ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271

Written by London swaminathan

Date: 30 JULY 2018

 

Time uploaded in London – 9-12 am  (British Summer Time)

 

Post No. 5271

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அயோத்தியில் புறப்பட்டு, இலங்கைத் தீவுக்கு வந்து விட்டு, மீண்டும் அயோத்திக்குப் போன ராம பிரான் 5113 நாட்களுக்கு நடந்து உலக சாதனை படைத்தான். அவன் சென்ற இடமெல்லாம் புனிதமானது; அவன் தொட்டதெல்லாம் பொன் ஆனது; அவன் கண் பட்ட இடமெல்லாம் அருள் சுரந்தது. இந்தியாவில் எங்கு சென்றாலும், இது ராமர் வந்த இடம், இது பஞ்ச பாண்டவர் வந்த இடம் என்று சொல்லுவதில் வியப்பொன்றும் இல்லை.

 

நாநிலம் வியக்கும் வீரர் பெரு மக்கள், மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் நடந்து வந்தால், உலகமே வரவேற்காதா! வியக்காதா!

 

இதோ ராமனின் 128 மண்டகப்படிகளில் கடைசி கட்டம்; இந்த ஐந்தாவது பகுதியுடன் ராமன் பயணம் நிறைவு பெறுகிறது. அலெக்ஸாண்டர் நடக்க வில்லை; குதிரையில் வந்தான்! ராமன் நடந்தான். ஆதி சங்கரரும், ராமனைப் பின்பற்றி நடந்தார். இமயத்திலிருந்து தமிழ் இலக்கணம் எழுத தென்னகம் வந்த அகஸ்தியர், ஒரு வேளை பல்லக்குகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ராமனோ என்றும் பாத சாரி! உலக இலக்கியங்களில் இது போல யாரும் இல்லை; ஹோமரின் கிரேக்க கதா பாத்திரங்கள் குதிரையிலும் கப்பலிலும் சென்றனர். இந்து மத வீரகளோ உலகின் மிகப்பெரிய நாட்டை (அக்காலத்தில்) நடந்தே கடந்தனர். அவர்களால் இந்த மண் புனிதம் பெற்றதா? புனித மண் என்பதால் அவர்கள் நடந்தார்களா? சிந்திக்க வேண்டிய விஷயம்!

 

106.கபிஸ்தலம் (தஞ்சை வட்டம்)

ஹனுமார் தாவிச் சென்ற இடம்

 

107.பாபநாசம் சிவன் கோவில்

கர, தூஷண, திரிசிரஸ் என்ற பிராஹ்மண அசுரர்கள்ளைக் கொன்ற பாபம் நீங்க சிவனை ராமன் வழிபட்ட இடம்

108.கோடிக்கரை (வேதாரண்யம்)

 

முதலில் ராமனிடம் எஞ்சினீயர் நீலன் கொடுத்த ப்ளூப்ரிண்ட் படி இங்கிருந்து அணை கட்ட திட்டமிட்டனர். பின்னர் ராமன் அந்த திட்டத்தைக் கைவிட்டு தனுஷ்கோடி சென்றான். அவன் ஒரு ஆலமரத்தடியில் இருந்து ஆலோசானை செய்கையில் பறவைகள் காச்சு மூச்சென்று கத்தின ராமன் உஷ் என்று சொன்னவுடன் அவை அதிசயமாக அடங்கிவிட்டன; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடலில் இது பற்றியுள்ளது. அகநானூறு 70ம் பாடலில் மேல் விவரம் காண்க)

 

 

109.உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில்

ஸீதா தேவியை மீட்கும் விஷயத்தில் வெற்றி கிடைக்கப் பிரார்த்தித்த இடம்

 

110.தேவிப்பட்டணம்/ நவபாஷாணம்

இங்கு ராமர் நவக்ரஹங்களை வழிபட்டார்.

111.திருப்புள்ளானி / தர்ப சயனம்

 

கடல் பயணத்தில் வெற்றி பெற ராமன் வருண பகவானை பிரார்த்தித்த இடம்

 

112.புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில்

ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்த இடம்; வடக்கிலும் இப்படி ஒரு ஸ்தலம் உள்ளது. ஆண்டு தோறும் திதி செய்யப்படுவதால் இரண்டும் சரியாக இருக்கலாம்.

 

 

113.சேதுக்கரை

 

இங்கு இலங்கைக்கான பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் ராமபிரான்

 

114.தங்கச்சிமடம் வில்லூன்றி தீர்த்தம்

 

இங்கே வானரப் படைகளுக்காக ராமர் வில் மூலம் ஒரு ஊற்றை உண்டாக்கினார்.

 

 

115.கந்தமாதன் பர்வத, ராமேஸ்வரம்

இங்கிருந்து ராமர் கடலின் விஸ்தீரணததைக் கண்டார்.

116.அக்னி தீர்த்தம்

ராமர் குளித்த புனித நீர்நிலை

 

117.ராமேஸ்வரம் கோவில்

ராமர் பூஜித்த சிவலிங்கம்

118.தனுஷ்கோடி

ராவணனை வென்ற பின்னர்,  விபீஷணன் வேண்டுகோளின் பேரில், பாலத்தைப் பிரித்த இடம்

 

119.திரு அப்பனுர்- ராமர் பாலம் மண்

பாலம் கட்ட ராமர் 14 புனித இடங்களிலிருந்து மண் எடுக்க வேண்டும் என்றும் அதில் அப்பனூர் ஒரு இடம் என்றும் தல புராணம் சொல்லும். ராமர் கொண்டுவந்த 2 யானைகள் இறக்க்வே அவைகளை இங்கு புதைத்ததாகவும் அங்கே இப்பொழுது கண்மாய்கள் இருப்பதகவும் மக்கள் நம்புகின்றனர். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உளது

மீண்டும் அயோத்தி சென்றபோது

120.தில்லை விளாகம் கோதண்டராமர் கோவில்

 

ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமர் வந்த இடம்.திருவாரூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது (சிதம்பரத்தையும் இப்பெயரால் அழைப்பர்; இது வேறு தலம்).

இங்கு ராம சரம் என்று பொறிக்கப்பட்ட அம்புடன் கூடிய அழகாக்ன ராம விக்ரஹம் உள்ளது. பங்குனி மாத ராம நவமி உற்சவத்தில் 11ஆவது நாளன்று மான் வஹனத்தில் ராமர் பவனி வருவது ஒரு அரிய காட்சி; வேறெங்கும் இல்லாத புதுமை!

121.நம்புநாயகி அம்மன் கோவில், ராமேஸ்வரம் தீவு

முன்னர் தனுஷ்கோடியில் இருந்த கோவில்  கடல் உள்ளே வர வர, இடம் மாற்றப்பட்டு இப்போதுள்ள இடத்துக்கு வந்தது; இங்கு ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாக தல புராணம் சொல்லும்.

 

122.காஞ்சி விஜயராகவப் பெருமாள் கோவில் (திருப்புட்குழி)

இங்குள்ள ஜடாயு புஷ்கரணியில் ராமர் குளித்ததாக அதீகம்

 

123.வடுவூர் கோதண்டராமர் கோவில்

 

ராமன் இலங்கைக்குச் செல்லும் போதும் அயோத்திக்குத் திரும்பும் போதும் இங்கு வந்ததாகச் சொல்லுவர். இரண்டும் சாத்தியமே

 

124.பதர்ஷா (நந்தி க்ராமம)

ராமனின் புஷ்பக விமானத்தைக் கண்டு மக்கள் ஆரவாரம், கூதுகலம் அடைந்த இடம்

 

125.பரத குண்டம்

ராமரும் பரதனும் கட்டித் தழுவி ஆனனதம் அடைந்த இடம்

 

126.ஜடா குண்டம்

 

ராமர் முதலில் தனது தம்பிகளின் முடிகளைச் சுத்தம் செய்து பின்னர் தனது தலை முடியையும் அலம்பிய குளம்.

 

 

வால்மீகி ராமாயணம், ஆங்காங்குள்ள தல புராணங்கள் முதலியவற்றின் அடிப்படையில் டாக்டர் ராமாவ்தார் ஷர்மா தொகுத்த பட்டியல் இது; தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் நான் சில இடங்களை மாற்றியுள்ளேன். இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு பட்டியலை மேலும் நீட்டலாம். 5113 நாட்களில் ராம லக்ஷ்மணர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்றிருப்பது சாத்தியமே.

 

ராமன் நாமம் வாழ்க; ராமன் புகழ் வெல்க!

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்! (Post No.5270)

Written by S NAGARAJAN

 

Date: 30 JULY 2018

 

Time uploaded in London –   68-49 am (British Summer Time)

 

Post No. 5270

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலை வரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய ஒலிபரப்பில் இடம் பெற்ற மூன்றாவது கட்டுரை!

அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

நவீன் தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே சுருங்கி விட்ட நிலையில் மனிதகுலத்தின் வளர்ச்சியை மட்டுமே மனிதர்கள் எண்ணாமல் உலகளாவிய பல்லுயிர் சமுதாயத்தில் தாங்களும் ஒரு அங்கமே என்று எண்ணி செயல்பட வேண்டும்.

