சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

Pictures are taken from other sites vaimanika.com and Bharat Gyan.Thanks.

 

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

(This article is posted in English as well)

இந்து மத நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் விமானம் பற்றிய குறிப்புகள் உள்ளன. உண்மையிலேயே காற்றடைத்த பலூன் விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத நூல்களும் (வைமானிக சாஸ்திரம்) இருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் வரும் விமானங்கள், —-தேவலோக விமானங்கள்!

புறநானூற்றில் உள்ள செய்தியும் திருஞான சம்பந்தர் தேவாரப் படலில் உள்ள செய்தியும் சுவையான செய்திகள். சிவ பக்தர்களை தேவலோக விமானங்கள் ஏற்றிச் செல்லும் என்றும் அங்கு சென்றபின் அவர்கள் அரசர் போல ஆட்சி செலுத்தலாமென்றும் பாடுகிறார். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு; பக்தி சிரத்தையுடன் ஆடல் பாடலுடன் மனம் உருகிப் பாடுவோருக்கே இந்த விமானம் வரும். இதோ அவருடைய பாடல்:

 

“விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்

வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை

நண்ணிய நூலன் ஞான சம்பந்தன்

நவின்ற இவ்வாய்மொழி நலமிகு பத்தும்

பண்ணியல்பாகப் பத்திமையாலே

பாடியும் ஆடியும் பயில வல்லோர்கள்

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி

வியனுலகாண்டு வீற்றிருப்பாரே” (முதல் திருமுறை/ சம்பந்தர்)

வெங்குருவில் (சீர்காழியில்) பாடிய தேவாரம் இது.

சிலப்பதிகார காவியம் தோன்றுவதற்கு காரணம் கானக மாக்கள் கண்ட ஒரு அதிசய நிகழ்ச்சியாகும். மரத்துக்கு அடியில் ஒருமுலை இழந்த நிலையில் நின்றிருந்த கண்ணகியை அவர் கணவன் கோவலன் வந்து அழைத்துச் சென்ற காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அசந்து போய்விட்டனர். அப்போழுது காட்டுப் பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசிக்க வந்த செங்குட்டுவனிடம் இதைக் கூறியபோது அவருக்கும் வியப்பு மேலிடுகிறது. அருகே இருந்த தண் தமிழ்ப் புலவன் சாத்தனார் ஆதியோடு அந்தமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக கூறுகிறார். பின்னர் இளங்கோ அடிகளின் அழியாச் சொற்களில் அற்புதமாக உருவெடுத்தது சிலம்பு. இதோ மலர்மாரி பொழிய கண்ணகி விண்ணுலகம் சென்றதை இளங்கோவின் சொற்களில் படியுங்கள்:

 

“ என்றலும் இறைஞ்சி, அஞ்சி,

இணை வளைக்கை எதிர்கூப்பி,

நின்ற எல்லையுள் வானவரும்

நெடுமாரி மலர் பொழிந்து,

குன்றவரும் கண்டு நிற்பக்,

கொழுநனொடு கொண்டுபோயினார்;

இவள் போலும் நங்குலக்கோர்

இருந்தெய்வம் இல்லை;

(பெரிய தெய்வம், குன்றக் குறவை, சிலப்பதிகாரம்)

புறநானூறு கூறும் புதுச் செய்தி

சங்க இலக்கியத்தில் பழமையான நூல் புறநானூறு. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி (புறம்.27, மு.க.சாத்தனார்)

சோழன் நலங் கிள்ளி மீது முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் நல்வினை செய்வோரை வான ஊர்தி ஏற்றி செல்லும் என்றும் அந்த விமானம் விமானி இல்லாமல் தானாக ஓடும் விமானம் என்றும் கூறுகிறார். வலவன் ஏவா என்று அடைமொழி கொடுத்ததில் இருந்து வலவன் ஓட்டிய விமானங்களும் அக்காலத்தில் இருந்தது சொல்லாமல் விளங்கும். இது போன்ற விமானத்தில் செல்லும் பேறு பெற்றோர் புலவர் பாடும் புகழ்மிகும் செயல்களைச் செய்தவர்கள் என்றும் சாத்தனார் பாடுகிறார்.

ராமர்—ராவணன்- குபேர விமானம்

ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் முதலில் குபேரனிடம் இருந்தது. அதை ராவனன் அபகரித்தான். ராமர், இலங்கையை வென்றவுடன் அது அவர் கைக்கு வந்தது. அதில் இலங்கையில் இருந்து அவர் அயோத்தி வரை விரைவாகச் சென்ரறதை நாம் அறிவோம்.

வால்மீகி ராமாயண யுத்த காண்டத்தில் (அத்தியாய 121) தசரத மன்னன் ராமருக்குக் காட்சி கொடுத்த சம்பவத்திலும் தசரதர் விமானத்தில் வந்ததைப் படிக்கிறோம். ஆனால் 5000 ஆண்டுக் கால நூல்களில் மொத்தம் மூன்று நான்கு இடங்களில் மட்டுமே வருவதால் இது உண்மை என்றும் அபூர்வமானது என்றும் அறிகிறோம். சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் பறக்கும் வாகனங்கள் வந்தாலும் அவை கதைக்குச் சுவையூட்ட எழுந்த கற்பனையா உண்மையா என்று அறிய முடிவதில்லை.

(Two articles on Subbaraya Shastry, author of Vaimanika Shastra, written by my brother S Nagarajan have been posted in this blog last year.)

contact swami_48@yahoo.com

 

சினம் காக்க!

12.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 12 ச.நாகராஜன் 

சினம் காக்க!

 

இலங்கையைக் கொளுத்திய பின்னர் அனுமன் சற்று சிந்திக்கிறார்.

ஆஹா! என்ன காரியம் செய்து விட்டேன் என்று நினைத்த அவருக்கு மனதில் பயம் உண்டாயிற்று. அப்போது அவர் கூறிய நான்கு ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் ஐம்பத்தைந்தாவது ஸர்க்கத்தில் 3,4,5,6வது ஸ்லோகங்களாக அமைகின்றன.

 

தன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்

நிருந்தந்தி  மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா

 

யே – எவர்கள்

உத்திதம் கோபம் – சீறி வரும் சினத்தை

புத்யா – அறிவைக் கொண்டு

தீப்தம் அக்னி –பற்றி எரியும் தீயை

அம்பஸா – நீரைக் கொண்டு

இவ – எப்படி அணைக்கிறார்களோ அப்படியே

நிருந்தந்தி – அடக்கிக் கொள்கிறார்களோ

தே – அவர்களே

தன்யா: – தன்யர்கள்

புருஷ ச்ரேஷ்டா – புருஷ ச்ரேஷ்டர்கள்

மஹாத்மான: – மஹாத்மாக்கள்

 

எவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.

 

க்ருதத: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத் குரூநபி

க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூநதிக்ஷிபேத்

 

க்ருதத: – கோபத்திற்காளாகிய

க: – எவன் தான்

பாபம் – பாவத்தொழிலை

ந குர்யாத் – செய்யாதிருப்பான்?

