஷாத்ரிநாதன்)

உத்தர காண்டத்திலும் இறைவன் காக புஜண்ட முனிவரிடம் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்

सुचि सुसील सेवक सुमति प्रिय कहु काहि न लाग।

श्रुति पुरान कह नीति असि सावधान सुनु काग॥86॥

நல்ல நடத்தை, புனிதமான, நல்ல அறிவை உடைய அடியாரை எந்தக் கடவுளுக்குத்தான் பிடிக்காது. இதைத்தான் வேதங்களும் நீதி சாஸ்திரங்களும் சொல்கின்ச்றன.

‘साधवो हृदयं महां साधूनां हृदयं त्वहम्‌।

मदन्यत्‌ ते न जानन्ति नाहं तेभ्यो मनागपि॥’

“எனது அன்பான பக்தர்களே எனது இதயம் . நான் அவர்களின் இதயம். அவர்களுக்கு என்னைத் தவிர ஒன்றும் தெரிவதில்லை. எனக்கு அவர்களைத் தவிர ஒன்றும் தெரியாது,”

सर्वेषामेव भक्तानामिष्टः प्रियतमो मम ।

यो हि ज्ञानेन मां नित्यमाराधयति नान्यथा

கூர்மபுராணம் ஈஸ்வர் கீதா பகுதியிலிருந்து மேற் கண்ட சுலோகம் கொடுக்கப்பட்டுள்ளது .

மகாவிஷ்ணு சொல்கிறார் “எவனொருவன் ஞான மார்கத்தின் மூலமாக மட்டும் என்னை எப்போதும் பூஜிக்கிறானோ அவனே எனது பிரியமான பக்தன்”

அயோத்தியா காண்டத்தில் ப்ரஹஸ்பதியும்,  இந்திரனும் உரையாடுகிறார்கள். அப்போது ப்ரஹஸ்பதி இந்திரனிடம் இராமனைப் பற்றிச்  சொல்லும்போது

जद्यपि सम नहिं राग न रोषू । गहहिं न पाप पूनु गुन दोषू ॥

करम प्रधान बिस्व करि राखा । जो जस करइ सो तस फलु चाखा

பகவான் சமமானவர் – அவருக்கு ஆசை இல்லை, கோபமும் இல்லை.அவர் யாருடைய பாவம், புண்ணியம், குணம், குற்றம் ஆகியவற்றையும் ஏற்கவில்லை.அவர் இந்த உலகத்தை “கர்மம்” (செயல்) அடிப்படையில் அமைத்துள்ளார். யார் எப்படிச் செய்கிறார்களோ, அவர்கள் அதற்கேற்பவே பலனை அனுபவிக்கிறார்கள்.

மீண்டும் துளசிதாசர்………….

இராமன் हनुमंत என்று அழைக்கிறார். இதிலிருந்து ஹனுமன் தனது பெயரைச் சொல்லி இருக்கிறான் என்று தெரிகிறது. வால்மீகி இராமாயணத்தில் தனது பெயர் ஹனுமன் என்றும் தான் சுக்ரீவனால் அனுப்பப்பட்டவன் என்று சொல்கிறார். ஆனால் ராமசரித மானஸில் அவ்வாறு சொல்லப்படவில்லை.

துளசிதாசர் में सेवक सचराचर रूप“ பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உலகத்திலுள்ள எல்லா பொருட்களையும் ( அசையும் மற்றும் அசையாத) எனது ஸ்வரூபமாகவே பார்க்கவேண்டும் எனச் சொல்கிறார்.  இதன் பொருள் “எனது ஸ்வரூபத்தை அத்வைத தத்துவமாகப் பார்க்காமல் த்வைத உணர்வுடன் அணுகவேண்டும் என சொல்கிறார். அது என்ன த்வைத உணர்வு. யார் யார் எந்த எந்த கடவுகளை வழிபடுகின்றனரோ இந்த உலகின் அசையும் மற்றும் அசையா பொருட்களில் அந்தக் கடவுளின் வடிவத்தைக் காண வேண்டும்” என்று சொல்கிறார்.

அதாவது உலகில் நாம் காண்பது எல்லாமே இறைவனின் உடல்.

खं वायुमग्निं सलिलं महीं च

                             ज्योतींषि सत्त्वानि दिशो द्रुमादीन् ।

          सरित्समुद्रांश्च हरेः शरीरं ।

                          यत्   किञ्च   भूतं   प्रणमेदनन्यः ॥

                                 (श्रीमद्भागवत ११/२/४१)

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விலங்குகள், திசைகள், மரங்கள், ஆறுகள், கடல் – இவை அனைத்தும் கடவுளின் உடல் –இவ்வாறு நினைத்துத்தான் பக்தன் பக்தியுடன் எல்லாவற்றையும் வணங்க வேண்டும். அத்வைதமோ, த்வைதமோ, விஷிஷ்டாத்வைதாமோ, எல்லாவற்றிலும் இறைவன் ஒருவனே. பரமாத்மா இரண்டு கைகள் உடையவனோ, நான்கு கைகள் உடையவனோ, ஆயிரம் கைகள் உடையவனோ, மனித அவதாரம் எடுத்தவனோ, கங்கை யமுனை போன்ற நீர் நிலைகளோ, எந்தவிதமாக இருந்தாலும் இறைவன் ஒருவனே. எல்லாமே பரமாத்மாவின் அங்கங்கள் தான். எதாவது ஒரு அங்கத்தைப் பிடித்துக் கொண்டால் அனைத்து இறைவனையும் அடைந்து விடலாம்.

