அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-1 (Post No.5467)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-12 am (British Summer Time)

 

Post No. 5467

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மு.இராகவையங்கார்

பிறந்த ஆண்டு – 1878

இறந்த ஆண்டு- 1960

 

மு.ராகவ அய்யங்கார், தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவை மிகவும் அற்புதமான சேவை. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், மஹா கவி பாரதி, வ.உ.சி, உ.வே. சாமிநாத அய்யர் மற்றும் அவரது சம காலத்திய அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஒருங்கே பாராட்டப்பட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட புகழ்மிகு செந்தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியர்.

 

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். அவரது 60 ஆண்டு நிறைவின் போது வெளியான மலரில் அவரைப் பற்றிய முழு விவரங்களும் வெளியாகின. இதோ வையாபுரிப் பிள்ளை எழுதிய முகவுரை, ராமசந்திர தீக்ஷிதரின் கட்டுரை ஆகியன.

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

 

அவரது ஆராய்ச்சியின் சிறப்பு

 

 

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

to be continued in part 2 and 3…………………….

அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்

அவரது வாழ்க்கைக் குறிப்பு ( 60 வயது வரை)

பாரதியின் பாராட்டும் வ.வு.சியின் பாட்டும்

–subham-

ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்! (Post No.5466)

Written by S NAGARAJAN

Date: 25 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-17 AM (British Summer Time)

 

Post No. 5466

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து நாகரிகத்தின் மேன்மையை எழுதிய சிறந்த ஹிந்து ஹர் பிலாஸ் சர்தா.(Har Bilas Sarda)   ‘ Hindu Superiority’ – ஹிந்து சுபீரியாரிடி என்ற அவரது புத்தகம் ஹிந்துக்கள் அனைத்துக் கலைகளிலும் விஞ்ஞானத்திலும் மேம்பட்டிருந்த நிலையை ஆதாரங்களுடன் விளக்குகிறது.

 

ஹர் பிலாஸ் சர்தா ஆஜ்மீரில் பிறந்தார். (பிறப்பு : 3-6-1867 மறைவு : 20-1-1955). ஆசிரியராகவும், நீதிபதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தால் பெரிதும் அறியப்பட்டார். திவான் பகதூர் பட்டத்தையும் ஆங்கிலேய ஆட்சியில் பெற்றார்.

அவரது தந்தையான ஹர் நாராயண் சர்தா ஒரு வேதாந்தி. ஆஜ்மீர் அரசுக் கல்லூரியில் நூலகராக அவர் வேலை பார்த்து வந்தார்.

 

சர்தா பி.ஏ. பட்டத்தையும் பின்னர் பெர்சிய மொழி மற்றும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றார்,

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு 18881இல் அலகாபாத்தில் நடந்த போது அங்கு சென்று அதில் கலந்து கொண்டார். பின்னர் பல காங்கிரஸ் மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.

ஆஜ்மீர் மெர்வாரா மாகாணத்தில் 1892இல் அவர் நீதித்துறையில் சேர்ந்தார். 1894இல் ஆஜ்மீர் முனிசிபல் கமிஷனராக ஆனார். படிப்படியாக நீதித் துறையில் உயர்ந்த அவர் 1923இல் அடிஷனல் டிஸ்ட்ரிக்ட் மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக ஆனார். ஆஜ்மீர் அசெம்பிளி உறுப்பினராக ஆன பெருமையும் அவருக்கு உண்டு.

ஆர்ய சமாஜத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட அவர் அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி மீது இளமையிலிருந்தே பக்தி கொண்டிருந்தார். 1888இல் ஆஜ்மீர் பிரிவின் தலைவராகவும் ஆனார். தயானந்த சரஸ்வதி தனது மறைவிற்குப் பின்னர் ஆர்ய சமாஜத்தை நடத்திச் செல்ல 23 உறுப்பினர்களைக் கொண்ட பரோபகாரிணி சபை ஒன்றை நிறுவ ஏற்பாடு செய்து அதைத் தன் உயிலில் எழுதி வைத்தார். அதன்படி அதில் நியமிக்கப்பட சர்தா படிப்படியாக உயர்ந்து ஆர்ய சமாஜத்தின் செயலாளராக ஆனார். இன்று இந்தியாவெங்கும் பல ஊர்களில் பிரபலமடைந்திருப்பது டிஏவி (DAV School) பள்ளித் தொடர். ஆஜ்மீரில் டிஏவி பள்ளியை நிறுவ அவர் பெரிதும் காரணகர்த்தராக இருந்தார்.

சமூக சீர்திருத்தங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1929ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

சர்தா சட்டம் என்ற பெயரால் பிரபலமான அது சாரதா சட்டம் என்று பெயர் மருவி இன்றும் அப்படியே அழைக்கப்படுகிறது.

ஹிந்து சுபீரியாரிடி, ஆஜ்மீர் வரலாறு, மஹாராணா கும்பா,மஹாராணா சங்கா,மஹாராஜா ஹமிர் ஆகிய அவரது புத்தகங்கள் ஹிந்து மேன்மையை உணர்த்தும் புத்தகங்களாக அமைந்தன.

ஹிந்து சுபீரியாரிடி என்ற அவரது நூல் மிகுந்த ஆராய்ச்சியின் பேரில் எழுதப்பட்ட புத்தகம்.