க்ருதத: – கோபம் கொண்டவன்

குரூன் அபி – பெரியோர்களையும் கூட

ஹன்யாத் – கொலை புரிவான்

க்ருதத: – கோபத்திற்காளான

நர: – புருஷன்

பருஷயா – கடுமையான

வாசா – மொழியால்

சாதூன் – சாதுக்களை

அதிக்ஷிபேத் – எடுத்தெறிந்து பேசுவான்

 

கோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,

 

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்

நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்

 

ப்ரகுபித: – கோபம் தலைக்கேறியவன்

வாச்யாவாச்யம் – எது சொல்லத் தகுந்தது எது சொல்லத்தகாதது என்பதை

கர்ஹிசித் – எப்பொழுதும்

ந விஜானாதி – பகுத்தறிய முடியாது

க்ருத்தஸ்ய –கோபம் கொண்டவனுக்கு

அகார்யம் – தகாத செயல் என்பது

ந அஸ்தி – இல்லை

க்வசித் – இந்த ஸ்திதியில்

அவாக்யம் – தகாத சொல்லென்பதும்

ந வித்யதே – கிடையாது

 

கோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,

 

ய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி

யதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே

 

ய: – எவனொருவன்

ஸமுத்பதிதம் – தலைக்கு மேலேறிய

க்ரோதம் – சினத்தை

க்ஷமயா – பொறுமையைக் கொண்டு

உரக: – சர்ப்பம்

ஜீர்ணாம் – ஜீர்ணமான

த்வசம் – தோலை

யதா – எப்படி விடுகிறதோ அப்படி

நிரஸ்யதி – விட்டு விடுகிறானோ

ஸ: வை – அவன் தான்

புருஷ: ஏவ – ஆண்பிள்ளையென

உச்யதே – சொல்லப்படுகிறான்

 

எவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.

கோபத்தைப் பற்றிய அனுமனின் இந்த சிந்தனை மனித குலத்திற்கே உரியது அல்லவா!

செல்லிடத்துக் காப்பான்  சினம் காப்பான்அல்லிடத்துக்

காக்கின் என்? காவாக்கால் என்? (குறள் 301) என்று எங்கு கோபம் செல்லுபடியாகுமோ அங்கே தான் முக்கியமாக சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது பொருள் பொதிந்ததல்லவா!வெகுளாமை அதிகாரத்தில் அவர் கூறும் 10 குறள்களும் கருத்தூன்றிப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டியவை.

 

தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

சினம் காக்கப்படாவிட்டால் அது தன்னையே அழித்து விடும் என்பது வள்ளுவரின் எச்சரிக்கை.

இலங்கையில் அனுமன் சினம் பற்றி நன்கு சிந்தித்து அதன் பாதகங்களை நன்கு தெளிவாக்குகிறான்!

 

அனுமனின் சிந்தனை மனித குலத்திற்கான பொதுவான சிந்தனை அல்லவா!

**********  

 

காஞ்சீபுரம் கோவில்கள்

LIST OF KANCHIPURAM TEMPLES

Picture of Kailasanathar temple (Pictures from Wikipedia)

“ புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி “

 

என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர்.

 

காஞ்சீபுரம் மஹாபாரத காலம் முதல் இன்றுவரை சீரும் சிறப்புடனும் திகழ்கிறது. சங்க இலக்கியம் பெரும்பாணாற்றுப்படை முதல் பல்லவர் கல்வெட்டுகள் வரை அனைத்தும் காஞ்சியின் புகழ் பாடுகின்றன. காஞ்சியை வெற்றிகொண்ட சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்தன் அதன் அழகைக் கண்டு வியந்து இந்த நகரை அழிக்கவேண்டாம் என்று உத்தரவிட்டான். அந்தக் காலத்தில் ஒரு மன்னன் வெற்றிகொண்ட மாற்றான் நாட்டு நகரங்களைத் தீக்கிரையாக்குவது வழக்கம். காஞ்சிபுரம் மட்டும் தப்பியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

 

பதஞ்சலி மகரிஷி, போதிசத்துவர், ஆதிசங்கரர், பல்லவ மன்னர்கள், கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் பட்டுப் புடவைகள் மூலம் காஞ்சி உலக வரை படத்தில் அழியா இடம் பெற்றுவிட்டது. இந்தக் காட்டுரை காஞ்சியில் உள்ள நூற்றுக்கும் மேலான கோவில்களில் முக்கிய 83 கோவில்களைப் பட்டியல் இடுகிறது.

Picture of Ekampareswarar Temple

1.அகஸ்தீஸ்வரர் கோவில் 2.அபிராமீஸ்வரர் கோவில் 3.அமரேஸ்வரர் கோவில் 4.அஷ்டபுஜர் கோவில் 5.ஆலடிப்பிள்ளையார் கோவில் 6.இராமேஸ்வரர் கோவில் 7.இலட்சுமணேஸ்வரர் கோவில் 8.இறவாஸ்தாணீஸ்வரர் கோவில் 9.ஈயகோஷ்டேஸ்வரர் கோவில் 10.ஈஸ்வரர் கோவில்

11.உருத்ரகோடீஸ்வரர் கோவில் 12.உலகளந்த பெருமாள் கோவில் 13.ஏகாம்பரேஸ்வரர் கோவில் 14.ஐராவதேஸ்வரர் கோவில் 15.ஓணகாந்தேஸ்வர கோவில் 16.கங்கணேஸ்வரர் கோவில் 17.கங்காதேஸ்வரர் கோவில (ஒக்கப்பிறந்தான் கோவில குளக்கரை) 18. கங்காதேஸ்வரர் கோவில் (சர்வதீர்த்த குளக்கரை) 19.கச்சபேஸ்வரர் கோவில் 20.கடகேஸ்வரர் கோவில்

 

21.கயிலாயநாதர் கோவில் 22. காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி கோவில் 24.காயாரோஹணேஸ்வரர் கோவில் 25.காளிகாம்பாள் கோவில் 26.குமரகோட்டம் கோவில் 27.சங்குபாணிப் பிள்ளையார் கோவில் 28.சதுர்புஜ ஆஞ்சநேயர் கோயில் கோவில் 29.சித்தீஸ்வரர் கோவில் 30.சித்ரகுபத் சுவாமி கோவில்

31.சிவாஸ்தானம் கோவில் 32.சீதேஸ்வரர் கோவில் 33.தவளேஸ்வரர் கோவில் 34.தாந்தோன்றீச்வரர் கோயில 35.திருக்கச்சி அநேக தங்காவதம் கோவில் 36. திருக்கச்சி மயானம் கோவில் 37.திருக் காஞ்சீஸ்வரர் கோவில் 38.திருக்காளீஸ்வரர் கோவில் 39.திருமேற்றளி கோவில் 40.திருவெட்டானீஸ்வரர் கோவில்

Picture of Kailasanathar temple

41.தீபப்ரகாசர் கோவில் 42.தீர்த்தேஸ்வரர் கோவில் 43.திரிகால ஞானேஸ்வரர் கோவில் 44.நகரீஸ்வரர் கோவில் 45.நசிம்மஸ்வாமி கோவில் 46.பச்சைவண்ணர் கோவில் 47.பவழவண்ணர் கோவில் 48.பணாதரேஸ்வரர் கோவில் 49.பாகீஸ்வரர் கோவில் 50.பாண்டவப்பெருமாள் கோவில்

 

