அருந்ததியிடம் தோற்ற விஸ்வாமித்ரர்

vasi viswa

Written by London Swaminathan (As told by Sri M N Kalyana Sundaram, London)
Post No. 1092 ; 8th June 2014

விஸ்வாமித்ரர் புகழ் பற்ற ராஜரிஷி. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால் தவத்தினால் பிரம்ம ரிஷி (பிராமண குல)யாக உயர்ந்தவர். அதுவும் “வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” பட்டம் பெற்றவர். ஆனால் இப்படிப் பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வசிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான். காம சுகம், அஹங்காரம், கோபம் ஆகிய மூன்று எதிரிகளால் மூன்று முறை தோல்வி அடைந்து இறுதியில் மீண்டும் தவம் இயற்றி பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார்.

.
வசிட்ட மகரிஷியிடம் இருந்து காமதேனு பசுவைப் பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று. இது ஒரு சுவையான கதை.

ஒருமுறை வீட்டூக்குச் சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வசிஷ்டர் அழைத்தார். அது ஒரு திதி (திவசம்/ சிரார்த்தம்) அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சாப்பாடு. அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை கறி செய்து படைக்க வேண்டும் என்றார். உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்?

விசுவாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியும். இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் , “ ஓ, 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் என்றார்.

vishwamitra_idh110

வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு இந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கவேண்டும். வசிட்டரும் அருந்ததியும் இணபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று பிராமண புரோகிதர்களும் வாழ்த்துவர். அருந்ததி கீழ்ஜாதிப் பெண்ணாக இருந்தபோதிலும் அவள் கற்பினால் உயர்ந்தவள் என்பதால் எல்லோருக்கும் அவளே தெய்வம்.

சங்கத் தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவள் வாழ்த்தப் படுகிறாள். தமிழ்ப் புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அவள் புகழ் பாடுகின்றனர்.

விருந்துச் சாப்பாடு நாளும் வந்தது. விசுவாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய் கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல்—- ஒரு வாழை இலையில் எவ்வளவு கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவுதான்—- இலையில் இருந்தன. 1008 கறிகள் இல்லை. விசுவாமித்திரர் கோபத்துடன் வசிஷ்டரை வினவினார். அவரோ நான் தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே. அவளையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார் வசிஷ்டர்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி தானே முன்வந்து ஒரு பாட்டைக் கூறினாள். இதுதானே திவச கால விதி, உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றாள். வசிட்டர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார். அருந்ததி கூறிய அந்தப் பாட்டு என்ன?

காரவல்லி சதம் சைவ வஜ்ரவல்லி சதத்ரயம்
பனசம் ஷட்சதம் சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते
viswa

ஒரு திதியன்று சமைக்கப்படும் சமையலில் பாகற்காய் கறி 100 கறிகளுக்குச் சமம், பிரண்டைத் துவையல் அல்லது கறி 300 கறிகளுக்குச் சமம், பலாப்பழம் 600 கறிகளுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் கறிகள் ஆயீற்று. மீதி,— இலையில் எண்ணிப் பாருங்கள், எட்டு கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! என்றாள்

சட்டப் படி தொட்டுப் பேசு என்று சொல்லிய அருந்ததியின் பேச்சை மீற எவரால் முடியும்?
கற்புக்கரசி — சொல்லுக்கும் அரசி!

ஆண்களை மிஞ்சும் அறிவு — பெண்களுக்கு உண்டு!

சங்கத் தமிழில் ராமன், பலராமன், பரசுராமன்

baladevakrishna

பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

Written by London Swaminathan
Post No. 1083 ; Dated 4th June 2014.

நாத்திக வாதம் பேசும் தமிழர்களும், தங்களுக்கு முன் திராவிடர் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட சில தமிழர்களும் நூறு வருடங்களாக உலகை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு தமிழ் இலக்கியம் பற்றிய அறியாமையே காரணம். ஏமாறுபவன் இருக்கும் வரை உலகில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது இயற்கை நியதி. “இளிச்ச வாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்”, “குனியக் குனியக் குட்டுவார்கள்” என்ற பழமொழிகளே இதற்குச் சான்று.

வெள்ளைக் காரர்கள் அவர்களுடைய மதத்தைப் பரப்பவும், ஆட்சியை நிலை நாட்டவும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பி இந்து தெய்வங்களை இரு கூறுபோட்டு ஒரு கோஷ்டி ஆரிய தெய்வங்கள் என்றும் மற்றொரு கோஷ்டி திராவிட தெய்வங்கள் என்றும் ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர். இதை சில திராவிடங்களும் பற்றிக் கொண்டு பொய்ப் பிரசாரம் செய்துவந்தனர்.

தமிழர்களுக்கு தெய்வங்களே கிடையாதென்றும் ஆரியர்கள்தான் இப்படி இந்து மத தெய்வங்களைப் “புகுத்தினார்கள்” என்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார்கள். ஆங்கிலமும் தெரியாத, தமிழும் படிக்காத, பாமர ஜனங்கள் அதை நம்பி ஏமாந்தனர். காஞ்சிப் பெரியவர் போன்ற சிலர் மட்டும் அன்பான முறையில் அறிவுபுகட்ட முயன்றனர். ராக்காயி, மூக்காயி, மஹமாயி, சாத்தன், ஐயனார் என்பன எல்லாம் வேத கால தெய்வங்கள் என்றும், அந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்கிருதப் பெயர்கள் என்றும் சொற்பொழிவாற்றி உதரணங்களையும் கொடுத்தார்.

சங்க இலக்கியத்தில் உள்ள 2389 பாடல்களைப் பயின்றவருக்கு ஆரிய, திராவிட என்ற சொல் எல்லாம் நகைப்பைத் தரும். திராவிட என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆரிய என்ற சொல் இருந்தாலும் அது இனவாதப் பொருளில் பயிலப்படவில்லை.

தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பகுதிகளில் ராமன், பலராமன், பரசுராமன், சிவன், கொற்றவை (துர்கை), முருகன் ஆகிய எல்லோரும் மதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான இடங்களில் பிராமணர்கள், வேதங்கள், இந்து மத நம்பிக்கைகள், மறு ஜன்மம், தகனம், கர்ம வினைக் கொள்கை, இந்திரன் வருணன், அக்னி, சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், சுவர்க்கம், நரகம் முதலியவையும் குறிப்பிடப்படுகின்றன.

800px-Heliodorus-Pillar2
பெஸ்நாகர் என்னும் இடத்தில் கிரேக்க மன்னன் எழுப்பிய கருட ஸ்தம்பம்.

தொல்காப்பியத்தில் இந்திரன், வருணன், துர்க்கை, அக்னி, பலராமன், விஷ்ணு ஆகியவர்களைத் தமிழர் தெய்வங்களாகப் போற்றி இருப்பதை ஏற்கனவே மூன்று கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இதோ சங்கத் தமிழ் நூல்களில் இருந்து சில பகுதிகள்:

புறநானூறு:
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல (புறம் 55)

பொருள்: மலையையே வில்லாகவும் பாம்பை நாண் ஆகவும் கொண்டு ஒரே வில்லில் அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்த சிவபெருமானைப் போற்றும் பாடல் இது. கழுத்தில் கறை ஏற்பட்டு நீலகண்டனாக விளங்கும் சிவனுக்கு நெற்றியில் ஒற்றைக் கண் இருப்பது தலையில் நிலவின் பிறை இருப்பது ஆகியவற்றையும் புலவர் மருதன் இள நாகன் குறிப்பிடுகிறார்.

முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பழைய பாண்டிய மன்னனைப் பாராட்டும் பாடலில் காரி கிழார் என்னும் புலவரும் சிவனின் மூன்று கண்களையும், சடையையும் பாடுகிறார்:-முக்கட் செல்வர், நீணிமிர் சடை (புறம் 6)

சிவபெருமான் தான் ஆதிசிவன், முதற் கடவுள் என்று புறம் 166 கூறும்: ‘’முது முதல்வன்’’.

அகநானூறு:
ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வ
னாலமுற்றங்கவின் பெறத்தை இ (அகம் 181)
பொருள்:–உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! என்று பரணர் என்னும் புகழ்மிகு புலவர் பாடுகிறார். இதே பாடலில் ஆய் எயினன் என்பவன் முருகப் பெருமான் போல வீரம் உடையவன் என்றும் போற்றப் படுகிறான்.

பரணரும் கபிலரும் இரட்டைப் புலவர் போல சங்க நூல்கள் முழுதும் வியாபித்து நிற்கின்றனர். அவர் தம் திரு வாயால் மலர்ந்தருளிய சொல்லில் வேதத்தை, நான்மறைகளை ‘’முதுநூல்’’ என்று போற்றுவதைக் கவனிக்கவேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பரணருக்கே அது மிகப் பழைய நூல் என்றால், வேதங்களின் காலத்தை யாரே கணிக்க வல்லார்?

azakaana sivan

நக்கீரர் பாடிய பாடலில் (புறம் 56) இந்துமதம் பற்றிய ஏராளமான கருத்துகளை அளிக்கிறார்:-
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனுங்
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல் வெந் நாஞ்சிற் பனைக் கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயி உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் (புறம் 56, நக்கீரர்)

பொருள்:–காளையைக் கொடியாகக் கொண்ட தீயைப் போல விளங்கும் சடையையும் மழு என்ற ஆயுதத்தையும் உடைய நீலமணி போன்ற கழுத்தை உடையவனும், கடலில் வளரும் வெண்மையான சங்கு நிறம் கொண்ட, கொல்லும் கலப்பை என்ற ஆயுதத்தை உடைய பனைக்கொடி உடைய பலதேவனும் தூய்மை செய்யப்பட்ட நீலமணி போன்ற மேனியயும் கருடக் கொடியையும் உடைய வெற்றியை விரும்பும் கண்ணனும் , நீலமணி போன்ற மயில் கொடி உடைய மாறாத வெற்றி பொருந்திய மயில் ஊர்தியை உடைய முருகப் பெருமானும் உலகம் காக்கும் வலிமையும் தோற்காத நல்ல புகழும் உடையவர்கள்.

