Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நான் தினமணியில் எழுதிய பழைய கட்டுரை இது . ஆயினும் சுறாமீனோ அதன் குணங்களோ மாறவில்லை.
வாரம் தோறும் ஆஸ்திரேலியாவிலிருந்து சுறா மீன் தாக்குதல் பற்றி செய்திகள் வருகின்றன .சங்க இலக்கியத்தில் சுறாமீன் தாக்குதல் பற்றி நிறைய செய்திகள் உள .
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
16-11-2019 பாக்யா இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு இருபதாம்) கட்டுரை –அத்தியாயம் 436
விண்வெளியில் நடை பயிலும் வீராங்கனைகள்!
ச.நாகராஜன்
முதல் முதலாக பெண்கள் மட்டும் விண்கலத்திலிருந்து வெளியில் வந்து நடந்த சாதனை 2019 அக்டோபர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. விண்கலத்திலிருந்து வெளியில் வந்து நடந்த அமெரிக்க வீராங்கனைகள் இருவர் – கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மெயர்(Christina Koch, Jessica Meyer).
விண்வெளி வீரர்களின் அகராதியில் இந்த விண்வெளி நடைக்கு எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி (Extra Vehicular Activity – EVA)என்று பெயர்.
விண்கலத்திலிருந்து வெளியில் வந்து சுமார் ஐந்தரை மணி நேரம் இருந்த இந்த இரு வீராங்கனைகளும் செயலிழந்திருந்த ஒரு பவர் கட்டுப்பாடு சாதனத்தை எடுத்து விட்டு புதிய ஒன்றைப் பொருத்தும் வேலையைச் செய்தனர்.
ஏழு மாதங்களுக்கு முன்பேயே இந்த சாதனை நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் விண்கலத்திலிருந்து வெளியில் செல்வதற்கான ஸ்பேஸ் சூட் – ஆடை – ஒன்று தான் விண்கலத்தில் இருந்தது. இன்னொன்று தேவைப்படவே அதைத் தயாரித்து நாஸா அனுப்பியது. பின்னர் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது.
முதலில் கோச் வெளியில் வரவே அவரைப் பின் தொடர்ந்து மெதுவாக கருவிகள் அடங்கிய பை ஒன்றை எடுத்துக் கொண்டு ஜெஸிகா வந்தார். கைப்பிடி ஒன்றுடன் இவர்கள் இணைக்கப்பட்டனர். தேவையான போது இதிலிருந்து விடுபட்டு அவர்கள் தங்கள் வேலையை விண்வெளியில் மிதந்தவாறே செய்தனர்.
பூமிக்கு மேலே 260 மைல் உயரத்தில் உள்ளது விண்வெளி நிலையம். அதில் இப்படி ஒரு சாதனையைச் செய்வது உலகெங்குமுள்ள தாய்க்குலத்தையே பரவசப்படுத்தி இருக்கிறது.
வேலையை முடித்து விட்டு பழுதான பேட்டரியை பத்திரமாக விண்கலத்திற்குள் கொண்டு வந்து வைத்து விட்டனர் இந்த இருவரும். அது பூமிக்குக் கொண்டுவரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
விண்வெளியில் நடை பயிலும் இந்த வீராங்கனைகளின் அடுத்த ஆசை என்ன தெரியுமா? சந்திரனில் கால் பதிக்கும் முதல் பெண்மணியாக ஆக வேண்டும் என்பது தான். ஜெஸிகா மெயர், “ சந்திரனில் கால் பதிக்கும் முதல் பெண்மணியாக ஆவதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதுவே எனது இலட்சியப் பயணமாக அமையும். இதோ நேரம் நெருங்கி விட்டது – நாம் திரும்பவும் சந்திரனுக்குப் போக! வெகு விரைவில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும் என நான் நம்புவதோடு அந்தக் குழுவில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால் மெயரை கிறிஸ்டினா கோச் மிகவும் ஆதரித்து ஆமோதித்தார்.
கோச் (வயது 40) விண்வெளி நிலையத்தில் 2020 பிப்ரவரி முடிய இருக்க திட்டமுள்ளது. அப்போது அவர் விண்வெளி நிலையத்தில் இருக்கும் மொத்த நாட்கள் 328 நாட்களாகும். இது தொடர்ந்து ஒரு பெண்மணி விண்வெளியில் இருந்த அதிக நாட்களாக அமையும். ஸ்காட் கெல்லி என்பவர் 340 நாள் விண்வெளியில் இருந்திருக்கிறார், ஆனால் தொடர்ந்து அல்ல!