51.பிறவாஸ்தானீஸ்வரர் கோவில் 52.புண்யகோடீஸ்வரர் கோவில் 53.பெருமாள் (செவிலிமேடு) கோவில் 54.மச்சேஸ்வரர் கோவில் 55.மணிகண்டேஸ்வரர் கோவில் 56.மதங்கேஸ்வரர் கோவில் 57.மல்லிகார்ஜுனன் கோவில் 58.மன்மதேஸ்வரர் கோவில் 59.மாண்டகன்னீஸ்வரர் கோவில் 60.முக்தீஸ்வரர் கோவில (அடிசன் பேட்டை காந்தி ரோடு)

61. முக்தீஸ்வரர் கோவில் ( கீழண்டை ராஜ வீதி) 62.யதோத்காரி கோவில் 63.வரதராஜர் கோவில் 64.வரதராஜர் சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச சாந்தலீஸ்வரர் கோவில் 67.விருபாட்சீஸ்வர கோவில் 68.வைகுண்டப் பெருமாள் கோவில் 69.வைரவேஸ்வரர் கோவில் 70.ஜூரஹரேஸ்வரர் கோவில்

Picture of silk sari weaveing

71.ஹிரண்யேஸ்வரர் கோவில் (நன்றி: காஞ்சீபுரம் மலர், மார்ச் 1979, பக்கம் 32) 72.வீற்றிருந்த லட்சுமண பெருமாள் கோவில் 73.அழகியசிங்கர் கோவில்(திருவெஃகா 74.ஜகதீஸ்வரர் கோவில் 75.ஆதிவாரஹப் பெருமாள் கோவில் 76.ஸ்ரீ சத்யநாதீஸ்வர கோவில் 77.ஸ்ரீ கருணாகரப் பெருமாள் கோவில் 78.கூரன் ஆதிகேசவப் பெருமாள் கோவில் 79.ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில்

80.ஆதிகாமாட்சி கோவில் 81. கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் 82.கோனேரிபுரம் கனகதுர்கா கோவில் 83..திருபருத்திகுன்றம் ஜைனர் கோவில் கோவில்.

 

List of Temples dedicated to Lord Vishnu (Source:- SCSVMV University)
• Varadharaja Perumal Temple
• Ashtabujakaram – Sri Adhikesava Perumal Temple
• Tiruvekkaa – Sri Yathothkari Temple
• Tiruththanka – Sri Deepa prakasa Perumal Temple
• Tiruvelukkai – Sri Azhagiya Singar Temple
• Neervalur – Sri Veetrirunda Lakshmi Narayana Perumal Temple
• Tirukalvanoor – Sri Adi Varaha Swami Temple
• Tiruoorakam – Sri Ulaganatha Swami Temple
• Tiruneeragam – Sri Jagadeeshwarar Temple
• Tirukaaragam – Sri Karunagara Perumal Temple
• Tirukaarvaanam – Sri Tirukaarvarnar Temple
• Tiruparamechura Vinnagaram – Sri Vaikunda Perumal Temple
• Tirupavalavannam – Sri Pavala Vanar Temple
• Tirupaadagam – Sri Pandava Thoodar Temple
• Tirunilaaththingalthundam – Sri Nilathingal Thundathan Perumal Temple
• Tirupputkuzhi – Sri Vijaya Raghava Perumal Temple
• Parithiyur-Kalyana Varadharaja Perumal Temple
• Sri Aadhi Kesava Perumal – Kooran [about 8 to 9 km from Kanchipuram]

List of Temples dedicated to Lord Shiva

• Kailasnatha Temple
• Ekambareswarar Temple
• Kachi Metrali
• Onakanthan Tali
• Kachi Anekatangapadam
• Kachi Nerikkaaraikkadu
• Kuranganilmuttam
• Tiru Maakaral
• Tiruvothur
• Panankattur
• Sangupani Vinayakar Temple
• Vazhakarutheeswarar Temple
• Thirumetrali Temple
• Satyanadeeswara Temple
• Adhi Kamakshi Temple
• Kanaka Durga Temple, Koneri Kuppam
• Thiruparruthikundram – Jaina Temple

Picture of Kanchipuram Paddy fields.

Contact swami_48@yahoo.com

தூதர்கள் படுகொலை

பிராமண தூதர்கள் படுகொலை

(இந்தக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ளது)

 

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு (தூது, குறள் 688)

 

உலகிலேயே தூதர்களுக்கான இலக்கணம் வகுத்த முதல் நாடு இந்தியாதான். தூதர்களுக்கான குண நலன்களை வகுத்ததோடு அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் வகுத்தது பாரதம் தான். இதற்கான சாட்சியங்கள் ராமாயணத்திலும் மகா பாரதத்திலும் இருக்கின்றன. தமிழ் வேதமான திருக்குறள் “தூது” என்ற அதிகாரத்தில் பத்து குறட் பாக்களில் தூதர்களின் லட்சணங்களை முன்வைக்கிறது.

ராவணனிடம் தூது சென்ற அனுமனைக் கொல்ல ராவணன் உத்தரவிடுகிறான். உடனே விபீஷணன் அதைத் தடுத்து தூதர்கள் விஷயத்தில் பின்பற்றப்படவேண்டிய அறப் பண்புகளை நினைவு படுத்துகிறான். இதுதான் இந்தக் காலத்தில் “டிப்ளமேடிக் இம்யூனிட்டி” என்ற பெயரில் சர்வதேச அளவில் பின்பற்றப்படுகிறது.

 

கவுரவர்கள் இடத்தில் தூது சென்ற கிருஷ்ணன் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தனது பணியைச் செய்ததை மகா பாரதம் எடுத்துரைக்கிறது. ஆனால் இக் கட்டுரையில் நான் சொல்ல வந்த விஷயம் பலரும் அறியாத ஒரு விஷயம். வரலாற்றுக் காலத்தில் இரண்டு பார்ப்பன தூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு அது.

பிராமணர்கள் கல்வி கற்றதாலும் அந்தக் காலத்தில் ஒழுக்க சீலர்களாக இருந்ததாலும் பழங் காலத்தில் தூதர் பணியையும் செய்து வந்தனர். இப்படிப்பட்ட இரண்டு பிராமணர் பற்றி அக நானூறும் புற நானூறும் பாடுகின்றன. பாலை நிலம் வழியாக ஓலைச் சுவடியைக் கையில் ஏந்திவந்த பார்ப்பனனை தங்கம் கொண்டு செல்லும் ஆள் என்று நினைத்து பாலை நில மாக்கள் கொன்று விடுகின்றனர். அவர் ஒரு ஒல்லியான வறிய பார்ப்பனன் என்று அறிந்தவுடன் வருத்தத்துடன் கையை நொடித்துச் சென்று விடுகின்றனர். இதோ அந்தப் பாடல்:

 

“ கண நிரை அன்ன , பல் கால், குறும்பொறை

தூது ஒய்ப் பார்ப்பான் மடி வெள் ஓலைப்

படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி

உண்ணா மருங்கும் இன்னோன் கையது

பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்

திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி

செங்கால் அம்பினர் கைந்நொடியாப் பெயர

கொடிவிடு குருதித் தூங்கு குடர் கறீஇ”

——

(அகம் 337, பாலை பாடிய பெருங் கடுங்கோ)

 

