காமத்தின் ஆற்றல் பற்றி கம்ப ராமாயணம் (Post No.3014)

cupids_arrow_tshirt-

Written by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3014

Time uploaded in London :–  8-32 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

காம வசப்பட்டவர்களுக்கு என்ன நேரிடும் என்று  ஆரண்ய காண்டத்தில் கம்பன் இரண்டு பொன்மொழிகளை உதிர்க்கிறான்:-

 

1.கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

பொருள்: என்னதான் கல்வி கற்றாலும் ஞானம் இல்லாவிடில், காமத்தை வெல்ல முடியுமா?

 

2.வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

பொருள்:- எல்லா சக்தியையும் காமநோய் அழித்துவிடும்.

 

இதோ முழுப் பாடல்:-

 

(1).சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்

உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ

கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ

 

பொருள்:-

ராவணனுக்கு சிறிய இடையை உடைய சீதை என்ற பெயரும், அவனது மனமும் கலந்து, இரண்டு பொருள்கள் இல்லாமல் ஒன்றாகிவிட்டன. அதற்குப்பின்னர், ஒன்றிப்போன இரண்டிலே ஒன்றான சீதையை நீக்கி , மற்றொரு பொருளை நினைக்க அவனிடம் வேறு ஒரு மனம் இருக்கிறதா? இல்லை. அந்தச் சீதையை மறக்க வேறு வழி எது? கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, ஞானம் இல்லை என்றால் காமத்தை வெல்ல முடியுமோ? முடியாது.

 

கற்று அறிந்த விஷயம் நிறைய இருக்கலாம். ஆனால் விவேகமோ, ஞானமோ இல்லாவிடில் காமத்தை வெல்ல இயலாது.

 

ராவணன் மாபெரும் அறிஞன்; கலைஞன்; ஆனால் காமத்தையும், அஹங்காரத்தையும் அவனால் வெல்ல முடியவில்லை. அதுவே அவனுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

 

 

(2).பொன்மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்

வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே

—ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

ராவணனையே தாக்க அஞ்சிய மன்மதன் கூட, இப்போது அவன் மீது அம்பு எய்தும் ஆற்றல் பெற்றுவிட்டான். ஏனெனில் எல்லாவகையான வல்லமையையும் நீக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. ஏன் இது நடந்தது? பொன் மயமாக ஒளிவிடும் சீதை , தன் மனத்தே புகுந்ததால், ராவணன் பெருமை இழந்தான்.

heart-pierced-by-cupids-a-007

(3).விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்

பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்

கதி உறு பொறியின் வெய்ய காமநோய்கல்வி நோக்கா

மதியிலி மறையச் செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே

 

கற்ற கல்வியை பின்பற்றாத ஒருவன் அறிவில்லாதபடி, மறைவாகச் செய்த தீமையைப் போல ராவணனின் காம நோய் மறைவாக வளர்ந்துதது. இதற்கு மூன்று காரணங்கள்:– ஊழ்வினை வலியது, நடக்கவேண்டிய செயல்கள் தப்பாமல் நடந்தே தீரும், இலங்கை நகரம் அழிய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

ஆரண்ய காண்டத்தில் அடுத்தடுத்து வரும் இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை.

 

–subham–

 

 

இதயச் சிறையில் காதலி: கம்ப ராமாயண இன்பம் (Post No. 3010)

heart-pierced-by-cupids-a-007

 

Article written by London Swaminathan

Date:27 July 2016

Post No. 3010

Time uploaded in London :–  7-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள், காதல் இவைகளைக் குறிப்பிடுகையில் இதயம் போன்று ஒரு படம் எழுதி அதில் ஒரு அம்புக்குறி போடுவதைக் காண்கிறோம். இது அதர்வ வேதத்தில் உள்ள உருவகம்; இதை இன்றும் காதலர் தினத்தன்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது பற்றியும் தமிழில் இருதயம் என்றே சொல் இல்லை என்பதையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். குருத்து என்பதே ஹ்ருத் என்று சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது, இதுவே ஹார்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலம் என்றும் குருதி (இரத்தம்) என்பதே இதற்கு ஆதாரம் என்றும் எழுதினேன். இதன் மூலமாக பழைய மொழிக் கொள்கைகள் பித்தலாட்டம் என்றும் ஆரிய-திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு இல்லை என்பதையும் நிலைநாட்டினேன். இதை உலகம் விரைவில் ஏற்கும்.நிற்க.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு.

 

ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் காதலில் மயங்கி, நீ என் இதயத்தில் இருக்கிறாய் என்று சொல்லுவதும் உண்டு. இதுவும் இந்துக்கள் கற்பித்ததே.

அன்பு எனும் சிறையில் அகப்பட்ட யாருக்கும் இது பொருந்தும்! ராமனை எப்போதும் தன் இதயத்தில் காட்டும் அனுமனின் படத்தை நாம் எல்லோரும் பார்த்திருப்போம்.

 

கம்பராமாயணத்தில் ஒரு அருமையான பாடல் வருகிறது. ராவணனின் இதயத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாம்!

