தமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்! (Post No.3174)

tamil-1

Written by London swaminathan

Date: 21 September 2016

Time uploaded in London: 8-02 AM

Post No.3174

Pictures are taken from various sources; thanks.

 

தமிழ் மொழி பழைய மொழி, சிவன் உருவாக்கிய மொழி, அகத்தியரால் இலக்கணம் படைக்கப்பட்ட மொழி, சிவ பெருமானும் முருகனும் பேசிய மொழி —  என்ற கருத்துக்களை 2000 ஆண்டுகளாக மக்கள் நம்புகின்றனர்.

 

 

இந்த உண்மைகள் பற்றி அவ்வப்போது மனதில் சில சந்தேகங்கள் எழும். ஆகவே தடைகலை எழுப்பி விடை காண்போம்:-

 

ரொம்ப நாளாக எனக்கு ஒரு டவுட்டு (Doubt)

 

ஆசிரியரிடம் மாணவன் கேள்வி

siva-with-jewels

அகத்தியனோ பார்ப்பனன்; இமய மலையில் வாழ்ந்த ரிஷி; அவரை ஏன் சிவன் அனுப்பினார்?

 

அகத்தியன் வெறும் ரிஷி மட்டு மல்ல. பூகோளமும் ( Geography நிலவியல்), சரித்திரமும் (History வரலாறு), அரசியல் தந்திரமும் (Politics), பொறியியலும் (Enginering எஞ்சினீயரிங்), தெரிந்தவர். ஆகையால் தமிழ் மொழிப் பணி மட்டும் அன்றி காவிரியை திருப்பிவிட்ம் பொறியயல் பணி, தென் கிழக்கு ஆசியா (South East Asia)  முழுதும் இந்திய கலாசாரத்தைப் பரப்பும் பணி, வாதாபி, இல்வலன் போன்ற மனிதர்களை உண்ணும் அரக்கர்களை (Cannibals) தந்திரத்தால் வெல்லும் பணி ஆகிய வற்றை மனதிற்கொண்டு சிவன், அவரைத் தெரிவு செய்தார். பகீரதன் பெரிய (Engineers) எஞ்சினீயர்களுடன் கலந்தாலோ சித்து எப்படி கங்கையைத் திருப்பிவிட்டானோ அது போல காவிரியையும் திருப்பிவிடும் செயல்திட்டத்துடன் அனுப்பி வைத்தார்.

 

அது சரி, சிவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

 

ஆஹா! அப்பொழுது அகத்தியருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்ததை ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?

 

ஆமாம் , இதில் என்ன சந்தேகம். பாரதி கூட

 

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

 

மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

-என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ.

 

அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படை த்தார்  என்று சொல்லுகிறார்.

tamil-2

சரி, அகத்தியரோ வேத மந்திரங்ங்களைக் கண்டுபிடித்த அகத்திய கோத்திரத்தில் வந்த ஒரு ரிஷி. அவரது பெருமை ரிக்வேதம் மற்றும் இதிஹாச, புராணங்களில் உள்ளது. அவருக்குத் தமிழ் தெரியுமா?

 

அவருக்குத் தமிழ் தெரியாது ஆனால் முதலில் சிவ பெருமானும், பின்னர் முருகனும் சொல்லிக் கொடுத்தனர்.

 

அட, இது என்ன புதுக்கதை? முருகனுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

 

சிவ பெருமான் மகனாகப் பிறந்தாலும் அவர் பிறவியிலேயே பெரிய ஜீனியஸ் Genius – எல்லாம் அறிந்தவர் — ஓம் என்னும் ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது– அந்தப் பிரணவ மந்திரத்தின் பொருளை யே அவர் சிவனுக்குச் சொல்லிக் கொடுத்ததால் அவனுக்கு சாமி நாதன் என்று பெயர். அவருக்குத் தமிழ்மீது அலாதிப் பிரியம்; அதனால் தமிழில் திட்டினால்கூட , அட இனிமையாக இருக்கிறதே என்று அவருக்கு வரம் கொடுப்பான் என்று அருணகிரி நாதரே சொல்லிவிட்டார் – தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்கிறார். தமிழ் மொழி அவ்வளவு இனிமையான மொழி. இதை வைத்துதான்

பாரதியும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – என்றார்.

 

சரி, தமிழ் மொழி பழைய மொழி என்பதை ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்; ஆரியத்துக்கு (சம்ஸ்கிருதத்துக்கு) நிகரானது என்றும் ஒப்புக் கொண்டீர்கள்; அகத்தியருக்கு முன்னர் அதற்கு இலக்கணம் இல்லையா?

 

அகத்தியர்தான் முதலில் இலக்கணம் படைத்தார் என்பதே ஆன்றோர் வாக்கு. இதற்குப் பின்னர் வந்ததே ஐந்திரம், தொல்காப்பியம் என்னும் இலக்கணங்கள்

 

shiva-ganesh

நான் இப்பொழுது ஒரு பாயிண்டில் (One Point) உங்களைத் திணறடிக்கப் போகிறேன்/ ஆரியம் என்று சம்ஸ்கிருதத்துக்கு பாரதியாரே பெயர் சூட்டி விட்டார். மேலும் பாணினி இலக்கணம் தான் சம்ஸ்கிருததின் புகழ்மிகு இலக்கணம் என்று சொல்லுகிறீர்கள். அகத்தியரின் காலமோ கி.மு800 முதல் கி.மு1000 என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறுகின்றன; பாணினியின் காலத்தை கி.மு 700 என்றே சொல்லுவர். அப்படியானால் ஆரியர்கள் பேசியது சம்ஸ்கிருதம் என்பதையும் பாணினி இலக்கண த்துக்கு முன்னரே சம்ஸ்கிருத இலக்கணம் இருப்பதையும் ஒப்புக்கொண்டுவிட்டீர்களே!!

