எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர் (Post No.5219)

Written by S NAGARAJAN

 

Date: 15 JULY 2018

 

Time uploaded in London –   8-33 AM (British Summer Time)

 

Post No. 5219

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

புத்த தரிசனம்

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்

ச.நாகராஜன்

அற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.

இங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.

அங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.

ஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.

அமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.

அங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா! ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

அமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.

அச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.

அந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.

பத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய்! சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.

 

ஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்?

அங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”

உண்மை! அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.

ஆம்ரபாலி என்று பெரும்பாலோரால் அறியப்படும் அம்பாபாலிகா வைசாலி நாட்டின் பேரழகி. சம்ஸ்கிருதத்தில் ஆம்ரம் என்றால் மாமரத்தைக் குறிக்கும். பாலி இலையைக் குறிக்கும். அவள் அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்குப் பெயர் ஆம்ரபாலி ஆயிற்று.

அவளை அடைய பெரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரும்பினர். இதை விரும்பாத வைசாலி மன்னன் இதைத் தடுக்க ஒரே வழி அவளை அரசவை நடனமங்கை ஆக்குவது தான் என்ற முடிவுக்கு வந்து அவளை அரசவை நடன மங்கை ஆக்கினான். ஆனால் அடுத்த நாட்டு அரசனான பிம்பசாரன் அவளுக்கு இணையான இன்னொரு அழகியைத் தனது நாட்டில் அரசவை நடனமங்கையாக அறிவிக்க முடியாமல் தவித்தான். ஆகவே போரை மேற்கொண்டு வைசாலியை ஜெயித்து அவளை மணந்தான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

ஒருமுறை ஆம்ரபாலி புத்தருக்கு பிக்ஷை அளிக்க விரும்பினாள். அதே தினத்தில் லிச்சாவி மன்னனும் புத்தரை விருந்துக்கு – பிக்ஷைக்கு – அழைத்தான்.

ஆனால் மன்னனின் கோபத்தையும் மீறி ஆம்ரபாலி இல்லத்திற்கு புத்தர் விருந்தை ஏற்க ஏகினார். அங்கு அவளுக்கு புத்த தர்மத்தை உபதேசித்தார்.

எல்லையற்ற கருணைவெள்ளமான புத்த தரிசனத்தை அம்பாபாலிகா பெற்றாள். உடனே மாறினாள். அவளும் அவளது மகன் விமல் கொண்டனனும் புத்தமதம் தழுவினர்.

ஒருமுறை அங்குட்டராபா பட்டிணத்தில் ஆபனா நகருக்கு புத்தர் தன் 1250 சீடர்களுடன் விஜயம் செய்தார். 1250 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் புத்தரின் பின் சென்றதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். வீதி வழியே அவர்கள் செல்ல மக்கள் வீதியின் இருபுறமும் திரளாக நின்று அவர்களை வரவேற்று வணங்கினர்.

கேனியா என்று ஒரு பிராமணர் புத்தரின் அருகில் சென்று அவரை வணங்கி அவரிடம் தனது இல்லம் வந்து பிக்ஷையை ஏற்குமாறு கூறினார்.புத்தர் மறுத்து விட்டார்.

 

“பெரிய குழுவுடன் நான் வந்திருக்கிறேன். அனைவருக்கும் உணவு சமைப்பது என்றால் அது பெருத்த சிரமத்தை உருவாக்கும். வர இயலாது” என்றார் புத்தர்.

கேனியா மூன்று முறை அழைத்தார். அதற்குப் பின்னர் புத்தர் அவர் அழைப்பை ஏற்றார்.

1250 பேருக்கு உணவைச் சமைப்பதில் ஏற்படும் கஷ்டமும், அவர்களுக்குப் பரிமாறுவதில் உள்ள சிரமத்தையும் உலகாயத ரீதியாக அறிந்ததால் புத்தர் அதை மறுத்தார். மூன்று முறை அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் தகுந்த குழுக்களை அமைத்து 1250 பேருக்கும் கேனியா விருந்தளித்தார்.

விருந்துக்குப் பின்னர் புத்தர் தர்மோபதேசத்தைச் செய்தார்.

அனைவரும் பயனடைந்தனர்.

புத்தர் போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்த பின்னர், முதலாவதாக தான் மதித்து கௌரவிக்க வேண்டிய குரு யாராவது தனக்கு இருக்கிறாரா என்பதைத்தான் கண்டுபிடிக்க முயன்றார். தனக்கு இணையான ஒரு நபரையே அவரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆகவே குருவைக் கண்டு பிடிக்கும் பிரச்சினை இன்னும் சிக்கலானது. அப்படி ஒரு குரு இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

ந மே ஆசார்ய அத்தி சதிஸா மேன நவீஜ்ஜா இதி (எனக்கு ஒரு குரு இல்லை; என்னை ஒத்த இன்னொருவரும் இல்லை)

ஆகவே தான் புத்தர் தனது தர்மத்தையே  தனது குருவாகக் கொண்டார்.

