மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்! (Post No.4379)

Written by S.NAGARAJAN

 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4379

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் தமிழ் மாத பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

வள்ளலார் காட்டும் ஆரோக்கிய நெறி

 

மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!

 

ச.நாகராஜன்

1

இவ்வுல்கத்தில் ஆறறிவுள்ள உயிர் உடைத்தாகிய தேகத்தைப் பெற்ற வள்ளலார் தேகத்திற்கு இடையிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டு அந்த் தேகத்தையே நித்திய தேகமாக்கத் திருவுள்ளம் கொண்டார்.

அனைவரும் வியக்கும் வண்ணம் தான் அறிவித்தபடியே ஒளி உடலாக மாறி, நித்திய தேகியாக இருக்கிறார்.

சரித்திரம் அறிவியல் பூர்வமாகக் கண்ட உண்மை இது.

அவர் மரணமில்லாப் பெருவாழ்வைச் சித்திக்கலாம் என்று சொல்லில் மட்டும் சொல்லாது அதைச் செய்து காட்டிய மாபெரும் மகான்.

பசிப் பிணி நீக்குதல் முதல் தர்மம் என்றார் அவர்.

இந்த தேகத்தைப் பிணியிலிருந்து விடுவித்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழப் பல அறிவுரைகளையும், குறிப்புகளையும் அவர் தந்துள்ளார்.

ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ் நாளையும் பெற விரும்புவோர் நாட வேண்டிய ஒரே சந்நிதானம் வள்ளலார் சந்நிதானம் தான்.

 

2

அவரது ஏராளமான சிறு சிறு குறிப்புகள் ஒவ்வொன்றும் நீண்ட வாழ்நாளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கான இரகசியங்கள்.

ஏராளமானோரை பல்வேறு வியாதிகளிலிருந்து அவர் குணப்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ள இரு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

கருங்குழியில் இருந்த பாலு ரெட்டியார் என்பவர் குஷ்ட நோயினால் துன்பமுற்றார். அவர் சுவாமிகளை அணுகவே வள்ளலார் திருநீறு கொடுத்து அதைத் தீர்த்தார்.

முத்து நாராயண ரெட்டியார் என்பவருக்கு கண் பார்வை பாதிக்கப்படவே அவரது கண் மறைவினையும் தீர்த்தருளினார்.

இது போல அவர் நோய் தீர்த்த சம்பவங்கள் ஏராளம்.

அனைவரும் அனுசரிக்க வேண்டிய எளிய குறிப்புகளை அவர் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.

 

சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்திருப்பதை அவர் வெகுவாக வலியுறுத்தினார்.

“புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் – பித்தொழியும்

தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி

காலை விழிப்பின் குணம்”

என்று பதார்த்த குண சிந்தாமணி காலை எழுந்திருப்பதன் பலன்களைக் கூறுகிறது.

புத்தி மனதுடன் பொருந்தும்.

தெளிவு உண்டாகும்.

நரம்புகள் எல்லாம் தூய்மை அடையும்.

பித்தம் ஒழியும். வாத பித்த சிலேத்துமங்கள் தம் தம் நிலையில் சேரும்.

இது அதிகாலை எழுந்திருப்பதன் பலன்.

பகல் உணவுக்குப் பின் சிறிது துயில் கொள்ள வேண்டும். இந்த உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கக் கூடாது. சற்றுப் படுத்து எழுந்திருப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.

இரவு உணவுக்குப் பின்னர் சற்று உலாவ வேண்டும்.

சத பதம் என்று ஆயுர் வேதம் கூறும். உணவுக்குப் பின்னர் நூறு அடிகள் நட என்பது அறவுரை.

புலாலைப் புசிக்காதே – எந்நாளும்.

சன்மார்க்க உணவை எடுத்துக் கொள். (இதைப் பற்றி மிக விரிவாக அவர் எழுதியுள்ளார்)

இவையெல்லாம் அவரது அறிவுரைகள்.

 

3

சஞ்சீவி மூலிகைகளான கறுப்பு நாயுருவி, குளிர்ந்த கொள்ளி, தீப்பூடு, முத்துப் பூண்டு, கருங்காந்தள் ஆகிய ஐந்து மூலிகைகளின் குணங்களை அவர் வரையறுத்துக் கூறியுள்ளார்.

முத்துப்பூண்டை பறவைகளின் காதில் சிறுகச் சிறுக விட்டால் அவை உயிர் பிழைக்கும் என்பது அவரது அருளுரை.

இருமல், தேகமெலிவு,நீர்க்கோவை, சரீர திடம் ஆகியவற்றிற்கான மருத்துவக் குறிப்புகளை அவர் மிகத் தெளிவாகத் தந்துள்ளார்.

 

4

வள்ளலாரின் மிக அற்புதமான் ஒரு சித்தி அவர் ஏராளமான மூலிகைகளை அறிந்திருந்ததோடு அவற்றின் பயனைப் பற்றி உலகத்திற்கு தீர்க்கமாக அறிவித்தது தான்.

 

இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி அவர் ஏராளமானோரைக் குணப்படுத்தியதை அவர் வாழ்க்கை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

485 மூலிகைகளின் பெயரைக் கூறி அதன் குணத்தை அவர் ஒரே வரியில் கூறி இருப்பது வியக்க வைக்கும் ஒரு மாபெரும் சாதனையாகும்.

எடுத்துக் காட்டாக ஒரு பத்து மூலிகைகளை மட்டும் இங்குக் குறிப்பிடலாம்.

மாகாளி – மயக்கம் போம்

நீர்விளா – பைத்தியம் போகும்

மாஞ்சரோணி – கண் புகைச்சல் தீரும்

தும்பை – ஜுரம் போகும். சில் விஷம் போகும்.

தாமரை – கண் குளிர்ச்சி

ஆலுக்கு – புழுக்கள் போகும்

அரசுக்கு – புத்தி வர்த்தினி

இச்சில் – குஷடம் போகும்

கீழாநெல்லி – காமாலை போகும்

திப்பிலி – தாது விருத்தி உண்டாகும்.

இப்படி 485 மூலிகைகளுக்கான குணத்தைப் படிக்கும் போது தன்வந்திரி நேரில் வந்து சொல்வது போல மருத்துவக் குறிப்புகளைக் கண்டு வியக்க முடிகிறது.

