1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்! (Post No.5200)

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 15-08  (British Summer Time)

 

Post No. 5200

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ்  வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.

 

இந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.

இதோ பட்டியல்:-

 

 

 

–SUBHAM–

Exaggeration Anecdotes (Post No.5199)

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 14-08  (British Summer Time)

 

Post No. 5199

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


Mark Twain once asked a baggage handler in the railroad station in Washington,
“Is that satchel strong enough to go in the baggage car?”
The baggage man lifted the grip high above his head and smashed it to the ground with all his might.
That, said he, is what it will get in Philadelphia.
He picked it up and bashed it against the side of the car four or five times.
That is what it will get in Chicago, he continued.
He next threw it high in the air and when it had landed, jumped on it vigorously. It split open and scattered its contents over the platform.
And that is what it will get in Sioux City, you would better take it in the Pullman with you.

Xxx


The Chase National Bank. Operating all over the world, receives from its clients some very strange letters.
A short time ago, a dealer in fur from Australia wrote the following,
Dear Sirs,
“Am sending draft for a thousand pounds, with which please credit my account. Last year I crossed a kangaroo with a raccoon, and now I am raising fur coats with pockets”.

Xxx

Too much Ventilation!

 


Colonel Cody, Buffalo Bill , used to tell the story of an English visitor to the West. While riding The s Rocky Mountain canyon one day, a tremendous gust of wind swooped down and actually carried the English man off the wagon seat. After he had picked himself up and combed the sand and gravel out of his whiskers, he said,
“I say! I think you over do ventilation in the country!”
Xxx

Bill Nye, the humorist, was not given to mild statements. He had the following to say,
We have not  had more to say of the editor of the Sweet waters Gazette. Aside from the fact that he is a squint eyed, consumptive liar with a breath like a buzzard and a record like a convict, we don’t know anything about him. He means well enough, and if he can evade the penitentiary and the vigilance committee for a few more years, there is a chance for him to end his life in a natural way. If he don’t tell the truth a little more plentifully, however the Green River people will rise as one man and churn him up till there won’t be anything left of him but a pair of suspenders and a wart.

Xxxx

 


Bear stories are the stock in trade of the Alaskan sourdoughs.
One-of them told of his encounter with a giant a kadikak monster . He was all of two tons and he riz up and come at me. I didn’t manage to wound him just enough to make him mad. But then my rifle jammed. I headed for the nearest tree, but it only had one limb and that was thirty feet off the ground. I got there not more than a foot ahead of the bear and he took a swat at me as I gathered for the leap. He tore my Britches but didn’t quite getting me so badly I missed the limb.
What happened?
I caught it on my way down
Xxx

Col.John Cremony was a famous western figure and known as a yarn spinner. He told one story of a desperate flight from pursuing Indians,
“I had a fine horse and managed to keep far enough ahead so their arrows couldn’t reach me. I picked them off until my last cartridge was gone. Then I headed up a canyon and I will be doggoned if it didn’t end in a sheer wall I was trapped like a rat with a dozen Apaches closing in on me And me without as much as a penknife to defend myself.
What happened,Colonel?
Why, they killed me! Damn them, sir, they killed me!
Xxx SUBHAM xxx

க்ளோனிங் cloning- அதிசய ஹிந்து விஞ்ஞானம்! (Post No.5198)

Research Article Written by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 12-59  (British Summer Time)

 

Post No. 5198

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண்களும் குழந்தை பெறலாம் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். மஹாபாரத்திலுள்ள அதிசயக் குழந்தை, சோதனைக் குழாய் குழந்தை போன்ற பத்து விஷயங்களை (26-3-2014) அதில் விளக்கி இரண்டு கட்டுரைகளாக (கீழே இணைப்புகளைக் காட்டியுள்ளேன்) தந்தேன்.

இப்போது மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சுவையான செய்திகள்

 

‘க்ளோனிங்’ CLONING என்றால் என்ன?

மனிதனை அல்லது உயிரினங்களை அச்சு எடுப்பது ஆகும். அதாவது ஒரு உயிர் அணுவிலிருந்து அந்த உயிரினத்தையே உருவாக்கலாம். இப்படிச் சில ஆடுகளை உருவாக்கி உலகையே வியக்கவைத்தனர் விஞ்ஞானிகள்

உடனே அட! ஆயிரம் காந்திகளை அல்லது ஆயிரம் ஆதிசங்கரர்களை உருவாக்கலாம்; அவர்களுடைய ஒரு உயிருள்ள செல் கிடைத்தால் போதும் என்றனர். ஐய்யயோ, வேண்டாமப் பா; ஆயிரம் ஹிட்லர்களையும் எவனாவது ஒருவன் உருவாக்கி  விடுவான்; இத்தைகைய ஆராய்ச்சிகளுக்கு கட்டு திட்டங்கள் வேண்டும், வரம்பு முறைகள் வேண்டும் என்றெல்லாம் பத்திரிக்கைகளும் டெலிவிஷன்களும் அலறின; நிற்க

 

‘ஸப்ஜெக்டு’க்கு வருவோம்!

இந்து மத இதிஹாச புராணங்களில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. விஞ்ஞானம் வளர, வளர அவைகள் எல்லாம் விளங்குகின்றன.

 

விஷ்ணுபுராணத்தில் ஒரு கதை வருகிறது:

நிமி என்ற அரசன் விதேக நாட்டை ஆண்டு வந்தான் (தற்போதைய பீஹார்- தெற்கு நேபாளம்); அவன் ஒரு 1000 ஆண்டு யாகத்துக்குத் திட்டமிட்டான்; குல குருவான வசிஷ்டரை அ ணுகி, ‘ஐயனே, அருள் புரியும் என்றான். அவர் சொன்னார்: மன்னர் மன்னா! நான் இந்திரனிடம் ஏற்கனவே ‘அட்வான்ஸ்’ வாங்கிவிட்டேன்; அவன் என்னை 500 ஆண்டு யாகத்துக்கு ‘புக்’ பண்ணிவிட்டான்; அதனால் ஒன்றும் குறைந்து போகாது; முடித்தவுடன் ஓடோடி வருகிறேன்’.

நிமி இதைக் கேட்டு விட்டு ஒன்றும் பதில் சொல்லவில்லை. வசிஷ்டர் நினைத்தார் ‘மௌனம் சம்மதம்’ என்பது பழமொழி. ஆகியால் வந்துவிடுவோம் என்று சென்றுவிட்டார்.

 

 

ஆனால் நிமியோ வேறு ஒரு ரிஷியை அழைத்து யாகத்தை நடாத்திவிட்டார். அந்த ரிஷியின் பெயர் கௌதமர்.

 

ஆசையோடு ஓடி வந்த வசிஷ்டர் அரண்மனையின் கதவைத் தட்டினார்; மன்னர் உறங்கிக் கொண்டு இருப்பதாக வாயில் காப்போன் செப்பினான்.

