16 வகை தானியப் புதிர் (Post No.5617)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 21-27

Post No. 5617

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கூலம் எட்டு என்றும் 16 என்றும் பகர்வர். இந்தக் கட்டத்திலுள்ள

16 வகைத் தானியங்களையும் கண்டு பிடியுங்கள். கீழேயே விடையும் உளது.

16 types of grains

லை ழு ந் து
சா ரா கி கு மொ
மை நெ ங் ச்
பு ல் று சை
ள் ரை
று ளு ள் கொ தோ தி னை

 

கடலை, சா மை , ப ய று, நெல், புல் , ராகி, வரகு, இறுங்கு, தினை, உழுந்து, எள்ளு, கொள்ளு, மொச்சை, அ வரை, தோரை, துவரை,

புல் என்பதைப் புல்லரிசி என்று கொள்ளலாம்.

 

–subham–

HINDU FESTIVALS CROSS WORD PUZZLE (Post No.5616)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 16-53

Post No. 5616

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

IN THIS HINDU FESTIVAL CROSSWORD PUZZLE, THERE ARE OVER 15 NAMES OF HINDU FESTIVALS. JUST TO HELP YOU FIND THE WORDS, I HAVE NUMBERED THE STARTING POINTS.

 

I HAVE GIVEN THE SOLUTION BELOW THE PUZZLE.

1 2 3 4
XXX 5 6
7
8
9 10 11
12
13 14
15
16
17

SOLUTION:–

 

HINDU FESTIVAL NAMES

1.RAKSHABANDAN; 2.SHIVRATRI; 3.NAVARATRI; 4.ONAM

5.HOLI; 6.DIWALI; 7.RAMNAVAMI; 8.VIJAYADASAMI

9.DURGA PUJA; 10.UGADI; 11.BOGI

12.NAGAPANCHAMI; 13.MELA;  14.JANMASHTAMI;

15.EKADASI; 16.SANKRANTI (PONGAL); 17.GANESH CHATURTI

XXX  KUMB MAY BE JOINED WITH MELA (NO.13)

1

R

A K S2 H A B A N D H A N3 O4
K H

5

O L I L A W I D6 A N
U I M A V A N M A R7 V A
M V8 I J A Y A D A S A M
B D

9

U

10

R G A P U J A R 11

B

12

N

A G A P A N C H A M I A O
I M

13

A T H S A M N A J

14

T G
E D R E

15

K A D A S I R I
L I I T N A R K N A S

16

I I
17

G

A N E S H C H A T U R T I

–SUBHAM–

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை? (Post No.5614)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 2 November 2018

Time uploaded in London – 6-58 AM (GMT)

Post No. 5614

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 2-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஐந்தாம்) கட்டுரை  

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

ச.நாகராஜன்

1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தார். ஆனால் புதிதாக அவர் கண்டுபிடித்த அமெரிக்காவிற்கு அவர் பெயர் சூட்டப்படவில்லை, ஏன்?

ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாட் க்ராஃபோர்ட் இது பற்றிய புதிய ஆய்வு ஒன்றை நடத்தி தனது கருத்துக்களை இப்போது முன் வைத்துள்ளார்.

ஐரோப்பியர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளுக்குப் பெயர் சூட்டியபோது அவர்கள் கொலம்பஸை மதிக்காததும் அதே சமயம் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி செய்த பிரச்சாரமுமே தான் அவர் பெயர் அமெரிக்காவிற்குச் சூட்டப்படாததற்குக் காரணம் என்று மாட் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, கொலம்பஸ் தான் கண்டுபிடித்த நாடு ஆசியாவைச் சேர்ந்தது என்று தான் இறக்கும் நாள் வரை உறுதியாக இருந்ததோடு அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அமெரிகோ வெஸ்புகியோ அது ஆசியாவைச் சேர்ந்த நாடு அல்ல என்று திடமாகத் தெரிவித்தார்.

1451ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனிவாவில் பிறந்த கொலம்பஸ் 1476ஆம் ஆண்டு தனது 25ஆம் வயதில் போர்ச்சுகலுக்குச் சென்றார். அந்தக் காலகட்டம் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் காலமாகத் திகழ்ந்தது. அதற்காக பல்வேறு வரைபடங்களைத் தயாரிக்கும் வணிகத்தில் கொலம்பஸ் ஈடுபட்டார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த கடல் பயணிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த மடெய்ரா தீவுகள் மற்றும் அஜோரஸ் ஆகிய புது இடங்களைக் கண்டுபிடித்தனர்.

 

அந்தச் சமயம் ஐரோப்பாவிற்கு இந்தியாவை அடைய ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கும் தேவை அதிகரித்திருந்தது.  ஏனெனில் ஆடோமேன் சாம்ராஜ்யம் ஐரோப்பிய மாலுமிகள் கான்ஸ்டாண்டிநோபிள் வழியாகச் செல்லும் வழியை அடைத்ததோடு வட ஆப்பிரிக்காவில் செங்கடல் வழியே செல்வதையும் வெற்றிகரமாகத் தடுத்தது.

 

இந்தச் சமயத்தில் தான் கொலம்பஸ் மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று ஒரு புது உத்தியைத் தெரிவித்தார். அப்போது உலகம் உருண்டை என்ற கொள்கை உண்மை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

உலகம் தட்டையானது என்ற கொள்கையை முன் வைத்து அதைத் தன் பிரபலமான எழுத்துக்களால் வலியுறுத்தி வந்த வாஷிங்டன் இர்விங்கின் கருத்து தவறானது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட உலக மக்கள் புதிய கடல் வழிகளைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் கொலம்பஸின் மேற்கு நோக்கிய பயணத் திட்டத்தை போர்ச்சுக்கல் அரசு நிராகரித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, கொலம்பஸ் இதற்குத் தகுதியானவர் இல்லை என போர்ச்சுக்கல் கருதியது. இரண்டாவதாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு இடையில் உள்ள தூரத்தை அவர் மிகக் குறைவாகத் தப்பாகக் கணித்திருக்கிறார் என போர்ச்சுக்கல் நம்பியது.

