பாரதி போற்றி ஆயிரம் – 57 (Post No.4772)

Picture from Bharatiyar drama; Isaikkuyil Ramanan as Bharati (sent by a Facebook friend)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-37 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4772

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

  பாடல்கள் 396 முதல் 402

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண் ண  ன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

30 முதல் 36 வரை உள்ள பாடல்கள்

எளியநடை எளிய பதம் எல்லார்க்கும் எளியசந்த

    என்பதுவே எனக்களிக்கும் சேவை – அதுவேம்

    என்னைவாழ வைக்கயிங்கு தேவை – எனவே

எளியவர்கள் கிராமங்களில் தெளிவுறவே பாடுகின்ற

   இளமையுள்ள பலவடிவில் பாவை – எழுதி

   அணிவித்தாய் அரியகவிக் கோவை

 

 

இருண்டதுயென் வாழ்க்கையென ஏக்கமுற்று வாடுகையில்

    ஏற்றிவைத்தாய் அரியகவித் தீபம் – அதனால்

    தீர்ந்த்துவே எம்தமிழர் தாபம் – உந்தன்

பெருமைதனை உணர்ந்தெவரும் போற்றிநின்ற போதில்கவிச்

    செருக்குற்றோர் கொண்டனரே கோபம் – மக்கள்

     வெறுத்ததினால் பதுங்கினரே பாபம்

 

 

எத்தனையோ தொழிலிருந்தும் பத்திரிகைப் பணியிருந்தும்

    எமக்குத் தொ ழில்கவிதை ஒன்றே  – கவிதை

    எழுதாநாள் பிறவாநாள் என்றே – வாழ்வில்

நித்தமிங்கு வறுமையினால் செத்துச் செத்துப்  பிழைத்தபோதும்

    நீடுமுயிர் தமிழால்தான் நன்றே – என்று

    நிலை பெற்றாய் காலத்தை வென்றே

 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

   இனிதாவது எங்கும் காணோம் – என

பாமரனோர் மொழிசொன்னால் எம்மொழிநீ

    அறிவாயென பழித்தல் கூடும்

தேமதுரத் தமிழுடனே ஆங்கிலமா

     ரியமிந்தி திகழும் வங்கம் – மேலும்

நேமமுறப் பிரஞ்சினையும் நன்குணர்ந்து

     ஆய்ந்தன்றோ நீயும் சொன்னாய்

 

 

பாரதியார் தமிழ்மொழியின் பெருமைகள்

   விரிவாகப் பாடவில்லை – என

சாரமிலா ஓர்குறையை சற்றேனும் தயங்காமல்

    சொல்வா ருண்டு

சாரதியாய் கவித்தேரை நீசெலுத்த

   நானமர்ந்து சென்ற போதில் – இந்தப்

பாரதனில் உன்னாலே ஒலித்ததெல்லாம் தூய

   தமிழ்ப்பாடல் தானே?

 

 

பதவுரையோ தெளிவுரையோ விரிவாக

   எழுதியிங்குப்  பொருளு ரைக்க – என்றும்

பண்டிதர்கள் தேவையில்லை என்றிடவே

   பாமரரும் பாடச் செய்தாய்

விதவிதமாய் பொருத்தமிலா வருணனைகள்

    சொற்களிலே வித்தைகாட்டல் – எனும்

விவகாரம் ஏதுமின்றி கவிதைகளை

    வடித்தென்னை வாழ்வித் தாயே!

 

 

உதவாத பாறைகளை உடைத்தாங்குக்

    கவிவளர்த்த உழவன் நீயே – வாழ்வில்

நிதமிங்குச் சந்தமெனும் நிறம்பலவாய்

   உடையளித்த நெய்வோன் நீயே!

சதமெனவே மொழியதனில் பலவடிவில்

    நகைசெய்த தட்டான் நீயே – என்றும்

வதங்கலின்றிப் பொருள்தந்து இதயங்களைப்

    பெற்றிட்ட வணிகன் நீயே!

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:


கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

 

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

 

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

 

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

 

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

 

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

 

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

 

இவருக்கு நமது நன்றி.

 

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

CHANAKYA’S PRAISE FOR BRAHMINS! (Post No.4771)

Picture posted by V Krishna Ganapatigal

 

Date: 21 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-49

 

Written by London swaminathan

 

Post No. 4771

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Chanakya, the Hindu genius, who lived 2300 years ago, praises the Brahmins; he says that the strength of the Brahmins is knowledge and the proof for their intelligence is the prediction of the solar and lunar eclipses. He also says that Brahmins are lovers of food and feeding them is great Punya (merit). He warns that  the Brahmin haters would perish with their families. But it is all about the true Brahmins who lived with character and self- less service.

Chanakya says,

“There is no emissary in the sky, neither is any talk going on, nor was it spoken about earlier, nor was there any contact. The great Brahmin who knows the eclipse of the sun and moon taking place in the sky, how come he cannot be a scholar?”

duuto na sancarati khe na caleecca vaartaa

puurvam na japitamidam na ca samsagamosti

vyomni sthitam ravi sasi grahanam prasastam

jaanaati yo dwijavaraha sa katham na vidwaan

Chanakya Niti 9-5

xxx

Brahmin Tree

“The Brahmin is the tree, its root is the morning, noon and evening prayer, the Vedas are the branches, the spiritual activities are the leaves. Hence it is the root that needs to be protected with care. With the root gone, there will be neither branch nor the leaf.”

vipro vrukshastasya muulam na sandhyaa

vedaahaa saakhaa dharmakarmaani patram

tasmaanmuulam yatnato rakshaniiyam

chinne muulee naiva saakhaa na patram

10-13

 

Picture posted by Lalgudi Veda

xxx

Four types go to Heaven

 

There are four marks on the body of the people in this world that go with those who have their abode in heaven: devotion/ commitment to charity, sweet speech, worship of gods and feeding the Brahmins to full.

Swarga sthitaanaam iha jiivaloke

catwaari cihnaani vasanti dehe

daanaprsango madhuraa ca vaanii

devaarcanam braahmana tarpanam

7-16

xxx

Brahmin Haters Perish

 

Hatred to oneself leads to death;

to another person loss of wealth;

to the king to destruction and

to a Brahmin to the destruction of the family

–Chanakya Niti, chapter 10, sloka 11

 

aatmadveshaad bhavenmrtyuh paradveshaad dhanakshyah

rajadveshaad bhavennaaso brahmadveshaat kulakshayah

 

xxx

Brahmins delight in Food

 

Brahmins get delight in meals, the peacocks in thunder of clouds, the good people in the prosperity of others and the wicked people in the adversity of others.

tushyanti bhaojane vipraa mayuuraa ghanagarjate

saadhavaha parasampattau khalaha paravipattishu

7-6

xxx

Brahmin’s Strength

The prowess of arms is the strength of the king, that of a Brahmin versed in Veda is in knowledge, beauty, sweetness and youth are the unsurpassed strength of women.

Baahuviiryam balam raaknjobraahmano brahmavid bhalii

Ruupayauvanamaadhuryam striinaam balamanuttamam

Chapter 7, sloka 11

 

xxx

 

Picture from Tindivanam Patasala

knowledge is the strength of the Brahmins, army is that of the kings

vidhyaa balam vipraanaam, raaknjaam sainyam balam tathaa

2-16

xxx

Contented Brahmins

Brahmins not having the sense of fulfilment, kings having the same, harlots feeling shy and high born women with no sense of shame come to naught.

