கிலுகிலுப்பை ஆடிய குரங்கு; சங்கப் புலவர் கண்ட காட்சி (Post No.3811)

Written by London swaminathan

 

Date: 12 APRIL 2017

 

Time uploaded in London:- 8-19 am

 

Post No. 3811

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

குரங்கு பற்றி தமிழ் இலக்கியத்திலுள்ள அதிசயச் செய்திகளை முன்னொரு கட்டுரையில் தந்தேன். இதோ மேலும் சில செய்திகள்:–

 

ஒரு குரங்கு கிலுகிலுப்பை ஆடும் காட்சியே அரிய காட்சி; அதுவும் முத்துக்களைக் கொண்டு கிலுகிலுப்பை ஆடிய பணக்கார குரங்கைப் பார்த்த, சங்க காலப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், சும்மா இருப்பாரா?

 

மகா அரன்ன மந்தி மடவோர்

நகா அரன்ன நளிநீர் முத்தம்

வாள்வாய்ருந்தின் வயிற்றகத்தடக்கித்

தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி

னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலியாடு நம்

தத்து நீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்

 

சிறுபாணாற்றுப்படை 56-63

 

உப்பு வணிகர் வண்டியுடன் வந்த, அவருடைய பிள்ளைகளைப் போன்ற குரங்கு, வாள் போன்ற வாயையுடைய கிளிஞ்சலில் பற்கள் போன்ற (வெண்ணிறமுடைய) முத்துக்களை இட்டு மூடி, உப்பு வணிகர் பிள்ளைகளுடன் சேர்ந்து கிலுகிலுப்பை விளையாடும் கடற்கரைப் பட்டினமான கொற்கை.

 

உப்பு விற்கும் பெண்கள் இடையையும் ,தோள்புறத்தையும் மறைக்கும் கூந்தலையும் உடையவர் என்று பாட்டு வரிகள் சொல்கின்றன.

 

கொற்கை நகரில் முத்துக்கள் அவ்வளவு மலிவு! மேலும் அந்தக் காலத்தில் கிலுகிலுப்பை விளையாட்டு மிகவும் பிரபலம்; அதோடு, குரங்குகள் மக்கள் செய்யும் எதையும் திருப்பிச் செய்யும் அறிவுடையன என்ற செய்திகளும் இப்பாட்டு வரிகள் மூலம் கிடைக்கின்றன. குரங்கையும் தன் பிள்ளைகளுக்குச் சமமாக வளர்த்த உப்பு விற்கும் பெண்ணின் மனித நேயத்தையும் இப்பாட்டு புலப்படுத்தும். இவை எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தை நம்முன் காட்டும் சித்திரங்களாகும்.

 

 

நாம் எல்லாம் உயரமான கட்டிடத்தின் மீதேறி கீழே பார்த்தால் தலை சுற்றும்; அதுவும் அங்கு கைப்பிடியோ சுவரோ இல்லாவிட்டால் போகவே பயப்படுவோம். ஆனால் , வானளாவி நிற்கும் ஒரு மரத்தின் உச்சியில், ஒரு குரங்கு அதன் குட்டியுடன் தைரியமாக உட்கார்ந்த காட்சியைக் கண்டவுடன் அதை  நமக்கு சொற்கள் மூலம் வரைந்து காட்டுகிறார் அவ்வையார்-

 

உயர்கோட்டு மகவுடை மந்தி போல

அகன் உறத் தழீ இக் கேட்குநர்ப் பெறினே

குறுந்தொகை 29

இப்படிப் பல இயற்கைக் காட்சிகள் நிறைந்தது சங்க காலத் தமிழகம். நாம் அந்த இயற்கை வளத்தை இனிமேலாவது அழியாமல் காப்பாற்ற வேண்டும்.

xxx

 

My Old Article Monkeys

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள்

Post no 878 dated 1st March 2014

 

பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி! (Post No.3810)

written by S NAGARAJAN

 

Date:12 April 2017

 

Time uploaded in London:-  5-27 am

 

 

Post No.3810

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி சிக்மண்ட் ஃப்ராய்ட்!

.நாகராஜன்

 

     பிலிப்பைன்ஸில் 2013ஆம் ஆண்டு சான் டியோடோரோ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரியண்டல் மிண்டோரோ பூவா தலையா போட்டுப் பார்த்த பின்னர் ஜெயித்தவ்ர் என அறிவிக்கப்பட்டார், பிலிப்பைன்ஸின் விதிகளின் படி ஒரே ஓட்டு எண்ணிக்கையை இருவர் கொண்டிருந்தால் இருவரும் ஆளுக்கு ஐந்து முறை நாணயத்தைச் சுண்டிப் போட்டுப் பார்த்து அதிகம் தலை விழுந்தவரே ஜெயித்தவராக அறிவிக்கப்படுவார். இதிலும் முதல் முறை சரி சமமாக இருவரும் இருந்ததால் இரண்டாம் தடவை ஐந்து முறை பூவா தலையா போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் ஜெயித்தார் ஓரியண்டல் மிண்டோரோ.  – பிலிப்பைன்ஸ் செய்தி

 

 

     மனிதனின் வாழ்வில் முடிவு எடுக்கத் திணறும் படியான சிக்கலான தருணங்கள் ஏராளம் வருகின்றன. வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு இரண்டு நல்ல நிறுவனங்கள் வேலை தர முன்வருகின்றன. எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது?

 

      பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க நீண்ட நாட்கள் முயற்சி செய்த ஒரு பெற்றோருக்குத் திடீரென இரண்டு இடங்களில் மாப்பிள்ளை கிடைக்கிறார். இருவருமே நல்லவர்கள். யாரைத் தேர்ந்தெடுப்பது. இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களில்  முடிவை எப்படி எடுப்பது?

    நம் முன்னோர்களில் பலரும் கோவிலில் சென்று பூ கட்டிப் பார் என்பர். இறைவன் கொடுக்கும் முடிவை எடுத்து அதன் படி நடப்பர். சைவர்கள் தேவாரத்தில் கயிறு சார்த்திப் பார்ப்பர். அதாவது தேவார நூலில் ஏதோ ஒரு  பக்கத்தில் கயிறைச் சார்த்திப் பார்த்து அந்த பக்கத்தில் என்ன உத்தரவு வருகிறதோ அதன் படி நடப்பர். அவர்களுக்குத் தகுந்த பாடல் அதில் இருக்கும்.

 

 

   கிறிஸ்தவர்கள் இதே முறையில் பைபிளில்  ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்து அதன் படி முடிவெடுப்பர்.

அறிவியலுக்கு ஒத்த முறையாக இது இல்லை என்றாலும் நம் சக்திக்கு மீறிய விஷயங்கள் நமக்குத் தெரியாத போதிலும் பேரறிவுக்குத் தெரியும் என்று அந்தப் பேரறிவின் மீது பாரத்தைப் போட்டு முடிவை எடுப்பது வழக்கம்.

 

 

    இன்றைய நடைமுறை வாழ்விலும் இது சகஜமாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக கிரிக்கட் மேட்சில் முதலில் யார் ஆட்டத்தைத் துவங்கி விளையாடுவது என்பதில் பூவா தலையா போட்டுப் பார்த்து முடிவை எடுப்பது நடைமுறைப் பழக்கமாக இருக்கிறது.