கோச் விண்வெளியில் நீண்ட காலம் இருந்த போது அவர் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்வர்.
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு விண்வெளியில் களைப்பு சீக்கிரம் ஏற்படுகிறது.
இதுவரை 14 வீராங்கனைகளும் 213 விண்வெளி வீரர்களும் விண்வெளியில் நடந்துள்ளனர். விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி ரஷியாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா ஸவிட்ஸ்கயா என்பவர். சல்யுட் 7 என்ற கலத்தில் 1984இல் விண்வெளி சென்றார்.
முதன் முதலாகவிண்வெளியில் நடந்த அமெரிக்க பெண்மணி காத்ரீன் சல்லிவன்.
இதற்கிடையில் நாஸா சந்திரனுக்குச் செல்வோர் அணியும் புதிய ஆடையின் வடிவமைத்து அதன் முன் மாதிரியைக் காட்டியுள்ளது.
ஸ்பேஸ் சூட் என்பது மிக முக்கியமான ஒன்று – ஏனெனில் விண்வெளியில் நடந்து செல்வோர் பல்வேறு உஷ்ணநிலையைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது. விண்ணில், உறைய வைக்கும் மைனஸ் 250 டிகிரி பாரன்ஹீட்டிலிருந்து மிக அதிக வெப்பமான 250 டிகிரி பாரன்ஹீட் வரை இருப்பதால் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பது அவர்கள் அணியும் ஸ்பேஸ் சூட் தான்!
பூமியில் இந்த ஆடையின் எடை 280 பவுண்டுகள். ஆனால் விண்வெளியில் எடையற்ற சூழ்நிலையில் இதற்கு எடையே இருக்காது.
பூமியிலிருந்து சந்திரனுக்குச் செல்ல சாதாரணமாக 3 நாட்கள் ஆகும். ஒரு விண்கலம் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் மைல்கள் பயணப்பட்டு சந்திரனை அடைகிறது. இதுவே பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். ஆனால் சரியான தூரத்தைக் கணக்கிட வேண்டுமானால் விண்கலம் எந்த ஓடுபாதை வழியே செல்ல இருக்கிறது என்பதை நிர்ணையித்து அதற்குத் தக தூரத்தைக் கணக்கிட்டு பின்னர் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.
ஆனால் விண்வெளி விஞ்ஞானம் வெகு விரைவில் வளர்ந்து 12 மணி நேரத்தில் சந்திரனை அடைந்து விட முடியும் என சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சந்திரனுக்கு அடுத்த பயணம் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்ற செய்தி வலுப்பட்டு வரும் நிலையில் அங்கு செல்லும் குழுவில் ஒரு பெண்மணியும் இடம் பெறுவார் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
விக்ரம் அம்பாலால் சாராபாய் (தோற்றம் 12, ஆகஸ்ட்,1919 மறைவு : 30 டிசம்பர் 1971) மிகப் பெரிய இந்திய விஞ்ஞானி. இஸ்ரோ நிறுவப்பட பெரிதும் காரணமாய் இருந்தவர் அவரே. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அவர் போற்றப்படுகிறார்.
அவரது மகள் மல்லிகா சாராபாய் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திப் பெயர் பெற்றவர். அவர் ஒரு நடிகையும் கூட! தன் தந்தையைப் பற்றி விழா ஒன்றில் அவர் கூறிய சம்பவம் இது.
மல்லிகா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் அவர் யாருடைய கேர்ள்-ப்ரண்ட் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். விவாதம் பெரிய சண்டையாக ஆகி ஒரு மாணவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தி விட்டார்.
விஷயம் பெரிதாகி விடவே விக்ரம் சாராபாய் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். பள்ளியின் பிரின்ஸிபால் விக்ரமின் சகோதரியான லீலாபென் தான்!
பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்த வெகத்தில் திரும்பி வந்தார் விக்ரம், சிரித்துக் கொண்டே.
அவர் தனது மகளிடம் கூறினார்; “மல்லிகா, இந்த மீட்டிங் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ ஒரு குற்றமும் செய்யாத போது நீ தான் காரணம் என்று உன் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றது. ஒன்று தெரிந்து கொள்! இந்த உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். முதல் வகையினர் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்க மாட்டார்கள். வசதியாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.
இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் வழியில் அமைத்துக் கொள்பவர்கள். அவர்கள் தங்களுக்கு எது உண்மை என்று படுகிறதோ அந்த வழியில் செல்வார்கள்.
நான் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். இந்த வழி தான் என் வாழக்கை எப்படிப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.
இந்த வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மல்லிகா.
விக்ரம் சாராபாய் பத்மபூஷன் (1966ஆம் ஆண்டு) மற்றும் பத்ம விபூஷண் (இறந்த பிறகு 1972இல் வழங்கப்பட்டது) விருதுகளைப் பெற்றவர்.
தந்தையிடமிருந்து அரிய வழிகாட்டுதலைப் பெற்ற மல்லிகா பின்னால் பிரபலமானதில் ஆச்சரியமே இல்லை!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பிரிட்டனில் மஹாபாரதம் நடந்தபோது ஆகஸ்ட் 16, 1992-ல் நான் தினமணியில் எழுதிய செய்தி. பழைய செய்தியானாலும் சுவை குன்றுவதில்லை
written by london swaminathan in Dinamani dated 16th August 1992.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ACROSS
1. –(6 letters) Name of a star in the 27 star system of Hindus. Name of a month as well
6.–(7) that which is indestructible in Sanskrit. On Trtyai with this word women by tons of gold in India. Draupadi had a vessel with this name.
8. – (5) descendant of Ahu ; surname in Punjab and Sind; mainly in business
9.(4) – meaning first in Sanskrit. Brahmin streets had this prefix
10. – (4) world money came from this Sanskrit word, always go with karsha…..; hood of a snake
DOWN
1.(5 letters) – shade in Sanskrit; wife of Sun God
2.(5) – meaning sugarcane. First king of solar dynasty with this prefix brought sugarcane cultivation into this world
3. (5/6) Bull ; with long sound masculine girl; mannish woman
4. (6)- immutable, imperishable
5. (6)- brownish, tawny also name of Rishis and poets
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நேர்மையாக `அர்த்தம் விளங்கவில்லை` (MEANING IS OBSCURE, UNCERTAIN) என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில்
23-11-2019 அன்று வெளியாகியுள்ள கட்டுரை!
அச்சம் அகற்றும் பவளம்!
ச.நாகராஜன்
தெய்வீக மணி பவளம்
தெய்வீக மணி பவளம் நவ ரத்தினங்களுள்
ஒன்று. முக்கியமானதும் கூட!
சிவபிரானும் தமிழ்த் தெய்வமான
முருகனும் பவள நிற மேனியர் ஆவர்.
‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்’ என்று சிவபிரானின் தோற்றத்தை
வர்ணித்த அப்பர் பிரான் இப்படிப்பட்ட உருவத்தைத் தரிசிக்க ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே’ என்று நெகிழ்ந்து
உருகுகிறார்.
குறுந்தொகை என்ற சங்க நூலில்
அதன் கடவுள் வாழ்த்தைப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார் ‘பவளத்தன்ன மேனித் திகழொளி’ என்று முருகனின் பவள மேனியைப்
போற்றிப் பாடுகிறார்.
முத்துகுமாரசுவாமி பிள்ளைத்
தமிழை அருளிய குமரகுருபரர் முருகன் ஆடி வரும் அழகை வர்ணிக்கையில்,
“கம்பி விதம்பொதி குண்டலமுங்குழை
காதும் அசைந்தாட
கட்டிய சூழியு முச்சியுமு முச்சிக் கதிர் முத்தொடும்
ஆட
அம்பவழத் திருமேனியும் ஆடிட
ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை”
என்று போற்றித் துதிக்கிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரோ “பச்சை மாமலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்” என்று திருமாலின் உருவைக் கண்டு பரவசம் அடைகிறார்.
பவளத்தின் இதர பெயர்கள்
பிங்கல முனிவர் பவளத்தின் வேறு
பெயர்களாக துப்பு, பிரவாளம், துவர், துகிர், வித்துருமம், அர்த்தம் எனப் பல பெயர்களைத்
தருகிறார்.
ஜோதிடத்தில் பவளம்
இப்படிப்பட்ட பவளம் ஜோதிடத்தில்
செவ்வாய் தோஷம் தரும் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கும் ஒரு அரும் சக்தியாக விளங்குகிறது.
மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள்
செவ்வாயின் நற்பலன்களைக் கூட்டவும், சில சமயங்களில் ஜாதகத்தில் செவ்வாய் நற்பலன் தராத
இடங்களில் இருந்தால் அச்சமூட்டும் தீய பலன்களைப் போக்கவும் பவளம் அணிய வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
ஒன்பது எண் செவ்வாயுடன் தொடர்பு
கொண்டது என்பதால் ஒன்பது எண் பிறந்த தேதியாகவோ அல்லது கூட்டு எண்ணாகவோ அமைபவர்களுக்கு
உரியதும் பவளம் தான். ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்து சரீர சம்பந்தமான வியாதிகளை
இவர்களுக்கு பவளம் போக்கி விடும்.
மருத்துவத்தில் பவளம்
வம்புச் சண்டைகளையும், வந்த
சண்டைகளையும் தீர்ப்பது பவளமே.
உஷ்ண சம்பந்தமான அனைத்து வியாதிகளையும்
போக்குவதும் பவளமே.
பவளத்தைக் கலந்து தயாரிக்கப்படும் பல மருந்துகளை நமது பண்டைய சித்த மருத்துவ நூல்கள் விளக்குகின்றன.
பவழம் தாவரமா அல்லது விலங்கினமா!
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாடிலும்
அவரது சீடரான தியோப்ரெஸ்டஸும் தங்களது ‘கற்கள்’ என்ற புத்தகத்தில் பவளத்தைக்
குறிப்பிடுகின்றனர். பவளம் ஒரு தாவரமா அல்லது கடல் வாழ் உயிரினத்தால் உருவானதா என்பதைப்
பற்றிய சுவையான சர்ச்சை அந்தக் காலத்திலேயே எழுந்துள்ளது. பெர்ஸிய அறிஞரான அல்பெருனீ பவழத்தை விலங்கினத்தோடு சேர்த்து அதைத் தொடும் போது
அது உணர்கிறது என்று அதற்கான காரணத்தையும் கூறினார். வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி
ஒரு மைக்ராஸ்கோப்பின் உதவி கொண்டு விலங்குகளுக்கே உரித்தான மெல்லிய
சவ்வுத் திசு பவழத்தில் காணப்படுவதால் அது விலங்கினத்தைச் சேர்ந்ததே என்று இந்த
சர்ச்சைக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தார்.
பவளத்தின் வகைகள்
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
பவளத்தைப் பற்றிப் பல உண்டு.
பவளத்தில் சிறந்த வகை சிவப்புடன் வெண்மை கலந்த வண்ணத்துடன் இருக்கும். குழிமுயலின்
இரத்த வண்ணத்தில் இது இருக்கும். பவளம் மிருதுவானது.அழகானது. மேலே எண்ணெயப்
பூச்சைக் கொண்டது போல இருக்கும். மிக சுலபமாகத் துளை போடக் கூடியபடி இருக்கும்.
பவளத்தின் அடுத்த வகை சிவப்பாக – குங்குமச் சிவப்பாக
– இருக்கும். பந்தூக மலர் அல்லது மாதுளம் பூ நிறத்திலிருக்கும். இந்த வகைப் பவளம்
சற்றுக் கடினமானதாக இருக்கும். பள பளப்பான எண்ணெய்ப் பூச்சைக் கொண்டிருக்காது.
இதில் துளையிடுவது சற்றுக் கடினமாக இருக்கும்.
மூன்றாவது ரகம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் கொண்டதாக
இருக்கும். பலாச புஷ்பம் போல நிறத்தில் இருக்கும். அழகிய இந்த வண்ணம் இருந்தாலும்
பளபளப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
நான்காவது வகை பவளம் கறுப்பு கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும். ரோஜா மலர் இதழ்கள் போல இருக்கும். அது கடினமாக இருக்கும்.
அதன் ஒளி பல நாட்கள் நீடிக்காது. அதில் துளை போடுவது மிகவும் கடினமாக இருக்கும்.
நல்ல பவளத்தை எப்படி அறிவது?
ஒரு நல்ல பவளமானது
1) சிவப்பு வண்ணம் 2) பளபளப்பான எண்ணெய் பூசப்பட்டது போன்ற தொற்றம் 3) சுலபமாகத் துளையிடக்
கூடியது 4) உருண்டை வடிவம் 5) நீடித்த காலம் இருக்கும் ஒளி 6) கனமானது 7) மேல் பரப்பு
மிருதுவானது ஆகிய இந்தக் குணங்களைக் கொண்டிருக்கும். இதுவே நல்ல பவளம்.
