Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை – செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது
இதோ சில சுவையான செய்திகள் –
தஞ்சாவூரிலிருந்து ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.
ராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.
அவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும் மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில் 12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம். அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.
மதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில் ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றிய ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.
ராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல். இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை பொழிந்தார்
சாதுர்யமேதி கவிதாஸு சதுர்விதாஸு
வீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா
ப்ரக்ஞாமியம் நிபுணமஞ்சதி பாணிணீ யே
மேதாம் வ்யனக்தி பஹுதா விவிதா வதானே
என்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.
மதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..
பெண்மணிக்கு தங்க அபிஷேகம்
ரங்க ஜம்மா என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள். உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.
பெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.
முத்துப் பழனி
நாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ் நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி
சம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம் ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி– மூதுரை / வாக்குண்டாம்
ஒரு ஊரில் ஒரு கற்றுக்குட்டி பாடகர் இருந்தார். அவர் அறிந்ததோ குறைவு. அறியாததோ மலை அளவு. இருந்தபோதிலும் ‘குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தளும்பாது’ என்பதற்கு ஏற்ப ஆட்ட பாட்டம் அதிகமாக இருந்தது. நாட்டின் தலை நகருக்குச் சென்று ராஜாவுக்கு முன்னர் பாடி சன்மானம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு தலை நகருக்குப் போனார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
தினமும் சங்கீத சாஹித்யம் செய்வதற்காக அரண்மனையிலிருந்து தொலை தூரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். தினமும் பாடிப்பாடி பார்த்தார். ஆனால் இவர் ஒவ்வொரு முறை பாடும் போதும் அடுத்தவீட்டில் இருந்து அழும் குரல் ஒலித்தது. இவர் உச்ச ஸ்தாயியில் பாடினால் அழுகுரலும் உச்ச ஸ்தாயிக்குப் போனது . ஒருவாரம் இப்படியே ஓடியது.
பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா? அடுத்த வீட்டில் வசிக்கும் வண்ணான் மனைவிதான் இப்படி பிலாக்கணம் வைக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை அழைத்துவருமாறு வீட்டுச் சொந்தக்காரனிடம் சொன்னார்.
அவளும் வந்தாள் . ஏ ! மூ ளை கெட்ட மூதேவி ! நான் பாடத் துவங்கியவுடன் ஏன் இப்படி அழுது தொலைக்கிறாய்?
உனக்கு என்ன ஆயிற்று? என்று சத்தம் போட்டார்; திட்டித் தீர்த்தார் .
அவள் சொன்னாள் , tamilandvedas.com, swamiindology.blogspot.com
“சாமி! மன்னிச்சுக்கங்க ! ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வளர்த்த அழகான கழுத்தை செத்துப் போச்சுங்க ! நீங்க பாட ஆரம்பிச்ச உடனே அதன் ஞாபகம் வந்துடுங்க; அதான் ஓ வென்று கதறி அழுதேன் என்றாள் .
பாடகருக்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கித் தின்றது . அவளை மரியாதையுடன் வெளியே அனுப்பி விட்டு ஊரைப் பார்த்து ஓடி வந்தார்.
xxx
ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திருஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.
“ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ) ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்
“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை, பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.
“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”
“அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே” – என்றார்.
கான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!
When i went to Greece, i visited the historical island Santorini. I took this picture in Santorini.
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7592
Date uploaded in London – 19 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதன் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச் சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50. tamilandvedas.com, swamiindology.blogspot.com
தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6
யா தம்பதி சமனஸா சுனுதா அ ச
தாவள: தேவஸோ நியயாசிர்
Xxx
இல்லாள், இல்லத்தரசி
Picture card bought in Athens Museum
தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதத்தில் உள்ளது. கல்யாண மந்திரங்களில் ‘நீயே வீட்டுக்கு ராணி’ என்று வருகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் மனைவியை ‘குடும்ப விளக்கு’ என்று அற்புதமாக வருணிக்கிறரர்கள் .
ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீடு என்கிறது.
கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி என்றால் வீட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் tamilandvedas.com, swamiindology.blogspot.com
விளக்கும்.
Xxx
மணப் பெண்
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வேண்டும் . ‘வது’ என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச் சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
Xxx
தொழிற்சாலைகளில் பெண்கள்
துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பா ன விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யு ம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை ‘இஷு கர்த்ரயாக’ என்ற சொல் காட்டுகிறது.
வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கமடி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார் எழுதியதை சில தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி tamilandvedas.com, swamiindology.blogspot.com வருத்தப்படுவார்.
xxx
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
Picture card from Athens Museum
வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் (Blind Poet Homer) இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார்.
அதில் அக்காலப் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை வீரர்கள் அ னைவரும் பகிர்ந்து கொள்ளலாம். “வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம்” என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள், வேற்று நாட்டு செல்வங்களைப் பகிர்ந்து கொள் வார்கள். ஆனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com அறிவோம்.
வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மகள் கல்யாணத்தையும் ஆங்கிலேயர் ‘கஸின் மேரியேஜ்’ (Cousin Marriage) என்றே சொல்லுவர்; அதாவது ‘ஒன்றுவிட்ட சகோதரர்’ என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.
கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஏறிதைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் tamilandvedas.com, swamiindology.blogspot.com இருந்தது.
பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா(Zend Avesta) கணவனுக்கு கீழ் படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத காலப் பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிபடப் tamilandvedas.com, swamiindology.blogspot.com பேசுகிறார்கள்
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர் புதுவகை உணவு, . பலவகை பாஷன் ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதோ சுருக்கமான கதை –
பாரசீகம் என்ற நாட்டின் தற்கால பெயர் ஈரான் (Persia= Iran). உலகில் எவருக்கேனும் துன்பம் நேரிட்டால் அவர்கள் மன நிம்மதி பெறுவதற்கு அடைக்கலம் புகும் நாடு இந்தியா. பாரஸீகத்தில் மிர்ஜா கயாத் பேக் என்பவர் புகழ்மிகு குடும்பத்தில் பிறந்த செல்வந்தர். பாரசீகத்தில் முஸ்லிம்களின் கொடுமைகள் அதிகரிக்கவே குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இவை எல்லாம் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. சம்ஸ்கிருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் பெரிய வணிகர் கூட்டம், ஒரு சார்த்தவாகன் தலைமையில் ஊர் ஊராக , நாடு நாடாகச் செல்லும். சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் தந்தை மாசாத்துவானைப் பார்க்கலாம். நளனின் மனைவியான தமயந்தி கூட ஒரு வணிகக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு காட்டுப்பாதையைக் கடந்து வந்ததை படிக்கிறோம். இதே போல மிர்ஜா பேக் தனது மகள் நூர் ஜஹான், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் பிரபல வணிகர் தலைவனான, மா சாத்துவன் ஆன, மாலிக் மசூத் வணிகர் குழுவுடன் பாதுகாப்பாக புறப்பட்டார். அந்தக் குழு இந்தியா வந்து சேர்ந்தது tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
அப்போது இந்தியாவை மொகலாய மன்னர் அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். நூர் ஜஹானையும் மிர்ஜா பேக்கையும் அழைத்து வந்த மாலிக்கிற்கு அரண்மனையில் உள்ள பலரைத் தெரியும் . ஆகையால் நூர்ஜஹானின் தந்தையான மிர்ஜா பேக்கையும் சகோதரர்களையும் ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று அக்பர் முன்னிலையில் பிரசன்னமானார். உடனே அக்பரும் அவர்களுக்கு அரண்மனையில் சேவகம் செய்ய சில பணிகளைக் கொடுத்தார்.
அப்போதிலிருந்து நூர் ஜஹானின் வாழ்க்கை பட்டம் போல உயர, உயர,மேலே சென்று, பட்டொளி வீசி பறக்கத் துவங்கியது. அவள் அடிக்கடி அம்மாவுடன் அரண்மனைத் தோட்டத்தில் உலவ வருவாள் . அழ கா ளும் அறிவாலும் அனைவரையும் கவர்ந்தாள் . அக்பரின் மகன் இளவரசன் சலீம் அவளைக் கண்டவுடன் காதல் கொண்டான் . சலீமின் பிற்காலப் பெயர் ஜஹாங்கிர். ஆயினும் விதி வசம் வேறு மாதிரி இருந்தது 17 வயதான போது,நூர் ஜஹான் , பர்த்வான் கவர்னரான ஷேர் ஆப்கான் கானுக்கு மனைவியானாள்.
அக்பர் இறந்த பின்னர், இளவரசர் சலீம், ஜஹாங்கிர் என்ற பெயரில் 1605ல் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தின் மன்னர் ஆனார். தன் தம்பியை அனுப்பி ராஜத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி நூர்ஜஹானின் கணவரைக் கைது செய்ய அனுப்பினார். நூர்ஜஹானின் கணவரான ஷேர் ஆப்கான் கான் அவசரப்பட்டு கத்தியை சுழற்றவே, ஜகாங்கீரின் ஆட்கள், அவர் மீது பயந்து, அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு நூர்ஜஹானைப் பிடித்துவந்து ஜஹாங்கிர் முன்னிலையில் விட்டனர். இதற்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர், நூர்ஜஹானுக்கு 34 வயதானபோது, ஜஹாங்கிரின் மனைவி ஆனாள்.