 

5

கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல் ஆகிய ஐந்தும் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. இவற்றை பஞ்ச கற்பம் என்கிறார் வள்ளலார். இவற்றைப் பாலில் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும் என்பது அவரது அறிவுரை.

நித்திய கரும விதி என்று 21 அறிவுரைகளை அவர் தருகிறார். எதை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்றெல்லாம் நுணுக்கமாகக் கூறுவது அவரது தனித்துவம் மிக்க சித்தர் பாணி.

“ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீ சம், பயம் பூஜ்யம் ஆகப் பெறுதல்”- ஆகிய இவை ஆரோக்கிய வாழ்வுக்கு அவர் காட்டும் வழி.

மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுதலை மனிதனின் குறிக்கோளாகச் செய்வதற்கென அபூர்வமாக தமிழகத்தில் அவதரித்த சித்தர் வள்ளலார்.

அதன் முதற்படியாக நீடித்த ஆயுளை ஆரோக்கிய வாழ்வுடன் பெற அவரது அருளுடன் கூடிய அறிவுரைகளைப் பின்பற்றுதல் அன்பர்களின் கடமை.

 

6

வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை அவரது அணுக்க சீடரும் சென்னை பிரஸிதென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றியவருமான தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதியுள்ளார்.

 

இந்த நூலுடன் ஊரன் அடிகளார் எழுதியுள்ள திரு அருட்பா உரை நடைப் பகுதி நூலையும் இராமலிங்க அடிகள் திருவரலாறு நூலையும் வாங்கிப் படித்தால் அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 607303 தென்னார்க்காடு மாவட்டம் என்ற முகவரியில் நூலைப் பெறலாம்.

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களும் முத்தான நூல்கள். ஆரோக்கிய அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அதை நிச்சயம் நாடுவர்.

 

***

 

 

மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே! (Post No.4378)

Written by London Swaminathan 

 

Date: 8 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-23

 

 

Post No. 4378

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

மனு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுவர்; இத்து தவறு; அவர் ரிக் வேத காலத்தைச் சேர்ந்தவர். அவர் சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறார். இது கி.மு 2000ல் இருந்த நதி. பின்னர் மறைந்து போனது. மேலும் ரிக் வேதமும் மனு தர்ம சாஸ்திரமும் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவுமே சொல்லவில்லை. இது போன்ற பல விஷயங்களை  வைத்து கணக்கிட்டால் அவர், 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று நான் கருதுகிறேன். மேலும் மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ள 2000-க்கும் அதிகமான  ஸ்லோகங்களைப் படித்தால் அவர் சொன்ன விஷயங்களுக்கு நேர் மாறாக பல விஷயங்கள் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது தெள்ளிதின் விளங்கும்.

 

கி.மு முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க வம்சத்தினர் தீவிர பிராமணர்கள். அவர்களுடைய காலத்தில் தீவிரவாத பிராமணர்கள் சில விஷயங்களை சூத்திரர்களுக்கு எதிராகச் சேர்த்து இருக்கலாம். இந்துக்களின் எல்லா நூல்களும் அவ்வப்போது Update அப்டேட் செய்யப்படும் — புதுப்பிக்கப்படும் — வழக்கம் உண்டு. இதனால் கடைசி விஷயத்தை மட்டும் வைத்துக் காலக் கணக்கீடு செய்வர் வெளிநாட்டினர். ஆகவே மனுவின் தற்போதைய காலம் தவறு. மேலும் அவர் எழுதிய சாத்திரம் த்ருஷத்வதி– சரஸ்வதி நதிகளுக்கு இடைப்பட்ட மக்களுக்கானதே தவிர எல்லோருக்குமானதல்ல (அவர் எழுதிய காலத்தில்).  நிற்க.

 

சொல்ல வந்த விஷயம் மனுவுக்கு ஏன் நோபல் பரிசு தரக்கூடாது? என்பதே. மனு பேசாத பொருளல்ல; இதை சட்ட நூல் என்பதைவிட இந்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்லலாம். 2000 க்கும் மேலான ஸ்லோகங்களில் அவர் சொல்லாத, தொடாத விஷயமே இல்லை.

 

 

இப்பொழுது தாவரவியல் விஷயங்களை மட்டும் காண்போம்:

நாங்கள் எல்லாம் B.Sc. Botany பி. எ ஸ்சி. பாடனி (தாவரவியல் படித்தபோது லின்னேயஸ் என்பவர் வகுத்த தாவரப் பகுப்பைப் (Linnaeus Classification of Plants) படித்தோம். எனக்கு 100 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் வேறு Theory ‘தியரி’ படித்திருப்பார்கள். விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டே வரும். ஆக மனு சொன்னதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள  வேண்டியதல்ல. ஆனால் சில அடிப்படை விஷயங்கள் மாறாது.

காதலி மீது பூவை எறியாதீர்கள்!

ஜகதீஷ் சந்திர போஸின் முக்கிய பொன்மொழி: உங்கள் காதலி மீதுகூட ரோஜாப் பூவைப் போட்டு விளையாடாதீர்கள்; ஏனெனில் ரோஜாப் பூவுக்கு வலிக்கும்!

 

 

சர் ஜகதீஷ் போஸ் என்ற இந்திய  விஞ்ஞானிதான் தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை விஞ்ஞான முறையில் கருவிகளைக் கொண்டு நிரூபித்தார். உண்மையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் அந்தக் காலத்தில் உள்ள இன வேற்று மையில் அவர் அமுங்கிப் போனார். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாகவே மனு இது பற்றிப் பேசியுள்ளார்.

 

மனு, தாவரவியல் பகுப்பு பற்றிப் பேசுகிறார்; செடி, கொடி, மரங்கள், பூவாது காய்க்கும்  மரங்கள் பற்றிச் சொல்கிறார்.

தர்ப்பைப் புல் பாய், ஆசனம், மதச் சடங்குகளில் அதன் பயன்பாடு பற்றிப் பகர்கிறார்.

