Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 5-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடனாகி
இயல்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரகங்களில் தெய்வீக அறிவுக்கும் ஞானத்திற்கும் அதிபதியான குரு பகவானின் சிறப்புத் தலமும் பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் ஒன்றாக அமைவதுமான திரு இரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலம் ஆகும். தமிழகத்தில், கும்பகோணத்திற்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமம் : ஸ்ரீ காசி ஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்
அம்மன் : ஏலவார்குழலி ஸ்தல வ்ருக்ஷம் : பூளைச் செடி
தீர்த்தம் : அமிர்த புஷ்கரணி விசேஷ மூர்த்தி: குரு தக்ஷிணாமூர்த்தி
விநாயகர் : கலங்காமல் காத்த விநாயகர்
இத்தலத்தில் ப்ரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம் இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவாகவே அதைக் கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்கினர். சிவபிரான் தன் தோழராகிய சுந்தரரைக் கொண்டு விஷத்தைக் கொண்டு வரச் செய்து அதைக் குடித்து தன் கண்டத்தில் அடக்கினார். அதனால் இத்தலம் ஆலங்குடி என்னும் பெயரைப் பெற்றது. இறைவன் ஆபத்சகாயர் என்னும் திருப்பெயரைப் பெற்றார். இங்கு விஷம் தீண்டி யாரும் இறப்பது கிடையாது.
இங்குள்ள விநாயகருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. கஜமுகாசுரனால் தேவர்களுக்கு நேர்ந்த இடர்களைக் களைந்து அவர்களைக் காத்தமையால் இவர் கலங்காமல் காத்த விநாயகர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
உமாதேவி தவம் செய்து இறைவனைத் திருமணம் செய்து கொண்ட தலம் இது.
ஒரு முறை கைலாயத்தில் பார்வதி தேவி தனது தோழிகளுடன் பந்தாடிக் கொண்டிருந்த சமயம், உயரப்போன பந்தைப் பிடிக்க கையை உயரத் தூக்கவே வானவீதியில் வலம் வந்து கொண்டிருந்த சூரியன் தன்னைப் பார்த்துத் தான், அம்பிகை நிற்கச் சொல்வதாகக் கருதி நின்றான். அதனால் அவன் தொழில் தடைப்பட்டு உலகம் ஸ்தம்பித்தது. அவன் சிவபிரானிடம் முறையிடவே அவரிட்ட சாபத்தின் காரணமாக அம்பிகை பூலோகத்தில் காசி ஆரண்ய தலமான இத்தலத்தில் அவதரித்து தவம் செய்து சிவபிரானைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த இடம் இன்று திருமண மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அம்பாளின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, லக்ஷ்மி, கருடன், அஷ்டதிக் பாலகர்கள், ஐயனார் வீரபத்திரர் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்களை நிறுவி இங்கு வழிபட்டனர். முசுகுந்த சக்ரவர்த்தி, சுவாசனன், திருஞானசம்பந்தர், சுந்தரர் உள்ளிட்டோர் வந்து வழிபட்ட தலம் இது.
முசுகுந்த சக்ரவர்த்தியைப் பற்றிய ஒரு வரலாறும் இத்தலம் பற்றி உண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி தன் மந்திரியும் சிறந்த சிவபக்தருமான அமுதோகர் என்பவருடைய சிவ புண்யத்தில் பாதியையாவது தருமாறு வேண்டினார். அவரோ மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னன் அவர் தலையை வெட்டும் படி உத்தரவிட்டான். கொலை செய்ய வந்தவர்கள் வாளை எடுத்தவுடன் சிவபிரானின் ஆணையால் அவர்கள் உயிர் அக்கணமே நீங்கியது. உடனே அமுதோகர் என்ற சப்தம் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அரசன் வியந்தான். தான் செய்த தவறை உணர்ந்தான். அபசாரம் நீங்க இத்தலத்தில் வந்து வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான்.
கோவில் ஊரின் நடுவே, நான்கு புறமும், தாமரை பூத்திருக்கும் அகழி சூழ, உயரமான மதில்களுடன் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோவிலில் உள்ளே பிரவேசித்ததும் கலங்காமல் காத்த விநாயகர் மேலக்குடவறையில் அமைந்து காட்சி அளிக்கிறார். எதிரே உள்ள முதல் பிரகாரத்தில் அம்பாளின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மஹாமண்டப வாயிலில் கர்பக்ருஹத்தில் கிழக்கு நோக்கி ஆபத்சகாயர் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாகிய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் அமைந்து தரிசனம் தந்து அருள் பாலிக்கிறார்.
குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழியே குருவின் பெருமையை நன்கு உணர்த்தும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி குரு. உடலில் சதை இவர். வடக்கு திசை குருவிற்கு உரியது. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் ப்ரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம். தனுர், மீன ராசிகளுக்கு அதிபதி குரு. மஞ்சள் நிறத்திற்கு உரியவர். கடலை தானியமும் முல்லை மலரும் அரசு சமித்தும் இவருக்கு உகந்தவை.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஏலவார் குழலியும் காசி ஆரண்யேஸ்வரரும், குரு பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 அன்று தொடங்கி 20-11-21 அன்று முடிய ஒலிபரப்பாகி வந்தது.