நூர் ஜஹானுக்கு ஜஹாங்கீர், முதலில் ‘நூர் மஹால்’ – அரண்மனையின் ஒளி விளக்கு – பட்டம் அளித்தார். பின்னர் ‘நூர் ஜஹான்’– உலகத்தின் ஒளி விளக்கு— என்ற பட்டங்களை அளித்தார். ஜஹாங்கீருக்கு குடிபோதை பழக்கம் இருந்ததால் சுகபோக வாழ்க்கையில் மூழ்கி முழுப் பொறுப்பையும் நூர் ஜஹானிடம் விட்டார். அவள் 11 ஆண்டுகளுக்கு அக்கால உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யத்தைத் திறம்பட ஆண்டார். சகல கலா வல்லி ஆனார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
ஒருகாலத்தில் ஜஹாங்கீர் வெளியிட்ட நாணயத்தில் பின்கண்ட வாசகம் காணப்படுகிறது-
ஜஹாங்கிரின் கட்டளையின் பேரில்
தங்கத்துக்கு நூறு மடங்கு மதிப்பு
அதிகரித்துவிட்டது . சக்ரவர்த்தியின் மனைவி
நூர்ஜஹானின் பெயர் அதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது மனைவியின் பெயரால் தங்கத்துக்கு 100 மடங்கு மதிப்பு அதிகமாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை நூர்ஜஹான் கண்டுபிடித்தார். புதுவகை உணவு வகைகள், பாஷன் உடைகளைக் கண்டுபிடித்தார். துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
நூர்ஜஹான் 4 புலிகளைச் சுட்டுக்கொண்றதைக் கேள்விப்பட்டவுடன் அவளுக்கு ஜஹாங்கிர் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் வைர மோதிரம் பரிசளித்தார். இன்றைய விலையில் பத்து கோடி இருக்கலாம். ஆயிரம் ஏழைகளுக்குத் தங்கக் காசுகளையும் விநியோகித்தார். நூர்ஜஹானுக்கும் தர்ம கைங்கர்யங்களில் பிரியம் உண்டு
காலம் செல்லச் செல்ல நுரஜஹானுக்கு கஷ்டகாலம் துவங்கியது ஜஹாங்கிரின் மூத்த மகன் பெயர் இளவரசன் (Prince Khurram) குர்ரம் . இவனுடைய பிற்காலப் பெயர் சக்ரவர்த்தி ஷாஜஹான். இவனுக்குப் பேரழகி மும்தாஜ்மஹாலைக் கல்யாணம் செய்துவைத்த ஆசப்கான் ஷாஜஹானுக்கு முழு ஆதரவு தந்து தனது மருமகன் அரசுக்கட்டில் ஏறும் நாளைக் கனக்குப் போட்டுக்கொண்டிருந்தான். நூர்ஜஹான் வேறு கணக்குப்போட்டாள் . தனது முதல் கணவர் மூலம் பிறந்த பெண்ணை மணந்த, ஜஹாங்கிரின் இளைய மகன் ஷாரியார் சிம்மாதனம் ஏற திட்டம் தீட்டினாள் . புரட்சி tamilandvedas.com, swamiindology.blogspot.com வெடித்தது.
போரும் தொடர்ந்தது. காபூல் நகர கவர்நர் பதவி வகித்த மஹாபாத் கான் உதவியுடன் புரட்சியை ஒடுக்கினாள் நூர்ஜஹான்.
காலப் போக்கில் நடந்த கசமுசாவில் அதே மஹாபத் கான், அரசுக்கு எதிராகத் திரும்பி, ஜஹாங்கிரையும் நூர்ஜஹானையும் சிறைப்பிடித்தான் . நூர் ஜஹான் தப்பிச் சென்று பெரும்படை திரட்டி வந்தாள் . வில்லாதி வில்லியான அவள் யானை மீது ஏறி, பிரவாஹம் எடுத்து வந்த நதியில் இறங்கி அக்கரை சேர்ந்தாள் . ஆனால் அவளைத் தொடர்ந்து வந்த படைகள் பின்தங்கின. மஹா பாத் கான் அவளை மீண்டும் சிறைப்பிடித்தான். பின்னர் அவள் பெண்களுக்கே உரித்தான சாதுர்யங்களைப் பயன்படுத்தி தன்னையும் கணவர ஜஹாங்கிரையும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
விடுவித்துக் கொண்டார்.
குடிப்பழக்கத்தால் உடலைப் பலவீனமாக்கிக் கொண்ட ஜஹாங்கிர் காஸ்மீரிலிருந்து லாகூருக்குச் செல்லும் வழியில் 1627ல் மரணம் அடைந்தார். குர்ரம் என்ற ஷா ஜஹான் பதவி ஏற்றார். ஆயினும் நூர்ஜஹானை அன்போடு நடத்தினார் . அவளுக்கோ வாழ்க்கை வெறுத்துவிட்டது. தனிமையில் வாடினார் .பழங்காலத்தில் நடந்த புகழ்மிகு நிகழ்வுகள் மனதில் நிழல் ஆட வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது .,கணவன் இறந்த 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 1646ல் , அவளுடைய 72ஆவது வயதில் உயிர்நீத்தாள் . லாகூரில் தனது கணவருக்காக மிக அழகான பூந்தோட்ட சமாதியை அமைத்திருந்தார் . அதற்குச் சற்று தொலைவில் இவளது உடலும் அடக்கம் செய்யப்பட்டது..
அதில் எழுதப்பட்டுள்ள சோகமயமான வாசகம் செப்புவது யாதெனில் tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதில் சிறகு எரித்து விழுவதற்காக விட்டில் பூச்சிகள் கூட வாராது..
