சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்! (Post .9074)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9074

Date uploaded in London – –25 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

ச.நாகராஜன்

ஹிந்துப் பெண்மையின் இறுதி லக்ஷியம் சீதா தேவி. கற்புக் கனலி என கம்பன் கூறிப் பெருமைப்படுவான்.

பெரிய சபை கூடியுள்ளது.அயோத்தி மாநகர மக்கள் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர்.

வால்மீகி முனிவர் ஜனக்கூட்டத்தின் நடுவில் நேர்முகமாய் வந்து நின்று ரகுகுல திலகமான ஸ்ரீ ராமரைப் பார்த்துக் கூறுகிறார்:

“ ஹே, தாஸரதே! இதோ இருக்கும் சீதா தேவி மஹா விசேஷ உபாசனையில்  மனதை நாட்டியவள் (ஸுவ்ரதா). தருமத்தையே அனுஷ்டிப்பவள் (தர்மசாரிணி). எனது ஆசிரமத்திற்கு அருகில் பழிச் சொற்களால் அபவாதம் செய்யப்பட்டு கொண்டு விடப்பட்டாள்.

இதோ இங்கு இருக்கும் லவனும் குசனும் ஜானகியாரின் புத்திரர்கள். இரட்டையாய் பிறந்தவர்கள். உங்களது குமாரர்கள். உங்களால் புறக்கணித்துத் துறக்க முடியாதவர்கள். தேவரீருக்கு இதை நான் பிரமாணமாக சத்தியமாகக் கூறுகிறேன். (தே ஏதத் ஸத்யம் ப்ரவீமி).

ஹே! ராகவா!! நான் வருண பகவானின் பத்தாவது புதல்வன். பொய்மொழியை நான் எண்ணியும் பார்க்காதவன் ( ந ஸ்மராமயன்ருதம் வாக்யம்).

பல்லாயிரம் ஆண்டுகள் என்னால் தவ அனுஷ்டானம் குறைவின்றி முடிக்கப்பட்டிருக்கிறது. மைதிலி தேவியானவள் தோஷத்திற்கு இடமாகாவதளாக இருந்தால் அவற்றின் பயனை நான் பெறுவேன். மனதை ஆறாவதாக உடைய ஐந்து புலன்களாலும் பரிசுத்தமானவள் என்பதை நன்கு ஆராய்ந்து உணர்ந்து ஆசிரமத்தின் பக்கத்தில் இருந்த ஆற்றங்கரையில் இவளைக் கண்டு அழைத்துச் சென்றேன்.

இவள், இவளைப் போல கற்புடையவள் வேறொருத்தி இல்லாதவள்;(இயம் சுத்தசமாசாரா). கணவனையே தெய்வமாகக் கொண்டவள் (பதிதேவதா). அழுக்கில்லாத ஒப்பற்ற ஒழுக்கம் உடையவள் (அபாபா).

உலகப் பேச்சால் கவலைப்படும் உங்களுக்கு இவள் தன்னை யாரென்று இதோ அருளிச் செய்வாள்!

அவ்வளவு தான். ஜனக்கூட்டம் முழுவதும் ஹாஹாகாரம் செய்து சீதாதேவியைப் பார்த்தது.

ராமர் வால்மீகியைப் பார்த்து, “ தங்களது களங்கமற்ற வார்த்தைகளால் எனக்கு இப்போதே நம்பிக்கை உண்டாகி விட்டது. இதோ இரட்டையராக உள்ள லவனும் குசனும் என் புத்திரர்களே என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.”

ராமரின் முன் பிரம்ம தேவர் வந்தார். அவருடன் ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத் கணங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ரஸுகள், ஸாத்திய தேவர்கள், விஸ்வ தேவர்கள், தேவரிஷிகள், நாகர்கள், ஸுபர்ணர்கள், சித்தர்கள் அனைவரும் நெஞ்சு படபடக்க நடுங்கியவாறே நடக்கப் போவதைப் பார்க்க அங்கே குழுமினர்.

வாயு தேவன் பரிசுத்தமான வாசனை உடைய காற்றை அந்த ஜனக்கூட்டத்தின் மீது வீசினான்.

அப்போது காஷாய சேலையை உடுத்திக் கொண்டு தலை குனிந்து தரையைப் பார்த்தவாறே இருந்த ஸீதா தேவியார் ஸபையில் இருப்பதால் அனைவரையும் அஞ்சலி ஹஸ்தராக கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

பிறகு உலகம் எந்தக் காலத்திலும் நினைத்துப் போற்றி வணங்கும் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கூறி அருளினாள்:

யயாஹம் ராகவாதன்யம் ந சிந்தயே|

ததா மே மாதவி தேவி விவரம் தாதுமர்ஹதி ||

நான் மனச்சாட்சியுடன் ஸ்ரீ ராகவர் ஒருவரைத் தவிர வேறு ஒருவருக்கும் சிந்தையில் இடம் கொடாதிருந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்!

மனஸா கர்மணா வாசா யயா ராமம் சமர்சயே|

ததா மே மாதவி தேவி விவரம் தாதுமர்ஹதி ||

மனதாலும், செய்கையாலும், வாக்காலும் ஸ்ரீ ராமரையே நான் எப்போதும் பூஜித்து வந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்குப் பத்னியான பூமா தேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்!

யதைதத்ஸத்யமுக்தம் மே வேந்தி ராமாத்பரம் ந ச |

ததா மே மாதவி தேவி  விவரம் தாதுமர்ஹதி ||

ஸ்ரீ ராமரைக் காட்டிலும்  மேலானது ஒன்றையும் நான் அறிந்திலேன்

என்ற இந்த எனது மொழி சத்தியம் என்னும் பக்ஷத்தில் மாதவருக்குப் பத்னியான பூமா தேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்!

அவ்வளவுதான்!

ஒப்பில்லாத ஒரு தேவாதீனமான சம்பவம் நடந்தது. அனைவரும் திகைப்புடனும், ஆச்சரியத்துடனும், பிரமிப்புடனும் அதைப் பார்த்தனர்.

 அமிதமான ஆற்றல் உள்ளதாகவும் திவ்ய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட முடிகளால் நாகங்களால் ஜோதி மயமான காட்சியால் கண்களைக் கவரும் வண்ணமாய் தாங்கப் பெற்றதும், ஒப்புயர்வு இல்லாததும் தேவதைகளுக்கே ஏற்றதுமாகிய சிங்காசனம் ஒன்று பூமியிலிருந்து சீதைக்கென வெளி வந்தது!

