பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)

COMPILED by London SWAMINATHAN

Date: 11 August 2018

 

Time uploaded in London – 14-23 (British Summer Time)

 

Post No. 5310

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பத்மலோசனர் செய்த அற்புதம்! கைக்குட்டை, தண்ணீர் ரஹஸியம்! (Post No.5310)

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற விரும்பிய பெரியோர்களில் ஒருவர் பத்மலோசன். அவர் சில அற்புதங்களை நிகழ்த்தி வந்தார். அது எப்படி என்பது அவருடைய மனைவிக்கும் தெரியாது. அதை ராமகிருஷ்ணர் கண்டுபிடித்தவுடன் ராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்று அறிவிக்கத் துவங்கினார்.

 

இதோ அந்தக் கதை

பர்த்துவான் அரசரின் அவைப் புலவர் பத்மலோசன். அவர் மஹா மேதாவி. சாஸ்திரங்களின் கரை கண்டவர். அவரைச் சந்திக்க ராமகிருஷ்ணர் ஆசைப்பட்டார். அதன்படி அவரும் கல்கத்தா வந்தார். ஏனெனில் அவருக்கு ராமகிருஷ்ணரின் மீது அளவற்ற மரியாதை.

 

தாந்த்ரீக சாதனைகளைப் பழகியதன் விளைவாக பத்மலோசனர் சில அற்புதமான சக்திகளைப் பெற்றிருந்தார். அவர் எபோதும் தன் பக்கத்தில் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரும் கைக் குட்டை (HAND KERCHIEF)யும்  வைத்திருப்பார்.ஏதாவது கடினமான பிர்ச்சினையைத் தீர்த்து வைக்குமாறு அவர் அழைக்கப்பட்டால், சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு , திரும்பிவருவார். பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் முகத்தைக் கழுவுவார். பின்னர் அந்தக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தீர்ப்பு கூறுவார். அவருடைய இஷ்ட தெய்வத்தின் அருளினால் அவர் இப்படிச் செய்துவந்தார். இப்படிச் செய்யும் அவரை யாரும் வாதத்தில் மிஞ்ச முடியாது. அவர் சொல்லும் தீர்ப்பும் கனகச்சிதமாக இருக்கும். யாரும் அதை மறுக்க முடியாது.

ஏதோ சிந்தனை செய்வது போல நடந்து சென்று வீட்டுத் தண்ணீரில் முகம் கழுவுவார். பின்னர் தீர்ப்புக் கூறுவார். எல்லோரும் ஏதோ வெளியே போய் வந்த களைப்பில் முகம் கழுவுவதாக நினைத்துக் கொள்ளுவர். அவருடைய மனைவிக்கும் இதன் ரஹஸியம் தெரியாது.

 

ராமாகிருஷ்ணருக்கு அன்னை காளியின் அருள் இருந்ததால் இதன் காரணம் புரிந்துவிட்டது. ஒருநாள் அவர் அந்தத் தண்ணீர் பாத்திரத்தையும், கைக்குட்டையையும் எடுத்து ஒளித்து வைத்துவிட்டார். அப்பொழுது பத்மலோசனருக்குக் கடினமான ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பண்டிதர் அதற்குப் பதில் சொல்லும் முன் கைக்குட்டையையும் தண்ணீர் பாத்திரத்தையும் தேடினார். அவை அங்கு இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்டார். அவற்றை ராமகிருஷ்ணர்தான் எடுத்து மறைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்த பின்னர் மேலும் வியப்படைந்தார். அதிலும் அவர் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் அவர் அடைந்த ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை.

 

தன் இஷ்ட தெய்வமான காளியைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாத இந்த ரஹஸியத்தை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் அவதாரமே என்று நினைத்து கண்ணீர் மல்கி, ராமகிருஷ்ணரையே வழிபடத் துவங்கினார். இந்த நிகழ்ச்சியால் அவர் தம்மை முழுதுமாக ராமகிருஷ்ணரிடம் அர்ப்பணித்தார்

இந்த நிகச்ழ்ச்சி பற்றி பண்டிதர் பத்மலோசனர் சொல்லும்போது, நான் நல்ல நிலையை அடைந்ததும், இந்த நாட்டிலுள்ள சமய அறிஞர்கள் எல்லோரையும் அழைத்து, ஒரு பெரிய கூட்டம் நடத்தி, அவரை கடவுளின் அவதாரம் என்று மெய்ப்பிப்பேன். யாருக்குத் தைரியம் இருக்கிறதோ அவர்கள் வந்து எதிர்க்கட்டும் என்றார். (ஆனால் பத்மலோசனர் மோசமான உடல்நிலையில் இருந்ததால் விரைவில் காலமாகிவிட்டார்.)