ஆகவே நிராசையடைந்த கொலம்பஸ் தன் திட்டத்தை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்று அங்கு முன் வைத்தார். ஸ்பெயின் அரசு இதனால் ஏற்படும் வர்த்தக லாபத்தைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு வழியைக் கொலம்பஸ் கண்டுபிடித்தால் இந்தியாவின் வைசிராயாக அவர் நியமிக்கப்படுவார் என்ற உறுதி மொழியைத் தந்தது.

இதனால் மகிழ்ந்த கொலம்பஸ் பஹாமா தீவு  வழியே பயணிக்க ஆர்ம்பித்தார். கியூபாவில் முதலில் கால் பதித்தார். பின்னர் தென் அமெரிக்காவை அடைந்தார்.

ஆனால் தான் அடைந்தது ஆசியாவைத் தான் என்று உறுதிபட அவர் நம்பினார். இதன் மூலம் ஸ்பெயின் அரசு, தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க தனக்குப் பெரும் பதவியையும் செல்வத்தையும் அளிக்கும் என அவர் நம்பிக் கொண்டிருந்தார்.

 

ஆனால் இதே சமயம் போர்ச்சுக்கலைச் சேர்ந்த வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியே சென்று இந்தியாவை அடைந்ததோடு வெற்றிகரமாகத் திரும்பியும் வந்து விட்டார். 1497 முதல் 1499 முடிய நடந்த இந்தப் பயணத்தால் ஸ்பெயினை போர்ச்சுகல் தோற்கடித்து கடல்வழிப் பயணங்களில் புதிய சாதனை படைத்துத் தலைமை இடத்தை அடைந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த ஸ்பெயின் அரசு கொலம்பஸின் தோல்விக்காக அவரைக் கைது செய்து ஸ்பெயினுக்குத் திருப்பி அழைத்து வரத் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருதுகள் அனைத்தையும் உடனடியாக ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்தது.

1493ஆம் ஆண்டு கொலம்பஸ் தனது ஆதரவாளரான லூயிஸ் டி சண்டாஞ்ஜெலுக்கு தான் கண்டுபிடித்த புது நாடு பற்றி ஒரு  கடிதம் எழுதினார்.

ஆனால் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி (1459-1512) போர்ச்சுகல் கொடியைப் பறக்கவிட்டுத்  தன் கப்பலைச் செலுத்தி 1499ஆம் ஆண்டு புதிய உலகைக் கண்டுபிடித்தார். அதைத் தன் கடிதம் மூலம் அவரை ஆதரித்த பிரபுவான லோரென்ஸோ டி மெடிசி என்பவருக்குத் தெரிவித்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களின் பாலியல் பழக்கங்கள், இதர வாழ்க்கை முறைகளையும அவர் சுவைபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்டு ஜெர்மனியைச் சேர்ந்த நிலப்படத் தயாரிப்பாளரான மார்டின் வால்ட்சீமுல்லர் என்பவர் பெரிதும் ஆர்வமுற்று அமெரிக்காவின் முதல் வரைபடத்தைத் தயாரித்தார். அவர் தான் முதன் முதலில் அமெரிக்கா என்ற பெயரைச் சூட்டினார்.

அமெரிகோவின் பெயரை கௌரவிக்கும் வண்ணம் இந்த நிலப்பரப்பிற்கு அமெரிக்கா என்ற பெயரை மார்டின் சூட்டினார். இதனைக் கண்டுபிடித்த பெரும் திறமைசாலியான அமெரிகோவின் நினைவாக இந்தப் பெயரால் இந்த நிலப்பரப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றார் அவர்.

இதைத்  தொடர்ந்து ஆயிரத்து ஐநூறுகளில் அமெரிக்கா என்ற பெயர் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. கொலம்பஸின் பெயர் சூட்டப்படாமல் அமெரிக்காவிற்கு அமெரிகோ வெஸ்புகியின் பெயர் சூட்டப்பட்ட கதை இது தான்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சார்லஸ் குட்இயர் (பிறப்பு 29-12-1800 மறைவு: 1-7-1860) வல்கனைஸிங் உத்தியைக் கண்டுபிடித்த பெரும் கண்டுபிடிப்பாளர். ரப்பரைப் பற்றி அவர் அறியாத விஷயம் இல்லை. என்றாலும் அவர் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வியையே பலமுறை கண்டார். இறுதியில் வென்றார்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். ஒரு முறை நியூயார்க் அருகிலிருந்த க்ரீன்விச்சில் அவர் வாழ்ந்தபோது அவரது மைத்துனரைச் சந்தித்தார். “எனக்கு பத்து டாலர் கொடுங்கள். என்னிடம் இருந்த கடைசி சென்டையும் செலவழித்து விட்டேன். வீட்டிற்குத் திரும்பப் பணம் வேண்டும்” என்றார் அவர்.

“இப்படியெல்லாம் வாழக்கூடாது. இப்படி இருந்தால் வாழவே முடியாது” என்றார் மைத்துனர். “நிச்சயமாக ஒரு நாள் பெரிய ஆளாக ஆவேன்” என்று பதிலளித்தார் குட் இயர்!

