POETS’ CLOSE OBSERVATION ON BEES! (Post No.4782)

Time uploaded in London- 19-48

Written by London swaminathan

Post No. 4782

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Tamil and Sanskrit poets are keen observers of nature. We have already seen how Dattatreya and others observed the nature and learnt from them. Crows and snakes are used by the poets and saints to teach us lot of things. Two poets warn us not to accumulate money so that we would not lose like the bees. William Wordsworth said, ‘Let Nature be your Teacher’; Hindu poets have been following it for over two thousand years. Here are two verses about the bees:

Chanakya says,

The pious people should always give food and money in charity, never should they accumulate them. The glory of the illustrious Karna, Bali and Vikramditya persists unabated even now. Look, the honey bees rub their hands and feet because of the despondency of losing honey that they had gathered for long.

–Chanakya Niti 11-18

 

deyam bhojyadhanam sadaa sukruthirbinaa sanchitavyam sadaa

sriikarnasya nhaleerasca vikramateradhyaapi kiirtihi sthithaa

 

asmaakammadhu daanabogarahitam nashtam chiraat sanchitam

wirvaanaaditi paanipaathayugale garshantyaho makshikaahaa

xxx

A Tamil poet in Naladiyar says………………

Naladiyaar is a Tamil didactic book composed by Jain saints in Tamil. The poet Padumanaar, who compiled 400 verses, says,

“Those who vexing their own bodies by stinting in food and clothing, perform not acts of charity that ever remain undestroyed, but avariciously hoard up a great wealth, will lose it all. O Lord of the mountains, which touch the sky, the bees that are driven away from the honey they have collected bear testimony to this.

 

—-Subham–

 

 

 

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —

Rare Letters of Netaji, நேதாஜியின் அரிய கடிதங்கள்- Post No.4780

நேதாஜியின் அரிய கடிதங்கள் ( IN ENGLISH AND TAMIL)- Post No.4780

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 7-38 am

Compiled by London swaminathan

Post No. 4780

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் (1897- 1945??) அரிய கடிதங்கள் எட்டும், அவர் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் பிரம்மச்சாரி கைலாசம் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்தக் கடிதங்களை பிரம்மச்சாரி கைலாசத்துக்கு நேதாஜி எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாத அவரது எழுத்துகளும், போர் முனையில் கூடத் தெளிவான அவரது சிந்தனையும் கடிதங்களின் மதிப்பை உயர்த்துகின்றன. ஒவ்வொரு முறையும் சுவாமிஜிக்கு அவர் பணிவான வணக்கங்களைத் தெரிவிப்பது அவரது பணிவைக் காட்டுகிறது. மணிப்பூரில் மழை காரணமாக தோல்வி ஏற்பட்டபோதும் அவரது வெற்றி வேட்கையும் நம்பிக்கையும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கடிதங்களும் காட்டுகின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் (லண்டன்) இந்த அரிய, சிறிய நூல் உள்ளது. காப்பிரைட் விதிகள் காரணமாக முழுப் புத்தகத்தையும் வெளியிடவில்லை.

 

 

 

 

 

 

 

Jai Hind

 

–Subahm–

 

பாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779)

Date: 24 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4779

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 58

  பாடல்கள் 403 முதல் 411

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

37 முதல் 45 வரை உள்ள பாடல்கள்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – எனும்

சந்தம்நி றைந்தஉன் பாவினிலே

முந்தை சிறப்புகள் யாவையுமே – இங்குத்

தந்துவிட் டாயந்த நாளிலினிலே

 ஆயிர மாயிரம் பாடல்களில் – தரும்

ஆயிரம் கால வரலாற்றை

நேயமு டனொரு பாடலிலே – எந்த

நாளிலும் எங்குமே பாடவைத்தாய்

வள்ளுவ னின்குரல் உலகினுக்கே – எனும்

வாக்குஇந் நாளினில் பலித்ததுவே

தெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்

தேர்ந்தெடுத் தேதம தாக்கினவே

கம்பனை எத்தனைக் கோணங்களில் – நீயும்

கண்டுகண் டுக்கவி பாடிவைத்தாய்

தம்முன்ன வர்நலம் போற்றுவதே – நல்ல

தமிழ்கவி பண்பென உணரவைத்தாய்

 

தமிழ்மொழி யின்வளம் கம்பனிடம் – உயர்

தமிழ்நாட் டின்வளம் இளங்கோவில்

தமிழ்ப்பண் பாடெனல் வள்ளுவமே – என

தான்தொகுத் தேயவரைப் பாடிவைத்தாய்

 

எண்ணற்ற புலவர்கள் வந்தாலும் – இனி

எவ்விதம் பாடல்கள் தந்தாலும்

திண்ணமு டன்இந்த ஒருபாடலே – எந்தன்

திறமுரைக்க என்றும் போதுமப்பா

 

பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் – பாரதி

   பேணியுன் விருப்பம்போல் பெயர்த்திங்கு தந்தார்

திறமான நம்புலமை தன்னை – பிறர்

   தேடிவந்தே போற்றி ஏற்றிடச் செய்தார்

இருதலைக் கொள்ளிநிலை மாற்றி – நீ

    இயம்பிய வண்ணமே நயமுடன் இணைத்தார்

பெருகிடும் விஞ்ஞான வளர்ச்சி – காண

   மறுகணம் கலைச்சொற்கள் படைத்ததைக் கொணர்ந்தார்

 

மெல்லத் தமிழினி சாகும் – என்று

   மனம்நொந்த மைந்தா பாரதி கேளாய்

வெல்லற் கரியதிந்தத் தமிழே – என

   வேற்றுமொழி யார்புறம் போயினர் இந்நாள்

சொல்லில் அடங்காமுன் னேற்றம் – நீ

   சொல்லிய படியிங்கு தோன்றியது காண்பாய்

நல்லதோர் நிலையிங்கு பெற்றேன் – இந்த

   நானிலம் உள்ளவரை நானிங்கு வாழ்வேன்

 

வாழிய பாரதி வாழிய பாரதி

வாழிய வாழியவே!