 

ஆதாரம்- பக்கம் 181-182, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, மயிலாப்பூர், சென்னை.

 

–SUBHAM-

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

14 கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!!! (Post No.5308)

Written by London swaminathan

Date: 10 August 2018

 

Time uploaded in London – 12-50 am (British Summer Time)

 

Post No. 53078

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

14 கோடிக்கு மேல் ஒரு பைஸாகூட வேண்டாம்- முனிவர்

கண்டிப்பு! காளிதாசன் தரும் சுவைமிகு தகவல்

உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் ஒரு சுவையான சம்பவத்தை பாடுகிறான். கௌத்ஸ முனிவர் என்பவர் மன்னனிடம் 14 கோடிப் பொன் கேட்டார். மன்னன் ரகுவோ தயாள குணம் கொண்டவர். முனிவர் கேட்டதற்கு மேல் மூட்டை மூட்டையாக கொண்டுவந்து இறக்கினார். முனிவரோ ‘கறார் பேர்வழி’ இதோ பார் நான்    கேட்டதற்கு மேல் ஒரு பொன் கூட எடுக்க மாட்டேன். அதை மட்டும் எண்ணி வை என்றார்.

 

மன்னன் ரகு வாரி வழங்கும் பாரி வள்ளல்; வலது கை கொடுப்பதை இடது கை அறியாது வழங்குவான்; முனிவரோ கொஞ்சமும் பேராசை இல்லாதவர். கூடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் பெருந்தகை. நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய இரு உதாரண புருஷர்கள்!

 

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஐந்தாவது சர்கத்தில் வரதந்து- கௌத்ச முனிவர்களின் கதை வருகிறது.

 

மன்னன் ரகுவை கௌத்சர் சந்திக்கிறார்.

 

இதில் அருமையான விஞ்ஞான விஷயங்கள் வருகின்றன

உலகம் சூர்யனிடமிருந்து உயிர் பெறுகிறது (5-4): சூரியன் இல்லாவிடில் உயிர்கள் இல்லை. வரதந்து முனிவர் ஞான சூரியன்; அவருடைய ஒளியைப் பெற்றவர் கௌத்சர்.

 

மரங்கள், பிள்ளைகளைப் போன்றவர்கள்! ஆஸ்ரமத்திலுள்ள புத்திரர்களைப் போன்ற மரங்கள் காட்டுத் தீயினாலோ காற்றாலோ சேதமடையாமல் இருக்கின்றனவா?. என்று கௌத்ஸரிடம் ரகு குசலம் விசாரிக்கிறான். இது புற சூழல் விஞ்ஞானம்.

 

ஆஸ்ரமத்திலுள்ள மான்கள் அபாயமில்லாமல் வாழ்கின்ற்னவா? ரகுவின் கேள்வி; வனவிலங்குப் பாதுகாப்பு அறிவியல்.

 

 

இது போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு உமது வரவினால் எனக்கு மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. உங்கள் குரு ஏதேனும் சொல்லி அனுப்பி இருந்தால் அதை நிறைவேற்ற ஆசை என்றான் ரகு.

 

கௌத்சர் சொன்னார்

நீங்கள் தானம் கொடுத்தே வறுமைக்கு வந்து விட்டீர்; பொன் குடத்தால் என்னை வரவேற்காமல் மண்குடத்தை வைத்து என்னை வரவேற்றதிலிருந்தே அது தெரிகிறது ஆகையால் நான் வேறு ஒருவரிடம் செல்கிறேன் என்றார். ரகு அவரைத் தடுத்து உமது குருவுக்குத் தரவேண்டிய தக்ஷிணை என்ன? என்று கேட்டான்.