பூமிதேவியானவள் மைதிலியை தன் இரு கரங்களாலும் அணைத்து எடுத்துக் கொண்டு நல் மனதுடன் ஆதரித்து அழைத்து, போற்றிப் புகழ்ந்து சீதா பிராட்டியாரை அந்த சிங்காதனத்தில் அமர வைத்தாள்.

சிங்காசனம்  பூமிக்குள் பிரவேசித்தது.

வானத்திலிருந்து ஓயாமல் பூ மாரி பொழிந்த வண்ணம் இருந்தது.

அங்கு கூடியிருந்த அனைவரும் “ ஹே! சீதே!! தேவரீருடைய சீலம் வேறு யாருக்கு உண்டு? பதிவிரதா மஹிமையை வெளிப்படுத்தினீர்! நன்று, நன்று!“ என்று ஒரே சமயத்தில் கூறினர்.

பூமி தேவி சீதாபிராட்டியாரை அழைத்துச் செல்வதைப் பார்த்து விண்ணவர்கள் உள்ளம் பூரித்து பலவாறான மொழிகளைக் கூறியவண்ணம் இருந்தனர்.

ஒரு முகூர்த்த காலம் உலகம் முழுவதும் ஏக்கம் பிடித்துக் கிடந்தது.

ஸ்ரீ ராமர் கண்ணீர் விட்டார்!

**

உத்தரகாண்டம் 96, 97 ஸர்க்கங்களில் மேற்கண்ட நிகழ்ச்சியை உள்ளம் உருக்கும் வார்த்தைகளால் வால்மீகி விவரிக்கிறார்!

ஜெய் சீதா ராம்!

tags – சீதா தேவி , கடைசிச் சொற்கள், பூமா தேவி

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 11 (Post 9073)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9073

Date uploaded in London – –24 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -11

2-3-5 kaala

Kaala – Chrono

Ch-ka,  r- l, a-o

‘கால’ என்ற சம்ஸ்க்ருத சொல் தமிழிலும் ஆதி காலம் முதல் பயன்படுத்தப்படுகிறது .

Xxx

2-3-11

Prati – pathilaaka/ tamil

பிரதி – பதில்

Xxx

2-3-14

Phalam – pazam in tam.

Pala/ra m ; r=l பழம் = பலம்/ சம்ஸ்க்ருதம்

Xxx

2-3-16

Swasti – Tamil and  Sanskrit inscriptions begin with the auspicious word Swasti.

The  Swastika symbol is also found all over the world

‘ஸ்வஸ்தி’ என்ற மங்களச் சொல்லுடன் தமிழ் கல்வெட்டுகள் துவங்கும்.

‘ஸ்வஸ்திகா’ என்ற சின்னத்தின்  வடிவில் பழைய கிணறும் உண்டு

‘ஸ்வஸ்திகா’ சின்னத்தின் பெயர் சம்ஸ்க்ருதத்திலேயே .உலகம் முழுதும் அறியப்படுகிறது.

Xxx

Namah – namaste, namaskaram is used in all Indian languages.

‘நமஹ’ – என்பது ஓம் ‘நம’ சிவாய, ஓம் ‘நமோ’ நாராயணாய ஆகிய இரண்டு மந்திரங்களில் இருப்பதால் இமயம் முதல் குமரி வரை இந்துக்களால் முழங்கப்படுகிறது . அது மட்டுமல்ல நமஸ்தே , நமஸ்கா ரம் ஆகிய தினசரி  வணக்கம் கூறுதலிலும் உண்டு.

Namaste is I bow to you.= Vanakkam is also boeing

Same concept of bowing is in both languages

மேலும் தமிழர்களும் அதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர் ‘நம’ என்பது வணங்குதலைக் குறிக்கும். ஆகையால் சம்ஸ்க்ருத ‘நமஸ்தே’யை தமிழர்கள் வணக்கம் என்று மொழிபெயர்த்துள்ளனர் .

நமஸ்தே = உங்களை வணங்குகிறேன்

xxxx

Arpan – offering; samarpan அர்ப்பணம் , சமர்ப்பணம்

Mallan /wrestler is found both ancient Tamil and Sanskrit மல்லன்; மல்லர் — சங்கத் தமிழிலும் உண்டு

மல்லுக்கு நிற்கிறான், மல் யுத்தம்

Xxx

2-3-17

Manya – to think; மன்ய = நினை, சிந்தி

சிந்திக்கும்  சக்தி இருப்பதால் ‘மனிதன்’ என்று அழைக்கப்படுகிறான்.

மனஸ் = மனது= ஆங்கிலத்தில் mind/ மைண்ட்

Manushya/ man is one who thinks

Manthu in tamil and manas in skt.

Xxx

2-3-18

Sahasram – aayiram; 1000

ஸஹஸ்ரம் = ஆயிரம்

தொல்காப்பியர் ‘ச’ மீது தடை போட்டதால் ‘ஸ’ எல்லாம் ‘அ , ஆ’ – வாக மாறும்; ஸபா = அவை

Xxx

2-3-20

Anga – part, body part அங்கம் -உறுப்பு, பகுதி

Angaththinar – member அங்கத்தினர்

சதுரங்கம்

Xxx

2-3-21

Jataa- satai ஜடா வர்மன் = சடையன் மாறன்

Jataamakuta ஜடா மகுட

Jataavarman are found in pandyan dynasty

Taapasa – thava in Tirukkural and other scriptures

தபஸ்- தவம் ; ப=வ

Pa= va; tapa=tava

 திருவள்ளுவருக்கு பிடித்த ஸம்ஸ்க்ருதச் சொற்கள் தானம், தவம், குணம், மனஸ் , காலம், காமம் – இந்தச் சொற்களை பாடலின் முதல் சொல்லாக வைத்து தைரியமாகப் பாடியுள்ளார் .வள்ளுவர் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞன்.

Xxx

2-3-27

Nimiththa நிமித்தம்

Hetu ஹேது , ஏது

Xxx

2-3-32

Brutak – veru/different ப்ருதக் = வேறு

B=V, ப= வ

Xx

2-3-35

Anthika – near by அந்திக = அண்மை

Anthika – anmai in tam.

