பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

24 Bhajan groups in California (USA) joined together for a marathon Bhajan session.

பஜனை செய்வது நல்லது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

லண்டன் மெட்ரோ பத்திரிக்கையில் 2013 ஜூலை 9ஆம் தேதி ஒரு சுவையான செய்தி வந்துள்ளது. கூட்டுப் பிரார்த்தனை செய்வது உடலுக்கு நல்லது.சுவீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.

 

எல்லோரும் கூட்டாக சேர்ந்து உரத்த குரலில் பாடுவது இருதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் ஒழுங்குபடுத்துகிறது. பாடுவதே நல்லது. அதிலும் கூட்டாகப் பாடுவது இன்னும் நல்லது என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

Sri sathya Sai Baba who made Bhajan a household name.

விஞ்ஞானிகள் ஒரு தொண்டர் குழுவை அமைத்து மூன்று வகையான வெவ்வேறு பாடும் பணியைக் கொடுத்தனர். முதலில் தனித் தனியே வாயை மூடிக்கொண்டு குரல் எழுப்பச் சொன்னார்கள் (ஹம் செய்வது அல்லது ரீங்காரம் செய்வது). இதற்கு அடுத்த படியாக ஒரு துதிப் பாடலைப் பாடச் சொன்னார்கள். கடைசியாக ஒரு மந்திரத்தை மெதுவாகச் ஜெபிக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் குழுவின் நாடித் த்டிப்பும் இருதயத் துடிப்பும் கணக்கெடுக்கப்பட்டது.அப்போது இருதயத்தின் செயல் பாட்டூக்கும் பாடும் முறைக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

நீண்ட சொற்கள் கொண்ட பாட்டுக்களைப் பாடுகையில் மூச்சை அடக்கி யோகா செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கிறதோ அந்த அளவுக்கு நற்பலன்கள் கிட்டுவதாக  டாக்டர் ஜான் விக்காப் கூறுகிறார்.

 

கூட்டாக சர்ச்சுகளில் பாடுவதோ, கால்பந்து போட்டிகளுக்குப் போகும் ரசிகர்கள் தங்கள் குழுவின் பாடல்களைப் பாடும்போதோ (இங்கிலாந்து போன்ற நடுகளில் கால்பந்து அணிகளுக்கு கீதங்கள் உண்டு) அவர்களுடைய இருதயத் துடிபு அமைதியாக சீராக இருப்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது

 

கோதன்பர்க் பல்கலைகழக ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் விக்காப் பேசுகையில் அடுத்தபடியாக இசை மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராயப்போவதாகக் கூறினார். மூச்சுவிடக் கஷ்டப்படுவோருக்கு பாட்டு சிகிச்சை கொடுத்தால் நால் குணம் கிடக்கும் என்று அவர் நம்புகிறார்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால் பஜனை செய்வது நல்லது, கூட்டுப் பிரார்த்தனை செய்வது நல்லது. சுவாமி சிவானந்தா முதல் சத்ய சாய் பாபா வரை பரப்பிய பஜனை புகழ் பெறும் காலம் வந்துவிட்டது. திருப்புகழ் பஜனையும், தேவாரக் கூட்டுப் பிரார்த்தனையும் பாட திட்டத்தில் இடம்பெறும் காலம் வந்துவிட்டது!


Amma in Houston (USA) doing Bhajan

அந்தக் கால சினிமாப் பாட்டில் சும்மாவா சொன்னார்கள்:

‘’பஜனை செய்தால் மழை பெய்யும்

பக்குவமாகவே, பஜனை செய்தால் மழை பெய்யும்

சுண்டல் வடையுடன், பஜனை செய்தால் மழை பெய்யும்’’

 

நமப் பார்வதி பதயே:— ஹர ஹர மஹாதேவா!

தென்னாட்டுடைய சிவனே போற்றி—

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா!

 

(இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுதுவோர் எழுதியது ‘’லண்டன் சுவாமிநாதன்’’ என்று வெளியிட அன்புடன் வேண்டுகிறேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள்)

Vedic God Varuna in Oldest Tamil Book

East European Slavs worshiped Varu as Perun

Oldest Tamil book Tolkappaiam dated to 1st century BC mentions Varuna as one of the four Gods allocated four different land divisions of ancient Tamil country. This raised eye brows of many people because Varuna is not mentioned much in Tamil literature. Indra is mentioned from the oldest to the latest literature which I gave in my last post.

 

Agni, though not mentioned directly is mentioned in the Vedic rites of Brahmins in Tamil literature. 2000 year old Sangam Tamil literature praised the Brahmins as ‘’worshippers of three fires’’ (Muth Thee). And like I mentioned in my post on Indra, Agni is worshipped by Tamils in the form of Subramanya, who the Tamils called Murugan. The very Tamil word given to him in the oldest Tamil book is Seyon=Reddish. Agnijathar and Agni Bhu are few of Lord Murugan’s popular names. Agnijathar means Fire Born. Lord Skanda was born from the fire of Lord Shiva’s Third Eye.

 

Now let us look at Varuna. Varuna in the Vedas is a powerful god. He is the guardian of cosmic order (rta=rhythm=ruth=truth). Varuna is in charge of the oceans, water sources and rains. During times of drought Varuna Japa (Prayers to Varuna) is done. His vahana (vehicle) is shark fish or crocodile. Tamils believed his control over rains and worshipped him for rains. Oldest Tamil book Tolkappiam says he is the god of littoral areas/Neithal. Seaward people and fisher men worshipped him.

 

At lower level Varunan is in charge of the direction West where as Indra controls East. In Persian literature Varuna is the most powerful God. Mitra and Varuna are paired in Vedic hymns. This led to the belief of interpreting them as Day and Night, Sun and Moon, Light and Dark and Positive and Negative energy. Tamil saint Agastya is considered son of Varuna and Urvasi. This brings Varuna closer to Tamils. Agastya was the one who made a grammar for Tamil language.

We have a few references to Varuna in Tamil:

Barathavars are the people of the sea. They would not go to sea for fishing on full moon days. This coincides with the Vedic link of Varuna with the moon and Mitra with the sun. Barathavars may be related to Bharats of Rig Veda. But this requires further research. Varuna is associated with sea in Rig Veda (RV I-25) in many places.

Tamils used to plant the Shark bone in the sand on the sea shore and do Puja with flower garlands. They drink toddy extracted from palm and paddy. This happened on the full moon day. This confirms its Vedic origin: 1.Association with shark/sea monster2.Association of moon/full moon day 3.Association with sea 4. Association of the clan name bharats  and 5.Confirmation of Varuna as Tamil God by Tolkappiam(Porul.1-5). He used the Sanskrit name Varuna.

 

The Sanskrit word for sea Vaaranam has its origin in Varunan.

Pattinappalai lines 86 to 93 gives us the above information.

Read my earlier post ‘’Indra in Oldest Tamil Literature’’.

Image

Valluvar and Varuna

Tamil’s greatest contribution to the world of literature is a book called Tirukkural. Tirukkural means a book of sacred couplets. There are 1330 couplets divided in to three chapters Dharma/virtue, Artha/wealth and Kama/love (Aram, Porul, Inpam in Tamil). They deal with all aspects of human life. One who reads it today would be surprised at its freshness and relevance to our own problems today. It was written by Valluvar 1500 years ago. He also praised Varuna without naming him. He placed the chapter on RAIN as the second one, next to GOD/Prayer.

 

Valluvar says in couplet 18:

‘’If rains fail, festivals of the year and the daily worship of the gods will cease’’.

I interpret it as the Sea festival to honour Indra and Varuna. The worship he mentions is the worship of Varuna. It is to be noted that he used the Sanskrit word Puja ( Pusanai in Tamil) in this couplet and in the very next couplet he jumps to the Bhagawad Gita phrase Dhana and Tapas (Dhanam, Thavam in Tamil). He boldly used the Sanskrit words to start his couplet, which was not practised during Sangam period.

Couplet 19:

‘’Charity and devotional practices will not be observed in the world unless rain falls.’’

I have given umpteen examples in my previous 570 + posts that the Aryan Dravidian Race theory is a fraudulent one that was imposed by vested interests. This Varuna worship in the southern most part of India also debunks the race theory.

