ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா?(Post No.6439)

Written by S.NAGARAJAN



swami_48@yahoo.com


Date: 25 May 2019


British Summer Time uploaded in London – 6-41 AM

Post No. 6439

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

 மே 2019 ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா?

மூலம் : Mark Hyman    தமிழாக்கம் : ச.நாகராஜன்

ஏன் நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள் அல்லது பருமனாக இருக்கிறீர்கள், காரணம் தெரியுமா?

உங்களின் ஜீரண மண்டல உள் குழாயில் (inner tube) ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது, அதனால் தான் நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள், பருமனாக ஆகி விடுகிறீர்கள்!

 உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதைக் கூட நீங்கள் உணராமலேயே இருக்கலாம். ஆனால் உடல் பருமன் அல்லது சில ஆரோக்கியப் பிரச்சினைகள் என உங்களுக்கு ஏற்பட்டால் அது உங்கள் உள் குழாய் சரியில்லை, அதுவே அடிப்ப்டைக் காரணம் என்பதாக இருக்கலாம் அதாவது உங்கள் ஜீரண அமைப்பு சரியில்லை என்பதே காரணம். ஏதோ ஒரு ஜீரணக் கோளாறு – இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome),  வயிற்று உப்புசம், மலச்சிக்கல், டயரியா, மார்பு எரிச்சல், வாயுக் கோளாறு, reflux எனப்படும் பின்னொழுக்கு, இன்னும் சொல்ல முடியாத சில பிரச்சினைகள் போன்றவற்றுள் ஒன்றால் நீங்கள் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் மட்டும் பத்து கோடி பேர்கள் ஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் அதிக விற்பனையாகும் ‘டாப் டென்’ மருந்துகளில் இரண்டு ஜீரணக் கோளாறைப் போக்குவதற்கான மருந்துகளே ஆகும்.  பற்பல கோடி டாலர்கள் செலவழித்து இவற்றை மக்கள் வாங்குகிறார்கள்! சுமார் 200 மருந்துகள் ஜீரணக் கோளாறைப் போக்க விற்பனையாகின்றன; ஆனால் என்ன பிரச்சினை என்றால் இவற்றில் பலவற்றைச் சாப்பிடுவதால் கோளாறு அதிகமாகிறதே தவிர நிவாரணம் கிடைப்பதில்லை! குடல் கோளாறுகளுக்காக மக்கள், மருத்துவர்களை நாடுவது மிகவும் அதிகமாகி வருகிறது.

    ஜீரணக் கோளாறுகள் ஒவ்வாமையை உருவாக்குகிறது, மூட்டுவாதத்தை ஏற்படுத்துகிறது, auto immune disease எனப்படும் தன் எதிர்ப்பு நோயை உருவாக்குகிறது, நிலை தடுமாற்றம், கான்ஸர், தொடர்ந்து இருக்கும் சோர்வு, உடம்பில் தடிப்புகள், முகப்பருக்கள் என இப்படி உடலில் பல வியாதிகளை இது ஏற்படுத்துகிறது. ஆகவே ஜீரண அமைப்பானது உங்கள் உடலில் ஏற்படும் அனைத்துடனும் தொடர்பு கொண்ட ஒன்று.

இப்போது நாம் குடல் நாளத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதை எப்படி அறிவது என்று பார்க்கலாம். நல்ல உடல் நலத்தை உறுதி செய்ய உள்ள முக்கியமான ஏழு காரணங்களில் ஜீரணம் என்பது நான்காவது முக்கியமான காரணம் ஆகும்.

Intestinal Health அல்லது குடல்நாள ஆரோக்யம் என்பது சீரான ஜீரணம், உட்கொள்ளுதல், தன்மயமாக்கல் என வரையறுக்கப்படுகிறது.