20-11-2021 காலை ஒலிபரப்பான பத்தாவது கடைசி உரை கீழே தரப்படுகிறது.
ஒரு இல்லத்தரசியாகவோ அல்லது ஒரு குடும்பத் தலைவராகவோ இருக்கும் ஒருவர் சுற்றுப்புறச்சூழலைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று நினைத்து மனம் தளர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இந்த நற்பணியை நாம் தொடங்கலாம்.
முதலில் குப்பை கூளங்களை அகற்றும் போது காய்கறி மற்றும் உணவுப் பொருள் கழிவுகள், மின்சாதனக் கழிவுகள், ‘டயபர்’ (Diaper) போன்ற கழிவுகளைத் தனித் தனியே பிரித்து அததற்குரிய கழிவுத் தொட்டிகளில் போடுதல் வேண்டும்.
வீட்டில் மின்சக்தியை சேமிப்பதோடு மின் பில்லையும் (BILL) குறைக்கும் வகையில் இன்காண்டெஸ்சென்ட் (Incandescent) பல்புகளை அறவே அகற்றி விட்டு CFC எனப்படும் காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகளைப் பொருத்தினால் 35000 மணி நேரம் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்த பட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி, அவை உழைத்துப் பயனைத் தருகின்றன.
தோல் பொருள்களில் ஆர்வம் உடையவர்கள் கைப்பை உள்ளிட்டவற்றை வாங்கும் போது அது சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு பயக்காத வகையில் மிருகங்களைக் கொடுமைப் படுத்தாமல் பெறப்பட்ட தோலினால் ஆக்கப்பட்டதா என்பதைச் சரி பார்த்து வாங்கலாம்.
மேக் அப் எனப்படும் ஒப்பனை சாதனங்களின் உறைகளில் அது சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த ஒன்றா என்று சரி பார்த்து வாங்குதல் வேண்டும். குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது பிளாஸ்டிக் எனில் அது பசுமை பொம்மையா – GREEN TOY தானா, அதாவது சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பிளாஸ்டிக்கினால் ஆனதா என்று பார்த்து வாங்குதல் வேண்டும். அல்லது மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு மாறுவதும் ஒரு சிறந்த வழியே.
கறிகாய்கள் வாங்கும் போது வேதிப் பொருள்களை உரமாகப் பயன்படுத்தாத ஆர்கானிக் காய்கறிகளா என்று பார்த்து வாங்குதல் வேண்டும். வெளியிலிருந்து உணவு வகைகளைப் பெறுவது பெருகி வரும் இந்நாளில் அவை ஆர்கானிக் உணவு தானா என்பதை சரி பார்த்து வாங்குதல் வேண்டும். துணியில் ஆர்கானிக் காட்டன் இப்போது எங்கும் கிடைக்கிறது. இந்த வகை பருத்தி இரசாயனம் கலந்த செயற்கை உரங்கள் இன்றி வளர்க்கப்படுவதே இதன் சிறப்பு. கறிகாய்கள், மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும் போது நமது வீட்டிலிருந்தே துணிப்பையைக் கொண்டு செல்வதோடு கடைக்காரரிடம் பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்குமாறும் அன்புரை கூற வேண்டும்.
இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தினால் ஒரு இல்லத்தரசியோ அல்லது ஒரு குடும்பத்தலைவரோ வீட்டிற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவை செய்தவர் ஆவர்; சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காக்க உதவி செய்தவர்களும் ஆவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது முது மொழி அல்லவா!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 5 -ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
Xxxx
கிருஷ்ணர் சிலையால் மதுராவில் பரபரப்பு! போலீசார் குவிப்பு!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரா நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் தற்போது ஒரு மசூதி இருக்கிறது , அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாகவும் 4 அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேஷவ் தேவ் கோயிலும் இருப்பதால் அப்பகுதியில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அகில பாரத இந்து மகா சபா, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி நிர்மன் நியாஸ், நாராயணி சேனா மற்றும் ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் ஆகிய நான்கு அமைப்புகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு மசூதி உள்ளது, எனினும் அங்கு சிலையை வைப்போம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.
அவர்களுடைய இந்த மனுவை நிராகரித்துள்ள மாவட்ட நீதிபதி, அமைதியை சீர்குலைக்கும் எந்த்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு பணிக்காக மதுரா நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
XXXX
ஐயப்ப பக்தர்களுக்கு நிதி உதவி, இந்து மக்கள் கட்சி கோரிக்கை
அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரி மலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும்’ என்று, இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி, ஈரோடு மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் நடந்தது. மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில், அனைத்து கோவில்களிலும் வழிபாடு தொடங்கி விட்டது. ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், காசிக்கு இணையான திருத்தலமான பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், திதி, தர்ப்பணம் தர தடை தொடர்கிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க கூடாது. இதை வலியுறுத்தி டிச.,6ல், அனைத்து டோல்கேட்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்.
அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரிமலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். கோவை மண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்து மக்கள் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில் ஹஜ் யாத்திரைக்காக முஸ்லீம்களுக்கும், ஜெருசேலம் யாத்திரைக்காக கிறிஸ்தவர்களுக்கும் பெருமளவு நிதி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது . இந்து மக்கள் பெரும்பலாளாகவுள்ள தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எந்த உதவியும் வழங்காதது பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தி வருகிறது. வடக்கேயுள்ள புனிதத் தலங்களுக்குச் செல்ல இந்து மத அர்ச்சகர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது,.