வந்ததே கோபம், வசிட்டனுக்கு.

பிடி சாபம்! நிமி, நீ இன்று முதல் நிமிர முடியாது; நீ விதேகன் (வி+தேஹ) ஆகக்கடவது! அதாவது உடல் அற்றவன் ஆவாய்.

 

மன்னன் எழுந்தான். ஐயா வசிட்டரே! தூங்கும் போது ஒருவருக்கு சாபம் போட எந்த ஸ்ம்ருதியில் ( இந்துக்களின் சட்டப் புத்தகம்) ‘ரூல்’ இருக்கிறது? இது அநியாயம்; இந்தாரும், பிடி சாபம்!

நீரும் அழிந்து போகக் கடவது!

 

இருவரும் அழிந்தனர். வசிஷ்ட மஹா முனிவன்  ஒரு short cut ஷார்ட் கட் (குறுக்கு வழி) கண்டுபிடித்து வந்துவிட்டார். நிமி, விதேஹன் ஆனதால் அவன் ஆண்ட நாட்டுக்கு விதேஹ நாடு என்று பெயர் ஏற்பட்டது.

 

உடனே அறிஞர் பெருமக்கள் மஹாநாடு கூட்டி புதிய அரசன் யார் என்று தீர்மானித்தனர். நிமியைக் ‘கடைந்து’ ஒரு மன்னனை உருவாக்குவோம் என்று நிமியின் இறந்து கிடந்த உடலைக் ‘கடைந்து’ மிதி என்ற ஒரு மகனை உருவாக்கினர். அவன் ஆண்ட பட்டிணம் மிதிலை ஆகி, அங்கே ஜனகன் ஆண்டு, சீதையை வயல் வெளியில் கண்டு எடுத்து, ராமாயணம் உருவான கதை எல்லோரும் அறிந்ததே.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள வினைச் சொல்லை அப்படியே ‘உடலைக் கடைந்து’ என்று எழுதிவிட்டனர். மொழிபெயர்த்த ஆங்கிலேயர்களும் இந்துக்கள் சரியான முட்டாள்கள் என்று நகைத்துக் கொண்டே  அப்படியே மொழி பெயர்த்து விட்டனர். ஆண்கள் குழந்தை பெறுவதா! என்று அங்கலாய்த்தனர். இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தவுடன் ‘கடைதல்’ என்பது க்ளோனிங்- அச்சு எடுத்தல் – படி எடுத்தல் – என்று விளங்குகிறது. மஹாபாரதத்திலுள்ள பத்து அதிசயங்களையும் இன்னும் பல அதிசயப் பிறப்புகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போதுதான் நான் சொல்வது விஞ்ஞானக் கற்பனைக் கதையோ அல்லது பிதற்றலோ அன்று என்பது தெள்ளிதின் விளங்கும்!

 

இன்னொரு கதை பார்ப்போம்; வேனன் கதை!

 

வேனன் என்றொரு மன்னன் இருந்தான் இவன் கதையும் பல புராணங்கள் மநு ஸ்ம்ருதியின் வியாக்யானம் ஆகியவற்றில் வருகிறது.

வேனன் சொன்னான்

பிராஹ்மனணர்களே!

நான்தான் யாக யக்ஞங்களின் ஆகுதிகளைப் பெற தகுதியுடையவன்; ஆகையால் இந்திரன் சந்திரன் என்று சொல்லி வீணடிக்காமல் எல்லாவற்றையும் எனக்கே நல்குக.

 

ஐயர்மார்கள் சொன்னார்கள்

“மன்னா; கோபித்துக்கொள்ளாது அப்படியெலாம் வழக்கமும் இல்லை; மேலும் நமக்கும் மேலே ஒருவன் உளன்.”

மன்னன், பிடிவாதம் பிடிக்கவே, சரி ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்’ என்று கருதி பிராஹ்மண மஹாநாட்டு முடிவுப்படி மன்னனை தர்ப்பை புல்லைக் கொண்டே கொன்றுவிட்டனர்.

 

 

இந்து அகராதியில் ‘மன்னன் அற்ற’ (அ+ராஜக) என்றால் சட்ட ஒழுங்கற்ற ‘அ+ ராஅஜக’ என்று பொருள்; நாடு முழுதும் அராஜகம் தாண்டவ மாடியது. மீண்டும் ஐயர்கள் மஹாநாடு கூட்டி வேனனின் உடலைக் கடைந்து, பிள்ளையை உண்டாக்குவோம் என்று பணியைத் துவக்கினர் (ஹரி வம்ஸம் என்னும் நூல் வேனனின் உடலில் வலது கையைத் தேய்த்து……….என்று விளம்பும்). எல்லோரும் உடலைத் தேய்த்தவுடன் அல்லது கடைந்தவுடன் ஒரு கறுப்பு, குள்ள உருவம் வந்தது. நீ இங்கே அமர் நிஷத்த என்றனர். ஸம்ஸ்க்ருதத்தில் ‘நிஷத்த’. அவர்கள் நிஷாதர்கள் ( பழங்குடி வேடுவர்கள் ) ஆனார்கள். அவர்களை விந்திய மலைக்கு அனுப்பிவிட்டனர்.

அதாவது ஐயர்கள் செய்த முதல் க்ளோனிங் ஜ்ராஸ்ஸிக் பார்க் Jurassic Park கதை போல எதிரிடை விளைவை உண்டாக்கிவிட்டது. முதல் எக்ஸ்பெரிமெண்ட் தோல்வி.

பிராஹ்மணர்கள் மீண்டும் ஒரு மஹா நாடு கூட்டி இரண்டாவது முதல் தேய்தபோது—உடலை    கடைந்த போது– அற்புதமான, ஒளிவீசும் பிருது தோன்றினான். அவன் ஆண்டதால் பூமிக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘ப்ருத்வீ ‘என்ற பெயரும் நிலைத்தது.

கதையை நிறுத்திவிட்டு சிறிது ஆராய்ச்சி செய்வோம்; புராணங்கள் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கின்றன என்று பாருங்கள். முதல் க்ளோனிங் பரிசோதனை தோல்வி அடைந்து அறிவற்ற ஒருவன் வரவே அவனைக் கொல்லாமல் விந்திய மலைக்கு அனுப்ப, அவன் நிஷாதர்களென்ற ஒரு இனத்தை உருவாக்க, பிறகாலத்தில் அவர்களில் ஒருவனாக வால்மீகி எனும் மாமுனிவன் உருவாக வழிவ கடைந்தனர்.

