கேட்டது கிடைக்கும்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2528)

BHARATMATA VIVEKA

Written by S Nagarajan

 

Date: 11 February 2016

 

Post No. 2528

 

Time uploaded in London :–  6-01 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

இதன் முதல் பகுதி நேற்று வெளியானது.

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (2)

 

ச.நாகராஜன்

 

 

 கேட்டது கிடைக்கும்!

 

ஸ்வாமிஜி மேலை நாடு செல்வது என்று  முடிவாகி விட்ட சமயம் அது. ஹைதராபாத்தில் உள்ள் அன்பர்கள் அவரை உடனே அங்கு வருமாறு வேண்டினர். அதற்கிணங்க ஸ்வாமிஜி ஹைதரபாத் சென்றார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க ஹிந்துக்களும் முஸ்லீம்களுமாக 500 பேர் திரண்டனர். மெஹபூப் கல்லூரியில் ஸ்வாமிஜி 1000 பேர் கொண்ட கூட்டத்தில், “நான் ஏன் மேலை நாடு செல்கிறேன்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

 

 

ஹைதராபாத்தில் தங்கி இருந்த போது அமானுஷ்ய சக்தி படைத்த பிராமண யோகி ஒருவரை அவர் சந்தித்தார். எந்தப் பொருளை வேண்டுமானாலும் உடனடியாக வருவிக்கும் ஆற்றல் படைத்தவர் அவர்! நண்பர்கள் சிலருடன் சென்ற ஸ்வாமிஜியை யோகி வரவேற்றார். ஆனால் அப்போது அவருக்கு ஜுரம் கண்டிருந்தது.

 

 

ஸ்வாமிஜி, அவரிடம் அவரது அமானுஷ்ய சக்தியைக் காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்கிய அவர், ஸ்வாமிஜியை நோக்கி, “ நிச்சயம் காட்டுகிறேன். ஆனால் அதற்கு முன்னர் என் தலையில் கை வைத்து ஆசீர்வதியுங்கள். அதனால் என் ஜுரம் போகட்டும்” என்று வேண்டினார்.

ஸ்வாமிஜியும் அப்படியே அசீர்வதித்தார்.

 

பின்னர் அந்த யோகி அவர்கள் அனைவரையும் நோக்கி, “உங்களுக்கு வேண்டியதை ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள்” என்றார்.

 

 

அந்தப் பகுதியில் கிடைக்காத ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிக்கலான பொருள்களை எல்லாம் பேப்பரில் எழுதி அவரிடம் கொடுத்தனர்.

 

ஒரு கௌபீனம் மட்டுமே அணிந்திருந்த அந்த யோகிக்கு ஸ்வாமிஜி ஒரு சால்வையைக் கொடுத்தார். அதைப் போர்த்திக் கொண்ட அவர், அதனுள்ளிருந்து குலை குலையாக திராட்சைகள், ஆரஞ்சுப் பழங்கள் என்று ஒவ்வொன்றாக எடுத்துத் தந்தார்.

அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்

 

ஆவி பறக்க அப்போதே அரிசியிலான சாதத்தையும் அவர் வரவழைத்து அனைவரையும் சாப்பிடுமாறு கூறினார். சற்று பயத்தில் ஆழ்ந்த அனைவரும் ஸ்வாமிஜியை அதைச் சாப்பிட வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் அந்த யோகியே அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தார்.

 

அனைவரும் உடனே சாப்பிட ஆரம்பித்தனர்.

 

100 vivekas

எல்லாம் கை ஜாலம் தான்!

 

பின்னர் அழகிய ரோஜா மலர்களை வரவழைத்து ஸ்வாமிஜியிடம் கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தினார் அந்த யோகி.

 

இதெல்லாம் எப்படி என்று ஸ்வாமிஜி வினவினார். “ஒன்றுமில்லை கை ஜாலம் தான்” என்றார் அவர்.

ஆனால் வெறும் கை ஜாலத்தால் இப்படி உடனே கேட்கப்பட்ட பல பொருள்களைத் திரட்டித் தர முடியாது என்பதால் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று ஸ்வாமிஜி அனுமானித்தார்.

இந்த அனுபவத்தையும் அவர் தனது லாஸ் ஏஞ்சல்ஸ் சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

 

 

மனத்தின் ஆற்றல் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதையே இது காட்டுகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஸ்வாமிஜியின் ஆங்கிலச் சொற்பொழிவின் மூலம் கீழே தரப்படுகிறது.

 

 

 

The Powers of the Mind

 

Delivered at Los Angeles, California, January 8, 1900

(Complete Works of Swami Vivekananda Volume II)

 

 

 

Another time I was in the city of Hyderabad in India, and I was told of a Brâhmin there who could produce numbers of things from where, nobody knew. This man was in business there; he was a respectable gentleman. And I asked him to show me his tricks. It so happened that this man had a fever, and in India there is a general belief that if a holy man puts his hand on a sick man he would be well. This Brahmin came to me and said, “Sir, put your hand on my head, so that my fever may be cured.” I said, “Very good; but you show me your tricks.” He promised. I put my hand on his head as desired, and later he came to fulfil his promise. He had only a strip of cloth about his loins, we took off everything else from him. I had a blanket which I gave him to wrap round himself, because it was cold, and made him sit in a corner. Twenty-five pairs of eyes were looking at him. And he said, “Now, look, write down anything you want.” We all wrote down names of fruits that never grew in that country, bunches of grapes, oranges, and so on. And we gave him those bits of paper. And there came from under his blanket, bushels of grapes, oranges, and so forth, so much that if all that fruit was weighed, it would have been twice as heavy as the man. He asked us to eat the fruit. Some of us objected, thinking it was hypnotism; but the man began eating himself — so we all ate. It was all right.
He ended by producing a mass of roses. Each flower was perfect, with dew-drops on the petals, not one crushed, not one injured. And masses of them! When I asked the man for an explanation, he said, “It is all sleight of hand.”
Whatever it was, it seemed to be impossible that it could be sleight of hand merely. From whence could he have got such large quantities of things?

**********

விவேகானந்தரின் அற்புத அனுபவங்கள் – பகுதி 1(Post No. 2525)

விவேகா-அனிடஸ் மரியா

Written by S Nagarajan

 

Date: 10 February 2016

 

Post No. 2525

 

Time uploaded in London :–  6-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)

 

ச.நாகராஜன்

 

 விவேகா

சித்திகளைக் கண்டு மயங்காதே!

 

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கை நெடுக தனது அற்புதமான தவ ஆற்றலால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் உண்டு. அதீத உளவியல் சம்பந்தமாக அவர் அடைந்த அனுபவங்களும் ஏராளம் உண்டு. தனியே பெரிய நூலாகத் தொகுக்க வேண்டியவை இவை.

