வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்!

shisya

உபநிஷத அற்புதங்கள்– Part 4; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1003; தேதி:– 26th April 2014.

32. “உபநிஷத் காலத்தில் புவியியல் அறிவு” என்று பூகோள விஷயங்கள் பற்றி B G தமஸ்கர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் 250 உபநிஷத்துகள் இருப்பதாகவும் தான் 134 புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை நடத்தியிருப்பதாகவும் சொல்லி 134 உபநிஷத்துகளின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

33.பூமியின் இரண்டு பகுதிகளும் ரிஷிகளுக்குத் தெரியும் என்பதை சாந்தோக்கிய உபநிஷத் (2-2-3) மூலம் காட்டுகிறார். பிரபஞ்சம் தோன்றியதும் அதே உபநிஷத்தில் இருக்கிறது (5-6-1; 6-8-7)

34. நிலம், நீர் ஆகியன எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பிருஹத் ஆரண்யக உபநிஷத் (3-3-2) சொல்கிறது.

35.வலம் வருதல் பற்றியும் பி.ஆ.உ.-வில்(4-2-4) வருகிறது கடிகார முள் சுற்றுவதில் இருந்து கோவில் சுற்றுவது வரை எல்லாம் வலமாகவே இருக்கும். இது இந்துக்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்க வேண்டும். கண்ணகி சிலையை பிரதிஷ்டை செய்த செங்குட்டுவன் அச்சிலையை மும்முறை வலம் வந்து வணங்கியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

36.வடமொழியிலும் தமிழிலும் பருவத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறோம். இது வேத காலத்தில் துவங்கியது தைத்ரீய சம்ஹிதையில் இதை முதல் முதலில் (4-3-2; 5-6-3; 7-6-19) படிக்கிறோம். பாரதம் முழுதும் ஒரே நாகரீகம், பண்பாடு இருந்ததற்கு இதுவும் ஒரு சான்று. மஹாகவி காளிதாசன் ஆறு பருவங்கள் பற்றி ருது சம்ஹாரம் என்ற ஒரு கவிதை நூலே எழுதிவிட்டார்.

தமிழர்கள் கண்டுபிடிப்பு

37. புற நானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றி நிறைய பாடல்கள் இருக்கின்றன. இன்னும் விஞ்ஞானிகள் இதுபற்றி எதுவும் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன என்ன கண்டுபிடிப்புகள் வரும் என்று நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதில் வெள்ளி கிரகம்—மழை பற்றிய கண்டுபிடிப்பும் ஒன்று. தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் உள்ள இந்தக் கருத்து மைத்ரீ உபநிஷத்தில் இருக்கிறது (7-4)

sondara_gurukula

38.ஆதி காலத்தில் மார்கழி மாதத்தில் ஆண்டு துவங்கியது. இதனால்தான் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான். பகவத் கீதையில் கிருஷ்ணன் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தான் என்ன என்னவாக இருக்கிறேன் என்று கூறுவதை வைத்து கண்ணதாசன் ஒரு திரைப்பட பாடலே எழுதிவிட்டார்:- “காலங்களில் அவள் வசந்தம், கலைகளில் அவள் ஓவியம்”– என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும் நிற்க.

ஆண்டு துவக்கம், பிற்காலத்தில் வசந்த கலத்துக்கு மாற்றப்பட்டது.. அதாவது மார்ச் மாதம்தான் முதல் மாதம். ஜனவரி அல்ல. இதனால்தான் செப்டம்பர் (சப்த=ஏழு), அஷ்டோபர் (அஷ்ட=எட்டு), நவம்பர் (நவ=ஒன்பது), தசம்பர் (தச= பத்து) என்று ஆங்கில மாதங்களுக்கு சம்ஸ்கிருத எண்களை பயன்படுதுகிறோம். மார்ச் முதல் மாதம் என்றால்தான் இது சரியாக, 7, 8, 9, 10 ஆவது மாதங்களாக வரும்.

தைத்ரீய பிராமணத்தில் (1-12; 6-7; 3-10-4-1; 6-5-3) வசந்த காலம்தான் முதல் மாதம் என்று இருக்கிறது. வேதங்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக இருப்பதால் ஒரு காலத்தில் மார்கழி முதலாவது இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து சுதந்திரப் போராட்ட வீரரும் பேரறிஞருமான பால கங்காதர திலகர் விரிவான நூல் எழுதி இருக்கிறார்.

39. எங்கெங்கோ தோன்றும் நதிகள் எல்லாம் இறுதியில் கடலில் சங்கமித்து தன் நாமத்தை இழந்து கடல் நீர் என்று பெயர் பெறும் உவமை= ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்= நிறைய வடமொழி நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. பிராமணர்கள் ஒரு நாளில் மூன்று பொழுதுகளில் செய்யும் சந்தியாவந்தனத்திலும் இதைக் கூறுவர். இது முண்டகோபநிஷத் (3-2-8) என்னும் பழைய உபநிஷத்திலேயே வருகிறது. இந்துக்களுக்கு கடலும் நதியும் “தண்ணீர் பட்டபாடு: என்று சொல்ல முடியும். கடல்கடந்து வணிகம் செய்த மக்கள் இந்த உவமையைப் பயன்படுத்துவதில் வியப்பே இல்லை. மதத்திலும் கூட புவியியல் உண்மைகளைப் புகுத்தும் மதிநுட்பம் உயையோர் பாரத நாட்டு மக்கள்.!!
40.தாமரை: உபநிஷத்தில் தாமரைக்கு எட்டு பெயர்கள் வருகின்றன. பிற்கால நிகண்டுகளில் இன்னும் அதிகமான சொற்கள் வருகின்றன. இது தெரிந்துதான் பாரதீய ஜனதா கட்சி இதை சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ!

siddha2

41. தானிய வகைகளில் எள், அரிசி, பார்லி, கடுகு முதலியன மிகவும் பழைய , பெரிய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக. உபநிஷத்திலேயே வருகிறது. ஏற்கனவே சிந்து சமவெளி அகழ்வாரய்சியில் வெட்டி எடுக்கப்பட்ட எள் வேதங்களிலும் பிராமணர்களின் சடங்குகளிலும் (திவசம், தர்ப்பணம்) பயன்படுத்தப்படுவது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி இருக்கிறேன்.

42. இன்னொரு விநோதம் என்னவென்றால் மூன்று உபநிஷத்துகள் பறவைகளின் பெயரில் இருப்பதாகும்: கருட உ., ஹம்ச உ., சுகரஹஸ்ய உ., ஆகியன கழுகு, அன்னம், கிளி ஆகியவற்றின் பெயரில் உள்ளன. உலகில் முதல் முதலில் மேகத்தை தூது விட்டு புத்தகம் (மேகதூதம்) எழுதியவன் காளிதாசன். உலகில் முதல் முதலில் காலங்களின் பிரிவுகளை (அறுபொழுது) வைத்து நூல் எழுதியவன் (ருதுசம்ஹாரம்) காளிதாசன். இதற்கெல்லாம் அவனுக்கு உதவியது உபநிஷத்துகள்தான்!! பறவைகளையும், காற்றையும் தூதுவிடுவது வேத,உபநிஷத ,இதிஹாசங்களிலேயே வந்துவிட்டது.

43. உபநிஷத்துகள் என்பவை தத்துவம், இறையுணர்வு பற்றிய நூல்கள். ஆனால் அதில் கூட தங்கம் (சாந்தோக்யம் 3-19; 5-10-9; 8-3-2; 6-24-1) பற்றியும், வெள்ளி (சாந்தோ. 3-19-1) பற்றியும் இரும்பு, காரீயம், வெள்ளீயம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன.

guru

44. வெளிநாட்டு “அறிஞர்கள்” (? ! ? ! ? ! ) சங்க இலக்கிய நூல்களிலும் சம்ஸ்கிருத வேத இதிஹாச, புராணங்களிலும் இல்லாத ஆரிய—திராவிட இனவெறியைப் புகுத்தி இந்திய வரலாற்றில் விஷம் கலந்ததை மகாத்மா காந்தி, ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மகரிஷி அரவிந்தர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரின் கண்டனம் செய்தது பற்றி ஆறு, ஏழு கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.

அப்படியானால் நம்மவர்கள் எல்லோரையும் எப்படிப் பிரித்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? புற நானூற்றின் முதல் பாடலிலேயே 18 கணம் பற்றிய செய்தி வருகிறது. பாரியின் மகள்களை கபிலன் என்ற பிராமணப் புலவன் ஒவ்வொரு மன்னனிடமாக அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் புற நானூற்றுப்பாடல்களில் ஒரு பாட்டின் உரையில் 18 கணத்தினரை அகத்தியர் அழைத்துவந்த செய்தியும் வருகிறது.

மைத்ரீ உபநிஷத் இந்த 18 கணங்களீல் அசுர, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷச, பூத பிசாச வர்க்கத்தினரைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்துகள் தத்துவ நூல்கள் என்பதால் இதற்கு மேல் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. இதில் என்ன பெரிய அதிசயம் என்றால் இவர்கள் எல்லோரையும் ஒரு தாய் வயிற்று புதல்வர்கள் என்றே புராண, இதிஹாசக் கதைகள் கூறுகின்றன. வெள்ளைக்காரன் பிரித்தது போல போண்டா மூக்கு- கருப்புத் தோல் திராவிடன் மத்தியதரைக் கடல் வாசி, என்றும் கூரிய மூக்கு- வெள்ளைத் தோல் ஆரியன் மத்திய ஆசியப் பேர்வழி என்றெல்லாமும் உபநிஷத்துகள் பேசவில்லை! கிருஷ்ணன் கருப்பன், அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளையன்!! திரவுபதி கருப்பாயி, அவள் புருஷன் அர்ஜுனன் ஒரு வெள்ளையத் தேவன்!!