XXXXX
கோவில் இடிப்பு விவகாரம் டி.ஆர்.ஓ., மீது புகார்
ஸ்ரீபெரும்புதுார்-சிவன் கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மீது, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில், ஹிந்து அமைப்பினர் நேற்று புகார் அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, கிளாய் கிராமத்தில், தபோவனம் அறக்கட்டளை சார்பில், கனக காளீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் ஸ்ரீபெரும்புதுார் ஏரி கலங்கல் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக, வருவாய்த் துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.முன்னறிவிப்பின்றி, நவ., 25ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற குழுவினர், பொக்லைன் இயந்திரத்தால் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதை கண்டித்து, ஹிந்து அமைப்பினர், 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகம் சென்றனர்.அவகாசம் வழங்காமல் கோவிலை இடித்து, பொருட்சேதம் ஏற்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கோவில் இருந்த இடத்தில் 15 சென்ட் பட்டா நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என, தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள், கோவிலை இடித்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனு அளித்தனர்.
XXX
பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்
‘ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,” என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.
முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.
கோவில் கட்டுவது, கோவிலை சீரமைப்பது ஆகிய பணிகள் மதவாதமாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. கோவில்கள் கட்டுவதும், சீரமைப்பதும் ஹிந்துக்களின் உரிமை. ஒரு ஹிந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மைவாதியாக இருக்க முடியும். ஹிந்துத்வா என்பது ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துத்வா இந்தியாவில் உள்ளது. இங்குள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துவாகத் தான் இருந்தனர். இந்தியா இருக்கும் வரை ஹிந்துத்வாவும் இருக்கும். இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
XXXX
தமிழ் புத்தாண்டு மாற்றம்? ஹிந்து முன்னணி எதிர்ப்பு!
தமிழ் புத்தாண்டு என தை முதல் நாளை அறிவிக்க, ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அரசு, மக்கள் உணர்வை மதிக்காமல், தமிழ் புத்தாண்டின் மரபுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கிறது.புத்தாண்டு என்பது ஒரு நாள் விழா. தை திருநாள் என்பது போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டம், விநாயகர் சதுர்த்தி என தமிழர் பண்டிகைகளையும், ஹிந்து வழிபாட்டையும் குறை கூறுவது வழக்கமாக உள்ளது. இதன் பின்னணியில், மதமாற்ற சக்திகளின் சதி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
XXXXX
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பகல்பத்து உற்சவத்துடன், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. திவ்ய தேசங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, ஜனவரி, 4ம் தேதி வரை நடக்கிறது.
. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்ற சிறப்புகளை கொண்டது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. 3-ம் தேதி 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது .
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் என அழைக்கப்படும் பரமபதவாசல் வரும் 14ம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 27, 840 பேர் சாமி தரிசனம்
சனிக்கிழமையன்று ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை, 27,840 பக்தர்கள் தரிசனம் செய்து இருந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனால் வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை ‘வெர்ச்சுவல் க்யூ’,மூலம் தினசரி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அதோடு ‘ஸ்பாட் புக்கிங்’ முன்பதிவு மூலம் தினசரி 5000 பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
XXX
திருமலை மற்றும் திருப்பதியில் மீண்டும் தரிசன டிக்கெட்
சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது.
இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.
நவ., 18ம் – டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by APARNA KRISHNAN
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by APARNA KRISHNAN
Xxxx
Madras HC slams HRCE for colluding with individuals in illegally occupying temple properties
Madras High Court expressed its displeasure over HRCE officials’ negligent attitude in dealing with temple properties. It observed that officials appear to be colluding with the individuals who use temple properties and allow corruption.
LiveLaw reported that while dealing with a case of occupying a property of Maahaliamman temple in Coimbatore, the court slammed the HRCE officials for not acting in the interest of the temples and devotees. Having leased the property in 1960, the individual continued to use it without paying the raised rent amount for 55 years even after the contract ended in 1965. When the HRCE department sent a notice of eviction, the individual went to court contesting that he was not informed of the hike and that his position as the leaseholder is valid.
He pleaded that as he had paid the arrears he should be allowed to continue to use the property. However the court observed that “mere payment of arrears of rent would not confer any right to claim leasehold rights“. If the lessee wants to continue the contract, HRCE commissioner has to approve the extension. But no documents to that effect were found. So concluding the contention as invalid the court dismissed the petition.
While doing so the court slammed the HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWNMENT officials of colluding with the individuals in misusing temple properties and accused them of corruption. Expressing dissatisfaction over the negligence of authorities, the court reminded them of its role as the “custodian of the minor deity”.
Observing that when it comes to temple properties, in numerous cases, lessees are in possession of the properties without any legal standing, the court directed the HRCE department to initiate proceedings to lease them through Open Public Auction.
It said “The High Court has to interfere in such circumstances even in the absence of initiation of action by the Hindu Religious and Charitable Endowments Department in certain circumstances or inaction by the Authorities due to the active or passive collusion with the Private Parties“.