 

இந்த சிறு கட்டுரைத் தொடரில், ஒரு அறிமுகமாக, அவரது ஆற்றல்களையும அவர் அடைந்த அனுபவங்களையும் காணலாம். இதைப் படித்ததன் மூலம் அவரைப் பற்றி இன்னும் முற்றிலுமாக அறிய உத்வேகம் ஏற்பட்டால் அதுவே இந்த கட்டுரைத் தொடரின் பயனாக அமையும்.

முதலில் சித்திகள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

பரமஹம்ஸர் சித்திகளைக் கண்டு மயங்காதே என்று தெளிவாகப் பலமுறை கூறியுள்ளார். அதற்கு மதிப்புக் கொடுக்காதே; அதையும் தாண்டி உள்ள மஹாசக்தியை நாடு என்பதே அவரது அருளுரை.

 

இதையே ஸ்வாமிஜியும் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.

 

ஆனால் பெரும் அவதாரங்கள் தோன்றும் போது அளப்பரிய ஏராளமான ஆற்றல்கள் அவர்களுடன் இயல்பாகவே தோன்றும். இப்படி அற்புதங்களைத் தாம் ஆற்றியதாகவே அவர்கள் கூற மாட்டார்கள்; அவர்கள் இதை அறிவதும் இல்லை, போலும். மற்றவர்கள் கூறும் போது, அப்படியா என்று வியப்பது வழக்கம்!

இந்தக் கருத்தை பகவான் ரமண மஹரிஷியும் அழுத்தம் திருத்தமாக அடிக்கடி கூறியுள்ளார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் உரை ; நினைத்ததைச் சொல்பவர்!

ஸ்வாமிஜி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி மனத்தின் சக்திகள் (The Powers of the Mind : Complete Works of Swami Vivekananda Volume II) என்று அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

அதில், “இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அதீதமான நிகழ்வுகளைப் பற்றி நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். சிலருக்கு சொந்த அனுபவங்களும் இதில் உண்டு. எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அந்த உரையை அவர் ஆரம்பிக்கிறார்.

ஒரு சமயம் அவர் எந்தக் கேள்வியை மனதில் நினைத்தாலும் அதை அறிந்து கொண்டு அதற்கு உடனே விடை தரும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.  எதிர்காலத்தில் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் கூற வல்லவர் அவர்.  ஆர்வம் உந்தவே, சில நண்பர்களுடன் அவரைச் சந்திக்க ஸ்வாமிஜி கிளம்பினார். ஒவ்வொருவரும் தன் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டனர். தவறு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நினைத்தது என்ன என்பதை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி அதைத் தங்கள் பாக்கட்டில் போட்டுக் கொண்டனர். அந்த குழுவினரைப் பார்த்தவுடனேயே அந்த மனிதர் ஒவ்வொருவரும் என்ன கேள்வியை நினைத்திருக்கிறோம் என்பதைக் கூறி அதற்கான பதிலையும் கூறி விட்டார்.

 

 

பிறகு அவர் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை மடித்து அதில் ஸ்வாமிஜையைக் கையெழுத்திடுமாறு கூறி. “இதைப் பார்க்காதீர்கள். உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

 

பின்னர், “நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ, அது எந்த  மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்! , நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த மனிதருக்குத் தெரியாத சம்ஸ்கிருத மொழியில் ஒரு பெரிய வாக்கியத்தை ஸ்வாமிஜி நினைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த மனிதர், “இப்போது உங்கள் பையில் இருக்கும் பேப்பரை எடுத்துப் பாருங்கள்” என்றார். ஸ்வாமிஜி நினைத்த சம்ஸ்கிருத வாக்கியம் அந்தப் பேப்பரில் அப்படியே இருந்தது.

 

சிவாஜி, விவேகா, நேதாஜி

ஒரு மணி நேரம் முன்னர் அந்தப் பேப்பரில் அவர் எழுதியபோது, “நான் எழுதியதை உறுதி செய்து இவர் அதே வாக்கியத்தை நினைப்பார்” என்று சொல்லி இருந்தார். அது முற்றிலும் சரியாக ஆனது.

 

இதே போல இன்னொரு நண்பர் அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே இல்லாத அராபிய மொழியில், குர் ஆனில் வரும்  ஒரு பகுதியை எழுதி இருந்தார். அது அப்படியே அவர் முன்னரே வைத்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

 

 

இன்னொரு நண்பரோ ஒரு வைத்தியர். அவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்தில் வரும் ஒரு வரியை நினைத்தார். அதுவும் அப்படியே பேப்பரில் எழுதப் பட்டிருந்தது.

 

 

சில நாட்கள் கழித்து  முந்தைய முறை எப்படியோ தான் மயக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தவாறே ஸ்வாமிஜி மீண்டும் அந்த மனிதரிடம் சென்றார். ஆனால் என்ன ஆச்சரியம், இந்த முறையும் அவர் அப்படியே அந்த நிகழ்ச்சியை அதிசயமாக நடத்திக் காட்டினார்.

 

ஸ்வாமிஜியின் அனுபவங்கள் …       தொடரும்

 

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக ஸ்வாமிஜியின் மூலச் சொற்பொழிவுப் பகுதிகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன.

 

All over the world there has been the belief in the supernatural throughout the ages. All of us have heard of extraordinary happenings, and many of us have had some personal experience of them. I would rather introduce the subject by telling you certain facts which have come within my own experience.

 

I once heard of a man who, if any one went to him with questions in his mind, would answer them immediately; and I was also informed that he foretold events. I was curious and went to see him with a few friends. We each had something in our minds to ask, and, to avoid mistakes, we wrote down our questions and put them in our pockets. As soon as the man saw one of us, he repeated our questions and gave the answers to them. Then he wrote something on paper, which he folded up, asked me to sign on the back, and said, “Don’t look at it; put it in your pocket and keep it there till I ask for it again.” And so on to each one of us. He next told us about some events that would happen to us in the future. Then he said, “Now, think of a word or a sentence, from any language you like.” I thought of a long sentence from Sanskrit, a language of which he was entirely ignorant. “Now, take out the paper from your pocket,” he said. The Sanskrit sentence was written there! He had written it an hour before with the remark, “In confirmation of what I have written, this man will think of this sentence.” It was correct. Another of us who had been given a similar paper which he had signed and placed in his pocket, was also asked to think of a sentence. He thought of a sentence in Arabic, which it was still less possible for the man to know; it was some passage from the Koran. And my friend found this written down on the paper.
Another of us was a physician. He thought of a sentence from a German medical book. It was written on his paper.
Several days later I went to this man again, thinking possibly I had been deluded somehow before. I took other friends, and on this occasion also he came out wonderfully triumphant.