 

குரு எனது பணிவிடையையே குருதக்ஷிணை என்று சொன்னார்;

நான் வற்புறுத்தவே கோபத்தில் 14 கோடிப் பொன் கொண்டுவரச் சொல்லிவிட்டார் என்றார் கௌத்ஸர்.

 

என்னிடம் ஒருவர் யாசகம் கேட்டுத் திரும்பிப் போன அபவாதம் எனக்கு வேண்டாம் எனது யாக சானை  லையில் சில தினங்கள் இருங்கள் பணம் கொண்டு வருகிறேன் என்றான் ரகு.

 

அவன் ஆயுதங்களின் ரதத்தில் ஏறிப் படுத்த இரவில் குபேரன் அவரது அரண்மனை கஜானாவில் பொன் மழை பெய்தான். ரகு படை எடுத்து வரப்போகிறானே என்று அஞ்சி குபேரனே வந்து கொட்டிவிட்டான்.

தங்கம் முழுதும் ஆகாஸத்திலிருந்து விழுந்தது.

அந்த தங்கத்தை அப்படியே கௌத்ஸரிடம் கொடுத்தான் ரகு. ஆனால் 14 கோடிக்கு மேல் ஒரு பொன் கூட இருந்தாலும் அதைத் தான் ஏற்கமாட்டேன் என்று கௌத்ஸர் சொல்ல, இல்லை முழுதும் உங்களுக்குத்தான் என்று ரகு சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது; இதைக் கண்டு அயோத்தி நகரமே வியப்பில் ஆழ்ந்தது.

 

பிறகு கௌத்ஸர் நூற்றுக் கணக்கான குதிரைகள் ஒட்டகங்களின் மீது பணத்தை ஏற்றிச் சென்றார். நல்லாட்சி நடத்தும் அரசனுக்கு பூமி விரும்பியதை எல்லாம் தரும். உனக்கு பூமி மாத்திரமின்றி ஆகாசமும் கொடுத்து விட்டது; உன்னைப் போலவே உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று ஆஸீர்வதித்து விட்டுச் சென்றார்.

 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்- கேட்டதை விட கூடத் தரும் மனிதன் ரகு.

தேவைக்கு மேல் ஒரு பைஸா கூட எடுக்க மாட்டேன் என்ற கௌத்ஸ முனிவர்.

 

இதுதான் க்ருத யுகத்தின் அடையாளம்! ஒருவர் பொருளை மற்றொருவர் விரும்பார்; எடுக்கவும் மாட்டார்.

 

-SUBHAM

BIG BANG AND BIG CRUNCH IN KAMBA RAMAYANA (Post No.5307)

Written by London swaminathan

Date: 10 August 2018

 

Time uploaded in London – 9-28 AM (British Summer Time)

 

Post No. 5307

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WHAT IS KAMBA RAMAYANA

A great poet by name Kamban wrote the Ramayana in Tamil verses about 1000 years ago. Though he said that he followed Valmiki , he deviated in some places. But the main story remained intact unlike the South East Asian Ramayanas.

WHAT IS BIG BANG AND BIG CRUNCH?

15 billion years ago, there was an explosion and the universe expanded from a  hot, central core; what we see as stars, galaxies, solar system etc evolved from it in stages. The big crunch theory says that the continuously expanding universe will stop expanding at one point in time and collapse suddenly. It is like a blowing balloon suddenly explodes and collapses.

 

Hinduism is the only religion which says the age of universe is around 15 billion years; other religions place it a few thousand years back. In Hinduism, all the Sanskrit words and Tamil words for all heavenly bodies including universe is globular or circular or spherical.

Now to Kamban… He says in Yuddha kanda,

Seeing the condition of his brother Lakshmana, Rama sobbed. Then Devas said,

“O the Supreme! Like the spider

which can spin the finest thread

out of itself, and make a web

and can withdraw it all

You will never cease to make

and unmake these various worlds,

All lives, inside out

Which you will swallow and spit out”

 

–The Brahmastra chapter.

 

Here expanding universe and crunching universe is compared to the spider web. And it is explained more clearly in ‘swallowing and spitting out’, i.e. the big crunch and big bang. According to Hindus it is done again and again. But scientists have not reached to that level. Even big crunch is only in hypothesis.

