ஓஷோ கூறிய பக்கா திருடன் கதை!

bigstock-Burglar-8487742

ச.நாகராஜன்
Post No 1221; Dated 8th August 2014

ஜென் கதைகளில் ஒன்று!

வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது? ஜென் குருமார்கள் இதற்கு கதை மூலம் பதில் கூறியுள்ளனர். ஜென் பிரிவில் வழங்கி வரும் இதை ஓஷோ கூறியுள்ளார். கதை இது தான்:

ஜப்பானில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். அவன் திருடுவதில் நிபுணன் அவனை யாராலும் பிடிக்க முடியவில்லை.நாடு முழுவதும் அவன் பெயர் பிரசித்தமாகி விட்டது. ராஜாவின் பொக்கிஷத்திலிருந்தே அவன் திருடி விட்டான். தான் வந்ததற்கு அடையாளத்தையும் அவன் விட்டுச் செல்வதால் அவனது திருட்டுகள் பிரபலமாயின. மக்கள் அவனை வியந்து பாராட்டி நேசிக்கவே தொடங்கி விட்டனர் எந்த திருட்டு நடந்தாலும் என் வீட்டிற்கு பக்காத் திருடன் நேற்று வந்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறும் நிலையை அவன் உருவாக்கி விட்டான்.

ஆனால் காலம் சென்றது. அவனுக்கும் வயதாகி விட்டது. அவனது மகன் ஒரு நாள் அவனிடம்,’ தந்தையே! உங்களுக்கு மிகவும் வயதாகி விட்டது. உங்கள் கலையை எனக்குச் சற்று கற்பியுங்களேன்” என்று வேண்டிக் கொண்டான்.

பக்காத் திருடன் தன் மகனை அன்புடன் பார்த்து,” சரி, மகனே, இன்று இரவு என்னுடன் வா! ஏனென்றால் இது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தானே வர வேண்டியது! நீயே என்னைப் பார்த்தால் கலையை பிடித்துக் கொள்ளலாம். கற்பிக்க முடியாத ஒன்று இது.” என்றான்.

மகனுக்கோ ஒரே பயம்! அவனது முதல் திருட்டு இது. ஒரு வீட்டின் சுவரில் கன்னம் வைத்து அதை உடைத்தான் பக்கா திருடன். நேர்த்தியாக அவன் கைகள் வேலையைத் திறம்படச் செய்தன.அவனிட்த்தில் பயம் இல்லை; பரபரப்பும் இல்லை. நிதானமாக வேலையை முடித்தான்.ஏதோ, தன் வீட்டின் சுவரை உடைப்பது போல உடைத்து உள்ளே நுழைந்தான். மகனுக்கோ உடல் எங்கும் நடுக்கம். கால்கள் தள்ளாடின. யாராவது பிடித்து விட்டால் என்ன செய்வது?

Jewelry-Thief-Walkthrough

கும்மிருட்டில் சர்வ சாதாரணமாக பக்கா திருடன் வீட்டில் நுழைய மகனும் பின் தொடர்ந்தான். வீட்டின் உள்ளே நகைகள் இருக்கும் அறைக்குள் சென்று ஆள் நுழையக் கூடிய அளவில் இருந்த பெரிய பீரோவைத் திறந்தான். மகனை நோக்கி,” விலை மதிப்புள்ள எதை வேண்டுமானாலும் எடு” என்று கூறினான். பீரோவினுள் மகன் நுழைந்தான். உடனே பக்கா திருடன் பீரோவின் கதவுகளை நன்கு மூடி விட்டு, “திருடன் திருடன், வாருங்கள், எல்லோரும் வாருங்கள்’ என்று கத்தி விட்டு தான் கன்னமிட்ட துவாரத்தின் வழியாகத் தப்பிச் சென்று விட்டான்!

மகனுக்கு வேர்த்து விறுவிறுத்தது. தனது தந்தை இப்படிச் செய்வார் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை இப்படி மாட்டி விட்டு விட்டாரே, மஹா பாவி! அப்பனா இவன்! பீரோ கதவை வேறு பூட்டி விட்டான்! பிடிபட்டால் மரணம் தான் பரிசு. அடித்தே கொன்று விடுவார்கள். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

ஒரு மணி நேரம் கழிந்து வீட்டிற்கு வந்த மகனை அன்புடன் பக்காத் திருடன் வரவேற்றான். மகனோ தனது மேலிருந்த போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு,” என்ன அநியாயம் இது! இப்படியா செய்வது?” என்று கோபத்துடன் கூவினான்.

பக்காத் திருடன் கூறினான்:” ஓ! நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். தூங்கப் போ. உனக்கு நமது கலை புரிந்து விட்டது! அதைப் பற்றிப் பேச வேண்டாம்”

மகனோ,”இல்லை இல்லை, என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன்” என்றான்.

“உனக்குச் சொல்ல வேண்டுமென்றால் சொல். எனக்குக் கேட்க வேண்டுமென்பது இல்லை. நாளை முதல் நீ தனியாகவே திருடச் செல்லலாம். உனக்குத் திறமை இருக்கிறது. அதைப் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றான் பக்கா திருடன்.

மகனோ,” தந்தையே! நடந்ததைச் சொல்லாவிட்டால் எனக்குத் தூக்கமே வராது. நீ என்னைக் கொன்றே விட்டாய்! அதிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். நடந்ததைக் கேள்!” என்றான்,
“அப்படியா! ஒரு நிபுணன் என்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பித்துத் தான் வரவேண்டும். இது சகஜமப்பா. சரி என்ன நடந்தது அதைச் சொல்” என்றான் தந்தை.
Jewel_Thief_poster

“எப்படியோ அது நடந்தது. தப்பி விட்டேன். எனது மனமோ, புத்தியோ எதுவும் அதற்குக் காரணமில்லை. ஆனால் நடந்து விட்டது” என்றான் மகன்.

தந்தை கூறினான் ” இது தான் வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி, அது எந்தத் துறையாக இருந்தாலும் சரிதான். திருடுவதோ, ஓவியம் வரைவதோ, கவிதை இயற்றுவதோ எந்த துறையாக இருந்தாலும் சரி தான்! திருடனாக இருந்தாலும் சரி, யோகியாக இருந்தாலும் சரி. தலையிலிருந்து எதுவும் உதிப்பதில்லை வேறு எங்கோ கீழே இருந்து தான் அனைத்தும் உதிக்கிறது. அதற்கு உள்ளுணர்வு என்று பெயர் கொடு, தியானம் என்று சொல். பல பெயர்களைச் சொன்னாலும் விஷயம் ஒன்று தான். உன் முகத்தில் ஒரு தேஜஸ் ஜொலிக்கிறது நீ ஒரு மாஸ்டர் திருடனாக பக்கா திருடனாக ஆகி விடுவாய் பக்கா திருடனாக நான் ஆனதால் எனக்கு தியான ஒருமைப்பாடு சித்தியாகி இருக்கிறது. ஆகவே உனக்கு தியானம் சித்திக்க வேண்டுமென்றால் இது தான் வழி!”

நடந்ததை மகன் கூறலானான்:” நான் பீரோவின் உள்ளே நடுநடுங்கியவாறு ஒளிந்திருக்கையில் நீங்கள் போட்ட கூச்சல் சத்தத்தைக் கேட்டு ஒரு வேலைக்காரி மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிக் கொண்டு வந்தாள். அதை சாவி துவாரம் வழியே பார்த்தேன். திடீரென எனக்கு ஒன்று தோன்றியது. பூனை போல மியாவ் மியாவ் என்று கூவினேன்.இதுவரை நான் பூனை போல சத்தமிட்டதே இல்லை. பூனை தான் இருக்கிறதென்று பீரோ கதவை வேலைக்காரி திறந்த போது பூவென்று ஊதி மெழுகுவர்த்தியை அணைத்து அவளைத் தள்ளி விட்டு வெளியே ஓடினேன்.

எல்லோரும் என்னைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடி வந்தார்கள் திடீரென அங்கு ஒரு கிணறு வழியில் இருந்ததைப் பார்த்தேன். அதன் அருகே ஒரு பெரிய பாறை இருந்தது. அசைக்க கூட முடியாத அளவு பெரிய பாறை அது. கஷ்டப்பட்டு அதைத் தூக்கி கிணற்றில் வீசினேன். பின்னர் ஓட ஆரம்பித்தேன். எல்லோரும் கிணறு அருகே வந்து நின்றனர். நான் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். ஒரு வழியாகத் தப்பி வீட்டுக்கு ஓடி வந்தேன்.”