(To be Continued)

 

 

கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை! (Post No 2522)

stamps vidyapathy

Written by S Nagarajan

 

Date: 9 February 2016

 

Post No. 2522

 

Time uploaded in London :–  9-27 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

ஹிந்து இலக்கியம்

 

மரண காலத்தில் அதிசயக் கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை!

 

ச.நாகராஜன்

 

vidyapatimaithil-mahaan-kavi-1-2-s-307x512

ஹிந்து இலக்கியத்தில் ஒரு முக்கிய பிரதேசமாக விதேஹம் விளங்கி வந்திருப்பதை வரலாறு நன்கு விளக்குகிறது.

ஆயிரமாயிரம் அதிசய உண்மைச் சம்பவங்களைக் கொண்டுள்ள ஹிந்து இலக்கிய வரலாறை யாரே முழுதுமாக அறிய வல்லார்?

இங்கு சொல்லப்படுவது சரித்திரத்தில் ஒரு சிறிய துளி; ஆனால் பெரிய தாக்கத்தை அனைவர் மனதிலும் அது ஏற்படுத்தும்.

 

மிக பிரம்மாண்டமான இந்திய இலக்கிய வரலாற்றில் பெருங் கவிஞர் வித்யாபதி தனி ஒரு இடத்தை வகிக்கிறார்.

தர்பங்கா மாவட்டத்தில் மைதிலி பிராமணர் குலத்தில் கி.பி. 1350 வாக்கில் அவர் பிறந்தார். அந்தக் காலம் இசையின் பொற்காலம்.

 

 

மைதிலி மொழியும் வங்காள மொழியும் போட்டி போட்டுக் கொண்டு இலக்கியச் செல்வங்களை வாரி வழங்கிய காலம் அது. அந்தக் காலத்தில் பிறந்த மாபெரும் கவியை இப்படி வெவ்வேறு இரு மொழிகளைப் பேசி வந்த மக்கள் தங்கள் கவிஞர் என்று உரிமை கொண்டாடியது உலக இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத ஒன்று என்கிறார் வித்யாபதியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் க்ரியர்ஸன் (Grierson)

வித்யாபதியின் வரலாறு பல நூறு பக்கங்களில் எழுதப்பட வேண்டிய ஒன்று. சுருக்கமாக இங்கு காணலாம்.

வித்யாபதி சிறு வயதில் பால்ய கால நண்பனான மஹாராஜா கீர்த்திசிம்மனுடன் விளையாடி வந்தார். அவரது தந்தை கணபதி தாகூரா மஹாராஜா கநேஸ்வரசிம்மனின் அரசவையில் பெரும் பதவி வகித்தவர்.

 

IMG_2695 (2)

பெரும் நியாய சாஸ்திர நிபுணரான – நையாயிகர் பக்ஷதார மிஸ்ராவின் வகுப்புத் தோழருமாக வித்யாபதி திகழ்ந்தார்.

வித்யாபதி ஏராளமான கவிதைகளை யாத்தார்.

பல அரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வித்யாபதியை தங்கள் அரசவைகளுக்கு அழைத்து கௌரவித்தனர்.

வித்யாபதிக்கு இரு மனைவிகள்.இரு மனைவிகளும் அருமையான மகன்களையும் மகளையும் பெற்றேடுத்தனர். அவரது மருமகள்களில் ஒருவரான சந்த்ரகலா ஒரு பெரும் கவிஞர். வேத காலத்திலிருந்து பெண்களில் இப்படிப்பட்ட அரிய புலமை இருந்த ஏராளமானோரை நமது சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது. (ஆனால் அது தெரியாமல் பெண்களை நாம் அடிமைப் படுத்தி வைத்ததாக கூக்குரலிடுவது இப்போது ஒரு ஃபாஷனாகியிருப்பது பெரும் கொடுமை!)

 

 

 

தனது மரணம் எப்போது வரும் என்பதை அவர் முன் கூட்டியே அறிந்து விட்டார். மஹாராஜா சிவசிம்மன் என்ற மன்னர் இறந்து 32 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு கனவு வந்தது.

அதில் தன் கருமையான உருவத்தை அவர் கண்டார்.

அதன் மூலமாகத் தனது மரணம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர் தனது மகளைக் கூப்பிட்டு தனது இறுதி யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளை கங்கைக் கரையில் செய்யுமாறு கூறினார். அவர் இருந்த நிலையில் அவரால் கங்கைக் கரைக்குச் செல்ல முடியவில்லை.

அன்றிரவு கங்கை பெருக்கோடி அவர் எங்கு இருந்தாரோ அந்த  இடத்தை வந்து சேர்ந்தது. .

 

கங்கையைக் கண்ட மகிழ்ச்சியுடன் அவர் தனது மூச்சை விட்டார்.

 

தர்பங்கா மாவட்டத்தில் பஜித்புரா என்ற கிராமத்தில் இந்த அதிசயம் நடந்த இடம் இன்றும் உள்ளது.

folk_festivals_of_mithila_idi955

வித்யாபதியின் குறிப்பிடத்தக்க சம்ஸ்கிருத நூல்கள்: அநேக தர்ம சாஸ்திரங்கள், நிபந்தங்களைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட சைவசர்வசஸ்வசாரா, கங்காவாக்யாவளி, விபாகசாரா, தானவாக்யாவளி,துர்காபக்தி தரங்கிணி, கயாபட்டாலகா, வர்ஷக்ரித்யா உள்ளிட்ட ஏராளமான நூல்கள்.

புருஷபரிக்‌க்ஷா என்ற நீதி போதிக்கும் கதைக் கொத்தையும் அவர் எழுதியுள்ளார். மைதிலி மொழியில் அவர் எழுதியுள்ள நாடகம் கோரக்‌க்ஷவிஜயா.

 

 

இன்னும் ஏராளமான நூல்களை எழுதியுள்ள இ மாபெரும் கவிஞர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து அமைதியாக வாழ்ந்த விதத்தை அற்புதக் கவிதைகளாகத் தந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

 

 

கங்கையே வீடு தேடி வந்து இறுதிக் காலத்தில் கவிஞரைக் ஆட்கொண்ட அதிசயக் கவிஞரின் புகழைச் சொல்லி மாளாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று இவரை அறிந்தவர்கள் வெகு சிலரே.

 

இதைப் போக்கும் விதத்தில் வி.கே. மிஸ்ரா என்னும் அறிஞர் ‘A Cultural Heritate of Mithila’ என்ற ஆய்வு நூலை (A-4  பேப்பர் அளவில் 404 பக்கங்கள்) எழுதியுள்ளார். அதில் இவரது சரித்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

art_of_mithila_idc945

கார்த்திகை மாத சுக்ல பட்ச திரயோதசி திதியில் (கார்த்திகை மாதம் 13ஆம் நாள்) இவர் மறைந்ததாக ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.