அந்த தர்மத்தை அஹிம்சா வழியில் அனைவருக்கும் உபதேசித்தார்.

அவரது கருணைவெள்ளம் கரை புரண்டு ஓட அதில் நனைந்து மக்கள் மகிழ்ந்தனர்.

 

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

 

***

 

 

Truth may be blamed, but cannot be shamed! (Post No.5218)

Written by London swaminathan

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London – 20-19 (British Summer Time)

 

Post No. 5218

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

More  Proverbs on Truth!

Truth and oil are ever above!

Truth is always visible; perceivable. No one can hide it. It stands out.

In Tamil there is a proverb, you can never hide a whole pumpkin in the cooked rice. White pumpkin grown in Tamil Nadu is of the size of four foot balls. (Tamil-Muzup puusanikkaayai sotril maraikka mudiyaathu)

Truth needs not many words.

A liar must concoct a big story. To justify one lie another lie is added. From a mole hill a mountain is created. But with the truth, just the facts will do the work.

Truth may be blamed, but cannot be shamed.

We normally attribute all our failures to something. It may be a fact, but it wont justify our action.

A poor man says that he stole something because of poverty or starvation.

A prostitute may say that she entertains people because she needs money.

So one may blame the truth but it can never be shamed. That is the real fault lies somewhere no on truth.

Tamil poet Tiruvalluvar’s Tamil Veda Tirukkural says,

Even it be to save your own beloved mother from starvation, let not your hands be defiled with what the sages have condemned as a heinous wrong.(656)
xxx


1.Many a true word is spoken in jest

2.In wine there is truth

3.Children and fools speak the truth

These three proverbs are very interesting.

Drunken men, children and fools speak the truth!

Even saint Rama Krishna Paramahamsa said this: “Heaven sometimes speaks through the mouths of lunatics, drunkards and children”.
xxx

1.Nothing hurts like the truth!


2.Truth finds foes, where it makes none

3.All truths are not to be told

4.Follow not truth too near the heels, lest it dash out thy teeth.

 

Tamil poet Thiruvalluvar and Manu, the law maker agree on this point.

 

Tamil Veda Tirukkural says,

What is truthfulness? It is the utterance of such words that smack not of even slightest taint of evil (Kural 291)

Manu says

In a case where telling the truth would cause the death of a servant ,Sudra or a ruler/Kshatriya or a Brahmana, one should tell a lie, for that is better than the truth- Manu Smrti 8-104

If it will produce pure, unmixed good, even falsehood may be considered truth — Tirukkural, 292

satyam bruyat priyam bruyat na bruyat satyam apriyam
priyam ca nanrutam bruyat esha dharmah sanatanah

Speak truth in such a way that it should be pleasing to others. Never speak truth, which is unpleasant to others. Never speak untruth, which might be pleasant. This is the path of eternal morality, sanatana dharma (Manu Smrti 4-138)

xxx
Lies have short legs

Liars have need of good memories

Great talkers are great liars. (Think about our politicians)

It is a well known fact that one lie must be supported by another lie. They will expose themselves. They cannot last long.
xxx
A liar is not believed when he speaks the truth

All of us know the famous fable. A villager always called everyone for help saying Tiger is comin, Tiger is coming; When all the villagers ran for his help he mocked at them as fools. Oe day when he was really attacked by tiger he raised the same slogan and no one came for his help. The consequence is obvious.

One lies make many

Murder will be out ( cannot be hid)

A traveller may lie with authority.

Lying and thieving go together.

xxx

It is true that all men say.

If many honest impartial voice their opinion and if it is the same, then there must be truth in it. One doesn’t need to worry about common man.

 

Tamil Veda Tirukkural says,

the arrogant fool, who denies what all the world firmly believes

will be considered a veritable demon stalking the earth- kural 850
xxx
Common fame is seldom to blame

Paper won’t blush 

 

I have already given Sanskrit proverbs on Truth in an article.

Please read my earlier posts.

–Subham–

தொல்காப்பியன் புகழ் (Post No.5217)

Written by London swaminathan

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London – 14-37  (British Summer Time)

 

Post No. 5217

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்:

1.ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோன் – –பனம்பாரனார்

 

2.நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்

– பன்னிரு படலப் பாயிரம்

 

3.துன்னரும் சீர்த்தித் தொல்காப்பியன்

-புறப்பொருள் வெண்பா மாலை சிறப்புப் பாயிரம்

 

4.ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனி

–இலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்

 

சூத்திரங்களின் எண்ணிக்கை

இளம்பூரணர் உரை- 1595

நச்சினார்க்கினியர் உரை – 1611

 

பழம்பாடல்களின் படி 1612

 

பல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர்.

தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்:–

சொல் அதிகாரம்

எழுத்து அதிகாரம்

பொருள் அதிகாரம்

 

பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது ஆன்றோர் கருத்து.

