swami_48@yahoo.com Date: 3 JANUARY 2019 GMT Time uploaded in London 7-02 am Post No. 5876 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
TAGS- பிலிப்பைன்ஸ், மநு சிலை, தென் கிழக்கு ஆசியா,மநு செல்வாக்கு
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாக்யா வார இதழில் வாரந்தோறும் இடம் பெறும் அறிவியல் துளிகள் தொடரில் அத்தியாயம் 407
(எட்டாம் ஆண்டு நாற்பத்தி
மூன்றாம்
கட்டுரை)
மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல்
ஆய்வுகள்! – 2
ச.நாகராஜன்
மரணமடைந்த பின்னர் மீண்டும்
உயிருடன் திரும்பியோர் பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவெனில், அவர்கள்
தாம் வாழ்ந்த கலாசாரத்திற்குத் தக்கபடி தங்கள் அனுபவங்களைக் கூறுகின்றனர் என்பது தான்
அது.
அமெரிக்காவில் இப்படிப்பட்ட
அனுபவங்களை விவரிப்போர், “பிரக்ஞை இன்றி, நான் இறந்தவுடன் ஒரு இடத்திற்குச் சென்றேன். அங்கு வெண்ணிற ஆடை அணிந்த
குழந்தைகளும் பெரியவர்களும் இருந்தனர். அவர்கள் எந்த இனத்தவர் என்று என்னால் கூற முடியவில்லை.
ஆனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். என்னைக் கண்டவுடன் அவர்கள் பாடியதை
நிறுத்தி விட்டு, ‘உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லையே’ என்றனர். உடனே நான்
வேகமாகத் திரும்பி விட்டேன்.” இது மோர்ஸ் (Morse-1992) தனது ஆய்வில் தரும் தகவல்.
பஸ்ரிசா மற்றும் ஸ்டீவன்ஸன்
(Pasricha and Stevenson – 1986) மரணத்திலிருந்து மீண்ட 16 இந்தியர்களைச் சந்தித்தனர்.
அவர்கள் கூறுவது பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தது. “நான்கு கறுப்பு நிறத் தூதர்கள்
என்னை வந்து பிடித்துக் கொண்டனர். என்னை எங்கே கொண்டு போகிறீர்கள் என்று கேட்டேன்.
அவர்கள் என்னை ஒரு தேவதையிடம் அழைத்துச் சென்றனர். எனது உடல் மிகவும் சுருங்கி இருந்தது.அந்த
தேவதைக்கு முன்னர் பெரிய புத்தகங்கள் இருந்தன.அவர் கையில் ஒரு பேனா இருந்தது. அவர்
அருகில் பல உதவியாளர்கள் இருந்தனர். அந்த தேவதை, ‘சாஜூ பனியா(வணிகர்) நமக்குத் தேவையில்லை.
நாம் கேட்டது சாஜு கும்ஹாரைத் தான் (குயவர்). இவரை அனுப்பி விடுங்கள். அந்த இன்னொருவரைக்
கொண்டு வாருங்கள்’ என்றது.
நான் பூமிக்குத் திரும்பி வர விரும்பவில்லை. அந்த உதவியாளர்களிடம் ஏதேனும் ஒரு வேலை தருமாறு வேண்டினேன்.என்னைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்றேன். உயர்ந்த ஆசனத்தில் வெள்ளை தாடியுடன் மஞ்சள் உடையுடன் அங்கே அமர்ந்திருந்த யமராஜர், ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று என்னைக் கேட்டார். நான் அங்கேயே தங்க வேண்டும் என்றேன். அவர் என் கையை நீட்டச் சொன்னார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் இருந்த இடத்திற்கு வந்து உயிர் பிழைத்து விட்டேன்”
இந்தியர்களின் அனுபவம் அமெரிக்கர்களின்
அனுபவத்தை ஒத்ததாக உள்ளது. அதில் மதம் அதிகப் பங்கு வகிக்கிறது.
16 பேர்களை ஆய்வு செய்ததில்
13 இந்தியர்கள் இதே அனுபவத்தைக் கூறினர்.
தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர்
பற்றிய ஆய்வை மர்பி (2001இல்) நடத்தினார். அதில் அவர் யமராஜனைப் பார்த்ததாகவும் ஒரு
பெரிய ஹாலுக்குள் அவர் யமதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். ‘யமராஜன்
என்னைப் பார்த்து இவர் தவறாக இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்று சொல்லி திருப்பி
அனுப்பும் படி சொல்லவே நான் மீண்டு வந்தேன்’ என்றார் அவர்!
