Museum curator Neil Mahrer sorting out the coinsTreasure hunters Mr Mead and Mr Miles with Metal Detector
Compiled by London Swaminathan
Post No.7534
Date uploaded in London – – 4 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Detectorists’ £10m Iron Age coin stash is UK’s biggest ever
AS COIN finds go, this one took a lot of counting… almost eight years in fact!
A hoard of 69,347 silver and gold Iron Age coins — worth £10million — has just been officially recognised by Guinness World Records as the UK’s biggest ever.
The stash, which dates from around 50BC and weighs almost 1,700lb, was unearthed by metal detectorists Reg Mead and Richard Miles on Jersey in the Channel Islands in 2012.
It was hidden under a hedge in a clay mound and also included jewellery.
The pair began their search back in the 1980s after a woman told them she had seen what looked like ‘silver buttons’ in a field.
The hoard has been declared ‘treasure’, which means it officially belongs to the Queen. But the duo are entitled to a reward — which is expected to be ‘considerable’. Some of the finds are now on display at the island’s La Hougue Bie Museum. Olga Finch, curator of archaeology for Jersey Heritage, said: ‘We are delighted that such an impressive archaeological item was discovered, examined and displayed in Jersey.
‘Once again, it puts our island in the spotlight of international research into Iron Age coinage and demonstrates the world class heritage Jersey has to offer.’
The previous Guinness record for the largest collection of ancient coins found in Britain was 54,951, near Mildenhall, Wiltshire, in 1978.
The world record is 150,000 pennies from the 13th century, found in Brussels in 1908.
Mr Mead and Mr Miles described the moment they received their official record certificates as ‘lovely’.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிகை அறிவியல் கேள்வி பதில் பகுதியில் தேன் ஏன் கெடுவதில்லை? என்ற கேள்விக்கு பதில் சொல்லகிறது.
மூடி வைக்கப்பட்ட பாண்டங்களில் தேன் (Honey) இருந்தால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. எகிப்திய கல்லறைகளில் தேன் கண்டுபிடிக்கப்பட்டது. அது கெடவில்லை. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேன் கெடாமல் இருப்பதற்குக் காரணம் தேநீக்கள் அதை செய்யும் முறையே.
தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும் ஒரு பிரிவு (Forager Bees) உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees) அளிக்கும்
தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்சசத்து குறைந்துவிடும். இப்படி ச் செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம் தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid) மாற்றிவிடும் தென் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அட்டைகளின் அறைகளில் தேனை வைத்து தனது சிறகுகளால் விசிரிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாத்து காக்கிறது. உணவுப் பண்டங்களைக் கெட்டுப்போக ச் செய்யும் பாக்டீ ரியாக்கள் இந்த சூழ்நிலையில் வாழ முடியாது . ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial) கிருமிகளைக் கொள்ளும் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை . Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
rock honey bees
எனது கருத்து
சமணர்கள் தேன் சாப்பிடமாட்டார்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு தேனீக்கள் உருவாக்கும் தேன் நமக்கானதல்ல . அவைகளுக்கானதே ;மேலும் இது பிராணிகளை வதை செய்வதாகும் என்பது அவர்கள் கருத்து. இந்துக்கள் வேத காலம் முதலே மது பர்க்கம் என்ற பெயரில் பாலையும் தேனையும் சேர்த்துக் கொடுத்து உபசரித்தனர்; பைபிளிலும் சரி, சம்ஸ்க்ருத -தமிழ் இலக்கியங்களிலும் சரி; ஒரு நாட்டின் செழிப்பை வருணித்துச் சொல்கையில் ‘அங்கு பாலும் தேனும் ஆறாக ஓடிற்று’ என்பர்.
ஆனால் சமணர்கள் பால் பொருட்களை பயன்படுத்துவர். கன்றுகளுக்கு எஞ்சியது போக மீதியுள்ள பாலை மட்டும் இந்துக்களும் சமணர்களும் பயன்படுத்துவர். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜாதிக்கொடுமை
Honey bottles in my kitchen in London.
ஜாதிகளைக் கண்டுபிடித்தது ஆரியரா திராவிடர்களா என்ற சர்சசையை வரலாற்று ஆசிரியர்கள் விவாதிப்பது உண்டு .உண்மையில் சொல்லப் போனால் அதைக் கண்டுபிடித்து இன்று வரை நடைமுறைப் படுத்துவது தேனீக்களே! ராஜா -ராணி வம்ச பரம்பரை ஆட்சிக்கும் அதுவே காரணம் போலும். தொழிலாள ர்களை வேலைக்கு வாங்கி சுக போகமாக வாழ்கிறது ராணித் தேனி . போகட்டும் . அவைகள் பின்பற்றும் ஜாதிக்கொடுமைக்கு கை மேல் கிடைத்த பலன்!! மனிதர்கள் அத்தனை தேனையும் திருடிக் குடித்து விடுகிறார்கள் ! Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Treasure Hunters Mr Mead and Mr Miles
நேற்றைய தினம் (3-2-2020) பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு சுவையான செய்தியை வெளியிட்டுள்ளன. அது பிரிட்டனின் மிகப்பெரிய புதையல் பற்றிய செய்தி .அதன் மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்கள். இந்தியக்கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய். இவை இரும்புக் கால நாணயங்கள் (Iron Age Coins)
பிரிட்டனில் புதையல் கண்டுபிடிக்கும் கருவி விலைக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கான சிறு பொம்மைக் கருவி முதல் மிகவும் சக்தி வாய்ந்த கருவி வரை யாரும் வாங்கலாம். இதை மெட்டல் டிடெக்டர் (Metal Detector) என்பர். அதாவது பூமிக்கடியில் இருக்கும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடித்து ஒலி எழுப்பும்.
பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வாரம் தோறும் புதையல் செய்திகள் வருகின்றன. இதற்காக மாதப் பத்திரிக்கைகளும் உள . இந்தியாவிலும் நிலத்துக்கடியில் நிறைய புதையல் உளது. அதைக் கண்டு பிடிப்போர் அதன் மதிப்பு தெரியாமல் உருக்கி உலோகத்தை மட்டும், குறிப்பாக தங்கம் வெள்ளியை மட்டும் , எடுத்துக்கொள்வர். உண்மையில் அதிலுள்ள உலோகத்துக்குக் கிடைக்கும் விலையைப் போல பத்து முதல் 100 மடங்கு விலை கிடைக்கும் என்பதை பாமரர்கள் அறியார். விஷயம் தெரிந்தோர் அதை வெளிநாட்டுக்க்குக் கடத்தி விடுகின்றனர். தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காதலன் காதலி ரோமானிய மோதிர உருவம் பத்திரிகைகளில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்து விட்டது. கரூரில் அமராவதி ஆற்றில் கிடைக்கும் புதையல்கள கள்ளத் தனமாய் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. கங்கை நதியில் நவநந்தர்கள் ( Nava Nandas of Nanda Dynasty, 5th century BCE) தங்கக் கட்டிகளை ஒளித்து வைத்த செய்தியை சங்க புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர் . நிற்க. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்களில் (Treasure) இதுதான் மிகப்பெரியது என்று கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற இப் புதையலில் 69,347 தங்கம், வெள்ளி, இரும்பு நாணயங்கள் அடங்கும். இதன் எடை 1700 பவுண்டு.விலை மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன். இதில் பழைய காசு கி.மு. 50 காலத்தைச் சேர்ந்தது .
ரெக் மீட் மற்றும் ரிசர்ட் மைல்ஸ் (Reg Mead and Richard Miles) ஆகிய இருவர் இதை 2012ல் ஒரு வேலிக்கு அடியில் களிமண் மேட்டில் கண்டுபிடித்தனர் . ஆனால் இப்போதுதான் கின்னஸ் சாதனை நூல் இதை பெரும் புதையல் (Biggest Treasure) என்று அறிவித்துள்ளது. புதையலை யாராவது கண்டுபிடித்தால் அது மகாராணிக்குச் சொந்தம் என்பது பிரிட்டனில் உள்ள சட்டம். ஆயினும் கண்டுபிடித்தோருக்கு ஒரு பங்கு உண்டு.
‘கழுகுக்கு மூக்கில் வேர்க்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல புதையல் தேடுவோருக்கு கையில் அரிக்கும். யாரோ ஒரு பெண்மணி இந்தப் பொட்டலில் ஒரு வெள்ளி பித்தா னை பார்த்தேன் என்றார். உடனே இவ்விருவரும் மம்மட்டி, கோடாரி , கத்தி, கபடா , மெ ட்டல் டிடெக்டர் சஹிதம் போய் வெற்றி கண்டனர்.
curator in the museum sorting out the coins
இவை கிடைத்த இடம் சானல் ஐலண்ட்ஸ் (Channel Islands) எனப்படும் ஜெர்சி, கேர்ன்சி ஆகும்.
ஜெர்சியில் உள்ள லா ஹோ க் பை மியூசியத்தில் (La Hogue Bie Museum, Grouville, Jersey) இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதையல் 1978ல் வில்ட்ஷைர் (Wiltshire) அருகில் கிடைத்த 54,951 நாணயங்கள் புதையல் ஆகும். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் கிடைத்த மிகப்பெரிய புதையல் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,50,000 பென்னி காசுகள் புதையல் ஆகும். அவை 1908ம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) நகரில் கண்டெடுக்கப்பட்டன.
ஸ்வாமி சின்மயாநந்தா ஆதி சங்கரர் நூல்கள் பற்றி பவன்ஸ் ஜர்னல் இதழில் மே 1988-1989 இல் எழுதிய கட்டுரையில் 139 நூல்களின் பட்டியலைத் தருகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com ஆதி சங்கரர் இயற்றிய நூல்களின் விளக்கத்தை ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகான்கள் மட்டுமே தர முடியும். இந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். ஸ்வாமி விவேகானந்தர் தனது அருளுரைகளில் சங்கரர் பற்றிய ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளார். சமீப காலத்தில் காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் ஏராளமான உபதேச அருளுரைகளிலும் கட்டுரைகளிலும் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து அருளியுள்ளார். கல்கி இதழில் வாரா வாரம் வெளியாகிய ஜகத்குருவின் அருளுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அடுத்து ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பல்வேறு துறவிகள் பல நூல்களில் விளக்கங்களை அளித்துள்ளனர். சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்து வெளியீடான சௌந்தர்ய லஹரி குறிப்பிடத்தகுந்த ஒன்று. அண்ணா எழுதிய இந்த விளக்க உரையில் பதத்திற்குப் பதம் தமிழில் அர்த்தம், இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அடுத்து ஸ்வாமி சின்மயாநந்தரின் நூல்கள் மிகத் தெளிவான விளக்க உரைகளை தந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பற்றிப் பலரும் எழுதிய விளக்க நூல்களை எடுத்துக் கொண்டால் பல நூறு பக்கங்களில் அதிசய விளக்கங்களைக் கண்டு பிரமித்துப் போகிறோம். இன்னும் சிலர் ஆதி சங்கரரின் ஸ்தோத்திரங்களை மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com தெய்வீக ஸ்தோத்திரங்களை சங்கரர் அருள்வாக்கில் இயற்றியதை அப்படியே கூற வேண்டும் என்றாலும் அர்த்தம் புரிந்து கொள்ள இந்தத் தமிழ்/ ஆங்கில மொழி பெயர்ப்புகள் உதவும் என்பதில் ஐயமில்லை. அடுத்து வரும் சில கட்டுரைகளில் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய சிறு குறிப்புரைகளைக் கண்டு மகிழலாம்.