 

இரண்டாவது Kலோனிங் எக்ஸ்பெரிமெண்டில் ப்ருது தோன்ற, உலகம் உய்வு பெற்றது

 

உடலைத் தேய்த்து— உடலைக் கடைந்து- அதாவது செத்துப்போன ஒரு ஆணின் ‘ஸெல்’ (cell) லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கினர். அதை அப்படியே எழுதியும் வைத்தனர். விஞ்ஞானம் வளராதபோது செத்துப்போன ஆண் உடலில் இருந்து ஒரு மனிதனா என்று நகைத்தோம்! இப்பொழுது வியக்கிறோம். இதிஹாச, புராணங்களில் உள்ள பெயர்கள் பல்லாயிரம்; அதில் இது போல அதிசயச் செய்திகள் விகிதாச்சரப்படி குறைவே; பெயர் தெரியாமல் இறந்த புராண மனிதர்கள் இன்னும் பல்லாயிரம்; அவர்களையும் கணக்கெடுத்தால் இந்த மாதிரி செய்திகள் குறைவே; ஆகவே இருக்கும் புராணக் கதைகளை அறிவியல் நோக்கில் நாம் பார்க்க வேண்டும்.

 

 

முன்னரே எழுதிவிட்டேன்; அகஸ்த்யர் கடலைக் குடித்தார் என்றால் அகஸ்த்யர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்று பொருள்

அகஸ்த்யர் விந்திய மா மலையை கர்வபங்கம் செய்தார் என்றால் முதல் முதலில் மலை வழியாக சாலை அமைத்து தென்னகம் வந்தார் என்று பொருள்.

 

 

அதற்கு முன் பஞ்ச பாண்டவர்கள் ராமன், ராவணன் முதலானோர் படகு அல்லது கடலோர வழிகலையே பயன்படுத்தி தென்னகம் வந்தனர்.பகீரதன், பல்லாயிரமாண்டு தவம் செய்து கங்கையைக் கொணர்ந்தான் என்றால் அவன் முன் னோர்கள் செய்ய முயன்று தோல்வியுற்ற கங்கை நதி திசை மாற்றுத் திட்டத்தில் வெற்றி பெற்றான் என்று பொருள்.

 

 

ஆக புராணக்காரர்களின் மொழிகளைப் புரிந்து கொண்டால் இனி வரப்போவதையும் சொல்ல  முடியும். அதை நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

 

கண்டு மகிழ்க

 

–சுபம், சுபம்-

 

  1. ஆண்களுக்குகுழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கு குழந்தை … குழந்தை பெறலாம். … ஆண்களும் …

  1. ஆண்களுக்கும்குழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கும் குழந்தை … ஆண்களும் … //tamilandvedas.com/2017/05/23/%e0%ae …

மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1 …

tamilandvedas.com/2014/03/26…

Gandhari, Draupadi, Kunti. கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் 934 தேதி …

Previous Post
பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது

கரூவூர் ஆநிலை- சுவையான வரலாறு! (Post No.5197)

Written by S NAGARAJAN

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London –   7-34 AM (British Summer Time)

 

Post No. 5197

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்குமண்ட  சதகம்

பிரமனின் படைப்புத் தொழிலை காமதேனு செய்த தலம் கருவூர் திரு ஆநிலை

.நாகராஜன்

கருவூர் என்பது கொங்கு நாட்டுத் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

கரூவூர் ஆநிலை என்று வழங்கப்படும் இதன் வரலாறு சுவையான ஒன்று. இது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழினுள் ஒன்று. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம் இது.

கொங்கு தேசத்தில் இருபத்துநான்கு நாடுகள் உள்ளன.

அவையாவன: பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொன்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்கனாடு, திருவாவினன்குடி நாடு, மண நாடு, தலையனாடு, தட்டய நாடு, பூவாணியனாடு, ஆரையனாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கனாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, காவடிக்கனாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கோயில் நாடு, குறும்பு நாடு ஆகியவையாகும்.

இவற்றில் கருவூர் ஆநிலை வெங்கால நாட்டில் உள்ளது.

திருஆநிலை என்று புகழப்படும் இது சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து பதிகளுள் ஒன்றாகும். கருவூர்த் தேவர் பிறந்த இடம். இறைவனின் திருநாமம் பசுபதிநாதர். இறைவி : சுந்தரவல்லி.

காமதேனு வழிபட்டதால் கோவிலுக்கு திருஆநிலை என்று பெயர் ஏற்பட்டது

இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 11ஆம் பாட்டில் புகழ்ந்துரைக்கிறது இப்படி:-                                                            

 

வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை                 

சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்கநீ

ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ

வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே

 

 

இதன் பொருள் : பசுபதி ஈஸ்வரரைப் பூஜித்து கடல் சூழ்ந்த பூமியையும் மற்றுமுள்ள அண்டங்களையும் பிரம்மாவைப் போல படைத்தல் தொழிலைச் செய்த காமதேனு பிறந்தது வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர். அது உள்ளது கொங்கு மண்டலமே.

 

கருவூரின் வரலாறு : ஒரு காலத்தில் காமதேனு கருவூர்ச் சிவபெருமானைப் பூசித்து வணங்கி வந்தது. பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்வதால் கர்வம் மிகப் பெற்றார். அதை அடக்க,  பிரமதேவனைப் போல படைக்கும் ஆற்றலைப் பெறுவாய் என சிவபிரான் காமதேனுவிடம் திருவாய்மலர்ந்தருள, அவ்வாறே காமதேனு அந்த ஆற்றலைப் பெற்று சராசரங்களை முன்போலப் படைத்தது. அக்கருவூருக்கு வடதிசையில் புசிப்பு நிமித்தம் வெண்ணெய் மலையென ஒன்று வகுத்துப் பூசித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த தலத்திற்கு திரு ஆநிலை என்று பெயர் வழங்கி வரலாயிற்று.

 

இந்தத் தலத்தைப் பற்றி கரூர்ப் புராணத்தில் வரும் பாடல் வருமாறு:-

வருதிநீ சுரபி தொல்லை மறையவன் போல வேலை        

பொருதிரை யாடை ஞாலத் தெமையருச் சனைபு ரிந்து                   

 தருகுதி சராச ரங்க ளனைத்தையு மென்முன் றாழா              

விரைமலர் தூவித் தேநு விடையோடும் போயிற் றன்றே               

  • கரூர்ப் புராணம்

கொங்கு மண்டலச் சதகம் போற்றும் திரு ஆநிலை இன்று கரூர் என்று புகழ் பெற்று விளங்குகிறது.

***

 

 

CLONING IN ANCIENT HINDU LITERATURE (Post No.5196)

Research Article Written by London swaminathan

 

Date: 8 JULY 2018

 

Time uploaded in London – 15-49  (British Summer Time)

 

Post No. 5196

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

What is cloning?

an organism or cell, or group of organisms or cells, produced asexually from one ancestor or stock, to which they are genetically identical.

 

That is, you create a replica of a human being without sexual intercourse. In my 2014 articles about Ten Medical Mysteries in Mahabharata, I have listed the ancient techniques of Test Tube babies, cloning etc. (see the link below for the full article).