1906 நவம்பரில் இதன் முதல் பதிப்பு வெளியானது. பின்னர் பல பதிப்புகளைக் கண்டு இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இதை இலவசமாக இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

415 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் பல பகுதிகளைக் கொண்டது.

Antiquity, Government, Social System, Character, chivalry, Patriotism, Valour, Position of Women, Foreign Relations ஆகியவற்றை முதல் பகுதி விவரிக்கிறது.

அடுத்த பகுதி  Hindu Colonization of the World பற்றியது. Egypt and Ethiopia, Persia, Turkistan and Northern Asia, Scandinavia, Eastern Asia, China and Japan, America ஆகிய அத்தியாயங்களில் வியக்க வைக்கும் பல உண்மைகளை நாம் காணலாம்.

அடுத்த பகுதி Literature பற்றியது. Sanskrit Language, Art of Writing, Vedic Literature, Poetry, Epic Poetry, Drama, Lyric Poetry, Ethico- Didactic Poetry ஆகிய அத்தியாயங்களில் ஹிந்துக்களின் இலக்கிய மேன்மை விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த பகுதி Philosophy பற்றியது. Nyaya, Vaisheshik, Sankya, Yoga, Mimasa ஆகிய அத்தியாயங்கள் கொண்ட இந்தப் பகுதி ஹிந்துக்களின் உயர் தத்துவ நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த பகுதி Science. Medicine, Mathematics – Arithmetic, Geometry, Algebra, Astronomy, Military Science, Music, Other Sciences ஆகிய அத்தியாயங்கள் ஹிந்துக்களின் உயர் விஞ்ஞான அறிவைத் தெள்ளத் தெளிவாக விளக்குபவை.

அடுத்த பகுதி Arts.   Architecture and Sculpture, Painting,  Weaving, Steel and Iron Manufactures, Other Arts ஆகிய அத்தியாயங்களில் ஹிந்துக்களின் பல்கலை அறிவைப் பார்க்கலாம்.

அடுத்த பகுதியான Commerce and Wealth  ஹிந்துக்களின் Commerce , Wealth பற்றி விளக்கும் பகுதியாக அமைகிறது. இதில் இந்தியா எப்படி உலகின் மிகப் பணக்கார நாடாக இலங்கியது என்பது விளக்கப்படுகிறது.

நூலின் இறுதி அத்தியாயமாக அமைவது Religion.

ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. நூலை முடித்து விட்ட போது ஹிந்து வானளவு உயர்ந்து நிற்கிறான்.

ஆயிரக்கணக்கான அழகிய கருத்துக்களை ஆதாரபூர்வமாக இந்தப் புத்தகம் விளக்குவதால் ஒவ்வொரு ஹிந்துவும் இதைப் படிக்க வேண்டியது  இன்றியமையாததாக ஆகிறது.

***

 

 

 

மாளய பக்ஷம் ஆரம்பம் (Post No.5465)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 24 September 2018

 

Time uploaded in London – 18-29 (British Summer Time)

 

Post No. 5465

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

இந்த 2018 ஆம் ஆண்டில் நாளது செப்டம்பர் 25 முதல் மஹாளய பக்ஷம் (மாளய பட்சம் )ஆரம்பமாகிறது. அதாவது புரட்டாசி மாதம் கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் அமாவாஸை  வரையுள்ள 15 நாட்கள். இந்த ஆண்டு அக்டோபர 8-ம் தேதி மஹாளய அமாவாஸை வருகிறது. அது வரை பிரஹ்மணர்கள் வெங்காயம், பூண்டு முதலிய சில காய்கறிகளைத் தவிர்த் து தினமும் தர்ப்பணம் செய்வர். சிலர் அவர்களின்  தந்தை இறந்த திதி அன்று செய்வர். இந்தக் காலத்தில் இறந்த நமது முன்னோர்கள், நம்மிடமிருந்து படைப்பு பெறவும் நமக்கும் நமது சந்ததியினருக்கும் நல்லாசி வழங்கவும் காத்திருப்பராம் எல்லோருக்கும் மாளய அமாவாஸை மிக முக்கியமானது.

 

100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பிரபஞ்ச உற்பத்தி என்ற நூலில் கண்ட இரண்டு பக்க விஷயங்களை இத்துடன் இணைத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.

 

–subham–

WOMEN, GOSSIP, COURTSHIP ANECDOTES! (Posr No.5464)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 24 September 2018

 

Time uploaded in London – 13-03 (British Summer Time)

 

Post No. 5464

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

MORE COURTSHIP ANECDOTES

 

CAME READY? GAME READY!

Aaron Burr
When American politician Aaron Burr was seventy eight Mme Jumel attracted him. One day, as he was about to lead her into dinner, he said,
I give you my hand, madam; my heart has long been yours.
Much fluttered and no less flattered she uttered a sort of No which was not likely to discourage a man like Aaron Burr.
I shall come to you before very long, he said, accompanied by a clergyman; and then you will give me your hand because I want it.

Xxx

LOVE AT FIRST SIGHT!
It is said that Edwin C Hill , the journalist and radio commentator, encountered upon his first arrival in New York an experience that outdoes O Henry. Looking around the city he took the sight -seeing ride on the Elevated. His eye was attracted by the charming young lady seated across the car from him. In the vicinity of Columbus Circle he had ventured to move over and strike up a conversation with her. They found an astonishing congeniality between them and pursued the conversation intensely.
At last they reached City Hall; left the train, and, going over to the City Hall, got married.

