யதாத்ரி நரசிம்மர் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 21
ஆந்திரத்தில் தெலுங்கானாவிலும் புகழ்பெற்ற ஐந்து நரசிம்மர் கோவில்களில் ஒன்று யதாத்ரி நரசிம்மர் கோவில்.
எங்கே இருக்கிறது?
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 65 கி.மீ தொலைவில் இருக்கிறது கோவிலின் பெயர் லட்சுமி நரசிம்ம சுவாமி.
ஊரின் வேறு பெயர்- யதாத்ரிகுட்ட .
பெரும்பாலான நரசிம்மர் போல இவரும் குன்றின் மீது அமர்ந்து தரிசனம் செய்கிறார்.
சிறப்புகள் என்ன ?
இந்தக் கோவிலை தெலுங்கானாவின் திருப்பதி என்று அழைக்கிறார்கள். மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் புகழ்பெற்ற திருப்பதி பாலாஜி கோவில் ஆந்திராவுக்குள் போய்விட்டது ஆகவே தெலுங்கானா அரசு கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக கொடுத்து இதை உருவாக்கியது .
திருப்பதியில் ஏழு மலைகள் உள்ளன ; யதாகிரியில் ஒன்பது குன்றுகள் இருக்கின்றன .
இங்கு விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மவ அவதாரம் ஐந்து கோலங்களில் உள்ளன . அவையாவன :
ஜ்வாலா நரசிம்மர்
கண்டபேருண்ட நரசிம்மர்
யோகானந்த நரசிம்மர்
உக்ர நரசிம்மர்
லக்ஷ்மி நரசிம்மர்
இந்தக் கோவிலை அண்மையில் புதுப்பித்துள்ளார்கள்
தல வரலாறு என்ன சொல்கிறது ?
ரிஷ்ய ச்ருங்க முனிவரின் மகன் யதா தவம் செய்தவுடன் நரசிம்மர் ஐந்து உருவங்களில் காட்சி தந்தார். அதே ஐந்து முகங்களுடன் குன்றின் மீது எல்லோருக்கும் தரிசனம் தரவேண்டும் என்று அவர் வேண்டியதை பெருமாளும் ஏற்றார் .
இது ஒரு குடைவரைக் கோவில். ஒரு பெரிய குகையில் நரசிம்மர் காட்சி தருகிறார்.
ஜ்வாலா நரசிம்மர் ஒரு பாம்பின் வடிவத்திலும், யோக நரசிம்மர் ஒரு தியான புருஷன் வடிவிலும் தரிசனம் தருகின்றனர். முக்கிய சந்நிதியில் லக்ஷ்மி நரசிம்மர் வெள்ளி கவசத்துடன் காட்சி அளிக்கிறார்
வலதுபுறம் அனுமார் கோவில் இருக்கிறது. அங்கே மலைப் பாறையில் பெரிய பிளவு இருக்கிறது
அங்குதான் கண்ட பேருண்ட நரசிம்மர் தோன்றியதாக ஐதீகம்
(கண்ட பேருண்ட என்பது ஒரு புராண கால பறவை. அதற்கு ஓருடல் ; இரு தலை; இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகளிலும், நாணயங்களிலும் அரசாங்க சின்னங்களிலும் காணலாம். இரண்டு கால்களால் இரண்டு யானைகளைத் தூக்கும் சக்தி வாய்ந்த இந்தப் பறவையை விஜய நகர மன்னர்கள் நாணயங்களிலும் சின்னங்களிலும் பொறித்தனர்.மைசூர் மஹாராஜா சின்னங்களில் இப்போதும் பயன்படுகிறது )
புதிய கோவில்
பழைய கோவில் இருந்த இடத்தில் மிகப் பெரிய புதிய கோவில் ஒன்றை 2022-ல் கட்டி முடித்தார்கள். ஏழு கோபுரங்கள், பல மண்டபங்கள், கல்யாண மண்டபம், 12 ஆழ்வார்கள் உள்ள தூண்கள் ஆகியன நிறுவப்பட்டன.
