அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி (Post No.5209)

Written by S NAGARAJAN

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London –   6-31 AM (British Summer Time)

 

Post No. 5209

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி! -1

 

.நாகராஜன்

1

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் அற்புதமான மஹான்களை ஆசார்யர்களாக ஹிந்து தேசத்திற்குத் தந்துள்ளது. ஒவ்வொரு மஹானும் ஒவ்வொரு விதத்தில் அதிசயிக்கத்தக்கவர்கள். அனைவரும் ஸ்ரீ சாரதாம்பிகையை பிரத்யக்ஷமாகத் தரிசித்தவர்கள். உண்மையான பக்தர்களுக்கு உயரிய நிலையை அனுக்ரஹித்து அருள் பாலித்தவர்கள். ஒரு பெரிய என்சைக்ளோபீடியா அளவில் இவர்களின் புனித சரித்திரம் எழுதப்பட்டாலும், கடல் நீரை மையாக வைத்து உலகப் பரப்பைத் தாளாக வைத்து பல நூறு ஆண்டுகள் எழுதினாலும் இவர்களின் மஹிமையைப்  துளிக் கூட எழுதியதாக ஆகாது.

அப்படிப்பட்ட பிரம்மாண்டமான பீடமாகிய ஸ்ரீ சாரதா பீடத்தில் 34வது ஆசார்யராக இருந்து அருள் பாலித்தவர் அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி!

இவரது சரித்திரம் திவ்ய சரித்திரம். அனைத்து ஹிந்துக்களும் ஆன்மீக ஹிந்து தத்துவத்தில் ஆர்வம் கொண்ட அனைத்து மதத்தினரும் அறிந்து கொள்ள வேண்டிய திவ்ய சரித்திரம் இந்த மஹானுடையது.

அதில் ஒரு திவலையை இங்கு தருகிறோம். இன்னும் பல துளிகளை சந்தர்ப்பம் நேரும் போது அடுத்தடுத்துக் காணலாம்.

 

2

ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த தேதி 1892ஆம் வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அவர் சந்யாசம் ஏற்ற தேதி  1912ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி. அதற்கு அடுத்த நாள் அவர் சிருங்கேரி பீடத்தில் 34வது ஆசார்யராக ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிஜியாக ஆனார். அவர் தன் உடலை உகுத்த நாள் 1954ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி. ஞாயிற்றுக்கிழமை.

இவரது வரலாறு மஹிமை பொருந்திய ஒன்று.

3

1939-40ஆம் ஆண்டுகளில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி திருவாங்கூர் ராஜ்யத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். காலடியில் சில மாதங்கள் அவர் தங்கியிருந்தார். திருவாங்கூர் அரசு அவருக்கு உரிய சகல மரியாதைகளையும் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிப் படுத்தியது. விசேஷ போலீஸ் அதிகாரிகள் அங்கு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் போலீஸ் உடை அணியாமல் சாதாரண உடையை அணிந்து அந்தப் பணிகளை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸாக அப்போது பதவி வகித்தவர் அப்துல் கரீம் என்பவர். அவர் பஞ்சாபில் பதவி வகித்தவர். மிகுந்த நேர்மையான, திறமையான, உறுதியான அதிகாரி என்று அனைவரிடமும் நற்பெயர் பெற்றவர். திருவாங்கூர் சமஸ்தானத்தால் விசேஷமாக அவர் அங்கு வரவழைக்கப்பட்டார் – சில தீய சக்திகளை ஒடுக்குவதற்காக!

அப்துல்கரீம் மஹாஸ்வாமிஜியின் பெருமைகளைப் பற்றி நன்கு கேள்விப்பட்டிருந்தார்.

ஒரு நாள் மாலை மடத்திற்கு வருவதாக அவர் கடிதம் மூலம் தெரிவித்தார்.

மடத்தில் முகாமிட்டிருந்து சகல ஏற்பாடுகளையும் கவனித்து வந்த ஸ்ரீ ஸ்ரீகண்ட சாஸ்திரி திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீ ஆர் கிருஷ்ணசாமி ஐயரை அழைத்து, வருபவர் ஒரு முஸ்லீம் என்றும் அவர் பஞ்சாபிலிருந்து வருவதால் அவருக்குத் தமிழோ மலையாளமோ தெரிய வாய்ப்பில்லை என்றும் ஆகவே அவரை வரவேற்று மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்துல்கரீம் வந்தார். அவரை கிருஷ்ணசாமி ஐயர் உரிய முறைப்படி வரவேற்றார்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் கிருஷ்ணசாமி ஐயரிடம்,

“ஸ்வாமிஜியின் பெருமைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய சம்பிரதாயங்கள் எதுவும் தெரியாது. ஆகவே அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அதன் படி நடப்பேன்” என்றார்.

ஐயரோ, “ அப்படி ஒன்றும் குறிப்பிடத்தகுந்த சம்பிரதாயங்கள் இங்கு இல்லை. நீங்கள் உங்களது மதத்தில் உள்ள பெரியவரை எப்படி அணுகுவீர்களோ அப்படி அணுகினால் அதுவே போதுமானது” என்றார்.

உடனே அவர் தனது ஷீக்களைக் கழட்டி விட்டு சாக்ஸுடன் வந்தார்.