 

asantushtaa dwijaa nashtaa santushtaasca mahiibujaha

salajjaa ganikaa washtaa nirlajjaasca kulaanganaahaa

8-18

 

Source Book: Canakyaniti, Translated by Satya Vrat Shastri

 

xxx SUBHAM xxxx

 

 

 

 

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது! சாணக்கியன் கட்டளை (Post No.4770)

Date: 21 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-06 am

 

Written by London swaminathan

 

Post No. 4770

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சாணக்கியன் என்ற பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். உலகம் வியக்கும் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தை யாத்தான்; பல நீதி மொழிகளை புகன்றான். மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டரின் படைகளை நடுநடுங்க வைத்தான். ஆனால் வியப்பான விஷயம் என்ன வென்றால் ஒரு குடிசையில் வாழ்ந்தான். விருப்பு வெறுப்பற்ற ஒரு யோகி போல வாழ்ந்ததால் யாருக்கும் கட்டளை இடும் துணிவு அந்த பிராஹ்மணனுக்கு இருந்தது.

 

அவன் செப்பாத விஷயம் இல்லை; பேசாத பொருள் இல்லை. சாணக்கிய நீதி என்னும் நீதி நூலில் அவன் மொழிவதாவது:

 

முட்டாளாக இருக்கும் மந்தமான மாணவர்களுக்குக் கற்பிக்கும் , புத்திசாலியான ஆசிரியர்களும் துன்பமே அடைவார்கள்;

கெட்ட பெண்களைக் கவனித்துக் கொள்வோர் நிலையும் அஃதே;

கெட்டவர்களுடன் நட்பு பாராட்டுவோரும் பரிதாபத்துக்கு உரியவர்களே;

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 4

 

மூர்க்க சிஷ்ய உபதேசேன  துஷ்ட ஸ்த்ரீபரணேன ச

துக்கிதைஹி ஸம்ப்ரயோகேன பண்டிதோஅப்யவஸீததி

 

xxx

 

மாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது!

 

மாணவர்கள் Make-up மேக் அப் போட்டு அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது; ஆடல் பாடல், நாடக ( தற்காலத்தில் திரைப்படம்) நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது; காமம் க்ரோதம் (கோபம்) இருக்கக்கூடாது.

 

 

ஒரு மாணவன் கீழ்க்கண்ட எட்டு விஷயங்களைக் கைவிட வேண்டும்:

காமம் , கோபம், பேராசை, கேளிக்கை நிகழ்ச்சிகள், அலங்காரம் (மேக்- அப்), ஆடல், நாடக நிகழ்ச்சிகள், அதிக தூக்கம், மற்றவர்களைப் புகழ்ந்து வாழுதல் (காரியம் நடப்பதற்காக இச்சகம் பேசுதல்)

காமம் க்ரோதம் ததா லோபம் ஸ்வாதம் ச்ருங்காரகௌதுகே

அதி நித்ராதி ஸேவே ச வித்யார்த்தீ ஹ்யாஷ்ட வர்ஜயேத்

 

சாணக்கிய நீதி 11-10

 

xxx

வாத்தியாருக்கு நன்றிக்கடன்

 

ஆசிரியர் ஆனவர் உனக்கு ஒரு அக்ஷரம் (எழுத்து) சொல்லிக் கொடுத்தவர் ஆகட்டும்; அப்படியும் கூட அவருக்கு நன்றிக் கடன் செலுத்த உலகில் ஒரு பொருளும் இல்லை.

ஏக மேவாக்ஷரம் யஸ்து குருஹு சிஷ்யம் ப்ரபோதயேத்

ப்ருதிவ்யாம் நாஸ்தி தத் த்ரவ்யம் யத் தத்வா சான்ருணீ பவேத்

சாணக்கிய நீதி 15-1

 

((பெண்கள், பெற்றோர்கள், ஆசிரியர் ஆகியோரை இந்துமத இலக்கியங்கள் உயர்த்தி வைக்கும் அளவுக்கு உலகில் வேறு எந்த இலக்கியமும் உயர்த்தி வைக்கவில்லை; அப்படி இருந்தால் அவை எல்லாம் நமக்கு 1000, 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டவையே.

விருந்தோம்பல், தூது, அமைச்சர், அரசன், கொடி, முரசு, கோ மாதா , தானம், தவம் – முதலிய விஷயங்களும் உலகில் எந்த நாட்டுப் பழைய இலக்கியங்களிலும் கிடையாது. இவை எல்லாம் இந்தியாவே உலகின் பழைய நாடு, இந்தியாவே உலகிற்கு நாகரீகத்தைப் பரப்பிய நாடு என்பதற்குச் சான்று பகரும். ரிக் வேதத்தின் கடைசி பாடல், இன்று ஐ.நா. முதலிய அமைப்புகளின் நோக்கமாக இருக்கின்றது. இத்தகைய உயர் சிந்தனை மலர, ஒரு சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பின்னரே உதிக்கும்.

xxx

 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

ஒரு ஆசிரியரிடம் செல்லாது, புத்தகத்தில் இருந்து மட்டும் படித்தவன், ஒரு சபையில் சோபிக்க முடியாது; ஒரு பெண் கள்ளக் காதல் கொண்டால் எப்படியோ அப்படித்தான் இதுவும்!

 

புஸ்தகேஷு ச யா அதீதம் நாதீதம் குருஸந்நிதௌ

ஸபாமத்யே ந சோபந்தே ஜாரகர்பா இவ ஸ்த்ரியஹ

சாணக்கிய நீதி 17-1

ஒரு பெண், பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் படுத்து இருக்கலாம்; இருந்த போதிலும் அதை பொது இடங்களில் பேச முடியாது பேசினால் குட்டு வெளிப்பட்டுவிடும்; அது போலவே புத்தகத்தை மட்டும் படித்துப் பொருள் அறிபவன்; பொது சபைகளில் நாலு பேர் கேள்வி கேட்டால், திரு திருவென முழிப்பான்; அவன் குட்டு வெளிப்பட்டுவிடும்; ஆசிரியர் கற்பித்து இருந்தால், அவரே தடை எழுப்பி விடைகாணக் கற்றுக் கொடுத்து இருப்பார்.

 

ஆசிரியர்- மாணவர் உறவு பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்க முடியாது.

அலெக்ஸாண்டரின் குரு அரிஸ்டாடில் (Aristotle)- அரிஸ்டாடிலின் குரு பிளாட்டோ (Plato) — பிளாட்டோவின் குரு சாக்ரடீஸ் (Socrates)- அவர் சாணக்கியனுக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்தார். அவருடைய கேள்வி கேட்டுப் பதில் காணும் முறையும் (Socratic Method) அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் உபநிடதத்தில் உள்ளது. அவரும் ஏசு கிறிஸ்துவும் உபநிடதங்களைக் கற்றது அவர்களின் உபதேசங்களில் வெள்ளிடை மலை என விளங்குகிறது.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் (Post No.4769)

Date: 21 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-18 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4769

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் எட்டாவது உரை

 

  1. ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள்

 

ச.நாகராஜன்

 

 

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப்      பெற்றவர் இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels )   

        யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர்         விண்வெளிக்குப் பயணமானார்.