      முதலாவதாக, மழைக்காடுகளில் உள்ளச் சுற்றுப்புறச் சூழலில்  பல்வேறுபட்ட ஒன்றுடன் ஒன்று சார்ந்தவையாக பல அமைப்புகள் உள்ளன. அதே போல குடல் நாளத்தில் 500 உயிரினங்களும் 3 பவுண்டு பாடீரியாவும் உள்ளன. குடல் நாளம் ஒரு பெரிய கெமிக்கல் ஃபாக்டரியாக இயங்கி நீங்கள் சாப்பிட்ட உணவுப் பொருள்களை ஜீரணிக்க வைத்து, ஹார்மோன்களைச் சீராக்கி, விஷப்பொருளளைப் பிரித்தெடுத்து, விடமின்களையும் இதர முக்கிய உடல்நலத்தைப் பேணிக்காக்கும் கூட்டுபொருள்களையும் உருவாக்கி உங்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த நட்பான பாக்டீரியாக்கள் சீராக இருப்பது அவசியமாகிறது. ஒட்டுண்ணிகளும், நுரைமங்களும் (Parasites and yeasts) போன்ற தப்பான பாக்டீரியாக்கள் நல்லவை அல்ல.

ஒரு முக்கியமான விஷயம், குடல் நாள் ஆரோக்கியம் என்பது உடல் நல ஆரோக்கியம் என்பதாகும். எக்ஸிமா, சொரியாஸிஸ், மூட்டுவாதம் போன்றவைக்கும் ஜீரணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அவை ஜீரணக் கோளாறினாலேயே ஏற்படுகின்றன.

இரண்டாவதாக குடல்நாளத்தில் நோய் எதிர்ப்பு (Gut immune system) அமைப்பு உள்ளது. உங்களின் முழு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் குடல் நாளத்தால் பாதுகாக்கப்படும் ஒன்றாகும். குடல் நாளத்தில் ஒரே ஒரு செல்லின் கனமே (One cell-thick layer) விஷப்பொருள்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இந்த எல்லை பாதிக்கப்பட்டால் சாதாரணமாக ஜீரணமாகும் பொருள்களே ஒவ்வாமைப் பொருள்களாக மாறி உங்களை நோய்வாய்ப்படுத்தும். கெட்ட மாலிக்யூல்களை அகற்றி நல்லனவற்றை வடிகட்டி எடுத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பது குடல் நாளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத ஒன்றாகும்.

 மூன்றாவதாக இரண்டாவது மூளை எனப்படும் குடல் நாள நரம்பு மண்டல அமைப்பானது மூளையில் உள்ள ந்யூரோ டிரான்ஸ்மிட்டர்களை விட அதிகமான அளவு அதைக் கொண்டுள்ளது என்பது வியப்பூட்டும் ஒரு செய்தி. உண்மையில் குடல் நாளம் தனக்கெனவே ஒரு மூளையைக் கொண்டுள்ளது. அதை “enteric nervous system” என்று அழைக்கின்றனர். அது உடலியலில் மூளையுடன் நுண்ணியமான வழிகளில் தொடர்பைக் கொண்டுள்ள ஒரு அதி நவீன அமைப்பாகும்.

குடல் நாள மூளைக்கும் தலையில் உள்ள மூளைக்கும் தகவல்கள் தொடர்ந்து பரிமாறப்பட்டு வருகின்றன. அந்தத் தகவல் தொடர்பில் இடையூறு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு நேரிடும்.

நான்காவதாக, வளர்சிதை மாற்றத்தினால் துணைப் பொருள்களாக உருவாக்கப்படும் விஷங்களை உங்கள் குடல் நாளம் அகற்ற வேண்டும். அவற்றை கல்லீரல் பித்தப்பையில் தள்ளுகிறது. மலச்சிக்கல் ஏற்படும் போது உங்கள் உடலில் விஷங்கள் பாதிப்பு ஏற்பட அதனால் நோய் உருவாகிறது.

இறுதியாக உங்கள் குடல் நாளமானது நீங்கள் உட்கொண்ட உணவை சிறு துகள்களாக ஆக்கி அதில் உள்ள விடமின்கள், தாதுப் பொருள்கள் ஆகியவற்றை ஒரு திசு கனமுள்ள அடுக்கில் அனுப்பி, அதை இரத்த ஓட்டத்தில் சேர்த்து உங்கள் உடலையும் மூளையையும் சத்துள்ளதாக ஆக்க வேண்டும்.

