Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
11 அதிசய வரலாற்று நிகழ்ச்சிகள்
பாண பட்டன் என்ற சம்ஸ்கிருதப் புலவன் மாமன்னன் ஹர்ஷவர்தனன் பற்றி ஒரு புஸ்தகம் எழுதினான். அதன் பெயர் ஹர்ஷ சரிதம். அதில் மன்னருக்கு ஆறுதல் கூறும் முகத்தான் பல வினோத மரணங்களையும் இந்தியாவில் நடந்த அரசியல் படுகொலைகளையும் பட்டியல் போட்டுக் காட்டுகிறார் புலவர்.
நம் கண்களுக்கு முன்னாலேயே இரண்டு அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடந்தன. பிரதம மந்திரி இந்திராகாந்தியை, ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற கதையாக அவருடைய மெய்க்காவலர்களே — இரண்டு சீக்கியர்கள்- சுட்டுக் கொன்றனர்.
விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயங்கரவாதி இந்திராவின் மகனை –ராஜிவ் காந்தியை — வெடிகுண்டு வைத்துச் சிதறடித்தாள்.
பெரிய புராணத்திலும் பல வன்முறைச் சம்பவங்களைப் படிக்கிறோம். முத்தநாதன் என்பவன் ‘மனத்தினுள் கருப்பு வைத்து’, விபூதிப் பைக்குள் வாளை வைத்து ,மன்னர் பெருமானை குத்திக் கொன்றான்.
வேதகாலத்தில் வேனன் என்ற மன்னன் அட்டூழியம் செய்தான். மக்களும் ரிஷிகளும் அவனை அடித்துக் கொன்றனர். அவர் பெயரோடு சுமுகன் முதலிய துஷ்ட மன்னர் பெயர்களையும் மநு நீதி நூல் பட்டியல் இடுகிறது. ஆனால் சுமேரியாவில் மட்டும்தான் அந்த சுமுகன் பெயர் இருக்கிறது! tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜேம்ஸ் பாண்ட் (007 James Bond) படங்களில் பாண்ட் – ஜக் கொல்ல வில்லன்கள் பல முறைகளைக் கையாளுவதையும் பாண்ட் அவர்களை லாவகமாகக் கொல்லுவதையும் பார்க்கிறோம் . சங்க இலக்கியத்தில் மல்லர் கள் , குறு நில மன்னர்கள் மல்யுத்தத்தில் எதிரியின் உடலைக் கை வேறு, கால் வேறாகப் பிய்த்தெறிந்த பாடல்களைப் படிக்கிறோம்
இது போல பல சம்பவங்களை பாணபட்டன் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார். இதோ அந்தப் பட்டியல் :–
1.“மன்னனே ! கவனக் குறைவால் நடந்த அழிவுகள் பற்றி உனக்கு அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றனவே. பத்மாவதியில் நாக வம்ச மன்னர் நாகசேனன் அழிந்ததை சாரிகா பறவை சொன்னதை நீ அறியாயோ.
2.ஸ்ரவஸ்த்தி நகரில் ச்ருதவர்மன் என்ற மன்னரின் ரகசியத்தை ஒரு கிளி கேட்டதால் அவன் அழிந்தான்; தெரியாதா ?
(இதை நிரூபிக்கும் ஒரு விஷயம் பிரிட்டனிலும் நடந்தது. கள்ளக்காதலி பெயரைக் கிளி கத்திக் கத்திச் சொன்னதால் கணவனை மனைவி கையும் களவுமாகப் பிடித்த செய்தி வந்தது. அதை நான் இந்த பிளாக்கில் கட்டுரையாகத் தந்துள்ளேன்.)
3.மிருத்திகவாதியில் ஒரு அதிகாரி தூ க்கத்தில் உளறியதால் ஸ்வர்ண சூடன் இறந்தானே ; மறந்துவிட்டாயா? tamilandvedas.com, swamiindology.blogspot.com
4.ஒரு யவன ராஜா எப்படி அழிந்தார்? அவர் படித்த கடிதம் கிரீடத்திலுள்ள ரத்தினத்தில் பிரதி பலிக்க, சாமரம் வீசியவள் அவனை அழிக்கவில்லையா ?
(இதை நாம் ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் காண்கிறோம். கண்ணாடியில் பிரதிபலிக்கும் உருவத்தைப் பார்த்து பாண்ட் அல்லது வில்லன் மின்னல் வேகத்தில் செயல்படுவதை பார்க்கிறோம்.)
5.நள்ளிரவில் பேராசை பிடித்த மதுரா மன்னன் பிருஹத் ரதன் புதையல் எடுக்க குழி பறித்தான். அப்போது விதுரதனின் படைகள் அவன் தலையைச் சீவின .
6.வத்சபதி என்ற மன்னன் யானைக் காட்டில் (Elephant Forest) உல்லாசப் பயணம் போனான் . அப்போது எதிரி மன்னன் மஹாசேனன் எப்படி அவனைக் கைப்பற்றினான்? யானை போன்ற ஒரு பொம்மையின் வயிற்றிலிருந்து குதித்த வீரர்கள் அவனைக் கைது செய்தார்களே !
(இது மிகவும் புகழ் பெற்ற உத்தி. ஹோமரின் காவியத்தில் வரும் ட்ரோஜன் ஹார்ஸ் TROJAN HORSE பற்றி இலக்கியம் படித்த அனைவரும் அறிவர். ஒரு பொம்மைக் குதிரையின் அடியிலிருந்து சிப்பாய்கள் குதித்த வரலாறு அது. சம்ஸ்கிருத நாடகங்களிலும் இந்த உத்தி கையாளப்படுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வீரர்கள் செடி கொடிகளை மேலே போட்டுக்கொண்டு (camouflage) காட்டு மரங்கள் போல நின்று தாக்குவதை படிக்கிறோம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
7.அக்கினிமித்ரனின் மகனான சுமித்ரனுக்கு நாடகம் என்றால் உயிர். அவன் அடிக்கடி நாடகத்துக்கு வருவதை அறிந்த எதிரிகள் நாடக நடிகர் வேட ததில் வந்து அவன் தலையை சோளக்கருது வெட்டுவது போல வெட்டவில்லையா?
8.அஸ்மாக நாட்டு மன்னன் ஒரு இசைப்பிரியன்.எதிரிகள் இசைவாணர்கள் போல வந்து வீணை வாசிப்பது போல வாசிக்கையில் வீணைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரபனைக் குத்திக் கொன்றார்களே.
9.மௌர்ய மன்னன் பிருஹத்ரதனை புஷ்ய மித்ரன் எப்படிக் கொன்றான்? ராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது அவனைத் தாக்கிக் கொன்றனனே
10.காக வர்ணன் என்ற மன்னன் மாய மந்திர , இந்திர ஜாலத்தில் நம்பிக்கை உடையவன். அவனுக்கு வேடிக்கை காட்டுவதாகச் சொல்லி, ஒரு யவனர் அவனை விமான பொம்மையில் வைத்துப் பறந்து சென்றானே. பின்னர் அவன் முடிவே தெரியவில்லையே!
11.பட்டப்பகலில் நகரத்தின் நடுத்தெருவில் சிசுநாகன் மகனை வெட்டிக் கொல்ல வில்லையா ?
இப்படிப் பட்டியல் போட்டு மன்னரை அறிவுறுத்துவது போல ஒரு காட்சி . tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதில் யவனர் பற்றிச் சொல்லப்படும் விஷயங்கள் உண்மையில் நடந்தவை என்பதை வேறு குறிப்புகளில் இருந்தும் அறிய முடிகிறது. ஆதி சங்கரர் கூட தன்னுடைய பாஷ்யங்களில் இரண்டு யவனர் சம்பவங்களை எடுத்துக் காட்டுகிறார்.
சிசுபாலனை கிருஷ்ண பரமாத்மா பட்டப் பகலில் அஸெம்பிளியில் எல்லோர் முன்னிலையிலும் வெட்டிக் கொன்றார். இது போல கம்சன் , சாணுரன் ஆகியோரும் அழிந்தனர்.
