இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 1 (Post No.5593)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 October 2018

Time uploaded in London – 7-15 AM

(British Summer Time)

Post No. 5593

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தியாவின் புகழ்பெற்ற நூறு பெண்களைத் தெரியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-

1.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாக்ஞவல்கிய ரிஷியுடன் தத்துவ விவாதம் நடத்திய வித்தகி யார்?

2.கிரேக்கர்களும், தமிழர்களும், ரோமானியர்களும் புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால்,ஜனகன் சபையில், ஒரு பெரிய முனிவரைக் கேள்வி கேட்ட உலகின் முதல் புத்திசாலிப் பெண் யார்?

3.அழகு, இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அஸ்வினி தேவர்களிடம் பெற்ற வேத காலக் கவிதாமணி யார்?

4.பல பிராணிகளின் அழகிய உறுப்புகளைச் சேர்த்து அகஸ்திய முனிவர் படைத்த பேரழகி யார்?

5.கற்பின் சின்னம்-புதுமணத் தம்பதியர், தேன் நிலவு அறைக்குள் நுழைவதற்கு முன் வானத்தில் பார்த்த, சங்கத் தமிழ் இலக்கியம் போற்றும் பெண் யார்?

6.அழகிய மிதிலை நகரின் பெயரைத் தாங்கும் பெண்மணி?

7.எம (யமன்) தருமனையும் தனது புத்திசாலித்தனத்தால் மடக்கி, கணவனை மீட்டு வந்த புகழ்மிகு, அருள் மிகு, திரு மிகு பெண் யாரோ? செப்பு

8.ராமபிரானுக்கு சுட்ட பழம் கொடுத்த கிழவி யார்?

9.மஹாராஷ்டிரத்தில் அபங்கம் பாடி, புகழ்பெற்ற பக்தை– ஞானேஸ்வரின் சகோதரி– யார்?

10.சீதையின் அழகு காட்டில் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காக முகப் பூச்சு ‘க்ரீம்’ கொடுத்தவர் எவர்?

 

11.துருபதனின் மகள்- மஹாபாரத வீராங்கனை- நினைவு இருக்கிறதா?

12.ஒரு தவற்றுக்காக கல்லாகி, ராமன் காலடி பெற்று, உயிர்பெற்ற உத்தமி பெயரைச் சொல்லுங்கள்

13.மயனின் மகள்- இலங்கை வாசி- எல்லோரும் காலையில் நினைவுகூறும் ஐவரில் ஒருவர்– அவர் யாரோ? செப்பு

14.வாலியின் மனைவி– காலையில் பெண்கள் போற்றும் பஞ்ச கன்யைகளில் ஒருவர்– தெரியுமா பெயர்?

15.அவள் பெயர் ப்ருதா; அவளின்றி பாண்டவர் இல்லை; யார்? யார்?

16.காதல் கடிதம் கொடுத்து அனுப்ப அன்னப் பறவையை தூதுவிட்ட அழகியைத் தெரியுமா?

17.கானக அழகி- உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்குப் புகழ் ஈட்டிய நாடகத்தின் வனிதாமணி– புனிதை- அவள் பெயர்?

18.கடல் தந்த அமுதம்– விஸ்வாமித்திரனை வசீகரிக்கச் சென்று அவர் சாபத்தில் கல்லான கன்னிகை; அவள் யாரோ?

19.பஜனை என்றால் இவள் பாட்டு இல்லாமல் இல்லை- கிரிதர நாகர என்ற முத்திரையுடன் முடியும் ஆயிரத்துக்கும் மேலான கிருஷ்ண கானம் பாடிய புனிதவதி யார்?

20.வங்கதேசத்தில் பிறந்து, டேராடூனில் சமாதி அடைந்த, ஹரித்வாரில் ஆஸ்ரமம்  உடைய, பெண் சந்யாஸினி யார்?

 

இதோ விடைகள்:

1.மைத்ரேயி, 2.கார்கி வாசக்னவி, 3.கோஷா, 4.லோபாமுத்ரா, 5.அருந்ததி, 6.மைதிலி (சீதை), 7.சாவித்ரி  8.சபரி, 9.முக்தாபாய் 10.அநசுயா, 11.திரவுபதி, 12.அஹல்யா 13.மண்டோதரி, 14.தாரா, 15.குந்தி, 16.தமயந்தி, 17.சகுந்தலை 18.ரம்பா, 19.மீரா பாய், 20. மா ஆநந்த மயீ

–SUBHAM–

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்! (Post No.5592)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 October 2018

Time uploaded in London – 6-41 AM (British Summer Time)

Post No. 5592

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்!

ச.நாகராஜன்

சீர்காழியில் அவதரித்து, தேவாரம் அருளிய திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.

ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும். அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.

அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.

அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.

 

அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.

இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டம் வருமாறு:-

1.116 திரு நீலகண்டப் பதிகம்  

பண் – வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.1
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.2
1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.3
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.4
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.5
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.8
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.9
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.10
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
1.116.11

(இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.) முதலாம் திருமுறை

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த திருக்கொடி மாடச் செங்குன்றூர் உள்ள மண்டலம் கொங்கு மண்டலமே என்று கொங்குமண்டலச் சதகத்தின் 48ஆம் பாடல் கொங்கு மண்டலத்தைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:-

திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்         பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்   திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்     வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே

இப்பாடலின் திரண்ட பொருள் : – சீர்காழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்த  மூர்த்தி நாயனார்  திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குத் திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியிருந்த சமயம் அவ்வடியார்களை நளிர் ஜுரம் தீண்டவே. “அவ்வினைக் கிவ்வினையாம்” என்ற பாடலைத் தொடக்கமாகக் கொண்டு பதிகம் அருளவே அவ்வூர் மட்டுமன்றி அந்நாடு முழுவதும் அந்நோய் தீர்ந்தது. அப்படி ஓதப்பெற்ற தலத்தைக் கொண்டது கொங்கு மண்டலமே.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

***

QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-1! (Post No.5591)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 20-46

(British Summer Time)

Post No. 5591

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

  1. WHO WAS THE WIFE OF RISHI YAJNAWALKYA THAT DISCUSSED THE MYSTERIES OF RELIGION WITH HIM?

2.WHO WAS THE WOMAN WHO CHALLENGED ANCIENT SEE YAJNAWALKYA IN JANAKA’S ASSEMBLY ON PHILOSOPHICAL MATTERS?

3.CAN YOU NAME THE VEDIC WOMAN WHO THE ASVINS GAVE YOUTH,BEAUTY AND HEALTH TO GET A HUSBAND ?

4.WHICH WOMAN WAS CREATED BY SAGE AGASTYA WITH THE GRACEFUL PARTS OF DIFFERENT LIVING BEINGS?

5.WHO IS THE EMBODIMENT OF CHASTIY IN HINDU LITERATURE?

6.CAN YOU NAME THE WOMAN WHO WAS NAMED AFTER HER NATIVE PLACE MITHILAPURI?

7.WHO WAS THE GREAT WOMAN WHO MADE YAMA TO YIELD AND GIVE HER HUSBAND’S LIFE BACK?

8.NAME THE WOMAN WHO GAVE SITA DEVI AN OINTMENT TO KEEP HER BEAUTIFUL?

9.DO YOU KNOW THE WOMAN WHO GAVE BERRIES TO RAMA AFTER TASTING THEM?

10.SISTER OF VARKARI SAINT JNANESWAR WHO COMPOSED 41 ABHANGS; WHO IS IT?

11.DAUGHTER OF DRUPADA; MOST FAMOUS WOMAN IN MAHABHARATA; CAN YOU NAME HER?

12.A WOMAN WHO REMAINED LIKE A STONE TILL RAMA’S FEET  RESTORED HER MENTAL HEALTH? DO YOU KNOW HER?

13.MAYA’S DAUGHTER; RESIDENT OF LANKA; ONE OF FIVE HOLY WOMEN REMEMBERED BY HINDUS EVERYDAY.

 

14.VALI’S WIFE; PART OF FIVE  GREAT WOMEN.

15.THIS WOMAN’S ANOTHER NAME IS PRUTHA IN MAHABHARATA.

  1. A WOMAN WHO USED SWANS TO SEND LOVE LETTERS
  2. A FOREST BEAUTY AND THE HEROINS OF KALIDASA’S MOST FAMOUS DRAMA

18.ONE OF THE CELESTIAL BEAUTIES WHO CAME OUT DURING  THE CHURNING OF OCEAN; INDRA SENT HER TO SEDUCE VISVAMITRA AND WAS CURSED TO TURN INTO A STONE FOR A LONG PERIOD.

19.DEVOTEE OF KRISHNA AND HER BHAJANS ARE VERY FAMOUS;HER SIGNATURE IN HER POEMS IS GIRIDHARA NAGARA. WHO IS THAT GREAT WOMAN?

20.HINDU SAINT BORN IN BANGLADESH AND DIED IN DEHRADUN.  HER ASHRAM IS  IN HARIDWAR.  DO YOU KNOW THAT GREAT WOMAN SAINT?

 

ANSWERS

1.MAITREYI , 2.GARGI, 3.GOSHA, 4.LOPAMUDRA, 5.ARUNDHATI, 6.SITA DEVI (MYTHILI), 7.SAVITRI, 8. ANASUYA, 9.SABARI,10.MUKTABHAI , 11.DRAUPADI, 12.AHALYA, 13.MANDODARI, 14.TARA, 15.KUNTI ,16.DAMAYANTI, 17.SAKUNTHALA, 18.RAMBA, 19.MEERABHAI, 20.MA ANANDA MAYI

–SUBHAM–

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் (Post No.5590)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-49

(British Summer Time)

Post No. 5590

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

old articles

திருவள்ளுவர் யார் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedas

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and …

tamilandvedas.com/2016/02/12…

–subham—

அவ்வையாரின் சகோதரன் திருவள்ளுவன் (Post No.5589)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-30

(British Summer Time)

Post No. 5589

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

 

 

–subham–

27 நட்சத்திரங்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.5588)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 15-56

(British Summer Time)

Post No. 5588

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கட்டத்துக்குள் மறைந்திருக்கும் 27 நட்சத்திரங்களைக் கண்டு பிடியுங்கள்

27 STARS-TAMIL WORD SEARCH

பஞ்சாங்கத்துள் கொடுத்துள்ள வரிசையில் விடையும் கொடுத்துள்ளேன்.

விளையாட்டுப்போக்கில் 27 நட்சத்திரங்களையும் மனப்பாடம் செய்த பலன் கிட்டும்.