உங்கள் குடல் நாளம் நிறைய விஷயங்களை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கச்சிதமான உலகில் கூட அனைத்தையும் சீராக வைப்பது என்பது கடினமான காரியமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்த அதி நவீன உலகில் ஜீரண அமைப்பை சீராக வைத்துக் கொள்வது என்பது இன்னும் அதிக கஷ்டமான காரியம். ஏனெனில் ஜீரண அமைப்பை அதல பாதாளத்தில் தள்ளி விடும் அளவில் ஏராளமான சிக்கல்களை நவீன உலகம் ஏற்படுத்துகிறது!

உங்கள் குடல் நாளம் சீராக இல்லை என்பதை எப்படி உணர்வது?

அதை அடுத்துக் காண்போம்.

       – தொடரும்

எதையும் கற்கலாம்; எப்போதும் கற்கலாம்! (Post No.6435)

PHILIP, KING OF MACEDONIA

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 May 2019


British Summer Time uploaded in London – 8-59 am

Post No. 6435

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

—SUBHAM–

சிலந்தி, கடற்புழு, தவளை மூலம் பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள்! (Post No.6430)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 23 May 2019


British Summer Time uploaded in London –
7-34 am

Post No. 6430

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Old Articles in the blog on the same subject

தத்தாத்ரேயர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தத்தாத்ரேயர்/

1.      

Translate this page

இதற்குப் பின்வந்த பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மஹரிஷி, இயற்கையில் காணும் பறவை, மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து தான் அறிந்த …

கார்த்த வீர்யார்ஜுனன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/கார்த்த-வீர்யார்ஜு…

1.      

Translate this page

30 Jun 2018 – பாகவத புராணத்தில் உள்ள கதை. … கார்த்த வீர்யனின் குரு தத்தாத்ரேயர். … குரு தத்தாத்ரேயர் அதைப் பார்த்து என்ன ஆயிற்று?

மனு தர்ம சாஸ்திரம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/மனு-தர்ம-சாஸ்திரம…

1.      

2.      

Translate this page

பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் கற்றுக் கொண்ட விஷயங்களின் நீண்ட பட்டியலை நாம் முன்னரே பார்த்தோம்.

சிட்டுக் குருவி | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சிட்டுக்-குருவி/

1.      

Translate this page

தத்தாத்ரேயர் என்ற ரிஷி இயற்கையில் தான் கண்ட எல்லாவற்றிலும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றதை பாகவதம் எடுத்துக்கூறும். (Please read my article …

குருவி | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/குருவி/

1.      

Translate this page

இயற்கையிலிருந்து தத்தாத்ரேயர் கற்ற விஷயங்களை முன்னரே பாகவத புராணத்தில் கண்டோம். பாரதிக்குக் குருவியும் காகங்களும் …

இயற்கை போதிக்கும் 13 பாடங்கள் | Swami’s …



https://swamiindology.blogspot.com/2013/11/13.html

9 Nov 2013 – உபநிஷத்தும், பாகவதமும், விவேக சிந்தாமணியும் கூறும் கருத்தை 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வோர்ட்ஸ்வொர்த் என்ற …

இயற்கை | Tamil and Vedas | Page 6



https://tamilandvedas.com/category/இயற்கை/page/6/

1.      

Translate this page

18 May 2018 – வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -2 (Post No.5021) … Posted in இயற்கை. Tagged ….. 13 Apr 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). sesha, .

Galileo’s Telescope and Invention of Suspension Bridge! (Post No.6426)

Compiled by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 22 May 2019
British Summer Time uploaded in London –
17-58

Post No. 6426

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Following  anecdotes are taken from an old book. Galileo’s Patient 50 year observation helped him to invent the telescope,  properties of pendulum and free fall.

Captain Brown (Sir Samuel Brown) invented Suspension Bridge by observing a spider and its web.

Sir Brunel took his first lesson in building Thames Tunnel from a tiny ship worm.

Galvani did find something new about electricity from a Frog.

Another anecdote shows that old age is not a bar in learning new languages.