 

பூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று என்ற எண்ணத்துடன் மிருக இனங்கள், பறவை இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைக் காத்து அவற்றுடன் இணக்கமாக வாழ்ந்து சுற்றுப்புறச் சூழலை சிறப்பாகப் பேணிக் காக்க வேண்டியது மனிதனின் கடமை.

 

ஆனால் இன்றைய நிலையில் தேனிக்கள் மற்றும் சிட்டுக்குருவியிலிருந்து பல உயிரினங்கள் வேகமாக அழிந்து பட்டு வருகின்றன. பல்வேறு உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.

 

சீதோஷ்ண நிலை மாறுதல், கடல் மட்டம் உயர்தல், விண்கற்கள் மோதுதல், மனித ஜனத்தொகை வெகு வேகமாக அதிகரித்து வருதல், சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு, உலகம் வெப்பமயமாதல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பல மிருக, பறவையினங்கள் அருகி வருகின்றன.

 

இயற்கை சீற்றங்களினாலும் இப்படிப்பட்ட உயிரினங்கள் சில சமயம் அழிந்து பட்டாலும் மனிதனின் செயல்பாடுகளே இவை பெருமளவு அழியக் காரணம் என்பது வெளிப்படையான உண்மை.

 

பழைய காலத்தை விட நூறு மடங்கு அதிகமாக இவை அழிகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மை. இது இன்னும் பத்து மடங்கு அதிகமாகும் என்பது நிபுணர்களின் கருத்து.

 

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் பெங்குயின்கள் வேகமாக அழிந்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதலும், நீரின் உஷ்ணநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் உணவுக்கு வழியின்றி இவை தவிக்கின்றன

 

அடுத்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் டுனா (BigeyeTuna) வகை மீன்கள் அருகி வருகின்றன. இவை வணிக ரீதியில் விற்கப்படுபவை. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடிப் பிடிப்பதால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. கடலின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்றியமையாத இந்த மீன்கள் அருகி வருவது சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும்.

 

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியாவின் வட பகுதியிலும் நேப்பாளத்திலும் காணப்படும் அரிய வகை மிருகம். இவற்றை வேட்டையாடுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் சமச்சீருடன் இருக்க இவையே காரணமாகும். இவை மறைந்தால் பல உயிரினங்களும் சேர்ந்து மறையும்.

 

கலபாகாஸ் தீவில் காணப்படும் பெரிய ஆமை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான்,சிலி ஆகிய நாடுகளின் கடற்புரங்களில் வாழும் பெரிய வெள்ளைச் சுறா உள்ளிட்டவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் மிகவும் அருகி வருகின்றன.

 

ஆர்க்டிக் பகுதிகளில் வாழும் துருவக் கரடிகள் உலகம் வெப்பமயமாகும் அபாயத்தால் அழிந்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடுவது தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இவற்றைப் பார்ப்பது இயலாது. ஆப்பிரிக்காவிற்கே பெருமை தேடித் தரும் ஆப்பிரிக்க யானைகள் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் காட்டுப் பகுதியை குடியிருப்பாக ஆக்குவதாலும், வேட்டையாடுவதாலும் இவற்றின் எண்ணிக்கை வேகமாக  குறைந்து வருகிறது.

 

இந்த அரிய உயிரினங்களை மனித இனம் பாதுகாத்தால் மட்டுமே அவை அழியாமல் இருக்கும்; அத்துடன் சுற்றுப்புறச் சூழல் சிறப்பானதாகவும் அமையும்.

***

பேராண்மை என்பது தறுகண்- வள்ளுவர் குறள்! (Post No.5269)

Compiled by London swaminathan

Date: 29 JULY 2018

 

Time uploaded in London – 17-13  (British Summer Time)

 

Post No. 5269

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஆகஸ்ட் மாத 2018 நற் சிந்தனை காலண்டர்

விளம்பி ஆண்டு ஆடி- ஆவணி, 2018

இந்த மாத நற் சிந்தனை காலண்டரில் வீர, தீர, சூரர் பற்றிய 31 பொன் மொழிகள் இடம் பெறுகின்றன

 

 

பண்டிகை நாட்கள்ஆகஸ்ட் 3- ஆடிப் பெருக்கு, 5- ஆடிக் கிருத்திகை, 11- ஆடி அமாவாசை, 13- ஆடிப்பூரம், 14- நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, சுதந்திர தினம், 21- ஆவணி மூலம், 24- வரலஷ்மி விரதம், 25- ஓணம், ரிக் உபாகர்மா, 26- ரக்ஷா பந்தன், யஜூர் உபாகர்மா, 27- காயத்ரீ ஜபம்

 

சுப முகூர்த்த நாட்கள்– 23, 29, 30.

அமாவாஸை-11; பௌர்ணமி-26; ஏகாதஸி விரதம்– 7, 22

 

 

ஆகஸ்ட் 1  புதன் கிழமை

வீரர்களும் சூரர்களும் பாதியில் எதையும் கைவிட மாட்டார்கள்- கதா சரித் சாகரம்

ஆகஸ்ட் 2  வியாழக் கிழமை

சிங்கம் மேக கர்ஜனையைக் கேட்டு எதிரொலிக்கும்; நரிகள் ஊளையிடுவதைக் கேட்டு ஒலிக்காது- சிசுபாலவதம்.

சிங்கம் பசித்தால் தேரையைக் கொல்லுமா?–தமிழ்ப் பழமொழி

 

ஆகஸ்ட் 3  வெள்ளிக் கிழமை

தைரியசாலிகளுக்கோ, முயற்சியுடையவர்க்கோ அடைய முடியாதது ஏதுமில்லை- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 4  சனிக்கிழமை

சில்லறைகளைப் புறக்கணிப்பது பெரியோரின் பெருமையை அதிகரிக்கும் – கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 5  ஞாயிற்றுக் கிழமை

நெருக்கடியிலும் நிம்மதியாக இருப்போர்க்கு செல்வம் தானாக வரும்- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 6  திங்கட்கிழமை

அபாயகாலத்திலும் பிரகாசிக்கும் புத்தியுடையோரே தீரர்கள்– கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 7  செவ்வாய்க் கிழமை

எந்த வீரனாவது பாதியில் ஒரு பணியைக் கைவிடுவானா?- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 8  புதன் கிழமை

வீரர்களுக்கு சுலபமில்லாதது ஏதேனும் உண்டோ? – கிராதார்ஜுனீயம்

 

ஆகஸ்ட் 9  வியாழக் கிழமை

தீரர்களே அபாயத்தைக் கடப்பர்; பலவீனம் உள்ளோர் கடப்பதில்லை-

தீராஸ்தரந்தி விபதம் ந து தீன சித்தாஹா

ஆகஸ்ட் 10  வெள்ளிக் கிழமை

வளமை என்பது வீரத்தைப் பொறுத்தது; துக்கம் உடையோரிடம் இருந்து அது பறந்தோடிப் போகும்- பாரத மஞ்சரி

துக்கிப்யோ ஹி பலாத்யந்தே தைர்யாயத்தா விபூதயஹ

 

ஆகஸ்ட் 11  சனிக்கிழமை

நிலையான புத்தியுடையோருக்கு எதையும் துறப்பது கடினமில்லை- பாகவத புராணம்

துஸ்த்யஜம் கிம் தீராத்மனாம்

 

ஆகஸ்ட் 12  ஞாயிற்றுக் கிழமை

என்னைமுன் நில்லன் மின் தெவ்வீர்- பகைவர்களே! என் தலவன் முன் போர் என்று வந்து நிற்காதீர்கள்- குறள் 771

 

ஆகஸ்ட் 13  திங்கட்கிழமை

தீரர்களே ஆபத்துகளைக் கடப்பார்கள்- காதம்பரி

தீரா ஹி தரந்த்யாபதம்

 

ஆகஸ்ட் 14  செவ்வாய்க் கிழமை

தைரிட்யசாலிகளும் கற்றோரும் கூட தவறு செய்வர் (ஆனைக்கும் கூட அடி சறுக்கும்)

தீரோபி வித்வானபி விமுஹ்யதி- ப்ருஹத் கதா மஞ்சரி

 

ஆகஸ்ட் 15  புதன் கிழமை

அபாயம் என்னும் கடலைக் கடக்க உதவும் பாலம் திட உறுதி- ப்ருஹத் கதா மஞ்சரி

தைர்யம் விபஸ்த்ஸ்பாரஜஜலதேஹே சேதுஹு

 

ஆகஸ்ட் 16  வியாழக் கிழமை

வீரத்தால் விளையாதது என்ன?