 

Swami_48@yahoo.com; Pictures are taken from various sites. Those who use my articles are requested to give full credit to the blog or the author London Swaminathan.Thanks.

Read my earlier articles:

Indra in the Oldest Tamil Book

Date of Tolkappiam

 

தொல்காப்பியத்தில் வருணன்

Image

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் வைக்கின்றனர். கார்த்திகேசு சிவதம்பி, வையாபுரிப் பிள்ளை போன்றோர் போல நானும் இதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைத்துள்ளேன். (தொல்காப்பியர் காலம் பற்றிய எனது (ஐந்து பகுதிகள்) கட்டுரையில் காண்க).

ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.

 

மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.

வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்

தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

 

தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’

 

தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:

Image

‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்

சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

மடற்றாழை மலர்மலிந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை இரும் பரதவர்

பனிதழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா

துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)

 

பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.

வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.

 

மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.

 

வள்ளுவன் போற்றிய வருணன்

இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :

‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)

‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)

பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;

 

மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.

மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.

தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?

Image

Slavs in Russia and Ukraine worship Varun as Perun

என்னுடைய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தொல்காப்பியத்தில் இந்திரன்

2.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

3.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

4.அதிசயத் தமிழ் முனிவர்/புலவர் வால்மீகி

5.சோம பானமும் சுரா பானமும்

6.வீரத்தாயும் வீர மாதாவும்

7.சிந்து சமவெளியில் பேய் முத்திரை + 570 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார புத்ரர்கள்!

Deodar means Tree of Gods

 

Picture of Deodar; Deodar means Tree of the Gods.

குழந்தை இல்லாதோர் மற்றவர்களின் குழந்தைகளை தத்து எடுத்தலையும் சுவீகாரம் எடுப்பதையும் நாம் அறிவோம். சிவ பெருமானும், தமிழர்களும் மரங்களை தத்து எடுத்து புத்திரர்களாக வளர்த்ததைப் பலர் அறியார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளாலார் பெருமான் நமது முன்னோர்களின் கருத்தைத்தான் மீண்டும் சொல்லி இருக்கிறார்.

 

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசன் ஒரு புதிய செய்தியைக் கூறுகிறார். சிவ பெருமான் ஒரு தேவதாரு மரத்தை மகனாக வளர்த்தார் என்று. இதே போல நற்றிணைக் கவிஞன் ஒருவன் ஒரு தமிழ்ப் பெண், அவளுடைய மகளாக வளர்த்த ஒரு புன்னை மரம் பற்றிய சுவையான செய்தியைக் கூறுகிறார். மேலே படியுங்கள்:

 

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

 

ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் கூறுகிறான்:’’அதோ அந்த தேவ தரு மரத்தைப் பார். அதை சிவ பெருமான் மகன் போல வளர்த்தார். பார்வதி தேவி தனது இரண்டு ஸ்தனங்களால் முருகப் பெருமானுக்கு எப்படி பால் ஊட்டினாரோ அதே போல இந்த மரத்துக்கும் தங்கக் குடங்களால் தண்ணீர் வார்த்தார். ஒரு நாள், ஒரு காட்டு யானை அதன் தலையை இதன் பட்டையில் உரசவே அது உதிர்ந்தது. தேவிக்கு மிக வருத்தம். முருகப் பெருமானை அசுரர்கள தாக்கி காயப் படுத்தியது போல அவர் வருத்தப் பட்டார்’’.–(ரகு.2–36/39)

 

இதே கருத்தை மேக தூதத்திலும் (பாட்டு 74) கூறுவார்: ‘’ஏ மேகமே! அங்கே ஒரு மந்தார மரத்தைப் பார்ப்பாய். என் மகன் போல வளர்த்த மரம். இப்போது அதுப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். என் காதலி அதனை எளிதாகப் பறிக்கும் அளவுக்கு அது வளைந்து தொங்கும். (இந்தக் கருத்து நற்றிணைப் பாடல் 170-இல் எதிரொலிப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன்).

 

காளிதாசனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலத்தில் முழுக்க முழுக்க தாவர, பிராணிகள் அன்புச் செய்திகளைக் கண்கிறோம். மல்லிகைக் கொடிகளை சகுந்தலை, தனது சகோதரி என்று அழைக்கிறார். ஒரு மல்லிகைக் கொடிக்கு ‘வனஜோத்ஸ்னி’ என்று பெயரும் சூட்டுகிறார். மான்களையும் சகோதரி என்றே அழைக்கிறார்.  சாகுந்தலம் நாலாவது காட்சி முழுதும் இந்த வசனங்கள் வருகின்றன. ஓரிடத்தில் தோழி சொல்கிறார்: ‘’அதோ பார். மாதவி பூப் பந்தல். உனது தந்தை கண்வ மகரிஷி உன்னை வளர்த்தது போல அன்பாக ஊற்றி வளர்த்தாரே, நினைவு இருக்கிறதா?’’

 

குமார சம்பவம் (2-55) என்னும் காவியத்தில் விஷ மரத்தையும் கூட யாரும் அடியோடு வெட்ட மாட்டானே எனற வசனமும், சாகுந்தலத்தில் (4-1) மல்லிகைக் கொடியில் எந்த மகா பாவியாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற வசனமும் வருகிறது. இவை அத்தனையும் தமிழிலும் இருக்கின்றன.

punnai-tree

Picture of Punnai Tree

தமிழ் மரம் ஒரு தங்கை

நற்றிணையில் (172) ஒரு அற்புதமான பாடல். எழுதியவர் பெயர் பாடற்குறிப்பில் இல்லை:

‘’யாம் தோழிமாரோடு விளையாடும்போது வெண்மையான மணலில் புதைத்து மறந்து கைவிட்ட புன்னை மர விதை முளைத்து வெளிவந்தது. அதற்குத் தேன் கலந்த இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அது வளர்ந்து மரமாகியது. அப்போது அன்னை, ‘’நும்மிலும் சிறந்தது புன்னை; அது நும் தங்கையாகும்’’ என்று புன்னையது சிறப்பைக் கூறினாள். ஆகையால் புன்னையின் கீழ் உள்ள நிழலில் நும்மொடு அளவளாவலை யாம் நாணுகிறோம்’’.

 

சகுந்தலை சொன்னதை அப்படியே இந்தப் பாடலில் காண்கிறோம். நான் ஏற்கனவே எழுதிய ஏழு கட்டுரைகளில் காளிதாசன், சங்க இலக்கிய காலத்துக்கு முன் , கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொன்னதற்கு இது மேலும் ஒரு சான்று.

 

நற்றிணை 230 ஆம் பாடலில், நான் வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றியது போல மகிழ்கிறேன் என்று பாடுகிறான் ஒரு கவி. இன்னொரு பாடலில் மருந்து மரத்தைக் கூட யாரும் முழுதும் வெட்ட மாட்டார்களே என்று வசனம் பேசுகிறான் ஒரு தமிழ்ப் புலவன் (நற்றிணை 226-கணி பூங்குன்றனார்).

தாவரங்கள், பிராணிகள் பால் அன்பு மழை பொழிந்த கடை எழு வள்ளல்கள் பாரியும் பேகனும் உலகிற்கே உதாரணமாகத் திகழ்கிறார்கள். முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி. கொழு கொம்பு இல்லாமல் காற்றில் பட படத்தவுடன் அவன் மனமும் படபடுத்தது, பரிதவித்தது. பேகன்,  மழை மேகம் கண்டு ஆடிய மயிலைக் குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி தனது விலை மிகு சால்வையைப் போர்த்தினான் அன்றோ. இவர்கள் எல்லாம் சகுந்தலையின் சகோதரர்கள் என்றால் மிகையாகா.

 

ராமன், சீதை, கண்ணகி, சகுந்தலை பிரிவைப் பொறுக்க முடியாமல் பிராணிகளும் தாவரங்களும் என்ன என்ன செய்தன என்பது பற்றீ நூற்றூக் கணக்கான உதாரணங்கள் உள. எழுத இடம் போதா.