மஹாஸ்வாமிகளைச் சந்தித்து முழங்கால் மண்டியிட்டார். அவரை புன்முறுவலுடன்  வரவேற்ற ஸ்வாமிகள், “இங்கிருக்கும் போலீஸார் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து இவர்களது அதிகாரி ஒரு பெரிய கனவானாகவும் பக்திமானாகவும் இருக்க வேண்டும் என்று யாம் எண்ணினோம்” என்றார்.

அதை மொழியாக்கம் செய்ய கிருஷ்ணசாமி ஐயர் முயலுவதற்கு முன்பேயே கரீம் சுத்தமான தமிழில், “மஹாஸ்வாமிகளின் பெருந்தன்மையான குணமே அப்படிப்பட்ட கருத்தை கொள்வதற்கான காரணம். உண்மையில் சொல்லப் போனால்  நான் ஒரு கடுமையான ஆபீசர் என்று பெயர் வாங்கியவன்” என்றார்.

மொழிபெயர்ப்பிற்கு அங்கு வேலை இல்லை என்பதை உணர்ந்த ஐயர் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றார். ஆனால் ஸ்வாமிஜி அவரை அங்கேயே இருக்கும்படி பணித்தார்.

ஸ்வாமிஜி : நீங்கள் தமிழில் நன்கு பேசுகிறீர்கள். நீங்கள் பஞ்சாபிலிருந்து வருவதாக நாம் அறிகிறோம்.

அப்துல்கரீம் : பஞ்சாபில் நெடுங்காலம் நான் பணியாற்றினேன். ஆனால் எனது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள கொடியாலம் தான். சொல்லப்போனால் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரும் எனது தந்தையாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெளியூர் செல்ல வேண்டிய சமயத்தில் எல்லாம் எனது தந்தையாரிடம் அவர் நிர்வகித்து வந்த அங்குள்ள கோவில்களைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்வார். ஆகவே சர்வீஸ் என்னை நெடுந்தூரம் அனுப்பினாலும் உண்மையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.

ஸ்வாமிஜி: அப்படியா? இன்னும் சர்வீஸ் எத்தனை காலம் இருக்கிறது?

அப்துல்கரீம் : ஒரு வருடத்திற்கு மேல் இல்லை.

ஸ்வாமிஜி: உங்கள் மதத்தைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொண்டீர்களா?

அப்துல்கரீம் : இல்லை. அதன் அடிப்படை கொள்கைகளை உணர்ந்ததாகவோ  அல்லது அதன் நெறிகளை சரியாகக் கடைப்பிடிப்பதாகவோ கூடக் கூற முடியாது.இளமைக் காலத்திலிருந்தே கடவுள் இருக்கிறார் என்று தீவிர நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். இறைவன் மிகப் பெரியவன். அவனன்றி ஒன்றும் நடக்காது என்று நம்புபவன்.இந்த நம்பிக்கை தொடர்ந்து என் வாழ்க்கை முழுவதும் இருந்து வருகிறது; நன்னெறியிலிருந்து பிறழாமல் என்னைக் காத்து வருகிறது.

ஸ்வாமிஜி:  எல்லா மதங்களும் அதற்காகத் தான் உள்ளன. மதத்தின் நுணுக்கங்களைக் கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. எங்கும் இருக்கும் ஒருவனை, எல்லாம் வல்ல கடவுளை, எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவனை, எப்போதும் நமக்கு வழிகாட்டி உதவ இருக்கும் ஒருவனை நினைத்து – அவன் மீது  நம்பிகை கொண்டிருந்தால் அதுவே போதுமானது.

அப்துல்கரீம் : இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்காக உங்களுக்கு மிகுந்த நன்றி. ஆனால் மத சம்பந்தமாகப் பயில  நான் நேரத்தைக் கழிக்கவில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

ஸ்வாமிஜி : அப்படிப்பட்ட படிப்பு வேண்டுமெனில் நீங்கள் ஓய்வு பெற்றவுடன் நிறைய நேரம் கிடைக்கும். கற்பதில் எப்போதுமே தாமதம் என்பது கிடையாது. புதிதாகப் பயில்வதை விட முதிய வயதானது ஏற்கனவே கற்றதை நடைமுறையில் கொண்டு வர சிறந்தது எனத் தோன்றுகிறது.

அப்துல்கரீம் :  அதுவே தான் எனது கருத்தும். வாழ்க்கையின் பெரும் பகுதியை சர்வீஸில் கழித்து விட்ட நான், இனி படிக்கும் பழக்கத்தைக் கொள்வது இயலாது என்றே நினைக்கிறேன்.

ஸ்வாமிஜி : ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்வது என்பதைப் பற்றி நீங்கள் சிந்த்திருப்பீர்கள் என நம்புகிறோம். மற்றவர்களுக்குப் பயன்படாமல் நேரத்தை வீணே கழிப்பது என்பது இயலாத காரியம்.

