மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி (Post No.5261)

Picture shows plastic recycling in Kolkata.

 

Written by S NAGARAJAN

 

Date: 27 JULY 2018

 

Time uploaded in London –   7-15 am (British Summer Time)

 

Post No. 5261

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பப்படும் உரைகளில் இரண்டாவது உரை கீழே தரப்படுகிறது.

 

மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி பற்றிய தகவல்கள்!

அமெரிக்க விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வறிக்கை நம்மை திடுக்கிட வைக்கும் ஒன்றாக அமைகிறது. உலகெங்கும் இதுவரை தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் எவ்வளவு என்பதை ஆராய்ந்து நிர்ணயிக்கப் புகுந்த அவர்கள் அது 8.3 பில்லியன் டன்கள் என்ற மலைக்க வைக்கும் எண்ணைக் கூறியுள்ளனர்.

ஒரு பில்லியன் என்றால் அது நூறு கோடியைக் குறிக்கும். ஆக 830 கோடி டன் பிளாஸ்டிக்கை கடந்த 65 ஆண்டுகளில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம்.

இந்த 8.3 பில்லியன் டன்கள் என்பது 25000 எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைப் போல கனமானது. அல்லது நூறு கோடி யானைகளின் எடைக்குச் சமமானது.

ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிளாஸ்டிக் பொருள்களை நாம் மிக குறுகிய காலமே பயன்படுத்துகிறோம், பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம்.

இவற்றில் 70 சதவிகித பிளாஸ்டிக்  குப்பைகளாக நீரோடைகளிலும் , கடற்கரை உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளிலும், கடலிலும் தூக்கி எறியப்படுகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாண்டா பார்பாரா (Santa Barbara) தனது சகாக்களுடன் செய்த ஆய்வை ஸயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) என்ற இதழில் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய அளவில் மிகப் பெரிதாக நடத்தப்பட்ட ஆய்வு என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. உலகில் இதுவரை எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அது எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எங்கு இறுதியில் தூக்கி எறியப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்தச் சுவையான ஆய்வறிக்கை தருகிறது.

இதன்படி 83000 லட்சம் பிளாஸ்டிக் மூலப் பொருள் இதுவரை உற்பத்தியாகியுள்ளது.

இதில் பாதியளவு கடந்த 13 ஆண்டுகளில் தான்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் 30 சதவிகிதப் பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களில் 9 சதவிகிதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது. 79 சதவிகிதம் நிலப்பரப்புகளில் எறியப்பட்டுள்ளது. பாக்கிங் செய்யப்படும் பொருள்கள் ஒரு வருடத்திற்குள்ளாகவே பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் என கட்டுமானத்திலும் இயந்திரங்களிலும் பயன்படுத்தப்பட்டவற்றைக் கூறலாம்.

இதே போக்கு நீடிக்குமானால் 2050ஆண்டு வாக்கில் 1200 கோடி பிளாஸ்டிக் பொருள்களின் கழிவை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்று பார்த்தால் 2014ஆம் ஆண்டில் ஐரோப்பா 30 சதவிகிதமும் சீனா 25 சதவிகிதமும் அமெரிக்கா 9 சதவிகிதமும் பங்களிப்பைத் தந்துள்ளது.

இந்த அபாயகரமான போக்கை கவனித்து வரும் விஞ்ஞானிகள் நமது பூமியை பிளானட் பிளாஸ்டிக் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.

ஆக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிரித்து பூமியை பிளானட் எர்த் என்று அழைக்கும் நிலையை ஏற்படுத்துவோமாக!

***

 

 

PROPHET MOHAMMAD HAIR IN KASHMIR: TWO INTERESTING DREAMS! (Post No.5260)

Written by London swaminathan

Date: 26 JULY 2018

 

Time uploaded in London – 15-39  (British Summer Time)

 

Post No. 5260

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

Prophet Mohammad Nabi’s hair is kept in different parts of the world for viewing by Muslims and othesr. They pay respect to all the relics such as his hair, beard, the bowls and other things used by the Prophet. One of such relics, Mohammed’s hair, is in the Hazratbal Shrine in Sri Nagar, Kashmir. It has been there from the days of Mogul emperor Aurang zeb. You Tube shows another hair in Dubai Museum. The Independent newspaper of London published a news item about the hair in Moscow Cathedral mosque.

 

One version in the book ‘Mysteries of the Himalayas’ talks about two dreams about Prophet’s advice about his hair.

 

Here is the story about two dreams:

One of Prophet Mohammad’s descendants was Syed Abdullah. He brought Mohammad’s hair from Medina to Bijapur in South India. He died 23 years after his migration to Bijapur. Then his son Syed Ahmed became the care taker of the hair. When Aurang Zeb captured Bijapur all the things in Bijapur were taken to Delhi. Syed Ahmed went to Delhi to get back the relic but was trapped in big debt. It happened in 1693-94.

 

One business man of Kashmir, Nuruddin Ashwari was ready to buy the hair so that Syed can repay his debts. But he refused to give away the hair. But Prophet came into his dream and asked him to sell it to Nuruddin Ashwari.

 

While the hair was being taken to Sri Nagar in Kashmir Aurang Zeb came to know about the hair. When he tested the authenticity of the hair, he came to know that it was true. He asked Ashwari to give it to him and Ashwari refused. Aurang zeb took it away by force and sent it to Ajmeer for display. Ashwari died in shock. Prophet came into the dream of Aurang Zeb and ordered him to send it to Kashmir with the body of Ashwari. Thus the prophet’s hair came to Hazrat bal shrine in Sri Nagar. Now thousands of people pay respect to it.