 

 

தொல்காப்பியருக்குப் பிடித்த எண் 9

 

மூன்று அதிகாரங்களிலும் தலா ஒன்பது இயல்கள் உள.

அவையாவன:

 

எழுத்து அதிகாரம்

 

1.நூல் மரபு

2.மொழி மரபு

3.பிறப்பியல்

4.புணரியல்

5.தொகை மரபு

6.உருபியல்

7.உயிர் மயங்கியல்

8.புள்ளி மயங்கியல்

9.குற்றியலுகரப் புணரியல்

 

சொல் அதிகாரம்

 

1.கிளவியாக்கம்

2.வேற்றுமை இயல்

3.வேற்றுமை மயங்கியல்

4.விளி மரபு

5.பெயரியல்

6.வினையியல்

7.இடையியல்

8.உரியியல்

9.எச்சவியல்

 

பொருள் அதிகாரம்

1.அகத்திணயியல்

2.புறத்திணையியல்

3.களவியல்

4.கற்பியல்

5.பொருளியல்

6.மெய்ப்பாட்டியல்

7.உவமவியல்

8.செய்யுளியல்

9.மரபியல்

 

தொல்காப்பியருக்குத் தெரிந்த மொழிகள்:–

தமிழ், ஸம்ஸ்க்ருதம் (ஐந்திரம் எனும் இந்திரன் பெயரில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கணம் கற்றவர். இந்த இலக்கணம் கிடைக்கவில்லை)

 

தொல்காப்பியரின் காலம்

கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை

 

இவர் ஆய்த எழுத்து என்பப்படும் மூன்று புள்ளி எழுத்து பற்றிக் குறிப்பிடுவதால் முதல் நூற்றாண்டுக்குப் பிறப்ப

ட்டவர் என்பது சிலர் கருத்து.

 

இவர் எண்வகைத் திருமணம் பற்றியும் வேத காலக் கடவுளரான இந்திரனையும் வருணனையும் தமிழர் கடவுள் என்று குறிப்பிடுவதாலும்,  பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பர். இன்னும் சிலர் அவை இடைச் சொருகல் என்று சொல்லி தப்பித்துக் கொள்வர்.

 

இவர் அகஸ்த்ய ரிஷியின் சிஷ்யர். அவருக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ பகர்வர். அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் உண்மைப் பெயர் த்ருண தூமாக்கினி என்பர். தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் கீதையும் போற்றும் உசனஸ் ரிஷி பிறந்த காப்பிய கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும் செப்புவர்.

 

 

பொய்யுரை பேசும் திராவிடர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியத்துக்கு உள்ளேயே இருக்கின்றன.

இவர் எழுத்து அதிகார உச்சரிப்பில் வேதம் பற்றிச் சொல்கிறார்.

மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை அதே வரிசையில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறார்.

மேலும் இந்து தெய்வங்கள் அனைவர் பெயரையும் சொல்கிறார். சிவன் பெயரைச் சொல்ல வில்லை

 

இவர் நூலுக்கு ‘சர்டிபிகேட்’ கொடுத்தவர் கேரளத்து பிராஹ்மணன், சதுர்வேத சிகாமணி- நான்மறை முற்றிய அதங்கோட்டு (திருவிதாங்கோடு) ஆசார்யார்

 

இது அரங்கேறிய இடம்- நிலம் தரு திரு வில் பாண்டியன் சபை.

 

அக்காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை: குமரி மலை, திருப்பதி (வேங்கட மலை)

இவருக்கு பனம்பாரனார் உள்பட 12 சீடர்கள்.

இவர் பிறந்த இடமோ, இறந்த இடமோ, தாய் தந்தையர் பெயரோ தெரியாது.

 

இவர் இந்து தெய்வங்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் பௌத்தமோ ஜைனமோ பிரபலம் ஆகாததால் இப்படி மௌனம் காத்திருக்கலாம்.

தொகாப்பிய ஏடுகளில் 2000 பாட பேதங்கள் இருந்தன. அவைகளை அறிஞர்கள் தட்டிக்கொட்டிச் சீர் செய்துவிட்டனர்.

 

இவர் நூலிலும் , சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் அதிகாரம் என்னும் சொல் பயிலப்படுவதால் மூன்று நூல்களும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கபட்டு நமக்கு வழங்கியிருக்கலாம்.

 

தொல்காப்பியத்துக்குப் பல உரைகள் இருந்தாலும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளே சிறப்புடைத்து.

 

–SUBHAM–

 

MEMORY and PATRIOTISM ANECDOTES (Post No.5216)

Written by London swaminathan

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London – 7-52 am  (British Summer Time)

 

Post No. 5216

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

In the days before modern court reporting and our generally efficient and systematized courtroom procedure, an elderly Southern lawyer was the proud owner of a negro slave named Sam, who was endowed with a phenomenal memory.