ரிஷி முனிவர்களைச் சந்திக்க காட்டிற்குள் நுழைந்த அரசர்கள் தொலை தூரத்தில் சேனை சைன்யங்களை நிறுத்திவிட்டு வருவார்கள். இதற்குக் காரணம் கூறும் காளிதாசன், செடி கொடி மரங்களை சேதமுறாமல் தடுக்கவே என்பான் (ரகு 11-52). புறச் சூழல் பாதுகாப்பிலும் மரங்கள் பாதுகாப்பிலும் எத்தனை கவனம்!! இன்று பத்திரிகைகளில் பெரிதாக வரும் விஷயங்களை 2000 ஆண்டுகளுக்கு முன் போகிற போக்கில் கவிதையில் தந்த வடமொழி, தென் மொழிக் கவிஞர்கள், ஒரே நாடு ஒரே சிந்தனை என்ற கொள்கைக்கு வலுச் சேர்ப்பர்.

 

இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே (பைகஸ்) குடும்பத்தைச் சேர்ந்த ஆல மரம், அரச மரம், அத்தி மரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி முதல் பிராமணர்களின் அன்றாட யாகம் சமிதாதானம் ஆகியன முதல் முக்கியத்துவம் பெறும் அரச மரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் இருப்பதாக வட மொழி ஸ்லோகம் கூறுகிறது.

cedus deodara in Kumaon, Himalayas painting at London Kew Gardens

 

Picture of Himalayan Deodars; painting from Kew Gardens, London

மரங்கள் வாழ்க! ’’காடு வளர்ப்போம், நல்ல கலை வளர்ப்போம்’’:-பாரதி

Please read my earlier posts on Kalidasa:

1.Gem stones in Kalidasa and Tamil Sangam Literature

2.Holy River Ganges in Kalidasa and Sangam Tamil Literature

3.Gajalakshmi in Kalidasa and Sangam Tamil Literature

4.Sea in Kalidasa and Sangam Tamil Literature

5. Bird Migration in Kalidasa and Tamil literature

6.Hindu Vahanas in Kalidasa and tamil literature

7.Amazing Statistics on Kalidasa

8.Kalidasa’s age: Tamil works confirm 1st Century BC

9.சங்கத்தமிழ் இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள்

10. காளிதாசனின் னூதன் உத்திகள்: தமிழிலும் உண்டு

Contact swami_48@yahoo.com; pictures are used from other websites;thanks.

ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள்!

படத்தில்: காந்திஜி உண்ணாவிரதம்

ஆநிரை கவர்தல்

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போரைத் துவக்குவது எப்படி? ரிக்வேதத்திலும் மஹாபாரதத்திலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஒரே முறையைத் தான் பாடி இருக்கிறார்கள். எல்லை கடந்து போய் மாடு திருடுங்கள், மோதல் வரும்— இதுதான் ரிக் வேத காலத்திலிருந்து சேர சோழ பாண்டிய மன்னர் வரை கையாண்ட உத்தி. இமயம் முதல் குமரி வரை ஒரே உத்தி. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்குப் பின்பற்றப்பட்ட உத்தி. ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் பாடல்களிலும், பாகவதத்திலும், மஹா பாரதத்திலும் ‘’ஆநிரை கவர்தல்’’ உள்ளது.

ஆரியர்கள் வேறு, திராவிடர்கள் வேறு என்றும் இருவருக்கும் வெவ்வேறு கலாசாரம் இருந்தது என்றும் பொய்மை வாதம் பேசியோருக்கு இந்த உண்மை ‘’சம்மட்டி அடி’’ கொடுக்கும். இது ஒரு வாதம் மட்டும் அல்ல. இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றே என்று நிரூபிக்க ஆணித்தரமான வாதங்களைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

தோற்றுப் போன மன்னர்களின் நிலத்தை, கழுதைகளை ஏரில் பூட்டி உழும் வழக்கத்தை கலிங்க மன்னன் காரவேலனும் புறநானூற்று மன்னனும் பின்பற்றியதை ‘’கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’’ என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன். வடக்குத் திசை புனிதமானது; இமயமும் கங்கையும் புனிதமானது என்பது புறநானூற்றிலும் காளிதாசன் கவிதையிலும் இருப்பதையும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டேன்.

மஹாபாரதத்தில் விராட பர்வத்தில் ஆநிரை கவர்தல் வருகிறது. மத்ஸ்ய தேச மன்னன் விராடனின் அரண்மனையில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் (கரந்துறை வாழ்க்கை) செய்கின்றனர். த்ரிகர்த்தா படைகள் திடீரென்று தாக்கி ஆநிரைகளைக் கவர்ந்து விராட மன்னனையும் கைது செய்து விடுகின்றனர். 13 ஆண்டுகள் வனவாசம் முடிந்தவுடன் பாண்டவர் ஐவரும் அவர்களுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டி படைகளுடன் சென்று விராடனை விடுதலை செய்கின்றனர். அவன் தனது மகள் உத்தராவை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்குக் கொடுக்கிறான்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூற்றின் பாடல் 257 முதல் 269 ஆம் பாடல் வரை இருக்கிறது. இதை வெட்சித் துறைப் பாடல்கள் என்பர். இவை ‘ஆநிரை கவர்தல்’ பற்றிய பாடல்கள். உலோச்சனார் (258), பெரும்பூதனார் (259), வடமோதங்கிழார் (260) ஆவூர் மூலங்கிழார் (261), மதுரைப் பேராலவாயார் (262) உறையூர் இளம் பொன் வாணிகனார் ( 264), கருந்தும்பியார் (265), பெருங்குன்றூர் கிழார் (266) பாடிய படல்கள் இவை. தொல்காப்பியத்திலும் பதிற்றுப்பத்திலும் ஆநிரை கவர்தல் உள்ளது.

ரிக்வேதத்தில் பாணிக்கள் இப்படித் திருடுவதைக் காண்கிறோம். சில கிரேக்க, ஐரிஷ் குறிப்புகளும் உண்டு. ஆயினும் இந்தியா போல தொடர்ந்து பல குறிப்புகள் இல்லை. இது இந்தியர்களின் தனி வழக்கம் என்பதற்கு தமிழ் இலக்கியக் குறிப்புகள் சான்று பகரும். சிலர் கூறுவது (பிதற்றுவது) போல இந்தோ ஆரிய வழக்கம் அல்ல.

நெல்லையில் கோதுமை அல்வா கிடைக்கும், டில்லியில் பூசணிக்காய் அல்வா கிடைக்கும், பம்பாயில் அவல் அல்வா கிடைக்கும், கல்கத்தாவில் தூத் (பால்) அல்வா கிடைக்கும். இதையே வெளி நாட்டு அறிஞர்கள் எழுதும் போது ஒன்றை திராவிட அல்வா என்றும், இன்னொன்றை ஆரிய அல்வா என்றும், கல்கத்தா அல்வாவை முண்டா இன மக்கள் அல்வா என்றும் அவல் அல்வாவை இனம் புரியாத ஒரு இனத்தின் அல்வா என்றும் எழுதி பி.எச்டி. வாங்குவார்கள். உலகத் தமிழ் மஹா நாட்டில் அவர்களுக்கு பொன்னாடை கிடைக்கும், இலவச பிளேன் டிக்கெட், பைவ் ஸ்டார் ஹோட்டல் அறை எல்லாம் கிடைக்கும், புதுப்புது பட்டங்கள் கிடைக்கும். அல்வா பற்றிப் பேசி தமிழனுக்கு அல்வா கொடுத்து விடுவார்கள்!!!

உண்மை என்ன? உலகில் வேறுபாடு இல்லாத இடங்களும் இல்லை, இனங்களும் இல்லை. ஒரே தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்த பிள்ளைகளிடம் எவ்வளவு வேறுபாடு? இதில் ஆரியன் யார், திராவிடன் யார்?

இவ்வளவு எழுதினார்களே, வெளிநாட்டு அறிஞர்கள், உலகில் வேறு எங்காவது இந்த இன விஷத்தை ஊற்றினார்களா? இந்த விஷம விதைகளை விதைத்தார்களா? அவர்களுக்குத் தெரியும் தமிழன் ஒருவன் தான், 1500 வருடங்களுக்கு இடைவிடாமல் சண்டை போட்ட ஒரே இனம் என்று. தமிழ் இனம்.— சேர சோழ பாண்டியர்கள் போல— ஒருவனை ஒருவன் அழித்த இனம் இது என்பதால் பிரிவினை வித்தை விதைக்க அருமையான விளை நிலம் என்று கண்டுகொண்டார்கள்.