அருமையான கேள்வி; முதலில் ஆரிய என்ற சொல்லுகு சரியான பொருள் தெரிந்துகொள்ளுங்கள் ‘திராவிட’ என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். இதே போல ‘ஆரிய’ என்ற சொல்லும் சம்ஸ்கிருத சொல். பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்லை நூறுக்கக் ணகான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். புற நானூற்றுப் புலவர்களும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆரிய என்றால் பண்பாடுடையோர், வடக்கில் வாழும் ரிஷி முனிவர்கள் என்றே பொருள்.

 

மதத்தைப் பரப்ப வந்த , நாடு பிடிக்க வந்த அயோக்கியர்கள் 300 ஆண்டுகளாக திராவிட (தென் பகுதி) ஆரிய (மாண்புமிகு, முனிவர்) என்ற சொற்களில் இன விஷத்தைப் புகுத்திவிட்டனர். இதைக் கேட்ட ஹிட்லரும் நான் தான் ஆரியன்;  ஜெர்மானிய வெள்ளையர்தான் ஆரியன் என்று சொல்லி லட்சக்கணக் கானோரைக் கொன்றுவீட்டான்.

 

பாணினி இலக்கண த்துக்கு முன்னர் இலக்கணம் இருந்திருக்கலாம் அது இன்று நம்மிய்டையே இல்லை என்பது பெரிய குறையே! ஆனால் பாணினி சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண கர்த்தா அல்ல. அவனுக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர்களின் நீண்ட பட்டியலை அவனும் பலரும் தந்திருக்கின்றனர். அவைகளும் அகத்தியம் போல ம  ந்துவிட்டன. நாம் எப்படித் தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பவனந்தி முனிவரின் நன்னூலைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல சம்ஸ்கிருத மக்களும் பாணினியைப் பயன்படுத்துகின்றனர். பாணினிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேத கால சம்ஸ்கிருத இலக்கணமே வேறு –

 

ரிக் வேதத்திலேயே 400-க்கும் மேலான புலவர்கள் பெயர்கள் உண்டு; விந்தையிலும் விந்தை அவர்களில் இருபது பேர் பெண் புலவர்கள்! இது உலக அதிசயம். எந்த மொழிக்கும் இல்லாத சிற ப்பு; சம்ஸ்கிருதத்துக்கு 2000 அல்லது 3000 ஆண்டுக்கு பின் எழுந்த சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இப்படிப் பெண் புலவர்களை ப் பார்க்கலாம். உலகிலேயே முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள், நாகரீகம் படைத்தவர்கள் இந்துக்களே  என்பதற்கு இந்த இரண்டும் சான்றுகள்.

 

tamil-4

சரி இன்னும் ஒரே ஒரு சந்தேகம்; பார்ப்பன அகத்தியன் தமிழுக்கு இலக்கணம் படைத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்ரனர். ஆனால் பார்ப்பனர்கள், சம்ஸ்கிருதம் பேசுபவர்கள்;  தமிழ் நாட்டின் பூர்வகுடிகள் இல்லை என்று திராவிடங்களும் அதுகளும் இதுகளும் அவ்வப்போது வெட்டி முழங்குகின்றனவே!

 

உண்மைதான் ‘வோட்டு’களுக்காக அரசியல் நடத்துவோர், நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். நீங்களே அதுகளும் இதுகளும் என்று அஃறிணை யில் பேசிவிட்டீர்கள் அதுவே போதும்.

 

உண்மை யில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் மூன்றில் ஒரு பகுதி பார்ப்பனர் இயற்றிய பாடல்கள்தான்; கபிலன் என்னும் “புல ன் அழுக்கற்ற  அந்தணாளந்தான்” அதிக பாடல்களை  இயற்றிய ர்; “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞான சம்பந்தனும் பார்ப்பனனே! மூழ்கிப் போகும் நிலையில் இருந்த  தமிழ் மொழியை கரையேற்றிய பாரதியும் உ.வே.சா.வும் பார்ப்பனர்கள்; அதிகமாக உரைகள் எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன்”  ஒரு பார்ப்பனன்.

 

அவரோ தொல்காப்பியனும் ஒரு பார்ப்பனன்; அவன் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் சொல்லுகிறார். அதை ஒப்புக்கொள்ளாத வர்களும் தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் CERTIFICATE கொடுத்தது அதங்கோட்டு ஆச்சார்யன் என்பதை மறுக்கவில்லை. ஆக ஒரு பார்ப்பனன் சர்ட்டிபிகேட் கொடுத்த பின்னரே அதை தமிழ் கூறு நல்லுலகம், நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்கு வெளியே உலா வர அனுமதித்தது. தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்களை யும் தமிழில் வேள்வி போன்ற மூலச் சொற்கள் இருப் பதும் தமிழ் பண்பாடுதான் இந்தியா முழுவ தும் நிலவிய பண்பாடு என்று ஐயம் திரிபறச் சொல்லும்.

 

வாழ்க தமிழ்

 

வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள் (Post No.3173)

rudraksha

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 September 2016

Time uploaded in London:5-24 AM

Post No.3173

Pictures are taken from various sources; thanks.

 

 

ருத்ராக்ஷ மஹிமை

 

வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இனி ஒவ்வொருவருக்கும் தேவையான பலனை அளிக்கும் ருத்ராக்ஷ்ங்களைப் பார்ப்போம்.

 

எந்தப் பலன் வேண்டுமோ அதற்குரிய ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். அதற்கான பட்டியல்:

 

ஒரு முகம் :   இந்திரிய சுகம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்

இரு முகம் : அர்த்த நாரீஸ்வர சிவ ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்

மூன்று முகம் : மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.

நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம  ப்ரீதி

 

ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம ஸ்வரூபம். பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க வல்லது.

 

ஆறு முகம் : கார்த்திகேயரை அதி தேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடமானது. புத்திமான் இதைத் தரிக்க வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

 

ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம், சிறந்த ஞானம் ஏற்படும்.

எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதைத் தரிப்பவர்கள் ஸ்த்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்ட வசுக்களின் ப்ரீதியையும் கங்கா தேவியின் அருளையும் பெறுவர்.

 

 

ந்வ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.