 

Sam was able to sit in court and at any point in the process of a trial, he could reel off every word of testimony that had transpired before. Sam’s reputation was so great that his evidence “on the record” was accepted in any court in the State. One day the old lawyer was in his study when the Devil appeared.

What do you want?, demanded the lawyer.

I have come for Sam, was the answer. His time is up and he has got to go.

‘Now look here, said the lawyer, I cant spare Sam’.

‘Cant help it’, said the Devil

‘Come now, said the lawyer, you are a sporting man. I will make a little bet with you. If Sam’s memory is failing he is no good to me and you can take him. You go out and test him and if you can fool him, he is yours. But if you cant, he is mine

It is a bet, the Devil said, and disappeared.

Sam then was engaged in ploughing up his little patch of ground with a mule.

The Devil suddenly appeared before him and said, Do you like eggs?

Yessah, said Sam and the Devil disappeared.

In less than a year the Civil War broke out. Sam served first with his master on the Confederate side, was captured and forced to fight on the Northern side, and was then captured again by the Confederates.

 

He survived the War with only a minor wound, and after the emancipation was willingly liberated by his old master, who presented him with the patch of land which he had been accustomed to work for so many years,

 

One day as Sam was cultivating the little plot that was now his own, the Devil appeared before him,

How? said the Devil

Fried! said Sam. Whereupon the Devil vanished and left him in peace.

xxx

Patriotism Anecdote!

Jerrold was in France, and with a French man who was enthusiastic on the subject of the Anglo-French alliance. He said that he was proud to see the English and French such good friends at last, when Jerrold promptly answered,

“Tut! The best thing in know between France and England — is the sea.

XXX

 

xxxx Subham xxxx

நள தமயந்தி – சுவையான காதல் கதை! (Post No.5215)

Written by S NAGARAJAN

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London –   6-49 AM (British Summer Time)

 

Post No. 5215

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நள தமயந்தி – சுவையான காதல் கதை!

 

ச.நாகராஜன்

ஹிந்து வேதத்தில் வரும் கதை நள-தமயந்தி கதை.

மஹாபாரதம் அதை விரிவாகச் சொல்கிறது.

நளன் பேரழகன். தமயந்தி பேரழகி.

அழகு என்றால் விண்ணவர் வியக்கும் அழகு.

இந்தக் கதையைப் பல கவிஞர்களும் பாடியுள்ளனர்.

நைஷதம் அழகிய வடமொழிக் காவியம்.

அதைத் தமிழில் தந்தார் அதிவீரராம பாண்டியன்.

இவர் இருந்து அரசாண்ட நகர் கொற்கை.

இவருக்கு வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் எனப் பல பெயர்கள் உண்டு.

சற்று – சற்று என்ன – அதிகமாகவே சிற்றின்பப் பிரியர்.

ஆகவே தான் கொக்கோக முனிவர் வடமொழியில் எழுதிய கொக்கோக நூலைத் தமிழ்ப் படுத்தினார்.

கந்தபுராணத்தில் வரும் இந்திரபுரிப் படலத்தில் கூறப்பட்ட மதனாகமவியல்களைத் தமிழ்ப் படுத்தி மதனக் கோவை என்ற நூலை இயற்றினார்.

ஒவ்வொரு பாடலும் சிருங்காரச் சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட பாடல்.

பெண்களின் அங்கங்களை வர்ணனை செய்வதில் இவருக்கு ஈடு இணை கிடையாது.

நளனும் தமயந்தியும் ஒருவர் பால் மற்றொருவர் கொண்ட காதலுக்கு ஈடு இணை கிடையாது.

தமயந்தி நளனையே நினைத்து உருகினாள். நளனோ தமயந்தியையே நினைத்து உருகினான்.

இரண்டே இரண்டு பாடல்களை இங்கு பார்ப்போம்:

தமயந்திக்கு ஒரு பொழுது போக்கு. நளன் எப்படி இருப்பான் என்பதை நினைத்து நினைத்துப் பார்ப்பது தான் அது.

ஒரு நாள் ஓவியத்தில் வல்லவனான ஒருவனை அழைத்தாள். ‘அழகில் சிறந்த பேரழகன் ஒருவன் சித்திரத்தையும் அவனுக்கு இணையான பேரழகியான கன்னி ஒருத்தி படத்தையும் வரைக’ என்று ஆணையிட்டாள்.

ஓவியன் தன் திறமை அனைத்தையும் காட்டி இரு சிறந்த அங்க லாவண்யங்கள் கொண்ட அழகனையும் அழகியையும் வரைந்து காட்டினான்.

அதைப் பார்த்த தமயந்தி ஓவியனை அனுப்பி விட்டு அந்தப் படத்தை எடுத்துக் கொண்டாள். அந்தப் படத்தில் இருந்த அழகனும் அழகியும் நளனுக்கும் தமயந்திக்கும் அழகில் சற்றும் ஈடு கொடுக்க முடியாது என்ற போதிலும் அதை நள தமயந்தியாகப் பாவித்து மெய் சிலிர்த்தாள்.