Tags- Galileo, Pendulum, Galvani, Sr Samuel, Suspension Bridge, Sir Brunel, Galvani

–subham–

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2 (Post No.6424)

Written by S NAGARAJAN


swami_48@yahoo.com


Date: 22 May 2019


British Summer Time uploaded in London – 6-16 am

Post No. 6424

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

16-5-2019 தேதியிட்ட பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு எட்டாம்) கட்டுரை – அத்தியாயம் 424

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2

ச.நாகராஜன்

அதிசயப் பெண்மணி நினா குலாஜினா

அதீத உளவியல் ஆற்றல் பெற்ற அதிசயமான ஆண், பெண் பட்டியலில் நினா குலாஜினாவின் (Nina Kulagina) பெயர் தனி இடம் பெறுகிறது.ரஷியப் பெண்மணியான நினா (பிறப்பு 30-7-1926 மறைவு ஏப்ரல் 1990) அதி மானுட ஆற்றலைக் காட்டி விஞ்ஞானிகளை வியக்க வைத்தவர்.

    Psyckokinetic (PK) ஆற்றலில் அவர் வல்லவர் என்பது நிரூபிக்கப்பட, ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவரது அதீத உளவியல் ஆற்றல் உலகில் பிரபலமானது.

      மேஜை மேலிருக்கும் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர வைக்கும் சக்தி கொண்டவர் அவர் என்பதை நேரடியாகப் பலரும் பார்த்து வியந்தனர்.

ரஷியாவில் இரண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உள்ளிட்ட நாற்பது விஞ்ஞானிகள் குலாஜினாவின் சக்தியைச் சோதனை செய்து பார்த்தனர்.

லெனின்கிராட் லாபரட்டரி ஒன்றில் 1970ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அவர் மீது விஞ்ஞானிகளால் பல சோதனைகள் நடத்தப்பட்டன.

     எதையும் தொடாமலேயே பார்வையினால அவர் பொருள்களை நகர்த்துவது பற்றிய சோதனையால் விஞ்ஞானிகள் வியந்தனர்.

உலோகங்களினால் ஆன பொருள்களையும், உலோகம் அல்லாத பொருள்களையும் அவர் நகர்த்திக் காட்டினார். பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்டவை இவை. காந்தசக்தி கொண்ட பொருள்கள், காந்தசக்தி அற்ற பொருள்கள் என எல்லாவற்றையும் அவரால் நகர்த்த முடிந்தது!

இவற்றின் இடை 380 கிராம் அளவில் இருந்தன.

     இந்த அபூர்வ ஆற்றல் உயிர்களில் உள்ள தசை, திசு மற்றும் அங்கங்களின் மீதும் செலுத்தப்பட முடியுமா என்று பார்க்க அவர்கள் மிகுந்த ஆவல் கொண்டனர்.

சோதனைகளை முன்னின்று நடத்தியவர் பிரபல ரஷிய விஞ்ஞானியான செர்ஜியெவ் ( Gennady Sergeyev).

    ஒரு தவளையின் இதயம் எடுக்கப்பட்டு உடல் இயக்கவியல் கரைசல் (Physiological solution) ஒன்றில் பத்திரமாக வைக்கப்பட்டது. நினா இருந்த இடத்திலிருந்து தவளையின் இதயம் சுமார் ஒன்றரை மீட்டர் தூரத்தில் இருந்தது.இதயத்துடன் எலக்ட்ரோடுகள் இணைக்கப்பட்டன – சோதனை அனைத்தையும் துல்லியமாக ரிகார்ட் செய்வதற்காக!

   இந்த மாதிரி நிலைகளில் தவளையின் இதயம் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை இயங்கும். அரிதான சில கேஸ்களில் 90 நிமிடம் இது இயங்கலாம்.

இதய இயக்கம் நின்றவுடன் அதை எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் (Electrostimulation) மூலம் மீண்டும் இயங்க வைக்க முடியும்.