 

மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட

எயிலுடை இலங்கை வேந்தன் இதயம் ஆம்  சிறையில் வைத்தான்

அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல

வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

உயர்ந்த மதிலையுடைய இலங்கைக்கு அரசனான ராவணன், மயில் போன்ற சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைப்பதற்கு முன்னர், தனது இதயம் என்னும் சிறையில் வைத்தான். அப்பொழுதே வெய்யிலில் உருகும் வெண்ணை போல அவனது மனமும் உருகிற்று. (ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலம், கம்ப ராமாயணம்).

 

 

வெய்யிலில் உருகும் வெண்ணெய் என்ற உவமையும் படித்துப் படித்து இன்புறத் தக்கது.

 

நாகரீக வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திலேயேதான் இதுபோன்ற உவமைகள் தோன்ற முடியும். இது அதர்வண வேதத்திலேயே வருவதால் கம்பன் அந்த உவமையைக் கையாண்டதில் வியப்பொன்றும் இல்லை. பாரத சமுதாயமே பழங்கால உலகின் தலைவன், முதல்வன் என்பதில் இனிமேலும் ஐயப்பாட்டிற்கு இடமுண்டோ?

 

–சுபம்—

 

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda ( Research article written by London Swaminathan, posted on 26 September 2012)

 

‘அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம் (Post No.3004)

sabari

Picture shows Sabari with Rama, Lakshmana

Article Written by London swaminathan

Date:25 July 2016

Post No. 3004

Time uploaded in London :– 8-05 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் சபரி என்னும் கானகப் பெண்மணியைப் பற்றிய பாடல்கள் மிகவும் குறைவு. ஆயினும் அந்தப் பாடல்களை, ஸ்லோகங்களைப் படிக்கும்போது இலக்கிய இன்பமும், பக்திச் சுவையும் கிட்டும்.

 

முதலாவது, கானகத்தில் தவம் செய்யும் கிழவிக்கு கம்பன் கொடுக்கும் அடை மொழி “அருந்தவத்து அரசி”. வால்மீகி அடிக்கடி பயன்படுத்தும் “தபோநிதி” – என்பதை கம்பன் வேறு வடிவத்தில், இப்படி மிகவும் அழகாகப் பகர்கிறான்.

 

கம்ப ராமாயணம் முழுதும், ராமனுக்கும் சீதைக்கும் அனுமனுக்கும் கம்பன் கொடுக்கும் அடை மொழிகள் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை

பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன

அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள்

வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை வாழி என்றார்

பொருள்:

சபரி சொன்னாள்: என் தந்தையே! நீ இங்கே வரப்போகிறாய் என்று கேட்டு, உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்றுதான் என் தவம் பலித்தது ( என் புண்ணியம் பூத்தது).

உடனே, அருந்தவத்துக்கு ராணியான அவளைப் பார்த்து, அன்போடு ராமன் சொன்னான்: தாயே! வழிநடையால் ஏற்பட்ட களைப்பை, உன் உபசரிப்பால் தீர்த்துவிட்டாய், நீ வாழ்வாயாக.

 

அவள் சொல்கிறாள்: சிவனும் பிரம்மனும், இந்திரனும் என்னிடம் வந்து,  நீ சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. ராமன் இங்கே வருகிறான். அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்துவிட்டு எம் உலகத்துக்கு வருக என்று அவர்கள் சொன்னார்கள்.

 

(பிரம்மா, சிவன் பெயரை மட்டும் சொன்னதிலிருந்து,   ராமனே விஷ்ணு என்பதையும் கம்பன் தெரிவிக்கிறான்.)

shabari

Picture: – சபரி என்ற வேடுவப் பெண்மணி

இன்னொரு பாடலில் ஞானிகள் யார் என்றும் கம்பன் சொல்கிறான். அவர்கள் “கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர்”. அதாவது, நமக்கு எல்லாம் காதில் இயற்கையாகவே துளை இருக்கிறது. சான்றோருக்கு,  கேள்வி  ஞானத்தால் – நல்லனவற்றைக் கேட்டதால் அத்துளை உண்டாயிற்றாம்!

 

சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம் ஆகும். அந்த இடத்தின் இயற்கை அழகையும் பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகையும் வால்மீகி விரிவாக வருணிக்கிறார். கமபன் அந்த இடம் சொர்க்கலோகம் போல இருந்தது என்பான்:

எண்ணிய இன்பங்கள் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன

புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே

 

பொருள்:

புண்ணியம் செய்தோர் போகக்கூடிய சுவர்க்கம் (துறக்கம்) போல எப்போதும் இன்பம் மட்டுமே நிலவும் — துன்பமே இல்லாத – இடம் போல இருந்தது (மதங்க முனிவரின் இருப்பிடம்)

 

இறுதியில் ராமனுக்கு காய் கனிகளைக் கொடுத்து சபரி உபசரிக்கிறாள். அது மட்டுமல்ல சுக்ரீவன் வாழும் இடத்துக்கு எப்படி போவது என்றும் வழிகளை விரிவாகச் செப்புகிறாள். கடை சியில் யோக சக்தி மூலம் தன் உடம்பை விட்டு நீங்கி உயிர் துறக்கிறாள்.