புறநானூறு வேறு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது. ஒரு பிராமணர் நள்ளிரவு என்று கூடப் பார்க்காமல் அரண்மனைக்குள் ஓலைச் சுவடியுடன் அவசரம் அவசரமாக நுழைகிறார். அடுத்த நிமிடம் அந்த மன்னன் பயந்து போய் தனது போர்க் கால நடவடிக்கைகளைக் கைவிட்டு பணிந்து விடுகிறார். அந்த பார்ப்பனன் பேசிய சொற்களோ வெகு சில என்று வியக்கிறார் புலவர். இதோ அந்தப் பாடல்:

“ வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே

ஏணியும் சீப்பும் மாற்றி

மாண்வினன யானையும் மணிகளைந்தனவே”

(புறம் 305, புலவர் மதுரை வேளாசான்)

 

கொடுமையிலும் கொடுமை

 

போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் சென்ற இடமெல்லாம் படு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வணிகத்தையும் அரசாட்சியையும் நிறுவியது உலகறிந்த உண்மை. மனிதர்களை கொக்கு, குருவி போல சுட்டுக் குவித்ததையும் வரலாறு அறியும். ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பழங்குடிகளையும், இன்கா, மாயா, அஸ்டெக் நாகரீகத்தையும் அழித்த ரத்தக் கரை எந்தக் காலத்திலும் இவர்கள் கைகளில் நாற்றம் வீசும். இந்தியாவில் இவர்கள் இழைத்த கொடுமைகள் ஏராளம். வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர் முதல் ஜாலியன்வாலாபாக் வரை ஆயிரக் கணக்காணோர் கொல்லப்பட்டனர்.

போர்ச்சுகீசியர்களும் ஸ்பானிஷ்காரகளும் நயவஞ்சகத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒரு படி மேல்தான். வாஸ்கோடகாமா என்ற கிராதகன் கோழிக்கோட்டில் 1498-ல் வந்திறங்கியபோது அப்போது அரசாட்சி செய்த ஹிந்து மன்னன் (ஜாமொரின்) நல்ல வரவேற்பு கொடுத்தார். ஒரு பிராமண நம்பூதிரி காமாவுக்கு மொழிபெயர்த்தார். பின்னர் போர்ச்சுகீசிய- இந்திய உறவு சீர்கெடவே 70 போர்ச்சுகீசியர்கள் கோழிக்கோடில் கொல்லப்பட்டனர். 1502ம் ஆண்டில் இரண்டாவது முறை இந்தியாவுக்கு வந்த வாஸ்கோட காமா,  பழிவாங்கும் நோக்கத்தில் 400 பேருடன் மெக்காவுக்குப் புனித யாத்திரை சென்ற கப்பலை தீயிட்டுக் கொளுத்தினார். புகையை அதிகமாக்கி கப்பலில் இருந்த ஆண்,பெண், குழந்தைகளை சித்திரைவதை செய்து கொன்றார். கோழிக்கோடு மீது குண்டு வீசித் தாக்கினார்.

எந்த பிராமணர் முதலில் பேச்சுவார்த்தையில் உதவினாரோ அதே பிராமணர், தூதர் என்ற முறையில்,  வாஸ்கோவின் கப்பலுக்குச் சென்றார். அவரைப் பிடித்து வைத்து அவரது காதுகளை வெட்டி ஒரு நாயின் காதுகளை அவர் காதுகளில் வைத்துத் தைத்தார். உதடுகளைத் தைத்து ஜாமொரின் மன்னரிடம் அனுப்பிவைத்தார். ராவணன் கூட செய்யாத காடுமிராண்டித்தனமான செயல் இது. இதற்குப் பின் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரு பிராமணரைக் கண்டம் துண்டமாக வெட்டி அனுப்பினார். இபோதும் கூட எந்த ஒரு நாடும் தூதர்களை இப்படி அவமானப் படுத்துவதில்லை. கோவாவிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் போர்ச்சுகீசியர்கள் செய்த கொடுமைகள் தனிக் கதை.

 

தூதர்களுக்கு இலக்கணம் வகுத்த பூமியில் இப்படி நடந்தது வருந்ததக்கது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லர் செய்த கொடுமை பற்றி வாரம் தோறும் ஒரு டாக்குமெண்டரி அல்லது சினிமா அல்லது புத்தகம் வெளியிடும் வெள்ளைக்காரர்கள் அவர்கள் செய்த கொடுமைகளை அழகாக மறைத்து வருகின்றனர். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா?

contact swami_48@yahoo.com

எல்லோருக்கும் திறமை இருக்கிறது!

 

சம்ஸ்கிருதச் செல்வம்- Part 13

 

வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது! வீணான மனிதனும் இல்லை!

ச.நாகராஜன்  

 

     ஸ்வாமி விவேகானந்தர் இந்திய சமூகத்தைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த மாபெரும் மகான். இந்தியரைப் பொருத்த மட்டில் ஒரு பெரும் பிழை இருக்கிறது என்பது அவரது கணிப்பு.

 

“ஒரு நிரந்தர அமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்க முடியாது; எதையும் ஒழுங்காக திட்டமிட்டு ஒழுங்காக அமைத்தல் இந்தியருக்குக் கூடி வராத ஒன்று.” என்பது அவரது கணிப்பு.

 

முதலில் ‘ஆர்கனைஸ்’ (organize) என்ற சொல்லை இந்தியர் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரது அன்புரை! யார் யாருக்கு எது எது முடியும் என்பதை உணர்ந்து அவரவர் பணியை மேற்கொண்டு பணிகளைப் பிரித்துக் கொள்ளல் வேண்டும் என்பது அவரது அறிவுரை.

அவரது ஆங்கில உரையை அப்படியே காணலாம்:

“We Indians suffer from a great defect, viz. we cannot make a permanent organization: and the reason is that we never like to share power with others and never think of what will come after we are gone.

 

If one man dies, another – why another only, ten if necessary – should be ready to take it up. Secondly if a man’s interest in the thing is not roused he will not work whole-heartedly; all should be made to understand that every one has a share in the work and property; and a voice in the management. Give a responsible position to everyone alternatively, but keep a watchful eye so that you can control when necessary, thus only men be trained for the work. Set up such a machine as will go on automatically, no matter who dies or lives.

Skillful management lies in giving everyman, work after his own heart.”

இதையே பண்டைய நாட்களிலேயே எழுந்த அற்புதமான ஒரு ஸ்லோகம் விளக்குகிறது:-

 

நாக்ஷரம் மந்த்ரஹிதம் ந மூலம்நௌஷதிம்

அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்த்ர துர்லப:

 

நாக்ஷரம் மந்த்ரஹிதம் – மந்திரத்தில் பயன்படுத்த முடியாத எந்த எழுத்தும் இல்லை (There is no letter that cannot be used as a mantra)   

                                                                                                                                          

ந மூலம்நௌஷதிம் – மருந்தாகப் பயன்படுத்த முடியாத எந்த வேரும் இல்லை (There is no root without some medicinal Value)

 

அயோக்ய புருஷம் நாஸ்தி – எந்த மனிதனும் உபயோகமற்றவன் என்று ஒதுக்கக் கூடியவன் அல்ல (There is no person who is absolutely useless)

 

யோஜகஸ்த்த்ர துர்லப: – யோஜகன் – ஒருவரது தகுதியைக் கண்டுபிடித்து அதை சரியான விதத்தில் பயன்படுத்தக் கூடிய திட்டமிடுபவனே அரிதாக இருக்கிறான் (A yojaka i.e. a person who can identify their utility and put them to proper use is, however, always rare.)