பக்கா திருடன் கூறினான்:”மகனே நீ தூங்கப் போ! என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நீயாகவே உனது வேலையைத் தொடங்கலாம்!”

ஓஷோ கூறுகிறார்: சும்மா இரு; அனைத்தையும் அறி!

******************

சென்னையிலிருந்து வெளிவரும் முதல் ஓசை நாளிதழில் 29-6-2014 அன்று வெளியான கட்டுரை

Pictures are used from different sites, not related to this story;thanks.

முயற்சி திருவினை ஆக்கும்: தவளைக் கதை

frog-300x230

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1191; தேதி 24 ஜூலை, 2014.

ஒரு வீட்டில் தயிர்ப் பானையில் தயிர் வைத்திருந்தார்கள். அதை மூட மறந்து விட்டனர். இரவு நேரத்தில் தாவிக் குத்தித்து வந்த இரண்டு தவளைகள் அதில் தவறி விழுந்துவிட்டன. ஒரு பெரிய தவளை தன்னால் முடிந்த மட்டும் காலால் உதைந்து வெளியே குதிக்கப் பார்த்தது. முடியவில்லை. அலுத்துப் போய் அப்படியே அமைதியானது. சிறிது நேரத்தில் பானையின் கீழே போய் மாண்டு போனது.

மற்றொரு தவளை உருவில் சிறியது. அது முயற்சியைக் கைவிடாமல் உதைந்து கொண்டே இருந்தது. இரண்டு தவளைகளும் முன்னர் நீந்தி உதைத்ததிலும், குட்டித் தவளை கடைசி வரை உதைத்ததாலும் தயிர்ப் பானையில் வெண்ணை திரண்டது. கொஞ்சம் கொஞ்சமாக உருண்டு திரண்டு கட்டியாகியது. குட்டித் தவளை அதன் மீதேறித் தாவி வெளியே குதித்து தப்பி ஓடியது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!

surfacing Frog

கடவுளை அடைய விரும்புவோரும் இடை விடாமல் சாதகம் செய்தால் இறைவன் வெண்ணை போல திரண்டு வந்து உதவுவான் என்பார் இக்கதையைச் சொன்ன சுவாமி ராமதாஸ்.

திருவள்ளுவரும் இதையே சொன்னார்; சொல்லப்போனால் இதற்கு மேலே ஒரு படி சென்று, முயற்சிக்கான பலனைத் தெய்வமே கூட தடுக்க முடியாதென்றார்:

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் – (குறள் 619)

அதாவது இறுதி வெற்றி என்பது தர்மமா, அதர்மமா என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் அதற்கு முன் வரை அவரவர் முயற்சிக்குத் தக முன்னேற்றம் அமையும். கடவுள் உங்களுக்கு உதவாவிட்டாலும் முயற்சிக்கான பலன், முயற்சியின் அளவுக்கேற்ப அமையும்.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ — முயற்சியினால் செல்வம் பெறலாமென்று சொன்ன வள்ளுவர், விதியையும் கூட வெல்லலாம் என்பார்:

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் (620)

frog 3

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பர். கல்லே நகரும் போது நம் முயற்சிகளும் பயிற்சிகளும் பலன் தராமல் போகுமா?

–சுபம்–

தமிழனுக்கு வானவியல் தெரியுமா?

planets3

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1179; தேதி:–18th July 2014.

இந்துக்களுக்கு வான சாஸ்திரம் எனப்படும் வானவியல் தெரியுமா?

ஏன் இந்தக் கேள்வி எழுகிறது?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.
தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

distance

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.
பொன் = வியாழன்
வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்
செவ்வாய் = செந்நிறக் கோள்
பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.
ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

obliquity

ஆறு மிகப் பெரிய உண்மைகள்
இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்
2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்
3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்
4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு
5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

Planets_event_61433

இவைகளின் பொருள் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

Planets-lots-of-info-Chart1

என்னுடைய கருத்து:
இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.
வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!!!

—சுபம்–

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில்

akaththi

கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1177; தேதி:- 17 ஜூலை 2014.

தமிழ் தலைவன் யார் என்று தமிழ் கூறு நல்லுலகில் ஒரு ‘சர்வே’ நடத்தினால், சிறை சென்ற தியாகிகள் பட்டியல், மறியல் போராட்ட தியாகிகள் பட்டியல், அரசியல் தலைவர்கள் பட்டியல், ஏ.கே. 47 துப்பாக்கி சுழற்றியோர் பட்டியல், ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் செய்தோர் பட்டியல் என்று ஆயிரம் ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் வந்து நம்மைத் திக்கு முக்காடச் செய்து விடும்!

கம்பனிடம் போய் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். அவர் நாலே வரிகளில் தெளிவான பதில் கொடுத்து நம் குழப்பத்தை எல்லாம் போக்கிவிட்டார்.

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயனம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

Agasthiar
அகத்தியர் என்ன செய்தார்?

அகத்தியர் கடலைக் குடித்தார்: அதாவது வங்கக் கடல் வழியாக பாண்டியனின் படைகளை வழி நடத்திச் சென்று வியட் நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோநேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்துப் பண்பாட்டைப் பரப்பினார். இதைக் “கடலைக் குடித்தார்” என்று அழகாகாகச் சொல்லுவர். அகத்தியர் கடலைக் குடித்தாரா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும், பிரம்மாஸ்திரா—ஒரு அணுசக்தி ஆயுதமா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

அகத்தியர் பூமியை சமநிலைப்படுத்தினார்: இது திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதை. மக்கட் தொகைப் பெருக்கம் காரணமாக அகத்தியன் தலைமையில் 18 குடிகளை சிவ பெருமான் தெற்கே அனுப்பிவைத்தார். “உலகின் முதல் மக்கட் தொகைப் பெருக்கப் பிரச்னை”– என்ற ஆங்கிலக் கட்டுரையில் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.

விந்திய மலையை மட்டம் தட்டினார்:- அகத்தியர் தென்னாட்டிற்கு வருவதற்கு முன், மக்கள் அனைவரும் கடலோரமாக நடந்தோ, படகுகளிலோ தென்னாட்டு நகரங்களுக்கு வந்து சென்றனர். காரணம் இல்வலன், வாதாபி போன்ற, நர மாமிசம் சாப்பிடும் பயங்கரக் காட்டுவாசிகளும் காட்டு மிருகங்களும் மக்களை அச்சுறுத்தி வந்தன. அகத்தியர் தவ வலிமை பெற்றதால் தைரியமாக 18 குடி மக்களை, துவாரகை நகரில் இருந்து, விந்திய மலையின் நடுவிலுள்ள அடர்ந்த காடுகள் வழியே அழைத்து வந்தார். அன்றுமுதல் இன்று வரை நாம் அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். இதையே “மண் உற அழுத்தலால்” என்று குறிப்பிடுகிறார். புராணங்கள் கத்தியர் விந்திய மலையின் கர்வத்தைப் பங்கம் செய்தார் என்று அழகாகக் கூறுகின்றன. “பழங்கால இந்தியாவின் புகழ்மிகு எஞ்சினீயர்கள்”– என்ற கட்டுரையில் இது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி விட்டேன்.
Agathiyar_hemanth thiru

இத்தகைய அரிய பெரிய செயல்களைச் செய்து இந்திய பூகோள புத்தகத்தில் அழியா இடம் பெற்ற அகத்தியனை, தமிழ்த் தலைவன் என்று கம்பன் அழைத்ததை எல்லோரும் ஏற்பர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ?

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

இனி தமிழ்த் தலைவன் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அரசியல்வாதிகள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்!!
529_Kambar
contact swami_48@yahoo.com

கண்டோம், கண்டோம், கடவுள் துகளைக் கண்டோம்!

peter-higgs-620x409

Peter Higgs at CERN

கண்டோம், கண்டோம், கடவுள் துகளைக் கண்டோம்!

By ச.நாகராஜன்

Post No 1172; Dated 15th July 2014.

பி.பி.சியின் பேட்டி

கடவுள் துகளை (God’s Particle OR Higgs Boson) முதலில் கண்ட பிரபல விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹிக்ஸை (Dr Peter Higgs) பிபிசி ரேடியோ இந்த ஆண்டு (2014) பிப்ரவரி 17ஆம் தேதி பேட்டி கண்டது.