 

If it is a passing remark in only one place one may even ignore it. But Kamban and other Hindu scriptures repeatedly say it (Please see the link given below to my articles dealing with the same theme).

In the earlier Aranya Kanda (canto, under the chapter on Sarabanga, this point is discussed; there Kamban talks about the Great Deluge. He says everything merges in to Him at the time and at another creation it changes into many. In short, Hindus looked at Time as cyclical and all the events also repeated.

Manikka vasagar, a great Saiva saint, who lived several hundred years before (around 6th century) Kamban described the universe in clearer terms:

“The development of the sphere of the elemental universe

Its immeasurable nature, and abundant phenomena

If one would tell their beauty in all kits particulars

As- when more than a hundred million in number spread,

The thronging atoms are sent in the ray that enters the house

So is He the great One, who exists in the minutest elements

If you would know him, Brahma and rest with Vishnu

His greatness, source, glory and end

Conjoined with His eternity, His extent, His abiding essence

 

……………..”

 

Here we can see the word used is ‘spherical’, ‘more than a hundred million’, ‘spreading/expanding’.

 

All these correlates with the words in Big Bang Theory. Manaikkavasagar used a simile which every Indian would easily understand; India is a tropical country with dust every where. When the sun ray enters the house through small holes in the roof of a hut or through the narrow window of a house one would see millions of dust particles floating. He rightly compared it to the expanding universe. One would see the dust particles floating and moving. They don’t stand still; That is what happening in the universe; everything is floating(galaxies and Stars) in the vast expanse of time and space. They are moving without stopping.

 

It is amazing to see such images in the Rig Vedic Nasadiya Sukta and other hymns.

 

How did they know all these things? Did they ravel back in time? Did they find it by intuition? Hindu scriptures talk about different periods of time at different levels for different people (like Brahma and Indra; they lose their posts after certain period and new ones come). We couldn’t even find such things in science fiction stories or novels until very recently.

 

Kamban mentioned the universe, various worlds etc in other cantos as well.

 

–subham–

 

GHANTAKARNA FESTIVAL IN BHAKTAPUR, NEPAL (DECCAN CHRONICLE) (Post No.5306)

Compiled by London swaminathan

Date: 10 August 2018

 

Time uploaded in London – 7-11 AM (British Summer Time)

 

Post No. 5306

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

The festival of Gathemangal is celebrated in the memory of mythical demon Ghantakarna’s death. (Photos: AP)

Nepalese woman gather and prepare the material to make an effigy of demon Ghantakarna symbolizing demolition of evil during the Ghantakarna festival in Bhaktapur. According to the legend, a demon named Ghantakarna terrorized the villagers by stealing the children and women of the village. He used to demand money and other gifts from the villagers. His body was painted in red, blue and black and he wore a pair of bells on his ears. He looked very scary and every time he moved, the bells jingled. He got his name from the bells on his ears, i.e. Ghanta meaning ‘bell’ and Karna meaning ‘ears’.

 

Nepalese people gather to watch burning of effigy of demon Ghantakarna symbolizing demolition of evil during the Ghantakarna festival.

 

Nepalese people prepare an effigy of demon Ghantakarna prior to burning it symbolizing demolition of evil. According to legend, one day, a large number of frogs came to the village and began to croak near Ghantakarna’s place. He became furious but the frogs did not stop. They croaked even louder and when he tried to catch them, they jumped into the water. He, too, jumped into the water without realizing that it was a swamp and soon started to drown. The frogs swarmed around his head and he drowned to death. In this way, the frogs saved the village and the villagers from the demon.

Nepalese people burn an effigy of demon Ghantakarna symbolizing demolition of evil. The festival of Gathemangal or Ghantakarna Chaturdasi, like most of the Nepali festivals, is an example of the victory of good over evil.

 

FROM MY PREVIOUS POST

 

Gantakarna ( Bell Eared Karna)

The story of Gantakarna is very interesting. Sri Ramakrishna Paramahamsa

says, “Be not a bigot like Gantakarna”.

