ஒலியின் ஆற்றல்! – 2 (Post 7197)


WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 10  NOVEMBER 2019
Time  in London – 5-43 am

Post No. 7197

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஒலி என்று எடுத்துக் கொண்டால் ஒரு ஒலிக்கு ஒரு அதிர்வெண் அல்லது ஃப்ரீக்வென்ஸி தான் இருக்கிறது. ஒரு போர்க்கைத் தட்டி அதிலிருந்து ஒரு ஓசை எழுகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு ஃபோர்க்கை அதே போலத் தட்டினால் அதே ஃப்ரீகவென்ஸியுடன் – அதிர்வெண்ணுடன் தான் ஒலி எழும்பும்.

இதை சுலபமாக அளக்க முடியும்.

நாம் ஒரு பாட்டைப் பாடும் போது அதில் ஒரு ஸ்வரத்தைக் கையாளும் போது நமக்குள் ஒரு நல்ல அனுபவம் ஏற்படுகிறது – மெய் சிலிர்க்கிறது,தலையை ஆட்டுகிறோம்! ஆஹா எனக் கத்துகிறோம். இசை நம்மிடம் ஏற்படுத்தும் உடனடி விளைவு இது!

    திருடனைக் கண்டுபிடிக்கும் ஒரு புது விதமான  எச்சரிக்கை மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ‘தி இன்ஃபெர்னோ’ (The Inferno). அந்த எச்சரிக்கை மணி குறைந்த அதிர்வெண் உள்ள ஓசைகள் பலவற்றை எழுப்பும்.அதில் ஒன்று இன்னொன்றுடன் மோத பலவேறு ஓசைகள் எழும்பும்; அது உளவியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவிதமாகத் தலை சுற்றும்; வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். கவனசக்தியைச் சிதற அடித்து எதைச் செய்ய எண்ணுகிறோமோ அது கவனத்திலேயே இல்லாமல் போய்விடும். இந்த மணியின் ஓசையால் திருட வந்தவன் திகைத்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் மலைப்பான். அவனால் திருட முடியாது!

      விஞ்ஞானிகள் ஒலி அலைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். அவற்றின் மூலமாக ஒலி வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுள்ளனர்.

வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வைத்து வளர்ப்பது ஒரு வித ஃபாஷன். வளர்ப்புப் பூனையைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் போது அது ஒரு வித மியாவ் ஓசையை எழுப்பும். அது வளர்ப்பவரின் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறதா? இதை ஆய்வு செய்து பார்த்து விடலாம் என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

விஞ்ஞானியான எலிஸபத் வான் மக்கெந்தலர் (Elizabeth Von Muggenthaler) ஒரு படி முன்னே போய், அப்படி பூனை எழுப்பும் ஓசை அது இயல்பாக நோய் தீர்க்கும் ஒலி என்றும் அது எலும்புகளையும் உடலின் அங்கங்களையும் வலிமைப் படுத்தும் ஓசை என்றும் தெரிவித்தார்!

பூனையின் இந்த ஓசை சராசரியாக 27 முதல் 44 ஹெர்ட்ஸ் என்ற அளவில் இருக்கிறது.

இந்த அளவு ஓசை எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது; எலும்புகளின் அடர்த்தியை (density) அதிகரிக்கிறது; இதர அங்கங்களுக்கும் வலுவூட்டுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை (Ultra Sound treatment) மருத்துவ மனைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் உடைந்த எலும்பை ஒட்ட வைப்பதற்கும் சீக்கிரமே அவை குணமடைவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

அற்புதமான இசையை இசைத்தால் தாவரங்களும் அபரிமிதமாக வளர்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இசை விற்பன்னர் தான் இசை அமைக்கும் போது என்னென்ன ஸ்வரங்களைப் பயன்படுத்தினாரோ அதே ஸ்வரங்களைப் பயன்படுத்தினால் தான் அந்த நல்ல விளைவு ஏற்படுகிறது என்றும் வெவ்வேறு வகையில் ஓசைகளை எழுப்பும் போது அந்த நல்ல விளைவு ஏற்படுவதில்லை என்பதும் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதே போன்ற ஆய்வுகள் பாக்டீரியாக்களை வைத்தும் நடத்தப்பட்டன. ஒரு விதமான நல்ல அதிர்வெண்கள் மூலம் அவை பெருகுகின்றன என்பதும் இன்னொரு விதமான அதிர்வெண்ணில் அவை சாகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை வைத்துப் பார்த்தால், நமது முன்னோர்கள் சில ஒலிகளைத் திருப்பித் திருப்பி ஏன் கூறச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த விதமாகத் திருப்பித் திருப்பிக் கூறுவது வியாதிகளைத் தீர்க்கிறது.

      பறவைகளின் பாட்டொலி சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஒரு நல்ல பயனை விளைவிக்கிறது.

வசந்த காலம் வந்தால் பறவைகளின் உற்சாக ஒலி நம்மைப் பரவசப்படுத்துகிறது.

இந்த அற்புதமான் மெல்லிசை சுற்றி இருக்கும் தாவரங்களின் இலைகளை வளரச் செய்கிறது; மலர்களைப்  பூக்க வைக்கிறது.

வசந்த காலத்தில் இது அவசியம். ஆனால் கோடைகாலத்தில் வளர்ந்து விட்ட நிலையில் மலர்களுக்கும் இலைகளுக்கும் இந்த இனிய ஓசை அவ்வளவாகத் தேவை இல்லை.

     தாவரங்களில் ஏற்படும் இரசாயன மாற்றம் – அதாவது போட்டோசிந்தஸில் – (Photosynthesis) இரவில் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து உதய காலத்தில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் செயல் பறவைகளின் இனிய ஒலிகளால் ஊக்கப்படுத்தப் படுகிறது.