 

 

    நண்பர் ஒருவரைப் பார்க்கப் போகிறீர்கள். அவர் ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் உள்ளே போன சமயம் அவருக்கு விழுந்தது தலை.

அவர், “அடடா! நீ வந்த சமயம் ஆறாம் முறையாகத் தலை விழுந்திருக்கிறது, என்ன அதிசயம்! சரி. இப்போது உனக்கு என்ன வேண்டும், தலையா, பூவா சொல்” என்கிறார்.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நீங்கள் அல்ல, யாராக இருந்தாலும் உடனே பூ என்று தான் பதில் சொல்வார்கள்.

ஏனெனில் ஏழாம் முறையாக எங்காவது தலை விழுமா என்ற ஒரு எண்ணம் தான் காரணம்!

 

இது பொதுவாக அனைவரும் செய்யும் மதிப்பீடு. இதற்கு தி கேம்ப்ளர்ஸ் ஃபாலஸி சூதாடுவோர் செய்யும் பிழை – (The Gamblers Fallacy) என்று பெயர். இப்படி நம்புவோர் பொதுவாக உலகில் இல்லாத ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்கள்.

 

 

    ஆக ஒரு முடிவை எட்ட முடியாமல் இருக்கும் போது பூவா தலையா போட்டுப் பார்ப்பது உலகெங்குமுள்ள நடைமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் வாலிபால். கால்பந்தில் பூவா தலையா போடுவது நிச்சயமாக இடம் பெறுகிறது.

 

 

பிரிட்டனில் ஒரே எண்ணிக்கையில் இருவர் ஓட்டு பெற்று விட்டார்கள் என்றால் பூவா தலையா போட்டுப் பார்த்து வென்றவர் யார் என்று முடிவு செய்யப்படுகிறது. அமெரிக்க செனட்டர் தேர்தலிலும் பூவா தலையா போட்டுப் பார்ப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழக்கம் தான்!

இந்த முறையை அறிவியல் ஆதரிக்கிறதா?

 

 

Toss the Coin என்ற இந்த் நடைமுறையை விஞ்ஞானி ஒருவரும் ஆதரிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை?பிரபல விஞ்ஞானி சிக்பண்ட் ப்ராய்ட் முடிவை எட்ட முடியாத நிலையில் பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்கிறார்.

அவரது கொள்கை டாஸ் தி காயின்’ கொள்கை என்று பிரபலமானது.

 

 

இந்தக் கொள்கையில் அவர் என்ன சொல்கிறார்?

 

   “பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்று நான் சொல்வது  முடிவு எடுப்பதற்காக அல்ல, இந்த முடிவை எடுப்பவர்கள் தங்களை உணர்ச்சிபூர்வமாக தெளிவு படுத்திக் கொள்வதற்காகத்தான் இப்படி போட்டுப் பார்க்கச் சொல்கிறேன்.நீங்கள் நாணயம் என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். பிறகு அந்த முடிவிற்கான உங்கள் எதிர்வினை என்ன என்று பாருங்கள். இந்த முடிவால் எனக்கு சந்தோஷம் தானா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயலில் இறங்குங்கள்” என்கிறார் அவர்.

 

 

     உலகெங்கும் பூவா தலையா போட்டுப் பார்ப்பது பகுத்தறிவுக்கொத்த ஒரு நடைமுறைப் பழக்கமாக ஆகி விட்டது.

 

மூட ந்ம்பிக்கை என்று சொல்பவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும், கோவிலில் பூ கட்டிப் பார்ப்பதும் நிற்கப் போவதில்லை, கிரிக்கட்டில் முதலில் யார் ஆடுவது என்பதை நிர்ணயிக்க டாஸ் தி காயினும் நிற்கப் போவதில்லை.

 

     உளவியலாளர்களும் நடுவர்களும் அறிஞர்களும் ஆதரிக்கும் ஒரு விஷயம் பூவா தலையா போட்டுப் பார்ப்பது தான்!

 

     இதன் படி நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளை விரும்புப்வர்கள் ஒரு பெரும் நூலாகவே தொகுத்துப் பார்க்கலாம்!

 

  

அறிவியல் அறிஞர் வாழ்வில்!

 

பிரிட்டனைச் சேர்ந்த கணித மேதையும் எலக்ட்ரிகல் பொறியாளருமான ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside) மின்சார சர்க்யூட்டுகளை பகுப்பாய்வு செய்ய சிக்கலான பல கணித உத்திகளைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருக்கு பல விசித்திரமான பழக்கங்கள் இருந்தது. (ஏற்கனவே 25-11-16 பாக்யா இதழில் அறிவியல் அறிஞர் பகுதியில் இவரைப் பற்றிப் பார்த்துள்ளோம்)

 

     இவர் தனது வீட்டை பிரம்மாண்டமான க்ரானைட் கற்களைக் கொண்டு அமைத்தார். தனது நகங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் நெய்ல் பாலிஷைத் தடவிக் கொள்வார்.. வெறும் பாலை மட்டுமே பல நாட்களில் அருந்துவார். அதுவே அவரது உணவாகும் எப்பொழுதும் எழுதிக் கொண்டே இருக்கும் ஒரு வித நிலையை மூளை கொண்டிருந்தால் அதற்கு ஹைபர்க்ராபியா (Hypergraphia) என்று பெயர். இத்தகைய ஹைபர்க்ராபியாவை அவர் கொண்டிருந்ததால் எப்பொழுதும் அவர் எழுதிக் கொண்டே இருப்பார். இத்தனை விசித்திரப் பழக்கங்களுடன் அவர் ஆராய்ச்சி செய்து வாழ்ந்து வந்தார்!

 

****

 

நூற்று இதழ் அலர் – சத பத்ர யோனிம்: தாமரை உவமைகள் (Post No.3809)

Written by London swaminathan

 

Date: 11 APRIL 2017

 

Time uploaded in London:- 21-43

 

Post No. 3809

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசனும் சங்க காலப் புலவர் முதுகண்ணன் சாத்தனாரும் தாமரை பற்றி ஒரே சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இரண்டு உவமைகளிலும் சொல் ஒற்றுமை தவிர வேறு சுவையான செய்தியும் உள்ளது.

 

தமிழில் கோவில் என்றால் வைணவர்களுக்கு திருவரங்கம்; சைவர்களுக்கு சிதம்பரம். இதே போல மலர் என்று சொன்னால் தமிழில் தாமரை, வடமொழியில் புஷ்பம் என்று சொன்னால் தாமரை.

 

ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் புஷ்ப, புஷ்கரம், புண்டரீகம் என்ற மூன்று சொற்கள் தமரைக்குப் பயன்படுத்தப் படுகிறது.

புஷ்கரம் இருக்கும் இடம் புஷ்கரணி (கோவில் குளம்)

தாமரைக்கு சம்ஸ்கிருதத்தில் அதிகமான பெயர்கள்!  இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் பூ — அதிலும் குறிப்பாக — தாமரை தொடர்பானதாகவே இருக்கும் (கமலம், பங்கஜம்,நீரஜம், அரவிந்த, தாமரை…. என்று).