தச முகம் : யமனை அதி தேவதையாக உடையது. இதை அணிவதால் ந்வ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.

11 முகம் : ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது. எப்போதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும்.

 

 

12 முகம் : மஹா விஷ்ணு ஸ்வரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

13 முகம் : விரும்பிய சுப சித்திகளை அளிப்பது. இதை அணிவதால் காம தேவன் அருள் ஏற்படும்.

 

14 முகம் : ருதர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

இப்படி பலன்களைக் குறிப்பாகச் சொல்லி அருளுவது ருத்ர ஜாபால உபநிடதம் ஆகும்.

 

 

சிந்தடிக் ருத்ராக்ஷங்களை வாங்காமால் நிஜ ருத்ராக்ஷங்களை வாங்கி அணிதல் வேண்டும்.

*******

குறிப்பு : ருத்ராக்ஷ மஹிமை பற்றிய இந்தக் கட்டுரை ஆசிரியரின் ஞான ஆலயம், மங்கையர் மலர் கட்டுரைகளைப் படிப்பது மேலதிக விவரங்களைத் தரும்.

 

Amazing Fire Walking Ceremony! (Post No.3172)

fire_walking_barrier_breaking

WRITTEN BY London swaminathan

Date: 20 September 2016

Time uploaded in London:10-35 AM

Post No.3172

Pictures are taken from various sources; thanks.

Arthur Mile’s book is full of anti-Hindu stuff. And yet he tells us what he has seen with his own eyes.

From the book The Land of the Lingam by Arthur Miles, London 1933

 

anastenarides-3

Fire Walking in Greece

“The Fire walking ceremony is not so popular as it used to be, and many castes do not observe it at all. Occasionally three is a ceremony, when fanaticism is mounting pretty high and a community can bear the expense.

 

I attended one not so long ago in Mysore state. A pit had been dug, about fifty feet long and about ten feet wide., and when I arrived it was a seething mass of fire. At one end there was a pool of water, through which the performers waded after they had crossed the fire. The fire walkers were dressed I short yellow dhoties and garlands of jasmine flowers. The gods had been brought out, and were arranged along the edges of the pit. I examined the feet of two men before and after they crossed. There was nothing done to their feet to deaden the pain, and there was the slightest trace of a burn. One man, moreover, had crossed through the fire pit in a quite leisurely fashion. I attempt no explanation.

 

Another man crossed with a baby in his arms, which had been passed to him at the last moment by its mother. For one awful moment I had a picture of the walker, maddened by pain, dropping his tiny burden into flames. Yet, actually, the man smiles as he went, and handed the baby, which was clapping its hands and laughing, back to its mother on the other side of the pool.

An Indian who was watching the performance told me it would rain when the ceremony was over, and the gods would put the fire out. As a matter of fact, it did rain at the conclusion of the ceremony, but I think the gods had less to do with it than the Indian monsoon season”.

firewalk_7217

My comments:-

Why didn’t it rain before the fire walking or during the fire walking? If it is monsoon rain it can rain at any time or always!

Sita Devi was the first one to do fire walking. It is in Ramayana. I have already written about it.

It was performed in ancient Greece as well. Christians have adopted it their own and now do it in churches in Greek villages.

 

–Subham–

 

மாமிசத்துக்குப் பெயர் வந்தது எப்படி? யோகிகளை பரமஹம்ச என்று அழைப்பது ஏன்? (Post No.3171)

meat

WRITTEN BY London swaminathan

Date: 20 September 2016

Time uploaded in London:8-52 AM

Post No.3171

Pictures are taken from various sources; thanks.

 

தமிழில் சொற் சிலம்பம் ஆடும் காளமேகப் புலவரை நாம் அறிவோம். மனு ஸ்ம்ருதியில் கூட ஒன்றிரண்டு சொற்சிலம்பம் உண்டு.

 

மாம்சம் என்று ஏன் பெயர் வந்தது? என்று விளக்குகிறார் மனு:-

 

மாம்= என்னை

ச: = அவன்

 

இந்த ஜன்மத்தில் நான் அவனை (அதை) சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் என்னை (மாம்) அவன் (ச;) சாப்பிடுவான் இதனால் அதை மாம்ச (இறைச்சி) என்று சொல்கிறோம்

மனு 5-55

 

இது ஆங்கிலத்திலும் பொருத்தமாக இருக்கிறது ஆங்கிலத்தில் மீட் MEAT என்றால் மாமிசம்;  மீ (என்னை) ஈட் (சாப்பிடுவான்) Me Eats (He eats me in my next birth if I eat him now). அதாவது நான் இப்பொழுது அவனைச் சாப்பிட்டால் அவன் என்னை சாப்பிடுவான்.

 

 

Xxx

narayana

நாராயணன் என்றால் என்ன?

 

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபௌ வை நர சூனவ:

தா யதஸ்யாயனம் பூர்வம்  தேன நாராயண: ஸ்ம்ருத:

மனு 1-10

 

நான் என்ற பரமாத்மாவினால் படைக்கப்பட்டதால் நீருக்கு நாரம் எனப்பெயர். அதில் இவன் வசிப்பதால் (அயன) அவனுக்கு நாராயண  என்று பெயர்.

Xxx

swan

பரம ஹம்ச

 

ஹம்சம் என்பதற்கும் இது போல வேதாந்திகள் விளக்கம் தருவர்.

ஹம்சம் என்றால் அன்னப் பறவை (swan) என்று பொருள்.

 

இதை

அஹம் = நான் = ஜீவாத்மன்

ச: = அவனே + பரமாத்மன்

அஹம்+ச; = அம்ச (ஹம்ச)

 

இது அத்வைதத்தின் உயர்நிலை; அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதற்குச் சமம்.

 

இந்த உண்மையை உயர்ந்தவர்  பரமஹம்சர் . ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகிய பெரிய மஹான்களின் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம்.

 

ஹம்சப் பறவை இமயமலைக்கும் மேலே (கணவாய் வழியாகப்) பறப்பதையும், அது தூய வெண்மையாக இருப்பதையும் ஒட்டி வேறு சில விளக்கங்களும் உண்டு.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க ஞானம்!