தனது இளங் குழந்தையான மகனின் இறுதிச் சடங்கு செய்யக் கூட அவரிடம் பணம் இல்லை. வல்கனைஸிங்கை அவர் கண்டுபிடித்தாலும் கூட அதன் பேடண்ட் உரிமையைப் பெற அவர் போராட வேண்டியதாயிற்று. சிறைவாசமும் அனுபவிக்க நேரிட்டது. நோய்வாய்ப்பட்ட தனது மகளைக் காண நியூயார்க் சென்ற போது வழியிலேயே தனது மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அவர் கேட்க நேரிட்டது.

ஆனால் இவ்வளவு சோகத்திலும் அவர் மனம் கலங்கவில்லை.

தனது வாழ்நாளில் தன் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய அவர் அதற்காக உழைத்தார்; போராடினார். இறுதியில் வென்றார். வாழ்நாளின் இறுதிக்காலத்தில் அவர் பெரிய செல்வந்தராக ஆனார்.

“டாலர் சென்ட் என்ற கணக்கில் வாழ்க்கையை மதிப்பிடக்கூடாது. நான் விதைத்து மற்றவர்கள் பழங்களை அனுபவித்தனர் என்று நான் புகார் கூறவில்லை. ஒரு மனிதன் விதைத்து பழங்களை யாரும் அனுபவிக்கவில்லை என்கின்ற போது தான் அவன் வருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார் அவர். எத்துணை பரந்த மனப்பான்மை அவருக்கு இருந்தது என்பதை இதிலிருந்தே அறியலாம்.

***

University and College Anecdotes (Post No.5613)

 

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 17-43

Post No. 5613

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

GREATNESS OF HARVARD

Dr Charles W Eliot, the eminent educator of Harvard whose fate it has been to be dubiously immortalised by a five foot shelf of books, was once asked how Harvard had gained its prestige as the greatest storehouse of knowledge in the nation.

In all likelihood , said Dr Eliot slyly, it is because the freshmen bring us so much of it, and the seniors take away so little.

Xxx

 

SAVE OUR TOBACCO
Attorney General Seymour of Virginia snorted at the establishment of William and Mary College, which was founded not only to inculcate learning but to save souls? He cried.

Damn your souls. Make tobacco.

Xxx

COW AND COLLEGE

Sir William B—, being at a parish meeting, made certain proposals which were objected to by a farmer. Highly enraged, Sir, said he to the farmer, do you know, sir, that I have been at two universities, and at two colleges in each university?

Well, sir, said the farmer, what o’ that? I had a calf that sucked two kye, an’ the observation I made was, the mair he sucked the greater calf he grew.

Xxx

100 years to make an oak tree!
When James A. Garfield was president of Hiram College a man brought up his son to be entered as a student. He wanted the boy to take a course shorter than the regular one.

My son can never take all those studies, said the father.
He wants to get through more quickly. Can’t you arrange it for him?
Oh, yes, said Mr Garfield, He can take a short course: it all depends on what you want to make of him. When god wants to make an oak he takes a hundred years, but he only takes two months to make a squash.

Xxx

ADVENTURE OF A TOURIST GUIDE
A guide, New at his business, was showing a group of tourists around Oxford. Conscientiously, he pointed out all the places of interest. Coming in front of one of the buildings he paused and said,
‘And this is Trinity Hall, where the president of the college, the famous Benjamin Jowett, lives.’
Glancing around at the upturned faces, the guide then stooped and picked up a handful of gravel and threw it at a second story window. A red faced and a furious man opened the window almost immediately and peered out.

And that is president Jowett himself, said the guide in a tone of voice as though he had just completed a task well done.

Xxx

MISS

Hendrik Willem Von Loon was visiting Cambridge.
That, said someone who was showing him around the university, is Miss Jones, pointing to a formidable looking female striding along before them. She is the mistress of Ridsley Hall.

Who, asked Von Loon, is Ridsley Hall?

Xxx Subham xxx

ஸம்ஸ்க்ருதம் சாகாது! சாகவும் முடியாது!! (Post No.5612)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 1 November 2018

GMT Time uploaded in London – 8-53 am

Post No. 5612

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஸம்ஸ்க்ருதம் செத்தால் தமிழும் சாகும். ஏனெனில் தமிழ் இலக்கியம், தமிழ் அகராதி, நிகண்டு முழுவதும் பிரிக்க முடியாத அளவுக்கு சம்ஸ்க்ருதச் சொற்கள்!!

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் எழுதிய ‘மைத்ரீம் பஜத’ என்ற உலக சமாதான, உலக அமைதி, மக்கள் நல் வாழ்வு பற்றிய ஸம்ஸ்க்ருதப் பாடலை திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி , ஐ.நா.சபையில் பாடியதன் மூலம் ஸம்ஸ்க்ருத ஒலி உலக நாடுகள் முழுவதிலும் ஒலித்தது.

ஸம்ஸ்க்ருதத்தில் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் போன்ற தனிப்பாடல் திரட்டு நூல்கள் ஏராளம், ஏராளம். அதில் அதி பயங்கர ‘செக்ஸி’ பாடல் முதல் நக்கல், கிண்டல் பாடல்கள் வரை பல்லாயிரம் உள.

யார் எல்லாம் ஸம்க்ருதத்தைக் கிண்டல் செய்கிறார்களோ அவர்கள் பெயர்கள், அப்பா பெயர்கள், அம்மா பெயர்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருதம் என்றும் காட்டினேன்.

 

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ, திருக்குறளில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அகற்றினாலோ அவை செத்துவிடும் என்றும் காட்டினேன்.

தமிழில் இது வரை ஒரு அகராதியோ, நிகண்டோ வரவில்லை என்பதையும் சொல்லுவேன். பக்கத்துக்குப் பக்கம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!! ஆனால் நாம் அதை தமிழ் நிகண்டு, தமிழ் அகராதி என்போம்!!

நிற்க.