Tags – ஆதி சங்கரர், இயற்றிய நூல்கள், ஸ்துதிகள், Adi Shankara Hymns
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Tarigonda Vengamamba was a poetess from Chittoor area in Andhra region. She has dedicated all her work to deity Narasimha in Tarigonda village. She was perhaps a native of that village. She was the daughter of a Brahmana named Krishnayya; widowed early in life , she found solace in religion and philosophy — especially yoga — , which furnished themes for her literary compositions. She was probably born in the last quarter of the eighteenth century.
Vengamaambaa was a more prolific authoress than most of the women writers who had preceded her. Three of her metrical works in Telugu — the Bhagavata, the Rajayoga sara and the Venkatachala Mahatmya – have come down to us. Though not equal in literary craftmanship to Molla or Muddupalani, her poetry is not without charm. Her language is sweet, and her descriptions, especially of erotic subjects , are free from the excesses which mar the compositions of others. The popularity of Vengamamba rests more upon Rajayoga sara than on her other works. It serves as an introduction to the study of the Yoga philosophy, and is read with avidity by many who devote their lives to the cultivation of the spirit.
The Nayaka queens of Thanjavur were cultured women, and some of them have made distinct contributions to Sanskrit and Telugu literatures. The poems and dramas composed during this period mark the growth of a vigorous Southern school of Telugu literature. It certainly speaks highly of these ladies that were able to distinguish themselves in a region which has for centuries been the hub of the South Indian culture, and during this particular period when it produced men of eminence .
xxx
Two consorts of Ragunatha Nayaka (1600-30 )
Madhuravani and Ramabhadramba , both pupils of Kalayya , and one queen of Vijayaraghava (1633-73) – Ranjamma deserve mention .
Madhuravaani
Her attainments are enumerated in the introduction to Ramayana. She was proficient in grammar and prosody and in adept in completing ‘Samayas’ – incomplete cryptic verses – and in Ashtaavadaana – attending to eight things at a time – and Shataavadaana – attending to 100 things at a time. She was also a gifted musician, and for her skill in playing on the Vina, her loyal lover called her Madhuravaani (of sweet tone).
Vijayaraghava , the next ruler introduced her as a character in his y
Yaksha Gana – the Rahunadabhyudhayam, where she is spoken of as an ‘ashu kavitaa vaani ‘– one who can compose verses spontaneously and instantaneously.
Her Ramayana in 14 cantos purports to be a Sanskrit rendering of Raghunatha Nayaka’s poem in Telugu, Which is now probably lost. The translation is no mean work of art; the style is simple, graceful and dignified, reminiscent of Kalidasa’s Raghuvamsa , which she appears to have imitated successfully in many placeS.
Source book – great women of India, Advaita Ashrama, Mayavati.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Written by London swaminathan
நான் பேஸ் புக் (FACEBOOK) ரசிகன்; ஆனால் வாட்ஸ் அப்- (Whats up) பின் எதிரி. இருந்தபோதிலும் இவ்விரு ‘வீண் அரட்டை அரங்கங்களிலும்’ (Anti Social Media?!) பயன்படுத்தும் ‘கடவுள் இருக்காண்டா குமாரு’ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான வாக்கியம் ஆகும்.
இந்தச் சொல்லாக்கத்தை யார் உருவாக்கினாரோ, அவர் வாழ்க!
தினமும் பத்திரிக்கையைத் திறந்தால் கலிபோர்னியாவில் காட்டுத் தீ (Wild Fire) ; மக்கள் ஓட்டம்; பலர் சாவு ; கருகிய காட்டு மிருகங்களின் சடலங்களில் இருந்து நாற்றம்.
இன்னொரு பக்கத்தைத் திருப்பிப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத புஷ் பயர் (Bush Fire) – புதர்களில் காட்டுத் தீ – அரிய கங்காரு, கோவாலா கரடிகள் சாவு- லட்சக் கணக்கில் அழிந்தன. ஹெலிகாப்டரில் இருந்து அணைக்க முயன்ற தீயணைக்கும் படையினர் பரிதாப சாவு.