Apart from the cloning references in the Mahabharata we have more references in Devi Bhagavata, Vishnu Purana and Manu Smriti:-

 

Cloning through Blood

Rakta Bhija (blood Seed)’s story is in Devi Mahaatmya. The demon Rakta Bheeja has a strange power. No one can kill him because when his blood is shed, another demon will emerge from each  drop of his blood. He fought with the Goddess Chaamunda. Each drop of his blood as it fell on the ground produced a new Asura (demon). But Chamundaa Devi found a new technique to stop it. She drank his blood in full and devoured his flesh. No more demons came out.

 

This story is a clear proof of blood cloning. If we place all stories of cloning together found in Hindu literature and study them we will know they are not fancy stories or science fiction.

 

Churning the Body of MEN to produce children!

Mahabharata gives innumerable stories of strange births, particularly men giving birth to babies. Till cloning techniques were reported in news papers, people couldn’t understand such stories and they were either baffled or they ridiculed such stories.

 

Here are two more from two different sources:

 

A legend in Vishnu Purana says that King Nimi requested Vaishtha to perform a fire sacrifice which would last for 1000 years. The sage pleaded a prior engagement to Indra for five hundred years, but offered to come at the end of that period. The king made no remark and remained silent and so Vaishistha rushed to the Royal court of Nimi as soon as he finished 500 year Yaga (fire sacrifice). He took silence as Yes. In the meantime, Nimi had finished the Yaga with the help of another sage called Gautama.

 

Enraged by this Vaisishtha cursed Nimi to become ‘Body less’ (Vi+Deha). This curse was given to him while Nimi was sleeping. When he woke up he became angry saying that a sleeping person cannot be cussed according to Hindu law and he cursed Vasistha back. Vaisistha perished as per the curse and came back in another body. But in Nimi’s case he died because of the curse. And then the sages CHURNED HIS BODY AND PRODUCED A SON CALLED MITHI. The city of Mithila, Sita’s birth place got the name from this legendary King Mithi.

 

Here churning the body is a technical term for cloning.

This is proved in another story

Story of Vena

Vena, son of Anga and a descendant of Manu Swambhuva issued a proclamation regarding Fire Sacrifices:

“Men must not sacrifice or give gifts or present oblations. Who else but myself is the enjoyer of sacrifices? I am forever the Lord of the Offerings”.

The sages remonstrated him respectfully, but in vain. They admonished him in stronger terms; but when nothing worked, they slew him with blades of consecrated grass. After his death the sages beheld clouds of dust and inquiry  found that they arose from the bands of men who had taken to plundering because the country was left without a king.  A King less (A+rajaka)country is severely criticised in the Hindu epics and mythologies.

 

As Vena was childless, the sages after consultation, RUBBED the thigh ( in Hari Vamsa, they rubbed his right arm) of the dead king to produce a son. From it there came forth a man like, a charred log, with flat face and extremely short. The sages told him to sit down (Nishida). He did so and thus became a Nishida, from whom sprang the Nishaadas dwelling in the Vindhya mountains., distinguished by their wicked deeds.

(Nishada= hunters, Forest dwsellers)

(This shows that their first experiment of CLONING went wrong and wicked people were produced ; something like Jurassic Park film)

The sages then RUBBED the right arm of the dead body of Vena and from it sprang the majestic Prithu, resplendent in body, glowing like the manifested Agni/ Fire God. The story of Vena is found in Mahabharata, Manu Smrti commentary, Padma Pura and Hari Vamsa.

Here RUBBING stands for CLONING.

Prithu gave the name Prithvi to earth.

 

The Puranas faithfully reported that the cloning went wrong in the first experiment. Puranas never lie.

 

The ancient sages used technical jargon like RUBBING or CHURNING the dead body for CLONING.

 

As the science develops new techniques or make new inventions we understand our mythology better.

 

For Ten More Mysteries from the Mahabharata , please read my old article:

 

 

cloning | Tamil and Vedas

tamilandvedas.com/tag/cloning

Posts about cloning written by Tamil and … Cloning ( as we saw in Rakthabheeja demon story), … //tamilandvedas.com/2014/03/26/medical-science-solves-ten-mysteries …

 

–Subham–

 

STINGY AMERICANS (Post No.5195)

Economy & Endurance Anecdotes (Post No.5195)


Written by London swaminathan

 

Date: 8 JULY 2018

 

Time uploaded in London –  9-17 am (British Summer Time)

 

Post No. 5195

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

STINGY ROOSVELT


Shortly before sailing back to England foreign correspondent Quentin Reynolds was received by President Roosevelt in his office at the White House. While he was there the President put through a transatlantic call to another eminent statesman, Winston Churchill.
Mr Reynolds was slightly startled when, after a conversation, the President said
‘I will have to hang up now. My three minutes are up’.

Xxx

STINGY COOLIDGE

A visitor to the Whitehouse during the Coolidge administration said to the President that that he would greatly appreciate the gift of a cigar, not for himself but for a friend who had the eccentricity of collecting cigar bands from famous smokers all over the world .

President Coolidge thought the matter-over for a few seconds, then reached for a box of cigars.
Taking one out he carefully removed the band , replaced the cigar in the box , and handed the band to his visitor .

Xxx

BIG MONEY MAKES YOU STINGY!


At Lobbs, the famous English bootmaker, one day, I saw on the floor a heap of twenty or thirty boots , all needing cobbling badly.
Oh sir, Lobbs explained , these Belong to the best customer I ever had . He used to come in here and order15 or 20 pairs of boots ,
But when his father died he left him some three million dollars.

“Well, sir, since then he has not ordered a single pair of New boots but sends the old ones to be repaired”.
Who is he, Lobbs, I asked.
An American, sir…… his name is Pierpont Morgan
Xxxxx

 
Endurance anecdotes
In the days of the homestead law a prospective settler sought out a lawyer friend and asked him to explain the law and its operations.

I don’t know the exact text of the law, said his friend, but I can give you the draft of it. The government is willing to bet you 160 acres of land against 14 dollar that you can’t live on it five years without starving to death

 

XXX

BUYER SENT HOME!

Much more eccentricity anecdotes

Alfred Stieglitz has always been a highly arbitrary and erratic dealer in paintings . Once, at a show of the work of Georgia O Keefe, a wealthy woman expressed, with a slightly patronising attitude, a desire to purchase a certain picture . Repelled subtly by the woman’s manner Stieglitz snapped,
“Why do you want that painting? Give me some reason why you want it”
The prospective purchaser could think of no satisfactory reason and was refused the picture.

Xxx

 

‘Don’t you know who I am?’