நமது காலத்திலேயே விமானங்களும் கப்பல்களும் பயணிகளுடன் மாயமாய் மறைகின்றன. வெளி உலகவாசிகள் கடத்துகின்றனர், அல்லது இன்ஷ்யூரன்ஸ் பணம் பெற இப்படிச் செய்கின்றனர், அல்லது அதிலுள்ள ரகசியம் அறிந்த சிலரைத் தீர்த்துக் கட்டுவதற்காக எல்லாப் பயணிகளையும் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்புகின்றனர் என்று பல தியரிக்கள் Theories உண்டு.
xxx
வரலாற்றுப் படுகொலைகள்
அமெரிக்காவில் பல ஜனாதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இது போல 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நடந்தது; மன்னர்களை வெட்டிக்கொன்றனர் tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவபூதி ஒழுக்கமற்றவன்; திறமையற்றவன்; இதனால் அவனது அமைச்சர் வாசுதேவன் ஒரு திட்டம் போட்டார். ஒரு அடிமைப் பெண்ணை மஹாராணி போல உடை அணிவிவித்து படுக்கை அறையிலேயே மன்னரைக் கொன்றார். இதையடுத்து வாசுதேவன் தன்னை மன்னர் என்று பிரகடனம் செய்தார் . இது நட தந்தது 2100 ஆண்டுகளுக்கு முன்பு. வாசுதேவன் (72 BCE) கண்வ வம்ச ஆட்சியைத் துவக்கினார்.
மௌர்ய வாசத்தின் கடைசி மன்னனும் திறமையற்றவன். அவன் படைகளைப் பார்வையிட வந்தபோது அவனைப் படைத்த தலைவனான புஷ்ய மித்ர சுங்கன் (187 BCE ) வெட்டிக் கொன்றார். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்தது. அதிலிருந்து சுங்க வம்ச ஆட்சி துவங்கியது.
அரசியல் என்பது படுகொலைகள், மர்மங்கள் நிறைந்த துறை!
இவைகளில் சொல்லப்பட்ட யவனர் சம்பந்தமான சில சம்பவங்களை வேறு சில நூல்களும் குறிப்பிடுவதால் ஏனைய சம்பவங்களும் உண்மையாக இருக்கக்கூடும். ஆகையால் இவை பற்றி மேலும் ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நூலில் இருப்பதால் எல்லாம் மிகவும் பழைய சம்பவங்கள் என்பதும் புலப்படும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்திப் படப்பாடல்களில்பாரதப்பண்பாடு!
R. Nanjappa
ஹிந்தி படப் பாடல்கள் காலம் வென்று நம்மைக் கவர்வது ஏன்?
நீண்ட காலமாக ஹிந்திப் படப் பாடல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்து வந்துள்ளது. யோசித்துப் பார்த்தால் இதற்கான இரண்டு காரணங்கள் புலப்படுகிறது.
1) பழைய கால ஹிந்திப் பாடல்கள் அருமையான ராகங்களால் அமைக்கப்பட்டுள்ளவையாகும். இதை சீக்கிரமாக உணர்ந்து விடுவதென்பது முடியாது தான் ; ஆனால் இதனால் தான் அவை நெடுங்காலம் நிலைத்திருக்கின்றன.
2) பாடல்களின் சக்தி வாய்ந்த வரிகள். அந்தந்தப் படங்களின் நிலைக்களனுக்குத் தகுந்த படி அமைக்கப்பட்டாலும் கூட இந்தப்
பாடல் வரிகள் சிறந்த கருத்துக்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துபவை.
சில பாடல் வரிகள் இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது. இந்த வரிகள் எதை நம் முன் வைக்கிறது என்பதோடு நம்மை நம்ப வைக்கும் சினிமா காட்சிகளுக்காக இவை எழுதப்பட்டாலும் கூட வார்த்தைகளுக்கு அப்பால் அவை எதை உள்ளடக்கியுள்ளது என்பது இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.
பாடல்களைக் கேட்டவர்கள் மலரும் நினைவுகளோடு இதை ரசிப்பர்; பாடல்களைக் கேட்காதவர்களும் அதைக் கேட்க ஆர்வமுறுவர்.
பாடல்களைப் பார்ப்போமா?
இந்திய மண்ணில் ஊறித் ததும்பியது இசை!
பாரதம் தத்துவ ஞானத்தில் சிறந்து விளங்குவது.
ஞானத்தி லேபர மோனத்திலே — உயர் மானத்திலே அன்ன தானத்திலே, கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு —
இந்தப்பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
என்று முழங்கினார் மஹாகவி பாரதியார்.
இத்தகைய ஞானம் ஏதோ மேல்மட்டத்தில் மட்டும் தேங்கிவிடவில்லை எண்ணற்ற மஹான்கள் நாடுமுழுதும் கால் நடையாகவே சென்று இதை பாமர மக்களிடமும் அவர்கள் மொழியிலேயே கொண்டு சேர்த்தார்கள். கல்வி என்பது பள்ளியில், புத்தகப் படிப்பினால் வரும் விஷயம் என்ற குருட்டு நம்பிக்கை இல்லாத, மெக்காலேவுக்கு முந்தைய அந்த நாட்களில் சாதாரண , எழுத்தறிவில்லாத மக்களும் இத்தகைய உயர் கல்வியை- உண்மை ஞானத்தைப் – பெற்றவர்களாக இருந்தனர். இதை ஸ்வாமி விவேகானந்தரே வியந்து போற்றியிருக்கிறார்.
சென்ற சில பத்தாண்டுகளில் சினிமா, மக்களைக் கவரும் சாதனமாகிவிட்டது. பெரும்பாலும் காசுக்காக நடக்கும் களியாட்டம் என்றாலும், அதில் சில கலையம்சங்களும் இல்லாமல் இல்லை. ஆழ்ந்த கருத்துள்ள கதை,, சிறந்த வசனம், கவரும் காட்சிகள், சிறந்த நடிப்பு,- என பல அம்சங்கள், டைரக்டரின் திறமையைப் பொறுத்து உயர்ந்த கலைப் பாங்குடன் மிளிர்வதைக் காண்கிறோம்.
இதில் இந்திய சினிமாவில் முக்கிய பங்குவகிப்பது இசை. சங்கீதம் நம் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கலந்து ஓடுகிறது. நிலத்துக்கு நீர் இறைப்பவனாகட்டும், உழுபவனாக இருக்கட்டும், வண்டியோட்டியாக.இருக்கட்டும், சங்கீதமே பயிலாத , குழந்தையைத் தூங்கவைக்க முயற்சிக்கும் தாயாக இருக்கட்டும்- எல்லோரும் அவரவரளவில் சங்கீத ஈர்ப்பும் ஈடுபாடும் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்று சங்கீத வித்தகர் அமரர் டாக்டர் எஸ். ராமநாதன் விளக்குவார்.
சங்கீதம் சாஹித்யத்தால் வளம்பெறுகிறது. பாவத்தை (Bhaava )வெளிப்படுத்த வார்த்தைகள் அவசியம். அதே சமயம் அது கருத்தையும் தூண்டும் விதமாக இருந்தால்.மனதையும் மூளையையும் சேர்ந்தே கவரும். நினைவை விட்டு அகலாது.
பொழுதுபோக்கு அம்சமான ஹிந்தி சினிமாவில் .பல பாடல்கள் உயர்ந்த கருத்தைச் சொல்வதாக இருந்தன.- நமது பண்பாட்டின் முக்கிய அம்சமான ஞானத்தை விளக்குவதாக இருக்கின்றன. இத்தகைய சில பாடல்களை இங்கே காணலாம்.அன்று பக்தர்களும் தெருப்பாடகர்களும் ஊர் ஊராக, வீதிவீதியாக அலைந்து பரப்பிய கருத்துக்கள் இன்று வீடுவீடாக எளிதில் டிவி வாயிலாகச் சென்றடையலாம்!
கர்மமும்கர்மபலனும்
நமது ஞான நூல்களில் தலையாயது ஸ்ரீமத் பகவத் கீதை. இதன் முக்கிய உபதேசங்களீல் ஒன்று- பலனைக் கருதாமல் கடமையைச் செய்- “செய் கருமத்தேயன்றிச் சேரும் பயன்தன்னில் ஐய உனக்கில்லை அதிகாரம்”,என்பது.
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भुर्मा ते संगोऽस्त्वकर्मणि ॥ 2.47
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசன
மா கர்மஃபலஹேதுர்பூர்மா தே சங்கோஸ்த்வகர்மணி
உனக்குக் கர்மங்களைச் செய்வதில் மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றின் பலனில் உரிமையில்லை.(ஆகவே) நீ கர்மங்களின் பலன் களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. கர்மத்தில் பற்றில்லாதவனாகவும் ஆகாதே.
இதை எப்படி மிக எளிதாக ஒருவரியில் அடக்குகிறார் கவிஞர் ( கமர் ஜலாலாபாதி Qamar Jalalabadi) என்று பாருங்கள்;
मेहनत मेरा काम देना उसका काम
மேஹ்னத் மேரா காம், தேனா உஸ்கா காம்
உழைப்பதுதான் என் வேலை, பலன் கொடுப்பது ‘அவன்’ ஆண்டவன் கையில்!