 

காளிதாசன் மட்டும் 90 இடங்களில் தாமரை உவமையைப் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் முகம், கை, கால், விரல், உதடு என்று பல இடங்கள். மலராத மொட்டு- சோகமான முகத்துக்கும் மலர்ந்த பூ- சிரித்த முகத்துக்கும் உவமை. ஆனால் சூரியனைக் கண்ட தாமரை போல என்ற உவமை சங்க இலக்கியத்தில் இல்லை- காளிதாசனில் உண்டு.

தாமரைக்குள்ள பல பெயர்களில் சத பத்ரம் ( நூற்றிதழ்), சஹஸ்ரபத்ர (ஆயிரம் இதழ்) என்ற பெயர்களும் அடக்கம்.

 

பிரம்ம தேவன் தாமரையில் அமர்ந்திருப்பதனால் அவருக்கு சதபத்ர யோனி என்ற பெயர் உண்டு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் தொப்புளில் இருந்து தாமரைமேல் பிறந்தவர்.

 

இதை காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் (KS 7-46) பயன்படுத்துகிறான்

 

“சிவன் ஓரக்கண்ணால் பார்த்தபோது பிரம்மாவைப் பார்த்து தலை அசைத்தாராம்; விஷ்ணுவைப் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாராம்; இந்திரனைப் பார்த்து புன்னகை உதிர்த்தாராம். மற்றவர்களை  ஒரு ‘லுக்’ (look) விட்டாராம். அதாவது ஒரு பார்வை மட்டுமே. அந்தக் காலத்தில் அரசர்கள், மற்றவர்களை அந்தஸ்து, பதவிக்கு ஏற்ற முறையில் வரவேற்றது இப்படித்தான்.

 

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்டுதோறும் ஆயிரம் பிரமுகர்களுக்கு மஹாராணி விருந்து கொடுப்பார். எனக்கும் என் மனைவிக்கும் அழைப்பு வந்திருந்தது. நாங்கள் போயிருந்தோம். மஹாராணி எலிசபெத் அம்மையார் எங்களுக்கு மிக அருகில் வந்தார். ஆனால் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. நாங்கள் அவரை முன்பின் அறியாதவர்கள். எங்களுக்கு மிக அருகில் சில பிரமுகர்கள், எம்.பி.க்கள் பிரபுக்கள் (Lords) ஆகியோரும் நின்றிருந்தனர். அவர்களில் சிலரைப் பார்த்தார்; சிலரைப் புன்னகைத்தார்; ஒரு சிலரிடம் ஓரிரு வார்த்தைகள் நவின்றார். இதைத்தான் காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் சிவ பெருமானும் செய்ததாகப் பாடுகிறான்.

 

அந்தப் பாடலில் அவன் பிரம்மாவுக்குப் பயன்படுத்திய சொல் சதபத்ரயோனிம். இதை முதுகண்ணன் சாத்தனார் (புறநானூறு 27) எப்படிப் பயன்படுத்துகிறார் என்று காண்போம்:

 

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண்கேழ்,

நூற்று இதழ் அலரின் நிரைகண்டன்ன

வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,

வீற்றிருந்தோரை எண்ணும் காலை

உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரை இலை போல மாய்ந்தசினோர் பலரே;

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்

………………………

(புறம்.27, சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது)

பொருள்:-

“சேற்றில் வளரும் தாமரையில் தோன்றிய செந்தாமரை மலரின் நூற்றுக் கணக்கான இதழ்களும், தம்முள் வேற்றுமையில்லாமல் உயர்வுடன் தோன்றும்.  அதுபோல வேற்றுமை இல்லாத உயர்ந்த குடியில் பிறந்து வாழ்ந்தவராயினும், அவர்களுள் உரையும் பாட்டுமாகப் புகழப்பட்டோர் சிலரே ஆவார். தாமரையின் இலை போல புகழில்லாமல் இறந்தவர்களே அதிகம். புலவர் பாடும் புகழுடையோர்– வானத்தில் விமானியே இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் பறக்கும் அளவுக்கு உயர்வர். அவர் தாம் செய்த செயல்களை எல்லாம் இப்பூவுலகில் செம்மையாக நிறைவேற்றியவர் ஆவர்”.

 

இந்தப் பாட்டில் நூற்றிதல் தாமரை = சத பத்ர என்ற செய்தியுடன் விமானி இல்லாத விமானம், அதில் புனித ஆத்மாக்கள் பறப்பது, புகழுடையோர் சிலர்;  புகழில்லாமல் வாழ்பவரே மிகப் பலர்– என்ற செய்தியும் கிடைக்கிறது.

 

காளிதாசன் தாமரை தொடர்பாக 90 உவமைகளைப் பயன்படுதினான். சங்கத் தமிழில் சுமார் 20 உவமைகள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

 

-சுபம்–

Lotus Flower in the Vedas, Kalidasa and Sangam Tamil Literature (Post No.3808)

Written by London swaminathan

 

Date: 11 APRIL 2017

 

Time uploaded in London:- 20-22

 

Post No. 3808

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

In Indian literature ‘flower’ means Lotus. For other flowers, they name it. Most of the Hindu girls are named after flowers. Lotus flower names are more prominent than other flower names. In Sanskrit lotus has more words than any other flower. in Tamil ‘MALAR’ means ‘flower ‘and the ‘Lotus’. Lotus flower is used as offering for all the gods and goddesses.

 

In the Vedas

‘Puspa’ in Sanskrit denotes a flower generally. It occurs in Atharva veda (8-7-12; 10-8-34) and Vajasaneyi Samhita and Taittiriya Samhita. Since Tamils use Malar for flower and lotus, Puspa may be lotus in the Vedas as well.

 

Puskara is blue lotus flower found in the Rig Veda (6-16-13; 7-33-11). Some scholars think it may be the bowl of the ladle. We have more references in Atharva Veda and later Brahmanas. Puskarini is a tank with lotus flowers in the beginning, then to all holy water tanks.

Pundariika

Pundarika denotes the blossom of the lotus in the Rig Veda (10-142-8). Later Brahmana and Upanishad have many references. The Pancavimsa Brahmana states that the lotus flower is born of the light of the Naksatras (18-9-6) and the Atharva Veda compares the human heart to the lotus (10-8-43) ( and in Chandogya Upanishad (8-1-1) as well).

 

Mysterious Puskara-saada

Puskara saada means ‘sitting on the lotus’. it is one of the animals in the list of victims at the Asvamedha/ horse sacrifice. It occurs in Taittiriya, Maitrayani and Vajasaneyi samhitas. It may be a bird or a bee or something else.

A woman’s face is frequently compared to lotus in Indian literature. Kamban, who wrote Ramayana in Tamil, also compared the face of Rama to a full blown lotus. He says that Rama’s face remained like a blossomed lotus in painting even when Dasaratha and Kaikeyi asked him to go to forest for 14 years so that Kaikeyi’s son Bharata can rule the country.

In Kalidasa

Kalidasa and Tamil poets use similar words for this flower in their works.