ஆரியப் பூனை எது? திராவிடப் பூனை எது?

‘’ஆயிரம் வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சி’’ என்று பாடிய பாரதி,  ஒரு கருத்தைப் பூனைக் குட்டி உதாரணத்தால் சொல்கிறார்:

வெள்ளை நிறத்தொரு பூனை— எங்கள் வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை— அவை பேருக் கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி— கருஞ் சாந்து நிறமொரு குட்டி

பாம்பு நிறமொரு குட்டி— வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி

 

எந்த நிறமிருந்தாலும்— அவை யாவும் ஒரே தரமன்றோ?

இந்த நிறம் சிறிதென்றும்— இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்—அதில் மானுடர் வேற்றுமை இல்லை;

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்—இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

—- மஹா கவி சுப்ரமண்ய பாரதி

நான் போடும் விடுகதை என்ன வென்றால் இதில் எது ஆரியப் பூனை? எது திராவிடப் பூனை? எது மங்கோலியப் பூனை? எது முண்டா இனப் பூனை ?

வெள்ளைக்காரன் கையில் இப்பாடல் கிடைத்தால் ஒரு ஆரிய திராவிடப் பிரச்சனையைக் புகுத்தி பி.எச்டி. வாங்கி விடுவான். அதிலும் அதில் கருப்பு நிற திராவிடப் பூனைதான் பழையது…. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் வாளொடு முன் தோன்றியது —மிக புத்திசாலியானது… இது போய் எலியைப் பிடிக்காது…. எலியே இதன் வாயில் வந்து விழுந்துவிடும் என்று எல்லாம் எழுதி… பேசி….. உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை, பட்டம், இலவச பிளேன் டிக்கெட், ஹோட்டல் ரூம் ஆகிய எல்லாம் வாங்கிவிடுவான். உண்மை என்னவென்றால்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்—அதில் மானுடர் வேற்றுமை இல்லை என்று பாரதி சொன்னதே.

ஆதி காலத்தில் இந்தியா முழுதும் ஒரே கலாசாரம், ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே பண்பாடு இருந்தது. வெளிநாட்டுப் படை எடுப்புகளால், வியாபாரத்தால், இனக் கலப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாக இது மாறியது. ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உள்ளது; Change is inevitable = ‘’மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது’’. இன்று திருவள்ளுவர் உயிருடன் வந்து ஒரு திருக்குறள் புத்தகம் விலைக்கு வாங்கினால் அவரால் அதைப் படிக்கமுடியாது. ஏனெனில் அவர் கால எழுத்து வேறு, இப்போது நான் எழுதும் தமிழ் எழுத்து வேறு. எல்லாம் மாறிவிட்டன.

சாகும் வரை உண்ணாவிரதம்

மஹாத்மா காந்தியால் மிகவும் பிரபலமான ஒரு வழக்கம் உண்ணாவிரதம். அவரே பல முறை சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி பின்னர் கைவிட்டும் இருக்கிறார். இது இன்று நேற்று துவங்கியதல்ல. பல சமண முனிவர்கள் இப்படி உயிர் துறந்தனர். சமணர்கள் இதை சல்லேகனம் என்று அழைப்பர். ராமாயணம் ,மஹாபாரதத்தில் இது இருக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இது உண்டு. பாரத நாடு முழுதும் வட திசையை புனித திசை என்று கருதியதை ஏற்கனவே ‘’வடக்கே தலை வைக்காதே’’ என்ற எனது கட்டுரையில் எழுதி இருக்கிறேன். வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருந்து உயிர் துறத்தல் நாடு முழுதும் உண்டு.

சோழன் கரிகால் பெருவளத்தானோடு, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருதியபோது புறப்புண் ஏற்பட்டு நாணி வடக்கிருந்தான். அவனை கழாத் தலையார் பாடிய பாடலில் (புறம் 65)

‘’மறத்தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன்’’ என்றும்

மிகப் புகழ் உலகம் எய்தி, என்றும்

‘’புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே’’ என்று வெண்ணிக்குயத்தியாரும் (புறம் 66) பாடுகின்றனர்.

கோப்பெருஞ் சோழனை அவனுடைய மகன்கள் எதிர்த்தபோது, எயிற்றியனார் என்னும் புலவர் சொற்படி, நாட்டை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தார். அவருடைய ஆரூயிர் நண்பர் புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆயினும் சோழன் எதிர்பார்த்தது போலவே பிசிராந்தையாரும் சாகும் வரை உண்ணா நோன்பில் கலந்து உயிர்நீத்தார். பொத்தியார் என்ற புலவரும் உயிர்நீத்தார். (புறம் 214 முதல் 223 வரை) பாரியின் மரணத்துக்குப் பின், புலவர் கபிலரும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.

ராமாயணத்தில்………..

வடக்கிருத்தலை, பிராயோபவேச விரதம் என்று வடமொழியில் சொல்லுவர். ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் (56-ஆவது சர்க்கம்) அங்கதன் உண்ணாவிரதம் இருந்ததைக் காண்கிறோம். சீதையை எங்கும் தேடியும் காணாத அங்கதன் இப்படிச் செய்தான். ஆனால் வட திசை நோக்காதபடி, கிழக்கு திசை நோக்கி தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு, தர்ப்பையைப் பரப்பி உண்ணாவிரதம் இருந்தான். இருந்தபோதிலும் தர்ப்பையை எல்லோரும் பயன்படுத்துவதால் இது நாடு தழுவிய ஒரு வழக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.

குமாரில பட்டர் என்ற மாமேதை புத்தமத ரகசியங்களை அறிவதற்காக பொய் சொல்லிவிட்டார். வேதம் படித்துவிட்டு பொய் சொன்னதற்குப் பிராயச்சித்தமாக பஞ்சாக்னியில் உயிர் துறந்தார். உடலின் நாலு பக்கமும் உமியைக் குவித்து, நாற்புறமும் தீயை ஏற்றி மேலே சூரியன் தஹிக்க, ஐந்து அக்னியில் உடலைச் சிறிது சிறிதாகக் கருக்கி உயிர்த் தியாகம் செய்தார். இதற்கு மன வலிமையும், உடல் வலிமையும் எவ்வளவு தேவை என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

Jambhudwipa in Tamil Literature and Kalidas

Hindus are unique in preserving their historical and geographical knowledge they have acquired several thousand years ago. During all religious rituals or worship they do announce their intention for the worship in which they say where it is done and when it is done. It is called SANKALPAM in Sanskrit. It is amazing to know their geographical knowledge. They say about their locations. It goes like this: I who live in Jambudwipe….. Bharata Varshe……. Bharat Kande etc. They always say on the banks of which holy river, which holy city, which holy forest area they do it. But Hindus lost much of this wonderful knowledge in the last 3000 years and so they lost the track. Even when they moved to different parts of the earth they were using the same Sankalpa. When you do a thing without proper knowledge and that too in a language (Sanskrit) you don’t know fully, it simply loses its relevance.

 

Their historical knowledge is also amazing. They say in which Manvatare, in which Sahapte/ year, season, month, Thithi (day) etc in the Sankalpa during every puja/worship. Sankalpa is the intention or purpose or vow one makes before starting a puja/ worship. The Manvantara period takes you back to the remotest time in the earth’s history.

 

Jambudwipa means the land of Jhambu trees. Tamils also followed the same method and named their land divisions after plants such as Kurinji, Mullai, Neithal, Marutham etc. This shows that Hindus from Kashmir to Kanyakumari thought alike. Please read my earlier post FLOWERS IN TAMIL CULTURE.

No other religious worship is done like Hindu worship. No one bothers about when it is done or where it is done. Another interesting point is the botanical and ethnic knowledge Hindus have. They named all the areas after an abundant plant or the ethnic people in the area. Jambu, Salmali and such plant names are given to the geographical areas. But Jambudwipa is synonymous with India that is Bharat.. The word Jambu means a tree known by its botanical name Syzigium cumini (Family Myrtaceae). This tree is found all over India. Tamils also translated the word Jambudwipa as Naavalanthivu and used it in their ancient literature. Naaval Pazam means Jambu fruits. Following references are found in the Sangam Tamil Literature:

 

Purananauru is an anthology of 400 Tamil verses. This forms the oldest part of Tamil Sangam literature. It has got some important references to the tree. One of the references in verse 397 refers to the special type of gold called Jambunadham. Kalidas refers to this Jhambunadam in Ragu Vamsam 18—44. The same is repeated in Sangam Tamil verses (Puram 397 and Thirumurugatru Padai –Line 18).