 

கவிஞர் பூதவுடல் கங்கைக் கரையில் எரியுண்டாலும் புகழுடல் இன்றும் திகழ்கிறது. என்றும் திகழும்

*********

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517)

IMG_2347

Research Article Written by london swaminathan

Date: 7 February 2016

 

Post No. 2517

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2250

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.

 

1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!

 

என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.

 

எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!

 

ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?

ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!

அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.

uluru2

ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.

 

அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை

 

அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.

 

நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.

 

இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!

 

நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!

IMG_2336

மூத்தோர் சொல் அமிர்தம்

 

பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும்  மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.

 

ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.

 

பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.

 

ஆராய்ச்சிக் கட்டுரை தொடரும்………….

 

–சுபம்–

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்! (pOST No.2516)

gulob jamun, fb

Written by S Nagarajan

 

Date: 7 February 2016

 

Post No. 2516

 

Time uploaded in London :–  6-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுப் பதார்த்தங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞான இதழின் அறிவுரை

 

உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் – (MIND இதழில்)  தனது 2016, ஜனவரி முதல் தேதியிட்ட  இதழில் இனிப்பும் கொழுப்பும் எப்படி நமது மூளையையே ஏமாற்றுகிறது என்பது குறித்த எச்சரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெர்ரிஸ் ஜாப்ர் எழுதியுள்ள இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நவீன கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது.

 

 

குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும். உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் இதரர்களைப் போல ஆக அவர்கள் ஆசைப்படுவதைத் தடுப்பது எது?

 

இதோ கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளின் சுருக்கம்:

 

போதைப் பழக்கம் போல ஆகும் உணவுப் பழக்கம்

 

மாத்யூ ப்ரையன் என்பவர் தனது 24ஆம் வயதில் 135 பவுண்டுகள் எடையுடன் இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து இப்போது அவரது உடல் எடை 230 பவுண்டுகள். காரணம்? , மற்றவர்கள் எல்லாம் அளவோடு சாப்பிடும் போது அவர் மட்டும் ப்ரட், பாஸ்தா, சோடா, குக்கீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவறாமல் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தது தான்! அவரால் தடுக்க முடியாதபடி அவரது உணவுப் பழக்க வழக்கம்  போதை போல மாறி, ஐஸ்கிரீமை முழு டின்னுடன் வாங்கிச் சாப்பிடும் அளவு ஆனது.

அவரால் தடுக்க முடியாமல் போகும் படி அந்த உணவுப் பண்டங்களின் மீது அவருக்கு ஆசை ஏன் வந்தது

இதை விஞ்ஞானிகள் தங்களிந் ஆராய்ச்சிப்  பார்வையில் பார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களின் பசியை ‘hedonic hunger’ என்று அழைக்கின்றனர் அவர்கள். தேவைக்கும் மேலாக மிக அதிகமாகச் சாப்பிடுவதைத் தான் இந்த புதிய பெயர் சுட்டிக் காட்டுகிறது. 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொற்றொடர் இது!

 

இது பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் ஒரு அதிசயமான உண்மையை வெளியிடுகின்றன. இனிப்புப் பண்டங்களும் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளும் மூளையின் சர்க்யூட்டை சூதாட்டமும் கோகெய்னும் செய்வது போலக் கவர்கிறன. இதை ரிவார்ட் சர்க்யூட் என்று சொல்லலாம்.

 

 

பசித்தால் பசிக்குச் சாப்பிடுவது போய், இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடத் தூண்டும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்கின்றன.

jangri

இனிப்பையும் கொழுப்பையும் கண்டவுடனேயே  சுவை அறியும் சுவை அரும்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றன. உடனேயே எல்லையில்லா இன்ப உணர்வு ஏற்படுகிறது. இதை அறிவியல் சோதனை ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

 

இந்த இன்ப உணர்வை அநுபவித்தவர்கள் அதை மீண்டும் அநுபவிக்கத் துடிக்கின்றனர். இதனால் எடை கூடிக்கொண்டே போகிறது. அவர்களால் தடுக்க முடியாதபடி இந்த எடைக் கூடுதல் ஏற்பட்டு பல வித வியாதிகளை அவர்களுக்குத் தருகிறது.

 

 

2007, 2011 ஆண்டுகளில் ஸ்வீடனின் உள்ள கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

பசிக்கான ஹார்மோனான கெரெலினை (ghrelin)  வயிறு வெளிப்படுத்தியவுடன் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் டோபமைன் என்ற ஹார்மோனின் வெளிப்பாடு அதிகப்படுகிறது. அதாவது இனிப்பையும் கொழுப்பையும் உண்டதற்குப் பரிசாக – ரிவார்டாக இன்ப உணர்வு ஏற்படுகிறது.

 

 

சாதாரண நிலையில் லெப்டின் மற்றும் இன்சுலின் ஆகியவை டோபமைன் வெளிப்படுத்துவதை நிறுத்துகிறது. ஆகவே இன்ப உணர்வு குறைகிறது.

 

ஆனால் கொழுப்பான உணவைச் சாப்பிடும் போது மூளை இந்த ஹார்மோன்களுக்கு ‘செவி சாய்ப்பதில்லை’.

 

 

 

புதிய சிகிச்சை அறிமுகம்

 

ஆய்வின் விளைவு ஒரு புதிய சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

உடல் எடை கூடி குண்டாக இருப்பவர்களுக்கு கடைசி தீர்வாக இந்த  புதிய அறுவை சிகிச்சை வந்துள்ளது. இதன் காரணம் இப்போது கெரலின்  உடலின் எடை குறைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது தான். இந்த சர்ஜரி அல்லது அறுவைச் சிகிச்சை பாரியாட்ரிக் சர்ஜரி (Bariatric Surgery)  என்று அழைக்கப்படுகிறது. இது வயிறைச் சுருங்க வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை.

 

ஒன்று திசுக்களின் மூலம் சிகிச்சை மூலம் தரப்படும் அல்லது வயிறை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இரண்டு அவுன்ஸுக்கு மேலாக உணவு அங்கு இருக்க இடமே இல்லாதபடி சிகிச்சை செய்து விடும்.

 

 

சிகிச்சை முடிந்த ஒரே மாதத்திற்குள்ளாக சிகிச்சை பெற்றவருக்கு இனிப்பு மற்றும் கொழுப்புப் பண்டங்களின் மீதிருக்கும் ஆசையே போய்விடும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும், ஏனெனில் வயிறு சுருங்கி விடுகிறதல்லவா!