இதை அதிவீரராம பாண்டியன் கூறுகிறார் இப்படி:

 

ஓவியத் துறைகை போய வொருவனை யுருவின் மிக்க

காவல னொருவன் மற்றோர் கன்னிநீ தீட்டு கென்னத்

தாவரு மெழிலிற் கோட்டத் தானுமந் நளனுமாக

மேவர வினிது நோக்கி மெய்ம்மயிர் பொடிக்கு மன்றே.

(அன்னத்தைக் கண்ணுற்ற படலம், பாடல் 75)

 

 

வெறும் சித்திரத்தைக் கண்டு மெய்ம்மயிர் பொடிக்கும் அளவில் அவள் ஆனந்தப் பட்டாள்.

தங்கள் தலைவி தமயந்தியின் காதலை அனைத்து தோழிகளும் நன்கு அறிவர். அவர்கள் அவளைக் கிண்டல் செய்து  சீண்டி விளையாடுவது வழக்கம்.

அவள் இல்லாதபோதும் நள தமயந்தி காதல் அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு விளையாட்டானது.

தோழிகளில் ஒருத்தி தமயந்தியாகவும் இன்னொருத்தி நளனாகவும் ஆகி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்வர்.

இந்த ஆலிங்கனத்தோடு கலகலவென்று சிரிப்பொலி எழும்.

இதையும் அதிவீரராமபாண்டியன் அழகுறச் சித்தரிக்கிறார்.

நளனோ மஹா அழகன். அவன் அழகின் வர்ணனையைக் கேட்ட தேவலோக இந்திராணியின் முலை சிலிர்த்ததாம்.

இந்திரனோ தமயந்தியின் அழகை நாரதர் வாயிலாகக் கேட்டு நேரடியாக சுயம்வரத்திற்கே வருகிறான்.

நளன்  அன்னம் வாயிலாக தமயந்தியின் அழகு வர்ணனையைக் கேட்கிறான்.

தமயந்தியிடம் அன்னம் வந்து சொல்கிறது இப்படி:

 

“வேற்படையை உடைய நள மஹாராஜன், ஓவியர்களால் எழுதற்கு அரிய உனது அழகிய வடிவத்தை, தன்னால் சம்பாதிக்கப்பட்ட பலவகையான மணிகளைப் பதித்து எழுதுகிறவன். உன் கனதனங்களை உள்ளதை உள்ளபடியே எழுதுவதற்கு இப்படத்தில் அகலம் போதவில்லை என்றும், பூங்கொடி போன்ற உனது அழகிய இடையைத் தீட்ட தூரிகைக் கோலின் நுனியானது கூர்மை இல்லை என்றும் எண்ணித் திகைக்கிறான். ஆகையால் உன்னை விரும்பி மனத்தில் எண்ணி அவனது நெடிய அழகிய கண்களானவை இமைக்காமல் உன் உருவத்தைப் பார்க்க அதனால் மனம் வருந்துகிறான்.

நைடதம் கூறும் பாடலைப் பார்ப்போம்:

சித்திரக் காட்சி

 

ஈட்டு மணிகள் பலதெளிந்துன் னெழுதற் கரிய திருவுருவம்

கோட்டுங் கிழிதான் முலைகோட்டப் பரப்பின் றென்னுங் கொடிமருங்குல்

தீட்ட வனைகோ நுதிநுண்மை யிலதென் றெண்ணித் திகைக்குமுளம்

வேட்டு நெடுங்கண் ணிமையாம னோக்கித் தளரும் வேல்வேந்தே”

(அன்னத்தைத் தூது விட்ட படலம் பாடல் 254)

 

நளன் பற்றிய வர்ணனையும் தமயந்தி பற்றிய வர்ணனையும் படிப்போரை வியக்கச் செய்யும் வண்ணம் உள்ளன.

தமயந்தியின் கூந்தலிலிருந்து பாதம் வரை உள்ள வர்ணனை சிருங்காரப் பிரியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.

 

நைடதம் புலவர்க்கு ஔடதம்.

சிருங்காரப் பிரியர்களுக்கோ தேவாமிர்தம்!

***

 

காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–

நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1 (Post No.5213)

Written by S NAGARAJAN

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London –   6-51 AM (British Summer Time)

 

Post No. 5213

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 13-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1

ச.நாகராஜன்

இயந்திர யுகம் முடிவுக்கு வந்து விட்டது. அறிவில்லாத ஜடங்கள் என்று விமானத்தையும், காரையும், ஸ்கூட்டரையும் இதர மெஷின்களையும் ஏசித் தூற்றிய காலம் முடிவுக்கு வந்து விட்டது.