[ படம்: சலியா, 1959]
காலச்சக்கரம்
மக்கள் காலத்தின் தன்மையை, மஹிமையை, அருமையை உணர்வதில்லை.
காளோஸ்மி லோக க்ஷயக்ருத் பரவ்ருத்தோ-
உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற பெருகிவரும் மஹாகாலனாக நான் இருக்கிறேன் என்று கீதையில் பகவான் மொழிகிறார்.
ஒவ்வொரு க்ஷணமும் நம் ஆயுள் க்ஷீணிக்கிறது. இதை யாரும் உணர்வதில்லை. ஞானிகள் இதைக்கண்டு வருந்துகிறார்கள். ஆதி சங்கரர் ஓரிடத்தில் ஒரு வயதான பண்டிதர் இலக்கணச் சூத்திரம் ஓன்றை உருப்போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டார்.. ‘இந்த இலக்கணச் சூத்திரம் இவர் போகும் உலகத்தில் உதவுமா’ என்ற எண்ணம் சங்கருக்கு எழுந்தது. கருணை பிறந்தது. மனமே, கோவிந்தனைப் பஜி, அதுவே போகும் உலகிற்குக் கதி – பஜ கோவிந்தம்” என்று பாடினார். அதில் மக்கள் எப்படிப் பொழுதை வீணாக்குகிறார்கள் என்று ஒரு பாடல்:
குழந்தைப் பருவம் விளையாட்டில் கழிகிறது. குமரப் பருவம் குமரியைப் பற்றிய நினைவில் போகிறது. கிழப்பருவம் கவலைகளில் கழிகிறது. கடவுளைப் பற்றி யார் நினைக்கிறார்கள்?
இந்தக் கருத்தை நமது கவிஞர் சைலேந்த்ரா எப்படி எளிமையாகச் சொல்கிறார் பாருங்கள்:
இதை நம் கவிஞர் சைலேந்த்ரா எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:
तुम्हारे महल चौबारे यहीं रह जायेंगे सारे अकड़ किस बात की प्यारे ये सर फिर भी झुकाना है सजन रे झूठ…
துமாரே மஹல் சௌபாரே யஹீ(ன்) ரஹஜாயேங்கே ப்யாரே
அகட் கிஸ் பாத் கீ ப்யாரே யே சர் ஃபிர் ஜுகானாரே
உன் பெரிய மாளிகையும் அதன் பெரிய அறைகளும் ( உன் உயிர் போகும்போது) இங்கேயேதானே தங்கிவிடும்! (அவை உன்னுடன் வாராவே) பின் அன்பனே எதற்காகக் கர்வம் கொள்கிறாய்? (மரணத்தின் முன்) உன் தலையைச் சாய்த்துத்தானே தீரவேண்டும்? பொய் சொல்லாதே.
ஓரளவாவது நமது சமய, ஆன்மீக இலக்கியங்களில் பரிச்சயம் இருந்தால் இத்தகைய பாடல் வரிகளில் இருக்கும் நுண்ணிய கருத்துக்கள் விளங்கும்.
இது காந்திஜீக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். இதுவே அவருடைய தர்மகர்த்தாக் கொள்கைக்கு ஆதாரம், அவருடைய பொருளாதாரக் கொள்கைகளின் அஸ்திவாரம். மனிதன் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழவேண்டும். ஹிந்து மதத்தின் ஆணிவேரான ஐம்பெரும் வேள்விகளின் மூலாதாரம் இது.
இவ்வளவு பெரிய.விஷயத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார் கவிஞர் ஸாஹீர் லுதியான்வி
பாருங்கள்:
बाँट कर जो खाये उसपे अपनी जान ओ दिल लुटा अरे जो बचाये माल उसको जूतियों का हार दे
பாட் கர் ஜோ காயே உஸ்பே அப்னீ ஜான் ஓ தில் லுடா
ஜோ பசாயே மால் உஸ்கோ ஜூதியோ(ன்) கா ஹார் தே
இருக்கும் செல்வத்தை எவன் பகிர்ந்து கொள்கிறானோ அவன் நம் உயிரையும் மனதையும் ஈர்க்கிறான்.
எவன் தனக்கு மட்டும் என்று சேர்த்துவைக்கிறானோ, அவனுக்கு செருப்புமாலை கொடுப்போம்!
‘லைட்’ மூடில் எழுதிய பாடல், ஆனால் எத்தனை பொருள்பொதிந்தது!
கிடைப்பதைக் கொண்டு திருப்திப்படு, கிட்டாதாயின் வெட்டென மற; இடுக்கண் வருங்கால் நகுக என்றெல்லாம் சிறு வயது முதல் கேள்விப்பட்டிருக்கிறோம். இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ஹிந்திப் பாட்டில் கேட்டால் எப்படி இருக்கும்? இதோ அந்தப் பாடல்:
मैं ज़िन्दगी का साथ निभाता चला गया हर फ़िक्र को धुएँ में उड़ाता चला गया
बरबादियों का सोग मनाना फ़जूल था बरबादियों का जश्न मनाता चला गया हर फ़िक्र को…
जो मिल गया उसी को मुकद्दर समझ लिया जो खो गया मैं उसको भुलाता चला गया हर फ़िक्र को…
ग़म और ख़ुशी में फ़र्क़ न महसूस हो जहाँ मैं दिल को उस मुक़ाम पे लाता चला गया मैं ज़िन्दगी का साथ…
மை ஃஜிந்தகி கே ஸாத் நிபாதா சலாகயா
ஹர் ஃபிக்ர் கோ துவேமே உடாதா சலாகயா
பர்பாதியோ(ன்) கா ஸோக் மனானா ஃபஜூல் தா
பர்பாதியோ கொ ஜிஷ்ன் மனாதா சலாகயா
ஹர் ஃபிக்ர் கோ…
ஜோ குச் பீ மில்கயா உஸீ கோ முகத்தர் ஸமஜ்லியா, முகத்தர் ஸமஜ்லியா
ஜோ கோகயா மை உஸ்கோ புலாதாசலாகயா
ஹர் ஃபிக்ர்.கோ…..
கம் ஔர் குஷீ மே ஃபர்க் ந மெஹ ஸூஸ் கோ ஜஹா(ன்)
மை தில் கோ உஸ் மகாம் பே லாதா சலாகயா
மை ஃஜிந்தகீ கே ஸாத்..
நான் வாழ்க்கையுடன் சரி செய்துகொண்டு ஓட்டிவிட்டேன்,
ஒவ்வொரு கவலையையும் புகைபோல் விட்டுவிட்டேன்!..
கஷ்டங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது அவற்றைக் கொண்டாடுவதாகாதா?
அது வீணே அல்லவா? அதானல் நான் கஷ்டங்களையே கொண்டாட்டமாக்கினேன்! ( இடுக்கண் வருங்கால் நகுக)
கவலையை புகையில் விட்டேன்!
எது கிடைத்ததோ, ‘இவ்வளவுதான் நமக்குக் கொடுத்துவைத்தது” என்று அதில் சமாதான மடைந்தேன்.
கிடைக்காததை வெட்டென மறந்தேன். ஒவ்வொரு கவலையையும் காற்றில் விட்டேன்.
கஷ்டம், சுகம் – இவற்றிடையே வித்தியாசம் பாராட்டவில்லை. [ சம நிலையில் இருந்தேன்]
எப்போதும் என் லக்ஷியத்திலேயே குறியாக இருந்தேன். கவலையைக் காற்றில் விட்டேன்.
வாழ்க்கையுடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு விட்டேன்.
[புகை போல் விடுவது என்பதை இக்காலத்தில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். “Let the birds fly over your head, not build their nest on your head” என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்]
Poet: Sahir Ludhianvi. Film: Hum Dono, 1961
யாருக்காகஅழுவது?
நமது பிலாசஃபியில் “தாபத்ரயம், முத்தாபம்” என்று சொல்லுவோம். ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தைவிகம் என்று மூன்று வகையில் கஷ்டங்கள் வருகின்றன. நம் இயல்பினால் வருவது, இயற்கையால் வருவது, தேவச்செயலால் வருவது என மூன்றுவகை.