45. ரிக்வேதத்தில் புருஷசூக்தத்தில் முதல் முதலாக வரும் நான்கு ஜாதிகள், சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு இடத்தில் (5-10-7) வருகிறது

தொடரும்……………………………………. (பகுதி–5-ல் மிகுதியைக் காண்க)

Please read Part 1, 2, 3 of this article posted in the past few days.

contact swami_48 @ Yahoo.com

சிவனை வழிபட மூன்று மருத மரங்கள்

tv marudur temple
Tiruvidaimarudur Temple

சிவனை வழிபட மூன்று மருத மரங்கள் தேவியை வழிபட மூன்று மாணிக்கங்கள்

எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்— 1000 (ஆயிரம்) தேதி—-25 ஏப்ரல் 2014

சிவன் எங்கே இருக்கிறான்? நம் உள்ளத்தில் இருக்கிறான் என்று ஞானிகள் சொல்லுவர். ஆனால் நாம் எளிதாகக் காண முடிவதில்லை. பாலில் வெண்ணை இருக்கிறது என்று பாட்டி சொன்னாள். குழந்தை போய் பாலை எட்டிப் பார்த்தது. வெண்ணையைக் காணவில்லை. விறகில் தீ இருக்கிறது என்று அம்மா சொன்னாள். குழந்தை போய் விறகைத் தொட்டுப் பார்த்தது. தீயும் இல்லை, சுடவும் இல்லை. பாட்டியும் அம்மாவும் சொன்னதைத்தான் அப்பர் பெருமானும் கூறினார். ஆனால் அந்த வெண்ணையையும் தீயையும் பார்க்க கடைய வேண்டும் என்ற ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டார். மத்ததைக் கொண்டு பாலைக் கடைந்தால் வெண்ணை மேலே வரும். அரணிக் கட்டையைக் கடைந்தால் தீப்பொறி பறக்கும். நம் உள்ளத்தைக் கடைந்தால் சிவன் வெளிப்படுவான்:

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. (5-ஆம் திருமுறை, அப்பர்)

உள்ளத்தை எப்படிக் கடைவது. பல வழிகள் உண்டு. புனித யாத்திரை போனாலும் உள்ளம் கடையப்படும். தமிழ் கூறு நல்லுலகில் இதற்கு நமக்கு வழிகாட்டியவர்கள் தேவாரம் பாடிய மூவரும், திருவாசகம் பாடிய ஒருவரும், திவ்யப் பிரபந்தம் பாடிய பன்னிருவரும் ஆவர். அவர்களைத் தொடர்ந்து வந்த பக்தர் பட்டியலை எழுதி மாளாது. 300 தலங்களுக்கு மேல் பாத யாத்திரையாகச் சென்று சிவபெருமானையும், பெரிய பெருமாளையும் தரிசித்தனர்.

Srisailam-Mallikarjuna Swami Temple-13
Srisailam Mallikarjuna Temple

நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அவருடைய சொற்பொழிவில் மூன்று மருத மரங்களிடையே வாழும் சிவன் பற்றிக் கூறினார். அவருக்கு முன் வாழ்ந்த வள்ளலார் பெருமான் மூன்று மாணிக்கங்கள் இடையே வாழும் சிவ பெருமான் மற்றும் தேவியர் பற்றிக் கூறினார். இந்த ஆறு தலங்களையும் மனதால் தரிசித்து வருவோம்.

மூன்று தலங்களில் மருத (அர்ஜுன) மரம் தல விருட்சமாக இருக்கிறது.

ஸ்ரீசைலம்= மல்லிகார்ஜுனம்
திருவிடை மருதூர் = மத்யார்ஜுனம்
திருப்புடை மருதூர் = புடார்ஜுனம்

திருவிடை மருதூர் கோவிலில் உள்ள லிங்கம் மஹாலிங்கம். மத்ய அர்ஜுன என்றும் அழைப்பர் ( மத்யார்ஜுனம்= இடை மருது). அர்ஜுன என்பது மருத மரத்தின் சம்ஸ்க்ருதப் பெயர்.
மருத மரத்தின் தாவரவியல் பெயர் டெர்மினாலியா அர்ஜுனா. தமிழ்நாட்டில் திருவிடை மருதூர், திரு இடையாறு ஆகிய இடங்களில் இதுதான் தல மரம். ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசைலம் என்னும் புண்ய க்ஷேத்திரத்திலும் மருதமரமே. ஸ்ரீசைலத்தில் உள்ள இறைவன் மல்லிகார்ஜுனன். இங்கு மல்லைகை, அர்ஜுன (மருது) இரண்டும் சேர்ந்து உள்ளன. இது சக்தியும் சிவனும் இணை பிரியாதவர்கள் என்பதைக் காட்டும் சின்னம். அருகில் கிருஷ்ணா நதி பெருக்கெடுத்து ஓடுவதையும் காணலாம்.

tpudai marudur
Tiruppudaimarudur near Amabsamudram, Tirunelveli district.

ஆந்திரத்தின் ஒரு கோடியில் இருக்கும் மல்லிகார்ஜுனரையும் இடையே இருக்கும் (மத்யார்ஜுனம்) மஹாலிங்கத்தையும் தரிசித்தோம்.இன்னும் கொஞ்சம் தெற்கே போனால் தாமிரபரணி நதிக்கரையில் திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) என்னும் க்ஷேத்திரத்தில் ஒரு மருதமரமும் ஈஸ்வரனும் உள்ளனர். நாறும்பூநாதர் என்பது இறைவனின் பெயர். கோமதியம்மன் என்பது இறைவியின் பெயர். இங்கு சாய்ந்த நிலயில் ஈஸ்வரன் காட்சிதருவது பற்றி பல கதைகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தலம் உள்ளது.அற்புதமான நாயக்கர் கால ஓவியங்களும், வேலைப்பாடுடைய மரச் சிற்பங்களும் இங்கே இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை உடைய கோவில்.

Source: Kanchi Paramachrya Talks

சென்னையில் மூன்று மாணிக்கங்கள்

மேலூர் = திருவுடை மாணிக்கம்
திருவொற்றியூர் = வடிவுடை மாணிக்கம்
திருமுல்லைவாயில் = கொடியிடை மாணிக்கம்

சென்னையில் மூன்று மாணிக்கங்கள் உண்டு. சென்னை அருகில் மேலூர் என்னும் திருத் தலத்தில் திருவுடை மாணிக்கம். திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம். திருமுல்லை வாயில் கொடியிடை மாணிக்கம் என்பார்கள். நிறைநிலா நாளில் மூன்று மாணிக்கங்களையும் தரிசித்து மகிழும் வழக்கம் நெடுங்காலமாகத் தாய்மார்களிடையே இருந்து வருகிறது.. அங்கே உறையும் தேவியர் அருள் மழையில் நனைவர்.

திருஒற்றியூரில் பட்டினத்தாருக்கு பேய்க்கரும்பும் இனித்தது. சென்னையில் இருந்தபோது வள்ளலார் (இராமலிங்க சுவாமிகள்) நாடோறும் வழிபட்ட இடம் இது. வடிவுடை அம்பிகையை வள்ளலார் துதித்து வடிவுடைமாணிக்க மாலை அருளியிருக்கிறார்.

paintings,TP  marudur
Beautiful Nayak period paintings of Tiruppudaimarudur

அதிலிருந்து ஒரு பாடல்:

திருநாள் நினைத் தொழும் நண்ணாள் தொழாமல் செலுத்திய நாள்
கருநாள் என மறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
ஒருநாளினும் நிந்தனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ்
மருநாள் மலர்க்குழல் மானே! வடிவுடைமாணிக்கமே!

உதவிய நூல்:வள்ளலார் வாழ்கின்றார்,கவிஞர் முருக சரணன், கலைவாணி வெளியீடு,சென்னை. ஆண்டு 1995.

திருமுல்லைவாயில் பதிகம்

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ் சுடரே (7-ஆம் திருமுறை,சுந்தரர்)

Contact swami_48@yahoo.com

உபநிஷதத்தில் நகைச்சுவை!

madhva2

உபநிஷத அற்புதங்கள்–Part 3; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 998; தேதி 24th April 2014.

23.நூற்றுக்கும் மேலான உபநிஷத்துக்கள் இருந்த போதிலும் பத்து உபநிடதங்கள் மட்டும் முக்கியமானதாகவும் பழமையான தாகவும் கருதப்படுகின்றன. இவைகளுக்கே ஆதி சங்கரர் உரை (பாஷ்யம்) எழுதினார். அவையாவன: ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, தைத்ரீய, ஐதரேய, சாந்தோக்ய, பிருஹத்ஆரண்யக உபநிஷத்துகள். ஸ்ரீ சங்கர பகவத்பாதர், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திற்கும் உரை எழுதியதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். கௌசீதகி, மஹநாராயண, பைங்கள, ஜாபால உபநிடதங்களின் பெயர்களையும் அவர் தனது பிரம்மசூத்ர பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார்.

24. முக்கிய பத்து உபநிடதங்களில் மாண்டூக்யம் மிகவும் சிறியது. பிருஹத் ஆரண்யகம் மிகவும் பெரியது. உபநிஷத் என்றால் அருகில் அமர்ந்து கற்றல் என்று பொருள். குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆசிரியர் வீட்டில் தங்கி படிக்கவேண்டும் ஒருவர் 12 ஆண்டுகள் மனம், மொழி, மெய் மூன்றாலும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று நமது சாத்திரங்கள் கூறுகின்றன.