தாவரங்களின் உணர்ச்சி பற்றி அவர் சொல்லுவதாவது:-

அவைகள், சுபாவத்தின்படி செயல்படுகின்றன. அவைகளுக்கு உணர்ச்சி இருக்கிறது. இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன

 

வேதங்களிலேயே மூலிகைகள் பற்றியும் அதிசயக் குளிகைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது மனு இவ்வளவு சொல்லுவதில் வியப்பில்லை. மேலும் உபநிஷத காலத்திலேயே சிறிய ஆலம் விதையிலிருந்து பிரம்மாண்ட மரம் உருவாவதை உவமையாகச் சொல்லி பாடம் நடத்தினர். தலங்கள் தோறும் புனித மரங்கள் இருந்திருக்கின்றன. நம்மாழ்வாருக்கும் தான்சேன் என்ற கவிஞருக்கும் அருள்புரிந்த புளியமரம், கிருஷ்ணன் ஆலிலைக் கிருஷ்ணனாக மிதந்த ஆலமரம், சிவன் அடிமுடி காணும் விஷயத்தில் பொய் சொன்ன தாழம்பூ, புத்தருக்கு ஞானம் கொடுத்த அரச மரம், பிராமணர்களுக்கு ஸமித்து கொடுக்கும் அரச, பலாச மரங்கள், பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த வன்னி மரம் என்று நூற்றுக்கணக்கான மரங்கள் வில்வம், துளசி போன்ற புனித தாவரங்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே — முடிவு இல்லாமல் போகும்.

 

ஜகதீஷ் போசுக்கும் மனுவுக்கும் தாவரவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு கொடுக்கலாம்.

மரங்களையோ செடி கொடிகளையோ பிராமணர்கள் வெட்டினால் ஆயிரம் வேத மந்திரம் சொல்ல வேண்டும் என்று மனு விதிக்கிறார்.

 

புனித மரங்கள் பற்றிப் பேசும் மனு, என்ன மரங்களைக் கொண்டு (staff) தடிகள் செய்ய வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.

 

 

ஆங்கிலக் கட்டுரையில் ஸ்லோகங்களின் எண்களையும் கொடுத்து இருக்கிறேன்.

 

Manu, not only a Law Maker but also a Great Botanist! (Post No.4375 …

https://tamilandvedas.com/…/manu-not-only-a-law-maker-but-also-a-great-botanist-p…

21 hours ago – Manu Smrti, law book written by Manu, talks about lot of subjects which makes it a Hindu Encyclopaedia. Manu was not only a law maker but …

 

‘Save the Trees’ and ‘Save the Forests’ in Manu Smrti! – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/save-the-trees-and-save-the-forests-in-…

7 Aug 2016 – ‘Save the Trees‘ and ‘Save the Forests’ in Manu Smrti!( … 255 Indian trees, herbs and flowers mentioned in Brhat Samhita Part-1, posted 21 …

 

 

–Subham–

கம்பன் வேய்ந்த காவிய விசித்திரம் (Post No.4373)

Written by S.NAGARAJAN

 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-12 am

 

 

Post No. 4373

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 7)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

கம்பன் வேய்ந்த காவிய விசித்திரம் தேர்ந்து கொள்ளுவர் சீரியோர்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

பாடல் 27

வேறு

காதை யுள்ளமை காதைக

ளோதும் வாறெவர் ஓதினார்

மோது வார்புனற் கங்கைசார்

போது லாம் அதி போயபோல்?

 

பாடல் 28

இராம கதையெ னாவியல்

அராம மேலிடு வார்க்கிவை

சிராமம் * தீர்த்திடச் சிந்துபூம்

பராகப் பித்திகைப் பத்தியே

*சிரமம் என்னும் சொல் நீண்டு நின்றது

 

பாடல் 29

படிகம் போல்தெளி பனுவலும்

அடிக ளோடும் ராகமும்

துடிகள் தூக்கும் நோக்கமும்

வடிகொ ளும்பொருள் வண்மையும்

 

பாடல் 30

போந்த காதையின் போக்கொடு

ஆய்ந்து நோக்கியம் மாகவி

வேய்ந்த காவிய விசித்திரம்

தேர்ந்து கொள்ளுவர் சீரியோர்

 

 

பாடல் 31

செந்தொ டையொடு செம்பொருள்

வந்து லாவு கிளைக்கதை

முந்து சந்த முதற்கதைக்

குந்து  மந்தமில் லந்தமே

 

பாடல் 32

ஆன்ற ஓவியச் சீரையார்ந்

தேன்றி லங்குறு சித்திரம்

தோன்ற லான எழிற்சுடர்

ஞான்ற பின்னொடு நாறுமே

 

பாடல் 33

இசைக் கிசைதரு பின்னிலை*

இசைய தாகி யிணைந்தபோல்

வசையில் மாக்கதை மாணுற

அசைப்ப ராலநு காதையே

  • பின்னிலை :- Background – சித்திரக் கலைகளில் எழும் உருவங்களின் எழிலை மிகுக்க அவற்றின் பின்னமைக்கப்படுமரங்கத்தினையே இங்குப் பின்னிலை என்று சுட்டினேன்.

 

 

பாடல் 34

வேறு

காவின வேந்தனும் காவினைத் துறந்தனன் கமலப்

பூவின் வேந்தனும் படைப்பினிற் பொலிவழிந் தொழிந்தான்

சாவின் வேந்தனும் தண்ணளி காட்டிடச் சமைந்தான்

பாவின் வேந்தனாம் கம்பன்பா பம்புபன் னலத்தான்

 

பாடல் 35

கள்ளுண் மாந்தரும் கள்ளினைக் கைப்பெனக் கனன்றார் புள்ளுண் வேடரும் புனிதநன் னெறிவந்து புகுந்தார்

உள்ளுண் யோகியர் உறுபதம் சிறிதென ஒறுத்தார்

தெள்ளு தீந்தமிழ்க் கம்பன்செய் தென்கவி யின்பால்

 

பாடல் 36

ஆடல் வேண்டலர் ஆடின அரங்கிள மகளிர்

பாடல் வேண்டலர் பண்ணிசைக் கண்ணுளர், வெறிதார்

சூடல் வேண்டலர் தோகையர் கம்பன் சொல் லமிர்தம்

நாடல் வேண்டினர் நண்ணுறா மகிழ்ந்துய்க்க நயந்தே

 