வெளுத்துப் போன
வெண்மை, சாம்பல் வண்ணம், சிறியது, கரடு முரடான மேற்பரப்பை உடையது, ஏராளமான பள்ளங்கள்
அல்லது குழிகளைக் கொண்டது, மிகவும் இலேசானது, தாமிர நிறமுடையது – இவை யாவும் விலக்கத்
தக்க பவளங்கள் ஆகும்.
நவரத்தினங்கள்
அனைத்தையும் எடுத்துக் கொண்டால் ஒரு இரும்பினால் கீறல் போடப்படும் தன்மை உடையவை முத்தும்
பவளமும் மட்டுமே.
பவளத்தின் பயன்கள்
பவளம் உடலை உருக்குகின்ற க்ஷய ரோகத்தைத் தீர்க்கும்.
இரத்தப் போக்கைப் போக்கும்.
இருமலைத் தீர்க்கும்.
கண் வியாதிகளைப் போக்கும்.
விஷத்தை முறிக்கும்.
தீய திருஷ்டியாலும் பிசாசு போன்ற தீய சக்திகளினால் ஏற்படும் தீமைகளைப் போக்கும்.
இது இலேசானது. ஜீரணத்தை அதிகரிக்கும்.
இவையே
ரஸ ஜல நிதி தரும் அற்புதத் தகவல்கள்.
பல்வேறு
வடிவங்களிலும் நிறங்களிலும், அளவுகளிலும், வடிவமைப்புகளிலும் பவளம் கிடைக்கப் பெறுகிறது.
கடலின்
சில பகுதிகளில் மட்டுமே பவளப் பாறைகள் இருக்கின்றன. (பாலிப் என்ற) ஒரு அரிய வகைக் கடல்
வாழ் உயிரினத்தின் கழிவே பவளம். ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு செண்டிமீட்டர் என்ற
குறைவான அளவில் பவளம் வளர்கிறது.
150
அடி என்ற குறைந்த பட்ச ஆழம் இருந்தால் தான் பவளம் வளரும்; 900 அடி ஆழத்திலும் அது காணப்படுகிறது!
அதே
போல உஷ்ணநிலையும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. 70 முதல் 85 டிகிரி பாரன்ஹீட்
உஷ்ணம் அதற்குத் தேவை. தெளிவான கடல் நீரில் மட்டுமே பவளம் வளரும். பசிபிக் மற்றும்
இந்து மா கடலில் பவளங்கள் காணப்படுகின்றன.
ஆழமில்லாத
கடல் நீர்ப்பரப்பு மிகவும் சுலபத்தில் சூரியனின் வெப்பம் பட்டு வெப்பமாவதால் பவளம்
வளர வாய்ப்பில்லை. அதிக ஆழத்தில் தான் அது வளர முடிகிறது.
ஒரு
முக்கியமான விந்தையான விஷயம் நிலப் பரப்பின் கிழக்குப் பக்கம் உள்ள கடல்நீரில் தான்
பவளம் தோன்றுகிறது. உஷ்ணம் இந்தப் பக்கம் குறைவாக
இருப்பதால் இப்படி ஏற்படுகிறது என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கரை
மணல் திட்டில் பவளம் கிடைத்து விட்டது என்று கொண்டாட நினைப்போர் அது பாலிப் என்ற ஒருவகை
கடல்வாழ் உயிரினத்தின் ஓடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடல்
அலைகள் வலிமையுடன் வேகமாக இருக்கும் இடங்களிலும் அலைகள் ஆவேசம் அடையும் இடங்களிலும்
பொதுவாக பவளத்தின் வளர்ச்சி நன்கு காணப்படுகிறது.
ஏனெனில் அங்கு கடல்வாழ் உயிரினங்களுத் தேவையான உணவுப் பொருள்கள் கிடைப்பதால்
தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரும் பவழப்பாறை எனக் கூறப்படுவது ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதை விண்ணிலிருந்தும் பார்க்க முடியும். 1,33,000 சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள இது 2900 தனிப்பட்ட பவழப்பாறைகளையும் 1400 மைல் நீளத்தில் பரந்துள்ள 1050 தீவுகளையும் கொண்டிருக்கிறது!
பவளப்
பாறைகளை நம்மால் நேரில் பார்த்து மகிழ முடியும்.
அந்தமான்
– நிகோபர் பகுதியில் உள்ள ஏராளமான தீவுகளின் கடல் பகுதியில் பவளப் பாறைகள் உள்ளன.