முடி சார்ந்த மன்னரும் பின்னர்ப் பிடி சாம்பராய்ப் போவார்கள் என்றாலும், இந்திய வரலாற்றில் அழியாத சுவடுகளை பதித்து விட்டாள் ‘பாரசீக ரோஜா’ –ராணி.நூர் ஜஹான்
Tags — நூர் ஜஹான், முஸ்லீம் ராணி, மொகலாய, ஜஹாங்கிர் , ஷா ஜஹான்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
வேதகாலம் என்பது புத்தருக்கு முந்தைய சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகும் . இக்காலத்தில் பெண்களுக்கும் பூணுல் அணிவித்தனர். அதாவது முதல் மூன்று வருண மக்களுக்கு வேதம் கற்கும் உரிமை இருந்தது. பெண்களில் சிலர் திருமணம் செய்து இல்லறத்தில் நுழைந்தனர் . இன்னும் சிலர் ஆன்மீக நாட்டம் கொண்டு இறுதி வரை வேதக் கல்வி கற்று, வாதப் பிரதிவாதங்களில் பங்கு கொண்டனர்.
அக்காலத்தில் புகழ் பெற்ற யாக்ஞவால்கிய மகரிஷியை கேள்வி கேட்க யாரும் முன்வராதபோது , எல்லோரும் பயந்தபோது, கார்கி வாசக்னவி என்ற பெண் மட்டுமே கேள்வி கேட்டாள் . இது நடந்தது அகில இந்திய தத்துவ பேரறிஞர் மகாநாட்டில். 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பீஹார் மாநிலத்தில் இப்படி ஒரு அனைத்திந்திய மாநாடு நடந்த செய்தியையும். அதில் பெண்களும் பங்கு கொண்ட செய்தியையும், அதில் வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் பசுமாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்ட தங்கக் காசுகள் பரிசாகக் கிடைத்த செய்தியையும் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத் நமக்குத் தெரிவிக்கிறது.
Xxx
மேலும் சில வியப்பான செய்திகள் வேதகால இலக்கியத்தில் கிடைக்கிறது. யாக குண்டங்கள் அமைக்கும்போது முதல் செங்கலை வைத்து துவக்க விழா நடத்தும் உரிமை பெண்க ளுக்கே இருந்தது.
சீதா , ருத்ர என்னும் அறுவடை , நிலம் தொடர்பான யாக யக்ஞங்களை பெண்கள் மட்டுமே செய்தனர்.
‘சமான’ என்னும் விழாக்களில் பெண்களே அவர்களுடைய கணவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கமும் இருந்தது. பிறகாலத்தில் வந்த எண்வகைத் திருமண முறையிலும் காதல் திருமணம் அனுமதிக்கப்பட்டதை மநு நீதி நூலும், தொல்காப்பியமும் செப்புகின்றன
1.கல்யாணம் ஆகும் வரை படித்துக்கொண்டிருந்த பெண்களை ‘சத்யோத்வாஹா’ என்று அழைத்தனர் ;
2.கல்யாணமே செய்துகொள்ளாமல் சாகும் வரை ‘சாகாக் கல்வி‘ கற்ற பெண்களை ‘பிரம்மவாதினி’ என்று அழைத்தனர்.
இங்கே இரண்டு சுவையான செய்திகளை சொல்லவேண்டும்.
1. படித்த பெண்களுக்கு நல்ல கணவர்கள் கிடைத்த செய்தி ; அதர்வண வேதத்தில் ஒரு மந்திரம் வருகிறது 11-5-18,
‘வேதம் கற்கும் மாணவிகளுக்கு இளம் வயது ஆண்கள் கண வர்களாக வருவர்’ – என்கிறது அந்த மந்திரம். அதாவது பெண்கள் கற்றால், வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடையலாம் என்பது இங்கே தொனிக்கிறது. இரண்டாவது சுவையான செய்தி வணங்குதற்குரிய பெரியோரின் பெயர் வரிசையில் பெண்களின் பெயர்களும் இருக்கின்றன.
பிரம்ம யக்ஞத்தின்போது அஞ்சலி செலுத்தப்பட வேண்டியவர்களின் பெயர்களில் கார்கி வாசக்னவி, வடவா ப்ரா திதெயி, சுலபா மைத்ரேயி ஆகியோரின் பெயர்களும் உள்ளன. இதை ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்ரத்தில் காண்கிறோம் 3-4-4
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் , ஆசிரியர்களாகவும், தத்துவ வித்தகர்களாகவும் பட்டிமன்ற ராணிகளாகவும் வேத காலப் பெண்கள் திகழ்ந்தனர். ரோமானிய, கிரேக்க சாம்ராஜ்யப் பெண்களைவிட மிக உன்னத நிலையில் இருந்தனர் என்பதைத் தயக்கமின்றி முரசு கொட்டலாம்..
ரிக்வேதத்திலேயே லோபாமுத்ரா, அபாலா , விஷ்வாவாரா , சிகதா, நிவாவரி , கோஷா ஆகியோர் யாத்த கவிதைகள் பெண்களின் அறிவுக்கு ‘ஆயிரம் வாட் பல்பு’ வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
தம்பதி என்ற சொல் வேதத்தில் வருகிறது. இதம் சம்ஸ்கிருதப் பொருள்- கணவனும் மனைவியும் குடும்பத்தின், வீட்டின் கூட்டுச் சொந்தக்காரர்கள் என்பதாகும். இதை விளக்கும் வகையில் சிவனும் உமையும் அர்த்தநாரீஸ் வரர் வடிவத்தில் காட்டப்பட்டுள்ளது . அதாவது உறவினில் ல் 50-50; உரிமையில் 50-50.