சுவாமி விவேகநந்தரும் தனது அபூர்வ ஞாபக சக்திக்கும், மற்றவர் மனதில் உள்ள சிந்தனைப் போக்கை அறியும் சக்திக்கும் பிரம்மசர்யமே காரணம் என்று கூறியிருக்கிறார்.

gurukulam1

நகைச்சுவைக் காட்சிகள்

25. உபநிஷத்துகள் என்பவை தத்துவ நூல்கள் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் இதில் நகைச்சுவை இல்லாமல் இல்லை! ஜெப்ஃரி பரீந்தர் என்பவர் சில காட்சிகளைப் பட்டியலிட்டு உள்ளார். அவைகளை ஒவ்வொன்றாகக் காண்போம்:-

26.விதேக நாட்டின் மன்னன் ஜனகனுடைய குரு யாக்ஞவல்கியர் என்ற பெரிய வேத அறிஞர். தானே தலை சிறந்த அறிஞன் என்று சொல்லி ஆயிரம் பொற்கிழிகள் கட்டப்பட்ட பசுமாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி தன் மாணவர்களுக்குக் கட்டளையிடுகிறார். இதற்கு அவர் கூறும் காரணம்: நான் தலை சிறந்த அறிஞன் மட்டுமல்ல. எனக்கு பசுமாடுகள் வேண்டாமா? என்கிறார்.

(முகமது பின் துக்ளக் நாடகத்தில் நகைச்சுவை நடிகர் சோ பேசுவது நினைவுக்கு வருகிறது. அமெரிக்கா போக ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் சொன்னவுடன், எதற்காக அமெரிக்கா என்று மந்திரிகள் வியக்கின்றனர். உடனே சோ, “நான் அமெரிக்கா பார்க்கவேண்டாமா? என்று கூச்சலிடுவார்).

27.இதற்குப் பின்னர் ஜனக மன்னன் தனது ஆசிரியர் யாக்ஞவல்கியரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். உங்களுக்குப் பசு மாடுகள் வேண்டுமா, தத்துவ விசாரனை செய்ய வேண்டுமா? என்று. அப்போதும் அவர் சொல்கிறார்: எனக்கு இரண்டும் வேண்டும் என்கிறார்! ஆனால் எதையும் சொல்லிக்கொடுக்காமல் எந்த தானத்தையும் ஏற்கக் கூடாது என்று என் தந்தை கற்பித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.

( இதைப் படித்தவுடன் ஒரு ஹோட்டலில் நடந்த சம்பாஷணை நினைவுக்கு வருகிறது. இட்லி, வடை இரண்டையும் வைத்துவிட்டு உங்களுக்கு சாம்பார் வேண்டுமா?, சட்னி வேண்டுமா? என்று சர்வர் கேட்கிறான். சாம்பாரும் வேண்டும், சட்னியும் வேண்டும் ஏன், இரண்டும் போடமாட்டீர்களோ ? என்று சாப்பிட வந்தவன் சொல்கிறான்!)

28. ஓம் என்ற அரிய மந்திரத்தை முனிவர்கள் ஜபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பகன் என்பவருக்கு, நாய்கள் ‘ஒம்’ என்று ஊளையிட்டுக் கொண்டு முன்னும் பின்னும் வரும் காட்சி மனதில் தோன்றுகிறது. அது ‘உணவு கொடுங்கள், உணவு கொடுங்கள்’ என்று ஊளையிடுகிறதாம். இது அர்த்தமில்லாமல் பகட்டாக மந்திர உச்சாடனம் செய்வோரை நையாண்டி செய்வதாகும்.

(இதைப் படித்தவுடன் மாமன்னன் மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற சம்ஸ்கிருத நாடகத்தில் போலி புத்த பிட்சுக்களையும் சமணத் துறவிகளையும் நையாண்டி செய்வது நினைவுக்கு வருகிறது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நாடகம் பற்றி அருமையான, சுவையான சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.)

21-gurukulam-tv-serial-2-600

29.கடவுள்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்பதை சொல்லும்போது யாக்ஞவல்கியர் பல ஆயிரம் கடவுளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆகக் குறைத்து கடைசியில் ‘ஒன்றரைக் கடவுள்’ என்று முடிக்கிறார். இது நகைச் சுவையாக தோன்றினாலும் இதன் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளதை பாஷ்யம் படிப்பவர்கள் அறிவார்கள். அவர் தனது எதிரிகளை எச்சரிப்பதும் குறிப்பிடத் தக்கது. நீங்கள் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாவிடில் உங்கள் தலை தெரித்துவிழும் என்பார். விதக்தா என்பவர் தலை தெரித்துவிழ அவருடைய எலும்புகளை ஏதோ விலையுயர்ந்த பொருள் என்று நினைத்து திருடர்கள் திருடிக்கொண்டு போய்விடுகின்றனர்! இதுவும் ஒரு நகைச் சுவை காட்சி போல தோன்றினாலும் அந்தக் காலத்தில் உண்மையில் நடந்த சில சம்பவங்களை இவர் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

30. ஜனஸ்ருதி என்ற பெரிய பணக்காரன் பல அன்ன சத்திரங்களைக் கட்டி அன்னதானம் செய்துவிட்டு பெருமை அடித்துக்கொள்ளும்போது ஒரு அன்னப் பட்சி சொல்கிறது:– “நீ, அதோ சொறி சிரங்குடன் வண்டிச் சக்கர நிழலில் அமர்ந்திருக்கும் ரைக்வன் என்பவனுக்கு ஈடாக மாட்டாய் என்று. உடனே ஜனஸ்ருதி, ரைக்வனிடம் போய் கெஞ்சுகிறார். எனக்கு இறையுணர்வு பற்றிய உண்மை–களை போதித்தால் உனக்கு ஏராளமாகப் பணம் தருகிறேன் என்று சொன்னவுடன் அவன் அதை மறுத்து விடுகிறான். ஆனால் அந்த பணக்காரர் தனது அழகான மகளைக் கூட்டிக்கொண்டு வந்தவுடன், இவளுடைய அழகிய முகம் ஒன்றே போதுமே! என்னைப் பேச வைப்பதற்கு என்கிறான்!

மேம்போக்காக இவை நகைச்சுவையாக எழுதப்பட்டதா அல்லது ஆழ்ந்த தத்துவப் பொருளுடன் எழுதப்பட்டதா என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். ஜெஃப்ரீ பரீந்தர் என்பவர் எழுதிய நூலில் இவைகளை நகைச்சுவைப் பட்டியலில் சேர்க்கிறார்.

31.உஷஸ்தி என்ற ஏழை முனிவர் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவார். ஆனால் தண்ணீர் கொடுத்தபோது, இதுதான் எங்கும் கிடைக்குமே! எனக்கு எதற்கு! என்பார். பின்னர் ஒரு மன்னரின் சபைக்குச் செல்கிறார் அங்கே வேதம், தத்துவம் பற்றி பலமாக வாதப்ரதிவாதங்கள் நடக்கின்றன. நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்திவிட்டு, எனக்கும் அவர்களுக்குச் சமமான தட்சிணை கொடுத்தால் விவாதம் நீடிக்கலாம் என்கிறார்.

Adi shankaracharya with his disciples
நான் முன்னர் கூறியபடி, இவைகள் எல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்கள். இவைகளின் பொருள் என்ன என்பதை அறிய முழு உபநிஷத்தையும் படித்து அவை சொல்ல வந்த விசயம் என்ன என்பதை ஆராய்தல் நலம்.

உபநிஷத அற்புதங்கள் பகுதி-1 ஏப்ரல்-22, பகுதி-2 ஏப்ரல் 23 தேதிகளில் வெளியிடப்பட்டன. அவைகளையும் படிக்க வேண்டுகிறேன்.

Contact :— swami_48 @ Yahoo.com

To be continued……………………………………….

உபநிஷத அற்புதங்கள் – Part 1

GuruShishya

உபநிஷத அற்புதங்கள் – 1 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—994; தேதி—22 ஏப்ரல் 2014.

12-3-1995- முதல் சுமார் ஓரிரு மாதங்களுக்கு உபநிஷத புத்தகங்களில் இருந்து சில நோட்ஸ்- Notes எடுத்து வைத்திருந்தேன். சில ஆராய்ச்சி யாளர்களுக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில் அவற்றை அப்படியே தருகிறேன். இது மதம் அல்லது தத்துவ விஷயங்களைப் பற்றியது அல்ல. பொதுவான, சுவையான விஷயங்கள்.

1.சாந்தோக்ய உபநிஷத்
வெளி நாடுகளில் முதல் பெயர்/ First name or fore name, குடும்பப் பெயர்/surname என்று இரண்டு பெயர்கள் இருக்கும். அமெரிக்கர்களுக்கு நடுப் பெயரும்(Middle name) உண்டு. இந்த வழக்கம் வேத காலம் முதல் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது மாறி வெறும் ஜாதிப்பெயரை குடும்பப் பெயர் இடத்தில் எழுதும் வழக்கம் தோன்றிவிட்டது சாந்தோக்ய உபநிடதத்தில் உத்தாலக ஆருணன் என்ற பெயரைக் காண்கிறோம் உத்தாலகன் என்பது அவருடைய பெயர் (முதல் பெயர்). ஆருண என்பது குடும்பப்பெயர். அதாவது ஆருணன் மகன் உத்தாலகன்.

24 வயதுவரை படிப்பு!
2.சாந்தோக்ய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்பவரைப் பற்றி பேசப்படுகிறது. அவர் உத்தாலக ஆருணனின் மகன். 24 வயதில் வேதம் முழுதும் படித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதில் கவனிக்க வேண்டியது 24 வயது வரை கல்வி. அநேகமாக ஐந்து வயதில் அவருடைய அப்பா குருகுலத்தில் (ஸ்கூலில்) சேர்த்திருப்பார். ஆக 19 வருடம் குரு வீட்டில் தங்கிப் படித்திருக்கிறார். என்ன ஆசர்யம் பாருங்கள். ஒரே குருவிடம் 19 வருஷம் கல்வி!