அப்துல்கரீம் : ஒரு நாள் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தேன். என் ஓய்வு காலத்தில் பயனுள்ள வழியில் கழிக்க நான் விரும்புகிறேன். பயனுள்ளது என்பதை சாதாரண அர்த்தத்தில் நான் சொல்ல்வில்லை. கடவுள் மிகவும் ஏற்கக் கூடிய ஒன்றாக அது இருக்க வேண்டும். மனித குலம் சேவை செய்யத் தயங்கும் ஒரு பிரிவிடம் நான் சேவை செய்வேன் எனில் கடவுள் நான் சாதாரண தர்ம காரியங்களைச் செய்வதை விட மிக அதிகமாக சந்தோஷப்படுவார். ஆகவே இந்த எண்ணம் என்னை வெகுவாக ஆட்கொண்டதால் தொழுநோயாளிகளுக்கான காப்பகம் ஒன்றைத் திறந்து அவர்களை நானே கவனிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன். இதை நிறைவேற்ற கடவுள் எனக்கு ஆயுளையும் ஆற்றலையும் தருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்வாமிஜி : அப்படிப்பட்ட மிகவும் கொடுமையான துன்பத்தைக் கொண்டிருப்போருக்கு சேவை செய்வது கடவுளுக்கு உகந்த ஒன்று என்பதை நீங்களே உணர்ந்திருக்கிறீர்கள். இந்தக் கருத்து மிகவும் உயர்ந்தது; கடவுள் நிச்சயம் இதை நிறைவேற்ற உங்களுக்கு உதவுவார். உங்களின் எளிமையினால் நீங்கள் இதை ஏற்க மறுத்தாலும் கூட நீங்கள் ஒரு உயர்ந்த பக்தியுடைய ஆத்மா என்ற எனது கருத்து வலுவாகிறது.

அப்துல்கரீம் :  கடவுள் என்னை ஏற்குமாறு செய்ய உங்களின் ஆசீர்வாதங்களுக்காக உங்களை நான் வேண்டுகிறேன். உங்களது அருமையான நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டேன் என நினைக்கிறேன்.

ஸ்வாமிஜி: உங்களைச் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம்.

அப்துல்கரீம் : கடவுள் அனுக்ரஹித்தால், இன்னும் ஓய்வான நேரத்தில் உங்களை இன்னும் ஒரு முறை தரிசிக்க விரும்புகிறேன். நான் ஒரு முஸ்லீம். ஒரு ஹிந்து மடாதிபதியைச் சந்திப்பதைப் பற்றி தயங்கிக் கொண்டிருந்தேன். ஆகவே தான் இங்கிருக்கும் நேரத்தைச் சற்று குறைத்துக் கொண்டேன். அடுத்த முறை இங்கு வரும் போது உங்களுடன் அதிக நேரம் கழிக்க விரும்புகிறேன். உங்களது சுலபமான அணுகுமுறையும் அளப்பரிய கருணையும் என்னை மிகவும் இயல்பாக இருக்கச் செய்துவிட்டது.

ஸ்வாமிஜி : அப்படியே ஆகட்டும்.

அப்துல்கரீம் : நான் வரும் போது என் மனைவியையும் என்னுடன் அழைத்து வரலாமா?

ஸ்வாமிஜி : அவர் கோஷாவில் இருப்பவர் அல்லவா?

அப்துல்கரீம் : ஆமாம். ஆனால் உங்களுக்கு எதிரில் இல்லை.

ஸ்வாமிஜி: ஆம், அவரை நீங்கள் அழைத்து வரலாம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

(இந்த கனவான் ஓய்வு பெற்ற பின்னர் தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.)

ஆதாரம் : The Saint of Sringeri by Sri Jnanananda Bharati – formerly Sri R. Krishnaswami Ayyar of Tirunelveli)

***

 

See You Later, Alligator!(Post No.5208)

Compiled by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 14-48  (British Summer Time)

 

Post No. 5208

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Extravagance Anecdotes

 

Poor Benjamin Franklin


After 150 years the truth is out about Benjamin Franklin. The name Poor Richard might easily have derived from his bank account rather than from his almanac, said William Fulton Kurtz after reading early records of the bank of North America, where Franklin and many of his illustrious compatriots kept their money. He was overdrawn at least three days out of every week.

Xxxx

Expense or Will?

When EH Harriman, the railroad magnate and millionaire, was dying, reporters were on the spot for the story. The reporter of one of the metropolitan dailies was notorious for his enormous expense accoun s. After the millionaire’s death, the reporters expense account carefully itemised but out of all just proportions, was handed over to the city editor. He looked it over and handed it back, saying,
“If this is the will, it is worth a story”.

Xxx

Generosity anecdotes

 

Let me Die First.
When Frederic the Great was seized with his mortal illness, he asked whether it was necessary to forgive all his enemies. On receiving the proper answer. He said to the queen,” Dorothy write to your brother that I forgive him all the evil he has done me; but wait till I am dead first”.

Xxx

Vote for my Opponent!

Abe Lincoln was a simple man with honest generous impulses. When he was a candidate for the legislature it was the practice at that date in Illinois for two rival candidates to travel over the district together. The custom led to much good natured raillery between them.

 
On one occasion he had driven out from Springfield in company with a political opponent to engage in joint debate. The carriage, it seems, belonged to his opponent. In addressing the gathering of farmers that met them, Lincoln was lavish in praise of the generosity of his friend.
“I am too poor to own a carriage, he said. But my friend has generously invited me to ride with him. I want you to vote for me if you will but if not then vote for my opponent for he is a fine man.

Xxx

ALLIGATOR OR IMAGINATION!

Imagination anecdotes
Professor Buckland, the distinguished biologist of the early 19th century, gave a dinner one day, after dissecting a Mississippi alligator.
How do you like the soup? asked the doctor after finishing his own plate, addressing a famous gourmand of the day

.
Very good indeed, answered the other; turtle, is it not?
I only ask because I do not find any green fat.
The doctor shook his head.
I think it has some what musky state, said another.
Not unpleasant but peculiar.
“All alligators have”, replied Dr Buckland, “the fellow I dissected this morning, and whom you have just been eating.”
There was a general rout of guests.
Everyone turned pale.