There have been many cases of temple properties being occupied illegally both by Hindus and non-Hindus without paying rent. In Ramanathapuram and Thanjavur temple properties worth hundreds of crores were encroached by Muslims with HRCE officials turning a blind eye even after court interference. Many other temple properties are encroached by missionaries as well and in one case a corrupt HRCE official willfully gave away temple land to build a church.
In one case the government itself had tried to distribute temple land to people for free through the revenue department. The fact that Srirangam Ranganatha swamy temple which had 330 acre land in 1886 now only has 24 acre should make Hindus understand the gravity of the issue.
XXX
Hindu party IMK demands subsidy for Sabarimala pilgrimage from Tamil Nadu government
Indu Makkal Katchi(IMK) has demanded the Tamil Nadu government to provide subsidy for Sabarimala pilgrimage. The party has requested the government to help poor Ayyappa devotees by distributing Rs.6000 as subsidy for their pilgrimage to Sabarimala similar to how Christians and Muslims are given subsidy for Jerusalem and Haj pilgrimage.
IMK chief Arjun Sampath has put forth some demands that would help Ayyappa devotees, a large part of whom are Tamils. He has requested the TN government to arrange free bus transportation, free accommodation and food in Sabarimala and to seek the centre to waive off toll charges for the pilgrims.
The party has also organised an event in which petitions to waive off toll charges will be given to toll gate officials and then sent to the Prime Minister and TN Highways Department.
TAMIL NADU government has been providing subsidies for Haj and Jerusalem pilgrimages for many years now. The late CM J Jayalalithaa announced in 2012 that Rs.40,000 subsidy will be provided for Hindus who go on pilgrimage to Mansarovar and Muktinath. But the pilgrims were selected by HRCE which leads one to believe that the scheme was also sponsored by the HRCE department.
While only 500 Hindus were given subsidy nearly 4000 Muslims received Haj subsidy in 2008. The outgoing CM Edappadi Palanisamy had promised to increase the number of Jerusalem pilgrims from 500 to 10,000 and had also increased the subsidy from Rs.20,000 to Rs.37,000.
Hindus who form the majority and have given up control of temples to the government receive less amount of subsidy than Christians and Muslims who control their places of worship and yet receive subsidy from the secular state.
So IMK’s demand to provide subsidy for Ayyappa devotees to aid their pilgrimage to Sabarimala has found support from many quarters.
XXX
Three more temples vandalized, murtis desecrated in Bangladesh
‘Unidentified’ people went on a rampage and vandalized three temples and desecrated the temple deities in Delduar upazila, Tangail district, Bangladesh early on November 16..
Sharbajanin Kali Mandir at Pirojpur, Shitola Mandir at Binnayuri and another temple at the residence of one Ajit Das were vandalized during the attacks, confirmed Delduar police Officer-in-Charge Sajjad Hossain.
The attackers beheaded the murtis at the temples and dumped the head of the Goddess Shitola murti in a nearby paddy field. Locals learnt about the incident in the morning and called the police.
Violence against Bangladeshi Hindus has become so routine and commonplace that incidents like this one from Tangail hardly elicit any response from the global community. Newspapers in Western countries never report these incidents.
XXXX
Security tightened in Mathura ahead of Babri mosque demolition anniversary
The Akhil Bharat Hindu Mahasabha has announced that it will install an idol of Lord Krishna at the deity’s actual birthplace , which it claims is in the mosque close to a prominent temple in Mathura in Uttar Pradesh.
Hindu Mahasabha leader Rajyashri Choudhary said the idol will be installed after a maha jalabhishek on December 6 to purify the place.
The date picked by the right-wing organisation marks the demolition in 1992 of Babri Masjid in Ayodhya, the site of a temple-mosque dispute.
The Mahasabha threat to perform the ritual inside the Shahi Idgah comes at a time when the local courts are hearing a series of petitions seeking the removal” of the 17th century mosque, close to the Katra Keshav Dev temple.
Hindu Mahasabha leader Rajyashri Choudhary, however, denied there was any link between the 1992 event and organisation’s Mathura plan.
Security has been tightened in Mathura to avoid any untoward incident ahead of December 6, the date on which the Babri mosque was demolished in Ayodhya in 1992, officials said on Saturday.
Four right-wing groups, the Akhil Bharat Hindu Mahasabha, Srikrishna Janmabhumi Nirman Nyas, Narayani Sena and the Srikrishna Mukti Dal, had earlier sought permission to hold non-traditional programmes on the day.
District Magistrate Navneet Singh Chahal had turned them down, saying the question of granting permission to any event that may potentially disrupt peace does not arise.
“Adequate force has also been deployed at every entry point of Mathura,” Senior Superintendent of Police Gaurav Grover said.
President of Shahi Idgah committee professor Z Hasan, however, said that he has been living in Mathura for over 50 years and has always found the environment cordial and affectionate.
The suits seeking the shifting of the mosque is pending in courts, and their judgement will be honoured, committee members of the mosque said.
XXXX
xxxx
Muslim Barelvi sect wants to merge Pakistan and Bangladesh back into Bharat
Muslim organisation All India Tanzeem Ulama-e-Islam which claims to be the prominent organisation of the Barelvi sect of Muslims, has said that it will start a movement for Akhand Bharat (Undivided India), which means Bharat should be again geographically as it was in the pre-Independence era.
