பூமாதேவிக்கு தங்க முலைகள், அமுத இதயம் – புலவன் வருணனை (Post. 10,493)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,493

Date uploaded in London – –   27 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -4

அதர்வண வேத பூமி சூக்தத்தை மேலும் காண்போம் .

தாய்ப்பாலின் மஹிமையை அறியாதோர் உலகில் இல்லை; குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பது ஏன் அவசியம் என்று மேலை நாடுகளில் சுகாதாரத் துறைகள் துண்டுப்  பிரசுரம் அச்சிட்டு வழங்கி வருகின்றன . தாய்ப் பாலின் மஹத்துவத்தை விளக்கும் உவமைகள், உலகிலேயே மிகவும் பழைய புஸ்தகமான ரிக் வேதத்திலேயே உள்ளது. அது மட்டுமல்லாமல் தாய்ப்பாலுக்கு நிகரான பால் கொடுக்கும் ஒரே பிராணி பசு மாடுதான் என்று கண்டுபிடித்து அதை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்துக்களே.

பூமா தேவியை வருணிக்க முயன்ற புலவன், அவளுக்கு தங்க முலைகள், அமுத இதயம்; அவள் கொடுப்பதோ தேன் போன்ற இனிமையான பொருள் என்கிறான். 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி கவி பாட வேண்டும் என்றால் அந்த சமுதாயம் எவ்வளவு உன்னத நிலையை அடைந்திருக்க வேண்டும் ? எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. நான்கு வேதங்களில் 20,000 மந்திரங்களில் உள்ள உன்னத கருத்துக்களை நோக்குங்கால்  உலகில் வேறு எந்த கலாசாரமும் அடையாத  உயர்ந்த நிலைக்கு இந்து கலாசாரம் சென்றதைக் காணமுடிகிறது

xxxx

இதோ ஆறாவது மந்திரம்

பொருள்

எல்லாம் உடையவளே , செல்வம் சுமப்பவளே, உறுதியாக நிற்வளே, தங்க முலைகள் தாங்கியவளே , உயிரினங்களின் உறைவிடமே , வைச்வானர அக்கினியை அணிபவளே ; இந்திரனும் ரிஷபனும் எங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும்

விஸ்வம்பரா வசுதானீ பிரதிஷ்டா ஹிரண்யவக்ஷஆ ஜகதோ நிவேசனீ

வைச்வாநரம் பிப்ரதீ பூமிரக்னி மிந்த்ரக்ருஷபா த்ரவிணே நோ ததாது – 6

எனது வியாக்கியானம்

விஸ்வ என்றால் ‘எல்லாம்’; ‘உலகம் அளவு வியாபித்த’; விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சொல்லே இதுதான். இது ஒரு மங்கலச் சொல்;. கவிதைகளைத் துவங்கும்போது ‘அ’  அல்லது ‘உலகம்’ போன்ற மங்கலச் சொற்களுடன் துவக்க வேண்டும் என்பது மரபு. ‘உலகம் உவப்ப’ என்று திரு முருகாற்றுப் படை துவங்கும்; ‘உலகெ லாம்’ என்று பெரிய புராணம் துவங்கும். அதற்குச் சமமான சொல் ‘விஸ்வ’ .

பூமி என்பவள் தாய்; உலகம் முழுதும் இந்தக் கருத்தை இந்துக்களிடம் கற்றது. தாய் தன குழந்தைகளை எப்படிப் பாலூட்டி வளர்க்கிறாளோ அப்படி பூமாதேவியும் மனித குலத்தை வளர்க்கிறாள். பத்தாவது மந்திரத்தில் வரும் உலகப் புகழ்பெற்ற வரிகள் இதை உறுதி செய்யும் ..

இங்கு அக்கினியின் ஒரு பெயரான ‘வைச்வானர’ வருகிறது. உடலில் அக்நி ; அது அணைந்தால் நாம் வெறும் ஜடம்; உலகில் அக்கினி- அதாவது சூரியன் ; அது அணைந்தால் நம் கதி — சகதி .

பூமியில் பத்து மைல் தோண்டினாலே கடும் வெப்பம்; 4000 மைல் தோண்டினால்தான் நடுப்பகுதிக்குச் செல்ல முடியும். எவராலும் தோண்ட முடியாது; ஏனெனில் அக்கினிக் குழம்பு! இதை எல்லாம்  அறிந்தவர்கள் வேத காலப் புலவர்கள் என்பது வேறு பல மந்திரங்களில் தொனிக்கிறது.

இன்னொரு சொல் ‘ரிஷப’  ; இதை ரிஷpa என்று அப்படியே மொழிபெயர்த்து விளக்காமல் விட்டுவிட்டார்கள். இதை காளை (ரிஷப வாஹனம்) என்று பொருள் கொண்டு அதை இந்திரனுக்கும் அடை மொழி ஆக்கலாம். ஆனால் வியாக்கியனக்காரர்கள் ஒன்றும் சொல்லவில்லை ; முக்கியமான சொற்கள் “ஹிரண்ய வக்ஷ = தங்க முலைகள்” என்பதாகும் . செல்வத்துக்கு ‘த்ரவிணம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திரை கடல் ஓடியும் ‘திரவியம்’ தேடு என்று தமிழிலும் சொல்கிறோம். த்ரவிணம், திரவியம் எல்லாம் ஒரே சம்ஸ்க்ருத மூலம் உடையனவே. அதிலிருந்து வந்ததுதான் ட்ரெஷர் TREASURE  என்ற ஆங்கிலச் சொல்.

‘நிலை குலையாத’, ‘பொறுமையான’ என்ற இரண்டு அடைமொழிகளை  பூமிக்கு வழங்குவது இந்துக்களின் சிறப்பு. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ பொறுமை என்பார் வள்ளுவர். பூமாதேவி பொறுமையின் உறைவிடம்; செல்வத்தின் பிறப்பிடம் ; நோ = நஹ = எங்களுக்கு; முன்னரே விளக்கிவிட்டேன்; வேத காலப்  புலவர்கள் ஒருமையில் பேசுவது குறைவு; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் அவர்கள் கண்ட பெருநோக்கு; ஆகவே எப்போதும் எங்களுக்குக்  கொடு என்பர்;  எனக்குக் கொடு என்று பேசமாட்டார்கள்

xxxx

இதோ ஏழாவது மந்திரம்

யாம் ரக்ஷந்த்யஸ்வப்னா விஸ் வதானீம்  தேவா பூமிம்  ப்ருதிவீமப்ரமாதம்

ஸா நோ மதுப்ரியம் துஹா மதோ அக்ஷது  வர்ச்சஸா –7

ஏழாவது மந்திரத்தைக் காண்போம்

பொருள்:-

எப்போதும் தூங்காத தேவர்கள், சிறிதும் பிசகாமல் ,  காக்கும் இடம் பூமி! அவள் எங்கள் மீது தேன் மழை பொழியட்டும் . எங்களுக்கு வர்ச்ச ஸ் என்ற ஆன்மீக ஒளியை அளிக்கட்டும்

எனது வியாக்கியானம் _

வெளி உலக மக்கள் குறித்து இந்துக்கள் வியப்பான செய்திகளை சொல்லுகிறார்கள்; அவர்கள் ஒளி உருவத்தில் உலாவுவார்கள் ; எப்போதும் இன்பத்தில் திளைப்பார்கள்; ஆடல் பாடல் உண்டு; ஆனால் பார்வதியின் சாபத்தால் அவர்கள் செக்ஸ் sex செய்ய முடியாது; பிள்ளை பெற வேண்டுமானால் அவர்கள் பூமிக்கு வரவேண்டும்; ஐன்ஸ்டைன்  சொன்ன விதிகளையும் ஒதுக்கிவிட்டு அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்ய முடியும். அவர்களுடைய கால்கள் நிலத்தில் படியாது; கண்கள் இமைக்காது.; அவர்களுடைய மாலைகள் வாடாது. (நள தமயந்தி சரிதத்தில் இதை நன்றாக விளக்குகின்றனர் ) திருவள்ளுவரும், திருடர் பற்றி கிண்டல் செய்கையில் அவர்களும் தேவர்களும் ஒன்று; ஏனெனில் இரவில் தூங்குவதில்லை என்று (காண்க குறள் 1073) நக்கல் செய்கிறார்.