பாடல் 37

எந்தச் சாதியர் எத்தொழி லாளரைப் பாலார்

சிந்த னைதெளி முதியரோ டிளைஞரா தியபேர்

அந்த மில்லராம் வேற்றுமை யாளரிக் கவியிற்

றந்த மக்குள தத்துவம் கண்டுளம் தழைவார்

 

பாடல் 38

சமைய வாதியர் தருக்கஞ்செய் தொக்கெலாம் தவிர்ந்தே

அமைய நின்றொளிர் அலகிலா வருந்தளிப் பொருளை

உமையின் பாகனோ டிலக்குமி கேள்வனென் றுன்னா

தவனி நாதனென் பொதுமையிற் காப்பொன்றே பணிந்தான்

 

Greek Poet Homer

 

பாடல் 39

ஹோமர் மாகவி யுதித்தவூர் வூங்கல அலவீ

காமென் றேயெழு நகரங்கள டுத்துப்போர் தொடுத்த

பாம கள்பணி கம்பனை யப்பரி சுரைத்த

பூமியிற்பெரி யாரையார் தம்மொழும் புணர்ந்தார்

 

பாடல் 40

வீறெ டுத்தகா வியமெனுங் கரும்பின்கான் விரித்துக்

சாறெ டுத்துல கர்க்கொரு காப்பியம் சமைத்தான்

சேறெ டுத்தமண் டூகம்போற் றேறலுண் ணாதே

மாறெ டுத்ததம் மதமுரை நூலென்றும் மருண்டார்

 

 

*

அருமையான் இப்பாக்களில் கவிஞர் சிவராஜ பிள்ளை ஸ்படிகம் போலத் தெளிவு,ராகம்,நல் நோக்கம், பொருள் வண்மை கொண்ட பாக்கள் கம்பனது பாக்கள் என்கிறார்.

மாகவி வேய்ந்த இந்தக் காவிய விசித்திரம் படித்து அதன் பொருளைத் தேர்ந்து கொள்ளுவர் சீரியோர் என்பது அவரது முடிவு.

 

பாவின் வேந்தனின் பாக்களைக் கேட்ட சாவின் வேந்தன் தண்ணளிக் காட்டிடைச் சமைந்தானாம்.

கள்ளுண்போர் கள்ளை விட்டனர். பறவையை உண்ணும் வேடர் தம் தொழிலை விட்டுப் புனித நன்னெறி வந்தனர். யோகியரோ உறுபதம் மிகச் சிறிது என்று எண்ணி மனம் மாறிக் கம்பனைக் களிக்க வந்தனராம்.

 

 

டான்ஸ் ஆடும் மகளிர் நாட்டியத்தை விட்டனராம். இசைக் கலைஞர்கள் பாடல் வேண்டாம் என்றனராம். அழகிகளோ மலர் மாலைகளைச் சூடிக் கொள்ள வேண்டாம் என்றனராம்.ஏன்? அவர்கள் நாடியது கம்பனின் அருமையான பாடல்களைத் தான்.

 

 

அது இருந்தால் போதுமாம்!

எந்த ஜாதியின்ராக இருந்தாலும் சரி, முதியவர், இளைஞர் யாராக இருந்தாலும் சரி, தனக்குள்ள தத்துவத்தைக் கண்டு மகிழ்ந்தனராம்- கம்பன் பாவில்!

 

சமயத்தை வைத்துச் சண்டை போடுவோர்க்குப் பொதுநெறி காட்டினான் புனிதன் கம்பன்.

 

ஹோமரைச் சொந்தம் கொண்டாட ஏழு நகரங்கள் போர் தொடுத்ததை வரலாறு கூறும். பாமகள் பணி கம்பனிடமோ பெரியார் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

 

கம்பனின் இன்பப் பா என்னும் தேனை அருந்தாமல் தம் தம் மதத்தையே உரைக்கும் நூல் கம்பனது நூல் என்று சேறில் உள்ள தவளை போல சிலர் கூறி மருண்டார்.

அருமையான மேலே கண்ட பாக்களில் கம்பனின் புகழைப் பாடுகிறார் கவிஞர்.

 

மேலும் தொடர்வோம்.

                                -தொடரும்

***

 

 

 

 

வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)

Written by London Swaminathan 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-36

 

 

Post No. 4372

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Sacred Tree in Varanasi/ Benares

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.

ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்

 

பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி

பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்

 

–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.

 

கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை  பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.

Kadamba Tree in Chir Ghat near Yamuna River

காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.

 

பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.

 

உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.

 

உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–

 

தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.

 

பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.

 

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில்  நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.

Picture from Lalgudi Veda

இப்படிப்  பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ்  FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.

 

மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

 

எல்லாவற்றையும் விட முக்கியமானது—

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை  மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.

 

—சுபம்—-

ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை! (Post No.4361)

Written by S.NAGARAJAN

 

 

Date: 3 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-59 am

 

 

Post No. 4361

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

ஜிஹாதியே வெளியேறு

 

ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை!

 

ச.நாகராஜன்

முஸ்லீம் மைனாரிடிகள் ஆஸ்திரேலியாவின் அரசியல் சாஸனத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதானால் இருங்கள்; இல்லையேல் வெளியேறுங்கள் என்ற ஆஸ்திரேலிய பிரதமரின் பேச்சைச் சில மாதங்களுக்கு முன்னர் கேட்டதை அனைவரும் மறந்திருக்க முடியாது.

 

ஆனால் ரஷிய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதியன்று ரஷிய பார்லிமெண்டில் நிகழ்த்திய உரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மிகச் சிறிய உரை தொடர்ந்து ஐந்து நிமிடம் கரகோஷத்தைப் பெற்றது.

 

 

அதன் சாரத்தைத் தமிழில் கீழே காணலாம்:

 

“ரஷியாவில் ரஷியர்கள் வாழ்கிறார்கள். எங்கிருந்து வந்தாலும் சரி, எந்த மைனாரிடியாக இருந்தாலும் சரி, ரஷியாவில் வாழ விரும்பினால், ரஷியாவில் உணவு உண்ண விரும்பினால் ரஷிய மொழி பேச வேண்டும். ரஷிய சட்டத்தை மதிக்க வேண்டும்.