நோபல் பரிசு பெற்ற ஹிக்ஸுக்கு வயது இப்போது 84. அவரை இரண்டு நிமிடங்களில் அதாவது 120 வினாடிகளில் (two minutes) கடவுள் துகளை விளக்க முடியுமா என்று பேட்டி கண்டவர் கேட்ட போது ‘களுக்’கென்று சிரித்த அவர் இரண்டே நிமிடங்களில் கடவுள் துகளை விளக்கினார். விளக்கி முடித்தவுடன் இதையே 30 வினாடிகளில் (Half minute) விளக்க முடியுமா என்று பேட்டியாளர் கேட்ட போது ‘முடியாது’ என்று உறுதியாகக் கூறி விட்டார்.

ஒரு பிரம்மாண்டமான விஷயத்தை 120 வினாடிகளில் அவர் விளக்கியதே ஆச்சரியம் தான்! அதை இன்னும் சுருக்கமாக எப்படி விளக்குவது?

கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, ‘கண்டவர் விண்டிலர்’, ‘விண்டவர் கண்டிலர்’ என்று சொல்வார்கள். ஆனால் கடவுள் துகளைக் கண்டு பிடித்தவரே அதை இரண்டு நிமிடங்களில் விண்டுரைத்து விட்டார்

god-particle

கடவுள் துகளுக்கு ஏன் அந்தப் பெயர்?
கடவுள் துகள் (God’s Particle) என்பது தான் என்ன? ஏன் அதற்கு அந்தப் பெயர்? ஒரு இரண்டு நிமிட விளக்கத்தைப் பார்ப்போம்! இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மனித குலம் வெகு காலமாகக் கேட்டு வரும் கேள்வி! ‘பிக் பேங்’ (Big Bang) என்னும் பெருவெடிப்பினால் பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கை ஒன்றை முன் வைத்தனர். பிரபஞ்சத்தின் ஸ்டாண்டர்ட் மாடல் ஒன்றையும் உருவாக்கினர். இந்த பிரபஞ்ச மாடல் 12 துகள்களையும் நான்கு விசைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒன்று.

6 க்வார்க்குகள், 6 லேப்டான்கள் ஆக பன்னிரெண்டு துகள்களும் மின்காந்த விசை எனப்படும் எலக்ட்ரோ மாக்னெடிக் விசை, ஸ்ட்ராங் நியூக்ளியர் விசை, வீக் இன்டர் ஆக் ஷன் விசை, புவி ஈர்ப்பு விசை ஆக நான்கு விசைகளும் பிரபஞ்ச மாடலில் உள்ளன.

பெரு வெடிப்பு உண்டானவுடன் அணுக்கள் சிதறின. அப்போது அணுக்களுக்கு நிறை இல்லை. அணுவில் நியூட்ரானுக்கு நிறை இல்லை, ஆனால் புரோட்டானுக்கு இருக்கிறது. புரோட்டானுக்கு மட்டும் ஏன் நிறை இருக்கிறது? இதற்குக் காரணமாக ஒரு ஆற்றல் இருக்க வேண்டும். இந்த ஆற்றலைப் பெற ஹிக்ஸ்போஸன் என்ற நிலையைக் கடந்தாக வேண்டும்.

ஒரு புதிய ஆற்றலைத் தரும் இந்தப் பதிமூன்றாவது துகளையே மர்மத் துகள் என்று விஞ்ஞானிகள் கூற ஆரம்பித்தனர். கடவுள் போல இருப்பது உண்மை என்றாலும் நிரூபிப்பது கஷ்டமாக இருப்பதால் இதை கடவுள் துகள் என்று சொல்வதும் தவறல்ல.

Nobel Physics

God’s Particle

இந்த கடவுள் துகள் என்ற சொற்றொடர் எப்படி வந்தது? லியான் லெடர்மேன் என்ற விஞ்ஞானி தான் முதன்முதலாக இந்தச் சொற்றொடரை உருவாக்கினார் இப்படி ஒரு துகள் உண்மையில் இருக்கிறதா, இல்லையா என்ற மர்மம் நீடித்து இருக்கவே எரிச்சலுடன் “GOD DAMN” என்று கூறி கடவுளுடன் நான்கு எழுத்து ஆங்கில ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தினார். திட்டியதோடு மட்டுமல்லாமல் தான் எழுதிய புத்தகத்திற்கும் இதே பெயரை வைத்தார். ஆனால் இதைக் கண்டு திடுக்கிட புத்தக வெளியீட்டாளர், கடவுளை நம்பும் பக்தர்கள் அனைவரின் மனமும் புண்படுமே என்று கூறி காட் பார்டிகிள் என்று தலைப்பை மாற்றினார். கடவுள் துகள் உருவானது.

செர்ன் ஆய்வுக்கூடம் (CERN Particle Physics Laboratory in Geneva, Switzerland)

பிரபஞ்சம் தோன்றி சுமார் 14 பில்லியன் அதாவது 1400 கோடி ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போது அந்த நிலையை யார் உருவாக்குவது, எங்கு உருவாக்குவது!

இதற்கு பதிலை செர்ன் லாபரட்டரியும் அங்குள்ள விஞ்ஞானிகளும் தந்தனர். செர்ன் ஆய்வுக் கூடம் பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து எல்லையை ஒட்டி உள்ள ஜெனிவா (Geneva) நகரில் உள்ள பிரம்மாண்டமான ஆய்வுக் கூடம். இங்கு 27 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விசேஷ குகை ஒன்றில் தான் புரோட்டானை புரோட்டானுடம் மோத விடும் அதிசய அபூர்வ சோதனைகள் நடந்து வருகின்றன. இங்குள்ள விசேஷ சாதனத்திற்கு லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (Large Hadron Collider) என்று பெயர். பல கோடி டாலர் செலவில் இங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவே இந்த கடவுள் துகள் சோதனையை கை கழுவி விட்டு நழுவிய நிலையில் செர்ன் (CERN) மும்முரமாக இதில் இறங்கி 2012 ஜூலை மாதம் தான் கண்ட வெற்றியை உலகுக்குப் பறை சாற்றியது.

இதனால் நாம் வாழும் உலகில் ஏற்படப்போகும் மாறுதல்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பிரம்மாண்டமானவையாக இருக்கப் போகின்றன. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் பலன் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் இன்றோ மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அல்லவா!

அது போல புவி ஈர்ப்பு விசை உள்ளிட்ட மர்மங்களுக்கு கடவுள் துகள் பதில் சொல்லும் அப்போது காலப் பயணம் உள்ளிட்ட பல அபூர்வங்களைச் சாதிக்க முடியும்.

Hadron Collider

Hadron Collider at CERN, Geneva, Swiss

அற்புத ஆற்றலைத் தரும் கடவுள் துகள்
கடவுள் துகளைக் கண்ட பிறகு தொடர்ந்த ஆராய்ச்சியில் இப்போதைய நிலை என்ன? பூமிக்கு ஒரு முடிவு உண்டு. அது பற்பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்படும் என்பதை கடவுள் துகள் சொல்கிறது.

அந்தப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே அது தரும் அற்புதமான ஆற்றல்களை பூமி வாழ் மக்கள் அனுபவித்து மகிழ்வர் என்பதும் மெய்யாகப் போகிறது.

சுவையான தகவல்கள் அடங்கிய கடவுள் துகளின் பெருமை கடவுளின் பெருமை போல சொல்லில் அடங்காதது சொல்லவும் முடியாதது. இதன் பெருமை நாளுக்கு நாள் கடவுளின் புகழ் போலவே வளரும் என்பது மட்டும் உறுதியாக அனைவரும் நம்புகின்ற ஒரு உண்மை!

((சென்னையிலிருந்து வெளிவரும் முதல் ஓசை நாளிதழில் 22-6-2014 அன்று வெளியான கட்டுரை))

Contact swami_48@yahoo.com

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

lakshmi_narayana2

Wriiten by S Nagarajan
Post No.1170; Dated 14th July 2014

This is the eleventh and last part of S Nagarajan’s article from his Tamil book “Honey Drops from the Puranas”. First ten parts were published in this blog:- swami.