இதில் வரக்கூடிய ‘மது’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும்; இதன் பொருள் தேன் அல்லது தேன் போன்ற இனிமை. அஸ்வினி தேவர்களைப் போற்றும் துதிகளில்  ரிக் வேதம் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறது. மதுரம் என்றால் இனிமை; பாரதியார் கூட “மது நமக்கு ,மது நமக்கு , மதுரமிக்க தமிழ்   நமக்கு” என்று ஆடிப்பாடி கூத்தாடுவதைக் காண்கிறோம் .

Xxxx

எட்டாவது மந்திரத்தில் விஞ்ஞான உண்மை

இது மதத்தில் தசா வ தாவதாரத்தில் முதல் அவதாரம், மச்சாவதாரம். உலகம் முழுதும் முதலில் உலகம் முழுதும் நீரில் மிதந்தது ; நீரிலிருந்தே உயிரினங்கள் தோன்றின. இந்தக் கருத்து உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும் உளது. இதை முதலில்  உலகிற்குச் சொன்னவர்கள் இந்துக்கள். அதன் பிறகு உயிரினம் பரிணாமம் அடைந்த அதே வரிசையையையும் தசாவதாரத்தில் காண்கிறோம். இந்த எட்டாவது மந்திரத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை முனிவர் காட்டுகிறார்.

பொருள்

எந்த பூமியானது முதலில் தண்ணீர் மயமாக இருந்ததோ, எந்த பூமியை புனிதர்கள் அபூர்வ சக்தியோடு நாடினார்களோ , எந்த பூமியின் அமுத இருதயம் உயர்ந்த நிலையில் உள்ளதோ அந்த பூமி, உண்மையாலும்

அழிவற்ற தன்மையாலும் மூடப்பட்டுள்ள்ளதோ எந்த பூமாதேவி ஒளியையும் பலத்தையும் எங்களுக்கு அளிக்கட்டும்

யார்ண வே அதி ஸலிலமக்ர ஆஸீத்யாம் மாயாபிரன்வ சரன் மனீஷின ணஹ 

யஸ்யா ஹ்ருதயம் பரமே வ்யோ அ மந்த் ஸத்யேனாவ்ருதமம்ருதம் ப்ருதிவ்யாஹா

 ஸா நோ பூமிஸ்த் வஷிம்  பலம் ராஷ்டே ததாதூத்தமே  – 8

எட்டாவது மந்திரத்திலுள்ள ஸத்யம் ஆர்ணவம் = கடல் நீர், ஹ்ருதயம் ராஷ்ட்ரம் =தேசம் பலம், பூமி, பிருத்வீ,  உத்தம, மனித = மனீஷின—-Man ஆகியன இன்றும் புழக்கத்திலுள்ள எளிய ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் ஆகும்.

Xxxxx

To be continued ……………………………..

tags-பூமி சூக்த,  ஆராய்ச்சிக் கட்டுரை 4, 

திருத்தணி – ஆலயம் அறிவோம்! (Post No.10,492)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,492

Date uploaded in London – – 27 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 26-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருத்தணி
நினைத்த தெத்தனையில் தவறாமல்
நினைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவமுற் றழியாமல்
கதித்த நித்திய சித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப் பதியில் பெருமாளே
அருணகிரிநாதர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாக அமையும் சிறப்புத் தலமான திருத்தணி திருத்தலம் ஆகும். தமிழகத்தில், சென்னைக்கு மேற்கே 88 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

மூலவர் : ஸ்ரீ சுப்ரமண்யர்
தனி சந்நிதி : தெய்வானை தனி சந்நிதி : வள்ளி
தல விருக்ஷம் : மகுட மரம்

இந்தத் தலம் முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட தலமாகும். வள்ளியம்மையைக் கரம் பிடிக்க வேடர்களுடன் சிறு போர் நடத்தி சினம் தணிந்து முருகன் ஓய்வு பெற்ற தலம் இது என்பதால் இது தணிகை ஆகும். இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சூரபன்மனை வதம் செய்த முருகப்பிரான் தன் கோபம் தணிந்து அமர்ந்த தலம் இது. ஆகவே தணிகை என்ற பெயரைப் பெற்றுள்ளது. தேவர்களின் பயம் நீங்கப் பெற்ற இந்தத் தலத்தில் காம வெகுளி பகை தணியும். பக்தர்களின் துன்பம், கவலை உள்ளிட்டவை தணியும்.

முருகன் சினம் தீர்ந்து அருள் பாலிக்கும் திருத்தலம் என்பதால் இந்த ஒரு முருகன் கோவிலில் மட்டும் சூர சம்ஹாரத் திருவிழா நடை பெறுவதில்லை.

இந்தத் தலத்தில் ஆண்டு தோறும் நடைபெரும் திருத்தணிப் படித் திருவிழா சிறப்பு மிக்க ஒன்றாக விளங்குகிறது. 365 நாட்களைக் குறிக்கும் விதத்தில் இங்கு 365 படிகள் உள்ளன. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்புகழை ஓதி படி ஏறி முருகனைத் துதிக்கின்றனர். வள்ளிமலை சுவாமிகளால் இந்த திருத்தணித் திருப்படி திருவிழா 1917ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் 1918 ஜனவரி முதல் தேதியன்று துவங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை பெருகி இப்போது வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அருணகிரிநாதர் இங்கு முருகனை வழிபட்டு 64 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அவற்றுள், ‘நிலையாத சமுத்திரமான’ என்று தொடங்கும் திருப்புகழில் ‘பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ அருள் வேளே’ என்று கூறுவது குறிப்பிடத் தகுந்தது.
கர்நாடக சங்கீத மும்மணிகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரும் இங்கு வந்து பாடி முருகனின் அருளைப் பெற்றுள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் அமைந்துள்ள சிறிய குன்று இது. இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே வெண்மை நிறமாக உள்ள மலை பச்சரிசி மலை என்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை அடிவாரத்தில் புகழ் பெற்ற குமார தீர்த்தத் திருக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குன்றில் முருகன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரமும் நான்கு வளாகங்களும் உள்ளன.

இத்தலத்தில் முருகனின் வலது கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ர வேல் அமைந்துள்ளது. இது, இடி போன்ற ஒலி எழுப்பும் சூலக் கருவி. இடக்கையைத் தொடையில் வைத்து ஞானம் பெற்ற கோலத்தில் முருகன் இங்கு காட்சி அளிக்கிறார். அவர் கையில் வேல் இல்லை. அலங்காரத்தின் போது மட்டும் சேவலும் வேலும் வைக்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள் அனைத்து சந்நிதி தரிசனங்களையும் முடித்து விட்டு கடைசியாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

இங்குள்ள இன்னொரு சிறப்பு, விஷ்ணு ஆலயங்களில் தலையில் சடாரி வைக்கப்படுவது போல், இங்கு முருகனின் திருப்பாதச் சின்னம் பக்தர்களின் தலையில் வைக்கப்பட்டு முருகனின் ஆசி அளிக்கப்படுகிறது.
மும்மூர்த்திகள், நந்திதேவர், வாசுகி உள்ளிட்ட ஏராளமானோர் முருகனை வழிபட்ட தலம் இது.