XXXX

 

H B Paul
Gossip Anecdotes

The late Maury H B Paul, better known as Cholly Knickerbocker, in the course of his career as a society columnist had frequently aroused the ire of those about whom he had written. Every so often some such individual confronted him in a public place and demanded,
Just what did you mean by what you wrote about me?
Mr Paul had found a standard answer to this demand.
He blandly retarded,
Just what do you think I meant, which invariably silenced further discussion.

Xxx

Due to the exigencies of his position as purveyor of tasty news items on the doings of the upper crust, Maury Paul, widely known as Cholly Knickerbocker, had incurred many enemies. Towards these he felt no rancour.
He once said, even when people snub me I feel like saying to them,
‘Thank you for just existing. I wouldn’t be wearing solid gold garter clasps if it weren’t for you’.
xxx

Women Anecdotes

One day at Mr Kipling’s home in Sussex he read to Edward W Bok (American Editor and author) his latest poem, and at its conclusion he said,
You can never publish that. The journal ( The Ladies Home Journal) sisters would break all your windows with the stones they would fire at you. You wouldn’t have a whole panel left.
The poem was ‘The Female of the Species’.
xxx  Subham xxx

TAMIL WORDS IN THE RIG VEDA (Post No.5463)

Research Article Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 
24 September 2018

 

Time uploaded in London – 6-31 am (British Summer Time)

 

Post No. 5463

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Rig Veda is the oldest book in the world. Rig Veda is the oldest anthology in the world. Rig Veda has the highest number of poets, over 450 poets. Rig Veda is the first book in the world with over 20 poetesses. Rig Veda is dated between 2000 BCE and 6000 BCE by various scholars.

 

So far as the other ancient language of India, Tamil, is concerned we have got 2000 year old Sangam Tamil literature where we find over 450 poets and poetesses who composed 2500 verses.

We find lot of Rig vedic words in ancient Tamil literature and day to day use in current Tamil language. You may even say Tamil words are found in the Rig Veda, since both the languages evolved from the same source.

 

I will just give two examples

 

RAJA/ KING

MANAS/MIND

 

Both of the words are found in the Rig Veda and Sangam Tamil literature. According to world renowned linguists, both these words Raja and Manas are Sanskrit words.

 

Raja gave birth to Royal, Regal and scores of worlds.

Manas gave birth to Mind and sores of words in European languages.

What do we reckon when we see these words in ancient Tamil books?

People thought that the Tamils borrowed these words from Sanskrit.

 

It is not fully correct. Tamil and Sanskrit are the most ancient languages in the world. They belong to the same group. But foreign scholars divided them wrongly into Dravidian and Aryan languages. My theory is that both these languages evolved from the same mother tongue.

 

In course of time they branched out into two different languages. All Sanskrit and Tamil legends agree on one point- Agastya was sent by Lord Shiva from the Himalayas to Tamil Nadu to write a grammar for Tamil language. How was it possible for a northern Sanskrit speaker to write a grammar for Tamil?

It was possible because both came from the same source according to Thiru Vilayadal Purana.

Do we have any proof for this in the language itself?

Yes. We do have proof.

1.The Sandhi Rules (joining rules for words)

2.The case suffix

3.The alphabetical order

4.The word meaning

5.The similes etc.

 

Sanskrit is closely related to Tamil than any other language. Even today prose and poems can be written with Sandhi rules. No other language can be written in this way. This structure cannot be incorporated into any language because it is geographically closer. Proximity has no say in the internal structure of a language. More over, it is found in both languages for over 2000 years.

 

A language can develop in different ways. We know how Indo -European group branched out into Satam (100) and Centum (100) languages. In the same way Tamil and Sanskrit branched out.

Tamil words for One, Eight, Mind are closer to English pronunciation than Sanskrit. But other than 1,8 ,  numbers have different development.

ONE= ONDRU

EIGHT =ETTU

MIND = MANATHU

 

Surprisingly Tamils used Rajan and Mind in 2000 year old literature. Oldest Tamil Grammar stipulates that no Tamil word should begin with Sa, Ra, La.

 

So when Sanskrit words are used in Tamil they will add one of the three vowels : A, I, U

(e.g)

loka= ‘U’lakam or ulokam (earth, metal)

raja= ‘A’rasa

Same Raja (king) becomes Arasan in Tamil  AND Royal in English or Regal in English. This clearly explains how the same word is done in two or three different ways in different languages

 

What can we conclude?

In India there was only one language, may be long long ago. They branched out into Sanskrit and Tamil

Following are some examples to trace King and Mind in the Vedas and Tamil literature:–

 

Rajan in the Rig Veda

3-43-5, 5-54-7

Atharva-4-22-3-5; 8-7-16

These are just a few examples

Mind in the Rig Veda

RV 10-90 (Purusha sukta) and scores of places

 

Raja/royal,regal, (Arasan, Arasar, Arasu) in Tamil literature

Kali-27, 129, Kuru.276.

Aka-338, Pura-154

Mindi in Tamil Literature

Pura.183, Akam-231, 273, 259, 377; scores of places in Natrinai, Paripatal and kalittokai

 

My theory is not based on a few words or few rules. There are 100s of words including Kama (amour), Mukha.