 

In 1963 the hair disappeared and Muslims staged big protests all over the country. Jawaharlal Nehru, then Prime Minister had to pacify Muslims through a broadcast. Then the hair was recovered in 1964.

 

Hair in Moscow

The independent newspaper has published the following news and picture in 2015:-

 

Thousands of new visitors are expected at the Cathedral Mosque in Moscow this week as it now houses a strand of hair believed to have belonged to the Prophet Mohamed.

 

The relic was a gift from the Chechen Republic leader Ramzan Kadyrov, to honour the Moscow’s newest mosque, one of the biggest in Russia, which had recently reopened after a ten year reconstruction.

 

The hair will be permanently stored in a glass case inside the mosque and be displayed to the general public on religious holidays. It was previously stored in Grozny in Chechnya.

 

Relics of Buddha such as tooth, relics of Christ such as Turin shroud, sandals of great Hindu saints, Mahatma Gandhi’s chappals, specs, vessels are all in display in different parts of the world. All museums in the West display all the relics of great kings and queens who ruled that part of the world.

–Subham–

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1 (Post No.5259)

Written by S NAGARAJAN

 

Date: 26 JULY 2018

 

Time uploaded in London –   8-19 am (British Summer Time)

 

Post No. 5259

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 27-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தொன்றாம்) கட்டுரை

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1

ச.நாகராஜன்

 

எப்போதும் பரபரப்பாக இருப்பது, ஐ ஆம் ஆல்வேஸ் பிஸி ( I always busy) என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது – இப்படிப்பட்ட நபர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இவர்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களை நீங்கள் பார்க்க முடியாது.

இவர்கள் சும்மா இருப்பதன் சுகத்தை அறிந்தவர்கள் இல்லை; குறிக்கோளுடன் சும்மா இருப்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வெற்றிக்கலை என்பது உண்மையே.

 

 

இதை விளக்கும் முதலைக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

 

வெள்ளமெனப் புரண்டோடும் பெரிய நதியின் கரையில் ஒரு வயதான முதலை சும்மா இருந்தது. குட்டி முதலை அதைப் பார்த்தது. அதனிடம் சென்று துள்ளிக் குதித்தவாறே கேட்டது:

“நீங்கள் தான் அபாரமான வேட்டைக்காரர் என்று அனைவரும் சொல்லக் கேட்கிறேன். நதியின் அடி வரை சென்று ஜாலங்கள் செய்வீர்களாமே. உங்கள் வித்தைகளை எனக்குச் சற்றுச் சொல்லித் தாருங்களேன்.”

 

 

நெடுநேரம் தூங்கி விழித்த பெரிய முதலை தன் கண்களில் ஒன்றின் மூலம் ஓரக் கண்ணால் குட்டியைப் பார்த்தது; எதுவும் பேசவில்லை. பின்னர் நீரின் மேல் இருந்தவாறே மீண்டும் தூங்க ஆரம்பித்தது.

குட்டி முதலைக்கோ ஏமாற்றம். நதியில் வேகமாக நீந்தியது. ஒரு குட்டி மீனைக் கவ்விப் பிடித்தது. ‘ஹஹ’ என்று சிரித்த அது, “அதற்குக் காட்டுகிறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

 

சற்று நேரம் கழித்து குட்டி முதலை பெரிய முதலையிடம் வந்தது. அதுவோ அரைத் தூக்கத்தில் இருந்தது.

“பார்த்தீர்களா, என் சாமர்த்தியத்தை. இரண்டு கொழு கொழு மீன்களை நான் பிடித்து விட்டேன். நீங்கள் எதைப் பிடித்தீர்கள்.

ஒன்றுமில்லை! நீங்கள் ஒன்றும் செய்வதில்லை! மற்றவர்கள் சொல்வது போல நீங்கள் ஒன்றும் தீவிர வேட்டைக்காரன் இல்லை.”

 

 

பெரிய முதலை குட்டியைப் பார்த்தது. ஒன்றும் சொல்லவில்லை.

கண்களை மூடியது. நீரில் மிதந்தவாறே சும்மா இருந்தது.

குட்டி முதலைக்கு தன்னை அலட்சியம் செய்யும் பெரிய முதலையின் மீது கோபம் கோபமாக வந்தது. நேராக நதியை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டுச் சென்றது.

 

இந்த தடவை அதற்கு நல்ல வேட்டை தான். ஒரு பெரிய கொக்கு சிக்கியது. அதைத் தன் தாடையில் பிடித்துக் கவ்வியவாறே பெரிய முதலை அருகே வந்தது.

 

“இப்போது சொல்லுங்கள். யார் சிறந்த வேட்டையாடுபவர் என்று!”

குட்டி முதலையின் எகத்தாளத்தை பெரிய முதலை கண்டு கொள்ளவே இல்லை,

 

 

குட்டி முதலை சற்று திரும்பியது. பெரிய முதலை இன்னும் நதியின் ஓரத்திலேயே நீரில் மிதந்து கொண்டிருந்தது.

திடீரென்று அப்போது அது நிகழ்ந்தது.

 

 

ஒரு வகை மானினத்தைச் சேர்ந்த கொழுகொழுவென்று இருந்த மான்களில் பெரிய மான் ஒன்று நதிக்கரையில் நீர் அருந்த வந்தது. முதலையின் தலை அருகே அது நீருக்காகக் குனிந்தது.

ஒரு மின்னல்வெட்டு நேரத்தில் பெரிய முதலை பறந்தது. நீரிலிருந்து ஆகாயத்தில் எழும்பி மானின் குரல்வளையைப் பிடித்தது. நீரில் இழுத்துக் கொண்டது!