தைர்யேன சாத்யதே ஸர்வம் –கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 17  வெள்ளிக் கிழமை

சாதனைகளுக்கு உதவுவது தீரம்

தைர்யம் ஸர்வத்ர ஸாதனம்

 

ஆகஸ்ட் 18  சனிக்கிழமை

உயார்ந்தோரின் செல்வம் தைர்யம்-

தைர்யதனா ஹி சாதவஹ—காதம்பரி

 

ஆகஸ்ட் 19  ஞாயிற்றுக் கிழமை

துணிவின்றி பயத்திலிருந்து விடுதலை பெற முடியாது — யோக வாசிஷ்டம்

ந ஸ்வதையாத்ருதே கஸ்சிதப்யுதரதி ஸங்கடாத்

 

ஆகஸ்ட் 20  திங்கட்கிழமை

பேராண்மை என்பது தறுகண்- அஞ்சா நெஞ்சத்தை ஆண்மை என்று சொல்வர்- குறள் 773

 

ஆகஸ்ட் 21  செவ்வாய்க் கிழமை

கொந்தளிப்பிலும் அமைதியாக இருப்போரே வீரதீரர்கள்- குமார சம்பவம்

விகாரஹேதௌ ஸதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்ஸி த ஏவ தீராஹா

 

ஆகஸ்ட் 22  புதன் கிழமை

வீரர்கள் முன் வைத்த கால்களைப் பின்வைப்பதில்லை- நீதி சதகம்  ‘ந நிஸ்சிதார்த்தாத்விரமந்தி தீராஹா’

 

ஆகஸ்ட் 23  வியாழக் கிழமை

பெரியோர்கள், நேர்மையான பாதையிலிருந்து ஒரு  அடி கூட விலகமாட்டார்கள் – நீதி சதகம்

ந்யாயாத்பதஹ ப்ரவிசலந்தி பதம் ந தீராஹா

 

ஆகஸ்ட் 24  வெள்ளிக் கிழமை

உறுதியானவர்களுடைய மனதை முதிய வயதும் கலக்காது- ப்ருஹத் கதா மஞ்சரி

வ்ருத்த பாதோ ந சோகேன தீரானாம் ஸ்ப்ருஸதே மனஹ

 

ஆகஸ்ட் 25  சனிக்கிழமை

அச்சமுடையார்க்கு அரண் இல்லை- குறள் 534

பயமுள்ளவனுக்கு பாதுகாப்பு அரணால் பயனில்லை

 

ஆகஸ்ட் 26  ஞாயிற்றுக் கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும்- தமிழ்ப் பழமொழி

ஆகஸ்ட் 27  திங்கட்கிழமை

வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?–தமிழ்ப் பழமொழி

 

ஆகஸ்ட் 28 செவ்வாய்க் கிழமை

ஒலித்தக்கால் என்னாவாம் உவரி எலிப்பகை- கடல் போல எலிகள் என்னும் பகைவர் ஒலித்தால் என்ன பயம்? -763

 

ஆகஸ்ட் 29   புதன் கிழமை

தானை தலை மக்கள் இல்வழி இல்- படைத் தலைவர் இல்லாவிடில் படைக்குப் பெருமை இல்லை- குறள் 770

 

ஆகஸ்ட் 30 வியாழக் கிழமை

உறின் உயிர் அஞ்சா மறவர்- போர் வந்தால் அஞ்சாது போர் புரிபவர் மறவர்- குறள் 778

 

ஆகஸ்ட் 31  வெள்ளிக் கிழமை

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்  — தன் கையில் இருந்த வேலை யானை மீது எறிந்து கொன்று வருபவன்  — குறள் 774

 

–Subham–

 

 

 

Upagupta and a Beautiful Prostitute- Interesting Story (Post No.5268)

Compiled by London swaminathan

Date: 29 JULY 2018

 

Time uploaded in London – 7-48 am  (British Summer Time)

 

Post No. 5268

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

A young lady, a healthy child of nature full of animal spirits, met Upagupta, the disciple of the Buddha, one fine evening and made advances to him. He was in a dialectical mood. She checked him and said,

 
“Do not talk to me about stars and saints, the suffering of the world and the plan of the cosmos . They are not in my line. I believe in warm, natural, happy, healthy life. What the blood feels and believes is all that real for me.”

 
With difficulty Upagupta got out of the situation that evening, not before promising to return on another occasion.

 
Long years elapsed. The young lady of leisure and life, of wealth and beauty, with her easy morals made a mess of them all till she decayed and became a mass of rotting flesh, festering with sores, stinking with horrible odour. As if this were not enough, she committed a crime for which she was condemned to have her limbs cut off. Despised and rejected by all, she was turned out of the city gates and left on the spot where her punishment was carried out. A few years ago, she was a spirit aflame with zeal, now nothing but a mass of weakness and helpless ness

No more revolt, no more passion, not even complete darkness, just emptiness. Accepting nothing, refusing to be touched, to be cared for, remaining empty, she saw through everything. No one can deceive her again. In what she thought her last moment amid prayer and silent weeping she remembered her interview with Upagupta and felt a gentle touch.

Her eyes found Upagupta shining with an unearthly radiance and vitality, looking down on her, tender with a mother’s love for a sick child. He noticed in her eyes an expression of anxiety, distress and self- reproach, an appeal for mercy.

She said,
“Upagupta when my body was adorned with brilliant jewels and costly clothes and was as sweet as a lotus flower, I waited for you in vain. While I inspired flaming desire, you came not. Why come you now to witness this bleeding and mutilated flesh full of horror and disgust”?

Upagupta gently stroked her hair, stirred her whole being and said,

“Sister, for him who sees and understands, you have not lost nothing. Do not covet the shadows of the joys and pleasures which have escaped you. My love to you is deeper than what is based on vain appearances.”

Her eyes brightened, her lips parted and with a new sense of well-being and lightness of heart, she became his disciple, which is another illustration that saints start their careers by first losing their characters!
It needs a great soul to respond to a soul in torment”.
From Radhakrishnan Reader- An Anthology.
–Subham–

நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்! (Post No.5267)

Written by S NAGARAJAN

 

Date: 29 JULY 2018

 

Time uploaded in London –   6-18 am (British Summer Time)

 

Post No. 5267

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம்

நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்!

 

ச.நாகராஜன்

 

த்வாபர யுகத்தில் கம்ஸன், மற்ற யுகங்களில் வெவ்வேறு அசுரன்கள் இருந்ததைப் பற்றி புராணங்கள் வாயிலாகக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

 

நவீன விஞ்ஞான யுகத்தில் மனித குலத்தைக் கெடுக்கும் பொல்லாத அசுரன்கள் உண்டா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கான பதிலையும் ஒருவாறு கண்டுபிடித்து விடலாம்.

 

சில அசுரன்களை இங்கு கோடி காட்டி விட்டால் பாக்கி அசுரன்களை நீங்களே பட்டியிலிட மாட்டீர்களா என்ன?

 

மொபைலாசுரன் : அடடா, இவன் இல்லாத இடமே இல்லை. அந்தஸ்து, மதம், பால், நாடு, மொழி என்று பார்க்காமல் எல்லோரிடமும் புகுந்தவன் இவன். பிச்சைக்காரி கையிலும் இருப்பான், பெரிய மந்திரி கையிலும் இருப்பான். ஒரு வேடிக்கை என்னவென்றால் ரோடில் போகும் போது சிரித்துக் கொண்டே போகும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் பைத்தியமா என்று எண்ணினால் எண்ணியவர்கள் தான் பைத்தியங்கள். மார்புக்குள் சொருகி வைத்திருக்கும் மைக் மூலமாக யாருடனாவது பேசிக் கொண்டே போவார்கள். காதில் மறைத்து வைத்திருக்கும் சிறிய பட்டன் மூலம் கேட்க வேண்டியதைக் கேட்பார்கள். இதில் என்ன சங்கடம் உனக்கு என்று கேள்வி கேட்போர்கள் தயவு செய்து சாலையைச் சிறிது நேரம் கண்காணிக்க வேண்டும். கார், ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு போவோர்கள் முன்னால் அலட்சியமாக நடப்பார்கள் இவர்கள்.

சற்று அஜாக்கிரதையாக இருந்தால் பெரும் விபத்து தான் ஏற்படும். மேடு பள்ளங்களைக் கவனிக்காமல் பேசிக் கொண்டே விழுபவர்கள் ஏராளம். காரில் டிரைவ் செய்து கொண்டு போனில் பேசிக் கொண்டே காரை மெதுவாக ஓட்டுவோரால் பின்னால் வருபவர்கள் படும் பாடு பெரும் பாடு! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக இந்த மொபைலாசுரன் மனித குலத்தின் நண்பன் போல வந்து கெடுதலைச் செய்யும் அசுரன்.

 

 

இண்டர்நெட்டாசுரன் : இவன் இன்று புகாத நகர் இல்லை. ஆரம்பத்தில் யுகத்தில் புரட்சி செய்ய வந்தவன் போல அவதாரம் எடுத்தான். இன்றோ தகாத காரியங்கள் செய்வோருக்கும் உதவும் மோசமான அசுரன் ஆகி விட்டான்.

 

மெயிலாசுரன் : காலையிலிருந்து இரவு வரை வரும் ஸ்பாம்கள், தேவையற்ற ஊடுருவல் விளம்பரங்கள், இன்ன பிற வேண்டாத செய்திகளால் விரயமாகும் மனித மணிகள் எத்தனை கோடியோ, யாருக்குத் தெரியும்.