இப்படி இனிய ஒலி எங்குமே ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் சோதனைகளாலும் நேரடி அனுபவங்களாலும் நாம் உணர்கிறோம்.

***

ஒலியின் ஆற்றல் தொடரும்

எட்னா எரிமலை மீது குண்டு வீச்சு (Post No.7198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 10  NOVEMBER 2019

Time  in London – 5-39 am

Post No. 7198

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

எரிமலை மீது குண்டு வீச்சு என்ற தலைப்பில் நான் தினமணியில் மே3, 1992ல் ஒரு கட்டுரை எழுதினேன்.

27 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த எரிமலை  இன்னும் அவ்வப்போது பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கடைசியாக மவுன்ட் எட்னா எரிமலையின் சீற்றம் 2018 டிசம்பரில் நடந்தது. சிசிலி தீவில் பெரிய பூகம்பம் ஏற்பட்டு கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த முறை எரிமலையின் சிகரத்தில் தீச்சுவாலை பீறிட்டு எழாமல், பக்க வாட்டு மலையைப் பிளந்து கொண்டு எரிமலை சீறியது. இப்படி பக்கவாட்டில் வெடிப்பது பத்து ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் நடந்துள்ளது

Dinamani article written by London Swaminathan in 1992.
DINAMANI NEWSPAPER 3rd May 1992

Mount Etna Volcano
subham

நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் (Post No.7195)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 9  NOVEMBER 2019

Time  in London – 6-08 am

Post No. 7195

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பாக்யா 1-11-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 435

நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் விநாயக் பானர்ஜி!

ச.நாகராஜன்

இந்த ஆண்டில் (2019) அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்துள்ளன என்றால் அது மிகையல்ல.

இந்தியாவில் மும்பையில் பிறந்து கல்கத்தாவில் வளர்ந்து டெல்லியில் படித்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் விநாயக் பானர்ஜி பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைத் தன் மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரெமர் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

இந்தியாவின் பெருமிதத்திற்கான தருணம் இது.

ரபீந்திரநாத் தாகூர், சர் சி.வி.ராமன், ஹர் கோபிந்த் கொரானா, மதர் தெரஸா, எஸ். சந்திரசேகர், அமார்த்ய சென், வி.ராமகிருஷ்ணன், கைலாஷ் சத்யார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து ஒன்பதாவதாக இந்தப் பரிசை வென்றுள்ள இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் அபிஜித்! (பிறப்பு : 1961 பிப்ரவரி 21- வயது 58)

அவர் பரிசு பெற்றதற்கான காரணம் இன்னும் அதிக பெருமையைத் தரும். உலகளாவிய விதத்தில் வறுமையைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய சோதனை பூர்வமான ஆய்வுக்காகவே அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பாக்யாவின் வாழ்த்துக்களை உளங்கனிய நோபல் பரிசை வென்ற அபிஜித் அவர்களுக்கு வழங்குகிறோம்.

அடுத்து, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை வைத்துள்ளோர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் லிதியம்-அயான் பேட்டரிகளைக் கண்டுபிடித்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு இரசாயனத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பேராசிரியரான ஜான் குட்எனஃப் (John Goodenough)-க்கு வயது 97. நோபல் பரிசைப் பெற்றவர்களிலேயே மிக அதிக வயதுடையைவர் இவர் தான் என்ற சாதனையும் இவரைச் சேர்கிறது. நோபல் பரிசு பெற வயது ஒரு தடை இல்லை என்பதை இந்தப் பரிசு நிரூபிக்கிறது!

இவருடன் இந்தப் பரிசைப் பகிர்பவர்கள் ஸ்டான்லி விவ்விங்ஹாம் (வயது 77) என்ற பிரிட்டிஷ்-அமெரிக்க பேராசிரியரும், அகிரா யோஷினோ (வயது 71) என்ற ஜப்பானியப் பேராசிரியரும் ஆவர்.

படிம எரிபொருள் பயன்பாட்டை நீக்கி மறுசுழற்சிக்குள்ளாக்கும் ஆற்றலைக் கண்டுபிடித்ததே இவர்களின் சிறப்பு. நீடித்துழைக்கும் பேட்டரியினால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகிறது என்பதோடு எதிர்காலத்தில் இன்னும் அதிக ஆற்றலைச் சேமிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு இது அடித்தளமாக அமையும்.

அடுத்து இயற்பியலில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை புரிய வைக்கும் முயற்சிகளில் அரிய சேவை ஆற்றியதற்காகவும் பிரபஞ்சத்தில் பூமி எந்த இடத்தை வகிக்கிறது என்பதை அறிந்து கூறியதற்காகவும் மூவருக்கு அளிக்கப்படுகிறது.

பரிசில் பாதியை ஜேம்ஸ் பீபிள்ஸ் பெறுகிறார். மீதிப் பாதியை மிகேல் மேயரும் டிடியர் க்லாஸும் பெறுகின்றனர். சோலார் வகை நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு எக்ஸோ பிளானட் இருப்பதைக் கண்டு பிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

(சூரிய மண்டலத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றியே வருகின்றன. சூரிய மண்டலத்திற்கு அப்பால் இதர நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் எக்ஸோபிளானட் என்று குறிப்பிடப்படுகின்றன.)

 சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை இவர்கள் சுட்டிக் காட்ட பால்வீதி மண்டலத்தில் சுமார் 4000 எக்ஸோபிளானட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே தான் இவர்களை நோபல் கமிட்டி பாராட்டி பரிசை அளித்துள்ளது.

அடுத்து சமாதானப் பரிசைப் பெறுபவர் எதியோப்பியாவின் பிரதம  மந்திரியான அபி அஹ்மத் அலி. எதியோப்பியாவுக்கும் அண்டை நாடான எரிட்ரியாவிற்கும் நடந்து வந்த மோசமான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இந்த சமாதானப் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் இவருக்கு வயது 43 தான்.

ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் எதியோப்பியா எரிட்ரியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால் எரிட்ரியா மக்கள் ஓட்டெடுப்பில் தனித்து இருப்பதை விரும்பவே அப்படியே இரு நாடுகளும் 1993இல் தனி நாடுகளாக ஆயின.  ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாட்மே என்ற எல்லை ஓர நகரின் உரிமை பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. பெரும் வன்முறை எழுந்தது. 2000 முதல் 2002க்குள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பன்னாட்டு எல்லை கமிஷன் பாட்மே நகரை எரிட்ரியாவிற்கு வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால் எதியோப்பியா அந்த நகரைத் தரவில்லை. ஆகவே ஒரு போர் சூழ்நிலை நிரந்தரமாக அங்கு உருவானது. எரிட்ரியாவை உலகினர் ‘ஆப்பிரிக்காவின் வடகொரியா’ என அழைக்க ஆரம்பித்தனர். எரிட்ரியாவில் நீடித்த எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. 18 வயது ஆனவுடன் தேசீய சேவைக்காக அனைத்து எரிட்ரியாவாசிகளும் அழைக்கப்பட்டனர். பெரும்பாலானோர் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் எதியோப்பியாவின் பிரதம மந்திரியாக அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்த அபி நூறு நாட்களுக்குள்ளாகவே பல்லாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டார். முதலில் எதியோப்பியாவில் இருந்த எமர்ஜென்ஸியை ரத்து செய்தார். ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.

பன்னாட்டு எல்லை கமிஷன் கூறுவதை ஏற்பதாகவும் அவர் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை ஆரம்பமாயின.

அதிக உற்சாகத்துடன் இப்படி தீவிரமாக சமாதானத்திற்காகப் பாடுபட்ட, பாடுபட்டு வரும் அபியை ஊக்குவிக்கும் விதமாக இந்த சமாதானப் பரிசு தருவதாக நோபல் பரிசுக் கமிட்டி கூறி இருப்பதை உலகில் சமாதானத்தை நிலை நிறுத்த விரும்பும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

என்ற போதும் இந்த சின்ன வயதிலேயே இப்போது தான் பிரதம மந்திரியான ஒருவருக்கு சமாதான பரிசை அளிப்பது சரிதானா என்றும் சிலர் முணுமுணுக்கின்றனர். எரிட்ரியாவும் இந்த அளவிற்கு சமாதானத்தில் முனைப்பு காட்டவில்லையே என்பது தான அவர்களின் அங்கலாய்ப்பு.

ஆனால் போர் நிறுத்தப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டிருந்த ஊடகங்கள் தடை நீங்கிச் செயல்பட ஆரம்பித்து விட்டன.

நல்ல மாறுதலை உலகம் வரவேற்கும் இந்த நிலையில் அபி அஹ்மதுக்கு உலகமே வாழ்த்துத் தெரிவிக்கிறது – நாமும் தான்.

இன்னும் மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசு பெற்ற அனைவருக்கும் நமது  வாழ்த்துக்கள்

அறிவியல் அறிஞர் வாழ்வில் :;

சோவியத் விண்வெளி வீரரான அலெக்ஸி லியனோவ் முதலில் விண்வெளியில் நடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 1934ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி பிறந்த லியனோவ் தனது 85வது வயதில் அக்டோபர் 11ஆம் தேதி 2019இல் மரணமடைந்தார்.

1965ஆம் ஆண்டு துணிந்து விண்கலத்திலிருந்து வெளியே வந்து நடந்து அவர் சாதனை படைத்தார். மனிதனை சுமந்து சென்ற 17வது விண்கலத்தில் மார்ச் 1965இல் அவர் விண்வெளி ஏகினார். விண்கலத்திலிருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே அவரது விண்வெளி உடை உப்ப ஆரம்பித்தது. அவரது சகாவான பவேல் பெலயாவாலாலும் உதவிக்கு வர முடியவில்லை. இப்படி உப்பிய நிலையில் அவரால் மீண்டும் விண்கலத்திற்குள் நுழையவே முடியாது. துணிந்து தன் விண்வெளி உடையின் அழுத்தத்தைக் குறைக்க அதிலிருந்து காற்றை வெளியேற்ற ஆரம்பித்தார். இதனால் விண்கலத்தை அடைவதற்குள் அவரது ரத்தத்தில் நைட்ரஜன் கொதிக்க ஆரம்பிக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஒரு வழியாக விண்கலத்திற்கு மீண்டார். 12 நிமிடம் 9 விநாடிகள் விண்கலத்திற்கு வெளியே இருந்து விண்வெளியில் மனிதன் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார். பின்னர் மறுநாள் 19-3-1965 அன்று பூமி திரும்பினார். இதனால் சந்திரனில் மனிதன் இறங்க முடியும் என்பது நிரூபணமானது.

விண்கலத்திலிருந்து வெளியே வந்தவுடன் தன் பார்வையை பிரபஞ்சத்தை நோக்கிச் செலுத்திய லியனோவ், “ஆஹா பூமி உருண்டையாக இருக்கிறது. மேலே நட்சத்திரங்கள். கீழே நட்சத்திரங்கள். இடப்புறமும் வலப்புறமும் நட்சத்திரங்கள்! சூரியனின் ஒளி என் முகத்தில் அடிக்கிறது” எனக் கூவினார்.

1975இல் மீண்டும் விண்வெளி சென்ற லியனோவ் அங்கு அபல்லோ விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சந்தித்தார்.

மொத்தத்தில் 113 முறை அவர் பூமியின் சுற்றுப்பாதையில் வலம் வந்தார். 7 நாட்கள் 32 நிமிடங்கள் அவர் மொத்தமாக விண்வெளியில் இருந்திருக்கிறார்.