The organisation’s general secretary Maulana Shahabuddin Razvi, who is based in Bareilly while the organisation is headquartered in Delhi, told IANS, “It’s our intention that India should attain Akhand Bharat status with merger of Pakistan and Bangladesh as it was before partition.”
He said that when Germany can unite why not Bharat, which has the same culture as Pakistan and Bangladesh. We should move forward, it will make Bharat a strong country.
Bharat was partitioned in 1947 when Pakistan came into existence and in 1971 Bangladesh was liberated from Pakistan, forming three separate nations.
Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat also advocated for ‘Akhand Bharat’ (united India) in a book launching event on November 26. He termed the partition as an unforgettable event and asserted that the pain of division will only end when the partition would be revoked.
XXXX
That is the end of WORLD HINDU NEWS ROUND UP FROM AAKAASA DHWANI.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
தூய்மை பற்றி வள்ளுவன் பல்வேறு இடங்களில் பேசுகிறான். அதர்வண வேதத்திலும் ரத்தினச் சுருக்கமாக ஒரு துதி உள்ளது. முதலில் அதை பார்த்துவிட்டு வள்ளுவனுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அதர்வண வேதம், ஆறாவது காண்டம், துதி 19; சூக்தம் எண் 192
1.தேவர்கள் என்னைத் தூய்மை செய்க!
மானிடர்கள் என்னை அறிவால் தூய்மை செய்யட்டும்!
உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் என்னைத் தூய்மைப் படுத்தட்டும்!
சத்தியத்தால் உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்..
சத்தியம் என்பது மூவகைப்படும்- உண்மை, வாய்மை, மெய்மை .
அதாவது மனம், மொழி, உடல் (THOUGHT, WORD AND DEED) ஆகியவற்றில் சத்தியத்தைப் பின்ப ற்றுத்தலை ‘திரிகரண சுத்தி’ என்பர். இதுதான் உண்மையான சத்தியம்.
இதை முதல் மந்திரம் அழ்காகச் சொல்கிறது.
தேவர்களே என்னை சுத்தப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு ‘சான்றோர்கள், அறிவால் என்னை சுத்தம் செய்யட்டும்’ என்கிறார் இதை பாடிய ரிஷி. அதாவது கேள்வி ஞானம் மூலம், படிப்பது மூலம் நாம் சுத்தம் – மனச் சுத்தம்– பெறுகிறோம். அடுத்தபடியாக சோப்பு, சீயக்காய் முதலிய .. எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்வதைக் குறிப்பிடுகிறார். வள்ளுவனும் குளியல் முதலியவற்றை ‘நீரான் அமையும்’ என்று சொல்லிவிட்டார்.
இரண்டாவது மந்திரம், தூய்மையால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியல் இடுகிறது. சுத்தமாக இருந்தால் விவேகம், சக்தி, நீண்ட ஆயுள், பாதுகாப்பு கிடைக்குமாம். இதை விளக்க நம்முடைய புராணங்களில் பல கதைகள் உண்டு. நளன் என்னும் மன்னனைப் பிடிப்பதற்கு சனைஸ்சரன் (சனி பகவான்) காத்திருந்தானாம். எளிதில் முடி யவில்லை ; ஒரு நாள் கால் கழுவி வந்த போது ஒரு சிறிய பகுதியில் தண்ணீர் படவில்லை. அங்கே அசுத்தம் இருந்தது. அது வழியாகப் புகுந்த சனி பகவான் அவனை ஏழரை ஆண்டுகளுக்கு ஆட்டிவைத்தான். மனைவியைப் பிரிந்து காட்டில் கஷ்டப்பட்டுட்டான் . இதை கலி அல்லது சனி என்பர். இரண்டுக்கும் கருப்பு/ அழுக்கு என்பதே பொருள்.
மூன்றாவது மந்திரத்துக்கு இரண்டு விதமாகப் பொருள் சொல்லலாம் .சோம ரசத்தை எடுக்க, சோமக்கொடியை நசுக்கி ஜுஸ் JUICE எடுத்து, அதை வடிகட்டி, ஹோமத்தில் ஆகுதி செய்வார்கள்; பின்னர் அருந்துவார்கள்; அது போல என் மனதையும் நசுக்கிப் பிழிந்து வடிகட்டி சுத்தம் செய்யவும். மற்றோர் பொருள் – ஸோம ரசத்தை சாப்பிட்டால் மனம் சுத்தம் அடையும் என்று கல்வெட்டும் வேத மந்திரமும் கூறும். அப்படி சுத்தம் அடையட்டும் என்று ரிஷி சொல்கிறார் போலும்.
XXX
மனத் தூய்மை பற்றி வள்ளுவன்
மனத் தூய்மை பற்றி வள்ளுவன் சொல்லும் இடம் வேறு ஒரு த ப்பின் கீழ் வருவதால் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தின் கீழ் நாலைந்து குறள்களில் நல்ல கருத்த்துக்களை முன்வைக்கிறார்.
மனம் போல மாங்கல்யம்
ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுவர். பாசிட்டிவ் / ஆக்கபூர்வ எண்ணங்கள் இருந்தால் அது நல்ல பலன் தரும் ; இதைத்தான் மனம் போல மாங்கல்யம் என்றும், மனம் இருந்தால் மார்க்கம்/ வழி உண்டு என்ற பழமொழியும் கற்றுத் தருகிறது
மனந் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந் தூய்மை தூவா வரும் -455
மனந் தூயார்க்கெச்சம் நன்றாரும் இனந் தூயார்க்கு
இல்லை நன்றாகா வினை – குறள் 456
இந்த இரண்டு குறள்களும் நல்ல கருத்துக்களை விளக்குகின்றன.