 

–சுபம்–

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள் (Post No.3170)

rudraksah-mala-with-gold

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 September 2016

Time uploaded in London:5-42 AM

Post No.3170

Pictures are taken from various sources; thanks.

 

 

 

ருத்ராக்ஷ மஹிமை

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 stars4

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் தனித்தனியே உண்டு.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான அதிதேவதையும் உண்டு.

அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இதை அணிபவர்களுக்கான பலன்கள் மகத்தானவை.

 

எண்   நட்சத்திரம்         அதி தேவதை  அணிய வேண்டிய

                                          ருத்ராக்ஷம்

  • அசுவனி கேது           நவ முகம்
  • பரணி சுக்ரன்         ஷண்முகம்
  • கார்த்திகை சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ரோஹிணி சந்திரன்  த்வி முகம்
  • மிருகசீர்ஷம் செவ்வாய் த்ரி முகம்
  • திருவாதிரை ராகு       அஷ்ட முகம்
  • புனர்பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
  • பூசம் சனி          சப்த முகம்
  • ஆயில்யம் புதன்         சதுர் முகம்
  • மகம் கேது        நவ முகம்
  • பூரம் சுக்ரன்       ஷண்முகம்
  • உத்தரம் சூர்யன்      ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ஹஸ்தம் சந்திரன்    த்வி முகம்
  • சித்திரை செவ்வாய்  த்ரி முகம்
  • சுவாதி ராகு        அஷ்ட முகம்
  • விசாகம் ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • அனுஷ்ம் சனி          சப்த முகம்
  • கேட்டை புதன்          சதுர் முகம்
  • மூலம் கேது          நவ முகம்
  • பூராடம் சுகரன்         ஷண்முகம்
  • உத்தராடம் சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • திருவோணம் சந்திரன்    த்வி முகம்
  • அவிட்டம் செவ்வாய்   த்ரி முகம்
  • சதயம் ராகு         அஷ்ட முகம்
  • பூரட்டாதி ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • உத்தரட்டாதி சனி          சப்த முகம்
  • ரேவதி புதன்         சதுர் முகம்

 

ஒவ்வொரு முகத்திற்கான பலன்களையும் நமது நூல்கள் தந்துள்ளன. அவற்றை இனி காண்போம்.

*********

Music Mystery in Asvamedha Yajna! (Post No.3169)

aaroganam

Compiled  by London swaminathan

Date: 19 September 2016

Time uploaded in London:15-15

Post No.3169

Pictures are taken from various sources; thanks.

 

“Several pentatonic and hexatonic series of notes (Taanas) of music were named after Vedic rites. For example

Ni-dh-pa-ma-ga-ri- was called Agnistoma

Ri-nidha-pa-ma-ga- was known as Asvamedha

And

Ma-ga-sa-ni-dha-pa was called Mahaavrata

This musical aspect of the rites needs further investigation”. (See Matanga’s Brhaddesi. Also see Bharata Muni’s Natyasastra (Ghosh 1967)

 

–from Subhash Kak’s ‘The Asvamedha’

Xxx

saregamapadhani

Astronomy in Asvamedha Yajna

The Asvamedha rite is the ritual sacrifice of the Sun (time) to regenerate it. The narrative touches upon the inner and outer Asvas through the symbolism of the horse.

The Satapata Brahmana says that the year begins with full moon of Phalguna (SB 6-2-2-18), which is when the Asvamedha was performed. On the other hand, in the Mahabharata the performance culminates on the full moon of Caitra(Mbh 14-76).The beginning of the year used in the M Bh is different from the one in the SB.

 

The precession of the earth causes the month to shift with respect to seasons at a rate of 2000 years per month, therefore a time gap of about 2000 years exists between its descriptions in the SB and in the MBh. The word ‘precession’ is from the fact that that this circuit runs opposite to that of the normal sequence, so in the precessional shift, Caitra precedes Phalguna. Thus the M BH appears to remember a tradition that was earlier than that of the SB.

 

Recent estimates of the date of the SB using new hydrological evidence are relevant o his discussion. Briefly, it is now believed that the Sarsvati river dried up around 1900 BCE due to a massive earthquake that caused its tributary Yamuna to be captured by the Ganga. Since the Rig Veda lauds the Sarasvati as the great River that flows from the mountain to the sea,this Veda should be prior to the date of 1900 BCE. According to other authorities, the river stopped flowing all the way to the sea a thousand years earlier, which is why the Harappan sites are not all the way down to the sea, and 1900 BCE represents a further desiccation which led to a collapse of the Harappan economy.

The astronomical references in the SB about the Krittikas never swerving from the east and the Saptarishis rising from the north correspond to this general time period. In a new study Achar argues that these observations indicate around 3000 BCE. The SB itself recorded old tradition, so its own compositional date could be several centuries later.

precession_animation_small_new

Earth’s precession makes the seasons shift by a nakshatra every thousand years.

Asvini- 200 BCE

Bharani – 1200 BCE

Krittika – 2200

Rohihi – 3200

Mrgasiras – 4200

The lists in the brahmanas begin with the Krttikas indicates that it was drawn up in the third millennium BCE. The legend of cutting off of Prajapatis head indicates a time when the year began with Mrgasirsa in the fifth millennium BCE.

The SB story of the marriage between the seven sages, the stars of Ursa Major, and the Krittikas is elaborated in the Puranas where it is stated that the Rishis remain for a hundred years in each nakshatra. In other words, during the earliest times in India there existed centennial calendar with a cycle of 2700 years. Tis Saptarishi calendar is still used in certain parts of India even today.

 

Its current beginning is taken to be 3076 BCE., but the notices by the Greek historians Pliny and Arrian suggest that, during the Mauryan times, this calendar was taken to begin in 6676 BCE. All this indicates that there was a very ancient tradition of calendars in India.

 

The holding of the Asvamedha in Caitra points to this rite having been celebrated in the 3rd or 4th Millennium BCE.