 

உரிய இடத்தில் உரிய விதத்தில் பயன்படுத்தப்பட்டால் அனைத்து எழுத்துக்களும் மந்திர எழுத்துக்களே; அதே போல மஹிமையை உணர்ந்து உரிய விதத்தில் பயன்படுத்தினால் அனைத்து வேர்களும் ஔஷத மூலிகைகளே; எந்த மனிதனும் உபயோகமற்றவன், எதற்கும் லாயக்கற்றவன் என்பதில்லை. உரிய விதத்தில் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொருவனும் பெரிய காரியத்தை அவனளவில் சாதிக்க வல்லவனே! யாருக்கு என்ன தகுதி என்பதை உணர்ந்து திட்டமிடும் யோஜகன் தான் உண்மையில் அரிதானவன் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.

 

இந்திய சரித்திரத்தில் ஆயிரக் கணக்கானோரை இந்த ஸ்லோகத்திற்கு உதாரணமாக்க் கூறலாம். சத்ரபதி சிவாஜி பெரிய மொகலாய படை வைத்திருந்த ஔரங்கசீப்பையே திணற அடித்து தோற்கடித்தார். அவரிடம் இருந்த படை தளகர்த்தர்கள், படை வீர்ர்களை அவரவர்கேற்ற தகுதிப்படி அவர் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். சிறந்த யோஜகராக சிவாஜி திகழ்ந்ததை வரலாறு கூறுகிறது.

 

இதே போல ஒவ்வொருவரும் யோஜகனாகத் திகழ வேண்டும் என்பதை அற்புதமான இந்த ஸ்லோகம் கூறுகிறது!

 

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல்” (குறள் 517)

************

  Contact:- swami_48@yahoo.com

மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

12.சம்ஸ்கிருதச் செல்வம் 

12. மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

ச.நாகராஜன்  

 

பாரத தேசத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப் பேசாத வீடே கிடையாது. யமுனை, ராதை, கோகுலம் போன்ற வார்த்தைகளை இன்றைய கவிஞர்கள், குறிப்பாகத் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதும் போது அது உடனடி ‘ஹிட்’ ஆகி விடக் காரணம் இந்த வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் பழைய பாரம்பரியத்தை ஒரு க்ஷணத்தில் கொண்டு வந்து அந்த வார்த்தைகளுக்குத் தனி ஒரு கௌரவம், ஆழம், அர்த்தத்தைத் தருவதால் தான்!

 

 

சந்தேகம் இருந்தால் தமிழ் திரைப்படப் பாடல்களில் கண்ணன் என்று வரும் சொல் உள்ள சில பாடல்களை இசைத்துப் பாருங்கள்!

கண்ணனின் லீலைகளை ஆழ்வார்கள் முதல் பாரதியார் ஈறாக எண்ணற்ற பெரியோர் அழியாத சொற்களில் பதித்து வைத்துள்ளார்கள்.

இந்தவகையில் லீலா சுகர் தனி ஒரு இடத்தைப் பெறுகிறார்.

அவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.

அவர் எழுதிய கிருஷ்ணகர்ணாம்ருதம் காலத்தால் அழியாத காவியம். இது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. மாதிரிக்கு ஒன்றைப் பார்ப்போம்:

க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா

ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா

தத்யம் க்ருஷ்ண க ஏவ-மாஹ முஸலீ

மித்யாம்ப பச்யானனம் I

வ்யாதேஹீதி விதாரிதே சிகமுகே

த்ருஷ்ட்வா ஸமஸ்தம் ஜகத்

மாதா யஸ்ய ஜகாம விஸ்மயபதம்

பாயாத் ஸ ந: கேசவ: II

(இரண்டாவது ஆஸ்வாஸம் 64ஆம் ஸ்லோகம்)

 

இதற்கு பிரபல உரையாசிரியர் அண்ணா (ஸ்ரீ ராம கிருஷ்ண மடம், சென்னை) தரும் விரிவுரை அழகான ஒன்று.

 

அம்ப – அம்மா!

ரந்தும் – விளையாடுவதற்கு

கதேன – சென்ற

க்ருஷ்ணேன. – கிருஷ்ணனால்

அதுனா – இப்பொழுது

ம்ருத் – மண்ணானது

ஸ்வேச்சயா – இஷ்டப்படி

பக்ஷிதா – தின்னப்பட்டது

 

கத்யம் க்ருஷ்ண – மண்ணைத் தின்றது உண்மையா, கிருஷ்ணா?

க: ஏவம் ஆஹ – யார் அப்படிச் சொன்னது?

முஸல: – பலராமன்

 

மித்யா அம்ப, பச்ய ஆனனம் – பொய் அம்மா, வாயைப் பார்!

வ்யாதேஹி – வாயைத் திற

இதி – எனவே

விதாரிதே சிசு முகே – குழந்தையின் திறந்த வாயில்

ஸமஸ்தம் ஜகத் – உலகம் அனைத்தையும்

யஸ்ய மாதா – எவனுடைய தாயார்

த்ருஷ்ட்வா – கண்டு

விஸ்மய பதம் – ஆச்சரிய நிலைய

ஜகாம- அடைந்தாளோ

ஸ: கேசவ: -அந்தக் கண்ணன்

ந: – நம்மை

பாயாத் – காப்பாற்றட்டும்

தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணன் நடத்திய லீலைகளை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்யம் செய்தவர்களே!

 

328 அம்ருதத் துளிகளை இந்த ஜன்மத்திலேயே ஒரு முறையேனும் படிப்போம்; மலர்வோம்; மகிழ்வோம்.

contact: swami_48@yahoo.com

*******

 

அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை!

11.ராமாயண வழிகாட்டி

ச.நாகராஜன்

 

ராமன் சொன்ன புறாக் கதையை முந்திய பகுதியில் படித்தீர்கள். இப்போது சீதை சொன்ன கரடி கதையைப் பார்ப்போம்.

 

அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை! 

ராவண வதம் முடிந்தது. ராமரின் கட்டளைப்படி விபீஷணருக்கு கலச நீரால் அபிஷேகம் செய்து  இலங்கையின் மன்னனாக லக்ஷ்மணர் பட்டாபிஷேகம் செய்தார். அதன் பின்னர் ராமர் அனுமனை அழைத்து சீதா தேவியிடம் தனது க்ஷேமத்தைத் தெரிவித்து ராவணன் கொல்லப்பட்டதையும் தெரிவிக்க கட்டளை இடுகிறார்.சீதையிடம் வந்த அனுமன் ராமரின் க்ஷேமத்தைத் தெரிவித்து விட்டு  ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறான்.

“நீங்கள் உத்தரவு அளித்தால் உங்களை மிரட்டிய இந்த அரக்கிகள் அனைவரையும் இப்போதே கொல்ல விரும்புகிறேன்.இந்த வரத்தை அருளுங்கள் (ஏதத் வரம் ப்ரபச்ச என்பது வால்மீகியின் வாக்கு)” என்று பணிவாக அனுமன் இந்த வரத்தைக் கேட்க, சீதையோ, “விதிப்பயனாய் என்னால் இது  இப்படி அனுபவிக்க வேண்டியதாகி விட்டது என்று நிச்சயிக்கிறேன். இந்த விஷயத்தில் ராவணனின் வேலைக்காரிகளை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகிறார்.