மனத்தின் தூய்மை முக்கியம்; செய்யும் தொழிலின் தூய்மையும் முக்கியம்; இவை இரண்டுக்கும் மிக முக்கியமானது யாருடன் சேர்ந்து அதைச் செய்கிறோமோ அவர்களுடைய குணமும் உதவியும் அவசியம்; அதை பொருத்தே வெற்றி அமையும் ; சத் சங்கம் அவசியம். – குறள் 455
மனம் சுத்தமாக இருந்தால் பிள்ளைகள், புகழ் எல்லாம் நல்லபடியாகவே அமையும் ; அவர்களுக்கு கெட்டது எதுவுமே வராதாம் . இதை பகவத் கீதையில் கண்ணனும் சொல்கிறான்.
பார்த்தா! (அர்ஜுனா )
நிச்சயமாக நல்லதைச் செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான் அவனுக்கு இம்மையிலும் அழிவு இல்லை; மறுமையிலும் அழிவு இல்லை. — பகவத் கீதை 6-40
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமிஜி கிருஷ்ணா! (Swamiji Krishna of Achankovil!) – 3
ச.நாகராஜன்
5
அங்கே இனிமேல் போக வேணாம்!
பெரும் மகான்களுடனான தனிப்பட்ட சில விஷயங்கள் அந்த நபருக்கு மட்டுமே பெரிய விஷயம். ஏனையோருக்கு, ‘இதில் என்ன இருக்கிறது, எழுதவோ, சொல்லவோ!’ என்று தோன்றும். அதனால் தான் பல விஷயங்களை எழுத நான் இதுவரை முற்பட்டதே இல்லை.
ஒரு சமயம் ஸ்வாமிஜியிடம் நான் பெருமையாக வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்ளச் செல்வதாகக் குறிப்பிட்டேன். ஒரு நிமிட மௌனம்.
“எங்கே போற?”
திண்டுக்கல் ரோடில் ஒரு குறிப்பிட்ட ஜலதரங்க வித்வான் வீட்டிற்குப் போவதாகச் சொன்னேன்.
“அங்கே இனிமேல் போக வேணாம்!”
அத்தோடு முடிந்தது வயலின் டியூஷன்!
ஏன் என்று அப்போது தெரியாவிட்டாலும் பின்னால் அந்த வீடு அவ்வளவு “சுகமான” வீடு இல்லை என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று வரை சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்கள் உண்டு என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஆலாபனை செய்பவரைக் கண்டால் அண்ணாந்து இன்று வரை வியப்புடன் பார்த்து வருகிறேன்.
ராகங்கள் பட்டியல், இசை மஹிமை பற்றி எழுதினாலும் கூட உண்மையில் சொல்லப் போனால் என்னப் பொருத்த வரை பழைய பாடலை மாற்றிப் பாட வேண்டியது தான்!
“சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப் போறேன்” என்பது அந்தக் காலப் பாட்டு.
எனது பாட்டு:
“சங்கடமான சங்கீதத்தை விட்டு சமைக்கத் தான் போறேன்”
6
ACHANKOVIL DHARMA SASTHA TEMPLE
குற்றாலச் சாரலிலே குளித்தது போல…
அருமையான குற்றாலச் சாரல்!
ஆயக்குடியில் வந்த வேலை – ஸ்வாமிஜியை தரிசனம் செய்து ஆசி பெற்றது – முடிந்து விட்டது. கிளம்ப வேண்டியது தான். என் மனம் சும்மா இருக்கவில்லை.
“ஸ்வாமிஜி, இவ்வளவு தூரம் வந்துட்டோம். குற்றாலம் போய் ஒரு குளியல் குளிச்சுட்டு ஊருக்குப் போறோம்.”
அவ்வளவு தான், ஸ்வாமிஜி வேறொரு பக்கம் திரும்பி விட்டார்.
அதற்கு அர்த்தம் : ‘உன் பேச்சே எனக்குப் பிடிக்கவில்லை’ என்பது தான்.
என்ன செய்வது?
நைஸாக அட்வகேட் ராமாராவிடம் சொல்லிப் பார்த்தேன். அவர் ஸ்வாமிஜியைக் கேட்டுப் பார்த்தார். பதில் சாதகமாக இல்லை.
கடைசி ஆயுதம் ஒன்று இருந்தது. எனது தம்பி ஸ்வாமிநாதனின் பெயர் தான் அது.
“சாமா தான் போகணுங்கறான்!”
ஸ்வாமிஜி இளகினார்.
“ராமாராவ், கூடவே நீங்களும் போய் பசங்களை பத்திரமாக மதுரையில் சேர்த்து விடுங்கள்”
ஓரே ஆனந்தம். எங்கள் கோஷ்டி கைப்பைகளுடன் குற்றாலம் நோக்கிக் கிளம்பியது.
பிரதான சாலைக்கு வந்தோம். மழை, மழை என்றால் இடி புயலுடன் கண்ணை மறைக்கும் மழை. சாலையே தெரியவில்லை. தொப்பலாக நனைந்தாயிற்று, ஒரு பஸ்ஸும் வரும் வழியாகக் காணோம்.