A traffic cop will signal Pop Gershwin to stop. Pop has been exceeding the speed limit, perhaps in the u unconscious belief that the father of the jazz king has rights that even the police force must respect.
Don’t you know who I am? He asks the officer
I am the father of George Gershwin
At the same time, being a New Yorker, he pronounces the first name to rhyme with judge
(The Jewish American pronunciations of George and judge are surprisingly similar)

The officer scratches his head. He doesn’t know every judge in Gotham. Perhaps this judge Gershwin is a big run up in the Bronx. Better to be safe than sorry.

A salute and he  lets Pa Gershwin pass.
Who now can tell Pa that Gershwin isn’t the king?
Xxxx SUBHAM XXX

 

 

‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’ (Post No.5194)

Written  by London swaminathan

 

Date: 8 JULY 2018

 

Time uploaded in London –  6-41 am (British Summer Time)

 

Post No. 5194

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’

-நறுந்தொகை, வெற்றி வேற்கை (அதிவீர ராம பாண்டியன்)

 

‘மிதிலைக்கு அரசனான ஜனகனுக்கு ஒன்றுமே தெரியாது; அவருக்கு மண்ணாசைதான் அதிகம்’ என்று சில முனிவர்கள் குறை கூறினார்கள். அவரது குருவான யாக்ஞவல்கியரின் காதிலும் இது விழுந்தது. ஜனகனின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஒரு தந்திரம் செய்தார். ஒரு நாள் எல்லா ரிஷி முனிவர்களும் இருந்த சமயத்தில், ஜனகனுடைய அவையில் யக்ஞவல்கியர் தத்துவச் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார்.

 

அச்சமயத்தில் ஒரு சேவகன் ஓடி வந்து அரசே! குதிரை லாயம் தீப்பிடித்து எரிகிறது; அணைக்க முடியவில்லை’ என்றான். அரசன், ‘சரி, போ’ என்றார். கொஞ்ச நேரம் ஆயிற்று; மற்றொரு காவலன் வந்து மன்னர், மன்னவா! அரண்மனையின் ஒரு புறத்திலும் தீ பரவிவிட்டது; எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றான்; மன்னனோ ‘‘சரி, நீ போகலாம்’ என்றார்.

 

முதல் காவலன் வந்து சொன்னபோது சில  முனிவர்கள் பயந்து தண்ணீர் குடிக்கப் போவது போல பாவனை செய்து வெளியேறினர். இரண்டாவது காவலன் வந்து சொன்னபோது அசெம்பிளியில் பாதி காலி; ஒவ்வொரு முனிவரும் ஏதோ அவசர வேலை இருப்பது போல வெளியே போயினர்.

சிறிது நேரத்தில் மூன்றாவது காவலன் வந்து அரசே; இந்த அறை வரை தீ வந்துவ்ட்டது; எங்களால் தீ ஜ்வாலையைத் தாங்க முடியவில்லை; நாங்கள் வெளியேறுகிறோம்; நீங்களும் வெளியேறுங்கள் என்று கெஞ்சினான். மீதியிருந்த முனிவர்கள் கைத்தடி காலணி, கமண்டலம் சகிதம் குதிங்கால் பிடறியிற் அடிக்க ஓடினர்.

ஜனகன் சொன்னான்,

“மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”-

 

“ எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” —

 

 

தீயின் உக்கிரம் மெதுவாகத் தணிந்தது; ஜனகனும் யாக்ஞவல்கியரும் தொடர்ந்து தத்துவ விவாதம் நடாத்திக் கொண்டு இருந்தனர். ஓடிப்போன முனிவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பி வந்தனர். அவர்கள் வந்த காரணம், மன்னன் இறந்தானா? தலைமைக் குரு இறந்தாரா என்று பார்க்கத்தான்!

 

எல்லோரும் மீண்டும் வந்து அமர்ந்த பின்னர் குரு சொன்னார்:

“உண்மை ஞானி ஜனக மாமன்னன் ஒருவன்தான் ; நீங்கள் எல்லோரும் உயிர் பிழைக்க ஓடியதோடு கமண்டலமும் கைத்தடியும் எரிந்து விடும் என்று அஞ்சி அவைகளையும் எடுத்து ஓடினீர்; ஜனகனோ இந்த அரண்மனையே தன்னுடையது அல்ல” என்ற ஆன்ம ஞானம் பெற்றவன் என்றார்.

 

முனிவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்; ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’.
“மிதிலை எரிந்திட வேதப் பொருளை

 

வினவும் சனகன் மதி—தன்

 

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

 

வல்ல நம் அன்னை மதி”–       (சுப்ரமண்ய பாரதி)

–சுபம்-

மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி? (Post No.5193)

Written by S NAGARAJAN

 

Date: 8 JULY 2018

 

Time uploaded in London –   5-52 AM (British Summer Time)

 

Post No. 5193

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மஹாபாரதச் செல்வம் : ஸம்வாதம்

 

மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி?

 

ச.நாகராஜன்

1

மஹாபாரதம் ஐந்தாவது வேதம் என்று புகழப்படுகிறது. வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் சாரத்தை மஹாபாரதம் தருகிறது. வேதங்களை அனைவரும் கற்று ஓத முடியாது; அதற்குரிய காலமும் போதாது. ஆனால் மஹாபாரதத்தை அனைவரும் படிக்கலாம். அதை படிக்க போதுமான காலமும் மனித வாழ்வில் உண்டு.

பல மர்மங்களை வேதம் மட்டுமே அவிழ்க்கிறது. அந்த மர்மங்களை மஹாபாரதத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.

மர்மத்தை அவிழ்க்கும் விடையும் கிடைக்கும்.

உத்யோக பர்வத்தில் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் ஸநத்ஸுஜாதருக்கும் திருதராஷ்டிரனுக்கும் நடந்த அருமையான சம்வாதம் ஒன்றை விளக்குகிறது.

அதன் சாரத்தை சுருக்கமாக இங்கே காணலாம்.

2

திருதராஷ்டிரன் : ஸநத்ஸுஜாதரே! மரணம் (மிருத்யு) என்பது இல்லையென்று நீர் உபதேசித்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களும் அசுரர்களும் மரணம் இல்லாமல் இருப்பதற்காக குருகுல வாசத்தை அனுஷ்டித்தார்களே; அவ்விரண்டில் எது உண்மை?

 

ஸநத்ஜ்ஸுஜாதர் : சிலர் கர்மாவினால் மரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் மரணம் இல்லை என்று சொல்கிறார்கள். மரணம் என்னும் மிருத்யு இருக்கிறான்; இல்லை என்கிற இரண்டும் சத்தியமாக இருக்கின்றன. சில வித்வான்களால் இந்த மிருத்யுவானது அனாத்மாவில் ஆத்ம புத்தியாகிய மோகமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நானோ ஆத்ம ஸ்வரூபத்திலிருந்தும் தவறுதலான அஞ்ஞானத்தை மிருத்யுவாக – மரணமாகச் – சொல்கிறேன். அதேபோல தன் ஸ்வரூபத்தில் இருக்கையில் தவறாமையை மோட்சமாகச் சொல்கிறேன். தவறுதலால் அசுரர்கள் அவமானத்தை அடைந்தார்கள். தவறாமையால் தேவர்கள் பிரம்மமானார்கள்.