சூரியனுடைய சஞ்சாரம்

முன்னோர்கள் வானியல் நிபுணர்கள் என்பதை நிரூபிக்கும் ஏராளமான கருத்துக்கள் புராணங்களில் உள்ளன.
சூரியனுடைய சஞ்சாரம் பற்றி மத்ஸ்ய புராணம் கூறுவது இது:
உத்தராயணத்தில் 18 முகூர்த்தத்தில் 13 நக்ஷத்திரங்களின் இடையே சூரியன் சஞ்சரிக்கிறான். தக்ஷிணாயனத்தில் 12 முகூர்த்தத்தில் 13 ½ நக்ஷத்திர மண்டலங்களில் சூரியன் சஞ்சரிக்கிறான்
– மத்ஸ்ய புராணம்

மாசி, பங்குனி, சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் சூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிக்கிறான்.

ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை,மார்கழி, தை ஆகிய மாதங்களில் சூரியன் தக்ஷிணானயத்தில் சஞ்சரிக்கிறான்.
– வாயு புராணம்

பவித்ர நதிகள்
கங்கை, யமுனை, கோமதி, சரயு, சரஸ்வதி, சந்த்ரபாகா,சர்மண்யவதி ஆகிய நதிகள் பவித்ரமான புண்ய நதிகளாகும்
– நரசிம்ஹ புராணம்

surya-namaskar2

தேவர்களை சந்தோஷம் அடையச் செய்பவை!
1)கார்த்தவீர்ய தீப தானம் 2) சூர்ய நமஸ்காரம் 3) விஷ்ணு ஸ்துதி 4) கணேச தர்பன் 5) துர்கா அர்ச்சனா 6) சிவ அபிஷேகம் ஆகிய இந்த ஆறினாலும் தேவர்கள் சந்தோஷம் அடைகின்றனர்.
-நாரதீய புராணம்

ப்ரளயம் நான்கு வகைப்படும்
1) நித்யம் 2)நைமித்திகம் 3) ப்ராக்ருதம் 4) ஆத்யந்திகம் என இவ்வாறு பிரளயம் நான்கு வகைப்படும்.
-கூர்ம புராணம், அக்னி புராணம், சூர்ய புராணம்

துர்கா ஸப்த சதி!
துர்கா ஸப்த சதி மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது.
துர்கா ஸப்த சதியில் 13 அத்தியாயங்களே உள்ளன.
முதல் அத்தியாயத்திலிருந்து 13 அத்தியாயம் முடிய ஒவ்வொரு அத்தியாயத்திலும் முறையே 104,69,44,42,129,24,27,63,41,32,55,41,29 ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றை மொத்தம் கூட்டினால் வருவது 700 ஆகும். (ஸப்த சதி என்றால் எழுநூறு என்று பொருள்)
துர்கா ஸப்த சதியின் ப்ரவக்த ரிஷி சுமேதா.
– மரீசி கல்பம்

narayan

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

முன்னொரு காலத்தில் ஜல பிரளயம் ஏற்பட்டது. அந்த பிரளய வெள்ளத்தில் உலகமெல்லாம் முழுகிப் போயிற்று. சராசரங்களெல்லாம் ஒழிந்து போயின. ஜலத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரம தேவர் ஆயிரம் கண்களும் ஆயிரம் கால்களும் கொண்டு மஹாவிஷ்ணு ரூபம் கொண்டார். மூன்று கண்களை உடைய சிவ பெருமானுடைய திருவடிகளைத் தியானம் செய்து கொண்டு அந்தப் பிரளயத்தில் அவர் படுத்துக் கொண்டிருந்தார். நரன் என்று பெயர் கொண்ட சிவ பெருமானால் உண்டாக்கப்பட்டபடியால் ஜலத்துக்கு நாரம் என்று பெயர் உண்டாயிற்று. அந்த ஜலத்தில் பள்ளி கொண்டிருந்தபடியால் அந்த பிரம்மாவுக்கு நாராயணன் என்று பெயர் உண்டாயிற்று.

அப்போது சிவ பெருமான் அந்தப் பிரமனுக்கு தகுந்த பலத்தைக் கொடுத்து பாதாளத்தில் அழுந்தி இருந்த பூமியை ‘எடுத்து நிறுத்து என்று கட்டளை இட்டார். அந்த நாராயணன் உடனே ஆகாயமளாவும்படியான ஒரு பெரிய வராக ரூபம் கொண்டான். பின்னர் பாதாளம் போய் அங்குள்ள பூமியைக் கொம்பினால் ஏந்திக் கொண்டான். அதைப் பார்த்துத் தேவர்கள் எல்லோரும், “உலகங்களையெல்லாம் உள்ளங்காலுக்குள் அடக்குவாய். ஒரு கவளம் சோறு போல் உண்டு விடுவாய். இது உனக்குப் பெரிதாகுமா, என்ன!” என்று புகழ்ந்து கொண்டாடி, ‘இத்தகைய மஹிமையை உடைய உமக்கு நமஸ்காரம் பண்ணுகிறோம்’ என்று துதித்தார்கள்
திருமால் பூமியை முன் போல நிலை நிறுத்தி மறுபடியும் முன் போலப் பிரம்மாவாய் விட்டார்.

ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை, சிவமான்மிய காண்டம், எட்டாவது அத்தியாயம்


Bathing.

தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?

1.சத்யம் – உண்மை
2.மன: – மனம்
3.இந்த்ரிய நிக்ரஹ – இந்திரியங்களை அடக்குதல்
4.தயா – தயை (அல்லது இரக்கம்)
5.ஜலம் – நீர்
ஆகிய இந்த ஐந்தால் தூய்மை ஏற்படும்.

சத்யசௌசம் மன: சௌசம் சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: I
சர்வபூதே தயா சௌசம் ஜலசௌசம் ச பஞ்சமம் II

சத்யசௌசம் –வாய்மையால் தூய்மை
மன: சௌசம் மனத்தால் தூய்மை
சௌசமிந்த்ரியாணிநிக்ரஹ: -இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால் தூய்மை
சர்வபூதே தயா சௌசம் – அனைத்து உயிர்களிடமும் தயையுடன் இருப்பதால் தூய்மை
ஜலசௌசம் – நீரினால் தூய்மை
ச பஞ்சமம் –ஆகிய இந்த ஐந்தும் தூய்மை (தரும்)
-கருட புராணம் 113- 37

நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!

ஸ்ருத – அறிவு
சீலம் – ஒழுக்கம்
குலம் – குலம்
கர்மம் – செய்கை
ஆகிய நான்கையும் வைத்து ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை எடை போடுங்கள்!

த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா,

த தா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே – நான்கை வைத்து மனிதனை பரிட்சை செய்தல் வேண்டும்.
ஸ்ருதேன ஷீலேன குலேன கர்மணா – அறிவு, ஒழுக்கம், குலம், செய்கை (ஆகியவற்றின் மூலம் நிர்ணயித்து விடலாம்).
கருட புராணம், 112-3

Surya-Namaskar-Tamilnadu-Madurai-5
Surya Namaskar

மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!

கீழே ஏழு உலகங்கள் உள்ளன.
1)அதல 2) விதல 3) நிதல 4) ரஸாதல 5) தலாதல 6) சுதல 7) பாதாள முதலிய ஏழு லோகங்கள் கீழே உள்ளன.,
-ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம்,
ப்ரம்மவைவர்த புராணம், நாரதீய புராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்ரீமத் பாகவதம்.

மேலே ஏழு உலகங்கள் உள்ளன. 1) பூலோகம் 2) புவ லோகம் 3) ஸ்வ லோகம் 4) மஹ லோகம் 5) ஜனக லோகம் 6) தப லோகம் 7) சத்ய லோகம்

ஸ்கந்த புராணம், ப்ரம்மவைவர்த புராணம்,
நாரதீய புராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்ரீமத்
பாகவதம், விஷ்ணு சம்ஹிதா, சாம்ப
புராணம், ஆருணிகோபநிஷத்

முற்றும்

பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

bhishma-pitamah
Bhisma on Bed of Arrows.

Wriiten by S Nagarajan
Post No.1169; Dated 13th July 2014

This is the nineth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First nine parts were published in this blog:- swami.

காலமே ஈஸ்வரனுக்குச் சமம்!