இன்றும் கூட ஸம்ஸ்க்ருதத்தில் நையாண்டி பாடல் எழுத முடியும் என்று மதுரை அன்பர் எழுதியதை எனது சகோதரர் (வாட்ஸ் அப்பில் வந்ததை எனக்கு) அனுப்பினார். இதோ இட்லி பற்றிய ஸம்ஸ்க்ருத  கவிதை:–

 

–subham–

மீ டூ?! Me Too – ஓடாதீங்க, படியுங்க!! (Post No.5610)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 1 Novemberr 2018

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

Post No. 5610

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

ச.நாகராஜன்

Me Too? மீ டூ?!  – ஓடாதீங்க, படியுங்க!!

Me Too பற்றி ஒரு ஜோக் சொல்லப் போறேன்னு சொல்ல வந்தேன். அதற்குள் இப்படி ஓடினா, எப்படிங்க!

கொஞ்சம் மேலே படிங்க!

ஜோக் இது தான்! கார்ட்டூனில் வந்தது இது.

கணவன் அலுவலகம் செல்லும் போது “ ஐ லவ் யூ” என்று சொல்லி விட்டுக் கிளம்ப ஆயத்தமானான்.

மனைவி Me Too என்கிறாள்.

அவ்வளவு தான், அலறி அடித்துக் கொண்டு கணவன் ஓடுகிறான்!

நல்ல ஜோக், இது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை!

*

மீ டூவை ஒட்டி எழுந்த வீடியோக்களை இணையதளத்தில் காணலாம்.

நாளுக்கு ஒரு – இல்லை, பல – வீடியோக்கள் –  காமவெறிக் கவிஞரைப் பற்றிய பரபரப்பூட்டும்  செய்திகளைத் தருகின்றன.

‘உன் இடுப்போ ஒரு உடுக்கை

உன் மார்போ  ஒரு படுக்கை’

என்ற ‘தமிழை வாழ வைக்கும் மகத்தான தமிழ் காமக் கொடூரக் கவிஞர்’ என்னை நோக்கிப் போனில் பாடினார் என்று ஒரு பெண் சொல்லும் வீடியோ!

பிரபல பாடகர் ஒருவரின் மருமகள், ‘அந்த ஆள் அப்படிப்பட்டவர் தான்’ என்று கூறும் ஒரு வீடியோ!

ஆண்டாளைப் பழித்த அவனுக்கு ஆயுள் முழுவதும் சாபம் தான் என்று ஒரு வீடியோ!

காமக் கொடூரக் கவிஞரின் மனைவியே அவர் நடத்தும் பெண்கள் ஹாஸ்டலில் அந்த மனிதர் வரும் போதெல்லாம் எல்லாப் பெண்களும் கதவை சாத்திக் கொண்டு ரூமிலேயே இருக்க வேண்டும், வெளியில் இருக்க வேண்டிய பெண்கள் மார்பில் துப்பட்டாவைக் கண்டிப்பாக மார்பில் போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்ததாக ஒரு வீடியோ!

ஏகப்பட்ட பெண்கள் அந்தக் கொடூரனால் அவஸ்தைப் பட்டதாகத் தனக்கு ஏராளமான ட்விட் வருவதாக ஒரு வீடியோ!

சொல்லி மாளவில்லை, வீடியோக்களின் எண்ணிக்கை.

இதை வழக்கம் போல பார்ப்பனீயமாக மாற்ற முயலுகிறது இன்னொரு வீடியோ!

தடவிப் பார்க்க ஆசைப்படும் போது பார்ப்பனீயம் தெரியவில்லை, அதைத் தட்டிக் கேட்டால் பார்ப்பனீயமா என்று இன்னொரு வீடியோ!

பிரபல நடிகர் இப்படிப்பட்ட கொடூரங்களைத் தட்டிக் கேட்க நான ஒரு தளம் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லும் ஒரு வீடியோ;

அட, உனக்கே ஒரு மீ டூ வரப்போகிறது என்று அவரை நையாண்டி செய்து இன்னொரு பிரப்ல மாஜி வில்லன் நடிகரின் வாரிசு முழங்கும் இன்னொரு வீடியோ!

அட, நல்ல தமிழகமே! உனக்கு இப்படி ஒரு சாபக் கேடா!

நல்லவரை வீட்டிற்கு அனுப்பியதன் பலனை 1967லிருந்து அனுபவிக்கிறாயா!

*

ஒரு அரைவேக்காடு – கிறிஸ்தவ திராவிட இயக்கப் பேர்வழி – சின்ன வயது – கண்டபடி தமிழ்நாட்டாரைப் பேசும் ஒரு வீடியோ! அதில் அந்தப் பண்பாடு கெட்டவன் ரமண மஹரிஷியைப் பற்றியும் பேசுவதைக் கேட்ட பின்னர் தமிழகத்தின் மொத்த அவலமும் தெரிய வருகிறது.

பிரபல அப்பா நடிகரைப் பற்றி மகள் உண்மைகளைக் கொட்டிப் பேசும் வீடியோ!

பிரபல நடிகை பரிதாபமாக நடு இரவில் முழித்துப் புலம்புவதாக – “கேள்விப்படுவதாக” – ஒரு வீடியோ!

பழைய கால ஹீரோ நடிகர் – இன்று பரிதாபகரமான நிலையில் இருப்பதாக ஒரு வீடியோ!

முஸ்லீம்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

கிறிஸ்தவர்கள் தங்கள் பெயரை மறைத்துக் கொண்டு ஹிந்துப் பெயரில் வலம் வரும் லிஸ்டை போட்டோவுடன் காண்பிக்கும் ஒரு வீடியோ!

எல்லாம் ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் நீடிக்கும் அவ்வளவு தான்!

அதற்குள் செய்ய வேண்டிய டாமேஜை செய்து முடித்து விடும்!

*

இவற்றில் எத்தனை உண்மையோ!