 

Strangely Tamil has no word for ‘Heart’. Hrut in Sanskrit became Heart in English and hruthaya (Iruthaya) in Tamil. All the Tamil medical books used Sanskrit words freely. All the Tamil spiritual books used Sanskrit words freely,the reason being ancients never saw any difference between the two. I have already written elsewhere that if Sanskrit words are removed from today’s Tamil newspapers or 2000 year old Sangam Tamil literature, the language in them would look like virus affected software. This is applicable to all Indian languages including Tamil!.

 

Not a single chapter of Tirukkural, the Tamil Veda, would survive intact without Sanskrit. The first couplet and the last couplet stand as  proof.

N.B. Nenju in Tamil is not heart; it is chest.

–subham-

 

 

தேவையும், பேராசையும்! (Post No.5462)

Written by S NAGARAJAN

Date: 24 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5462

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ச.நாகராஜன்

 

1997ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த காட்வின் சமரரத்னே (தோற்றம் : 6-9-1932 மறைவு 22-3-2000) ஹாங்காங்கில் ஒரு தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார். 6-10-1997இலிருந்து 11-10-1997 முடிய ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவைத் தொடர்ந்து ஏழாவது நாள் முடிவுரை நிகழ்த்தப்பட்டது. முடிவுரையில் அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

 

 

முதலில் காட்வினைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

காட்வின் இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். நூலகராக கெகல்லே பொது நூலகத்தில் 1956ஆம் ஆண்டு சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினார். புத்தமதத்தில் ஆர்வம் ஏற்படவே அதைப் பற்றி நிறையப் படிக்கலானார்.

 

 

மறுபிறப்பு பற்றி ஆய்வு நடத்திய புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் இலங்கைக்கு வந்த போது அவருக்கு ஏராளமான உதவிகளைச் செய்ததோடு அவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அதீத உளவியல் பற்றி அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

 

 

புத்த தியான முறையில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படவே, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு தியான பயிற்சிகள் நடத்துவதற்காக அழைப்புகள் வந்தன. அதையேற்றுப் பல நாடுகளுக்கும் அவர் சென்றார்.

கல்மிஷம் இல்லாத எளிய சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட அவரைப் பார்த்தால் பெரிய அபிப்ராயம் ஒன்றும் தோன்றாது. ஆனால் அவரைச் சந்தித்துப் பழகிய சில நிமிடங்களிலேயே அவர் சற்று வித்தியாசமான மனிதர் என்று தோன்றி விடும்.

 

 

அவரது சொற்பொழிவில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளும், உவமைகளும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.

தன்னைக் கேலி செய்யும் சம்பவங்களைக் கூட ஒளிக்காமல் அவர் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதில்  ஒரு சம்பவம் இது:

 

 

மேலை நாட்டில் நடந்த பயிற்சி முகாம் ஒன்றில் நிறைவு நாளன்று ஒரு பெண்மணி அந்த பயிற்சி முகாமில் அவர் கற்றதையெல்லாம் ஏற்கனவே அவரது நாயிடமிருந்து கற்று விட்டதாக கூறினார்.

 

 

இதைக் கேட்ட காட்வினுக்கு ஆவல் உந்தியது. “அப்படியா! அந்த நாய் பற்றி இன்னும் கொஞ்சம் விவரியுங்களேன்!” என்றார்.

அந்தப் பெண்மணி கூறினார்: “ நீங்கள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். என் நாய் எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறது! நீங்கள் எப்போதும் நன்றி உடையவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்; என் நாய் எப்போதுமே நன்றியுடன் இருக்கிறது! “ இதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அவளுடைய நாயின் நடத்தையை இன்னும் விவரமாகக் கூறிக் கொண்டே போனாள்.

 

 

கடைசியில் அவள் நிறுத்தியவுடன் காட்வின் அவளை நோக்கி, “உங்கள் நாய்க்கும் எனக்கும் வித்தியாசமே இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்தப் பெண்மணி, “ஏன் இல்லை? நீங்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். என் நாய் பேசவே பேசாது” என்றாள்.

இப்படி காட்வின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாக நகைச்சுவையுடன் சுவைபடக் கூறினார்.

2

இனி அவர் தேவை பற்றியும் பேராசை பற்றியும் தனது உரையாடலில் கூறியதைப் பார்ப்போம்.

 

அவர் இலங்கையில் நடத்தி வந்த தியான மையத்தில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவத்தைப் பற்றி அவர் விவரிக்க ஆரம்பித்தார்.

 

அவரது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் கோவில் ஒன்றிற்குச் சென்றார். கோவிலின் வாயிலில் பிச்சைக்காரர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். தனக்கு முன்னால் ஒரு சின்னத் துண்டை அவர் விரித்திருந்தார். அதில் பிச்சைக் காசு போடுவோர் போட்டுக் கொண்டிருந்தனர். அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நண்பர் அவரது முகத்தில் இருந்த அமைதியையும் அவர் கண்களை மூடி அமர்ந்திருந்த பாங்கையும் பார்த்து ஒரு ஓரமாக நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

திடீரென்று அந்த பிச்சைக்காரர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். துண்டிலிருந்து சில காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தரையில் விட்டெறிந்தார்.அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று சாப்பிடுவதற்கு ஏதோ ஒன்றையும் குடிப்பதற்கு ஒரு பானத்தையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து எங்கேயோ நடந்து சென்றார்.