Sangam Tamil poet Mutukannan Sattanar described the lotus with the epithet Hundred Petalled flower (Puram.27). It was used by Kalidas earlier in the Kumarasambhava (7-46). Kalidasa used the word  Hundred petalled for Brahma because he is seated on a lotus.

Kalidasa says, Lord Shiva honoured Brahma (100 petalled seater) with a nod of the head, Vishnu with spoken words, Indra with a smile and other gods with a mere look according to their seniority (KS 7-46). This shows how Hindu kings honoured their guests according to their seniority!

Tamil poet Mutukannan says, “All the 100 petals of a lotus that grows in a muddy water tank, proudly stands without any difference. Likewise, there are hundreds of people who are high born. But most of them die unsung like the leaves of lotus plants. Only very few attain the fame to be sung and fly high.

 

The poet gives a message through the image of lotus flower. Not all the people attain fame like the lotus petals. Most of them die without fame like the lotus leaves.

 

Kalidasa and other Sanskrit poets use the lotus image for eyes. In the Rtu Samhara, the beautiful tremulous eyes of a frightened deer and the lovely, impassioned and dark eyes of women are imagined to be lotuses, blue as well as white (RS 2-9; 3-14)

 

In the Megaduta Kavya, Yakshini is compared to a lotus plant on a cloudy day, with its lotus neither opened nor closed up (Mega.43)

 

In the Kumarasambhava, Parvati’s tremulous eyes are compared with blue lotus. In Raghu vamsa, Kumarasambhava, Vikrama Urvasiya we come across many references to lotus like eyes. In those works women’s face is also compared with lotus.

 

The breath of Parvati’s mouth is imagined to possess the fragrance of a full blown lotus (KS 7-19)

 

Siva tasted the honey of Parvati’s lip as a bee does on drinking that of a lotus flower (KS 8-23)

When the women of Mithila looked at Sita from their windows, they are described as lotuses.

 

In all his seven works, there are number of lotus images comparing to women’s faces, limbs, eyes, skin colour etc.

 

In Sangam Tamil literature, there is no description of the relationship between lotus and sun. But in Kalidasa we have such references. The gloomy appearance of a Yaksha is imagined to be a lotus after sunset (Uttaramegham 20).

 

The water of Ganga mixed with the waves of Yamuna looks at one place like a garland of white lotuses intertwined with the blue ones (RV 13-54)

 

There are over 90 references to lotus in his seven works.

In Tami Literature

Nallur Nattattanar, author of Cirpanatruppatai, paints a picture of bees humming melodiously in the lotus blossoms in the tanks of the Choza country (Cirupan70-77). He uses the epithet Divine lotus, because it is all gods’ favourite flower.

 

Kapilar describes (Nar.1)the honey gathered from the lotus flowers in one of his poems. ‘The acquaintance with noble men of high qualities is as sweet as the honey gathered by the bees from the lotus flowers and stored in the honey comb of the lofty branch of a sandal wood tree in a high mountain.

 

Katiyalur Uruttiran Kannanar (his name is Mr Rudraksha), author of two long Sangam poems Pattinapalai and Perumpanatrupatai had the astonishing power of observation of nature. He gave us accurate comparisons to almost every sight and sound he described in his poems. In his work Perumpanatruppatai, he compares the lotus petals to the long ears of the rabbit (lines 114-115). In another line he described the ‘divine lotus flowers of flame like hue’ line 289/90.

The attractive colour of the pollen of the lotus flower is described in Kuruntokai 300

 

Sangam poet Allur Nan Mullaiyar sings about a buffaloe punging into water in a tank to eat the lotus blossoms there (Akam.46)

 

Paranar is famous for his similes. He is the kaidasa of Tamil Literature. He used nine similes in a single stanza in Akam178. He says the lotus has flame like flower, long stems and broad leaves (Nar.310 andAkam.6)

Mankuti Marutanar also used the same epithet for lotus:lotus of thorny stems and flame like flowers- Maturaikkanchi line 249.

 

Mamulanar describes a buffalo eating lotus flowers in Akam.91

 

in Akam.176, we read a full description of a lotus plant by Marutam Patiya Ilamkatunko:There are blossomed lotuses like smiling faces, with buds like sharp pointed spears, leaves like the ears of elephants, rounded tubular stems like bamboo sticks and mature roots that enter deep into the ground causing clefts there in.

Marutan Ilanakanar compared the lotus flower to the face of a beautiful lady in Kalitokai (line 73)

an otter enters a lotus tank, scatters the Vallai creepers there, seizes the Valai fish amidst them, feeds upon it and returns to its rattan bush (Akam.6) according to Paranar.

Source books

The treatment of nature in Sangam Literature by M Varadarajan, 1969

The Imagery of Kalidasa by Dr Vinod Aggarwal, 1985

Vedic Index by Keith and Mc Donald

 

–Subham–

விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்! (Post No.3807)

written by S NAGARAJAN

 

Date:11 April 2017

 

Time uploaded in London:-  5-44 am

 

 

Post No.3807

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

விஞ்ஞானம் மெய்ஞானம்

ஞான ஆலயம் மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை

 

விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்!

 

by ச.நாகராஜன்

 

நாஸா நிரூபிக்கும் சேது

 

அறிவியல்  முன்னேற முன்னேற பல்வேறு ஆய்வின் முடிவுகள் ஹிந்து மதம் கூறும் தத்துவங்களையும் கொள்கைகளையும் உண்மை என நிரூபித்துக் கொண்டே வருகின்றன.

வால்மீகி தான் இயற்றிய ராமாயணத்தில் உண்மையைத் தவிர வேறொன்றும் உரைக்கவில்லை.

 

நாஸா எடுத்த சாடலைட் படம் சேது அணை இருப்பதை உறுதி செய்ததை நாம் அறிவோம் (ஞான ஆலயம் டிசம்பர் 2007 இதழில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை வாசகர்கள் நினைவு கூரலாம்)

 

ஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களான புரபஸர் க்ளாஸ் டி ருல் (Prof Klaus D Ruhl)  மற்றும் அவரது இந்திய சகாவான புரபஸர் விஷாத் திரிபாதி ஆகியோர் ராமர் கட்டிய சேதுவைப் பற்றிய உண்மையை நிரூபிக்கத் தயார் என்று அகில உலக இராமாயண் மாநாட்டில் 2007இல் அறிவித்தனர்.

இராமர் பிறாந்த தேதி

 

இராமாயணம் நடந்த காலத்தில் ராமர் பிறந்த நேரத்தில் இருந்த பல்வேறு கிரக் நிலைகளை வால்மீகி ரிஷி கூறியிருப்பதை வைத்து ஆராய்ந்து அப்படிப்பட்ட கிரக நிலைகள் கிறிஸ்து பிறப்பதற்கு 5114 ஆண்டுகளுக்கு முன்னர் ஜ்னவரி மாதம் 10ஆம் தேதி அமைந்திருந்ததாக இப்போது பிரபல ஆராய்ச்சியாளர் புஷ்கர் பட்நாகர் கூறுகிறார்.. தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸயிண்டிபிக் ரிஸர்ச் ஆன் வேதா என்ற ஆய்வு நிறுவனம் இந்த கணிதத்தைப் போடுவதற்கான  ஒரு விசேஷ மென்பொருளை வடிவமைத்துள்ளது. அதன் உதவி கொண்டு இந்த முடிவை அவர்  கண்டுள்ளார். இதே கிரக நிலைகள் சுழற்சி அடிப்படையில் இதற்கு முன்னர் வரும் போது காலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தேதியைக் காண்பிக்கும் என்பது இன்னும் சில அறிஞர்களின் முடிவு.