தம்பதி – ரிக் வேதம் 8-31-5/6
யா தம்பதி சமனஸா சுனுதா அ ச
தாவள: தேவஸோ நியயாசிர்
Xxx
தமிழில் இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சொல்கிறோம். இதுவும் ரிக்வேதத்தில் தமிழில் வருவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளது.கல்யாண மந்திரங்களில் நீயே வீட்டுக்கு ராணி என்று வருகிறது.
சங்க இலக்கியப்பாடல்களில் மனைவியை குடும்ப விளக்கு என்று அற்புதமாக வருணிக்கிறர்ர்கள் .
ரிக் வேதம் (3-53-4) மனைவியே வீ டு என்கிறது.
கிருஹம் என்றால் வீடு/ இல்லம். கிருஹிணி என்றால் வீ ட்டுக்காரி , இல்லாள் , இல்லத்தரசி ; அதாவது இல்லத்தை ஆள்பவள். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இந்தக்கருத்து அப்படியே இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே அணுகுமுறை, ஒரே பண்பாடு என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.
Xxx
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்ட வே ண்டும் . வைத்து என்ற சொல் சம்ஸ்கிருதத்தில் மணப் பெண் என்ற பொருளிலும் வரும். சங்கத் தமிழ் பாடல்களிலும் இந்த ரிக் வேதச் சொல் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
Xxx
தொழிற்சாலைகளில் பெண்கள்
துணி நெய்தல், நூல் நூற்றல் ஆகிய தொழில்களில் வேதகாலப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் வியப்பனா விஷயம் அவர்கள் போர்க் கருவி செய்யம் ஆலைகளிலும் வேலை பார்த்ததை இஷு கர்த்ரயாக என்ற சொல் காட்டுகிறது.
வேத காலத்தில் ‘பர்தா’ முறை கிடையாது. இதை பாரதியார் பாடலிலும் வலியுறுத்துகிறார். இது தில்லித் துருக்கர் (துலுக்கர்) செய்தவழக்கம்டி என்று சாடுகிறார். துலுக்கர் என்று பாரதியார் எழுதியதை சில தமிழ் அறி ஞர்கள் ஒன்றுகூடி துருக்கர் என்று மாற்றியதாக எங்கள் தமிழ் குருநாதர் , மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ஜி.சீனிவாசன் சொல்லி வருத்தப்படுவார்.
xxx
கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்.
வேதம் தோன்றிய சுமார் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க மொழியில் ஹோமர் என்னும் அந்தகக் கவிராயர் இலியட், ஆடிஸி என்ற இரு பெரும் காவியங்களை எழுதினார். அதில் அக்களப் பெண்கள் எப்பாடு நடத்தப்பட்டனர் என்று வருகிறது. ஒரு மன்னர் வேற்று நாட்டை வென்றால் அந்த நாட்டிலுள்ள பெண்களை னைவரையும் வீரர்கள் பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள் வீரர்களே, அணி திரண்டு வாருங்கள். நாம் வெற்றி பெற்று வேற்று நாட்டுப் பெண்களை பகிர்ந்து கொள்வோம் என்று ஹோமர் அறைகூவல் விடுக்கிறார். இந்து மன்னர்கள் வேற்று நாட்டு செல்வங்களை பகிர்ந்து வருவார்கள். அனால் பெண்களை மதிப்புடன் நடத்துவர். வீர சிவாஜி முஸ்லீம் மகளிரை எவ்வளவு மதிப்புடன் நடத்தினார் என்பதை நாம் அறிவோம்.
வேதத்தில் சில பாடல்களை சகோதர -சகோதரி திருமணம் நடந்ததாக சிலர் சித்தரிப்பர். எகிப்தில் இவ்வழக்கம் இருந்தது. தமிழ் நாட்டில் இப்போது காணப்படும் அத்தை மகன், மாமன் மக்கள் கல்யாணத்தையும் ஆங்கிலேயர் கஸின் மேரியேஜ் என்றே சொல்லுவர் அதாவது ஒன்றுவிட்ட சகோதர என்னும் பொருள். இது வேதகாலத்தில் இருந்திருக்கலாம். கிருஷ்ணர் விஷயத்திலும் இதைக் காண்கிறோம். அதாவது உறவு முறைத் திருமணம்- முறைப் பெண் கல்யாணம்.
கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறுவது பிற்கால வழக்கம். புற நானுற்று பாடலில் பாண்டிய ராணி பூதப்பாண்டியன் தேவி இப்படி உடன்கட்டை ஈரி,,,,,,,,,,,,,,,,,,,,யத்தைக் காண்கிறோம். வேதகாலத்தில் இது குறைவு . அதற்குப் பதிலாக இறந்து போன கணவரின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்பான் . இந்த வழக்கம் யூதர்களிடையேயும் இருந்தது.