 

விதியின் வெல்ல முடியாத போக்கும், மன்னிப்பு என்ற மாபெரும் தெய்வீக குணத்தை சீதாதேவி கொண்டிருப்பதையும் இந்த இடம் அருமையாக விளக்குகிறது.

“வானர சிரேஷ்டரே! ராவணனின் கட்டளைக்கு இணங்க இந்த அரக்கிகள் என்னை மிரட்டினார்கள். அவனே இப்போது இறந்து விட்டான். ஆகவே இனி மிரட்ட மாட்டார்கள்.

புராதனமானதும் அறநெறி வழுவாததுமான இந்த ஸ்லோகமானது ஒரு புலியிடம் கரடி ஒன்றினால் சொல்லப்பட்ட்து. அதை என்னிடம் கேட்பீராக!” என்று கூறும் சீதை அதைக் கூறுகிறார்:

ந பர: பாபமாதத்தே பரேஷாம் பாபகர்மணாம்

சமயோ ரக்ஷிதவ்யஸ்து சந்தஸ்சாரித்ர பூஷணா: 

பர: – ஒரு நற்புருஷன்

பாப கர்மணாம் – பாவத்தைப் புரியும்

பரேஷாம் – மற்றவர்க:ளுக்கு (அதாவது தீயவருக்கும்)

பாபம் – பாவத்தை (தீங்கை)

ஆதத்தே ந – புரிவதில்லை

சமய: து – நன்னெறியே தான்

ரக்ஷிதவ்ய: -பாதுகாக்கத் தக்கது

சந்த: – நல்லோர்கள்
சாரித்ர பூஷணா: – நன்னடத்தையையே ஆபரணமாகக் கொண்டவர்கள்

 

தீங்கு செய்தோருக்குத் திரும்பி நல்லோர் தீங்கை இழைப்பதில்லை. நல்லோர்கள் நன்னடத்தையையே ஆபரணமாகக் கொண்டவர்கள். அவர்கள் நன்னெறியையே பாதுகாப்பார்கள்.

சந்த: சாரித்ர பூஷணா: என்ற வால்மீகியின் வாக்கை நினைத்து நினைத்து மகிழலாம்.

பழம் பெரும் கதையான புலிக் கதையை சீதை கூறுவதிலிருந்தே அது எத்துணை பழமையானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.சரி, கரடியின் கதை என்ன?

முன்னொரு காலத்தில் புலி ஒன்று வேடன் ஒருவனைத் துரத்தியது. புலிக்கு அஞ்சி ஓடி வந்தவன் அருகிலிருந்த மரம் ஒன்றின் மீது ஏறினான். அந்த மரத்திலோ ஒரு கரடி இருந்தது! பயந்து போன வேடன் அந்த கரடியிடம் சரணாகதி அடைந்தான். அப்போது மரத்தின் கீழே இருந்த புலி, கரடியிடம் வேடனைக் கீழே தள்ளுமாறு கூறியது. ஆனால் கரடி திடமாக அதை மறுத்து விட்டது. பின்னர் கரடி உறங்க ஆரம்பித்தது. அப்போது வேடனை நோக்கிய புலி,” இப்போது கரடியைக் கீழே தள்ளி விடு. உன்னை விட்டு விடுகிறேன்” என்றது. அதற்கு இணங்கிய வேடன் உறங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். ஆனால் முழித்துக் கொண்ட கரடி கீழே விழும் போதே ஒரு மரக்கிளையைப் பற்றிக் கொண்டது, இப்போது புலி கரடியிடம், “ உன்னைத் தள்ளிய வேடனை நீ கீழே தள்ளி விடு” என்றது. அதற்குக் கரடி,” தஞ்சமுற்றவனுக்கு எவ்வாற்றானும் தீங்கு புரிய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறி மேலே கண்ட ஸ்லோகத்தைக் கூறியது.

ஆகவே கரடி சொன்ன இந்த ஸ்லோகம் காலம் காலமாக வழி வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

 

சரணமடைந்தவனை எப்பாடு பட்டேனும் காப்பேன் என்ற அருமையான தத்துவம் பாரதத்தின் பாரம்பரியமான தத்துவங்களுள் ஒன்று என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

இந்த சரணாகதி தத்துவத்தின் படியே விபீஷணனை ராமன் அங்கீகரித்து ஏற்றான் என்பதையும் ராமாயணம் சரணாகதி காவ்யம் என்பதையும் எண்ணிப் பார்த்து மகிழலாம்.

***************

999 Prisoners + One Poet

Eight Anthologies (Ettu Tokai) and Ten Long Poems (Pathu Pattu) were composed during Tamil Sangam period. These 18 books are collectively known as Sangam Literature. Sangam poets lived in the first few centuries of modern era. Sangam poetry is predominantly secular in character but consists of lot of references to Hindu epics and mythologies. Of the Ten Long Poems known as Pathu Pattu in Tamil, Tiru-muragatrup-padai is a religious work. It is attributed to poet Nakkirar who headed the Third Tamil Sangam (Tamil Academy). He had composed a secular poem ‘Nedunal Vaadai’ in the Ten Long Poems.

 

Nakkirar was the most controversial poet of the period. There are many legends which project him as a revolutionary poet. He challenged Lord Shiva at one time according to a popular legend. The story behind this Long Poem Tiru Murugatrup Padai is also equally interesting. It is a story of a demon who imprisoned 999 people and was looking for the last one to offer them in a big sacrifice. The source for this story is a passing reference in Tiruppugaz composed by poet Arunagirinathar of fifteenth century. But Nakkirar lived at least 1200 years before him.

 

One day Nakkirar was doing Shiva Puja (offering to Lord Shiva). A strange incident distracted him from the Puja. A leaf from the nearby tree fell into water and half of the leaf was in the water and the other half was on land. The water half became a fish and the land half became a bird and each one was pulling the other. Nakkirar stopped the Puja and watched this. At that time a demon appeared and caught hold of Nakkirar for violating the rules of the Siva Puja. The demon took him to a cave, where he saw 999 detainees. They started crying as soon as they saw Nakkirar. The poet was puzzled. Then the detainees in the cave explained to him that that they were happy inside the cave because the demon fed them very well until today. But they were told that the day the prisoner’s strength goes up to 1000 they will be sacrificed and eaten. Nakkirar was the thousandth prisoner.

Nakkirar was upset when he heard the story. He thought Lord Skanda/ Murugan can alone save them at times like this. So he composed Tirumurukatruppadai in praise of Lord Skanda/Murugan. When he recited this poem Lord Skanda appeared before them and killed the demon. All the 999 prisoners were released and they were very happy. This story is authenticated by Tiruppugaz.

 

We have one such story in Mahabharata about a squirrel with half of its body gold and the other half normal grey. It appeared at Dharmaputra’s Yagna (Fire sacrifice) to test the effect of the Yagna. Probably this episode gave birth to the story of half fish and half bird. Tiru Murugatrup Padai is a beautiful poem running to 317 lines. It describes the beauty and sanctity of six famous centres of Skanda/Murukan worship in Tamil Nadu. Atruppadai poems belong to a particular genre, where in one poet who has received voluminous gifts from a patron, guides another poet to him. But in the Tiru Murukatru Padai, the poet guides others to Lord Murukan.

 

The poem is regarded as part of canonical literature of Saivism. It is included in the Eleventh Tirumurai. Devotees of Lord Murukan or Skanda  recite this poem with great reverence and devotion.