 

தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரராக இருந்த போதிலும் மீதியை அங்கேயே விட்டு விட்ட அந்தச் சம்பவம் நண்பர் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தியது.

 

உடனடியாக அவர் மனதில் ஒரு கவிதை தோன்றியது “

 

He who knows his need

And yet without greed

Whatever be his creed

He is a saint indeed.

 

இது தான் அந்தக் கவிதை!

 

எவனுக்குத் தன் தேவை தெரியுமோ

தெரிந்திருந்தும் பேராசைப் படவில்லையோ

அவன் எந்த சமய நம்பிக்கை கொண்டவனாகத் தான் இருக்கட்டுமே

உண்மையில் அவனே ஒரு மகான்!

 

இதை எழுதி சமையலறையில் அவர் மாட்டி வைத்தார்.

இதை காட்வின் கூறி விட்டு, “ நீங்கள் உங்கள் பணத்தை எறிய வேண்டும் என்று நான் கூறவில்லை. தேவைக்கு உரியதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். திருப்தியுடன் வாழுங்கள். இந்த ஆன்மீக குணம் தம்மத்தில் (புத்தமத தர்மத்தில்) அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. பாலி மொழியில் அருமையான ஒரு வார்த்தையால் இந்தக் குணம் விவரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை சந்துத்தி (Santutthi).

 

திருப்தி என்பது ஒரு பெரிய செல்வம்” என்று  முடித்தார்.

***

ராஜா, மனது- ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள்! (Post No.5461)

Research Article Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 23 September 2018

 

Time uploaded in London – 17-32 (British Summer Time)

 

Post No. 5461

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ராஜா, மனது- ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள்! (Post No.5461)

 

உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் பல தமிழ் சொற்கள் இருக்கின்றன. இதையே சிறிது தலைகீழாக மாற்றி ரிக் வேதச் சொற்கள் இன்று வரை தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் ஸர்வ ஸாதாரணமாகப் பயன்படுகின்றன என்றும் சொல்லலாம்.

ராஜா:-

இந்தச் சொல் காஷ்மீர் முதல் இலங்கையிலுள்ள கண்டி வரை மனிதர்களின் பெயர்களில் காணப்படுகிறது.

தமிழ் இலக்கண விதிப்படி சொற்கள் ச, ஞ, ல, ர — முதலிய எழுத்துக்களில் துவங்கக் கூடாது. இதனால் அ , உ, இ போன்ற உயிர் எழுத்துக்களை அந்தச் சொற்கள் முன்னால் சேர்த்துக் கொள்வோம்.

 

இதனால் லோகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை ‘உ’லகம் என்று  தமிழில் சொல்லுவோம்.

 

ராஜா என்ற ரிக்வேதச் சொல்லை ‘அ’ரசன் என்று தமிழில் செப்புவோம்.

 

மனது என்ற சொல் ரிக் வேதத்திலும் சங்க இலக்கியத்திலும் உண்டு.

 

xxx

ராஜா என்ற சொல் ரிக்வேதத்தில் வரும் இடங்கள்:

ராஜன் -ரிக்.3-43-5, 5-54-7

அதர்வ-4-22-3-5; 8-7-16

இது தவிர ராஜ என்ற (prefix) முன்னொட்டுடன் ஏராளமான சொற்கள் உள.

 

 

மனஸ் என்ற சொல்

மனஸ் என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.

மனஸ்- ரிக் 10-90 (புருஷசூக்தம்), யஜூர் வேதத்தில் பல இடங்கள்.

xxx

 

தமிழில் மனம்-

புறம்-183, அகம்-231, 273, 259, 377; நற்றிணை, கலித்தொகை, பரி பாடலில் நிறைய இடங்கள்

 

அரசன் (ராஜன்)- கலி-27, 129, குறு.276.

அரசர்- அக-338, புறம்-154

அரசு- நிறைய இடங்கள்

xxx

 

நான் நீண்ட நாட்களாக சொல்லும் புதிய கொள்கை:– உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ கண்டு பிடித்துவிடலாம். அதாவது உலகில் கலாசாரம் என்பதே இந்தியாவிலிருந்து சென்றது. இந்துக்கள்தான் அதை உலகம் முழுதும் எடுத்துச் சென்றனர். இதுவரை இதை வலியுறுத்த நான் எழுதிய பல கட்டுரைகளில் இன்றைய கட்டுரை மேலும் ஒன்று.

 

ஆரிய மொழிகள், திராவிட மொழிகள் என்று வெளிநாட்டினர் பிரித்தது தவறு. திராவிட மொழிகள் என்று எதுவும் கிடையாது. இந்தியாவில் தோன்றிய மூல மொழியிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்த மொழிகளே தமிழும் ஸம்ஸ்க்ருதமும். இதனால்தான் அகஸ்தியரை அனுப்பி, தமிழுக்கு இலக்கணம் உண்டாக்கினார் சிவ பெருமான்.

சந்தி விதிகள், வேற்றுமை உருபுகள், சொற்களின் பொருள், அகர வரிசை முதலிய பல ஒற்றுமைகள் வேறு எந்த இரண்டு மொழிகளிலும் கிடையாது. தமிழ்-ஸம்ஸ்க்ருத உறவு உள்ளது போல வேறு எங்குமில்லை.

‘ஒன்’ one என்ற ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர். ஆனால் தமிழில் ‘ஒன்று’ உள்ளது.