பார்ஸி மதத்தினரின் வேத நூலான ஜெண்ட் அவஸ்தா பெண்கள், கணவனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணன் , டாக்டர் ரமேஷ் சந்திர மஜூம்தார் போன்ற பேரறிஞர்கள் வேத கால பெண்கள் வாழ்வே சிறந்தது என்று உறுதிப்படப் பேசுகிறார்கள்
Source book – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953 (with my inputs from Tamil literature )
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பிரிட்டனில் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அவ்வப்போது மருத்துவப் பிரச்சினைகள் பற்றி பயனுள்ள கட்டுரைகள் வெளியாகும் .அத்தகைய ஒரு கட்டுரை குழந்தை பிறக்காமல் இருக்க என்ன காரணங்கள் என்பதை புல்லட் பாயிண்டுகளில் தருகிறது. குறிப்பாக ஆண்கள் பற்றிய விஷயம் இது.
குழந்தைக்காக ஏங்குவோர் எல்லா கலாசாரங்களிலும் , மதங்களிலும், நாடுகளிலும் உள்ளனர். இயற்கையான காரணங்களை வீட நாமாக உண்டாக்கிக் கொள்ளும் செயற்கையான தடைகளும் உண்டு. அவைகளை நாம் தவிர்க்கலாம். மருந்து , சிகிச்சை என்று ஏதேனும் படித்தால் மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்யாதீர்கள்.
1.வயது ஒரு காரணம். 70 வயதுக்குப் பின்னர்கூட குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரமுகர்கள் பற்றிப் பத்திரிகையில் படிக்கிறோம் . ஆனால் ஆண் விந்து உற்பத்தி 40 வயதுக்குப் பின்னர், 25 வயதுக்காரனை விட, பாதியாகக் குறைந்துவிடுகிறது.
2.மதுபானம் அருந்துவர்களுக்கும், சராசரி மனிதனைவிட ஆண் விந்து உற்பத்தி குறைவே. அதிகம் குடிப்போருக்கு குழந்தை உற்பத்தி செய்யும் சக்தி மிகவும் குறைந்துவிடும்.
3.சிகரெட் குடிப்போருக்கும் , ஆண் உயிரணுக்களின் உற்பத்தி சரி பாதிதான்.
4.போதை மருந்துக்கு அடிமையானோரின் உயிர் அணு – விந்து – மிக வேகமாக நீந்துவதால் ,பெண்ணிடம் உற்பத்தியாகும் முட்டையை அடைவதற்குள் களைப்படைந்து விடுமாம் .
5.அதிக எடையுடையோர் பிள்ளை பெற்றுக்கொள்வதில் கஷ்டப்படுவார்கள். காரணம் என்னவென்றால் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சமச் சீராக இருப்பதில்லை. உடல் பருத்தவர்கள் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் முதலில் எடையைக் குறைக்கவேண்டும்
6.புறச் சூழல் மாசுபடுவதும் குழந்தை பெரும் விகிதத்தைக் குறைத்துவிட்டது. பிரிட்டனில் மது, புகை பிடித்தல் , புறச் சூழல் கேடு ஆகியன காரணமாக முன்னர் இருந்ததைவிட விந்து உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. 1950களி ல் ஆண் விந்து உற்பத்தியை தற்கால ஆண்களுடன் ஒப்பிட்டதில் இது தெரியவந்தது.
7..இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில் மாலை 5 மணி முதல் 5-30 வரை விந்து உற்பத்தி மிகவும் அதிகமாக இருந்தது 500 ஆண்களைச் சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது .
8.அடுப்பங்கறையில் அதிக நேரம் செலவழிப்போரும் , அதிக வெப்பம் வெளியிடும் எந்திரங்களின் இடையே வேலை செய்வோரும், குழந்தை பெற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள். வெப்பத்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம் . ஜக்குஸி (Jacuzzi) ,வெப்ப ஊற்றில் குளிப்பவர்களுக்கும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு உண்டு.
9.ட்யூனா மீன் , மகேரல் மீன்(Tuna and Mackerel) வகைகளில் அதிக பாதரச விஷம் (Mercury poisoning) இருப்பதாலும் பாதிப்பு உண்டு.
10.ஈயத்துக்கும் (Lead) விந்து உற்பத்தியைப் பாதிக்கும் குணம் உண்டு .ஈய உபகணரங்களுடன் வேலை செய்வோர் கவனமாக இருக்கவேண்டும்.
11.மொபைல் போன் அதிர்வுகள், கிரணங்கள் பாதிக்குமா என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை .
12.வலி நிவாரணி (Pain Relief) மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்துவதும் பதிப்பை உண்டாக்கும்.
13.செயற்கை உரம் பயன்படுத்தாத இயற்கை உர தாவரங்கள் காய்கனிகளைச் சாப்பிடுவோருக்கு குழந்தை பெறுவது எளிது.
14.மாதுளம் பழச் சாறு சாப்பிடுவோருக்கு ஜனன உறுப்புகளில் ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு கோப்பை பழச் சாறு சாப்பிடலாம்.
15.ஆண்கள் உறுப்பை இறுக்கமாகப் பிடிக்கும் ஆடைகளை அணிய கூடாது.
16.ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆய்வில் வாரத்துக்கு மூன்று முறை படுக்கை அறைக்கு செல்வது நல்லது என்று காட்டியது. கிணற்றில் தண்ணீர் எடுக்க எடுக்க ஊறுவது போல விந்து உற்பத்தியும் நடைபெறும்.
17.பாலியல் நோய் (STD or VD) வந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் அதுவும் குழந்தை பிறப்பதைப் பாதிக்கும்.