காலத்தை ஒழிய சிருஷ்டி முதலியவை எவையும் சம்பவிக்க மாட்டா. ஆகையால் அந்தக் காலம் ஈஸ்வரனைப் போல் எல்லாத் திறமைகளும் அமைந்திருக்குமாகையாலும் அந்த ஈஸ்வரனுக்கு உடலாகி அவனுக்கு உட்பட்டிருக்குமாகையாலும் அதை ஈஸ்வரன் என்றே சொல்லலாம்..அக்காலம் என்னும் பொருள் நேரடியாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையது. காரியங்களைப் பற்றியே அதை ஊகிக்க வேண்டும். அத்தகைய காலத்திற்கு அவ்யக்தமான அந்த பிரகிருதியும் உட்பட்டே இருந்தது. ஆகையால் ப்ரளயத்திலும் காலம் உதவியாகவே இருந்தது. சிருஷ்டியிலும், சம்ஹாரத்திலும் காலம் தொடர்ந்து வருவதே.

விதுரருக்கு மைத்ரேயர் விளக்குவது
-ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம், பத்தாம் அத்தியாயம்

யார் யாரை வதம் செய்தனர் – 2

(புராணத் துளிகள் முதல்பாகத்தில் 30வது பொருளாக அமைந்த முதல் பகுதியைத் தொடர்ந்து வரும் பட்டியல் இது)

1) கார்த்திகேயன் தான் பிறந்த ஆறாம் நாளன்றே தாராகாசுரனை வதம் செய்தார்
– சிவ புராணம், விஷ்வகர்மா புராணம்
2) கிருஷ்ணர் கம்ஸனையும், பூதனையையும் வதம் செய்தார்
– ஸ்ரீமத் பாகவதம்
3) சால்வ தேசத்து அரசன் ப்ரஹ்மதத்தனை ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம்
4) ஸ்ரீகிருஷ்ணர் பால்ய காலத்திலேயே பகாசுரன் மற்றும் காகாசுரன் ஆகியோரை வதம் செய்தார்.
– ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம வைவர்த புராணம்,
கோவிந்தலீலாம்ருதம்
5) கணேசர் (பிள்ளையார்) லோபாசுரனை வதம் செய்தார்.
– முத்கல புராணம்

bhisma-arrows-bed

பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

அற்புதமான கீழ்க்கண்ட துதியைச் செய்து பீஷ்மர் சுவாசம் அடங்கப் பெற்றார்:-

யாதவர்களில் சிறந்தவனும், பாகவதர்களுக்கு நாதனும், சேதனாசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு, எல்லையில்லாத மஹிமை உடையவனும் அளவிறந்த ஸ்வபாவ சித்தமான ஆனந்தமுடையவனும், ஓரிடத்தில் விளையாடுவதற்காக வடிவம் கொண்டவனும், தன் ஸங்கல்பத்தினால் சேதனர்களுக்கு சம்சார ப்ரவாஹத்தை விளைவிப்பவனுமாகிய கிருஷ்ண பகவானிடத்தில் என் புத்தி மற்றொன்றிலும் விருப்பமின்றி நிலை நின்றிருக்குமாக!

மூன்று லோகங்களும் காண ஆசைப்படத் தகுந்ததும் பச்சிலை நிறமுடையதும், சூரிய கிரணம் போல பொன் நிறம் அமைந்த மேலான பீதாம்பரம் உடுத்தி இருப்பதும், முன் நெற்றி மயிர்களின் வரிசைகளால் மறைந்து அழகான தாமரை மலர் போன்ற முகமுடையதுமான உருவம் தரித்தவனும், அர்ஜுனனுக்கு நண்பனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் எனக்குப் பரிசுத்தமான – ப்ரயோஜனங்கள் ஒன்றையும் விரும்பாத – ப்ரீதி உண்டாகுமாக!

யுத்தத்தில் குதிரைகளின் குளப்படிகளால் கிளம்பின தூசுகள் படிந்து அழுக்கடைந்து நாற்புறமும் தொங்குகின்ற முன் நெற்றி மயிர்களாலும், பெருகி வழிகின்ற வேர்வை ஜலங்களாலும் அலங்காரமுற்ற முகம் உடையவனும், நான் பிரயோகித்த கூரான பாணங்களால் பிளவுண்ட தோலுடையவனும் ரத்தத்தினால் விளங்கும் கவசம் அமைந்தவனுமாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் என் மனம் அங்குமிங்கும் பெயராமல் நிலையுற்றிருக்குமாக!

யுத்தம் தொடங்குகின்ற அந்தக் கணத்தில் நண்பனான அர்ஜுனன் மொழிந்த சொற்களைக் கேட்டு தன்னுடையவரான பாண்டவர்களுடையதும் எதிரிகளான கௌரவர்களுடையதுமான இரண்டு சைன்யங்களுக்கு இடையில் ரதத்தை நிறுத்தி, நின்று, கண் பார்வையினாலேயே எதிரி சைன்யத்தில் இருந்தவர்களுடைய ஆயுளைப் பறித்தவனும் அர்ஜுனனுக்கு நண்பனுமான ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில் எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!

கொஞ்ச தூரத்தில் மறைந்திருக்கும் சைன்யத்தின் முன்பாகத்தைக் கண்டு அங்கிருப்பவர் உறவினர்களாயிருப்பதை அறிந்து உறவினர்களைக் கொல்வது தோஷமென்னும் புத்தியால் அதினின்று முகம் மாற வைத்த அர்ஜுனனுடைய குத்ஸித புத்தியைக் கண்டு ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கின்ற கீதையாகிற உபநிஷத்தை எவன் உபதேசித்து அந்த துர்புத்தியைப் போக்கினானோ அப்படிப்பட்ட ஸர்வாதிகனான எல்லோரிலும் சிறந்த பகவானுடைய சரணாரவிந்தங்களில் எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!

நிரபராதியைக் கொல்லும் தன்மையுள்ள என்னுடைய பாணங்களால் அடியுண்டு கவசம் முறிந்து ரத்தத்தினால் உடம்பு முழுவதும் நிறைந்தவனாகி, ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’ என்ற தன் பிரதிக்ஞையை துறந்து ‘ஆயுதம் எடுக்கச் செய்கிறேன்’ என்ற என் பிரதிக்ஞையை சத்யம் செய்வதற்காக, ரதத் தலிருந்தவன் அதிலிருந்து கிளம்பிக் குதித்து சுதர்ஸன சக்கரத்தை ஏந்திக் கொண்டு, யானையை வதம் செய்யும் பொருட்டு கிளம்பிப் பாயும் சிங்கம் போல, பலாத்காரமாக என்னை வதிக்கும் பொருட்டு பூமி நடுங்கும்படி எவன் என்னை எதிர்த்து வந்தானோ, அந்த முகுந்தனே -ஸ்ரீ கிருஷ்ண பகவானே- எனக்குக் கதி ஆவானாக!

kamsa killed
Kamsa killed by Sri Krishna.

அர்ஜுனனுடைய ரதமே குடும்பமாகப் பெற்றவனும் உழவுகோலையும் குதிரைகளின் கயிறுகளையும் பிடித்துக் கொண்டு அந்த சோபையினால் ஆயிரம் கண்கள் கொண்டு காணும்படி மிகவும் அழகானவனுமாகிய பகவானிடத்தில், மரணம் அடைய முயன்றிருக்கிற எனக்கு ப்ரீதி உண்டாகுமாக!

த்வந்த்வ யுத்தத்தில் மாண்டவர் அனைவரும் எவனைப் பார்த்த மாத்திரத்தில் தமக்கு ஸ்வபாவ சித்தமான பாபமிற்றிருக்கை முதலிய குணங்கள் தோற்றப் பெறுகையாகிற மோக்ஷத்தை அடைந்தார்களோ, அப்படிப்பட்ட பகவானிடத்தில் எனக்குப் ப்ரீதி உண்டாகுமாக்
!