 

எயிட் eight என்ற ‘ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர்; ஆனால் ஆனால் தமிழில் ‘எட்டு’ உள்ளது.

மைன்ட்/mind ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர். ஆனால் தமிழில் மனஸ்/ மனது உள்ளது.

மனஸ், எயிட் (அஷ்ட) என்பன தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் மனது =mind எட்டு=eight உருவாகியுள்ளது.

 

மற்ற எழுத்துக்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன. இதை நினைவிற்கொண்டால் எப்படி சொற்கள் மாறுபட்டு வளர முடியும் என்பது விளங்கும்.

 

ஆக ஒரு மொழி இப்படியெல்லாம் வளர முடியும் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுகள்.

 

xxx

 

இவை காட்டும் உண்மைகள் என்ன?

உலகில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய ரிக் வேத, ‘ராஜா, மனசு’ இன்று வரை தமிழில் ஆழ வேரூன்றிவிட்டது. அதவது ரிக் வேத சொற்களை நாம் தினசரிப் பேச்சு வழக்கில் பயன் படுத்துகிறோம்.அரசன்,மனது என்பன ஸம்ஸ்க்ருத்த்த்தில் புழக்கத்துக்கு வந்த பின்னரே தமிழில் இடம் பெற்று 2000 ஆண்டுக்கும் மேலாக இன்று வரை நீடித்து வருகின்றன. இது ஓரிரு சொற்களுடன் நின்று போயிருந்தால் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்ட கால கட்டத்தில் மட்டும் இருந்திருக்கலம் என்று விட்டுவிடலாம். ஆயிரக் கணக்கான சொற்கள் இப்படி இருப்பதால் இவை ஒரே மூலத்தில் இருந்து வந்ததாகவே கொள்ள வேண்டும்.

 

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்று; அறியாதவன் வாயில் மண்ணு

 

–சுபம்—

 

உண்மைக் கதை- வானத்தில் இருந்து வந்த மணமகள்!(Post No.5460)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 
23 September 2018

 

Time uploaded in London – 9-18 AM (British Summer Time)

 

Post No. 5460

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கண்டதும் காதல், திடீர்க் காதல், ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ போன்ற ராமாயணக் காதல், தமிழ் இலக்கியத்தில் வரும் புலிக்கு அஞ்சி ஆண்மகனைத் தழுவி ஏற்பட்ட காதல், ‘யானைக்குப் பயந்து முருகனைத் தழுவிய வள்ளி காதல்’– என்று எவ்வளவோ காதல் கதைகளைப் படிக்கிறோம். எண்வகைத் திருமணங்களில் காதல் திருமணமும்  ஒன்று என்று மநு நீதி நூலும் தொல்காப்பியமும் அங்கீகரித்துள்ளதை எழுதினேன். வெளி நாட்டில் நடந்த இரண்டு பிரமுகர் காதல், மேற்கூறியவற்றை எல்லாம் ருசுப்பிக்கிறது.

 

லாரிட்ஸ் மெல்சியோர் (Lauritz Melchior 1890-1973) என்பவர் பிரபல ஆபரா பாடகர். டென்மார்க்கில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து இசை மூலம் புகழ் பெற்றவர். அவர் வாழ்வில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. அவருக்கு 35 வயதானபோது ஜெர்மனியின் மூனிச் நகரில் ஒரு தோட்டத்தில் பாடல் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அடுத்த கச்சேரிக்காக ஒரே பாடலைப் பலமுறை பல விதமாகப் பாடிப் பயிற்சி செய்தார். அதில் ஒரு வரி,

“வாராய், வாராய், அன்பே! என்னிடம் வருவாயே, பறந்து வருவாயே!

ஒளி வீசும் சிறகுகளில் பறந்து வருவாயே” — என்று  தோட்டத்தில் நின்றவாறு பாடிக் கொண்டிருந்தார்.

 

என்ன அதிசயம்!

திடீரென்று அவர் கைகளிலொரு பெண் வந்து விழுந்தார். அதுவும் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்தார். அப்படி வந்தவர் பிரபல நடிகை மரியா ஹாக்கர் (Maria Hacke)r ஆவார். அவர் ஒரு ஸ்டன்ட்(STUNT) காட்சிக்காக பாராச்சூட்டில் வந்து குதிக்கும் காட்சிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அது திசை மாறி,  லாரிட்ஸின் தோட்டத்துக்கு வந்ததோடு நில்லாமல், பாடகரின் கையில் போய் விழுந்தது. அவருக்கும் ஒரே அதிசயம்.

 

கண்ணும் கண்ணும் கலந்தது!

 

“கையும் கையும் கலந்திடவே ஜாலியாகவே,

காதல் கதை பேசிடலாம் ஜாலியாகவே”–

என்று பாடிக்கொண்டே திருமணமும் செய்து கொண்டனர்.

 

மனைவி அமைவதெல்லாம் வானம் கொடுத்த வரம்- என்று அவரும் எல்லோரிடமும் சொன்னார்.

 

கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இதனால்தானோ!