 

 

க்ஷண நேரத்தில் நடந்த இந்தக் காட்சியைப் பார்த்த குட்டி முதலை நடுநடுங்கிப் போனது. தனது வாயில் இருந்த ஐந்து பவுண்டு கொக்கு எங்கே? “பெரியவரின்” வாயில் பிடிபட்டிருக்கும் ஐநூறு பவுண்டு மான் எங்கே?

 

அதற்கு பேச வரவில்லை. நாக்குழறியவாறே பெரிய முதலையை பயபக்தியுடன் பார்த்துக் கேட்டது:” வந்து .. வந்து..தயவு செய்து சொல்லுங்களேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?”

வாயில் இருந்த பிடியை விடாமல் பெரிய முதலை இப்போது தான பேசியது. அது சொன்னது: “நான் ஒன்றும் செய்யவில்லை!”

 

கதையைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றிக்கான உத்தியைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 

 

பரபரப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. எது பொருள் பொதிந்ததோ, எதைச் செய்தால் வெற்றி கிட்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

அதற்காகச் சும்மா இருப்பது ஒரு சிறந்த உத்தி!

வெற்றியை அடைவதற்காக எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்றால் அது தவறு. அப்படிப்பட பிஸினெஸ் (busyness) தேவையில்லை.

 

அதற்குப் பதில் சும்மா இருந்து கொழுகொழு மானைப் பிடிப்பதே மேலானது. ஆனால் இந்த சமூகமோ எதையாவது செய்து பிஸியாக இருப்பவனைத் தான் வியப்புடன் பார்க்கிறது. அடடா, என்ன சுறுசுறுப்பு என்று புகழ்கிறது.

 

 

கி.மு. 435இல் ஹோமர் வாழ்ந்தார். அவர் லோட்டஸ்-ஈட்டர்ஸ் – தாமரைகளை உண்போர் – பற்றி ஒடிஸியில் எழுதினார். அந்த இனம் சற்று விசித்திரமான இனம். நாள்முழுவதும் மெதுவாக தாமரைப் பழங்களைத் தின்னும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட இனம் அது. அந்த மக்கள் திருப்தியுடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். ஹோமர் அந்த இனத்தை உன்னிப்பாக ஆராய்ந்து அவர்கள், தாமரைகளைத் தின்றதால் அது போலவே – திருப்தியுடனும், எப்போதும் நன்கு ஓய்வுடனும், சற்று சோம்பல் உடையவர்களாகவும் இருந்தனர் என்கிறார்.

 

 

தனது படைவீரர்களும் அவர்களைப் பார்த்து தாமரைகளைத் தின்ன ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்த ஒடிஸிஸ் தனது கப்பலை உடனடியாகத் திருப்பிப் பயணிக்குமாறு ஆணையிட்டான். இதை ஹோமர் வர்ணிக்கிறார்!

வேகமான யுகத்தில் சற்று நிதானியுங்கள். குறிக்கோளை மனதில் வைத்து நிறைய நேரம் சிந்தியுங்கள். சமயம் வரும் போது மின்னல் வெட்டு நேரத்தில் – ஆக் ஷன் நேரத்தில் – செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுங்கள்.

 

 

இன்று மிகப் பெரிய வெற்றி பெற்றவர்கள் இப்படிப்பட்ட “சும்மா இருக்கும்” டெக்னிக்கைத் தான் – உத்தியைத் தான் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

உதாரணமாக – ? சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபிரிட்ஜ் ஸ்விகி (Fritz Zwicky 1898-1947) ஒரு வானவியல் விஞ்ஞானி. அவர் கலிபோர்னியாவிற்கு வந்து அங்கேயே படித்துப் பின்னர் பேராசிரியராகவும் ஆனார்.

அவரது பழக்க வழக்கங்கள் சற்று விசித்திரமாக இருக்கும்.

மவுண்ட் பாலோமர் ஆப்ஸர்வேடரியில் மிகப் பெரிய 200 அங்குல ஹேல் டெலஸ்கோப் நிறுவப்பட்டிருந்தது.

அந்த டெலஸ்கோப் மூலம் பூமிக்கு அருகில் வரும் அதிவேக விண்வெளிப் பொருள்களைக் கண்காணிப்பது வழக்கம். டெலஸ்கோப் வேகமாகச் சுழல வேண்டும். அதே சமயம் பொருள்களைச் சரியாகக் கண்காணிக்க வேண்டும். இது சவாலான ஒரு விஷயம்.

அந்த டெலஸ்கோப் எப்படி வேகமாகச் செல்லும் பொருள்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும் என்பதை நிர்ணயிக்க  ஃபிரிட்ஜ் ஸ்விகி எண்ணினார். இதற்காக ஒரு விசித்திரமான வழியை அவர் கையாண்டார்.

தனது உதவியாளரான பென் ட்ராக்ஸ்லரை அவர் ஒருநாள் இரவு அழைத்தார். இருவரும் சேர்ந்து பல துப்பாக்கிக் குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டனர். ஸ்விகி டெலஸ்கோப் வழியே அந்த குண்டுகளை செல்லும் பாதையைக் கண்காணித்தார். சோதனை வெற்றி பெற்றதா என்பது யாருக்கும் தெரியாவிட்டாலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விஞ்ஞானி என்று அவர் பிரபலமாகி விட்டார்.

உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடை போடுவதை ‘ஷீட்டிங் தி ஸ்டார்ஸ் (shooting the stars) என்று சொல்வது வழக்கம்.

 அவர் நிஜமாகவே நட்சத்திரங்களை நோக்கிச் சுட்டு விட்டார் என்று அனைவரும் பேசிக் கொண்டனர்.

ஆனால் இப்படிப்பட்ட விசித்திரமான சிந்தனையே  சூபர்நோவா பற்றிய ஆய்வில் அவர் பெற்ற வெற்றிக்குக் காரணமானது. முதலில் சாதாரணமாக எண்ணப்பட்டாலும் பின்னால் அவரது ஆராய்ச்சித் திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது!