Gantakarna worshipped Shiva, but hated all other deities. Siva appeared

before him and expressed his displeasure. He advised him to treat all gods with

respect. But he wouldn’t change. Just to teach him that God is one, Siva

appeared again, but in the form of Hari Haran (Half Vishnu+ Half Siva). It made

him worse. He showed to ‘Arti ‘ etc to Siva side only. He blocked the nostrils of

Vishnu so that the incense fragrance would not reach him. Siva warned him

that he would suffer for his bigotry. Ghantakarna was least bothered about

Shiva’s warning. He retired to a village. Knowing his attitude, children of the

village deliberately uttered Vishnu’s name in front of him. Vexed at this,

Ghantakarna hung two bells (Ghanta) on his ears (Karna). When the boys cried

out “Vishnu, Vishnu”, he would ring the bells so that he would not hear them.

He spent his entire life by ringing the bells!

–subham–

சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 2 (Post No.5305)

Plastic Pollution in Delhi, Deccan Herald picture

Date: 10 August 2018

Written by S Nagarajan

Time uploaded in London – 6-19 AM  (British Summer Time)

 

Post No. 5305

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை

 

சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 2

 

அலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.

புதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளால் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.

அலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.

மறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வாழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.

மாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.

பேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.

Rubbish Pollution in Mumbai, Deccan Herald newspaper picture

பயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.

***

Sss….tttt….ttt…u..tte…..ring Anecdotes!!! (Post No.5304)

Compiled by London swaminathan

Date: 9 August 2018

 

Time uploaded in London – 11-43 AM (British Summer Time)

 

Post No. 5304

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

Henry Guy Carleton, wit, journalist and playwright, had an impediment in his speech about which he used to joke. Meeting Nat Godwin, the comedian, one day he asked
G G Godwin, c c can you g g give m m me f f fifteen m m minutes?

Certainly, replied the comedian, what is it?
I w w want to have a f f five minutes c c conversation with you .

 

xxx

Charles Lamb mocked by Coleridge!

Stammering, says Coleridge, is sometimes the cause of a pun. Some one was mentioning in Lambs presence the cold heartedness of the Duke of Cumberland, in restraining the Duchess in rushing up to the embrace of her son, whom she had not seen for a considerable time , and insisting on her receiving him in state. . How horribly cold it was, said the narrator.
Yes, said Lamb in his stuttering way, it you know he is the Duke of C Cu cum ber land!

 

(CUCUMERLNAD!)

Xxxx

 

Fear of demolishing Buildings!

A big hulk of a man, somewhat sinister in appearance, accosted a small dapper gentleman on the street, and asked,
C c can you t t tell me how to g g get to the C c city Hall?

The small man paled and turning on his heels , fled down the street. Angered and exasperated, the big man pursued him. They raced for several blocks until the little mans wind gave out and he was overtaken and captured. The big man seized him by the arm and cried angrily,
W w what do you m m mean running away w w when I ask you a c c civil question?

The little man looked up and gasped,
D d d do you t t think I wanted my block knocked off?

Xxxx Subham xxx

Walk Ten Steps Backward if You are Angry! (Post No.5303)

Compiled by London swaminathan

Date: 9 August 2018

 

Time uploaded in London – 8-28 AM (British Summer Time)

 

Post No. 5303

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

A very hot tempered man was told by his Guru to walk ten paces backwards every time his temper rose and he felt like lashing out. The man had gone to another village and arrived home quite late at night. He came home to find someone else was sleeping in his place. Thinking the worst of his wife he unsheathed his sword and was just about to kill the two of them.

 

Just then he remembered what his Guru had told him and so he stepped ten paces backwards. While he was doing this , he knocked off something  and the noise awoke the person sleeping in his place. It was his daughter. As soon as he realised who the person was , he was grateful to have taken those steps backwards. Therefore it is better to be a little hesitant before an act than to be sorry when it is too late.

Source: Sikshapatri, Swaminarayan Mandir, Kalupur, Ahmedabad, Year 2000

 

My Comments:-

TAMIL VEDA TIRUK KURAL SAYS,

Great harm may be caused by anger.

Therefore one should restrain anger towards anybody-

Kural 303 (Tamil poet Tiruvalluvar)

 

If one wishes to safeguard oneself, one should control anger, If not it is bound to ruin oneself – Kural 305

 

ALSO READ MY POSTS

 

How can you tackle Angry People? | Tamil and Vedas

tamilandvedas.com/2015/09/11/how-can-you-tackle…

How can you tackle Angry People? DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. WRIITEN BY london swaminathan.