 

 

சமீபத்திய ஆய்வுகள் உணவின் மீதான ஆசை மூளையின் நரம்பு மண்டல சர்க்யூட்டில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவிக்கிறது.

‘hedonic hunger’ என்ற இந்தப் புதிய உண்மை மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமையே மாறி விட்டது.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கலோரிகளையும் மீறி போதைப் பழக்கம் போல இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகள் மூளையை ஏமாற்றி ஒரு வித இன்ப உணர்வைத் தருவதை அறிந்து அதை நிறுத்தினாலே போதும், உடல் எடை குறைந்து விடும் என்பது தெரிந்து விட்டது.

 

IMG_5057

 

முடிவு மன உறுதியைப் பொறுத்தது

 

இதை அடிப்படை நிலையில் புரிந்து கொண்டவர்கள், இப்படி இனிப்பையும் கொழுப்பு பதார்த்தங்களையும் அளவோடு சாப்பிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

அளவுக்கும் மீறி அதிகத் தீனி சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான புதிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குண்டாக இருப்பவர்களின் மன உறுதியைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

**********

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்! (Post No 2504)

psychic_final

Written by S Nagarajan

 

Date: 3 February 2016

 

Post No. 2504

 

Time uploaded in London :–  8-42  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 P_DD_home_depic_lev_1868

 

22-1-2016 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை. பாக்யா வார இதழ் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்!

.நாகராஜன்

 

நீங்கள் சொல்லியிருந்தால், எதை நான் நம்பி இருக்க மாட்டேனோ அதை நானே நேரில் பார்த்தேன். ஆகவே நான் அதைச் சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை” – ஹோமின் நிகழ்ச்சியைப் பார்த்த ராபர்ட் பெல் மற்றவர்களுக்கு கூறிய முதல் வாக்கியம்

 

ஹோமின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்கான காரணம்  பல்வேறு அசகாய செயல்களை ஏராளமான பேர்களின் முன்னால் சர்வ சகஜமாக அவர் செய்தது தான்.

 

இந்த வகையில் உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அவரது செய்கை பலரையும் வியக்க வைத்து அது பற்றி ஆராய வைத்தது!

 

Elongation  என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நீட்டிப்பு சாதாரண விஷயம் அல்ல. நீண்ட பயணம் செய்யும் போது  நாம் ‘ஸ்ட்ரெச்’  செய்து கொண்டு உடம்பை நீட்டித்து கை கால்களை உதறிக் கொள்கிறோம். அது போன்றதல்ல ஹோம் செய்த நீட்டிப்பு.

 

அவர் ஒரு நிகழ்வில் திடீரென உயரமாகிக் காண்பித்தார்! மாஸ்டர் ஆஃப் லிண்டேஸேயின் (Master of Lindsay) வாக்குமூலப்படி  50 பேர்களுக்கு முன்னால், ஹோம் 11 அங்குலம் வரை உயர்ந்தார். டைஎலக்ட்ரிகல் கமிட்டி என்ற ஆய்வுக் குழு இது பற்றி தீர விசாரித்தது.

ஹோம் இந்த நிகழ்வை முடித்தவுடன் உடல்நலமில்லாமல் படுத்து விட்டார்.

 

அவரது இடுப்பு எலும்பும் விலா எலும்புகளும் தனியே தனியே பிரிந்ததாகவும் தெரிய வந்தது. இந்தப் பிரிவு முதுகெலும்பில் உள்ள முள்ளெலும்புகள் தனித் தனியாகப் பிரிவதால் ஏற்பட்ட ஒன்று அல்ல; அல்லது மார்பை மூச்சை உள்ளே இழுத்து மார்பை அகலமுறச் செய்வது போன்றதும் அல்ல; அவரது தோள்கள் அசையவே இல்லை. அருகிலிருந்து 50 பேர்களும் உன்னிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். யாரோ அவரின் கழுத்தை மேலே இழுத்தது போல அவர் உயர்ந்தார் என்று அனைவரும் கூறினர்.

 

ஹோமை விட அதிக உயரமாக இருந்த ஜென்கன் (Jencken) என்பவர் அவர் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். “ஹோமின் பாதம் பூமியிலேயே பாவி இருந்தது. அவரது கோட்டுக்கும் இடுப்பில் இருந்த டிரவுசருக்கும் இடையே இடைவெளி தெரிந்தது. சுமார் எட்டு அங்குலமாவது அவர் உயர்ந்திருக்க வேண்டும்” என்று  லார்ட் அடேர் (Lord Adare) என்பவர் கூறினார்.

 

 

அவரது அகலத்திலும் வித்தியாசம் தெரிந்தது. எல்லா அங்கங்களின் அளவுகளும் கூடி இருந்தது. ஏதோ ஒரு கை அவர் இடுப்பில் வந்திருந்து அவரைத் தூக்கியது போல நாங்கள் உணர்ந்தோம் என்று குழுமியிருந்தோர் கூறினர்.

 

 

இப்படி இரண்டு நீட்டிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நீட்டிப்பு முடிந்தவுடன் ஹோம் மிகவும் சுருங்கிக் காட்டினார். அவர் இடுப்பு எலும்பு பழைய இடத்தில் வந்து அமர்ந்து மிகவும் சுருங்கி விட்டது என்று லார்ட் அடேர் கூறினார்.

கையை மட்டும் கூட ஹோமால் நீட்டித்துக் காண்பிக்க முடிந்தது! முதலில் பென்சிலால் ஒரிஜினல் அளவு குறிக்கப்பட்டது. பின்னர் ஹோம் முதலில் தனது வலது கையை ம்ட்டும் நீட்டித்தார். சுமார் ஒன்பது அங்குலம் அது அதிகமானது. பின்னர் இடது கையை நீட்டித்தார். நீட்டித்த பின்னர் பென்சில் குறியீட்டை வைத்துப் பார்க்கும் போது அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

 

 

ஹெச்.டி. ஹம்ப்ரீஸ் என்ற நடுநிலைப் பத்திரிகையாளர் தான் நேரில் கண்டதைப் பெரிய கட்டுரையாக் எழுதி வெளியிட்டார். ஹெச்.டி. ஜென்கன் ‘ஹ்யூமன் நேச்சர்’ என்ற நூலில் ஹோம் பற்றிய அதிசய தகவல்களை எழுதினார்.

 

ஒரு முறை தன்னுடன் இருந்த மீடியம் பெண்மணியான மிஸ் பெர்டோலச்சி (Miss Bertolacci) என்பவரையும் சேர்த்து நீட்டித்துக் காண்பித்தார்.