 

Answer

அஸ்வினி, பரணி, கார்த்திகை , ரோகிணி,

மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,

பூரம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி விசாகம், அனுஷம்,

கேட்டை, மூலம்,பூராடம், உத்திராடம், ஓணம், அவிட்டம்,

சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

–subham–

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு சவுக்கடி (Post No.5587)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 7-54 am

(British Summer Time)

Post No. 5587

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு நீதி நூல் – பகுதி 31

முதல் நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டோம்; ஐந்தாவது அத்தியாயத்தின் முதல் 55 ஸ்லோகங்களை ஆராய்வோம்.

 

பிராஹ்மணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னதை முன்னர் எழுதினேன். பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் கட்டளை இட்டதையும் சொன்னேன். இப்பொழுது பிராஹ்மணர்கள் வெங்காயம், உள்ளிப் பூண்டு  (வெள்ளைப் பூண்டு), மஷ்ரூம் mushroom எனப்படும் காளான் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது (5-5, 5-19). சிலவகை மீன், மாமிசம் ஆகியவற்றை கடவுளுக்குப் படைத்தோ நீத்தாருக்குப் படைத்தோ உண்ணலாம் என்கிறார்.

வெங்காயம், பூண்டு சாப்பிடுபவன் ஜாதிப்ப்ரஷ்டம் ஆனவன் (தள்ளி வைக்கப்பட்டவன்) என்கிறார் 5-19

தப்பித் தவறி சாப்பிட்டுவிட்டால் கடுமையான விரதங்கள் நோன்புகளை அனுஷ்டிக்கக் கட்டளை இடுகிறார் (5-21, 5-20)

நோன்பு விவரங்களை 11 ஆவது அத்தியாயத்தில் தருவேன்.

இந்தப் பீடிகையுடன் நான் ‘மானவ தர்ம சாஸ்திர’த்தின் ஐந்தாவது அத்தியாயத்தைத் தொடங்குவதற்குக் காரணம் என்ன?

இப்போதுள்ள மநு தர்ம சாஸ்திரத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. அந்த முரண்பாடுகளுக்குக் காரணம் அவ்வப்போது நிகழ்ந்த இடைச் சொருகல்கள் ஆகும்.

இன்னொரு விஷயத்தையும்  நினைவிற் கொள்ள வேண்டும் ; சட்டம் என்பது காலத்துக்கு காலம் மாறு படும்; இடத்துக்கு இடம் வேறு படும். அமெரிக்காவில் இன்றும் சில மாநிலங்களில் மரண தண்டனை உண்டு இன்னும் சில மாநிலங்களில் கிடையாது. இந்தியாவில் சில மாநிலங்களில் மதுவிலக்கு உண்டு. அங்கு பாட்டிலுடன் நின்றால் குற்றம்!

இனி ஐந்தாம் அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களைக் காண்போம்:

மநு நீதியை முழுதும் படிப்போர் அவருடைய அறிவாற்றலைப் புகழ்வர்; இடைச் செருகல்களைக் கண்டு கொள்வர். 40, 50 ஸ்  லோகங்களில் “சூத்ராள்” பற்றிச் சொன்னதைக் கூப்பாடு போட்டு அவரைத் திட்டத் தேவை இல்லை. ஏனெனில் “பிராஹ்மணாள்”களே அவரைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

இதே அத்தியாயத்தில் பிராஹ்மணர்கள் மாமிசம் சாப்பிடலாம்; அகஸ்தியரும் இதைச் செய்தார் என்று ஒரு வரி வருகிறது. இது ஒரு நல்ல ஜோக்/ joke தமாஷ்.5-22

அகஸ்தியர் கதையில் அவர் வாதாபி,என்ற அரக்கனை, அவன் சஹோதரன் இலவலன் கறியாகச்   சமைத்துப் போட்டு, ஏ வாதாபியே வெளியே வா- என்று கட்டளை இட்டான். அவரோ தவ வலிமையால் ‘வாதாபி ஜீர்ணோ பவ’ என்று சொன்னவுடன் அவன் அகஸ்தியர் வயிற்றுக்குள் ஜீரணமாகி விடுகிறான் இதை மாமிசம் சாப்பிடும் பிராமணர்கள் செய்ய முடியாது. ஆகையால் அங்கு அகஸ்தியரின் பெயரை மநு வம்புக்கு இழுத்திருக்க மாட்டார். அது மட்டுமல்ல,2000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து பாண்டிய மன்னன் ஸ்ரீமாறனை அழைத்துச் சென்று வியட்நாமில் (சம்பா தேசம்) ஒரு அரசு அமைத்தார். அந்த அரசு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும், துலுக்கர்கள் நுழைவதற்கு முன், 1500 ஆண்டுகளுக்க் கொடி கட்டிப் பறந்தது. இதன் பொருள் என்ன? அகஸ்தியர், மநு சொன்ன கட்டளையை மீறி வெளிநாட்டுக்குப் போனார். இதைப் புராணங்கள் அகஸ்தியர் ‘கடலைக் குடித்தார்’ என்று சொல்லும்.

ஆகவே மாமிசம் சாப்பிட்ட கதை மநு எழுதியதல்ல. பிற்காலப் பிற்சேக்கை!

மச்சம், மாமிசம் சாப்பிடுவது பற்றி மநு ஸ்ம்ருதியில் பல குழப்பங்கள் இருக்கின்றன . ஏன்?

