Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
எல்லோரும் தனிமையில் வாழ முடியாது ; எப்பேற்பட்ட தலைவனாக இருந்தாலும் ஒருவரில் உதவியால்தான் அவன் சோபிக்க முடியும்.பெரிய அரசனாக இருந்தாலும் அவனுக்கு சரியான ஆலோசனை வழங்கும் அமைசர் தேவை என்பது நமக்குத் தெரிந்ததே. அறப்பளிஸ்வர சதகத்தில் அம்பலவாண கவிராயர் கொடுக்கும் பட்டியலைக் காண்போமா ?
ஒருவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அவனைவிட புத்தியுடையோரின் கருத்துக்களைச் செவிமடுக்க வேண்டும் . ஒரு மன்னன் மஹா சூரனாக இருந்தாலும் அவனுக்கும் ஆயுதம்தாங்கிய தளகர்த்தர்களின் துணை வேண்டும். தான் பெரிய படிப்பு படித்திருந்தாலும், மெத்தப் படித்தவர்களின் சகவாசம் தேவை.அவர்களைப் போற்ற வேண்டும்
நன்றாகப் பாடக்கூடிய இசை மேதை ஆனாலும் பக்கத்தில் சுருதி சேர்த்து, சுருதி கூட்ட ஒரு சுருதிகாரன் தேவைப்படுவான்.
பூமியை ஒருகுடையின் கீழ் ஆளும் மன்னரானாலும் அவனுக்கு ஆலோசனை வழங்க ஒரு அமைச்சன் தேவை.நல்ல ஒளிவீசும் விளக்கானாலும் அந்த தீபத்தைத் தூண்டிவிட ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது.
அனல் வீசும் நெற்றிக் கண்ணுடைய படிக நிற வண்ணனே ! இறைவனே; அறப்பளிஸ்வரனே ! அருள்வாயாக.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சதகம் என்றால் 100 பாடல்கள்.
தமிழில் மிகவும் பழைய சதகம் திருவாசகத்திலுள்ள திருச் சதகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்டது அவர் சம்பந்தர், அப்பருக்கு முன் வாழ்ந்தார் என்ற ஒரு கருத்தும். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற ஒரு கருத்தும் உளது.
சதகம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது.
பெரும்பாலும் நீதியையும், அந்தந்த பிரதேசத்தின் மகிமையையும் சொல்வதாக இவை அமைந்துள்ளன.
சதகம் பற்றிய இரண்டு நூல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.ஒரு நூலில் பதம்பிரித்து அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
My opponent came into Surrey Naked
To the reviling of a local Conservative, a local Liberal candidate for a parliamentary vacancy in Surrey (England, UK) replied,
“The gentleman is taunting me for not having been born in this district as he was. Let me tell the gentleman that my only excuse is that I’m a Lancashire man from choice, while he is one by necessity. If there is any difference between us, it is that I came into this country with my pants on while the gentleman came into it with his off.”
Xxx
I am ‘TO LET’ (Unfurnished)
When Mr Thomas Sheridan , son of the celebrated Richard Brinsley Sheridan, was a candidate for the representation of a Cornish (U.K) borough, he told his father, that if he had succeeded, he should place a label on his forehead with the words ‘to let’, and side with the party that made the best offer.
Right, Tom, said the father, but don’t forget to add the word ‘unfurnished’.
Xxx
Lord Macaulay and Dead Cat
On one occasion Lord Macaulay had an unpleasant experience at Edinburgh (Scotland, UK). He was re-contesting a seat in that constituency and was standing side by side with his opponent on the balcony one evening, when he was suddenly struck by a dead cat. The member of the audience who threw the animal at once apologised and said that he had intended it for his opponent.
“Well, said Macaulay, I wish you had meant it for me and struck him” .
Xxxx
Liar, Liar !
The political speaker found himself repeatedly interrupted by a speaker who shouted ‘Liar!’ again and again during his discourse. His patience exhausted, the speaker at last said,
“If the gentleman will be good enough tell us his name as well as his calling, we shall be pleased to hear from him”.
Xxx
“Wall, I cant vote now”
Sam Houston, when running for Governor of Texas, overlooked no prospective voters. He went around to most of the farm houses and personally harangued the inmates, getting their promises to vote for him.