 

அவர்கள் ஷரியத் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தால், முஸ்லீமாக வாழும் வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களை அப்படியான அரசியல் சட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள் என்று நாங்கள் அறிவுரை கூறுகிறோம்.

ரஷியாவிற்கு முஸ்லீம் மைனாடிகள் தேவையில்லை.

 

மைனாரிடிகளுக்குத் தான் ரஷியா தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு விசேஷ சலுகைகளைக் கொடுக்க மாட்டோம். அல்லது அவர்களின் விருப்பத்திற்கிணங்க எங்கள் சட்டத்தை மாற்ற மாட்டோம்.

 

 

பக்ஷபாதம் என்று அவர்கள் எவ்வளவு உரக்க ஊளையிட்டாலும் சரி, மாற்ற மாட்டோம். எங்களது ரஷிய பண்பாட்டிற்கு அவமரியாதை  செய்வதைப் பொறுக்க மாட்டோம். ஒரு தேசமாக நாங்கள் இருக்க வேண்டுமெனில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து மற்றும் பிரான்ஸின் தற்கொலைகள் மூலம் நாங்கள் கற்க வேண்டியதைக் கற்றுக் கொண்டோம். முஸ்லீம்கள் அந்த நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் ரஷியாவை ஆக்கிரமிக்க முடியாது.

 

ரஷிய பழக்க வழக்கங்களும் பாரம்பரியமும்  முஸ்லீம்களின் காட்டுமிராண்டித்தனமான ஷரியத் சட்டத்தின் பண்பாடற்ற தன்மையுடன் ஒப்பிடவே முடியாது.

இந்த மேன்மை தகு சட்ட சபை புதிய சட்டங்களை இயற்றும் போது, முஸ்லீம் மைனாரிடிகள் ரஷியர்கள் அல்ல என்பதை அது கவனித்து, ரஷியர்களின் தேசீய நலன்களை முதலில் மனதில் இருத்த வேண்டும்.”

 

 

  • SOURCE :- TRUTH VOL.85 NO. 25 – 27-10-2017 ISSUE

 

ரஷிய அதிபரான மிகமிகச் சிறிய உரை  ஐந்து நிமிடங்களுக்கு நீடித்த கைதட்டலைப் பெற்றது

 

. (A February 2013 speech by Russian president Vladimir Putin demanding that Muslim immigrants speak Russian and conform to Russian culture is apocryphal.)

 

விளாடிமிர் புடின் உரையை அப்படியே ஆங்கிலத்தில் கீழே படிக்கலாம்.

The Russian view:

 

Vladimir Putin, the Russian President, addressed the Duma, (Russian Parliament) on February 04, 2013, and gave a speech about the tensions with minorities in Russia:

 

“In Russia live Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, and live the life of Muslims then we advise them to go to those places where that’s the state law.

Russia does not need Muslim minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell ‘discrimination’. We will not tolerate disrespect of our Russian culture.

 

We had better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Muslims are taking over those countries and they will not take over Russia. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of Sharia Law and Muslims.

 

When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the Russian national interest first, observing that the Muslim minorities are not Russians.

 

TRUTH VOL.85 NO. 25

 

 

The shortest ever speech by the Russian President invited the longest standing applause for 5 minutes. (A February 2013 speech by Russian president Vladimir Putin demanding that Muslim immigrants speak Russian and conform to Russian culture is apocryphal.)

 

 

ரஷியாவை வழிகாட்டியாகக் கொண்டு, ஆஸ்திரேலியா, முஸ்லீம்கள் ஆஸ்திரேலியா சட்டத்தை மதித்து வாழ முடியுமானால் இங்கு வாழலாம்; இல்லையேல் அவர்கள் வெளியேறலாம் என்று அறிவித்து விட்டது.

 

 

ஆனால் இந்தியாவிலோ ‘ஒரு நாடு; ஒரு சட்டம்’ என்பதற்கே போலி செகுலரிஸ்டுகளும் பிரிவினையை விதைக்க நினைக்கும் போலி கிறிஸ்தவ பாதிரிகள் உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டுகளும், ஜிஹாதிகள் உள்ளிட்ட பிரிவினை வாத மைனாரிடி முஸ்லீம்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

 

ஓட்டிற்காக போலி செகுலரிஸம் பேசும் இந்தியத் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் போதும்; இந்த நாடு அசைக்க முடியாத ஹிந்து நாடாக மிளிரும்.

(நன்றி: ட்ரூத், ஆங்கில வார இதழ் – 27-10-2017)

***

 

ஒரு குட்டிக் கதை: மனதுக்கும் சொல்லுக்கும் சண்டை! (Post No.4353)

Written by London Swaminathan

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 6-43 am

 

 

Post No. 4353

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேதங்களின் துதிப்பாடல்களை அடுத்துத் தோன்றியவை பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்கள். கிரேக்கர்கள் புத்தகம் எழுதுவதற்கு முன்னரே தோன்றியவை இவை. எல்லாக் கதைகளும் உரையாடல்களும், சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கும். மொழி, சொல் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார்கள் என்றால், இவர்கள் எவ்வளவு நாகரீக முதிர்ச்சி அடைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

யார் பெரியவர்? யார் சிறந்தவர் என்று மனதுக்கும் வாக்கிற்கும் (வாக்= சொல்) வாக்குவாதம் ஏற்பாட்டது. நானே சிறந்தவன் என்று இரண்டும் கூறின.

மனம் சொன்னது: ஏ, சொல்லே, நான் நினைப்பதைத்தானே நீ பேசுகிறாய். நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட பின்னர் தானே நீ அதைச் சொல்ல முடியும்; ஆகையால் நானே உன்னை விடச் சிறந்தவன்; உயர்ந்தவன் — என்றது.

 

வாக்கு சொல்லியது: நீ என்னதான் நினைத்தாலும் நான் சொன்னால்தானே மற்றவர்களுக்குத் தெரியும்; ஆகையால் தகவல் தரும் நானே உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றது.