 

196 ராமாயண ஸ்தலங்கள்!

 

2002 ஆம் ஆண்டில் டாக்டர் ராம் அவதார் சர்மா என்ற ஆய்வாளர் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட 196 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கெல்லாம் இன்றும் கூட ராமாயணம் நடந்ததற்கான சின்னங்கள் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.

 

குகனின் வமிசாவளியினர்

 

டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சௌபே மற்றும் புரபஸர் வி.ஆர்.ராவ் ஆகியோர் இன்னொரு உண்மையைத் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.மிராஜ்பூர், வாரணாசி,பண்டா மற்றும் அலஹாபாத் ஆகிய இடங்களில் இன்றும் இருந்து வரும் கொல் என்னும் பழங்குடியினர் குகனுடைய வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுடைய மரபணுக்கள் பத்தாயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு குடியினரின் மரபணுக்களாகும் என்ற அவர் கூற்று ஆரியர் இந்தியாவின் மீது படையெடுத்து வநதனர் என்ற ஆரிய-திராவிட வாதத்தைத் தவிடு பொடியாக்குகிறது.

 

பிரித்தாளும் சூழ்ச்சியில் கை தேர்ந்த ஆங்கிலேய அரசுக்கு உறுதுணையாக இருந்த பல அறிஞர்களின் கட்டுக்கதையான ஆரிய திராவிட வாதம் தற்போதைய பல்வேறு அறிஞர்களின் ஆய்வால் முற்றிலும் கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.

 

நான்கு தந்தங்கள் கொண்ட யானை உண்மையே

 

சுந்தர காண்டத்தில் இராவணனின் அரண்மனை நான்கு தந்தங்கள்  கொண்ட யானைகளால் காவல் காக்கப்படுவதை வால்மீகி முனிவர் நான்காவது ஸர்க்கம் 29ஆம் சுலோகத்தில் “வாரணைச்ச சதுர்தந்தை:” என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்.

அதே காண்டத்தில் 27ஆம் ஸர்க்கத்தில் வரும் சுலோகம் இது:

 

ராகவஸ்ச மயா த்ருஷ்டச் சதுர்தந்தம் மஹாகஜம் |

ஆரூட: சைல சங்காஷம் சசார சஹ லக்ஷ்மண: ||

 

விபீஷணனின் பெண்ணான திரிஜடை, இராவணன் அழிக்கப்பட்டு சீதையுடன் இராமன் சேருவதாகத் தான் கண்ட கனவை சீதையிடம் கூறுகிறாள். அப்போது அவள் கூறும் இந்த சுலோகத்தின் பொருள்: “ராகவர் லக்ஷ்மணரோடு கூடியவராய் நான்கு தந்தங்களை உடைய குன்று போல உள்ள யானையின் மீது ஏறினவராக என்னால் காணப்பட்டார்”

 

நான்கு தந்தங்கள் கொண்ட யானையே இல்லை; அது கற்பனை என பல “பகுத்தறிவுவாதிகள்” கிண்டலும் கேலியுமாக கூறி வந்ததுண்டு.

 

ஆனால் என்கார்டா என்சைக்ளோபீடியா (Encarta Encyclopedia)  என்னும் கலைக்களஞ்சியம் இப்படிப்பட்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதையும் அவற்றின் பெயர்

 

மஸடோடோண்டாய்டியா (MASTODONTOIDEA) என்றும் குறிப்பிடுகிறது. அந்த இனம் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து பட்டது என்றும் பின்னர் இரண்டு தந்தங்கள் உடைய யானைகள் தோன்றின என்றும் அந்தக் கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது.

 

ஆய்வுகள் பல நவீன உபகரணங்களுடன் நடத்தப்பட நடத்தப்பட புதிய உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் வால்மீகி கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே என்பதை நிரூபிக்கின்றன.

சத்தியத்தின் அடிப்படையில் சத்திய நாயகனான ராமனின் சரிதத்தைக் கூறும் வால்மீகி ராமாயணத்தில்,

“ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்” – அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் கூறப்படுகையில் அது மகா பாதகத்தையும் போக்கி விடும் என்று முன்னோர் கூறியது பொருள் படைத்ததல்லவா!

******

 

 

தண்ணீரின் மருத்துவ குணம்- ரிக் வேதப் பாடல் (Post No.3806)

Written by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 22-12

 

Post No. 3806

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

தண்ணீரைப் போற்றும் பழமொழிகளை முன்னொரு கட்டுரையில் தந்தேன். தண்ணீர் பற்றிய உலகின் பழமையான பாடல் ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுப் பழமையானது என்று ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் கி.மு.1200 க்கு மேல்– அதற்கும் மேல் 5000 ஆண்டு வரை — பழமையுடையதாக இருக்கலாம் என்று மாக்ஸ் முல்லரும் கூறினர். அத்தகைய வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒன்பதாவது பாடல் ஆபஸ் (தண்ணீர்) பற்றியது. அதைப் பாடியவர் சிந்துத்வீப மகரிஷி. அவர் அம்பரீசன் என்ற மன்னரின் மகன். இவருடைய பெயரிலிருந்து இவர் சிந்து சமவெளி நாகரீகப் பகுதியில் வசித்தவர் என்று தெரிகிறது. இதை பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லுவர்.

நீருக்கு மருத்துவ குணம் உண்டு என்பதை வேத கால மக்கள் அறிந்திருந்தனர் என்பது இந்த மந்திரத்தின் (கவிதையின்) பொருளைப் பார்த்தாலேயே புரியும்:-

 

 

 

ஆபோஹிஷ்டா மயோ புவஹ

தாந ஊர்ஜே ததாதன

மஹேரணாய சக்ஷஸே

 

யோவசிவதமோ ரஸஹ

தஸ்யபாஜயதேஹ நஹ

உசதீரிவ மதரஹ

தஸ்மா அரம் கமாம வஹ

 

சந்நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவது நஹ

 

ஈசானாவார்யாணாம் க்ஷயந்தீஸ்சர்ஷனீனாம்

ஆபோ யாசாமி பேஷஜம்

 

அப்ஸு மே சோமோ அப்ரவீதந்தர்விஸ்வானி பேஷஜா

 

அக்னிம் ச விஸ்வசம்புவம்

 

பொருள்:

 

நீருக்குத் தேவதைகளாக உள்ள நீங்கள் உயர்ந்த ஆரோக்கியத்துக்கு காரணமாக இருக்கிறீர்கள்;

அப்படிப்பட்ட நீங்கள் எங்களுக்கு மகிமை பொருந்தியதும் ரமணீயதுமான ஞானக் கண்ணின் பொருட்டு சக்தியை அளியுங்கள்.