 

இப்படி உடல் அளவை நீட்டித்தும் சுருக்கியும் காட்டிய ஹோமின் அடுத்த சாகஸ செயல் படிக்கக் கூட நம்ப முடியாத ஒன்றான லெவிடேஷன்!

 

லெவிடேஷன் என்று கூறப்படும் அந்தரத்தில் மிதக்கும் தன்மையை அவர் சுலபமாகச் செய்து காண்பித்தார். சாதாரணமாக தரையிலிருந்து மேலெழும்பி அறையில் உயரமான் இடத்தில் மிதப்பது அவர் வழக்கம். இதைப் பலரும் பார்த்ததுண்டு.

 

home

அவர் செய்த அதிசய செயல்களில் ஒன்று தனது அகார்டியனை அறையின் மேலே அந்தரத்தில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்வார். அது சுற்றி வரும் போது “ஹோம் ஸ்வீட் ஹோம்” (HOME SWEET HOME)  என்ற பாட்டை இசைத்தவாறே சுற்றிச் சுற்றி வரும்.

1869ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு அதீதச் செயல் மிக விரிவாக ஒரு கமிட்டி முன் விவரித்து பதிவு செய்யப்பட்டது.

ஹோம் இந்த நிகழ்வில் முதலில் தரையிலிருந்து ஆறு அங்குலம் உயர்ந்தார். சந்திர ஒளி அறையெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று இன்னும் மேலே எழும்பிய ஹோம். அறையில் இருந்த ஒரு ஜன்னல் வழிய அந்தரத்தில் வெளியே போக ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்தோர் பிரமித்து அலற, அவர் சற்று தூரம் சென்று அறையின் இன்னொரு ஜன்னல் வழியே திரும்பி வந்து உள்ளே இறங்கினார்.

 

 

பிரபல மாஜிக் நிபுணரான ஹௌடினிக்கு இதெல்லாம் சாதாரணமான செயல் என்று சவால் விடுவதே வழக்கம். தனது 1920ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதியிட்ட டயரிக் குறிப்பில் இது பற்றி விரிவாக ஹௌடினி எழுதியுள்ளார்.

 

 

ஹோ செய்த அதே ‘ஸ்டண்டை’, அவர் செய்த அதே இடத்தில்  அவரும் செய்வதாக சவால் விட்டார். எப்போதுமே இது போன்ற மாஜிக் சாகஸ செயல்களில் ஈடுபடும் முன்னர் ஹௌடினி முதல் நாள் அந்த இடத்தை நன்கு ஆராய்வது வழக்கம். இந்த நிகழ்வுக்கு ‘ஜி’ என்பவரின் ஒத்துழைப்பை அவர் நாடினார். ஆனால் நிகழ்ச்சிக்கு சற்று முன்பு ‘ஜி’ பயந்து போய் பின் வாங்கி விட்டார். அதனால் ஹௌடினியால் இதை நடத்த முடியவில்லை.

 

 

தனது சுயசரிதையில் அனைத்தையும் விலாவாரியாக ஹோம் எழுதி வைத்துள்ளார். லெவிடேஷனைப் பற்றிக் குறிப்பிடுகையில் “மேல் கூரை வரை எழும்பி அதைத் தொடும்போது சாதாரணமாகத் தான் எனக்குத் தோன்றும். காலில்  மட்டும் ஒரு மின் சக்தி பாய்வது போன்ற உணர்வு ஏற்படும்” என்று அவர் எழுதியுள்ளார்.

 

 

ஹோம் வாழ்ந்து வந்த காலம் முழுவதும் அவர் செய்வதெல்லாம் மோசடி வேலை என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால் ஒருவராலும் அப்படி நிரூபிக்க முடியவில்லை.

அவர் மறைந்த பிறகும் இன்றும் கூட அவர் செய்த அபூர்வ செயல்களைப் பற்றி அறிவியல் ரீதியாக விவாதித்த போதிலும் அந்த அதீத உள்வியல் ஆற்றல் செயல்களின் மர்மம் விடுபடவில்லை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல நினைவாற்றல் நிபுணர் க்ரெகார் வான் ஃபைனேஜில் (Gregor Von Feinagile பிறப்பு 22-8-1760 மறைவு 27-12-1819)

நினைவாற்றலுக்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தவர். தனது வழிகளை ஆங்காங்கு சொற்பொழிவுகள் மூலம் அனைவருக்கும் கற்பித்து வந்தார். 15 அல்லது 16 லெக்சர்களுக்கு வகுப்புக் கட்டணமாக அவர் மிக மிகக் குறைந்த தொகையையே வாங்கியதால் மாணவர்கள் கூட்டம் அலை மோதும். 1812இல் வெளியான தி நியூ ஆர்ட் ஆஃப் மெமரி (The new art of memory)  அவரது வழிகளை விளக்கும் நூலாகும்.

 

 

ஒரு முறை அவர் ஹோட்டல் ஒன்றில் தனது சொற்பொழிவை முடித்து விட்டு உணவருந்தினார். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே கிளம்பிய அவரை சர்வர் ஓடி வந்து தடுத்தார்.

“பிரபல நினைவாற்றல் நிபுணர் தனது குடையை மறந்து விட்டார்” என்று கூறியவாறே அவர் டேபிளில் மறந்து வைத்து விட்ட குடையைப் பணிவுடன் தந்தார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் – ஃபைனேஜில் உட்படத்தான்!

******

 

பாரதியாரின் நூலுக்கு 1908 ஆம் ஆண்டு செந்தமிழ் மதிப்புரை! (Post No. 2503)

IMG_2549 (3)

Written by london swaminathan

Date: 3 February 2016

 

Post No. 2503

 

Time uploaded in London :– காலை 8-30

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

பிரிட்டிஷ் நூலத்தில் பழைய செந்தமிழ் இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான விஷயம் அகப்பட்டது. “செந்தமிழ்” என்னும் பத்திரிக்கை மதுரைத் தமிழ் சங்கத்தால் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் வெளியிடப்பட்டது. ராகவ ஐய்யங்கார், பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய காலம் அது. அதில் நூல் மதிப்புரையில் பல நூல்களுடன் பாரதியாரின் முதல் வெளியீடான ஸ்வதேச கீதங்கள் மதிப்புரையும் வெளிவந்துள்ளது. அதே இதழில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “ஆனந்தமடம்” பற்றியும் மதிப்புரை வந்துள்ளது. இதை வெளியிடவே தைரியம் வேண்டும்!