அந்தமானிலிருந்து
மிக அருகிலுள்ள ஜாலி பாய், பவளத் தீவு, ரோஸ் தீவு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்காக
விசேஷ படகுகள் இயக்கப்படுகின்றன. இந்தப் படகின் கீழ்ப்புறத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால்
படகில் இருப்போர் இந்தக் கண்ணாடி வழியே கடலின் அடியில் இருக்கும் பவளப் பாறைகளைப் பார்த்து
பிரமிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட
பவளங்கள், வளர்ந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்டு சிறிய் அளவுகளில் பட்டை தீட்டப்பட்டு
சந்தைக்கு விற்பனைக்காக வருகின்றன.
‘மோ
அலகின்’ படி பவளத்தின்
கடினத் தன்மை 3.5 முதல் 4 வரை உள்ளது.
பவளத்தின்
வளர்ச்சிக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவை.
அறிவியல் ரீதியாக பவளம் எய்ட்ஸ், கான்ஸர், தீராத வலி
ஆகியவற்றிற்கான நிவாரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன நாகரிகத்தில் சீனர்கள் பவள மாலையை அணிவது சாதாரணப்
பழக்கமாக இருந்து வந்திருக்கிறது.தெய்வீகத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள பவளம் ஆயுளை
நீட்டிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை.
ஆயுர்வேதத்தில் பவள பஸ்மம் எலும்பு சம்பந்தமான நோய்களைத்
தீர்க்கவும், கால்சியம் குறைபாடுள்ளவர்களுத் தரப்படும் மருந்தாகவும் உபயோகப்படுத்தப்பட்டு
வருகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பில்ஜெர்
(Professor Bilger)
ஆஸ்திரேலியாவில் உள்ள ட்ரீ ஐலேண்டில் (Tree Island)ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். இங்குள்ள பவளங்களை ஆராய்ந்ததில்
அவர் பவளம் பற்றிய ஒரு அரிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளார். “மற்ற உலோகங்களில் ஐயான்
தாதுக்கள் (Mineral Ions) கடத்தப் படுவதை விட பவளத்தில் பத்து மடங்கு வேகத்துடன் இந்தச் செயல் நடைபெறுகிறது.ஆனால்
இது ஏன் என்பது புரியாத மர்மமாக இருக்கிறது” என்கிறார் அவர். பவளம் தனித்துவம் வாய்ந்த ஒன்று என்பது இதிலிருந்து புலனாகிறது.
பிரபலங்கள் போற்றும் பவளம்!
உலகின் ஏராளமான பிரபலங்கள் பவழத்தைத் தாங்கள் அணிவதை
உறுதிப்படுத்துகின்றனர். உலகமே பார்த்து வியந்து மயங்கிய ஸ்டைல் ராணியான எலிஸபத் டெய்லரின்
நவரத்தின ஆபரணக் குவியலில் பவளம் பதிக்கப்பட்ட அணிகள் உண்டு. இவை அனைவரையும் கவர்ந்ததில்
வியப்பில்லை.
ஹிந்தி திரைப்பட நடிகையான கரீனா கபூர், டி.வி. பிரபலமான
ஏகதா கபூர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பவளம்
பதிக்கப்பட்ட மோதிரம் மற்றும் ஆபரணங்களை அணியத் தவறுவதே இல்லை என்பதற்கான காரணம் பவளத்தின்
மகிமை தான்!
பவளத்தில் உயரிய ரகம் 1000 டாலரிலிருந்து 6000 டாலர்
வரை விற்கப்பட்டு (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) உலக மக்களை ஆச்சரியப்பட
வைத்துள்ளது.
மணியாய் ஒளியாய் வருவாய்!
அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் பவளத்தைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்.
முருகனின் பவள மேனி கண்டு உருகிய அவர் கந்தர் அனுபூதியில், இறுதிப் பாடலில், ‘உருவாய் அருவாய்’ என ஆரம்பித்து ‘மணியாய் ஒளியாய்’ எனத் துதித்து ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!’ என்று முடிக்கும் போது பவள மணியின் ஒளி நம் இதயத்தில் புகுந்து தெய்வீக உணர்வை எழுப்புகிறது இல்லையா!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
உலகில்
எவ்வளவோ இயற்கை அதிசயங்கள் உள்ளன. அதில் ரஷ்யாவிலுள்ள பைகால் (Lake
Baikal)
ஏரிக்கு சிறப்பிடம் உண்டு. ஆழமான, பழமையான
ஏரி என்பதோடு 1500 உயிரினங்களை உடைய ஏரி இது. ஆனால் மற்ற
ஏரிகளைப் போல இதுவும் புறச் சூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது அளவில்
சுருங்கி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது பற்றி 1992 ஆகஸ்ட் 8ம் தேதி நான் தினமணியில் எழுதிய
கட்டுரையைப் படியுங்கள்
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி
21-11-2019; இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019; மூன்றாம் பகுதி
கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019; நான்காம் பகுதி கட்டுரை எண் : 7258 வெளியான
தேதி : 25-11-19; ஐந்தாம் பகுதி : வெளியான தேதி
; பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6
ச.நாகராஜன்
மாணவர்களே!