 

வால்மீகி சிறிது வேறுவிதமாக முடிக்கிறார். யோக சக்தி என்பதற்குப் பதிலாக தீயில் புகுந்து சபரி உயிர் நீத்தாள் என்று இயம்புகிறார். அக்காலத்தில் சான்றோர்கள், தனது பணிகள் முடிந்தபின் இப்படி தீப்புகுந்து உயிர் துறப்பர்.

 

அதிகமான சங்கத் தமிழ் பாடல்களைப் பாடிய பிராமணப் புலவன் – “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” – கபிலனும் இப்படி தீப்புகுந்து உயிர்நீத்தான்.

 

சபரி பாடல்களில் இருந்து நாம் அறிவது என்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்வோம்:–

sabari ashram

Picture:– சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம்

1.அந்தக் காலத்தில் பெண்களும் நல்ல ஆன்மீக அறிவு பெற்றிருந்த்னர். அவ்வையாருக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் சபரி. அப்போதே பெண்கள் ஆன்மீக தாகம் கொண்டு தவம் செய்தனர்.

2.ராமன் போன்றாரும், சபரியும் கானகத்தில் – வெஜிட்டேரியன் உணவை மட்டுமே சாப்பிட்டனர். காயும் கனிகளும் கீரையும் தேனும் திணை மாவுதான் அவர்கள் உண்டவை.

3.சான்றோர்கள் தன் தவ வலிமையால் உடல் துறப்பது, தீப்புகுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதாவது உடலைத் துச்சமாக எண்ணினர். நாம் பழைய உடைகளைக் குப்பைக் கூடையில் எறிவது போல அவர்கள் உடலைத் துறந்தனர்.

4.கானகத்தில் இருந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை அழகு மிக்கவை அவை சொர்க்க லோகம் போன்று இன்பமே எந்நாளும் என்ற இடமாகத் திகழ்ந்தன.

5.சபரி கடித்துச் சுவைத்து கொடுத்த பழங்களை ராமன்- மன்னன் மகன் — ஜாதி வேறுபாடின்றி சாப்பிட்டதையும் நாம் அறிவோம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை – ராமன் குகன் சம்பவத்திலும், சபரி சம்பவத்திலும் காட்டுகிறான்.

  1. எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய-திராவிட வாதத்துக்கு செமையடி கொடுக்கிறது ராமாயணம். ஆதிகுடிகள், வேடுவர்கள் என்போரெல்லாம் திராவிடர் என்றும் , ராமன், கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் ஆரியர் என்றும் பிதற்றினர் வெளி நாட்டினர். அது தவறு – சபரியும் கூட யோக வாழ்வு நடத்தினாள் என்று காட்டுகிறது இந்த சம்பவம். மேலும் ராமனும், கிருஷ்ணனும் “காக்கா கறுப்பு நிறத்தோலினர் என்பதையும் நாம் அறிவோம். ஆக நிறவேற்றுமை புகுத்திய வெளி நாட்டுப் பேய்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறது சபரி நிகழ்வு

7.சபரி என்ற வேடுவப் பெண்மணிக்கு நல்ல பூகோள அறிவு இருந்ததையும் இச்சம்பவம் காட்டும். அதாவது அவள், சுக்ரீவன் வாழும் ரிஷ்யமுக பர்வதத்துக்குப் போகும் வழியை இராம இலக்குவருக்கு இயம்புகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் நிலவியது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னர் ‘கூகுள் மேப்’- ஐ (Google Map) விட அதிக அறிவு இருந்தது பெண்களுக்கு.

 

8.இப்படலம் சுவர்கம் பற்றிய தகலையும் நமக்குத் தருகிறது. சுவர்க்க லோகம் இன்பமே எந்நாளும் நிலவும் இடம். அங்கு துன்பம் என்பதே கிடையாது.

 

சபரி பிறப்பு நீங்கு படலத்தை கம்பன் முடிக்கும் முன்பாக, சபரி தன் யோக சக்தியால் உயிர் நீத்ததை ராமன் அதிசயத்தோடு பார்த்த செய்தியையும் கம்பன் கூறுகிறான்:-

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்றி எய்தி

 

இந்த அதிசயத்தகவலை நமக்குக் கொடுத்த கம்பனுக்கும் வால்மீகிக்கும் நாமும் நன்றி சொல்வோம்.

 

–subham–

 

ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல் (Post No. 3000)

megalaya forest,jungle

Written by London swaminathan

Date:24 July 2016

Post No. 3000

Time uploaded in London :– 5-22 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இப்பொழுது பல மாயாஜாலக் கதைகளைப் படிக்கிறோம். ஏராளமான சித்திரத் தொடர்கதைகளைப் படிக்கிறோம். ஹாரி பாட்டர் போன்ற புதிய கதைகளும், திரைப்படங்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன. ஆனால் எல்லா கதைகளிம் கருக்களும், விதைகளும் இந்திய இலக்கியங்களில் உள்ளன. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், நாட்டுப்புற கதைகளிலும் இதை அதிகம் காணலாம். ஈசாப் கதைகளானாலும் சரி, ஜோனதன் ஸ்விப்டின் கலிவரின் யாத்திரை ஆனாலும் சரி, பொக்காஸியோவின் டெக்காமொரோன் ஆனாலும் சரி — எல்லாக் கதைகளின் கருத்துகளும் வடமொழியில் இருப்பதைக் காணலாம்.

chilka 10, fb

வால்மீகி ராமாய ண த்தில் அலிபாபா-அலாவுதீன் விளக்கு ,  கதைகளை விட அதிசயமான கதைகள் இருக்கின்றன. பரத்வாஜர் கதை. மாண்டகர்ணி என்ற ரிஷியின் கதை ஆகியன குறிப்பிடத்தக்கன.