 

anger quotes | Tamil and Vedas

tamilandvedas.com/tag/anger-quotes

Posts about anger quotes written by Tamil and Vedas

 

anger | Tamil and Vedas

tamilandvedas.com/tag/anger

But whne he was happy he gave boons as well. … When angry, count a hundred! … //tamilandvedas.com/2015/09/11/how-can-you-tackle-angry-people/

 

 

–subham–

கோபம் வந்தால் பத்து அடி பின்னே நட! திருக்குறள் கதை!! (Post No.5302)

Written by London swaminathan

Date: 9 August 2018

 

Time uploaded in London – 8-05 AM (British Summer Time)

 

Post No. 5302

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் – குறள் 305

 

பொருள்

‘ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்ஙனம் பாதுகாக்கத் தவறினால் கோபமே அவனைக் கொன்றுவிடும்’.

 

ஒருவருக்கு அஸாத்திய கோபம் வந்தது. அதிக முன்கோபம். எவர் மீதும் எரிந்து விழுவார்- அதி பயங்கர சிடுமூஞ்சி. அந்த ஊருக்கு ஒரு குரு வந்தார்.

 

குருவே! என் கோபத்தை அடக்க என்னால் முடியவில்லையே! சிலர் கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணிவிட்டுச் செயல்படு அல்லது பேசத் துவங்கு என்றனர். அதையும் செய்து பார்த்தேன்; பலிக்கவில்லை; நூறு எண்ணிய பிறகும் கோபம் வருகிறது! என்ன செய்வேன்?

 

இன்னும் சிலர் கோபம் வந்தால் வரக்கூடிய வசவுகளை எல்லாம் ஒரு தாளில் எழுது; ஒரு மணிநேரத்துக்குப் பின் வாசி; பின்னர் அதை பேச முயற்சி செய்; நீயே பயந்து விட்டு விடுவாய் என்றனர். அதையும் செய்து பார்த்தேன். பலன்  இல்லை.

 

கோபம் வந்தால் கண்ணை மூடுகிறேன்; வாயைத் திறக்கிறேன்; என்ன பேசுகிறேன் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லையே; என்னைக் காப்பாற்றுங்கள் என்றான்.

குரு சொன்னார்:

இனிமேல் கோபம் வந்தால் மெதுவாக பத்து அடி பின்னே நடந்து போ; பின்னர் கோபம் அடங்கிய பின்னர் முன்னே வா என்றார்.

 

அவனும் குருவுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினான். ஒரு முறை இரண்டு நாள் வெளி யூருக்குப் பயணம் செய்துவிட்டு அர்த்த ராத்ரியில் வீடு திரும்பினான். மனைவியருகே வேறு ஒருவர் படுத்திருந்து அசைவது தெரிந்தது. உடனே மனைவி மீது அதி பயங்கர சந்தேஹமும் கோபமும் பொங்கியது ஒரேயடியில் மனைவியையும் கள்ளக் காதலனையும் சத்தமில்லாமல் அடித்து நொறுக்க அடுப்படியில் இருந்து குழவியையும் இரும்பு உலக்கையையும் கொண்டு வந்தான்.

 

திடீரென்று குரு சொன்னது நினைவுக்கு வந்தது. எதையும் கோபத்தில் செய்து விடாதே ‘பத்து அடி பின்னோக்கி நடந்து போ’ என்று சொன்ன அறிவுரையை நினைத்தான். மெதுவாக இருட்டில் பின்னால் பத்து அடி நடந்தான். பத்து அடிகள் நடப்பதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தில் கால்பட்டு அது உருண்டு பெரிய சப்தத்தை எழுப்பியது.

 

அதைக்கேட்டு மனைவியின் பக்கத்தில் இருந்த உருவம் “அம்மா, அம்மா வீட்டில் யாரோ திருடன் வந்திருக்கிறான் போல இருக்கிறது” என்று கூச்சலிட்டாள். உண்மையில் அவனது மனைவி, அடுத்த தெருவில் (கணவனுடன்) வசிக்கும் மகளை அன்றிரவு துணைக்கு படுத்துக்கொள்ள அழைத்திருந்தாள். இவன் மட்டும் கோபத்தில் உலக்கை அடி கொடுத்திருந்தால் மனைவியும் மகளும்– ஒரு பாவமும் அறியாத இரண்டு உயிர்கள் மேலுலகம் சென்றிருக்கும்!