ஒரு முக்கிய இன்டர்வ்யூவுக்கு டெல்லிக்குப் போகவேண்டும் அலாரம் சரியாக வைத்திருக்கிறோம் அது அடிக்கும்போது அமுக்கிவிட்டு இன்னும் ஐந்து நிமிடம் ஓட்ட நினைக்கிறோம்-அது அரைமணியாகிறது. விமானத்தைத் தவறவிடுகிறோம். இது நமது இயல்பால் விளைவது, சரி சரியாக் கிளம்பி விமானத்தைப் பிடித்து அமர்ந்துவிட்டோம், விமானமும் கிளம்பிவிட்டது; ஆனால் புகை மூட்டத்தால் டில்லியில் தரையிறங்கமுடியவில்லை-ஜெய்பூருக்குப் போகிறது- இது இயற்கையால் நிகழ்வது. சரி, இன்டர்வ்யூ செய்தும் பலனில்லை- இது தெய்வச் செயல்? எதை நினைத்து அழுவது? கவிஞர் பாடுகிறார்:
कभी ख़ुद पे, कभी हालात पे रोना आया बात निकली तो, हरेक बात पे रोना आया कभी ख़ुद पे…..
किसलिए जीते हैं हम, किसके लिए जीते हैं बार-हा ऐसे सवालात पे रोना आया कभी ख़ुद पे…
कौन रोता है किसी और की ख़ातिर ऐ दोस्त सबको अपनी ही किसी बात पे रोना आया कभी ख़ुद पे…
கபீ குத் பே கபீ ஹாலாத் பே ரோனா ஆயா
பாத் நிக்லீ தோ ஹர் ஏக் பாத் பே ரோனா ஆயா
கிஸ்லியே ஜீதே ஹை ஹம், , கிஸ் கே லியே ஜீதே ஹை
பார்-ஹா ஐஸே சவாலாத் பே ரோனா ஆயா
கௌன் ரோதா ஹை கிஸீ ஔர் கீ காதிர் ஹை தோஸ்த்
சப்கோ அப்னீ ஹி கிஸீ பாத் பே ரோனா ஆயா…
கபீ குத் பே…
சில சமயம் நம்மை நினைத்தே அழுகை வருகிறது,
சில சமயம் நம் சூழ்நிலையை நினைத்து அழத்தோன்றுகிறது!
நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு விஷயத்திற்கும் அழத்தோன்றுகிறது!
நாம் எதற்காக வாழ்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்?
இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தால், அழுகைதான் வருகிறது!
அன்பனே! இந்த உலகில் மற்றவர் கஷ்டத்திற்காக கண்ணீர் விடுபவர்கள் யார் இருக்கிறார்கள்?
ஒவ்வொருவரும் ஏதோ அவரவருடைய விஷயத்தையே நினைத்து அழுகிறார்கள்.
எவ்வளவு யதார்த்தமான வரிகள்! இதையும் ஸாஹிர் லுதியான்வி தான் எழுதினார்.அதே படம்-ஹம் தோனோ
நாம்-பிறர்!
இங்கு நமது ஹிந்து மதத் தத்துவம் ஒன்று புதைந்து கிடக்கிறது. நாம் ஏன் பிறருக்கு நன்மை செய்யவேண்டும்? ஏன் பிறருக்காக கஷ்டப்படவேண்டும்? இங்குதான் நமது அத்வைதக் கொள்கை வருகிறது. இந்த உலகில் நாம்-பிறர் என்று உண்மையில் இருக்கிறதா? இருப்பதெல்லாம் ஒரே பிரஹ்மத்தின் வெளிப்பாடுதானே? பின் இந்த நான்-பிறர் என்ற எண்ணம் ஏன் எழுகிறது? இதுதான் அகந்தையின் சொரூபம். இதை நாம் வெற்றீகொள்ளாவிட்டால் நமக்கு சத்தியம் விளங்காது-ஞானம் உதிக்காது. அதற்காகத்தான் நாம் தன்னல மற்ற செயல்களில் சிறிதளவாவது ஈடுபடவேண்டும். ஆத்மா ஒன்றேயானதால் பிறர்க்கென நாம் செய்யும் நன்மை, நமக்கே செய்துகொண்டதாகும். ஸ்வாமி விவேகானந்தர் இதை அடித்துச் சொல்வார். புத்தரும் இதையே சொன்னார்-நாம் பிறருக்குச் செய்வது நமக்கே திரும்பிவரும். நாம்-பிறர் என்று நினைத்துச் செய்வது கடை நிலை charity. நாம் செய்வதெல்லாம் அந்த ஆத்மாவுக்கே அர்ப்பணிப்பு என்ற நினைவில் செய்வது spiritual life.. இதுவே ஹிந்து சமயத்தில் சேவை பற்றிய உயர்ந்த சித்தாந்தம். இதை எளிதாகப் பாடுகிறார் சைலேந்த்ரா.
अपना बेगाना कौन जाना अनजाना कौन अपने दिल से पूछो दिल का पहचाना कौन पल में लुट जाता है यूँ ही बह जाता है
शादी किसी की हो अपना दिल गाता है
அப்னா பேகானா கௌன் ஜானா அஞ்சான கௌன்
அப்னே தில் சே பூசோ தில் கா பஹ்சானா கௌன்
பல் மே லுட் ஜாதா ஹை, யூ ஹி பெஹ்ஜாதா ஹை
ஷாதி கிஸீ கி ஹோ தில் அப்னா காதா ஹை
நம்மவர் யார்? அன்னியர் யார்?
தெரிந்தவர் யார்? தெரியாதவர் யார்?
உன்மனதையே தொட்டுச் சொல்- மனதை அறிந்தவர் யார்?
(என்னைப் பொறுத்தவரை) ஒரு க்ஷணத்தில் என் மனம் இளகிவிடுகிறது.
பிறருடைய மகிழ்ச்சியைக்கண்டு உன் மனம் ஆனந்தம் அடையட்டும்-
பிறருடைய கஷ்டத்தை முடிந்தால் நீ இரவல் வாங்கிக்கொள்-
பிறருக்காக உன் மனதில் அன்பு பொங்கட்டும்-
இப்படி இருப்பதுதான் உண்மையான வாழ்க்கை.
Shailendra. Song: Kisi ki muskurahatOn pe Ho nissar Film: Anadi, 1959
இந்த நிலையை, “His pity gate ere charity began, He forgot their viக்es in their woe” என்றெல்லாம் பாடினார் ஆங்கிலக் கவிஞர் Oliver Goldsmith.
சுகம்–துக்கம்ஏன்?
அது சரி, இந்த உலகில் ஏன். இப்படி சிலருக்கு கஷ்டம் வருகிறது, சிலர் சுகமாக இருக்கின்றனர்? ஏன் ஒருவருக்கே சில சமயம் இந்த “சுக துக்க ஊஞ்சல்?” இது நமக்குப் புரியாத புதிர், தத்துவவாதிகள் இந்த உலகை “மிஸ்ர லோகம்” என்பார்கள்- அதாவது சுக-துக்கக் கலவைதான். இது நம் முன்வினையினாலேயே வருவது- தீதும் நன்றும் பிறர் தர வாரா- என்பது புறநானூறு.. செய்த தீவினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்” என்பார் ஔவையார். உலகம் இரண்டும் கலந்துதான் இருக்கிறது. இதை கவிஞர் ராஜேந்த்ர கிஷன் பாடுகிறார்:
Kabhi Kali Ratiya, Kabhi Din SuhaneKismat Ki Baatein To Kismat Hi JaaneO Beta Jee, Are O Babu JiKismat Ki Hawa Kabhi Naram, Kabhi GaramKabhi Naram Naram, Kabhi Garam-GaramKabhi Naram Garam Naram Garam ReO Beta Ji .
Duniya ke is chidiya ghar me Tarah tarah kaa jalavaa Mile kisi ko sukhi roti Kisi ko puri halavaa Are bhai kisi ko puri halavaa O betaa ji khichadi kaa mazaa Kabhi naram kabhi garam Dard diya to thoda thoda Khushi bhi thodi thodi Waah re maalik vaah re maalik Duhkh aur sukh ki Khub banaayi jodi Are vaah khub banaayi jodi O betaa ji jeevan ka kaa nashaa Kabhi naram kabhi garam.
சில சமயம் பொழுது வீணே கழிகிறது, சில சமயம் உல்லாசமாகப் போகிறது
சில சமயம் குளிர்ச்சி, சில சமயம் சூடு–.
இந்த விதியின் ரகசியம் அந்த விதிக்குதான் விளங்கும்!
உலகமாகிய இந்த பறவை வீட்டில் வித வித முகங்கள்!
சிலருக்கு உலர்ந்த ரொட்டிதான் கிடைக்கிறது-
சிலருக்கோ பூரியுடன் ஹல்வாவும் கிடைக்கிறது!
கிச்சிடி குளிர்ந்தும் இருக்கிறது, சூடாகவும் இருக்கிறது.
ஏன் இப்படி? விதியின் ரகசியம் அந்த விதிக்கே வெளிச்சம்!
கஷ்டம் வந்தால், அதோடு சிறிது குஷியும் வருகிறது!
அப்பனே ஆண்டவா! உன் லீலைதான் என்னே!