 

இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதத்தை உலகத்தினருக்கு எழுதினார்

 

அதில்,சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்டசண்டை இல்லாத மனித  குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.   

  விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய      ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.

அருமையான மனைவிகுழந்தைகள்பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு  மாரடைப்பு ஏற்பட்டதுஒருவழியாக மீண்டார்

 

ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது    கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்று நாள் குறித்து” விட்டனர்.

 

2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத் 

தனது கடைசி பேட்டியை அளித்தார்உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக்  கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்துசக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம், இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

 

 

இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை. என்றார் அவர். 

தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற      ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறதுஎனக்கு கான்ஸர் உள்ளதுமக்களில் ஏராளமானோர்  கான்ஸரினால் இறக்கின்றனர்என்றாலும், மனித குலம் எப்போதும் நீடித்து இருக்கப் போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.

நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும். என்றார் அவர்.

 

 

 “உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும்போது  மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க         ஆரம்பிப்பீர்கள்ஒன்றை உளமார நேசிக் ஆரம்பித்து விட்டால் அதை விட   உங்களுக்கு மனமே வராது. என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில்      அதிசயமே இல்லை.

நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும்    மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும்       வளமானவைவரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!

***

 

 

No Make-up, No Drama, No Song—Chanakya Strict with Students! (Post No.4768)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-59

 

Written by London swaminathan

 

Post No. 4768

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

CHANAKYA ON STUDENT-TEACHER RELATIONSHIP

Very few poets or law makers talk about the relationship between students and teachers. But we have lot about it in Manu Smrti and Upanishads.

 

Here are some verses from the Chanakya Niti translated by Satya Vrat Shasri (formerly Professor in Delhi University and JNU, Delhi)

A student should shun the following eight: Passion, Anger, Greed, Relish, Make-up, song and drama shows, too much sleep and flattery.

Chankya Niti, Chapter 11, verse 10

kaamam krodham tathaa svaadam srungarakautuke

atinidraatiseve ca vidhyaarthii hyaashta varjayet

 

xxx

Don’t Teach Dull Students

Even a wise man comes to grief by teaching dull students, by looking after bad women and by keeping company with the miserable.

Chanakya Niti, Chapter 1, verse 4

 

muurkhasishyopadesena dushtastriibaranena ca

dukkitaihi samprayogena panditoapyavasiidati

xxx

 

Bookish Knowledge!

Those who have read books but have not studied with teachers, create no impression in an assembly like women carrying through illicit contact.

Chanakya Niti, Chapter 17, verse 1

 

pustakesu ca yaaadhiitam naadhiitam gurusannidhau

sabhaamadhye na sobhante jaaragarbhaa iva striiyaha

 

xxx

 

Even a single syllable that a teacher teaches a pupil, there is no object in the world by offering which he can repay the debt.

Chanakya Niti, Chapter 15, verse 2

ekamevaaksharam yastu guruhu sishyam prabodayet

pruthivyaa naasti tada dravyam datvaa caanrunii bhavet

xxx

Manu on Students attending Veda Class

2-117. (A student) shall first reverentially salute that (teacher) from whom he receives (knowledge), referring to worldly affairs, to the Veda, or to the Brahman.

2-119. One must not sit down on a couch or seat which a superior occupies; and he who occupies a couch or seat shall rise to meet a (superior), and (afterwards) salute him.

2-120. For the vital airs of a young man mount upwards to leave his body when an elder approaches; but by rising to meet him and saluting he recovers them.

2-121. He who habitually salutes and constantly pays reverence to the aged obtains an increase of four (things), (viz.) length of life, knowledge, fame, (and) strength.

2-122. After the (word of) salutation, a Brahmana who greets an elder must pronounce his name, saying, ‘I am N. N.’

 

This is from second chapter of Manu Smrti.

xxxx

Following Mantra is from the Taittiriya Upanishad, recited just before the class begins:-

 सह नाववतु 
सह नौ भुनक्तु 
सह वीर्यं करवावहै 
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै 
 शान्तिः शान्तिः शान्तिः 


Om Saha Naav[au]-Avatu |
Saha Nau Bhunaktu |
Saha Viiryam Karavaavahai |
Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, May God Protect us Both (the Teacher and the Student) (during the journey of awakening our Knowledge),
2: May God Nourish us Both (with that spring of Knowledge which nourishes life when awakened),
3: May we Work Together with Energy and Vigour (cleansing ourselves with that flow of energy for the Knowledge to manifest),
4: May our Study be Enlightening (taking us towards the true Essence underlying everything), and not giving rise to Hostility (by constricting the understanding of the Essence in a particular manifestation only),
5: Om, Peace, Peace, Peace

 

This shows the highest stage Hindus reached around 1000 BCE. No other culture even thought about such a thing at that time.

 

xxxx SUBHAM xxx

 

பண்டம் ஓரிடத்தில் பழி ஓரிடத்தில்- பழ மொழிக் கதை (Post No.4767)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 12-27

 

Written by London swaminathan

 

Post No. 4767

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு காரணமோ, ஒரு கதையோ உண்டு. பழமொழிகளே அழிந்து வரும் காலத்தில் கதைகள் மறைந்ததில் வியப்பில்லையே! மூன்று வெள்ளைக் காரர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை வெளியிட்டனர். அதற்கும் மேலாக உள்ள பழமொழிகளையும், அவற்றின் பின்னுள்ள கதைகளையும் வெளியிடுவதும், அவைகளை விஷயம் (Subject wise)  வாரியாக வரிசைப்படுத்துவதும், பல்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகளுடன் அவைகளை ஒப்பிடுவதும், எல்லாத் தமிழ்ப் பழமொழிகளையும் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதும் செய்ய வேண்டிய பணிகளாகும். இதற்கென தனித் துறையும் ஆராய்ச்சிக் களமும் தேவை. நிற்க.

மேலும் ஒரு பழமொழிக் கதையைக் காண்போம்.

 

‘எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்?’ ‘பண்டம் ஓரிடத்தில் பழி வேறு ஒரு இடத்தில்’ என்று தமிழில் பழமொழிகள் உள.

 

ஒரு ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் கோடிக் கணக்கில் பணம் வைத்திருந்தான். காலப் போக்கில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அரண்மனை போன்ற வீட்டைப் பராமரிப்பதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் பெரிய மழை பெய்தபோது ஒரு சுவர் இடிந்து விழுந்தது. உடனே வேலையாட்களைக் கொண்டு புதிய சுவர் எழுப்பினான். அது ஈரப் பசையுடன், காயாமல் இருந்த காலத்தில் ஒரு திருடன் அந்த ஊருக்குள் புகுந்தான்.

 

 

இருட்டு நேரத்தில் அந்த வீட்டில் திருட வந்தான். காயாத சுவர் என்று தெரியாமல் அதில் கன்னம் வைத்தான் (ஓட்டை போட்டான்). அது முழுதும் இடிந்து அவன் மீது விழவே அவன் அப்படியே மூச்சுத் திணறி இறந்தான்.