இங்கு முருகப்பிரான் பிரணவத்தின் உட்பொருளை ஈசனுக்கு உணர்த்த, அவர் மகிழ்ந்து, வீ ர அட்டகாசமாகச் சிரித்தார். அதனால் அவருக்கு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் என்ற பெயர் வந்தது. அவரது திருக்கோவில் திருத்தணிக்குக் கிழக்கே நந்தியாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.

இந்திரன் இந்தத் தலத்திற்கு வந்து சுனை ஒன்று அமைத்து முருகனை வழிபட்டான். அந்த இந்திர நீலச் சுனையில் நீலோற்பலக் கொடியை வளர்த்து அந்த மலர்களால் மூன்று வேளைகளிலும் முருகனை பூஜித்து சங்க நிதி பதும நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் பெற்றான். ஆகவே முருகனுக்கு இந்திர நீலச் சிலம்பினன் என்ற பெயர் ஏற்பட்டது. அபிஷேகத்திற்கு இந்த சுனை தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள் இங்கு மலையின் தென்புறத்தில் ஏழு சுனைகளை அமைத்து முருகனை வழிபட்டனர். அந்த சுனைகளும் கன்னியர் கோவிலும் இப்பகுதியில் உள்ளன. இது இப்போது ஏழுசுனை கன்னியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் முருகப் பிரான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

நீறது இட்டு நினைப்பவர் புத்தியில்
நேசமெத்த அளித்தருள் சற்குரு
நீல முற்ற திருத்தணி வெற்புறை பெருமாளே!
என்ற அருணகிரிநாதரின் வாக்கால் முருகனை நாளும் துதிப்போமாக

நன்றி, வணக்கம்!

                         ***
tags- திருத்தணி

திருலோகம் கண்ட மஹாகவி! (Post No.10,491)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,491
Date uploaded in London – – 27 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருலோகம் கண்ட மஹாகவி!
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரை பல்வேறு அறிஞர்கள் நேரில் கண்டு வியந்து அவரது கவித்வத்தைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். அது போலவே அவரை நேரில் காணவிட்டாலும் கூட அவரின் கவிதைகளில் அவரை தரிசனம் செய்து பிரமித்தவர்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.

ஆனால் மஹாகவியை நேரில் காணாவிட்டாலும் கூட அவரைத் தனது தந்தையாகப் பாவித்து மானசீக புத்திரனாக மாறி அவருக்கு ஆண்டு தோறும் திதி கொடுத்த ஒரு “அற்புத மகனைப்” பற்றி உலகம் அறியுமா?
உலகிலேயே இப்படி ஒரே ஒரு அபூர்வ மகனாகத் திகழ்ந்தவர் திருலோக சீதாராம் அவர்கள்.

அவர் கண்ட மஹாகவி அவருக்குத் தந்தையாய் தாயாய், ஆசானாய் ஏன் எல்லாமாய் இருந்தார்.

மஹாகவி பாரதியார் பிறந்தது 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி. அவர் மறைந்தது 1921 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி.
திருலோக சீதாராம் பிறந்தது 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி. அவர் மறைந்தது 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி.


அதாவது மஹாகவி மறைந்த போது அவர் நான்கு வயதுக் குழந்தை!

இந்த நான்கு வயதுக் குழந்தை மஹாகவியைப் பார்க்காவிட்டாலும் கூட
அவனது கவிதைகள் மூலம் அவனையும் அவன் உளத்தையும் நன்கு தரிசித்து விட்டது!

இளம் பருவத்திலேயே கவிதா ஆர்வம் கொண்டு கவிதா ஆவேசம் பெற்ற அவர் தமிழில் தன்னைத் தோய்த்துக் கொண்டார்.
அவரது தாய் மொழி தெலுங்கு என்றாலும் கூட தமிழின் அமுதச் சுவையைக் கண்டு அதில் மூழ்கிப் போனார். அமிர்தத்தின் ஒரு சொட்டு நம் நாக்கில் பட்டாலும் கூட சாவே வராது. அவரோ தமிழ் அமிர்தத்தில் முழுகியே விட்டார் என்றால் அவருக்கு மறைவு என்பது ஏது?

அத்துடன் மட்டுமல்லாமல் கவிதையை ரசிக்க (தாய்)மொழி ஒரு தடை இல்லை என்பதைத் தான் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தும் விட்டார் அவர்.

‘நவசித்தன் பாரதி என்ற நற்பொருளை நானே பயின்று கொண்டேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்த அவர் அந்த பாரதி பல்கலைக் கழகத்தில், கல்வியில் உயர் பட்டம் பெற்று அதற்கும் மேலான ஆய்வுக்குரிய டாக்டர் பட்டத்தையும் தானே பெற்றுக் கொண்டார்.

மக்களிடையே அவர் பாரதியை எடுத்துச் சென்ற போது மக்கள் வியந்தனர்.
பாரதியாரின் கவிதைகளைத் தனது பாணியில் நீண்ட நேரம் விளக்கி உரை ஆற்றும் அவர் பாணியில் சொக்கிப் போனவர்கள் ஏராளம்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டதும் தன் பணியை நிறுத்தி நேராக செல்லம்மாள் பாரதியைப் பராமரிக்கும் பணியை விரும்பி மேற்கொண்டார்.

அவரது மடியிலேயே செல்லம்மாள் பாரதி தன் உயிரை விட்டார் என்பது மனதை உருக வைக்கும் ஒரு செய்தி.
பாரதியைப் படித்துப் படித்து அவரது வசன கவிதை நடை போலவே தனது நடையையும் அவர் பெற்று விட்டாரோ என்று எண்ணத் தோன்றும் அவரது கட்டுரைகளைப் படிக்கும் போது!
எடுத்துக் காட்டாக அவரது எழுத்திலிருந்து ஒரு அருமையான பகுதியை மட்டும் இங்கு மேற்கோளாகப் பார்க்கலாம்.

‘இலக்கியப் படகு’ என்ற அவரது நூலில் ‘கடமை உணர்ச்சி’ என்ற கட்டுரையில் வருவது இந்தப் பகுதி.
“சங்கற்பம் இல்லாமலேயே ஒருவன் வாழ்வாங்கு வாழும் இயல்புடையவனாகி விடுவது தான் ஒவ்வொருவனுக்கும் உலகத்தில் ஏற்பட்டுள்ள உண்மையான கடமை. அப்படி வாழ்வது தான் பலனை எதிர்பாராமல் செய்கின்ற கரும யோகம்.

பாரதி இதற்கு அருமையானதொரு விளக்கம் கொடுக்கிறார்.

சூரியன் உதிப்பதால் உலகத்தில் இருள் விலகுகிறது. ஒளி வருகிறது, உஷ்ணம் தோன்றுகிறது. மழை பொழிகிறது. உயிர்க்கு அமுதாகிறது. உயிர்கள் வாழ்கின்றன. உலகுக்கு இவ்வளவு நலன்களை இடையறாமற் செய்து கொண்டிருந்த போதிலும் தான் செய்யும் நன்மையும், அந்த நன்மையை அடைபவர் யார் யார் என்ற தகவலும், இதொன்றும் சூரியனுக்குத் தெரியாது. அவன் தருகின்ற ஒளியின் மேன்மையைப் பாராட்டி அவனைப் புகழ்ந்து அவனுக்கு வாழ்த்து மடல் வாசித்தளிப்பதாக இருந்தால் இதெல்லாம் அவனுக்கு விளங்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

முதலில் அவனிடம் உள்ள, வேறு எவரிடமும் இல்லாத பேரொளியே அவனுக்குத் தெரியாது.

இருள் என்பது இதுவென்று அவனுக்குத் தெரிந்திருந்தாலல்லவோ, ஒளியென்பதொன்று உண்டு என்று அவனுக்கு விளங்கப் போகிறது. ஆயினும் அவனிடமிருந்து ஒளி வருவதும் அதனால் உலகுய்வதும் எவ்வளவு மகத்தான உண்மை. அதைப் பற்றிய அறிவு சிறிதுமின்றி – ஆனால், அதன் பயனை அனைத்துலகும் பெறத்தக்க ஓய்வற்ற இயக்கம் அவனுடையதாக அமைந்திருக்கிறது.