Xx

2-3-36

Sthali – pot ஸ்தாலி = தாழி

Muthumakkal thaazi- big pot

முதுமக்கள் தாழி

Saathu – good சாது – நல்ல/ வன்

S = h/g

Asadu , asaththu in tamil அசடு = அசத்து /கெட்டவன்

Sarma – derma skin சர்ம = டெர்மடாலஜி= தோலியல்

dermatology

s-d எஸ் – டெ

danta – dental தந்த/ பல்- டென்டிஸ்ட் Dentist

xxx

2-3-39

Swami – Saami

சுவாமி = சாமி

பல பெயர்களில் இதைக் காணலாம்.

கோவிலில் ‘சாமி தரிசனம்’ செய்யலாம்

உயர் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் சூடும் பெயர்

xxx

Iswarah – in tamil names and god’s names

ஈஸ்வர – எல்லா சிவன் கோவில்களிலும் ஒலிக்கும் பெயர்

xxxx

Adhipathi – janaathipathi, raashtrapathi அதிபதி, ஜனாதிபதி, ராஷ்டிரபதி, அதிபர், சேனாதிபதி

xxx

Dhaayaatha – ward; thaayaathi

தாயாதி – வாரிசுரிமை உடையவர் .

பிரிட்டனில் ராஜ குடும்பத்தில் தூரத்துச் சொந்தத்தில் குழந்தை பிறந்தாலும் அவருக்கு எத்தனையாவது  பட்டத்து உரிமை என்று அறிவிக்கப்படும் ; அதாவது அவருக்கு முந்தைய அத்தனை வாரிசுகளும் இறந்துவிட்டால் இவர் ராஜா/ ராணி ஆகிவிடுவார்.

To be continued……………………….

tags- tamil words-11

குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும் (Post.9072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9072

Date uploaded in London – –24 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச்  சொல்லும்போது  அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.

கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை   பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு  விட் ட  செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –

தென் பரதவர் மிடல் சாய ….………..

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை  இழைப் பொலிந்தாங்கு

அறா அ அறு  நகை இனிது பெற்றிகுமே —

இருங்கிளைத் தலைமை எய்தி

அரும்படர் எவ்வம் உழந்தன்  தலையே – 378

பொருள் :–

என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்

காதில் பூணத் தக்கவற்றை  விரலில் அணிபவரும் 

இடுப்புக்குரியவற்றை  கழுத்தில் அணிபவரும்

கழுத்துக்குரியவற்றை  இடையில்  அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?

இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்

, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது 

அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது

XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி

அரம்பையர் வெறுத்து நீத்த  அவிர்மணிக் கோவை ஆரம்

மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ

–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்

பொருள் :–

தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண்  குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .

இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .

Tags — குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு

–சுபம்–

ONE TREE CAN MAKE ONE LAKH MATCH STICKS; ONE NEGATIVE THOUGHT……..(Post No.9071)

Compiled BY KATTUKKUTY

Post No. 9071

Date uploaded in London – – 24 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ONE TREE CAN MAKE ONE LAKH MATCH STICKS,

BUT ONE MATCH STICK CAN BURN ONE LAKH TREES.

ONE NEGATIVE THOUGHT CAN BURN ALL POSITIVE THOUGHTS !!!!

xxx

SIMPLE MATHEMATICS

2 GET AND TO GIVE, SO DOUBLE IT,

4 GET AND 4 GIVE SOLVE ALL THE PROBLEMS.

xxxx

A LESSON FROM OUR HAND

ALL FINGERS ARE NOT IN THE SAME LENGTH,

BUT WHEN THEY BEND, ALL STAND EQUAL.

LIFE BECOMES EASY WHEN WE BEND AND ADJUST

IN ALL SITUATIONS !!

xxx

EVERYONE HAS a FRIEND IN EACH STAGE OF LIFE.

BUT ONLY LUCKY ONES HAVE THE SAME IN ALL

STAGES OF LIFE !!!

xxx

KNOWLEDGE DECIDES WHAT TO SAY……

SKILL DECIDES HOW TO SAY….

ATTITUDE DECIDES HOW MUCH TO SAY

WISDOM DECIDES WHETHER TO SAY OR NOT.!!!

xxxx

WE ARE VERY GOOD LAWYERS FOR OUR MISTAKES.

AND VERY GOOD JUDGES FOR OTHERS’ MISTAKES!!!!

xxx

THE GOAL OF MEDITATION IS NOT TO CONTOL YOUR THOUGHTS, IT IS  STOP LETTING THEM CONTROL YOU!!!!

YOUR BEST TEACHER IS YOUR LAST MISTAKE !!!

Xxx

FAITH

ONCE ALL VILLAGERS DECIDED TO PRAY FOR RAIN. ON THE

DAY OF PRAYER ALL THE PEOPLE GATHERED BUT ONLY ONE BOY CAME WITH AN UMBRELLA.

xxx

TRUST

WHEN YOU THROW A BABY IN THE AIR, SHE-LAUGHS, BECAUSE SHE KNOWS YOU WILL CATCH HER

xxxx

HOPE

EVERY NIGHT WE GO TO BED WITHOUT ANY ASSURANCE OF BEING ALIVE THE NEXT MORNIN;G BUTWE SET THE ALARM

TO WAKE UP

xxxx

CONFIDENCE

WE PLAN BIG THINGS FOR TOMORROW IN SPITE OF ZERO KNOWLEDGE OF THE FUTURE OR HAVING ANY CERTAINTY

OF UNCERTAINTIES……

xxxx

OVER CONFIDENCE

WE SEE THE WORLD IS SUFFERING. WE KNOW THERE IS A POSSIBILITY THE SAME OR SIMILAR THINGS HAPPENING

TO US. BUT STILL WE ARE MARRIED??

xxxx

WHICH IS BETTER ???

SATISFIED LIFE IS BETTER THAN A SUCCESSFUL LIFE !!!

BECAUSE OUR SUCCESS IS MEASURED BY OTHERS.

SATISFACTION IS MEASURED BY OUR OWN SOUL,

MIND AND HEART !!!!

xxxx

WATCHING ONES THOUGHT IS MEDITATION-

RAMANA MAHA RISHI

xxx

EVERY HUSBAND IS A FORMER BY DEFAULT.

HIS SURVIVAL SOLELY DEPENDS ON “AGREE” CULTURE.