எத்தனை பொய்யோ!

ஒரு தொழில்நுட்ப உத்தியை இந்த அளவு கேவலமாக மாற்றும் “சிறந்த பண்பை” இன்றைய தமிழகம் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கிறதா?

காமக் கொடூரக் கவிஞன் போன்றவரை எக்ஸ்போஸ் செய்ய வீடியோவின் துணையை நாடினேன்; மீடியாவை அழைத்து ‘ மீ டூ’ செய்தேன் என்றால் புரிகிறது;

ஆனால் இதையே வெறுப்பை வளர்க்கும் கிறிஸ்தவ, ஜிஹாதி, கம்யூனிஸ, தீய திராவிட சக்திகள் முதலியவற்றின் கருவியாக மாற்றும் போது தான் மனம் கசக்கிறது!

*

ஆபாசமாக எழுதும் மஞ்சள் பத்திரிகையான ‘இந்துநேசனை’ கண்டு கொதித்து சின்ன அண்ணாமலை அருள் என்ற கமிஷனரிடம் ரிபோர்ட் செய்ய, அவர் ஒரே நாளில் அந்தப் பத்திரிகையைத் தடை செய்ததை சின்ன அண்ணாமலை புத்தகத்தின் வாயிலாகப் படித்து அறிகிறோம்.

மஞ்சள் பத்திரிகை ஒழிந்தது.

இப்போது ஒரு தொழில்நுட்ப உத்தியாக மஞ்சள் வீடியோ மலர்கிறதோ?!

மஞ்சள் வீடியோ தமிழகத்தை மஞ்சள் தமிழகமாக ஆக்கி விடுமோ?!

’இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்’, மீ டூ இயக்க வெளிப்பாடுகள் நிச்சயம் அவசியமே!

ஆனால் இதை பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால் திசை திருப்புவோர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டியது அவசியம் அல்லவா!

இதற்கு இன்றைய சட்டத்தில் இடமில்லையா, அல்லது இடமிருந்தும் அமுல் படுத்த மனம் இல்லையா?

சிந்திக்க வேண்டிய கேள்வி இது!

***

London Tribute to Iron Man of India (Post No.5609)

 

Compiled  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 October 2018

GMT Time uploaded in London – 21-16

Post No. 5609

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Evening Standard of London has published a beautiful short write up on Sardar Vallabbhai Patel on the day Prime minister Narendra Modi opened the tallest statue in the world. Here is what Lord Gadhia wrote in today’s paper
Today, the world’s tallest statue, the Statue of Unity, is unveiled in India by prime minister Narendra Modi, standing more than twice as high as the Statue of Liberty, the man honoured with this likeness is Vallabhbhai Patel — one of India s founding fathers and the first deputy prime minister of India.

His most visible legacy was integrating 552 princely states which had the option to join either India or Pakistan or remain independent. This required a blend of determination, skilful diplomacy and steely resolve, earning him the sobriquet the Iron Man of India.

The last viceroy Louis Mountbatten, refereed to this achievement in glowing terms. He said “had you failed, the results would have been disastrous “.

However, Patel was a man of many talents. He became India’s first deputy prime minister and home minister, served as the supreme commander of the armed force s ,and established the Indian Civil Service. But he started out as a freedom fighter.

Patel’s participation in the freedom movement came at considerable personal cost. He was imprisoned by the British many times, and his wife succumbed to cancer when he was 33. He gave up a place to study law in London to his elder brother. Although the latter fulfilled this ambition, coming top of his class in Middle Temple , and he even fortified the opportunity to become prime minister at Gandhi s request.

A 300 million pound statue might be viewed as a vanity project but some of the cost is being offset by collecting scrap Iron from farmers across India. And the monument is expected to become a major tourist attraction.

India is vast, and its 29 states could easily be separate countries, yet it has remained unified and a democracy— despite the many forces pulling in different directions.

This is India s real miracle, avoiding fragmentation. Although Patel s Statue metres, his reputation as the unifier of an independent India stands far taller.

Writer Baron Gadhia, an investment banker, was made a life peer in 2016

Evening Standard dated 31 October 2018

5.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? QUIZ க்விஸ்- பகுதி 5 (Post No.5608)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 October 2018

GMT Time uploaded in London – 7-47 AM

Post No. 5608

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மஹாராணிகள்

தமிழ்நாட்டு மஹாராணிகளை அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள்; சங்க இலக்கியம் ,கல்வெட்டுகளில் இருந்து புகழ்பெற்ற வரலாற்று, கல்வெட்டு அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது புஸ்தகத்தில் கொடுத்துள்ளார். கடைசி கேள்வியைக் காண்க

81.வர்த்தமான மஹாவீரரின் தாயார் பெயர் என்ன?

82.ஜவஹர்லால் நேருவின் சகோதரி; ஐ.நா.சபையில் பெரும்பதவி வகித்தவர் யார்?

83.முதலில் வக்கீல் தொழில் ஆற்றிய பெண்மணி யார்? பார்ஸி இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பணிபுரிந்தார்

84.இந்தப் பெண் அறிஞர் ஜனகனுடன் தத்துவ விஷயங்களை விவாதித்ததாக மஹாபாரதம் பகரும்; மைத்ரேயியும் அல்ல, கார்கியும் அல்ல; வேறு ஒருவர், யார் அவர்?

85.கேரளத்தில் பிறந்த தாவரவியல் அறிஞர்; இந்திய தாவரவியல் சங்கத்தில் அழியா இடம்பெற்ற மாது யார்?

86.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 115 புஸ்தகங்களை எழுதிக் குவித்த நாவல் ஆசிரியை, பத்திரிகையாளர் யார்?