–from Subhash Kak’s ‘The Asvamedha’

f7wobble

–Subham–

அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168)

krishna_advising_on_the_horse_sacrifice

Written  by London swaminathan

Date: 19 September 2016

Time uploaded in London:9-19 AM

Post No.3168

Pictures are taken from various sources; thanks.

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 2 

 

 

அஸ்வமேத யக்ஞத்தில், — ஓராண்டுக் காலம் பல நாடுகளுக்குச் சென்றுவந்த குதிரையைக் கழுத்தை நெறித்துக் கொன்றார்கள் — அந்தக் குதிரையுடன் மஹாராணி இரவு முழுவதும் கணவன் – மனைவி போல  நெருங்கிப் படுத்திருக்க வேண்டும் —  அப்பொழுது ஆபாச வசனங்களை மற்ற பெண்கள் சொல்ல வேண்டும் — என்று மட்டும் எழுதி அந்த யக்ஞத்தைக் கொச்சைப்படுத்தும் வெளிநாட்டுப் படை எடுப்பா ள ர்களும் அவர்களின் உள்நாட்டுத் திராவிட அடிவருடிகளும் அந்த யாகம் பற்றிய முழு விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் புரியவில்லை; கேட்டால் நமக்கும் புரியாது. அவர்கள் ஆபாச வசனங்களை  மட்டும் பரிமாறிக் கொள்ளவில்லை. பல விடுகதைகள்,  புதிர்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; அதில் ஒரு குஷ்ட ரோகியும் பங்கு பெற்றார். இதற்கெல்லாம் என்ன பொருள் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.

 

அஸ்வமேதத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குதிரை என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிரௌத சூத்திரங்கள் சொல்லுகின்றன. நெற்றியில் கருப்புப் பொட்டுடன் இருக்கும் வெள்ளைக் குதிரை அல்லது பழுப்பு குதிரையாக இருக்கலாம். ஆது ஆயிரம் பசு மாடுகளின் விலைக்குச் சமமானதக இருக்க வேண்டும் என்றும் சொல்லும். எல்லா குதிரைகளையும், பந்தயத்தில் தோற்கடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அது சூரியனின் அடையாளம். அதன் மீது இதுவரை யாரும் ஏறி சவாரி செய்திருக்கக்கூடாது!

இந்தக் குதிரைக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை எல்லாம் பார்த்தால் அப்படி ஒரு குதிரை கிடைக்குமா என்று வியப்போம்!

 

அஸ்வமேத யக்ஞம் நான்கு புரோகிதர்களால் செய்யப்படும். அரசனின் நான்கு மனைவியர் கூடவே இருக்க வேண்டும். குதிரையைத் தொடர்ந்து 400 வீரர்கள் செல்ல வேண்டும். அரசனுடன் எட்டு ஆலோசகர்கள் செல்ல வேண்டும் . எல்லாம் நான்கு என்ற எண்ணின் மடங்குகள்! ஏன்?

 

நான்கு புரோகிதர்களும் ஒரு வாரத்துக்கு முன் சந்திப்பர். அப்பொழுது அரசன் கொடுத்த அரிசிக் கஞ்சியை சாப்பிடுவர். அரசன் ஒவ்வொரு புரோகிதருக்கும் 1000 பசுமாடுகளும் தங்கமும் தருவான். அவர்கள் நால்வரும் அரசனின் கழுத்தில் தங்கச் சங்கிலி ஒன்றைக்கட்டுவர். குதிரையைத் தர்பைப் புல்லைக் கொண்டு சுத்தம் செய்வர்.

(இன்றும்கூட பிராமணர்கள் தர்பைப் புல்லை வைத்துதான் சுத்தப்படுத்துவார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி பின்பற்றப்படும் ஒரு வழக்கம் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை!).

 

அஸ்வமேதக் குதிரை ஓராண்டுக்கு அது இஷ்டப்பட்ட இடங்களுக்கு எல்லாம் செல்லும்’ அந்த நாடுகள் எல்லாம் அரசனின் தலைமையை ஏற்கவேண்டும். அல்லது அவனுடன் சண்டை போட்டு வெல்ல வேண்டும்.

அச்வமேதக் குதிரையைச் சுற்றி 100 குதிரைகள் செல்ல வேண்டும்.

அந்தப் பிரதான குதிரைக்கு ஒவ்வொரு ராணியும் 1000 முத்துகள் உடைய மாலையைச் சூட்டவேண்டும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லும். 4X1000 = 4000 முத்துக்கள்.

 horse-sacrifice2

எனது கருத்து:

இந்த முத்துகளும், யாகத்தில் கொடுக்கப்பட்ட தங்கமும் எங்கிருந்து வந்தன? தென் கடல் முத்தாக இருந்தால் வேத காலத்திலேயே அவர்களுக்கு தென்னாட்டு உறவு இருந்தது தெரிகிறது. மற்ற நாட்டு முத்தானால் அவர்களுக்கு கடல் சார் வணிக உறவுகள் இருந்தது நிரூபணமாகிறது. சில பரதேசிகள், வேத கால இந்துக்களுக்கு “கடல்” என்றால் என்ன என்று தெரியாது என்று எழுதின!

 

 

யக்ஞத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பிட்ட எண்ணுடைய காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், 13 ஆசீர்வாதங்கள், 13 கம்பங்கள் என்று பல எண்கள் குறிப்பிடப்படுகின்றன; ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பாட்டாலும் இது மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட யாகம் என்பதை அறிய முடிகிறது.

எனது கருத்துகள்:

ரிக் வேதத்திலேயே மூன்று மண்டலங்களில் குறிப்பிடப்படும் அஸ்வமேதம், வேத கால மக்கள் கணிதத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும் அது மட்டுமல்ல. தங்கமும் ஆயிரக்கணக்கான பசுமாடுகளும் அவர்களுடைய செல்வ வளத்தை காட்டும். நூற்றுக் கணக்கான குதிரைகள் பயன்படுதப்பட்டன. அரிசிச் சோறு பயன்படுத்தப்பட்டதால் அவர்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.