AND AGREE CULTURE INCREASES G D P INCREASES

G D P – GROSS DOMESTIC PEACE !!!

xxx

HAPPINESS IS A CRAZY MATHEMATICS…….

BECAUSE IT MULTIPLIES WHEN YOU DIVIDE IT!!!

xxxx

BRAVE CONCEPTS

BRAVE CONCEPT IS “DO” OR “DIE”

PRACTICE CONCEPT IS “DO BEFORE YOU DIE!”

WINNER CONCEPT IS “DONT DIE TILL YOU DO IT!!!”

Xxxx

IS MAN ONLY A BLUNDER OF GOD,

OR

GOD ONLY A BLUNDER OF MAN…….NIETZSCHE

xxxx

IF YOU DONT CORRECT YOUR ERROR IT BECOMES A

MISTAKE……..

IF YOU TRY TO JUSTIFY YOUR MISTAKE, IT BECOMES AN

OFFENSE

xxx

MONEY IS THE WORST DISCOVERY OF HUMAN LIFE.

BUT IT IS THE MOST TRUSTED MATERIAL TO TEST

HUMAN NATURE!!!

*** subham ****

tags – negative thought, money, thought,

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை! (Post.9070)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9070

Date uploaded in London – – 24 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டம் 54 மற்றும் 55வது ஸர்க்கம் மிக முக்கியமான கட்டத்தை விவரிக்கின்றன!

ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகிய மூவரும் அழகிய வனாந்தர பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கே ப்ரயாகை க்ஷேத்திரத்திற்கு அருகில் அக்னி பகவானது புகை உயரக் கிளம்பி இருப்பதைப் பார்த்த ராமர் லக்ஷ்மணரிடம் அதைச் சுட்டிக் காட்டி, “இங்கு ஏதோ ஒரு முனிவர் சமீபத்தில் இருக்கிறார் என எண்ணுகிறேன்” என்றார்.

கங்கை யமுனை சங்கமத்துறைக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்று ராமர் சொல்லி அங்குள்ள பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அவர்களைக் கண்ட பரத்வாஜ மஹரிஷிக்கு மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று, அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து விருந்தளித்தார்.

ராமர், பரத்வாஜரை நோக்கி, “நகரவாசிகள் இங்கு வந்து எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். சீதா தேவி எங்கு பிறரால் தரிசிக்கப்படாதவளாக, தியானம் ஒன்றையே அனுஷ்டிக்கின்றவளாக நிம்மதியாக காலம் கழிக்கும் இடம் ஒன்றை தேவரீர் ஆலோசித்துச் சொல்வீர்களாக” என்றார்.

உடனே பரத்வாஜர், தரிசித்த மாத்திரத்தில் பாக்கியங்களைத் தரவல்லை சித்ரகூட சிகரத்தைச் சொல்லி அதன் மஹிமையையும் சொல்லி அங்கு வஸிக்கலாம் என தனது ஆலோசனையைக் கூறினார்.

ஒரு நாள் இரவை பரத்வாஜாஸ்ரமத்தில் கழித்த ராமர் மறு நாள் கிளம்ப ஆயத்தமானார்.

யமுனை நோக்கிச் சென்ற அவர்கள் நதிக்கரையை அடைந்தனர். காய்ந்து உலர்ந்த கட்டைகளாலும் மூங்கில்களாலும் அழகிய தெப்பத்தை ராமரும் லக்ஷ்மணரும் அமைத்தனர்.

அதில் பிரம்புக்கொடிகளாலும் நாவல் மரக்கிளகளாலும் ஆன அற்புதமான ஆசனம் ஒன்றைச் செய்து அமைத்தார் லக்ஷ்மணர் – சீதா தேவி அமர்வதற்காக!

சீதை தெப்பத்தில் ஏற, இருவரும் தெப்பத்தைச் செலுத்தலாயினர்.

தெப்பம் யமுனை நதியின் நடுவை அடைந்தது.

உடனே சீதா தேவி யமுனையை நோக்கி இப்படிப் பிரார்த்தித்தாள்:

“தேவி! திருவுளமுவந்து பிரார்த்தனைகளை அருளிச் செய்வாயாக! உன்னைக் கடந்து தாண்டுகின்றேன். எனது பர்த்தா பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்.”

ஸ்வஸ்தி தேவி தராமி த்வாம் பாரயேன்மே ப்ரதிர்ஷிதம் |

“ஸ்ரீராமர் குறையின்றி இக்ஷ்வாகு மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட நகருக்குத் திரும்பிய பின்னர் அநேக கோதானங்களாலும் அநேக தீர்த்தம் நிறைந்த பூர்ண கல்சங்களாலும் உன்னை பூஜிக்கிறேன்.”

யக்ஷயே த்வாம் கோ சஹஸ்ரேண சுராகடஷதேன ச |
ஸ்வஸ்தி ப்ரத்யாகதே ராமே புரிமிக்ஷ்வாகுபாலிதம் ||

யமுனை நதியைக் கடந்து கரையில் இறங்கிய மூவரும் யமுனை நதியை ஒட்டிய வனத்தின் வழியே சென்று பச்சிலைகளை உடைய ச்யாமம் என்னும்  பெயரை உடைய ஆலமரத்தைக் கண்டனர்.

உடனே சீதா தேவி பின் வரும் வார்த்தைகளை அருளிச் செய்தாள்:

“புண்யம் அளிக்க வல்ல விருக்ஷமே! உன்னை நான் முடி தாழ்த்தி

நமஸ்கரிக்கிறேன். எனது கணவனார் பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்”

நமஸ்தேஸ்து மஹா வ்ருக்ஷ பாரயேன்மே பதிர் வ்ரதம் |

கோஸலா தேவியாரையும், புகழ் பெற்ற சுமித்திரா தேவியாரையும் நேரில் நான் ஸேவிக்க வேண்டும்.”

கௌஸல்யாம் சைவ பஷ்யேயம் சுமித்ராம் ச யஷஸ்வினீம்|

இந்த கட்டம் அற்புதமான ஒரு வழிகாட்டுதலைக் குறிக்கிறது. பரத்வாஜ மஹரிஷி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை வழி காட்டி அருள்கிறார்.

ஒரு பெரும் அவதாரம் உதிக்கும் போது இப்படி பல மஹரிஷிகளும் தேவர்களும் உரிய இடத்தில் உரிய சமயத்தில் வந்திருந்து அவர்களை உபசரித்து அடுத்து செய்ய வேண்டியதைச் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.