Half a dozen started up from the table and hurriedly left the room.
“See what imagination is!” exclaimed Dr Buckland.

 

“ If i had told them it was turtle or terrapin, or birds nest soup, they would have pronounced excellent”.
Tell me, doctor, was it really an alligator?
Alligator! Laughed the Doctor. Stuff and nonsense — it was nothing but a good calf’s head.
Xxxx Subham xxx

Hindu Treasures in Moscow Museum (Post No.5207)

Compiled by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 8-37 am  (British Summer Time)

 

Post No. 5207

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

The following sculptures, paintings, wood carvings are from Moscow Museum; they depict Hitopadesa/ Panchatantra story (Crane and Crab), graceful women from Gujarat, Wayang puppet of Hindu epics Ramayana and Mahabharata, Mahabharata war, Sarasvati from Burma, Mandala from Buddhism, Rama-Hanuman carving in teakwood, Kubera and Urvasi-Pururuvas story of Rig Veda. There are many more treasures from South Asian and South East Asian countries. They are copied from the book.

 

SARASVATI FROM MYANMAR/ BURMA

DREAM OF MAYADEVI ABOUT BUDDHA’S BIRTH

HINDU THEMES IN BALI FOLDING SCREEN

CRANE AND CRAB STORY FROM PANCHATANTRA

 

WOMEN FROM GUJARAT

 

KUBERA- LORD OF TREASURES

MANDALA FROM BUDDHISM

 

RAMA AND HANUMAN ON TEAK WOOD CARVING

 

URVASI AND PURURUVAS- STORY FROM RIG VEDA.

 

WAYANG PUPPETS OF INDONESIA WITH HINDU EPIC CHARACTERS – SUBHAM-

‘வாழிய வேதம் நான்கும்’- கம்பன் பாடல் நயம் (Post No.5206)

Written by London swaminathan

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London – 7-34 am  (British Summer Time)

 

Post No. 5206

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கம்ப ராமாயணத்தை இரண்டாவது முறை படித்து வருகிறேன். முதல் முறை படித்து முடித்தது 2004 ஆம் ஆண்டில்! இப்பொழுது ஞாயிறு தோறும் லண்டன் அன்பர்களுடன் மீண்டும் ஸ்கைப் SKYPE CLASS வகுப்பில் படிப்பதால் தொட்டனைத்தூறும் மணற்கேணி போல புதிய சிந்தனை எழுகிறது.

 

ஒரே பாடலில் கம்பன் பல விஷயங்களைச் சொல்கிறான்:

 

வாழிய வேதம்!

வாழிய மநு ஸ்ம்ருதி!

வாழிய பிராஹ்மணர்!

 

அவன் சொல்ல வந்தது இருட்டிப் போச்சு; அதாவது இருள் சூழ்ந்து விட்டது; அதாவது இரவு வந்து விட்டது. அதைச் சொல்லும் போது தனது அரிய பெரிய கருத்துக்களை மல்லிகைப் பூப்போல தெளித்து மணம் பரப்புகிறான்

 

பிராஹ்மணர்களை  — Sorry, Sorry ஸாரி, ஸாரி– அந்தக் கால ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன் கபிலன்’ போன்ற—‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ த்ருண தூமாக்னி– போன்ற பிராஹ்மணர்களை- பூலோக தேவர்கள் — பூ சுரர் என்று அழைப்பர். அதைக் கம்பன் இந்தப் பாடலில் ‘தெய்வ வேதியர்’ என்று போற்றுகிறான்.

முதலில் பாடலைப் பாருங்கள்

 

வாழிய வேதம் நான்கும் மனுமுறை வந்த நூலும்

வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே

ஆழி அம் கமலக் கையான் ஆகிய பரமன் என்னா

ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

–யுத்த காண்டம், நாகபாசப் படலம், கம்ப  ராமாயணம்

 

பொருள்

“என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு வேதங்கள், மனு தர்ம சாத்திரம் முதலிய அறநூல்கள், யாகங்கள், சத்தியம், தெய்வத் தன்மை பெற்ற அந்தணர்கள் அடைய விரும்பும்பேறு அனைத்தும் சக்கரம் ஏந்திய செந்தாமரை போன்ற கைகளை உடைய அந்தத் திருமாலின் உருவமே என்று உணராத மூடர்களின் மனத்தைப் போலத் திசைகள் யாவும் இருண்டு விட்டன.”

 

மாலையில் சூரியன் மறைந்தது; இரவு வந்து விட்டது- இதுதான் அவன் சொல்ல வந்த விஷயம்; அந்த இருள் எப்படி இருந்தது என்றால் நாஸ்தீக மூடர்களின் மனதைப் போல இருண்டு இருந்ததாம்!

 

நாஸ்தீக மூடர்களுக்கு என்ன புரியாது, என்ன தெரியாது?

 

நாலு வேதம்= மநு ஸ்ம்ருதி= சத்தியம்= யாகம்= தெய்வீக பிராமணனர்களின் நோக்கம்= திருமால் —-

என்பதை அறியாதவன் மூடன்; முட்டாள்.

ஆக இரவு வந்து விட்டது என்று வெறுமனே விளம்பாமல் தனது நம்பிக்கை முழுவதையும், உண்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட்டான் கம்பன்.

 

சுருக்கமாகச் சொன்னல் கடவுள்தான் வேதம், அறநூல்கள், அதைப் போற்றும் உண்மைப் பிராஹ்மணர்.