At one such farm house he had gotten the farmer’s promise of a vote, and seeing the lanky son of the house pass by, sized him up as another prospective supporter.
“Son, he said to the boy, you look old enough to vote; how old are you?”
“Wall (well), I was 21 last April, but I didn’t bow my head when dad ast the blessing, so he sot me back two years…… so now I can’t vote”.
Tags- Liar, Lord Macaulay, dead cat, Sheridan, Election Campaign, naked, anecdote
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு அழகியுடன் புத்தர் சந்திப்பு (Post.7671)
2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்பதை சம்ஸ்கிருத நூல்களும், பாலி மொழி நூல்களும் காட்டுகின்றன. இதில் மிகவும் சுவையான விஷயம் மாந்தோப்பு அழகி பற்றிய நான்கு செய்திகளாகும்.
1.அவளுக்கு ஆம்ர பாலி (பாலி மொழியில் அம்பா பாலி ) ‘மாந் தோப்புக்காரி’ என்று பெயர் வந்தது ஏன்?
2.புத்தர் பிரான் ஏன் அவள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டார்?
3.அவளுடன் ஒரு நாள் படுக்க, அவள் போட்ட ஐந்து நிபந்தனைகள் என்ன?
4.மகத சாம்ராஜ்ய சக்ரவர்த்தி பிம்பி சாரன் அவளுடன் படுக்க செய்த தந்திரம் என்ன?
2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் பிரான் அடிக்கடி சென்ற இடம் பீஹார் மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் வைசாலி என்னும் புகழ்மிகு நகரம் சீ ரும் சிறப்புடனும் திகழ்ந்தது. அதில் சாக்கிய குல பிரபு ‘மஹாநாமா’ வாழ்ந்து வந்தார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. ஒரு நாள் அவர் மாந்தோப்பில் உலவச் சென்றபொழுது ஒரு பெண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்தது. அதை எடுத்து மனைவியிடம் கொடுக்கவே அவளுக்குப் பேரானந்தம் கிட்டியது. செல்வச் சீமாட்டி போல அவளை வளர்த்தார்கள். அவள் பருவத்துக்கு வந்தபோது பேரழகியாகத் தோன்றினாள் . மாந்தோப்பில் கிடைத்த பெண் ஆதலால் அவள் பெயரும் அம்பா பாலி என்றே நிலைபெற்றுவிட்டது (சம்ஸ்கிருத மொழியில் ஆம்ர என்றால் மாமரம். அது பேச்சு வழக்கு மொழிகளான பாலி /பிராக்ருதத்தில் ‘அம்பா’ ஆகிவிடும்).
பெண்ணுக்குக் கல்யாணம் கட்ட வேண்டிய தருணம் வந்தவுடன் பெற்றோருக்கு கவலையும் வந்தது. ஏனெனில் லிச்சாவி குல வழக்கப்படி அந்த ஜாதியில்தான் மணம் முடிக்க வேண்டும். ஆகையால் லிச்சாவி சபை கூட்டப்பட்டது . எல்லோரும் மண்டபத்தில் கண்களை அகலவிரித்து காத்திருந்தனர். பேரழகி அம்பா பாலி உள்ளே புகுந்தாள் . அனைவரும் ஆச்ச ரியத்தில் மூழ்கினர். இதயம் ‘படக் படக்’ என்று துடித்தது. இவள் எனக்குத்தான் என்று எல்லோரும் ஏகமனதாக தீர்மானம் போட்டுக்கொண்டனர். அறைக்குள் யுத்தம் வெடிக்கும் அளவுக்கு போட்டா போட்டி; காட்டா குஸ்தி. சபைத் தலைவர்கள் ஒரு சமாதானத் தீர்மானம் போட்டனர் . இவளை ‘பொது மகளாக்கி’ எல்லோரும் அனுபவிப்போம் என்று தீர்மானம் போட்டனர். தந்தை தாய் மனம் துடித்தது; ஒப்புக்கொள்ள மறுத்தனர்.