***

 

காஷ்மீரில் முகமது நபியின் முடி தரிசனம் (Post No.5258)

Mohammed’s hair in Moscow

 

Written by London swaminathan

Date: 26 JULY 2018

 

Time uploaded in London – 7-07 am  (British Summer Time)

 

Post No. 5258

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காஷ்மீரில் இந்துக்கள் கும்பிடும் அதிசயம் அமர்நாத் குகையில் உள்ள ஐஸ் லிங்கம். ஒரு குகையின் மேல்பகுதி ஓட்டை வழியாக தண்ணீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டி பிரமாண்டமான பனிக்கட்டி (ஐஸ் ICE) லிங்கத்தை உருவாக்குகிறது. பின்னர் ஐஸ் லிங்கம் கரைந்து விடும்.

 

இது போல முஸ்லீம்களுக்கும் ஒரு அதிசய வழிபடு பொருள் காஷ்மீரில் உளது. அது இஸ்லாம் மத ஸ்தாபகரான முகமது நபியின் முடி.

 

காஷ்மீரில் முகமது நபியின் முடி பாது காத்து வைக்கப்பட்டுள்ளது. முகமது நபியின் தலை மயிர் எப்படி காஷ்மீருக்கு வந்தது என்பதே சுவையான கதை. அதை வைத்து முஸ்லீம்கள் செய்த கலாட்டா, அதைவிட பெரிய கதை. ஆண்டுதோறும் இந்த முடியை தரிசிக்க ஏராளமானோர் கூடுகின்றனர்.

 

காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் (DAL lAKE) ஏரிக்கரையில் ஹஸரத்பால் மசூதி (HAZERATBAL SHRINE) உளது. இங்குதான் மகமது நபியின் தலை முடி பாதுகாத்து வைக்கப்பட்டுளது. 1963 ஆண்டில் இது காணாமற்போனவுடன் பல்லாயிரம் முஸ்லீம்கள் தெருக்களுக்கு வந்து கிளர்ச்சி செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த முஸ்லீம் மக்களுக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்.

 

1963ல் காணாமற் போன முடி 1964ல் கிடைத்தது. முடியைத் தற்காலிகமாகக் களவாடியது தீவிரவாதிகள்!

சையது அப்துல்லா என்பவர் முகமது நபியின் உறவினர் வழி வந்தவர் என்றும் அவர் இந்த முடியை பீஜப்புருக்குக் கொண்டு வந்தததாகவும் அவர் இறந்தவுடன் அவருடைய மகன் அதை காஷ்மீர் வணிகர் க்வாஜா முகைதீனுக்கு விற்றதகவும் கதை. முடியை அவர் கொண்டுவந்ததது 1635ல்.

 

அக்காலத்தில் ஆட்சி புரிந்த அவுரங்கசீப், முதலில் க்வாஜா முகைதீனை சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவரை விடுதலை செய்தார்.

முதலில் அவுரங்கசீப், அந்த முடியைக் கைப்பற்றி ஆஜ்மீருக்கு அனுப்பினார். பின்னர் தன் தவற்றை உணர்ந்து காஷ்மீருக்கு முடியை எடுத்து செல்லவும் அனுமதித்தார்.

 

இப்பொழுது அவரது வழிவந்தோர் அந்த  முடிக்குப் பொறுப்பாக உளர்.

 

மயிர் பற்றிய வேறு ஒரு கதை

இரண்டு கனவுகளும் முகமது முடியும்!

 

இமயமலை அதிசயங்கள் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் கூடுதல் விஷயங்கள் உள்ளன.

சையது அப்துல்லா இதை மெடினாவிலிருந்து பீஜப்பூருக்குக் கொண்டு வந்தார். அவர் 23 ஆண்டுகளுக்குப்  பின்னர் இறந்தார். முகமது முடி, அவரது மகன் சையது ஹமீது கைக்கு வந்தது. அந்த நேரத்தில் 1693-94ல் அவுரங்க சீப் பீஜப்பூரைக் கைப்பற்றினார். முகமது முடியும் டில்லிக்குச் சென்றது;  அதை வாதாடிப் பெற ஹமீது டில்லிக்கு வந்தார்; பெரும் பொருட் செலவினால் கடனில் விழுந்தார். நூருதீன் அஸ்வாரி என்ற வர்த்தகர் அதை விலைக்கு வாங்க முன் வந்தும் அதைக்கொடுக்க ஹமீது தயங்கினார். முகமது அவர் கனவில் தோன்றி அதை விற்கலாம் என்று சொன்னவுடன் அந்த முடி விற்கப்பட்டது.

 

அந்த வியாபாரி அதை ஸ்ரீநகருக்குக் கொண்டு போகும்போது அதை அவுரங்க சீப் கைப்பற்றி சோதனைக்கு        உள்ளாக்கினார். உண்மையிலேயே முகமது முடிதான் என்று தெரிந்தவுடன் அஸ்வாரியிடம் அதைக் கேட்டார். அவர் கொடுக்க மறுத்தவுடன் அடாவடித்தனமாகப் பறித்தார். அந்த  அதிர்ச்சியில் வணிகர் அஸ்வாரி இறந்தார். அப்பொழுது அவுரங்கசீப் கனவில் முகமது தோன்றி அதை ஸ்ரீநகருக்கு அனுப்பும் படி சொன்னார். உடனே அஸ்வாரியின் சடலத்துடன் அந்த முடியையும் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைத்தார். இது முகமது தோன்றிய இரண்டு கனவுகள் பாற்றிய தகவல்; ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது

 

Dubai Museum from You Tube

உலகம் முழுதும் முகமது முடி!