சுமார் 2000ஆண்டுகளுக்கு முன் உருவான 2500 சங்கத் தமிழ்ப் பாடல்களில் பிராஹ்மணர்களை மரக்கறி உணவு உண்ணும் ‘வெஜிட்டேரியன்’ vegetarians களாகவே காட்டியுள்ளனர். பிராஹ்மணர் வீட்டுக்குப் போனால்  அந்தப் பெண்மணி உனக்கு என்ன உணவு தருவாள் என்று ஆற்றுப்படை நூலில் இருக்கிறது. அந்த மெனு menu வில், எல்லாம் வெஜிட்டேரியன்!!! பிராஹ்மணர் தெருவுக்குள் நாயோ கோழியோ- போக முடியாது- அவ்வளவு சுத்தமான இடம் அக்ரஹாரம் என்றும் தமிழ் இலக்கியம் விதந்து ஓதுகிறது.

இங்கே காட்டப்படும் மநுவின் 55 ஸ்லோகங்களை திருவள்ளுவர் தமிழ் வேதத்தில்– திருக்குறளில்- ‘புலால் மறுத்தல்’, ‘கொல்லாமை’ ஆகிய இரண்டு அதிகாரங்களில் மொழி பெயர்த்துள்ளார். ஆக ஒரிஜினல் மநு , திருவள்ளுவர் காட்டும் மநுவே. ஏனையன பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே.

ஆனால் திவஸத்திலும், யாகங்களிலும் மாமிசம் சேர்க்கலாம் என்ற மநுவின் கட்டளைக்கு ஆதாரங்கள் இல்லாமலும் இல்லை. வங்காளி, அஸ்ஸாமி பிராஹ்மணர்கள் மீன்களை ‘ஜல வாழைக்காய்’ போல எண்ணி சாப்பிடுவதை உலகம் அறியும். தர்மம் என்பது கால, தேச,வர்த்தமானங்களை (சூழ்நிலை) அனுசரித்ததே என்று மநு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். இன்றும் கூட நமது பார்லிமெண்டுகளும் சட்ட சபைகளும் பழைய சட்டங்களுக்குத் திருத்தம் கொண்டு வருவதும் புதுச் சட்டங்களியற்றுவதும் மநு சொன்ன ‘பார்முலா’ formula தான்.

Goldsmith 

த்விஜன் யார்?

‘கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆனதைப் போல’, இப்போது த்ரிகால சந்தியா வந்தனம், அக்னி ஹோத்ரம், தினமும் பஞ்ச மஹா யக்ஞம் செய்யும் பிராஹ்மணர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஆக த்விஜன் என்பது ஆதிகாலத்தில் முதல் மூன்று ஜாதிகளைக் குறித்திருக்க வேண்டும். க்ஷத்ரியர்கள் மாமிஸம் சாப்பிடுவதில் வியப்பில்லை. ராமன் திவஸத்துக்கு மிருகங்களைக் கொண்டு வந்ததாக வால்மீகி ராமாயணம் செப்பும். அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத்தான் சொன்னான். அறவே நிறுத்த உத்தரவிடவில்லை என்பதை அவனது சாஸனங்கள் காட்டும். ஆக “த்விஜன்” என்று மநு சொல்லுவது பிராஹ்மணர்களை மட்டும் அல்ல. பிராஹ்மண, க்ஷத்ரிய, வைஸ்யர்களையும் தான் என்று பொருள் கொண்டால் தவறில்லை.  இப்போதும்கூட செட்டியார், ஆசாரி ஆகிய ஜாதிகள் பூணூல் போடுவதைப் பார்க்கிறோம். பூணூல் போட்ட பின் இரண்டாவது பிறப்பு; அதாவது இருபிறப்பாளன்/ த்விஜன்.

காளிதாசன் படைப்பிலும்கூட ஒரு பிராஹ்மண விதூஷகனைக் கிண்டல் செய்யும்போது அசைவம் பற்றி வருகிறது. சங்கப் பாடலில் புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பலரும் போற்றிய மஹா பிராஹ்மணன் கபிலன், மாமிஸ உணவு  பற்றிப் பாடியதை வைத்து சிலர் கதைத்தனர். ஆயினும் அவை எல்லாம் பசையற்ற வாதமாகக் கரைந்து ஓடிவிட்டது.

2000 ஆண்டு இலக்கியம் காட்டும் பிராஹ்மனணர்கள்- மரக்கறி உண்ட ‘வெஜிட்டேரியன்’களே.

மிருகங்களை அடித்துக் கொன்று சாப்பிடுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்று மநு சொல்லுவதையும் ஒப்பிட்டுப்  பார்த்தால் இது தெள்ளிதின் விளங்கும்.5-51,5-45, 5-38 ETC.

 

டார்வின் கொள்கை!

வலுவற்ற மிருகங்கள் வீழ்ந்து அழியும்; வலியோரே வாழ்வர் SURVIVAL OF THE FITTEST என்று டார்வின் சொன்னார். மநுவும் துணிச்சல் மிக்கோருக்கு கோழைகளுணவு COWARDS ARE THE FOOD OF THE BRAVE ஆகி விடுவர் என்று மநுவும் சொல்லும் அரிய கருத்து ஒப்புநோக்கத தக்கது.5-29

பிராஹ்மணர்களுக்கும் சாவு உண்டா?