 

Tamil Reference for the story from Tiruppugaz:

மலைமுகம் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு

வழி திறந்த செங்கை வடிவேலா:

Contact: swami_48@yahoo.com

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

என் பெயர் புலவர் நக்கீரன். கா ..கா…கா…… என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற 4 வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”, ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” “சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதைச் சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை’’ என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று காகம் பற்றிய பாடல்கள், பழமொழிகளைக் காண்போம்.அடுத்த வாரத் தலைப்பையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்: ‘’இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதிலும் அதை நாடி ஓடு’’

 

நான் முதலில் பேசுகிறேன். என் பெயர் வள்ளுவன். காகத்தின் அருமையான குணங்களில் உன்று பகுத்துண்டு உண்ணுதல். அதை நான் தான் அழகாக இரண்டே வரிகளில் சொல்லிவிட்டேன்:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள (குறள் 527)

 

அது மட்டுமா? பஞ்ச தந்திரக் கதையில் வரும் காகம் ஆந்தை மோதலையும் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டேன்:

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481).

 

என் பெயர் ஓதல் ஆந்தையார். நான் சங்க காலத்திலேயே இதைச் சொல்லிவிட்டேனே:

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின் கிளையோடாரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவன் மாதோ

வெஞ்சின விறல் வேற் காளையோ

டஞ்சி லோதியை வரக்கரைந்தீமே (ஐங்குறுநூறு 391)

(காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக்கொள்ளுவர்).

என் பெயர் பெருவாயின் முள்ளியார். என் ஆசாரக்கோவையில் கூட எறும்பு, தூக்கணம் குருவி, காகம் ஆகிய மூன்றின் அரிய குணங்களைப் பாடி இருக்கிறேன். எறும்பு திட்டமிட்டு மழைக் காலத்துக்கு உணவைச் சேமிக்கிறது. குருவி எந்தக் காலத்திலும் சேதமடையாத அழகான கூட்டைக் கட்டுகிறது. காகம் எல்லோரையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடுகிறது.

நந்து எறும்பு தூக்கணம் புள் காக்கை என்றிவை போல்

தங்கரு நல்ல கடைப் பிடித்து……….. (ஆசாரக்கோவை)

 

என் பெயர் முன்றுரை அரையனார். காகத்தின் சொல்லை எள்ளி நகையாடக்கூடாது என்று பாடி இருக்கிறேன்:

கள்ளி அகிலும் கருங் காக்கைச் சொல்லும்போல

எள்ளற்க யார் வாயின் நல்லுரையை—பழமொழி

பாரதி

பாரதி: நான் பல பாடல்களில் காகத்தின் பெருமைதனைப் பேசி இருக்கிறேன். காகத்தை மனித ஜாதியுடன் இணைத்துப் பாடிவிட்டேன். சிறுவர் பாட்டில்கூட காகத்துக்கு இரக்கம் காட்டச் சொன்னேன்:

காக்கை குருவி எங்கள் ஜாதி—நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

!!!

ஓடி விளையாடு பாப்பா……….

எத்தித் திருடும் அந்த காக்கை—அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா

!!!

காக்கைச் சிறகினிலே நந்தலாலா—நின்றன்

கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா

!!!

பாரசக்தி திரைப்படம்

என் பெயர் உடுமலை நாராயண கவி.நான் பாரசக்தி திரைப்படப் படத்தி பாடிய பாடல் 60 ஆண்டுகாலமாகப் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது:

கா கா கா
கா கா கா

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடி ஓடி வாங்க

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடி ஓடி வாங்க

என்ற அனுபவப் பொருள் விளங்க

அந்த அனுபவப் பொருள் விளங்க

காக்கை அண்ணாவே நீங்கள்

அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க

காக்கை அண்ணாவே நீங்கள்

அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க

கா கா கா என்று தினம் ஒன்னாக கூடுவீங்க

வாங்க.. கா கா கா

சாப்பாடில்லாம தவிக்கிதுங்க ஜனம்

கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாம தவிக்கிதுங்க ஜனம்

கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க

உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணீ ஊத்துங்க—என்றால்

தாழ்ப்பாள போடுறாங்க பாருங்க

அந்த சண்டாளர் ஏங்கவே தன் நலமும் நீங்கவே

தாரணி மீதிலே பாடுங்க

ராகம்…. கா கா கா

எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு

பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே

பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே

இளைத்தவன் வலுத்தவன் இனச் சண்டை பணச் சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச் சண்டை பணச் சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே

எத்தனையோ இந்த நாட்டிலே

படிக்காத நீங்க எங்க பக்த்தறிவாளர பாக்காதீங்க

படிக்காத நீங்க எங்க பக்த்தறிவாளர பாக்காதீங்க

பாசமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க

பாசமாய் இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க

பழக்கத்தை மாத்தாதீங்க

எங்க பாடுங்க… கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்)

!!!!!!

காகம் பற்றிய பழமொழிகள்:

நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்:

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் கொஞ்சு

காக்கா கறுப்பு

காகத்திலே வெள்ளை உண்டா?

காகம் இருக்க பழம் விழுந்தது போல

காகம் இல்லாத ஊர் சோணகன் இல்லாத ஊர்

காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்

காகம் ஏறி பனம் காய் உதிருமா?

காகம் கழுத்து கறுத்து என்ன?வெளுத்து என்ன?

காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக் கொள்வாளாம்

காகம் கொக்கு கன கிளி யனுமான் குடியர் குணம்

காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும்

காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தனையோ புன்னை,

கண்ணாளன் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?

காக்காயினும் கன சிவப்பு

காக்காயின் கண்ணுக்கு பீர்க்கம் பூ பொன்னிறம்

காக்காய் கூட்டம் போல கட்டுக் கோப்பு

காக்காய் (கால் கை) பிடிக்கிறவனுக்கு காலம்

காக்கை இருந்த கொம்பு அசையாது

காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்தது

காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்

காக்கை குருவி மூக்காலே கொறிக்கிறது போல

கக்கைக்கு அஞ்சு குணம்

காக்கையிற் கரிது களாம் பழம்

காக்கையின் கழுத்தில் பனங்காயைக் கட்டினதுபோல

காக்காயும் கத்திப் போகிறது, கருவாடும் உலர்ந்து போகிறது

காக்கையும் காற்றும் போகு உண்டானால் வரும்

காக்கையும் குயிற்குஞ்சை தன் குஞ்சு போல வளர்க்கும்

காக்கையைக் கண்டு அஞ்சுவாள், கரடியைப் பிடித்துக் கட்டுவாளாம்

 

காக்கைபாடினியார்:

காக்கைபாடினியார்: என்பெயர் காக்கை பாடினியார். நான் சங்க காலத்திலேயே காக்கை பற்றிப் பாடியவள். காக்கையின் பெயரை உடைய ஒரே புலவன். என் பெயரில் காக்கைபாடினீயம் என்ற நூலும் உள்ளது.