எவன் ஒருவன் பிறந்ததனால், வாழ்வதனால், பேசுவதால், செய்வதால் உலகமே நலன் பெறுமோ, அத்தகையவன் தனது செயலின் விளைவைப் பற்றிச் சிறிதும் எண்ணமற்றவனாக இருந்து கொண்டே பெரும் பயன் விளையக் காரணனாக இருக்கின்றானோ அவனே நிஷ்காம்ய கர்மி.

ஞாயிற்றை எண்ணி – என்றும்
நடுவு நிலைபயின்று
ஆயிரம் ஆண்டு – உலகில் – கிளியே
அழிவற்று இருப்போமடி

கடமையென்று ஒன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து கடமையாளனாக விளங்க முயல்வது வீண் தொல்லை. நம் செயல்கள் எல்லாம் கடமையல்லாது வேறில்லை என்றாகி விடுகின்ற இயல்பு வசமாவது போல மானிட வெற்றி பிறிதொன்றில்லை.
கடமையுணர்ச்சி சுமையாகும். கடமை இயல்பே இனிதாகும்”.

இப்படி அழுத்தம் திருத்தமாக அற்புதமான ஒரு கருத்தை, பாரதியில் தோய்ந்து, எளிய நடையில் இனிய தமிழில் தருபவரை “பாரதியைக் கண்டவர்” என்று தானே கூற முடியும்!

பாரதியை நினைக்கும் போதெல்லாம் அவரது பக்தர்களின் நினைவும் கூட வருவது இயல்பே.
அந்த பக்தர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் திருலோக சீதாராம்!

tags– திருலோக சீதாராம், பாரதி


PLEASE JOIN US TODAY MONDAY 27-12-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

27 -12– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER – 

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON SAINT  Thayumanavar — 15 MTS

Interview with  Trainer and Journalist MR. MURUGABARATHI of Nalla Seythi Magazine-25 MTS

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVAR VERSES 10 mts.

Songs

APPR. 60 MINUTES

XXXXX

 tags- publicity27122021

உலக இந்து சமய செய்தி மடல் 26-12-2021 (Post No.10,490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,490

Date uploaded in London – –   26 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர்  26-ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxxx

காசிக்கு செல்லுங்கள்‘: பிரதமர் மோடி

 எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பற்றி கவலைப்படாமல், புனித நகரமாகிய உத்தர பிரதேசத்தின் காசியை சுற்றுலா தலமாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் பிரதமர் மோடி. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, மாநிலம் வாரியாக பாரதீய ஜனதா கட்சி எம்.பி.,க்களை சந்தித்தார் மோடி.

நீங்கள் அனைவரும் காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள்; தொகுதி மக்களிடம் காசியைப் பற்றி சொல்வதுடன், அவர்களையும் காசிக்கு போகச் சொல்லுங்கள்’ என அவர்களிடம் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகனிடமும் காசிக்கு செல்லும்படி கூறினார் மோடி. மேலும் காசி பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுத்து வருகிறார மோடி.

ந்த புத்தகங்கள் ஹிந்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வாரணாசியின் எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த புதிய நகரத்தை எப்படி சீரமைத்துள்ளார் என இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த புத்தகங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளன.

Xxxx

திருமலை இலவச டோக்கன் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்.

திருப்பதி–திருமலை தேவஸ்தான இணையதளத்தில் சர்வதரிசன இலவச முன்பதிவு டோக்கன்கள் நேற்று வெளியிடப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.


நேற்று காலை சர்வதரிசன இலவச தரிசன டோக்கன்கள் வெளியிடப்படும் என செய்தி வெளியானது. ஆனால், தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகளின் முன்பதிவு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சர்வதரிசன டோக்கன்கள் முன்பதிவிற்காக காத்திருந்து ஏமாற்ற அடைந்தனர். ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சர்வ தரிசன டோக்கன் வெளியீடு குறித்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது.இந்நிலையில் ஜனவரி மாதத்துக்கான சர்வ தரிசன டோக்கன்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

xxx

சபரிமலை கோயிலில் இன்று மண்டல பூஜை நிறைவு: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு பிரார்த்தனை

சபரிமலை,- -சபரிமலையில் இன்று மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்று  நிறைவடைவதை ஒட்டி நேற்று  மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக தங்க அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.

மண்டல பூஜை நிறைவடைவதை ஒட்டி சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே எரிமேலியில் நடைபெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் மேளதாளம் முழங்க ஆடி, பாடி வழிபட்டனர்.

மகரவிளக்கை ஒட்டி ஐய்யப்பன் கோயில் நடை மீண்டும் வருகிற 30ம் தேதி திறக்கப்படவுள்ளது. 31ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மகர ஜோதி பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ளது

Xxx

கர்நாடகா: கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா கர்நாடக சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது.

முக்கிய அம்சங்கள்

மதமாற்ற தடை சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

* மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். 

* இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

* சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கூட்டு மதமாற்றத்துக்கு… 

* மேலும் தவறு செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அம்சமும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

*அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மேற்கண்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர்தான் இதை முதலில் கொண்டு வந்தார் என்று பாரதீய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டியவுடன் அவர்களுடைய எதிர்ப்பு முனை மழுங்கிப்போனது ; அவர்களால் அதற்கு மேல் வாய் திறக்கமுடியவில்லை ஜனதா தள மும் , காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கியது

தற்போது நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து மசோதா சட்டமாக அமலுக்கு வர உள்ளது.

XXXX

XXXX

கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்ற நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி

மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது தொடர்பான விசாரணைக்கு கோயில் நிர்வாகிகள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் அறிந்தவர்கள் யாரும் இந்த புகாரை அளிக்க முன் வரலாம். இதனால் பலர் ஆடிப்போயுள்ளனர்.

Xxx

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதியை

ராஜபக்சே  தரிசித்தார்.

திருப்பதி,–திருமலை பாலாஜி வெங்கடாசலபதியை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசித்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு நாட்கள் பயணமாக தன் குடும்பத்துடன்  திருப்பதிக்கு வந்தார்.

 இரவு திருமலையில் தங்கிய அவர், காலை தன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.

தரிசனம் முடித்து திரும்பிய, அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை, தீர்த்த பிரசாதம், ஏழுமலையான் திரு வுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Xxx

தமிழகத்தில் அறநிலையத் துறை என்ன செய்கிறது? மத்திய தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி காட்டம்!

  • தமிழகத்தில் 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
  • தமிழகத்தில் அறநிலையத் துறை என்ன செய்கிறது?
  • மத்திய வெளியுறவு கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி சரமாரி கேள்வி
  • மத்திய வெளியுறவு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறையின் அமைச்சர் மீனாட்சி லேகி காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், ஆலய வளாகத்தில் உள்ள சிற்பங்களின் கலை நுணுக்கங்களையும் பார்வையிட்டார்.

    இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. உதாரணமாக கன்னியாகுமரி கோயிலையும் சொல்லலாம். கன்னியாகுமரி பகவதி அம்மன் அணிந்திருந்த மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கடலில் கப்பல்கள் செல்ல இடையூறாக இருக்கிறது என 18 வது நூற்றாண்டில் பிரிட்டிஷார் அக்கோயிலின் கிழக்கு வாசலை மூடியிருக்கிறார்கள்.