 

வேத காலத்தில் அரசர்கள் இருந்ததும் அவர்கள் பெரிய யாகங்களை நடத்தி தனது தலைமையை நிலைநாட்டியதும் இந்த யக்ஞத்தால் புலனாகிறது. ஆரியர்களை நாகரீகம் தெரியாத நாடோடிகள் என்று எழுதிய பரதேசிகளுக்கு இது செமை அடி கொடுக்கிறது. ஒரு பக்கம் அஸ்வமேதத்தைக் குறை கூறி எழுத பல உண்மைகளை மறைத்து அரைகுறை விஷயங்களை எழுதியதும் அம்பலம் ஏறுகிறது.

(பரதேசி = வெளிநாட்டான்)

உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்ற யக்ஞங்கள் இல்லை. ஆனால் இமயம் முதல் குமரி வரை இந்த யாக யக்ஞங்கள் இருந்ததை புறநானூற்றுப் பாடல்கள் உரைக்கின்றன. இவ்வளவு பெரிய பரப்பில் இவ்வளவு பெரிய நாகரீகம்–கலாசாரம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. இன்றைய பரப்பளவில் பாரதம், உலகில் ஏழாவது பெரிய நாடு. 2000 ஆண்டுகளுக்கு முன்னரோ உலகில் நாம்தான் “ஒரே கலாசாரம்” உள்ள பெரிய நாடு.

 

யக்ஞத்தில் பயன்படுத்தப்பட்ட மிருகங்களை எண்ணிப் பார்த்தால் 609 என்று வருகிறது ஆனால் அவை அனைத்தும் இறுதியில் உயிருடன் விடப்பட்டன என்றே தெரிகிற து அகநானூற்றில் கூட, வெளியே உலாவரும்  வேள்விக்குண்ட ஆமை ஒன்றை உவமையாகக் கூறுகின்றார் ஒரு புலவர்.

 

மேலும் இந்த யக்ஞம் பற்றி விரிவாகப் பேசும் சதபதப் பிராமணம் என்னும் நூலே உயிர்ப்பலியை எதிர்த்துப் பேசுகிறது. யாகத்தில் மாவினால் செய்யப்பட்ட உருவங்களைப் போடுவதே சிறந்தது என்றும் செப்புகிறது. அடையாளபூர்வமாக ஓரிரு மிருகங்கள் பலியிடப்பட்டதாகவும் ஊகிக்க முடிகிறது.

 

இன்று,  மதத்தின் பெயரால் பலியிடப்படும் மனிதர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், மற்றும் உணவுக்காக (சாப்பிடுவதற்காக) நாள் தோறும் கொல்லப்படும் கோடிக்கணக்கான உயிரினங்களை ஒப்பிடுகையில் இது ஆற்று மணல் துகள் அளவே என்று சொல்லலாம்.  ஏனெனில் அஸ்வமேதம் செய்த  அரசர்களின் எண்ணிக்கை இந்திய வரலாற்றில் மிகக்குறைவு. சுமார் 30 பேர்தான் . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதற்கும் குறைவே. ஆகையால் உலகில் யாரும் இது பற்றிப் பேச தார்மீக உரிமை இல்லை.

aswamedha

குஷ்டரோகி!

 

யாகத்தின் முடிவில் எல்லோரும் ஊர்வலமாகச் சென்று ஒரு குளத்தில் குளிக்க வேண்டும். வருண பகவானுக்காக ஒரு குஷ்ட ரோகியின் தலையில் வெண்ணை அபிஷேகம் செய்யப்படும். அந்த மனிதனை 1000 பசுக்கள் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டும் என்று சாங்க்யாயன ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது.அவன் அத்ரி குலத்தைச் சேர்ந்த பிராமண குஷ்ட ரோகியாக இருக்க வேண்டும்! ஏனெனில் வருண பகவான் குஷ்டரோகி வடிவம் எடுக்கிறாராம். அவனை ஆற்றில், வாய்க்குள் நீர் புகும் வரை, முழ்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பிவிடுவர். பின்னர் அதே இடத்தில் எல்லோரும் குளித்துவிட்டு புத்தாடை அணிவர்.

 

சிறைக்கதிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களையும் குளிக்கச் செய்து விடுதலை செய்துவிடுவார்கள்.

 

மஹாபாரதம், ராமாயணம் முதலிய சம்ஸ்கிருத நூல்களில் அஸ்வமேதம் பற்றிப் பல செய்திகள் உள்ளன.

 

வள்ளுவனும் மனுவும்

 

அவி சொரிந்  தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து ண்ணாமை நன்று (குறள் 259)

 

தீயில் அவியைப் போட்டு ஆயிரம் வேள்விகளைச் செய்வதைப் பார்க்கிலும் ஒன்றன் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருப்பது மேலானது.

அவி= அரிசிச் சோறு+நெய்

 

இது மனு ஸ்மிருதியின் எதிரொலி; அவர் கூறியதையே வள்ளுவரும் வேறு விதமாகக் கூறுகிறார் (மனு. 5-53)

“ஓராண்டுக்கு ஒரு அஸ்வமேத யக்ஞம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு நூறு அஸ்வமேதம் செய்பவருக்கு என்ன பலன் கிடைக்குமோ அது ஒருவன் புலால் உணவைச் சாப்பிடாததால் கிடைக்கும்.”

 

100 அஸ்வமேதம் செய்தால் அவர்களுக்கு இந்திரன் பதவி கிடைக்கும் என்றும் நமது சாத்திரங்கள் சொல்லும். அந்த அளவுக்குப் பெருமை பொருந்தியது மாமிசம் உண்ணாமை!

 

Books used:-

 

The Asvamedha – by Subhas Kak; 2002

 

The Vedic horse sacrifice –  by Stephen Fuchs

 

Xxx

 

My Old Article on the same subject

 

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London

No.1255; Dated 27th August 2014.

 

 

–சுபம்–

மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! – 2 (Post No.3167)

theresa-oz

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டுத் தொடரவும். 

Written by S NAGARAJAN

Date: 19 September 2016

Time uploaded in London: 6-54 AM

Post No.3167

Pictures are taken from various sources; thanks.

