வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள் (Post No.3173)

rudraksha

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 September 2016

Time uploaded in London:5-24 AM

Post No.3173

Pictures are taken from various sources; thanks.

 

 

ருத்ராக்ஷ மஹிமை

 

வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இனி ஒவ்வொருவருக்கும் தேவையான பலனை அளிக்கும் ருத்ராக்ஷ்ங்களைப் பார்ப்போம்.

 

எந்தப் பலன் வேண்டுமோ அதற்குரிய ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். அதற்கான பட்டியல்:

 

ஒரு முகம் :   இந்திரிய சுகம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்

இரு முகம் : அர்த்த நாரீஸ்வர சிவ ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்

மூன்று முகம் : மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.

நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம  ப்ரீதி

 

ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம ஸ்வரூபம். பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க வல்லது.

 

ஆறு முகம் : கார்த்திகேயரை அதி தேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடமானது. புத்திமான் இதைத் தரிக்க வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

 

ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம், சிறந்த ஞானம் ஏற்படும்.

எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதைத் தரிப்பவர்கள் ஸ்த்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்ட வசுக்களின் ப்ரீதியையும் கங்கா தேவியின் அருளையும் பெறுவர்.

 

 

ந்வ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.

தச முகம் : யமனை அதி தேவதையாக உடையது. இதை அணிவதால் ந்வ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.

11 முகம் : ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது. எப்போதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும்.

 

 

12 முகம் : மஹா விஷ்ணு ஸ்வரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

13 முகம் : விரும்பிய சுப சித்திகளை அளிப்பது. இதை அணிவதால் காம தேவன் அருள் ஏற்படும்.

 

14 முகம் : ருதர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

இப்படி பலன்களைக் குறிப்பாகச் சொல்லி அருளுவது ருத்ர ஜாபால உபநிடதம் ஆகும்.

 

 

சிந்தடிக் ருத்ராக்ஷங்களை வாங்காமால் நிஜ ருத்ராக்ஷங்களை வாங்கி அணிதல் வேண்டும்.

*******

குறிப்பு : ருத்ராக்ஷ மஹிமை பற்றிய இந்தக் கட்டுரை ஆசிரியரின் ஞான ஆலயம், மங்கையர் மலர் கட்டுரைகளைப் படிப்பது மேலதிக விவரங்களைத் தரும்.