மரணமானது பிராணிகளை புலி போலத் தின்பதில்லை. ஏனெனில் மரணத்தின் ரூபமானது அறியப்படுகிறதில்லை, அல்லவா? சிலர் இதைக் காட்டிலும் வேறாக யமனை மிருத்யுவாகவும், புத்தியில் வசிப்பவனாகவும், மரணமற்றவனாகவும், பிரம்மநிஷ்டனாகவும், அந்தத் தேவனைப் புண்ணியசாலிகளுக்கு சுகத்தையளிக்கிறவனும் பாவிகளுக்குத் துக்கத்தைக் கொடுக்கிறவனுமாகப் பித்ருலோகத்தில் ராஜ்யத்தை ஆள்பவனாகவும் சொல்கிறார்கள்.

இவனுடைய ஆணையால் மனிதர்களுக்குக் கோபமும் தவறும் லோபரூபமான மிருத்யுவும் உண்டாகின்றன.

அகங்காரத்தினால் சாஸ்திரங்களுக்கு விரோதமான வழிகளில் செல்கின்றவன் ஆத்மாவின் தியானத்தை அடைவதில்லை.

மோகத்தை அடைந்தவர்களான அவர்கள் அந்த மரணத்தின் வசமாகி, இங்கிருந்து பரலோகம் சென்று மறுபடியும் கீழே விழுகிறார்கள். பிறகு புலன்களை (கர்மங்களை) அனுசரித்து அவர்களைச் சுற்றுகின்றன. இதனால் மரணம் காரணமாக அவன் மிருத்யு ஆகிறான். அவர்களுக்குக் கர்மம் பயன் தரத் தொடங்குகின்றன. அவர்கள் அந்த கர்ம பயனில் விருப்பமுள்ளவர்களாகி அதனைத் தொடர்கிறார்கள்.

ஆகவே அவர்கள் மரணத்தைத் தாண்டுவதில்லை.

தேகத்தை எடுத்த ஒருவன் பரமாத்மாவை அடையக் கூடிய யோகத்தை அறியாததால் போகத்தின் சேர்க்கையை அடைகிறான். அது புலன்களுக்கு மகா மோகத்தை உண்டு செய்கிறது.

புலன்களின் சேர்க்கை புலன் இன்பத்தை நினைக்கச் செய்து அனுபவிக்கத் தூண்டுகின்றன. காமமும் குரோதமும் மூடர்களை மிருத்யுவுக்குக் கொடுக்கின்றன.

தீரர்களோ தைரியத்தினால் மிருத்யுவைத் தாண்டுகிறார்கள்.

எந்த வித்வான் விஷயங்களை (புலனின்பம் தொடர்பானவற்றை) தள்ளுகிறானோ அவனை மிருத்யுவானவன் பிடிப்பதில்லை.

காமங்களை அனுபவிக்கும் ஒருவன் காமங்களுடன் நசிக்கிறான்.

காமங்களை விட்டவன் எல்லா புண்ணிய பாவத்தையும் நாசம் செய்கிறான்.

இதோ பிராணிகளுக்கு அஞ்ஞான ரூபமான இருளாகிற நரகமானது காணப்படுகிறது. பிராணிகள், மோகத்தை அடைந்து மேலே பார்த்துக்கொண்டு பள்ளத்திற்கு எதிராய்ப் போவது போல ஓடுகின்றன. இவ்வுலகில் மூடனுடைய செய்கை போன்ற செய்கையில்லாத இந்த மனிதனுக்கு மிருத்யுவானவன் புல்லால் செய்யப்பட்ட புலி போல என்ன செய்வான்?

விஷயங்களை நினையாமல் இருப்பவன் வேறு ஒன்றையும் நினைப்பதில்லை. அப்போது மிருத்யுவானவன் புல்லால் செய்த பாம்பு போல ஆகிறான்.

கோபத்தாலும் லோபத்தாலும் உண்டான மோஹ பயங்களுடன் கூடிய இந்த ஆத்மாவே மிருத்யு.

இவன் உமது சரீரத்தில் இருக்கிறான்.

இவ்வித மிருத்யு உண்டாவதைத் தெரிந்து கொண்டு ஞானத்தில் இருப்பவன் இவ்வுலகத்தில் மிருத்யு பற்றிய பயத்தை அடைவதில்லை. அவனுடைய விஷயத்தில் மிருத்யுவானவன் மிருத்யுவின் விஷயத்தை அடைந்து மனிதன் நசிப்பது போல நசிக்கிறான்.

 

3

மரணத்தைப் பற்றி மஹாபாரதத்தில் பல இடங்களில் முக்கியமான கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

அதில் மிக முக்கியமான விஷயமாக சொல்லப்படுவது மரணம் ஏற்படுவது கோபத்தாலும் லோபத்தாலுமே என்பது தான்.

புலனின்பத்தால் ஏற்படும் கர்மங்களின் வழியே ஜனன மரணச் சுழல் ஏற்படுகிறது. விஷய தோஷங்களை விட்டவன் தீரனாகி மரணத்தை வெல்கிறான்.

தீரனுக்கு முன்னால் மிருத்யுவானது புல்லால் செய்த புலி. புல்லால் செய்த பாம்பு.

அருமையான இந்த உவமைகள் மூலம் ஸநத்ஸுஜாதர் வாயிலாக மரணபயத்தை வெல்ல வழி கூறும் மஹாபாரதம்,அந்த வழியைக் கடைப்பிடித்தால், அவர்களுக்கு மரணம் இல்லை, ஆனால் மிருத்யுவுக்கே மிருத்யு ஏற்படும் என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறது.

இந்தக் கருத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.

 

ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படும் மஹாபாரதம் அனைவருக்கும் ஒரு வரபிரசாதம்!

***

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி………Part 2 (Post No.5192)

Written  by London swaminathan

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 5192

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

கட்டுரையின் முதல் பகுதியில் மிதிலை நகரம் பற்றிய சில கதைகளைக் கண்டோம். இப்போது மேலும் பல  சிறப்புகளைக் காண்போம்:-

 

மிதிலை, விதேஹ என்ற பெயர்களுடன், திரபுக்தி (இப்போது திர்ஹுத் மாவட்டம்) முதலிய பெயர்களும்

இந்தப் பகுதிக்கு உண்டு.

பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ண பகவானுடன் இந்திரப் பிரஸ்தம் (டில்லி) நகருக்குச் சென்று விட்டு ராஜக்ருஹம் நகருக்குத் திரும்புகையில் இங்கே வந்தனராம். கர்ண மாமன்னன் தனது திக் விஜயத்தில் மிதிலையையும் வென்றானாம். இதெல்லாம் மாபாரதச் செய்திகள்.