நினா தனது சக்தியை தவளையின் இதயம் மீது செலுத்திய 40 விநாடிகளில் அதன் இயக்கம் முற்றிலுமாக நின்றது. மீண்டும் எலக்ட்ரோ ஸ்டிமுலேஷன் (Electrostimulation) மூலம் அதை இயக்க முயன்ற போது அது இயங்கவில்லை!

“நாங்கள் இதயத்தைச் சோதனை செய்த போது அது வெடித்துச் சிறு சிறு துகள்களாக ஆகி இருந்தது. அந்த ஆற்றலின் வேகம் அப்படிப்பட்ட தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தது” என்று கூறி செர்ஜியெவ் வியந்தார்.

    நினாவின் இன்னொரு சக்தியையும் விஞ்ஞானிகள் சோதித்தனர்.

அவர் தன் தீவிர பார்வையை ஒருவர் கையின் மீது செலுத்தியபோது அது முதலில் சற்று சூடானது, பிறகு தோல் இன்னும் அதிக உஷ்ணத்தை அடைந்தது. பின்னர் தோல் எரிந்து தீப்புண் பட்டது போல் ஆனது. ஐந்து நாட்கள் வரை அந்தப் புண்ணின் காயம் தென்பட்டது.

   நினா தன் கையின் மீது பார்வையைச் செலுத்த அவரது தோல் சிவப்பானது. பின்னர் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்த பின்னர் அவர் அதை தன் சிகிச்சை தரும் ஆற்றலின் மூலம் ஆறச் செய்த போது அது சாதாரண நிலைக்கு மீண்டது. தனது கைவிரல்களால் அவர் பல வண்ணங்களையும் உணர்ந்து அவற்றை விவரித்தார்.

இது போன்ற ஏராளமான சோதனைகளை லாபரட்டரி கட்டுப்பாடுகளில் அவர் நிகழ்த்திக் காட்டி விஞ்ஞானிகளை அயர வைத்தார்.

ஐஸ் மேன்

நெதர்லாந்தைச் சேர்ந்த விம் ஹாஃப் (Wim Hof – பிறப்பு 20-4-1959) வெறும் காலுடன் தொடர்ந்து பனிக்கட்டியின் மீது நடந்து காட்டும் ஒரு அதிசய மனிதர். அதி வேக இதயத் துடிப்பும் அதிக அட்ரினலின் சுரப்புமே அவரது இந்த ஆற்றலுக்குக் காரணம் என அவரைச் சோதித்த விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர்.

மார்ச் 16ஆம் தேதி 2000-இல் அவர் ஐஸுக்கு அடியில் நீந்தி கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் படைத்தார், 2007 ஜனவரி 26ஆம் தேதி பனியில் 2 மணி 16 நிமிடம் 34 விநாடிகள் வெறும் காலுடன் ஐஸ் மீது நடந்து உலக ரிகார்டை ஏற்படுத்தினார். முழு உடலையும் ஐஸில் மூழ்கடித்து நீண்ட நேரம் ஐஸில் இருந்து 16 முறை ரிகார்டை ஏற்படுத்தினார்.

 அவரது இந்த அதிசய ஆற்றல் உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சில விநாடிகள் கூட எவரும் ஐஸ் கட்டி மீது தன் முழு உடலையும் பட்டவாறு இருக்க முடியாது. ஆனால் இந்த அதிசய மனிதரோ ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் ஐஸுடன் உடலை ஒட்டி இருந்து அனைவரையும் அசத்துகிறார்.

இவரை உலக மக்கள் ஐஸ் மேன் என்று அழைப்பது பொருத்தம் தான்.

இன்னும் சில அதிசய ஆற்றல் படைத்த வல்லுநர்களை அடுத்துப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் மின் பல்பைக் கண்டுபிடிக்க முயன்ற போது நடத்திய சோதனைகள் அனைவரும் அறிந்த ஒன்று. சுமார் ஆயிரம் முறைகள் சோதனைகளைத் திருப்பித் திருப்பி நடத்தி கடைசியில் அவர் மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றார். அவரது உதவியாளர்கள் அனைவரும் இந்த வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

எடிஸன் தனது ஆபீஸ் பையனைக் கூப்பிட்டு அதை சோதனை செய்யுமாறு கூறினார். மிக்க பயத்துடனும் நடுக்கத்துடனும் அதைக் கையில் ஏந்திச் சென்ற அவன் தவறுதலாக அந்த பல்பைக் கீழே போட அது உடைந்தது.