இந்துமத தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள், வருணனைகள் எல்லாம் ஆப்கனிஸ்தான் முதல் கன்னியாகுமரி வரை இதே காலத்தில் ஒரே மாதிரியாக இருப்பது எண்ணி எண்ணி இறும்பூது எய்ய வைக்கும். குஷான மன்னர்கள் கட்பீஸசும், கனிஷ்கரும் காளைவாகனத்துடன் சிவன் இருக்கும் நாணயங்களை வெளியிட்டனர். வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட கிரேக்க வம்சாவளி மன்னர்கள் பலராமனுக்கும் கண்ணனுக்கும் (Bactrian coins of Agathocles 180 BCE) நாணயம் வெளியிட்டதும், (Greek King Heliodorous 113 BCE) விஷ்ணுவின் கருட வாகன தூண் அமைத்ததும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. அதற்கு 200 வருடங்களுக்குப் பின் 4000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த நக்கீரரும் அதையே செப்புவது இந்து மதத்தின் பரந்த தாக்கத்தை நிலைநாட்டுகிறது.

avatars6only
பல ராமன் & கண்ணன்
நக்கீரர் பாடலில் பலராமனை பனைக்கொடியோன் என்று பாடியதைக் கண்டோம். தொல்காப்பியரும் இந்த பனைக்கொடியைக் குறிப்பிட்டவுடன் உரைகாரர்கள் இது பலதேவனுடைய கொடி என்று உரை கண்டுள்ளனர். புறம் 58ல் இதைவிட உறுதியான ஒரு செய்தி வருகிறது. கண்ணனும் பலதேவனும் இணைபிரியாமல் இருப்ப்பது எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழ் நாட்டில் கண்ணனுக்கும் பலதேவனுக்கும் சேர்ந்தே சந்நிதிகள் இருந்தன. காலப்போக்கில் பலதேவன் மறைந்துவிட்டார். காரிக்கண்ணன் பாடிய புறம் 58ல் இரண்டு மன்னர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு ‘’கண்ணன் – -பலதேவன்’’ நினைவே வந்தது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரை காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடல் இதோ:–

“பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?”
இந்தப் பாடலில் ‘’இரு பெரு தெய்வங்கள்’’ என்ற சொற்றொடரைக் கவனிக்கவும். இனி சில ராமாயணக் காட்சிகள்:

தமிழ் ராமாயணம்
வால்மீகி, கம்பன் சொல்லாத விஷயங்களை சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்:-
புறம் 378 ஊன்பொதி பசுங்குடையார்:–
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
. . . . . . . . .
பொருள்:– இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல……..

பெண் குரங்குகளுக்கு (மந்தி) எந்த நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு மாறாக அணிந்தனவாம்!

ராவணன் ஒரு தமிழன் என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்கையில் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார், ராவணன் ஒரு அரக்கன் என்று தெள்ளத் தெளிவாக உரைப்பது படித்துச் சுவைக்க வேண்டியது ஆகும்.

அகம் 70 மதுரைத் தமிழ்கூத்தனார் கடுவன் மள்ளனார்:–

. . . . . .
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

பொருள்:– வெற்றிவேலை ஏந்திய பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் (தனுஸ்கோடி) அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. வானரங்களுடன் போர் திட்டத்தை வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை அசைத்து பேசாதே என்று சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது.

இராம பிரானின் அபூர்வ ஆற்றல் பற்றிக் கூறும் இப்பாடல் போலவே பிற பாடல்களில் கிருஷ்ணனுடைய அபூர்வச் செயல்களையும் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டின் தென்கோடி வரை, மாய மந்திரம், அபூர்வ ஆற்றல்கள் பற்றி நம்பிக்கை ஏற்பட்டத்தானது பகுத்தறிவு என்ற பெயரில் பொய் பிரசாரம் செய்வோருக்கு சரியான சவாலாக அமையும்.

aghora and agni veerabhadra
அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்திரர்

கண்ணனின் அபூர்வ ஆற்றல்

அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்

கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தாற் போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது.
இதே பாடலில்,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
என்ற வரிகள் திரு முருகனின் சூரபதுமன் வதையையும், திருப்பரங் குன்றத்தின் பெருமையையும் கூறுகிறது.

புறம் 174 (மாறோக்கத்து நப்பசலையார்):–
அணங்குடை அவுணர் கணங்கொண்டி ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தடுத்து நிறுத்தாங்கு

—— . . .
பொருள்:–மற்றவரை வருத்தும் அச்சம் பொருந்திய அரக்கர் ஞாயிற்றை எடுத்துக் கொண்டுபோய் மறைத்தனர். தொலைவில் விளங்கக் கூடிய அந்த்த ஞாயிற்றைக் காணாததால் இருளன்னது உலகத்தாரின் கண்ணை மறைத்தது. அப்பொழுது உலகத்தாரின் நோய்கொண்ட துன்பம் நீங்குமாறு மிகுந்த வன்மை உடைய மை போன்ற கரிய நிறம் உடைய மேனியனான திருமால், அந்த வட்டமான ஞாயிற்றைக் கொண்டுவந்து இந்த உலகத்தின் இருள் நீக்குவதற்காக வானத்தில் நிறுத்தினான் – என்று புறநானூற்று உரை கூறும்.

இது சூரிய கிரகணம் பற்றிய பாடலென்றும் மஹாபாரதத்தில் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கலாம் என்றும் நான் ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் தென் கோடி வரை கண்ண பிரானின் மாயச் செயல்கள் பற்றிய கதைகள் பாமர மனிதனுக்கும் தெரிந்ததை இப்பாடலின் வாயிலாக அறிகிறோம்.

19.-Marichi-Vadh,Large-Vishnu-temple,-Janjgir
ராமாயண சிற்பங்கள்

அகம் 175 (ஆலம்பேரி சாத்தனார்)
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
பொருள்:– கதிர்கள் ஒழுங்காக அமைந்த சக்கரத்தை உடைய திருமாலின் பகைவர் போர் ஒழிவதற்குக் காரணமான மார்பிலுள்ள மாலை போல பல நிறம் உடைய வான வில்லை உண்டாக்கியது. கண்ணன் கையில் உள்ள சுதர்சன சக்ரம் தமிழ் நாடு வரை புகழ் எய்தியதைக் காண்கிறோம்.

புறம் 198 (வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்):–
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் – என்று புலவர் குறிப்பிடுவதை சிலர் ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்த சிவன் என்றும் இன்னும் சிலர் ஆல் இலையில் மிதந்த திருமால் என்றும் உரை கண்டுள்ளனர்.

பரசுராமன் அகம் 220 (மருதன் இளநாகன்):–

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்

பொருள்:– என்றும் நீங்காத வேள்வித் தீயை உடைய செல்லூரில், மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையிலே அழித்த மன்னர் பரம்பரையை அழித்தவர் பரசுராமன். அவர் முன்காலத்தில் அரிதாய் முயன்று செய்த வேள்வியில் கயிற்றால் கட்டப்பட்ட வேள்வித் தூணைப் போல அரிதில் காண முடியாதது என் தலைவியின் மார்பு.

கேரள மக்கள் பரசுராமனை முழுமுதற் கடவுளாக வழிபடுவதும் மேலைக் கடற்கரை முழுதும் பரசுராமன் தந்த பூமி என்று கொண்டடுவதும் எல்லோரும் அறிந்ததே. அவர் சங்கப் பாடலில் மழுவாள் நெடியோன் என்று போற்றப்படுவது படித்து இன்புறத் தக்கது.

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக வணங்கும் ராமன், பலராமன், பரசுராமனை நாமும் வணங்கி தமிழ் பண்பாட்டைத் தழைக்கச் செய்குவோம்.

Aryan Acrobats in Tamil Nadu

dip_girl_1772571gvishak

Written by London Swaminathan
Post No. 1080; Dated 2nd June 2014.

It is very interesting to watch street circus and acrobatics in India. The nomads travel from one town to another town and perform such acts. Though nobody likes child labour, most of the acts are done by children. When children perform such acts and show their acrobatic skills people are moved easily and the sympathy thus evoked get more money from the watching general public. It is more interesting to know that such street circus has been held in Tamil Nadu for more than 2000 years. The performers were called Aryan acrobats. The commentators explained that they came from the north. Sangam literature and later literature also had many references to Aryan wrestlers and singers from the North. They challenge the Tamils for some open contest and loose in most of the contests and run away. And in few of them they have won.

PakIndia056

There are at least two references to such acrobats in Tamil Nadu from the ancient literature where they are praised.

Sangam poet Kottampalavanar sings in Natrinai verse (95): “A dancing girl climbs and dances over a rope skilfully to the accompaniment of flute(musical ) tunes and leaves the place, when a female monkey with red face full of soft hair like a ripe fig, climbs over it and carefully moves and balances itself. The young boys there witness it and immediately join together and keep time with their hands. Kottu is the verb used by the poet to denote the rhythm of their clapping, and so the poet is called “Kottu” ambalavanar.

acrobat domaba

Tamil scholar AK Ramanujan has translated another poem from Kuruntokai, part of Sangam anthology, which gives a graphic description of an acrobat:

“The bowman has a warrior’s band
On his ankle;
The girl with the bracelet on her arm
Has a virgin’s anklets
On her tender feet.
They look like good people.
In these places the winds beat
Upon the vakai trees
And make the wide seed pots rattle
Like drums for Aryan acrobats
Dancing on the tight ropes.

Poor things who could they be?
And what makes them walk
With all the others
Through these desert ways
So filled with bamboos. — (Kuruntokail-7 by Perumpatumanar)
Kuruntokai and Narrinai are two Sangam anthologies with 400 verses each.

acrobathyderabad

Tamil Proverbs also exist about Aryan acrobats. “Even if one does perform Aryan Acrobatics, one does not lose focus on the task”.

Kamba Ramayanam, a 12th century text, also has reference to Aryan acrobatics.
Such is beauty and continuity of Indian culture.

But one may still wonder why they were called Aryan (Northern) acrobats. Were there no Tamil acrobats in those days?
acrobat chennai

Rama ,Balarama & Parasurama in Ancient Tamil Literature

baladevakrishna

Krishna and Baladeva on Indo-Greek Coins (Picture from Wikipedia)

Written by London Swaminathan
Post No.1078; Dated 1st June 2014.

Tamil politicians who called themselves Dravidians and atheists have propagated false information about Tamil culture for long. This was initially put forward by Christian missionaries and foreigners with a motive to stabilize their rule and spread their religion. They were spreading Aryan- Dravidian racist theory and said Hindu gods were introduced to Tamils who were without a religion. Those who studied history and religion knew that human beings believed in some supernatural force from the very early times.