அபூர்வ சக்தி
3.இவ்வளவு வருஷம் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் பிரம்மசர்யம் அனுஷ்டித்தால் அவர்களுக்கு மந்திர சக்தி, அபூர்வ சக்திகள் வந்துவிடும். 12 ஆண்டுகளே போதும், அபூர்வ சக்திகள் பெற என்பது சுவாமி விவேகாநந்தரின் அருள் வாக்கு.

4.இயற்கை உவமைகள்
சாந்தோக்ய உபநிஷத்தில் இயற்கை நடனமாடுவதையும் படித்து இன்பமுறலாம்.
தேனீ—தேன் உவமை
ஆறு – கடல் உவமை
மரம் — சத்து உவமை
ஆலமரம் – விதை உவமை
உப்பு – நீர் உவமை
குருடன் — குரு உவமை
எவ்வளவு இயற்கையோடு இயைந்த வாழ்வு!

இயற்கையுடன் இணைந்து விட்டால் புத்தகமே வேண்டாம். அதை விட நிறைய ஞானம் பெறலாம் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் (William Wordsworth):

One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can.

Guru_Shishya

5.விஞ்ஞான சோதனைச் சாலை !
இந்த உபநிஷதத்தில் நாம் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் சோதனைச் சாலையில் Laboratory என்ன செய்கிறோமோ அதை குரு சொல்லித் தருகிறார்.
தம்பி, கொஞ்சம் உப்பைக் கொண்டு வா. அந்த கோப்பையில் உள்ள தண்ணீரில் போடு. உப்பு எங்கே போனது?

தம்பி, அந்த ஆலமர பழத்தைக் கொண்டுவா. அதைப் பிரி. சிறு விதைகளைப் பார்க்கிறாயா? இவ்வளவு பிரம்மாண்டமான மரத்தை அது எப்படி உண்டாக்கியது?

இப்படி கேள்விகளை எழுப்பி பிரம்ம ஞானத்தைப் போதிக்கின்றனர் ரிஷிகள்!
இதை ஆங்கிலத்தில் — Socratic Method — சோக்ராடிக் மெதட் என்று சொல்லுவார்கள். அதாவது சாக்ரடீஸ் என்ற அறிஞர் உருவாக்கியது என்று.

சாக்ரடீஸ், இதை நமிடம் கற்றுக் கொண்டார் என்பது மேல் நாட்டு மக்களுக்குத் தெரியாது! சாக்ரடீஸ், அலெக்சாண்டர் ஆகியோர் இந்து சந்யாசிகளிச் சந்தித்தது பற்றி சுவாமி விவேகாநந்தரும் பரமஹம்ச யோகாநந்தாவும் எழுதி இருப்பதை ஏற்கனவே கொடுத்து விட்டேன்.

6.கடோபநிஷத்
இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது. உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு இந்தியாதான் என்பதற்கு இரண்டே உதாரணங்கள் போதும்!

ஒன்று நசிகேதன் என்ற சின்னப் பையன்
இரண்டு கார்க்கி என்ற பெண்மணி

இந்த இருவரும் உபநிடதத்தில் சக்கைப்போடு போடுகின்றனர். வாக்குவாதத்தில் மன்னர்கள்!!! 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் மேதா விலாசம் ஆயிரம் கோடி சூர்யப் ப்ரகாசத்தில் ஜொலித்தது.

அந்தக் காலத்தில் தமிழில் நூல் கிடையாது. கிரேக்கத்தில் நூல் கிடையாது. லத்தீன் மொழியில் நூல் கிடையாது. எபிரேய (ஹீப்ரு) மொழி, சீன மொழியில் கொஞ்சம் கொஞசம் துண்டு துண்டாக ஏதோ சில எழுத்துக்கள் உண்டு. (பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியது கி. மு ஆயிரத்தை ஒட்டித்தான்.
புத்தரும், மஹாவீரரும், சொராஸ்தரும், ஏசுவும், கன்பூஷியஸும், லாவோட்சேயும் தோன்றுவதற்கு முன்னால் இந்துப் பெண்களும் சின்னப் பையன்களும் எமனுடன் வாதித்து வெற்றி கண்டிருக்கின்றனர்.
நசிகேதன் என்ற வாண்டு பயல் எமனை வாக்குவாதத்தில் வென்று — சாவித்திரி போல — மூன்று வரங்கள் வாங்கி வருகிறான்.

பகவத் கீதையிலும், பாரதி பாட்டிலும். திருமந்திரத்திலும், முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களிலும் வரும் ஞானச் சுடர், ஞானத் தீ, ஞான தீபம், ஞான வாள், ஞானப் படகு முதலிய எல்லாம் உபநிடதத்திலேயே வந்துவிட்டன.
purmada

7.உடல் தேர் உருவகம்
கடோபநிடதத்தில் உடல் – தேர் உருவகம், புலன்கள்= குதிரைகள் என்ற உவமை உருவகம் எல்லாம் எடுத்தாளப் படுகின்றன. பிற்காலத்தில் இதை புத்தரும் பயன் படுத்தினார் (காண்க—தம்மபதம்).

8.ஆங்கிலத்தில் கத்தி போல கூரானது என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவர். அது எல்லாம் கடோபநிடதத்தில் இருந்து வந்த மரபுத் தொடர்!

9.இந்த உபநிடதம் இருதயம்- மூளை தொடர்பு பற்றியும் இருதயத்தில் உள்ள 101 நாடிகள் குறித்தும் பேசுகிறது. இருதயத்துக்குள் ஒரு கட்டை விரல் அளவுக்கு ஒளிரும் பிரம்மன் குறித்தும் படிக்கலாம்.

10.கௌசீதகி உபநிஷத்
கௌசீதகி உபநிஷதத்தில் பிராணன் பற்றிப் படிக்கிறோம்
அறிஞர்கள் இதை மற்ற கலாசாரங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்:
Taoists = Chi
Jews = Ruach
Greeks = Pneuma

11.பெயர்கள்: தேவ நாசன் மகன் பிரதர்தனன் (இதே பெயரில் ஒரு மன்னனை, சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியலிலும் காண்கிறோம். புராண மன்னர் பட்டியலிலும் பிரதர்தனன் உண்டு. ஆக மிட்டனி (கி.மு 1300) நாகரீகத்தில் காணப்படும் பிரதர்தனன் உண்மையான சம்ஸ்கிருதப் பெயரே.

த்வஷ்ட்ரியின் முன்று தலை உடைய விஸ்வரூபா, மற்றும் அருண்முகாஸ், பிரகலாதன், பௌலோமன், காலகஞ்சன் எனப் பல பெயர்கள் இயற்கைச் சக்திகளால் கொல்லப் பட்டதாகக் கூறுவது வேதப் பாடல்களை நினைவு படுத்துகிறது.

12.ஒரு மயிரிழை கூட எனக்குத் தீங்கு நேரிடாது என்ற வாசகம் இங்கே வருவது குறிப்பிடத்தக்கது.

To be continued——

contact swami_48@yahoo.com

புறநானூற்றில் முனிவர்களும் ஆஸ்ரமங்களும்

animal fables

எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :–992; —தேதி 21st April 2014.

இந்து மத முனிவர்கள், கானகங்களில் ஆசிரமங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை வனப்பு மிக்க மலைச் சாரல்களில் அமைக்கப்பட்டன. அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். காய்கறிகள், கனி வகைகள், பால் தயிர், கொஞ்சம் தானியம் ஆகியவைதான் அவர்களுடைய அன்றாட உணவு.

மான்கள், கிளிகள் முதலியன அவர்களுடைய குடில்கள் அருகே வசித்தன. நெய் மணக்கும் ஹோமப் புகை அவர்கள் குடில்களில் இருந்து காலையும் மாலையும் எழும். அவர்களுடைய அன்றாட உடற்பயிற்சி ஆறுகளுக்குச் சென்று நீராடி வருவதும். செடிகொடிகளுக்குத் தண்ணீர் விடுவதும் ஆகும். அத்தோடு ஹோமத்துக்குத் தேவையான குச்சிகளைப் பொறுக்கிக்கொண்டு வருவர்.

ஆசிரமங்களில் அமைதி தவழ்ந்தது. அவர்களுடைய தவ வலிமையால் அங்கு வரும் புலியும் மான்களும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்கும். அங்கு வரும் மன்னர் முதலானோருக்கு தாராளமாக விருந்து உபசாரம் கிடைக்கும். யாரேனும் தங்க வேண்டுமானால் அங்கு தங்கவும் அனுமதி உண்டு. மேலும் பிராணிகளும் கூட அவர்களுக்கு ஹோமத்துக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தன. பெண் துறவிகளும் அங்கே இருந்தனர்.

ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான முனிவர்களையும், ஆசிரமங்களையும் பற்றிய செய்திகள் இருக்கின்றன. அவைகளைப் படிக்கும்போதே மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். சம்ஸ்கிருத நாடகங்களில் இந்த ஆஸ்ரமங்கள் பற்றி இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கின்றன. உலகின் மிக மூத்த நாடக ஆசிரியர்களில் ஒருவர் பாஷா. அவர் எழுதிய 13 சம்ஸ்கிருத நாடகங்கள் நமக்குக் கிடைத்தது நாம் செய்த தவப் பயனே.
lotus beauty

நாடக உலகில் மிகவும் சிறப்புமிக்க இடத்தைப் பிடிக்கும் காளிதாசனின் மூன்று நாடகங்களில் சாகுந்தலம் என்னும் நாடகம் உலகப் புகழ்பெற்றுவிட்டது. இவைகளில் உள்ள வருணனைகள், ஆஸ்ரமங்களின் அற்புதமான காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே கொண்டு வருகின்றன. மாபெரும் மன்னர்களும் கூட ஆஸ்ரமத்துக்கு தொலை விலேயே ரதங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து முனிவர்களின் கால் களில் விழுகின்றனர். ஆயுதங்களையும், அவர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் கூடக் கழற்றிவிட்டு சாதாரண உடையில் வருகின்றனர். ஆசிரமத்தின் அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

இமயமலை ஆஸ்ரமங்களின் காட்சிகள் புறநானூற்றின் மிகப் பழைய பாடல்களில் இருக்கின்றன. அவர்கள் காளிதாசனின் நூல்களைப் படித்து அதைப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மீது முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய (புற.2) பாடலில்:–

“ நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அறுங்கடன் இறுக்கும்
முத்தீ விளகிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே !”