எடிஸன் இதனால் கோபம் கொண்டு தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவார் என்று பயந்தான் அவன்.

எடிஸன் இன்னொரு பல்பைச் செய்தார். திருப்பி அதே ஆபீஸ் பாயைக் (Office Boy) கூப்பிட்டு அவன் கையில் புதிய பல்பைத் தந்து அதை சோதித்துப் பார்க்குமாறு கூறினார்.

எடிஸனின் உதவியாளர்கள்  எதற்காக அதே பையனிடம் பல்பைத் தந்து விஷப்பரிட்சை செய்ய வேண்டும் என்று வியந்தனர். எடிஸனிடமே அதைக் கேட்டனர். அந்தப் பையன் திருப்பி அதைக் கீழே போட்டு விட்டால் என்ன செய்வது என்பதே அவர்களின் கேள்வி.

எடிஸன் பதில் கூறினார் இப்படி: “ புதிய பல்பை 24 மணி நேரத்தில் நான் செய்து விட்டேன். ஒருவேளை அவன் இந்த பல்பையும் கீழே போட்டு உடைத்து விட்டால் இன்னொரு பல்பைச் செய்ய எனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் ஆகும். ஆனால் இதே வேலையை அவனிடம் நான் கொடுக்கா விட்டால் அவனுக்குத் தன் மீது இருக்கும் நம்பிக்கையே போய்விடும். அந்தத் தன்னம்பிக்கையை அவன் பெறவே முடியாமல் போய்விடும். அப்படி அவன் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அதே வேலையை அவனிடம் கொடுத்தேன். இந்த முறை அவன் சோதனையை முடித்து விட்டால் ஆயுளுக்கும் அவன் தன்னம்பிக்கை குறைவு படாது”

அனைவரும் எடிஸனின் இந்த பதிலைக் கேட்டு அவரைப் பாராட்டினர்.

***

எனக்கு எத்தனை வியாதிகள் தெரியுமா, ஸார்? (Post No.6421)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 21 May 2019


British Summer Time uploaded in London – 8-51 am

Post No. 6421

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

பேரீச்சம்பழம் தரும் அற்புத ஆரோக்கியம் (Post No.6409)

Written  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 19 May 2019

British Summer Time uploaded in London –  6-53  am

Post No. 6409

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத இதழ் ஹெல்த்கேர். அதில் ஏப்ரல் 19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!

ச.நாகராஜன்

நாள் ஒன்றுக்கு மூன்றே மூன்று பேரீச்சம்பழங்கள்

ஒரு நாளைக்கு மூன்று பேரீச்சம்பழங்கள் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்களின் ஆரோக்கியம் வெகுவாக மேம்பட்டு விடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வந்து சேரும் என்பதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறது!

பேரீச்சம்பழங்கள் நல்கும் பயன்கள் யாவை? இதோ படியுங்கள்

குடல் கேன்ஸர் வராது தடுக்கும்

ஜீரண அமைப்பில் நாம் சாப்பிடும் உணவு சரியாகச் செல்வதை உறுதி செய்வதோடு பேரீச்சம்பழங்கள் குடல்நாளம் (Gut) நன்கு இயங்குவதையும் உறுதி செய்கிறது. அத்துடன் அவை சரியாக இயங்குவதால் பெருங்குடலில் (colon)  கேன்ஸர் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

அமெரிக்க உணவு மற்றும் சத்துணவு விஞ்ஞானப் பிரிவு (Department of Food and Nutritional Sciences) சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழங்கள் சாப்பிடுவோரின் குடல் ஆரோக்கியம் வெகுவாக மேம்படுவதைத் தெரிவித்துள்ளது. பெருங்குடலில் கேன்ஸர் வருவதற்கான திசுக்களை உருவாகவிடாமல் செய்ய நல்ல பாக்டீரியாக்கள் அங்கு சேர்கின்றன.