தென் கலை சம்பிரதாயக் கோவில் இது
ஸ்தபதிகள் கோவில் கட்டுவதற்கு மூன்றுவித கற்களில் சிலைகளைச் செய்வார்கள் .
கிருஷ்ண சிலா அல்லது புருஷ சிலா கற்களில் ஆண் தெய்வங்களையும், ஸ்த்ரீ சிலா கற்களில் தேவி, அம்மன் சிலைகளையும் வடிப்பார்கள். நபும்சக (அலி) பாறைகளை தரைகளில் பாவுவார்கள். அதே முறை இங்கே பின்பற்றப்பட்டுள்ளது காகதீய வம்சத்தினர் கருங்கற் பாறைகளையும் பயன்படுத்தினர்; இதில் சிறு துளைகள் இருப்பதால் தயிர், பால் அபிஷேகத்தின் போது கற்கள் இருகி வலுப்படும் என்பது சிற்பிகள் கண்ட உண்மை.
நேரில் பார்க்கப் போக முடியாவிட்டால் யூ டியூபில் காணுங்கள்.
–SUBHAM—
TAGS- யதாத்ரி நரசிம்மர் கோவில், ஆந்திர மாநிலத்தின், 108 புகழ்பெற்ற கோவில்கள், PART- 21
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா! – 1
ச. நாகராஜன்
மனிதனுக்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதைக் கண்டுபிடித்ததோடு உலகையே ஒளிவெள்ளத்தால் நிரப்பிய ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? மிகப் பெரும் விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா தான் அவர்!
பிறப்பும் இளமையும்
க்ரோஷியா என்று இப்போது அழைக்கப்படும் நாட்டில் ஸ்மில்ஜன் என்ற ஒரு சிறு கிராமத்தில் 1856-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் நாளன்று நிகோலா டெஸ்லா பிறந்தார். இவரது முன்னோர்கள் செர்பியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். இடைவிடாத போரினால் ஒரே உக்கிர பூமியாக விளங்கிய நாட்டில் போரின் சித்திரவதைகளையும் கொலைகளையும் பார்த்தவாறே அவர் வளர்ந்தார்.
டெஸ்லா பிறந்த அதே நேரத்தில் ஒரே இடியும், பளீர் பளீர் என்ற மின்னலுமாக வானம் ஒளிர்ந்தது. அவரை பிரசவம் பார்த்த நர்ஸ், இந்த வேளையில் பையன் பிறந்திருக்கிறானே, ‘இவன் இருள் குழந்தையாக இருப்பான்’ என்றார். ஆனால் உடனே இதை மறுத்த டெஸ்லாவின் தாயார், “இல்லை, இல்லை, வானம் ஒளிர்கிறதே, அதனால் இவன் ஒளி மயமாக விளங்குவான் என்றார். அவர் வாக்கு அப்படியே பலித்தது! மின்னல் ஒளி மன்னனாகவே விளங்கினார் டெஸ்லா!
டெஸ்லாவின் தந்தை மிலுடின் உள்ளூர் சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். பல மொழிகளைப் பேசவல்ல அவர் ஒரு கவிஞரும் கூட. அவரது தாயார் ஜோவ்கா தான், புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்கும் அவரது திறமையைக் கண்டு அதை ஊக்குவித்தார். தாயாருக்கு சமையலுக்கு உதவியான புது சாதனங்களை டெஸ்லா செய்து தந்தார்.
அவரது புத்திகூர்மையைக் கண்டு வியந்த தந்தை அவருக்கு நினைவாற்றல் உத்தி உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். 1863-ல் குதிரை ஒன்று அவரது சகோதரனைத் தாக்கவே அதில் அவன் இறந்து விட்டான். இதனால் மிகவும் வருந்திய குடும்பம் காஸ்பிக் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தது.