அவரை கௌரவிக்கும் வண்ணம் ஏராளமான விருதுகள் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

அவரது மறைவு குறித்து விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

****

இந்தியாவின் அதிசய பீரங்கிகள் (Post No.7194)

Jaivana Cannon

Written by  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 9  NOVEMBER 2019

Time  in London – 5-51 am

Post No. 7194

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Longest in the world, Kalabhurahi, Karnataka
malik-i- maidan
Bangalore
chennai
Madras Museum

ஒலியின் ஆற்றல்! – 1 (Post No.7190)

Science Museum in Bangalore

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 8  NOVEMBER 2019

Time  in London – 7-28 am

Post No. 7190

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

musical pillars

–subham–

பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! (Post No.7184)

mica

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com
Date: 6 NOVEMBER 2019

Time  in London – 16-17

Post No. 7184

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

mercury in thermometer

தாயுமானவர் பாடல் இதோ:–

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்;

வேறொருவர் காணாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

நேற்று முன் தினம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட ரசாயன நூல் பட்டியலைக் கொடுத்துள்ளேன்.

Old articles n my blog———

வேதம் முதல் தாயுமானவர் வரை …



https://tamilandvedas.com › 2018/05/29 › வேதம்-…

  1.  

29 May 2018 – வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத … தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் …

SUPERNATURAL POWERS OF SAINTS- FROM RIG VEDA …



https://tamilandvedas.com › 2018/05/29 › supernatural-…

  1.  

Translate this page

29 May 2018 – SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO THAYUMANAVAR (Post No.5057). Written by London Swaminathan. Date: 29 …

in the Rig Veda | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › in-the-rig-veda

  1.  

SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO … Though lot of saints in later ages have sung about the mystic powers of saints and seers in …

You’ve visited this page 2 times. Last visit: 13/01/18

Aladdin’s Magic Lamp and Tamil Saints | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2012/03/09 › aladdins-magi…

  1.  
  2.  

9 Mar 2012 – In the Forest of Naimisaranya , saints used to gather and listen to stories. … They are supposed to have supernatural powers. In Tamil literature …

Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a …



https://tamilandvedas.com › 2016/11/12 › rare-pictures-…

  1.  

12 Nov 2016 – Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a German book … SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO …

Miracles do Happen ! | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2012/09/01 › miracles-do-h…

  1.  

1 Sep 2012 – This gives an idea of the miracles done by Hindu saints, particularly … is one who attained Siddhi i.e. special psychic and supernatural powers, …

WHERE WERE THE HINDU SEERS AND SAINTS BORN …



https://tamilandvedas.com › 2018/04/27 › where-were-the-hindu-seers-and…

  1.  

27 Apr 2018 – Nayanmars- Most of the 63 Nayanmars, the Tamil Saivite saints were born in … FIVE WAYS OF GETTING SUPERNATURAL POWERS (Post …

—subham–

மூளைக்கு வல்லாரை- அருமையான மூலிகைப் பாட்டு (Post No.7183)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 6 NOVEMBER 2019

Time  in London – 8-23 am

Post No. 7183

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் – 627006 (போன் : 9843157363) -லிருந்து வெளிவருகிறது. வருட சந்தா ரூ 120/. நவம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது:

மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!

ச.நாகராஜன்

ஏராளமான இரகசியங்களைத் தெரிவிக்கும் பாடல்களை தமிழ்ச் சுவடிகள் கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மாயச் சதுரம் பற்றியும், சதுரங்க பந்தம் போன்ற சித்திரத் தமிழ் பற்றியும் ஒரு சின்னப் பாடல் மூலமாக அருமையான ரகசியத்தை அறிகிறோம்.

இந்த வகையில் அன்பர்  மாரிமுத்து, அவனியாபுரம், மதுரை அனுப்பியுள்ள பாடல் மூலிகைப் பாட்டாக, அருமையான ஒன்றாக அமைகிறது. அதைக் கீழே தருகிறேன்.

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!

இதே போல அருமையான பாடல்களை தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹால் சுவடிகளில் காணலாம். சரஸ்வதி மஹால் வெளியீடுகளும் அற்புதமானவை.

நோயில்லா நெறி என்ற புத்தகம் ஒவ்வொரு நதியின் நீர் பற்றிய அருங்குணங்களைத் தருகிறது. வைகை, காவிரி, தாமிரபர்ணி ஆகிய நதிகளின் நீருக்கு இவ்வளவு சக்தியா என வியக்கிறோம். அத்துடன் நோயில்லாமல் வாழ்வதற்கான நெறிகளையும் அது தருகிறது.

பழைய பாடல்களைத் தேடி எடுத்து அதை வல்லாரிடம் கொடுத்து அதன் மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவு.

செய்வோம்; மனதால் உயர்வோம்; ஆரோக்கியத்தால் உயர்வோம்!

***

RARE CHEMISTRY/ ALCHEMY/ MEDICINE BOOKS OF ANCIENT INDIA (Post No.7178)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 4 NOVEMBER 2019

Time  in London – 16-37

Post No. 7178

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

INDUS-SARASVATI VALLEY


In almost every country the progress of chemistry can be traced to medicine and alchemy. Alchemy details the method of changing base metals into silver or gold. It describes the elixir of life and philosopher’s stone. In India religious worship and certain religious rites are also included in the study of Chemistry or Rasayana. Throughout the Rig Veda we see people praying for 100-year life span. To keep themselves fit, they drank the Soma rasa which gave them long and healthy life. Indian life in all its aspects, social, political and intellectual has always been  under the mighty sway of religion. Soma rasa, juice of Soma plant is described as an Amrita (ambrosia, elixir of life).