87.மகனும் மன்னனுமான அலார்கா என்பவனுக்கு தர்ம உபதேசம் செய்த தாய் யார்? மார்கண்டேய புராணம் புகலும், புகழும் நங்கை அவள்.

88.காஷ்மீரின் 17ஆம் நூற்றாண்டு  பக்தை, கவிஞர் யார்?

89.முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி, விடுதலைப் போராட்ட வீராங்கனை; இந்திரா காந்தியின் தாய் யார்?

90.ஜெயப் ப்ரகாஷ் நாராயணனின் மனைவி; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியின் பெயர் என்ன?

91.புத்தர் சொற்பொழிவாற்றுகையில் சப்தம் போட்டவுடன் ஏழு வகை மனைவி பற்றி புத்தர் பட்டியல் கொடுத்தார்; யார் அந்த நங்கை?

92.முதல் குலோத்துங்க சோழனின் மனைவியர் இருவர் என்று கல்வெட்டுகள் பேசும்; அந்த மஹாராணிகள் எவரோ?

93.கவிஞர், பாடகி, 90-க்கும் மேலான இந்திப் படங்களில் நடித்த நடிகை யார்?

94.இந்தியாவின் பொற்காலம் எனப்படும் குப்த சாம்ராஜ்யத்தின் மஹத்தான பேரரசன் சந்திர குப்தன்; அவன் ஒரு இளவரசியை மணந்து மகத சாம்ராஜ்யத்தையே வரதட்சிணையாகப் பெற்றான். யார் அந்த சீதனக் காரி (ஸ்ரீ தனம் = சீதனம்)?

95.அப்பர் என்னும் திருநாவுக்கரசரை மீண்டும் சைவ சமயத்துக்கு மாற்றிய சகோதரி யார்?

96.கடைசி கேள்வியில் இணைக்கப்பட்டது

  1. காஷ்மீர் மஹாராணிகளுக்கு விஷேச கஜானா, சிறப்பு அதிகாரங்கள் உண்டு. அதன் கீழ் பத்மராஜாவின் முறைகேடான நிர்வாகத்தை ஒரே ஆணையில் குப்பையில் போட்ட மஹாராணியின் பெயர் என்ன?

98.பாண்டவர் இருவரின் தாய்; பாண்டுவுடன் வானப்ரஸ்தம் சென்று, அவருடன் காட்டில் உயிர் துறந்த புனிதை யார்?

96,99, 100.ஒவ்வொருவர் பெயர் சொல்லியும் யார், எவர் என்று

கேட்காமல் ஒரு தமிழ் மஹாராணி பட்டியல் தருகிறேன் . யார் என்று கண்டுபிடியுங்கள்.

சங்கா-

தரணி முழுதுடையாள்-

செம்பியன் மாதேவி-

அம்மங்கா தேவி-

குந்தவை-

மணக்கிள்ளி-

அவனி முழுதுடையாள்- மங்கையர்க்கரசி-

பதுமன் தேவி-

ரங்கபதாகை-

விலாசவதி-

பஞ்சவன் மாதேவி-

வானவன் மஹாதேவி-

தியாக பதாகை-

மதுராந்தகி-

குந்தவை

ஒரட்டானன் சொரப்பை-

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்-

 

ANSWERS:–

81.திரிஷலா

82.விஜயலெட்சுமி பண்டிட்

83.கார்னீலியா சோரப்ஜி

84.சுலபா

85.டாக்டர் ஜானகி அம்மாள்

86.கோதை நாயகி அம்மாள்

87.மதலஸா

88.ரூப பவானி

89.கமலா நேரு

90.பிரபாவதி தேவி

91.சுஜாதா

92.தியாகவல்லி, ஏழிசை வல்லபி

93.மீனா குமாரி

94.குமார தேவி

95.திலகவதி

97.சூர்யமதி

98.மாத்ரி

  1. 99, 100++++++

சங்கா- பல்லவ மன்னன் நந்திவர்மன் மனைவி

தரணி முழுதுடையாள்- விக்கிரம சோழன் மனைவி

செம்பியன் மாதேவி- கண்டராதித்த சோழனின் மனைவி

அம்மங்கா தேவி- ராஜேந்திர சோழன் மகள்; சாளுக்கிய ராஜ ராஜனின் மனைவி

குந்தவை- ராஜராஜனின் மகள்; சாளுக்கிய மன்னன் விமலாத்தனின் மனைவி

மணக்கிள்ளி- சோழன் மகள்; நெடுஞ்சேரலாதனின் மனைவி

அவனிமுழுதுடையாள்-மலாட குலப் பெண், இரண்டாம் ராஜ ராஜனின் மனைவி

மங்கையர்க்கரசி- சோழன் மகள்; பாண்டியன் நெடுமாறனின் மனைவி

பதுமன் தேவி- வேளாவிக் கோமான் மகள்; சேரலாதன் மனைவி

ரங்கபதாகை- பல்லவமன்னன் இராஜ சிம்மன் மனைவி

விலாசவதி- இராஜ சிம்மனின் மற்றொரு மனைவி

பஞ்சவன் மாதேவி- முத்தரையன் மஹிமாலயன் மனைவி

வானவன் மஹாதேவி- உத்தம சோழன மனைவி

தியாக பதாகை- விக்கிரம சோழன் மனைவி

மதுராந்தகி- முதல் குலோத்துங்கனின் முதல் மனைவி; அவள் இறந்த பின்னர் வேறு இருவரை மணந்தான்.

குந்தவை (ராஜராஜனின் தமக்கை)- வந்தியத்தேவன் மனைவி

ஒரட்டானன் சொரப்பை- உத்தம சோழனின் பல மனைவியருள் ஒருத்தி

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-இராஜ இராஜனின் தேவியரில் ஒருத்தி

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்- விக்ரம சோழனின் முதல் மனைவி; பின்னர் தியாக பதாகை

தமிழ் மஹாராணிகளின் கல்வெட்டுக் குறிப்புகளை டாக்டர் நாகசாமி புஸ்தகத்தில் காண்க.