    தற்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வந்து விட்ட பிறகும் கோயிலின் கிழக்கு வாசல் கதவு இன்று வரை மூடியே இருக்கிறது. கோயில் கிழக்குவாசல் கதவை திறக்க வேண்டும்


  • கன்னியாகுமரி ஊராட்சி நிர்வாகத்துக்கு மத்திய அரசின் சுற்றுலாத்துறை மூலம் நகரை அழகுபடுத்துவதற்கென நிதி அனுப்பப்பட்டிருந்தது. அந்நிதியைப் பயன்படுத்தி கன்னியாகுமரியில் போதுமான வசதிகள் செய்யப்படாமல் டைல்ஸ் மட்டுமே பதித்திருக்கிறார்கள்.

    தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் அதை முறையாக கண்காணித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறோம். மேலும் என்னென்ன தேவைப்படும் என்பதை அறியவே காஞ்சிபுரம் வருகை தந்துள்ளேன்.

    காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் வரலாறுகளும், கலைச்சிற்பங்களும் வியக்கத்தக்கவையாகவே இருக்கின்றன.
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியனவற்றுக்கு இதுவரை அறங்காவலர்கள் கூட நியமிக்கப்படவில்லை.


  • இக்கோயில்களுக்கு ஏதேனும் உதவிகளோ அல்லது வசதிகளோ தேவைப்பட்டாலும் கடிதம் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

  • !காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.

  •  
  • அனைவருக்கும்   ஞான மயம் குழுவினர்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றனர் .
  • மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்

XXXXXXXXXX

  • இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
  • நன்றி, வணக்கம்
  • Tags- Tamilhindunews, 26122021

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH  26TH   DECEMBER ,2021 (Post No.10,489)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,489

Date uploaded in London – –   26 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by NITHYA SOWMY

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by NITHYA SOWMY

Xxxx

Anti-conversion bill: BJP in K’taka turns table on Congress

The ruling BJP in Karnataka which was expected to face the heat in the assembly on Anti-conversion Bill, turned the tables on Congress party on Thursday by stating that ‘The Karnataka Protection of Right to Freedom of Religion Bill, 2021’, popularly known as Anti-conversion bill, is a mere extension of the draft proposal prepared by the Congress back in 2016.

The Congress which had come fully prepared to nail the BJP on the bill was stumped after the revelation.

Minister for Home, Araga Jnanedra in his opening remarks on the bill said that the Anti-conversion bill is the brainchild of the Congress. Further, Minister for Law, J. Madhuswamy explained that the draft was prepared by the Law Commission as per the directions of the then Chief Minister Siddaramaiah.

He further said that Siddaramaiah, as the then Chief Minister, had ordered to prepare the draft proposal on prevention of forceful conversions. Stunned Siddaramaiah refuted this and challenged the BJP to prove its claims.

Speaker Vishveshwara Hegde Kageri then read out his notes from the old file and asked him to verify it by himself at his office and adjourned the session briefly.

When the house resumed, Siddaramaiah, after verifying the notes, agreed that the notes were made during his time and tried to defend his position by saying that though he directed for the draft, it never came up before the cabinet and it was never considered till the end of his tenure.

Siddaramaiah, known for his poignant remarks and was expected to question the government on religious freedom, seemed to have lost steam.

Chief Minister Basavaraj Bommai said that the Anti-conversion law is very much necessary to tame those elements who take advantage of the poverty of the people.

Siddaramaiah asked Bommai not to be emotional on the issue. Bommai stood up and replied that he is emotional and he wanted Siddaramaiah also to be emotional.

Former Chief Minister H.D. Kumaraswamy chided Siddaramaiah that he has no morality to speak on the issue of the Anti-conversion Bill. “In fact he had provided the draft to the BJP and posed himself as an icon of secularism.”

Xxxx

Lankan Prime Minister had darshan at Tirumala Temple

Prime Minister of Sri Lanka, Mahinda Rajapaksa along with his spouse Shiranthi Rajapaksa arrived at Tirumala on Thursday afternoon.  

He was accorded a warm reception by Deputy Chief Minister K Narayana Swamy on his arrival at Sri Padmavathi Rest House.

The Lankan Prime Minister and his entourage had darshan of Sri Venkateswara Swamy on Friday.

In the meanwhile a temple announcement says,

The online quota of SSD tokens (Sarva darshan) for the month of January in 2022 will be released by TTD on December 27 by 9am.

During Vaikunta Dwara Darshanam days from January 13 to 22 a quota of 5000 tickets per day while the remaining days 10 thousand tickets will be released in online.

TTD expresses ‘shock’ over Swamiji’s claims

The Tirumala Tirupati Devasthanams (TTD) on Friday denied the charges levelled by Sri Paripoornananda Swami and expressed shock over the ‘baseless’ allegations made by him.

In a press release, setting aside all charges made by the Swamiji, the TTD said after the abolition of the Mirasi system several persons voluntarily joined the TTD as employees and they were treated with utmost dignity by the officials. 

The release said, Swamiji is well aware that since several decades the TTD has been utilising the funds raised through donations, hundi collections and sale of Arjita seva tickets on various social welfare activities, including educational institutions, hospitals, old age homes, veda pathashalas, Veda University and many dharmic programmes.In a similar way, the TTD has mulled a Children’s superspecialty hospital to help the poor and needy children who are suffering from cardiac and other ailments.

The release said that Swamiji is also not ignorant of the massive two-day Gosammelanam convention undertaken by the TTD

TTD also reminds the Swamiji about the national Go Maha Sammelan held in Tirupati wherein all the Swamijis, Go sevaks from across the country participate, which also passed a resolution once again for recognition of Gomata as a national animal.

The Swamiji should note that the TTD has many times clarified that there was no pink diamond as such existed in TTD custody. The gift by Mysore Maharaja to the Sri Venkateswara Swamy in 1945 was a Ruby and not pink diamond. Even the Justice Wadhwa Commission and Justice Jagannatha Committee also declared the same.

As the matter of construction of Thousand pillar mandapam is now in Court and TTD will act as per the orders of Court.

In spite of knowing all these facts, the baseless allegations made by Swami Paripoornananda with some ulterior motive is truly shocking.

Xxxx

HERE IS SOME GOOD NEWS FROM ODISAH

Vedas and modern education

Two Vedapathsalas of Odisha have been training children in all the four Vedas free of cost for several years now, writes Diana Sahu IN New Indian Express

The Vedapathsala at Berhampur and Sri Garuddhwaz Vasudev Yugvalkya Vedapathsala at Puri are the only institutions in the State today where young boys are taught all the four Vedas – Rig Veda (which is the oldest), Yajur Veda, Sama Veda and the Atharva Veda – in age-old gurukul style. Along with Vedas, they are also taught English, Mathematics, Science, Odia, Sanskrit and Social Sciences to make them eligible for mainstream education.

Governed by Maharishi Sandipani Rashtriya Ved Vidya Pratishthan at Ujjain, an independent body under the Ministry of Education, both the institutions provide degrees in Veda Bhushan and Veda Vibhushan (Class VI to XII) which are equivalent to Class X and Class XII respectively and can be used for admission to college. Residential in nature, the Vedapathsalas do not charge a penny from the children and instead pay them a stipend of Rs 1,000 every month.

At the two-decade-old Berhampur Vedapathsala, the day begins early for the 58 vidyarthis with chanting of slokas and mantras. While the mornings are meant for classes, the evenings are dedicated to ‘aratis’, sloka recitation, traditional games and music before they retire for the night by 9.30 pm. “Although it is a life of strict discipline for the vidyarthis at the school, we ensure that they are given some hours to unwind for their overall growth”, said principal Manoj Kumar Panigrahi.

The Puri Vedapathsala is currently home to 70 vidyarthis who also study the mainstream subjects apart from the Vedas. “Each child can choose to study one Veda along with the general subjects to keep up with the modern education system”, said Indramani Pati, a teacher of the institution. 