 

இதன் சம காலத்தில் வெளியான பல புத்தகங்கள், இதழ்களை நான் தொடர்ந்து பேஸ் புக்கில் ஓராண்டுக் காலமாக வெளியிட்டு வருகிறேன். அவை எல்லாவற்றிலும் ஒரு விஷயம் இழையோடுவதைக் கண்டேன். எல்லோரும் முதல் பக்கத்திலோ, கடைசி பக்கத்திலோ விக்டோரியா மஹாராணி, ஜார்ஜ் சக்ரவர்த்தி, வேல்ஸ் இள்வரசர் ஆகியோருக்கு ஜால்ரா அடித்துள்ளனர். அவர்களைப் போற்றி கவிதை, கும்மி பாடல் முதலியனவற்றைப் பிரசுரித்துள்ளனர். இதனால்தான் பாரதியார், “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாடி தனது நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருக்கிறார். அந்த அஞ்சாத சிங்கம் வெளியிட்ட பாடல் தொகுப்புக்கு துணிவுடன் மதிப்புரை – பாராட்டுரை—எழுதிய செந்தமிழுக்கும் நாம் வணக்கம் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

இதோ அந்தச் சின்ன மதிப்புரை:–

 

IMG_0703 (2)

 

IMG_0704 (2)

 

IMG_2554 (2)

 

–சுபம்–

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! (Post No. 2494)

IMG_9761

பிப்ரவரி 2016 (மன்மத தை-மாசி) காலண்டர்

Compiled by london swaminathan

Date: 31 January 2016

 

Post No. 2494

 

Time uploaded in London :–  12-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

இந்த மாதக் காலண்டரில் தமிழ் பற்றிய 29 மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

 

திருவிழா நாட்கள்: 8-தை அமாவாசை, சீனப்புத்தாண்டு, 14-ரத சப்தமி, காதலர் தினம், 15-பீஷ்மாஷ்டமி, 22-மாசிமகம், கும்பகோணத்தில் மஹாமகம், பல கோவில்களில் தெப்பத் திருவிழா

அமாவாசை:8

பவுர்ணமி- 22

ஏகாதசி: 4, 18

சுபமுஹூர்த்த நாட்கள்- 3,5, 10, 12, 17, 19, 26.

IMG_9765

பிப்ரவரி 1 திங்கட் கிழமை

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர்வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான் (கம்பன்)

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் (கம்பன்)

பிப்ரவரி 3 புதன் கிழமை

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான் (கம்பன்)

 

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பிய பாயிரம்-பன்பாரனார்

 

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் – பாரதியார்

 

 

IMG_9814

பிப்ரவரி 6 சனிக் கிழமை

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்- பாரதியார்

 

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்- பாரதியார்

பிப்ரவரி 8 திங்கட் கிழமை

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே — பாரதியார்

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்- பாரதியார்

பிப்ரவரி 10 புதன் கிழமை

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

IMG_9816

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு– பாரதியார்

 

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா- – பாரதியார்

 

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இறவாய் தமிழோடிருப்பாய் நீ (பாரதியார்)

 

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர் –பாரதிதாசன்

 

பிப்ரவரி 15 திங்கட் கிழமை

சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – – பெரியபுராணம்

 

 

IMG_9776

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பினைந்திணை என எடுத்த இறைநூல்—மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

பிப்ரவரி 17 புதன் கிழமை

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமாளே! தன்னைச் சேர்ந்தோர் நன்னிதியே! திருவாலவாயுடைய நாயகனே!—திருவிளையாடல் புராணம்

 

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தொடு

உறழ்தரு தமிழ் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்- சீகாளத்திப் புராணம்

 

 

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்

பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தெந்தமிழ்க் கடவுள்- கல்லாடம்

 

பிப்ரவரி 20 சனிக் கிழமை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை – காசிக் கலம்பகம்

 

 

IMG_9820

பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை

தமிழால் வைதாரையும் வாழவைப்போன் – கந்தரலங்காரம்

 

பிப்ரவரி 22 திங்கட் கிழமை

பொழிந்து ஒழுகு முதுமறையின் சுவை கண்டும் புத்தமுதம்

வழிந்து ஒழுகும் தீந்தமிழின் மழலை செவி மடுத்தனையே – மதுரைக் கலம்பகம்

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான் மறையும் ஆனான்  — தேவாரம்

பிப்ரவரி 24 புதன் கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை—திருவாசகம்

 

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

சாறு சுவைஎனக் கூறநின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் – பொய்கையார்

 

IMG_9764

 

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏணையது

தன்னேர் இலாத தமிழ் – தொல்லியல்

 

பிப்ரவரி 27 சனிக் கிழமை

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்- பிங்கலந்தை

 

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

தமிழ் தழிய சாயலவர் – சிந்தாமணி

 

பிப்ரவரி 29 திங்கட் கிழமை

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு பரிசுரைப்பார்…………..திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்—ஆண்டாள்

 

–சுபம்–

பேனா முனையும், கத்தி முனையும்! சொல் வீச்சும் வாள் வீச்சும்! 2 சம்பவங்கள் (Post No. 2490)

pen_versus_sword

Written by london swaminathan

Date: 30 January 2016

Post No. 2490

Time uploaded in London :–  4-36 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact  swami_48@yahoo.com)

 

euripides

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது! வில் முனையைவிட சொல் முனை வலியது என்பதை உலகம் அறியும். சோழ மன்னனை துச்சமாக மதித்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். போஜ ராஜனை கெஞ்சும்படி வைத்தான் உலக மஹா கவிஞன் காளிதாசன். கிரேக்க நாட்டிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளனின் சக்தி மிகப்பெரியதாக விளங்கியது. இதைக் காட்டும் இரண்டு சுவைமிகு சம்பவங்களைக் காண்போம்.

 

கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே மோதல் உருவானது. ரோமானியர்கள், ஏதென்ஸ் நகர அதீனீயர்களைச் சிறைப்பிடித்து சைரக்யூஸ் என்னுமிடத்தில் காவலில் வைத்தனர். போர்க் கைதிகளுக்குப் பொழுது போகவில்லை. கிரேக்க நாட்டின் கவிஞன், நாடகாசிரியன் யூரிபெடீசின் கவிதைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள். நாம் அந்தாதி விளையாட்டு விளையாடுவது போல, அவர்கள் உற்சாகம் காட்டினர். இதை காவற்காரர்களும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தார்கள்.

 

சாதாரணமாக கைதிகளை மிருகங்கள் போல நடத்தி, கண்ட வேலைகளைச் செய்யச் சொல்லுவது அங்கே வழக்கம். ஆனால் நாடகத்தில் வரும் கவிதையின் மஹா சக்தி, அந்தக் காவற்காரர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. இந்தச் செய்தி மேலதிகாரிகளுக்கும் போனது. அவர்களும் கைதிகளைத் தொடர்ந்து கவிதை வாசிக்கும்படி சொன்னார்கள். அந்தக் கைதிகளை, கவுரவ விருந்தாளிகளாக நடத்தி, பின்னர் விடுதலையும் செய்தார்கள்.