அத்தியாய ஆரம்பத்தில் மநு கூட்டிய மஹாநாட்டுக்கு வந்தவர்கள் ஒரு வினா எழுப்ப அதற்கு மநு கொடுத்த பதில் சிந்தி   க்கத் தூண்டுவது. மஹா புனிதமான வேதங்களை ஓதும் பிராஹ்மணர்களுக்கு மரணம் வருகிறதே! அது எப்படி சாத்தியம்? என்று சிலர் வியக்க மநு 4 காரணங்களை முன் வைக்கிறார். அதில் ஒன்று தவறான உணவு! இங்கே சாவு என்பதைவிட அவர்களும் கூட ‘இளம் வயதில் இறப்பது எப்படி’ என்று பொருள் கொள்க.5-4

மநுவின் சொல்லாடல் திறன்!

‘மாம்ஸ’ம் என்ற சொல்லை மநு விவரிக்கும் பாங்கு அழகாக இருக்கிது. என்னை உண்பவன் ஆக நான் மாறிவிடுகிறேன் ( மாம்+ சஹ ). இப்போது நீங்கள் மாட்டை உண்டால் அடுத்த ஜன்மத்தில் மாடு மனிதன் ஆகும்; நீங்கள் மாடு ஆவீர்கள். அந்த மனிதன் உங்களை உண்பான் (மாம்+ சஹ= என்னை + அவன்); என்னை அவன் உண்டான் ; நான் அவனை உண்ணுவேன்.5-55

சின்னக் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும்; எறும்பு முதலிய ஜந்துக்களைக் குழந்தைகள் துன்புறுத்தினால் தாய்மார்கள் எச்சரிப்பர். அடுத்த பிறவியில் ‘நீ எறும்பாக, அது நீ ஆகி’ உன்னை துன்புறுத்தும் என்பர். மறு பிறப்புக்கொள்கை சங்க தமிழ் பாடல்களிலும் திருக்குறளிலும் மலிந்து கிடக்கிறது

இறுதியாக மற்ற ஒன்றையும் காட்ட விழைகிறேன். மநு சொல்லும் மிருகம், மீன் வகை பற்றியே அதிக சம்சயங்கள் உண்டு. அவரோ வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிக் கட கதைக்கிறார். இப்படி அவர் சொன்ன மீன் வகைகள் பற்றியே ஐயப்பாடுகள் எழுவதற்குக் காரணம் அவர் மிக, மிக, மிக முற்காலத்தவர். மநு சொன்ன ஸுமுகன் என்ற மன்னன் பற்றி சுமேரியாவில் மட்டுமே காண முடிகிறது. இந்திய வரலாற்றில் அப்படி ஒரு மன்னன் பெயர் இல்லை என்று பாஷ்யக்காரர்கள் அனைவரும் பகர்வர். முன்னரே எழுதிவிட்டேன்;

மாமிசத்துக்குப் பதிலாக மாவில் அதே போல உருவம் செய்வது 5-37ல் சொல்லப்பட்டுள்ளது. யாககங்களில் இப்படி உருவ பொம்மைகளே போடப்பட்டன.மிருகங்கள் பலி இடப்படவில்லை என்போர் இதை ஆதாரமாகக் காட்டுவர். ஆதிகால மிருக பலி காலப்போகில் மாவு உருவ பலியாக மாறியது போலும்!

ஸ்லோகம் 5-46, 5-47 இந்த இரண்டு பாடல்களில் கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றும் அவன் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் சொல்கிறார்.

ஆகையால் ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர், ‘ஒரிஜினல்’ மநுவை, போலி மநுவில் இருந்து பிரித்து எடுத்து, காய்தல் உவத்தலின்றி, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல, அவரை எடை போடுவதே முறை.

ஐந்தாம் அத்தியாயம் முதல் 55 ஸ்லோகங்கள்

வாழ்க மநு- வளர்க ‘ஒரிஜினல்’ மநு நீதி!

ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2 (Post No.5586)

WRITTEN BY S NAGARAJAN

Date: 25 October 2018

Time uploaded in London – 7-30 AM (British Summer Time)

Post No. 5586

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 19-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி மூன்றாம்) கட்டுரை  

ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 2

ச.நாகராஜன்

இஸ்ரேலின் உளவுப் படையான மொஸாட்டிற்கு எய்ச்மேனை பத்திரமாக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்வது ஒரு சவாலாகவே இருந்தது. அவருக்கு விமானப் பணியாளரின் உடையை உடுத்தி ஒருவாறாக இஸ்ரேலுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

    அர்ஜெண்டினா ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரத்தைக் கிளப்பி இஸ்ரேல் செய்தது தவறு என்று முறையிட்டது.

ஆனால் இஸ்ரேலின் சார்பில் ஆஜரான கோல்டா மேயர் தனது வாதத்தினால் அர்ஜெண்டினாவை நன்கு சமாளித்தார்.

    விசாரணை திட்டமிட்டபடி இஸ்ரேலில் துவங்கியது. எய்ச்மேன்  மீது 15 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான விசாரணைக்கு உலகின் மீடியாக்கள் முக்கியத்துவம் தருமாறு இஸ்ரேல் பார்த்துக் கொண்டது. உலகின் அனைத்துப் பத்திரிகைகளும் இதை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. ஜெருசலத்தில் உள்ள பெரிய ஆடிடோரியத்தில் விசாரணை துவங்கியது. அங்கு எய்ச்மேனை யாரும் சுட்டு விடக் கூடாதென்று அவரை புல்லட் ஃப்ரூப் கண்ணாடி பூத்தில் வைத்தனர். அனைத்துப் பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 750 இருக்கைகள் போடப்பட்டன.