ஆழியி னும்மிக  ஆழம்மி குந்தவுன்

அருங்கவி வாழியவே!

ஏழிசை யின்சுவை  ஈடிலை இதற்கென

இசைபெற வாழியவே!

ஊழித னில்புவி மூழ்கிய போதிலும்

உன்புகழ் வாழியவே!

 

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி என்ற முதல் அத்தியாயம் முற்றும்

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

31 Quotations from the Rig Veda (Post No.4778)

Date: 23 FEBRUARY 2018

Time uploaded in London- 10-12 am

Written by London swaminathan

Post No. 4778

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

March 2018 Good Thoughts Calendar

 

Written by London Swaminathan 

 

Date: 23 February 2018

 

Time uploaded in London –  10-09 am

 

Post No. 4778

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

TEMPLE PICTURES IN THIS ARTICLE ARE TAKEN FROM LALGUDI VEDA’S POSTS.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

FESTVAL DAYS:  March 1-Holi and Masi Makam; 14- Karadaiyan Nonbu; 18-Ugadi/ New Year, also Vasantha Navaratri begins;22- Vasantha Panchami;  25- Sri Rama Navami and Shirdi Sai Baba Birth Day, Vasantha Navaratri finishes; 29- Mahavir Jayanthi; 30- Panguni Uththiram, Good Friday

 

EKADASI/ HINDU FASTING DAYS- 13 and 27

 

AMAVASYAI/ NEW MOON- 17

 

FULL MOON DAY/ PURNIMA- 1 and 31
Auspicious Days in MARCH:- 4, 5, 26, 30

 

31 beautiful quotations from the Rig Veda are in this month’s calendar. In the past three years, hundreds of quotations are given in both Tamil and English monthly calendars in my blog. Please use them

 

March 1 Thursday

Old Time Seers

Gone are the mortals who in the former ages

Beheld the flushing of the early morning

We living men now look upon her shining

Those will be born who shall hereafter see her.

RV 1-113-11

xxxx

 

March 2 Friday

Order

Firm seated are the foundations of Rita

In its lovely form are many splendid beauties

RV 4-23-9

xxx

 

March 3 Saturday

Speech

Speech hath been measured out in four divisions, the brahmans who have understanding know them.

Three kept in close concealment cause no motion; of speech, men speak only the fourth division

1-164- 45

xxx

 

March 4 Sunday

One God with Different Names

They call him Indra, Mitra, Varuna and Agni and he is heavenly noble winged Garutman,

To what is One, sages give many a title; they call it Agni, Yama, Matarisvan

1-164-46

xxx

 

March 5 Monday

Let us Unite

One and the same be your resolve, and be your minds of one accord.

United be the thoughts of all that all may happily agree

10-190-4

xxx

 

March 6 Tuesday

Achievement

The hare has swallowed the opposing razor, I have shattered with the clod the far- off mountain. The mighty ‘will’ I shall bend before the little, the calf shall grow in strength and consume the bullock.-RV 10-28(9) (power to alter the course of nature)

xxx

March 7 Wednesday

Alertness

You cherish your might like pools of water deep and full; like milch cows going well protected to the meadow, and like water brooks which reach the lake. RV 3-46(4)

xxxx

March 8 Thursday

Variation

The hands are both alike, their labour differs. The yield of sister milch- kine is unequal; Twins even differ in their strength and vigour and two, even kinsmen, differ in their bounty -10-117-9

 

xxx

 

March 9 Friday

Attraction

The horse will draw an easy car, gay hosts lure laughter and jest, the male longs for his mate’s approach and the frog is eager for the flood. RV9-113(4)

xxx

March 10 Saturday

Benevolence

He clothes all which is nude, attends to all the sick, through Him the sightless behold and cripples move about.-RV 8-79 (2)

xxx

 

 

March 11 Sunday

Company

One who eats with no partner (namely, alone) is all guilty-

RV 10-117

xxx

March 12 Monday

Comparison

Their unfathomed splendour is like the glory of the sun and their unknown greatness is like the sea. RV 7-33 (8)

xxx

March 13 Tuesday

Dice

Play not with dice, cultivate your corn land, enjoy the grain and deem that wealth sufficient. RV10-34 (13)

Others caress the wife of one whose riches the dice has coveted– RV 10-28 (4)

xxx

March 14 Wednesday

Divinity

O beauteous one, we have established our perpetual brotherhood with harmony in mother’s womb- RV 8-13 (8)

xxx

March 15 Thursday

Sorrow

As drivers of chariots avoid bad roads, let sorrows pass us by-

8-47-5

xxx

March 16 Friday

Guidance

Like two winds aging not, confluent rivers, come quick vision, like two eyes before us.  Come like two hands most helpful to the limbs, and guide us, like two feet to what is precious.- RV 2-39

xxx

March 17 Saturday

Holiness

He who is being called by us in prayer is resplendent in holiness- RV 8-44(21)

xxx

March 18 Sunday

Inaction

Surely there will come future times when brothers and sisters will perform acts unworthy of kinsfolk. -RV 10-10

xxx

March 19 Monday

Love

As wood-pine clings round a tree, another will cling to you, girt with a blessed alliance.-RV 10-13

xxxx

March 20 Tuesday

Offering

The milk is blended with the honey of the bee; come quickly hither and drink- RV 8-8 (4)

Be pleased, Song Lover, with this song; it flows abundant like the sea- RV 3-12 (5)

xxx

 

March 21 Wednesday

One

One who is all is lord of what is fixed and moving, that walk, that flies, that multi form creation – RV 3-54 (8)

xxx

March 22 Thursday

Plenty

With plenty for his true ally, the active man will gain the spoil – RV 7-42 (20)

xxx

 

March 23 Friday

Possibility

What the teeth have encompassed ,  the tongue eats –

RV 10-68 (6)

xxx

March 24 Saturday

Prayer

Show thy mercy on us once, O Gracious Lord, be like father to us- RV 10-33 (3)

xxx

March 25 Sunday

Let not the wicked rule over us – RV 10-25 (7)

xxxx

 

March 26 Monday

May we not offend against thine holy statutes, as a kind friend, O God, best of all be gracious- RV 8-113

xxx

March 27 Tuesday

God, place me in the ever-lasting, undecaying sphere wherein heaven’s  light is set and  eternal light shines- RV 9

xxxx

 

March 28 Wednesday

Relief

Raiment (clothing) is the body, food is life and healing ointment gives life.-R V 8-24

xxx

March 29 Thursday

Request

Make me immortal in that realm, where happiness transports, where joys and facilities combine and longing wishes are fulfilled.-9-113-10

xxx

March 30 Friday

Search

The Brahman seeks the worshipper, the wright (builder) seeks the cracked and the leech the maimed.