Since Kalidas’s hundreds of similes were used by 2000 year old Sangam Tamil poets, I have placed Kalidas before the Sangam period. I have written about it in my previous posts comparing Tamil poets and Kalidas.

Following references are found in Tamil about the tree and the Land of Jhambu tress (Jambudwipa): Paripatal 5-8,9 ,Puram 397, 177-11 ,Perum 465 ,Malai 135, Akam 380, Narr 35-2, Thiru 18, Post Sangam Literature: Mani 25—2—12/16, Silambu 17-15

KALIDAS: Megha 19 talks about the Jambu forests. Ragu 18—44 refers to Jhambu land.

Later Tamil poets such as Appar  (in marmaatrah thiruth thandakam) use this more times in their poems.

(This article is posted also in Tamil)

Pictures are taken from other websites;thanks.

 

ஜம்புத்வீபம்=நாவலந்தீவு

இந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம், ஈடு இணையற்ற மதம். இசை,நடனம்,,கோலம் போடுதல், பூ அலங்காரம் செய்தல், வித விதமான பலகாரங்கள், இனிப்புகள் செய்தல், அறிவியல், வரலாறு, நிலவியல், உளவியல், இயற்பியல், மருத்துவம், சுகாதரம், புறச் சூழல் பாதுகாப்பு—இப்படி எத்தனையோ விஷயங்களை அன்றாட வாழ்வில் கலந்து அதற்கு மதச் சடங்குகள் என்ற முத்திரையையும் குத்திவிட்டது. இதை உலகில் வேறு எந்த இனத்திலும், கலாசாரத்திலும், மதத்திலும் காணமுடியாது. இது பற்றி நான் ஒவ்வொரு கட்டுரையிலும்  ஒரு சில துறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி வருகிறேன். இந்தக் கட்டுரையில் பூகோளம், சரித்திரம் ஆகிய இரண்டு அம்சங்களை மட்டும் தொட்டுக் காட்டுவேன்.

 

பிராமணர்கள் அன்றாடம் பூஜை, சடங்குகள் செய்யும்போதும் மற்றவர்களுக்கு செய்துவைக்கும் போதும் பூவையோ, மஞ்சள் அட்சதையையோ கொடுத்து வலது தொடையின் மீது இரு கைகளையும் வைக்கச் சொல்லி வடமொழியில் ‘’சங்கல்பம்’’ என்று ஒன்று செய்வார்கள். இது வட மொழியில் இருப்பதால் தற்கால மக்களுக்கு அர்த்தம் புரிவதில்லை. ஒரு காலத்தில் எல்லோருக்கும் பொருள் தெரிந்திருந்தது! சிலப்பதிகார கதாநாயகன் கோவலனுக்கும் கூட வடமொழி தெரிந்திருந்ததை வேறொரு கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

 

சங்கல்பம் என்பது, இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையை செய்யப் போகிறேன் என்ற அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் அதிலேயே மனம் குவிந்திருக்கும். இந்த சங்கல்பத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது, இந்த மன்வந்தரத்தில், இந்த யுகத்தில் ,இந்த ஆண்டில், இந்த ருது, மாதம், நட்சத்திரம், திதியில் இதைச் செய்கிறேன் என்பதை அறிவிப்பார்கள். இப்படிக்கூறும் காலத்தைக் கணக்கிட்டால் பூமி தோன்றிய காலம் வரை செல்லும்! உலகில் அரசியல் கூட்டம் நடத்துவோரோ, வரலாற்றுப் புகழுடைய சுதந்திர பிரகடனத்தில் கை எழுத்திடுவோரோ கூட, அந்த தேதி வருஷத்தை மட்டுமே கூறுவர். ஆனால் இந்துக்களோவெனில் உலகம் தோன்றிய காலத்தைக் கணக்கிட்டு அது முதல் இன்றுவரை உள்ள காலத்தைப் பற்றிப் பேசுவர். இது உலக மஹா அதிசயம். பார்த்திவபுரம் கல்வெட்டில் கோ கருநந்தடக்கன் என்ற மன்னன் கலியுகம் தோன்றியது முதல் அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட தேதிவரையுள்ள காலத்தை நாட்கணக்கில் சொல்லுகிறான்!!!

எந்த இடத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதை பூகோள/ நிலவியல் குறிப்புகளுடன் அறிவிப்பர். இந்தப் பூமியில் உள்ள பல பிரதேசங்களீல், மேரு மலைக்குத் தெற்கில், ஜம்புத்வீபத்தில், பாரத வர்ஷத்தில், பரதக் கண்டத்தில், குறிப்பிட்ட……. இந்த நதிக்கரையில்……….. இந்த நகரத்தில்………. இந்த காட்டிற்கு அருகில் பூஜை/ ஹோமம் செய்கிறேன் என்பர். இது முழுதும் பூகோள விஷயங்கள்! என்ன அதிசயம்….காலாகாலமாக தங்கள் நதி ஊர் மலை, காடுகளின் பெயர்களை நினைவு கூறுகின்றனர். கடவுளுக்கு நாம் இந்த பூமியில் எங்கே இருக்கிறோம் என்று தெரியாதா என்ன? மக்களுக்கு பூகோளம், சரித்திரம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இத்தனையும்.

 

இதில் வரும் ஜம்புத்வீபத்தைப் பார்ப்போம். தமிழ்ப் புலவர்கள் இதை அழகாக நாவலந்தீவு என்று மொழி பெயர்த்துள்ளனர். ஜம்பூ பழம் என்பது, நாவல் பழம் என்பதாகும். இது நாடு முழுதும் வளரும் மரம். பிள்ளாயாருக்கும் முருகனுக்கும் பிடித்த பழம். ஒரு தாவரம் எங்கே அதிகம் விளைகிறதோ அதன் பெயரில் அந்த நாட்டிற்குப் பெயரிட்டனர் இந்தியர்கள். ஜம்பூ, சால்மலி என்றும் அது இல்லாவிடில் கிரவுஞ்ச என்று பறவையின் பெயரில் அல்லது அதிகமாக வசிக்கும் மக்கள் இனத்தின் பெயரில் (காம்போஜ) என்றும் பெயரிட்டனர். தமிழரும் கூட குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்று தாவரங்களின் பெயரையே பயன் படுத்தினர்.

புறநானூறு 397 (எருக்காட்டூர் தாயங்கண்ணனார்= தாசன்+கண்ணனார் =கண்ணதாசன்)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய தாயங்கண்ணனார் கூறுகிறார்:

 

அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த

தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள்

வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்

என்று பாடுகிறார். வலம்படு தீவு என்பதற்கு வெற்றிகொண்ட தீவின் என்று உரையாசிரியர்கள் எழுதுவர். இது உண்மையில் ஜம்பூத்வீபம் என்னும் தீவில் கிடைக்கும் சம்பூநதம் என்னும் ஒருவகைத் தங்கமாகும்.

திருமுருகாற்றுப்படையின் வரி 18, இதை உறுதி செய்கிறது:சம்பூநதம் என்னும் பொன்னைக்குறிக்க நாவலொடு பெயரிய பொலம்புனை என்று பாடுகிறார்.

 

நாவலொடு பெயரிய பொலம்புனை அவரிழைச்

சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி

கடுவன் இளவெயினனார் பாடிய ஐந்தாம் பரிபாடலில் (5-8/9) நேரடியாகவே குறிப்பிடுகிறார்:

 

‘’ நாவல் அம் தண்பொழில் வட பொழில் ஆயிடை’’—என்று. மேலும் நாட்டின் வடக்குப் பக்கத்தில் கிரவுஞ்ச மலை உள்ளது என்ற பூகோள உண்மையயும் வெளிப்படுத்துகிறார். இன்றும் இமய மலையில் ஒரு குறிப்பிட்ட கணவாய் வழியாக வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. தற்போது இது லடாக் பகுதியில் நீதி கணவாய் என்று அழைக்கபடுகிறது

தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் ‘’நாவல் அம் தண்பொழில்’’ (வரி 465) என்று சொல்கிறார்.