 

காளிதாசன் சொல்கிறான்:-

“இதோ தெரியும் இந்த பஞ்சாப் சரஸ் ஏரியானது சாதகர்ணி என்னும் முனிவரின் ஏரி ஆகும் இது அவர் நீர்விளையாட்டுக்காக அமைத்தது. நான்கு புற ங்களும் அடர்ந்த, இருண்ட காடுகள் இடையே இது பள, பள என்று பிரகாசிப்பதால் இதை இருண்ட வானத்தில் செல்லும் சந்திரனுக்கு ஒப்பிடலாம்”.

 

ஏதத்முனே: மானினிசாதகர்ணே: பஞ்சாப்சர: நாம  விஹாரவாரி

ஆபாதி பர்யந்தவனம் விதூராத் மேகாந்தர் ஆலக்ஷ்யம்இவ இந்து பிம்பம்

–ரகுவம்சம், 13-38

 

காளிதாசன் சாதகர்ணி என்று சொல்லும் முனிவரின் பெயர் ராமாயணத்தில் மாண்டகர்ணி என்று வருகிறது. அவர் 16,000 ஆண்டு தவம் செய்துகொண்டிருந்தார் (16000 ஆண்டு = நீண்ட காலம்). தேவர்களுக்கு அச்சம் நிலவியது. உடனே ஐந்து அப்சரஸ் அழகிகளை அனுப்பிவைத்தனர். அவரும் சொக்கிப்போனார்.

 

அவர் அந்த ஐந்து பேரையும் மண ந்து கொண்டார். தன்னுடைய தவ வலிமையால் அந்த ஏரியின் அடிப்பகுதியில் ஒரு அரண்மனையைக் கட்டினார். அதில் அவர்களுடன் வசித்தார். ஐந்து அப்சரஸ் பெண்களின் நினைவாக அந்த ஏரி பஞ்சாப் சரஸ் என்று அழைக்கப்படும்.

 

முன்பு தர்ப்பைப் புல்லின் குருத்துக்களை மட்டும் உண்டு, மான்களோடு விளையாடி வந்த முனிவர்,  இந்திரனின் கபடத்தால்,  “ஐந்து அழகிகளின் இளமை என்ற கூட்டு”க்குள் அடைக்கப்பட்டார் என்று காளிதாசன் மேலும் வருணிக்கிறான்.

 

நீருக்கடியில் மறைந்திருந்த அந்த மாளிகையிலிருந்து எழுந்த இன்னிசை ஒலி (சங்கீத – மிரிருதங்க – கோஷம்) ஆகாயத்தை அடைந்து அங்கே சென்ற விமானங்களில் மீது மோதி எதிரொலித்தன.

 

வால்மீகி ராமாயணந்த்தில் ஆரண்ய காண்டத்தில் 11ஆவது சர்கத்தில் 15 ஸ்லோகங்களில் வரும் வருணனைகள், காளிதாசனின் மனதை மிகவும் கவர்ந்ததால், இந்த சர்கத்தில் இப்படி வருணித்தான்.

 

இதிலிருந்து நாம் அறியும் விஷயங்கள்:–

 

1.அந்தக் காலத்தில் நீருக்கு அடியில் கட்டிடம் அமைக்கும் பொறியியல் வல்லுநர்கள் இருந்தனர்.

2.காட்டுக்கு அடியில் தவ வலிமை மூலம் அமைத்தாலும், ஒரு கட்டிட வரைபடம், அமைப்பு இல்லாமல் இது நடந்திராது.

  1. வானில் விமானங்கள் சென்று கொண்டிருந்ததையும் அறிகிறோம்.
  2. இன்று சாமியார்கள், பெண்களிடம் சரணடைவது போல அன்றும் பல முனிவர்கள் அடிமையானதையும் அறிகிறோம்.
  3. காட்டில் முனிவர்கள் தவம் செய்கையில், இலை, தழைகளைச் சாப்பிட்டுக் கொண்டு, மான்களோடு விளையாடி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை நடத்தினர்.
  4. நீண்டகாலம் என்பதை- 16,000 ஆண்டுகள் — என்ற மரபுச் சொற்றொடர் மூலம் (இடியம்) எழுதும் வழக்கம் இருந்ததையும் காண்கிறோம்.

7.பரத்வாஜர் கதையும், விஸ்வாமித்ர/காமதேனு கதையும், மாண்டகர்ணி கதையும் பல மாயாஜால விஷயங்களை கூறுகின்றன. இவை அனைத்தும் தவ வலிமையால் நிகழ்ந்தன என்ற தகவலையும் அறிகிறோம்.

 

வால்மீகி தரும் தகவல்

 

வால்மீகி ராமாயணம் இந்த ஏரியின் இயற்கை அழகை மிக அழகாக வருணிக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் இன்னிசை ஒலி கேட்டவுடன் ராம, லெட்சுமணர்கள் , தர்மப்ருத் என்ற முனிவரிடம் இது எங்கிருந்து வருகிறது? ஜன நடமாட்டமே இல்லையே என்கிறார்கள். உடனே மேற்கூறிய கதையை அவர் விவரமாகக் கூறுகிறார். இதையே காளிதாசன் சுருக்கித் தந்துள்ளான்.