 

அந்த நாட்டை ஆண்ட மன்னன் மஹா மூடன் என்பதால் எல்லோரும் அவனை ஏமாற்றிப் பிழைத்தனர். திருடர் கூட்டத்தில் ஒருவன் இதை அறிந்து, அந்த மன்னர் மீது வழக்கு தொடுத்தான். உனது நாட்டில் வீடுகளைச் சரியாகக் கட்டுவதில்லை. அதை நீங்கள் சரியாக மேற்பார்வை செய்யவில்லை எனது சகா ஒருவன் இறந்ததற்கு உங்கள் மோசமான ஆட்சியே காரணம்; எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்- என்றான்.

 

முட்டாள் அரசன் சொன்னான்,

கவலைப் படாதே, இப்பொழுதே வீட்டுச் சொந்தக் காரனை அழைத்துவர ஆணை இடுகிறேன் என்றான். அந்த வணிகனை உடனே சேவகர்கள் இழுத்து வந்தனர். ஏன் வீட்டை மோசமாகக் கட்டினாய்? ஒரு திருடனின் சாவுக்கு நீயே காரணம் என்றான்.

அந்த வணிகன் சொன்னான்,

நான் என்ன செய்ய? வீட்டில் சுவர் எழுப்பிய கொத்தனாரை அல்லவா தண்டிக்க வேண்டும்?- என்றான்

உடனே கொத்தனாரை இழுத்து வந்தனர். அடே! ஈரமான சுவரை எழுப்பி ஒருவனைக் கொன்றுவிட்டாயே! உனக்கு தொழில் சுத்தம் என்பதே கிடையாதா? என்றான் மன்னன்.

 

மன்னவா! என் மீது பிழை இல்லை. மண் மிதித்துக் கொடுத்த கூலியாள் கொடுத்ததை நான் அப்படியே வைத்து சுவர் எழுப்பினேன். அவனை அல்லவா விசாரிக்க வேண்டும்?- என்று சொன்னான்.

உடனே கூலியாளை அழைத்துவர மன்னன் பணி ஆட்களை ஏவினான்.

 

கூலியாள் வந்தவுடன் அதே கேள்வி.

அவன் செப்பினான்,

மஹாராஜா! நான் இளகலாக மண் கலந்து கொடுத்தது ஏன் என்றால், நான் பயன் படுத்திய மிடாவின் வாய், வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது. அதைச் செய்த குயவனை அல்லவா விசாரிக்க வேண்டும்? என்று உரைத்தான்

 

குயவனை இங்கே இழுத்து வாருங்கள் என்று அரசன் ஆணை  இட்டான்.

 

குயவனும் வந்தான்; அதே பல்லவி!

அவன் பதில் கொடுத்தான்,

மன்னவா! உண்மைதான்; மிடாவின் வாய் பெரிதுதான். அதற்குக் காரணம், அந்தப் பக்கம் வந்த ஒரு பேரழகிதான். அவளைப் பார்த்துகொண்டே மிடா செய்ததால் அது பெரிதாகிவிட்டது என்று நுவன்றான்.

 

அந்தப் பேரழகியை இழுத்துவாருங்கள் என்று உத்தரவிட்டான் மூட அரசன்

அவளும் மினுக்கி குலுக்கி வந்தாள்; அதே  கேள்வி.

அவள் பகர்ந்தாள்,

ஒரு நகை செய்யும்படி தட்டானிடம் சொல்லி இருந்தேன்; அவன் சொன்ன நேரத்தில் என் வீட்டுக்கு வராததால் நானே அவன் வீட்டுக்குச் சென்றேன். அப்போது குயவன் வீடு வழியாகப் போனது உண்மையே. ஆனால் இதற்குக் காரணமான தட்டானை அழைத்து விசாரிப்பதே முறை என்றாள்.

தட்டான் வந்து நகை விற்கும் செட்டியார் மீது பழியைப் போட்டான். அவரையும் அழைத்து வந்தனர் சேவகர்கள்.

 

அவருக்கு நிலைமை முழுதும் விளங்கி இருந்ததால் — பூர்வ கதை தெரிந்து இருந்ததால்– இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.

 

அந்த இரண்டு நண்பர்களும் அரண்மனைக்கு வெளியே மன்னருக்குக் கேட்கும் அளவுக்குப் பெரிய சண்டை போட்டனர்.  மன்னர், செட்டியாரை விசாரிப்பதற்குப்  பதிலாக அந்த இரண்டு பேரையும் உள்ளே அழைத்து என்ன சப்தம்? என்ன சண்டை? என்று கேட்டான்.

அவர்களில் ஒருவன் மொழிந்தான்:

மன்னா! பாருங்கள்! நீங்கள் தண்டிப்பவனைக்  கழுவில் ஏற்றிக் கொல்ல கழு மரம் தயாராக இருப்பதைப் பார்த்தவுடன் நான்தான் கழுவில் ஏறுவேன் என்கிறான். ஆனால் நான்தான் முதலில் வந்தேன். ஆகவே நான்தான் கழுவேறி இறக்க வேண்டும்; இதுதான் வாக்குவாதத்தில்  முடிந்தது- என்றான்.

மன்னன் கேட்டான், நீங்கள் எதற்காகக் கழுவில் ஏற வேண்டும்?

மன்னரே, உங்களுக்குத் தெரியாத விஷயமா? இந்தக் கழுமரத்தில் இந்த நன்னாளன்று யார் முதலில்  கழுவேறி இறக்கிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் அடுத்த அரசன் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்களே! விரைவில் இந்த நாட்டில் ஆட்சி மாறும் என்றும் பகர்ந்தார்களே? நான் இதோ தயார் என்றான்.

 

அதைக் கேட்ட அரசன் திடீரென்று ஆசனத்தில் இருந்து குதித்தான். எல்லோரும் விலகிப் போங்கள்; இந்த நாட்டை ஆளுவதற்கு என்னைவிட வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று சொல்லிவிட்டு நேராகச் சென்று கழுவில் ஏறினான்; முட்டாள் மன்னவனின் ஆயுளும் பிரிந்தது. அனைவருக்கும் பெரு  மகிழ்ச்சி!

 

 

பழி ஓரிடத்தில் பாவம் ஓரிடத்தில், பண்டம் ஓரிடத்தில் என்ற பழி ஓரிடத்திலென்ற பழமொழிகளுக்கு எல்லாம் மூலக் கதை இதுவே.


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–சுபம்–

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-16 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4766

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)

ச.நாகராஜன்

 

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும்.

அலுவலகத்தில் எல்லோருக்கும் சிக்கல். எனக்குக் கூடுதல் சிக்கல். ஒரு தனிப் பிரிவின் அனைத்தும் நானே!

எல்லோரும் உடனடியாகக் கிளம்புங்கள். ஆர்டர், அட்வான்ஸுடன் வாருங்கள்.

 

ஓவர்ஹெட், வேஜஸ்  இவற்றுக்குப் பணம் தேவை. இல்லையேல் பின்னால் வருத்தப்படுவீ ர்கள்!

மற்றவர்களுக்கு சேல்ஸ், புரடக் ஷன்,சப்ளை எனப் பெரிய படை உண்டு.

 

நான் தனி மரம்.

 

அன்று மாலையே கொல்லம் பஸ்ஸில் ஏறினேன்.

காலையில் குளித்து விட்டு ஒரு சின்னப் பாக்கெட் முந்திரிப்பருப்பு வாங்கினேன். விலை குறைவு. சுவையாக் இருக்கும்.