நாங்கள் சங்கப் புலவர்கள். பாருங்கள் எத்தனை பாடல்களில் காகம் பலிச் சோற்றை உண்ணுவது பற்றிப் பாடீருக்கிறோம். பெண்களின் கரிய விழிகளைக் காகத்தின் கரிய நிறத்துக்கு ஒப்பிட்டுள்ளோம்:

பொருநராற்றுப்படை (முடத்தாமக்கண்ணியார்)

செஞ்சோற்ற பலி மாந்திய

கருங்காக்கை கலவு முனையின்

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந்210) 246 ,313, 334;

நற்றிணை 31, 231, 258, 272, 281, 343, 345, 358. 367; புறம் 238, 342, 362

 

படிக்கவேண்டிய எனது பழைய கட்டுரைகள்:1.இந்துமதம் பற்றி 200 பழமொழிகள் 2.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள் 3.யானை பற்றிய நூறு பழமொழிகள் 4.பெண்கள் பற்றி 300 பழமொழிகள் 5.பாரதி பாட்டில் பழமொழிகள் 6.பழமொழியில் இந்துமதம்7.Indian Crow by Mark Twain

 

ராமன் சொன்ன புறாக் கதை

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 10 by ச.நாகராஜன்

 

சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!

 

ராமாயணத்தில் உயிர்நாடியாக விளங்கும் ஒரு ஸ்லோகம் யுத்தகாண்டத்தில் 18ஆம் ஸர்க்கத்தில் 33வது ஸ்லோகமாக அமைகிறது:

 

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே I

அபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம II

 

ப்ரபன்னாய – கஷ்டமடைந்து

தவ அஸ்மி –“உனது பொருள் நான்”

இதி – என்று

யாசதே – வேண்டுகிறவனுக்கு

சர்வபூதேப்ய: ச – எல்லா பிராணிகளிடத்திருந்தும்

அபயம் – அபயத்தை

ததாமி –கொடுக்கிறேன்.

ஏதத் – இது

மம – எனது

வ்ரதம் – சங்கல்பம்

 

ராமர் கூறும் இந்த அற்புதமான உறுதி மொழி அனைவருக்கும் சந்திர சூரியன் உள்ளவரை பொருந்தக் கூடிய ஒன்று.

விபீஷணன் சரணாகதி அடையும் போது அவனைக் கொல்வதே உசிதம் என சுக்ரீவன் கருத்துத் தெரிவிக்கிறான். ஆனால் ராமரோ அதை மறுக்கிறார்.

 

 

ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு:சரணமாகத:

அர்சிதஸ்ச யதாந்யாயே ஸ்வைஸ்ச மாம்ஸை நிமந்த்ரித:

 

சத்ரு – எதிரி

சரணம் ஆகத: – சரணமடைந்தவனாகி

கபோதேன ஹி – ஒரு புறாவினாலேயே

யதாந்யாயே – சாஸ்திரவிதிப்படி

அர்ச்சித: ச- அர்ச்சிக்கப்பட்டவனாய்

சை:-தனது

மாம்ஸை ச- மாமிசங்களைக் கொண்டே

நிமந்த்ரித: – விருந்துண்ண வரிக்கப்பட்டான் என்று

ஸ்ரூயதே – வழங்கப்படுகிறது

 

அருமையான பழைய கதை ஒன்றை ராமர் இங்கு சுக்ரீவனிடம் நினைவு படுத்துகிறார். அவரே, “இப்படி ஒரு சம்பவம் வழங்கப்படுகிறது” என்றால் அது எவ்வளவு பழமை பொருந்தியதாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்!

 

ஒரு வேடன் வனமொன்றில் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் மழையுடன் கூடிய கடும் புயல் அடித்தது. அப்போது மழையால் மதி மயங்கிக் கிடந்த பெண் புறா ஒன்றைக் கையில் எடுத்துக் கூண்டில் அடைத்துக் கொண்டு குளிர்காயவும் பசி தீரவும் வழி தெரியாதவனாகி அருகில் இருந்த ஒரு மரத்தடியை அடைந்தான். அங்கு தன் பெண் துணையைக் காணாமல் வாடும் ஆண் புறாவைக் கண்டான். கூண்டில் இருந்த பெண்புறா தன் ஆண் துணையான ஆண் புறாவை நோக்கி,” இதோ பார், நான் சத்துரு வசப்பட்டேன். என்னைப் பற்றி வருந்தாதே. சத்துருவாக இருந்தாலும் குளிர் காயவும் உணவை வேண்டியும் நமது மரத்தடிக்கு இவன் அதிதியாக வந்திருக்கிறான். இவனை உபசரித்து நலம் அடைவாய்” என்று கூறியது. அதைக் கேட்ட ஆண் புறா விறகுச் சுள்ளிகளைச் சேகரித்து தீ மூட்டி  வேடனைக் குளிர் காய வைத்து உணவின் பொருட்டுத் தன் உடலையும் தீக்கு இரையாக்கியது.

 

இப்படிப்பட்ட அருமையான   தியாக சரிதத்தை எடுத்துக் கூறிய பின்னர் ராமர் கூறும் பொருள் பொதிந்த ஸ்லோகம் தான் “ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே”I

அபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம II

 

என்னும் சரணாகதி அடைந்தோருக்கு அபயம் அளிப்பேன் என்னும் தன் விரதத்தைக் கூறும் ஸ்லோகம்.

 

இதே சரணாகதி தத்துவத்தைத் தான் கம்பன் தனது ராமாயணத்தின் முதல் செய்யுளாக அமைத்தான் என்பது நினைந்து நினைந்து இன்புறுதற்குரிய ஒன்றாகும்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

 

என்ற சரணாகதி தத்துவத்தை விளக்கும் செய்யுளே ராமாயணத்தின் முதல் செய்யுளாக அமைக்கப்பட்டுள்ளது!

 

உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து அதை நீக்கும் இடையறா விளையாட்டைக் கொண்ட அந்தத் தலைவனுக்கே நாங்கள் சரண் என்று கூறிப் பெரிய தத்துவத்தை நான்கே அடிகளில் தெளிவுபட விளக்கி விட்டான்  மஹாகவி  கம்பன்.

 

இதுவே தைத்திரீய உபநிடதத்தில் பிருகு மஹரிஷி தன் தந்தையும் குருவுமான வருணரிடம் சென்று “தலைவனை”ப் பற்றித் தெரிவிக்க வேண்டிய போது அவர் கூறிய கருத்தாக அமைகிறது. அதைக் கம்பன் இந்தச் செய்யுளில் அமைத்திருப்பதை ஒப்பு நோக்கி மகிழலாம்.

கீதையில் கண்ணன்,

 

“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச”:

 

என்று கூறும் சரணாகதித் தத்துவ ஸ்லோகமும் இங்கு நினைவு கூரத் தக்கது. (கீதை 18ஆம் அத்தியாயம் 66வது ஸ்லோகம்)

“அனைத்துத் தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரணாக அடை. நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே” என்ற கண்ணனின் வாக்கு முந்தைய அவதாரமான ராம அவதாரத்தில் அவன் செய்த பிரதிக்ஞை தான் என்பது தெளிவாக இங்கு விளங்குகிறது.

 

ராமாயணத்தின் முக்கிய தத்துவத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தை சுந்தர காண்டம் பாராயணத்தை அன்றாடம் செய்வோர் தினமும் கடைசியில் கூறி பாராயணத்தை முடிப்பது தொன்று தொட்டு இருந்து வரும் சம்பிரதாயமாக இருந்து வருகிறது.

 

ராமாயணம் காட்டும் ஒரே வழி சரணாகதி தான் என்பதை அறிவோம்; உய்வோம்!

**********************