சற்று அறிவுடன் கூடிய இயந்திரங்கள் – ரொபாட்டுகள் உள்ளிட்டவை – இப்போது உருவாக்கப்பட்டு விட்டன. இவை மனிதர்களைப் போல யோசிக்கும்; நிலைமைக்கு ஏற்ப தக்க முடிவுகள் எடுக்கும்.

இவற்றின் பயன்களைச் சொல்லப் போனால அயர்ந்து போய் விடுவோம்.

சாக்கடையில் ஓடும் கழிப்பறை நீரில் அடைப்புகள் ஏற்பட்டு விட்டனவா? அருவருக்கத்தக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியை சாக்கடையில் இறங்கி ரொபாட்டுகள் செய்து முடித்து விடும் – சில நிமிடங்களில்.

 அடுக்கு மாடிக் குடியிருப்பாக இருக்கும் வானளாவிய கட்டிடத்தில் தீ விபத்தா? உள்ளே பெண்கள், குழந்தைகளை தீ ஜுவாலைகளின் உள்ளே சென்று பத்திரமாக மீட்க வேண்டுமா?

ரொபாட்டுகள் ரெடி. அறிவுடன் கூடிய இவை புகையை விலக்கி, தீயை அணைத்து தனக்கான வழியை உருவாக்கிக் கொண்டு கட்டிடத்தில் சிக்கிக் கொண்டோரை பத்திரமாக மீட்கும்.

ஆழ்கடலில் விபத்தா? நீரில் மூழ்க அச்சமான சூழ்நிலையா? ரொபாட்டுகள் ஆழ்கடலில் மூழ்கி டைவ் அடித்து செய்ய வேண்டிய பணியைச் செய்து முடித்து விடும். இது போல அடர்ந்த காடுகளிலும் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குறிக்கப்பட்ட பணியை முடித்து விடும்.

இது மட்டுமல்ல, உடல் வலிக்கிறதா? இதமாக மசாஜ் செய்ய உயிருள்ளது போலவே உள்ள ரொபாட் பணியாளர்கள் ரெடி.

பல வீ டுகளில் இப்போது நடைமுறையில் தரையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் ரோபாட் கிளீனரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சென்ஸர் மூலமாக ஒவ்வொரு இடமாக மூலைமுடுக்குகளில் எல்லாம் தானே சென்று தூசு தும்பை அகற்றி விடும்.

ஆக செயற்கை அறிவு ஊட்டப்பட்ட இவற்றின் எண்ணிக்கையும் பயன்பாடும் இப்போது அதிகரித்து வருகிறது.

ஜப்பானில் ஏராளமான கம்பெனிகள் செயற்கை அறிவுள்ள பல சாதனங்களைச் செய்து விற்கின்றன.

இப்போது ஜப்பானில் உருவாக்கப்பட்ட கே கம்ப்யூட்டர் ஒரு வினாடிக்கு 10,000,000,000,000,000 கணக்குகளைப் போட்டு முடித்து விடுகிறது. ஒரு வினாடிக்குள் இது செய்வதை மனிதர்கள் செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது இப்போது உலகில் உள்ள 700 கோடி பேர்களும் ஆளுக்கு ஒரு கணக்கை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 17 நாட்கள் முயன்றால் கே கம்ப்யூட்டர் ஒரு வினாடியில் செய்வதை முடிக்க முடியும்!

மனித உயிருக்கு அபாயம் ஏற்படும் பணிகளில் செயற்கை அறிவு ஊட்டப்பட்ட சாதனங்கள் ஈடுபட்டு அரிய செயலை ஆற்றி வருகின்றன.

ஆனால் இவற்றின் அறிவு கூடக் கூட, செயல் திறன் கூடக் கூட அது மனிதர்களை விடத் திறம்பட சிந்தித்து, யோசித்து, செயலாற்றும் போது என்ன நடக்கும்?

தன்னைப் படைத்த மனிதனுக்கே சவால் விடுமா? அபாயத்தை ஏற்படுத்துமா?

இப்போதே இண்டர்நெட்டில் உலா வரும் ஜோக் ஒன்று உண்டு. இந்த ஏஐ – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – மெஷின்களின் திறன் அதிகரிக்கும் போது மனித குலம் ரொபாட் ஜமீந்தார்களை – ரொபாட் மன்னர்களை அடிபணிய வேண்டி வரும் என்பது தான் அந்த ஜோக்!

எதிர்கால யுத்தங்களில் நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்பாமல் ரொபாட் வீரர்களை அனுப்பி யுத்தம் செய்தால்?

 

நினைக்கவே பயமாக இருக்கிறது. செயற்கை அறிவுடன் கூடிய அபாயகரமான ஆயுதங்கள் பல்வேறு நகர்களை நோக்கி வீசப்பட்டால்?

மனித குலமே இல்லாமல் போய்விடும்! இது போன்ற ஏராளமான நியாயமான பயங்கள் செயற்கை அறிவு பற்றி உண்டு!