Magic (Electric) Light

The ‘Vasavadatta’ and the’ Dasakumara charita’ in the sixth century allude to the preparation of a mass of fixed or coagulated mercury, (Paradindadrab), ; of a chemical powder capable of producing deep sleep or stupor by its inhalation ( Yoga churna); of a chemically prepared wick for producing light without fire (Yogabartika) and of a powder which acts like an anaesthetic and paralyses sensor and motor nerves, (Stambana churnam.) These are in the above mentioned two books.

MERCURY IN THERMOMETER

(Mercury is Paatha rasam in Tamil)


KUBJIKATANTRA is a manuscript in the collection of Maharajah of Nepal. This was written in Gupta character and copied in the sixth century. In one place of this Tantra work, Lord Shiva himself speaks about the efficacy of mercury when it is ‘killed’/ treated six times. Transmutation of copper into gold with the help of mercury is also explained.

Tantrics believe that preservation of body is necessary to achieve liberation through certain rites and mercury will  make the body undecaying and immortal.

Nagarjuna, the great Buddhist philosopher and alchemist is credited with a work called RASA RATNAKARA. He is also the reputed author of KAKSHAPUTA TANTRA and AROGYAMANJARI. He was the redactor of Susruta Samhita. He lived in the second century CE. There are two dialogues, one between Salivahana (Sathavahana) and Nagarjuna, and the other between Ratnagosha and Mandavya.

Letter of Nagarjuna

One Friendly epistle of Nagarjuna to King Udyana is available in Chinese and Tibetan languages. The Sanskrit original is lost. Sathavahanas ruled Andhra region in the first two centuries of modern era. It looks like there were more than one Nagarjuna. Arabian scholar Alberuni wrote about one Nagarjuna of Daihak near Somnath, nearly a century earlier than his own time. He was a great expert in alchemy according to Alberuni. Rasa ratnakara might have been written by the second Nagarjuna. In the Durbar Library of Nepal there are two more works attributed to Nagarjuna. They are Yogasara and Yogasatak.

RASARNAVA is a Hindu Saiva Tantra work which describes mercury as of divine origin. This book has valuable information on chemistry. Mica has been described as the seed of Goddess Gouri. It says mercury can not only improve the quality of metals but also can make human body undecaying and imperishable.


RASAHRIDAYA is another book which talks about ‘Rasa Siddhas’. They got another body without quitting their own bodies .

Asmaga was a Buddhist monk of Gandhara who lived around 400 CE. He composed Yogachara Bhumisastra. He introduced Patanjali yoga principles into Buddhism.

During the reign of the Pala Dynasty, there were many masters of magic and ‘Mantra Vajracharyas’, who performed the most prodigious feats with the Siddhis they attained. Siddhis are of eight types with which one becomes Superman with supernatural powers .


Following Buddhist works are minor chemistry books:-


RASAHRIDAYA was written by Govindabhagavat around 11 th century at the request of king of Bhutan, Kirataland .


RASENDRACHUDAMANI of Somadeva compiled lot of information from early works. He has praised Nagarjuna and others.


RASAPRAKASA SUDHAKARA by Yasodhara is another important work of 12th century.


Metallurgy of Zinc is explained in RASA RATNA SAMUCHCHAYA.


RASAKALPA is part of Rudrayamala Tantra which describes metals and minerals and the methods to kill/ treat them.


About the gigantic voluminous encyclopaedic Tibetan Tanjur and Kanjur, a separate article is posted already.

Please see the attached list of Chemistry Books (In Sanskrit):–

ONE PAGE FROM EACH CHEMISTRY BOOK

—–SUBHAM——

முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து! (Post No7176)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 4 NOVEMBER 2019

Time  in London – 6-48 am

Post No. 7176

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

  

மாலைமலர் 2-11-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து!

ச.நாகராஜன்

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே!

பூமித் தாய் இயற்கையில் நமக்கு நிலத்தில் தந்துள்ள தாதுக்கள், உலோகங்கள் உள்ளிட்ட விலை  மதிக்கமுடியாத பொருள்களைப் பற்றிச் சற்று நாம் அறிவோம்; ஆனால் கடலில் உள்ள செல்வத்தில் ஒரு சிறிதேனும் கூட இதுவரை நாம் முழுவதுமாக அறியவில்லை. அப்படி ஒரு அற்புத வளத்தைக் கடல் கொண்டுள்ளது.

அந்தக் கடல் வளத்தில் இயற்கையாக ஒளிரும் ஒன்று தான் நவரத்தினங்களில் ஒன்றான முத்து.

மிகப் பழைய காலம் தொட்டு பாண்டிய நாடு, ‘முத்துடைத்து’ என்ற  பெரும் புகழைப் படைத்த நாடாக இருந்து வந்திருக்கிறது.

தாலமி,பெரிப்ளஸ் ஆகியோர் கொற்கை முத்துக்களைப் பற்றியும் இதை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வெளிநாட்டார் வந்ததையும் பதிவு செய்திருக்கின்றனர். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுந்தம் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமாக கொற்கை இன்றும் புகழுடன் திகழ்கிறது.

ஆழ்கடலில் மூழ்கி மூச்சைப் பிடித்து முத்தை எடுத்து வருவது ஒரு அபூர்வமான தனித்துவம் வாய்ந்த கலை; பயிற்சி.

இதில் கொற்கையைச் சார்ந்த பகுதி வாழ் மக்கள் ஏராளமானோர் நிபுணர்களாக இருந்தனர்.

சிறிய அளவிலிருந்து பெரும் அளவிலான ஒளிரும் அரிய முத்துக்களை அவர்கள் கொண்டு வர மாபெரும் மன்னர்கள் அதை வாங்கி அணிவது மரபாக இருந்து வந்தது.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே

    மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

     நம் அருள் வேண்டுவது மேற்கரையிலே

என்று மஹாகவி பாரதியார் நம் முத்தை வாங்க வரும் வெளிநாட்டார் அதைத் தந்து ‘அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டுவதைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

முத்தைச் சிறப்பிக்காத கவிஞர்களே இல்லை. முத்தன்ன வெண் நகையாள் என்று பாவையரின் பளீரென்ற சிரிப்பில் ஒளிரும் பற்கள் முத்துப் போல் ஒளிர்வதைச் சொல்லாத கவிஞர் யார்?