சீதா தேவி, யமுனை நதியையும், ச்யாமம் என்று பெயர் பெற்ற ஆலமரத்தையும் நோக்கிச் செய்யும் பிரார்த்தனையும் அற்புதமான ஒன்று.

பதியின் பிரதிக்கினை நிறைவேற வேண்டும்!

மாமியார்மார் இருவரையும் நேரில் கண்ணாரக் காண வேண்டும்!

இப்படிப்பட்ட புனிதமான நதியும், புனிதமான வ்ருக்ஷமும் கை கூட வைத்து அருள் பாலிக்கின்றன!

பாரதப் பெண்மையின் சிகரமாக அமையும் சீதா பிராட்டியாரின் பிரார்த்தனை ஒரு குடும்பம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.

அதனால் தான் சீதையை பெண்மையின் முடிவான லக்ஷியம் என நமது அறநூல்கள் ஆணித்தரமாக இயம்புகின்றன!

ஜெய் ஸ்ரீராம்!

tags – Ram, Sita images, யமுனை, சீதை, பிரார்த்தனை

***

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 10 (Post.9069)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9069

Date uploaded in London – –23 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 10

I HAVE WRITTEN OVER 100 ARTICLES ON THIS TOPIC FROM 2011. WHAT  AM I TRYING TO SHOW?

THERE IS ONLY ONE LANGUAGE FAMILY IN INDIA AND THAT IS CALLED INDIAN LANGUAGE FAMILY. IT BRANCHED IT INTO TWO LANGUAGES IN THE PAST- SANSKRIT AND TAMIL. THERE IS NO DRAVIDIAN LANGUAGE FAMILY. IT IS PART OF INDIAN LANGUAGE FAMILY.

WHAT IS THE PROOF?

THERE IS NO INDIAN LANGUAGE DICTIONARY WITHOUT SANSKRIT WORDS. ALL THOSE DICTIOANRIES HAVE MORE SANSKRIT WORDS THAN THE NAME IN THE TITLE LIKE “TAMIL DICTIONARY, KANNADA, BENGALI, KASHMIRI DICTIONARIES”. THE TAMIL ETYMOLOGICAL DICTIONARY HAS AROUND 4000 “PURE” TAMIL WORDS. MY ARTICLES PROVE THAT EVEN THOSE ARE NOT “PURE” TAMIL WORDS. PANINI’S 1970 ROOTS HAVE MANY OF THEM.

SO, WHAT IS MY THEORY?

SANSKRIT IS THE NEAREST AND CLOSEST RELATIVE OF TAMIL

ALL THE ANCIENT LATIN AND GREEK ROOTS CAN BE TRACED BACK TO SANSKRIT AND TAMIL.EVEN IF INDUS-SARASVATI CIVILIZATION SCRIPT IS DECIPHERED TOMORROW, IT WILL BE  ON THE LINES I SHOW HERE.

I AM GIVING PROOFS FROM 2700-YEAR-OLD ASHTADHYAYI OF PANINI….

Panini  Sutras from his Ashtadhyayi continued………………………

SUTRA 2-2-9

ITHARETHARA- OTHER இதர

XXX

2-2-31

RAJA

IT IS A VERY INTERESTING AND IMPORTANT WORD

SINCE TAMIL GRAMMAR BANS L ல AND R ர AS INITIAL LETTERS IN WORDS, TAMILS ADD ONE OF THE THREE VOWELS A, E , U அ ,இ ,உ IN SUCH WORDS; EXAMPLES

LOKA – ULAKA OR ULOKAMலோக – உலோகம் , உலகம்

RANGA – ARANGA ரங்க – அரங்க

RAMA- ERAMAN OR IRAMAN ராம – இராமன்

HERE RAJA BECOMES ராஜா – அரசன் ARASAN; JA EXISTED ONLY IN SANSKRIT IN THE ANCIENT WORLD. TAMILS AND OTHER CULTURES CHANGED IT INTO ஜ= ச , ய SA OR YA. BY STUDYING THE MIGRATION OF J YOU MAY FIND OUT THE CHRONOLPGY OF EACH CULTURE. READ MY ARTICLE ON LETTER J ஜ .

RAJA BECAME REGAL, ROYAL IN EUROPEAN LANGUAGES; WE SEE SCORES OF WORDS WITH  REGAL, ROYAL, REGNAL, REGENT ETC

XXX

2-2-31

ULUKALA/PESTLE – ULAKKAI IN TAMIL

உலுகல – உலக்கை

XXX

2-2-33

USHTRA – OTTAKAM/CAMEL

GARA – KAZUTHAI/ DONKEY IN TAMIL

USHTRA – UTHADU IN  TAMIL; OTTAKAM MEANS ANIMAL WITH BIG LIP. உஷ்ட்ர – உதடு – ஒட்டகம் – உதடு தடித்த மிருகம்.

கர – கழுதை (கர்த்தபக)

XXX

2-2-36

VAARTIKA- 2400 YEAR OLD – GIVES

DANDAPAANI-  IT IS THE GOD’S NAME IN PALANI TEMPLE

DANDA IS USED IN TAMIL FOR ALL PUNISHEMENTS LIKE SKT

DANDAM, DANDITHTHAAN

DANDA BECOMES THADI IN TAMIL.

தண்ட பாணி – பழனியில் குடிகொண்ட முருகன் தண்டம் = தடி

தண்டி – தண்டித்தான் – தண்டம் செலுத்தினான்

DANDA-STICK; PAANI-HAND

XXX

2-3-1

CRU – CREATE, DO

SATENA KRITAH – BOUGHT FOR 100 .

KIRAIYAM IS USED EVEN BY VILLAGERS IN TAMIL NADU

VIKREETA COMES IN OTHER SUTRAS – VIRKIREN- SELLING

SO VIRKIREN IS SKT!!!

கிரையம் ,

விக்ரீய – சம்ஸ்க்ருதம் = விற்கிறான் /தமிழ்

XXX

GRAAMAM GACHCHATI

LIETRALLY SECOND CASE WITH ACCUSATIVE ‘AI’

BUT IT IS USED AS WENT ‘TO’ THE VILLAGE.