 

உலகிலேயே நீண்ட காவியமான மஹா பாரதத்திலுள்ள ஒரு வரி  மிகவும் பிரபல்யமானது.

 

காவலர்கள் ஓடோடி வந்து மன்னர் மன்னவா! மிதிலை நகரம் எரிந்து கொண்டிருக்கிறது என்று கூச்சலிட்டனராம். வேதப் பொருளை வினவிக் கொண்டிருந்த மாமன்னன் தத்துவ வித்தகன் ஜனகன் சொன்னானாம்:

 

“மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”–

“இதில் எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” —

என்று அவர் விடை இறுத்தாராம்.

 

அவ்வளவு உயர் நிலையை அடைந்த ஜீவன் ஜனகன்.

 

ராமன் நடந்தே சென்றான்!

ராமாயணத்தில் ஒரு சுவையான செய்தி உண்டு. அயோத்தி நகரிலிருந்து ராம லக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற விஸ்வாமித்ர மஹரிஷி நாலே நாட்களில் மிதிலைக்கு வந்ததாகப் படிக்கிறோம். தற்போதைய அயோத்திக்கும் ஜனக்பூருக்கும் இடையுள்ள தூரம் சுமார் 450 கிலோமீட்டர் (சுமார் 270 மைல்கள்) ராம லக்ஷ்மணர்கள் விசால நகரில் ஓரிரவு தங்கினராம். ஆக ஐந்து நாட்கள் என்றி வைத்துக் கொண்டாலும் அந்தச் சிறுவர்களும் கிழட்டு முனிவரும் ஒரு நாளைக்கு சுமார் 54 மைல்கள் நடந்திருக்க வேண்டும்.

 

ஒரு வேளை குதிரையில் சென்றிருந்தால் இன்னும் அதிகம் பயணித்து இருக்கலாம்!

பெண் கொடுக்க காசி மன்னன் மறுப்பு

 

காசி மன்னன் பிரம்மதத்தன் விதேஹ நாட்டு மன்னனுக்குப் பெண் கொடுக்க மறுத்து விட்டா னாம். அவனுக்கு நிறைய மனைவிகள் உண்டு. என் மகள் சக்களத்தி தொல்லைக்கு உள்ளாவள் என்பதே அவர் சொன்ன காரணம்.

 

 

மிதிலை நகரம் இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் எல்லோருக்கும் பயன்பட்டது. சமண மத்தின் கடைசி தீர்த்தங்கரர் ஆன மஹா வீரர் இந்த ஊரில் 30 ஆண்டுகள் வசித்தார். அவருடைய மாமா பெயர விதேஹ தத்தா. மஹாவீரரின் மாமா சேடகனும் மிதிலையை ஆண்டவர்களில் ஒருவர்.

நாலு புறமும் மார்க்கெட்!

 

மிதிலை பற்றிய தகவல் 2300 ஆண்டுக்கு முந்தைய ஜாதகக் கதைகளில் இருந்தே அதிகம் கிடைக்கின்றன. ராமாயண மஹாபாரத, புராண, சமண சமய நூல்களும் பல தகவல்களைப் பொழிகின்றன.

 

மிதிலை நகரின் நான்கு வாயில்களிலும் நான்கு மார்க்கெட்டுகள் இருந்தனவாம். மக்கள் பொருள்களைக் கொணர்ந்து விற்றனர .விதேஹ நாட்டில் 16000 கிராமங்கள், 16,000 நாட்டியப் பெண்கள், 16,000 கிடங்குகள் இருந்தனவாம் (16000= ஏராளமான)

 

புத்தரின் சீடன் ஒருவன் வண்டிகள் நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு ஸ்ரவஸ்தி நகரிலிருந்து மிதிலைக்கு வந்து பண்டமாற்று வியாபாரம் செய்தான் என்று பௌத்த நூல்கள் பகரும்.

 

ஜனகருக்கு அறிவுரை வழங்கிய  அறிஞர் பெருமக்கள், கோசல, குரு, பாஞ்சால தேசங்களிலிருந்து வந்தனராம் அவர்கள்:

அஸ்வல, ஜரத்கார்வ, அர்த்தபாக கார்கி வாசக்நவி (பெண்), உத்தாலக ஆருணி, விதக்தா, சாகல்ய, கஹோல கௌசிகதேய

 

இதுதவிர பிரஹ்மாயூ என்ற பெயருடைய பிராஹ்மண அறிஞனின் பெயரும் புஸ்தகங்களில் அடிபடுகிறது. அவரை புத்தர் தனது மதத்துக்கு இழுத்தாராம். புத்தரும் புத்தரின் சீடர்களும் மிதிலைப் பெரு நகரில் பேருரை ஆற்றினர்.

அங்கதி என்ற மிதிலை மன்னனுக்கு மூன்று அமைச்சர்கள் உதவினராம்; திருவிழா நாட்களில் அந்நகரம் தேவ லோகம் போலக் காட்சி தந்ததாம்.

சூர்யப்ரக்ஞாப்தி ஜியசத்து என்பவர் மிதிலையை ஆண்டதாகக் கூறுவர். இது கோசல நாட்டின் ப்ரசேனஜித் என்பர் சிலர்.

 

மிதிலை நகரிலிருந்து ஆட்சிபுரிந்த சாதின என்ற அரசன் ஆறு சத்திரங்களைக் கட்டினான். அவற்றில் தினமும் ஆறு லட்சம் துண்டுகள் பரிமாறப் பட்டனவாம்.

 

வேத இலக்கியத்தில் நமீசாப்ய என்பவன் ஆண்டதாக ஒரே ஒரு தகவல் இருக்கிறது.

 

ஜாதக் கதைகள்,சமண, பௌத்த நூல்களில் வரும் மன்னர்களின் பெயர்கள் ஆராய்ச்சிக்குரியது. இந்த மன்னர்களின் பெயர்களை நாம் கேட்டதே இல்லை.

 

நான் ஆங்கிலத்தில் 1500-க்கும் மேலான

அரசர்களின் பெயர்களை வெளியிட்டேன். இந்தியாவை ஆண்ட 3000 அரசர் என்று தலைப்பிட்டு எழுதினேன். ஜாதகக் கதைகள், கதாசரித் சாகரம், விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றிலுள்ள பெயர்களை எல்லாம் பொறுமையாகத்  தொகுத்தால் 3000 மன்னர்களை விட மிஞ்சிவிடும்!!

 

–சுபம்–

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி……… (Post No.5191)

Written  by London swaminathan

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –  11-59 am  (British Summer Time)

 

Post No. 5191

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

‘அழகிய மிதிலை நகரினிலே

யாருக்கு ஜானகி காத்திருந்தாள்?’–

என்ற கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரஸித்தம்

(திரைப்படம்- அன்னை)

 

“மிதிலை எரிந்திட வேதப் பொருளை

 

வினவும் சனகன் மதி—தன்

 

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

 

வல்ல நம் அன்னை மதி”–       (சுப்ரமண்ய பாரதி)

என்ற பாரதியின் பாடல் அதையும் விட பிரபலமானது.