 

–subham–

 

கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு! (Post No.2909)

valampuri 1

Compiled by London swaminathan

 

Date: 20  June 2016

 

Post No. 2909

 

Time uploaded in London :– 10-34 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்தை ராம பிரானின் புனித வாழ்வைப் போற்றும் காவியமாகப் பார்ப்பர் பலர்; இலக்கிய இன்பத்துக்காக நுகர்வர் பலர்; ஆராய்ச்சி நோக்குடன் அணுகுவர் சிலர். இவ்வாறு அணுகி முன்னரே பல கட்டுரைகளில் மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் மின்சார பல்புகள் போல அவைகளின் கூடுகளில் வைத்துப் பயன்படுத்துதல் முதலியன பற்றி எழுதியுள்ளேன். இன்று வலம்புரிச் சங்குகளில் மிகவும் அதிசயமான சலஞ்சலம் பற்றி கம்பன் சொன்னதைக் காண்போம்.

 

செங்கண் அங்க அரவின் பொரு இல் செம்மணி விராய்

அங்கண் அங்கவலயங்களும் இலங்க அணியச்

சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே

–விராதன் வதைப் படலம், ஆரணிய காண்டம்,கம்ப ராமாயணம்

பொருள்:-

விராதன் என்னும் அரக்கன் எப்படி வந்தான்? சிவந்த, செம்மையான உடம்புடைய பாம்புகள் கக்கிய மாணிக்க வளையங்களையும், சங்குகள் வருந்திப் பெற்றெடுத்த சலஞ்சலம் எனும் சங்குகளினால் ஆன வளையல்களையும் அணிந்த கரங்களை முன்னும் பின்னும் வீசியவாறு வில் வீரர்களுக்கு எதிரே விராதன் வந்தான்.

valamum itamum

 

பாம்புகள் கக்கும் நாகரத்தினம் (மாணிக்கம்) பற்றி முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறிவிட்டேன். இப்பொழுது அதிசய சலஞ்சலம் பற்றிப் பார்ப்போம்.

 

வலம்புரிச் சங்கு என்பது இந்து மஹா சமுத்திரத்தில், மிகவும் அபூர்வமாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலான சங்குகளுக்கு உள்ள சுழிக்கு எதிர்ப்புறமாக இதன் சுழி இருக்கும். ஆங்கிலத்தில் இதை இடம் சுழிச் சங்கு என்பர். சங்கை மேல் புறத்திருந்து பார்க்கிறோமா, கீழ்ப் புறத்திலிருந்து பார்க்கிறோமா என்பதைப் பொருத்து இடம், வலம் என்ற மாறுபாடு வருகிறது.

கம்பன் ஏன் சலஞ்சலம் என்னும் சங்கினால் ஆன வளையல் என்று சொன்னான்? மாணிக்கத்துக்கு நிகரான விலை கொண்டது அது. நாகரத்தினம் போல அபூர்வமானது அது.

ஆயிரம் இடம்புரிச் சங்குகளால் சூழப்பட்ட சங்கு வலம்புரிச் சங்கு என்றும், அதுபோன்ற 1000 வலம்புரிச் சங்குகளால் சூழப்படது சலஞ்சலம் என்றும் நூல்கள் செப்பும். இது போன்ற சங்குதான் கிருஷ்ணன் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு ஆகும்.

 

பகவத் கீதையிலேயே ஐந்து பாண்டவ வீரகளின் கையிலுள்ள ஒவ்வொரு சங்கிற்கும் தனித் தனி பெயர் கொடுத்திருப்பதால் இந்துக்கள்தான் முதல் முதலில் சங்கைப் பயன்படுத்திய நாகரீகம் வாய்ந்த சமூகம் என்று சொல்லவேண்டும்.

 

பகவத்கீதை முதல் அத்தியாயத்தில் பாண்டவர்கள் கையிலும் கிருஷ்ணன் கையிலும் உள்ள சங்குகளின் பெயர்கள் காணப்படுகின்றன:

பாஞ்சஜன்யம் ஹ்ருஷீ கேசோ தேவதத்தம் தனஞ்ஜய:

பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீம கர்மா வ்ருகோதர:

 

அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:

நகுல: ஸஹதேவஸ்ச ஸுகோஷ மணிபுஷ்பகௌ (1-15/16)

 

கிருஷ்ணன் – பாஞ்சஜன்யம்

அர்ஜுனன் – தேவதத்தம்

தர்மன் – அனந்தவிஜயம்

பீமன் – பௌண்ட்ரம்

நகுலன் – சுகோஷம்

சஹாதேவன் – மணிபுஷ்பகம்

 

(‘அபூர்வ வலம்புரிச் சங்கு’ என்ற தலைப்பில் நான் எழுதி 17 செப்டம்பர் 2012-ல் இங்கே வெளியிட்ட கட்டுரையில் சங்குகள் பற்றிய சுவையான விவரங்களையும் காண்க)

–சுபம்–

 

புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி (Post No.2859)

கம்ப1

Article written by London swaminathan

 

Date: 1 June 2016

 

Post No. 2859

 

Time uploaded in London :–  8-03 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

kalidasa_20405

Poet Kalidasa

அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது. ஆயினும் அவர்கள் முதல் பாடலை எழுதி பெரும் காவியத்தைத் துவக்கியபோது இது மக்களின் ஆதரவைப் பெறுமா, காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா என்றெல்லாம் பயமும் ஐயமும் இருந்திருக்கும். அவர்களிருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன் காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

க்வ சூர்யப்ரபவோ வம்ச: க்வ ச அல்பவிஷயா மதி:

திதீர்ஷு துஸ்த்ரம்  மோஹாத் உட்டுபேன  அஸ்மி சாகரம்

 

சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத கடலை சிறிய படகைக் கொண்டு கடக்க விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!

காளிதாசனின் ரகுவம்சம் 1-2

xxx

மந்த கவியஸ ப்ரார்த்தீ கமிஷ்யாமி உபஹாஸ்யதாம்

ப்ராம்சுலப்யே பலே லோபாத் உத்பாஹுரிவ வாமன:

 

எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)

ரகுவம்சம் 1-3

xxx

அதவா க்ருத வாக் த்வாரே வம்சே அஸ்மின் பூர்வசூரிபி:

மணௌ வஜ்ரசமுத்கீர்ணே சூத்ரஸ்யேவாஸ்தி மே கதி:

நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவந்தான். ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்

ரகுவம்சம் 1-4

 

காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடியவனாகவும் உருவகிக்கிறான்.

cat

கம்பன் ஒரு பூனை!

கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ

–பாலகாண்டம்

பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்

பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே.

valmiki

தெய்வ மஹா கவி வால்மீகி

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு

எய்தவும் இது இயம்புவது யாது எனின்

பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே

பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.

(இதில் தெய்வ மாக் கவி என்பது அவர் இயற்றிய கவிதைகளை மட்டும் குறிப்பதல்ல. வால்மீகியே தெய்வ மாக்கவிஞன். பாணினியை பகவான் பாணினி என்று பகர்வான் பதஞ்சலி; வள்ளுவனை தெய்வப் புலவன் என்றனர் புலவர் பெருமக்கள்; இலியட், ஆடிஸி காவியங்களை இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்)

ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.

raguvamsam_b

–சுபம்–

 

கடலுக்கடியில் சக்ரவாள மலை:கம்பன் தரும் தகவல் (Post No. 2830)

submarine mountains 1

Article written by London swaminathan

 

Date: 22 May 2016

 

Post No. 2830

 

Time uploaded in London :–   6-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sea-mounts

கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத் தொடர் பற்றி இந்திய இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழ், சம்ஸ்கிருத நூல்கள் இதைப் பற்றி குறிப்பிடுகின்றன. கடலுக்கடியில் வட்டமாக பூமியைச் சுற்றி இம்மலை இருப்பதாக மக்கள் நம்பினர். இதனால் இதை, புலவர் பெருமக்கள் உவமையாகக் கூட பயன்படுத்தினர்.

 

இப்பொழுது கடலடி மலைகளையும், கடற் படுகைகளையும் ஆராயும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாகிவிட்டதால் எளிதில் ஆராய முடிகிறது. கடலுக்கடியில் மிக உயரமான மலைகள் இருப்பதை கடலியல் ஆராய்ச்சியளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் நமது இலக்கியங்கள் வருணிப்பது போல இது வட்டமாகத் தொடர்ந்து இல்லாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு மலைத் தொடர்களாக இருக்கின்றன. இதைத் தான் நமது இலக்கியங்கள் சக்கரவாளம் என்று வருணிக்கிறது என்று சொல்லலாம்.

 

கடலடி ஆராய்ச்சிக் கருவிகள் இல்லாமலேயே, பூமி முழுவதும் எல்லா இடங்களிலும், கடலுக்கடியில் இப்படி ஒரு மலைத் தொடர் இருப்பதைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவை எண்ணி வியக்கலாம். கடற்பயணம் செய்த நம் முன்னோர்கள் இதைக் கண்டு பிடித்திருக்கலாம்.

 

இதோ கம்பன் சொல்லும் உவமை:

தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து

ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்

நேமி மால் வரைநெருக்குகின்றதே

ஆம் எனல் ஆய கைம்மதிட்குள் ஆயினார்

-கவந்தன் படலம், ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்: சக்கரவாளம் என்று பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு கவந்தன் என்னும் ராட்சசனின் கைகள் ராம, லட்சுமண சகோதரர்களைச் சுற்றி வளைத்தது. தேன் போல இனிய மொழி பேசும் சீதையின் பொருட்டு அரக்கர் சேனை வந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தனர்.