ப்ளாக்காசுரன்: இந்த நவீன யுகத்தில் எல்லோரும் டாக்டர்கள். எல்லோரும் விஞ்ஞானிகள்.எல்லோரும் ஜோதிடர்கள். எல்லோரும் எழுத்தாளர்கள். அவரவர் தனக்குத் தெரிந்தவற்றை அல்லது மற்றவர் மீது திணிக்க விரும்புவனவற்றை ப்ளாக்குகள் மூலம் வெளியிடும் காலம் இது. இதற்குத் துணை ப்ளாக்காசுரன். (எழுத்து அல்லது கருத்து )திருட்டை வளர்க்கும் ப்ளாக்குகள் ஏராளம்! சற்று அசந்தால் இந்த அசுரனிடம் அகப்பட்டு பல தொல்லைகளுக்கு உள்ளாவோர் ஏராளம்.

 

 

வாட்ஸாப்பாசுரன் : நல்லதை உடனடியாகப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்த வாட்ஸ் ஆப்பை அசுரனாக மாற்றியவர்களைப் பற்றி என்னத்தைச் சொல்ல?! இன்று பல வம்புமடங்களின் தொகுதியாக அமைவது இது தான்! பல குடும்பங்களில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கும் இந்த அசுரனே காரணம்.

 

லெகோசுரன் : சிறுவர்களுக்கான விளையாட்டு லெகோ. அதில் இருக்கும் சின்ன சின்ன பீஸ்களால் ஏராளமான துன்பங்கள். சிறுவர்களுக்கு கிரியேடிவிடி வேண்டும் தான்! ஆனால் இவ்வளவு சிறிய பாகங்களாலும் அதை மென்மேலும் வாங்க வேண்டிய தேவையை உண்டு பண்ணுவதாலும் பல குடும்பங்கள் படும் அவஸ்தை தனியாக எழுதப்படவேண்டிய ஒன்று.

பொகேமானாசுரன் : போகேமான் வியாதி தனி. இவனிடம் மாட்டிக் கொண்ட சிறுவர்களின் கதி அதோகதி தான்.

சிறுவர்களுக்காக டெவலப் செய்யப்பட்ட ஒரு ஆப்  தண்டவாளத்திலெல்லாம் சிறுவர்களைத் தேட வைக்கச் செய்தது; மாடியிலிருந்து குதிக்க வைத்தது. அதன் பெயரைச் சொல்வது கூட பாவம் என்பதால் அதன் பெயரை இங்கு சுட்டிக் காட்டவில்லை.

 

 

மொபைல் போனில் வீடியோக்களை பார்த்துக் கொண்டே போவது தான் இன்றைய போக்கு. கண்டக்டரைப் பார்த்து ஏன் எனது ஸ்டாப் வந்ததைச் சொல்லவில்லை என்று ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர் கேட்க, அதை அப்போதே கத்தினேனே, காதில் கேட்காமல் வீடியோவைப் பார்த்துக் கொண்டே இருந்தீர்களே என்றார் கண்டக்டர். அசடு வழிய அவர் இறங்கிப் போனார். நல்ல வேளை இரண்டு ஸ்டாப் கடந்து வந்த தூரத்திற்கான எக்ஸ்ட்ரா டிக்கட் சார்ஜை கேட்காமல் விட்டாரே என்று நினைத்துக் கொண்டேன். 35 பேர் செல்லும் ஏசி பஸ்ஸில் மூன்று பேர் மட்டும் வீடியோ காட்சிகளை மொபைலில் பார்க்கவில்லை. டிரைவர்,கண்டக்டர்,அடியேன்!

நல்ல சாதனங்களை உடனடியாக தேவையற்ற வழிகளில் பயன்படுத்தி அவற்றை அசுரனாக்குவது நாம் தான்!

அமைதியாக உட்கார்ந்து எண்ணிப் பார்த்தால் இவை வரமா சாபமா என்பது புரியும்!

இது போன்ற எண்ணற்ற அசுரன்கள் இல்லாத வாழ்க்கை இன்று இல்லை.

 

தேவையான அளவு தேவையான விஷயத்திற்கு நவீன கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்தினால் அவற்றிற்கு நாம் எஜமானர். இல்லையேல் அவை நமக்கு எஜமானர்கள்.

 

*** SUBHAM *****

Is Hinduism a Museum of Beliefs, Medley of Rites, Name Without any Content? (Post No.5266)

Compiled by London swaminathan

Date: 28 JULY 2018

 

Time uploaded in London – 14-47  (British Summer Time)

 

Post No. 5266

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

AUGUST 2018 ‘GOOD THOUGHTS’ CALENDAR

FESTIVAL DAYS- AUGUST 3- Adi Pathinettu (Tamil Festival), 5-Adi Krithikai, 11- Adi Amavasai, 13- Adi Puram,  15- Independence Day, Naga Panchami, 21- Avani Mulam, 24-Varalakshmi Vrata, 25- ONAM and Rig Veda Upakarma, 26-Raksha Bandan and Yajur Veda Upakarma, 27- Gayatri Japa,

 

 

FULL MOON DAY- 26

NEW MOON DAY- 10 Bodhayana amavasai, 11 Adi Amavasai

August 11 Solar Eclipse/ Surya Grahana not for India

EKADASI FASTING DAYS- 7, 22

AUSPICIOUS DAYS- 23, 29, 30

Is Hinduism a Museum of Beliefs, a Medley of Rites, a Name Without any Content? (Post No.5266)

 

I have given below 31+ quotations from ‘Radhakrishnan Reader – An Anthology’. Dr S Radhakrishnan was the
President of India . He was a great philosopher.

AUGUST 1 WEDNESDAY

It is a bewildering phenomenon that, just when India is ceasing to appear grotesque to Western eyes, she is beginning to appear so to the eyes of some of her own sons. The West tried its best to persuade India that its philosophy is absurd, its art puerile, its poetry uninspired, its religion grotesque and its barbarous. Now the West is feeling that it’s judgement is not quite correct, some of us are insisting that it was wholly right.

AUGUST 2 THURSDAY

The past course of Indian philosophic development encourages us in our hope. The great thinkers, Yajnavalkya and Gargi, Buddha and Mahavira, Gautama and Kapila, Samkara and Ramanuja , Madhva and Vallabha and scores of others are India’s grandest title to existence, a clear testimony of her dignity as a nation with a soul , the proof that she may yet rise above her self and the pledge of this supreme possibility.

AUGUST 3 FRIDAY

God’s Creation not an instantaneous act or a series of acts, but is an eternal process. There is no divorce between the natural and the supernatural. The two are continuous. If god is anywhere, he is everywhere.

AUGUST 4 SATURDAY

The Mahabharata says, ‘To you I declare this holy mystery, there is nothing nobler than humanly’– 12-300-20

Guhyam brahma tad idam vo bravimi
Na manuscat srestataram hi kincit

AUGUST 5 SUNDAY
The inadequacy of-religion-is evident from the disparity between outward allegiance and inward betrayal. Religion is confused with the mechanical participation in the rites or passive acquisition in the dogmas.

 

AUGUST 6 MONDAY

INDIA’S CAPACITY
Hinduism is not limited in scope to the geographical area which is described as India Its sway in early days spread to Campa, Cambodia, Java and Bali. There is nothing which prevents it from extending to the uttermost parts of the earth. India is a tradition, a spirit, a light. Her physical and spiritual frontier s do not coincide.

AUGUST 7 TUESDAY

For thinking minds to blossom, for arts and sciences to flourish, the first condition necessary is a settled society providing security and leisure. A rich culture is impossible with a community of nomads, where people struggle for life and die of privation.

 

AUGUST 8 WEDNESDAY
The huge forests (in India)  with their wide leafy avenues afforded great opportunities for the devout soul to wander peacefully through them, dream strange dreams and burst forth into joyous songs.

AUGUST 9 THURSDAY

Intellectual unselfishness or humility is the mother of all writing, even though that writing may relate to the history of philosophy.

AUGUST 10 FRIDAY

On God
God is not the great silent sea of infinity in which individuals lose themselves but the Divine person who inspires the process first , last and without ceasing.

 

AUGUST 11 SATURDAY

To say God created the world is an understatement. He is creating now and for all the time.

AUGUST 12 SUNDAY

I have had my own share of anxiety trouble and sorrow, but I have had blessings, too, more than I deserve, the chief being the affection and kindness which I receive
In abundance from other people. For all these a thanks offering is due.

AUGUST 13 MONDAY
Life is not a mere chain of physical causes and effects. Chance seems to form the surface of reality, but deep down other forces are at work. If the universe is a living one, if it is spiritually alive, nothing in itis merely accidental. “ The moving finger writes and having writ moves on.”

AUGUST 14 TUESDAY

Indian wisdom has also contributed effectively to the cultural developments of the regions of South East Asia. The characteristic features of Indian culture can still be discerned from ‘Ayuthia and Angkor to Borobudur and Bali’.

AUGUST 15 WEDNESDAY

Ancient Indians do not belong to a different species from ourselves. An actual study of their views shows that they ask questions and find answers analogous in their diversity to some of the more important currents in modern thought. The systems of Nagarjuna and Samkara, for example, are marvels of precision and penetration. Comparable to the very best of Western thought.