உடனடி சக்தி சேரும் அது நீடித்தும் இருக்கும்

அடுத்து பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்புச் சத்து, குளுகோஸ், ப்ரக்டோஸ், சக்ரோஸ் (Sugars, Glucose, Fructose and Surcose)  ஆகியவை உடனடியாக சக்தியைத் தருகிறது. அத்துடன் சக்தியைத் தருவதாக விளம்பரங்கள் கூறும் குளிர்பானங்கள் அல்லது எனர்ஜி பார் போலல்லாமல்  பேரீச்சம்பழங்களில் உள்ள பைபர் சத்து, பொட்டாசியம், மக்னீஷியம் விடமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளிட்டவை உங்கள் சக்தியை அப்படியே நீடித்து நிலை நிறுத்துவதோடு, ஏனையவை போல் திடீரெனக் குறைந்து உங்களைச் சோர்வடையச் செய்யாது.

 மலச்சிக்கல் பிரச்சினை தீரும்

      உங்கள் ஜீரண அமைப்பில் சாப்பிட்ட உணவுகள் மெதுவாக அழகாக சீராகச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை அடைய பேரீச்சம்பழங்கள் உதவும். ஒரு கப் பேரீச்சம்பழங்களில் 12 கிராம் பைபர் உள்ளது. இது நீங்கள் அன்றாடம் எடுக்க வேண்டிய பைபரில் 48 சதவிகிதம் ஆகும்.

சரியான பைபரை சரியானபடி சாப்பிட்டாலேயே மலச்சிக்கல் வராது; சரியானபடி மலம் வெளியே போக உதவும் இயக்கங்கள் சீராகும். இதைச் செய்ய உதவுவது பேரீச்சம்பழங்களே. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் பிரசுரித்துள்ள ஆய்வறிக்கை ஒன்று ஒரு நாளைக்கு 7 பேரீச்சம்பழங்கள் வீதம் 21 நாட்கள் யார் ஒருவர் சாப்பிடுகிறரோ அவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவதே இல்லை என்றும் மலம் போவது சீராக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

மூளை செயல்திறன் கூடும்; மனச்சோர்வு ஏற்படாது!     

பேரீச்சம்பழங்களில் விடமின் பி6 (Vitamin B6) இருப்பதால் செரொடோனின் மற்றும் நோரிபினப்ரைன் (erotonin and norepinephrine) ஆகியவை உடலில் உருவாகி மூளையின் செயல்திறன் கூடுகிறது. செரோடோனின் மூட் எனப்படும் மனநிலையைச் சீராக வைக்கிறது. நோரிபினப்ரைன் மன அழுத்தத்தைச் சீராக்குகிறது. ஆய்வுகள் விடமின் பி 6 குறைவாக இருந்தாலோ மனச்சோர்வு ஏற்படும் என்று தெரிவிக்கின்றன. ஆகவே உங்கள் மன அழுத்தம் சீராக இருந்து உங்கள் ‘மூடும் சரியாக இருக்கும் போது மூளை கூர்மையாக இயங்குகிறது. தகவல்களை நன்கு உள்வாங்கிச் சேர்த்து வைத்துக் கொள்கிறது.

ஆசனவாய் வீக்கம் வராது    

ஹெமொராய்ட்ஸ் (Hemorrhoids) என்பவை ஆசனவாயிலும் குதத்திலும் உள்ள நரம்புகளாகும். மலச்சிக்கலால் இவை வீக்கமடைந்து வீங்கி இருக்கும். மலச்சிக்கல் இங்கு அழுத்தத்தைத் தர ஜீரண மண்டலத்தின் கோடியில் உள்ள பகுதியில் கூட இந்த அழுத்தம் ஏற்படும். இது வலியைத் தரும் ஒரு நிலை. இதை நல்ல உணவுப் பழக்கத்தால் மாற்றி மலச்சிக்கல் ஏற்படுவதையே தடுத்து விடலாம்.

பல டாக்டர்களும் பைபர் அதிகம் இருக்கும்படியான உணவை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர். பேரீச்சம்பழங்கள் உங்கள் ஹெமொராய்ட்ஸ் வீக்கத்தை ( அது இருப்பின்) சரி செய்து விடும்.