அங்கு டெஸ்லாவை அனைவரும் அறிவாளி என்றே அழைத்தனர். பின்னர் ஆஸ்திரியா பாலிடெக்னிக்கில் பயின்றார். அவரது தந்தை இறக்கவே அவர் ஹங்கேரிக்குச் சென்று புடாபெஸ்ட் நகரில் ஒரு டெலிபோன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதிலிருந்தே டைரக்ட் கரண்ட் (D.C.) என்பதை விட ஆல்டர்னேடிங் கரண்ட் (A.C) மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை அவர் உணர்ந்தார். அதில் பல சோதனைகளைச் செய்து புதியனவற்றை இனம் கண்டார். அந்த டெலிபோன் கம்பெனி விற்கப்படவே அவர் பாரிஸுக்குச் சென்று அங்குள்ள எடிஸனின் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார்.
அமெரிக்கா வருகை
டெஸ்லா 28-ம் வயதில் 1884, ஜூன் 6-ம் தேதி நியூயார்க்கிற்கு வந்தார். அவர் பையில் இருந்தவை நான்கு செண்ட் நாணயம், ஒரு சூட், நண்பர் ஒருவரின் முகவரி. அவர் நேராக எடிஸனைச் சென்று சந்தித்தார். எடிஸன் தன் முன்னே நின்று கொண்டிருந்த நெடிய உருவத்தைப் பார்த்தார். அவரிடம் டெஸ்லா ஒரு சிறிய குறிப்புள்ள பேப்பரைக் கொடுத்தார். அதில் புடாபெஸ்டில் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த முதலாளி எடிஸனுக்கு தனது குறிப்பை எழுதி இருந்தார் இப்படி: “எனக்கு இரண்டு பெரிய மனிதர்களைத் தெரியும். ஒருவர் நீங்கள். இன்னொருவர் இந்த இளைஞர்”
உடனே எடிஸன் அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். உழைப்பு, உழைப்பு, கடுமையான உழைப்பு. எடிஸனுக்கு டி.சி மோட்டார் மீது அடங்காத பற்று. டெஸ்லாவோ மின்சக்தியை தொலைதூரங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியானது ஏ.சி.யே என்றார்.
எடிஸன் அவரிடம் எலக்ட்ரிக் ஜெனரேட்டரின் வடிவமைப்பை மாற்றும் படி சிக்கலான ஒரு ப்ராஜெக்டைக் கொடுத்து இதை நீ முடித்தால் உனக்கு ஐம்பதினாயிரம் டாலர் தருகிறேன் என்றார். எவ்வளவு பெரிய தொகை அது! உடனே டெஸ்லா தனது நேரம் முழுவதையும் செலவழித்து 24 நவீன வடிவமைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்து அதை எடிஸனிடம் காட்டினார். எடிஸன் பிரமித்தார். டெஸ்லாவைப் பாராட்டினார். ஆனால் டெஸ்லா, “எனக்குத் தருகிறேன் என்றீர்களே, அந்த ஐம்பதினாயிரம் டாலரைத் தர முடியுமா?” என்று கேட்டார்.
“ஓ”வென்று சிரித்த எடிஸன், “அட, அதை உண்மை என்று நினைத்து விட்டாயா, அது ஒரு அமெரிக்க ஜோக்” என்றார்.
திகைத்துப் போன டெஸ்லா அன்றே எடிஸன் நிறுவனத்திலிருந்து விலகினார். டெஸ்ஸல் என்பவர் டெஸ்லாவிடம் அவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுமாறு செய்ததோடு இரு தொழிலதிபர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார்.
பல நிறுவனங்களும் அவரது நுட்பமான அறிவுத்திறனை அறிந்து பண உதவியைத் தாராளமாகச் செய்தன.
மரணக் கதிர் கண்டுபிடிப்பு
டெஸ்லா தன்னுடைய கண்டுபிடிப்புகள் போர்முறையையே மாற்றவல்லவை என்றார். 1934-இல், துகள் கற்றை என்ற அவருடைய ஆயுதம் – மரணக் கதிர்- டெத் ரே (DEATH RAY) -என அனைவராலும் அறியப்பட்டது. பத்தாயிரம் எதிரி விமானங்களை ஆகாயத்திலேயே அது அழித்து விடும் என்றார் அவர். இந்தக் கண்டுபிடிப்பானது உலகில் போர்களுக்கு ஒரு முடிவைக் கட்டும் என்றார் அவர்.