பொருள்:– பாலானது புளித்துப் போனாலும், கதிரவன் ஒளி நீங்கினாலும், நால்வேத நெறி மாறுபடினும் நீ இமயமலை போல நீண்டகாலம் வாழ வேண்டும். அந்த இமயமலைச் சாரலில் பெரிய கண்களை உடைய பெண் மான்கள் இருக்கின்றன. அவைகளின் பக்கத்தில் சின்ன மான் குட்டிகள் இருக்கும் அந்தணர் வீடுகளில் எரியும் முத்தீயில் இருந்து எழும்புகையில் அவை தூங்கும். அந்த இமய மலையோ சூரிய ஒளியில் தக தகவென தங்கம் போல ஒளிவீசும் (பொற்கோட்டு இமயம்= காஞ்சன ஸ்ருங்கம்= தற்போதைய பெயர் கஞ்ஜன் ஜங்கா). அப்பேற்பட்ட இமயமலை போல் நீ நீண்ட நெடுங் காலம் வாழ்வாயாக.
beatles-ashram-huts-II

அந்தணர் வீட்டு முத்தீ= ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கியம்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்

“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”.

இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும். அந்த இமய மலை வானத்தைத் தொடும் அளவு உயர்ந்தது.

இதில் முனிவர்கள் பற்றிய குறிப்பு இல்லாவிடினும் முந்தைய புலவர் முடிநாகராயர் சொன்னதை ஒப்பிட்டால் இவரும் அதையே சொல்கிறார் என்பது தெள்ளிதின் விளங்கும்.

okhla bird sanctuary,hindu

மாற்பித்தியார் வழங்கும் அற்புதக் காட்சி

புறநானூற்றுப் பாடல்கள் 251, 252ம் ஒரு இளைஞன் துறவியான அற்புதக் காட்சியை வருணிக்கின்றன. மாற்பித்தியார் என்ற புலவர் பாடிய பாடல்கள் இவை:–

“ஓவத்தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற்கண்டிகும்—
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீவேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்துவோனே?”

பொருள்:– ஓவியத்தில் வரைந்தது போன்ற அழகான வீடு. அதில் சித்திரப் பாவை போல ஒரு அழகி இருந்தாள். அவள் வளையல்கள் கழன்று விழுமாறு காதல் கனலை மூட்டினான் ஒரு கட்டழகுக் காளை போன்ற இளைஞன். இப்போது அவன் எங்கே?

அதோ பாருங்கள், மலையில் ஒரு நீர்வீழ்ச்சி. அதில் நீராடிவிட்டு அனல் மூட்டி ஹோமம் செய்துவிட்டு இப்போது நீண்ட சடையை அந்தத் தீயின் வெப்பத்தில் உலர்த்திக் கொண்டு நிற்கிறான்.

இதோ அவர்பாடிய இன்னும் ஒரு பாடல்:

“கறங்கு வெள்ளருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையொடு
அள் இலைத் தாளி கொய்யுமோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே”

பொருள்:– அதோ பாருங்கள்! அருவியில் குளிப்பதால் தில்லை நிறம் போன்ற சடையாக மாறிப் போனான். இப்போது தாளி மரத்தின் இளம் தளிர்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறான். இவன் முன்னர் பேசிய காதல் பேச்சில்—அவன் வீசிய சொல் வலையில் — மயில் போன்ற அத்தனை அழகிகளும் மயங்கி வீழ்ந்தனர்.
desert_elephant.jpg

இந்த இரண்டு பாடல்களும் முன்னர் இளைஞனாக வாழ்ந்த ஒருவன் சந்யாசியாகி காட்டில் வாழும் காட்சியையும் அவன் நீண்ட சடையுடன் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வையும் நம் முன்னே சித்திரம் போலப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நற்றிணைப் பாடலில் ஒரு காட்சி

சல்லியங்குமரனார் பாடிய நற்றிணைப் பாடல் (141) ஒரு முனிவரின் தோற்றத்தை அழகாக வருணிக்கிறது:-

“இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற்காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடாமேனிக்
குன்றுரை தவசியர் போல”

பொருள்:– மண் சேறு படிந்த கன்னத்தையும் பெரிய வாயையும் மேகம் போன்ற தோற்றமும் உடையது யானை. அந்த யானை உரசி உரசி பொரிந்த அடிமரம் உடையது கொன்றை மரம். அவை நீண்ட சடையும், நீராடாத உடம்பையும் உடைய தவசியர் போல இருக்கின்றன. (தவசியர் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் கவனிக்க).

ஒரு கொன்றை மரத்தை வருணிக்க முனிவர்களைக் கூறும் அளவுக்குத் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆன்மீகம் வளர்ச்சி பெற்றி ருந்தது!! மக்களுக்குத் தெரிந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் உயர்ந்த பொருள்களையே உவமையாகக் கூறவேண்டும் என்பதும் நூல் மரபு. தமிழ் மக்களுக்கு இத்தகைய முனிவர் காட்சி அவ்வளவு சர்வ சாதாரணம்!

elephant_1703752f

காளிதாசனின் ‘சாகுந்தல’ நாடக வருணனையும், பாஷாவின் ‘ஸ்வப்ன வாசவதத்தா’ நாடக வருணனையும் இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் கொடுத்துள்ளேன்.

Please read:
“Beautiful and Tranquil Hermitages of Ancient India’– posted on 20th April (Post No 991).
Contact swami_48@yahoo.com

சேரவாரும் ஜெகத்தீரே! ஞானிகள் அறைகூவல்!!

sages bommais

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–990; தேதி:— 20th April 2014.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஆற்றுபடை இலக்கியம் என்று ஒரு பிரிவு உண்டு. திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்று ப் படை, பொருநராற்றுப்படை எனப் பல. ஒரு புலவன் பரிசு பெற்றவுடன் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”– என்ற எண்ணத்துடன் மற்ற புலவர்களுக்கும் இந்த அரசன் இடத்தில் சென்றால் உங்களுக்கும் இந்தச் செல்வம் எல்லாம் கிடைக்கும் என்று கூறி வழிப்படுத்துவான். திருமுருகா ற்றுபடையில் அறுபடை வீடுகளின் அருமை பெருமைகளை நக்கீரர் விளக்குகிறார். முருகனுக்குள்ள அறுமுகங்களும் பன்னிரு கைகளும் பக்தர்களுக்கு எவ்வறெலாம் உதவுகின்றன என்றும் கூறுகிறார்.

இதே போல ஞானிகளும் தாங்கள் கண்ட பேரின்பத்தை எப்படியாவது உலகிற்குச் சொல்லிவிடவேண்டும்; எல்லோருடனும் பகிர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள். இது அவர்களுடைய பாடல்களைப் படித்தால் சொல்லாமலேயே விளங்கும்.

இன்று மாலை ஒரு சிறந்த உணவு விடுதிக்குப் போய் சாப்பிட வேண்டும் என்று நாலு நண்பர்கள் தீர்மானிக்கிறார்கள். ‘சின்னக் கடைத் தெருவில் இருக்கும் ஐயர் கடை சாப்பாடுதான் மிக பிரமாதம் என்று கோடி வீட்டு குப்புசாமி சொன்னார். ‘இல்லை, இல்லை, பெரிய கடைத் தெருவில் உள்ள கோபி ஐயங்கார் மெஸ்-ஸில்தான் சாப்பாடு மிகப் பிரமாதம்’ என்று மாடி வீட்டு மாடசாமி சொல்கிறார். ‘பஸ் நிலையம் அருகில் உள்ள உடுப்பி பவன் சாப்பாடு தேவாமிர்தம்’ என்று அடுத்தவீட்டு அங்கு சாமி சொல்கிறார். உங்களுக்கு உலகமே தெரியவில்லையே! நான் நீங்கள் சொன்ன எல்லாக் கடைகளிலும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ரயில் நிலையம் அருகில் உள்ள ராமராஜ் பவன் தான் உலகிலேயே சிறந்தது என்று மேஜையில் அடித்துப் பேசினார் எதிர்வீட்டு எத்திராஜ். எல்லோரும் அவர் கூறியபடியே சென்று சாப்பிட்டனர்.

இனி இந்த ஹோட்டலைத் தவிர வேறு எதற்கும் போகக் கூடாது என்று அன்று இரவே முடிவு எடுத்தனர். அவ்வளவு நல்ல சாப்பாடு! மறுநாள் முதல் அவரவர் அலுவலகத்தில் இந்தச் செய்தியைப் பரப்பினர். அன்றுமுதல் ராமராஜ் பவனில் உட்கார இடம் கிடைக்காத கூட்டம்!!

இதே போல ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகள் நம்மிடம் கெஞ்சுகின்றனர். தயவு செய்து நான் சொல்லுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன். ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒருமுறை இந்த சாப்பாட்டை அனுபவித்துவிட்டால் திரும்பி வீட்டிற்குப் போக மனம் வராமல் ‘வீடுபேறு’ அடைய ஓடுவீர்கள் என்று பாடுகின்றனர். உணவு விடுதிச் சாப்பாட்டில் கிடைத்தது எல்லாம் சிற்றின்பம். நாங்கள் சொல்லுவதோ பேரின்பம் என்று சொல்லி நமக்கு ‘’இன்னும் புரியவில்லையே’’– என்று கதறுகின்றனர். இருந்தபோதிலும் நாம் கேட்பதாகத் தெரியவில்லை. இதோ பாருங்கள்:–

தாயுமானவர் அறைகூவல்:–
காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!

மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்.

chaitanyam
Picture of Sri Chaitanya

நம்மாழ்வார் துடிப்பு !
கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே.
நம்மாழ்வார் திருவாய்மொழி

நம்மாழ்வாரோ எனில் “கண்டுவிட்டேன், இது போன்ற இனிய காட்சி உலகிலேயே கிடையாது எல்லோரும் ஓடி வாருங்கள் என்று கூத்தாடுகிறார். வண்டுகள் மொய்க்கும் துளசிமாலை அணிந்த மாதவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி அவருக்கு!

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்!

பெரியாழ்வார் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று உலக அற்புதம் ஒன்றைக் கண்டு பிடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார். அவர் பார்த்த அற்புதத்தை நாமும் பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறாம். ஆனால் கண்டும் காணவில்லை. அதனால் அவர் போல பூரிப்பு அடையவில்லை!. அனுபவித்தவர்க்கல்லவா அதன் அருமை பெருமைகள் தெரியும்! கண்ணன் ஊதிய புல்லங்குழல் ஓசை செவிக்கு உணவாகக் கிடைத்தது. அதை அருந்த வானவர் (தேவர்கள்) எல்லாம் வந்துவிட்டனர் என்கிறார்.

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்!
பூணிமேய்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து அணையான் குழல் ஊத
அமரலோகத்தளவும் சென்றிசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி,
செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.
-பெரியாழ்வார்

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,
திருமூலர் ஒருபொதுவுடைமைவாதி. கிடைத்ததை எல்லோருக்கும் சமமாகக் கொடுக்கவேண்டும் என்று கருதி நான் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லி பேரின்பம் அடைந்தேன். அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று பாடுகிறார்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்,
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
—————திருமூலர், திருமந்திரம்

appar1
Image of Appar

மனிதர்காள் இங்கே வாருங்கள் !! ஒன்று சொல்லுகிறேன்!!!

அப்பர் பெருமான் மிகவும் தெளிவாகப் புரியும்படி சொல்லுகிறார். ஏ, மனிதர்களே இங்கே வாருங்கள். ஒன்றே ஒன்றுதான் சொல்லப்போகிறேன். நான் மிக மிக இனிப்பான மாம்பழம் தந்தால் மாம்பழம் சாப்பிடுவீர்களா? சரி, நெய் மணத்துடன் இருக்கும் செவ்வாழைப் பழம் தருகிறேன் சாப்பிடுவீர்களா? இதைக் கேட்ட கூட்டம் ஆமாம் ,சாப்பிடுவோம் என்றது. இதைவிட இனிப்பான இறையருள் என்னும் கனி தருகிறேன். வாருங்கள் என்கிறார்.

மனிதர்காள் இங்கேவம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் னும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே.
—————திருக்குறுந்தொகை, 5ஆம் திருமுறை, அப்பர்.

இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்னரும் புரியவில்லை என்றால் நாம் எல்லோரும் நாடகத்திலோ திரைப்பத்திலோ நடிக்கத்தான் தகுதி உடையவர்கள். அதாவது நாம் புரிந்தும் புரியாதது போல நாடகம் ஆடுகிறோம்!!

contact swami_48@yahoo.com

மண்டோதரியின் மாண்பு !

mando best
By s Nagarajan
Post No 988a; dated 19th April 2014
ராமாயண வழிகாட்டி; அத்தியாயம் 24

ராமாயணத்தில் வரும் அற்புதமான பாத்திரங்கள் அனைவரையும் சரி சமமாக கவிதா மயமாக்கி இருப்பது வால்மீகி ஒருவராலேயே செய்ய முடிந்த அற்புதம். இந்த வகையில் மண்டோதரியை அவர் சித்தரிக்கும் பாங்கே தனி!

அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I

பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசினி: II

ஹிந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து கன்யாக்களின் பெயரை தினமும் நினைத்தால் மஹாபாதகங்களும் நாசம் அடையும் என்பது இதன் பொருள். இதில் நால்வர் ராமாயணத்தில் வரும் பாத்திரங்கள். திரௌபதி மஹாபாரதத்தில் வரும் பாத்திரம். ராமாயணத்தில் வரும் நால்வரும் ராமரை இன்னார் என்று அடையாளம் தெரிந்து கொண்டு பரம்பொருளே அவர் என்று நிர்ணயித்த மஹா பாக்கியசாலிகள். திரௌபதியோ கண்ணன் உண்மையில் பரம் பொருளே என்று அறிந்தவள். அவரைத் ஹ்ருதயகமலவாசா என்று துதித்தவள்.

மண்டோதரீ ராவணன் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தவுடன் புலம்புகிறாள். அவனை வதம் செய்ய வந்தவன் சாதாரண மானுடன் அல்ல; பரம் பொருளே என்று அவள் கூறுகிறாள்
யுத்த காண்டத்தில் நூற்றுப்பதினான்காவது ஸர்க்கத்தில் 16,17,18,19 ஆகிய நான்கு ஸ்லோகங்களில் அவளின் பேரறிவு வெளிப்படுகிறது.

வ்யக்த மேஷமஹாயோகீ பரமாத்மா ஸநாதந: I
நாதிமத்ய நிதநோ மஹத: பரமோ மஹாந் II

தமஸ: பரமோதாதா சங்க சக்ர கதாதர: I
ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்ய ஸ்ரீரஜய்யச் சாச்வதோ த்ருவ: II

மாநுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ்ஸத்யபராக்ரம I
ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வாநரத்வமுபாகதை: II

ஸர்வலோகேஸ்வரஸ் ஸாக்ஷாத்லோகாநாம் ஹிதகாம்யயா: I
ஸராக்ஷஸ பரிவாரம் ஹதவாம்ஸ்த்வாம் மஹாத்யுதி: II

mand5

ஏஷ – இவர் (ஸ்ரீராமர்) மஹாயோகீ பரமாத்மா ஸநாதந: – மஹாயோகியும் பரமாத்மாவும் புராணபுருஷரும் அநாதிமத்ய நிதநோ – ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதவரும் மஹத: பரமோ மஹாந் – பெரும்பொருளிலும் சிறந்த பெரும்பொருளூம் தமஸ: பரம: – இருளுக்கு (அஞ்ஞானத்திற்கு) அப்பாற்பட்டவரு தாதா – சிருஷ்டிப்பவரும் சங்க சக்ர கதாதர: -சங்கத்தையும் சக்கரத்தையும் திருக்கரத்தில் கொண்டவரும் ஸ்ரீவத்ஸ வக்ஷா – ஸ்ரீ வத்ஸமென்னும் மறுவை மார்பில் கொண்டவரும் நித்ய ஸ்ரீ –நித்ய லக்ஷ்மீ சமேதரும் அஜய்ய –அஜேயரும் சாச்வதோ த்ருவ: – எக்காலத்திலும் இருப்பவரும், மாறுபடாதவரும் ஸர்வலோகேஸ்வர: – அனைத்து லோகங்களுக்கும் ஈஸ்வரரும் மஹாத்யுதி: -மஹிமை மிக்கவருமாகிய சாக்ஷாத் விஷ்ணு: -சாக்ஷாத் விஷ்ணு பகவான்.

mand17

வ்யக்த – இது திண்ணம் ஸத்யபராக்ரம – ஸத்யமான பராக்ரம்ம் கொண்ட இவர் லோகாநாம் – உலகங்களுக்கு ஹிதகாம்யயா – நன்மை புரியத் திருவுள்ளம் கொண்டு மாநுஷம் ரூபே ஆஸ்தாய – மானிட உருவம் தரித்துக் கொண்டு வாநரத்வம் – வானர உருவத்தை உபாகதை: -அடைந்த தேவைர் ஸர்வை: – தேவர்கள் யாவராலும் பரிவ்ருத: – சூழப்பட்டு த்வாம் – உம்மை ஸராக்ஷஸ பரிவாரம் – அரக்க பரிவாரங்களுடன் ஹதவான் – கொன்று விட்டார்.

mand24

ராமாயணத்தின் மையக் கருத்தை இந்த நான்கே ஸ்லோகங்களில் நாம் காண்கிறோம். விஷ்ணுவுக்கு சஹஸ்ர நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமம் அதி ரஹஸ்யமான அர்த்தங்களைக் கொண்டது. அந்த ஆயிரம் நாமங்களில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மண்டோதரீ இங்கு குறிப்பிடுவது ரஹஸ்யசாரமாகவும், சுவையுடன் கூடியதாயும், ராமரை விஷ்ணுவே என்று நிர்ணயம் செய்வதாயும் அமைந்துள்ளது.

தாரையும் கூட ராமரை பரம்பொருளே என்று இனம் கண்டவள். மண்டோதரியும் அப்படியே.

ராமாயணத்தின் ஜீவநாடியான விஷ்ணு நாமங்கள் இடம் பெறும் ஸ்லோகங்கள் என்பதால் இவை தனிச் சிறப்புடையவையாக ஆகின்றன; உயர்ந்து நிற்கின்றன!