Knowledgeable Tamils who have studied approximately 2500 poems of ancient Tamils know that the Vedas, Brahmins, Hindu Gods, Hindu beliefs about birth and death, Rebirth, Karma theory, Vegetarianism, Seven Stars (Saparishi), Six Stars (Pleiades= Skanda), Pole Star (Druva), Arundhati (Alcor), Amrita (ambrosia), Heaven and Hell, Astrology, Epics and Puranas are all mentioned in innumerable places in Sangam Tamil literature, which is at least 2000 years old.

800px-Heliodorus-Pillar2
Besnagar aruda Pillar of Indo -Greek King Heliodorus

I give below some references to Hindu deities from Purananuru and Agananuru. Both these books with 400 poems each in the anthology give us a picture of Tamil society that existed 2000 year ago in Tamil Nadu. They had the same beliefs like their northern counter parts about most of the things. Like any other society we see some minor changes in different areas. A language changes every 200 years and a culture changes every 200 miles, say the scholars. Why can’t people have different beliefs, customs in a vast country like India which is equal to 20+ European countries? In a country like United Kingdom, just the size of Andhra Pradesh in India, we see four different cultures and numerous English dialects. So it is no wonder we had minor differences in the long history of India.

azakaana sivan
Lord Siva in his dancing pose.

Lord Siva
Lord Siva is referred to in a lot of places in the Sangam Tamil Poems. One reference is to His helping the Devas to by shooting the Three Forts of Asuras with a single arrow, having a serpent as the bow string and hill as the bow, and He is described as blue throated, wearing the crescent on his fair head and with an eye shining on his fore head—Puram 55, Marudan Ilanagan (contemporary of Nakkiran) on Pandyan Nanmaran.
Nanmaran was also sung by Nakkiran, son of Madurai Kanakkayanar.

The other references are to
Lord Siva’s three eyes:– Puram 6 by Kari kizar on Mudukudumi Peruvazuthi .
His matted locks:– Puram 6 by Kari kizar on Mudukudumi Peruvazuthi
His blue throat:– Puram 56 by Nakkirar, 91 by Avvaiyar on Adiyaman Anji.

Puram 56 by Nakkirar gives the following information:–
Nakkirar, in this poem, has given a beautiful description of all the Gods worshipped in ancient Tamil Nadu two thousand years ago. In one stanza he praised Siva, Balarama, Krishna and Skanda (Subramanya or Murugan in Tamil).

“He who is riding on a strong bull, has matted locks like blazing fire, the invincible battle axe and a throat like the blue gem, and He whose body is the colour of the chank (conch) from the sea and who wields the death desiring plough and has the Palmyra flag and He whose body is the colour of the well washed sapphire and who raises aloft to the sky the bird flag and desires victory, and He who holds up the gem like peacock flag, who is always victorious, rides the peacock (or the elephant) and is bright red.
This is the most informative poem about Hindu faith in Sangam period. Hindu religion was the main religion and all the Hindu Gods were very familiar to the Tamils. The beauty of the poem is that it gives all the flags or Vahanas of the Hindu Gods. When we see that the same concept existed in the North around the same period or earlier we are wonder struck with the impact of Hinduism in a vast geographical area—the largest in the ancient world.

Approximately at the same time in the North, Kanishka of first century BC issued a coin with Lord Shiva. Yaudheya coins have Subramanya. Balarama and Krsihna are seen on Bactrian coins of Agathocles (180 BCE)*. Garuda emblem was on the Besnagar Pillar of a Greek King Heliodorous (113 BCE). From Afghanistan to Tamil Nadu in the southern most part of India it was the same gods, same religion, same flags and same Vahanas!!!
(For more information read Balarama and Krishna in Bactrian coins by Dr R Nagaswamy in http://www.tamilartsacademy.com)

avatars6only
Parsurama and Krishna avatar.

Lord Krishna & Balarama

Palmyra flag of Balarama is also referred to in the oldest Tamil book Tolkappiam and in Puram 58 by Karikannan on Pandya and Choza kings. Karikannanar compared the unity of Choza and Pandya to Balarama and Krishna. In those days Hindus considered kings as gods.

There are more references to Krishna in other poems:

Puram 57 of Karikannanar
A Pandya is described as full of fame like Mayon (Krishna or Vishnu), “famous
for his power of teaching” (Reference to Gitopadesam of Bhagavad Gita).

And “the crescent moon on his head”– in verse 91 by Avvaiyar on Adiyaman Anji.
“The Ancient Lord of long, stiff matted locks”– in Puram 166 by Avur Mulankizar on Punchatrur Brahmin Kaundinya Vinnanthayan /Vishnudasan)

In Puram 198, Vadama vannakan Peri Sathan on Nanamaran (this poet is a contemporary of Nakkiran and Marudan Ilanagan. Both these poets praised Pandya Namaran):–
The God under the banyan tree (Some commentators say it was Vishnu who sat on a Banyan leaf and some others points out that is Siva who sat under a Banyan tree.
An incident in the life of Krishna is also described in the Puram verse 174:-
When the terrible Asuras swarmed and concealed the sun who hone in the sky and disappeared, (men) could not see on account of darkness. To relieve the distress of the round world, the collyrium coloured one of great strength brought the sun back and raised him in the sky. (It may be the Jayadratha episode in the Majhabharata).

aghora and agni veerabhadra
Agni and Agora Veerabadrar, forms of Siva

Agam references on Siva:–
“He who has a head shining with milk like crescent moon and throat like sapphire”- Agam 181by Paranar, contemporary of Kapilar.

Paranar and Kapilar are like Twin Poets and belonged to first century CE.
In the same poem Paranar refers to Four Vedas (Nan Marai), Lord Skanda (Murugu) as well.
“The three eyed Lord whom the sweet toned Four Vedas which spread good to the world (sing about) embellished beautifully the yard where the banyan trees grows”.

Krishna Leela in Agam
Agam stanza 59 refers to Krishna’s bending the branches of the tree, that the cowherdess may wear the cool leaves for the cloth.
There is one more reference to Krishna in Agam 175:–
“Like the garland of the wide, all conquering chest of the discus whose bright spokes are well arranges, was the rain bow”.

Ramayana In Sangam Literature:–
Lord Rama is alluded once in Puram and once in Agam. Both these episodes are not found in any of the major Ramayanas of India. Kamban, a 12 th century Tamil poet mentioned three Ramayanas and said that he followed Valmiki. So these may be from Baudayana or Vashista Ramayana.

Puram 378 by Unpothi Pasungkudaiyar
It is said that monkeys picked up Sita ’s ornaments which she dropped when Ravana carried her in his aerial car and wore them topsy-turvy.
“As the jewels sparkled on the red-faced relations of the monkey that saw the bright ornaments dropped on the ground by Sita, the wife of Rama of the strong car, when she was forcibly carried away by the powerful Rakshasa”.

19.-Marichi-Vadh,Large-Vishnu-temple,-Janjgir
Maricha Vadha from Ramayana

Agam 70 by Madurai Thamizkuthanar Kaduvan Mallanar
In Agam 70, the following simile occurs. “As was silenced the banyan tree with many aerial roots (the sound of whose birds disturbed) the thoughts of victorious Rama near the shore of the roaring sea at the ancient Kodi (Dhanuskodi) which belongs to the Pandiyas of the conquering spear”.

Parasurama
Parasurama is allured to once in Agam:- Parasurama is associated with the West coast of India from very early times. All their written and oral history begins with Parasurama, one of the Ten Incarnations of Lord Vishnu. Yaga (Fire Sacrifice) performed by Parasurama is found in a simile in Agam 220 by Marudan Ilanagan. “Like the long pole (yupa) well guarded, beautiful to see and tied with roperound its middle, at which (the inclination of Vishnu who wielded the battle axe and destroyed the Kshatriyas dynasties, performed the yaga with great effort”.

Tamil culture is Vedic culture is established from the above poems. Wherever religious references occur, we see only Hindu Gods and beliefs as tamil beliefs. I have already given in my posts that the oldest book Tolkappiam referred to Indra, Varuna, Agni and Durga as Gods of the tamil people.

There are many more references to Yagas, Karma Theory, Rebirth, Svarga, Burial and cremation rites, three references to Sati custom (wife dying in the funeral pyre of her husband) and Vedas and Brahmins. I will write about them in another article.
Contact swami_48@yahoo.com

தமிழ் இந்து இளங்கோ!

kannaki cooking
Kannaki cooking for Kovalan (Picture from World Tamil Conference Souvenir)

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்-1051 ; தேதி -19 May 2014.

தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்பன அவை. முதல் மூன்று காப்பியங்களும் முழுதாகக் கிடைத்தது நம் தவப் பயனே. இமூன்றில் சிலப்பதிகாரம் தனிப் பெரும் இடத்தை வகிக்கிறது. தமிழர்களுக்கு உரிய ஒரே கதை கண்ணகி கதை ஒன்றுதான். இதை எழுதிய இளங்கோ அடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அவர் துறவியானதாகவும் பல கதைகள் உண்டு. ஆனால் ஒன்றுக்கும் மறுக்க முடியாத ஆதாரம் எதுவும் இல்லை. சிலர் அவரை சமணத் துறவி என்பர். அதை நிரூபிக்கக் கிடைக்கும் சான்றுகளைவிட அவர் இந்து என்று சொல்லச் செய்யும் சான்றுகளே அவரது காப்பியத்தில் அதிகம் இருக்கின்றன. இதை வாசகர்களே முடிவு செய்ய போதுமான சான்றுகள் உதவும்.

முதலாவது சமணர்களுக்கு தெய்வம் இல்லை. ஆனால் இளங்கோவோ :”தெய்வம் தெளிமின்”- என்று அறிவுரை புகல்கிறார்.
இரண்டாவதாக “நாராயணனை ஏற்றாத நாவென்ன நாவே” என்று பாடுகிறார். இராம பிரானைப் புகழ்கிறார். சிவனுடைய நடனங்களையும் காளிக்கூத்தையும் நமக்குத் தருகிறார். கொற்றவையின் புகழ் பாடுகிறார். செங்குட்டுவன் தலைமேல் சிவபெருமானின் பாதங்களைச் சுமந்து சென்றதாகச் சொல்கிறார். தெய்வமே வழிபடாத புத்த, சமண வழக்கங்களை ஒதுக்கித் தள்:ளிவிட்டு, இந்துமத முறையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வழிபட வைக்கிறார். முதல் முதலில் பிராமணர் களைக் கொண்டு நடத்திய கல்யாணத்தை கண்ணகி, கோவலன் கல்யாணத்தில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். தீ வலம் வந்து கல்யாணம் முடித்ததை தமிழில் முதல் முறையாக அவர்தான் நமக்குக் கூறுகிறார். கரிகாலன் நல்ல நாள் பார்த்து, ‘’புண்ணிய’’ திசையான வடதிசை போகியது இப்படித் தடுக்கி விழுந்த இடமெல்லாம் சிலம்பு முழுதும் இந்துமதம்!!