 

AUGUST 16 THURSDAY
The scientific mastery of natural force s has intoxicated the modern mind with a sense of material success and intellectual conceit.

AUGUST 17 FRIDAY

Though peoples of different races and cultures have been pouring into India from the dawn of history, Hinduism has been able to maintain its supremacy, and even the proselytising creeds backed by the political power has not been able to coerce the large majority of Indians to their views.

AUGUST 18 SATURDAY

There is an Indian saying that words are the daughters of earth but deeds are the sons of heaven. Words are born of intellect, deeds of spirit. It is faith that can move mountains. Faith is an attitude of will, the energy of soul, the response of the entire self.

AUGUST 19 SUNDAY

Pascal is right when he says “most of the mischief in the world would never happen, If men would only be content to sit still in their parlours “. Even worship is a means to gain solitude. But sitting still, being alone has become very difficult in these days. We devise ways to escape from solitude, such as play and drink, luxury and dissipation.

 

 

AUGUST 20 MONDAY

God is the living friend of all—suhridam sarvabhutaanaam— as the Bhagavad Gita has it.

 

AUGUST 21 TUESDAY

If we are spiritually alive, our capacity for love and service will be ever growing. We will be indulgent to others and hard on ourselves. The characteristic sign of a spiritual temper is to be inwardly hard and austere and outwardly genial and forgiving.

 

AUGUST 22 WEDNESDAY

A great Sanskrit poet Bhavabuti, maintains that though the artist speaks of different moods of laughter, pity, compassion, anger, love etc., they are all variations of a common theme, Karuna, compassion, love with suffering.

AUGUST 23 THURSDAY
If we should wish to build a society in which judges and evil doers are transformed into higher beings, into brothers forgiving one another, and thus free themselves from falsehood, guilt and crime, we must practise love.

AUGUST 24 FRIDAY

Difficulty of defining what Hinduism is……….
‘To many it seems to be a name without any content. Is it a museum of beliefs, a medley of rites, or a mere map, a geographical expression? If there is not a unity of spirit binding its different expressions and linking up the different periods of its history into one organic whole, it will not be possible to account for the achievements of Hinduism’.

AUGUST 25 SATURDAY
Half the world moves on independent foundations which Hinduism supplied. China and Japan, Tibet-and Siam, Burma and Ceylon look to India as their spiritual home.

 

AUGUST 26 SUNDAY

The Hindu attitude to religion is interesting. While fixed individual’s beliefs mark off one religion from another, Hinduism sets no such limits. Intellect is subordinated to intuition, dogma to experience, outer expression to inward realisation.

AUGUST 27 MONDAY
The chief sacred scriptures of the Hindus, the Vedas, register the intuitions of the perfected souls. They are not so dogmatic dicta as transcripts from life. They record the spiritual experiences of souls strongly endowed with the sense for reality. They are held to be authoritative on the ground that they express the experiences of the experts in the field of religion.

AUGUST 28 TUESDAY

The Vedic tradition became surrounded with sanctity, and so helped to transmit culture and ensure the continuity of civilisation. The sacred scriptures make the life of the spirit real even to those who are incapable of insight.

 

AUGUST 29 WEDNESDAY

While other civilisation s have perished or absorbed in the changes that have transpired in the march of over five thousand years, the Indian civilisation, which is contemporary with those of Egypt and Babylon, is still functioning.

AUGUST 30 THURSDAY
How has she managed to remain more or less the same in the midst of social migration s upheavals and political changes that have else where changed the face of society? Why is that her conquerors have not been able to impose on her their language, their thoughts and customs, except in superficial ways? It is not by the use of force or by the development of aggressive qualities that India has succeeded in her missions.

AUGUST 31 FRIDAY

Hinduism is an inheritance of thought and inspiration living and moving with the movement of life itself, an inheritance to which every race in  India  has made its distinct and specific contribution. Its culture has a certain unity, though on examination it dissolves into a variety of shades and colours.

 

SUBHAM

MORE QUOTES FROM THE SAME BOOK

SAINT TUKARAM

We seem to give value to god, more than god to us. Saint Tukaram says “That we fall into sin is thy good fortune; we have bestowed name and form on thee; had it not been we, who would have asked after thee, when thou was lonely and unembodied?
ON FEAR
Religion is the conquest of fear, the anti dote to failure and death. The fear which is an expression of mans rationally cannot be removed by any change in his circumstances. It is an instinctive fear which can be displaced by the stimulation of other instincts.

STRANGE ALCHEMY

By what strange social alchemy has INDIA subdued her conquerors them to her very self and substance?, transforming.

MISSIONARY RELIGIONS

All missionary religions, Buddhism, Christianity and Islam believe in their own superiority . They all profess that they have the highest truth. How is anyone claim to be preferred to others?

–THE END–

 

 

 

 

ராமனின் அதிசயப் பயணம்-4 (post no.5265)

WRITTEN by London swaminathan

Date: 28 JULY 2018

 

Time uploaded in London – 13-19  (British Summer Time)

 

Post No. 5265

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

COMPARISION BETWEEN KASHMIR POET KALHANA AND TAMIL POET TIRUVALLUVAR

 

ராம பிரான் நடந்தது 14 ஆண்டுகள்; அதாவது சுமார் 5113 நாட்கள்; சில இடங்களில் பல மாதங்கள் கூட ஓய்வெடுத்தார். உதாரணத்துக்கு மழைக் காலங்களில் காட்டு வழியே நடக்க மாட்டார்கள். ஆகையால் ரிஷி முனிவர்கள் சாதுர் மாஸ்ய விரதம் ( நான்கு மாத நோன்பு) அனுஷ்டிப்பர். ராமனும் அதைப் பின்பற்றியதற்கு சான்று உள்ளது. கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்கு நான்கு மாத கெடு விதிக்கிறார். படை திரட்டிக் கொண்டு திரும்பி வா என்று அனுப்புகிறார். அவன் 4 மாதங்கள் ஆகியும் வராததால் லெட்சுமணனை தூது அனுப்புகிறார்.  ஆக, ராமாயணம் நடந்ததை நடந்தவாறு சொல்கிறது.

 

முதல்  மூன்று பகுதிகளில் ராமன் சென்ற இடங்களைக் கண்டோம்; இதோ நாலாவது பகுதி.

 

75.சுதீக்ஷண ஆஸ்ரமம் (ஆகோலா)

முனிவருடன் சந்திப்பு

 

(முன்னரே வேறு ஒரு சுதீக்ஷ்ண ஆஸ்ரமம் குறிப்பிடப்பட்டது. ராமன் மீண்டும் அங்கு சென்றாரா? அல்லது ஒரே முனிவரின் பல ஆஸ்ரமங்களில் இதுவும் ஒன்றா? என்பது குறிப்பிடப்  படவில்லை)

 

76.அகஸ்த்ய ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவருடன் சந்திப்பு.

அகஸ்தியரின் ஆஸ்ரமங்கள் நாடு முழுதுமுள. இது ஒரு கோத்திரப் பெயர் என்பதால் பல முனிவர்கள் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம்)

 

77.பஞ்சவடி (ஐந்து ஆல மரம்)

கோதாவரி நதிக்கரையில் ஐந்து பெரிய ஆலமரங்கள் உள்ள இடம். நாஸிக் அருகில் உள்ளது. ராவணனின் சஹோதரி சூர்ப்பநகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம்; ஸீதா தேவியை ராவணன் கடத்திய இடம்.

 

(ராவணன், பருவக்காற்றைப் பயன்படுத்தி பல நதிகள் வழியாகப் பல இடங்களுக்குச் சென்று அட்டூழியம் செய்ததை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன் . அசோகனின் குழு ஏழே நாட்களில் இலங்கையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்ததை மஹாவம்ஸம் இயம்பும். இதை அறியாத அரை வேக்காட்டு ஆராய்ச்சியாளர் கோதாவரி நதித்  தீவுதான் லங்கா என்று உளறிக்   கொட்டினர்)

 

78.ஸர்வ தீர்த் (கோடி)

ராவணனுடன் சண்டையிட்டு ஜடாயு மாண்ட இடம்; இங்கே ஜடாயுவை ராமன் தஹனம் செய்து ஜல அஞ்சலி (தர்ப்பணம்) செய்தான். (ஜடாயு என்பது கழுகு அல்ல; கழுகை அடையாளமாகக் கொண்ட ஒரு இனம். அவர்களும் மனிதர்களே; வானரர்கள் என்போர், குரங்கு போல முறையற்ற வாழ்க்கை நடத்திய மனிதர்களே. அவர்களுடைய அடையாளம் குரங்கு. இப்பொழுதும் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் மூக்கு, முகம், வாய் முதலியவற்றை இனம் வாரியாக, வெவ்வேறு வகையில்  சிதைத்துக் கொள்ளும் பழக்கம், கானக வாஸிகள் இடையே உண்டு. அது போலவே வானர இனங்களும்).