ரஷியா அவரது கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டியது. அவரது சில திட்டங்களுக்காக இருபத்தைந்தாயிரம் டாலர் செக்கை உடனே தந்தது.
சந்திரனையே தாக்க முடியும்!
டெஸ்லா பல அபூர்வ காட்சிகளை மனக்கண்ணால் கண்டதுண்டு. அயல்கிரகவாசிகளிடமிருந்து வந்த பல சமிக்ஞைகளைத் தான் பெறுவதாக அவரே கூறியதுண்டு. ஆற்றல் மிக்க அலைக்கற்றையை வீசி சந்திரப் பரப்பை இடைஞ்சலுக்குள்ளாக்க முடியும் என்றார் அவர்.
விவேகானந்தரைச் சந்தித்த டெஸ்லா
ஸ்வாமி விவேகானந்தர் நியூயார்க்கில் தங்கி இருந்த போது ஒரு அபூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது.மூன்று மேதைகள் சந்தித்த நிகழ்வாக இது அமைந்தது.1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லாவும் பிரெஞ்சு நடிகையான சாரா பெர்ன்ஹர்ட்டும் ஸ்வாமிஜியும் ஒரு நாள் சந்தித்தனர்.
சாரா பெர்ன்ஹர்ட் நியூயார்க்கில் ‘இஸீல்’ என்னும் நாடகத்தை நிகழ்த்தி வந்தார். .பிரெஞ்சு பாணியில் ஆக்கப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாறு அது இந்த நாடகத்தைப் பார்க்க ஸ்வாமிஜி சென்றிருந்தார். அவர் வந்ததை அறிந்த சாரா அவருடன் பேச விரும்பினார். அப்போது டெஸ்லாவும் உடனிருந்தார்.
ஸ்வாமிஜி அவர்களுக்கு வேதாந்தம் கூறும் ஆகாசம், பிராணன், கல்பங்கள் போன்றவற்றை விளக்கினார். நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளாக இவற்றை ஸ்வாமிஜி விளக்க ஆரம்பித்த போது எல்லையற்ற வியப்புடன் அதை அனைவரும் கேட்டு பிரமித்தனர்.
ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் மஹத், பிரபஞ்ச மனம் பிரம்மா அல்லது ஈஸ்வரனிடமிருந்தே வெளிப்படுகின்றன என்றார் ஸ்வாமிஜி. சக்தி, ஜடம் ஆகிய இரண்டையும் இயங்கா ஆற்றலாக மாற்றி விட முடியும் என்பதைக் கணித முறையில் காட்ட இயலும் என்றார் டெஸ்லா.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லூயி என்பவர் ஸ்வாமிஜியின் சிஷ்யை. அவர் இந்த மூன்று மேதைகளின் அபூர்வ சந்திப்பைப் பற்றி குறிப்பிடுகையில், ”நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் அபூர்வமாகச் சில கிரகங்களின் சேர்க்கை நிகழும். அது போல இந்த மூன்று மேதைகளின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது!” என்று கூறி, “இதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை ஊகிக்க மட்டுமே முடியும்” என்கிறார்.
ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் அவரது உபதேச உரையும் டெஸ்லாவை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்வாமிஜியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்ட டெஸ்லா தனது இறுதி ஆண்டுகளில் அதை அப்படியே கட்டுரைகளில் எழுதினார்.
Sri Ramakrishna Paramahamsa was suffering from cancer of the throat. Pandit Sasadhar, seeing his illness, asked him why do you not concentrate your mind upon the diseased part and thus cure yourself?
Paramahamsa said, How can I fix my mind, which I have dedicated to God, upon this wretched cage of flesh and blood?
Sasadhar ; Why don’t you to pray to Divine Mother for the cure of your illness?
Paramahamsa said, When I think of my Mother, the physical body vanishes, and I am entirely out of it. So it is impossible for me to pray anything concerning the body.