வீட்டில் நுழைய ஐந்து நிபந்தனைகள்
ஆனால் பெரும் சண்டை நிகழ்வதைத் தடுப்பதற்காக அந்த புத்திசாலிப் பெண் ஒரு அறிவிப்பைப் பிரகடனம் செய்தாள் . உங்கள் தீர்மானத்தை நான் ஏற்கிறேன் . நான் போடும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று சொல்லிப் புல்லட் பாயிண்டு (Bullet Points )களில் பட்டியல் போட்டாள் –
1. ஒவ்வொரு நாளும் ஒரு ஆண்மகன் மட்டுமே என் வீட்டுக்குள் நுழையலாம்
2. அவர் ஒரு இரவு என்னுடன் படுக்க 500 ‘கார்ஷா பணம்’ தரவேண்டும்; (இந்தப் பழங்கால நாணய முறை இன்று வரை தமிழில் கூட ‘காசு’ ‘பணம்’ என்று வழங்கப்படுகிறது )
3.என் வீட்டுக்குள் வந்து போவோரை யாரும் கண்காணிக்கக் கூடாது
(நல்ல வேளையாக அக்காலத்தில் சி சி டி வி C C T V cameras, காமெராக்களும் கிடையாது; கூகுள் வாட்ச் Google Watch-ம் கிடையாது)
4.எனக்கு நகரத்தில் முக்கிய இடத்தில் பெரிய வீடு கொடுக்க வேண்டும்.
5.எந்தக் காரணத்துக்காகவாவது அரசாங்க அதிகாரிகள் என் வீட்டை சோதனை போடவேண்டுமானால் எனக்கு ஏழு நாள் நோட்டிஸ் (Seven Day Notice) கொடுத்து அதற்குப்பின்னரே என் வீட்டுக்குள் அதிகாரிகள் வரவேண்டும் .
இந்த ஐந்து நிபந்தனைகளையும் சபை ஏற்றுக்கொண்டது.
அம்பாலிக்கு பெரிய வீடு கிடைத்தவுடன் சிறந்த ஓவியனைக் கூப்பிட்டு வீட்டுச் சுவர்களில் மன்னர்கள், பிரபுக்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோரின் ஓவியங்களை வரைய ச் சொன்னாள் . அதில் மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னன் பிம்பிசாரனின் படமும் இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவளுக்கு காதல் மலர்ந்தது. இந்தச் செய்தி மன்னன் காதிலும் விழுந்தது . அவனும் அம்பாபாலியின் புகழ் பரவுவதை அறிந்து அவள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான். ஆனால் அதில் ஒரு சிக்கல் . மகதப் பேரரசுக்கும் லிச்சாவிகளுக்கும் இடையே உரசல் நிலவியது. அமைச் சர்கள் வைசாலி நகருக்குள் நுழைவது ஆபத்து என்று எச்சரித்தனர் . பிம்பி சாரன் மாவீரன் ; ராணுவ தளபதி கோபன் என்பவனைப் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு மாறு வேடத்தில் வைசாலி நகருக்குள் போய் அம்பாபாலியுடன் ஆறு இரவுகள் தங்கினான்.
இதற்குள் நகர அதிகாரிகளுக்கு பராபரியாகத் தகவல் கிடைக்கவே எதிரி நாட்டு மன்னனைப் பிடிக்க வீடு வீடாக சோதனை போடத் துவங்கினர். அம்பா வீட்டுக்கும் வந்தபோது அவள் 7 நாள் நோட்டிஸ் நிபந்தனையைச் சுட்டிக்காட்டியவுடன் அவர்கள் போய்விட்டனர். மன்னன் பிம்பிசாரனும் மாறுவேடத்தில் தப்பித்துச் சென்றான்.
பிம்பிசாரன் விடைபெற்றுச் செல்லும் முன்பாக அம்பாபாலிக்கு ராஜமுத்திரை பதித்த மோதிரத்தை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எப்போதும் தன் அரண்மனைக்கு வரலாம் என்றான். அவளும் ஒன்பது மாதத்தில் ஒரு பிள்ளையைப் பெற்றாள் .அவன் பள்ளிப்பருவம் எய்தியபோது எல்லோரும் அவனை ‘யாருக்குப் பிறந்தவனோ’ என்று ஏசினர் . உடனே அவனை அம்பா , அரண்மனைக்கு அனுப்பிவைத்தாள். அங்கே அவன் விமல கொண்டன்னா என்ற பெயருடன் வளர்ந்து பிற்காலத்தில் புத்த பிட்சுவாக மாறினான். காலம் உருண்டோடியது .