Both the institutions have hired 10 to 15 teachers each to train the students with the focus being on oral recitation. Pati said while the courses are developed on the lines of CBSE, students after completing their Veda Vibhushan can pursue higher education in Veda, Vedanga or Sanskrit studies.

Both Panigrahi and Pati feel that despite the rise in the number of English medium schools, interest in Vedic studies persists which is evident from the admissions. Every year, the institutions get students from all over India, particularly West Bengal, Jharkhand, Rajasthan, Madhya Pradesh. However, the annual admissions are limited to around 10 to 15 students. 

“Since we provide free education and lodging, we only take the number of students that we can afford to take care of,” said Panigrahi. 

The batches are a mix of children from well to do families and those from poor economic backgrounds including orphans. Besides funds from Maharishi Sandipani Rashtriya Ved Vidya Pratishthan, the schools are managed with donations from Good Samaritans.

xxxxxxxxx

WISH YOU ALL A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR . WE WISH TO SEE YOU ALL AGAIN IN THE NEW YEAR.

xxxx

That is the end of WORLD HINDU NEWS ROUND UP FROM

AAKAASA DHWANI.

READ BY NITHYA SOWMY

PLEASE WAIT FOR TAMIL NEWS.

 tags- hindunews26122021

எந்தையும் தாயும் போரிட்டு வென்றதும் இந்நாடே – அதர்வண வேதம் (10,448)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,488

Date uploaded in London – –   26 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -3

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே- அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே- அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்த்து

சிறந்ததும் இந்நாடே–இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி என்

வாயுற வாழ்த்தேனோ?- இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? — பாரதி

என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடினான். அதற்குக் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அதர்வ வேதப் புலவன் பாடினான்  கொஞ்சம் மாறுதலுடன். அப்போது தேவாசுரப் போர் நடந்ததால் போர் பற்றிய குறிப்புடன் வேதப் புலவன் பாடினான் பூமி சூக்தத்தில் .

இதோ பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -3

நாலாவது மந்திரம் பொருள்-

நான்கு திசைகளை உடையவள் ; எவளிடத்தில்   உணவும் தானிய நிலங்களும்,   

எவளிடத்தில் உயிர்விடும் (சுவாசிக்கும்), நகரும் ஜீவன்கள் உள்ளனவோ

அவள் எங்களுக்கு விளைச்சளையும்  கால்நடைகளையும்  தருபவளாக   ஆகட்டும்”

யஸ்யாஸ்  சதஸ்ரஹ  ப்ரதிஸஹ ப்ருதிவ்யா   யஸ்யாமன்னம்  க்ருஷ்டயஹ  ஸம்ப பூவுஹு

யா பிபர்திம் பஹுதா ப்ராண தேஜத்   ஸா நோ பூமிர் கோஷ் வப் யன்னே   ததாது

 மூன்றாவது மந்திரத்தில் வந்த சில சொற்கள் இதிலும் அப்படியே வந்துள்ளன.

Xxxx

ஐந்தாவது மந்திரம்  பொருள்

யஸ்யாம் பூர்வே பூர்வஜனா விசக்ரிரே யஸ்யாம் தேவா அஸுரானப்ய வர்தயன்

கவாமஸ்வானாம்  வயஸஸ்ச விஷ்டா பகம்  வர்ச்சஹ ப்ருதிவீ நோ தகாது

பொருள்

எந்த பூமியில் எங்கள் மூதாதையர் வாழ்ந்து பணி செய்து வீழ்ந்தனரோ , எங்கு அசுரர்களை தேவர்கள் வெற்றி கண்டனரோ , எந்த பூமி, கால்நடைகளுக்கும் குதிரைகளுக்கும் , பறவைகளுக்கும் உறைவிடமோ அந்த பூமாதேவி எங்களுக்கு செல்வத்தையும் பிரகாசமான அறிவையும் அளிப்பாளாகுக

Xxx

எனது வியாக்கியானம்

பாரதியார் பாடியது போலவே “எங்கள் முந்தையர் வாழ்ந்து பணி  செய்து முடிந்தது”— என்ற கருத்தைக் காணலாம்; பாரதியாரே  இந்த பூமி சூக்தத்தை மனதிற்கொண்டுதான் ‘எந்தையும் தாயும்’ பாடலைப் பாடினாரோ என்றும் தோன்றுகிறது . பின்னால் வரப்போகின்ற விஷயங்கள் அதை உறுதி செய்கின்றன.

பாடலின் பொருளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் காண்கிறோம் ; வேத கால இந்துக்களை ‘நாடோடி’ என்று சொன்னவர்களுக்கு மிதிடி கொடுக்கும் வரிகள் இவை. ஆண்டு முழுதும் விவசாயம் செய்வோர் ஓரிடத்தில் நிலையாக வாழத்தான் வேண்டும். அதுமட்டுமல்லாமல்  உலகின் பழைய நூலான ரிக் வேதத்திலேயே “அரசர், சபை, தலைவரைத் தேர்ந்தெடுத்தல் , கிராமணி/ கிராமத் தலைவர் , நகரம்” எல்லாம் வந்துவிடுகின்றன. அவர்களை நாடோடிகள் என்று சொன்ன கும்பலை எண்ணி எண்ணி நாம் நகைக்கலாம்

‘நான்கு திசைகள்’ என்ற சொற்களில் புதிய வானம், புதிய பூமி  முழுவதையும் கண்டார்கள் வேத கால மக்கள்.

இதைவிட முக்கியமானது ஐந்தாவது மந்திரத்தில் உள்ள ‘பகம்’ , ‘வர்ச்சஸ்’ என்ற இரண்டு சொற்கள். பகவான் என்றால் இறைவன் என்பது பொருள். ‘ஆறு பகம் /செல்வம் நிறைந்தவன் பகவான்’

அவையாவன –

பகவானின் ஆறு லட்சணங்கள் –

1.ஞானம், 2.வைராக்யம், 3.கீர்த்தி, 4.ஐஸ்வர்யம், 5.ஸ்ரீ / திரு/செல்வம், 6.பலம்

‘வர்ச்சஸ்’ என்பது சாதாரண ஒளி அல்ல.; பிராமணச்  சிறுவர்கள் பூணூல் போட்டவுடன் தினமும் அக்கினி வளர்த்து அதில் நெய்யுடன் அரசங் குச்சிகளைப் போட்டுவிட்டு, அந்த சாம்பலை எடுத்து உடலின் பல பகுதிகளில் இட்டுக்கொள்ளும்போது ‘தேஜஸ், ஓஜஸ், வர்சஸ் , மேதாவி’ என்ற சொற்களை சொல்லுவார்கள் காயத்ரீ மந்திரத்தில் வேண்டுவதும் – ‘பர்கோ’ – ‘அறிவு எனும் ஒளி’தான். ஆயினும் வர்ச்சஸ் என்பது ஆன்மீக ஒளி – பிரகாசம் – ஆகும். அறிவு என்பது மெத்தப் படித்தல் – விவேகம் என்பது நல்லது கெட்டதை அறிந்து – நல்லதை மட்டும் பின்பற்றல் . ‘களவும் கற்று மற’ என்பது ஆன்றோர் வாக்கு. அறிவதில் தவறில்லை; அறிவது ஏமாறாமல் வாழ்வதற்கு அவசியமும் கூட. ஆக ‘வர்ச்ஸ்’ கேட்பது ஆன்மீக ஒளி பெருகவே

தேவ அஸுர போர் என்பது ரிக் வேத காலம் முதல் உண்டு. எதிர்க்கட்சி மிகவும் அவசியம். மனிதன் தோன்றிய காலம் முதல் எதிர்க்கட்சிகள் — அஸுர குணங்கள் உண்டு– இந்தப் போர்– தேவ அஸுரப் போர் —  தினமும்  நம் மனதில், வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் நல்லதே வெல்லும். அதையும் ஐந்தாவது மந்திரம் பூமாதேவியின் சிறப்பில் ஒன்றாகக் கூறுவது சிறப்புடையது.