 

அவன் அதை எண்ணி எண்ணி வருதினான். குருவுக்கு மானஸீகமாக மேலும் ஒரு கும்பிடு போட்டான்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் -குறள் 303

 

பொருள்

கோபம், தீய விளைவுகளை உண்டாக்குவதால் யாரிடத்திலும் கோபப்படுவதை அறவே மறக்க வேண்டும்.

 

—SUBHAM–

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1 (Post No.5301)

Date: 9 August 2018

 

Time uploaded in London – 6-46 AM  (British Summer Time)

 

Post No. 5301

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1

 

ச.நாகராஜன்

1

 

டெல்லியின் ஆர்ச்பிஷப் அனில் கௌடோ (Anil Couto, Archbishop of Delhi) எல்லா சர்ச்சுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் சாரம் ஒரே வரியில் இது தான்; செகுலரிஸம் ஆபத்துக்குள்ளாயிருக்கிறது. (Secularism fabric under threat : Archbishop)

 

இதன் முழு அர்த்தமும் நமக்குப் புரிய வேண்டும். அதாவது இனிமேல் நம்மால் நினைத்தபடி மதம் மாற்ற முடியாது; ஏமாற்ற முடியாது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் இந்த பிஷப்! எது வரை? 2019 பொதுத் தேர்தல் வரை!

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி போல ‘2019 பொதுத் தேர்தல் வரை’ என்பதிலிருந்தே மறைமுகமாக இந்த பிஷப்,  மோடிக்கு ஓட்டுப் போடாதீர்கள்; போட்டால் நமது தொழில் இங்கே சரிவர நடக்காது! என்கிறார்.

இந்த கெட்ட எண்ணப் பிரார்த்தனை வேண்டுகோள் ஒரு புறம் இருக்க இதை ஆதரித்து ஜூலியோ ரிபரோ  என்ற போலீஸ் அதிகாரி (Julio Riberio – The Times of India dated 28-5- 2018 – A prayer for secularism: Hindu Rashtra, which would make my country a saffron Pakistan, is profoundly anti-national May 28, 2018, 2:02 AM IST Julio Ribeiro ) எழுதியுள்ள கட்டுரையில் இந்தியா காவி பாகிஸ்தான் ஆகி விடக்கூடும்; ஹிந்து ராஷ்ட்ரத்தில் நான் விரும்பும் வழிபாட்டைச் செய்ய முடியுமா? என்று ஆதங்கப்பட்டுக் கேட்டிருக்கிறார்.

ஆக, ஆர்ச்பிஷப்பின் விஷமத்தனமான தூண்டுதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஜூலியோவிற்கு நாம் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது. இருந்தாலும் கூட “கிறிஸ்து வழிபாட்டைத் தடுத்து நிறுத்த மாட்டீர்களே என்று கேட்கும் நீங்கள் தயவு செய்து கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட வரலாறைச் சற்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விடலாம். அத்துடன் இந்தியாவைப் பற்றி ஒன்றுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை; அறிந்திருந்தால் இப்படி ஒரு அபத்தமான எண்ணத்தை வெளியிட்டிருக்க மாட்டீர்கள் என்றும் கூறலாம்.

 

2

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தாமஸ் ஜெஃபர்ஸன் என்ன சொன்னார் என்று பார்ப்போமா?

“Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined, imprisoned, (and molested) : yet we have not advanced one inch towards humanity. What has been the effect of coercion? To make one half of the world fools, and the other half hypocrites. To support error  and roguery all over the earch.” – Thomas Jefferson, The Third President of United States.

 

கிறிஸ்துவ மதத்தை அறிமுகப்படுத்துவதில் லட்சக்கணக்கான அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், அபராதம் விதிக்கப்பட்டனர், சிறைக்கு அனுப்பப்பட்டனர். பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் ஒரு அங்குலம் கூட மனிதத்வத்தை நோக்கி நாம் முன்னேறவில்லை. இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவு என்ன? உலகின் ஒரு பாதியை முட்டாளாக்கியது. இன்னொரு பாதியை கபடதாரிகளாக்கியது. தவறுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் துணை செய்தது. – தாமஸ் ஜெஃபர்ஸன், யுனைடெட் ஸ்டேட்ஸின் மூன்றாவது ஜனாதிபதி.