 

 

தெரஸா நடத்திய இல்லங்களுக்கு நூறு நாடுகளிலிருந்து எழைகளும் நோயாளிகளும் புகலிடம் கேட்டு வந்தனர்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் தங்கள் நோய்களைத் தீர்க்க ஒரு டாக்டரை வேண்டி வந்தவர்கள். இதர ஒரு பங்கினர் இறக்கும் தருவாயிலிருந்த தங்களுக்கு ஆதரவு வேண்டி வந்தவர்கள்.

 

ஆய்வின் படி இங்கு வருகை புரிந்த டாக்டர்கள் சுகாதாரமற்ற நிலை இல்லங்களில் இருப்பதைக் கண்டனர். இங்கு வாழவே தகுதியில்லாதபடியான சூழ்நிலையும் இருந்தது. அவர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் மிகுந்த குறைபாடு இருந்தது. உணவு இல்லை, வலியைக் குறைக்கும் நிவாரண மாத்திரைகள் இல்லை.

இவற்றை வாங்கவோ நிதிக்குக் குறைச்சலே இல்லை. ஏனெனில் லட்சோப லட்சம் டாலர்கள் இந்த இல்லங்களை நடத்துவதற்கென வந்து குவிந்து கொண்டிருந்தது!

அறக்கட்டளைகள் நிதியைத் திரட்டிக் கொண்டே இருந்தன.

 

மதர் தெரஸா தன் நோய்க்கான சிகிச்சைக்கு நவீன சிகிச்சையை அமெரிக்காவில் பெற்றார். ஆனால் இவர்களோ…!

மூன்று ஆய்வாளர்களும் ஆவணங்களில் பழைய ரிகார்டுகளைத் தோண்டி எடுத்தனர். அதில் ஒரு பிரதான விஷய்ம் அவர் 1968ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிரப்ல பி.பி.சி நிலையத்தைச் சேர்ந்த மால்கம் மகரிட்ஜுடனான (Malcom Muggeridge) சந்திப்பு..

mother-teresa-souvenir-sheet

மால்கம் மகரிட்ஜ் அபார்ஷன் பற்றி கத்தோலிக்கர்களின் தீவிர கொள்கையைக் கொண்டவர். அபார்ஷன் கூடவே கூடாது என்பது அவரது தீவிரமான  கொள்கை. இதை மதர் தெரஸாவும் பிரதிபலித்ததை அவர் சந்தோஷ்மாக ஏற்றுக் கொண்டார்.

ஆக மகரிட்ஜ் தன் கொள்கைக்கு ஆதரவாளரான  மதர் தெரஸாவை முன்னிலைப் படுத்த – ப்ரொஜெக்ட் செய்ய கங்கணம் பூண்டார்.

1969இல் அவர் மதர் தெரஸாவைப் பற்றிய ஒரு படத்தை எடுத்தார். அதில் தான் மதர் தெரஸாவின் முதல் போட்டோகிராபிக் அற்புதம் பதிவு செய்யப்பட்டது.

இதை கோடக் நிறுவனம் சந்தைப்படுத்தியது.

மகரிட்ஜின் மீடியா ப்ரொஜெக் ஷன் வெற்றிகரமானது!

 

தெரஸா மறைந்த பிறகு ஒரு விசேஷ சலுகையைப் போல அவரை ‘beadutification’  செய்வதற்கான குறைந்த பட்ச காலமான ஐந்து ஆண்டுகளை அது விலக்கியது.

ஆய்வு கண்டுபிடித்த ஒரு மிராகிள் பற்றிய விவரம் சுவையானது.

 

மோனிகா பெஸ்ரா (Monica Besra) என்பவருக்கு கடுமையான அடி வயிற்று வலி இருந்தது. மதர் தெரஸாவினால் “ஆசீர்வதிக்கப்பட்ட”  ஒரு மெடால்லியன் (Medallion) ரஅவர் அடி வயிற்றில் வைக்கப்பட்டது.

அவ்வளவு தான், வலி போயே போச்சு!

ஆய்வாளர் லாரிவீ கூறுகிறார்: “ மோனிகாவின் டாக்டர்கள் இதை வேறு விதமாக (அற்புதம் இல்லை என்று) கருதுகிறார்கள். அவர் Ovarian cyst மற்றும் tuberculosis  வியாதியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அதற்கான உரிய மருந்துகள் தரப்பட்டன. அந்த மருந்துகளினால் தான் அவர் குண்மானார் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.”

ஆனால் வாடிகன் வேறு விதமான முடிவை ஏடுத்தது. அவரது அற்புதத்தால் தான் மோனிகா குணம்டைந்தார் என்று அது “அறிவித்தது.”.

லாரிவீ தன் ஆய்வின் முடிவை ஜாக்கிரதையாக்வே முடிக்கிறார்.

 

theres-satmp

ஒரு வேளை தெரஸாவின் எல்லையற்ற புகழும் ஆற்றலும் நோயாளியிடம் ஒரு பாஸிடிவான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமானால் அதற்காக நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார் அவர்.

இது தவிர பின்னால் வந்த தகவல்கள் மதர் தெரஸா ஏழைகளை ஆதரித்து நோயாளிகளைக் குணப்படுத்த முன்வந்ததன் அடிப்படை மதமாற்றமே, இதை அவரே முன்னிலைப் படுத்தியுள்ளார் என்று அந்தத் தகவல்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றன..

எது எப்படியோ மதர் தெரஸா புனிதராக்கப்பட்டு விட்டார்.

 

இப்படி புனிதராக்கும் ஒரு வழக்கம் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே உண்டு. ஹிந்து மதத்தில் நிச்சயமாக இல்லை.

ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரிலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் வாழ்ந்த வள்ளலார் வரை அற்புதங்களை நிகழ்த்துவது என்பது ஹிந்து ஞானிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோருக்கு சர்வ சாதாரணம். ஹிந்துமதத்தில் சித்திகள் பெரிது படுத்தப்படுவதில்லை. இது சகஜம், இதற்கும அப்பாற்ப்ட்டு இறை நிலைக்கு உயர வேண்டும் என்பதே ஹிந்து மதம் சுட்டிக் காட்டும் இறைநெறி.