9-cxii-112

xxxx

 

March 31 Saturday

Trousseau (Bride’s clothes)

Thought was the pillow of her couch, sight, the unguent for her eyes and earth and heaven, her treasury -RV 10-85-7

 

—SUBHAM—-

 

நல்ல பிராஹ்மணன் யார்? சாணக்கியன் இலக்கணம் (Post No.4777)

Date: 23 FEBRUARY 2018

Time uploaded in London- 7-59 am

Written by London swaminathan

Post No. 4777

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பிராஹ்மணர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் என்னும் மாமேதை செப்பிவிட்டான். அவன் பிராஹ்மணர்களுக்கு வகுக்கும் இலக்கணத்தைப் பார்க்கையில் இன்று வெகு சிலரே அந்த இலக்கண வரையறைக்குள் வருவார்கள். அவன் மௌரியப் பேர் அரசை ஸ்தாபித்த பின்னரும் குடிசையில் வாழ்ந்ததால் அவன் இவ்வளவு துணிச்சலாகப் பேச முடிந்தது; குணம் என்னும் குன்றேறி நின்றவன் அவன். அந்தணர் என்போர் அறவோர் என்ற சொற்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவன். அவனுடைய ஸ்லோகங்களின் வாயிலாக நாம் மிலேச்சன், சண்டாளன் போன்ற சொற்களின் சரியான கணபரிமாணத்தை அறிய முடிகிறது. வெளி நாட்டினர் இந்தச் சொற்களுக்கு எல்லாம் விஷ(ம) அர்த்தம் கற்பித்து இருந்தனர்.

xxxx

ஒரே வேளை  மட்டுமே உணவு!

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டுத் திருப்தி அடைபவனும், ஆறு தொழில்களை மட்டும் செய்பவனும், மனைவியைக் குழந்தை பெறுவதற்காக மட்டும் அனுபவிப்பனும் ஆகிய பிராஹ்மணன் ‘த்விஜன்’ எனப்படுவான்.

 

த்விஜன்= இரு பிறப்பாளன்

அறுதொழிலோர்= வேட்டல், வேட்பித்தல், கற்றல் , கற்பித்தல், அறக்கொடை வழங்கல், அறக்கொடை பெறுதல் (திருக்குறள் 560)

 

காளிதாசன் ரகு வம்சத்தில் சொல்கிறான்: சூரிய குலத்து அரசர்கள், வம்சம் தழைக்க மட்டுமே மனைவியுடன் இருப்பார்களாம். அதாவது அவர்களை ‘செக்ஸ்’ sex பொருட்களாகப் பயன்படுத்த மாட்டார்களாம்; அதையே இங்கே சாணக்கியனும் மொழிவது குறிப்பிடத் தக்கது.

 

ஏக ஆஹாரேண ஸந்துஷ்டஹ ஷட் கர்ம நிரதஹ ஸதா

ருது காலாபிகாமி ச ஸ விப்ரோ த்விஜ உச்யதே

சாணக்கிய நீதி 11-12

xxxx

 

ரிஷி, முனிவர் யார்?

 

எந்த பிராஹ்மணன் காட்டில் வசித்துக்கொண்டு, தினமும், நிலத்தை உழாமல்- சாகுபடி செய்யாமல் —  வளரும் பழங்களையும், கிழங்குகளையும் உபயோகித்து சிரார்தம் செய்கிறானோ அவன் ரிஷி என அழைக்கப்படுவான்.

அக்ருஷ்ட பல மூலேன  வனவாசரதஹ ஸதா

குருதே அஹரஹஹ ஸ்ராத்தம்ருஷிர் விப்ரஹ ஸ உச்யதே

சாணக்கிய நீதி 11-11

 

இங்கே சிராத்த என்பது ஐந்து வேள்விகளைக் குறிக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை (குறள் 43)

 

என்று வள்ளுவன் சொல்லுவதும் இதையேதான்.

 

xxx

நாய், பூனை வளர்ப்போன், விற்போன்

 

உலக விஷயங்களில் ஈடுபடுவோனும், நாய்,பூனை முதலிய மிருகங்களை வளர்ப்போனும், வியாபாரத்திலும், வேளாண்மையிலும் ஈடுபடுவோனும் ஆகிய பிராஹ்மணன், வைஸ்யன் எனப்படுவான். அதாவது பிராஹ்மண ரூபத்தில் உலவும் வைஸ்யன்.

 

லௌகிகே கர்மணி ரதஹ பசூனாம் பரிபாலகஹ

வாணிஜ்ய க்ருஷி கர்தா யஹ ஸ விப்ரோ வைஸ்ய உச்யதே

சாணக்கிய நீதி 11-13

 

xxxx

கள், மாமிஸம் விற்போர்

 

அரக்கு, எண்ணை, சாயப் பொருட்கள் (அவுரி), குங்குமப் பூ, தேன், கள், மாமிஸம் விற்போர் சூத்திரர்கள் என்று கருதப்படுவர்

லாக்ஷாதி தைல நீலானாம் குசும்ப மது ஸர்பிஷாம்

விக்ரேதா மத்ய மாம்ஸானாம் ஸ விப்ர சூத்ர உச்யதே

சாணக்கிய நீதி 11-14

xxx

 

  