Contact:— Swami_48@yahoo.com

சீதை சொன்ன காகாஸுரன் கதை!

ram gem

By S Nagarajan
Post No.986; Dated 18th April 2014.
அத்தியாயம் 23

சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காண்பித்துத் தன்னுடன் உடனடியாக ராமரிடம் வருமாறு வேண்ட அதற்குச் சீதை மறுத்து ஸ்ரீராமரே தன்னை வந்து மீட்டுச் செல்ல வேண்டும் என்று தன் திருவுள்ளக் கருத்தை வெளியிடுகிறார். அப்போது ஹனுமான் சீதையிடம் ஒரு அடையாளம் தர வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார் உடன் சீதை தன் சூளாமணியைத் தருகிறார். அத்தோடு முன் நிகழ்ந்த காகாசுரனின் கதையையும் அடையாளமாக ஹனுமானிடம் சொல்கிறார். 38வது ஸர்க்கமாக அமையும் சீதை சொன்ன காகாசுரனின் கதை இது தான் :-

சித்திரகூடமலையில் வடகீழ் தாழ்வரையில் உள்ளதும் மந்தாகினிக்கு ஸமீபத்தில் உள்ளதும் ஏராளமான கிழங்குகளும், கனிகளும், தீர்த்தங்களும் அமைந்த சித்தாஸ்ரம்ம் என்னும் ஆஸ்ரமத்தில் ஒரு ப்ரதேசத்தில் ஜலத்தில் பலவகை மலர்களால் நறுமணம் வீசிகிற நெருங்கிய சோலைகளிலும் அலைந்து களைத்து தபஸ்விகளின் ஆசிரமத்திலிருந்து வந்த நீர் என் மடியில் படுத்திருந்தீர்,
அப்போது மாமிசம் உண்பதில் ஆசையுற்ற ஒரு காகம் கூரான மூக்கால் என்னைக் குத்திற்று. அந்தக் காகத்தை மண்ணாங்கட்டியால் பயமுறுத்தி விரட்டினேன்.
ஆனால் மாமிசத்தை விட விரும்பாத அந்தக் காகம் என்னைக் குத்திய வண்ணமே அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. நான் காகத்திடம் சினந்து என் அரைநூல் மாலையை மாத்திரம் கழற்றவும் அதனால் ஆடை நழுவி வீழ்கையில் உம்மால் பார்க்கப்பட்டேன்.

தீனியில் ருசி கொண்ட காகத்தால் குத்தப்பட்டு கோபம் மூட்டப்பட்டுக் களைத்திருந்த நான் உம்மால் பரிஹாஸம் செய்யப்பட்டேன். அதனால் மிகவும் வெட்கம் அடைந்தேன். அப்படியிருந்தும் உம்மிடமே வந்து சேர்ந்தேன். உமது மடியில் வந்து உட்கார்ந்தேன்.முகம் மலர்ந்திருந்த உம்மால் கோபமுற்றிருந்த நான் தேற்றப்பட்டேன்.

நாதா! முகமெல்லாம் கண்ணீர் நிரம்பி இருக்கக் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டிருந்த என்னை அதிகம் கோபம் கொண்டவளாக அறிந்தீர்.

ram in frame

நான் மிகவும் களைப்பால் அப்படியே உமது மடியில் படுத்து உறங்கினேன் நீரும் என் மடியில் கண் வளர்ந்தீர். அப்போது அதே காகம் மறுபடியும் வந்தது. தூங்கி எழுந்திருந்த என்னை மார்பில் கீறிற்று.
அப்படிப் பல தடவை பாய்ந்து பாய்ந்து என்னைக் கீறவே அப்போது சொட்டிய ரத்தத் துளிகளால் ஸ்ரீ ராமர் எழுந்தார்.

அவர் என் மார்பகங்களில் காயப்பட்டதை அறிந்து சினம் கொண்டு,” “உனது மார்பு எவனால் புண்படுத்தப்பட்டது? ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான்?”, என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்து காகத்தைக் கண்டார்.

அந்த காகம் இந்திரனுடைய மைந்தன். கதியில் வாயுவுக்கு நிகரானது. அது அங்கே உடனே அங்கிருந்து மறைந்து விட்டது. கோபம் கொண்ட ராமர் தர்ப்பாஸனத்திலிருந்து ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை மந்திரித்தார்.அது ஊழித்தீயெனப் பற்றி எரிந்தது. காகத்தைத் துரத்தியது.
உலகனைத்தும் ஓடி ஓடிக் களைத்த அது ராகவரையே சரணம் அடைந்தது.சரணம் என்று தம்மை வந்து அடைந்த காகத்தை நோக்கி,”பிரம்மாஸ்திரத்தை வீணாகச் செய்ய முடியாது. ஆகையால் வழி சொல்” என்றார் அவர்.

காகம், ‘அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்’ என்று கூறவே பிரம்மாஸ்திரம் அதன் வலது கண்ணை அழித்தது.

அது முதல் காக்கைகளுக்கு ஒற்றைக் கண் என்பது தெரிந்த விஷயம் என்று இப்படி காகத்தின் நீண்ட வரலாற்றை சீதை கூறி அருளினார். பின்னர் தன் சூடாமணியை ஹனுமானிடம் தந்தார்.

ததௌ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம் I
ப்ரதேயோ ராகவாயேதி சீதா ஹனுமதே ததௌ II

-சுந்தர காண்டம், முப்பத்தெட்டாவது ஸர்க்கம், எழுபதாவது ஸ்லோகம்

தத: – அப்பொழுது வஸ்த்ரகதம் – வஸ்த்ரத்தில் முடிந்திருந்த சூடாமணிம் – சூடாமணி என்னும் திவ்யம் சுபம் – திவ்ய ஆபரணத்தை முக்த்வா – அவிழ்த்தெடுத்து ராகவாய – ராகவருக்கு ப்ரதேய – சேர்த்து விட்டேன் இதி – என்று சொல்லி சீதா ஹனுமதே ததௌ – சீதை ஹனுமானிடம் தந்தாள்

இந்த சூடாமணியைக் கண்டவுடன் தான் ராமருக்கு உயிர் வந்தது. முக்கியமான ஒரு கட்டத்தை வால்மீகி விளக்குகையில் சூடாமணி தரப்பட்ட இந்த ஸ்லோகம் அர்த்தமுள்ள ஸ்லோகமாக அமைகிறது. காலம் காலமாக கேட்பவரின் மனத்தை உருக வைக்கும் கவிதையாகவும் ஆகி விட்டது.
contact swami_48@yahoo.com

கோசலையின் ஆசீர்வாதம்!

namaramayana

கட்டுரை எண்—984; தேதி 17th April 2014.
எழுதியவர் — ச.நாகராஜன்
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 22

வனவாசம் செல்வது உறுதியாகி ராமர் அனைவரிடமும் விடை பெறும் தருணம். வால்மீகி இந்த உணர்ச்சி பூர்வமான கட்டத்தைப் பல்வேறு சித்திரங்களால் அமைத்து நம்மை உருக வைக்கிறார்.
அயோத்யா காண்டத்தில் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமையும் தாயின் அனுக்கிரஹம் பெறும் ஸர்க்கத்தில் கோசலை தன் மகனின் நலனுக்காக ஸ்வஸ்த்திய்யனம் செய்ய மனதைச் செலுத்தி சுபலக்ஷணம் உடைய தேவ ஸ்தோத்திரத்தைச் செய்தாள். பின்னர் மங்களாசாஸனமாக கோசலை கூறும் வாக்கியங்கள் ஒவ்வொருவரும் படித்து மனத்தில் இருத்த வேண்டியவை.

ராமருக்கு அவர் அளிப்பது இது தான்:

யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச I
ச வை ராகவாஷார்த்தூல தர்மஸ்த்வாமபிரக்ஷது II
(25 ஆவது ஸர்க்கம், 3 ஆவது ஸ்லோகம்)

ராகவாஷார்த்தூல – ரகு குல திலகமே யே – எந்த தர்மம் – ஒரு தர்மத்தை த்ருத்யா ச- மனோதைரியத்தோடும் நியமேன ச – நியமத்தோடும் த்வம் – நீ பாலயஸி – அனுஷ்டித்து வருகிறாயோ ச தர்ம வை – அந்த தர்மமே த்வாம் – உன்னை அபிரக்ஷது – பாதுகாக்கக்கடவது

ram gem doll

யேப்ய: ப்ரணமஸே புத்ர சைத்யேஷ்வாயதனேஷு ச I
தே ச த்வாமபிரக்ஷந்து வனே சஹ மஹர்ஷிபி: II
(25 ஆவது ஸர்க்கம், 4ஆவது ஸ்லோகம்)

புத்ர – குழந்தாய் சைத்யேஷு – தேவாலயங்களிலும் ஆயதனேஷு ச – யாகசாலைகளிலும் யேப்ய: – எவர்களை உத்தேசித்து ப்ரணமஸே – நீ நமஸ்கரிக்கின்றாயோ தே ச – அவர்கள் எல்லோரும் வனே – வனத்தில் மஹர்ஷிபி: சஹ – மஹரிஷிகளோடு இருக்கும் த்வாம் – உன்னை அபிரக்ஷந்து – பாதுகாக்கக் கடவது

ram on throne

இதைத் தொடர்ந்து ஒரு நீண்ட ஆசீர்வாத வசனத்தை கோசலை அருள்கிறார். ருதுக்கள், பக்ஷங்கள், மாதங்கள், வருடங்கள், ஸப்த ரிஷிகள், நாரதர் திக் பாலர்கள் உள்ளிட்ட அனைவரையும் சொல்லி அனைத்து சூழ்நிலையிலும் நீ பாதுகாக்கப்படுவாயாக என்று மனமுவந்து ஆசீர்வதிக்கிறார்.

இந்த வசனம் ஒரு கவசமாகவே அமைகிறது.

காலம் காலமாக ப்ரவசனகர்த்தாக்கள் தாயார் வழிநடைப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளைகளுக்குக் கட்டித் தரும் மூட்டை போல கோசலை அவதார புருஷனுக்கு உகந்த விதத்தில் தர்மமே உன்னைப் பாது காக்கக் கடவது என்று ரக்ஷா மூட்டையைக் கட்டித் தருவதைப் புகழ்ந்து போற்றி விளக்கி வருகின்றனர்.

47 ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸர்க்க பாராயணம் அனைத்து மேன்மைகளையும் தரும் என்பதில் ஐயமில்லை!

contact swami_48@yahoo.com

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர்!!!