 

XXX

நிகலஸ் ஷெங்க்( Nicholas Schenck (1881-1969) அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவர். ரஷ்யாவில் யூதர் குடியில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி எம்.ஜி.எம். (MGM) போன்ற பெரிய கம்பெனிகளை நடத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தவர். அவர் ஒரு முறை டாம் மெய்கன்ஸ் என்பவரின் கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார். தொலைவில் படகுத் துறையில் ஒரு அழகிய இளம் பெண் நிற்பதைக் கண்டார். அவர் மனதில் திடீரென்று ஒரு வெறி பிறந்தது. ஓடிப்போய் அந்தப் பெண்மணியைத் தண்ணீரில் தள்ளிவிட்டார். பிறகு அவரைப் பயம் பீடித்தது. ஏனெனில் அப்பெண்ணுக்கு நீந்தத் தெரியுமோ தெ ரியாதோ என்ற கவலை.

 

இந்தப் பெண்மணி மட்டும் வெளியே வந்தால், நம்மைத் திட்டித் தீர்த்து விடுவாள். முதுகில் ‘டப்பா கட்டி’ விடுவாரென்று எண்ணினார்.

 

அந்தப் பெண்மணி நீந்திக் கரை சேர்ந்து, அவரை நோக்கி ஓடி வந்தார்.  திட்டுவதற்குப் பதிலாக அவர், ஷெங்க் முன்னால் நின்று ஒரு புன்னகை செய்தார்.

 

சாதாரண புன்னகை அன்று. தெய்வீகப் புன்னகை. அதிலும் பெரிய புன்னகை; வஸீகரப் புன்னகை!

 

அதைப் பார்த்த ஷெங்க்,

அடக் கடவுளே! இப்படிப்பட்ட ஒரு தெய்வீகப் புன்சிரிப்பைப் பார்த்ததே இல்லையென்று கருதி அவர் மீது அன்பு பூண்டார். அது காதலாகக் கனிந்தது; திருமணமாக முடிந்தது!

 

XXX

சாமுவேல் புட்Samuel Foote(1720-1777) பிரபல நடிகர் ஆவார். நாடக நடிகர், மானேஜர் போன்ற பல பொறுப்புகளில் இருந்தவர். ஒரு நாள் எல்லா நடிகர்களும் அரட்டைக் கச்சேரியில் இறங்கினர். அன்றைய தலைப்பு- பிரபல நடிகையின் திருமணம். அந்த நடிகையின் கதையோ அதி பயங்கரக் கதை. நூறு பேருடன் கள்ளத் தொடர்பு! இப்படி அபக்கியாதி பெற்ற ஒருவரை ஒரு ஆண்மகன் திருமணம் செய்ய எப்படி முன்வந்தான் என்ற வியப்பு.

ஒரு நடிகர் செப்பினார்,

சேதி தெரியுமா? அவர் தனது கடந்த கால காமக் களியாட்டங்களை எல்லாம் அப்பட்டமாக ஒப்புக் கொண்டதால் அந்த ஆண்மகன் சம்மதித்தானாம்.

இன்னொருவர் மொழிந்தார்,

அட அதை விடுங்கள்; என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்; கன கச்சித ‘மேட்ச்’

 

இன்னொரு நடிகர் இடைமறித்துப் பகர்ந்தார்,

அது மட்டுமல்ல; என்ன நேர்மை பாருங்கள்; என்ன துணிச்சல் பாருங்கள்!

 

பிரபல நடிகர் சாமுவேல் புட் சிரித்துக் கொண்டே சொன்னார்,

அடடா! என்ன ஞாபக சக்தி, அந்தப் பெண்ணுதான்! அவ்வளவு காதல் விஷயங்களையும் சொல்ல அவருக்கு எவ்வளவு நினைவாற்றல் இருந்திருக்க வேண்டும் !

 

XXX SUBHAM XXX

TRUE STORY- WOMAN FROM THE HEAVEN (Post No.5459)

 

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 September 2018

 

Time uploaded in London – 7-32 AM (British Summer Time)

 

Post No. 5459

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Love and Courtship Anecdotes

 

LOVER IN THE STREET

A French clergy man catechising the youths of his parish, put the first question from the catechism of Heidelberg to a girl,
What is your only consolation in life and death?
The poor wench smiled, but did not answer.
The priest insisted,
Well, then, she said,
‘Since I must tell, it is the young shoemaker of Agneaux street ‘.

Xxxx

BUST OF MYSELF

When Madame de Stael was writing her memoirs a female friend asked her how she would manage to portray herself and her amours.
Oh, answered Madame de Stael,
‘I shall only give a bust of myself.’

Xxxx

WHAT A MEMORY!

A group of actors, Samuel Foote among them, was discussing the marriage of a too well known woman about town, whose pre- marital life had been ,to say the least , adventurous.

It is a good match that she has made , one of the group observed.
And they say she made to her husband a full confession of all her past affairs.
What honesty she must have had, another remarked.
‘What courage!
Yes, put in Foote, and what a memory!’

Xxx

WOMAN FROM THE HEAVEN
Courtship anecdotes

One of the most unusual beginnings of a romance in the world is the well known case of the great Wagnerian tenor, Lauritz Melchior. When the singer was a young music student he was singing in the garden of his pension in Munich, studying a role. According to his own story, he sang the lines
‘Come to me, my love, on the wings of light’, when to his utter astonishment, a young lady literally dropped out of the sky at his feet. The heavenly visitor was Maria Hacker, a Bavarian actress who had been doing a stunt for a movie thriller. She had parachuted from a plane right into his arms. They were married.