ருத்ராக்ஷப் பூனை

மற்றவர்களின் வேலைகளில் இடையூறு உண்டாக்கும் , சுய நலமும், அகந்தையும் பொறாமையும், கொடூரமும் உள்ள பிராஹ்மணன் — பூனை எனப்படுவான்

(இது பஞ்ச தந்திரக் கதையிலும் மாமல்லபுர சிற்பத்திலும் வரும் ருத்ராக்ஷப் பூனை கதையாகும்; ருத்ராக்ஷப் பூனை பற்றிய எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

பரகார்ய விஹந்தா ச தாம்பிகஹ ஸ்வார்தசாதகஹ

ச்சலீ த்வேஷீ ம்ருதுஹு க்ரூரோ விப்ரோ மார்ஜார உச்யதே

 

சாணக்கிய நீதி 11-15

xxx

 

மிலேச்சன்

நீர்த்தேக்கத்தையும், குளத்தையும், கண்மாய்களையும், தோட்டங்களையும், கோவில்களையும் அழிக்கும் பிராஹ்மணன் மிலேச்சன் (காட்டுமிராண்டி, பர தேஸி, வெளி நாட்டுக்காரன்) எனக் கருதப்படுவான்.

 

மிலேச்சர்கள் என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பயிலப்படுகிறது (முல்லைப் பாட்டு, வரி 66); பாரதியாரும், இந்து மத விரோத முஸ்லீம்களை மிலேச்சர் என்று அழைக்கிறார்; சிலப்பதிகாரத்திலும் இத்தாலி நாட்டவர்கள் (ரோம் நகர ஆட்சி) யவனர்கள்– மிலேச்சர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவைப் பிரித்தாள வந்த வெளிநாட்டினர், இது திராவிடர்களைக் குறிக்கும் என்று எழுதி வைத்தனர்; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது இந்து தர்ம விரோதிகளும், கொள்ளையர்களும் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாணக்கியனும் அணைகளை உடைப்பவர்களையும் புறச்சூழலெதிரிகளையும் கோவில்களை உடைப்போரையும் மிலேச்சர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் நிலங்களை, கோவில் நந்த வனங்களை அபகரித்தோரையும், சுயநலத்துக்காக அழித்தோரையும் சாணக்கியன் இந்தக் கடுமையான சொல்லைப் பிரயோகித்து சாடுகிறான்.

 

வாபீ கூப தடாகானாம் ஆராமஸுரவேஷ்மனாம்

உச்சேதனே நிராசங்கஹ ஸ விப்ரோ ம்லேச்ச உச்யதே

சாணக்கிய நீதி 11-16

 

xxxx

சண்டாளன்

கோவிலுக்கும் குருவுக்கும் கொடுக்கப்பட்ட பணத்தைத் திருடும், மற்றவர்களின் மனைவியரை அனுபவிக்கும், இது போன்ற அடிமட்ட மக்களுடன் கொஞ்சிக் குலாவும் பிராஹ்மணர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

 

ராவணன் 50 சதவிகித பிராஹ்மணன்; அவன் மாற்றான் மனைவியைத் தொட்டதால் அழிந்தான். வெளி நாட்டினர் நான்கு ஜாதிகளுக்கு வெளியே இருந்தாரும் திராவிடர்களும் சண்டாளர்கள் என்று சொல்லி மதப் பிரசாரம் செய்தனர். ஆனால் நான்கு ஜாதிகளுக்குப் புறம்பானவர்கள் சண்டாளர்கள் அல்ல; திருடர்களும், பெண் பித்தர்களும், கீழ் மட்டத்தில் பன்றிகள் போல உழலுவோரும் மட்டுமே– பிராஹ்மணர்களாக இருந்தாலும்– அவர்கள் சண்டாளர்கள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பகர்ந்தான் சாணக்கியன்.

 

இது வெளிநாட்டுக்கரகளின் சதியை அம்பலப்படுத்துகிறது

 

தேவ த்ரவ்யம் குரு த்ரவ்யம் பர தாராபிமர்ஷணம்

நிர்வாஹக ஸர்வபூதேஷு விப்ர சாண்டால/ள உச்யதே

 

சாணக்கிய நீதி 11-17


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxx SUBHAMxxxx

 

 

 

 

 

விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள் (Post No.4776)

Date: 23 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5- 44am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4776

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

23-2-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு கடைசிக்) கட்டுரை

2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!

Robots in 2018 Winter Olympics

.நாகராஜன்

“மற்ற எல்லா போட்டிகளும் தனிப்பட்ட நபர்களின் சாதனை. ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுக்களோவெனில் அனைவருக்கும் உரியவை”. – ஸ்காட் ஹாமில்டன்

2018 விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் பிப்ரவரி 8ஆம் தேதி ஆரம்பித்து 25ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் போட்டிகள் தென் கொரியாவின் தலைநகரான சியோலுக்குக் கிழக்கே 80 மைல் தொலைவில் உள்ள பியாங்சாங் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. 35000 பேர்கள் வசதியாகப் பார்க்கக் கூடிய ஸ்டேடியம் இங்கு உள்ளது. அத்துடன் எந்தப் போட்டி நடக்கும் இடமும் 30 நிமிடத்தில் டிரைவ் செய்து போகும் அளவுள்ள தூரத்திலேயே உள்ளது. 3894 விளையாட்டு வீரர்கள் தங்கும் வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2900  பேர் தங்க வசதியாக அருகிலேயே இன்னொரு தங்குமிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டு பிரான்ஸில் தான் முதல் விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன.இந்த இடைவிடா போட்டியில் இப்போது விண்டர் ஒலிம்பிக் நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது!

தென்கொரியாவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1988இல் நடந்தது. இப்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக் இங்கு நடைபெறுகிறது! 15 வகை விளையாட்டுகளில் 102 நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்காக 259 செட் மெடல்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த மெடல்கள் தாம் கனமானவை. தங்க மெடல் 1.29 பவுண்ட்; வெள்ளி மெடல் 1.28 பவுண்ட்; வெங்கல மெடல் 1.09 பவுண்ட்.