மனிதனுக்கே தண்ணீர் இல்லாததால் 10,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!
xxx
இன்னொரு நாள் பத்திரிக்கையைத் திறந்தால் கோர்னோ வைரஸ் (Corona virus) – சீன நகங்களில் இருந்து மக்கள் ஓட்டம் – எங்கும் மரண ஓலம்- உலகை மரண பயம் கௌவிக் கொண்டது. உலக சுகாதார ஸ்தாபனம் எமர்ஜென்சி அறிவிப்பு.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி (Tsunami) பேரலைகள் எழும்பி ஒரே இரவில் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்டது .
இது தவிர ஆண்டு தோறும் படிக்கும் வெள்ளம், வறட்சி, பஞ்சம் பட்டினி, போக்குவரத்து விபத்துகள், பூகம்பம், எரிமலை சீற்றம் , இடி மின்னல் தாக்குதல், பாம்புக்கடி சாவுகள்!!!
இவை யாரையும் துயரத்துக்கு ஆளாக்குவதில்லை. ஏனெனில் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கும். நம்முடைய உணர்வுகள் மரத்துப் போய்விட்டன
புதியது என்ன?
முன்னர் போரில் (War) செத்தார்கள். இப்போது பயங்கரவாதிகளின் (Terrorists’ Bomb attacks) குண்டு வெடிப்பில் சாகிறார்கள். அதாவது மனிதன் இன்னும் மிருக மாகிவிட்டான் .
எவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் இருந்தும் ஒரு எய்ட்ஸ் (AIDS) நோய் வந்து பயமுறுத்துகிறது; ஒரு கோர்னோ வைரஸ் வந்து பயமுறுத்துகிறது. இவை அனைத்து ம் பொருளாதார தாக்கங்களையும் (Economic Impact) உண்டுபண்ணுகின்றன.
மேல் உலகத்தில் இருந்து கடவுள் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறாரோ??
கடவுள் இருக்காண்டா குமாரு.
நம்புங்கடா ! கடவுள் இருக்காண்டா குமாரு!
xxx
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து
எல்லோரும் இன்புற்றிருப்பது அன்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே !
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
மாமன்னன் போஜ மஹாராஜன் அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக இருந்தான். சிறந்த சிவபக்தன் என்பதாலும் அனைத்து நூல்களையும் ஆராய்ந்தவன் என்பதாலும் வாழ்வின் நிலையாமையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான்.
அவனது அவையில் ஒரு நாள் நடந்த சமபவம் இது:
சிம்மாசனத்தில் போஜன் அமர்ந்திருக்க அருகில் இருந்த அடைப்பக்காரன் போஜனுக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்தான். அதற்குள் வைக்க வேண்டிய பாக்கு மற்றும் வாசனைப் பொருள்களை அவன் எடுத்துக் கொடுப்பதற்குள் போஜன் வெற்றிலையை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்ன ஆரம்பித்தான்.
இந்தச் செய்கையைக் கண்ட அரசவை அறிஞர்கள் சற்று வியப்படைந்தனர். அவர்களில் ஒருவர் இதற்கான காரணத்தைக் கேட்க போஜன் கூறினான்: “ மனிதன் மரணத்தின் பற்களில் எப்போதும் சிக்கி இருப்பவன். அவன் எப்போது பிறருக்குக் கொடுக்கிறானோ, அவன் எப்போது ஒரு பொருளை அனுபவிக்கிறானோ அப்போது மட்டும் தான் – அந்தக் கணம் தான் அவனுக்குச் சொந்தம். அடுத்து வருவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமானது தான்.”
இதைக் கூறி விட்டுப் போஜன் தொடர்ந்தான்:
“ஆகவே ஒவ்வொரு நாளும் மனிதன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது தனக்குத் தானே. ‘இன்று நான் எந்த நல்ல காரியத்தைச் செய்ய முடியும்’ என்று கேட்டுக் கொள்ள வேண்டும். சூரியன் மாலையில் மேற்கே அஸ்தமிக்கும் போது ஒருவனது வாழ்க்கையின் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு செல்கிறான். பலரும் என்னைக் கேட்கிறார்கள் :” இன்று என்ன செய்தி? நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களா” என்று.
உடலின் ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையை விட்டுச் சென்று கொண்டிருக்கிறோம் இல்லையா? ஆகவே நாளை செய்ய வேண்டியதை இன்றே செய். மதியம் செய்ய வேண்டியதை அதற்கு முன்பே செய். மரணம் நீ பகலில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தாயா, முடிக்கவில்லையா என்று பார்க்காது. மரணம் என்ன, மரணம் அடைந்து விட்டதா? ஒருவனது ஆபத்துக்கள் எல்லாம் அழிந்து விட்டனவா? உடலை நோக்கிப் பாய்ந்து வரும் வியாதிகள் தடுக்கப்பட்டனவா? அனைவரும் உல்லாசத்தில் திளைக்கின்றனரா?”
போஜன் இப்படிக் கூறி முடித்தவுடன் அவனது மனதை நன்கு அறிந்த ஒரு கவிஞர் அவனை நோக்கி, “ விரைந்து செல்லும் போர்க்குதிரையின் மீது அமர்ந்த மரண தேவன் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.
ஆகவே மன்னர் மன்னா, நீ எப்போதுமே தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.” என்றார்.
மன்னன் மகிழ்ந்தான். அனைவரும் போஜனின் மனப்போக்கையும் அவனது அறம் சார்ந்த வாழ்க்கையையும் போற்றிப் புகழ்ந்தனர்.
போஜராஜன் பெரிய கொடை வள்ளல். இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியதைத் தருபவன்.