2001: எ ஸ்பேஸ் ஒடிஸி மற்றும் அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் யூனியன்  (2001: A Space Odyssey – 1968)  (Avengers: Age of Ultron – 2015) ஆகிய இரு திரைப்படங்கள் செயற்கை அறிவு மனித அறிவை மிஞ்சி விட அதை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி, மனித குலத்தை அழிக்க முயற்சிப்பதைச் சித்தரிக்கின்றன.

இப்போது அமெரிக்காவில் மூன்றாவது சீஸன் தொடங்கி சக்கை போடு போடும் ஹ்யூமன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரும் கூட பிரக்ஞையுடன் கூடிய செயற்கை அறிவு படைத்த ஜீவன்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மனிதர்களுடன் போராடுவதைச் சித்தரிக்கிறது.

கணினி உலகத்தில் விஞ்ஞானிகள் செயற்கை அறிவு சாதனங்கள் உருவாக்கப் போகும் பிரம்மாண்டமான சீர் கேட்டை நினைத்து பயப்படுகின்றனர்.

ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை நிறுவிய இலான் மஸ்க் 2017 ஜூலையில் நேஷனல் கவர்னர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், “செயற்கை அறிவு என்னும் நவீன தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டிருக்கும் நான் ,

அதைப் பற்றி மக்கள் மிகவும் கவலைப்பட வேண்டும் என்று கருதுகிறேன் என்றார். ‘இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கிறேன் ‘என்று தொடர்ந்த அவர், “ஆனால் ரொபாட்டுகள் தெருவில் இறங்கி மனிதர்களைக் கொன்று குவிக்கும் வரையில் மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்று அறிய மாட்டார்கள். ஏனெனில் இது புலன்களால் உணரப்படாத ஒன்றாக இருப்பதால் தான்! என்றார்.

எல்லோரும் பயப்படுவது ஏன்? சூபர் இண்டெலிஜென்ஸான ‘ஏஐAI-  சாதனங்கள் பிரக்ஞையை அடைந்து சிந்திக்கும் திறன் பெற்று மனிதர்களை தங்களை விட கீழான அற்ப ஜந்துக்களாக மதித்து, இப்போது குரங்குகளை நாம் எப்படி நடத்துகிறோமோ அதைப் போல நம்மை நடத்தி விடக் கூடும் என்பதே விஞ்ஞானிகளின் பயம்!

மனிதர்களாகிய நமக்கு இது தேவையா என்பதே அவர்களின் கேள்வி!

  • தொடரும்

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

 

அறிவியல் ரீதியாக ஏற்றம் இறக்கம் உடைய ஒரு மலைப் பகுதியை சரியாக அளந்து வரைபடம் தயாரிப்பது என்பது பிரம்மாண்டமான ஒரு விஷயம்.

பண்டிட் நயின் சிங் ராவத் (தோற்றம் 21-10-1830 மறைவு 1-2-1882) பத்தொன்பதாம் நூற்றாண்டில் இமயமலை பிராந்தியத்தை அடி அடியாக அளந்த மாபெரும் வீரர் ஆவார். குமாவுன் கிராமத்தில் ஒரு பள்ளியின் ஹெட்மாஸ்டராகப் பணி புரிந்த இவர் பிரிட்டிஷ் அரசால் திபத்தின் வரைபடத்தை உருவாக்க அங்கு அனுப்பப்பட்டார். திபத்தில் வசிப்பவர் போல உடையணிந்து ஒரு யாத்ரீகராகக் கிளம்பிய நயின் சிங் திபத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து அதன் வரைபடத்தைத் தயாரித்தார். திபத்தியரைப் போலவே அவர்கள் மொழியில் இவர் பேசி அங்குள்ள கடும் குளிரையும் தாங்கி தனது பணியைத் திறம்பட முடித்தார்.

லாஸா இருக்கும் இடத்தையும் அது எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதையும் சரியாக நிர்ணையித்தார்.பிரம்மபுத்திரா நதியின் பெரும் பகுதியின் வரைபடத்தையும் 33 இடங்களில் ஆய்வு செய்து தயாரித்தார். காங்டாக்கிலிருந்து லாஸா வரை 31 இடங்களில் ஆய்வு செய்தார். கண் பார்வையை இழந்ததால் வெற்றிகரமான தனது யாத்திரையை  அவர் நிறுத்த நேரிட்டது. ஐரோப்பாவின் பல பூகோள ஆய்வு நிறுவனங்கள் அவரை கௌரவித்தன. பிரிட்டிஷ் அரசு அவருக்கு சி.. விருதை வழங்கியது. இந்திய அரசு 27-6-2004 அன்று அவர் நினைவாக தபால்தலையை வெளியிட்டு அவரை கௌரவித்தது. மலையேறி ஆய்வு செய்யும் உலக வீ ரர்களில் தனி இடத்தை வகிப்பவர் பண்டிட் நயின் சிங்.