மெடலின்  முன் பக்கம் ஒலிம்பிக்கின் வளையங்கள் கொண்ட சின்னம் இருக்கும். பின் பக்கம் குறிப்பிட்ட விளையாட்டு, ஒவ்வொரு நிகழ்வின் பெயர் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்!

சென்ற பத்தாண்டுகளில் நடந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் ஆகும் செலவு 890 கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. அதிகமாக ஆன செலவு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தான்! 1500 கோடி டாலர்கள் செலவாயிற்று! தென்கொரியாவில் நடக்கும் இப்போதைய ஒலிம்க் போட்டிகளுக்கு ஆகும் உத்தேச செலவு 1000 கோடி டாலர்கள்!

ஆனால் வருமானமும் உண்டு. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைகள் உள்ளிட்டவை வருமானத்திற்கான வழிகள்!

தென்கொரியாவில் நடைபெறும் விண்டர் ஒலிம்பிக்கின் முக்கிய கதாநாயகன் ரொபாட் தான்!

 

ஏற்கனவே தென்கொரியாவில் விமானநிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியை ரொபாட்டுகள் தான் மேற்கொண்டுள்ளன! பல இடங்களில் அவைகளே ஆங்கிலத்தைப் பயிற்றுவிக்கின்றன. 2016இல் தென் கொரியாவில் இருந்த ரொபாட்டுகளின் எண்ணிக்கை 41000! இப்போதோ இன்னும் அதிகம்!

ஒலிம்பிக் விளையாட்டில் 85 ரொபாட்டுகள் தம் திறமைகளைக் காண்பிக்கும். ஒலிம்பிக் தொப்பிகளை அணிந்து  47 அங்குல ரொபாட்டான ஹ்யூபோ டிசம்பரில் ஒரு காரை ஓட்டிச் சென்று காண்பித்தது.  ஒலிம்பிக் டார்ச்சைக் கொண்டு சென்று ஒரு சுவரை ஒரு குத்து குத்தித் தனது வலிமையை அது காண்பித்தது! இதை உருவாக்கியவர் பேராசிரியர் ஓ ஜுன் ஹோ. அவரிடம் இந்த டார்ச்சை ரொபாட் கொடுத்தது. இது இரும்பு மனிதன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட அழிக்க முடியாத ரொபாட் என்பது குறிப்பிடத்தகுந்தது!

ஸ்கீயிங் போட்டியில் ரொபாட்டுகளும் கலந்து கொள்ளும் என்பது சுவையான் ஒரு செய்தி.

ரொபாட்டுகள் கொரிய மொழியில் பேசுவதோடு மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும் திறன் உடையவை. கொரிய மொழி, சீனம், ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவை!

சூஹோரங் என்ற வெள்ளைப்புலியையே தென்கொரியா இந்த ஒலிம்பிக்கில் தனது அடையாளச் சின்னமாக அமைத்துள்ளது. சூஹோ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.ரங் என்றால் வெள்ளைப்புலி.

வெள்ளைப்புலி தான் தென்கொரியர்களுக்குப் பிடித்தமான பாதுகாக்கும் மிருகம்!.  ரொபாட்டுகள் வெள்ளைப்புலி முகவணியைக் கொண்டு ஆடும், பேசும்.

சுத்தப்படுத்துதல் என்பது ரொபாட்டுகளுக்குக் கைவந்த கலை. பிரஷை கையில் எடுத்துக் கொண்டால் எந்த இடமும் சுத்தம் தான்! ஒரு  மணி நேரத்தில் 900 சதுரமீட்டர் பரப்பைச் சுத்தம் செய்ய வல்லவை இவை! குப்பைகளை எடுக்கும்; குப்பைத் தொட்டியில் போடும் – யார் மீதும் மோதாமல்!

பெயிண்டிங் ரொபாட்டுகள் கலைவண்ணம் காணும் ரொபாட்டுகள். தேவையான டிசைனைச் சொன்னால் வரைந்து விடும். ஆயிரம் வண்ணங்களின் கலவை இவற்றிற்குத் தெரியும் என்பதோடு இவை 20 மீட்டர் உயரம் அளவு பணி செய்யும் திறமை படைத்தவை.6 of

இத்துடன் ரோபோ பிஷ் என்று ஒரு வகை ரொபாட்டுகள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நீருக்கு அடியில் நீந்தும். ஐந்து மீட்டர் ஆழம் வரை டைவ் அடிக்கும் இவை ஒரு அக்வேரியத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது வீரர்கள் கவலைப்படுவது  மனிதனுக்கு மனிதன் போட்டி போடும் நிலையிலிருந்து மனிதன் – ரொபாட் என்ற ரீதியில் போட்டி போட வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடுமோ என்பது தான்!

அப்படிப்பட்ட ஒரு காலத்தில் வின்னர் யார்? நீங்களே எளிதில் ஊகிக்கலாம்.

வந்து விட்டது ரொபாட்டுகளின் காலம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஸ்டீபன் மக்னிக்கும் (Stephen Macknik) சூஸனா மார்டினெஸ் காண்ட் (Susana Martinez – Conde) ஆகிய இருவரும் நியூரோ ஸயின்ஸில் பெரிய விஞ்ஞானிகள். 1997ஆம் ஆண்டு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலில் இருவரும் சந்தித்தனர். விஷுவல் கார்டெக்ஸ் (Visual Cortex) எனப்படும் கட்புலப் புறணியின் (perception) அகப்பார்வை பற்றி இருவரும் ஆராய்ந்து வந்தனர்.இருவரின் ஆராய்ச்சியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இருவரையும் லண்டனில் உள்ள யுனிவர்ஸிடி காலேஜ் அழைத்தது.

இருவரும் நெருக்கமாகப் பழகினர். ஒருவேளை நாம் டேடிங் செய்கிறோமா என்றார் ஸ்டீபன். ‘டேடிங்கா! சந்தேகமாக இருக்கிறது; அப்படி ஒன்றும் இருக்காது’ என்றார் சூஸனா. ஆனால் தொடர்ந்த பழக்கத்தால் இருவரும் மணம் புரிய நிச்சயித்தனர்.