 

 

இரண்டும் தொடர்ந்து வாதாடின; பின்னர் வா, நாம் பிரஜாபதியிடம் (பிரம்மா) முடிவு கேட்போம் என்று புறப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பிரஜாபதி செப்பினார்: “மனதே பெரியவன்; நீ அது நினைப்பதைச் சொன்னாலும், அதைப்போல, அதைப் பின்பற்றி நடக்கிறாய் அல்லவா? ஆகையால்நீ இரண்டாம் தரம்தான்-

BRAHMA—Picture sent by Lalgudi Veda

இப்படிப் பிரஜாபதி சொன்னவுடன் வாக்கிற்குக் கோபம் வந்தது. “அப்படியா சேதி! நீ என்னை நிராகரித்தாய் அல்லவா? உன்னையும் நான் நிராகரிப்பேன். எங்கு எங்கெல்லாம் யாக யக்ஞங்கள் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உன் பெயர் வரும்போது அவர்கள் உச்சரிக்காமல் போகட்டும் -உன் பெயர் என் சொல்லால் பிரகாசிக்கக்கூடாது” என்றது.

 

ஆகையால்தான் வேத மந்திர உச்சாடனத்தில் பிரஜாபதி பெயர் வருகையில் மெல்லிய- சன்னமான குரலில் மந்திரம் சொல்லுகின்றனர்.

 

இந்தக் கதையை ஆழ்ந்து யோசித்தால் நிறைய தத்துவங்கள் விளங்கும்.

 

ஒருவர் சொல்லும் சொல், தேன் போல இருக்கலாம். ஆனால் மனதில் விஷம் வைத்திருக்கலாம். ஆகவே மனதளவில் சுத்தம் வேண்டும்; ஆகையால் மனதே உயர்ந்தது.

 

ஒருவர் பலர் அறிய அழகாக மந்திரங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் மனது காமம், க்ரோதம், பேராசையால் மூடப்பட்டிருக்கலாம். அவர் சொல்லும் மந்திரத்தை வைத்து அவரை எடைபோட முடியாது. ஆகையால் மனமே பெரியது.

 

இப்படி யோசிக்க யோசிக்க நிறைய விளக்கங்கள் கிடைக்கும்.

 

ஜபம் செய்யும்போதுகூட வாயால் மந்திரத்தைச் சொல்லுவதைவிட மனதால் சொல்லுவது பல மடங்கு பலன் தரும் என்பர் பெரியோர்.

 

ஆக மனமே பெரியது என்பதை நாமும் ஒப்புக்கொண்டு உதட்டளவில் பேசாமல் மனத்தளவில் பேசுவோமாக!

இந்தக் கதை சதபத பிராமணத்தில் உள்ளது.

TAGS:–சதபத, பிராமணம், சொல், வாக்கு, மனம், சண்டை

 

-Subham, Subham–

பிராமணங்களில் உள்ள சுவையான கதைகள் (Post No.4347)

Written by London Swaminathan

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 6-51 am

 

 

Post No. 4347

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு. சம்ஹிதை எனப்படும் துதிகள், தோத்திரங்கள் அடங்கியது முதல் பகுதி. இரண்டாவது பிராமணங்கள்; மூன்றாவது ஆரண்யகங்கள்; நாலாவது உபநிஷதங்கள். பொதுவாக கர்ம காண்டம், ஞான காண்டம் என்றும் பிரித்துப் பேசுவர்.

 

இந்த இலக்கியம் தோன்றிய பின்னரே உலகில் கிரேக்கம், லத்தீன், தமிழ் மொழி இலக்கியங்கள் தோன்றின. எபிரேய (ஹீப்ரூ) மொழியில் பைபிளின் சில பகுதிகள், சீன மொழியில் சில துண்டு இலக்கியங்கள் மட்டுமே அப்போது இருந்தன. மற்ற பழைய மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

 

பிராமணங்களிலும், வேத சம்ஹிதைகளிலும் மறை பொருளில்– ரஹசிய பாஷையில் — கவி மழை பொழிவர்- அல்லது உரையாற்றுவர்- இது புரியாத வெள்ளைத்தோல் அரை வேக்காடுகள் இதை சிறு ‘பிள்ளைத் தனமான பேச்சு’, ‘அபத்தம்’ என்றெல்லாம் எழுதிவைத்தனர். ஏனெனில் மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் இந்து சமயத்தைக் குறைகூற இவைகளைக் கற்றனரேயன்றி புகழ்பாட அல்ல. மேலும் நாங்கள் வெளிநாட்டிலுருந்து இன்று வந்தோம்; ஆரியர்களும், திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து அன்று வந்தனர் என்று சொல்லி, அவர்கள் ஆக்ரமிப்புக்கு நியாயம் கற்பித்தனர். ஆனால் இப்போதைய ஆராய்ச்சிகள் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் இருந்ததையும் அவர்கள் நாகரீகத்தின் உச்ச நிலையில் இருந்ததையும் காட்டுகின்றன.

 

பிராமணங்கள் என்ற சொல் மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் சொல். குறிப்பாக இதை ஆங்கிலத்தில் எழுதும் போது ‘பிரம்மா’ என்னும் கடவுளா, ‘பிரம்மன்’ எனப்படும் இறைவன் என்ற பொதுவான சொல்லா, பிராமணங்கள் எனப்படும் வேதப் பகுதியா அல்லது பிராமணர்கள் எனப்படும் ஜாதியா என்று 4 விதக் குழப்பம் வரும். நாம் இங்கே சொல்ல வருவது வேத கால இலக்கியமான பிராமணங்கள் எனப்படும் பகுதியே..