 

என்றும் வாழும் வேதம் என்பதில் இன்னொரு தாத்பர்யமும் உண்டு! வேத மந்திரமோ ஸம்ஸ்க்ருதமோ என்றும் அழியாது; இதற்கு என்ன சான்று?

 

ஸம்ஸ்க்ருதம் கலக்காமல் ஐந்து நிமிஷம் கூட ஒருவரும் தமிழ் பேச இயலாது. ஒருவேளை ஆங்கிலச் சொற்களைப் போட்டு நிரப்பினால் அதுவும் ஸம்ஸ்க்ருதமே! ஏனெனில் ஆங்கில-ஸம்ஸ்க்ருதத் தொடர்பு உலகமே ஏற்றுக் கொண்ட உண்மை!

 

கம்பன் வாழ்க; தமிழ் வாழ்க; வேதம் வாழ்க!

 

–சுபம்–

புதுமைப்புலவன் பாரதி’ -பாரதியார் நூல்கள் – 53 (Post No.5205)

Written by S NAGARAJAN

 

Date: 11 JULY 2018

 

Time uploaded in London –   6-37 AM (British Summer Time)

 

Post No. 5205

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 53

சுகி சுப்பிரமணியன் அவர்களின் ‘புதுமைப்புலவன் பாரதி

 

ச.நாகராஜன்

 

தமிழ் இலக்கிய உலகம் அறிந்த நூலாசிரியர் டி.என்.சுகி சுப்பிரமணியன் அவர்கள். பாரதியைப் போற்றி இவர் எழுதிய அழகிய விமர்சன நூல் புதுமைப்புலவன் பாரதி. கலைமகள் காரியாலயம் இதை வெளியிட்டதிலிருந்தே நூலின் அருமை பற்றி அறியலாம். முதற் பதிப்பு 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.  107 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 12 அத்தியாயங்கள் உள்ளன.

பாரதியார், பாரதியின் லட்சியங்கள், தமிழ் மொழிக் கவிதை, பெண்மை அல்லது சக்தி, பக்தன் பாரதி, கதையாசிரியன் பாரதி, இசையாசிரியன் பாரதி, நாடகாசிரியன் பாரதி, வசனவளம், பாரதி பாராட்டுகிறார், பாரதியைப் பாராட்டுகிறார்கள், தமிழால் பாரதியும் தமிழுக்குப் பாரதியும் என்ற இந்த அத்தியாயத் தலைப்புகளைப் பார்த்தாலேயே நூல் எத்தகைய கருத்து வீச்சைக் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.

அத்துடன் நூலின் குறிப்பிடத்தகுந்த இன்னொரு அம்சம் அத்தியாயங்களில் உள்ள துணைத் தலைப்புகள். மிகத் தெளிவாக சொல்ல வரும் விஷயத்தை அழகுறச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றன இந்தத் தலைப்புகள்சூத்திர பாணியில்! ஓவியன் பாரதி, வைணிகன் பாரதி, கடவுளிடம் பெண்மை, மானுடத்தின் பெண்மை, கவிஞன் கடமை, பக்தியில் பாரதி வழி போன்றவை சில தலைப்புகள்!!

நூலின் முதல் அத்தியாயமே பாரதியின் பெருமையை அழகுறச் சித்தரிக்கிறது இப்படி:

மக்கள் சேவை என்றால் என்ன? அறிவை, ஆனந்தத் தேனில் குழைத்துத் தர வேண்டும்; சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்; கேட்பவருக்கு மட்டுமன்றி வருநாளில் கேட்கப் பிரியங்கொள்பவருக்கும் சேமநிதி யாக்கித் தரவேண்டும்.அறிவை ஆனந்ததேனில்  குழைத்துத் தருவது போல், அறியாமையைப் பொசுக்கிக் காற்றிலே கண்ணுக்குத் தெரியாமல் ஊத வேண்டும்; வீரமுள்ள நினைவுகளிலே மனம் கொடி சுற்றிப் படர வேண்டும் ……. அறிவுக்கு ஒளியும் உடலுக்கு உறுதியும் செவிக்கு இன்பமும் தருவதில் முன் நின்ற சேவகன் பாரதி. தனக்குப் பின்னால் பக்தகோடிகளான  பாராட்டுக்கள் தருவார் இல்லாத போதும் தமிழ்ச் சேவை, தேச சேவையெனும் நந்தாவிளக்கை ஏந்திச் செல்லும் மனத்துணிவும் நெஞ்சுறுதியும் உள்ள பெருமை பாரதியைச் சாரும்.

பாரதியின் இலட்சியங்கள் என்ற அத்தியாயத்தில் பாரதியார் ஆரிய ஸம்பத்து என்பதை விளக்கிய பாராவை மேற்கொள் காட்டி, மூவகைச் செல்வமான அறிவு, ஒழுக்கம், பொருள் யாவும் முப்பது கோடி மக்களின் முழுமைக்கும் பொதுமை என்றார் பாரதி என்பதை அழகுற இந்த நூலாசிரியர் விளக்குகிறார்.

தமிழ் மொழிக் கவிதை என்ற அத்தியாயத்தில், “ கம்பன், வில்லிப்புத்தூரார், இளங்கோ போன்ற கவிஞர்களுக்கு அப்பால், பாரதியிடம் தான் தமிழின் பெருமை, தமிழின் இனிமை யாவும் வந்து குதிபோட்டுக் கைகட்டி நிற்கின்றன என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் சுகி.