புலம்பிக் கொண்டே தென்காசி நோக்கி நடந்தோம் – பல மைல்கள்.
இரவு மணி ஒன்பது. தென்காசியில் எங்கு தங்குவது? நல்ல வேளை மழை நின்றிருந்தது.
ஒரு தெருக்கோடியில் சாலையின் நடுவே நின்று ராமாராவ் கத்தினார்: “ஓய், ராமகிருஷ்ணையர்!”
தெருவோர வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்தார்.
:அடடா! என்ன இது? மழையில் இப்படி நனையலாமா?”
“ஒண்ணும் வேணாம், இப்ப, இதோ இந்த பிள்ளையார் கோவிலைத் திறந்து விடும். குழந்தைகள் தூங்கணும்.”
அவருடம் உடனே சின்னப் பிள்ளையார் கோவிலைத் திறந்து விட்டார்.
கோவிலின் முன் பிரகாரத்தில் தொப்பென விழுந்து படுத்தோம். அப்போது தான் ஒரு கூச்சல் கேட்டது:
“நக்ஷத்திரம் ஒழுகறது டோய்!”
அலறி அடித்துக் கொண்டு எழுந்தோம்.
மழை போய், இப்போது நக்ஷத்திரம் ஒழுகறதா? ஏதாவது நக்ஷத்திரம் கீழே விழுந்து கொண்டிருக்கிறதா?
அனைவரும் அலற, ராமாராவ் கூறினார் : “பேசாம படுங்கடா! அது அரைப் பைத்தியம்!”
ஓஹோ ஒரு பைத்தியம் தான் இப்படி உளறுகிறதா!
அந்தக் குரல் அவ்வப்பொழுது இரவில் எழுந்து எங்களைத் தூங்க விடாமல் அடிக்க, காலை முதல் பஸ்ஸுக்காக அவசரம் அவசரமாக சாலைக்குச் சென்றோம். ஒரு பஸ் வந்தது.
“சார்”, என்ற கண்டக்டர் எங்கள் தலைகளை எண்ணினார்.
“கரெக்டா போச்சு, இனிமே இடமில்லை. உங்களுக்குத் தான் இடம் இருக்கு! ரைட் போகலாம்” எனக் கூவினார்.
ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தோம்.
ஸ்வாமிஜிக்கு “பத்திரமாக” வந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
அந்த நாள் முதல் அவர் சரி என்று சொன்னால் மட்டுமே எந்த வேலையையும் தொடங்க வேண்டும் என்பது மட்டும் புரிந்தது. எங்கள் சாமர்த்தியத்தை அவரிடம் காட்டக் கூடாது என்பதும் கூடவே புரிந்தது!
“இல்லை, திருப்பதியில் வந்து போடறென் – னு வெங்கடஜலாபதிக்கு வேண்டிண்டிருக்கேன்…”
எனக்கும் என் அண்ணனுக்கும் திருப்பதியில் தான் பூணூல் போடப்பட்டது. எனது தம்பிக்கும் அப்படி ஒரு வேண்டுதல்!
ஸ்வாமிஜி மௌனமாக கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
சில நிமிடங்கள் கழிந்தன.
என் தந்தையாரைப் பார்த்தார் அவர்.
“உம், இங்கேயே போடலாம். பர்மிஷன் வாங்கிட்டேன்”
வேங்கடாஜலபதி பர்மிஷன் கொடுக்க மஹா கணபதி அதை ஆமோதிக்க என் தம்பி ஸ்வாமிநாதனின் பூணூல் மதுரையிலேயே போடப்பட்டது.
ஒரு மூட்டை அரிசி உள்ளிட்ட பொருள்கள் ஸ்வாமிஜியால் அனுப்பப்பட்டது எனக்குத் தெரியும்.
இப்படி இறைவனுடன் நேருக்கு நேர் பேசும் பெரும் மகான் அவர்.
நல்ல மழை. சுபயோக சுபதினம். பூணூல் போடப்பட்டது.
ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் அவரது அருள் பார்வை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் ஒரு வித துன்பமும் எங்களுக்குத் தெரியவில்லை.
சொல்லப் போனால் திரௌபதி, “கிருஷ்ணா, எனக்குக் கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டே, இரு. அப்போது தான் உன்னைப் பற்றி நினைப்பு இருந்து கொண்டே இருக்கும்” என்று பிரார்த்தித்தாள் அல்லவா! அந்த நிலையும் உணர்வும் உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.
ஒவ்வொரு சிறு பிரச்சினை வந்தாலும் அங்கு இடர் தீர்க்க அவர் இருந்தார்.
அது ஒரு பொற்காலம். பூர்வ ஜென்ம புண்யத்தை அனுபவித்த காலம் அல்லவா அது!
ஸ்வாமிஜி நினைவை நாளும் போற்றுகிறோம். அவரை வணங்கிக் கொண்டே இருக்கிறோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
The Hymn to Earth (AV XII-1) with 63 stanzas/Mantras is the most famous ‘Verse on Earth and it beauty’. Most of the nature lovers knew about it. But there are more smaller poems on cleanliness and environment in Atharvana Veda.