அழகிய நடையாலும், விலாஸத்தினாலும், அழகான புன்னகையாலும் அன்பு பெருகி வழிகின்ற கண்ணோக்கத்தினாலும் மிகுந்த வெகுமதி செய்யப்பெற்ற இடைப் பெண்கள் காமம் தலைக் கொண்டு விவேகமற்று ஸ்ரீ கிருஷ்ணனை சாதாரணமாக நினைத்து அவன் செய்த பூதனா சம்ஹாரம் முதலிய சேஷ்டைகளை அனுபவித்தவர்களாகி எவனுடன் ஒற்றுமை அடைந்தார்களோ, அப்படிப்பட்ட பகவானிடத்தில் எனக்குப் ப்ரீதி உண்டாகுமாக!

kesi asuran
Krishna killing Kesi Asua

யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்தில் முனிவர் கூட்டங்களும், ராஜ ச்ரேஷ்டர்களும் நிறைந்த சபையின் மத்தியில் எவன் இந்த யுதிஷ்டிரன் முதலியோர் நடத்தினதும் முனிகணங்கள் அனுமதித்தது மான அக்ர பூஜையைப் பெற்றானோ அப்படிப்பட்டவனும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிகவும் அழகியவனும் எனக்கு அந்தராத்மாவுமான இந்த ஸ்ரீ கிருஷ்ணன் நான் சரீரத்தை விடும் வரையில் என் கண்களுக்குப் புலப்பட்டுக் கொண்டு என் முன்னே இருப்பானாக!

அங்ஙனம் கீழ்ச் சொன்ன இயற்கையுடையவனும் தான் அவரவர் செய்த புண்ய பாப ரூப கர்மங்களுக்குத் தகுந்தபடி சிருஷ்டித்த பிராணிகளின் இதயந்தோறும், சூர்யன் தான் ஒருவனே ஆயினும், கண்ணுக்குப் புலப்படுகிற ஜலம் முதலிய வஸ்துக்களில் வெவ்வேறாகத் தோன்றுவது போல, இயற்கையில் தான் ஒரே தகையனாயினும் பலவாறு தோற்றுகின்றவனுமாகிய பரம புருஷனைப் பெற்றேன்.

இப்படி இறுதியாக பிரார்த்தனை செய்த பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடத்தில் மனம் வாய், கண் ஆகிய இவற்றின் வியாபாரங்களுடன் ஆத்மாவைப் புகச் செய்து சுவாசம் அடங்கப் பெற்றார்,

-ஸ்ரீமத் பாகவதம், முதல் ஸ்கந்தம் , ஒன்பதாம் அத்தியாயம்

To be continued…………………………….

Contact swami_48@yahoo.com

Five Ascetics who Entered Fire: Vedavati, Sabhari, Sarabhanga,Kabila, Quetzalcoatl

sabari ram
Tribal Woman Saint Sabhari and Rama.

Five Ascetics who Entered Fire: Vedavati, Sabhari, Sarabhanga,Kabila, Quetzalcoatl

Research Article Written by London Swaminathan
Post No. 1168; Dated 12th July 2014.

Hindu epic Ramayana is unique in many ways. One of the unique things about the Ramyana is “self immolation”. It is very interesting to know that women ascetics existed in the days of Ramayana and they did enter the fire and sacrificed their lives when they thought that the date of their departure had come. This is one the boldest things, we can see only in the Hindu world. Here we see a continuity of Upanishadic age sages like Gargi and Maitreyi. They did not feel any body pain when they entered the fire due to their Yogic practice.

Sita did not fear to enter fire to prove her purity. Kumarila Bhatta, contemporary of Adi Shankara, did not hesitate to burn his body slowly in the middle of husk lighted on all four sides. Tamil poet Kabila did enter fire after fulfilling his noble mission. Aztec saint Quetzalcoatl (may be a Hindu saint) did sacrifice his life in fire.

Goddess Uma did penance by standing in the middle of Five Fires (Panchagni). Many a saints including Bhageeratha did Panchagni penance. Bharata and Angatha tried to enter the fire thinking that they lost their in their mission. This is a Hindu ritual. When one completes something noble, one enters fire. When one failed to achieve to fulfil something, they enter the fire ritually.

There is a big difference between suicide and this ritual sacrifice. Here they enter the fire after announcing to the whole wide world that on such and such day they would do it for a particular noble cause. It is not because of depression or agitated mind. There is another type known as Sati, where in the women who lost their husbands climb the funeral pyre. There is another type of sacrifice where women like Chitoor Rani Padmini along with her friends entered the fire to save their modesty.
Here is a short list of great ascetics who immolated themselves:
sita
Sita Devi in Agni Pareeksha.

Sharabhanga :

Rama, after slaying the demon Viradha, visited the hermitage of Sharabhanga. He told Rama that he rejected Indra’s invitation to visit Brahmaloka, knowing that Rama was visiting the place. He also directed Rama to Sutikshna’s dwelling. He requested Rama to stay with him till he casts off his body as a snake casts off its slough. Then Sharabhanga prepared a fire and poured clarified butter therein. The sage entered the flames and assumed a youthful form and ascended to Brahma’s abode (Source: Aranya Kanda, Chapter 5)

Sabhari:

She was waiting to see Rama. When Rama went to her in the middle of the forest; she gave him berry fruits and roots which were bitten by her. She did this to give the sweetest ones to Rama. Since Rama knew her motherly love, he did not reject it. She belonged to the caste of hunters. That tribal woman guided Rama and Lakshmana to lake Pampa an Rishyamuka mountain.
“Having received permission from Rama to depart, Sabhari, wearing matted locks, robes of bark and a black antelope skin, cast herself into the fire, thereafter rising into the air like a bright flame. (Chapter 74, Aranya Kanda).
ram sabari
Rama and Sabhari

Vedavati:

Vedavati was the daughter of Rishi Kusadhwaja. When Ravana was passing through the forests in the Himalaya he met Vedavati, a damsel of great beauty dressed in acetic garb. When Ravana wanted to marry her she told him that she would marry only Vishnu. But Ravana boasted to her about his heroic deeds and touched her hair with a bad intention. Enraged by this, she cursed him that he would be destroyed by her in her next birth (as Sita) and entered fire before him. When she entered the fire celestial flowers fell around her (Uttara Kanda, Ramayana)

Tamil Poet Kabilar:

Kabilar, a Brahmin poet of great character, who lived in the Sangam Age ( First three centuries CE) was a good friend of a generous chieftain Pari. When the mighty Tamil kingdoms laid a siege around his kingdom Kabilar boldly supported Pari. The three Tamil kings of Sera, Choaza, Pandya kingdoms killed him by deceit. Then Kabilar took his two daughters to all the chieftains begging them to marry them. No one dared to earn the enmity of the powerful Tamil kings. At last, one chieftain took care of those girls and Kabilar, having fulfilled his mission, entered the fire. There was a memorial stone in the place known as Kabilar Stone near Tirukoyilur on the banks of River Pennai. There is an inscription with this story in verse (Source Dr R Nagasamy’s Tamil book ‘Paamaalai’).

Bharatha, Rama’s brother, was desperate to see Rama after his 14 year banishment. When he did not arrive on the appointed day Bharat was about to jump in to ceremonial fire. But Rama arrived by his divine Supersonic jet from Sri Lanka and saved his life. When Angathan and other monkeys could not find Sita in their search mission, they contemplated sacrificing themselves in fire. This is a typical Hindu approach.

Quetzalcoatl_magliabechiano
Aztec Deity
Aztec Saint’s Self Immolation

Aztec civilization (750 CE to 1500 CE) in South and Central America had a mysterious person with the name Quetzalcoatl. There were two people with the same name which resulted in lot of confusion. He was a demiurge, priest, ruler conceived by virginal birth years after his father’s death. He was ruler of Toltecs for twenty two years. He lived in Tula, lost a civil war, fled with a good sized Toltec force. He set sail into the open sea on a particular date Aztec calendar with a prophecy that he would come back on the recurrence of that date.

Centuries after this date, Spanish man Herman Cortes landed on the coast of Mexico on 4th March 1519. Aztec king Montezuma believed that god and saint Quetzalcoatl had come back in the form of a white man. He was given royal welcome. But Cortes, Columbus and his band of explorers brought disease, death and destruction to the wonderful Mayan, Aztec and Inca civilizations. They plundered the whole of South America and took tons of gold to Spain and Portugal.

Quetzalcoatl_Ehecatl
Quetzalcoatl means ‘feathered serpent’ or ‘precious twin’. He is one of the most important Aztec deities, although he has origins in pre Aztec cultures. There was a historical king in the same name that was expelled from Tula, the Toltec capital in 987 CE. According to one version he reached the Gulf of Mexico and immolated himself, to be reborn as the planet Venus. He predicted that he would come back. He may be a Hindu saint who practised such rituals in ancient India.

sita2
Sita Devi in Fire Test.