18.வாகனங்களில் செல் வோர் மூக்கில் அசுத்தக் காற்று உள்ளே செல்லாதபடி முகமூடி அணிவதும் நலம் பயக்கும்.
19.மன உளைசல், மனக்கவலை ஆகிய னவும் குழந்தை பெறுவதற்குத் தடையாக நிற்கிறது. ஆகையால் கவலை இல்லாத, மனா நிறைவுடன் வாழ்தல் குழந்தை பெற உதவும். எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டு நிம்மதியாக வாழவேண்டும்.
20.அந்த விந்துவில் இரண்டு வகை; எக்ஸ் X விந்து என்ற வகை பெண் குழந்தைகளை உருவாக்கும். இவை வலுவானவை. நீண்ட காலம் உயிர்த்துடிப்புடன் இருக்கும். ஒய் Y வகை விந்து ஆன் குழந்தைகளை உருவாக்கும். இவை நீண்ட வால் உடையவை. வேகமாக நீந்த வல்லவை .
21.குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிலர் குழந்தை பெற முயற்சிக்கும் முன்னர் கூட (Pre-Conception Test) , சோதனை செய்து கொள்கின்றனர். பிரச்சனை உள்ள குடும்பங்களில் இப்படி முன்கூட்டி சோதனை செய்வது தாமதத்தைத் தவிர்க்க உதவும்.
22.இறுதியாக துத்தநாக (Zinc) உலோக உப்புக்கள் நிறைந்த உணவு விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுதான் காரணம் என்று தெரிந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் நாள்தோறும் பத்து மில்லி கிராம் மாத்திரை எடுக்கலாம். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் இதைச் செய்தல் அவசியம்.
Xxxx
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து
எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
27 ஆண்டுகளுக்கு முன்னர் நான் புகழ்ந்த மேதை இப்போது பல விருதுகளை வாங்கி கொடிகட்டிப் பறக்கிறார். இதோ அவர் வாங்கிய
விருதுகள் (இது விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது)
நான் தினமணி பத்திரிகையில் கட்டுரை எழுதிய தேதி—18-10–1992
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
அத்வைதம் என்றால் இரண்டு என்பதே இல்லை; ஒன்று தான் என்று உபதேச உரைகள் கூறுகின்றன. ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம
ப்ரஹ்மம் ஒன்றே; இரண்டு இல்லை!
இது எப்படி? நான் இதோ இருக்கிறேன்.
நானே இல்லை; ப்ரஹ்மம் தான் என்பது எப்படிச் சரியாகும்?
கேள்வி நல்ல கேள்வி தான்!
இதை விளக்க ஒரு அருமையான குட்டிக் கதையை ஸ்வாமி ஸர்வப்ரியானந்தா கூறுகிறார்.
ஸ்வாமிஜி நியூயார்க்கில் உள்ள வேதாந்தா சொஸைடியின் பொறுப்பு அமைச்சர் (Minister-in-charge of the Vedanta Society of New York, USA).
அவர் பிரபுத்த பாரத ஜனவரி 2019 யோகா சிறப்பிதழில் ‘அஸ்பர்ஷ யோகா’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தக் கதையைக் கூறுகிறார்.
கதைக்கு வருவோம்; கருத்தைப் புரிந்து கொள்வோம்!
***
காசி இளவரசி!
முன்னொரு காலத்தில் கலைகளைப் பெரிதும் ஆதரித்து வந்த ஒரு மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனது அரசவையில் நாடகம் ஒன்று நடத்த ஏற்பாடானது. அந்த நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் காசியின் இளவரசி பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற பெண் குழந்தை கிடைக்கவில்லை.
ராணி கூறினார்;”பரவாயில்லை! நமது இளவரசனையே அந்தக் காசி இளவரசி பாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவோம்”
இளவரசனுக்கு வயது ஐந்து. அவனுக்கு இளவரசியின் அலங்கார ஆடைகள் அணிவிக்கப்பட்டன. அவன் காசி இளவரசியாக்கப்பட்டான்.
நாடகம் அருமையாக நடந்தது.காசி இளவரசி பாத்திரத்தில் இளவரசன் அற்புதமாக நடித்து விட்டான். அனைவரும் பாராட்டினர்.
ராணி அழகிய காசி இளவரசியை அப்படியே ஒரு ஓவியமாக வரையுமாறு தன் அரசவை ஓவியருக்குக் கட்டளை இட்டார்.
ஓவியமும் பிரமாதமாக தத்ரூபமாக அப்படியே வரையப்பட்டது.
பதினைந்து வருடங்கள் உருண்டோடின. இளவரசன் வளர்ந்து அழகிய வாலிபன் ஆனான். இளவரசனுக்கே உரித்தான அனைத்துச் செயல்களையும் நன்கு அவன் செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் அவன் தன் அரண்மனையில் பழைய பொருள்கள் உள்ள அறைக்குச் சென்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது அழகிய ஓவியம் ஒன்று அவனைக் கவர்ந்தது.
அழகிய காசி இளவரசியின் ஓவியம் தான் அது!