Xxxx

WOMAN FROM THE SEA

One day Nicholas Schenck, movie millionaire, about to board Tom Meighans yacht, saw a slip of a girl standing on the edge of the wharf.
For some inexplicable reason , Mr Schenck recalls, I had an uncontrollable impulse to push her into the water. To my horror- I did.
I had no idea if she could swim. I expected an infuriating young woman. Instead, she came to the surface, blinked the water out of her eyes and smiled a brilliant smile.
By God! I said to myself, that is the girl I am going to marry!
And he did.
xxx subham xxx

 

இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்! (Post No.5458)

Written by S NAGARAJAN

Date: 23 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-35 AM (British Summer Time)

 

Post No. 5458

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்!

 

ச.நாகராஜன்

 

சூரபன்மனின் குரு இடும்பாசுரன். சூரபன்மனுக்கு அஸ்திர சஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்து வந்தவன் அவன். முருகபிரான் அசுரர்களை அழித்த பின் இடும்பாசுரனுக்கு நல்லறிவு வந்தது.

உடனடியாகத் தன் மனைவியோடு பொதியமலை வந்தான். அங்கிருந்த முனிவர் குழாத்துடன் வசித்து வந்தான். அங்கே அகத்தியப் பெருமான் இருந்ததைக் கண்டு அவரிடம் அவன் அடைக்கலம் புகுந்தான்.

அகத்தியர் அவனிடம் வடக்கே சென்று, அங்கே கேதாரத்தில் பூர்ச்சவனத்தில் உள்ள சிவ, சக்தி ஆகிய இரு மலைகளைக் கொண்டு வந்தால் அவனுக்கு போகம், முக்தி இரண்டும் கிடைக்கும் என்று கூறி அருளினார்.

அகத்தியர் உபதேசித்த திருவுருவத்தைத் தியானம் செய்து கொண்டே இடும்பாசுரன் சிவ, சக்தி ஆகிய இரு மலைகளையும் தோள் சுமையாக, காவடியாகத் தூக்கி வந்தான்.

வழியில் வில் அம்பு ஏந்தி முருகப் பிரான் காவலனைப் போல் இருந்து இடும்பாசுரனை எதிர்த்தார்.

வழி தெரியாமல் இடும்பன் திருவாவினன் குடியை (பழனியை) அடைந்தான். பசி, தாகம் இரண்டும் அவனை வருத்த தன் தோளில் இருந்த மலைகளைக் கீழே இறக்கி வைத்தான்.

 

பசி தாகம் நீங்கிய பின்னர் மலைகளை மீண்டும் தூக்கினான்.

ஆனால் மலைகள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சந்தேகம் கொண்ட இடும்பன் மலைகளின் மீது ஏறிப் பார்த்தான். தண்டம் தாங்கிய இளைஞன் ஒருவன் அங்கே இருப்பதை  அவன் கண்டான். அவன், இடும்பனை நோக்கி, “அசுரனே, இந்த மலைகளை இங்கேயே விட்டுச் செல்” என்றான்.

கோபம் கொண்ட இடும்பன் குமாரவேளின் மேல் பாய, நடந்த சண்டையில் இடும்பன் மாய்ந்தான்.

இதை அறிந்த இடும்பி குமரவேளைத் துதித்து அருள் வேண்டினாள்.

முருக கிருபையால் இடும்பன் உயிர் பிழைத்தான். முருகனைத் துதித்தான். தனக்குக் குற்றேவல் செய்து வருமாறு இடும்பனை முருகன் பணித்தார்.

இதையெல்லாம் அறிந்த அகத்திய முனிவர் இடும்பனை நோக்கி, “நீ முருகப்பிரானுக்கு குற்றேவல் செய்து வந்தாயானால், முக்தியை அடைவாய்’ என்று கூறினார்.

அப்படிப்பட்ட சிவ சக்தி மலைகள் இருக்கும் இடம் கொங்கு மண்டலம்.

இந்த வரலாற்றை உள்ளடக்கியுள்ள கொங்கு மண்டல சதகத்தின் 23ஆம் பாடலை கீழே காணலாம்:

 

அலைகொண்ட பாற்கடற் சற்ப சயனத் தரியயனுந்

தலைகொண் டிரைஞ்சும் பதாம்புயத் தாருக்குச் சற்குருவாய்

நிலைகொண் டிருக்குஞ்செவ் வேளுக் கிடும்பன்மு னீண்டசிவ

மலைகொண்டு வந்ததும் வைகாவூர் சூழ்கொங்கு மண்டலமே

 

இப்பாடலில் திரண்ட பொருள் :-

திருமாலும் அயனும் வணங்கும் பரமசிவனுக்குச் சற்குருவான திருவாவினன்குடி முருகப்பிரானுக்கு இடும்பன், சிவமலை கொண்டு வைத்ததும் கொங்கு மண்டலம் என்பதாம். (பழனிக்கு திருவாவினன்குடி, வைகாவூர் என்ற பெயர்களும் உண்டு)

இந்த வரலாற்றைப் பழனிப் புராணமும் கீழ்க்கண்ட பாடல் மூலம் எடுத்துரைக்கிறது :

“அன்னதுணை மால்வரைக ளன்பினனி காலின்

மன்னிடு மிடும்பன்மணிநீல மொருதட்டும்

தன்னிகரில் மாமணியொர் தட்டினு நிறைத்து

நன்னரி னிறுக்குமொரு நாயகனை நிகர்த்தான்”

 

பழனியில் இடும்பனுக்குத் தனிக் கோவில் உள்ளது.

–subham–