 

பஸ் ஒரு பெரிய பாலத்தின் அருகே வந்த போது நிறுத்தச் சொன்னேன்,

 

“சார், நீங்க போக வேண்டிய கம்பெனிக்கு எதிரிலேயே வண்டி நிற்கும்” என்றார் கண்டக்டர்.

 

‘பரவாயில்லை” என்றேன்,

 

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவர் வண்டியை நிறுத்தினார்.

ஆஹா! என்ன அருமையான காட்சி.

 

பெரிய பாலம்.அகலமானது. நடைபாதைகள் வேறு. லஞ்சம் வாங்காமல் கட்டப்பட்டது.

 

கீழே பளிங்கு போன்ற நீர். துள்ளிக் குதிக்கும் மீன்கள். அலையுடன் ஆட்டம் போட்டு ஓடும் மீன் குட்டிகள்.

இது போலொரு காட்சி கிடைக்குமா?

வானத்தைப் பார்த்தேன், பிரமித்தேன்.

என்ன அதிசயம்.

 

கருட பட்சிகள்.

அலை அலையாக.

 

சிறகை விரித்து அவை பறந்த அழகு!

ஓம் கருடாய நமஹ.

கும்பிட்டேன்.

பல மாதமாகப் படை எடுத்தாயிற்று. ஒரு நிமிடத்தில் அந்த செக்ரட்டரி பெண்மணி என்னை பைசல் பண்ணப் போகிறாள், கருடனையாவது நின்று நிதானித்துத் தரிசிப்போம்.

கம்பெனி வந்தது.

 

உள்ளே சென்றேன். அதே மலையாளப் பெண்மணி. இப்போது நான் ‘பழக்கமாகி விட்ட ஆள்’.

நான் எதுவும் பேசுவதற்கும் முன்னர் அவரே, “சார். எம்.டி. பிஸி.பார்க்க முடியாது” என்றார்.

நான், “உங்களிடம் எதையாவது கேட்டேனா?” அவர் சற்றுத் திகைத்தார்.

 

உள்ளே போய் கார்டைக் கொடுத்து நான் வந்ததையாவது சொல்லுங்கள். அவர் சொல்லட்டும்.

என்ன, இங்கே, இவர் யார்? பின்னால் நின்று கொண்டிருந்த எம்.டி. முதல் முதலாக என்னைப் பார்த்தார்.

சார், ஜஸ்ட் ஒன் மினிட். அவ்வளவு தான்.

சரி, வாருங்கள்

 

அவர் காபின் பிரம்மாண்டமானது. இரு புறமும் செல்லும் படி கதவுகள். ஒரு புறம் நீரோடையை நோக்கி. இன்னொரு புறம் அலுவலகம் நோக்கி.உள்ளே நுழைந்தவர் மேஜையைப் பிடித்துக் கொண்டார். எனக்கு நிற்கக் கூட இடம் இல்லை.

என்ன?

 

உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்னால் சொல்ல முடியும்?

எனக்கு! குட் நியூஸ்! என்ன?

 

“உங்களது பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு வெளிவரப் போகிறீர்கள்.  நல்ல செய்திகள் வர ஆரம்பிக்கின்றன.

கடுமையா இருந்த அவர் இப்போது மலர்ந்து போனார், பிரமித்தார், அதிசயித்தார்,

 

முதலில் உட்காருங்கள். தானும் உட்கார்ந்தார்.

செக்ரட்டரியை அழைத்தார். சாருக்கு சாய், ஸ்நாக்ஸ் கொண்டு வா, இரண்டு பக்க டோர் வழியாகவும் யாரையும் விடாதே. போனை உள்ளே கொடுக்காதே.

 

அந்தப் பெண் ஒன் மினட் ஆசாமி எப்படி இப்படி ஒரு வி ஐ பி ஆனார் என்று வியந்து போனார்.

 

எனக்கு ஜோஸியத்தில் நம்பிக்கை கொஞ்சம் உண்டு. ஆனால் என்னைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் எப்படி இதைச் சொல்கிறீர்கள்.

 

விவரித்தேன்.

சார், நீங்கள் இருக்கும் இடம் அற்புதமான கருடபட்சிகள் வாழும் ஸ்தலம்.அவைகள் உங்களை வளமாக வாழ வைக்கின்றன. இந்த இடத்தில் உங்கள் அலுவலகம் செட் அப் ஆனதிலிருந்து க்ரோத் தான்.

உண்மை தான் என்று தலையை ஆட்டினார்,

ஆனால் எக்ஸ்பான்ஷனுக்கான பெரிய லோன் சாங்க்‌ஷன் ஆகவில்லை. பல மாத ப்ரிபேரஷன் ஓவர். ஸ்டார்ட் தான் ஆகணும்.

 

சார், இன்றிலிருந்தே நல்ல காலம் ஆரம்பம். இன்னும் மாக்ஸிமம் ஒரு வாரம் தான். 48 ஹவர்ஸ், மே பி 24 ஹவர்ஸ்.

யூ கெட் மோர் தேன் யூ எக்ஸ்பெக்ட்.

 

“சரி இதெல்லாம் எப்படி சொல்கிறீர்கள்?”

 

“இந்தக் கருடப் பட்சிகள் உங்களுடன் பேசுகின்றன. அலை அலையாய் வட்டமடிக்கும் அவை உங்களுக்குச் செய்திகள் சொல்கின்றன.

 

கருட பட்சிகள் பேசுகின்றனவா, அவர் பால்கனி கதவைத் திறந்து பார்த்தார். ஏராளமான பட்சிகள். ஆரவாரம். கும்பிட்டார்.

இவைகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?

 

ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு நல்ல அருமையான உணவு வகைகளைத் தாருங்கள்.

செக்ரட்டரி உள்ளே வந்து பேங்கிலிருந்து போன் என்றார்.

 

போன் பேச ஆரம்பித்தார். ஓ என்றார். தேங்க்ஸ் என்றார்.

பத்து நிமிட போன்.

அவர் முகம் பிரகாசம்.

அலுவலகம் பிரசாகம்.

ஒரே ஆனந்தம்.

 

மறுநாள் பேங்க் ஆபீஸர்கள் டாகுமெண்ட் வெரிஃபை செய்து லோன் ஆர்டர் இஷ்யூ செய்யப் போகிறார்கள்.

ஒரே கோலாகலம், அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை.

மெல்ல தேங்க்ஸ் சொல்லி விட்டு நகர்ந்தேன்.

ஒரு நிமிடம். உட்காருங்கள்.

 

உட்கார்ந்தேன்.

அக்கவுண்ட்ஸ் மானேஜரை வரச் சொன்னார்.

இவரது பைலைக் கொண்டு வாருங்கள்.

பைல் வந்தது.

 

இவருக்கு ஆர்டரை டைப் அடித்துத் தாருங்கள். அட்வான்ஸ் எவ்வளவு?

50%

 

அதையும் ஒரு செக்காகப் போடுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்.

 

ஆர்டர் அமவுண்ட்

 

அவர் கொடேஷனில் கொடுத்தது தான்.

நம்பமுடியாமல் தலையை ஆட்டி விட்டுப் போன அவர் அரை மணி நேரத்தில் வந்தார்.

 

ஆர்டர், செக் – எம் டி கையெழுத்திட்டார்.