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே, (பாமா விஜயத்தில் கவிஞர் கண்ணதாசன்),

பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லை கொடி யாரோ (உலகம் சுற்றும் வாலிபனில் கவிஞர் வாலி),

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ (நெஞ்சில் ஓர் ஆலயத்தில் கவிஞர் கண்ணதாசன்) என்பன போன்ற நூற்றுக் கணக்கான திரைப்படப் பாடல்களிலும், ஆயிரக்கணக்கான தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் மற்றும் இதர பாடல்களிலும் முத்தின் சிறப்பு போற்றப்படுகிறது.

ஜோதிடத்தில் முத்து!

முத்து சந்திரனுடன் தொடர்பு கொண்ட ரத்தினம். எண் கணிதத்தில் இரண்டு என்ற எண்ணிற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. கடக ராசிக்காரர்களும் சந்திர தசை நடப்பவர்களும் முத்து அணிவது நலம் பயக்கும்.

சந்திரன் மனதிற்கு அதிபதி (சந்த்ரமா மனஸோ ஜாத: என்கிறது வேதம்) மனதிற்குச் சந்திரன் தரும் குளிர்ச்சியை முத்தும் தரும்.

முத்து உருவாகும் விதம்!

பரல்,நித்திலம், ஆரம்,தரளம், மூரி வஞ்சி, தூலகம், சுக்கிரன், ஆதித்தன், சோதி, ஆழிவித்து,கத்தலம்,மௌத்திகம்,முக்தா, மஞ்சரி என்று இப்படி தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் முத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் பரவலாக பெண்களுக்கு இருக்கும் பெயரான மார்கெரட்டுக்கு முத்து என்பதே பொருள். முத்துக்கான பெர்சிய வார்த்தை மர்கரிடா. இந்த பெர்சிய வார்த்தை மஞ்சரி என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து தோன்றியது.

ஆயிஸ்டர் (Oyster) எனப்படும் ஒரு வகை கடல் வாழ் சிப்பிகளின் உடலுக்குள் புகும் மண் அல்லது கிருமி போன்ற ஏதேனுமொரு துகளைச் சுற்றி சிப்பி சுரக்கும் திரவம் அடுக்கடுக்காகப் படியும். தனது உடலுக்குள் புகுந்த பொருள் தன்னை உறுத்தாமலிருக்க முத்துச் சிப்பி இப்படி திரவதத்தைச் சுரக்கிறது. இந்த திரவம் அடுக்கடுக்காக ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்து முத்தாக உருவாகிறது.

ரசாயன முறைப்படி இதைப் பகுத்துப் பார்த்தால் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருள் ஆகும்.

செயற்கை முத்து!

கடந்த  நூறாண்டிற்கும் மேலாக முத்தைப் “பயிர் செய்து அறுவடை செய்வது” நடந்து வருகிறது. ஆம் ஜப்பான் தான் இதற்கு முன்னோடி.

இயற்கையில் கிடைக்கும் முத்துச் சிப்பிகள் எல்லாவற்றிலும் முத்து கிடைப்பதில்லை; அப்படியே கிடைப்பதில் அனைத்துமே நல்ல முத்துக்கள் தான் என்று சொல்லவும் முடிவதில்லை.

ஆகவே கடலிலுள்ள முத்துச் சிப்பிகளைப் பிடித்து வந்து அவற்றின் உடலில் செயற்கையாக மண் துகளைப் புகுத்தி மீண்டும் கடலுக்குள் இறக்கி விடுகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் அவற்றில் முத்து உருவாகி விடும்.

இப்படி செயற்கை முறையில் வளர்த்து உருவாக்கப்படும் முத்துக்கள் ‘வளர்ப்பு முத்துக்கள்’ (Cultured Pearls) என்று அழைக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களில் ஏராளமான வகை முத்துக்கள் இன்று கிடைக்கின்றன.

செயற்கை முறையில் முத்தைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் ஜப்பான், ஆண்டுக்கு சுமார் 20 டன் என்ற அளவில் முத்தை உற்பத்தி செய்கிறது. ஜப்பானில் உள்ள அகோ வளைகுடாவில் முதன் முதலில் செயற்கை முத்து 1893ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது அகோயா முத்து (Akoya pearl) என அழைக்கப்பட ஆரம்பித்தது.

நல்ல முத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

செயற்கை முறையிலும் இயற்கை வடிவிலும் முத்துக்கள் இன்று கிடைப்பதால் ஒரு நல்ல முத்தை இனம் காண்பதற்குள் நமக்குப் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.

செயற்கை முத்துக்கள் பல்கிப் பெருகி இருப்பதாலும் அதன் விலையும் இயற்கை முத்தை விடக் குறைவாக இருப்பதாலும் அதில் செய்யப்படும் மாலைகளின் டிசைன் எனப்படும் வடிவமைப்பு ஏராளமாக உருவாகி விட்டன. ஒவ்வொரு ஹாரத்திற்கும் – நெக்லெஸிற்கும் ஒவ்வொரு பெயர் – பார்த்தாலே வாங்க வைக்கும் கவர்ச்சி மாலைகள் இவை!

நமது சாஸ்திரங்கள் சொல்லும் பலன்கள் இயற்கை முத்திற்குத் தான்; அதை மனதில் கொண்டே முத்தை அணுக வேண்டும்.

நல்ல முத்தை எப்படி இனம் காண்பது?

சுலபமான வழிகள் இருக்கின்றன.