  1. சுகல் தீர்த்

சுதீக்ஷண முனிவர் ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

(இமயம் முதல் குமரி வரை காடுகளில் முனிவர்கள் வசித்ததும் அவர்களுடன் ராமன் தங்கியதும் இதன் மூலம் தெரிகிறது. அமைதியான வாழ்வு நடத்தி, இறைவனை நோக்கி தவம் இயற்றுவதும், கானகப் பொருட்களை- கனி காய், தேன் வரகு அரிசி  — உணவாகப் பயன் படுத்தியதும் தெரிகிறது.)

 

மும்பை வட்டாரம்

 

80.பாலுகேஷ்வர் மந்திர், மும்பை

மணலினால் ராமர் உருவாக்கிய லிங்கம்; இங்கு ராமர் வில்லினால் ஒரு ஊற்று உண்டாகினார். வால்கேஷ்வர் கோவில் என்றும் அழைப்பர்.

 

81.புனே வட்டாரம்

81.ராம் தாரியா

இந்த வழியாக ராமர் தென் திசை நோக்கிப் பயணித்தார்.

82.ராம்லிங் (யட்ஸி)

ராமன் சிவனை வழிபட்ட இடம்

 

83.ஸ்ரீ ராம வர்தாயனி

துல்ஜாபூரில் ராமரை ஸதி மாதா சோதித்துவிட்டு, ஸீதையைக் கண்டுபிடிக்க ஒரு பொருளைக் கொடுத்ததாக ஐதீகம்

 

84.காட் ஷிலா மந்திர் (துல்ஜாபூர்)

ஒரு கல்லில் ஸதி மாதவின் உருவத்தை ராமர் கண்டதாகவும்அவள், ராமனை தெற்கு திசை நோக்கிச் செல்ல உத்த்ரவிட்டதாகவும் ஐதீகம்

 

85, 86 ராமேஷவர் (அதானி), ஜாம் கண்டி ஷிவ் மந்திர்

 

இரண்டு இடங்களும் ராமர் சிவ பூஜை செய்த இடங்கள்

  1. அயோமுகி கௌபா( ராம் த்ர்க்)

தொல்லை கொடுத்த ஒரு அரக்கியின் காதுகளையும், மூக்கையும் லக்ஷ்மணன் அறுத்த இடம்

 

  1. கபந்த ஆஸ்ரமம் (ராம் துர்க்)

கபந்தன் என்னும் அரக்கனை ராமன் கொன்ற இடம்

89.சபரி ஆஸ்ரமம்

காட்டுக்குள் சபரி ஆஸ்ரமம் இருக்கிறது. அவள்  கானகப் பழங்களை இனிக்கிறதா என்று கடித்துப் பார்த்தபின்னர் ராமனிடம் கொடுத்தாள்; அதை ராமன் அன்போடு வாங்கிச் சப்பிட்டான்.

 

90.பம்பாசர் (ஹம்பி- துங்கபத்ரா)

ஸீதையைத் தேடுகையில் ராமன் சென்ற  இவ்விடத்தில் வரிசையாகக் கோவில்கள் இருக்கின்றன.

91.ஹனுமான் ஹல்லி (ஹம்பி)

ராம லக்ஷ்மணர்களை அனுமன் சந்தித்த இடம்.

 

ரிஷ்யமுக பர்வதம்

சுக்ரீவனை சந்தித்த இடம்

 

  1. கந்தமாதன் பஹரி (ஹம்பி)

ஐந்து குரங்குகளைக் கண்ட ஸீதா தேவி தனது ஆபரணங்களைக் கீழே போட்ட இடம் (புறநானூற்றில் இது உள்ளது)

 

94.துங்கபத்ரா சக்ர தீர்த

வாலி- சுக்ரீவன் சண்டையை ராமன் மரத்தின் பின்னால் இருந்து பார்த்த இடம்

 

  1. கிஷ்கிந்தா (ஹம்பி)

வாலியின் தலைநகருக்கு ராமன் வந்தான்

96.பரஸ்ராவன் பர்வத் (ஹம்பி)

 

ராமன் இங்கே 4 மாதங்கள் (சாதுர் மாஸ்ய வ்ரத காலம்/ மழைக் காலம்) தங்கினார்.

97.ஸ்படிக சிலா

ஸீதையைத் தேடுவதற்கான திட்டங்களை அனுமான் அறிவித்த இடம்

98, 99, 100, 101.கர் ஸித்தேஸ்வர் மந்திர், ஹல் ராமேஷ்வர், கூடட் நைலிகர், சோம்வார் பேட்

 

இங்கு ராமன், சிவனை வழிபட்டார்.

இதில் நைலிகேர் என்னும் இடத்தில் தசரதனுக்கு ராமர் திதி கொடுத்தார்– சிரார்த்தம் செய்தார்.

  1. தனுஷ் கோடி (மேலி கௌடி)

வானர சேனை இங்கே காலை உணவு உண்டனர். ராமரின் அம்பு மூலம் ஒரு ஊற்று ஏற்படுத்தப்பட்டது.

 

103, 104, 105- சிவ, விஷ்ணு மந்திர்

மைசூர் மவட்டத்தில் கவி ராயன் பேட்டையில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்த ஊரில் அரக்கன் கவியை ராமன் கொன்றார். ராம நகரில் ஒரு ராமர் கோவில் இருக்கிறது. இது அவர் ஓய்வெடுத்த இடம். இதே போல ராம் மந்திரும் (ராம் நகர்) அவர் ஓய்வெடுத்த இடம். ராவணனின் சஹோதரன் த்ரிசிரா கட்டிய ஊரில் விஷ்ணு மந்திர் உள்ளது.

 

ராமனும் பஞ்ச பாண்டவர்களும் 14, 13 ஆண்டுகள் சஞ்சாரம் செய்ததால் அவர்கள் காலடி படாத இடமே பாரதத்தில் இல்லை. ஆகவே அவர்கள் வந்த வழியெல்லாம் புனிதத் தலமாக மாறியதில் வியப்பொன்றும் இல்லை. மேலும் அவர்கள் மிகப்பெரிய அரசுகளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களுக்கு அரசுகளின் மஹத்தான ஆதரவும் மக்களின் மாபெரும் வரவேற்பும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை!

–தொடரும்

 

 

பூந்துறை குப்பிச்சி! (Post No.5264)

Written by S NAGARAJAN

 

Date: 28 JULY 2018

 

Time uploaded in London –   6-11 am (British Summer Time)

 

Post No. 5264

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பூந்துறை குப்பிச்சி!

 

ச.நாகராஜன்

 

விஜய நகரத்து அரண்மனையில் புகுந்த குப்பிச்சியின் வீர வரலாறு பலரும் அறியாத ஒன்று. அதை கொங்கு  மண்டல சதகம் 56வது பாடலில் விளக்குகிறது.

 

மேல்கரைப் பூந்துறையில் கொங்கு வேளாளரில் காடை குலத்தில் மாட்டையா குப்பிச்சி என்ற வீரன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் விஜயநகரம் சென்றான். அங்கு வாயில் காவலனாக இருந்த ஒரு மல்லன்  தனது இடது காலில் சங்கிலி ஒன்றின் தலைப்பைக் கட்டி மற்றொரு தலைப்பை வாசல்படியின் எதிர்ப்புறமாகப் மேலே மாட்டித் தோரணம் போலத் தொங்க விட்டிருந்தான். யாரேனும் வல்லவனாக இருந்தால் தன்னை ஜெயித்து விட்டு உள்ளே போகலாம்; இல்லையேல் தன் காலில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் சங்கிலிக்குக் கீழே நுழைந்து உள்ளே செல்லலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மல்லனை யுத்தத்திற்கு குப்பிச்சி அழைத்தான். யுத்தத்தில் அவனைக் குப்புற வீழ்த்தி ஜெயித்தான். நேராக அத்தாணி மண்டபத்தினுள் புகுந்து மன்னனைக் கண்டான்.

 

 

மன்னன், “என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதன் மேல் ஏறி சவாரி செய்வாயேல் நீ ஒரு பெரும் வீரன் என்பதை ஒப்புக் கொள்வேன்” என்றான். அந்த சவாலை எதிர் கொண்டான் குப்பிச்சி.

 

அந்தக் குதிரை மிகவும் பொல்லாத குதிரை. ஏறிய எவரையும் அந்நகரத்தில் இருந்த நீர் நிலை ஒன்றினுள் கொண்டு சென்று தள்ளி, மிதித்து மீண்டு வரும் தகுதி பெற்ற குதிரை என்பதை குப்பிச்சி தெரிந்து கொண்டான்.

சுண்ணாம்புக்கற்களை வாங்கி அதை ஒரு மூட்டையில் கட்டினான் குப்பிச்சி.

 

அந்த மூட்டையை குதிரையின் அடி வயிறில் நன்கு கட்டி விட்டு குதிரை மீது அவன் ஏறினான்.

 

உடனே குதிரை அதிவேகமாக வீதிகள் வழியே சென்று பெரும் நீர் நிலை ஒன்றில் வழக்கம் போல பெரிதாகக் கனைத்துக் கொண்டு இறங்கியது.