   56 நாட்கள் நடந்த விசாரணையில் 112 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.எய்ச்மேன் தான் நிரபராதி என்றும் தனக்கு மேலிடம் விதித்த கடமைகளையே தான் செய்ததாகவும் வாதிட்டார்.

     கடைசியில் எய்ச்மேன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்படவே எய்ச்மேனின் மனைவி மற்றும் சகோதரர்கள் இஸ்ரேல் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. ரம்லா சிறைச்சாலையில் 1962ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி அதிகாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

    எய்ச்மேனின் கடைசி வார்த்தைகள் : ஜெர்மனி வாழ்க. அர்ஜெண்டினா வாழ்க. ஆஸ்திரியா வாழ்க. இந்த மூன்று நாடுகளுடன் தான் நான் அதிகம் தொடர்பு கொண்டிருந்தேன். அதை மறக்க மாட்டேன். எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் தயார். மற்ற எல்லா மனிதர்களுக்கும் உள்ள விதி போல, மீண்டும் சீக்கிரம் சந்திப்போம். கடவுளை நம்பி நான் சாகிறேன்.

 

     கார்டன் தாமஸ் என்ற எழுத்தாளர், ‘Gideon’s Spies: The Inside Story of Israel’s Legendary Secret Service The Mossad’ என்ற புத்தகத்தில் மொஸாட் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

    அதி நவீன உத்திகளைக் கொண்டு இயங்கும் மொஸாட், கைக்கு அடக்கமான துப்பாக்கி, மிகச் சிறிய வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட பல நுட்பமான சாதனங்களைக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உத்திகளும் சாதனங்களையும் கொண்டே எய்ச்மேனும் பிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

      நீண்ட ஒரு சம்பவக் கோர்வையைக் கொண்டு சோகமாக முடிந்த ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது என்றால் அதில் நிறையவே சிக்கல் உள்ளது. அதை ஆபரேஷன் பைனல் டைரக்டரும் நடிகர்களும் உணர்ந்திருந்தனர். உளவுப்படை அதிகாரியான மால்கினும் எய்ச்மேனும் ஒருவருக்கொருவர் மோதும் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் சட்ட விதிகளின் படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் கையெழுத்து இருந்தால் தான் அவர் விசாரிக்கப்பட முடியும். மால்கின்  எய்ச்மேனை சித்திரவதை செய்யாமல், மூன்றாம் தர வழிகளைக் கையாளாமல் அவரது கையெழுத்தைப் பெறுகிறார். மால்கினின் சொந்த சகோதரியும் குழந்தைகளும் எய்ச்மேனின் கொடூர பலிக்கு இரையானவர்கள். ஆகவே சொந்த இழப்பில் மால்கின் மிக உணர்ச்சிகரமாக இதில் இறங்கினார். இந்தக் காட்சிகள் படத்திற்கு ஒரு உணர்ச்சிகரமான, உளவியல் ரீதியான அணுகுமுறை இருப்பதைக் காட்டின.

   ஒவ்வொரு காட்சியும் காட்சியில் வரும் வசனமும் பல முறை சரி பார்க்கப்பட்டன. அவ்னர் அவ்ரஹாம் என்ற மொஸாட் ஏஜண்ட் இந்த சரிபார்க்கும் பணிக்காகவே  நியமிக்கப்பட்டார்.

படத்தை சரியாக எடுப்பதற்காக டைரக்டர் வெய்ட்ஸ் அர்ஜெண்டினாவிற்கு தன் குடும்பத்துடன் சென்று அங்கேயே தங்கினார். அங்கு எந்த இடத்தில் சம்பவங்கள் நடைபெற்றனவோ அந்த இடத்திலேயே படப்பிடிப்பும் நடை பெற்றது.

மால்கினும் எய்ச்மேனும் வரும் காட்சிகளில் விசேஷ காமராக்கள் பயன்படுத்தப்பட்டன. விசாரணை நடந்த அறையின் வால் பேப்பரும் கூட கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இருட்டாக இருந்த அந்த அறையின் காட்சிகள் அப்படியே உள்ளது உள்ளபடி படமாக்கப்பட்டன.