63 மந்திரங்களைக் கொண்டது பூமி துதி; முதல் ஐந்து துதிகளில் நான்கு திசை மற்றும் இறந்த, நிகழ், வருங்காலம் மற்றும் நகரக்கூடிய உயிர் இனங்கள், நகராத கடல், மலைகள் ஆகிய அனைத்தையும் புலவர் நம் கண் முன்னால் காட்டிவிட்டார். இந்த பர ந்த நோக்கு ரிக் வேதத்திலேயே உளது; 1-113-11 ஆவது மந்திரத்தில் உஷா என்னும் அதிகாலை அழகி , கடந்த கால, நிகழ் கால, வருங்கால மக்களைக் கண்டவள் என்று  புலவர் பாடுகிறார் . அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாம முதல் ஸ்லோகத்தில் வருவதை முன்னரே கண்டோம் .

தொடரும்

tags — பூமி சூக்தம் -3, எந்தையும் தாயும்,

வேத சம்ரக்ஷணம் நம் கடமை பரமாசார்யாளின் அறவுரை!(Post.10487)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,487
Date uploaded in London – – 26 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேத சம்ரக்ஷணம் நம் கடமை பரமாசார்யாளின் அறவுரை!
ச.நாகராஜன்

மஹா பெரியவாள் காஞ்சி பரமாசார்யாளி அற்புதமான உரை அடங்கிய இந்த நூல் சிறிய நூல் தான். 16 பக்கங்கள் கொண்டது. ஆனால் அது தரும் செய்தியோ மகத்தானது. ஒவ்வொரு இந்தியனும் அறிந்து நன்கு உணர்ந்து செயல்பட வேண்டியது!
அப்படி என்ன செய்தி என்றால் அது பாரத பாரம்பரியமே வேதத்தின் அடிப்படையில் உருவானது தான்; அதைக் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்ற செய்தி தான்!
ஏன் அதைக் காக்க வேண்டும் என்பதற்கு ஆசார்யாள் அடுக்கடுக்காக காரணங்களை நம் முன் வைக்கிறார்.
வேதம் ஒலியையும் உள்ளார்ந்த பொருளையும் ஆதாரமாகக் கொண்டது. அதன் அர்த்தத்தை மேல் போக்காக அறிந்து விட முடியாது.

உள்ளுணர்வு கொண்ட ரிஷிகளே அதைச் சரியாக அறிந்து கொள்ள முடியும்.
சப்தத்திற்கு அப்படி என்ன மஹிமை என்று கேட்டால் அதற்கான விளக்கத்தை ஆசார்யாள் இப்படித் தருகிறார்:-

“ஒவ்வொரு சப்தத்தால் ஒவ்வொரு விளைவு வெளி உலகில் உண்டாகிறது. ஆராய்ச்சியாளர்கள் சில விதமான சப்தங்களை ஸ்வர ஸ்தானங்களில் அமைத்து ஒரு ஏரிக்குப் பக்கத்தில் திரும்பத் திரும்ப வாசித்த போது அதிலிருந்து உண்டான அதிர்வுகளால் (Vibration) j ஜலத்தின் மேலேயே ஒளியானது தூள் தூளாகப் பிரகாசித்துக் கொண்டு, அப்புறம் அந்த ஒளித்துகள்களெல்லாம் (light particle) ஒழுங்கான ஒரு வடிவத்தில் (Specific shape) அமைந்தன. ஒவ்வொரு விதமான் ஸ்வர வரிசைக்குக் இப்படி ஒரு ஒளி உருவம் உண்டாயிற்று. இந்த Scientific Proff லிருந்து வேத மந்திர சப்தங்களால் தேவதா ரூபங்களின் தரிசனம் கிடைக்க முடியும் என்பதை நம்ப முடிகிறது.

“ஒளியானது ஒளியாக மட்டும் தான் வெளி உலகில் மாறுகிறது என்றில்லை. அது வேறு பல விதங்களில் வெளியே வியாபித்துப் பல விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வேத சப்தங்கள் வெளிச் சூழலில் (atmosphere) பரவிக் கொண்டிருப்பதாலே பரம மங்களம் உண்டாகும். அப்படிப்பட்ட சக்தி அந்த மந்திரங்களுக்கு இருக்கிறது. சப்தம் மட்டுமில்லாமல், அதன் ஸ்வர ஸ்தானத்துக்கும் சக்தி உண்டு. ஒரு ஒலியை எப்படிச் சொன்னாலும் பயன் தந்து விடாது. சிலவற்றைத் உயர்த்த வேண்டும். சிலவற்றைச் சமமாகச் சொல்ல வேண்டும். சிலவற்றைத் தாழ்த்த வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும்.”

அற்புதமாக வேத ஒலி மஹிமையை விளக்கும் ஆசார்யாள் பிராமணனது கடமையையும் சுட்டிக் காட்டுகிறார்.
“வேதம் மட்டுமல்ல, மற்ற சாஸ்திரங்கள் கலைகள் எல்லாவற்றையுமே ரக்ஷித்து அந்தந்தக் கலையைத் தொழிலாகக் கொண்ட பிற ஜாதியாருக்குப் போதிக்க வேண்டியது பிராமணனுக்கான் அதொழில். சமுதாயத்தின் அறிவை, பண்பாட்டை வளர்க்கிற இந்தப் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது” என்கிறார் அவர்.

பட்டணத்திற்கு நான் வந்ததற்குக் காரணம் ஒரு பத்துப் பேராவது இந்த நல்ல காரியத்தில் இறங்க மாட்டார்களா என்ற ஆதங்கத்தில் தான் என்று ஆசார்யாள் கூறும் போது மனதை அது உருக்குகிறது.

வேதோ நித்யம் அதீயதாம்!
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்பதே தாரக மந்திரம்.

இப்படி 16 பக்கங்களில் வேத ஸம்ரக்ஷணம் – நம் கடமை – காஞ்சி பரமாசார்யாள் உபதேஸம் என்ற நூல் அரும் பெரும் கருத்துக்களை விளக்குகிறது
.
நூலில் திருநெ;வேலிச் சீமையில் தான் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார்; ஆதியில் மனு இருந்ததே தமிழ் நாட்டில் தான் போன்ற பல சுவையான தகவல்களைக் கண்டு பிரமிக்கிறோம்.
இந்த நூலின் உள்ளட்டையில் இரு மொழி மாத இதழான ‘பிராமின் டுடே’ பற்றிய அறிமுகமும் கிடைக்கிறது.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்பது தான் திருமுறை தரும் முதல் முழக்கம்.

அந்த முழக்கத்திற்குத் தக்கவாறு பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியதும் முக்கியம்; அப்படி நடக்கும் பிராமணர்களை சமுதாய அக்கறையுள்ள அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம்.

இந்த நூலின் முதல் பதிப்பு 2008 டிசம்பரில் வெளியானது. பின்னர் 2019-இல் ஒன்பதாம் பதிப்பைக் கண்டுள்ளது.

இதை வெளியிட்டது வாச்சா பப்ளிகேஷன்ஸ
நூலின் விலை ரூ 15/ மட்டும்.
வெளியிட்டோர் முகவரி
Vacha Publication, Shop no 6, Arihant Apts, R.A.Road, Purasaiwalkam, Chennai 600064.
Email : brahmintoday@gmail.com

PLEASE JOIN US TODAY SUNDAY 26-12-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

XXX

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer – 

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   — TIRUTTANI MURUGAN TEMPLE12 MTS

THIIRUPPUGAZ BY  MRS JAYANTHI SUNDAR’S GROUP  — 12 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

TALK ON ALVAR CHARITHRAM BY THIRUKKUDAL MUKUNTHA RAJAN – 15 MTS.