என் கையில் தர தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டேன்.

இந்த சேஸிஸ் ஆறும் பல மாதமாக இங்கே தான் இருக்கின்றன.

நாளை அதை மதுரைக்கு அனுப்பி விடுகிறேன்.

 

ஆல் தி பெஸ்ட்!

கிளம்பினேன், கருடனுக்கு நமஸ்காரம்!

காலையில் வீ டு வந்து குளித்து விட்டு ஆபீஸுக்கு வந்து சேர்ந்த என்னை பரிதாபமாக ஒரு கூட்டம் பார்த்தது.

பெரிய சேல்ஸ் ஃபோர்ஸே ஒண்ணும் செய்ய முடியலை.

இவர் பாவம் என்ன செய்வாரு?

 

 

நிர்வாகத்திற்குச் செய்தி போனது.

 

பதினெட்டு லட்சம் சிங்கிள் ஆர்டர், ஒன்பது லட்சம் செக் அட்வான்ஸ்.

 

என்ன பரபரப்பு என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை,

 

சொந்த சர்வைவலுக்காக அலுவலக ஆர்டரை ஜோதிடத்தை வைத்துப் “பிடித்தது” தவறு.

 

தப்பு தப்பு தான்!

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 56 (Post No.4765)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-56 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4765

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 387 முதல் 395

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

பிரளயம் மீண்டும் நேர்ந்ததுவே – வெற்றுப்

   புலவர்க ளாலது நிகழ்ந்ததுவே

பொருள்பெற வேண்டித் தனவந்தரைப் – பல

   பொய்யுரை கூறிப் புகழ்ந்தனரே

மருள்போல் பலதல வரலாற்றை –

   மனம்போ னபடிக் கிறுக்கினரே

பெரும்பிர ளயமெனல் அதுவேதான் – என்னைப்

    புதைத்திட முயன்றவர் அவரேதான்

 

ஆங்கில மோகம் தலைக்கேறி – அவர்

   ஆடிய ஆட்டம் என்சொல்வேன்?

ஆங்கிலம் பேசலே  பயனென்று – அவர்க்கு

   அடிவரு டிகளாய் மாறினரே

தீங்கெனத் தமிழைப் புறக்கணித்தே – பெற்ற

   தாயெந்தன் வயிற்றில் மிதித்தனரே

ஆங்கந்தப் பிரளய வெள்ளம்தான் – எனை

   அமிழ்ந்தே முழுகிடச் செய்ததுவே

 

முன்னாளில் பொங்கிய பிரளயம் தன்னிலே

   முடிந்ததோ எந்தன் வாழ்வு

என்றுநான் தவிக்கையில் புவிமன்னன் பாண்டியன்

   எனையிங்கு மீட்டுத் தந்தான்

அன்றென்னைக் காத்திட பாண்டியன் போலவே

   இன்றென்னைக் காப்ப வர்யார்?

என்றுநான் தவிக்கையில் கவிமன்னா பாரதி

   எனைக்காக்கத் தோன்றி வந்தாய்

 

பாரதிநீ இல்லையேல் பாரினில் மீண்டும் நான்

   பிழைத்திடல் என்ப தேது?

பாரதிநீ இல்லையேல் பண்டிதரை விட்டென்னைப்

   பலரறிய மீட்பார் ஏது?

பாரதிநீ இல்லையேல் பழமைக்கும் புதுமைக்கும்

   பாலமிங்கு அமைதல் ஏது?

பாரதிநீ இல்லையேல் பாரத எழுச்சிக்குப்

   பாட்டிசைப்போர் தமிழில் ஏது?

 

ஆயிரத் தெண்ணூற்றி  எண்பத்தி ரண்டினில்

   ஆனநற் கார்த்திகை மாதம் – தனில்

யாரும் வியந்திட மூலநட் சத்திரம்

   ஓங்கிய தோர்நல்ல நேரம்

தாயினைப் பிரளய வெள்ளத்தில் மூழ்காமல்

   தடுத்திடு வேனென துடித்தே – கவித்

தணலென வேயிந்தப் புவியனைத் தும்போற்றத்

   தோன்றிவந்த தாய்குரல் கொடுத்தே

 

சின்னச்சா மிஅய்யர் லட்சுமி யம்மாளும்

   செய்தநற் புண்ணியத் தாலே – பெருஞ்

செல்வமில் லெனினும் கல்விவ ளமுள்ள

  செம்மைக்கு டும்பத்தில் தோன்றி

என்றுமென் வடிவெனும் சுப்பிரமணியன்

   என்னும் பெயர்தனைப் படைத்தே – புகழ்

எட்டுத் திசையிலும் எட்டிட வேவந்து

   எட்டய புரத்தில் பிறந்தாய்

 

வெள்ளை மலர்வாணி பிள்ளைப் பிராயத்தில்

   உள்ளம் புகுந்திட்ட தாலே – நெஞ்சை

உள்ளும் வகைப்பது வெள்ளமெனக் கவி

   அள்ளியள் ளித்தந்த தாலே

துள்ளும் பதினொரு வயதினில் சபைதனில்

   எள்ளப் புகுந்திட்ட போதில் – மனம்

விள்ளும் வகைக்கவி தந்து பாரதியாம்

   தெள்ளு தமிழ்ப்பெயர் கொண்டாய்

 

பெற்றவர் மறைந்திடத் தாய்மாமன் இல்லத்தில்

   புகழ்காசி தனில்வாழ்ந்த போதும் – அதன்

பின்னரெட் டயபுரம் மதுரை சென்னையென

   பல்வேறு இடம்சென்ற போதும்

உற்றவர் தமைவிட்டுப் பாண்டியில் மறைவாக

   உறைகின்ற நிலைவந்த போதும் – எந்தன்

உடலெங்கு அலைந்தாலும் உயிரென்றும் தமிழென்று

   உறைந்ததி னால்நீயும் வாழ்ந்தாய்

 

எவருக்கும் புரியாமல் எழுதுவதே கவிதையென்று

   புலவரெலாம் நினைத்திருந்த காலம் – அவரை

   விலகவைத்த துனதுகவிக் கோலம் – எங்கே

தவறுகண்ட போதும்நெஞ்சு பொறுக்கவில்லை என்று நீயும்

   தவித்ததெல்லாம் நற்கவிஞன் சீலம் – கவிதைத்

   தடம்துலங்க நீயமைத்த பாலம்

 

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.

 

பாரதியை வாசிக்கிறேன் என்று சொல்வதை விட பாரதியை சுவாசிக்கிறேன் என்று சொல்லும் எண்ணற்ற அன்பர்களில் தன்னையும் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த அரும் கவிஞர் பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு கவிதை புனையத் தொடங்கியவர்.

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

இவர் சொற்பொழிவு நிகழ்த்தாத தலங்களே இல்லை என்று சொல்லுமளவு பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

‘I AM YOUR TREASURE, PRESERVE ME’- VEDAS SAID TO BRAHMINS (Post No.4764)

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-58

 

Written by London swaminathan

 

Post No. 4764

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

The second chapter of Manu Smrti, also known as Manava Dharma Shastra, contains very interesting details on various topics; I am summarising it with my comments below:

 

What did Vedas say to the Brahmins?