இந்துக்களின் புனித நதியான கங்கையையும் புனித மலையான இமயத்தையும் போற்றுகிறார். புண்ய இமயத்தில் கல் எடுத்து புண்ய கங்கையில் நீராட்டி கோவில் சமைத்ததைக் காட்டுகிறார். காவிரியை ‘’தெய்வ’’க் காவிரி என்று துதிக்கிறார். இப்படி மலையையும் நதியையும் தெய்வமாகக் கும்பிடுவது இந்துக்களால் மட்டுமே முடியும். புத்தரும் மஹாவீரரும் தெய்வம் பற்றியே பேசவில்லை.. கண்ணகி, கோவலன் இருவருக்கும் உண்மையிலேயே கவுந்தி அடிகள், வழிகாட்டித் துணையாக இருந்ததற்கு நன்றிக் கடனாக அவரது அருகதேவனையும் போற்றினார்.

கதை போகும் போக்கில் வேதம் சொல்லும் பார்ப்பனச் சிறுவர்கள், புனித யாத்திரை செய்யும் பார்ப்பனன், நாரதரின் வீணை, பூரண கும்பம், இந்துக்களின் 64 கலைகள், ஜம்புத்வீபம் (நாவலம் தண்பொழில்) திருவிளையாடல் புராணக் கதைகள், சிபிச் சக்கரவர்த்தி கதை, பஞ்ச தந்திரக் கதைகள் என ஏராளமான விஷயங்களைத் தருகிறார். ஆனால் கவுந்தி அடிகள் என்பவர் வாயிலாக சமணர்களின் பெருமையையும் பாடுகிறார். அந்த ஒரு காரணத்திற்காக இளங்கோ மீது சமணர் என்று முத்திரை குத்திவிட முடியாது.

அர்த்தநாரீஸ்வரர், மஹிஷாசுரமர்த்தனி, வாலகீய மகரிஷிகள், மும்முறை வலம் வருதல், விமானத்தில் கோவலன் வந்து கண்ணகியை அழைத்துச் செல்லல், இந்துக் கடவுளரின் வாகனங்கள், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருமாலிருஞ்சோலை மகிமை – இப்படி சிலப்பதிகாரம் முழுதும் இந்துமதக் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது!!!

இளங்கோ என்பவர் தமிழ் இந்துவா? தமிழ் சமணரா? என்று பட்டிமன்றம் நடத்தினால் இந்து என்ற கட்சி எளிதில் வெற்றி பெரும் அளவுக்கு இந்து மதக் கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இளங்கோ.

kannaki
Kannaki giving her anklet to Kovalan.

உலகில் ஒரு இந்து மட்டுமே மற்ற கடவுள்களைப் புகழ்வான். ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாநந்தர், மஹாத்மா காந்தி போன்றோர் பிற சமயக் கடவுளையும் போற்றினர். இந்துவைத் தவிர உலகில் வேறு எந்த மதத் தலைவரும் இப்படிச் செய்ததில்லை. வேறு எந்த மத நூல்களிலும் இந்துக் கடவுள்களைப் புகழ்ந்ததைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை, படித்ததும் இல்லை. அப்படியே உவமைக்காக இந்துக் கடவுளரை ‘வம்புக்கு இழுத்தாலும்’ தங்களுடைய சமயக் கருத்துக்கு முரணான விஷயங்களைப் போதிக்க மாட்டார்கள்.

இளங்கோ சொல்லும் ‘விதி மிகவும் வலியது’ என்ற கருத்தும் இந்துக்களின் கர்ம வினைக் கொள்கைதான். வடமொழி நாடகங்களிலும் மஹாபாரதத்திலும் விதி பற்றி நூற்றுக்கணக்கான மேற்கோள்கள் உண்டு. ஆக அந்தக் கொள்கை காரணமாகவும் இளங்கோவுக்கு சமண மத முத்திரை குத்த முடியாது. இதோ இளங்கோவின் வாசகங்கள்:–

“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

தானம், தவம் போன்ற பகவத் கீதை சொற்களை வள்ளுவனும் இரண்டு இடங்களில் பயன் படுத்தியதை ‘வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் என்ற கட்டுரையில் ஏற்கனவே காட்டியுள்ளேன். இளங்கோவும் ‘’வெஜிட்டேரியன்’’ உணவு சாப்பிடுதல், கள் குடிப்பதைக் கைவிடல், மறுமைக்காக இப்போதே தருமம், புண்ணியம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.

இவ்வளவு சொன்ன பிறகும், யாராவது தனக்கு தப்பான முத்திரை குத்திவிடப் போகிறார்களே என்று பயந்து பகிரங்கமாக ராமனையும் கிருஷ்ணனையும் புகழ்ந்து தள்ளுகிறார்:–

“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
—————————–
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.
tamil makal
Tamil queen in Sangam age.

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

எல்லோர்க்கும் மூத்தவன் — உலகம் எல்லாம் அவன் உந்தியிடத்தில் தோன்றிய தாமரையில் விரிந்தது — கண்கள், கைகள், வாய். காலடிகள் ஆகியன சிவந்து தோன்றும் அந்தக் கருப்பனை (கிருஷ்ணனை) காணாத கண்களை யாராவது கண் என்று அழைப்பார்களா! அவனைக் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும். அதை மீறி கண்களை இமைத்தால் அவைகள் கண்களே இல்லை!

அறியாமையின் ஒட்டுமொத்த வடிவம் கம்சன். அவனுடைய வஞ்சனை எல்லாவற்றையும் கண்ணன் சமாளித்தான். பாண்டவர்க்காக அவன் கௌரவர்கள் இடத்தில் தூது சென்றபோது வேதங்கள் எல்லாம் அவனோடு சென்றன. அத்தகையவனின் பெருமையைச் சொல்லாத நாக்கும் ஒரு நாக்கா? நாராயணா என்று சொல்லாத நாக்கை எவரேனும் நாக்கு என்று சொல்ல முடியுமா?

மதுரை பற்றி வியப்பான தகவல்!

மதுரையில் மன்னவனிடம் குறைகளை முறையிட அடிக்கப்படும் ஆராய்ச்சிமணி ஒலித்ததே இல்லை என்றும் பிராமணர்களின் வேத ஒலி மட்டுமே ஒலிக்கும் என்றும் சொல்கிறார்:-
“மறை நாஓசை அல்லது; யாவதும்
மணி நாஓசை கேட்டதும் இலனே”

பிராமணர்களை எரிக்காதே!!
மதுரைக்கு தீயூட்ட விரும்பிய கண்ணகி ஒரு முலையைத் திருகி வீசவே அக்னி தேவன் அவள் முன் தோன்றுகிறான். உடனே யார், யாரை எரிக்கக் கூடாது என்று சொன்னதில் பிராமணர்களை எரிக்காதே என்று உத்தரவிடுவதாக இளங்கோ பாடுகிறார்:–
“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க”— (அழற்படு காதை)

என்று உத்தரவு போடுகிறாள். புத்த மதத்தை உலகம் முழுதும் பரப்பிய அசோகன் கல்வெட்டிலும் பிராமணர் பெயருக்கு அடுத்தே சிரமணர்கள் பெயர் வரும்.இளங்கோவும் காவியம் முழுதும் பிராமணர்களையும் வேதங்களையும் புகழ்கிறார்.

ஆய்ச்சியர் குறவையில் கண்ண பிரானின் லீலைகள் எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறார். பாற்கடல் கடைந்தது, கன்றால் விளா எறிந்தது, யமுனையில் விளையாடியது, கதிரவனை சுதர்சன சக்கரத்தால் மறைத்த மாபாரதக் கதை இப்படிப் பல.

விருந்தினரை உபசரித்தல் இந்துக்கள் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பஞ்ச மஹாயக்ஞங்களில் ஒன்று. அது பற்றியும் கண்ணகியின் வாயிலாகக் கருத்துரைக்கிறார்:

“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)

–என்று கண்ணகி வருத்தப்படுவதைக் காட்டுகிறார். அறவோர், துறவியர், அந்தணர், விருந்தினர் என்று குறிப்பிடுதல் காண்க.

சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய மூன்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தக்க காரணங்களுடன் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். சிலம்பில்தான் முதல்முதல் யாழ் மறைந்து வீணை தோன்றுகிறது. ஏராளமான வடமொழிச் சொற்கள், புராண, இதிஹாசக் கதைகள் வருகின்றன. தொல்காப்பிய விதிகள் பழமையானவை. அதை நூல் வடிவில் தந்தவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததை சொல் வழக்குகளே (அதிகாரம்) காட்டிவிடுகின்றன.

தமிழில் உள்ள எல்லா சமய நூல்களும் மறைந்தாலும் சிலப்பதிகாரம் ஒன்றில் இருந்தே சைவ வைணவப் பெருமைகளை அறியமுடியும். சுருங்க்ச் சொன்னால் சிலப்பதிகாரம், ஒரு இந்து மதக் கலைக் களஞ்சியம் ( என்சைக் ளோபீடியா). கையில் ஒரு பென்சில் அல்லது ஹைலைட்டர் பேனாவை வைத்துக் கொண்டு சிலப்பதிகாரத்தில் இந்துமதம் பற்றிய விஷயங்கள் வரும்போதெல்லாம் அடிக்கோடு இடுங்கள். புத்தகம் முழுதும் கோடு மயம்தான்!!!

வாழ்க இளங்கோ! வாழ்க தமிழ் இந்து இளங்கோ!

contact swami _48 @yahoo.com

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?

rama's anger at ocean

Post No 1031
Dated 9th May 2014
Written by my brother S Nagarajan

ஞான ஆலயம் ஏப்ரல் 2014 இதழில் வெளிவந்த கட்டுரை

வடநாட்டில் பிரஸித்தமாக வழங்கி வரும் ஹனுமத் புராணத்திலிருந்து ஒரு கதை!

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?