எக்ஸ்-ரேயின் உதவி கொண்டு இயற்கை முத்து எது, செயற்கை முத்து எது என்று கண்டுபிடித்து விடலாம். முத்தின் உட்பகுதியில் உள்ள கருவைக் கொண்டு இயற்கையையும் செயற்கையையும் எக்ஸ்-ரே இனம் பிரித்து விடும்.

எண்டோஸ்கோப் (Endoscope) என்னும் கருவியின் மூலமும் இயற்கை முத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

அடர்த்தி எண்ணைக் காண அடர்த்தி எண் சோதனை (Specific Gravity test) வேறு இருக்கிறது.

முத்தின் ஒப்படர்த்தி 2.60 முதல் 2.85 வரை இருக்கும்.

ப்ரோமோபார்ம்(Bromoform) ஆல்கஹால் (Alcohol) கலந்த கரைசலை 2.74 அடர்த்தி எண்ணுக்குக் கொண்டு வந்து அதில்  முத்துக்களைப் போட்டால் வளர்ப்பு முத்து மூழ்கி விடும். இயற்கை முத்து மிதக்கும்.

போலி முத்துக்களை எப்படிக் கண்டுபிடிப்பது? மிகவும் சுலபமான வழி ஒன்று இருக்கிறது.

முத்தை எடுத்து பல்லின் தட்டையான பகுதியின் மீது உரசிப் பார்க்க வேண்டும். அப்படி உரசும் போது முத்தின் மேற்பரப்பு வழுவழுப்பாக இருந்தால் அது போலி முத்து. அதாவது முத்துப் போல இருக்கும் ஒரு பொருளை மேல் பூச்சாகக் கொண்டிருக்கும் போலி முத்து அது. ஆனால் பல்லில் உரசும் போது அது சற்று சொரசொரப்பாக இருக்குமானால் அது நல்ல முத்து. இயற்கை முத்தின் மேலோடு சற்று கரடு முரடானது தான். ஆகவே தான் இந்த எளியை வழியைக் கடைப்பிடித்து போலிகளை இனம் கண்டு ஒதுக்கி விடலாம்.

ஆனால் இப்படிக் கண்டுபிடிப்பதற்கு அனுபவமும் பயிற்சியும் தேவை என்பதால் ஒரு நிபுணரை அணுகுவதே நல்லது.

ரத்தினங்களின் ராணி!

உயிர்வாழும் ஒரு பிராணியிடமிருந்து கிடைக்கும் ஒரே ரத்தினம் முத்து தான். பத்தாயிரம் சிப்பிகளில் ஒன்றில் தான் அரிய முத்து கிடைக்கிறது.

‘ரத்தினங்களின் ராணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் முத்து பெண்களைப் பெரிதும் கவரும் அரிய சொத்து.

முத்தின் கடினத் தன்மை ‘மோ அலகின்’ படி 2.5 முதல் 4.5 முடிய இருக்கும்.

முத்தின் விலை மிகச் சிறிய தொகையிலிருந்து ஆரம்பித்து  மலைக்க வைக்கும் பல கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

முத்து வட்ட வடிவமானதால் அதன் குறுக்களவை வைத்துத் தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 3 மில்லிமீட்டர் முதல் 9 மில்லிமீட்டர் வரை சாதாரணமாக முத்து கிடைக்கிறது. குறுக்களவு அதிகமாக ஆக அதன் விலையும் கூடிக் கொண்டே போகும்.

பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்தின் விலை நூறு மில்லியன் டாலர். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூபாய் 70; ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) 28 அங்குல நீளமுள்ள இது 75 பவுண்ட் எடை கொண்டது. இது தான் உலகின் பெரிய அரிய முத்து.

முத்தின் மீதான கவர்ச்சி தான் ஜூலியஸ் சீஸரை இங்கிலாந்தின் மீது பார்வையைப் பதிக்க வைத்தது. பிரிட்டனில் வேல்ஸ் பகுதியில் கான்வே என்னும் நதியில் அழகிய முத்துக்கள் கிடைக்கவே சீஸர் இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். சீஸர் அரசாங்கத்தில் உயரிய நிலையில் இருக்கும் பிரபுக்கள் மட்டுமே முத்தை அணிய வேண்டும் என்று சட்டமே கொண்டு வந்தார்.

முத்தின் பயன்கள்!

ரத்தினங்களைப் பற்றி விளக்கிக் கூறும் ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் நமக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைகிறது.

முத்து குளிர்ச்சியானது. கண்ணுக்குப் பெரிது பலனளிக்கும் ஒன்று! அது வலிமை தரும்; உடலுக்கான சக்தியைக் கூட்டும். பெண்களின் கவர்ச்சியைக் கூட்டும்; பெண்கள் அதை அணியும் போது அவர்களின் மீது அன்பு அதிகரிக்கும்; மோகமும் கூடும்.

ஒருவர் உடலில் இருக்கும் அதிகமான வாயு மற்றும் பித்தத்தை அது சமனாக்கும். இருமல், ஆஸ்த்மா, ஜீரண சக்தி குறைந்திருத்தல் போன்றவற்றை நீக்கும். அழகு, வலிமையுடன் ஆயுளையும் அது நீட்டிக்கும். வீக்கத்திற்கும் விஷத்திற்கும் அதுவே மருந்து.

கடலிலிருந்து கிடைக்கும் முத்து ஜீரண சக்தியை அதிகரித்து ஜீரண மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோளாறுகளையும் போக்கும்.

முத்தின் பயன்களாக  பண்டைய நூலான ரஸஜலநிதி தரும் தகவல்கள் இவை.

பிரமிக்க வைக்கும் பல வகை முத்துக்கள்!

சிப்பியில் வளரும் முத்துக்களைத் தவிர பல பிரமிக்க வைக்கும் முத்துக்களைப் பற்றியும் இந்த பழைய நூல் பல விவரங்களைத் தருகிறது.