3

பற்பல நூற்றாண்டுகளாக இந்தியா தான் எல்லா மதத்தினருக்கும் சுதந்திரமாக வழிபடுவதற்கான சொர்க்க பூமியாக அமைந்திருக்கிறது. எல்லா இனத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சொர்க்க பூமி இது ஒன்றே தான்! தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாகத் துரத்தப்பட்டவர்களுக்கும், மதமாற்றக் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஓடி வந்தவர்களுக்கும், தங்கள் பண்பாட்டையும் வழிபாட்டுமுறைகளையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பி ஓடி வந்தவர்களுக்கும் அடைக்கலம்  கொடுத்த புண்ய பூமி இது.

கிறிஸ்துவத்தில் உருவ வழிபாட்டை ஏற்று அதன்படி வழிபாடு நடத்திய சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளாவில் அடைக்கலம் புகுந்தனர்.

தீயை நித்தம் வழிபடும் பார்ஸிகள் மஹராஷ்டிரத்திலும் குஜராத்திலும் அடைக்கலம் கோரி வந்து வசித்தனர்.

யூதர்களில் சிலர் மத மாற்றக் கொடுமைக்கு அஞ்சி இங்கு வந்து குடியேறினர்.

முஸ்லீம்களில் பஹாய் மார்க்கத்தினர் 50 இஸ்லாமிய நாடுகளில் வாழ முடியாமல் அங்கு வர அனுமதிக்கப்படாமல் இறுதியில் இந்தியாவில் வந்து குடியேறினர்;தங்கள் வழிபாடுகளை இன்றளவும் தடையின்றி நடத்துகின்றனர்.

சீன கம்யூனிஸ ராட்சஸர்களால் துரத்தப்பட்ட தலாய்லாமா – புத்த மதத் தலைவர் – அடைக்கலம் தேடி இந்தியா வந்தார். இன்றளவும் தர்மஸ்தலாவில் தங்கி தன் வழிபாட்டைத் தொடர்கிறார்.

இப்படி ஒரு நாட்டை – இன்னும் ஒரே ஒரு நாட்டை உலகில் காட்ட முடியுமா? முடியாது.

தன் மதத்தைச் சேராமல் இருப்பவர்களுக்கு – அடிதடி, வெட்டு, குத்து, கொலை – இவை தான் இதர மதங்கள் காட்டும் வழி; செய்த செயல் முறை.

ஆக இப்படிப்பட்ட நாட்டை நோக்கி- அதன் மக்களை நோக்கி – என் வழிபாட்டை இங்கு தொடர முடியுமா என்று கேள்வி கேட்கும் ஜூலியா போன்றவர்களை என்ன சொல்லி அழைப்பது?

அப்பாவித்தனமாக கேள்வி கேட்பவர் என்றா?

விஷமிகளில் ஒருவர் என்றா? வரலாறு தெரியாதவர் என்றா?

 

நல்ல மனம் கொண்ட, இந்திய வரலாறைத் தெரிந்த எவரும் இந்திய வாழ்க்கை முறை ஒன்றே தான் எந்த மதத்தையும் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளும் ஒரே வாழ்க்கை முறை என்பதை உணர்வர்.

இஸ்லாமோ, கிறிஸ்தவமோ ஏனைய பிற மதங்கள் இருக்கக் கூடாது என்று கூறுபவை.  பிற மதத்தின் வழிபாட்டைச் செய்வோர் பாவிகள்; அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து முழங்கி வருபவர்கள்.

ஆகவே ஜூலியா இப்படிப்பட்ட கேள்வியை இஸ்லாமிய நாடுகளிலும் கிறிஸ்தவ நாடுகளிலும் கேட்கலாம். அங்கு இதர மதத்தினருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் உண்டா என்று கேட்கலாம்.

 

விஷமத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்காக – அவர்கள் இப்படிக் கேட்டு இந்தியாவில் வகுப்புக் கலவரத்தைத் தூண்ட விரும்புவதால் – சில உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து காண்போம்.

  • தொடரும்

***