भूमौ जले नभसि देवनरासुरेषु भूतेषु देवि सकलेषु चराचरेषु।

पश्यन्ति शुद्ध मनसा खलु रामरूपम् रामस्य ते भुवितले समुपासकाश्च।।

யோகவஷிஷ்ட மகாராமாயணத்தில் சொல்வதாவது

“ஹே தேவி, பூமி, நீர், ஆகாயம், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், அசையும் மற்றும் அசையா உயிரங்கள் ஆகியவற்றில் தூய்மையான எண்ணத்துடன் பகவான் ஸ்ரீ இராமரின் வடிவத்தைக் காண்பவர்கள் பூமியிலே ஸ்ரீ இராமரை வணங்குவதில் சிறந்தவர்கள்..

अब गृह जाहु सखा सब भजेहु मोहि दृढ़ नेम।

सदा सर्बगत सर्बहित जानि करेहु अति प्रेम॥16

பட்டாபிஷேகம் முடிந்து வானரத் தோழர்களுக்கு விடை கொடுக்கும்போது இராமன் சொல்கிறான்  “தங்கள் எல்லோரது பணி அளப்பரியது.. தாங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று என் மீது பக்தி செலுத்துக”

जड़ चेतन जग जीव जत सकल राममय जानि।

बन्दउँ सब के पद कमल सदा जोरि जुग पानि।

இராமசரித மானஸ் எழுத ஆரம்பிக்கும் போதே துளசிதாசர் ‘இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் எல்லாவற்றையும் இராமனாவே கருதி வணங்குகிறேன்” என்று சொல்கிறார்.

देखि पवनसुत पति अनुकूला। हृदयँ हरष बीती सब सूला॥

இங்கு देखि என்ற பதப் பிரயோகம் செய்கிறார் துளசி தாசர். தான் அந்தண வேடத்தில் வந்ததை இராமன் ரசிக்கவில்லை போலும் அதனால் தன்மீது அவரது கருணைக் கண் படவில்லை என்று நினைத்த ஹனுமனுக்கு தன்னைக் கட்டித் தழுவி கண்ணீரால் தன்னை நனைத்து அன்பைக் காட்டிவிட்டான்  என்பதற்காக அந்தப் பதப் பிரயோகம். மாருதிக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. தன் மீது அவரது கருணைப் பார்வை விழுந்துவிட்டது அவர். தன்னை அங்கீகரித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் என்று துளசிதாசர் சொல்ல வருகிறார். காரணம் இலக்ஷ்மணணைவிட உன்மீது இரண்டு பங்கு அதிக பிரியம் என்று வேறு இராமன் சொல்லிவிட்டான்.

பார்த்தவுடன் பவனசுதன் பணி நன்கு 

தீர்ந்திடும் துன்பம் செல்வம் பெருகுமே 

சீர்த்தி உடையார் மனம் சிந்தை மகிழுமே 

தீர்ந்திடும் துயரம் தேவர் அருளாலே 

இங்கு ஹனுமந்தன் என்று ஹனுமனின் பெயரை ஹனுமன் சொல்லாமலே இராமன் முன்பு சொன்னான். இப்போது பவன சுத என்று வாயுவின் புதல்வன் என்று துளசிதாசர் நமக்குச் சொல்கிறார். இப்பொழுது அவனுக்கு எல்லாத் துன்பங்களும் सूला மனதை விட்டு அகன்றன.. இப்பொழுது ஹனுமனிடம் இரண்டு விஷயங்கள் தான் மனதில் நிற்கின்றன. ஒன்று காமம் மற்றொன்று குரோதம். ஆச்சர்யம் கொள்ள வேண்டாம். இங்கு காமம் என்பது சுக்ரீவனுக்கு எப்படியாவது நாட்டைப் பெற்றுத் தரவேண்டியது. காம். . அதாவது வேலை. அடுத்து குரோதம். கோபம். எப்படியாவது வாலியை அழிக்க வேண்டிய கோபம்.

अनुकूलं पतिं दृष्ट्वा सन्तोषं हृदये ऽकरोत् ।

परिताप-निवृत्तिश्च मारुतिः प्राह राघवम् ॥

இந்த சுலோகம் ஸ்வேத இராமாயணத்தில் வருகிறது. ஹனுமன், பிராமணர் வேடத்தில் இராமன் மற்றும் இலக்ஷ்மணரை முதன்முதலாகச் சந்திக்கிறார். இராமனின் தெய்வீகத் தோற்றம், கம்பீரம் மற்றும் அனுகூலமான (நற்குணம் நிறைந்த) இயல்புகளைக் கண்டு, ஹனுமனின் மனது மகிழ்ச்சியால் நிரம்புகிறது. “பதி” (தலைவர்) என்ற வார்த்தை இங்கு இராமனை இறைவனாகவும், உயர்ந்த தலைவராகவும் குறிக்கிறது. ஹனுமன் அவர்களின் உண்மையான தன்மையை உணரத் தொடங்குகிறார்.

இராமனின் முன்னிலையில், ஹனுமானின் மனதில் இருந்த எல்லா துன்பங்களும் (பரிதாபம்) நீங்குகின்றன. “மாருதி” (வாயு தேவனின் மகன், ஹனுமன்) என்று அழைக்கப்படும் ஹனுமன், தனது மனதில் அமைதியும், நம்பிக்கையும் பெற்று, இராமனிடம் மரியாதையுடன் உரையாடுகிறார். இது ஹனுமனின் பக்தி மற்றும் இராமனின் தெய்வீக ஆற்றலால் அவரது மனம் அமைதி அடைந்ததைக் குறிக்கிறது.

                       **                    தொடரும்

COPYRIGHT FREE PICTURES FROM 100 YEAR OLD BOOK; USE THEM FREELY : LONDON SWAMINATHAN

—SUBHAM—

Leave a comment

Leave a comment