 

மாஸ்கோவிலும் முகமது நபியின் முடி ஒரு மசூதியில் காட்சிக்கு வைக்கப்படுள்ளது. மாஸ்கோவில் கதீட்றல் மாஸ்க் என்ற மிகப்பெரிய மசூதி கட்டப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் முகத்தான் முஸ்லீம்கள் நிறைந்த செஷ்னியா குடியரசின் தலைவர் ரமஜான் கடிரோவ் 2015ல் இதை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

 

முகமது நபியின் தாடி முடி, அவர் பயன்படுத்திய கலயங்கள் முதலியனவும் துபாய், அபுதாபி முதலிய இடங்களில் மியூஸியங்களில் உள்ளன. இவைகளை முஸ்லீம்கள் மிக பயபக்தியுடன் பார்க்க வருகின்றனர்.

 

பொதுவாக முஸ்லீகளுக்கு மெக்கா தவிர வேறு எங்குமே உருவ வழிபாடு கிடையாது. ஆனாலும் அவர்களும் கூட குரான் நூல், தகட்டில் எழுதிய எண் 786, பிறைச் சந்திரன், முகமது நபியின் முடி இவைகளை வழிபடு பொருளாகப் போற்றுகின்றனர். அவைகளுக்கு அவமதிப்பு நிகழ்ந்தால் கிளர்ச்சி செய்வார்கள்.

 

‘முகமது சந்திர பிம்பமே’ என்று பெண்களின் முகத்தைப் பாராட்டி (சந்திரன் போன்றது) என்று ஒரு பாடல் வந்தது. அந்தத்  தமிழ்த் திரைப்படப் பாடலைக் கூட எதிர்த்து கிளர்ச்சி செய்தனர்!

 

–சுபம்–

 

 

பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள் அபாயம்! (Post No.5257)

Written by S NAGARAJAN

 

Date: 25 JULY 2018

 

Time uploaded in London –   16-04 (British Summer Time)

 

Post No. 5257

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் இடம் பெறும் உரைகளில் முதலாவது உரை கீழே தரப்படுகிறது.

 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

ச.நாகராஜன்

 

நமது உடல் 60 சதவிகித நீரைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள திரவங்களை சமனப்படுத்துவது, ஜீரணத்திற்கு உதவுவது, உடல் உஷ்ணநிலையைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஏராளமான பயன்களை நாம் அருந்தும் நீரே தருகிறது.

 

 

இன்றைய நாட்களில் பயணத்தின் போதும், வெளியிடங்களுக்குச் சாதாரணமாகச் செல்லும் போதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது.

 

 

இவை சுத்திகரிக்கப்பட்டவை என்ற எண்ணத்துடன் எடுத்துச் செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக இதைப் பயன்படுத்துவோர் உலக சுகாதார நிறுவனம் எனப்படும் World Health Organization இடம் தெரிவித்துள்ளனர்.

 

 

இதைப் பற்றி அக்கறை கொண்ட உலக சுகாதார நிறுவனம், பாட்டிலில் அடைத்து விநியோகிக்கப்படும் குடி நீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அபாயம் பற்றி ஒரு மதிப்பீட்டைச் செய்யப் பணித்திருக்கிறது.

 

 

மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் கலந்து உட்கொள்கையில் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை அது ஆய்வு செய்ய முடிவெடுத்திருக்கிறது.

 

வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பாட்டில் நீரை அருந்தி வருவதால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆராய்வது அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீர் சுத்தம் பற்றிய ஒருங்கிணைப்பாளரான ப்ரூஸ் கார்டன் (Bruce Gordon) கூறியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப்பொருள்கள் எந்த அளவுக்கு தீமை பயக்கும், உடலுக்கென்று ஒரு பாதுகாப்பு அளவு இருந்தாலும் கூட இப்படிப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்பது அறிவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

 

உலக சுகாதார நிறுவனம் 9 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 11 வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் 250 பாட்டில்களில் ஆய்வைச் செய்துள்ளது.

இந்தச் சோதனைகள் அனைத்தும் ஸ்டேட் யுனிவர்ஸிடி ஆஃப்  நியூயார்க்கில் நடத்தப்பட்டுள்ளன.

 

ஆய்வின் முடிவில் ஒரு லிட்டர் குடிநீரில் சராசரியாக 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மிக நுண்ணிய துகள்கள் பிளாஸ்டிக் என்று கருதப்படுபவை ஒரு லிட்டருக்கு சராசரியாக 314 இருக்கிறது.

 

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் இந்த நுண்ணிய துகள்கள் வெளியேற வாய்ப்பு உண்டென்றாலும் பிளாஸ்டிக், சிதைவுறாத அபாயகரமான மாசு என்பது குறிப்பிடத்தக்கது  காய்ச்சி ஆறிய நீர் எப்போதுமே நலம் பயக்கும் என்ற பண்டைய பழக்கம் இன்று அர்த்தமுள்ளதாக ஆகிறதல்லவா!

 

***

சுற்றுப்புறம் காப்போம்; எதிர்கால சந்ததியினரைக் காப்போம்!

 

ராமனின் அதிசயப் பயணம்-2 (Post.5255)

Written by London swaminathan

Date: 25 JULY 2018

 

Time uploaded in London – 7-24 am  (British Summer Time)

 

Post No. 5255

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்

 

இதோ ராமனின் பயணம் தொடர்கிறது: (முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிப்பது சாலச் சிறந்தது)

 

20.ஸீதா பஹரி- ரிஷியான் ஜங்கல்

ஸீதையும் ராமரும் இங்கே ஓய்வு எடுத்தனர்

 

21.ஹனுமன் மந்திர் (முர்கா)

ராமருக்குத் துணையாக அனுப்பப்பட்ட

பரத்வாஜ ரிஷியின் மாணவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

 

22.குமார் த்வய (ராம நகர்)

ராமரும் லக்ஷ்மணனும் குளித்துவிட்டு சிவனை வழிபட்ட இடம்

 

23.வால்மீகி ஆஸ்ரமம்- லாலாபூர்

மகரிஷி வால்மீகியுடன் சந்திப்பு

 

24.காமத் கிரி – சித்ர கூடம்- மந்தாகினி நதி

ராமபிரான் இங்கே நீண்ட காலம் தங்கினார்.