உங்களிடமுள்ள பேரின்ப ரசத்துக்கு, அன்பு சுரக்கும் தாய்மார்களைப் போல, எங்களை உரியராக்குங்கள்;

 

எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகிறீர்களோ, அந்த ரசத்துக்காக உங்களை ஆர்வத்தோடு நாடுகிறோம். வம்சம் விருத்தி அடையட்டும்

 

ஜல தேவதைகளாகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனித மாக்கி அருள்வீராக.

 

எங்கள் பாதுகாப்புக்கும் குடிப்பதற்கும் அருள் புரி; எங்களுக்குப் பேரானந்தத்தைக் கொடு.

 

மதிப்புமிக்க பொருட்களையும் மனிதர்களையும் ஆளும் தண்ணீரே

எங்களைக் குணப்படுத்தும் மருந்தாக இரு.

 

நீரில்தான் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது என்று சோமரசம் சொல்கிறது; அக்னி என்னும் வெப்ப சக்தியும் இருக்கிறது”

xxx

 

இது ஒரு அற்புதமான மந்திரம். தீட்டு முதலியன ஏற்படும்போது அது விலகி தூய்மை அடையவும் இம் மந்திரத்தைச் சொல்லி தண்ணீர் தெளிப்பர். அந்தணர்கள் தினமும் மும்முறை இம்மந்திரத்தைச் சொல்லி தலையில் தண்ணீரை ப்ரோக்ஷித்துக் கொள்வர் (விரல்களால் தெளித்துக் கொள்வர்)

 

தண்ணீருடன் மந்திர சக்தியைச் சேர்த்து அதை ஆயுதங்களாகவும், குணப்படுத்தும் மூலிகைகளாகவும், சபிக்கும் சாபங்களாகவும், வரமளிக்கும் காமதேனுவாகவும்பயன்படுத்தும் உத்தியை—வலிமையை– முன்காலத்தில் அறிந்து வைத்திருந்தனர். இப்பொழுது அது வெறும் சடங்குகளுக்கும் தானம் வழங்கவும் (கன்னிகா தான) மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

 

–subham–

Water in the Oldest Scripture in the World- Rig Veda (Post No.3805)

Written by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 18.57

 

Post No. 3805

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Hindus praised water as God. All the rivers in India are worshipped as goddesses (except Brahmaputra river which has a masculine name). From the Rig Veda to the latest Bharati, every one praised water or rain.

 

Following is the oldest hymn on water:

To Apas (water)

Rig Veda ( 10-9)

Metre: various including Gayatri metre

Rishi Sindhudvipa (Indus Valley King)

Son of Ambarisha, Indus Valley Civilization Emperor

(also called Trisiras or Tvastri)

Waters! you who are health-giving

give us energy, so that

we may look on great delight (1)

Give us a share of your most

beneficent sapidity/ strong pleasant flavour

like mothers longing with love (2)

 

So, gladly do we go with you

to the home for which you make us live,

Waters! Give us progeny (3)

 

Gracious be divine Waters for

our protection, be they for our drink,

and stream on us bliss and happiness (4)

 

Sovereigns over precious things,

and Rulers over men, Waters!

we seek healing balm of you. (5)

 

Within Waters – so Soma has

told me – are all healing balms,

and Agni, benign to all (6)

Waters, come filled with healing balm

for the shielding of my body,

so, may I long see the sun (7)

Wash away, Waters, whatever

sin is in me, what wrong I have done,

what imprecation I have uttered,

and what untruth I have spoken (8)

Today I have sought the Waters,

we have mingled with their essence;

approach me, Agni, with thy power,

and fill me, as such, with brilliance (9)

 

(Date :– Herman Jacobi dates it to 4500 BCE; Max Muller dates it to a date before 1200 BCE up to 5000 BCE)

 

This is an amazing hymn on Waters. The Vedic people knew the healing properties of the water; the words healing-giving, beneficent sapidity and healing balm show that the Vedic people recognised the hygienic and curative powers of water.

 

Soma ,here, means personification of the juice

Agni, here, referring particularly to the heat in water.

 

Hindus had the science of changing water into  a powerful weapon by some magic spells like the one above; they were able to curse or give boons with water. They used Fire(agni) as a witness to all treaties or agreements and they used Water (Apas) for all the curses, boons and giving donations. We couldn’t see such a thing anywhere in the world. In Sangam Tamil literature, we have lot of references to using water for giving donations; but we have very few references to curses in Post Sangam literature. By that time Hindus forgot the magical powers of waters.

Water is Law: Satapata Brahmana (850 BCE):

 

The Satapata Brahmana, which the foreigners dated 850 BCE, says

“The waters, they are law; that is why when the earth receives waters regularly, everything is in accord with the law. But when the rain fails, the strong victimise the weak, for the waters, they are law.”

 

Tamil Veda Tirukkural also emphasized this:

“Even as life on earth cannot sustain without water, virtue too depends ultimately on rain”- Kural 20

 

The life on earth cannot sustain without water – is said by Kapilar earlier in Natrinai (verse 1) which is at least 2000 old.

 

Hindus used water as similes and in the proverbs.

If something is not reliable and not permanent they say, “It is written on water”. If something is written and preserved in tact they it is written on written on stone.”

The life’s impermanence is compared to the bubble in the water.

 

Manu Smrti, the oldest Law book in the world, mention God created water first and the life from it. The word for god is Narayana, one who has water as his abode. (Neer is Indo European and and Found in Nereids in Greek. Neer is also found in tail as Tamil and Sanskrit evolved from the same source according to my research.)

Manu says about water:

A man who gives (gifts) water obtains satisfaction/contentment; a giver of food boundless happiness; a bestower of sesame seeds progeny; and a giver of a lamp, excellent eye sight (Manu 4-229)

When it comes to division of property, they say that a piece of clothing, a carriage, jewellery, cooked food, water women, the means of security and a pasture should not be divided (Manu 9-219)

One should not urinate in water, on roads, on ant hill, on the ruins of a temple, a cowpen or a mound of the dead;one should never emit excrement in water (4-45/46/48)

 

One should not throw urine, excrement, poison, saliva or impurities in water (4-56)

a man should not shed his semen in water (11-174)

A Brahmin should throw his worn out thread water pot, staff, small animal skin bit, belt into water reciting Vedas (2-64)

A Priest is purified Bywater that reaches up to his heart, a king by water up to his neck, a Vaisya by the water swallowed and a Shudra by water touched on the tip of his lips (2-62)

 

Manu also speaks of the punishment for stealing or diverting irrigation water in chapters (3 and 9)

 

–Subham–

 

 

தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள் (Post No.3804)

Compiled by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 9-06 am

 

Post No. 3804

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

நீர் இன்று அமையாது உலகம் என்பது சங்க இலக்கிய நூலான நற்றிணையில் கபிலர் (பாடல் 1) உதிர்த்த பொன்மொழி. அவருக்குப் பின்னர் வந்த வள்ளுவனும் அதை வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தினான்.

 

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு (Kural 20)

 

பொருள்:-

இந்தப் பூமியில் வாழும் எல்லா உ யிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது அது போலவே தர்மமும் மழை இல்லாமல் வாழ முடியாது.