By ச.நாகராஜன்

நாரதர் கலகம்

ஒரு முறை ஹனுமான் தன் அன்னை அஞ்சனா தேவியை தரிசிக்க ஆவலுற்று ராமரிடம் அனுமதி பெற்றுக் கிளம்பினார். அதே தருணத்தில் காசி மஹாராஜன் ராமரின் தரிசனத்திற்காகக் கிளம்பினான். வழியில் நாரதர் காசிராஜனைப் பார்த்து,” நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.” நான் ராமசந்திர மஹாபிரபுவைத் தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான் காசிராஜன்.

“எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டுமே!”என்றார் நாரதர்.
“தங்கள் கட்டளை என் பாக்கியம்” என்றான் காசி ராஜன்.
அங்கு அரச சபையில் எல்லோருக்கும் வந்தனம் செய். ஆனால் அங்கு இருக்கும் விஸ்வாமித்திரருக்கு மட்டும் வந்தனம் செய்யாதே. அவரைக் கண்டு கொள்ளாதே!” என்றார் கலக நாரதர்.

காசிராஜனுக்குத் தூக்கி வாரிப் போட்ட்து. மஹாமுனிவரான விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா! ஐயோ! இது என்ன கோரம்!! விக்கித்து நின்ற அவன் நாரதரை நோக்கி,”மஹரிஷி விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா?ஏன், ஸ்வாமி” என்றான்.

hanuman bhajan

“ஏன் என்பது பின்னால் தெரியும். சொன்னதைச் செய்வாயா?” என்று கேட்டார் நாரதர். கலக்கமுற்ற காசிராஜன் இருதலைக் கொள்ளி எறும்பானான். நாரதரிடம் அவர் சொல்லியபடி செய்வதாக வாக்களித்து விட்டு, ராமரது அரச சபைக்குச் சென்று ராமரை ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு ஆனந்தமுற்று வணங்கினான்.அங்குள்ள வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் வணங்கி ஆசி பெற்றான். ஆனால் விஸ்வாமித்திரரை மட்டும் வணங்கவில்லை. சபையில் இந்த அவமரியாதையை நன்கு கவனித்த விஸ்வாமித்திரர் அங்கு சும்மா இருந்தார்.பின்னர் ராமரைத் தனியே சந்தித்தார். “ராமா! உன்னை எல்லோரும் “மர்யாதா புருஷோத்தமன்” என்கின்றனர். மஹரிஷிகளை வணங்கும் மாண்பு மிக்க உன் அரச சபையில் எனக்கு இன்று மரியாதை கிடைக்கவில்லையே!” என்று வருத்தமுற்றுக் கூறினார்.

துணுக்குற்ற ராமர்,” என்ன விஷயம்?” என்றார். இன்று அரச சபைக்கு வந்த காசிராஜன் என்னைத் தவிர அனைவரையும் வணங்கினான்! வேண்டுமென்றே என்னை அவமானம் செய்து விட்டான்! இது சரியா?” என்றார் விஸ்வாமித்திரர்.

ராம பிரதிக்ஞை

“ராம ராஜ்யத்தில் பெரும் முனிவரான தங்களுக்கு ஒரு அவமானம் என்றால் அது அனைவருக்குமே அவமானம் தான்! உங்களை இப்படி அவமதித்த காசி ராஜனை என் மூன்று பாணங்களால் இன்று மாலைக்குள் கொல்கிறேன்” என்று வாக்களித்தான் ராமன்.

ராமரின் இந்த சபதம் காட்டுத்தீ போல எங்கும் பரவி காசிராஜனையும் அடைந்தது. அவன் ஐயோ என்று அலறியவாறே நாரதரை நோக்கி ஓடினான். ”நீங்களே எனக்கு அபயம்! உங்களால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது!” என்று அலறினான்.

நாரதரோ புன்முறுவலுடன் கூறினார்:” பிரதிக்ஞையை நானும் கேட்டேன். மூன்று பாணங்கள் சும்மா விடுமா, என்ன? ஆனாலும் நீ பயப்படாதே! உடனடியாக அஞ்சனா தேவியிடம் சென்று அவரின் காலைக் கெட்டியாகப் பற்றிக் கொள்! அவர் உனக்கு அபயம் அளிப்பதாகச் சொன்னாலும் விடாதே! மூன்று முறை அபயம் அளிக்குமாறு கேள்! மூன்று முறை அவர் அப்படி உறுதி அளித்ததும் காலை விடு; கவலையையும் விடு” என்றார் நாரதர்.

ramaya nama
அஞ்சனாதேவியும் ஆஞ்சநேயனும்

காசிராஜன் கணம் கூடத் தாமதிக்கவில்லை.உயிர் பிரச்சினை ஆயிற்றே. ஓடினான், அஞ்சனா தேவியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினான். “காலை விடு! குழந்தாய்! அபயம் கேட்டு வந்த உன் உயிருக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். என்ன விஷயம்? ஏன் இப்படி பயப்படுகிறாய்?என்றார் அஞ்சனாதேவி.

“மூன்று முறை அபயம் அளித்து வாக்குறுதி தாருங்கள்.அப்போது தான் கால்களை விடுவேன்” என்றான் காசி ராஜன். அஞ்சனாதேவியும் மூன்று முறை வாக்குறுதி அளித்தார். காசிராஜன் நடந்த விஷயம் அனைத்தையும் சொன்னான். அஞ்சனாதேவிக்கு தூக்கிவாரிப் போட்டது. ராமரின் மூன்று பாணங்கள் இன்று மாலைக்குள் உன்னைத் தாக்குமா!அதிலிருந்து உன்னை யார் காப்பாற்றுவது?” என்றார் அஞ்சனா. ஆனால் தான் அளித்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்து ஒரு கணம் மயங்கி நின்றார். அப்போது உற்சாகத்துடன் அனுமார் உள்ளே நுழைந்து.” அம்மா! “ என்று கூவி அவர் கால்களில் பணிந்து வணங்கினார். அஞ்சனாதேவியின் திடுக்கிட்ட முகத்தைப் பார்த்த அனுமன், “என்ன விஷயம் தாயே ! நான் வந்ததில் கூட உற்சாகம் காண்பிக்கவில்லையே!” என்று வினவினான்.

அஞ்சனா காசிராஜனுக்குத் தான் அளித்த வாக்குறுதியைக் கூறி ராமரின் பிரதிக்ஞையையும்கூறி ,” இப்போது என்ன செய்வது? மகனே! நீ தான் காசிராஜனைக் காப்பாற்ற வேண்டும்.உன் அன்பான அம்மாவின் வேண்டுகோள் இது” என்றார்.

அனுமன் பதறிப் போனான். பிரபுவின் பாணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல மூன்றிலிருந்து யாரேனும் பிழைப்பார்களா, என்ன? “ஆனால், தாயே! இது வரை என்னிடம் நீங்கள் ஒன்று கூடக் கேட்டதில்லையே! முதல் முறையாக ஒன்றைக் கேட்கிறீர்கள்! அதைச் செய்யாமல் இருந்தால் நான் உண்மையான மகன் அல்லவே! வருவது வரட்டும்! காசிராஜன் உயிருக்கு நான் உத்தரவாதம். ராமரின் பாணங்களே வந்தாலும் சரி தான்!”, என்றான் உறுதியான குரலில் அனுமன். அஞ்சனாதேவியும் காசிராஜனும் மகிழ்ந்தனர்.

“அம்மா! விஷயம் கஷ்டமான ஒன்று! உடனே போக எனக்கு அனுமதி கொடுங்கள்!”” என்று கூறிய அனுமன், காசிராஜனை நோக்கி,”உடனே நீங்கள் சரயு நதி சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி ராம ராம என்று ஜபிக்க ஆரம்பியுங்கள்! இன்று மாலை வரை நமக்கு நேரம் இருக்கிறதே!” என்று கூறினான்.

மூன்று பாணங்கள்! மூன்று நாமங்கள்!!

காசிராஜன் சரயு நதிக்கு ஓடோடிச் சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி பயபக்தியுடன் ராம நாமத்தை ஜபிக்கலானான் விஷயம் வெகு சீக்கிரம் பரவி மக்கள் கூட்டம் சரயு நதிக் கரையில் கூடியது. இங்கே அனுமன் ராமரிடம் திரும்பி வந்து அவர் சரண கமலங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.”ஸ்வாமி! எனக்கு ஒரு வரம் அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.

“இது என்ன அதிசயம்! காலம் காலமாக நான் வரம் தருகிறேன் என்று சொல்வது வழக்கம்! நீ மறுப்பதும் வழக்கம். இன்று நீயே கேட்கிறாயே. வரத்தைத் தந்து விட்டேன். கேள் எது வேண்டுமானாலும்” என்றார் ராமர்.

“ஸ்வாமி! தங்கள் நாமம் பாவனமானது. அதைச் சொல்லும் எந்த பக்தனுக்கும் எப்படிப்பட்ட தீங்கும் வராமல் நான் காக்க வேண்டும்.அதில் எப்போதும் வெற்றி பெற வேண்டும். இந்த வரத்தை அருளுங்கள்” என்றான் அனுமன்.

“வரம் தந்தோம். நீ ராம நாமத்தை ஜபிப்பவனை எப்போதும் காக்க முடியும்! இதில் தோல்வியே உனக்கு ஏற்படாது!”என்று வரத்தை ஈந்தார் ராமர்.

ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து சரயுவுக்குத் தாவிய அனுமன் காசிராஜனிடம்,”விடாதே! தொடர்ந்து ராம நாமத்தை ஜபி! நான் உன் பக்கத்தில் இருக்கிறேன்!” என்றான்.விஷயம் விபரீதமானதை மக்கள் அனைவரும் உணர்ந்து விட்டனர்.சரயுவில் முழு ஜனத்திரளும் திரண்டு விட்டது.

ராமர் காசிராஜன் சரயு நதியில் இருப்பதை அறிந்து கொண்டார். “எதுவானாலும் சரி! என் பிரதிக்ஞையை நிறைவேற்றுவேன்! இதோ, எனது முதல் பாணத்தைத் தொடுக்கிறேன்” என்று தன் முதல் அம்பை எடுத்து காசிராஜனை நோக்கி விட்டார்.