சுகத்தையும் துக்கத்தையும் நன்கு ஜோடி சேர்த்துவிட்டாய்!
ஆம், வாழ்க்கை குளிர்ந்தும் இருக்கிறது, சுடவும் செய்கிறது/
இரண்டும் மயக்குகிறது!
இதன் விவரம் அந்த விதிக்கே விளங்கும்!
இப்படி நூற்றுக் கணக்கான பாடல்கள்/வரிகள் இருக்கின்றன. இவை சினிமா சம்பந்தமான காட்சிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் இவற்றை தனியே கேட்டும் படித்தும் ரசிக்கலாம். உண்மையில் படத்தைப் பார்ப்பதைவிட பாட்டைத் தனியாகக் கேட்டால் தான் [stand alone] நன்கு ரசிக்க முடியும். திரையில் காட்சி ஓடும்போது நம் கவனம் அதில் தான் போகிறது- பாட்டு incidental. marginal ஆகிறது. பாட்டை பாட்டாகக் கேட்டால்தான் அதன் ஆழம் புரிகிறது.
இப்பாடல்களில் ஒரு சுவாரசியம் – இவை தத்துவப் பாடல்கள் ன்ற முத்திரையிட்டு வரவில்லை. உலகே மாயம் என்று அழுதுகொண்டும் பாடப்படவில்லை. யதார்த்தமான நிகழ்ச்சிகளின் நடுவேயே இத்தகைய கருத்துச் சுடர்கள் ஒளிர்கின்றன. இது சமீப காலம் வரை இந்தியர்களுக்கு இயற்கையாக அமைந்திருந்த தத்துவக் கண்ணோட்டத்தை எளிதில் விளக்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரி – கட்டுரை எண் 7656 – வெளியான தேதி 6-3-2020; சங்கரர் அருளிய நூல்கள் – 4 தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் வெளியான தேதி 17-3-2020 கட்டுரை எண் 7704
ஆதி சங்கரர் இயற்றியுள்ள ப்ரகரண கிரந்தங்களில் ஒன்று ப்ரச்நோத்தர ரத்நமாலிகா. மனிதன் மனதில் மிக மிக நுட்பமான விஷயங்கள் பற்றித் தோன்றும் கேள்விகளும் (ப்ரஸ்நம்) அதற்கான சரியான பதில்களையும் (உத்தரம்) கொண்டுள்ள நூல் இது.
இது பற்றி காஞ்சி பெரியவாள் (சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள்) அருளியுள்ள உரையில் ஒரு சிறிய பகுதி இது:
“ப்ரச்நோத்தர ரத்னமாலையில் 67 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அறுபத்தைந்து ஸ்லோகங்கள் தாம் நம் ஆசார்யர்கள் செய்ததாக நான் நினைக்கிறேன்.ஓம் என்று 66ஆம் ஸ்லோகத்தில் சொல்லி இருப்பதுடன் அவர்கள் முடித்து விட்டார்கள். முதல் ஸ்லோகமும் கடைசி ஸ்லோகமும் பக்தர்களால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். நம் ஆசார்யர்கள் இயற்றிய கிரங்களிலெல்லாம் இது இலகுவானது. இது ஸம்ஸ்கிருதம் படிக்கும் குழந்தைகளுக்கும் உபயோகப்படக்கூடியது.”
இவ்வாறு மயிலை உரை ஒன்றில் ஆசார்யாள் உபதேசித்தருளினார்.
இந்த நூலை இணையதளத்தில் டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.
அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் நூல் என்பதால் எளிதில் வாங்கிப் படித்து பயனடையலாம்.
சில கேள்விகளும் பதில்களும் இதோ:-
பகவான், கிம் உபாதேயம்?
பகவானே, எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?
குரு வசனம்
குரு வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
க: பத்யதர:?
எது பலனளிக்கக் கூடியது
தர்ம:
தர்மம்
கிம் விஷம்?
எது விஷம்?
அவதீரணா குருஷு
குருவின் ஆக்ஞையை மீறுவது.
கிம் துக்கம்?
எது துக்கம்?
அசந்தோஷ:
சந்தோஷமின்மை.
கிம் அஹர்நிஷம் அனுசிந்த்யம்?
எது எப்போதும் இரவு பகலாக நினைக்கபடவேண்டியது?
பகவச்சரணம் ந சம்ஸார:
இறைவனின் திருப்பாதம், உலகியல் வாழ்க்கை (சம்சாரம்) அல்ல!
கிம் சம்பாத்யம் மனுஜை: ?
எது மக்களால் சம்பாதிக்கப்பட வேண்டியது?
வித்யா, சித்தம், பலம், யஷ: புண்யம்.
வித்யா, செல்வம், பலம், புகழ், புண்யம்.
இப்படி சிக்கலான கேள்விகள் பலவற்றிற்கு டாண் டாண் என்று ஆணி அடித்தாற் போல அருளுரைகள் பதில்களாகப் பரிணமிக்கின்றன.
ஸ்லோகம் எளிமையான சம்ஸ்கிருத பதங்களால் அமைக்கப்பட்டிருப்பதால் சம்ஸ்கிருத ஞானமும் கூடும்.
சில ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாக இங்கே காணலாம்:
கஸ்ய க்ரியா ஹி ஸபலா? ய: புநராசாரவாந் சிஷ்ட: |
க: சிஷ்டோ? யோ வேதப்ரமாணவாந், கோ ஹத:? க்ரியாப்ரஷ்ட: ||
ஸாது ஜனங்களுடைய உள்ளத்தில் தாபத்தை உண்டாக்கும் செய்கை
யாருடைய சொல் பலிக்கும்?
ஸத்திய விரதம், மௌன விரதம், க்ஷமை ஆகியவற்றை உடையவர் சொல்.
பலமபி பகவத்பக்தே கிம்? தல்லோகஸ்வரூப ஸாக்ஷாத்வம் |
மோக்ஷஸ்ச கோ? ஹ்யவித்யாஸ்தமய:, கள் ஸர்வ வேதபூ:? அதசோம் !!
(ஸ்லோக எண் 66)
ப்கவத் பக்திக்குப் பலன் எது?
அவனுடைய லோக ஸாக்ஷாத்காரம்.
மோக்ஷம் எது?
அவித்யை அழிதல்
ஸகல வேதங்களுக்கும் உற்பத்தி(யும் லயமும்) எது?
ஓம்!
இறுதி ஸ்லோகமான 67வது ஸ்லோகம் இந்த ப்ரஸ்நோத்தர மாலையை எவன் ஒருவன் கழுத்தில் அணிகிறானோ அவன் முக்தர்க்ளுக்குள் சிறந்தவன் போல நல்லோர் நிறைந்த சபையில் பிரகாசிப்பான் என்று உறுதி கூறுகிறது!
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வினா-விடை நூல் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா!
tags- ஆதி சங்கரர், நூல்கள் – 5, ப்ரச்நோத்தர ரத்நமாலிகா
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Panini’s Ashtadhyayi mentions many rivers and two of them have strange names and Panini mentioned them to show they are not controlled by the rules he has just said. Later Kalidasa, the most famous poet of India, used them to compare the gait of Rama and Lakshmana.
In the sutra III-1-115 Panini says,
Bhidyoddhyau nade
River Bhidya means that which breaks the banks (of the river).
River Uddhya means that which overflows.
Uddhya is Ujh flowing through Jasrota district and falling into Ravi.
Bhidya may be identified with a river named Bai, rising in Jammu about 15 miles to the west of Ujh, and flowing into Ravi in Gurdaspur district.
The names Uddhya and Bhidya suggest that they dried up in summer but flowed in torrents in the rains. Kalidasa who lived in the first or second century BCE, approximately 500 years after Panini, compared the rivers with the brisk walk of teenagers Rama and Lakshmana.#
In Raghuvamsa XI.-8 he described the brisk movement of their arms and slow walk behind the great sage Viswamitra.
vIci lola bhujayoH tayoH gatam shaishavAt capalam api ashobhata tooyada Agame iva uddhya bhidyayoH nAmadheya sadR^isham viceShTitam
11-8. vIci lola bhujayoH= by ripples, swinging, with such arms – arms swinging like ripples; tayoH = their; capalam api gatam = restless, though, their gait; tooyada Agame= water, on coming – in rainy season; uddhya bhidyayoH= udhya, bidhya – names of rivers; nAmadheya sadR^isham viceShTitam iva= in keeping with their names, comparable, as with; shaishavAt ashobhata = by their childhood, shone forth.
The gait of those boys whose arms were restless like the ripples of a river, though sportive on account of childishness looked charming like two called Uddhya and Bhidya, which in keeping with their names will be rushing at the advent of the rains. [11-8]
Childlike, unsteady paced they, fair to see,/With lissom arms like crested waves that dance,/As streams, when rain-clouds gather, work and whirl,/As suits their name.