க்ரிசென் (Greyson -1983) தனது ஆய்வில் இப்படி சாவிலிருந்து மீண்டவர்களில் பலர் சைக்கிக் எனப்படும் அமானுஷ்ய சக்தியைப் பெறுகின்றனர் என்கிறார். ஆவிகளைக் காண்பது, மனிதர்களைச் சுற்றியுள்ள அவுரா (Aura) எனப்படும் ஒளிவட்டத்தைக் காண்பது, ஆவிகளுடன் பேசுவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
மோர்ஸ் (1992) தனது ஆய்வில்
இப்படிப்பட்டவர்கள் மீண்டும் உயிருடன் வந்தவுடன் இவர்களில் பலருக்கு மின்சாரம் மற்றும்
காந்த சக்தி ஆகியவற்றில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார். அவர்கள் கையில்
கட்டியிருக்கும் கடிகாரங்கள் வேலை செய்வதில்லை. மின் பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்கள்
பல அவர்களுக்கு வேலை செய்வதில்லை!
இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படுவதற்கு
அறிவியல் ரீதியிலான காரணங்கள் உண்டா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வுக்குள் கொண்டு வந்தனர்.
போதை மருந்துகள், வலிப்பு,ஆக்ஸிஜன் பற்றாக்குறை, புலன் உணர்வு குறைதல், தோற்ற மயக்கம்
(hallucination) ஆகிய இவற்றால் அப்படி ஒரு அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்களோ என்ற விவாதமும்
நடைபெறுகிறது.
ரிங் (1980) தனது ஆய்வில்,
‘இறந்தவுடன் இறந்தவரின் பிரக்ஞை அடுத்த ஒரு மேலான மட்டத்திற்குச் செல்கிறது. இதை நான்
நான்காவது பரிமாணம் என்கிறேன். இறந்தவர் தனது இன்னொரு ‘உயரிய நபரைப்’ பார்க்கிறார்.
அந்த இன்னொருவர் தான் அவருக்கு ‘ஒளி உருவமாகத்’ தெரிகிறார்” என்கிறார்.
குக் (1998) எனும் விஞ்ஞானி தனது ஆய்வில் மனம்
பற்றியும் இதில் ஆராய வேண்டும் என்கிறார். ‘இறந்தவரின் மனம் மட்டும் இன்னும் கொஞ்ச
நேரம் இயங்குகிறதோ, அதனால் தான் அவரால் இப்படி ஒரு அனுபவத்தைச் சொல்கிறாரோ எனப் பார்க்க
வேண்டும்’ என்பது அவரது முடிவு.
விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர்
பல நாடுகளிலும் உள்ள பலரும் இப்படிச் சொல்வது அதிசய ஒற்றுமை அல்லவா, ஆகவே இதில் உண்மை
இருக்கிறது என்கின்றனர்.
இன்னும் சிலரோ போதுமான சான்றுகள் பெரிய எண்ணிக்கையில் கிடைக்கவில்லை; என்றாலும் கூட இது ஆராயப்பட வெண்டிய மர்மமான ஒரு விஷயம் தான் என்கின்றனர்.
இது பற்றி சுமார் 450 பெரிய
புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் என்பதிலிருந்தே இது
எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதைப் புலப்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கான கேஸ்கள்! பொய்
சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லாத பலரும் இதைச் சொல்கின்றனர்.
ஆகவே மரணத்திற்குப் பின் மறுவாழ்வு
உண்டா?
மரணமடைந்து மீளாதவர்களும் சொல்ல
முடியாது; உயிரோடிருப்பவர்களும் சொல்ல முடியாது. மரணமடைந்து மீண்டவர்கள் மட்டுமே இதைச்
சொல்லமுடியும்.
நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம் என்பது தான் இன்றைய அறிவியல் நிலை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபலமான இந்திய விஞ்ஞானிகளில்
ஒருவரான சர் ஜகதீஷ் சந்திர போஸ் (பிறப்பு 30-11-1858 மறைவு 23-11-1937) பல அரிய கண்டுபிடிப்புகளைக்
கண்டு பிடித்தவர். அவரது அபாரமான கண்டுபிடிப்புகள் லேசில் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்
தனது ஆய்வுக் கட்டுரையை இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பிய போது
அது நிராகரிக்கப்பட்டது.
பின்னால் அவர் இங்கிலாந்து
சென்று தனக்கென ஒரு சிறிய லாபரட்டரியை அமைத்த போது ராயல் சொஸைடியின் உறுப்பினர் ஒருவர்
அங்கு வந்து அதைப் பார்த்தார். போஸின் ஆராய்ச்சியைக் கண்டு வியந்து போன அவர் போஸிடம்,
“ உங்களது கட்டுரை ஒரு வோட்டால் நிராகரிக்கப்பட்டது. அந்த ஒரு வோட்டைப் போட்டவன் நான் தான்” என்று மிக வருத்தப்பட்டுக் கூறினார்.