தனது வாயிலில் காத்திருப்போர்க்குத் தங்கக் காசுகளைத் தருவது அவன் வழக்கம். அவனது காவலாளிகள் ஒவ்வொருவரையும் வரிசையாக அனுமதிக்க ஒவ்வொருவராக வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
அவனது கையில் அணியும் கங்கணத்தில் அவன் ஒரு ஸ்லோகத்தைப் பொறித்து வைத்திருந்தான்.
அதன் பொருள் : “ மனிதனின் செல்வம் இயற்கையாகவே நிலையில்லாதது. துரதிர்ஷ்டம் உன்னை சீக்கிரமே அடைவது நிச்சயம். நல்லதைச் செய்ய உள்ள வாய்ப்பைக் காண்பதற்கு நேரம் கடந்து விட்டது. ஓ! பௌர்ணமி நிலவே! உன்னிடம் இருக்கும் செல்வத்தால் உலகெங்கும் வெண்மையான பிரகாசமான கிரணங்களை அள்ளி வீசு!
உனது செல்வ வளத்தால் பாதிக்கப்படாதவன் விதி! அது நீடித்து நிலைத்து இருக்காது!
ஓ! ஏரியே! உனது பாய்ந்து செல்லும் அழகிய நீரைப் பாய்ச்ச இதுவே தகுந்த தருணம்! மேலும் இப்போது நீர சுலபமாகக் கிடைக்கிறது. சுவர்க்கத்தில் மேகங்கள் நெடுநேரம் மிதக்காது.கொஞ்ச நேரம் தான் நீர் வெள்ளமெனச் செல்லும் -அதன் வேகம் நீரை உயரத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் கூட! அந்த வெள்ளத்தின் குறும்பு நீண்ட காலம் இருக்காது. நதியின் இரு புறமும் உள்ள உயரமான மரங்களை அது தாழ வளைத்து வைத்திருக்கிறது.”
இந்த ஸ்லோகத்தின் மூலமாக நிலையாக இருக்காத செல்வத்தை அது இருக்கும் போதே பிறருக்குக் கொடுத்து விடு என்று அவன் தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டான்.
போஜன் ஒரு தாயத்தை வேறு தன் கழுத்தில் அணிந்திருந்தான்.
அதில் உள்ள பதக்கத்தில் அவனே இயற்றிய ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டிருந்தது.
அதன் பொருள் : “பிரகாசமான சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் இரப்போர்க்கு நான் என் செல்வத்தைக் கொடுக்காவிடில், இந்தச் செல்வம் நாளைக்கு யாருக்குச் சொந்தமாகும் என்பதை யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?”
இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் போஜனின் கஜானா என்ன ஆவது?
அது குறைந்து கொண்டே போனது.
இதைப் பார்த்தார் அவனது அமைச்சர் ரொஹக். அதிர்ந்து போனார் அவர். ஆனால் அதை போஜனிடம் நேரடியாகச் சொல்ல அவருக்குத் துணிச்சலும் இல்லை.
ஆகவே போஜன் தானம் வழங்கும் கூடத்தில் ஒரு நாள் இரவு சென்று அங்கிருந்த ஒரு கரும்பலகையில் எழுதி வைத்தார் இப்படி:
“தேவையான காலத்திற்கு உதவும் வகையில் ஒருவன் செல்வத்தைக் காத்து வைக்க வேண்டும்.”
இதை மறுநாள் காலை பார்த்தான் போஜன். சிரித்தான்.
அதன் அடியில் எழுதினான் இப்படி:
“நல்லவனுக்குத் தீங்கு எப்படி வரும்?”
அன்று இரவு அமைச்சர் போஜன் எழுதியதற்குக் கீழாக இப்படி எழுதினார்:
“சில சமயம் உண்மையிலேயே விதி கோபத்துடன் எழும்”
மறுநாள் காலை இதைப் பார்த்த போஜன் தனது அமைச்சருக்கு முன்னாலேயே இப்படி எழுதினான்:
“அப்படியெனில் குவித்து வைத்திருக்கும் பொற்குவியல்கள் உண்மையிலே மறைந்து போகும்.”
இப்படி எழுதி விட்டுத் தன் அமைச்சரை நோக்கிய போஜன், “ மதியில் சிறந்த பிரதம மந்திரியினால் கூட எனது யானை போன்ற உறுதி மொழியை அவரது அங்குசத்தினால் மாற்ற முடியாது.”
நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய ஆடையை அணிந்த போதும் கூட போஜனின் மனம் எளியவர் பால் எப்போதும் இருந்தது.
இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இன்னும் போஜனின் வாழ்க்கையில் உண்டு.
King Bhoja’s Coin with Varaha Avatara of Vishnu.
இப்படிப்பட்ட ஒரு மன்னனை உலகின் எந்த நாடேனும் கண்டதுண்டா?
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Sun is a star according to modern science. There are billions and billions of suns. Most of them are bigger than our sun. Our sun is a yellow colour star, i.e. mediocre one. Blue and red colour stars are more powerful and hotter. The world thought that these are modern discoveries. But it is already in our Vedas!
Before I give my comments read what A A Macdonell and A B Keith said in 1912.