முத்தின் ரகங்கள் : யானை, தவளை, சங்கு, மீன், சிப்பி மற்றும் மூங்கில். இப்படி முத்தை இனம் பிரித்துக் காட்டுகிறது இந்த நூல்!

யானை முத்து : இந்த ரகம் அளவில் பெரியது. வெவ்வேறு அமைப்பு உடையது. ஐராவதம் போன்ற யானையின் நெற்றியில் தோன்றும் அபூர்வ முத்து. இதற்கு விலை என்று ஒன்றை நிர்ணயிக்கக் கூடாது; நிர்ணயிக்கவும் முடியாது. இது புத்திர பாக்கியம், நோயற்ற வாழ்வு, வெற்றி ஆகியவற்றை நல்கும்!

அரவ முத்து : அரவம் என்றால் பாம்பு. அரவ முத்து அழகுடையது; நீல ஒளி உடையது. இது மூன்று அளவுகளில் கிடைக்கும். இதை எப்படி சோதனை செய்வது? திறந்தவெளியில் ஒரு வெள்ளிக் குடத்தில் இதை வைத்தால் உடனடியாக வானத்திலிருந்து நீர்த்துளிகள் விழும். அப்படி விழவில்லை எனில் இது நிஜமான அரவ முத்து இல்லை.

மீன்  முத்து : ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை திமிங்கிலத்தில் உருவாகும் முத்து இது. இலேசாக இருக்கும் இது. மீன் முத்து மீனின் கண்களைப் போல இருக்கும்.

மூங்கில் முத்து : மூங்கிலிலிருந்து கிடைக்கும் முத்து இது. பச்சையுடன் கூடிய வெள்ளை வண்ணம் உடையது இது. வலிமையுடன் கூடிய இது கனமாக இருக்கும்.

சங்கு முத்து : சங்கு கிளிஞ்சலிருந்து கிடைக்கும் இந்த முத்து சந்திரனைப் போல வெள்ளை வெளேரென இருக்கும். உருண்டையாகவும் ஒளியுடனும் அழகுடனும் இருக்கும் புறா முட்டை அளவு இருக்கும்!

தவளை முத்து : தவளையின் தலையில் உருவாகும் முத்து இது.

கடல் சிப்பியில் உருவாகும் முத்து : ஸ்வாதி நட்சத்திரத்தில் சூரியன் இருக்கும் போது சிப்பி வானிலிருந்து விழும் மழைத்துளியை ஏற்கும்; அது நாளடைவில் முத்தாக மாறும். இதுவே சிறந்த முத்து.

மேலே கூறியவற்றில் கடல் சிப்பியில் அல்லாது இதர வகை முத்து கிடைக்கப் பெற்றால் அதுவே மிகமிகச் சிறந்தது.

அழகிய முத்து கடவுள் தந்த சொத்து!

முத்தின் வண்ணத்தைப் பொறுத்து அது வகைப்படுத்தப்படுகிறது.

சிறந்த முத்து என்பது தெளிவாக, வெண்மையாக ஒளிரும் தன்மையுடன் இருக்கும். சற்று மஞ்சள்பழுப்பு வண்ணத்தில் இருக்கும் முத்து இரண்டாம் ரகத்தது. மூன்றாவது ரகம் என்பது சிறிதே மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன், பிரகாசமாக, எண்ணெய் பசையுடன் இருப்பது போல இருக்கும்.நான்காவது ரகம் சிறியதாக, வெண்மை நிறத்துடன் கறுப்பு ஒளியுடன் இருக்கும்.

ஒளியற்ற, தாமிர நிறமுடைய, மங்கலான,  முடிச்சுடன் கூடிய முத்துக்கள் அணியக் கூடாதவை.

இந்தத் தகவல்கள் அனைத்தும் ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்.

ஆனால்  இந்த நூல் கூறும் பல வகை முத்துக்களில் முத்துச் சிப்பியில் தோன்றாத யானை முத்து, அரவ முத்து போன்ற இதர வகைகள் இலக்கியத்தில் மட்டுமே காணப்படுகிறது; இயற்கையில் லட்சத்தில் ஒருவருக்கேனும் இவை கிடைத்திருக்குமா, தெரியவில்லை!

மனதை அமைதிப் படுத்தி இன்ப உணர்வைத் தரும் வானத்துச் சந்திரனைப் போல, நம் உடலிலேயே தவழ்ந்து உன்னத மகிழ்ச்சி தரும் முத்துக்கு இணை உண்டோ?

முத்தான முத்து – கடவுள் மனித குலத்திற்கு அளித்த சொத்து!

Old Articles in the blog

முத்து தோன்றும் இடங்கள் | Tamil and …



https://tamilandvedas.com › tag › முத்து-தோ…

  1.  

8 Jan 2017 – Tagged with முத்து தோன்றும் இடங்கள். முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524). Research Article … https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/.

முத்து | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › முத்து

  1.  

12 Feb 2015 – முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் …

pearls in vedas | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › pearls-in-vedas

  1.  

17 May 2014 – Posts about pearls in vedas written by Tamil and Vedas.

Types of pearls | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › types-of-pearls

  1.  
  2.  

9 Feb 2015 – Posts about Types of pearls written by Tamil and Vedas.

****

மாநகரங்களில் அதிசய இரும்புத் தூண்கள், உத்தரங்கள் (Post No.7172)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 3 NOVEMBER 2019

Time  in London – 13-31

Post No. 7172

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

iron beams in Puri Temple
Iron beams in Konarak
Delhi Iron Pillar

அந்தக் கால இந்தியா ‘இரும்பு இந்தியா’ என்பதற்கு நமது ராட்சத பீரங்கிகளும் சான்று பகர்கின்றன. அவற்றைத் தனியே காண்போம்.

written by london swaminathan in 1980s

–subham–