These two rivers, are defined as: ujghati udakam iti udhyaH; bhinatti kuulam iti bhidhyaH; one that spurts water it is Udhya River; while the other that collapses banks with its rush is Bhidya River. These indicate the upshot mood of the boys for an adventure.
Xxx
White Shiva and Black Snaake
Later he used the black Yamuna and White Ganga to the bhasma (ash) dharana, white coloured Shiva and the black snake around his neck.
Two thousand years ago everyone was very familiar with these rivers. Ganga and Yamuna are in Sangam Tamil literature too. But Bhidya and Uddhya are not known.
Now we can imagine how Rama and Lakshmana walked in the forest behind sage Visvamitra.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Six years ago. I wrote a research article about Brahmanabad in Pakistan (please see the link below for my old article). Now I have got more information about not only Brahmana country but also Shudra country. It is important that we do more research on it because it is close to Indus-Sarasvati Civilization sites.
Brahmanabad | Tamil and Vedas
tamilandvedas.com › tag › brahmanabad
23 Mar 2014 – Posts about Brahmanabad written by Tamil and Vedas. … Brahmanabad, now a ruined city in Pakistan, was once a flourishing city. It was the …
An important geographical term used by Panini is Janapada , which has both a state and cultural unit ,its culture counting more than its geography. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Brahmanaka
It is mentioned in Panini’s sutra V-2-71 .
Patanjali definitely calls it a Janapada , ‘brahmanako nama janaadah’, II-298.
The significance of its name is brought out by Kasika , which describes it as the land of Brahmins who were ‘aayudhajiivins’ or followers of military art.
‘YATRAAAYUDHAJIIVINO BRAAHMANAAHAA SANTI’.
Their military traditions continued up to the time of
Alexander whose invasion they resisted with patriotic heroism (Plutarch , Alex.59).
The Greeks call them ‘Brachmanoi’ and locate them in the middle of Sind, (Arrian.VI.16) of which the capital is still Brahmanabad (Cunningham, ancient geography, p.310.) tamilandvedas.com, swamiindology.blogspot.com
It may be noted that even Rajasekhara, 9th century CE, names ‘Brahmanavaha’ ( abode of Brahmanas) as one of the Janapadas of the west. Muslim geographers called Brahmanabad as ‘bahmanwaa’ after this old tradition.
It may be noted that Patanjali mentions two formations e-braahmanaka and a-vrishalaka as names of countries ( I-301) corresponding to Saudrayana and Brahmanaka respectively
Saudrayana or the Shudra country is mentioned along with other names in the Gana Aishukaari IV-2-54 which denoted names of countries after their peoples, (vishayo dese)
Like the brahmanas, the sudraayanas ( Greek Sodrae) also are mentioned as having opposed Alexander. Cunningham treats the present Soda Rajputs of south east Sind around Umarkot as their descendants.
Diodorous couples the Sodrae with Massane as occupying the opposite banks of the Indus . Cunningham equates the Massane with the Mausarnaioi of Ptolemy, which name corresponds to the Masuurakarna of the Gana Patha II-4-49, IV-1-112. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Source book –
India as known to Panini , V S Agrawala , University of Lucknow , 1953
XXX
ACCORDING TO MANU
“The country that the gods made between the two divine rivers the Sarasvati and the Drsadvati, is what they call the Brahmavarta , the land of Vedas.
Manu 2-17
The conduct of the four classes and intermediary classes in that country, handed down from one person to another person , is conduct of the good people.
Manu 2-18 tamilandvedas.com, swamiindology.blogspot.com
According to English tradition the South London pronunciation passed from one person to another is the correct pronunciation known as RP (received pronunciation). Manu also says whether you are a Shudra or Brahmana, as long as you are from Brahmavarta, what you do is right)
The field of the Kurus , the Matsyas , Pancalas and Surasenas constitute the country of Brahma rsi desa , the country of Priestley Sages , right next to the Brahmavarta” .
Manu 2-19
XXX
My comments
2700 years after Panini, still the town is called Brahmanabad (brahmnana+ janapada) in Pakistan maps. No one could erase the name of Brahmins!
But one must not jump to any conclusion because it was one among 30 other Janapadas mentioned by Panini. He starts from Kamboja, Gandhara (Kandhar in Afghanistan) and ends with Kalinga (Orissa) in between covering the mighty Magadha, Kosala, Kuru, Salva etc.. tamilandvedas.com, swamiindology.blogspot.com
What happened to the Brahmin warriors who opposed Alexander? Are they all converted to Islam or they migrated to India?
Panini lived 2700 years ago. He never mentioned Buddha or Mahavira; but one must remember he wrote only grammatical rules running to just 35 pages, not history book.
Are there anyone now in India claiming that they were the descendants of Brahmanabad?
And why the two communities Brahmanas and Shudras established Janapadas in caste names? Does it mean all the other 28 or so Janapadas are from Kshatryia community?
Since Greeks have written about all these Janapadas and Mahabharata and Ramayana mentioned many Janapadas , we have to do more research.
Janapada mentioned a group of people following certain customs. When they moved to different parts of India or when they expanded their territory, the name covered more areas. So one must not use Puranas, because they were written later.
One source claims Brahmanabad was actually in Indus/Saraswati River basin civilization. Even today we find Saaraswat Brahmins in Western India. They migrated from Sarasvati River basin (Indus Valley Civilization) after a big drought in Sarasvati river basin. Now we know Sarasvati River started drying up before Mahabharata period. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Kapisa , which is mentioned as a flourishing town by Panini, was destroyed by Cyrus I in the sixth century BCE, according to Pliny. This indicates that Panini lived before the Persian invasion.
Prakanva is one of the Janapadas mentioned by Panini . Herodotus mentioned it as Parikanoi, part of Darius’ empire. Panini mentioned that it was founded by Rishi Praskanva . it was located north of Kamboja. Panini never mentioned any foreigner like Cyrus or Darius. So he lived closer to Vedic period, may be even eighth century BCE, according to Goldstucker and others.
ஹாகிங் என்ற வார்த்தை கணினி உலகில் இன்று சர்வ சாதாரணமாகப் புழங்கப்படும் ஒரு வார்த்தை.
ஒருவர் செய்த புரோகிராமிங்கில் – மென்பொருளில் – உள்ளே புகுந்து தனது இஷ்டத்திற்குத் தக்கபடி மாற்றி குழப்படி செய்வது தான் ஹாகிங்.
அடுத்தவர் புரோகிராமைத் திருடுவதும் ஹாகிங் தான்!
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அமெரிக்காவில் எம்.ஐ.டியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கணினி அறைக்குள் சென்று மென்பொருளை மாற்றுவதை ஒரு பொழுது போக்காக ஆரம்பித்தனர். இது முதலில் ஜோக் ஆகவும் குறும்புத்தனமாகவும் தான் இருந்தது. ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் லட்சக் கணக்கில் கணினி உலகெங்கும் பயன்படுத்தப்பட ஆரம்பித்த போது ஹாகிங் வேறு ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து கடைசியில் இன்று குற்றம் என்ற அளவில் வளர்ந்து விட்டது.
இந்த ஹாகிங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பெரும் நிறுவனங்கள் சைபர்செக்யூரிடி துறை (கணினி மென்பொருள் பாதுகாப்புத் துறை) அமைக்கும் அளவு இது வளர்ந்து விட்டது.
2020 ஜனவரியில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் பெரிய தனியார் நிறுவனம் 242 சாடலைட்டுகளை உற்பத்தி செய்து தனது உடமையாகக் கொண்டிருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் 42000 சாடலைட்டுகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டிருப்பதாக அது அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகெங்கும் பட்டி தொட்டி கிராமங்கள், காடுகள் உட்பட எங்கும் இண்டர்நெட் சேவை கிடைக்கும். இதற்குப் போட்டியாக அமேஸான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன் வெப் ஆகிய நிறுவனங்களும் தங்கள் பங்கிறகு ஆயிரக் கணக்கில் விண்ணில் சாடலைட்டுகளை ஏவப் போவதாகச் சொல்லி விட்டன.
இது உலகின் வாழ்க்கைப் போக்கையே நம்ப முடியாத அளவு மாற்றி விடப் போகிறது.
ஆனால் இப்போது ஒரு புதிய அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியம் வலுத்து விட்டது.