தாவரத்திற்கும் வலி தெரியும்
என்று போஸ் கூறியதில் பல விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையே இல்லை. ஆகவே இதை சவாலாக எடுத்துக்
கொண்டு 1901ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி ராயல் சொஸைடியின் பிரதான ஹாலில் தன் சோதனையை
அவர் நிகழ்த்திக் காட்டினார். ஹால் முழுவதும் விஞ்ஞானிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
போஸ் மிகுந்த கவனத்துடன்
ஒரு செடியின் வேர் பாகத்தை அதன் தண்டுடன் சேர்த்து, தான் தயாரித்து வைத்திருந்த ப்ரோமைட்
கரைசலில் அமிழ்த்தினார். உடன் என்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் திரையில் அதன் அசைவுகளை
அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். கரைசலில் அமிழ்த்தப்பட்ட செடியின் பாகம் பெண்டுலம்
போல அங்கும் இங்கும் அசைந்து ஆட ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே அது வேகமாகத் துடிக்க
ஆரம்பித்தது. பின்னர் உயிர்த்துடிப்பு நின்றது போல நின்றது. விஷம் கொடுக்கப்பட்ட எலி
எப்படித் துடிதுடித்துச் சாகுமோ அது போல அந்த நிகழ்வும் இருந்ததை அனைத்து விஞ்ஞானிகளும்
பார்த்துப் பிரமித்தனர். அவர்களின் கரகோஷம் ஹாலையே பிளந்தது.
ப்ரோமைட் விஷத்தின் பாதிப்பால் செடி துடிதுடித்து இறந்ததை உலகம் அறிந்த போது தான் போஸின் அறிவியல் ஆய்வின் திறன் தெரிய வந்தது. 1917இல் அவருக்கு க்னைட் பட்டம் தரப்பட்டது. 1920இல் அவர் ராயல் சொஸைடியின் ஃபெலோ என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
swami_48@yahoo.com Date: 2 JANUARY 2019 GMT Time uploaded in London –21-30 Post No. 5874 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
swami_48@yahoo.com Date: 2 JANUARY 2019 GMT Time uploaded in London –16-26 Post No. 5873 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I have already given the influence of Manu Smrti in Cambodia. See my article
posted yesterday. Now let us look at his impact in Thailand and Indonesia
In ancient Indonesia 8th and 9th chapters of Manu Smrti are the main
source of law books relating to civil and criminal law. Two law books called
Devaagama and Svarajambu followed Manu. A Brahmin named Kaundinya II reformed
the laws in the light of the Indian system according to Liang Shu.
Indian influence is seen in ViIetnam (Champa) as well. An inscription states
that king Hari varma deva (1074-1080) was versed in four ,Upays and 18 titles
or subjects of dispute . Jaya Indra varman IV of `12th century was conversant
with all the Dharmasastras.
In Thailand also we see 18 titles of dispute, division of slaves into seven
classes. Interest can’t exceed the principal and persons who can’t be witnesses
(in Thailand’ s Dhammasatha ( Dharma
sastra))
In the legal treaties Sivasasana or Purvadigama , rules prescribed by Manu are used.
It is stated in the Rsisasana that Manu was the first monarch who introduced
the Sivasasana.
The Javanese treaties
Kutaramanava,
Svarajambu,
Adigama
are composed on the basis of Manu Smrti
Eight kind of thieves,six kind of great sinners (Atadayins) , homicide etc are
discussed on the basis of Manu Smrti
There are other works in old Javanese which used Manu Smrti.
Malaya
Manu’s influence is quite considerable on the laws of Malay according to
Winstedt; most of the patriarchal law of this country was of Indian inspiration
Most of the ten crimes for which death penalty are prescribed are like those in
Hindu law. And heavier punishment for a person offending against a person of
superior caste, modes of punishment like the cutting of the tongue, shaving the
head etc, marrying a forcibly abducted girl, fine for sexual offences also
reflects of Manu Smrti.