 

 

கண் இயக்கம் பற்றியும் மூளை எப்படி ஒளியின் பிரகாசத்தை உணர்கிறது என்பதைப் பற்றியும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வுகள் கண் பார்வை பற்றிய பல உண்மைகளை விளக்கியதால் அவர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர்.

 

 

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் அறிவியல் பார்வையிலும் அறிவிலும் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளோம்.அநத உறவு எங்கள் இதய ஆழத்திலிருந்து எழுகின்ற ஒன்று.”என்கிறார் சூஸனா.

 

காதலுக்குக் கண்ணில்லை என்ற முதுமொழி ஒரு புறம் இருக்க கண் பார்வை ஆராய்ச்சியே காதலை உறுதி செய்து இருவரை இணைய வைத்த அதிசய சம்பவம் அறிவியலிலும் இப்படி உண்டு!

xxxx

 

 

4-3-2011 இதழில் தொடங்கிய அறிவியல் துளிகள் தொடர் இந்த இதழுடன் ஏழு ஆண்டுகளை முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தருணம் இது.

பாக்யா ஆசிரியரும் தமிழர்களின் இதயம் கவர்ந்த டைரக்டருமான திரு கே.பாக்யராஜ் அவர்களின் ஆக்க பூர்வமான சிந்தனையும் ஊக்கமுமே இதைச் சாத்தியமாக்கியுள்ளது. தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்கி வரும் வாசகர்களே அறிவியல் துளிகளின் பலம். அழகுற நாளுக்கு நாள்  நிறைந்த உள்ளடக்கத்துடனும் கூடுதல் வடிவமைப்புப் பொலிவுடன் மிளிரும் பாக்யா நிச்சயமாக தமிழ் பத்திரிகைகளில் கமர்ஷியல் சிந்தனையின்றி அறிவு பூர்வமாகத் திகழும் வித்தியாசமான பத்திரிகை என்பதை அனைவரும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தத் தருணத்தில் பாக்யா ஆசிரியருக்கும், பாக்யா இதழ் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றும் பாக்யா குழுவினருக்கும், தொடர்ந்து உற்சாக ஆதரவை நல்கி வரும் வாசகப் பெருமக்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எட்டாம் ஆண்டில் இன்னும் பல சுவையான அறிவியல் செய்திகளைப் பார்ப்போம். நன்றி.வணக்கம்.

*****

 

Good and Bad Brahmins: Chanakya’s Definition! (Post No.4775)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 15-28

 

Written by London swaminathan

 

Post No. 4775

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

Various Types of Brahmins- Chanakya Niti

 

Chanakya classifies Brahmins according to the work they do and the virtues they possess. Some are called Rishis and others are called Mlechchas (Foreigners, barbarians)

 

A Brahmin who living life in a forest all times performs Sraadhdha with fruits and roots growing in untilled land every day is called a Rishi

11-11

akrusshta pala muulena vanavaasarataha sadaa

kurute aharahaha sradhdham rushi  vipraha sa ucyate

11-11

xxxx

 

One Meal a Day!

 

A Brahmin who is satisfied with only one meal and keeps himself engaged continuously in six activities and has coition with his wife in the period favourable for conception is called Dwija.

11-12

eka ahaarena santushtaha shatkarma nirataha sadaa

rtukaalaabigaamii ca sa vipro dwija ucyate

11-12

 

(Six activities of Brahmins: Teaching, Studying, Performing sacrifice, Helping others to perform sacrifice, Giving  charity and receiving charity)

xxxx

Vaisya Brahmana

 

A Brahmin who keeps himself busy in worldly affairs, looks after animals and engages himself in trade and agriculture is called a Vaisya.

laukike karmani rataha pasuunaam paripaalakaha

vaaniijya krsi kartaa yaha saha vipro vaisya ucyate

11-13

xxx

A Brahmin who sells lac and the like, oil, indigo, saffron, honey, ghee, liquor and meat is called a Sudra.

11-14

laakshaaditaila niilaanaam kusumba madhu sarpishaam

vikrato madhya maamsaanaam sa vipraha suudra ucyate

 

xxx

Brahmin Cat

A Brahmin who puts spokes in the form of others, is hypocritical, selfish, deceitful, envious, gentle and cruel is said to be Maarjaara, a he cat

11-15

parakarya vihantaa ca daampikaha svaartha saadhakaha

chalii dveshii mruduhu kruuro vipro maarjaara uchyate

11-15

xxx

 

Mlechcha/ Foreigner Brahmin!

A Brahmin who has no compunction in destroying an oblong reservoir of water, well and tank, garden and temple is called a Mleccha.

11-16

vaapii kuupa tadaagaanaam aaraamsu ravesmanaam

uchcheedane niraasankaha sa vipro mlechcha uchyate

11-16

 

(Real meaning of Mlecha is reflected in it; Foreigners distort the meaning  and attribute it to Dravidians, aborigines etc. But Mlechas are foreigners who destroyed Hinduism and India; in short Anti Hindus are called Mlechas; it is in Sangam Tamil literature as well.)

 

xxxx

Chandala/ outcaste Brahmin

A Brahmin who steals the money given as an offering to gods as also to teachers, outrages the modesty of the wives of others, and can get along with all kinds of people is called Caandaala

11-17

devadravyam  gurudravyam paradaaraabhimashanam

nirvaahaha sarvabuteshu viprascaandaala uchyate

11-17

Foreigners always distort the meaning of Chandala and the real meaning is Anti Social elements, immoral elements and thieves.

 

xxx

 

Feed the Brahmins

That is the food which is the left over of the Brahmins, friendship is that which is cultivated for the sake of others, wisdom is that which does not commit sin (= Which does not allow one to commit sin), Dharma is that which is followed with no show.