 

ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிகிழான் காரியாதி மேல் பாடிய பாடலில் (புறம் 177) தேன் சிந்தும் நாவல் கனி பற்றிக் கூறுகிறார்.

சங்ககாலத்துக்குப் பிற்காலத்திய நூல்களான சிலப்பதிகாரம் (17-1), மணிமேகலை(25-2-12/16)ஆகிய நூல்களில் நாவலந்தீவு பற்றிய தெளிவான குறிப்புகள் வருகின்றன.

நாவல் ஓங்கிய மாபெருந் தீவு (மணி 2-1) நாவலந்தீவு, நாவலொடு பெயரிய பெருந்தீவம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தேவாரம் (அப்பரின் மறுமாற்றத் தாண்டகம்) முதலிய பல இடங்களிலும் நாவல் தீவைக் காணலாம்.

 

காளிதாசன் கவிதைகள்

காளிதாசனுடைய 1000க்கும் மேலான உவமைகளில் நூற்றுக் கணக்கானவற்றை சங்க காலப் புலவர்கள் பயன்படுத்துவதால் காளிதாசன் அவர்களுக்கு முன் வாழ்ந்தவன் என்பதை ஆறு ஏழு கட்டுரைகளில் எழுதிவிட்டேன். ஜம்பூத்வீபம் பற்றியும் காளிதாசன் பாடியிருக்கிறான். மேகதூதம் 19-ஆம் பாடலில் நாவல் மரக் காடுகள் பற்றிப் பாடுகிறான்.

 

ரகுவம்சம் 18-44 இல் ஜாம்பூநதம் என்னும் தங்கவகை பற்றிப் பாடுகிறான். இதையே மேற்கூறிய புறப் பாடல் 397—லும், திருமுருகாற்றுப்படை வரி 18—லும் கண்டோம்.

Pictures are taken from various websites. Thanks.

Valmiki in Tamil Sangam Literature

Sangam Tamil Literature has several poets with Sanskrit names. Mostly they are Hindu God names. The British rulers who followed the policy of divide and rule coined some artificial words like Dravidian and Aryan. Of these two words Aryan is known from the days of Rig Veda and Dravidian from very late stages of Indian literary history. But both the words had no racial meaning in which the scholars use them today. The scholars only have given them racial connotation. Because of this distorted picture, everything in history was written with a bias. But those who read Sanskrit and Tamil literature will find more similarities than differences in the Indian culture.

 

Every country, every culture has regional differences which are normal and superficial. There is no place in the world without such differences. Tamils of ancient Tamil Nadu had so many differences in the five different land divisions known as Kurinji, Mullai, Marutham, Neithal and Palai. These were natural. The three kingdoms fought among themselves for 2000 years without stopping. But nobody interpreted them as enemies of one race or another.

 

Hindu customs, Sanskrit words, Hindu Gods, Sanskrit proper names are in every ancient Tamil book. Kanchi Paramacharya has pointed out the unity in thought beautifully well in one of his lectures. He pointed out that there are very pure Tamil words for all the Sanskrit words from very ancient times : (Yagam= Velvi, Brahmin=Anthanar, Veda= Marai, River Jamuna= Thozunai etc.). So there is no wonder that there were poets with Sanskrit names in ancient Tamil Nadu. I have pointed out that Brahmins contributed one third of Sangam Literature in my post ‘’NO BRAHMINS, NO TAMIL’’.

 

Sanskrit names found in the Sangam Tamil literature sound very interesting. When they give the name of a Brahmin poet they give the Gotra name as well. We can understand the reason for it. Same name is used by many poets and to differentiate them either town name or the Gotra name was used.

 

Following are some of the SANSKRIT names of Tamil Poets:

Damodaran, Kesavan, Vishnu Dasan (Vinnanthayan), Kamakshi (Kamak Kanni), Maha Devan (Maathevanar), Kausika (Kosikan), Kapila (very pouplar Rishi’s name), Parana (Parana is a Gotra name),Nagaraja (Mudinaagaraayar),Maha Sastha (Maasaaththan), Lochana(ulochanar), Bhutapandya, Krishna (Kannan), Arudra (Aththirai), Kumara (kumaranar), Gauthama (Gothamanar), Sanga Varunan, Rudra (Nalluruththiranar), Nagas (at least 20 names with Naga as surname)Brahma (piramanar), Brahma Dutt ( Yaz piramathaththan), Uthra (Uththiraiyar), Maha Chitra (perumsiththiranar), Maha Padma (perumpathumanar), Atreya, Kavya (kappiynaar) Yagna Acharya (Velaasaan), Beri Sastha. (This is not an exhaustive list. This is only a sample. More in my post  ‘’No Brahmins, No Tamil’’.

 

Tamil kings performed Rajasuya, Asvamedha and Soamyaga (Avvaiyar attended the Rajasuya Yagna and praised the Tamil unity which was very rare. Kalidasa praised Pandyan king’s (probably Mudukudumi Peru Vazuthi’s ) Asvamedha Yangna indirectly by referring to Avabrudha Snana. Peruvazuthi coins have been discovered with Yupa pillar and horse/Asva.

 

Tamil Epic Silappadikaram has Gopalan (Kovalan), Madhavi, Maha Nayak (Maanayakan), Maha Shastha (Maasaaththan),Parasaran, Dakshinamoorthy etc.

Of these names, the word Valmiki (written as Vanmeekanar) raised the eye brows of many a scholar. The most famous Valmiki was the author of Ramayana in Sanskrit. From Sanskrit poet Kalidas to Tamil poet Kamban, all praised him as the Adi Kavi (meaning the original poet, the first poet). He gave the most interesting epic Ramayana in the simplest language. Many people learnt Sanskrit just by studying Valmiki Ramayana.

 

Hindus knew the story of original Valmiki- the hunter turned poet-saint. The best example for the English saying ‘’every sinner has a future and every saint had a past’’. But who is this Tamil Valmiki (Vanmeekan) mentioned in the oldest part of Sangam literature? He was the author of verse 358 in Pura Nanauru which is a collection of 400 verses.  Purananuru is like an encyclopaedia of Tamil culture. We knew a lot about the Tamil life 2000 years ago through the commentaries on the 400 verses (a few verses were lost).

 

Who was Tamil Valmiki?

Vanmikam in Sanskrit means ant hill. This hunter turned saint did penance for a long time and ant hill grew over him and he got the name Valmiki. His original name was Prachedas. We have this name associated with several saints with the same experience of long penance and ants building a hill over them. Gods in several Shiva temples had his name in Tamil Nadu. Vanmeekanathar is found in Tiruvarur, Sankarankoil, Kudavasal, Kancheepuram, Thiruvetriyur and Valmiki Samadhi (grave) in Ettukkudi. Every temple had its own story of that particular Valmiki. Slowly priests and tourist guides or Sthala Puranas (Local Temple History) identified them with the most famous Valmiki.

 

My research shows that Valmiki was a Gotra (clan) name like Agastya, Kausika, Kavya, Atreya  and other seers. Research scholars report 20+ Vyasas, 6 Avvaiyars, 2 or 3 Kapilas, Paranas etc. It is not uncommon. We find kings names in plenty like Ramses, Alexander, Vikramaditya, Rajendra, Ptolemy, Sri Maran, Veera Pandya, Vikrama Pandya. These names were repeated umpteen times in history.

Valmiki Gotra

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS Library, University of London):

“Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by the fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 

So I think the author of Puram 358 verse was a seer cum poet of this Gotra. He was very religious and he praised penance sky high. Penance or ascetic life is greater than house holder’s life. He adds that Goddess Sri (Lakshmi) always stays with those who sacrificed everything. She would not stick to those who have desires. The wealth he is talking about is the spiritual wealth. Talking about the impermanence of the world, he said that this earth had seven kings within a single day.

The name Valmiki always commands respect.  Now the riddle of Tamil Valmiki is solved.

Pictures are taken from various other blogs. Thanks.

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter.

Those who use this article in other blogs must name the author London Swaminathan and Blog name.