 

 

அதீனிய கைதிகள், ஏதன்ஸ் நகரத்துக்குத் திரும்பியவுடன் நேராக யூரிபிடீசின் வீட்டுக்குப்போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். வாள் முனையில் தோற்றாலும், பேனா முனையில் வெற்றி கிடைத்தது குறித்து யூரிபிடீசுக்கு ஏக சந்தோஷம். முன்னாள் கைதிகள் அவரை வணங்கி, ஐயன்மீர்! நீங்கள்தான் எங்களை விடுதலை செய்தீர்கள், உயிர் கொடுத்து காப்பாற்றினீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.

Xxx

 

sophocles

சோபோக்ளிசுக்கு விடுதலை!

கிரேக்க நாட்டின் புகழ்மிகு எழுத்தாளர்களில் ஒருவர் சோபோக்ளீஸ். அவர் சோகச் சுவை நாடகங்கள் எழுதுவதில் மன்னன். சதா சர்வ காலமும், அல்லும் பகலும் அனவரதமும் பேனாவும் கையுமாகத் திரிந்ததால், நிலபுலன்களையும், வீடு வாசலையும் அவர் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கவலைப் பட்டனர்.

 

அவர்கள் என்ன சொன்னாலும் இவரோ “நமக்குத் தொழில் கவிதை- நாட்டிற்குழைத்தல்” என்ற கொள்கையுடன் எழுதினார்- எழுதினார்- எழுதிக் கொண்டேயிருந்தார். பிள்ளைகளுக்குப் பொறுக்கவில்லை. அப்பா மீது வழக்குத் தொடுத்தனர்.

 

வழக்கு, நீதி மன்றத்துக்குச் சென்றது. மகன்கள் சொன்னார்கள்: “எங்கள் அப்பனுக்கு படிச்சுப் படிச்சு மூளை குழம்பி போச்சு; வீட்டு வாசல் நினைவும் தப்பிப் போச்சு. ஆகையால் இந்தக் கிழவனை கையலாகாத பயல் என்று அறிவித்து, அந்த சொத்து சுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் தர உத்தரவிட வேண்டுமென்று கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

 

சோபோக்ளீஸ் நகைத்தார்; அப்பொழுதுதான் அவர் ஒரு அருமையான நாடகத்தை எழுதி முடித்திருந்தார். கையில் அந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. எடுத்தார் சுவடிகளை; தொடுத்தார் சொல் அம்புகளை. ஐயன்மீர்! வயது காரணமாக மூளை குழம்பியிருந்தால் நான் இப்படி எழுத முடியுமா? என்று வினவினார். அவருடைய எழுத்தின் மஹா சக்தியைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும், “கூரிய புத்தியுடையவர் இவர்” என்று அறிவித்து விடுதலை செய்தனர். மகன்கள் தொடுத்த வழக்கு மண்ணைக் கவ்வியது!

சொல் அம்பு வலியது; வில் அம்பு மெலியது;

சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.

pen and sword

தன்னுடன் கிரேக்க நாட்டுக்கு வராவிடில், தலையைச் சீவிவிடுவேன் என்று இந்து சந்யாசியை மிரட்டினான் மாமன்னன் அலெக்ஸாண்டர். அந்த சந்யாசியோ இடிபோலச் சிரித்து, இந்த ஆன்மாவை வாள் வெட்டாது, தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது; இது தோன்றியதுமில்லை; அழிவதுமில்லை. என்றுமுளது! –என்று இடிமுழக்கம் செய்யவே அலெக்ஸாண்டர் அசந்தே போனான்! அவனது வீர வாளை உறைக்குள் சொருகிவிட்டு அவரை வணங்கிச் சென்றான் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க, ரோமானிய எழுத்தாளைர்கள் எழுதிவைத்துள்ளனர் (முழு விவரம் வேண்டுவோர் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்சாண்டர்” என்ற என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க)

 

–சுபம்–

 

 

அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் கதை (Post No. 2487)

IMG_3347

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 29 January 2016

 

Post No. 2487

 

Time uploaded in London :–  14-00

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

பெரும்புளுகர் சமஸ்தானம்

ஒரு ராஜ சமஸ்தானத்தில் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன், கச்சந்திப் புளுகன், பீப்பாய் புளுகன் ஆகிய நால்வரும் அரசனிடம் வந்து நாங்கள் சமஸ்தானப் புளுகனை ஜெயிக்கவந்தோம் என்று கூற, இதைக்கேட்ட அரசன், சமஸ்தானப் புளுகன் எங்கே தோற்றுவிடுவானோ என்று அஞ்சி அருகிலிருக்கும் சமஸ்தானப் புளுகனை  ஒரு பார்வை பார்த்தான்.

 

உடனே சம்ஸ்தானப் புளுகன், திடீரென்றெழுந்து கம்பீரமாய் நின்று, “ஓ,ஓ! கீர்த்தி பெற்ற கிண்டப்புலி புளுகர்களே! என்னை ஜெயிப்பதன் முன்னர், நானே புளுகிவிடுகிறேன். பின்பு உங்களிஷ்டம் போல் புளுகலாம், என்று கூறியவர்களைச் சம்மதிக்கச் செய்து, பிறகு சொல்லத் தொடங்கினான்:

“சபையோர்களே! என் பாட்டி கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் நட்டார்கள். அப்போது நான் தான் தேங்காயுடைத்தேன். அதில் மேல் மூடி சப்த லோகமாகப் பரவிய ஆகாசமாயிற்று. கீழ்மூடி அதல, விதல, சுதல, தராதலமென்ற கீழ் ஏழு லோகமாயிற்று. நடுவிலிருக்கும் தேங்காய் நீர் சப்த சமுத்ரமாயிற்று. அதிலுள்ள திப்பி, நார் முதலியன சூரிய,சந்திர, நக்ஷத்ராதீ, தேவ, மனுஷ, மிருக, பக்ஷி, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமென்ற மற்றெல்லாமாயின. ஐய! இனிப் புளுகுவோரெல்லாம் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களுக்கு  அப்ப்லாலிருந்து புளுக வேண்டுகிறேன்” என்று சொல்லி சமஸ்தானப் புளுகன் உட்கார்ந்தான்.

 

இதுகண்டு வந்தவர்கள் இவனேது அண்டரண்டப் புளுகனாயிருக்கிறானென்று பயந்து, வந்தனஞ்செய்துவிட்டுத் தம் பதிக்கேகினர்.

 

xxx