 

கவந்தனின் கைகள் வளைத்ததை, சக்கரவாக மலை நெருக்கியதற்குக் கம்பன் ஒப்பிடுகிறார். மக்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தால்தான் புலவர்கள் அதை உவமையாகப் பயன்படுத்துவர். ஆகவே மக்களுக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருந்தது என்றே சொல்லல்லாம்.

submarine2

கம்பனுக்கு முன் தோன்றிய பழமொழி நானூறு என்னும் நூலிலும் இதோ ஒரு உவமை:-

 

கெடுவலெனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்று நீராழி வரையகத் தீண்டிய

கற்றேயும்; தேயாது சொல்

-பழமொழி

 

பொருள்:-  பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லையாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஆனால் வடுச்சொல் தேயாது. ஆகையால் தான் கெடுவோம் என்று தெரிந்தாலும்,தனக்கு பழி உண்டாகத செயல்களையே செய்தல் வேண்டும்.

 

–சுபம்–

 

தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819)

IMG_3212

Written by london swaminathan

 

Date: 17 May 2016

 

Post No. 2819

Time uploaded in London :– 15-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் பாடிய பாடல்கள், அவனுக்கு தமிழ் மீதுள்ள அன்பைக் காட்டுகிறது. ராமன் புகழ் பாட வந்த கம்பன், தமிழின் புகழ் பாட மறக்கவில்லை. எங்கெங் கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தமிழையும், தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனையும் போற்றிப் புகழ்கிறான்.

agastyanepal-carole-r-bolon

‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

ஆரண்ய காண்டத்தில் ராமன், அகத்தியன் சந்திப்பு பற்றி வருணிக்கும் கம்பன்,

ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்

ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

பொருள்:– சக்கராயுதத்தை உடைய திருமாலைப் போல, பெரிய தமிழ் மொழியால் இவ்வுலகத்தை அளந்தவனாகிய அகத்தியன், ஆண்மை மிகுந்த ராம, லெட்சுமணர் அங்கே வந்ததை அறிந்தார். அதனால் மகிழ்ச்சிக் கடல் 14 உலகங்களையும் அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், மாட்சிமைப்பட்ட வரங்களை வழங்கும் ராமன், தன் திருவடிகளில் விழுந்து வணக்குமாறு, அவன்  எதிரே வந்தான்.

 

உழக்கும் மறை நாலினுமுயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’’

 

பொருள்:- அந்த அகத்தியன் நால் வேதங்களையும் பயின்று உயர்வு அடைந்தான். தமிழ் உலகம் பேசும் முரை, தமிழ்ப் புலவரின் செய்யுள் ஆகியவற்றை முறைப்ப்ட ஆராய்ந்து, சிவபெருமான் கற்றுத்தந்த தமிழுக்கு இலக்கணம் செய்து தந்தான். சிவன், ஒளிவீசும் மழு ஆயுதம்,நெற்றியில் நெருப்பை உமிழும் சிவந்த கண்ண்ணை உடையவன்.

 shiva at Dwaraka

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

“நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

 

பொருள்:– அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான்.

 

 

தமிழ்த் தலைவன் யார்? (எனது பழைய கட்டுரையிலிருந்து)

 

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

 

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

சொற்கலை முனிவன்

இன்னொரு செய்யுளில் அகத்தியனை “சொற்கலை முனிவன்” (பால காண்டம்) என்பான் கம்பன். தமிழுக்கு இலக்கணம் வகுத்ததால், அகத்தியனுக்குக் கிடைத்த அடைமொழி இது.

rama look

இராமபிரானுக்கு தமிழ் தெரியும்!

கம்பன் ஒரு அதிசயத் தகவலையும் தருகிறான். ராமனுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியும் என்பான்:–

நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை

தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்

தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்

பொருள்:- பரத கண்டத்தின் தென்பகுதியில் வழங்கும் தமிழ் மொழி எனும் கடலைத் தாண்டியவனும், வடக்கே வழங்கும் சம்ஸ்கிருத மொழியில் கூறப்பட்டுள்ள எல்லா கலைகளுக்கும் எல்லை கண்டவனுமான ராமபிரான், “இனிய சொற்கலைக் கூறி இந்நாள் வரை என்னைப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் சொல்லை மீறி அரசாள்வது எனக்குத் தகுந்தது இல்லை. ஆனால் என் சொல்லை நீ மீறி நடந்தாலோ உனக்கு இழிவு அல்லவோ” (நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம்—லெட்சுமணனிடம் ராமன் சொன்னது)

 

 

எனது பழைய கட்டுரைகள்

 

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில் (17 ஜூலை 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 2 (26 டிசம்பர் 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 1 (9 ஜூன் 2014)

 

–சுபம்–

 

ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814)

ராம சீதா

Written by london swaminathan

 

Date: 15 May 2016

 

Post No. 2814

Time uploaded in London :–  17-24

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ராமரும் லெட்சுமணரும் வனவாசத்துக்குப் புறப்பட்டனர். சீதையுடன் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் பஞ்சவடி என்ற இடத்தை அடைந்தனர். ஐந்து ஆலமரங்கள் அழகாக ஒரே இடத்தில் இருந்ததால் அந்த இடத்துக்கு சம்ஸ்கிருதத்தில் பஞ்சவடி ( தமிழில் 5 ஆலமரம்) என்று பெயர்.

 

அங்கே பர்ணசாலை அமைக்க தீர்மானித்தனர் (இலைகளால் வேயப்படும் குடிசைக்கு பர்ணசாலை என்று சம்ஸ்கிருதத்தில் பெயர்). இங்கே பர்ணசாலை அமைக்க, இந்த இடத்துக்குச் சொந்தக்காரரைச் சந்தித்து அனுமதி பெற்று வா என்று லெட்சுமணனை ராமபிரான் அனுப்பினார்.