Manu Statue in Philippine
The installation of Manu’s Statue, in early times in the Philippines, is an
index to the reverence to this great law giver. It is preserved in Art Gallery
of the Senate Chamber of the Philippine republic
Burma
The Pali Dhammasaththa written by Dhammavilasa in 1174 has many of Manu’s rules
Next I will give Dr S Radhakrishnan’s (Philosopher and President of India) views on Manu Smrti
Source book- Cultural Reciprocation between India and the World, Sures Chandra Banerji, 1999, Delhi
swami_48@yahoo.com Date: 2 JANUARY 2019 GMT Time uploaded in London –8-31 AM Post No. 5872 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
TAGS- லண்டன் சர்ச், மநு நீதி நூல்,வில்லியம் ஜோன்ஸ், செயின்ட் பால் கதீட்ரல்
விஞ்ஞானம் விளக்க முடியாத விந்தைகள் ஏராளம் உண்டு. விஞ்ஞானம்
நாளுக்கு நாள் வளர வளர இந்த விந்தைகளும் கூடிக் கொண்டே தான் போகின்றன!
இப்படிப்பட்ட விந்தைகளுள் ஒன்று தான் நேபாளத்தைச் சேர்ந்த சரிதா
பிஸ்தா (Sarita
Bista).
2006ஆம் ஆண்டு அவளுக்கு வயது 12.
2006, ஜனவரி,18 ஆம் தேதியன்று அவளது நெற்றியில் ஒரு சின்ன வீக்கம்
வந்தது. அவளது பெற்றோர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அது திடீரென்று
பிளந்து அதிலிருந்து ஒரு சிறிய கண்ணாடி வெளிப்பட்டது. அது முக்கோண வடிவில் இருந்த ஒரு
சில்லு – துண்டு!
பெற்றோர்கள் கவலைப்பட்டனர். எப்படியோ ஒரு கிளாஸ் அவள் நெற்றியில்
வந்து இருந்திருக்கிறது போலும் என்று அவர்கள் எண்ணி அத்தோடு விஷயத்தை விட்டு விட்டனர்.
ஆனால் இன்னும் பல கண்ணாடித் துண்டுகள் அவள் நெற்றியிலிருந்து
வெளிப்பட ஆரம்பித்தன. முக்கோணக் கண்ணாடித் துண்டுகள் 4 செண்டிமீட்டர் நீளமும் ஒரு மிலிமீட்டர்
கனமுமாக இருந்தது.
அவ்வளவு தான், பயந்து போன பெற்றோர் அவளை டாக்டரிடம் கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்தார். சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது. ஆனால்
அவளது தோலும், நெற்றிக்கு அடிப்பாகமும் சாதாரணமாகத் தான் இருந்தது.
செய்தி பரவியவுடன் பல டாக்டர்களும் அவளை ஆராய்ந்தனர். ஆனால்
காரணம் யாருக்கும் புலப்படவில்லை.
கண்ணாடி வெளிப்படும் போது ஒரு சிறிது ரத்தம் வரும்; ஆனால் அந்த
இடம் உடனே ஆறி விடும்.
இது தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. பள்ளியில் இந்த விஷயம் ரகசியமாகவே
காக்கப்பட்டது. ஆனால் அங்கும் அடிக்கடி கண்ணாடி வரவே அனைவருக்கும் தெரிய வந்தது.
2006 ஆகஸ்ட் மாத வாக்கில் தினமும் ஒரு கண்ணாடித் துண்டு அவள்
நெற்றியிலிருவிளந்து வர ஆரம்பிக்கவே செய்தித்தாள்களில் எல்லாம் அவளைப் பற்றிய தலைப்புச்
செய்தி வர ஆரம்பித்தது. ஒரு முறை ஒரே நாளில் 12 துண்டுகள் வெளிப்பட்டன.
செப்டம்பரில் அவள் பிரபலமாகி விட்டாள். அப்போது அது வரை வெளிப்பட்ட
கண்ணாடித் துண்டுகளின் எண்ணிக்கை 130ஐத் தொட்டது.
டாக்டர்கள் முழு ஆய்வில் இறங்கினர். ஆனால் இந்த நிகழ்வால் அவள் மன நலமோ உடல் நலமோ பாதிக்கப்படவில்லை.
டாக்டர்கள் காரணம் புரியாமல் திகைக்க அவள் நாளுக்கு நாள் நல்ல
முறையில் வளர்ந்தாள்.
இளம் மங்கையாக இன்று வலம் வருகிறாள்.
விஞ்ஞானம் வளர்ந்தாலும் அது விளக்க முடியாத அதிசயங்கள் நிகழவே
செய்கின்றன!
Written by London
Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JANUARY 2019
GMT Time uploaded in London –19-29
Post No. 5870
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 1 JANUARY 2019 GMT Time uploaded in London –16-36 Post No. 5869 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 1 JANUARY 2019 GMT Time uploaded in London –15-29 Post No. 5868 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Tags- Statue of William Jones with Manu Smrti, St Paul’s Cathedral, Original Manu Smrti
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 1 JANUARY 2019 GMT Time uploaded in London –7-20 AM Post No. 5867 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.