15-8

tad bhojanam yad dwija bukta sesham

tat sauhrudam yat kriyate parasmin

saa praakjnataa yaa na karoti papam

dambam vinaa yaha kriyate sa dharmaha

15-8

Since Chanakya and Manu insist that Brahmins should not save or accumulate money and ask them to beg for ever, Chanakya asks everyone to feed them; unless Brahmins are in begging condition, they would be lazy and woudn’t  go to any distant place for performing Yagas and Yajnas. If they are in begging condition, they would happily travel from village to village for getting Dakshina (fees). They are not allowed to save money like we save today.

 

Looking at the strict conditions Chanakya places, not many people can claim Brahminship today!

 

Source Book for verses: Canakyaniti, Translated by Satya Vrat Shastri

 

xxx SUBHAM xxxx

 

 

 

 

சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் – சாணக்கியன் செப்பியது (Post No.4774)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-19 am

 

Written by London swaminathan

 

Post No. 4774

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் – சாணக்கியன் செப்பியது (Post No.4774)

 

சாணக்கியன் என்னும் பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். அவன் பல வியப்பான செய்திகளைச் சொல்லுகிறான். அவன் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த போதும் ஒரு குடிசையில் வாழ்ந்தான் அவன் பிராமணர்கள் பற்றி விளம்பும் பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் பாடல்கள்–

 

இதோ சில பாடல்கள்:

 

 

மயில்களும் பிராஹ்மணர்களும்

துஷ்யந்தி போஜனே விப்ரா மயூரா கணகர்ஜிதே

சாதவஹ பரசம்பத்தௌ கலஹ பரவிபத்திஷு

 

சாணக்கிய நீதி 7-9

 

பிராமணர்கள், சாப்பாட்டில் மகிழ்ச்சி அடைகிறார்கள்;

மயில்கள், இடி முழக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன;

நல்லவர்கள், மற்றவர்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவர்;

கெட்டவர்களோ, ஏனையோரின் கஷ்டத்தில் கூத்தாடுவர்.

xxxx

 

 

பிராஹ்மணன் ஒரு மரம்!

பிராஹ்மணன் ஒரு மரம்; அந்த மரத்தின் வேர்கள்- காலை, மதியம், மாலையில் செய்யும் த்ரி கால சந்தியா வந்தனம் (காயத்ரீ மந்திரம்);

வேதங்கள், அந்த மரத்தின் கிளைகள்;

ஆன்மீகச் செயல்பாடுகள் (யாக யக்ஞக்கள்) அதன் இலைகள்;

ஆகையால் மரத்தின் வேர்களைப் பாதுகாருங்கள்;

வேர்கள் (சந்தியா வந்தனம்) அழிந்தால் கிளையும் இல்லை; இலையும் இல்லை!

 

விப்ரோ வ்ருக்ஷஹ தஸ்ய மூலம் ச சந்த்யா

வேதாஹா சாகா தர்ம கர்மாணி பத்ரம்

தஸ்மாத் மூலம் யத்னதோ ரக்ஷணீயம்

ச்சின்னே மூலே நைவ சாகா ந பத்ரம்

 

சாணக்கிய நீதி 10-13

 

xxxxx

 

பிராமணர்களின் பலம் அறிவு

 

Picture of Brain from Wellcome Centre, London

 

பாஹுவீர்யம் பலம் ராக்ஞோ ப்ராஹ்மணௌ ப்ரஹ்மவித் பலீ

ரூப  யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம்

 

சாணக்கிய நீதி  7-11

 

புஜ பலம் (தோள் வலி) அரசனுக்கு பலம்;

வேதத்தில் வல்ல பிராஹ்மணனுக்கு அறிவு பலம்;

அழகு, இனிமை, இளமை ஆகியன பெண்களுக்கு ஈடு இணையற்ற பலம்

 

xxxx

 

Picture from Ratnagiri, by S Sivam

சொர்கத்துக்கு வழி

 

சொர்கத்துக்குப் போவோரின் நான்கு அடையாளங்கள் பூமியிலேயே

அவர்களின் செயல்பாட்டில் தெரிந்துவிடும் அவை யாவன:

அறப் பண்பு (தர்ம சிந்தனை), இனிய பேச்சு, கடவுள் வழிபாடு, பிராமணர்களுக்கு அன்னமிடுதல்

 

ஸ்வர்க  ஸ்திதானாம் இஹ ஜீவலோகே

சத்காரி சின்னானி வசந்தி தேஹே

தானப்ரஸங்கோ மதுரா ச வாணீ

தேவார்ச்சனம் ப்ராஹ்மணதர்பணம் ச

 

சாணக்கிய நீதி   7-16

xxx

திருப்தி வேண்டும்

 

திருப்தி அடையாத பிராஹ்மணர்கள்,

மன நிறைவு அடையாத மன்னர்கள்,

வெட்கப்படும் விபசாரிகள்,

வெட்கமே இல்லாத குடும்பப் பெண்கள்

ஆகிய நால்வரும் விளங்கமாட்டார்கள்.

 

அசந்துஷ்டா த்விஜா நஷ்டா சந்துஷ்டாஸ்ச மஹீபுஜஹ

ஸலஜ்ஜா கணிகா நஷ்டா நிர்லஜ்ஜாஸ்ச குலாங்கணாஹா

 

சாணக்கிய நீதி 8-18

 

xxx

 Picture by Lalgudi Veda

பிராஹ்மணன் அறிஞனா? இல்லையா?

 

பிராஹ்மணர்களின் அறிவுக்கு சான்றும் வேண்டுமோ!

வானத்தில் தூதர் யாரும் இல்லை;

எவரும் இதைப் பற்றிப் பேசவும் இல்லை;

முன்னரும் யாரும் சொல்லவில்லை;

எவரையும் தொடர்பு கொள்ளவுமில்லை;

வானத்தில் நிகழப்போகும் சூர்ய, சந்திர கிரஹணங்களை

முன்கூட்டியே சொல்கிற பெரிய பிராஹ்மணனை

அறிஞர் என்று சொல்லவும் வேண்டுமா?