Anayar

இசை மூலம் இறைவனை அடைந்த ஆனாய நாயனார்
எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—982; தேதி— 16th April 2014.

அறுபத்து மூன்று சிவனடியார்களின் கதைகளைக் கவிதை வடிவில் தந்தது பெரிய புராணம். இதை நமக்குத் தந்தவர் சேக்கிழார் பெருமான். இதில் வரும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், கண்ணப்பர், நந்தனார் முதலிய கதைகள் பலருக்கும் தெரியும். ஆனால் சேக்கிழார் பாடிய இன்னும் சிலரைப் பற்றி பலருக்கு அதிகம் தெரியாது. குறிப்பாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டே சிவலோகம் சென்ற ஆனாயர் பற்றி பலருக்கும் தெரியாது. புல்லாங்குழலில் நமசிவாய மந்திரத்தை இசைத்தவுடன் சிவனே பூவுலகிற்கு வந்து ஆனாய நாயனாரை புல்லாங்குழல் ஊதிக் கொண்டே அழைத்துச் சென்ற அற்புதமான வரலாற்றை சேக்கிழார் மிக அழகாகப் பாடியுள்ளார். இது உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம்!!

flute, anayanar2

மேல் மழநாடு என்பது சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி. அங்கே திருமங்கலம் என்று ஒரு ஊர். மங்கலம் என்றால் பிராமணர்கள் வாழும் ஊர் என்பது பொருள். ஆனால் அந்த ஊரில் வாழ்ந்த ஒர் மாடு மேய்க்கும் இடையர் பற்றிய கதை இது. அவர் பெயர் ஆனாயர். அவருக்கு தெரிந்தது மாடு மேய்க்கும் தொழில் ஒன்றுதான். கிருஷ்ண பரமாத்மாவின் ஜாதி. ஆனால் கண்ணனுக்கோ உலகில் தெரியாத விஷயம் இல்லை. ஆனாயருக்கு மாடு மேய்க்கும் தொழிலோடு வேறு இரண்டே விஷயங்கள் மட்டும் தெரியும். ஒன்று புல்லாங்குழல் வாசிப்பது, இரண்டு பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பது. அதையும் புல்லாங்குழலிலேயே வாசித்து மகிழ்வார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்த அவரது கவனிப்பில் ஆடு மாடுகள் எல்லாம் சாப்பிட்டுப் பல்கிப் பெருகின. ஒரு நாள் ஒரு கொன்றை மரத்தைப் பார்த்துவிட்டார். அதன் பூக்கள் சரம் சரமாகத் தொங்கியதைக் கண்டவுடன் சிவ பெருமான நினைவில் மூழ்கிவிட்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. ஒரு பச்சைப் பசேல் என்று பச்சைக் கம்பளம் விரித்தார் போன்ற வயல் வெளியில் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தார். தூரத்தில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. ஒரு பக்கம் பச்சை வயல்; மறுபக்கம் நீல மேகம்; இந்தப் பிண்ணனியில் வெள்ளை நிறக் கொக்குகள் சிறகடித்துப் பறந்தன. இந்த அற்புதமான இயற்கை எழிலைப் பார்த்தவுடன் அவருக்கு இவற்றை எல்லாம் படைத்த இறைவன் நினைவுக்கு வரவே வயல் வரப்பிலேயே சமாதி நிலைக்குப் போய்விட்டார். அவருடன் வந்தவர்கள் அவரை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டி இருந்தது. அவர் சமாதி கலைந்து சுய நினைவுக்கு வர சில நாட்கள் ஆயின!!

aanaayanar

நாமாக இருந்தால் இந்த அற்புதமான காட்சியை உடனே மொபைல் போனில் புகைப் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் போட்டு பெருமைப் பட்டிருப்போம். ஆனால் ஆனாய நாயனார், ராம கிருஷ்ண பரமஹம்சர் போன்றோருக்கு சத்யம் – சிவம்—சுந்தரம் மூன்றும் இறைவனின் படைப்பு. எங்கெங்கெல்லாம் சுந்தரம் (அழகு) இருக்கிறதோ அது எல்லாம் அவர்களுக்கு இறைவனையே நினைவுபடுத்தும்.

கொன்றை மரத்தையும் அழகிய பூங்கொத்துக்களையும் கண்ட ஆனாயர் எடுத்தார் புல்லாங்குழலை, இசைத்தார் நமசிவாய மந்திரத்தை! இதைத் தொடர்ந்து அவரைச் சுற்றியிருந்த உலகமெல்லாம் ஆடாது அசங்காது நின்றன. இதோ சேக்கிழார் பாடல் வாயிலாகவே அதைக் காணுங்கள்:

“வள்ளலார் வாசிக்கும்
மணித் துளை வாய் வேய்ங்குழலின்
உள்ளுறை அஞ்செழுத்து
ஆக, ஒழுகி எழும் மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும்
மேல் அமரர் தருவிளை தேன்
தெள் அமுதின் உடன் கலந்து
செவி வார்ப்பது எனத் தேக்க”.

அதாவது அவர் வாசித்தது அமிர்தத்தையும் கற்பக மரம் ஒழுக்கும் தேனையும் கலந்து கொடுத்தது போல இருந்ததாம் (அமரர் தரு= கற்பக விருட்சம்).

அடுத்தாற்போல பசுக்களும் கன்றுகளும் மான் முதலிய காட்டு விலங்குகளும் என்ன செய்தன என்று படியுங்கள்:–

ஆன் நிரைகள் அறுகு அருந்தி
அசைவிடாது அணைந்து அயரப்
பால் நுரை வாய்த் தாய்முலையில்
பற்றும் இளம் கன்றினமும்
தான் உணவு மறந்து ஒழிய
தட மருப்பின் விடைக் குலமும்
மான் முதலாம் கான் விலங்கும்
மயிர் முகிழ்த்து வந்து அணைய.”

பொருள்:– பசுக்கள் சாப்பிட்ட உணவை அசைபோட மறந்தன. கன்றுகள் பாதியில் பால் குடிப்பதை நிறுத்தின. காளைகள் வந்து குழுமின. மான் முதலிய விலங்குகள் மயிர்க்கூச்சம் அடைந்தன.

anayar color

மயில் முதலிய பறவைகள் என்ன செய்தன என்பதையும் நம் கண் முன்னே படம் போலக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்:

ஆடு மயில் இனங்களும் அங்கு
அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த
உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய
மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்.
கூடியவன் கோவலரும்
குறை வினையின் துணை நின்றார்

பொருள்:– மயில்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆனாயரைச் சூழ்ந்து நின்றன. பறவைகள் அவரைச் சுற்றி கூடு கட்டின. இடையர்கள் பாதி வேலைகளைப் போட்டுவிட்டு அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பூமிக்கடியில் வாழும் நாகர்கள், வானத்தில் சென்று கொண்டிருந்த தெய்வ மகளிரான அரம்பையர், வித்யாதரர், சாரணர், கின்னரர், தேவர்கள் ஆகியோர் விமானங்கள் எல்லா வற்றுடனும் அங்கே கூடிவிட்டனர்.

பணி புவனங்களில் உள்ளார்
பயில் பிலங்கள் அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர்
மருங்கு மயங்கினர் மலிர்ந்தார்
தணிவு இல் ஒளி விஞ்சையர்கள்
சாரணர் கின்னரர் அமரர்
அணி விசும்பில் அயர்வு எதி
விமானங்கம் மிசை அணைந்தார்.

இந்தப் பாடல்கள் புல்லாங்குழல் இசையின் மகிமையையும் பாடுவதால் அப்படியே பாடல் வடிவில் படிப்பது இன்பம் பயக்கும்.

மரங்கள் அசையவில்லை. ஆறுகள் ஓடவில்லை, அருவிகள் நீர் ஒழுக்கு இன்றி அப்படியே நின்றன. கடல் அலைகள் வீசவில்லை என்று சேக்கிழார் பாடிக்கொண்டே போகிறார். இப்படி ஸ்தாவர, ஜங்கமப் பொருட்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் சிவனும் உமையும் இந்த இசையில் மயங்கி காளை வாகனத்தில் ஏறிப் புறப்பட்டனர்.

ஆனாயர் குழல் ஓசை
கேட்டருளி அருள் கருணை
தான் ஆய திரு உள்ளம்
உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணர் ஆம்
கண்ணுதலார் விடை உகைத்து
வான் ஆறு வந்து அணைந்தார்
மதி நாறும் சடை தாழ

“உடனே எம்முடன் வருக. வீட்டுக்குள் போய் ‘’ட்ரஸ்’’ எல்லாம் ‘சேஞ்ச்’ (’மாற்ற) பண்ண வேண்டாம். அப்படியே எம்முடன் வருக”– என்று சிவனும் உமையும் கூறினர்:–

“இந்நின்ற நிலையே நம்பால்
அணைவாய் என, அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார்
ஐயர் திருமருங்கு அணைந்தார்”

உடனே விண்ணவர்கள் மலர் மாரி பொழிந்தனர். முனிவர்கள் வந்து வேதம் ஓதினர். ஆனாயர் புல்லாங்குழலை நிறுத்தவே இல்லை. வாசித்துக் கொண்டே சிவனுடன் சென்று விட்டார். இவ்வாறு இசைக் கருவியை வாசித்துக் கொண்டே சிவலோகம் போன ஒரு தொண்டரைப் பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நாமும் கதையை முடித்தோம். நமசிவவாய ஓம்!!

விண்ணவர்கள் மலர் மாரி
மிடைந்து உலகம் மிசை விளங்க,
எண்ணில் அரு முனிவர் குழாம்
இருக்கு மொழி எடுத்து ஏத்த’
அண்ணலார் குழல் கருவி
அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொன் பொதுவினிடைப் புக்கார்.

சுபம்! Contact swami_48@yahoo.com