ஆயிரக் கணக்கில் சாடலைட்டுகள் விண்ணில் பறக்கும் போது ஹாக் செய்யும் ஹாக்கர்களுக்கு படு குஷி தான்! சைபர் அட்டாக் (Cyber Attack) எனப்படும் மென்பொருள் தாக்குதலை அவர்கள் மேற்கொள்வர். அதாவது விண்ணில் போகும் சாடலைட்டுகளின் புரோகிராமை மாற்றித் தங்கள் ‘வழிக்கு’ அதை வரச் செய்வர்.
பிடிக்காத நிறுவனங்களின் சாடலைட்டுகளைச் செயல் இழக்கச் செய்வர். சாடலைட்டுகள் அனுப்பும் சிக்னல்களை ஜாம் செய்து தடை செய்வர்.
போட்டி உலகில் எதுவும் சாத்தியம் தான்!
க்யூப்சாட்ஸ் (CubeSats) என்ற நிறுவனம் வெளியில் சந்தையில் தயாராக இருக்கும் பாகங்களை உபயோகித்து சாடலைட்டைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான காரணம் மலிவான விலையில் இவற்றைத் தயாரித்தால் நிறைய விற்க முடியும் என்பது தான்.
இதனுடைய பாகங்களை மிக எளிதாக ஹாக் செய்பவர்கள் பிரித்துப் பார்த்து அதில் எப்படியெல்லாம் “கோளாறுகளை’ உருவாக்கலாம் என்று பார்த்து விடுவர். அதில் தங்கள் புரோகிராமை சொருகி விடுவர்.
விளைவு கேட்கவே வேண்டாம்!
சாடலைட்டுகள் அனைத்துமே தரை நிலையங்கள் அனுப்பும் ஆணைகளுக்கு இணங்கவே செயல்படுகின்றன. ஆகவே தரை நிலைய கணினிகளை ஹாக் செய்வோர் அணுகி அதில் பல தவறான, ‘கமாண்ட்’ எனப்படும் ஆணைகளைச் சேர்த்து விட்டால் ஏராளமான குழப்பம் விண்ணிலும் மண்ணிலும் ஏற்படும்.
1998ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. அமெரிக்க- ஜெர்மானிய எக்ஸ்-ரே சாடலைட்டான ரோஸாட்டை (ROSAT) ஹாக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேரிலாந்தில் இருந்த தரைநிலையக் கணினியை அவர்கள் ஹாக் செய்து சாடலைட்டைப் ‘பிடித்தனர்’. பின்னர் அதில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல் எனப்படும் சூரியத் தகடுகளை சூரியனை நோக்கி நேராகத் திருப்பி விட்டனர். என்ன நடந்திருக்கும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். அதன் பேட்டரிகள் வறுத்தெடுக்கப்பட்டு, சாடலைட் தனது செயல்பாட்டை இழந்தது. அங்கும் இங்கும் சுற்றி, 2011இல் அது பூமியில் வந்து விழுந்து மோதியது.
2008ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த சில ஹாக்கர்கள் அமெரிக்க நாஸா ஏவிய இரண்டு சாடலைட்டுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். முதல் சாடலைட்டை இரண்டு நிமிடமும் அடுத்த சாடலைட்டை ஒன்பது நிமிடமும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து காண்பித்தனர். இப்படிச் செய்யாமல் இருக்கவோ அல்லது “பிடித்து வைத்த சாடலைட்டைத் திருப்பித் தரவோ” ஏராளமான பிணைய தொகையை அவர்கள் கேட்க முடியும் என்பது தான் புதிய அபாயம்.
2018இல் இன்னொரு சீன ஹாக்கிங் குழு சாடலைட்டுகளை ஹாக் செய்ய ஒரு தனித் திட்டத்தையே தயாரித்தது.
ஈரானோ இதே போல ஒரு குழுவை உருவாக்கியது. திவிரவாதிகள் இதற்குள் புகுந்தால் உலகம் என்ன பாடுபடும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.
ஆகவே அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இப்படி ஹாக் செய்ய முடியாதபடி தங்கள் சாடலைட்டுகளைத் தயாரிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
சைபர் செக்யூரிடி என்னும் துறை ஒரு பிரம்மாண்டமான அளவில் உருவெடுத்து விட்டது.
சொன்னால் நம்ப முடியாது, இந்திய நகரங்களில் சைபர் செக்யூரிடி அமைப்பு ஆயிரக்கணக்கான கணினி தொழில்நுட்ப அறிஞர்களைக் கொண்டு, ஒரு குற்றம் நடந்த சில நிமிடங்களில் குற்றவாளியைப் பிடிக்கும் திறன் கொண்டதாக இயங்குகிறது.
ஒரு சாடலைட்டைத் தயார் செய்யும் தயாரிப்பு செலவை விட இந்த பாதுகாப்புக்காக் ஆகும் செலவு கூடுகிறதே என்பது தான் பெரிய நிறுவனங்களின் இப்போதைய கவலை!
ஆகவே உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து விண்ணில் ஏவப்படும் சாடலைட்டுகளுக்கான விதிமுறைகளை வகுப்பதோடு அவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முனைந்துள்ளன.
இந்தச் செய்தியிலிருந்து நாம் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமும் உண்டு! அனாவசியமாக நமது மொபைல் போன் நம்பரையோ அல்லது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்டையோ யாருக்கும் கொடுக்கக் கூடாது. இப்படிப்பட்ட விவரங்களை போன் மூலமாக, பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அதன் சார்பாக யாராவது கேட்பதாகச் சொன்னால் நேரில் வாருங்கள் என்றோ நானே நேரில் வருகிறேன் என்றோ சொல்லி நம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது தான். ஹாக்கர் ஜாக்கிரதை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
உலகில் முதன் முதலாக அமெரிக்காவில் உள்ள பென்ஸில்வேனியாவில் எட்வின் எல். ட்ரேக் (Edwin L.Drake) என்பவர் 1859ஆம் ஆண்டு எண்ணெயைத் தோண்டி எடுத்து பெட்ரோலியத் துறையை ஆரம்பித்து வைத்தார். உலகெங்கும் பெட்ரோல் உபயோகத்திற்கு வந்தது. இந்தியாவில் 1889ஆம் ஆண்டு அஸ்ஸாமில் முதன் முதலாக டிக்பாய் என்னும் இடத்தில் முதல் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது.
ஆயிலை பேரல் (Barrel) என்று அழைக்கப்படும் மரப் பீப்பாயில் வைத்து அனுப்புவது வழக்கமானது. ஒரு பேரல் என்றால் அதில் 42 கேலன் பெட் ரோல் இருக்கும் என்பது வழக்கமானது. இதுவே நடைமுறைப் பழக்கமாக ஆகவே அனைவரும் எனக்கு 12 பேரல் வேண்டும் , 20 பேரல் வேண்டும் என்று ஆர்டர் தர ஆரம்பித்தனர். அதாவது 12 பேரல் என்றால் 504 கேலன்; 20 பேரல் என்றால் 840 கேலன் என்று அர்த்தம்.
பேரலை bbl என்று குறிப்பது வழக்கம். முதலில் பேரல்கள் நீல நிறக் கலரில் மட்டுமே இருந்தன. ஆகவே Blue Barrel என்பது சுருக்கப்பட்டு bbl ஆனது. பின்னால் பெட்ரோலியத் துறை பெரிதும் வளர்ந்த நிலையில் பேரல்களே இல்லாமல் போய்விட்டது.
என்றாலும் கூட இன்றும் ஆர்டர் செய்வதும் சப்ளை செய்வதும் பேரல் கணக்கில் தான்.
ஒரு பேரல் 42 அமெரிக்க காலனுக்குச் சமம் அல்லது 35 இம்பீரியல் கேலனுக்குச் சமம் அதாவது 159 லிட்டர்கள்!
உலகெங்கும் 8.2 கோடி பேரல்கள் செலவழிக்கப்படுகிறது என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை!
ட்ரேக் ஆரம்பித்த எண்ணெய்க் கிணறு உலக பொருளாதாரத்தையே மாற்றி விட்டது!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
INTERESTING HISTORICAL INFORMATION FROM HARSHA CHARITA OF BANABHATTA
In James Bond films we see different plots, conspiracies and schemes to murder Bond or his enemies.
In real life, we read about how political leaders are assassinated in our own life time.. Prime Minister Mrs Indira Gandhi was shot dead by her own body guards.
Her son Rajiv Gandhi was killed by a Tamil terrorist woman from the LTTE near Chennai.
Peria puranam lists certain murders. One Muthanathan, dressed like a saint stabbed and killed the king
Kalidasa’s drama also hinted at the incident of assassination of Devabhuti, the last of the Sunga rulers. He was a weak and dissolute ruler. He was assassinated in his bed in the dark by a slave girl dressed as his queen. Kalidasa took him as a model for Agnivarna, the last of the rulers with whom Raghu’s dynasty came to an ignoble end. Agni varna also was a weak self indulgent and dissolute monarch. Devabhuti was assassinated in 73 BCE . Then his minister Vasudeva proclaimed himself as the emperor establishing the Kanva Dynasty.