சரி, மதர் தெரஸா ஒரு புனிதர் தான், கிறிஸ்தவர்களுக்கு – ஆய்வாளர்கள் அப்படி இல்லை என்று சொன்ன போதிலும்!

இப்போது கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!

– முற்றும்

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு, 2-3-13 இதழ்

Maamsam and Hamsam: Sanskrit Wordplay!(Post No.3166)

 

meat

Compiled  by London swaminathan

Date: 18 September 2016

Time uploaded in London:16-34

Post No.3166

Pictures are taken from various sources; thanks.

 

Sanskrit language is very rich with lot of riddles and puzzles. Manu in his smrti (Law book) deals with one or two things. He explains why MEAT (maamsam) is called Meat. He also tells us why NARAYANA is called Narayana. This shows his interest in languages and Linguistics. Elsewhere others explain the significance of the word HAMSAM (swan) and why great saints are called PARAMAHAMSA. Let us look at these interesting explanations: –

 

He whose “MEAT” in this world do I eat will in the other world “ME EAT”. Wise men say that this is why meat is called meat – Manu 5-55

The translation of this much quoted verse is based on  that of Charles Lanman, who attempted to recapture the Sanskrit pun: Meat is called Maamsa because he ( sa) eats  me (Maam) in the other world if I eat him now.

Sa = he

Maam = me

xxxx

swan

 

HAMSA (swan)

A similar pun is made in the Vedantic  texts on the metaphor for the soul, the swan (hamsa), said to express the identity of the individual soul (aatman) and the world-soul (brahman): I AM HE (aham sa)

Aham = I (jeevaatman)

Sa = he (Paramaatman)

One who realised this truth is Parama Hamasa as in Sri Ramakrishna Paramahamsa and Paramahamsa Yogananda.

xxx

 

narayana

Meaning of Narayana

Narayana was the creator of Brahma, who, according to Manu, was so called beacause the wters (nara; Neer in Tamil) were his first ayana or place of motion. Water is always used as plural in Sanskrit).

The name is found for the first time in the Satapata Brahmana. Narayana is another name of Vishnu.

 

Aapo naaraa iti proktaa apau vai narasuunava:

Taa yadasyaayanam puurvam tena naaraayanah smrutah

Manu 1-10

 

The waters are born of man, so it is said; indeed the waters are the children of the primordial. And since they were his resting place in ancient time, therefore he is traditionally known as Narayana. (Manu 1-10)

xxx

 

Following is from my article posted on Tamil or Sanskrit: Which is older? posted on 16 July 2014.

 

Is NEER a Tamil word or Sanskrit word?

Regarding Tamil words in Sanskrit:

No language is pure in the world. Our forefathers were NOT language fanatics. They freely used Sanskrit words in Sangam literature and later Tirukkural. In the same way Tamil words are in later classical Sanskrit. But I doubt about it in Vedic Sanskrit. I have shown that even great linguists like Suneet Kumar Chatterji are wrong to claim that ‘Neer’ (water) in Rig Veda is Tamil. I have shown that it is in the oldest Greek mythology (Nereids=Water Nymphs). When a word is found in other Indo European languages it is not counted as Dravidian even in etymological dictionaries. But old linguists misled many others and so ‘Neer’ is shown as Dravidian. I have also shown that Kapi and Tuki in the Bible are Sanskrit words. Please read my article “Sanskrit in The Bible”.

In this context, my pet theory is Tamil and Sanskrit originated from a common source on the Indian soil. This is what saints like Paranjothy Munivar and others believed 300 years ago. If we believe our Puranas and Tamil commentators, we accept that Agastya from the north came to South India and codified grammar for Tamil. He was sent by Shiva to balance the population (Please read my article “Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures”; posted on 2nd February 2013). Naturally Agastya would have done it on the basis of Sanskrit grammar. But even Shiva accepted Tamil as a separate language and entrusted the grammar work to great Agastya. Even Lord Shiva recognised the greatness and uniqueness of Tamil. Do we need any other certificate?

 

–Subham–

 

சூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்: கம்பன் தகவல் (Post No.3165)

anajaneyavijayawada

Written by London swaminathan

Date: 18 September 2016

Time uploaded in London:10-31 AM

Post No.3165

Pictures are taken from various sources; thanks.

 

அனுமனை– ஆஞ்சநேயனை — மாருதியை – சொல்லின் செல்வன் என்றும் மாபெரும் இலக்கண மேதை என்றும் அனைவரும் போற்றுவர்.

அனுமனை நினைத்தேலேயே சொல்வன்மை பெருகும் என்று சம்ஸ்கிருத துதி சொல்லும்:

 

புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

 

அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால்  இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.

 

கம்பன் சொல்கிறான்- இந்த சொல்வன்மைக்குக் காரணம் அவன் சூரியனிடம் இலக்கணம் படித்ததே என்று.

 

வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் அவனை “நவ வியாகரண பண்டிதன்” என்று போற்றுகிறது. கம்பன் அவனைப் போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது:–

 

 

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட

புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்

குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ

பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா

 

—அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:

ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை அணிந்த அனுமனைக் காணமுடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?

 

(அனுமன் தனது சுய ரூபத்தை காட்ட பேருருவம் எடுத்ததைக் கூறும் பாடலுக்கு அடுத்து வரும் பாடல் இது)

anjaneya-in-yaga-fire

Anjaneya is seen in Yajna Fire
நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்.

 

அனுமன் கற்ற நவ (9) வியாகரணம் என்ன என்பதை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சந்திர சேகர இந்திர சரஸ்வதி அவர்களின் சொற்களில் காண்போம்:-

 
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வியாகரணம் : வேதத்தின் வாய்
இலக்கண நூல்கள்
இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள்.

 

‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.
சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.
வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.
பர்த்ருஹரியின் “வாக்யபாதயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

–Subham–