 

25.மாண்டவ்ய ஆஸ்ரமம்

பரதன் புகழ் பாடும் இடம்

 

26.பரத் கூப் – பரத்பூர்

அத்ரி மஹரிஷியின் உத்தரவின் பேரில், அண்ணனின் பட்டாபிஷேகத்துக்காக தம்பி பரதன், எல்லாப் புனித நீர் நிலைகளிலிருந்தும் ஜலத்தை எடுத்து இங்குள்ள கூவத்தில் ( கிணறு) சேமித்து வைத்தான்.

 

27.ஸ்படிக சிலா- சித்திரகூடம்

இந்திரனின் மகனான ஜயந்த், காகத்தின் வடிவத்தில்

ஸீதையைத் தாக்கினான்

 

28.குப்த கோதாவரி -சித்திரகூடம்

ஸீதையின் துணிமணிகளைத் திருடிய மாயாங்கனை, லக்ஷ்மணன் தண்டித்தான்

 

29.ததி காட்

மந்தாகினி நதி வட்ட வடிவில் ஓடும் அழகிய இடம் (ராமன், ஒரு இயற்கை அன்பன்; அவன் ரஸித்த இயற்கைக் காட்சிகளை வால்மீகியும் ரஸித்து எழுதி இருக்கிறார்)

 

30.அத்ரி – அனுசுயா ஆஸ்ரமம்

அத்ரி முனிவரையும் அனுசுயையையும் ராமன் சந்தித்த இடம்

 

31.ஆம்ரவதி

விராடன் என்ற அசுரன் ராம லக்ஷ்மணர்களைத் தாக்கினான்

 

  1. விராட்குண்டம் – ஜமுனிஹை

 

ராம லக்ஷ்மணர்கள், இங்கே விராடனைக் கொன்று புதைத்தனர்.

 

33.புஷ்கரணி — டிகாரியா

விராடனைக் கொன்ற ரத்தக் கறை படிந்த

ஆயுதங்களையும் துணிமணிகளையும்  கழுவிய புஷ்கரணி

34.மார்கண்டேய ஆஸ்ரமம்- மார்க்கண்டி

சிவனை வழிபட்ட இடம்

 

சதானா மாவட்டத்தில்  நுழைகின்றனர்

 

35.சித்த பஹார்-  சதேஹ சாதனா

ரிஷி முனிவர்களின் எலும்புக் குவியல்களில் இருந்து உருவான மேட்டுப் பகுதிகள்

 

(எனது கருத்து– இது போன்ற இடங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்தால் ராமாயண கால, அதற்கு முந்திய கால முனிவர்களின் காலத்தை துல்லியமாக மதிப்பிடலாம்)

 

36.சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமர், சுதீக்ஷண முனிவரைச் சந்தித்த இடம்

 

37.சரபங்க ஆஸ்ரமம்- சர்பங்கா

சர பங்க முனிவர் ராம, லக்ஷ்மணர்களைச் சந்தித்தபின்னர், வாழ்க்கையின் பயன் நிறைவேறியது என்று கூறி யோக அக்னியில் புகுந்து ஜோதிமயமான இடம்

 

38.ஸீதா ரஸோய்

 

இங்கு ஸீதை அறு சுவை உணவு சமைத்த பின்னர், வனவாஸி சஹோதரர்களை ராமன் சந்தித்து நலம் விசாரித்தான்.

 

பன்னா மாவட்டத்தில் நுழைகின்றனர் (மத்தியப் பிரதேச மாநிலம்)

 

  1. தேவ பஹர் (அஜய் கர்)

ராமனுக்காக சிவன் கோவிலும். வசதியான குகைகளும் எழுப்பப்பட்ட இடம் ( ஏற்கனவே இருந்த குகைகளைச் சுத்தம் செய்து, காற்றோட்டம் உண்டாக்கி, இலை தழை மெத்தைப் படுக்கை உண்டாக்கினர் என்பதே பொருத்தம்- எனது கருத்து)

 

40.வ்ரிஹஸ்பதி- பஹரி கேரா

தேவ குரு பிருஹஸ்பதி உருவாக்கிய இந்த ஆஸ்ரமத்தில் ராமன், பல ரிஷிகளைச் சந்திக்கிறான். ரிஷிகள் மஹா நாடு என்றும் சொல்லலாம்!

 

126 மைல் கற்களில் 40 மைல் கற்களைக் கண்டோம். இன்னும் 86 மைல் கற்களையும் காண்போம்

–தொடரும்

பெண்களை மடக்க ஆங்கில அரசன் செய்த தந்திரம் (Post No.5254)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 18-46  (British Summer Time)

 

Post No. 5254

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று  போட்டார் ஒரு சட்டம்.

 

‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.

 

பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.

 

மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.

 

போட்டார் ஒரு சட்ட திருத்தம்!

நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.

 

(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)

 

அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!

 

அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!

 

XXXX

என்னப்பனே! பொன்னப்பனே!

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-

 

“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”

 

XXX

 

டிஸ்ரேலி ஐடியா!

 

டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.

 

 

“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.

 

நானும் ‘கம்’மென்று  இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.

வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

 

xxx

சாவதற்கு முன் மரண அறிவித்தல்!

பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.

 

காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களும் அதை அவர்  இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.

 

–subham–

 

ரஜபுத்ரர்களைக் கண்டால் புலியும் நடுங்கும்! (Post No.5253)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 8-02 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னன் ஒரு முரடன்; அசடன்; முஸ்லீம் வெறியன்; இந்துக்கள் மீது வரி போட்ட நரியன்; சொறியன்; கரியன்.

 

முகந்த்தாஸ் என்ற ரஜபுத்ர தளபதி அவுரங்க சீப்பை துச்சமாக மதித்து தனது கருத்துகளை வீரன் போல முழங்கி வந்தான். அவன், அவுரங்க சீப்பின் அரசவைக்குள் நுழைந்தவுடன், இந்த ஆளை புலியின் கூண்டுக்கள் தூக்கி எறியுங்கள்; கடித்துக் குதறுவதைப் பார்க்க ஆசை என்றான். உடனே சேவகர்களும் அவனை புலி இருக்கும் வட்டத்துக்குள் தூக்கி எறிந்தார்கள்; அவன் புலியைப் பார்த்தான்; உற்று நோக்கினான்; கோபக் கனலை வீசினான்.

 

“ஏய், டில்லிப் புலியே! இது ரஜபுத்ரப் புலி, இது எனது அரசன் ஜஸ்வந்த்   அனுப்பிய புலி.தெரியுமா?” என்றான்.

புலியும் பார்த்தது. ஆமாம் உண்மைதான் என்று வாய்திறந்து சொல்லாமல் தலையால் ஒரு சலாம் போட்டது. அது  தன் வேலையைப் பார்க்கத் திரும்பிப் போனது.

பார்த்தான் அவுரங்க சீப். இது போன்ற ஆட்கள் நமது தரப்பில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவனுக்குப் பரிசுகள் கொடுத்தான்.

 

 

அடடா! என்ன வீரம்; இந்த வீரத்தை எல்லாம் உன் மகனுக்கும் அளித்தாயா? என்று கேட்டான் அவுரங்க சீப்.

“போடா போக்கத்த பயலே! உன்னைப் போன்றவர்கள், எங்களை எந்நேரமும் சண்டைக்கு இழுக்கும்போது மனைவியுடன் படுக்கையில் படுக்க நேரம் ஏது? என்று பதில் கொடுத்தான்.

அவன்தான் பெரிய வீரன்.

 

XXX

மன்னனுக்கு ‘கால்’ மரியாதை

 

தேவ்ரா இளவரசனை முகுந்த் தாஸ் அவுரங்க சீப்பிடம் அழைத்துச் சென்றான். அவர்களுக்கு எல்லாம் ராஜாவான ஜஸ்வத் சிங், ‘போய் வா, உனக்கு தக்க மரியாதைகள் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்’ என்றான். அவனை அழைத்துச் சென்ற முகுந்தாஸோ, மொகலாய மன்னனுக்கு முன்னால் அனைவரும் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணக்கம் செய்தல் வேண்டும்; யாருக்கும் இதில் விதி விலக்கு என்பதே இல்லை’ என்றான்

 

இளவரசன் பதில் சொன்னான்

‘’ஹா ஹாஹ் ஹா! என் உயிர் வேண்டுமானால் மன்னன் கையில் இருக்கலாம்; என் மானம் அனைத்தும் என் கையில்தான்; ஒரு பயலும் தொட முடியாது என்றான்.

அரசனுக்கு முன்னால் இந்த ஆள் தலை வணங்க மாட்டான் என்பதால் ஒரு விஷேச ஏற்பாடு செய்தார்கள். இவன் குனிந்து வருவதற்காக ஒரு சிறிய நுழை வாயிலை அமைத்தார்கள்; அதில் மன்னனே நுழைந்தாலும், தலை குனிந்துதான் நுழைய வேண்டும்!

 

 

தேவ்ரா இளவரசன் சொன்னான்,

டேய்! நான் கள்ளனுக்கும் குள்ளன்; நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன் என்று சொல்லி விட்டு அந்த குட்டி நுழைவாயில் முதலில் காலை விட்டான். பின்னர் ஊர்ந்து முன்னேறி தலை பின்னால் வரும்படிச் சென்றான். அதாவது மன்னனுக்கு ‘கால்’ மரியாதை!

 

மன்னன் அதைக் கேட்டுவிட்டு மலைத்துப் போனான்

 

ரஜபுத்ர வீரர்கள் அஞ்சாத சிங்கங்கள்! அ வர்களுடைய மனைவியர், மாற்றான் படைகள் தொடுவதற்குள் தீப்பாய்ந்து மானம் காப்பார்கள். சித்தூர் ராணி பத்மினி கதை அனைவரும் அறிந்ததே!

 

XXXX

 

 

Linguists’ bluffing blasted by Tamil Language (Post No.5252)

Compiled by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 7-19 am  (British Summer Time)

 

Post No. 5252

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Following is the question and answer from The Guardian Newspaper of London and my comments are added at the end

 

How do YOU know the correct way to pronounce a dead language?

“Old languages don’t die. They just fade into new languages (at least most of them do). While the entire sound system of ancient language rarely survives intact, fragments can usually be found scattered around its various daughter languages.

 

For example, many traits of Latin pronunciation are directly observable in Italian French Spanish and Romanian. The job of linguistic historian is to try to piece these various bits together. The most tried and tested technique is comparative reconstruction, which focuses on the systematic sound correspondences that emerge when we compare the same words in different sister languages. Where this exercise turns up different sounds, it is usually possible to trace them back to a common historical source.