 

வயிறளவு நீரினுள் குதிரை இறங்கியவுடன் சுண்ணாம்புக்கற்கள் நீரில் படவே கொதிப்புற்றது. அந்த எரிச்சலைப் பொறுக்க மாட்டாமல் குதிரை நீர்நிலையிலிருந்து வெளியேறியது. அதி வேகமாகச் சென்ற அந்த குதிரை மீது அமர்ந்திருந்த குப்பிச்சி வீதி வலம் வந்து கடைசியில் அரசன் முன் வந்து வணங்கி நின்றான்.

 

அவனது யுக்தியையும் வீரத்தையும் மெச்சிய அரசன் அவனை பூந்துறை நாட்டிற்கான அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பினான்.

 

இந்த மாதிரியான வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது என்பதை எட்டயபுர சமஸ்தானத்து வம்சமணி தீபிகை என்ற நூல், மூன்றாவது பிரகரணத்தில் தெரிவிக்கிறது.

 

12வது பட்டம் நல்லம நாயக்கரவர்கள் விஜயநகரம் சென்றிருந்த காலத்தில் தெற்கு வாசலில் சோமன் என்ற மல்ல வீரன் இவ்விதம் இடது காலில் தங்கச் சங்கிலி கட்டிக் கொண்டிருந்ததாகவும், அவனைக் கொன்று உள்ளே நுழைந்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

 

சுண்ணாம்புக் கல்லைக் கட்ட யோசனை தெரிவித்த உப்பிலிய நல்லயன் என்பவனுக்கு இந்த அதிகாரி ஒரு மரியாதையைக் கொடுத்தான்.

 

அது இது: பூந்துறையில் செதுக்கிய கல்லால் ஆன மேடை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ஜாதி ஞாயம் உப்பிலியர் அந்த மேடையிலிருந்து பேசுவார். அப்பொழுது மேலோர் அங்கு வந்தால் கூட உட்கார்ந்தே பேசலாம் என்ற வழக்கம் இருந்தது. அந்த மேடையின் இரு புறமும் குதிரையைப் பிடித்தல், சுண்ணாம்புக் கல்லைக் கட்டுதல், சவாரி செய்தல் ஆகிய சித்திரக் குறிகள் வெட்டப்பட்டிருக்கின்றன.

 

பூந்துறை புட்பவன நாதர் ஆலயத்தினுள் பாகம் பிரியா நாயகியார் கர்ப்பகிரக இடப்புறச் சுவரில்,அக்கோவிலில் திருப்பணி செய்துள்ள ‘குப்பன் அழைப்பித்தான்’ என்ற குறிப்பு காணப்படுகிறது.

 

அதில் உள்ள குப்பன் (குப்பிச்சி) மேலே கண்ட வரலாறில் உள்ள குப்பிச்சியே.

விஜயநகர சதாசிவராயர், ராமராஜா ஆகியோரின் சாஸனங்கள் இங்கு காணப்படுகின்றன.

 

இவர்களுடைய காலம் கி.பி. 1541 முதல் 1565 வரை எனலாம்.

 

இனி, கொங்கு மண்டல சதகம் கூறும் பாடலைப் பார்ப்பொம்:

 

தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்                     வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்

டேசற் படுமச மாவினை யாட்டி யெவருமெச்ச

மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே.

 

பாடலின் பொருள் :- விஜய நகரத்து அரண்மனை வாயிற்காவலனைக் குப்புற அடித்து வீழ்த்தி, அரண்மனைக்குள் புகுந்து அரசனைக் கண்டு அங்கிருந்த மசக்குதிரை ஏறி ஆட்டி, பூந்துறை நாட்டின் அதிகாரத்தைப் பெற்ற குப்பிச்சியும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாகும்.

***

 

FORTUNE, FATE, FEAR, FATALITY- VALLUVAR AND KALHANA AGREE! (Post No.5263)

Compiled by London swaminathan

Date: 27 JULY 2018

 

Time uploaded in London – 13-41  (British Summer Time)

 

Post No. 5263

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

COMPARISION BETWEEN KASHMIR POET KALHANA AND TAMIL POET TIRUVALLUVAR

 

Fortune
Fortune which merchants obtain by misappropriation of deposits, which courtesans get by deceiving their lovers, or princes through treason, is after all impermanent– Raja Tarangini of Kalhana 4-181

 

All profits, that makes others weep, depart with tears. Even if lost, blessings flow from good deeds-– Tiruk Kural 659 of Tiruvalluvar

 

Fortune moving about unsteadily, like the lightning playing in the sky, always follows the cloud of destiny. With whom does it abide permanently? Rajatarangini of Kalhana 8-1896

An adverse destiny blunts a man’s intelligence  and makes him lose his wealth, whereas when he gets good luck it quickens his intelligence and promotes prosperity- Tirukkural of Tiruvalluvar 372

When extraordinary good fortune of overwhelming glory comes to a man, retreating misfortune increases the power of its sorrows – Rajatarangini 7-795

Through the influence of fate all good means of acquiring wealth may prove disastrous, and all foul means prove helpful- Tirukkural couplet 375

Fate grants fortune to that person whom those who think themselves wise, persist in considering as unfit –Rajatarangini 8-491

 

Fortune like a prostitute daubed with a magic powder conquers even the strong minded, making them unlawful- 8-189

It is one thing to be wealthy, but to attain wisdom is quite another. This is the two fold nature of this world- Tirukkural 374

 

xxxx

 

Destiny
Destiny can be opposite if and when jackals victoriously control a lion- Rajatarangini 8-1470

Except as ordained by the Lord, who measures out each man’s meet,

Even the millionaire cannot enjoy his hoards- Tirukkural 377
The mighty are cheated by the infirm and those who hold all might in their control, are deluded by the power less- Rajatarangini –Rajatarangini 7-959

 

The constructive industry that produces wealth, and the destructive indolence

That brings about adversity in life, are both the outcome of fate- Tirukkural 371

xxx

Death
A man will not be slain even by a stroke of lightning before his time but one who has reached his allotted span might die even from a flower –Rajatarangini of Kalhana 8-531

 

The characteristic feature of the world is the transitoriness of the life. The disappearance today of one who existed yesterday is a common occurrence – Tiruk Kural 336 of Tiruvalluvar

 

What is there more potent than fate? It forestalls every expedient one may resort to for averting it- Tirukkural 380

xxxx

 

Devotion to king
Devotion to one’s sovereign does not change in honest men till they die –RAJATARANGINI OF KALAHANA 7-1322

 

Men of clear vision do nothing base and displeasing or take undue advantage of the leader’s (king’s) favour- Tirukkural 699

One should behave towards the leader/king as befitting his splendour, never making light of him on the score of youth or kinship- Tirukkural 698

The minister whose mind plots treason against the ruler is worse than millions of open enemies- Tirukkural 639

xxx

Diamond; Great people help
The diamond is not cut by any other precious stone but on the contrary it cuts them. Rajatarangini 4-51

The great for a few favours give much of their own. Rajatarangini 3-276

Valour, honour, a great tradition and loyalty- these are the four defences of an army- Tirukkural 766

xxx

Earth/ Heroism
The earth has been preordained for enjoyment of the valiant. 7 Rajatarangini -1288

Courage
The heroic think an object attainable by courage, the timid by caution; otherwise between them there could be little difference. Rajatarangini 6-363

 

Brave traditional heroes do not quail before a crisis; they hold the field; risking life – Tirukkural 762

That alone is an army which has the courage even to meet death advancing in anger and to confront him in a body- Tirukkural 765

 

xxx

FEAR

If the banks of rivers will only smell of a lion, to elephants they will seem as though they are on fire –Rajatarangini 8-3013

It is folly not to fear what should be feared; to fear that which should be feared is the way of the wise- Tirukkural 428

The mean follow the law for fear, and sometimes, when there is hope of profit- Tirukkural 1075

xxx

Followers
The lightning of prosperity, the crane of celebrity, the thunder of boldness, and the rainbow of prowess, follow the cloud of prudence. Rajatarangini 7-1455

 

The world clings to the feet of the great leader who  wields his sceptre with love for his subjects- Tirukkural 544

 

Whatsoever a great man does, the same is done by others as well; whatever standard he sets, the world follows- Bhagavad Gita 3-21

To esteem men who are greater than oneself and follow in their footsteps is the highest of all powers- Tirukkural 444

–subham–

 

 

 

ராமனின் அதிசயப் பயணம்-3 (Post No.5262)

Written by London swaminathan

Date: 27 JULY 2018

 

Time uploaded in London – 8-31 am  (British Summer Time)

 

Post No. 5262

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ராமன் 5113 நாட்களில் செய்த பயணத்தில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன.

 

உலகிலேயே முதல் வெளிநாட்டு அரசை வேறு ஒரு நாட்டில் அமைத்தது ராமபிரான். இந்திய மண்ணிலேயே இலங்கை அரசை ஏற்படுத்தி, விபீஷணனை இலங்கை மன்னனாக அறிவித்து, முடி சூட்டி விடுகிறான்.

 

அதே போல பிடித்த நாடுகளை அவரவர் கையிலேயே (சுக்ரீவன், விபீஷணன்) கொடுத்து விடுகிறான். நாடு பிடிக்கும் ஆசையோ, ஆட்சியைக் கலைக்கும் ஆசையோ இல்லாதவன்

 

பொது மக்கள் அபிப்ராயத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அவன்தான். யாரோ ஒரு வண்ணான் சொன்னதற்காக தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான்.