பெண்மை அல்லது சக்தி என்ற அத்தியாயத்தில் சிவன் சக்தியை தன் உடம்பில் கோத்ததையும், அயன் வாணிதனை தன் நாவில் அமர்த்தியதையும், திருவை மார்பில் மாதவன் ஏந்தியதையும் அழகுற பாரதி சொல்வதை எடுத்துக் காட்டி இவை உருவகங்கள் என்றும் அவர்கள் நினைவு தவிர வேறு நினைவு இல்லாதவர்கள் என்றும் பாரதி சுட்டிக் காட்டுவது விளக்கப்படுகிறது.

கதையாசிரியன் பாரதி என்ற அத்தியாயத்தில் குயில் பாட்டை ஆய்வு செய்யும் சுகி, மூன்று காரணங்களை கதைப் பொருளாக முன் வைக்கிறார். முதல் காரணம் : அன்றில் சிறுபறவை ஆண் பிரிய வாழாது என்ற தத்துவத்தை நிலைநிறுத்துவதும், பெண்மையின் பெருமையைச் சொல்வதும் குயில் பாட்டின் நோக்கம். அடுத்து இரண்டாவது காரணம் நாயகி பாவமாகக் கொண்டு குரங்கு போன்ற மனநிலையும் மாடு போன்ற பெரும் போக்கும் அழியும் என்பதும் உடலை நம்பி ஆனந்தப் படுவதை விட, நித்தியமான ஆண்டவனைப் பாடலாம் என்பது குயிற்பாட்டின் மற்றொரு தத்துவம். மூன்றாவது காரணம் : பாலப் பருவம், காளைப் பருவம், மனிதப் பருவம் இவற்றைக் கடப்பவர்களே ஆண்டவனை அடைய இயலும் என்பதை நாம் ஊகிப்பது மூன்றாவது காரணம்.

 

பாரதியாரின் வசனங்களையும் கதைகளையும் நூல் நன்கு ஆய்வு செய்கிறது.

“பாரதியாரின் பாவினங்கள் வடிவ அமைப்பிப்போல் பொருள் அமைப்பிலும் புதுமையானவை. தமிழ் மக்கள் அனைவரும் பாட வேண்டும் என்பது அவரது பாட்டுத் திறன். தமிழ் என்பது புலமைக்காக இருப்பதன்று. பொதுமைக்காக இருப்பதாகும் என்பது அவரது சித்தாந்தம்.” என்று இசையாசிரியன் பாரதி என்ற அத்தியாயத்தில் சுகி சுட்டிக் காட்டுகிறார்.

சீன யுத்தத்தில் (1962இல்) பாரதியாரின் பாடல்கள் உத்வேகம் ஊட்டியதைச் சுட்டிக் காட்டி, பாரதியாரின் பாடல்கள் துப்பாகியை விட வலுவுள்ளவை; பீரங்கியைப் போல பலம் தருபவை என்று நம்மை பெருமிதம் கொள்ள வைக்கிறார் இந்த நூலாசிரியர்.

பாரதி பாராட்டியவர்களின் பட்டியலும், பாரதியைப் பாராட்டியவர்கள் சிலரின் கவிதைகளும் இரு அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.

முடிவாக பாரதியைப் பற்றி சுகி ரத்தினச் சுருக்கமாக நூலின் இறுதியில் கூறுவது சுவை தரும் ஒன்றாகும் :-

அவன் தொட்டதெல்லாம் இன்பம்; தொட்டதெல்லாம் தொன்மை பட நிற்கும். தொட்டவை துலங்கும். மனித ஜாதி மீது குன்றாத அபிமான உள்ள வள்ளல்! உலகம் காக்க வந்த உத்தமன். கம்பனுக்குப் பின் தோன்றிய கவின் நிலா!

இத் தெய்வமாக்கவிஞனை வாயுற வாழ்த்துவோம்; அவனையும் அவன் கவிதையையும் நாம் மனதில் இறுத்தி வந்தனை கூறுவோம்.

அழகான நூல்; சுகமான விமர்சனம். பாரதி அன்பர்கள் நூலைப் படித்து, பலருக்கும் இக் கருத்துக்களைச் சொல்லலாம்.

***

 

A STORY ON HOSPITALITY-RIG VEDA AND PERIYA PURANA (Post No.5204)

Written by London swaminathan

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London – 14-24   (British Summer Time)

 

Post No. 5204

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

Hospitality is a virtue praised in the Rig Veda (10-117) and the  Sangam Tamil Literature. A Tamil verse in Purananuru ( verse 182) says that even if it is the ambrosia from Indra Loka, Tamils wouldn’t eat it alone, without sharing. From the oldest book in the world Rig Veda to the latest film songs, Hindus praise this virtue as an act which gives one religious merit (Punya). Tirukkural, the Tamil Veda has lot of verses on it. There are thousands of Choultries (Chatras) which have been giving free food for guests from the Vedic Days.

In Bhagavad Gita (3-13), Lord Krishna says that one who cooks for himself alone is a sinner.

There is a story in Tamil Periya Purana to illustrate this point:

Periapuranam written by Sekkizar , is a great Tamil literary master piece which gives the life stories of 63 Siva Devotees of Tamil Nadu in verses. Like Shakespeare had portrayed human nature in all its diverse subtle aspects in his dramas, Sekkizar  has given us  unrivalled picture of the myriad sided character of the human mind in the world of religious and mystic life. The only difference is that Shakespeare used the medium of drama for unfolding his ideas, while poet Sekkizar has chosen the narrative form of literature. We have about 4000 verses in the Periya Puranam. Sekkizar lived 500 years before Shakespeare.