 

(English version of this article is posted separately)

வால்மீகி ராமாயணத்தில், யுத்த காண்டத்தில், ஸ்ரீராமரின் விமானம் பற்றிய ஒரு தகவல் வருகிறது. இதுவரை புரியாதிருந்த இவ்விஷயம் இப்போது வெளியான அறிவியல் செய்தியால் நன்கு விளங்குகிறது. பாரத்வாஜ மஹரிஷி சம்ஸ்கிருதத்தில் எழுதிய வைமானிக சாஸ்திரம் ‘’விமானம் செய்வது எப்படி?’’ என்று கூறுகிறது. ஆனால் அவை எல்லாம் காற்றடைத்த பலூன் விமானங்களைப் போன்றவை. ராமரின் விமானமோ அதி நவீன விமானம். நினைத்த மாத்திரத்தில் பறக்கும், இறங்கும். இதை அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இப்போது செய்து காட்டியுள்ளனர்.

ராவணனை வதம் செய்த ராம பிரான் உடனே அயோத்தி திரும்ப வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். ஆனால் விபீஷணனோ கொஞ்சம் குளித்துவிட்டுப் போகலாமே. இதோ பாருங்கள் நறுமணப் பொருட்கள்; அதை உடலில் தேய்த்துவிட  அழகான நங்கைகள் என்று கூறுகிறான். அப்படிபட்ட ஆடம்பர வேலைகளுக்கு நேரமில்லை என்று ராமன் கூறவே விபீஷணன் கூறுகிறான் (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 123)

 

“ஓ, ராஜனே, கவலைப்படாதீர்கள். குபேரனிடம் இருந்த புஷ்பக விமானத்தை என் அண்ணன் ராவணன் வலுக் கட்டாயமாக பறித்து வந்தான்; அது ஒரே நாளில் உங்களை அயோத்தியில் சேர்த்துவிடும். அது வெள்ளை நிற மேகம் போல வண்ணமுடையது. சூரிய வெளிச்சத்தில் தக தக என்று மின்னும். பாதுகாப்பாகச் செல்லாலாம்; நினைத்த மாத்திரத்தில் பறக்க வல்லது”

 

விபீஷணனின் கூற்றில் நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன: 1.நினைத்த மாத்திரத்தில் பறக்கும், அதாவது எண்ண அலைகளால் பறக்க வல்லது, 2.வெள்ளி போல, அலுமினியம் போல, வெள்ளை மேகம் போல, நிறம் உடையது 3.பயப்படவேண்டாம், பாதுகாப்பானது 4.ஒரே நாளில் அயோத்திக்குப் போகும் அளவு வேக்மானது!!

இந்த 4 விஷயங்களும் இக்காலத்திலும் பொருந்தக் கூடியவை: வெள்ளி போல நிறம் மற்றும் பாதுகாப்பு; நாங்கள் லண்டனில் ஏறி சென்னை வரும் போதெல்லாம் விமானம் புறப்படுவதற்கு முன் முதலில் பாதுகாப்பு அறிவிப்பும் ‘’டெமான்ஸ்ட்ரேஷனும்’’ வரும். அந்தக் காலத்தில் விபீஷணன் சொன்ன பாதுகாப்பு விஷயம் இன்று வரை நடை முறையில் உள்ளது!

volunteers send commands to the helicopter by thinking. Picture from Minnesota University, US

 

புதிய கண்டு பிடிப்பு!

ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண அலைகளால் பறந்த ஹெலிகாப்டர் பற்றிய செய்தி ஜூன் 5ஆம் தேதி (05/06/2013) வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழக அறிவியல், பொறியியல் துறை செய்த ஆராய்ச்சியை ‘’ஜர்னல் ஆF ந்யூரல் எஞ்சினீரிங்’’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

 

கல்லூரி வளாகத்தில் ஒரு மாடல் (மாதிரி) ஹெலிகாப்டர் செய்தனர். இதைப் பறக்கவைக்க சில ஆய்வாளர்கள் தங்கள் தலைகளில் ‘’எலெக்ட்ரோட்ஸ்’’களைப் பொருத்திக் கொண்டனர். நாம் பொம்மை விமானத்தைப் பறக்கச் செய்யும் ‘’ரிமோட் கண்ட்ரோல்’’ கருவிகள் எதையும் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘’விமானமே பற, விமானமே இறங்கு, வலது பக்கம் போ, இடது பக்கம் போ’’ என்று மனதில் நினைத்தனர். மூளையில் இருந்து கிளம்பிய எண்ண அலைகள், எலெக்ட்ரோட்ஸ் மூலம் விமாத்துக்குச் செல்ல அதில் இருந்த கருவிகள் விமானத்தைப் பறக்க வைத்தன.

இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களை இயக்கமுடியும். விபத்துக்களில் சிக்கியோரை மீட்க இது உதவும். இன்னும் எவ்வளவோ அற்புதங்களைச் செய்ய முடியும்.

 

ராம பிரானின் விமானம் இலங்கையின் ஏதோ ஒருபகுதியில் இருந்த இலங்காபுரி நகரில் இருந்து 3000 மைல்கள் பறந்து அயோத்திக்குப் போக ஒரே நாள்ததன் ஆனது! மேலும் 3000 ஆண்டுகளுக்கு முன் விமானங்கள் பகல் நேரத்தில் மட்டுமே பறந்திருக்கும். ஆக, 12 மணி நேரத்துக்குள் 3000 மைல் பறந்தார் ராமர்! இப்பொழுதைய விமானங்கள் சராசரியாக மணிக்கு 500 முதல் 600 மைல்கள் செல்லுகின்றன.

 

ராமபிரான் விமானத்தில் கருவிகள் இருந்தனவா? அவை என்ன? என்பதை நாம் அறியோம். ஆனால் எண்ணத்தினால், நினைத்த மாத்திரத்தில் விமானங்களைப் பறக்கவைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை சில “பகுத்தறிவுகள்” இதை நம்ப மறுத்தாலும் இன்னும் பல விஞ்ஞான செய்திகள் வரும் வரை பொருத்திருக்கலாம். அதுவரை சிறந்த விஞ்ஞான புனைக் கதை எழுதிய பரிசையாவது வால்மீகி முனிவருக்கு அளிக்கலாம்.உலகில் முதல் முதலில் நினைத்தமாத்திரத்தில் பறக்கும் ஏரோ பிளேன் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டாரே!

சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் உள்ள, ஆள் இல்லாத விமான சர்வீஸ் பற்றி “சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்” என்ற கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

Read my earlier posts on Ramayana Wonders:

1.Ramayana Wonders- 1st part  2.How Many Miles Did Rama walk? ( Ramayana Wonder –Second part  3.Rama and Sanskrit G’ramma’R (Ramayana Wonder part 3), 4.Who can read all 300 Ramayanas? (Ramayana Wonder part 4), 5.Indus Valley Cities in Ramayana (Ramayana wonder part 5), 6.Aladdin’s Magic in Valmiki Ramayana (Ramayana Wonder part 6), 7.Where is Rama Setu (Rama’s Bridge)? 8.Miracles by the Departed Souls from two epics 9.Why Hindus Worship Shoes? 10.சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ் 11.மாண்டவர் மீண்டுவந்த மூன்று அதிசய நிகழ்ச்சிகள் 12.ராமாயண வினா விடை 13.Maruti Miracle: 600 kilometres per hour! 14.அதிசய அனுமார் சிலை 15.Superman of India: Anjaneya 16.Do Hindus believe in Aliens and ETs? 17. Hindus’ Future Predictions (parts 1 and 2) 18.Time Travel by Two Tamil saints 19. Is Brahmastra a Nuclear Weapon? 19.தியாகராஜ சுவாமிகளுடன் 60 வினாடி பேட்டி 20..நாமும் அனுமார் ஆகலாம் 21.கம்பனுடன் 60 வினாடி பேட்டி 22.Free Charter Flight to Heaven

(Two articles on Subbaraya Shastry, author of Vaimanika Shastra, written by my brother S Nagarajan have been posted in this blog last year.:-London swaminathan)

 

குருவின் “வீட்டோ” அதிகாரம்!

shirdi sai

Picture of Shirdi Sai Baba

குருவின் “வீட்டோ” அதிகாரம்!