 

 

  1. சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமன் கைகளை உயர்த்தி சபதம் செய்கிறான் அசுர சக்திகளை அழிப்பேன் என்று.

 

42.அக்னிஜிஹ்வ ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவரின் சஹோதரர் ஆஸ்ரமம் இது; இங்கே ராமன் எழுந்தருளினார்.

43.அகஸ்த்ய ஆஸ்ரமம் (சாலேஹ)

சித்த பாபா ஆஸ்ரமம் இருக்கிறது

 

44.ராம் கோவில் (மைஹர் சாதனா)

இங்குள்ள கோவிலில் ராமர், சிவனை வழிபட்டார்

 

சகுஜா மாவட்டத்தில் நுழைகிறார்

 

45.சந்தன் மித்தி

ராமரும் லக்ஷ்மணனும் சந்தனக் குழம்பால்

தங்கள்  தலை முடியைக் கழுவினர்

 

ராஜ்கர் மாவட்டத்தில்

 

46.சிவ மந்திர் (பகீச்சா)

வனவாசிகளை குளிர்க் காய்ச்சலில் இருந்து காப்பாற்ற சீதா தேவி இங்கு துளசி செடிகளை நட்டார்.

 

குமலா மாவட்டம்

  1. ராம ரேகா தாம்

அடர்ந்த காட்டில் ராமர் தனது அம்பால் எல்லைகளை வரைந்தார்/குறித்தார்

 

48.ராம மந்திர் (ஜஸ்பூர்)

மூங்கில் குச்சிகளில் இருந்து கூடை முடைவது எப்படி என்பதை வன வாசிகளுக்கு ஸீதை கற்பித்த இடம்

 

49.ராம ஜாரன (சிங்பூர்)

இங்குள்ள ஊற்றில் எப்போதும் நீர் மட்டம் ஒரே மாதிரி இருக்கும்; அங்கு அனைவரும் குளித்தனர்.

 

பிலாஸ்பூர் மாவட்டம

Rama and Sita on Stamps

50.ராம தேக்ரி மந்திர் (ரதன்பூர்)

மலை உச்சியில் ராமர் சிறிது காலம் தங்கி இருந்தார்

 

51.ஷிப்ரி நாராயண் மந்திர் ((ஷிப்ரி)

 

சாது சந்யாசிகளை ராமன் தரிசித்தார்

ராய்பூர் வட்டம்

 

52.விஷ்ரம் வட் (ஷிப்ரி நாராயண்)

மஹாநதிக் கரையில் வட வ்ருக்ஷத்தின் கீழ் (ஆலமரம்) ராம, லக்ஷ்மணர் ஓய்வு எடுத்தனர்

பிலாஸ்பூர் மாவட்டம்

53.லக்ஷ்மணேஸ்வர் மந்திர்

சிவ பிரானுக்காக லஷ்மணன் கட்டிய சிவன் கோவில்

ராய்பூர் மாவட்டம

54.வால்மீகி ஆஸ்ரமம்

பல வால்மீகி ஆஸ்ரமங்கள் உள்ளன. அதில்

இதுவும் ஒன்று.

 

55.ராம திவாலா (சிர்பூர்)

ராமர் ஓய்வு எடுத்த இடம்

56.பாகேஸ்வர் மந்திர்

மஹாநதிக் கரையில் ராமர்  அமைத்த சிவன் கோவில்

 

  1. ஷிவ் மந்திர்

ராமர் தாபித்த மற்றொரு சிவன் கோவில்.

 

58.குலேஸ்வர்நாத் ராஜிவ் லோசன்

ஸீதாதேவி- குலேஸ்வர் நாத் கோவிலை நிர்மாணித்தார்.

 

59.ஷ்ரங்கி ஆஸ்ரமம்

ஷ்ரங்கி ரிஷியைக் காண ராமர் வந்தார்.

60.விஷ்ணு மந்திர்

ராமாபூர் ஜுன்வனி பகுதியில் நிறைய ரிஷிகள் ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. ராம லக்ஷ்மணர் கோவில் இங்கு உள்ளது. உள்ளே நான்கு கைகளுடன் கூடிய அழகான விஷ்ணு சிலை உள்ளது

 

61, 62, 64, 65, 67- சிவன் கோவில்கள்

ஜோகி குகையில் ராமர் கனக ரிஷியைச் சந்தித்த பின்னர் அமைத்த சிவன் கோவில் காங்கேரில் உள்ளது.

ராமர் ஓய்வு எடுத்த சிவன் கோவில், கேஷ்கர் கட்டியில் இருக்கிறது.

டோடமாவில், இஞ்சராம கொண்டா முதலிய இடங்களில்

ராமர் கட்டிய சிவன் கோவிலைக் காணலாம்.

சித்ரகூடத்தில் ராமரும் சீதையும் கட்டிய சிவன் கோவிலை தரிசிக்கலாம்.

சபரி ஆற்றின் கரையில் ராமன் வழிபட்ட சிவன் இருக்கிறார்.

 

இவை அனைத்தும் இரண்டு விஷயங்களைக் காட்டுகின்றன.

1.ராமர் காலத்தில் சிவன் வழிபாடு பெருகி இருந்தது

2.சைவ- வைஷ்ணவ பேதம் வட நாட்டில் இல்லை

 

இது தவிர நாம் இன்னொரு விஷயத்தை ஊகிக்கலாம். மக்களின் பெருத்த ஆதரவு பெற்ற ஒரு மாமன்னன் 5113 நாட்களும் சும்மா இருந்திருக்க முடியாது. போகும் இடம் எல்லாம் தாம் வழிபட்ட தெய்வங்களை கோவில் கட்டுமாறு மக்களை ஊக்குவித்திருக்கலாம்.

 

தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் வாய்ந்த கைகள் ராம பிரான் கரங்கள்!! அவர் நடந்த இடமெல்லாம் புனிதமாக்கப்பட்டதால் இன்றும் மக்கள் எல்லா இடங்களையும் அவர் பெயரால் அழைக்கின்றனர். இது மஹத்தான உண்மை!!!

 

63.ரக்ஷா டோங்ரி

நாராயண்பூரில் ஒரு குகை இருக்கிறது.  அரக்கர்களுடன் ராமர் போர் புரிந்த காலையில் இந்த குகைக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு ராமர் ஸீதையைத் தங்க வைத்தாராம்.

 

66.ராம்ராம் சித்மித்தன் (சுகாமா) அன்னை பூமியை (தாத்ரி மா) ராமர் வழிபட்ட இடம் ( பூமி ஸூக்தம் எனப்படும் அதர்வண வேத மந்திரத்திலும் பூமி வழிபாடு உள்ளது. உலகிலேயே முதல் முதலில் பூமியையும் புறச் சூழலையும் வழிபட்டவர்கள் இந்துக்கள்; இதை நம்மிடமிருந்து பெற்ற கிரேக்கர்கள் கையா (Gaia) என்ர பெயரில் அதை உலகெங்கும் பரப்பினர். ஜய (Jaya= Gaia) என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லை ஆங்கிலேயர்கள் கையா என்று உச்சரித்தனர்.

 

காம்ரான் மாவட்டத்துக்குள் பிரவேஸம்

 

 

  1. பர்ணகுடி (பத்ராசலம்)

 

ஆந்திரத்தில் பத்ராசலம் ; இங்கு கோதாவரிக் கரையில் ராமர் தங்கினார்

 

69.ராம்டெக்

அசுரர்களைக் கொல்ல ராமன் மீண்டும் உறுதி மொழி எடுத்த இடம்

 

70.சரபங்க ஆஸ்ரமம் (உங்கேஸ்வர்)

இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உளது; இது ராமரின் வில்லினால் உண்டாக்கப்பட்டது என்பது நம்பிக்கை; ரிஷியின் குஷ்ட நோயை இது போக்கியது.

நான்டெல் ஜில்லா

  1. ஜமதக்னி ஆஸ்ரமம்

ஜமதக்னி ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

பல்தானா ஜில்லா

72.பஞ்சபாசர (லௌனார்)

ஒரு குளத்திலிருந்து வரும் இசையை ராமர் ரஸித்தார்

 

  1. ராமேஷ்வர் (சிந்துகேர் ராஜா) சிவன் கோவில் கட்டிய இடம்
  2. ராமதீர்த் (ஜாலன குண்டலினி) மக்களுக்கு நிலத்தை உழுவதை ராமர் கற்பித்தார்.

 

(அரசர்கள் ஆண்டுதோறும் நிலத்தை உழும் சடங்குகளைத் துவக்கி வைப்பர்; இது தவிர யாக பூமியை உழுது பூமி பூஜை போடுவர்; இவை எல்லாம் வேத காலம் தொடக்கம் நடை பெற்று வருகிறது.)

 

ராமர் பயணத்தில் உள்ள 126+2 ஸ்டாப்புகளில் (126+2 STOPS) 74 மண்டகப்படிகளைக் கடந்து விட்டோம்.

 

தொடரும்……………