Here is the story highlighting the virtue of hospitality:-

Ilayankudi was a small village in Tamil Nadu. There lived a farmer by name Maran. He was so philanthropic that he donated all his wealth or life earnings to the devotees of Lord Siva.

According to Periya puranam, Lord Siva wanted to show the world that Mara Nayanar was imbued with true love and service towards his devotees.

One day ,during the rainy season, a Siva devotee knocked at the door of Mara Nayanar at the dead of night. Nayanar received him with a smile in his face and asked him to wait in the front room. When he asked his wife to cook something for him, she told him that there was no rice in the house.  She remembered however one thing; they sowed the paddy that day in their land, and if they could be collected, she could prepare some food.

As he heard his wife’s words, he felt glad as though he had recovered a lost treasure. He started at once to bring the paddy seeds. It was pouring down and there was pitch darkness. Impelled by love and spirit of hospitality, he took a basket, covered his head and collected as much paddy as he could from the muddy field. The seeds were floating the rain water. His wife prepared food after cleaning them. She asked him to collect the greens (spinach) from the backyard and prepared different dishes with the same greens.

When the food war ready, hot and steaming, Maran went to the front of the house to invite his guest for dinner. But the guest suddenly disappeared and in place rose a Brilliance and the couple saw the Divine Presence of Lod Siva and Parvati.

 

This story illustrates two things: the respect shown to Siva’s devotees and the hospitality.

We have a beautiful hymn Rig Veda (10-117) about this virtue:

 

Guests in the Rig Veda (10-117)

 

The Devas have not given hunger to be our death,

even to the well-fed man death comes in many shapes

The wealth of the liberal never wastes away,

he who gives no protection finds no consoler.(1)

 

He who, possessed of food, hardens his heart against

the weak man, craving nourishment, and suffering,

who comes to him for help, though of old he helped him

surely such a one finds no consoler.(2)

 

He is liberal who gives to one who asks for alms

to the distressed man who seeks food, wandering; success comes to him in the challenge of battle

and for future conflicts he makes a friend for him. (3)

 

He is no friend who does not give to a friend

to a comrade who comes imploring for food;

let him leave such a man – his is not a home—

and rather seek a stranger who brings him comfort. (4)

 

Let the rich man satisfy one who seeks help

and let him look upon a longer pathway;

wealth revolves like the wheels of a chariot,

coming now to one, now to another. (5)

 

–Subham–

 

 

குறள் கதை — ‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’ (Post No.5203)

Written by London swaminathan

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London – 11-59 am  (British Summer Time)

 

Post No. 5203

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’—வெற்றி வேற்கை, அதி வீர ராம பாண்டியன்

 

சாப்பாட்டிற்கு அழகு, விருந்தாளிகளுடன் பகுத்து உண்ணுதல் ஆகும். விருந்தோம்பல் என்னும் பண்பு பாரத நாட்டில் மட்டுமே உண்டு. இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று

 

வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் விருந்தாளிக்குப் போட்டுவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. அதை ஒரு தர்ம கைங்கர்யமாகவும் சொல்ல வில்லை. அன்ன சத்திரங்கள் ஆயிரம் அமைக்கவுமில்லை. மநு ஸ்ம்ருதியும், சிலப்பதிகாரமும், திருக்குறளும் சங்க இலக்கியமும் மட்டுமே செப்பும் கருத்து இது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

 

பொருள்

தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.

தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்று பகவத் கீதையில்ன் கண்ணன் நுவல்கிறான்.

யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி

புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்

(பகவத் கீதை 3-13)

 

பொருள்

யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

 

இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு பெரியபுராணத்திலுள்ள இளையான்குடி  மாற நாயனார் வரலாறு ஆகும்.

இளையான்குடி என்பது ஒரு சிறிய கிராமம். அங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் பயிர்த் தொழில் செய்யும் வேளாளர் குலத்தில் உதித்த பெருந்தகை. வந்தோருக்கெல்லாம் விருந்தளிப்பவர். இதனாலேயே ஏழ்மை நிலை அடைந்தவர். இவர் புகழை உலகிற்கு அறிவிக்க இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான்

 

ஒரு நாள் இரவில் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஒரு துறவி அவர் வீட்டின் கதவைத் தட்டினார். வந்தவர்க்கு நள்ளிரவானாலும் சாப்பாடு போட வேண்டுமே என்று எண்ணி மனைவியிடம் என்ன இருக்கிறது? என்று வினவினார். அவர் முகமே பதில் சொல்லிவிட்டது.

விருந்தினருக்கு உணவளிக்க பக்கத்து வீட்டுக்குக் கூட போக முடியாத மழை ஒரு புறம்; இருள் மறு புறம். திடீரென அவர் மனைவிக்கு ஒரு  விஷயம் ஞாபகம் வந்தது. அன்று காலையில்தான் நெல் வயலில் தானியத்தை விதைத்து இருந்தார்கள். கொட்டும் மழையில் கிடைத்த தானியங்களை அள்ளி வரும்படி மனைவி சொன்னவுடன் அவரும் தலையின் மீது துண்டைப் போட்டுக்கொண்டு வயல் வெளியில் சேற்றிலும் சகதியிலும் மிதந்த விதை நெல்லை பொறுக்கி எடுத்து வடிகட்டி வைத்து நெல்லை மட்டும் அரிந்து கழுவினார். அதை உலையில் ஏற்றி சோறு வைத்தார்.