UNLIKE OTHER LANGUAGES TAMIL AND SANSKRIT USE THIS WAY-

LONDON PONEN – I WENT ‘TO’ LONDON- FOURTH CASE LONDONUKKU

LONDON PAARTHEN – I SAW LONDON – SECOND CASE LONDONAI

ITHU LONDON BUS – THIS IS THE BUS OF LONDON – SIXTH CASE- LANDANUTAIYA

லண்டன் போனேன் (னுக்கு) , லண்டன் பார்த்தேன் (னை ) இது லண்டன் (உடைய) பஸ்

SO TAMILS AND SANSKRIT SPEAKERS USAGE IS SAME

XXX

2-3-2

UBAYO – ON BOTH SIDES – 

UBAYO – BI – BOTH

UBAYA VEDANTA, UBAYA KUCHALOPARI

உபய வேதாந்த, உபய குசலோபரி

XXX

2-3-2

VAARTIKA ON PANINI – 2400 YEAR OLD – GIVES

UPARI – TOP, UPPER

UPARI BECOMES UP, UPPER, SUPER IN ENG

UPPARIKAI, UYARA IN TAMIL.

உபரி- உப்பரிகை – ஊபர் /ஹிந்தி.

அப் , அப்பர், சூப்பர் /ஆங்கிலம்

ADHO BECOMES UNDER, DOWN IN ENG

ATHALA PAATAALA IS USED IN TAMILஅதள பாதாள – அதோ- அண்டர்

XXX

2-3-2 VAARTTIKA

PARI – SURROUND, ON ALL SIDES

PERI METER IN ENG பரிவட்டம் – சுற்றிக் கட்டுவது

NIKASHA – NEAR IN ENG

XXX

2-3-4

ANTARA – INTER (IN ENG)

ANTARENA- WITHOUT; ALL ENG. WORDS WITH “UN” PREFIX

UN TRUTH , UN IMAGINABLE ETC

100s OF WORDS WITH “UN” PREFIX

TAGS-tamil words -10

XXX

TO BE CONTINUED…………………….

சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை! (Post No.9068)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9068

Date uploaded in London – –23 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான் அவனுக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்காது . அதிலும் தமிழ்ப் பாடம் என்றால் அவனுக்கு வேப்பங்காயாகக் கசக்கும் .ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லை. என்ன மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விடவில்லை. அவனுடைய அம்மா பக்கத்திலுள்ள கடைக்கு ஓடிப்போய் சில மருந்துச் சரக்குகளை வாங்கி வா; நான் உனக்கு கஷாயம் வைத்துத் தருகிறேன் . உடனே உடம்பு குணம் ஆகிவிடும் என்றாள் .

எப்படியாவது வெளியே போகவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பையனுக்கு இது வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது.

அவனும் அம்மா என்ன என்ன வாங்க வேண்டும் சொல்லுங்கள் என்று எழுதிக்கொண்டான் . ஆனால் தமிழ் எழுதி பழக்கம் இல்லாததால் அம்மா சொன்ன “சுக்கு , மிளகு, திப்பிலி” என்பதை

“சுக்குமி, ளகுதி ,ப்பிலி”  என்று தவறாகப் பிரித்து எழுதிக் கொண்டு கடைக்குப் போனான்

கடைக்காரனிடம் காஸைக் கொடுத்து அம்மா, “சுக்குமி,  ளகுதி ,ப்பிலி  வாங்கி வரச் சொன்னாங்க” என்றான் ; கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை ; பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் அவன் கையில் இருந்த சீட்டை வாங்கிப் பார்த்தார் ;பையன் தப்பும் தவறுமாக எழுதியதை பார்த்து சிரித்துக் கொண்டே இவனுக்கு “சுக்கு, மிளகு, திப்பிலி” கொடுங்கள் என்றார் . அந்த சொற்களை அவன் தவறாக இடம்பிரித்து எழுதியிருப்பதை அவனிடம் சொல்லி  நன்கு “தமிழைப் படி, எழுது” என்று அறிவுரை கூறினார் . அன்று கடைக்காரரும் பெரியவரும் சிரித்த ஏளனச் சிரியப்பு  அவனை ஒழுங்காக தமிழ் படிக்கவும், எழுதவும் ஊக்குவித்தது.

tags- சுக்கு, மிளகு, திப்பிலி,

–SUBHAM–

வேண்டியதும் வேண்டாததும்; நவீன ஞான மொழிகள் – 14(Post 9067)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9067

Date uploaded in London – – 23 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 14

kattukutty

வேண்டியதும் வேண்டாததும்

நேசிக்க வேண்டியது – காற்றையும், ஒளியையும்

கை விட வேண்டியது – ஆடம்பரத்தையும், அகந்தையையும்

உண்ண வேண்டியது –  சோற்றையும், காய்கறியையும்

பருக வேண்டியது – நீரையும், மோரையும்

தவிர்க்க வேண்டியது – காலை உணவு

தள்ள வேண்டியது – வறுவலும் பொரியலும்

குறைக்க வேண்டியது. எண்ணெய், காரம், புளி, உப்பு

xxxx

துக்கத்துக்கு காரணம்

1.நான் என்ற அபிமானம்

2.உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது

என்ற அபிமானம்.

xxx

நமக்கு நாமே

என் மனைவியை பார்க்குபோதே பொறாமையாய் இருக்கிறது.

அவளுக்குத்தான் எவ்வளவு நல்ல கணவன் வாய்த்திருக்கிறான்!!!

xxx

யாராவது நாட்டுக்கு நல்ல கருத்து சொல்லும் போதெல்லாம்

தூக்கம் தூக்கமாக வருகிறது்

என்ன பண்ணறது, நம்ம நாடு கொடுத்து வச்சது அவ்வளவுதான்!!!

ரொம்ப நாளா ஒரு டவுட்டு………

கடிகாரம் கண்டு பிடிக்கும்போது எதைப் பார்த்து சரியா டைம்

வச்சாங்க???

xxx

மனிதர்களை நல்வழி படுத்துவது நான்கு

  1. ஒழுக்கம் 2) கொள்கை3) மதம் 4) நல்ல நண்பர்கள்

xxxx

சரித்திரத்தை படிப்பதின் நோக்கம்

அது போல் நம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற INSPIRATION

பெறுவதற்காகவும், என்னன்ன செயல்களால் என்னன்ன விளைவுகள்

ஏற்பட்டன என்று தெரிந்து கொள்வதற்காகவும்.

xxx

லங்கணம் (பட்டினி கிடத்தல்) ஔஷதம்

மௌனம் பரம ஔஷதம்!!!

xxx

மனம் என்பது ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள

JUNCTION BOX!!!

xxx

ஒருவன் செய்யும் அயோக்யத்தனத்தைப் பற்றி மற்றவரிடம்

தம்பட்டம் அடிக்காதே…….