“ஆஹா! என்ன அழகு! மணந்தால் இந்தப் பெண்ணையே தான் நான் மணந்து கொள்வேன். இவளை மணக்காவிட்டால் நான் சந்தோஷமாகவே வாழ முடியாது” என்ற எண்ணத்தில் மூழ்கிய இளவரசன் அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவன் கொஞ்சம் வெட்கப்பட்டதால் தாயாரிடமோ தந்தையிடமோ கூட இது பற்றிப் பேசவில்லை.
இளவரசன் சில நாட்களாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதை அனைவரும் கவனித்தனர்.
கடைசியில் வயதான மந்திரி அவனை அணுகி, “இளவரசரே!சில நாட்களாக ஏதோ ஒரு சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறீர்கள். என்னிடம் அதைச் சொல்லக் கூடாதா?” என்று மெல்ல வினவினார்.
இளவரசன் மெல்ல வாய் திறந்து,”நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.” என்றான்.
“நல்லது, அந்தப் பெண் யார்?” என்று கேட்டார் மந்திரி.
“ஓ! அவள் காசி இளவரசி” என்றான் இளவரசன்.
“நல்லது! ஒரு இளவரசி தான் உங்களுக்கு ஏற்றவள். அவளை எப்போது பார்த்தீர்கள்?”
“அவளை நான் பார்க்கவில்லை. ஆனால் அவளது ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன்.”
“சரி, அந்த ஓவியம் எங்கே இருக்கிறது?”
“அது ஒரு அறையில் இருக்கிறது. வாருங்கள், உங்களுக்கு அதை நான் காண்பிக்கிறேன். அந்த ஓவியம் அவள் ஐந்து வயதாக இருக்கும் போது வரையப்பட்ட ஒன்று.”
இருவரும் அந்த அறைக்குச் சென்றனர். இளவரசன் காசி இளவரசியின் ஓவியத்தை மந்திரிக்குக் காண்பித்தான்.
மந்திரிக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது.
அவர் இளவரசனிடம் கூறினார்:”இளவரசே! அது காசி இளவரசியின் படம் இல்லை.”
“அது காசி இளவரசியாக இல்லாது போனால் போகட்டும்; யாராக இருந்தாலும் சரி, அவளை தான் நான் மணப்பேன்.”
“இளவரசே! பல ஆண்டுகளுக்கு முன்பு நமது அரண்மனையில் ஒரு நாடகம் நடந்தது.அந்த இளவரசி பாத்திரத்தில் நடிக்க யாரும் இல்லை. அதற்குத் தகுதி வாய்ந்தவர் தாங்கள் தான் என்று எண்ணி உங்களுக்கு அந்த வேஷத்தை அளித்தோம். அந்தக் காசி இளவரசி உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நீங்களே தான் அது!”
இப்போது இளவரசனின் மனதில் இருந்த ஆசை என்ன ஆனது? அது உடனடியாக மறைந்து விட்டது. ஆனால் அது ஏன் உடனே மறைந்தது?
அது நிறைவேற முடியாத ஒன்று என்பதாலா?
இல்லை. காசி இளவரசி அந்த இளவரசரைத் தவிர வேறு யாரும் இல்லை!
அவரே தான் காசி இளவரசி! எப்போதுமே அந்த இளவரசனே தான் காசி இளவரசி!!
அந்த இளவரசரைத் தவிர வேறு ஒன்று உண்டு என்ற இரட்டை என்ற எண்ணம் அவரது ஆசையால் உதித்தது. அந்த இரட்டையை அவர் விரும்பினார். அதனால் அவருக்கு ஒரு சங்கல்பம் உருவானது.
அது அவரது மனதில் வளர்ந்தது. ‘எனக்கு இது வேண்டும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இதுவே இன்னொரு விதமாகவும் இருந்திருக்கக்கூடும். “இது மோசம். எனக்கு இது வேண்டாம்” என்று இருந்திருக்கக் கூடும்.
எனக்கு இது வேண்டும் என்பது ராகத்தினால் – பற்றினால் உருவானது.
எனக்கு இது வேண்டாம் என்பது த்வேஷத்தினால் உருவாவது.
அந்த ராக-த்வேஷம் தான் சம்சாரம்!
ஏன் சங்கல்பம் மறைந்தது? ஏனெனில் இரட்டை என்பது மறைந்தது.
“என்னைத் தவிர காசி இளவரசி என்ற இரட்டை இல்லை” –
இதைத் தான் அந்த இளவரசன் உணர்ந்தான்.
த்வைதம் – இரட்டை – மறைந்தது.
சங்கல்பம் மறையும் போது ராகம்-த்வேஷம், பற்று- வேண்டாமை இரண்டும் போகிறது.
ஆத்மா மட்டுமே நிற்கிறது!
ஆத்மனுக்கு எதை விட வேண்டும்? அல்லது எதைச் சாதிக்க வேண்டும்?
அது எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. அது எப்போதும் நானாகவே இருக்கிறது.
***
அற்புதமான இந்தக் கதை ‘மனமே இல்லை’ என்ற நிலைக்கான ஒரு சரியான உதாரணக் கதையாகும்.
ஸ்வாமிஜியின் கதையைச் சற்று சிந்தித்தால் உயரிய உபதேசம் ஒன்றைப் பெற்றவர்களாவோம்.
You must be logged in to post a comment.