2.114. Sacred Learning approached a Brahmana and said to him: ‘I am thy treasure, preserve me, deliver me not to a scorner; so (preserved) I shall become supremely strong.’

2.115. ‘But deliver me, as to the keeper of thy treasure, to a Brahmana whom thou shalt know to be pure, of subdued senses, chaste and attentive.’

2.116. But he who acquires without permission the Veda from one who recites it, incurs the guilt of stealing the Veda, and shall sink into hell.

2.113. Even in times of dire distress a teacher of the Veda should rather die with his knowledge than sow it in barren soil.

 

My comments:

The greatness of Vedas is explained here. It is a treasure to be preserved by the Brahmins; but if there is no worthy hand to receive it, beter die than to give to irreverent people.

It is also interesting that the Brahmins first refused to teach the Mlechas (foreigners like Max Muller, Wilson etc). When a few greedy Brahmins violated their code of conduct, the Mlechas got it and interpreted it to according to their whims and fancies. Like no two clocks agree, no two Mlechas/ barbarians agree!

 

Don’t Talk, Don’t Argue, Act like an Idiot!

There is very interesting advice to the students of Vedas:

2.110. Unless one be asked, one must not explain anything to anybody, nor must one answer a person who asks improperly; let a wise man, though he knows the answer, behave among men as (if he were) an idiot.

2.111. Of the two persons, him who illegally explains anything, and him who illegally asks a question, one or both will die or incur the other’s enmity.

 

Ten Types of People are fit to Learn Vedas

2.109. According to the sacred law the following ten persons, viz. the teacher’s son, one who desires to do service, one who imparts knowledge, one who is intent on fulfilling the law, one who is pure, a person connected by marriage or friendship, one who possesses (mental) ability, one who makes presents of money, one who is honest, and a relative, may be instructed in the Veda.

 

2.106. There are no forbidden days for the daily recitation, since that is declared to be a Brahmasattra (an everlasting sacrifice offered to Brahman); at that the Veda takes the place of the burnt oblations, and it is meritorious even, when natural phenomena, requiring a cessation of the Veda-study, take the place of the exclamation Vashat.

 

Three Beautiful Similes

2.99. But when one among all the organs slips away from control, thereby man’s wisdom slips away from him, even as the water flows through the one open foot of a  leather water-carrier’s skin.

2.94. Desire is never extinguished by the enjoyment of desired objects; it only grows stronger like a fire fed with clarified butter.

2.113. Even in times of dire distress a teacher of the Veda should rather die with his knowledge than sow it in barren soil.

Om and Gayatri

2.74. Let him always pronounce the syllable ‘Om’ at the beginning and at the end of a lesson in the Veda; for unless the syllable Om precede the lesson will slip away from him, and unless it follow it will fade away.

2.78. A Brahmana, learned in the Veda, who recites during both twilights that syllable and that verse, preceded by the Vyahritis, gains the whole merit which the recitation of the Vedas confers.

2.79. A twice-born man who daily repeats those three one thousand times outside the village, will be freed after a month even from great guilt, as a snake from its slough.

2.80. The Brahmana, the Kshatriya, and the Vaisya who neglect (the recitation of) that Rik-verse and the timely performance of the rites prescribed for them, will be blamed among virtuous men.

2.81. Know that the three imperishable Mahavyahritis, preceded by the syllable Om, and followed by the three-footed Savitri are the portal of the Veda and the gate leading (to union with) Brahman.

2.82. He who daily recites that (verse), untired, during three years, will enter (after death) the highest Brahman, move as free as air, and assume an ethereal form.

2.83. The monosyllable (Om) is the highest Brahman, three suppressions of the breath are the best (form of) austerity, but nothing surpasses the Savitri truthfulness is better than silence.

2.84. All rites ordained in the Veda, burnt oblations and othe) sacrifices, pass away; but know that the syllable (Om) is imperishable, and it is Brahman, and the Lord of creatures (Prajapati).

2.85. An offering, consisting of muttered prayers, is ten times more efficacious than a sacrifice performed according to the rules of the Veda; a prayer which is inaudible (to others) surpasses it a hundred times, and the mental recitation of sacred texts a thousand times.

 

–Subham–

 

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? (Post. 4673)

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? மநு தகவல்- மநு நீதி நூல்- Part 13 (Post No 4763)

 

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-59 AM

 

Written by London swaminathan

 

Post No. 4763

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

 

2-89 இந்திரியங்களைப் பெரியோர்கள் பதினொன்றாக வகுத்துள்ளனர். அதை நான் இப்போது விளக்குவேன் (207)

2-90.காது, தோல், கண், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, ஆசன வாய், ஜனன இந்திரியங்கள், கை, கால், பத்தவதாக பேசும் உறுப்பு ஆகியனவும்

2-91. இவைகளில் காது முதல் மூக்கு வரை உள்ள ஐந்தும் ஞானேந்திரியம், ஆசனவாய் முதல் வாய் வரையுள்ள ஐந்தும் கர்மேந்திரியங்கள்

 

2-92. இந்த பத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் மனம் பதினோராவது இந்திரியம் ஆகும். அதைக் கட்டுப்படுத்தினால் ஏனைய பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்திவிடலாம். (210)

 

2-93. புலன் வழிச் சென்று, அதன் போக்கில் இன்பங்களை அனுபவிப்பவன் தவறுகளைச் செய்வான்; ஆனால் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் இன்பத்தையும் வெற்றியையும் அடைவான்.

Picture posted by S P Ramanathan

2-94. ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் அதைத் திருப்தி செய்வதென்பது முடியாது. ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்வது, தீயில் நெய்யை ஊற்றி அதை அணப்பதற்குச் சமம் ((அதை மேலும் வளர்ப்பது போலாகும்)).

 

 

2-95. சிலர் ஆசைகளை நிறைவேற்றலாம்; சிலர் ஆசைகளை அறவே ஒதுக்கலாம்; ஆனால் அறவே ஆசைகளை அகற்றுவதே சிறந்தது.

 

2-96. ஆசைகளை அகற்றுவதற்கு தெளிந்த ஞானம்தான் உதவும்; அவைகளில் இருந்து தனித்து வாழ்வதால் ஆசைகளை ஒழிக்க முடியாது.

 

2-97. எவன் ஒருவன் புலன் இன்பங்களில் நாட்டம் உடையவனாக இருக்கிறானோ அவன் செய்யும் யாக யக்ஞங்களும், வேதம் ஓதுதலும், தானமும் தவமும் பயனற்ற செயல்களே.-215

2-98. எவன் ஒருவன் ஐம்புல நுகர்ச்சியால இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே புலன்களை வென்றவன் ஆவான்.

2-99. ஐந்து புலன்களில் ஒன்று பலவீனமானாலும், ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல ஞானம் வெளியேறி விடும்

2-100. ஆகவே பொறிகளையும் மனதையும் கட்டுப்படுத்தி, உடலை வருத்தாமல், இம்மை மறுமை ஆகியவற்றின் நன்மைகளை நாட வேண்டும்.