 

தூதோ ந சஞ்சரதி கே ந சலேச்ச வார்தா

பூர்வ ந ஜல்பிதம் இதம் ந ச ஸங்கமோஸ்தி

 

வ்யோம்னி ஸ்திதம் ரவி சசி க்ரஹணம் ப்ரசஸ்தம்

ஜானாதி யோ த்விஜவரஹ ஸ கதம் ந வித்வான்

 

சாணக்கிய நீதி 9-5

 

xxx

 

 

பிராஹ்மணரைத் திட்டுவோர் குடும்பத்தோடு……

 

தன்னைத்தானே வெறுப்பவன் சாவான் (தற்கொலை);

மற்றவனை வெறுப்பவன் செல்வத்தை இழப்பான்;

மன்னனை (ஆட்சியாளரைப்) பகைப்பவன் அழிவான்;

பிராஹ்மணனை வெறுப்பவன் குடும்பத்தோடு அழிவான்.

 

சாணக்கிய நீதி 10-11

ஆத்மத்வேஷாத் பவேன் ம்ருத்யுஹு பரத்வேஷாத் தன க்ஷயஹ

ராஜத்வேஷாத் பவேன் நாசோ ப்ரஹ்மத்வேஷாத் குல க்ஷயஹ

 

(இது சாணக்கியனின் சுய அனுபவத்தில் கண்ட உண்மை; சாணக்கியன் ஒரு அவலட்சணமான முகம் உடைய ப்ராஹ்மணன்; அப்போது பிராஹ்மணர்களைக் கிண்டல் செய்யும் நந்தர்கள் ஆண்டு வந்தனர். ஒரு முறை அரண்மனை விசேஷத்தில் முதல் பந்தியில் கறுத்த நிறமுள்ள, அசிங்கமாமன முகம் உடைய பிராஹ்மணனைப் பார்த்த, நந்த வம்சத்தரசன், அவரை பாதி சாப்பிடும் போது தர தர வென்று வெளியே இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டான். அப்போது குடுமியை அவி ழ்த்துப் போட்டு, உனது ஆட்சியை வேர் அறுக்கும் வரை இந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் வீர சபதம் செய்தான்; மயில் வளர்க்கும் மூரா என்ற பெண்மணியின் மகனான சந்திர குப் தனை அழைத்து, பயிற்சி கொடுத்து, மாபெரும் படையை உருவாக்கி நந்த வம்சத்தின் 9 மன்னர்களையும் அடியோடு அழித்தான். அலெக்ஸாண்டர் படைகள் நடுங்கக்கூடிய அளவுக்கு மகத சாம்ராஜ்யத்தின் படைபலம் இருந்ததை பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் எழுதிச் சென்றனர். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்து இருந்ததால் இதைச் சாதிக்க முடிந்தது; பின்னர் பிராமணர்கள் செல்வம் சேர்க்கக்கூடாது என்ற விதியின்படி குடிசையில் வாழ்ந்தான். சுயநலம் அற்றவரைக் கண்டு உலகமே நடுங்கும் அல்லவா? சாணக்கியன் என்றால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்; எவருக்கும் கட்டளை இடும் தகுதி அவனுக்கு இருந்தது.

 

Brahmins at Pillayarpatti Temple

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxx SUBHAM xxx

 

 

 

 

புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு (Post.4773)

Date: 22 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-53 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4773

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஒன்பதாவது உரை

 

  1. 9. உத்வேகமூட்டும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு ச.நாகராஜன்

 

2016ஆம் மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்த்துக்கல் நாடு ஒரு பெரிய சாதனையைச் செய்தது. மே மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி முடிய நாடு முழுவதும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியால் மட்டுமே இயங்கியது.

இதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து இப்படிப்பட்ட எரிசக்தியினால் ஒரு நாடு முற்றிலுமாக இயங்கமுடியும் என்பதையும் நிரூபித்தது.

 

 

சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் அல்லது எரிசக்தியையே புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி அல்லது ஆற்றல் என்று கூறுகிறோம்.

 

 

காற்றினாலும், சூரிய ஒளியாலும் ஹைட்ரோ – ஜெனரேடட் மின்சக்தியாலும் ஒரு நாடு திறம்பட இயங்க முடியும் என்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து சோலார் பவர் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜேம்ஸ் வாட்ஸன், “இப்போது மிகவும் அதிசயக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு எதிர்காலத்தில், மிகவும் சாதாரணமான அன்றாட நிகழ்வு ஆகி விடும்” என்கிறார்.

 

நமது நாட்டிலும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்களைச் செய்வதைப் பார்க்க முடிகிறது.

 

 

ஆனால் இந்த விஞ்ஞான முன்னேற்றத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் ஏராளமான சூரிய ஒளியை, நாடு முழுவதும் வருடத்தில் நீண்ட நாட்கள் கொண்டிருக்கும் இந்தியா, மிகச் சிறந்த புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தும் வல்லரசாக, உயரும்.

புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலால் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்கள் ஏராளம் உள்ளன.

 

 

  • பூமியை வெப்பமயமாக்கும் நச்சுப் புகை வெளியேற்றம் முற்றிலுமாகக் குறையும் அல்லது பெரிய அளவில் குறைந்து விடும்.
  • உலக மக்களின் ஆரோக்கியம் மிகப் பெரிய அளவில் மேம்படும். நிலக்கரி மற்றும் இயற்கை வாயு தொழிலகங்களினால் காற்றிலும் நீரிலும் ஏற்படும் மாசின் அளவு குறையும். சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசினால் சுவாசக் கோளாறுகளும், மூளை சம்பந்தமான வியாதிகளும், மாரடைப்பும், கான்ஸரும் ஏற்படுகின்றன. இப்படி புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலின் பயன்பாடு இளவயதில் இறப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும். தொழிலகங்களில் மிக அரிதான வேலை மணி நேர இழப்பையும் தவிர்க்கும்.

இவற்றை உணர்ந்து புதுப்பிக்கப்படக் கூடிய

ஆற்றலைப் பெரிதளவு பயன்படுத்துவோம்; பூமியை வெப்பமயமாக்கும் அபாயத்திலிருந்து காப்போம்!

***