 

 

மழை இல்லாவிடில் வறட்சி மிகும்; வறட்சி ஏற்பட்டால் பசிப்பிணி பெருகும்; பசி வந்தால் பத்தும் பறந்து போம் – என்பது பழமொழி. அதாவது மனிதனுடைய அடிப்படை நற்குணங்கள் அழிந்து, தர்மம் அழியும்.

 

இதை நன்கு அறிந்த இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் சதபத பிராமணத்தில் சொல்லிவைத்தனர்.

 

சதபத பிராமணம் (கி.மு.850) கூறுவதாவது:

“தண்ணீர் தான் சட்டம்/தர்மம். ஆகையால்தான் உலகிற்கு எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. எல்லாம் விதிகளின்படி நடக்கிறது. மழை தவறிவிட்டால் பலவீனமானவரை பலமுள்ளோர் தாக்குவர். ஏனெனில் தண்ணீர்தான் சட்டம்”.

இதையே வள்ளுவனும் கூறியிருப்பது (குறள்-20) கவனிக்கத்தக்கது.

 

மழையிலிருந்து உணவு உண்டாகிறது என்று கீதையில் பகவான் கிருஷ்ணனும் கூறுவார் (கீதை 3-14).

 

தமிழர்களின் தண்ணீர்ப் பழமொழிகளைப் படித்தால் அவர்களின் ஆழ்ந்த அனுபவ அறிவு புலனாகும்:–

 

1.நீரையும் சீராடு

2.நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?

3.நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ

 

4.நீராலே விலகினாய், நான் நெருப்பாலே விலகினேன்

5.நீரில் அமிழ்ந்த சுரைக்காய் போல

6.நீரில்லா நாடு நிலவில்லா முற்றம்

7.நீரும் கொல்லும், நெருப்பும் கொல்லும்

8.நீரும் பாசியும் கலந்தாற்போல

9.நீரை அடித்தால் நீர் விலகுமா?

10.நீரைக் கழுவி நிழலைப் புதைப்பதுபோல

11.நீரை அடித்தால் வேறாகுமா?

12.நீரோட்டத்தில் தெப்பம் செல்லும் தன்மை போல (புறம்.192 லும் உளது)

 

13.நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காணப்படாது

14.நீர் உயர நெல் உயரும்

15.நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்

16.நீர் உள்ள மட்டும் மீன் துள்ளும், நீர் போனால் மீன் என்ன துள்ளுமா?

17.நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது

18.நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும், சர்க்கரை என்று சொன்னதினால் வாய் இனிப்பதும் உண்டா?

19.நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

 

20.நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்துவைத்தமட்டும் இருக்கும்

21.நீர்ச்சோறு தின்று நிழலுக்கு அடியில் நின்றால் மலடிக்கும் மசக்கை வரும்

22.நீர் போனால் மீன் துள்ளும்

23.நீர் மேல் எழுத்துபோல

24.நீர்மேல் குமிழி போல நிலையில்லாக் காயம்

 

 

25.தண்ணீரிலே அடி பிடிக்கிறது

26.தண்ணீரிலே தடம் பிடிப்பான்

27.தண்ணீரிலேயோ தன் பலம் காட்டுகிறது?

28.தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும்

29.தண்ணீரில் அமுக்கின முட்டை உப்பு போட கிளம்பும்

30.தண்ணீரில் இருக்கிற தவளை  நீர் குடித்ததைக் கண்டது யார்? குடியாததைக் கண்டது யார்?

31.தண்ணீரில் இருக்கிற தவளையை தரையில் விட்டாற் போல

 

32.தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்

 

33.தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்

 

34.தண்ணீரின்றினும் தண்மை பிரியுமோ, தீயினின்ன்றும் வெம்மை பிரியுமோ?

 

35.தண்ணீரின் கீழே குசு விட்டால் தலைக்கு மேலே

 

36.யாருக்கும் தெரியக்கூடாதென்று எண்ணி தண்ணீரின் கீழே குசு விட்டாற்போல

 

37.தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே

 

38.தண்ணீரும் பாசியும் கலந்தாற்போல

 

39.தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்

40.தண்ணீரயும் தாயையும் பழிக்கலாமா?

41.தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலையிட்ட காதும் சரி

42.தண்ணீர் குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க் குடம் உடைந்தாலும் ஐயோ!

43.தண்ணீர், வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்

 

நீர் என்றும் தண்ணீர் என்றும் துவங்கும் பழமொழிகளை மட்டும் கண்டோம். பழமொழிகளுக்கு இடையே இதே சொற்கள் வரும் பழமொழிகள் நிறைய உண்டு. அத்தனையையும் அர்த்தத்தோடு தொகுத்து வெளியிடுவது நலம் பயக்கும்.

 

தமிழ் வாழ்க! பழமொழிகள் பயன்பெறுக!!

 

xxxx

எனது பழைய கட்டுரைகள்:-

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Research Article No. 1685; Dated– 2 March 2015.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

Research Article No.1656; Dated 17th February 2015.

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

 

–subham–

 

Tamil Proverbs on Importance of Water (Post No.3803)

Written by London swaminathan

 

Date: 9 APRIL 2017

 

Time uploaded in London:- 22-08

 

Post No. 3803

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

Water is very essential for any living being. Water changes the geography and the history of the world. From the oldest Vedas to the 17th Century Tiruvilaayatal Purana (Giving the miracles of Lord Shiva based in Madurai temple), we have innumerable references to drought and  the migration of people. No wonder that the Tamils also have so many proverbs on water in Tamil .

 

I have just compiled some Tamil proverbs at the request of a research student who is studying role water in every culture. I give below a rough translation of those Tamil proverbs:

 

Tamil Veda Tirukkural praises the rains in the second chapter. The last couplet says,

“Eve as life on earth cannot sustain without water, virtue too depends ultimately on rain (Kural 20)

 

World cannot exist in the absence of the waters is also found in 2000 year old Sangam Tamil Literature (Natrinai verse 1)

 

Tamil Proverbs

1.A country without water, an open courtyard without moon (both are desolate places)

(Niirillaa Naadu, Nilavillaa Mutram)

2.It is like the bottle gourd that is submerged in water (It can never be submerged; impossible task)

Niiril amiZththina suraikaay pola

 

3.Water also kills, Fire also kills

(Niirum kollum, Neruppum kollum)

4.It is like a mixture of water and algae (so muddy; confused)

(niirum paasiyum kalanthaar poola)

5.If you beat (smack) the water, will it become separate? (What is the use of punishing)

(Niirai adihthaal nir vilakuma?