அம்பு காசிராஜனை நோக்கி வந்தது. ஆனால் காசிராஜன் ராம நாமம் ஜபிக்க அனுமான் அருகில் நிற்க செய்வதறியாது திகைத்த ராமபாணம் இருவரையும் வலம் வந்து வணங்கி ராமரிடமே திரும்பியது. திடுக்கிட்ட ராமர்,” என்ன ஆயிற்று?” என்று வினவினார். “ என்ன ஆயிற்றா! அங்கு காசிராஜன் உங்கள் நாமத்தை ஜபித்தவாறே இருக்க அனுமனோ அவன் அருகில் நிற்கிறார். இருவரையும் வலம் வந்து வணங்கி வந்து விட்டேன்” என்றது பாணம்.

paritala,AP,136 ft hanuman
ராமர் சினந்தார். தனது அடுத்த பாணத்தை எடுத்து ஏவினார். அது காசிராஜனை நோக்கி வந்தது. இப்போது அனுமன் காசிராஜனை நோக்கி, “ இதோ பார்! இப்போதிலிருந்து சீதாராம்! சீதாராம் என்று ஜபிக்க ஆரம்பி” என்றார். காசிராஜனும் சீதாராம் சீதாராம் என்று மனமுருகி ஜபிக்க ஆரம்பித்தான்.வேகமாக வந்த இரண்டாவது பாணம் மலைத்து நின்றது. அன்னையின் பெயரைக் கேட்டவுடன் காசிராஜனை வலம் வந்து வணங்கித் திரும்பியது.

“ ஏன் திரும்பி வந்தாய்?”என்று கேட்ட ராமரிடம் அன்னையின் பெயரையும் தங்களின் பெயரையும் உச்சரிப்பவரை வணங்குவது அன்றி வதை செய்வது முடியுமா?” என்று பதில் சொன்னது பாணம். கோபமடைந்த ராமர், “நானே நேரில் வந்து காசிராஜனை வதம் செய்கிறேன்” என்று மூன்றாவது பாணத்துடன் சரயு நதிக்கு வந்தார்.

ராமரே வேகமாக வரவிருப்பதை அறிந்த அனுமன் காசிராஜனை நோக்கி, “ ராமருக்கு ஜயம்! சீதைக்கு ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம்!” என்று ஜபிக்க ஆரம்பி என்றார். காசிராஜனும்,”ஜய ராம் ஜயஜய சீதா ஜயஜயஜய ஹனுமான்!” என்று ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால் களைத்திருந்த அவனது குரல் கம்மியது. உடனே அனுமன் தன் ஒரு அம்சத்தை அவன் குரலில் புகுத்தினார். இப்போது கம்பீரமாக அவன் குரல் ஒலித்தது. இதையெல்லாம் பார்த்த வசிஷ்டர் பெரும் கவலை அடைந்தார்.ஒரு புறம் ராமர், மறு புறம் அவரது பக்தனான அனுமன்! வேகமாக அனுமனிடம் வந்த அவர்,” ஹே! அனுமன்! ராமரின் பிரதிக்ஞையைப் பற்றி உன்னை விட வேறு யார் நன்கு அறிந்திருக்க முடியும். இந்த காசிராஜனை விட்டு விடு. ராம பாணத்தால் அவன் பெறப் போவது யாருக்கும் கிடைக்க முடியாத மோக்ஷமே!” என்று அறிவுரை பகர்ந்தார்.
ramachandra swami

அனுமனின் விரதம்
அனுமனோ அவரை நோக்கி,” மா முனிவரே! நமஸ்காரம்! ராம நாமத்தை ஜபிப்பவனைக் காப்பது என் விரதம்! இதில் என் உயிர் போனால் தான் என்ன! காசிராஜனைக் காப்பது என் தர்மம்” என்றான். ராமர் பாணத்துடன் அருகில் வந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் விஸ்வாமித்திரர் நடக்கும் அனைத்து லீலையையும் பார்த்துக் கொண்டிருந்தார். வசிஷ்டர் காசிராஜனை நோக்கி, “மன்னா! இதோ இருக்கிறார் விஸ்வாமித்திரர். இவரை வணங்கு!” என்றார்.

காசிராஜன் ராமசீதா ஹனுமானுக்கு ஜயம் என்று கூறியவாறே விஸ்வாமித்திர்ரை அடிபணிந்து வணங்கினான். விஸ்வாமித்திர்ர் மனமகிழ்ச்சியுடன் காசிராஜனுக்கு ஆசி அளித்து “நீடூழி வாழ்வாயாக” என்றார். அருகில் வந்த ராமரை நோக்கி,” இதோ, காசி ராஜன் என்னை வணங்கி ஆசி பெற்று விட்டான்! என் மனம் குளிர்ந்தது. உன் அம்பை விட வேண்டாம்!” என்று கட்டளை இட்டார். குருதேவரை வணங்கிய ராமர் தன் மூன்றாம் அம்பை அம்பராதூணியில் வைத்தார். ராமருடன் நடந்த போட்டியில் பக்த ஹனுமான் வென்றதைக் கண்ட மக்கள் அனைவரும் ராமருக்கும் ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம் என்று கோஷமிட்டனர்.

நாரதர் உணர்த்திய ராம பக்தனின் மஹிமை
நடந்ததை எல்லாம் பார்த்த அஞ்சனா தேவி ஆஞ்சனேயனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார். கலக நாரதரோ ராம நாம மஹிமையையும் பக்த ஹனுமானின் சிறப்பையும் அனுமனின் அன்னை மீதான பக்தியையும் விஸ்வாமித்திரரின் மஹிமையையும் உலகிற்கு உணர்த்திய வெற்றியில் புன்முறுவல் பூத்தார்.

contact Swami_48@yahoo.com

********************

“If There is No Food, Let Brahma Perish!”

guimet brahma from cambodia
Statue of Brahma from Cambodia at Guimet Museum, Paris, France.

By London Swaminathan;
Post No. 1002; Date:25th April 2014.

((Please read post No.860 “ Reference to Brahma in Purananuu- by Dr R.Nagaswamy posted here on 23-2-14.))

Hindu poets are far ahead of communists! Communists in India raise slogans only against private industrialists and big companies in their meetings and processions. But Hindu poets raised slogans against Brahma, God of Creation, for the disparities in the society. What they meant is that inequality must be done away with. In India, if some poet quotes God’s name that means the highest emphasis and not that God of creation should perish.

Tamil poet Valluvar, who lived at least 1500 years ago, said ‘Let the creator of the world (Brahma) Perish’!
Tirukkural 1062 of Tiru Valluvar:

May the creator perish wandering about if he has pre ordained begging too, as a mean of existence.
Mr C Rajagopalachari, First Governor General of India, commented on this Kural: “ If the world were so ordered that one of its inhabitants lives in dependence and on the mercy of others, the Creator would indeed deserve the curse of becoming a wandering beggar himself”.

A Sangam age poet says Brahma was uncultured! (Puram 194:5) because we could see in one house women are happy because a wedding is going to take place and another house had a deserted look because of a death in the family. Hasn’t the Creator any sense? So do good things and avoid bad things in life.

A Buddhist poet bursts out in fierce anger:
He who has eyes can see the sickening sight;
Why does not Brahma set his creatures right?
If his wide power no limits can restrain,
Why is his hand so rarely spread to bless?
Why are his creatures all condemned to pain?
Why does he not to all give happiness?
Why do fraud, lies and ignorance prevail?
Why triumphs falsehood – truth and justice fail?

(The Jataka Stories; translated by Cowell and Rouse, vol.6 (1907, p.110)

Bharati’s Outburst
But Subramanya Bharathi, greatest of the modern Tamil poets, said let us destroy the world even if one has to go without food! He was revolutionary in his thoughts, words and deeds.

brahma3,cholas,1050
Brahma statue of Choza Period.

Krishna says it is sin to cook for one’s own sake:-
Lord Krishna said in Bhagavad Gita, It is sin to eat without giving it to others:
“ But those who cook for their own sake truly eat sin”—(Gita 3-13)
Bhagavad Gita Commentators refer here to the Pancha Yajnas (Five Types of offering) that Hindu householders have to perform every day:

1.Deva Yajna: Offering to Gods by way of Pujas
2.Brahma Yajna: Studying Scriptures
3.Pitru Yajna: Offering to ancestors (water oblations)
4. Manushya Yajna: Feeding the poor or any guest that comes to your door step
5.Bhuta Yajna: Feeding all creatures from Elephant to ant, particularly cows.

Manu on Householder’s duty:
Manu, the Hindu Law Giver, says in 3-77 that the people who are in three stages (Student, Pensioner and acetic) depends on householders (grihasthas) and in another rule 3-76, he says:

From food creatures come into being;
From rain is the birth of food;
From sacrifice rain comes into being;
And sacrifice is born of work

Annad bhavanti bhutani
Parjanyad anna sambhavah
Yajnad bhavati parjanyo
Yajna karma samudbhavak (The Laws of Manu 3-76)

Valluvar even spoke about violence against who refuse to give: “Crush them like sugarcane; Twist their arms and punch on the jaw till it breaks!”

Kural 1077:
The mean will not even shake off what sticks to their hands to any but those who would break their jaws with their clenched fists.

Kural 1078:
Good men of virtue give charity at the mere call for help, but ignoble ones,
Will give only when crushed like the sugarcane.

At a mere word the good will melt; but the mean, like the sugarcane, yieled only under pressure.

Contact swami_48@yahoo.com

சிவனை வழிபட மூன்று மருத மரங்கள்

tv marudur temple
Tiruvidaimarudur Temple

சிவனை வழிபட மூன்று மருத மரங்கள் தேவியை வழிபட மூன்று மாணிக்கங்கள்

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்— 1000 (ஆயிரம்) தேதி—-25 ஏப்ரல் 2014

சிவன் எங்கே இருக்கிறான்? நம் உள்ளத்தில் இருக்கிறான் என்று ஞானிகள் சொல்லுவர். ஆனால் நாம் எளிதாகக் காண முடிவதில்லை. பாலில் வெண்ணை இருக்கிறது என்று பாட்டி சொன்னாள். குழந்தை போய் பாலை எட்டிப் பார்த்தது. வெண்ணையைக் காணவில்லை. விறகில் தீ இருக்கிறது என்று அம்மா சொன்னாள். குழந்தை போய் விறகைத் தொட்டுப் பார்த்தது. தீயும் இல்லை, சுடவும் இல்லை. பாட்டியும் அம்மாவும் சொன்னதைத்தான் அப்பர் பெருமானும் கூறினார். ஆனால் அந்த வெண்ணையையும் தீயையும் பார்க்க கடைய வேண்டும் என்ற ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டார். மத்ததைக் கொண்டு பாலைக் கடைந்தால் வெண்ணை மேலே வரும். அரணிக் கட்டையைக் கடைந்தால் தீப்பொறி பறக்கும். நம் உள்ளத்தைக் கடைந்தால் சிவன் வெளிப்படுவான்:

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. (5-ஆம் திருமுறை, அப்பர்)

உள்ளத்தை எப்படிக் கடைவது. பல வழிகள் உண்டு. புனித யாத்திரை போனாலும் உள்ளம் கடையப்படும். தமிழ் கூறு நல்லுலகில் இதற்கு நமக்கு வழிகாட்டியவர்கள் தேவாரம் பாடிய மூவரும், திருவாசகம் பாடிய ஒருவரும், திவ்யப் பிரபந்தம் பாடிய பன்னிருவரும் ஆவர். அவர்களைத் தொடர்ந்து வந்த பக்தர் பட்டியலை எழுதி மாளாது. 300 தலங்களுக்கு மேல் பாத யாத்திரையாகச் சென்று சிவபெருமானையும், பெரிய பெருமாளையும் தரிசித்தனர்.