Contact swami_48@yahoo.com

பலன் தரும் யந்திரங்கள்!

ganesha400

Wriiten by S Nagarajan
Post No.1167; Dated 12th July 2014

This is the nineth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First eight parts were published in this blog:- swami.

நாரத புராணம் பல யந்திரங்களை விவரிக்கிறது. அவற்றில் சில:
த்ரைலோக்ய மோஹன யந்த்ரம் – இதை முறையாக வழிபட்டால் ஒருவன் நினைத்ததெல்லாம் கை கூடும்.

நாரசிம்ஹ யந்த்ரம் – வெற்றி, செல்வாக்கு, பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும்.

சர்வ வசங்கர யந்த்ரம் – அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

காலாந்தக யந்த்ரம் – சாவை முறியடிக்கும் யந்த்ரம்

ஒரு யந்த்ரம் குறிப்பிட்ட ஜியாமெட்ரி வடிவமைப்புடையது. அதை சொல்லப்பட்ட உரிய முறைப்படி கல்லிலோ அல்லது உரிய உலோகத்திலோ அல்லது ஒரு பேப்பரில் வர்ணத்தினாலோ அமைத்து அதற்குள் உரிய மந்திர பீஜங்களை எழுத வேண்டும். பிறகு அந்த தேவதையை ஒரு மண்டலம் வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்று புராணம் தெரிவிக்கிறது.

யந்திரம் அமைக்கும் முறை அதை வழிபடும் முறை ஆகியவற்றை அதில் சித்தி பெற்ற குரு முகமாக மட்டுமே பெற வேண்டும்.

Jainism-Ahimsa-Hand-icon
Symbol of Jainism which propagated Ahimsa.

அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்

அஹிம்சா பரமோ தர்ம: என்பதை பத்ம புராணம் அறிவிக்கிறது. மஹாத்மா காந்தி அடிகளின் வாழ்க்கையின் உயிர் மூச்சாக அஹிம்சா தத்துவம் இழைந்தோடியது.
அஹிம்சையின் உயர்வைத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:-

அஹிம்சா பரமோதர்மோஹ்யஹிம்சவைவ பரம் தப: I
அஹிம்சா பரம்ம் தானமித்யாஹுர்முனஸ்ய: சதா II

அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம். என்று முனிவர்கள் எப்போதும் சொல்லி வருகின்றனர்.
– பத்ம புராணம் , ஸ்வர்க்க காண்டம், 31ஆம் அத்தியாயம் 26ஆம் ஸ்லோகம்

saptarishis (1)

சப்த ரிஷிகள் யார் யார்?

கஸ்யபர், அத்ரி.வசிஷ்டர். விஸ்வாமித்திரர்,கௌதமர். ஜமதக்னி,பரத்வாஜர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.

– ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம்,வாமன புராணம், கூர்ம புராணம்
மரீசி, அங்கீரஸர், அத்ரி, புலஸ்த்யர், புலகர், க்ரது, வசிஷ்டர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
– வாயு புராணம், அக்னி புராணம்

மரீசி ஆகிய ஏழு ரிஷிகளும் பிரம்மாவின் புத்திரர்கள் என சிவ புராணம் கூறுகிறது.

சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

சப்த ரிஷிகளின் பெயர்கள் மாறி மாறி கூறப்படுகிறதே என்று பலரும் சந்தேகம் கொள்வர். ஆனால் ஒவ்வொரு கல்பத்திலும் சப்தரிஷிகள் மாறுவர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த சந்தேகம் எழாது.

saptarishis

சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?

தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல் அத்தியயனம் செய்வித்தல், வேதார்த்த பக்தி, வேதத்துக்கு விரோதமான நூல்களை விலக்குதல், சாந்தி, தாந்தி முதலியவை ஞானாங்கமாகும் என்று கற்றோர் சொல்வார்கள்.

ஞானங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்க பூஜை செய்தல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தல்,சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல், சிவனடியார்களைப் பூஜித்தல், விபூதி, ருத்ராக்ஷம் தரித்தல், ஞானாசிரியன் சேவடி தரிசனம் செய்தல், பஞ்சாட்சரம் உள்ளிட்ட மந்திரங்களை ஜபித்தல் இவைகள் மேலானவை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

சிவத் தலங்கள் பலவற்றுள்ளும் காசி, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவை விசேஷமாகும்
ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை,யக்ஞ வைபவ காண்டம், எட்டாவது அத்தியாயம்

sankara narayana

சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!

சிவ பெருமானை லக்ஷ்மி துதி செய்தவுடன் மனம் மகிழ்ந்து சிவபிரான் லக்ஷ்மியை நோக்கிக் கூறுவது:-

“ஓ! கமலாக்ஷீ! நீ சொல்லி வந்த நியாயப்படி எனக்கும் விஷ்ணுவுக்கும் அபேதம் என்பது சத்தியமே! இந்த நியாயம் உனக்கு எப்படித் தெரிய வந்தது? யான் எல்லாமாய் இருக்கும் தன்மையாகிய ஏகத்வத்தைத் தேவர்களும், முனிவர்களும், வேதாந்தம் உணர்ந்த ஞானிகளும் குதர்க்கத்தால் அறியாமல் பேத புத்தி உடையவர்களாகி துவேஷிக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் இருக்க, உலகில் எனக்கு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் விஷ்ணுவைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும், விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் என்னைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் தேவியின் மாயையினால் அவர்கள் கவரப்பட்டிருக்கும் தன்மையே ஆகும்.

ஏனெனில் பக்தர்கள் என்று சொல்லப்பட்ட இவர்கள் ஸ்தூல உருவங்களைக் கண்டு பக்தி செய்ய வந்தார்களேயன்றி சொரூப உண்மையை அறிந்து பக்தி செய்ய வந்தவர்கள் அல்லர். சொரூப உண்மையை அறியப் புகுவாராயின் துவேஷம் உடையவர் ஆகார். ஸ்தூல உருவம் பல வேற்றுமை உள்ளது. சொரூபம் வேற்றுமையாகாது ஒரே தன்மையாக உள்ளது. ஆகவே ஒரு தன்மையாய் இருக்கும் சொரூப உண்மையை விட்டு விட்டுப் பல தன்மையாய் இருக்கும் வடிவத்தைப் பற்றினாராதலின் கண்ட ஞானமுடையவராகி பேதவாதத்துக்கு உள்ளாகின்றனர். என்னுடைய வேற்றுமை இல்லாத ஏகத்வத்தை அறிவதென்றால் அகண்ட ஞானமும் புண்ணிய விசேஷமும் பெற்றவராக இருப்பின் அறிவர். அவர்களிட்த்தில் தேவியின் மாயா விலாசம் போய் ஞான விலாசம் உண்டாகும். இது யாவர்க்கும் கிடைத்தல் அரிது. கஷ்டப்பட்டு அறிதல் வேண்டும்.

Brit Museum

இவ்வாறு லக்ஷ்மி தேவியிடம் சிவ பிரான் அருளுவதை தேவி பாகவதம் ஆறாம் ஸ்கந்தம் 18 ஆம் அத்தியாயம் விளக்குகிறது.

To be continued………………………………………………

Contact swami_48@yahoo.com

தூக்கம் வராத நான்கு பேர் யார்?

sleepless

Wriiten by S Nagarajan
Post No.1165; Dated 11th July 2014

This is the eighth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First seven parts were published in this blog.

சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

ஜனக மஹராஜனை சுகர் அவனது அரண்மனைக்கு வந்து சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஜனக ராஜன் கூறியது:-

சுகரே! இந்திரியங்கள் வலுப் பெற்றிருக்கும் காலத்தில், அதை அடக்குவது ஒருவராலும் முடியாது.அது அசாத்தியம். இந்திரியங்கள் பரிபாகம் இல்லாதவனைத் தாம் செல்லும் வழியில் எல்லாம் ஈர்த்து ஆசையை எழுப்பி, அறிவை ஆகர்ஷித்துக் கொண்டு பல விதமாகக் கெடுத்து விடுகின்றன. எப்படி என்றால், ஆகாரத்தின் மீதுள்ள ஆசையினாலும் சுகத்தின் மீதுள்ள இச்சையினாலும், சயனத்தின் மீதுள்ள ஆசையினாலும் எண்ணம் உண்டாக்கிக் கெடுக்கின்றன. ஆகையால் இந்திரியங்களை வைத்துக் கொண்டு சந்யாசியாக சென்றால் பயன் என்ன?