‘Surya – Nakshatra’
“Surya – Nakshatra is found in Satapata Brahmana (2-1-2-19) in a passage where Sayana takes it denoting a nakshatra/star which gives out rays of light like sun. But the real sense (as the Kanva text helps to show) is that the sacrificer may take the sun for his nakshatra – i.e. he may neglect the nakshatras altogether and rely on the sun”.
Page 468, volume 2, Vedic Index
My Comments
All the world literature compared stars with fire flies or little lamps at a distance or candle light till the modern science informed the world that our Sun is also a star. But Vedic rishis always associated Sun with Star or Stars with sun. It is amazing to see that the Vedic seers spoke about sun and star at one breadth.
Look at the first sentence ‘star which gives light like Sun’. 200 years ago, if anyone read it, the person would have thought that it is just an exaggeration.
Sayana wrote the commentary in the 14th century. Satapata Bramana was written around 850 BCE according to the Westerners. But Hindus believe it is older than that.
I don’t jump to conclusion based on a single passage.
In fact, it is even in Rig Veda, the oldest book in the world.
Macdonell and Keith again,
Nakshatra
Nakshatra is a word of obscure origin and derivation. The Indian interpreters already show a divergence of opinion as to its primary meaning. The Satapata Brahmana resolves into ‘na- ksatra = no power’ explaining it by a legend. The Niruka refers it to the root ‘nak’s ‘obtain’ following the Taittriya Brahmana
Aufrecht and Weber derived it from ‘nakta-tra’ ‘guardian of night’, and more recently the derivation from ‘nak- ksatra’ ‘having rule over night’, seems to be gaining acceptance. The generic meaning of the word therefore seems to be star. (English word Night came from Sanskrit ‘Nakt’
English word star is derived from Sanskrit ‘tara’ for star.
xxx
The Nakshatras as stars in the Rig Veda and later-
The sense of star appears to be adequate for all or nearly all the passages in which Naksatras occur in the Rig Veda. The same sense occurs in the later Samhitas also; the sun and the Naksatras mentioned together; or the sun, moon, the Naksatras or the moon and the Naksatras or the Naksatras alone .
–Page 409, volume 1, Vedic Index
For al the above, both of them, have given references from the Vedic literature.
MY COMMENTS
I am going to comment on only one thing in the above passage.
There is nothing interesting if some poet sings about ‘twinkle, twinkle little star up above the world so high’.
There is nothing significant if a poet sings about star’ like a diamond in the sky ‘ with moon. A child even can sing about it. Throughout Tamil and Sanskrit literature we read star girls are after moon man, in Hindu mythology moon is masculine and stars are feminine. Moon is always loved by 27 wives/ 27 stars
But when one sings about ‘sun and star together’ one raises one’s eyebrow. One wonders what! stars tiny specs of light in the night and sun is million times brighter in the day!
But Vedic poets sing them together in
Atharva Veda – 6-10-3; Vajasaneyi Samhita 23-43 and in a few other places.
tā hi kṣatraṃ dhārayethe anu dyūn dṛṃhethe sānumupamādiva dyoḥ | dṛḷho nakṣatra uta viśvadevo bhūmimātān dyāṃ dhāsināyoḥ ||6-67-6
Here is Griffith’s translation 100 years ago-
“So, through the days, maintaining princely power, ye prop the height as it were from loftiest heavens.
The star of al the gods, established filleth the heaven and earth with food of man who liveth”.
Star of All Gods
In the foot note Griffith says,
The Star of all Gods- SUN
In RV 7-86-1, the poet says
धीरा तवस्य महिना जनूंषि वि यस्तस्तम्भ रोदसी चिदुर्वी | पर नाकं रष्वं नुनुदे बर्हन्तं दविता नक्षत्रम्पप्रथच्च भूम ||RV 7-86-1
dhīrā tvasya mahinā janūṃṣi vi yastastambha rodasī cidurvī | para nākaṃ ṛṣvaṃ nunude bṛhantaṃ dvitā nakṣatrampaprathacca bhūma |
“Wise, verily, are creatures through his greatness who stayed ever , spacious heaven and earth asunder;
Who urged the mighty sky to motion, the Star of Old, and spread the earth before him”
Here also Griffith’s foot note says the star = the SUN
Nowadays we praise someone who has achieved something with the words YOU ARE A STAR. Sometimes we comment she is a star or he is a star. This expression is found for the first time in the Rig Veda
It is interesting to see that one compares star with sun another praises sun as star. So, we can boldly conclude that the Vedic rishis knew sun is a star.
ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள் (Post No.7525)
WRITTEN BY London Swaminathan
Post No.7525
Date uploaded in London – – 2 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிராகிருதம் வந்ததா அல்லது பிராக்ருதத்தில் இருந்து சம்ஸ்க்ருதம் வந்ததா என்று வாத ப் பிரதிவாதங்கள் வருவதுண்டு. அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தனவா என்று கேட் போரும் உளர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கவிஞர்கள், சம்ஸ்க்ருதம் மூல மொழி என்று கவி பாடிவிட்டுச் சென்றனர் (மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் உள்ள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்)
ப்ரக்ருதி என்பது இயற்கையில் உளது . அதிலிருந்த வந்தது பிராகிருதம் என்பர் சிலர். இல்லை, இல்லை புரா + க்ருதம் =முன்னரே இருந்தது ப்ராக்ருதம் . பின்னர் செம்மை செய்யப்பட்டது சம்ஸ்க்ருதம் என்பர் வேறு சிலர். பழைய கவிஞர்கள் சம்ஸ்க்ருதம்தான் முதலில் இருந்தது என்று சொல்லிவிட்டனர்.