Srisailam-Mallikarjuna Swami Temple-13
Srisailam Mallikarjuna Temple

நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அவருடைய சொற்பொழிவில் மூன்று மருத மரங்களிடையே வாழும் சிவன் பற்றிக் கூறினார். அவருக்கு முன் வாழ்ந்த வள்ளலார் பெருமான் மூன்று மாணிக்கங்கள் இடையே வாழும் சிவ பெருமான் மற்றும் தேவியர் பற்றிக் கூறினார். இந்த ஆறு தலங்களையும் மனதால் தரிசித்து வருவோம்.

மூன்று தலங்களில் மருத (அர்ஜுன) மரம் தல விருட்சமாக இருக்கிறது.

ஸ்ரீசைலம்= மல்லிகார்ஜுனம்
திருவிடை மருதூர் = மத்யார்ஜுனம்
திருப்புடை மருதூர் = புடார்ஜுனம்

திருவிடை மருதூர் கோவிலில் உள்ள லிங்கம் மஹாலிங்கம். மத்ய அர்ஜுன என்றும் அழைப்பர் ( மத்யார்ஜுனம்= இடை மருது). அர்ஜுன என்பது மருத மரத்தின் சம்ஸ்க்ருதப் பெயர்.
மருத மரத்தின் தாவரவியல் பெயர் டெர்மினாலியா அர்ஜுனா. தமிழ்நாட்டில் திருவிடை மருதூர், திரு இடையாறு ஆகிய இடங்களில் இதுதான் தல மரம். ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ய க்ஷேத்திரத்திலும் மருதமரமே. ஸ்ரீசைலத்தில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனன். இங்கு மல்லைகை, அர்ஜுன (மருது) இரண்டும் சேர்ந்து உள்ளன. இது சக்தியும் சிவனும் இணை பிரியாதவர்கள் என்பதைக் காட்டும் சின்னம். அருகில் கிருஷ்ணா நதி பெருக்கெடுத்து ஓடுவதையும் காணலாம்.

tpudai marudur
Tiruppudaimarudur near Amabsamudram, Tirunelveli district.

ஆந்திரத்தின் ஒரு கோடியில் இருக்கும் மல்லிகார்ஜுனரையும் இடையே இருக்கும் (மத்யார்ஜுனம்) மஹாலிங்கத்தையும் தரிசித்தோம்.இன்னும் கொஞ்சம் தெற்கே போனால் தாமிரபரணி நதிக்கரையில் திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) என்னும் க்ஷேத்திரத்தில் ஒரு மருதமரமும் ஈஸ்வரனும் உள்ளனர். நாறும்பூநாதர் என்பது இறைவனின் பெயர். கோமதியம்மன் என்பது இறைவியின் பெயர். இங்கு சாய்ந்த நிலயில் ஈஸ்வரன் காட்சிதருவது பற்றி பல கதைகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தலம் உள்ளது.அற்புதமான நாயக்கர் கால ஓவியங்களும், வேலைப்பாடுடைய மரச் சிற்பங்களும் இங்கே இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை உடைய கோவில்.

Source: Kanchi Paramachrya Talks

சென்னையில் மூன்று மாணிக்கங்கள்

மேலூர் = திருவுடை மாணிக்கம்
திருவொற்றியூர் = வடிவுடை மாணிக்கம்
திருமுல்லைவாயில் = கொடியிடை மாணிக்கம்

சென்னையில் மூன்று மாணிக்கங்கள் உண்டு. சென்னை அருகில் மேலூர் என்னும் திருத் தலத்தில் திருவுடை மாணிக்கம். திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம். திருமுல்லை வாயில் கொடியிடை மாணிக்கம் என்பார்கள். நிறைநிலா நாளில் மூன்று மாணிக்கங்களையும் தரிசித்து மகிழும் வழக்கம் நெடுங்காலமாகத் தாய்மார்களிடையே இருந்து வருகிறது.. அங்கே உறையும் தேவியர் அருள் மழையில் நனைவர்.

திருஒற்றியூரில் பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பும் இனித்தது. சென்னையில் இருந்தபோது வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்) நாடோறும் வழிபட்ட இடம் இது. வடிவுடை அம்பிகையை வள்ளலார் துதித்து வடிவுடைமாணிக்க மாலை அருளியிருக்கிறார்.

paintings,TP  marudur
Beautiful Nayak period paintings of Tiruppudaimarudur

அதிலிருந்து ஒரு பாடல்:

திருநாள் நினைத் தொழும் நண்ணாள் தொழாமல் செலுத்திய நாள்
கருநாள் என மறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநாளினும் நிந்தனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மருநாள் மலர்க்குழல் மானே! வடிவுடைமாணிக்கமே!

உதவிய நூல்:வள்ளலார் வாழ்கின்றார்,கவிஞர் முருக சரணன், கலைவாணி வெளியீடு,சென்னை. ஆண்டு 1995.

திருமுல்லைவாயில் பதிகம்

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ் சுடரே (7-ஆம் திருமுறை,சுந்தரர்)

Contact swami_48@yahoo.com

புறநானூற்றில் முனிவர்களும் ஆஸ்ரமங்களும்

animal fables

எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :–992; —தேதி 21st April 2014.

இந்து மத முனிவர்கள், கானகங்களில் ஆசிரமங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை வனப்பு மிக்க மலைச் சாரல்களில் அமைக்கப்பட்டன. அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். காய்கறிகள், கனி வகைகள், பால் தயிர், கொஞ்சம் தானியம் ஆகியவைதான் அவர்களுடைய அன்றாட உணவு.

மான்கள், கிளிகள் முதலியன அவர்களுடைய குடில்கள் அருகே வசித்தன. நெய் மணக்கும் ஹோமப் புகை அவர்கள் குடில்களில் இருந்து காலையும் மாலையும் எழும். அவர்களுடைய அன்றாட உடற்பயிற்சி ஆறுகளுக்குச் சென்று நீராடி வருவதும். செடிகொடிகளுக்குத் தண்ணீர் விடுவதும் ஆகும். அத்தோடு ஹோமத்துக்குத் தேவையான குச்சிகளைப் பொறுக்கிக்கொண்டு வருவர்.

ஆசிரமங்களில் அமைதி தவழ்ந்தது. அவர்களுடைய தவ வலிமையால் அங்கு வரும் புலியும் மான்களும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்கும். அங்கு வரும் மன்னர் முதலானோருக்கு தாராளமாக விருந்து உபசாரம் கிடைக்கும். யாரேனும் தங்க வேண்டுமானால் அங்கு தங்கவும் அனுமதி உண்டு. மேலும் பிராணிகளும் கூட அவர்களுக்கு ஹோமத்துக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தன. பெண் துறவிகளும் அங்கே இருந்தனர்.

ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான முனிவர்களையும், ஆசிரமங்களையும் பற்றிய செய்திகள் இருக்கின்றன. அவைகளைப் படிக்கும்போதே மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சம்ஸ்கிருத நாடகங்களில் இந்த ஆஸ்ரமங்கள் பற்றி இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. உலகின் மிக மூத்த நாடக ஆசிரியர்களில் ஒருவர் பாஷா. அவர் எழுதிய 13 சம்ஸ்கிருத நாடகங்கள் நமக்குக் கிடைத்தது நாம் செய்த தவப் பயனே.
lotus beauty

நாடக உலகில் மிகவும் சிறப்புமிக்க இடத்தைப் பிடிக்கும் காளிதாசனின் மூன்று நாடகங்களில் சாகுந்தலம் என்னும் நாடகம் உலகப் புகழ்பெற்றுவிட்டது. இவைகளில் உள்ள வருணனைகள், ஆஸ்ரமங்களின் அற்புதமான காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே கொண்டு வருகின்றன. மாபெரும் மன்னர்களும் கூட ஆஸ்ரமத்துக்கு தொலை விலேயே ரதங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து முனிவர்களின் கால் களில் விழுகின்றனர். ஆயுதங்களையும், அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் கூடக் கழற்றிவிட்டு சாதாரண உடையில் வருகின்றனர். ஆசிரமத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இமயமலை ஆஸ்ரமங்களின் காட்சிகள் புறநானூற்றின் மிகப் பழைய பாடல்களில் இருக்கின்றன. அவர்கள் காளிதாசனின் நூல்களைப் படித்து அதைப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மீது முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய (புற.2) பாடலில்:–

“ நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அறுங்கடன் இறுக்கும்
முத்தீ விளகிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே !”

பொருள்:– பாலானது புளித்துப் போனாலும், கதிரவன் ஒளி நீங்கினாலும், நால்வேத நெறி மாறுபடினும் நீ இமயமலை போல நீண்டகாலம் வாழ வேண்டும். அந்த இமயமலைச் சாரலில் பெரிய கண்களை உடைய பெண் மான்கள் இருக்கின்றன. அவைகளின் பக்கத்தில் சின்ன மான் குட்டிகள் இருக்கும் அந்தணர் வீடுகளில் எரியும் முத்தீயில் இருந்து எழும்புகையில் அவை தூங்கும். அந்த இமய மலையோ சூரிய ஒளியில் தக தகவென தங்கம் போல ஒளிவீசும் (பொற்கோட்டு இமயம்= காஞ்சன ஸ்ருங்கம்= தற்போதைய பெயர் கஞ்ஜன் ஜங்கா). அப்பேற்பட்ட இமயமலை போல் நீ நீண்ட நெடுங் காலம் வாழ்வாயாக.
beatles-ashram-huts-II

அந்தணர் வீட்டு முத்தீ= ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கியம்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”.

இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும். அந்த இமய மலை வானத்தைத் தொடும் அளவு உயர்ந்தது.