கெட்டவனையும் அவன் செய்கையையும் பற்றி மற்றவர்களிடம்

விளக்கி கூறினால் அவ்வாறு ஏமாற்ற முடியும் என்பதை மற்றவர்களுக்கு நீ கற்றுக் கொடுக்கிறாய்……

Xxxx

ஞானம் அடைவது என்பது நீ கேட்டு தெரிந்து, புரிந்து கொள்ளக்கூடிய

விஷயம் இல்லை, அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டியது.

தெரியாமல் செய்வது தவறு, தெரிந்தே செய்வது தப்பு.

தான் செய்த தப்புகளை நியாயப் படுத்தினால் அது “குற்றம் “.

xxxx

படிக்கறவரைக்கும் வேளா வேளைக்கு சோறு, அதுக்கு மேல

வேலைக்கு போனாத்தான் சோறு !!!

To be continued……………………………

Tags -நவீன, ஞான மொழிகள் – 14,

முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது! (Post No.9066)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9066

Date uploaded in London – – 23 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

உமாபதி சிவம் – 3

முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது!

ச.நாகராஜன்

உமாபதி சிவாசார்யரின் வாழ்க்கையில் ஏராளமான வியப்பூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கொடியை ஏற்றப் பாடிய கொடிக் கவி அனைவரது உள்ளத்தையும் உமாபதி சிவாசாரியர் பால் ஈர்த்தது.

கொடி ஏற்றப்பட்டவுடன் அங்கு குழுமியிருந்த செங்குந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை நோக்கி, உமாபதி சிவாசாரியர், “எனது குருவானவர் தாகத்தாலும் உடல் களைப்பாலும் சோர்ந்திருந்த போது நீங்களே உணவளித்தீர்கள். அது மட்டுமல்ல, அவருக்குக் கூழ் அளித்ததன் மூலம் அவரது உச்சிஷ்டத்தையும் (எச்சிலை) உண்ணும் பாக்கியத்தை எனக்கு அளித்தீர்கள். ஆகவே உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஆகவே இதோ இப்போது நான் பிரகடனம் செய்கிறேன். இனி எப்போதும் உங்கள் சமூகத்தினர் கொடுத்த துணியே கொடி ஏற்றப் பயன்படும்” என்றார்.

செங்குந்த சமூகத்தினர் உள்ளமுருகிக் கண்ணீர் விட்டனர்.

இன்று வரை செங்குந்த சமூகத்தினரின் துணியிலேயே கொடி தயாரிக்கப்பட்டு சிதம்பரம் கோவிலில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தகுந்தது.

இந்த பாரம்பர்யப் பழக்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் வழக்கத்திற்கு வரவில்லை, அநேகமாக எல்லா சிவன் கோவில்களிலும் கொடிக்கான துணியைத் தரும் பெரும் உரிமையை செங்குந்த சமூகத்தினரே பெற்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் இன்று வரை கொடித் துணியை செங்குந்த சமூகத்தினரே வழங்கி வருகின்றனர்.

இனி அடுத்த வரலாறு மிக முக்கியமானது.

தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிதம்பரம் நடராஜர் மீது பெரும் பக்தி கொண்டிருந்தான். கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படாதது குறித்து அவன் சிறிதும் கவலைப்படவில்லை. எதைச் செய்தாலும் நடராஜரின் நினைப்புடனேயே செய்து வந்தான் அந்த சிறந்த சிவ பக்தன்.

அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாசாரியருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.

சிதம்பரம் கோவிலுக்கு விறகுக் கட்டு வைப்பதனால் தினமும் இரண்டு காசு பணம் அவனுக்குக் கிடைத்து வந்தது.

நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.

தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றினார்.

சாம்பான் புளகாங்கிதமுற்றான்.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்” என்றான் சாம்பான்.

உடனே சிவ பிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:

“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்

குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்

பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து

முத்தி கொடுக்க முறை”

அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய (ஓலை) கைச் சீட்டு இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்ஷை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.”

ஓலையை பெற்றான் சாம்பானிடம் கொடுத்த சிவபிரான் அதை உமாபதி சிவத்திடம் கொடுக்க உத்தரவிட்டார்.

பெற்றான் சாம்பான் உமாபதி சிவத்தை அணுகத் தயங்கினான்.

தினமும் உமாபதி சிவத்தின் மடத்தில் ஒரு கட்டு விறகை யாருக்கும் தெரியாமல் வைப்பதை வழக்கமாகக் கொண்டான் சாம்பான். சிவாசாரியரின் சீடர்கள் விறகை எடுத்து உபயோகித்து வந்தனரே தவிர அதை யார் தினமும் அங்கு கொண்டு வந்து தருகிறார் என்பதை அறிய முனையவில்லை.

ஆகவே உமாபதி சிவாசாரியரைச் சந்தித்து ஓலையைக் கொடுக்கும் சந்தர்ப்பம் சாம்பானுக்கு வாய்க்கவில்லை.

இதைப் பார்த்த சிவபிரான் அருள் விளையாடல் செய்யத் திருவுளம் கொண்டார்.

ஒரு நாள் நல்ல மழை பெய்தது. அதன் மூலம் ஊரெல்லாம் வெள்ளம் பெருகியது. சாம்பானுக்குத் தினமும் செய்வது போல விறகைக் கொண்டு போக முடியாமல் போய் விட்டது. விறகில்லாததால் மடத்தில் சமையலும்

செய்ய முடியாமல் தாமதமானது.

உமாபதி ஏன் சமையல் செய்ய தாமதம் என்பதைக் கேட்க, அன்று விறகு வரவில்லை என்று பதில் வந்தது. இதை யார் தினமும் கொண்டு தந்து வருகிறார் என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.

“சரி, அடுத்த நாள் இந்த விறகு வரும் போது அதைக் கொண்டு வருபவரை என்னிடம் அழைத்து வருக” என்றார் சிவம்.