–SUBHAM–

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?! (Post No.5607)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 31 October 2018

Time uploaded in London – 7-13 AM (British Summer Time)

Post No. 5607

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!

ச.நாகராஜன்

1

கபீர்தாஸருக்கு ஒரு குழப்பம் வந்து விட்டது.

திடீரென்று அவர் முன்னர் குருவும் கோவிந்தனும் ஒரே சமயத்தில் வந்து தோன்றி விட்டனர்.

இப்போது இந்த இருவரில் யாரை முதலில் நமஸ்கரிப்பது?

குருவையா?

அல்லது கோவிந்தனையா?

ஒரு நிமிடம் யோசித்த கபீர்தாஸர் கோவிந்தனை விடுத்து முதலில் குருவை நமஸ்கரித்தார்.

அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார் இப்படி:

“குரு கோவிந்த் தோனோ கடே காகே லாகௌ பாய் |

பலிஹாரி குரு ஆப்னே கோவிந்த் தியோ பஹாய் ||”

இந்த தோஹாவின் பொருள் :

குரு கோவிந்தர் இருவரும் என் வாசலில் வந்து நின்றால் யாரை வணங்குவது?

முதலில் குருவைத் தான் வணங்க வேண்டும். ஏனெனில் அவரில்லாமல் கோவிந்தரை எப்படி என்னால் அறிய முடியும்?

கோவிந்தனைக் காட்டி அருளிய குருவுக்கே எனது முதல் நமஸ்காரம் என்பது கபீரின் முடிவு.

Guru Govind dono khade kake lagu paay

Balihari Guru aapki Govind diyo batay.

Kabir wrote this verse to sing the glory of Guru, without whose help, one cannot cross this ocean of worldly life. He asks, “If both, Guru and God in form of Govind were to appear at the door, whose feet will I worship first?” He answers, “It has to be the Guru’s feet first, because without him, how would I have recognized (known) God?”

2

 

எம்பார் ஒரு சமயம் ஓரிடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ஏராளமான கூட்டம்.

யார் முதலில் ஆன்ம குருவாக இருக்கிறார் என்பதைப் பற்றி பிரசங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

கூட்டத்தில் ஒருவர், “சாஸ்திரங்களை குருவே உபதேசித்து அருள்கிறார். ஆகவே அவரே முக்கியம்” என்றார்.

இன்னொருவரோ, “ பெரிய மகான் தான் நம்மை ஆன்ம குருவைக் காண்பிக்கிறார்” என்றார்.

எம்பார் அவர்களை நிறுத்தினார்: “அது அப்படியில்லை” என்று கூறிய அவர் தொடர்ந்து சொன்னார்: “நம் உள்ளத்தில் உறைகிறானே, பரமன், நம் கண்ணுக்குத் தெரியாத அவன் தான் நல்ல விஷயங்களைத் தடை செய்து தடுத்து விடாமல் கண்ணுக்குத் தெரியும்படி நேரடியாக வந்து அருளும் குருமார்களையும், சேவைக்குத் தூண்டும் உதவியாளர்களையும் அவர்கள் சொல்வதை ஏற்றுச் செயல்படும்படி அருள்கிறான்.” என்றார்.

ஆக உள்ளத்தில் உறைந்து அனைத்து நல்ல காரியங்களையும் தூண்டி அருளும் நாராயணனை எப்போதும் தியானிக்க வேண்டும் என்பது அவரது அருளுரையாயிற்று.

இறைவன் தானே எப்போதும் நேரில் வருவதில்லை.

பெரியவர்கள், மகான்கள், குரு இப்படி பல ரூபத்தில் தக்க சமயத்தில் வந்து உதவுபவனே இறைவன்.

ஆதாரம் பகவத் விஷயம்

God-the Guru in the heart.

In the lecture-assembly of Embar, the subject of who is the first Spiritual Preceptor for the soul came to be discussed.

” The Guru imparts to us the Scriptures,” some said. Others opined : ” The first is that godly man who helps to take us to the spiritual Preceptor for acceptance.”

” Not so,” said Embar, ” the First Preceptor is that Universal Lord who is seated in our hearts, and who unseen, gives us the impulse not to resist, but to yield to the proposals for good services offered by the visible Preceptors or Helpers.”

[Bhagavat Vishayam : Bk. II. p. 720-1. “Ottar” 11-3-2]

****

தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)

தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 30 October 2018

GMT Time uploaded in London – 20-27

Post No. 5606

நவம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

இந்த மாத காலண்டரில் தவம் பற்றிய முப்பது பொன்மொழிகள் இடம் பெறுகின்றன.

பண்டிகை தினங்கள்–

தீபாவளி- நவம்பர் 6 (தமிழ்நாடு), 7 (வட இந்தியா); 8 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்; 13-கந்த சஷ்டி  சூரசம்ஹரம்; 14-குழந்தைகள் தினம்; 23- திருக் கார்த்திகை

அமாவாஸை- 7; பௌர்ணமி-22; ஏகாதஸி விரதம்-3, 19

முஹூர்த்த தினங்கள்-4,5,9,11,14,28

நவம்பர் 1 வியாழக்கிழமை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு-261

தவம் என்பது தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருத்தல் ஆகும்

நவம்பர் 2 வெள்ளிக் கிழமை

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது-262

மன வலிமை உடையார்க்கே தவம்; பிறர் முயற்சிப்பது வீண்

நவம்பர் 3 சனிக் கிழமை

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்-263

 
உணவு,உறைவிடம்,உடை ஆகியவற்றை சந்யாசிகளுக்குக் கொடுப்பதற்குத்தான் பல இல்லறத்தார்கள் சந்யாஸி ஆகவில்லை!