இன்னும் சில அரை வேக்காடுகள் சம்ஸ்க்ருதம் என்ற பெயரையே பழைய இலக்கண வித்தகர்கள் செப்பவில்லையே என்று அங்கலாய்ப்பர். அத்தகைய அறிவிலிகளிடம் கேளுங்கள் செந்தமிழ் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உள்ளதா? என்று.
இன்னும் சிலர் கேட்பர். அது சரி. பிராகிருதம் என்று சொல்கிறீர்களே. எந்தப் பிராக்ருதத்தை ? என்று கேட்பர் . இன்று அதை ஆராய்வோம்.
எது ஒரிஜினல் பிராகிருதம்? எது உண்மையில் பிராகிருதம் அல்லது அபப்ராம்ஹஸம் என்பதிலும் பிராகிருத அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறது. சுருக்கமாய் சொல்கிறேன்.
முக்கிய ப்ராக்ருதங்கள் ஆறு. அவை திரிந்தால் வருவது அபப்பிராம்சம்; ஆக மொத்தம் ஏழு.
தமிழர்கள் சொல்வார்கள் நாநிலம் ; அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று. ஐயா! பின்னர் பாலை நிலம் பற்றியும் பாடிவிட்டு 4 என்று சொல்கிறீர்களே என்றால், நாலு நிலமும் இயல்பு கெட்டுத் திரிந்து போனால் கிடைப்பது– மிஞ்சுவது — பாலை என்று பகர்வர். அதுபோலத்தான் அபப்ராஹ்ம்ஸம் .
மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில் தோன்றிய மொழி – மராட்டி.
அர்த்த மாகதியில் இருந்து பிறந்தவை – குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, மேற்குப் பகுதியில் பேசும் ஹிந்தி.
பைசாசி வகை பிராக்ருதத்தில் இருந்து பிறந்த மொழிகள் – வங்காளி , ஒரியா , பிஹாரி, அஸ்ஸாமிய மொழிகள். இதிலிருந்தே நேபாளி மற்றும் இமயமலை மொழிகள் பிறந்திருக்கலாம் என்றும் சிலர் உரைப்பர் .
பாலி
த்ரி பிடகம் (மூன்று பெட்டிகள் ) என்ற புத்த மத புனித நூல்களும் ஜாதகக் கதைகளும் இலங்கை வரலாறு விளம்பும் மஹாவம்சம், தீப வம்சம் முதலியனவும் பாலி வகை பிராக்ருதத்தில் உள்ளன.
2300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது; 14ம் நூற்றா ண்டுவரை இலக்கியம் படைத்த மொழி இது.
அர்த்தமாகதி
ஸ்வேதாம்பர பிரிவு , அதாவது வெள்ளாடை உடுத்தும் — சமணர் பிரிவின் ஆகமங்கள் , அர்த்தமாகதி ப்ராக்ருதத்துள் உள . இரண்டாம் நூற்றாண்டு முதல் இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றது. நீதிகளை போதிக்கும் 115 நூல்கள் இருக்கின்றன .
சௌரசேனி
கிருஷ்ண பரமாத்மா உலவிய மதுராபுரியைத் தலை நகராகக் கொண்ட தேசம் சூரசேனம் . அங்கே பிறந்தது இது. சம்ஸ்க்ருத நாடகங்களில் விதூஷகர்களும் பெண்களும் இதில் கதைப்பர் . விதூஷகர் என்னும் நகைச் சுவை நடிகராக பிராமணர் வேடம் போடுவோர் நடிப்பர் .
இங்கே இரண்டு கருத்துக்களைச் சொல்கிறேன். திரைப்படங்களில் என் பிரமணர்களைக் கிண்டல் செய்யும் பாத்திரங்களில் போட்டுவிக்கிறார்கள் என்று சிறு வயதில் நான் வியந்ததுண்டு . இது 2300 ஆண்டுகளாக நாடகத்தில் பின்பற்றப்படும் உத்தி என்பது சம்ஸ்கிருதம் கற்ற பின்னரே என் புத்திக்கு எட்டியது .
இரண்டாவது கருத்து இந்துக்களின் அபார அறிவு பற்றியது. ஒரு கேளிக்கை என்றால் – திரைப்படம் , நாடகம் என்றால் — அதில் காமெடியும் இருக்க வேண்டும் என்பதை சம்ஸ்கிருத நாடகம் உலகிற்கு கற்பித்தது. தமிழில் – பழந் தமிழில்– எழுதப்பட்ட நாடகம் எதுவும் நமக்கு கிடைத்தில.
கேரளத்தில் கோட்டயம் தம்புரான் எழுதிய கதகளி நாடக வசனத்தில் சௌரசேனி பிராக்ருதத்தில் ஊர்வசியின் அழகை வருணித்துள்ளார் என்று எல்.சுதர்மணி எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
நாடகத்தின் பெயர்- நிவாட கவச காலகேய வைபவ. இந்தப் பிரிவில் சத்தகம் என்று அழைக்கப்படும் இலக்கியம் வரும். முக்கிய படைப்புகள் – ராஜசேகர எழுதிய கற்பூர மஞ்சரி, கேரள கவிஞர் ஸ்ரீகண்ட கவி எழுதிய சந்திரலேகா, கண ஷியாம எழுதிய ஆனந்த சுந்தரி, விஸ்வேஸ்வர எழுதிய சிருங்கார மஞ்சரி , நய சந்திர எழுதிய ரம்பா மஞ்சரி .