புத்தர் வருகை
வைசாலி நகருக்கு அருகில் உள்ள கொடிகாம என்னும் ஊரில் புத்தர் தங்கியிருப்பதை அறிந்து அம்பாவும் அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாள் அவருடைய சொற்பழிவைச் செவிமடுத்தாள் ;அதே நேரத்தில் லிச் சாவி குலத் தலைவர்களும் அங்கே வந்தனர். புத்தர் பிரானை சிஷ்யர்கள் புடைசூழ தம் இல்லத்துக்கு விருந்துண்ண அவள் அழைத்தாள் ;லிச் சாவி குலத் தலைவர்களும் புத்தரை அழைத்தனர். அனால் புத்தர் பிரான் அம்பாவின் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்குச் சென்று விருந்துண்டார். இது லிச்சாவி குலத் தலைவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது . புத்தர் பிரான் சாப்பிட்டு முடித்தவுடன் தனது பெரிய மாந்தோப்புகளையும் வீடுகளையும் புத்த சங்கத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் .
நாளடைவில் தனது உடலைத் தானே பார்த்து வருத்தமுற்றாள் . உலகையே ஈர்த்த அழகான தோல், இப்போது சுருங்கிப்போய் அவளுக்கே பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்த நேரத்தில் புத்த பிட்சுவாக மாறிய தனது மகன் விமல கொண்டன்னா உபன்யாசம் செய்வதை அறிந்து காது குளிர கேட்டாள் ; வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தாள்; நித்யானந்தம், பேரானந்தம் பெரும் வழி புத்தரின் வழி என்று அறிந்து புத்த பிக்ஷுணி ஆனார். அதில் அர்க்கத் என்ற பெரிய நிலையை அடைந்து பெரும்பேறு பெற்றாள் ; மகத சாம்ராஜ்யத்தின் மாமன்னனான பிம்பி சாரனும் புத்த மதத்துக்குப் பேராதரவு நல்கினான்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Big Thanks for your pictures.
மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்ற பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்!
ச.நாகராஜன்
மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்றது பேரூர். அங்கு கோமுனி, பட்டி முனி காண மரகதவல்லி சமேதரான பட்டீசுரன் தாண்டவமாடினார். இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பேரூர் உள்ளது கொங்கு மண்டலத்திலேயாம் என்று கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.
பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே
இது கொங்கு மண்டல சதகத்தில் வரும் 17வது பாடல்.
பேரூர் உள்ளது ஆறை நாடு. பேரூர்ப் புராணம் கூறும் செய்யுள் இது:
கொங்குமண்டல சதகத்தில் அடுத்த பாடலாக மலரும் 18வது பாடல் பட்டீசுரன் பள்ளனான வரலாறைக் கூறுகிறது இப்படி:
கடுவாள் விழியினைப் பாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- சுந்தரர் நம்மைப் பாடி வருவார்; அவருக்குக் கொடுக்கப் பரிசு (பொன்) இல்லையே என்று ஒளிந்தவர் போலப் பட்டிப் பெருமான், பள்ள வடிவு கொண்ட பேரூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.
கொங்கு மண்டல சதகம் தனது நூறு பாடல்களில், பட்டீசுரத் திருவிளையாடலுக்கு மட்டும் மூன்று பாடல்களை ஒதுக்குகிறது. (பாடல்கள் 17,18,19). இந்த மூன்றையும் நமது கொங்கு மண்டல சதகத் தொடரில் விரிவாகப் பார்த்து விட்டோம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Three interesting things happened with a beautiful courtesan in India two thousand six hundred years ago.
1.Buddha’s meeting with her and accepting her food surprised every one and Buddha’s own clan Sakhyas were disappointed
2.Emperor Bimbisara entered enemy’s territory to spend one night with her and escaped incognito.
3.That courtesan who was named Mango Garden lady imposed five interesting conditions to entertain anyone for one night.
Here is the most interesting story of Ambapali. In Sanskrit her name is Amra Pali ,i.e. Lady from Mango Garden .
There is a very interesting story about the name.
A Shakyan clan noble called Mahanama found a baby girl in a mango garden in the big city of Vaishali. Now that city is in the Bihar state of India. Mahanama was childless and so his wife reared her amid pomp and luxury as her own daughter. When she grew up she became exquisitely beautiful.