நவம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

 
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்- குறள் 264

பகைவரை அழித்தல், நண்பர்களைக் காத்தல்- இரண்டும் தவத்தால் எளிதில் முடியும்

நவம்பர் 5 திங்கட் கிழமை

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப்படும் – குறள் 265

தவம் செய்தால் விரும்பியன கிடைக்கும்; உடனே தவம் செய்க.

நவம்பர் 6 செவ்வாய்க் கிழமை

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு—266

பற்று இல்லாதவர் செய்வது தவம்; ஏனையோர் செய்வது வீண் முயற்சி

நவம்பர் 7 புதன் கிழமை

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு—267

புடம் இடும் தங்கம் மேலும் மேலும் ஒளிவீசும்; தவம் செய்யச் செய்ய தேஜஸ் பிறக்கும்

 
நவம்பர் 8 வியாழக்கிழமை
 
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்-268

268
நான் என்ற செருக்கு அழிந்தால் எல்லோரும் அவனைத் தொழுவர்

நவம்பர் 9 வெள்ளிக் கிழமை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு—269

தவ வலிமையால் எமனையும் /மரணத்தையும் வெல்ல முடியும்

நவம்பர் 10 சனிக் கிழமை

269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்—270

 

பணமில்லாதவர் உலகில் அதிகம்; பணம் படைத்தவர் குறைவு; ஏன்?  தவம் செய்யாதவர் அதிகம்.தவம் செய்தவர் குறைவு.அதனாலதான்!

நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

     வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்-271
 
    பொய்யான ஒழுக்கம் உடையவனைக் கண்டு (போலி சாமியார்)

அவனுள் இருக்கும் பஞ்ச பூதங்களும் சிரிக்கும்

 

நவம்பர் 12 திங்கட் கிழமை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று–274

மன வலிமை இல்லாதவன் தவம் செய்வது புதருக்குப் பின்னே

 
   நின்று பறவைகளை வேட்டையாடுவதைப் போன்றதே

நவம்பர் 13 செவ்வாய்க் கிழமை

தவ சீலர்களிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்-      காளிதாஸனின் சாகுந்தல நாடகம்

நவம்பர் 14 புதன் கிழமை

முனிவர்களின் சாபத்தை யாராலும் மாற்ற முடியாது

-பாஷா எழுதிய ப்ரதிமா நாடகம்

நவம்பர் 15 வியாழக்கிழமை

தவம் மூலம் சக்தி பெறலாம்- பாரத மஞ்சரி

   நவம்பர் 16 வெள்ளிக் கிழமை

தவம் மூலம் கிடைக்கும் ஆனந்தமே நல்லது; ஏனையவை        நிலையற்றவை- வால்மீகி ராமாயணம் 7-84-9

நவம்பர் 17 சனிக் கிழமை

பாதுகாப்பு இல்லாததால் முனிவர்கள் தங்கள் தபோ சக்தியைப்      பயன்படுத்தி சாபம் என்னும் ஆயுதங்களைப் பயன் படுத்துகிறார்கள்;      அவர்களுடைய ஆன்மீக சக்தியை விரயம் செய்கிறார்கள் –  ரகுவம்ஸம் 15-3

நவம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

முனிவர்களின் சொற்கள் வீணாவதில்லை- நைஷதீய சரித்ர

நவம்பர் 19 திங்கட் கிழமை

தவத்துக்கு இடையூறுகளும் தடைகளும் அதிகம்-  வால்மீகி   ராமாயணம் 3-10-14

நவம்பர் 20 செவ்வாய்க் கிழமை

தபோவனங்களுக்குள் செல்கையில் எளிமையான ஆடைகளை     அணிந்து செல்லுங்கள்– சாகுந்தலம்

  நவம்பர் 21 புதன் கிழமை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்–272

தெரிந்தும் தவறு செய்பவனுக்கு தவக் கோலம் ஒருபயனும் தராது

நவம்பர் 22 வியாழக்கிழமை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று- 273

 
   போலி சாமியார்களின் வேஷம், ஒரு பசு, புலித்தோலைப்    போர்த்திக்கொண்டு மேய்வதற்குச் சமம்

நவம்பர் 23 வெள்ளிக் கிழமை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்- 279

அம்பு நேராக இருக்கும்; யாழ் கோணலாக இருக்கும்;ஆனால் அம்பு    கொடிய செயல் செய்யும்; யாழ் இனிமை தரும்; தோற்றத்தைக்   கண்டு மயங்காமல் (சாமியார்களை) செயலால் எடை போடு

   நவம்பர் 24 சனிக் கிழமை

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்-280

தவசீலர்களுக்கு மொட்டையும் தேவை இல்லை; நீண்ட    முடியும் தேவை இல்லை; உலகத்தார் தவிர்த்து ஒதுக்கிய தீய    ஒழுக்கங்களைக் கைவிட்டால் போதும்.

நவம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம் பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான்.    மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன்    ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி    உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

280

நவம்பர் 26 திங்கட் கிழமை

சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு- தமிழ்ப் பழமொழி

நவம்பர் 27 செவ்வாய்க் கிழமை

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்- வெற்றிவேற்கை

நவம்பர் 28 புதன் கிழமை

தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை-  தமிழ்ப் பழமொழி

நவம்பர் 29 வியாழக்கிழமை

தவத்துக்கொருவர்,  கல்விக்கிருவர்–  தமிழ்ப் பழமொழி

நவம்பர் 30 வெள்ளிக் கிழமை

தவத்திலிருந்தால் தலைவனைக் காணலாம்–

தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்– தமிழ்ப் பழமொழி

 

–subaham-