Sita Devi Temple in Janakpur, Nepal

இப்பேற்பட்ட மிதிலா புரியைப் பற்றி- அன்னை ஜானகி பிறந்த ஊரைப் பற்றி- நிறைய சுவையான கதைகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தருவன்; சுவைத்து மகிழ்க.

 

 

மிதிலையின் தற்போதைய பெயர் ஜனக்பூர். இது நேபாள நாட்டில் உள்ளது. பீஹார் மற்றும் நேபாளத்தின் தென்பகுதி அந்தக் காலத்தில் விதேஹ தேசம் என்று அழைக்கப்பட்டது. அதை ஆண்ட ஜனகன் மாபெரும் தத்துவ ஞானி. அவனது சபையில் பெண் அறிஞர்களும் இருந்தனர். அப்போது அறிஞர் மஹாநாட்டில் தலை சிறந்த தத்துவ ஞானியான யாக்ஞவல்கியரை யாரும் கேள்வி கேட்க அஞ்சிய நேரத்தில் பெண்மணி  கார்க்கி வாசக்னவி எழுந்து நின்று ‘ஐயரே!’ என்று துவங்கினாள். ஜனகர் பற்றிய கதைகளையும் வாசக்னவி பற்றிய உபநிஷத் கதைகளையும் முன்னரே எழுதிவிட்டேன்.

 

விதேஹ என்ற பெயர் ஏன் வந்தது என்ற சுவையான கதையைக் காண்போம். விஷ்ணு புராணக் கதை:-

 

வசிஷ்ட மஹரிஷி, இந்திரனுக்கு ஒரு யாகம் செய்து கொடுத்துவிட்டு விதேஹ நாட்டை நோக்கி விரைந்து வந்தார். காற்றினும் கடுகி வந்த முனிவர் ஐயாவுக்கு ‘ஷாக்’ அடித்தது. ஏனெனில் எந்த நிமி என்ற மன்னனுக்காக இவர் ஓடோடி வந்தாரோ அந்த நிமி, கௌதம ரிஷியைக் கொண்டு யாகத்தை நடத்தி விட்டு ‘ஹாயாக’ உறங்கிக் கொண்டு இருந்தார்.

“ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?” என்று பாடவா பாடுவார்? கொடுத்தார் ஒரு சாபம்!

“பிடி சாபம்; நீ விதேஹன் ஆகக் கடவது”

வி+தேக= உடலற்றவன்

அது முதற்கொண்டு அந்த நாட்டுக்கு விதேக ( உடலற்ற) என்ற பெயர் வந்ததாம்.

ஐயா நிமி என்ன இளிச்சவாயனா? அவர் சொன்னார்;

பிடி சாபம்!

 

தூங்கும் மன்னனுக்கு சாபம் இடுவது சட்டப் பு த்தகத்தின்படி தவறு! ஆகையால் நீவீரும் அழிவீராக! என்றார்.

 

நிமி இறந்தவுடன் அவர் உடலைக் ‘’’கடை’’ந்தனர். உடனே அதிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது. அதன் பெயர் மிதி; அவர் ஆட்சி புரிந்தவுடன்  அந்தத் தலைநகருக்கு மிதிலா என்று பெயர் ஏற்பட்டது.

 

((இந்த உடலைக் கடைந்து பிள்ளை பெறும் சம்பவம் மநு சாஸ்திரத்தில் வேனன் கதையிலும் வருகிறது. இது ஒரு Technical Term) டெக்னிக்கல் டேர்ம்; அதாவது அறிஞர்கள் அகராதியில் செயற்கை முறைக் குழந்தை என்று பெயர். அதாவது CLONING க்ளோனிங். ; முனிவர்கள் இதைச் சொன்னாலும் புரியாது என்பதற்காக இப்படி’’கடை’’ந்து      பிள்ளை பெற்றதாக விள்ம்புவர்.

Narendra Modi in Janakpur

 

இன்னொரு கதையைக் காண்போம்

சுருசி என்று ஒரு மன்னர் வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய மனைவியின் பெயர் சுமேதா. அவளுக்கு குழந்தை வேண்டும் என்று ஆசை. புத்தரின் அஷ்ட சீலக் கொள்கைகளைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றாள். உடனே சக்கா

(புத்தமத அகராதியில் இந்திரனின் பெயர்- சக்ரா)

அவள் முன் முனிவர் வடிவத்தில் வந்தார். ‘உன்னைப் பற்றி நீயே 15 துதிகள் பாடுக’ என்று கட்டளையிட்டார். அந்த அம்மையாரும் அப்படியே செய்ய ஒரு குழந்தை பிறந்தது என்று ஜாதகக் கதைகள் புகலும்.

 

இன்னொரு சுவையான கதை:-

விதேஹ நட்டின் மன்னன் தட்சசீல பல்கலைக் கழகத்தில் பயின்றான். அந்த மன்னனுக்கு அறிவுரை புகல நான்கு அமைச்சர் பெருமக்கள் இருந்தனர். அந்த மிதிலை நகரில் பிங்குத்தர என்று ஒரு பிரம்மச்சாரி இருந்தான. அவனும் பல்கலைக் கழக மேம்படிப்புக்காக தட்சசீல நகருக்குச் சென்றான். அங்கு ஒரு குருகுலத்தில் சேர்ந்த கற்கக் கசடறக் கற்றான். குருவுக்கு நன்றி சொல்லி கிளம்பினான்.

அவர் சொன்னார்_;

அன்புமிக்க மாணவா! என் குடும்பத்தில் ஒரு வழக்கம் உண்டு. பருவம் அடைந்த ஒரு மங்கை இருந்தால், அந்த நங்கையை மூத்த மாணவனுக்கு மணம் முடிப்பது வழக்கம். எனக்கொரு மகள் உண்டு அவளை உனக்குக் கன்னிகா தானம் செய்ய விழைகிறேன் என்றார். அடடா! ஒரு கல்லை விட்டு எறிந்தேன்! இரண்டு மாங்காய்கள் விழுகின்றனவே. வலியக் கிடைக்கும் அழகியை யார் நழுவ விடுவார் என்று சொல்லி அவளைக் கல்யாணம் கட்டி கிரஹஸ்தனாக விடு போய்ச் சேர்ந்தான்.

 

 

இன்னும் வரும்………………………………..

 

-சுபம்-

 

ரோம் எரிந்தபோது | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ரோம்…

மிதிலை எரிந்திட வேதப் பொருளை . … மிதிலை … //tamilandvedas.com/2013/03/24/%e0%ae%9c%e0%ae%a9 …