உங்களது கல்வியை இங்கு தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு
ஸ்வாமியின் உபதேசங்களைக் கேட்டிருப்பதால் இலட்சிய மனிதராக உங்களை நீங்கள் மாற்றிக்
கொள்ள வேண்டும். தெய்வீகத் திருவுருவின் முன்னர் எப்போதும் வாழ்கின்ற புனிதமான வாய்ப்பு
உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு போதும் கடும் சொல்லைப் பேசாதீர்கள். ஒரு போதும் பொய் பேசாதீர்கள். சில சமயம் உண்மையைச்
சொல்வதானது ஆபத்தில் கொண்டு போய் விடும். அப்படிப்பட்ட நிலையில் பொய்யும் பேச வேண்டாம்;
உண்மையும் பேச வேண்டாம், மௌனமாக இருந்து விடுங்கள்.
பொய்க்கும் மெய்க்கும் அப்பாற்பட்டு அந்த இரண்டையும்
நீங்கள் கடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்தில் இருப்பதால்,
இதுவே புனிதமான பாதையில் செல்வதற்கான நல்ல தருணம். சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக
ஓட்டுங்கள், பத்திரமாகச் சேருங்கள்.
எனக்கு எனது
பிறந்த நாளைக் கொண்டாடுவதில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. பக்தர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை
இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். ஆனால் நான் அவர்களை அனுமதிக்கவில்லை.
நீங்கள் ஏராளமான பேர்கள் இங்கு குழுமி விட்டதால் இந்தக் கூட்டம் இங்கு நடைபெறுகிறது.
இல்லையெனில் இந்தக் கூட்டத்திலும் கூட எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு ஒவ்வொரு நாளும்
திருநாள் தான். நான் எப்போதும் ஆனந்தமயம். நான் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின்
திருவுருவம். எந்த மாதிரியான ஆனந்தம்? மற்றவர்கள்
கொடுக்கின்றது போன்ற ஆனந்தம் அல்ல அது. மற்றவர்கள்
எனக்கு ஆனந்தத்தைத் தருவதற்காக நான் காத்திருப்பதில்லை. எனது ஆனந்தம் உள்ளிருந்து உருவாகிறது.
நித்யானந்தம், பரம சுகதம், கேவலம் ஞான மூர்த்திம், த்வந்வாதீயம், ககன சத்ருஷம், தத்வமஸ்யாதி லக்ஷ்யம், ஏகம், நித்யம், விமலம், அசலம், சர்வாதிசாக்ஷிபூதம், பாவாதீதம், திரிகுணரஹிதம் (கடவுள் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுரு. அவன் ஞானத்தின் மொத்த உரு, இரண்டு அற்ற ஏகன், ஒன்றுக்கொன்று எதிர்மறையாக உள்ளவற்றிற்கு அப்பாற்பட்டவன், ஆகாயம் போலப் பரந்தவன், அனைத்தையும் ஊடுருவி எங்கு நிறைந்திருப்பவன், தத்வமஸி என்ற மஹாவாக்யம் கூறியுள்ள லக்ஷியம், நித்யமானவன், விமலன், மாறுதலற்றவன், அறிவின் அனைத்துச் செயல்களுக்கும் சாக்ஷியானவன், அனைத்து மனநிலைகளுக்கும் அப்பாற்பட்டவன், சத்வம், ரஜஸ், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்).