DR KANNAN’S TALK ON ALVAR PASURAMS

XXXX

APPR. 70 MINUTES

tag– publicity26122021

மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486)

#WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,486

Date uploaded in London – –   25 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன; மதுரையில் நடந்த மதுரமான நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் அப்படி நடக்கின்றனவா என்று தெரியவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே சீன வைரஸ் தாக்குதலில் இருப்பதால் இப்போது நடக்கவும் வாய்ப்புகள் குறைவு.

மதுரையில் எங்கள் காலத்தில் இருந்த பல நிறுவனங்கள் அழிந்து விட்டன.

முதலில் திருப்பாவையில் துவங்குகிறேன் .

மதுரையில் இருவர் தங்கள் வாழ்க்கையையே திருப்பாவையைப் பரப்புவதற்கு அர்ப்பணித்து இருந்தனர். ஒருவர் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன்; மற்றொருவர் திருமதி சீதாலெட்சுமி பாலகிருஷ்ண ஐயங்கார். .

ராஜம்மாள் சுந்தராஜன் மறைவுக்குப் பின்னர் அவரது வலது கையாக விளங்கிய விசாலாக்ஷி பாவைப் பாடல்களைப் பரப்பினார். அதே போல திருமதி சீதாலெட்சுமிக்குப் பிறகு அவருடைய புதல்வி பத்மாசனி திருப்பாவையைப் பரப்பினார்.

ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி சங்கராச்சாரியார் , திருப்பாவை முப்பதையும் ஒப்பிப்போருக்கு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தனுப்புவார். மாயவரத்தைச் சேர்ந்த திரு ராமமூர்த்தி, மடத்தின் பிரதிநிதி. அவர் எங்கள் வீட்டில் உணவருந்திவிட்டு திருப்பாவைப் பள்ளிகளுக்குச் செல்லுவார். நாங்கள் அந்த வெள்ளிக்காசுகளைக் காட்டச் சொல்லி வியப்புடன் பார்ப்போம். என் தங்கையும் எதாவது ஒரு திருப்பாவைப் பள்ளிக்கு 30 நாட்களும் செல்லுவார்.

திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் ஏராளமான கல்லூரி மாணவிகளையும் கவர்ந்து இழுத்தார். அவர் செய்த நாட்டிய நாடகங்கள் இதற்கு ஒரு கரணம். அந்தக்காலத்தில் வத்சலாபாய் என்ற பள்ளிக்கூட பஸ், பணக்கார வீட்டுப் பெண்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்லும். அந்த பஸ்ஸில் வார விடுமுறை நாட்களில்  பல ஊர்களுக்குச் சென்று அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை நாட்டிய நாடகமாக நடத்திக் காண்பித்தனர். எங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லுவார்கள். அவர்களுடைய  நாட்டிய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழனி, தாராபுரம், உடுமலைப் பேட்டை முதலிய இடங்களுக்குத் சென்ற பயணம் இன்றும் நினைவில் நிற்கிறது.

கட்டுரைக்குத் தலைப்பு “மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்” என்று கொடுத்தற்குக் காரணம் எல்லா நாட்களும் நெய் ஒழுகும் பொங்கல், தொன்னையில் கிடைக்கும். திருப்பா வைக்காக வராவிட்டாலும் பொங்கலுக்காக வரும் கூட்டம் கொஞ்சம் இருக்கும். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – பாடல் அன்று ‘நெய்யில் மிதக்கும்’  சர்க்கரைப்  பொங்கலும் கிடைக்கும்.

மதுரை தானப்ப முதலீத் தெரு டிரஸ்ட் ஹவுஸில் பிரம்மாண்டமான அண்டாக்களில் பொங்கல் வடிப்பர்.

இது தவிர நாங்கள் வசித்த வடக்குமாசி வீதியில் யாதவர்கள் திறம்பட நிர்வகித்த கிருஷ்ணன் கோவில் இருந்தது. அதிகாலை 4-30 மணி முதல் திருப்பாவை மற்றும் பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி மூலம் வரும். இந்தப் பாட்டு வந்தால் இத்தனை மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளும் அளவுக்கு கண கச்சித ஒலிபரப்பு .

இது தவிர மீனாட்சி கோவிலில் திருவெம்பாவை, தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் பாடுவார்கள். நட ராஜர் முன்னிலையில் அதிகாலையில் ஞானப் பால் என்ற சுவைமிகு ஏலக்காய், கிராம்பு போட் பால் விநியோகிப்பர். ஆளுக்கு ஒரு உத்தரணி தான்; அதற்கு நீண்ட க்யூ வரிசை. ஆனால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியம் எங்களுக்கு மட்டும் கோவில் பேஷ்கார் ஒரு பாட்டிலில் தனியாகக் கொடுத்து விடுவார் . எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் விரிவான ஆன்மீகச் செய்திகளை வெளியிடுவதால் இந்த சிறப்புக் கவனிப்பு..

அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டால் அது இளப்பமான விஷயம். ஹிந்து என்ற பெயர்கொண்ட  பத்திரிகை கூட கடைசி பக்கத்தில் மூன்று அங்குலத்துக்கு செய்தி போடுவார்கள்; என் தந்தை வே. சந்தானம் அந்த மரபுகளை உடைத்து எறிந்து முதல் பக்கத்தில் தெய்வீக செய்தி வெளியிடுவார். தினமணியின் ‘இன்றைய நிகழ்ச்சி’யைப் பார்த்தால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் கிடைத்துவிடும்.

இது தவிர மேலும் ஒரு நிகழ்ச்சி –அதி காலை 4 மணிக்கு பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு 4 மாசி வீதிகளும் மார்கழி மாதம் முழுதும் அன்பர்கள் வீதி உலா வருவர் . இவ்வாறு இரண்டு மூன்று குழுக்கள் செய்ததாக ஞாபகம். அதில் சில நாட்கள் தந்தையுடன் நானும் சகோதரர்களும் கலந்து கொண்டோம்.

மாதத்தில் ஒரு முறை திருப்பாவை ஊர்வலம்  பெரிய அளவில் நடத்தப்படும். இவை தவிர, ந. சீ. சுந்தரராமன் நடத்திய தேவாரப்பள்ளி , திருப்புகழ் தியாகராஜன் நடத்திய திருப்புகழ் சபை, வானமாமலை சகோதரர்கள் நடத்திய தெய்வ நெறிக் கழகம் , மொட்டைக் கோபுர பூசாரி யாழ்கீத சுந்தரம்பிள்ளை நடத்திய பூஜை, மற்றும் கார்த்திகை மாத சங்காபிஷேகம் ஆகியன மதுரையின் தெய்வீக மனத்தை அதிகரித்தன.

மதுரையில் இருந்த 3,4 வேத பாடசாலைகள், தமிழையுயும் ஸம்ஸ்க்ரு தத்தையும் இரு கண்களாகப் பரப்பி வந்த ராமேஸ்வரம் வேத பாடசாலை, வாரத்தில் இரு முறை திலகர் திடலில் நடந்த புகழ்மிகு பிரம்மாண்ட வார சந்தைகள் . புகழ் மிகு ‘பூ மார்க்கெட்’ ஆகியன எல்லாம் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. ‘பவதி பிட்சாம் தேஹி’ என்று வீட்டு வாசலில் உச்சுக் குடுமி தாங்கிய சிறுவர்கள் வந்து பிக்ஷை பெற் றதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழிய (ஆண்டாள்)

திருவெம்பாவை இருபதும் செப்பினார் வாழிய  (மாணிக்க வாசகர்).

–subham–

PICTURES ARE FROM DIFFERENT PLACES; NOT MADURAI

tags- திருப்பாவை , திருவெம்பாவை, பொங்கல் , பஜனை, மதுரை, வெள்ளிக்காசு