1975ஆம் ஆண்டு ஹேரல் நடந்தது என்ன என்பதை விளக்கி ஒரு புத்தகம் எழுதினார். 2012இல் இன்னும் அதிக விவரங்கள் கசிந்து வெளி உலகிற்குத் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அமெரிக்காவிலும் கனடாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான முதல் நாளிலேயே பத்து லட்சம் டாலர் வசூலை பெற்றது. ஆறு நாட்களில் மொத்த வசூல் 95 லட்சம் டாலரைத் தாண்டியது. 1810 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. படத்தை அனைத்துப் பத்திரிகைகளும் நல்ல படம் என்று விமரிசித்தது குறிப்பிடத் தகுந்த விஷயம். ‘தத்ரூபமான வரலாற்று அடிப்படையிலான த்ரில்லர்’ என்று ஹாலிவுட் ரிபோர்ட்டர் என்ற பத்திரிகை விமரிசித்துப் படத்தைப் புகழ்ந்துள்ளது. அமெரிக்கா கனடா தவிர இதர நாடுகளில் உள்ள மக்கள் அக்டோபர் 2018இல் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை வரவேற்கத் தயாராகி விட்டனர். இரண்டாம் உலகப் போர் பற்றிய நூற்றுக் கணக்கான படங்கள் வெளி வந்து விட்டன; அந்தத் தொடர் வரிசையில் ஃபைனலாக – லேடஸ்டாக – வந்த படம் ஆபரேஷன் ஃபைனல்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு வெற்றிகரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கவில்லை. முதல் மனைவியான மிலெவாவை விவாகரத்து செய்த சில மாதங்களிலேயே எல்ஸா (பிறப்பு 18-1-1876 மறைவு 20-12-1936) என்ற தன் உறவுக்காரப் பெண்மணியை அவர் மணம் புரிந்து கொண்டார். எல்ஸாவின் தாயாரும் ஐன்ஸ்டீனின் தாயாரும் சகோதரிகள். எல்ஸா துணி வர்த்தகத்தில் இருந்த தன் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஐன்ஸ்டீனை மணந்து கொண்டார். ஆனால் அவருக்கு கண் வியாதி முதல் இதயம், நுரையீரல் என பல அங்கங்களிலும் வியாதிகள் உண்டு. மணவாழ்க்கையில் அவர் ஐன்ஸ்டீனின் காவலராகத் தான் திகழ்ந்தார். யாரையும் அனாவசியமாக உள்ளே வந்து ஐன்ஸ்டீனின் நேரத்தை வீணாக்காமல அவர் காத்து வ்ந்தார்.

ஐன்ஸ்டீன் எழுதி இப்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ள 1422 கடிதங்கள் அவர் மண வாழ்க்கையைப் பற்றித் தெரிவிக்கின்றன. முதல் மனைவியிடம் அவர் கண்டிப்பும் கறாராகவும் இருந்ததை இந்தக் கடிதங்கள் காட்டுகின்றன. இரண்டாம் மனைவியான எல்ஸா நியூ ஜெர்ஸியில் உள்ள பிரின்ஸ்டனில் தனது வீ ட்டில் இறந்த போது ஐன்ஸ்டீன் கண்ணீர் விட்டு அழுதார். ஐன்ஸ்டீனின் நண்பரான பீட்டர் பக்கி ஐன்ஸ்டீன் அழுது தான் பார்த்தது அதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார்.

தனது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்பதை ஐன்ஸ்டினே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரது நண்பரான மைக்கேல் பெஸ்ஸோ என்பவரின் மகனுக்கு மைக்கேல் இறந்ததை ஒட்டி எழுதிய இரங்கல் கடிதத்தில் அவர் எழுதினார் இப்படி: “உனது தந்தையிடம் நான் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவெனில் தான் வாழ்க்கை முழுவதும் அவர் ஒரே பெண்மணியுடன் வாழ்ந்தார் என்பதைத் தான்! அப்படிப்பட்ட ஒரு திட்டத்தில் நான் மிக மோசமாகத் தோற்று விட்டேன் – இரு முறை!”

ஐன்ஸ்டீனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இப்போது ஏராளமான புத்தகங்கள் வந்து விட்டன. அதன் மூலமாகத் தான் பல புதிய விவரங்களை அறிய  முடிகிறது! உணர்ச்சி அடிப்படையிலானது வாழ்க்கை; அறிவின் அடிப்படையிலானது அறிவியல்! அது வேறு; இது வேறு தான்! ஐன்ஸ்டீனின் வாழ்க்கையும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு!

***

VEDIC GODS WORD SEARCH (Post No.5585)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 October 2018

Time uploaded in London – 20-48

(British Summer Time)

Post No. 5585

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

FIND OUT THE 24 VEDIC GODS IN THE SQUARE BELOW

Numbers may help you to start from that point

 

ANSWERS ARE GIVEN BELOW

1.VISHNU, VAYU

2.YAMA

3.ILA

4.AJA EKA PAD

5.BHAGA

6.VASUS

7.KA (BRAHMA)

8.AUM

9.MARUT

10.AGNI

11.VAC

12.KUHU

13.VARUNA

14.VRSAKAPI

15.RAKA

16.PUSAN

17.USHAS

18.ASVINS

19.RUDRA

20.INDRA

21.GAYATRI

22.GO (MATA)

23.SOMA

24.MITRA

–SUBHAM–

உடலுக்குள் பிளாஸ்டிக் புகும் அபாயம் (Post No.5584)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 October 2018

Time uploaded in London – 6-50 AM

(British Summer Time)

Post No. 5584

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மீன் சாப்பிடுவோருக்கும், பிளாஸ்டிக் பை அல்லது பாட்டில் அல்லது டப்பாக்களில் உணவோ, பானமோ சாப்பிடுவர்களுக்கும் அதிர்ச்சி தரும் செய்தி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கிறது.

ஆஸ்திரியா நாட்டின் தலை நகரான வியன்னாவில் மருத்துவ பல்கலைக் கழக (VIENNA MEDICAL UNIVERSITY) ஆராய்ச்சியாளர்கள் இந்த செய்தியை வெளியிட்டனர். அவர்கள் வயிறு- குடல் மருத்துவ வாரம் கொண்டாடுகையில் இச் செய்தி வெளியிடப்பட்டது.