Picture posted by Lalgudi Veda

 

2-101. அதி காலையில் சூரியன் உதயம் ஆகும் வரை நின்றுகொண்டு காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும். நட்சத்திரங்கள் தோன்றும் வரை செய்க (காணாமல், கோணாமல், கண்டு கொடு; சூரியனைக் காணாமல் காலையிலும், நிழல் கோணாமல் நண்பகலிலும், சூரியனைக் கண்டு, அது மறையும் வரை மாலையிலும் காயத்ரீ மந்திரம் சொல்க)

 

2-102.காலையில் நின்று கொண்டு ஜபம் செய்வதால் இரவில் செய்த பாபங்கள் அழிந்து விடும்; மாலையில் அமர்ந்து கொண்டு செய்யும் தவத்தால் பகற்பொழுதில் செய்த பாவங்கள் நசித்துவிடும்.-220

2-103.யார் ஒருவன் இவ்வாறு காலை மாலை ஜபங்களைச் செய்வதில்லையோ அவன் இரு பிறப்பாளன் என்ற தகுதியை இழக்கிறான்.

2-104.ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ, நதிக்கரைகளிலோ, ஒன்று குவிந்த மனதுடன் காயத்ரீ ஜபிக்க வேண்டும்.

 

2-105.இவைகளைச் செய்யக்கூடாத காலம் என்று விலக்கு எதுவும் இல்லை. வேதாங்கம் கற்கவும், வேதம் சொன்ன தினசரிச் சடங்குகளைச் செய்யவும் விடுமுறை நாட்கள் என்பது எதுவும் இல்லை.

 

2-106.இவை எல்லாம் வேதம் கற்பதின் ஒரு பகுதி என்பதால் விலக்கு எதுவும் இல்லை. அவை  வேறு காரணங்களினால்  தடைப் பட்டாலும் பலன் குன்றாது

 

2-107.யார் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு இவ்வாறு இடைவிடாமல், புலனடக்கத்துடன் செய்கிறானோ, அவன் இருக்கும் இடத்தில் பாலும் தேனும் வெண்ணையும் தயிரும் வற்றாது பாயும்-225

 

 

2-108. குருகுல வாசம் செய்யும் காலம் முழுதும் ஒரு மாணவன், வேதம் ஓதுதல், அக்னியில்  சமித்தினால் ஹோமம் செய்தல், பிச்சை எடுத்தல், குருவுக்குப் பணிவிடை செய்தல், தரையில் படுத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

 

2-109.வேத உபதேசம் ஏற்கக் கூடிய பத்து வகை மாணவர்கள் உண்டு: குருவின் மகன், தருமம் அறிந்தவன், ஒழுக்க சீலன் ( தூய்மையுள்ளவன்), உறவினர், கொடையாளி, பணிவுடையன், நம்பத் தகுந்தவன் (பொய்பேசாதவன்), வேதத்தை கற்கும் சக்தியுடையவன், , சேவை செய்பவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவன்.

आचार्यपुत्रः शुश्रूषुर्ज्ञानदो धार्मिकः शुचिः ।

आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः

 

 

2-110. ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விஷயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன் போல) இரு.

2-111.யார் தர்மத்துக்குப் புறம்பாக கேட்கிறானோ அல்லது தர்மத்துக்கு எதிராக விளக்குகிறானோ, அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ, விரோதம் காரணமாக இறக்க நேரிடலாம்.

2-112. தர்மமோ, தட்சிணையோ, அடக்கமோ இல்லாதவனுக்கு (வேதத்தைக்) கற்பிக்கக் கூடாது; பயன் தராத ஆளுக்குக் கல்வி கற்பது உவர் நிலத்தில் விதைகளை விதைப்பது போலாகும்-230

 

2-113.வேதம்  அ றிந்தவன், ஒரு தவறானவனுக்குக் கற்பிப்பவதைவிட, இறப்பதே மேல்

 

2-114.வேதம், பிராஹ்மணனிடம் சொன்னது: “நான் பெரும் பொக்கிஷம்;

என்னைக் காப்பாற்று நிந்திப்பவர் எவருக்கும் என்னை அளித்துவிடாதே. அப்போதுதான் நான் மிகவும் சக்தியுடன் விளங்குவேன்”.

विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । %[ं।शेवधिष् टे]

असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ Bछ्.Sछ्॥

 

यमेव तु शुचिं विद्यान्नियतब्रह्मचारिणम् । %[ं। विद्या नियतं ब्रह्मचारिणम्]

तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ।

 

2-115. தூய்மையுடைய, புலன் அடக்கம் உடைய, கிரஹிக்கும் சக்தியுடைய, பொக்கிஷத்தைப் பாதுக்காக்கக் கூடிய பிராமணன் இடத்தில் என்னைக் கொடு

2-116. வேதம் அறிந்த ஒருவரின் அனுமதி இல்லாமல், வேதத்தைக் கற்பவன் வேதத்தைத் திருடியவன் ஆவான். அவன் நரகத்தில் வீழ்வான்.-234

ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।

स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எனது கருத்து

 

இந்தப் பகுதி வேதம் எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறது.

 

தகுதி இல்லாதவருக்குக் கற்பிப்பதைவிட அந்த அறிவுடன் இறந்து போனாலும் பரவாயில்லை என்கிறது.

 

மீண்டும் மீண்டும் ஒழுக்கத்தையும் புலன் அடக்கத்தையும் மநு வலியுறுத்துகிறார்.

 

புலன் அடக்கமும், ஆசையின்மையும், ஒழுக்கமும்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிராமணரை உயர் நிலையில் வைத்தது.

 

வேதம் பிராமணனிடம் வந்து சொன்ன வாசகம் அருமையானது; நான் ஒரு பொக்கிஷம்; என்னைப் பாது காத்து இதன் மதிப்பை அறிந்த தூயவனிடம் என்னை ஒப்படை.

 

இன்னும் ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொதுவானது: கேள்வி கேட்காமல் பதில் சொல்லாதே. குதர்க்கமாக கேட்பவனிடம் முட்டாளைப் போல நடி.

 

3 நல்ல உவமைகள்

ஆசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது, தீயில் நெய்யை ஊற்றி அதை அ ணைப்பதற்குச் சமம் என்ற உவமையும்

 

பயனற்ற ஆட்களுக்கு வேதம் கற்பிப்பது, உப்பு மணலுள்ள நிலத்தில் விதை விதைப்பதற்குச் சமம் என்ற உவமையும்,

இந்திரியங்களில் ஒரு இந்திரியம் (புலன்கள்) பலவீனமாக இருந்து மனதைப் பரிதவிக்கவிட்டாலும், அது ஓட்டையுள்ள தண்ணீர்ப் பைக்குச் சமம் என்ற உவமையும் ரசிக்கக் கூடியவை.

 

அந்தக் காலத்தில் தோலினால் ஆன தண்ணீர்ப் பை இருந்ததை இந்த ஸ்லோகம் காட்டுகிறது.

பிராமணர்களுக்குச் சொன்ன காணாமல் கோணாமல் கண்டு கொடு- (சந்தியா வந்தனம் செய்) என்பதும் நோக்கற்பாலது.

நண்பகலில் செய்யப்படும் மாத்யாஹ்னிகம் பற்றி மநு ஒன்றும் செப்பாதது வியப்புக்குரியது. அவர்காலத்தில் மதிய வழிபாடு இல்லையா? அல்லது எல்லோருக்கும் தெரிந்ததைச் சொல்ல  வேண்டியதில்லை என்று விட்டுவிட்டாரா?

இன்னும் 2400 ஸ்லோகங்கள் உள.

 

தொடரும்—