There were strict caste restrictions in Sakhya clan. Mahanama can’t give her to anyone outside his clan. So when she was ready to marry, the Assembly of Lichcavis was convened. Everybody waited to see the girl. When she entered the hall all were wonderstruck with her beauty. Each one vied to marry her. It looked like there would be a big fight to get her. At last they decided to own her jointly. It is called ‘Ghana bhogya’. Her father refused to it. But the clever girl came with a proposal. She put five conditions to spend a night with anyone.
What are the conditions?
1.She should be provided a big house in the centre of the city;
2.Only one person can enter her house eachday.
3.Her fee for one night is 500 karshapanas ( very expensive lady; this word is used even today in Tamil as ‘Kasu’ ‘Panam’) .
4.If anyone wants to inspect her house for any reason the government should give her seven day notice and the Administration would be allowed into her house only on the seventh day.
5.There should be no watch over persons coming in and going out of her house.
(Thank God, there was no CCTV cameras or Google watch 2600 years ago).
The assembly accepted all her conditions.
She selected the best house in the best locality of the city. She had the walls of her house painted by an artist with the portraits of kings, ministers, nobles, rich bankers and traders. While scanning the portraits she fell in love with the portrait of emperor Bimbisara and very anxious to meet him
Since her name and fame spread far and wide Bimbisara also wanted to spend some time with her. But there was a big problem. He was the mighty emperor of Magadha Empire. Even Alexander was not ready to enter India 300 years after Bimbisara. But the Licchavi clan of Vaishali was not in good relationship with him. So his ministers warned him not to go to Ambapali’s house. But he boldly went to her house with the help of Gopa, Commander in Chief of the Army. He spent some time with her. However, the Licchavi spies got the information that the enemy in their territory. But they never suspected Ambapali. When they made house to house search Ambapali reminded them the administration should give her seven- day notice. This is one of the five conditions. In the meantime, sensing the trouble Bimbisara escaped in disguise.
When Bimbisara stayed with her for six nights he gave her a ring with his official seal and told her she could approach him anytime. After nine months Ambapali gave birth to a son. When he grew up his classmates were teasing him as an Illegitimate son of a courtesan. Then Ambapali sent him to Bimbisara. In later life that boy became a Buddhist monk and came to be known as Vimala Kondanna.
Ambapali was very successful in her trade and amassed huge wealth.Buddha in his last days came to Kotigama near Vaishali. Ambapali went to pay her respects. She listened to his discourse and became a lay devotee. She invited Buddha with his disciples for lunch in her house. At the same time the Licchavi leaders also came to invite him. But Buddha accepted only Ambapali’s invitation. This disappointed the Licchavis. At the end of dinner, she gave her entire mango garden with its big buildings to Bikshu Sanga, the Buddhist Association.
Some time after this she listened to her own son Vimala’s discourse. She decided to become a bikshuni, monk. She looked at her own body which was beautiful at one time and now became shrunken. She realised the impermanence of worldly existence and attained arhathood. She gave expression to her mind in verses.
She was one of the most famous women of ancient India. Vasanta sena, Vasava data and Ambaplali became famous and was the plot of several Sanskrit dramas and Kanyas.
While Maitreyi and Gargi Vachknavi were known for their spiritual attainments, the above three were known for their sacrifice , devotion and affection towards their lovers.
Ancient Indian love stories were more beautiful than Romeo and Juliet and Antony and Cleopatra.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை – செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது
இதோ சில சுவையான செய்திகள் –
தஞ்சாவூரிலிருந்து ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.
ராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.
அவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும் மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில் 12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம். அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.
மதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில் ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றிய ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.
ராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல். இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை பொழிந்தார்
சாதுர்யமேதி கவிதாஸு சதுர்விதாஸு
வீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா
ப்ரக்ஞாமியம் நிபுணமஞ்சதி பாணிணீ யே
மேதாம் வ்யனக்தி பஹுதா விவிதா வதானே
என்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.
மதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..
பெண்மணிக்கு தங்க அபிஷேகம்
ரங்க ஜம்மா என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள். உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.
பெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.
முத்துப் பழனி
நாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ் நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி
சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம் ஆகும்.