Mauryan dynasty came to an end in 187 BCE. The last of the Mauryan emperor was assassinated in public by Pushyamitra Sunga, Commander in Chief, at a review of the Imperial armies. Pushya mitra established Sunga dynasty.
Another king was killed while watching a drama.
Bhanabhatta wrote the history of famous king Harsha 1400 years ago. He mentioned several incidents. Since we have secondary evidence about Yavana incidents others may also be true. We have to do more research on these incidents. Some are dramatized and few others are made fantasy stories. But that is what people believed in those days.
Xxx
Skanda Gupta consoles HARSHA by relating historical instances of untimely death:–
Harsha Charita ucchvasa 6
Of disasters due to mistaken carelessness frequent reports come to your majesty’s hearing.
1.In Padmavati there was the fall of Nagasena, heir to the Naga house, whose policy was published by a Sarikaa bird.
2.In Sravasti, faded the glory of Srutavarman, whose secret a parrot heard.
(Parrot repeated the paramour’s name and husband was caught red handed is in Daily Mail , London, too)
3.In Mrittikavati, a disclosure of counsel in sleep was the death of Suvarnacuda.
4.The fate of a Yavana king was encompassed by the holder of his golden chowrie, who read the letters of a document reflected in his crest jewel.
5.By slashes of drawn swords Viduurathaa’s army minced the avaricious Mathura king Brhadratha while he was digging treasure at dead of night.
6.Vatsapati who was wont to take his pleasure in elephant forests was imprisoned by Mahasena’s soldiers issuing from the belly of a sham elephant.
(Greek Tojan horse story is very well known. This theme is in a few Sanskrit dramas. Hiding people in a big elephant or horses or camouflaged like trees are known)
7.Sumitra, son of Agnimitra, being fond of the dramas, was attacked by Mitradeva in the midst of actors, and with a scimitar shorn, like a lotus stalk, off his head.
(This happened before Kalidasa’s time)
MUSIC MURDER
8.Sarabha,the Asmaka king, being attached to string music, his enemies emissary, disguised as students of music, cut off his head with sharp knives hidden in the space between the Vinaa and its gourd.
9.A baseborn general Pushpamitra pounded his foolish Maurya master Brhadratha, having displayed his whole army on the pretext of manifesting his power.
(This happened in India. See below)
10.Kaakavarna, curious of marvels, was carried away; no one knows wither on an artificial aerial car made by a Yavana condemned to death.
(This is in Adi Shankara’s commentary as well)
11.The son of Sisunaga had a dagger thrust into his throat in the vicinity of his city.
(Lord Krishna cut off the head of Sisupala in the assembly)
Comments
The second Yavana incident apparently refers to the story of Kokkasa.
Adi Shankara also commented on the two Yavana incidents. One of them mentioned the name of Kaka varna .
And in Panchatantra also we see how famous people died.
27 Apr 2012 – Strange Facts about V.I.P Deaths … The Hindu Book of Fables “Panchatantra” has a similar verse on the death of great names of ancient India:.
tags –historical assassinations, anecdotes, Bana Bhatta, Harsha Charita
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி என்ற ரிஷி உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதினார். அதன் பெயர் அஷ்டாத்யாயி; அதாவது எட்டு/அ ஷ்ட அத்தியாயங்கள். நாம் எப்படி த்ருண தூமாக்கினி என்ற ரிஷி எழுதியதை தொல்காப்பியம் என்று அழைக்கிறோமோ அப்படி பாணினி பெயரால் அந்த நூலை பாணினீயம் என்றும் அழைப்பர்.
(காப்பிய (காவ்ய) கோத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு தொல்காப்பியன் என்ற பெயரும் உண்டு.) tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாணினி திருவள்ளூவருக்கும் மேலாக ஒரு படி சென்று ரத்தினச் சுருக்கமாக இலக்கணத்தை எழுதிவிட்டுப் போய்விட்டார் . புத்தகமாகப் போட்டால் 35 பக்கம்தான் வரும். ஆனால் உலகம், இவர் எழுதியது பற்றி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறது. அவர் சொல்லுமொரு சுவையான விஷயம் ‘உத்ய- பித்ய’ ஆறுகள் பற்றிய விஷயமாகும் .
அதாவது தான் கூறிய இலக்கண விதிக்குப் புறம்பாக இப்படியும் உத்ய , பித்ய நதிகள் பெயர்கள் உளது என்று இயம்புகிறார்.
பித்ய – கரையை உடைக்கும் ஆறு;
உத்ய – கரை புரண்டு ஓடும் ஆறு
உத்ய , பித்ய நதிகள் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லைப்பகுதி நதிகள் என்றும் அவை ரவி என்னும் நதியின் உபநதிகள் என்றும் ஆராய்ச்சியாளர் விளம்புவர். இவை மழைக்காலத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பதால் இந்தப் பெயர்கள் ஏற்பட்டதாக சிலர் பகர்வர்.
உலகப் புகழ் பெற்ற காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் பித்ய – உத்ய நதிகளை ராம லெட்சுமணர்களின் நடைக்கு ஒப்பிடுகிறார்.
இன்னும் ஒரு இடத்ததில் யமுனை- கங்கை நதிகளை சிவ பிரானின் வெண்மை நிற உடலுக்கும் அவர் கழுத்தில் நெளியும் பாம்புக்கும் ஒப்பிட்டிருக்கிறார். கங்கை நதி வெள்ளையாக இருக்கும்.அதில் கலக்கும் யமுனை நதி கருப்பாக இருக்கும் . இன்றும் இக்காட்சியைக் காணலாம்.
ராமனும் லெட்சுமணனும் teenage boys ‘ டீன் ஏஜ் பாய்ஸ்’ ; அவ்விருவரும் கைகளை வீசிக்கொண்டு விசுவாமித்திர முனிவனைப் பின்தொடர்ந்து நடந்தனர். அவர்கள் காட்டுப் பாதையில் போனதைக் காளிதாசன் வருணிக்கிறார் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
“மேகம் வரும் மழைக் காலத்தில் எப்படி உத்யம், பித்யம் என்ற நதிகள் பெயருக்கு ஏற்றபடி செயல்படுகின்றனவோ அதுபோல அலை வீசும் கைகளையும் மெதுவாக நடைபோடும் கால்களையும் அவ்விரு பாலகர்களும் கொண்டிருந்தனர்”– -ரகு வம்சம் 11-8
உத்யம் என்றால் தண்ணீரைப் பெருக்குவது என்று பொருள்; பித்யம் என்றால் கரைகளை உடைக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலான நதிகள் மழைக்காலத்தில் இதைத்தான் செய்கின்றன. ஆயினும் ஜம்மு பகுதியில் உள்ள இந்த இரு நதிகள் பெயரிலேயே அவைகளைக் கொண்டுவிட்டன. சின்னப் பையன்களான ராம லெட்சுமண கை வீச்சும், கால் வீச்சும் அப்படி இருந்தனவாம்.
கங்கை யமுனை நதிகள் உவமை
திரு நீறு அணிந்த- சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்ட– சிவனின் உடல் வெள்ளை நிறத்தில் காட்சி தரும்.
அதில் கலக்கும் கரு நிற யமுனை நதி, சிவன் கழுத்திலுள்ள பாம்பு போலக் காட்சி தரும் என்கிறார் காளிதாசன் –ரகு வம்சம் 13-54/57
நாம் கற்கும் பாடங்கள்
காளிதாசன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; ஏனெனில் அவர் பயன்படுத்திய சுமார் 200 உவமைகள் சங்கத் தமிழ் பாடல்களில் உள்ளன. அது மட்டுமல்ல. அவர் குப்தர் காலத்துக்கு 500, 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று இந்திய வெளிநாட்டு அறிஞர்களும் காரண காரியங்களுடன் விளக்கியுள்ளனர். அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் பாணினி. ஒரு உவமையை ஒருவர் கையாள வேண்டுமானால் அது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்க வேண்டும். கங்கை யமுனை நதிகளைத் தெரியாதோர் எவருமிலர். சங்கத் தமிழ் பாடல்களிலேயே இரு நதிகளும் புனித நதிகளாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் உத்ய , பித்ய நதிகள் பற்றிப் பாணினியும் காளிதாசனும் பகராவிடில் நமக்குத் தெரியாது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இவை எல்லோருக்கும் தெரிந்த நதிகள் என்பது உவமையிலிருந்து கிடைக்கும் செய்தியாகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com