மனம் உடைந்து விட்ட நிலையில் அதைப் போக்கும்; உற்சாகம் தரும்!   

மனம் உடைந்து விட்ட நிலையில் உதவிக்கு வருவது பேரீச்சம்பழங்கள் தாம்.  ஆம், இது உண்மை! இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குருதிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. வயதான பெண்மணிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக பொட்டாசியமானது ஸ்ட்ரோக்கைக் குறைப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மூளை நரம்புகள் சுருங்குவதால் ஏற்படும்  ischemic Stroke ஐயும் தடுக்கிறது.        

நலம் தரும் பேரீச்சம்ழங்களை உண்ணுங்கள்!

ஆகவே அதிகம் விலை இல்லாத, எங்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய நல்ல பேரீச்சம்பழங்களை வாங்கி உண்ணுங்கள். அபாயகரமான வியாதிகள் வருவதைத் தடுத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

—subham —

அந்தரத்தில் தொங்கும் பூமியிலிருந்து நாம் ஏன் விழுவதில்லை? பி.பி.சி.பதில்(Post No.6399)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 17 May 2019

British Summer Time uploaded in London –  9-23 am

Post No. 6399

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாட்டில் மீது எழுதியதை நம்பலாமா? பி.பி.சி.பதில் (Post No6398)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 17 May 2019
British Summer Time uploaded in London –  9-09 am

Post No. 6398

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நீராவி பிடிப்பதால் என்ன பயன்?- மருத்துவத்தில் எண்-4 பகுதி 3 (Post No.6390)

Written by LONDON SWAMINATHAN



swami_48@yahoo.com


Date: 15 May 2019


British Summer Time uploaded in London –  9-14 am

Post No. 6390

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ALSO SEE OLD ARTICLES IN THE BLOG

சரக சம்ஹிதை | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/சரக-சம்ஹிதை/

  1.  

Translate this page

4. வைத்யருக்கான குணங்கள். வைத்ய குணா: 1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு … ஆயுர்வேதம் என்றால் என்ன, ஒரு மருத்துவரின்குணாதிசயங்கள் …

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள் | Tamil …



https://tamilandvedas.com/…/சரக-சம்ஹிதை-சொல்…

  1.  
  2.  

Translate this page

11 Nov 2013 – ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1 By ச.நாகராஜன் ஆத்ரேயரின் சிஷ்யர் ஆசார்ய சரகர் பாரத வரலாற்றில் பொன் எழுத்துக்களால் …

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள் …



https://swamiindology.blogspot.com/2013/11/blog-post_11.html

11 Nov 2013 – இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 அத்தியாயங்கள் என்ற எண்ணிக்கை? ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 …

மருத்துவர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/மருத்துவர்/

  1.  

Translate this page

13 Jan 2017 – ஆனால் மருத்துவம் பற்றிய பழமொழிகளும் பிற்காலத்தில் எழுந்த … மருந்து என்ற தலைப்பில் வள்ளுவர் பாடிய பத்துக் குறள்களும் …

மருத்துவத்தில் எண் மூன்று (Post No.6303 …



https://tamilandvedas.com/…/மருத்துவத்தில்-எண…

  1.  

Translate this page

24 Apr 2019 – மருத்துவத்தில் எண் மூன்று (Post No.6303). Written by London swaminathan swami_48@yahoo. … This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …

நாலு பேர் கொடுக்கும் உணவை …



https://tamilandvedas.com/…/நாலு-பேர்-கொடுக்…

  1.  

Translate this page

2 days ago – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில் எண் 4- Part 1(Post No.6377)In “அறிவியல்”. தமிழ் …

மருத்துவத்தில் எண் 4 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/மருத்துவத்தில்-எண…

  1.  

Translate this page

கடுக்காய் சாப்பிடு; மோர் குடி–மருத்துவத்தில்எண் 4- Part 1(Post No.6377). Written by London swaminathan. swami_48@yahoo.com. Date: 12 May 2019. British Summer Time uploaded in London …