அடுத்த நாள் சாம்பானுக்கு சிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு இதனால் கிடைத்தது.

அடுத்த நாள் சிவத்தின் காலில் வீழ்ந்த சாம்பான் சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான்.

சிவபிரானின் அருள் விளையாடலை ஒரு கணத்தில் உணர்ந்த சிவம் பரவசமடைந்தார். ஒரு க்ஷணத்தில் சாம்பானுக்கு நயன தீக்ஷை அளித்தார்.

அவ்வளவு தான், முதிர்ந்த நிலையில் இருந்த சாம்பான் ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.

செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது.

சாம்பானின் மனைவியால் இதை நம்ப முடியவில்லை. அரசனிடம் சென்று தன் கணவரை மடத்தில் உள்ளவர்கள் கொலை செய்து விட்டனர் என்று முறையிட்டாள்.

அரசனும் உடனே நடந்ததை அறிய தகுந்த அதிகாரிகளை அனுப்பினான். அவர்கள் நடந்ததை உணர்ந்து உமாபதி சிவாசாரியரின் நயன தீக்ஷையால் சாம்பான் ஒளி உருவில் சிதாகாசத்தில் கலந்ததைக் கூறினர்.

அரசன் பெரிதும் வியப்புற்றான்.

தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.

சிவாசாரியரோ, ‘நல்ல பக்குவம் வாய்ந்த ஒருவருக்கே முக்தி அளிக்க முடியும்’ என்றார்.

பின்னர் இப்படி வேண்டுவது அரசன் என்பதால் தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.

அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது.

அரசன் இதைப் பார்த்து பிரமித்தான்.

இது ஒரு கண்கட்டு வித்தையோ என நினைத்தான்.

“நீவீர் நடராஜரின் ஓலை பெற்று இப்படி செய்ததாகக் கூறுகிறீர். நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம்” என்றான் அரசன்.

அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர்.

அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர்.

சிவாசாரியரின் அடி பணிந்து அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். அரசன் சாம்பானின் மனைவிக்கு தகுந்த நிலம் முதலியவற்றைக் கொடுத்து அவள் வாழ்வதற்கான வகையைச் செய்தான்.

இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை.

இதே வரலாற்றின் முடிவு வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

நடராஜரின் இரு புறமும்  ஒரு புறத்தில் பெற்றான் சாம்பானும் இன்னொரு புறத்தில் சாபத்தால் முள்ளிச்செடியான ஒரு ரிஷியும் தோன்றினார் என்று கூறப்படுகிறது.

இந்த வரலாறு முழுவதையும் புலவர்களைப் பற்றிக் கூறும் பழைய நூலான புலவர் புராணத்திலும், லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாசிரமம் (Letters From Ramanasramam) என்ற ஆங்கில நூலிலும், தருமபுர ஆதீன வெளியீட்டிலும் காணலாம்.

பகவான் ரமண மஹரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த பசு லக்ஷ்மி முக்தி அடைந்து விட்டாள் என்று உறுதிப் படுத்திக் கூறியுள்ளார்.

இதிலிருந்து மிருகங்களும் தாவரங்களும் கூட முக்தி அடைவதுண்டு என்பது உறுதியாகிறது.

இனி அடுத்து உமாபதி சிவாசாரியரின் நூல்களைப் பற்றிச் சிறிது  காண்போம்.

                     ***                 தொடரும்

tags – உமாபதி-3, முள்ளிச் செடி,

LONDON (HINDUS ) CALLING 21-12-2020 (Post.9065-B)

MR E BALAJI REVIEWING BHAGAVAD GITA  TRANSLATION (lINKS TO BHAGAVAD GITA SITE IS GIVEN AT THE END)
DR CHITRA FROM HONG KONG TALKING ABOUT MR MEYYAPPAN’S CAREER AND HIS INTEREST IN BHAGAVAD GITA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9065-B

Date uploaded in London – –22 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

TODAY FROM LONDON -MONDAY 21-12-2020

TODAY’S  AGENDA ON BROADCAST ‘GNANAMAYAM’ CHANNEL

SIGNATURE TUNE- MAITRIM BHAJATA BY KANCHI PARAMACHARYA

Mrs Annapurani Panchanathan- Prayer

XXX

World Hindu News Round up-

In English by Mrs Sujatha Renganathan

In Tamil by Mrs Vaishnavi Anand

XXX

MRS SARASVATHY RAMACHANDRAN FROM MUMBAI- TIRUVEMPAVAI

xxx

DR CHITRA from Hong Kong University on her father’s Gita Translation

Mr E. BALAJI- Book Review- Bhagavad Gita Book by Mr Meyyappan of Chennai

xxx

Miss Layashri kalyanasundaram reading English article – WHEN CAN ONE TELL A LIE?

Mrs Daya Narayanan –  TIRUPPAVAI song

DR Narayanan Kannan- on Tamil Vaishnavism

XXXX

PRODUCER- LONDON SWAMINATHAN 

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM  LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

 WHAT IS NEW?

CHILDREN AND STUDENTS SPECIAL PROGRAMME- ON DECEMBER 25, 2020

XXX

GLOBAL RUDRA MANTRA CHANTING – ON JANUARY 2, 3 NEXT YEAR 2021

XXX

INTERNATIONAL BHARATI CENTENARY MEMORIAL COMMITTEE FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.)

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX

XXXXXXXXXXXXXXXXXXX

MR S MEYYAPPAN

LINKS TO BHAGAVAD GITA TRANSLATION BY MR S.MEYYAPPAN

Following are the links.

Audio of Bhagavad Gita translation of Mr. S. Meiyappan presented by Dr. Chitra

Music by Jaiera Sound

https://bhagavatgitatamilaudio.blogspot.com/

Audio along with Script of Bhagavad Gita translation of Mr. S. Meiyappan presented by Dr. Chitra 

 Music by Jaiera Sound  

https://bhagavadgitatamilscriptandaudio.blogspot.com/

Video of all rendered chapters translation of Mr. S. Meiyappan presented by Dr. Chitra

Music by Jaiera Sound 

https://bhagavadgitatamilvideos.blogspot.com/

Other works of Mr. S. Meiyappan

https://sakunthalameiyappan.blogspot.com/

—SUBHAM—
TAGS – MEYYAPPAN, BHAGAVAD GITA, DR CHITRA, BALAJI