Here are a few which needs the attention of environmentalists: –
HYMN CXX; Book Six; AV
A prayer for pardon of sins and felicity hereafter
1.If we have injured Air, or Earth, or Heaven, if we have wronged our Mother or our Father,
May Agni Gārhapatya here absolve us, and bear us up into the world of virtue.
2.Earth is our Mother, Aditi our birth-place: our brother Air save us from imprecation! Dyaus, Father, save us, from the world of Fathers! My world not lost, may I approach my kindred.
3.There where our virtuous friends, who left behind them their bodily infirmities, are happy, Free from distortion of the limbs and lameness, may we behold, in heaven, our sons and parents.
XXX
PARDON ME EARTH, PARDON ME WIND
This was sung by our forefathers thousands of years ago. In other parts of the world people were not that civilized or matured. Their thoughts have not been elevated to this level. If anyone looks at this along with the Bhumi Sukta/ Hymn to Earth, one will be amazed to see the high level of thinking. Now the newspapers high light these concerns. World leaders meet to discuss the environmental problems and each country accuses the other countries saying ‘You are the Culprits’. Expecting this our seers sung this before other cultures got civilized.
One may think that if they have sung about it, the problem should have existed even then. There are two answers
Yes the problem did exist, but in very minor scale. How do we know that? Hindus say a mantra even before they place their feet on the ground from the bed in the morning. Hindus worship the land even before they start the cultivation. This is repeated every day or every year. That means they knew they do some damage to Mother Earth for their own selfish interests. But one can’t avoid it they know.
Even today whenever a new proposal for constructing a dam is announced by the respective government, whenever an oil drilling is announced by the government, immediately an environmental group opposes it in the name of saving environment. Then the government reasons out saying there are more benefits to humanity than the damage it causes or it may cause. So, this is an eternal conflict and never ending argument.
Even when Arjuna and Krishna proposed to burn the forest Khandava Vana, there was opposition from Naga tribals. But both of them went ahead and there was a big fight between the Pandavas and the tribal Nagas. But that did something good. Mayan Danavan led one section to South America to establish Mayan Civilization.
Now let us see the merits in the above verse.
Mantra 1
If we have done anything against heavenly Mother and Father (Earth and Sky/atmosphere), if we have done anything wrong to earthly Mother and Father (parents) we seek your pardon.
Garhapatya Fire is the eternal fire in a family. That fire is never extinguished for generations. One father passes it to his son when he gets married. That lighted pot will be there till his death. In the meantime, his sons would have already got them from him, when they got married. They did daily fire ritual at family level.
An earthen pot with paddy husk and cow dung will have this fire burning for ever in a corner of the house. There were three types of fire in every Brahmins house. Even 2000 year old Tamil Sangam verses praised Brahmins as 1, 2 3, 4 men (1.Always running after One Brahman, 2. One who has Two births/Dvija; one before sacred thread, one after wearing sacred thread; 3. One who keeps Three types of fire at home- Gaarhapatya, Aahvaneeya and Daakshinaagniya; 4 one who practises Four Vedas; it goes on like this)
Mantra 2
Earth and sky are described as close relatives. And with their support, I would survive. I would have all good things in life.
Mantra 3
Praying for healthy life without damage to any limbs or organs.
Hindu scriptures say that people residing in Swarga/heaven are always happy. That is wished here on earth and up above.
Hindu belief is the reason for this hymn. They believed that if you do any harm to anything that will affect you. That is why they did worship animate and inanimate things
xxx
PERSONAL CLEANLINESS AND COUNTRY’S CLEANLINESS
19. For ceremonial purification. AV BOOK SIX; HYMN 19 (SUKTA192)
1. Let the god-folk purify me; let men (mánu) purify me with prayer (dhī́); let all beings purify me; let the purifying one purify me.
2. Let the purifying one purify me, in order to activity, dexterity, life, likewise unharmedness.
3. With both, O divine impeller (savitár), with purifier and with impulse, do thou purify us in order to seeing.
This verse is found in all the texts that have vs. i. RV. (ix. 67. 25) VS. (xix. 43)
Purity exists in two levels- physical and mental. We know that one contributes to another. Since Hindus originated in India, their life depends fully on water. Vedic rituals and the hundreds of references to rivers show this. The took a bath before sun rise and started their prayers very early in the morning. All mythological stories also confirm this. This personal mental and physical purity should have led them to national cleanliness. Though it is not in this verse it is understood.
In Tamil there is a proverb: ‘One tree doesn’t make a grove’ equivalent to ‘A single swallow cannot make a summer’. So clean individuals make a cleaner country/ cleaner society.
–subham—
Tags — Purity, environment, concern, cleanliness, in Vedas.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!
வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்
அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண வேதத்துக்குள் நுழைவோம்.
வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும் – குறள் 168
பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.
இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)
பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.
பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.
‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167
பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.
இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
XXXX
அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191
தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்
1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்
2.பொறாமை மனம் படைத்தவனின் மனது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .
3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்
மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.
அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே இல்லை.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்து மத அறிஞர்கள் மகாநாடு கூட்டி மந்திரங்களை தலைப்பு/ விஷயம்/ சப்ஜெக்ட்/ டாபிக் வாரியாக பகுத்து ஆராய்ந்தால் மிக நல்ல விஷயங்கள் கிடைக்கும்.