நான் அனைத்து
குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
நம்பினால் நம்புங்கள், நான் ஆனந்தத்தின் திருவுருவமாக அமைந்தவன். நீங்கள் வேறு விதமாக
நினைத்தால் தவறு உங்களிடம் இருக்கிறது. நான் எதைச் செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே,
உங்களின் வளத்திற்காகவே, உங்களின் சந்தோஷத்திற்காகவே. ஆனந்தமயமான, கறைபடாத வாழ்க்கையை
வாழுங்கள். அதுவே உங்களிடம் நான் விரும்புவது. ஒரு காலத்திலும் நான் கவலைப்பட்டதில்லை;
துன்பப்பட்டதில்லை. என்னிடம் எல்லாமே இருக்கும் போது எதற்காக நான் கவலைப்பட வேண்டும்?
எனக்கு எந்த வித ஆசைகளும் இல்லை. நான் சொல்வதெல்லாம், நான் செய்வதெல்லாம் உங்களுக்குத்
தான் நன்மை, எனக்கு அல்ல. நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகவே என்னை முழுவதுமாகப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புனிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நான் எப்போதுமே
தயார் தான். தெய்வீகமான வாழ்க்கை வாழுங்கள். சில சமயம் நான் உங்களுடன் பேசுவதில்லை.
“நாம் ஏதோ தவறு இழைத்திருக்கிறோம்” அதனால் தான் ஸ்வாமி நம்முடன் பேசவில்லை என நீங்கள்
நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், மற்றவர்களிடம் குறைகளைப் பார்ப்பது
எனது இயற்கையல்ல. எனது காட்சி மிகவும் புனிதமானது. நான் எப்போதுமே உங்களிடம் நல்லதையே
பார்க்கிறேன். கெட்டதைப் பார்ப்பதானது உங்களது சொந்தக் கற்பனையே. ஏனெனில் உங்களிடம்
கெட்டது இருக்கிறது, ஆகவே மற்றவர்களிடமும் அதையே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எனக்கோ
கெட்டதும் கூட நல்லதாகத் தான் தெரிகிறது. ஆகவே ஸ்வாமியைப் பற்றி எந்தவிதமான சந்தேகத்திற்கும்
இடம் கொடுக்காதீர்கள். சம்ஸ்யாத்மா வினஸ்யதி! (யார் சந்தேகப்படுகிறானோ அவன் அழிகிறான்)
திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.
அன்புத் திருவுருவங்களே!
உங்கள் விருந்தாளிகளை வரவேற்று மரியாதை செய்யுங்கள். உங்கள் அன்பை அனைவருக்கும்
கொடுங்கள். பசித்தோருக்கு உணவு கொடுங்கள். அப்போது மட்டுமே உங்களுக்கு மன அமைதி கிட்டும்.
உங்கள் எண்ண்ம், சொல், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து லயப்படுத்துங்கள். இதை விடப்
பெரிய ஞானம் வேறொன்றும் கிடையாது. ரிதமை பயிற்சி செய்யுங்கள். இதுவே தாரகத்திற்கான (முக்திக்கான) வழி. நீங்கள்
அவ்வப்பொழுது அலைபாய்ந்து கொண்ட மனதுடன் இருந்தால் நீங்கள் தான் மிகவும் துரதிர்ஷ்டசாலி.
அங்குமிங்கும் அலைபாய்வது குரங்கின் மனதிற்கான இயற்கைக் குணம். நீங்கள் மனிதகுலத்தைச்
சேர்ந்தவர்கள். மனிதனாகப் பிறந்து நீங்கள் உறுதியான மனத்தைக் கொள்ள வேண்டும். மனிதகுலம்
தாரகத்திற்கான அடையாளம். குரங்கு மனம் மாரகத்தைக் குறிப்பிடுவதாகும் (தளை).
அன்புத் திருவுருவங்களே!
இந்தப் பிறந்த நாளில் நீங்கள்
மிக முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றுப் பேச்சில் வீணாக நேரத்தைக்
கழிக்க வேண்டாம். ஒரு முறை தொலைத்து விட்ட நேரத்தைத் திரும்பிப் பெற முடியாது. ஸத்தியத்தைக்
கடவுள் எனக் கொள்ளுங்கள்.
ஸத்யம் நாஸ்தி பரோ தர்ம:
(ஸத்யத்தைக் கடைப்பிடிப்பதைத்
தவிர வேறு பெரிய தர்மம் ஒன்றும் இல்லை.)
ஆகவே ஸத்தியத்தின் வழியைப் பின்பற்றுங்கள்;
தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.
***
பாபாவின் உரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.
23-11-2002இல் பிரசாந்தி நிலையத்தில் பாபா ஆற்றிய
உரை.
ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோர் Sathya
Sai Speaks – Vol 35, உரை எண் 23ஐப் பார்க்கவும்.