மஹாராஷ்ட்ரி
இந்த வகை பிராகிருதம் கொஞ்சம் கடினமானது மகாராஷ்ட்ர மாநிலப் பகுதியில் பேசப்பட்டது. இலக்கண கர்த்தாக்கள் பிராகிருதம் என்று சொல்லும்போது அது மஹாராஷ்ட்ரியை மட்டுமே குறித்தது.மிகவும் இனிமையான மொழி என்பதால் சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள் பாடுவது மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில்தான் .
மிகவும் புகழ்பெற்ற ஹாலன் என்ற மன்னன் தொகுத்த காதா சப்த சதி , சமய சுந்தராகினி எழுதிய காதா சஹஸ்ரி, பிரவரசேனா எழுதிய சேது பந்தன என்பன இதிலுள்ள முக்கிய படைப்புகள். வரருசி படைத்த பிராகிருத பிரகாச, வாக்பதிராஜனின் கௌடவாஹோ முதலியனவும் புகழ்பெற்ற நூல்கள் .
பைசாசி
இலக்கண வித்தகர் அனைவரும் குறிப்பிடும் இம்மொழியில் உள்ள படைப்புகள் எதுவும் கிடைத்தில. குணாட்யர் என்பவர் எழுதிய பிருஹத் கதா — பெருங்கதை – இதில் இருந்ததாகவும் சொல்லுவர். போஜன் என்பவர் சிருங்கார ப்ரகாசாவில் கொடுத்த மேற்கோள்கள் மூலம் சில பகுதிகள் கிடைத்தன.
அபப்ராஹ்ம்ச
இலக்கிய நடையில் இல்லாமல் கொச்சை மொழியில் இருந்த எல்லா வகை பிராகிருத எழுத்துக்களும் இதில் அடங்கும். தண்டி என்ற புலவர் மொழிகளை பற்றிப் பேசுகையில் மொழிகளை நான்கு வகையாகப் பிரிப்பார் — சம்ஸ்க்ருதம், பிராகிருதம், அப பிராஹ்ம்சம் , மிஸ்ரம் என்று . இதை தற்கால வடஇந்திய மொழிகளின் ‘மூலம்’ எனலாம். இதிலும் கூட பின்னர் சில படைப்புகள் தோன்றின.
மஹாகவி ஸ்வயம்பூதேவ் , தேவசேன, புஷ்ப தந்த , ஹேமசந்திர, அப்துர் ரஹ்மான் முதலியோர் 17-ம் நூற்றாண்டு வரை இதில் எழுதினர் . இலக்கண வரம் பற்ற மொழி என்பதே இதன் பொருள். காட்டுவாசி ஒருவன் சொல்லும் பதில் விக்ரம ஊர்வசீயம் என்ற காளிதாசன் நாடகத்தில் வருகிறது. அந்தக் கொச்சை மொழி இவ்வகைத்தே. அப்துர் ரஹ்மான் என்பவர் மூல்டான் நகரைச் சேர்ந்தவர். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
மாகதி
மகத தேசத்தில் பேசப்பட்ட பிராகிருதம். இப்போதும் பிஹாரில் ஏழு மாவட்டங்களில் மகதி பேசப்படுகிறது . ஜார்கண்ட் மாநிலத்தின் சோடா நாகபுரி பகுதியில் பழங்குடி மக்கள் கலப்பட மாகதி பேசுகின்றனர். எல்லாம் இந்தி போலவே இருக்கும். அத்துடன் ஒரு இயா , வா, ஈய என்பன சேரும். அசோகரின் கல்வெட்டுகள் உள்ள மொழி. மௌர்யர்களின் ராஜாங்க மொழி. புத்தர் பேசிய மொழி என்றும் மொழிவார்கள்.
xxx
நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனி சம்ஸ்க்ருதம், பிராக்ருதம் ஆகிய இரண்டையும் ‘ஆர்ய பாஷை’ என்பார் . ஆர்ய என்பது மாக்ஸ்முல்லர் வகையறா பயன்படுத்திய இனவெறிச் சொல் அல்ல. சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் கற்றோர், பண்புடையோர் மொழி என்பதாகும். பரத முனி இவ்விரு மொழிகளை அரசர் மொழி என்று சொல்லிவிட்டு, விபாஷா என்ற பட்டியலில் திராவிட, ஆந்திர, சண்டாள , சகர , சைபர், ஆபிர மொழிகளைச் சேர்க்கிறார். அபிநவ குப்தா என்பவர் இவைகளை ‘சிதைந்து போன பிராக்ருதங்கள்’ என்று சொல்லிவிட்டு , ‘காட்டுவாசிகளின் மொழி’ என்றும் செப்புவார்.
தொல்காப்பியர் கூட செந்தமிழ் பேசக்கூடிய சிறு பகுதியை வரையறை செய்துவிட்டு ஏனைய பகுதிகளைக் கொடுந்தமிழ் பகுதிகள் என்பார் . பரத முனி , அபிநவ குப்தர் ஆகியோர் கருத்துக்களையும் அப்படியே நோக்க வேண்டும்.
You must be logged in to post a comment.