உடலுக்குள் ஒன்பது வகையான நுண் பிளாஸ்டிக் துகள் (MICRO PLASTICS) இருப்பதை அவர்களுடைய ஆராய்ச்சி காட்டுகிறது. எட்டு நாடுகளைச் சேர்ந்த மக்கள்  இந்த ஆராய்ச்சிக்கு உதவினர். அவர்கள் தினமும் வேளாவேளைக்குச் சாப்பிடும் பண்டங்களைக் குறித்து வைத்தனர். அவர்களுடைய மலம் டாய்லெட்டில் இருந்து சேகரிக்க ஏற்பாடும் செய்யப்பட்டது. அதை ஆராய்ந்ததில் இந்த ஒன்பது வகை பிளாஸ்டிக் உடலில் புகுந்த செய்தி கிடைத்தது.

அவர்களில் பெரும்பாலோர் கடல் மீன்களை சாப்பிட்டது அவர்கள் எழுதிய டயரியில் இருந்தது. பாட்டில் தண்ணீர், பீயர் (BEER) முதலிய பானங்கள், கடல் மீன், பிளாஸ்டிக்கில் சுற்றி விற்கப்படும் (PLASTIC PACKING) உணவுப் பண்டங்கள் அபாயகரமானவை. அவைகள்தான் இப்படி நுண் துகள்களை அனுப்புகின்றன.

தற்போதைய மல ஆராய்ச்சி, குடல் வரை இந்த விஷப்பொருட்கள் சென்றதைக் காட்டுகிறது. ஆனால் கடல் வாழ் உயிரினங்களை சோதித்த முந்தைய ஆராய்ச்சிகள் இவை, இரத்த மற்றும் நிணநீர் ஓட்டங்களிலும் கலக்க முடியும் என்று காட்டியுள்ளன.

ஆஸ்திரியா, பிரிட்டன், பின்லாந்து, ஜப்பான், ஹாலந்து, இதாலி, போலந்து, ரஷ்யா ஆகிய நாட்டு மக்கள் இதில் பங்கு கொண்டனர். இதுபற்றி மருத்துவப் பல்கலைக் கழக ஆய்ய்வுக்குழுத் தலைவர் டாக்டர் பிலிப் ஸ்வாபிள் சொன்னதாவது– ” மனிதர் உடலுக்குள் உணவுப் பொருட்கள் மூலம் பிளாஸ்டிக் துகள் செல்லுவது உறுதி செய்யப்பட்டு விட்டது. இனி வரும் ஆராய்ச்சி மூலம், இதனால் உடலுக்குக் கெடுதி வருமா? என்ன கெடுதி   வரும் என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டும்.

ஒவ்வொருவர் மலத்தையும் சோதித்ததில் பத்து கிராம் மலத்தில் 20 துகள் வரை இருப்பது கண்டறியப்பட்டது.

முன்னர் யார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களும் கிட்டத்தட்ட இதே செய்தியை அளித்தனர்.

பிளாஸ்டிக் மனித குலத்தின் எதிரி; விரைவாக உலக நாடுகள் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரலும் எழுந்துள்ளது.

இந்துக்கள் வாழ்வு முறையே சிறந்தது!

சைவ உணவுக்காரர்களுக்கு இது ஓரளவு ஆறுதல் தரும். ஏனெனில் மீன் சாப்பிடுவோர்தான்  மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மேலை நாடுகளில் மாமிச உணவு முழுவதும் பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றப்பட்டு வருகின்றன. காய்கறிகள் வாங்குவோருக்கு இந்த ஆபத்து இல்லை.

போகிற போக்கைப் பார்த்தால் எல்லோரும் கிணற்றுத் தண்ணீர் குடிப்பதே நல்லது என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை. ஏனெனில் குழாய்த் தண்ணீரும் ஒரு குற்றவாளி என்று ஆராய்ச்சியாளர் செப்புகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மாமிசம் முதலான அசைவ உணவுகள் ஏற்படுத்தும் அக்கிரமச் செய்திகளையும் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஏதேனும் ஒரு கோழிப் பண்ணையில் வியாதி என்றால் கோடிக்கணக்கான கோழிகள் உயிருடன் எரிக்கப்படுகின்றன. MAD COW DISEASE ‘மேட் கவ் நோய்’ என்ற நோய் பசுமாடுகளைப் பீடித்தவுடன் இரக்கமில்லாமல் பல லட்சம் பசு மாடுகளைக் கொன்று எரித்தனர்.

 

ஏதேனும் ஒரு பாக்டீரியா  பாதித்த ஒரு முட்டை வந்து விட்டால் சூப்பர் மார்க்கெட்டுகளில் லட்சக்கணக்கான முட்டைகள் அழிக்கப்படுகின்றன.

இவர்கள் வீணடிக்கும் உணவுப் பொருட்களை வைத்து பட்டினியால் வாடும் அனைவருக்கும் சோறு போட முடியும்.

இதற்கெலாம் மேலாக, அசைவ உணவுகள்தான் உலகில் அதிக புறச் சூழம் மாசு ஏற்படுத்துகிறது என்றும் விஞ்ஞான சஞ்சிகைகள் பட்டவர்த்தனமாக எழுதுகின்றன.

ஆகையால் வள்ளுவரும், வள்ளலாரும் பகர்வது போல சைவ உணவுகளை மட்டுமே உண்டு வாழ்வது சாலச்சிறந்தது.

‘கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைக்கூப்பித் தொழும்’ என்ற வள்ளூவன் வாக்கு பொய்யாமோ?

வெஜிட்டேரியன்ஸ் வாழ்க!”

–சுபம்-