 

லெட்சுமணன், அந்த இடத்தின் சொந்தக்காரரைத் தேடிப்போகையில் ஒரு மரத்துக்கு அடியில் ஒரு சிறு உருவம் தோன்றியது. அவர்தான் அந்த இடத்தின் சொந்தக்காரர் என்று லெட்சுமணன் நினைத்தான். அவரிடம் அனுமதி பெறுவதற்காக அவன் அங்கே தியானத்தில் அமர்ந்தான். அவனது தியானத்தில் ஒரு உருவம் பற்றிய வருணனை மனக் கண்கள் முன்னால் வந்தது. அதாவது குணம் குறியுடையதாக ஒரு உருவம் கையால் நாக்கை இழுத்துப் பிடிப்பது போலும், மற்றொரு கையால் கௌபீனத்தை (கோமணத்தை) இழுத்துப் பிடிப்பது போலும் கண்டான். தியானம் முடிந்தவுடன் ராமனிடம் வந்து தான் கண்ட காட்சியைச்சொன்னான்.

RAMA ARCH

இராமன் உடனே நமக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. நாம் குடிசை அமைக்கும் பணியைத் துவக்கலாம் என்றான்.

எப்படி அண்ணா, உத்தரவுகிடைத்தது என்று நினைக்கிறாய்? என்று இளவல் (தம்பி) வினவினான்.

 

நாக்கை இழுத்துப் பிடிக்கும் காட்சி– எவனுக்கு சுவையையும், சொல்லையும் அடக்கி ஆளும் திறன் உண்டோ என்பதையும் கோமணத்தை இழுத்துப்பிடிக்கும் காட்சி— எவனுக்கு காமத்தை அடக்கி ஆளும் திறன் உண்டோ — அவனுக்கு எங்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதையே காட்டுகிறது என்று ராமன் விளக்கினான். நாம் அந்நெறியில் பிறழாது வாழ்வதால் நமக்கு உத்தரவாகிவிட்டது என்றான்.

 

இருவரும் குடில் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்தனர்.

‘யா காவாராயினும் நா காக்க’ – என்ற வள்ளுவன் சொல்லும், ‘இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்’ – என்ற பெரியோர் வாக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.

 

ஆனந்த ராமாயணம்

‘300 ராமாயணம்’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் நூல் எழுதினார். ஆனால் நான் பிரிட்டிஷ் லைப்ரரிக்கு போகும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தமிழ் ராமாயணம் கிடைத்து வருவதைப் பார்க்கையில் 3000 ராமாயணங்கள் இருக்கலாம் என்று எழுதினேன். சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்ற போது ராமஸ்வாமி அய்யர் என்பவர் பாடல் வடிவில் சில ராமாயண காண்டங்களை இயற்றி அதற்கு ‘ராமஸ்வாமீயம்’ என்று பெயர் கொடுத்திருப்பதைக் கண்டேன். அந்த நூலின் சில பக்கங்களையும் அட்டையையும் ‘பேஸ்புக்கில்’ வெளியிட்டேன்.

 

ஆனந்த ராமாயணம் என்பது வால்மீகி, கம்பன், துளசி ராமாயணம் அளவுக்குப் பிரசித்தமாகவில்லை. இதையும் வால்மீகி இயற்றினார் என்றே சொல்லுவர். இதில் ஒன்பது காண்டங்களும் 12,252 ஸ்லோகங்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. வால்மீகி ராமாயணத்தில் காணப்படாத பல விஷயங்களும் கதைகளும் இதில் இருக்கின்றன.

-சுபம்-

 

‘வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744)

IMG_4384

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2744

 

Time uploaded in London :– 13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5

dance in shade

67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று

-சாகுந்தலம், காளிதாசன்

அநார்ய: பரதார வ்யவஹார:

Xxxx

68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது

-சாகுந்தலம், காளிதாசன்

அநிர் வர்ணனீயம் பர  களத்ரம்

Xxxx

69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.

–க்ரந்தஸ்தகாதகாகு

அனுகூல ரசா பார்யா

Xxxx

70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

 

bob painting 5

71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

73.கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

 

IMG_4360

76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.

த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்

—-பாரத மஞ்சரி

Xxxx

77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.

ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே

–பஞ்சதந்திரம்

Xxxx

78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை

ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

–வால்மீகி ராமாயணம், 5-24-8

Xxxx

79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.

–ம்ருச்சகடிக, சூத்ரகர்

ந யுக்தம் பர களத்ர தர்சனம்

Xxxx

80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி

—-ம்ருச்சகடிக, சூத்ரகர்

 

Xxxx

 

 

81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை

–வால்மீகி ராமாயணம் 4-24-43

ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி

Xxxx

82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை

ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்

-ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

 

IMG_4508

83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.

ந சஹந்தே ஹி  ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்

—ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே

–கதா சரித் சாகரம்

நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:

Xxxx

 

85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்

–வால்மீகி ராமாயணம், 2-29-7

பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.

Xxxx

86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?

பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?

–பாரத மஞ்சரி

IMG_4885 (2)

 

–சுபம்–