 

இதற்குள் கறியமுது வேண்டுமே என்று சிந்திக்க கொல்லைப்புற கீரை செடிகள் நினைவுக்கு வந்தன. அவைகளையும் பறித்து தண்டு ஒரு கூட்டு இலை ஒரு கறியமுது என்று விதவிதமாகச் சமைத்துவிட்டு விருந்தாளியை அழைக்க திண்ணைக்கு வந்தார். ஆனால் விருந்தாளி மாயமாய் மறைந்து விட்டார்! வந்திருந்தவர் சிவ பெருமானே என்பதை அறிந்தார். அவரும் ஒளி வடிவில் ரிஷப ஆரூடனாகக் காட்சி தந்தார்.

 

யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

 

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

–SUBHAM–

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை! (Post No.5202)

Written by S NAGARAJAN

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London –   6-32 AM (British Summer Time)

 

Post No. 5202

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க காலம் பொற்காலம்

 

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலத்தில் ஜாதி பேதம் இன்றைய திராவிட கண்களின் விஷப்பார்வை போல பார்க்கப்படவில்லை என்பது ஒரு அருமையான செய்தி.

 

அந்தக்காலத் தமிழர்கள் தமிழைப் பார்த்தார்கள்; தமிழ் கூறும் கருத்துக்களைப் பார்த்தார்கள்.

 

பாடியவர் அந்தணரா, அரசரா, இடையரா, எயினரா, கூத்தரா, தட்டாரா, வணிகரா, வேளாளரா என்று பார்க்கவில்லை.

அனைவரையும் மதித்தார்கள் – தமிழுக்காக, தமிழில் அவர்கள் தந்த கருத்துக்களுக்காக.

எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் புலவர்கள் சிலரின் ஜாதியை இங்கு சுட்டிக் காட்டலாம்- இன்றைய திராவிட இயக்கங்கள் தீய நோக்கில் பரப்பும் விஷ பிரசாரத்தைத் தடுக்கவே இது தரப்படுகிறது.

 

ஜாதி மட்டுமல்ல, ஆண், பெண் என்ற பாலின பேதம் கூட அந்த காலத்தில் பார்க்கப்படவில்லை. பெண்பாற் புலவர்களும் உண்டு.

தமிழின் முன்னால் அனைவரும் சமம் என்ற உயர் நோக்கைச் சங்க காலம் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் உணரலாம்.

பாடிய புலவர்களின் ஒரு பட்டியல் இதோ:

 

அந்தணர்:

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளி நற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

இந்தப் பெயர்கள் மூலம் பொதுவாக ஊர்ப் பெயர்களை புலவர்கள் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைக் காணலாம்.

எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கவுண்டின்ய கோத்திரம், கௌசிக கோத்திரம், வாதூல கோத்திரம் என்று இப்படிப் பல கோத்திரங்களை அவர்கள் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தனர்.

 

அரசர்

அண்டர்மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலை பாடிய பெருங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

 

இடையர்

இடைக்காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரை பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இள வேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச்சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் பரங்கொற்றனார்

காட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர்கிழார்மகனார் நெய்தற்றனார்

செல்லூர்கிழார்மகனார் பெரும்பூதங்கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்ந்த ஆவூர் கிழார்

நொச்சியமங்கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப் புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங்கொற்றனார்

வடமோதங்கிழார்

 

அருந்தொடரால் பெயர் பெற்றோர்

அந்தியிளங்கீரனார்

இம்மென்கீரனார்

ஊட்டியார்

நோய்பாடியார்

வண்ணப்புறக்கந்தரத்தனார்

பெண்பாற்புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஔவையார்

கழார்க் கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப் பசலையார்

மதுரை நல்வெள்ளியார்

முள்ளியூர்ப் பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடியகாமக்கண்ணியார்

 

75 புலவர்களின் பெயர்களை மேலே காணலாம். இந்தப் புலவர்கள் வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்தவராய் இருப்பினும் தமிழால் ஒன்றுபட்டவர்கள். சமமானவர்கள். மதிப்பைப் பெற்றவர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடும் சங்க காலத்தில் பார்க்கப்படவில்லை என்பதற்கும் இந்தப் பட்டியலே சான்று!

***

 

SANSKRIT WAS SPOKEN BY ALL! (Post No.5201)

 

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 20-49  (British Summer Time)

 

Post No. 5201

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

There is a good article written by S P Caturvedi of Nagpur in the Woolmer Commemoration Volume published in 1940. I am attaching the pages for verbatim report.

Following are the interesting points in the article:

1.Sanskrit was a Spoken language; even Sudras spoke Sanskrit.

2.Age of Panini is closer to Mahabharata; he lived before ninth century BCE.

3.Panini lists 2000 roots; but only 900 were used in Classical Sanskrit.

4.There is a big time gap between Panini and Patanjali.

  1. Panini did not use the word Samskrtam for the language.

6.Panini’s vocabulary was ancient.

  1. The vocabulary of Ashtadyayee was vast and rich; almost all conceivable topics in the world are covered.
  2. There is no force in the argument that Sanskrit was refined or adorned by Panini. Grammarians don’t create languages. They only write grammar for the existing language.

The article is very crisp and interesting: –

 

 

 

 

 

 

 

–Subham–

1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்! (Post No.5200)

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 15-08  (British Summer Time)

 

Post No. 5200

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ்  வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.

 

இந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.

இதோ பட்டியல்:-

 

 

 

–SUBHAM–