“ஐயா, எனக்கு இதெல்லாம் புரியாது; மேலும் சம்ஸ்கிருதமும் தெரியாது; அது மட்டுமல்ல; சம்ஸ்கிருதத்தில் உள்ள பழங்கால இலக்கியம், உலகத்திலுள்ள எல்லா பழைய இலக்கியங்களையும் சேர்த்து வைத்தாலும் அதை விடப் பெரியது; ஆகையால் நீங்கள் சொல்லுவது உண்மை என்று நான் எப்படி அறிவது? என்று கேட்பீர்களானால், நான் ஒன்று மட்டும் சொல்லுவேன். இதிலுள்ள விசயங்களின் அட்டவணையை மட்டும் பாருங்கள்; உலகிலேயே மிகப் பெரிய எண்கள், மொழி ஆராய்ச்சி, 27 நட்சத்திரங்களின் பட்டியல், வானத்தில் கிருத்திகா ரோஹிணி முதலிய நட்சத்திரங்களின் நிலைகள், பருவ காலங்கள், மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகள்—- என்று பெரிய பட்டியல் வரும் இதிலுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், நிலப்பரப்புகள், மன்னர்களின், ரிஷிகளின் பெயர்கள் முதலியவற் றை எடுத்தால் இன்னும் புரியும்; மன்னரின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் வேண்டும் என்று பேசும்; இவை எல்லாம் சிறுபிள்ளத் தனமானவையா? அல்ல, அல்லவே அல்ல. அக்னிக்கு 7, பிரஜாபதிக்கு 17, இந்திரனுக்கு 100 என்று மர்மமான எண்களையும் கொடுக்கும். ரிக் வேதத்தின் கவிஞர்களின் பெயர்களே 450 பேர்! உலகில் இது போல எங்கும் காண முடியாது. தமிழில் சங்க காலத்தில் 450 புலவர் பட்டியலைப் பார்க்க, நாம் வேதங்கள் தோன்றியதற்குப் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆக வேத கால நாகரீகம் உயர்ந்த நிலயில் இருந்தது என்பதும், அவர்கள் உலகம் முழுதும் ஆரியத்தை (பண்பாட்டினை) பரப்பினர் என்பதும் வெள்ளிடை மலையென விளங்கும்.

 

ரிக் வேதத்தில் நான்கு ஜாதிகளும் தொழில் அடிப்படையிலான சொற்கள் என்றும் (10-90) அவர்கள் இறைவனின் அங்கங்கள் என்றும் துதி உள்ளது ஆனால் வெள்ளைக்கார பாதிரிகளும், திராவிட அசிங்கங்களும் சூத்திரர் என்பவர் திராவிடர் என்று பொய்யுரை உரைத்தனர். அசுரர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று பிராமண நூல்கள் பகர்கின்றன. ஆனால் வெள்ளைத் தோல்களும் மார்கஸீய வாந்திகளும் நேர்மாறாக பொய்யுரை பகன்றனர். நிற்க. ஓரிரு கதைகளைப் பார்ப்போம்.

பிராமண நூல்களில் பெரியது சதபத பிராமணம்; அதில் வரும் செய்தி:

“மனம் என்பது ஒரு பெரிய சமுத்திரம்;  அந்தப் பெருங்கடலில் இருந்து தேவர்கள், வாக்கு (சொல்) என்னும் மண்வெட்டியைக் கொண்டு, மூன்று வேதங்களைத் தோண்டி எடுத்தனர். ஆகையால்தான் இந்தத் துதியை இங்கே சொல்கிறோம் (7-5-2-52)

 

இது சிறுபிள்ளைகளுக்கும் புரியும் உவமை; சொல்லினால் ஆனது வேதம்; அதுவும் தேவர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் மனதை ஒருமுகப்படுத்திய போது வானில் மிதந்த உண்மைகளைக் கேட்டனர். அதை நமக்கும் மொழிந்தனர்.

 

நல்லோரிடையே ஒற்றுமை வேண்டும் என்ற ஒரு கதை சதபத பிராமணத்திலும்,  ஐதரேய பிராமணத்திலும் உளது.

தேவர்களும் அசுரகளும் போட்டி போட்டனர்; தேவர்களுக்குள் போட்டி, பொறாமை மிகுந்திருந்தது. யார் பெரியவர்? நீயா நானா? என்று நினைத்ததால் தனித்தனி கூட்டணி அமைத்தனர்; அதுவும் ஐந்து கூட்டணிகள்! அக்னி தேவன் வசுக்களுடன் சென்றான்; சோம தேவன் ருத்ரர்களுடன் சென்றான்; இந்திரன் மருத்துகளுடன் போனான்; வருணன் ஆதித்யர்களுடன் சேர்ந்தான்; பிருஹஸ்பதியோ, விஸ்வே தேவர்களுடன் கூட்டணி போட்டான். பின்னர் அவர்கள் மனதில் ஒரு சிந்தனை மலர்ந்தது. அசுரர்கள் நம்மை வீழ்த்திவிடுவர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு– என்று கருதி நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக (ஓருடல்) இணைவோம் என்றனர். மாபெரும் கூட்டணி!!

நம்மில் யாராவது ஒருவர் மற்றொருவரை எதிர்த்தால் அவர், இந்த அமைப்பிலிருந்து வெளியே தள்ளப்படுவார். நாம் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தால் (உறுதிமொழி) கட்டப்பட்டுள்ளோம்; யாராவது இதை மீறினால்– இந்த ஒரே உடலைக் காயப்படுத்தினால், அவருக்கு அழிவு வரும்! எந்த மனிதன் இந்த ஓருடல் உடன்படிக்கையில் சேருகிறானோ அவன் வெற்றி பெறுவான்; எதிரிகளை ஒழிப்பான்.”

 

இந்த உடன்படிக்கைக்கு “தானனப்த்ரம்” என்று பிராமணங்கள் பெயர் கொடுத்துள்ளன; இதன் பொருள் “ஓர் உடல் (இணைந்த உடல்)”.

இன்றைய அரசியல் கட்சி ஒப்பந்தங்கள், ‘நாட்டோ’ போன்ற ராணுவக் கூட்டு ஒப்பந்தங்களிலும் இதே வாசகங்களைக் காணலாம். வெள்ளைக்காரர்கள் — கொள்ளைக்காரர்கள் — கணக்குப்படியே இந்த பிராமணங்கள் கி.மு 1000ல் தோன்றின. நமது கணக்குப் படியோ அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. எது எப்படியாகிலும் இதை ‘சிறுபிள்ளைத் தனமான’ இலக்கியம் என்று சொல்லும் கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் மெகாலேக்களையும் ‘அடு மடையர்கள்’, ‘மடத் தடியர்கள்’ என்று சொல்லுவது பொருத்தம்தானே?

மன்னர்களின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று சதபத பிராமணத்தில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. மன்னன் பிரஜாபதி (பிரம்மா); பிரஜாபதிக்கும் எண் 17; ஆகையால் 17 வகை நீர், மன்னனை அபிஷேகம் செய்யத் தேவை; அப்படிச் செய்தால் 17 வகை சக்தி அவன் உடலில் ஏறும் என்றும் பிராமணம் (for more details, please see my English version of this article) சொல்லும்.