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசுகளுக்கு மட்டும் ‘வீட்டோ’ எனப்படும் வெட்டு/ரத்து அதிகாரம் உண்டு. உலக அமைதிக்கான எந்த தீர்மானமும், ஐந்து நாடுகளில் ஒரு நாடு ரத்து அதிகாரத்தைப் பிரயோகித்தாலும் நிறைவேறாது. ராணுவத்தையும் அனுப்ப முடியாது. இதே போல குரு-வுக்கும் அதிகாரம் உண்டு. கடவுளே கூட குருவின் அதிகாரத்துக்குப் பணிய வேண்டும்.

 

இந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம். இதில் குரு என்பவருக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு. குருவே பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று வடமொழி ஸ்லோகம் புகழுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடம் குருவுக்கே. நாலாவது இடம்தான் கடவுளுக்கு!

குரு என்ற சம்ஸ்கிருதச் சொல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்குள் போனது மட்டுமில்லாமல் இப்போது துறைக்கு துறை குரு என்ற சொல்லும் பயன்படுத்தப் படுகிறது.

இந்து மதத்தில் கடவுளும் கூட சில விதிகளுக்குக் கட்டுப்படே நடக்கவேண்டும். அசுரர்களுக்கோ தேவர்களுக்கோ வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அந்தச் சொல்லை அவரே கூட மாற்றமுடியாது என்பதை ‘’சாபங்களும் வரங்களும்’’ ஆங்கிலக் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். இதேபோல பக்தர்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் கடவுள் தலையிட மாட்டார். அந்த பக்தனிடம்தான் தவறிழைத்தவர் மன்னிப்பு கேட்கவேண்டும் இதையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட்டேன். (இக்கட்டுரையின் இறுதியில் தலைப்புகளைக் காண்க).

 

குருவின் சக்தி கடவுளுக்கும் மிஞ்சியது என்பதற்கு எவ்வளவோ கதைகள் உண்டு. இரண்டு கதைகளை மட்டும் பார்ப்போம்.

Statue of Adi Shankara

சுந்தரர் வரலாறு

சைவப் பெரியார்களுள் நால்வரில் ஒருவர் சுந்தரர். எட்டாம் நூற்றாண்டில் அப்பருக்கும் சம்பந்தருக்கும் பின்னர் வந்தவர். அவருடைய நெருங்கிய நணபர் சேர மன்னன் சேரமான் பெருமாள் நாயனார். அவரும் பெரிய சிவ பக்தர். சுந்தரரை குருவாகவே நினைத்துப் போற்றியவர். சுந்தரருக்கு 18 வயதானபோது சிவபெருமான் அவரை கைலாயத்துக்குத் திரும்ப அழைக்க எண்ணினார். ஐராவதம் என்னும் வெள்ளை யானையை அனுப்பிவைத்தார். சுந்தரருக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே புறப்பட்டு விட்டார்.

 

ஆருயிர்த் தோழரான சேரமானுக்கு உள்ளுணர்வால் இது தெரிந்துவிட்டது. உடனே தனது குதிரையில் தாவி எற்றினார். சிட்டாகப் பறக்கும் குதிரையானாலும் பூலோக குதிரை எப்படி கயிலாயத்துக்குப் போக முடியும்? காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். ராக்கெட் போல பறந்து, நேரே கையிலாயத்துக்குப் போய்விட்டது. ஆனால் சுந்தரரை உள்ளே விட்ட நந்திகேஸ்வரர், சேரமானை தடுத்து நிறுத்திவிட்டார். அவரிடம் உள்ளே போக ‘டிக்கெட்’ (அனுமதி) இல்லை. அவர் அழையாத விருந்தாளி!  சுந்தரர் போய் சிவனிடம் சிபாரிசு செய்யவே உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். அழைப்பில்லாமல் வந்தது ஏன் என்று சிவன் வினவினார். சுந்தரரை விட்டு தனியே இருக்க முடியாது. அவர் என் குரு என்றார். அப்போதும் சிவனுக்கு மனம் இரங்கவில்லை. சுந்தரர் ஒரு பதிகம் பாடி சிவனை வழிபடவே சேரமானுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. பக்தருக்கு தகுதி இல்லாவிட்டாலும் குருவின் அருள் இருந்தால் இறைவனும் மறுக்க முடியாது!

 

விஷ்ணுவுடன் நாரதர் மோதல்

திரி லோக சஞ்சாரி நாரதர் ,வைகுண்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் விஷ்ணு பக்தனான ஒரு கிராமத்தான் அவரைப் பார்த்துவிட்டான். நாரதரை நலம் விசாரிக்கவே அவர் வைகுண்டத்துக்குப் போவதாகக் கூறினார். கிராமத்தான் கெஞ்சலாகக் கெஞ்சினான், “ஐயா, கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எப்போது எனக்குக் குழந்தை பிறக்கும்? என்று விஷ்ணுவிடம் கேட்டு வாருங்கள்.”என்றான். அவனும் விஷ்ணு பக்தன் ஆதலால் நாரதர் மறுகவில்லை.

 

வைகுண்டம் போனவுடன் மறக்காமல் கேட்டார். விஷ்ணு கொடுத்த செய்தி நல்ல செய்தி இல்லை. அப்படியே கிராமத்துக்கு வந்து, ‘’அப்பனே உனக்கு இப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை’’ என்று விஷ்ணு சொல்லிவிட்டார் என்றார்.

Picture of Kanchi Paramacharya and Swami Shanthanantha

அந்த கிராமத்தானுக்கு முன்னைவிட பக்தி அதிகரிக்கவே அந்த ஊருக்கு வந்த ஒரு சந்யாசிக்குப் பணிவிடை செய்து அவரை குருவாக ஏற்றான். அவர் அவனது பக்தியை மெச்சி, அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று ஆசிர்வதித்தார்.

பல ஆண்டுகள் உருண்டோடின. நாரதர் அதே கிராமத்தின் வழியாக வைகுண்டம் போய்க் கொண்டிருந்தார். கிராமத்தானைப் பார்த்தபோது மூன்று குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். அவனிடம் சென்று கேட்டபோது குருவின் திருவருளில் குழந்தை கிடைத்ததை அவன் கூறினான்.

 

வைகுண்டம் சென்ற நாரதர், கோபத்தோடு விஷ்ணுவை ஏசினார். ‘’ஏன் பொய் சொல்லி, என் பெயரையும் கெடுத்தீர்கள்?’’ என்று கடிந்தார். என்ன நடந்தாது? ஏன் இவ்வளவு கோபம்? என்று விஷ்ணு கேட்கவே , குழந்தையே பிறக்காது என்று என்னிடம் சொல்லி அனுப்பிய ஆளுக்கு ‘’எப்படி ஐயா மூன்று குழந்தை பிறந்தது?’’ என்று சத்தம் போட்டார்.

 

விஷ்ணுவோ சிரித்துக் கொண்டே, “அட, அவன் யாராவது ஒரு குருவின் காலில் விழுந்திருப்பான். அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும். குரு ஒருவருக்கே விதியை மாற்றும் சக்தி உண்டு? இது என்ன உனக்குத் தெரியாதா?” என்று போட்டார் ஒரு போடு!

நாரதரும் குருவைத் தேட ஓட்டம் பிடித்தார்!!

Picture of Sri Ramana Maharishi

வள்ளுவனும் கூட பெரியாரின் (குருவின்) பெருமையை, இரண்டு அதிகாரங்களில் , இருபது குறள்களில் சொல்லி இருக்கிறார்.

 

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் (குறள் 443)

 

ஏந்திய கொள்கை உடையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)

 

உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்களை பகைத்துக் கொண்டால் அரசனே ஆனாலும் கெட்டு அழிவது உறுதி.

குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வர:

குருஸ் சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

இந்தக் கட்டுரைகளை வேறு இடங்களில் வெளியிட விரும்புவோர், பிளாக்—பெயரையும் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் பெயரையும் வெளியிடவேண்டும்.

Pictures are taken from different sites.

 

Source books: Sixty Nayanar Saints by Swami Sivananda, Stories as told by Swami

Ramdas; I have compared them and added my comments.

 

Please read my earlier posts on this subject:

1.Do Words Have Power? An interesting Study on curses and Boons.

2.யார் பெரியவர்? கடவுளா? பக்தனா?

contact: swami_48@yahoo.com