***

 

தமிழர் கடிகாரம்! பழந்தமிழர் அறிவியல்! (Post No.5212)

Compiled by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 17-31  (British Summer Time)

 

Post No. 5212

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இப்பொழுது பயன்படாது என்பது உண்மைதான். மொபைல் போனில் (mobile phone) கடிகாரம்; ஐ பேடில் (I pad) கடிகாரம்; கம்ப்யூட்டரில் கடிகாரம்!

 

பழங்காலத்தில் நாழிகை வட்டில் (Hour Glass)  மூலம் உலகம் முழுதும் மணி கண்டு  பிடிக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஒரு குச்சியை ஒடித்து அதன் நிழலை வைத்தே மணி கண்டு கொண்டனர். கிராப்புற மக்களுக்கு இது உதவி இருக்கலாம்.

 

இதோ பழைய பாட்டும், விளக்கமும் ‘தமிழ்ப் பொழில்’ பத்திரிக்கையிலிருந்து:–

 

 

–subham–

HINDU BRONZES IN COLOMBO MUSEUM (Post No.5211)

Written by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 15-42  (British Summer Time)

 

Post No. 5211

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

COLOMBO MUSEUM IN SRI LANKA HAS GOOD BRONZES OF Lord Nataraja and Tamil saints Appar, Sundarar, Sambandar and Maniikavasagar. Parvati’s statues and Kathirgama Karthikeyan are also remarkable pieces.

 

Following are some good bronzes:

NATARAJA, DANCING SIVA

SIVA WITH FOUR HANDS

SIVA AND VISHNU WITH SRI AND BHU DEVIS

 

SUNDARAMURTHI NAYANAR, TAMIL SAINT

TAMIL SAINT MANIKKAVASAGAR IN THE CENTRE

TAMIL SAINT APPAR IN THE CENTRE

PARVATI

SIVA, SAMBANDAR, PARVATI

KATHIRGAMA DEVA KARTIKEYA

HANUMAN

–subham-

 

Interesting Life Story of Bhartruhari and Bhadragiriyar! (Post No.5210)

Bhartruhari meeting his former wife; Mogul painting

 

Written by London swaminathan

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London – 7-46 am  (British Summer Time)

 

Post No. 5210

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

Bhartruhari    is a popular name in Hindu literature. But there were many poets and kings with the same name . One Bhartruhari  was a grammarian. Another Bhartruhari  was a poet and author of 300 verses Niti Catakam, Srngara Catakam and Vairagya Catakam. He lived in fifth century CE

The latest one lived around tenth century who was the contemporary of famous Tamil devotional poet Pattinathar. This Bhartruhari  composed Bhartruhari or BHADRAGIRI pulampal in Tamil, that is lament of Bhartruhari.

Whoever it was there is an interesting story who became the subject of folklore in Chattisgarh and Rajasthan. He was the disciple of Saint Goraknath.

The hero of our story is linked with king Vikramaditya. That name is also confusing. There were many Vikramadityas in India and the most famous one lived 2200 years ago
His wife name was Pingala and she repented for her mistake. Later he came to her on his travel to holy places with his followers. That meeting became the subject of Moghul paintings and folklore. The story changes from place to place.

 

Throughout India the beggar minstrels sing the wistful melodies of with the ever recurring refrain about the impermanence of life. They say neither the body nor the wealth last for long. They very often refer to Bhartruhari. Whether it is the name of the saint or grammarian or the poet who wrote 300 verses on Love, Peace and Renunciation is of historical interest.

 

Tradition says that the happy king or poet was metamorphosed by the inconstancy of his wife Pingala. Two pictures here show that Bhartruhari coming to beg alms from his erstwhile wife. He left her after an incident which showed that she loved someone else who loved someone else. We see a love triangle in the story. After becoming an ascetic, he got the name Gopichand and he met his penitent wife. In the picture, we see Bhartruhari accompanied by some wandering friars and his former wife with half a dozen attendants. They are on the banks of a stream with beautiful natural scenery.

A fruit that which gives long life was presented to Bhartruhari by a Brahmin.

He gave to his youngest wife Pingala

Pingala gave to her secret lover- a police officer- Mahipala

Mahipala passed it to his beloved Lakha

Lakha who fell in love with the king passed it to Bhartruhari, the king.

 

This awakened Bhartruhari and he abdicated the throne to his brother Vikramaditya of Ujjaini.

 

The confusion here is no one knew which Vikramaditya and which Bhartruhari.

 

Any way the message is clear—Impermanence of Life which is a popular theme in all ancient Sanskrit and Tamil hymns.

Here is the Tamil version
His name is Bhadragiri. He met Pattinathar, a merchant turned ascetic. Tamil history says he was a king and became an ascetic. His verses are called Bhadragiriyar lament (pulampal in Tamil). In some places, he imitates Tamil poets Tirumular and Pattinathar. It is a philosophic poem. He was against caste. He quoted Kapilar Ahaval. Bhadragiri was praised by a later poet Ramalinga Swamikal.
 

–subham–