பிராரப்த வாசனா பலத்தை ஜெயிப்பது என்பது பெரும் கஷ்டம். அது ஒருபொழுதும் சமனம் அடைகிறதில்லை.ஆதலால் வரிசையாக ஒவ்வொரு ஆசிரமத்திலும் ஈடுபட்டு அவைகளைப் பற்று அறத் துறக்க வேண்டும்.

சுகரே! உன்னதமான பிரதேசத்தில் தூங்குபவன் கொஞ்சம் சலிப்பை அடைவானாயின் கீழே வீழ்ந்தே தீருவன். கீழே தூங்குபவன் எவ்வளவு சலித்தாலும் விழ மாட்டான். அது போல சந்நியாச ஆசிரமத்தை அடைந்த பின் சபல புத்தி உண்டாகுமானால் அதிலிருந்து நழுவி விடுவான். மீண்டும் அவன் ஈடேற வழியில்லை.

சுகரே! எறும்புகள், பழமுள்ள ஒரு மரத்தில் அண்டி மெல்ல ஊர்ந்து உச்சியில் ஏறி சுவையுள்ள கனிகளைச் சிறிது சிறிதாகச் சாப்பிடுகின்றன. பறவைகளோ அக்கனிகளைச் சாப்பிடுவதற்கு வேகமாய் ஒரே பாய்ச்சலில் கனிக்குச் சமீபத்தில் சென்றும் கூட அங்கு நேரிடும் சில இடையூறுகளினால் மொத்துண்டு சிரமப்பட்டும் பயனற்றுப் போகின்றன. எறும்புகளோ அப்படியன்று. அங்கங்கு சிரமத்தைப் பரிகாரம் செய்து கொண்டும் யாதொரு இடையூறில்லாமலும் அந்தப் பழங்களை அனுபவிக்கின்றன.

ஆதலால் எவருக்கும் மனத்தை வெல்ல முடியாது. ஏனென்றால் மனத்தைக் காலம் விடாது. ஆதலால் அந்த மனத்தை ஆசிரமம் தோறும் சிறிது சிறிதாக அடக்கி வர வேண்டும். சாந்தனாயும், ஞானவானாயும், ஆத்ம விசாரமுடையவனாய் உள்ள புருஷன் கிருஹஸ்த ஆசிரமத்தில் இருப்பவனாயிருந்தபோதிலும் இலாபத்தில் சந்தோஷமும் நஷ்டத்தில் துக்கமும் அடைய மாட்டான்.இவ்விரண்டிலும் சமபுத்தியை உடையவனாக இருப்பான்.

ஆதலால் எவனாயினும் வேதத்தில் விதித்த கர்மங்களைச் செய்து அதன் பலனை விரும்பாமல் ஈசுவர அர்ப்பணம் செய்கின்றானோ அவன் ஆத்மானுபவத்தை அடைந்து ஆனந்தமூர்த்தியாய் சம்சார பந்தத்த்திலிருந்து விடுபடுவான். இதில் சந்தேகமில்லை.

என்னைப் பாரும், யான் ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டு, யதேச்சையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றிலும் சுகம் துக்கம் என்பது சிறிதுமில்லை. அப்படி பற்றற்று இருக்கின்றமையால் ஜீவன் முக்தனாய் இருக்கிறேன்.

– தேவி பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 18ஆம் அத்தியாயம் – சுக ஜனக சம்வாதம்
பல ரகசியங்களை விளக்கும் அற்புதமான இந்த உரையாடல் தொடர்கிறது.

Exif_JPEG_PICTURE
Trimurti at Ellora Caves

மும்மூர்த்திகளும் ஒருவரே!

ஏக மூர்த்திஸ்த்ரயோ தேவா: ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வர: I
த்ரயாணாமந்தரம் நாஸ்தி, குணாபேத:ப்ரகீர்தித: II

ப்ரம்மா, விஷ்ணு,,சிவன் – ஆகிய இந்த மூன்று தேவர்களும் ஒருவரே. இந்த மும்மூர்த்திகளின் ஸ்வரூபத்தில் ஒரு விதமான பேதமும் இல்லை. குணங்களில் மட்டுமே பேதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-பத்ம புராணம், பூமி கண்டம், அத்யாயம் 71

மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

சில விஷயங்களில் நிதானம் தேவை. மெதுவாகச் செய்ய வேண்டிய காரியங்களை ‘சனை: கர்தவ்யானி’ (மெதுவாகச் செய்யவேண்டியவை) என்று குறிப்பிடுவர். கருட புராணம் தரும் அறிவுரை இது:

வித்யா – கல்வி கற்பது
அர்த்தா – செல்வம் சேகரிப்பது
பர்வதாரோஹணா – பர்வதம் அதாவது மலையில் ஏறுவது
தர்மா – தர்மம்
காமம் – காமம்
ஆக இந்து ஐந்து விஷயங்களிலும் அவசரம் கூடாது
இதைக் கூறும் கருட புராண ஸ்லோகம் இது:

சனைர்வித்யா சனைர் அர்த்தா சனை: பர்வதமாருஹேத் I
சனை: காமம் ச தர்மம் ச பஞ்சதானி சனை: சனை: II

கல்வியில் மெதுவாக முன்னேறு. பொருள் சேகரிப்பதில் மெதுவாக முன்னேறு. மலை மீது ஏறுவதை மெதுவாகச் செய். காமத்திலும், அதே போல தர்மம் செய்வதிலும் மெதுவாகச் செய்! இந்த ஐந்து விஷயங்களையும் மெதுவாகவே செய்ய வேண்டும்.
-கருட புராணம் 109ஆம் அத்தியாயம் 46ஆம் ஸ்லோகம்

goddess-bhuvaneswari

மாயைக்கு மருந்து

உலகமெல்லாம் மாயா சொரூபமாய் இருக்கிறது. பரமேஸ்வரி அம்மாயா சொரூபமான உலகத்திற்கு எஜமானியாக இருக்கிறாள். ஆதலால் மூன்று லோகத்தாராலும் சுந்தரமான தேவியே புவனேஸ்வரி என்று சொல்லப்படுகிறாள்.

ஓ! அரசனே! மனம் புவனேஸ்வரி ரூபத்தில் சம்பந்தித்து இருக்குமாயின் இந்த சம்சாரத்தில் சதசத்ரூபமான மாயை என்ன செய்யும்? ஆதலால் மாயையை ஒழிப்பதற்குச் சதானந்தரூபியான தேவியைத் தவிர வேறொரு தேவதாந்தரங்கள் சக்தி உள்ளனவல்ல. தமோராசியை நாசம் செய்வதற்கு தமசே காரணமாக மாட்டாது. சூரியன், சந்திரன், அக்னி, மின்னல் இவைகளுடைய காந்தியல்லவோ இருளைப் போக்கடிக்க வல்லமை உள்ளவை. ஆதலால் சம்வித்ரூபமாய்த் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிற மாயேஸ்வரியான அம்பிகாதேவியை மாயையைக் கழிப்பதற்காக மிகப் பக்தியோடு பூஜிக்க வேண்டும்.

-வியாஸ முனிவர் ஜனமேஜய மஹராஜனிடம் கூறியது
– தேவி பாகவதம், ஆறாம் ஸ்கந்தம், 36ஆம் அத்தியாயம்.

Awaken man

தூக்கம் வராத நான்கு பேர்!

நான்கு பேர்களுக்குத் தூக்கம் வராது என்று கூறுகிறது கருட புராணம்.
1) தரித்ரன் – ஏழ்மையில் வாடுபவனுக்குத் தூக்கம் வராது.
2) பரப்ரேஷ்ய சர – (சர என்றால் ஒற்றன் என்று பொருள்) அயல் தேசத்தில் உளவு பார்க்கச் சென்ற ஒற்றன்
3) பர நாரி ப்ரசக்த – அடுத்தவன் மனைவி மீது காதல் கொள்பவன்
4) பர த்ரவ்ய ஹர: – அடுத்தவன் பொருளை அபகரிக்கும் திருடன் ஆகிய இவர்களுக்கு நித்திரை வராது.

குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச I
பரநாரிப்ரசக்தஸ்ய பரத்ரவ்யஹரஸ்ய ச II

– கருட புராணம் 115ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 68

To be continued………………………..