6.Like washing the water and burying the shadow (impossible task)

(Niiraik kazuvi Nilavaip puthaippathu pola)

 

7.Spilling the water, frittering away the wealth

(Wasting water is like wasting the hard earned money)

(Niirai sinthinaiyoo, siirai sinthinaiyo)

 

8.Like the land spoils water (taste of water depends upon the condition of the land where it is stored)

(Nilaththinaal Niirin thanmai kundrinaarpola)

 

9.If the pot is full of water it does not make noise (Empty vessel makes noise)

(Nirai Kutam Thazumpaathu)

 

10.He is very clever who could see the foot print or the track in water

(Thanniirile Thatam Paarppaan)

11.Should he show his strength in the water? (Stupid act)

(Thanniirileyaa than Balam Kaatturathu)

 

12.Even the egg that sumbmerged in water should come when you put the aalt

(Thanniiril amukkina Muttai uppu pota kilambum)

13.Who knows whether frog in the water drank  water or not?

(Thanniiril irukkira thavalai thanniiraik kutiththathaik kantathu yaar? kutiyaathathaik kantathu yaar?)

 

14.Even if you fart under water, it would come out (obvious act)

Thanniirin kiize kusu vittaal thalaikku mele)

15.Water and anger are seen in low places

(Thanniirumkopamum Thaazntha itaththilee)

 

  1. Even water tolerates three mistakes

(Thanniirum Mundru Pilazi Porukkum)

17.Can you disparage or deprecate water and mother?

(Thanniiraiyum thaayaiyum pazikkalaamaa?)

18.Even if water becomes hot, it extinguishes fire

(Thanniir venniir aanaalum Neruppai avikkum)

 

  1. Can any one separate coldness from water and hotness from fire (inborn qualities)

(thanniirinindrum thanmai piriyumo,thiiyinindrum velmmai piriyumo?)

 

20.Salt that came out of water must dissolve in water itself

(Thanniiril piRantha uppu, thanniirileye karaiya vendum)

There are more proverbs on water. The list here is not exhaustive)

 

–Subham–

 

மருந்தே யாயினும் விருந்தோடுண் (Post No.3802)

Written by London swaminathan

 

Date: 9 APRIL 2017

 

Time uploaded in London:- 6-42 am

 

Post No. 3802

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“மருந்தே யாயினும் விருந்தோடுண்” என்பது கொன்றைவேந்தன் அறிவுரை. இது அவ்வையார் இயற்றியது.

 

இந்த இடத்தில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

1.மருந்தாக இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடாதே. சாப்பிடுவத ற்குச் சற்று முன்னரோ அல்லது சாப்பிட்ட உடனேயோ அந்த மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால பலன் அதிகம் கிடைக்கும் என்பது மேம்போக்கான பொருள்.

 

2.ஆயினும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் மருந்து என்பது அமிர்தம் என்று தெரியவரும். ஏனெனில் வள்ளுவரும் இதே கருத்தைச் சொல்லுகிறார்:-

 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று – குறள் 82

பொருள்:

ஒரு விருந்தினர் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில்  உங்கள் கையில் சாவா மருத்து (அமிழ்தம்) கிடைத்தாலும் அதைத் தனியே சாப்பிடுவது விரும்பத் தக்கதன்று.

 

வள்ளுவர் சொல்லும் கருத்து புறநானூற்றில்(182)  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி  சொன்ன கருத்துதான்:

இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே.

 

புற நானூற்றுக் காலத்திலேயே இந்திரர் அமிழ்தம், அது தொடர்பான கதைகள் எல்லாம் தமிழருக்கு அத்துபடி! ஏனெனில் பாரதம் முழுதும் ஒரே பண்பாடு!!

 

விருந்தினர் ஒன்பது

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

 

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

வியத்தல்

அட, அதிசயமே: எங்களைப் போன்ற ஏழை எளிய வர் குடிசைக்கெல்லாம் வரமாட்டீங்கன்னு நினைச்சோம்; எங்களையும் ஒரு பொருட்டா மதிச்சீங்களே, அதுவே பெரிய சந்தோஷம்

நன்மொழியினுரைத்தல்

வீட்டில எல்லாரும் சௌக்கியமா? உங்க உடம்பெல்லாம் எப்படி இருக்கு; முன்னைவிட கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கீங்களே.

திருந்துற நோக்கல்

இதைச் சொல்லும் போது கனிவான , அன்பான பார்வை இருக்க வேண்டும். கடனெழவுக்குச் சொல்லக்கூடாது.

வருகென வுரைத்தல்

உள்ள வாங்க, முதல்ல; அப்புறம் எல்லாம் பேசுவோம்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

அவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்னால், நல்லா சாப்பிடுங்க; இவ்வளவு குறைச்சலா சாப்பிடுறீங்களே; இப்ப புரியுது ;நீங்க ஏன் இளைச்சிருக்கீங்கன்னு; நல்லா சாப்பிடுங்க. அடியே! இவருக்கு இன்னும் கொஞ்சம் பாயசம் கொண்டா.

மற்றவன் றன் அருகுற விருத்தல்

அவர் அருகிலேயே மரியாதையுடன் அமர்ந்திருக்க வேண்டும்

போமெனிற் பின்செல்வதாதல்

அவர் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது அவர் பின்னால் ஏழு அடி நடந்து சென்று அவரை வழி அனுப்ப வேண்டும் . ரிக் வேதம் இதைச் சொல்கிறது. அதனால்தான் கல்யாணத்திலும் புதுமணத் தம்பதிகள் ஏழு அடி (சப்தபதி) நடந்து செல்வர். கரிகால் சோழன் இப்படி 7 அடி நடந்து போய் வழியனுப்பியதாகச சங்க இலக்கியம் செப்பும் (என்னுடைய பழைய கட்டுரையில் ஏழு அடி மஹிமை பற்றிக் காண்க)

பரிந்துநன் முகமன் வழங்கல்

கடைசியாக அவர் விடை பெறும்போது அவரைப் புகழ்ந்து பல வாக்கியங்கள் சொல்ல வேண்டும். “இன்றைக்கு நாங்கள் நரி முகத்தில் முழித்தோம் போல; தங்களைப் போன்ற பெரியோர் வந்து எங்களை ஆசீர்வதித்ததற்கு நன்றி. இது எங்கள் பாக்கியமே; அடிக்கடி வாருங்கள்; அடுத்த முறை வருகையில் வீட்டில் எல்லோரையும் அழைத்து வரவேணும். மிக்க நன்றி

 

 

விருந்தினருக்கு ஒன்பது கொடுங்கள்!

தவிசு தாள் விளக்கப் புனல்தமக்கியன்ற

அடிசில்பூந்தண்மலர்ப் பாயல்

உவகையினுறையும் இடனுகர் தெண்ணீர்

ஒண்சுடர் எண்ணெய் வெள் ளிலைகாய்

இவைகளொன்பதுந்தன் மனைவயினடைந்தோர்

மகிழ்வுற வினிதனில் அளித்தல்

நவையற இல்வாழ் வடைந்துளோன் பூண்ட கடன்

— காசிகாண்டம்

 

 

1.ஆசனம்

2.கால் கழுவ தண்ணீர்

3.முடிந்த அளவு உணவு

4.நல்ல படுக்கை, பாய்

5.இருக்க இடம்

6.தெளிந்த தண்ணீர்

7.விளக்கு

8.எண்ணெய்

9.வெற்றிலை,பாக்கு

இந்த ஒன்பதையும் இல்வாழ்வான் (கிருஹஸ்தன்) என்பவன் , விருந்தாளிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

–Subham–