 

இந்துக்கள் மத்திய ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் வந்து குடி ஏறியதாகப் பிதற்றும் பேதைகளுக்கு அறிவிலிகளுக்குச் சரியான பாடம் கற்பிப்பது வேத கால இலக்கியம்; இறப்பு முதல் பிறப்பு வரை சமயச் சடங்குகளில் தண்ணீரைப் பயன்படுத்துவது இந்துக்கள் மட்டுமே; ரிக் வேதத்தில் தண்ணீரைப் போற்றி  வரும் மந்திரங்களைப் பிராமணர்கள் இன்றும் தினசரி சந்தியாவந்தனத்தில் சொல்லுகின்றனர். தண்ணீரைக் கொது சந்தியா வந்தனம் செய்கின்றனர். ஆகையால் இவை எல்லாம் கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் தலையில் விழும் இடிகள் என்று சொன்னால் அதை மறுப்பாரிலை!!!

TAGS:–பிராமணங்கள், கதைகள், சதபத, ஐதரேய, ஒற்றுமை, கூட்டணி

— சுபம், சுபம் —

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

 

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 14-14

 

 

Post No. 4344

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.

இதோ ஓரிரு படல்கள் மட்டும்!

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்

 

அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்

 

பொருள்:-

இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்

 

இடர் ஆழி= துயரக் கடல்

 

ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.

உடம்பெனும் மனையகத்து  உள்ளமே தகளியாக

மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

–நாலாந் திருமுறை

 

பொருள்-

உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.

 

உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான   பொருளைக் காணலாம்.

கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை

 

திருமங்கை ஆழ்வார்

 

ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்

 

 

வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து

 

கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி

 

 

ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து

 

நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்

என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.

சுபம்

 

 

நான் மறை என்றால் என்ன பொருள்? (Post No.4343)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 7-32 AM

 

 

Post No. 4343

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

1.நான் மறை என்றால் நான்கு வேதங்கள்: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

2.நான் மறை என்றால்  – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்

 

3.நான் மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் நால் வேத மந்திரங்கள்.

 

4.நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று ஜாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர்– ஆகிய மூன்று ஜாதியினர் மட்டுமே அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிராமணர்கள், வெள்ளைக்கார பறங்கித் தலையர்க்கு வேதம் கற்றுததர மறுத்தனர். பின்னர் பேரசைக்காரப் பார்ப்பனர்கள் சிலர் அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் வேதமும் கற்பித்தனர்.

5.நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

யான்= அஹம்+காரம் (அஹம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் நான்)

 

எனது= மம+காரம் ( மம என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “என்”னுடையது என்று பொருள்.

 

நான் மறைகளும் புரிந்துவிட்டதா?

 

–சுபம்-

சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340)

Written by London Swaminathan

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4340

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நீங்கள் தீவிர சிவபக்தரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கேள்வி-பதில் (QUIZ) போட்டி. முதலில் கேள்விகளும் இறுதியில் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடைக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் இருப்பதைக் கவனிக்கவும். 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் ‘

அதி தீவிர சிவ பக்தர், 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (60 to 80) நீங்கள் தீவிர சிவ பக்தர், 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (40-60) நீங்கள் சிவ பக்தர், 20 சதவிகிதத்துக்கு மேல் (20-40) மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் பக்தர்!

1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே

சிவபெருமான் செய்த லீலைகள் என்ன? —-16 மதிப்பெண்கள்

 

2.சப்தவிடங்கத் தலங்கள் எவை?

அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன?

அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?- 21 மதிப்பெண்கள்

 

3.பஞ்ச பூதத் தலங்கள் எவை? –5 மதிப்பெண்கள்

 

4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை? அசபா.ஆனந்த, ஞான சுந்தர, ஊர்த்வ, பிரம தாண்டவ தலங்களைச் சொல்லவும்.– 5 மதிப்பெண்கள்

 

 

5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.—7 மதிப்பெண்கள்

6.சப்த(7)ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?- .—7 மதிப்பெண்கள்

 

7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்? –25 மதிப்பெண்கள்

8.நால்வர் யார்? – 4 மதிப்பெண்கள்

 

9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன? 10 மதிப்பெண்கள்

திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்குநாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்

 

 

ANSWERS

QUESTION 1- திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது

திருக்கோவலூர்- அந்தகாசுரனை சம்ஹரித்தது

திரு அதிகை – திரிபுரத்தை எரித்தது

திருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது

திருவிற்குடி- சலந்தாசுரனை சம்ஹரித்தது

வழுவூர்- யானையைத் தோலுரித்தது

திருக்குறுக்கை- காமனை எரித்தது

திருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது

 

QUESTION 2– திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்

திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்

திருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்

திருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்

திருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்

திருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்

 

QUESTION 3-

1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)

2.திருவானைக்கா – அப்பு (நீர்)

3.திருவண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காலத்தி -வாயு (காற்று)

  1. சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)

 

QUESTION 4-

அசபா தாண்டவம்- திருவாரூர்,

ஆநந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,

ஞான சுந்தர தாண்டவம் – மதுரை,

ஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்

பிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி – 5 மதிப்பெண்கள்

 

QUESTION 5-

சபாபதி ஆலயம்- சிதம்பரம்;

தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;

ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;

குமரனாலயம்-திருவேரகம்;

சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;

விடையினாலயம்-திருவாவடுதுறை;

வடுகனாலயம்-சீர்காழி.

 

QUESTION 6-

திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,

திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய் த்தானம்.

 

QUESTION 7-

1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்

4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்

7- சுந்தரர்

8- மாணிக்கவாசகர்

9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்

10-திருமூலர்

11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.

12- சேக்கிழார்

 

QUESTION 8-

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்

 

QUESTION -9

திருவாலவாய்- மதுரை

கொடுங்குன்றம்- பிரான்மலை

திருக்கானப்பேர்- காளையார்கோயில்

கோயில்- சிதம்பரம், தில்லை

புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்

குடமூக்கு- கும்பகோணம்

நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்

திருமறைக்காடு–வேதாரண்யம்

கச்சி– காஞ்சீபுரம்

திருமுதுகுன்றம்- விருத்தாசலம்

–SUBHAM–