For example, many English words beginning with ‘t’ correspond to words beginning with ‘ ts’ ( Spelt z) , in sister language German; compare English ten, to, time with German Zein, zu, zeitgeist.

 

On the basis of this and many similar correspondences, we can reconstruct a Common Germanic parent language in which the older sound in this particular instance is the knowledge that each type of sound change takes place in one direction only. On the strength of what happens in many other languages, we know that ‘t’ at the beginning of a word can turn into ‘ts’ but not vice versa. The more  widely we cast our comparative net, the further we can reach back into the mists of time. The ‘t’ of early Germanic itself derives from an even older ‘d’ — contrast English two and tooth with, say, Italian ‘due’ and ‘dente’. Ultimately we arrive at the sound system of an ancient Indo-European tongue, the common ancestor of languages as apparently diverse as English, French, Russian, Irish, Greek and Urdu.”

John Harris, Department of Phonetics and Linguistics, University college, London

 

FROM NOTES AND QUERRIS, GURDIAN NEWSPAPER, VOLUME 5, 1994

 

MY COMMENTS

Compare changes in Tamil

IN TAMIL also we see ‘S’ of Sanskrit change into ‘T’ in Tamil

I will give some examples though there are hundreds of such words

Purushan– Purutan
Visesham– Visetam
Sishya — Seetan
Joshyam — Jothitam
VishaM —  Vitam
Koshtam — Kottam
Pushpam — Putpam

In my earlier research articles, I have  Exploded all the OLD theories about similarities or changes in Indo- European languages. In fact, those changes or similarities are found even in Pacific Ocean and Mayan languages. In short, all the bluffing of ‘D’ of Aryans changing into ‘L’ after contacting Dravidians, are wrong. Once they study the similarities between Tamil and Sanskrit or other languages they will know all those are nothing but SHEER bluffing.

 

 

Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory

tamilandvedas.com/2014/12/20/tamil-and-sanskrit…

Tamil and Sanskrit: Rewrite Linguistics Theory … But this D/L or R/L changes are natural. They are in Tamil … in Tamil itself. In Sanskrit language Sandhi .

Ja and Ya in Indian languages | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ja-and-ya-in-indian-languages

Posts about Ja and Ya in Indian languages written by Tamil and … with other languages will rewrite linguistic … this change lies in Tamil and Sanskrit …

 

 

Origin of Tamil and Sanskrit | Tamil and Vedas

tamilandvedas.com/…/origin-of-tamil-and-sanskrit

They believed that Siva’s drum Damaruka gave Sanskrit from one side and Tamil from another side. … //tamilandvedas.com/2014/11/13/origin-of-tamil-and-sanskrit/

 

  1. Vowels = Life, Consonants = Body; Hindu concept of Alphabet …

tamilandvedas.com/2015/06/27/vowels-life…

Research paper No 1958 Written by London swaminathan Date: 27 June 2015 Uploaded in London at 20-15 I have been arguing in my earlier posts that the Western …

 

Sanskrit Alphabet | Tamil and Vedas

tamilandvedas.com/tag/sanskrit-alphabet

Posts about Sanskrit Alphabet written by Tamil and Vedas

 

  1. Tamil or Sanskrit: Which is Older? | Tamil and Vedas

tamilandvedas.com/2014/07/16/tamil-or-sanskrit…

Tamil or Sanskrit: Which is Older? … my pet theory is Tamil and Sanskrit originated from a common source on the … comparative reconstruction pays no attention to …

  1. Tamil and Sanskrit | Tamil and Vedas

tamilandvedas.com/tag/tamil-and-sanskrit

Posts about Tamil and Sanskrit written by Tamil and Vedas. … (for old articles go to tamilandvedas.com OR … Tamil and Sanskrit, Tamil Grammar. Posted by Tamil …

 

–SUBHAM–

JUGGERNAUT AND LORD JAGANNATH! (Post No.5251)

Compiled by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 17-13  (British Summer Time)

 

Post No. 5251

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

What is the origin of the word Juggernaut?

Meaning in English dictionary:

Definition of juggernaut

 

1: a massive inexorable force, campaign, movement, or object that crushes whatever is in its path

  • an advertising juggernaut

 

  • a political juggernaut

2chiefly British a large heavy truck

xxx

 

 

Juggernaut is derived from Sanskrit word and modern North Indian languages such as Hindi:

Naut here is ‘nath’ Lord of the Universe (Jagath).

The compound jaganath, is a title of the Hindu god, Vishnu, especially in his eighth incarnation as Krishna.

 

Huge lorries are called juggernaut because the epithet of the deity had come in English to be associated with the enormously heavy chariot /rath which bears Jagannath in procession at the annual festival- rath yatra at the town of Puri in Orissa in north East India.

 

This has been reported by European travellers from 1321 CE and reports mentioned worshippers dying, crushed under the massive wheels.

 

Western observers’ usually disparaging accounts led to an immediate usage of juggernaut for any institution to which persons are ruthlessly sacrificed (OED 1933) before it was applied to a very large lorry for transporting goods by road, especially one that travels throughout Europe (Collins Dictionary 1979)

 

During the past 150 years, juggernaut served in a derogatory sense as a verb and an adjective as well as noun.

–Elenore Nesbitt, Senior Research Fellow Religious Education, University of Warwick

The Guardian Newspaper, Notes and Queries, Vol.5, Year 1994

 

My comments:

 

First it was used to do propaganda against Hindus by Christian missionaries. Slowly the dictionaries changed the meaning and made it milder and milder.

In fact not many people died in such Rath yatras. The crowd that gathers there is more than the population of several European and Pacific Ocean island countries.

Like they keep on changing the language of The Bible every year and now 200 different types of Bibles are available, the dictionaries also differ. Derogatory sense is left behind.

 

–SUBHAM–