இதில் முனிவர்கள் பற்றிய குறிப்பு இல்லாவிடினும் முந்தைய புலவர் முடிநாகராயர் சொன்னதை ஒப்பிட்டால் இவரும் அதையே சொல்கிறார் என்பது தெள்ளிதின் விளங்கும்.

okhla bird sanctuary,hindu

மாற்பித்தியார் வழங்கும் அற்புதக் காட்சி

புறநானூற்றுப் பாடல்கள் 251, 252ம் ஒரு இளைஞன் துறவியான அற்புதக் காட்சியை வருணிக்கின்றன. மாற்பித்தியார் என்ற புலவர் பாடிய பாடல்கள் இவை:–

“ஓவத்தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற்கண்டிகும்—
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீவேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்துவோனே?”

பொருள்:– ஓவியத்தில் வரைந்தது போன்ற அழகான வீடு. அதில் சித்திரப் பாவை போல ஒரு அழகி இருந்தாள். அவள் வளையல்கள் கழன்று விழுமாறு காதல் கனலை மூட்டினான் ஒரு கட்டழகுக் காளை போன்ற இளைஞன். இப்போது அவன் எங்கே?

அதோ பாருங்கள், மலையில் ஒரு நீர்வீழ்ச்சி. அதில் நீராடிவிட்டு அனல் மூட்டி ஹோமம் செய்துவிட்டு இப்போது நீண்ட சடையை அந்தத் தீயின் வெப்பத்தில் உலர்த்திக் கொண்டு நிற்கிறான்.

இதோ அவர்பாடிய இன்னும் ஒரு பாடல்:

“கறங்கு வெள்ளருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையொடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே”

பொருள்:– அதோ பாருங்கள்! அருவியில் குளிப்பதால் தில்லை நிறம் போன்ற சடையாக மாறிப் போனான். இப்போது தாளி மரத்தின் இளம் தளிர்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறான். இவன் முன்னர் பேசிய காதல் பேச்சில்—அவன் வீசிய சொல் வலையில் — மயில் போன்ற அத்தனை அழகிகளும் மயங்கி வீழ்ந்தனர்.
desert_elephant.jpg

இந்த இரண்டு பாடல்களும் முன்னர் இளைஞனாக வாழ்ந்த ஒருவன் சந்யாசியாகி காட்டில் வாழும் காட்சியையும் அவன் நீண்ட சடையுடன் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வையும் நம் முன்னே சித்திரம் போலப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நற்றிணைப் பாடலில் ஒரு காட்சி

சல்லியங்குமரனார் பாடிய நற்றிணைப் பாடல் (141) ஒரு முனிவரின் தோற்றத்தை அழகாக வருணிக்கிறது:-

“இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற்காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடாமேனிக்
குன்றுரை தவசியர் போல”

பொருள்:– மண் சேறு படிந்த கன்னத்தையும் பெரிய வாயையும் மேகம் போன்ற தோற்றமும் உடையது யானை. அந்த யானை உரசி உரசி பொரிந்த அடிமரம் உடையது கொன்றை மரம். அவை நீண்ட சடையும், நீராடாத உடம்பையும் உடைய தவசியர் போல இருக்கின்றன. (தவசியர் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் கவனிக்க).

ஒரு கொன்றை மரத்தை வருணிக்க முனிவர்களைக் கூறும் அளவுக்குத் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆன்மீகம் வளர்ச்சி பெற்றி ருந்தது!! மக்களுக்குத் தெரிந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் உயர்ந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் நூல் மரபு. தமிழ் மக்களுக்கு இத்தகைய முனிவர் காட்சி அவ்வளவு சர்வ சாதாரணம்!

elephant_1703752f

காளிதாசனின் ‘சாகுந்தல’ நாடக வருணனையும், பாஷாவின் ‘ஸ்வப்ன வாசவதத்தா’ நாடக வருணனையும் இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் கொடுத்துள்ளேன்.

Please read:
“Beautiful and Tranquil Hermitages of Ancient India’– posted on 20th April (Post No 991).
Contact swami_48@yahoo.com

சீதை சொன்ன காகாஸுரன் கதை!

ram gem

By S Nagarajan
Post No.986; Dated 18th April 2014.
அத்தியாயம் 23

சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காண்பித்துத் தன்னுடன் உடனடியாக ராமரிடம் வருமாறு வேண்ட அதற்குச் சீதை மறுத்து ஸ்ரீராமரே தன்னை வந்து மீட்டுச் செல்ல வேண்டும் என்று தன் திருவுள்ளக் கருத்தை வெளியிடுகிறார். அப்போது ஹனுமான் சீதையிடம் ஒரு அடையாளம் தர வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார் உடன் சீதை தன் சூளாமணியைத் தருகிறார். அத்தோடு முன் நிகழ்ந்த காகாசுரனின் கதையையும் அடையாளமாக ஹனுமானிடம் சொல்கிறார். 38வது ஸர்க்கமாக அமையும் சீதை சொன்ன காகாசுரனின் கதை இது தான் :-

சித்திரகூடமலையில் வடகீழ் தாழ்வரையில் உள்ளதும் மந்தாகினிக்கு ஸமீபத்தில் உள்ளதும் ஏராளமான கிழங்குகளும், கனிகளும், தீர்த்தங்களும் அமைந்த சித்தாஸ்ரம்ம் என்னும் ஆஸ்ரமத்தில் ஒரு ப்ரதேசத்தில் ஜலத்தில் பலவகை மலர்களால் நறுமணம் வீசிகிற நெருங்கிய சோலைகளிலும் அலைந்து களைத்து தபஸ்விகளின் ஆசிரமத்திலிருந்து வந்த நீர் என் மடியில் படுத்திருந்தீர்,
அப்போது மாமிசம் உண்பதில் ஆசையுற்ற ஒரு காகம் கூரான மூக்கால் என்னைக் குத்திற்று. அந்தக் காகத்தை மண்ணாங்கட்டியால் பயமுறுத்தி விரட்டினேன்.
ஆனால் மாமிசத்தை விட விரும்பாத அந்தக் காகம் என்னைக் குத்திய வண்ணமே அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. நான் காகத்திடம் சினந்து என் அரைநூல் மாலையை மாத்திரம் கழற்றவும் அதனால் ஆடை நழுவி வீழ்கையில் உம்மால் பார்க்கப்பட்டேன்.

தீனியில் ருசி கொண்ட காகத்தால் குத்தப்பட்டு கோபம் மூட்டப்பட்டுக் களைத்திருந்த நான் உம்மால் பரிஹாஸம் செய்யப்பட்டேன். அதனால் மிகவும் வெட்கம் அடைந்தேன். அப்படியிருந்தும் உம்மிடமே வந்து சேர்ந்தேன். உமது மடியில் வந்து உட்கார்ந்தேன்.முகம் மலர்ந்திருந்த உம்மால் கோபமுற்றிருந்த நான் தேற்றப்பட்டேன்.

நாதா! முகமெல்லாம் கண்ணீர் நிரம்பி இருக்கக் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டிருந்த என்னை அதிகம் கோபம் கொண்டவளாக அறிந்தீர்.

ram in frame

நான் மிகவும் களைப்பால் அப்படியே உமது மடியில் படுத்து உறங்கினேன் நீரும் என் மடியில் கண் வளர்ந்தீர். அப்போது அதே காகம் மறுபடியும் வந்தது. தூங்கி எழுந்திருந்த என்னை மார்பில் கீறிற்று.
அப்படிப் பல தடவை பாய்ந்து பாய்ந்து என்னைக் கீறவே அப்போது சொட்டிய ரத்தத் துளிகளால் ஸ்ரீ ராமர் எழுந்தார்.

அவர் என் மார்பகங்களில் காயப்பட்டதை அறிந்து சினம் கொண்டு,” “உனது மார்பு எவனால் புண்படுத்தப்பட்டது? ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான்?”, என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்து காகத்தைக் கண்டார்.

அந்த காகம் இந்திரனுடைய மைந்தன். கதியில் வாயுவுக்கு நிகரானது. அது அங்கே உடனே அங்கிருந்து மறைந்து விட்டது. கோபம் கொண்ட ராமர் தர்ப்பாஸனத்திலிருந்து ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை மந்திரித்தார்.அது ஊழித்தீயெனப் பற்றி எரிந்தது. காகத்தைத் துரத்தியது.
உலகனைத்தும் ஓடி ஓடிக் களைத்த அது ராகவரையே சரணம் அடைந்தது.சரணம் என்று தம்மை வந்து அடைந்த காகத்தை நோக்கி,”பிரம்மாஸ்திரத்தை வீணாகச் செய்ய முடியாது. ஆகையால் வழி சொல்” என்றார் அவர்.

காகம், ‘அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்’ என்று கூறவே பிரம்மாஸ்திரம் அதன் வலது கண்ணை அழித்தது.

அது முதல் காக்கைகளுக்கு ஒற்றைக் கண் என்பது தெரிந்த விஷயம் என்று இப்படி காகத்தின் நீண்ட வரலாற்றை சீதை கூறி அருளினார். பின்னர் தன் சூடாமணியை ஹனுமானிடம் தந்தார்.

ததௌ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம் I
ப்ரதேயோ ராகவாயேதி சீதா ஹனுமதே ததௌ II

-சுந்தர காண்டம், முப்பத்தெட்டாவது ஸர்க்கம், எழுபதாவது ஸ்லோகம்

தத: – அப்பொழுது வஸ்த்ரகதம் – வஸ்த்ரத்தில் முடிந்திருந்த சூடாமணிம் – சூடாமணி என்னும் திவ்யம் சுபம் – திவ்ய ஆபரணத்தை முக்த்வா – அவிழ்த்தெடுத்து ராகவாய – ராகவருக்கு ப்ரதேய – சேர்த்து விட்டேன் இதி – என்று சொல்லி சீதா ஹனுமதே ததௌ – சீதை ஹனுமானிடம் தந்தாள்

இந்த சூடாமணியைக் கண்டவுடன் தான் ராமருக்கு உயிர் வந்தது. முக்கியமான ஒரு கட்டத்தை வால்மீகி விளக்குகையில் சூடாமணி தரப்பட்ட இந்த ஸ்லோகம் அர்த்தமுள்ள ஸ்லோகமாக அமைகிறது. காலம் காலமாக கேட்பவரின் மனத்தை உருக வைக்கும் கவிதையாகவும் ஆகி விட்டது.
contact swami_48@yahoo.com