( In fact, all Tamil saints described the human body as dirty bag with nine holes or Nine Doors)
xxxx
Naked saint
Tamil Saint Sadasiva Brahmendral , like Trilinga Swami, wore no cloth. One morning the nude yogi absentmindedly entered the tent of a Muslim chieftain. Two ladies screamed in alarm; the warrior dealt a savage sword thrust at Sadasiva, whose arm was severed. The master departed unconcernedly. Overcome by awe and remorse, the Muslim picked up the arm from the floor and followed Sadasiva. The yogi quietly inserted the arm into his bleeding stump. When the chieftain humbly asked for some spiritual instructions, Sadasiva wrote with his finger in the sands: “Do not do what you want, and then you may do what you like”.
The Muslim was uplifted to a purified state of mind and understood the paradoxical advice to be a guide to soul freedom through mastery of the ego. So great was the spiritual impact of those few words that warrior became a worthy disciple; his former haunts knew him no more.
xxxx
Adi Sankara explains towards the end of Viveka Chudamani (VC) how a saint or a man who has attained wisdom behaves. We see such behaviour in the life of Seshadri Swaikal of Tiruvannamalai, Sadasiva Brahmendral of Nerur in Tamil Nadu, Sri Ramakrishna Paramahamsa and many Siddhas of Tamil Nadu. They roamed like beggars or mad men. They slept in crematorium; they walked naked or semi nude; they ate anything they saw.
api kurvannakurvāṇaścābhoktā phalabhogyapi | śarīryapyaśarīryeṣa paricchinno’pi sarvagaḥ || 544 ||
544. Though doing, yet inactive;
though experiencing fruits of past actions, yet untouched by them;
though possessed of a body, yet without identification with it;
though limited, yet omnipresent is he.
अशरीरं सदा सन्तमिमं ब्रह्मविदं क्वचित् । प्रियाप्रिये न स्पृशतस्तथैव च शुभाशुभे ॥ ५४५ ॥
aśarīraṃ sadā santamimaṃ brahmavidaṃ kvacit | priyāpriye na spṛśatastathaiva ca śubhāśubhe || 545 ||
545. Neither pleasure nor pain,
nor good nor evil, ever touches this knower of Brahman,
who always lives without the body-idea.
This is a beautiful description of a Gnaani (one who realised the Brahman)
xxxx
Seventh century Tamil saint Appar alias Tirunavukkarasu also said the same thing about Bhakti/ devotion in his Thevaram verse. It is like a girl falling madly in love with a youth. Then she sees him everywhere and in everything. We have lot of such references in the Sangam Tamil literature as well.
“To begin with, she heard of His name;
She heard of His way of life;
Then she heard of His Town (Aroor);
Yet she became mad after Him;
She quit her mother and father that very day;
She forsook the mores of the worldly;
She became oblivious of herself; she became nameless;
The woman was oned with the feet of her Lover.”
–Appar/Tirunavukkarasar Thevaram, The Sixth Book, verse 258 Appar
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258 Appar Tevaram
xxxxx
Narada on Behaviour of a Devotee
Narada Bhakti Sutram and other Sanskrit texts also explain it beautifully: —
Sravanam: Hearing about God
Kirtanam: Reciting God’s name
Sramanam: Remembering him in everything he sees or hears
Padasevanam: Service of him as manifested in all beings
Arachanam: Worshipping him in images and holy places
Vandanam: Showing proper respect to all holy images, holy persons, symbols
Dasyam: Feeling as his servant
Sakhyam: Treating God as his intimate friend
Atma nivedanam: Surrendering oneself to Him.
xxxx
Ramakrishna Paramahamsa says
Be Mad for God
If you must be mad, be it not for things of the world. Be mad with the love of God.
xxx
He who feels thirsty does not discard the water merely because it is muddy, nor does he begin to dig a well to find clear water.so he who feels spiritual thirst does not discard the religion near at hand nor does he create a new religion.
xxx
He who has seen God roams about , sometimes like a mad man, sometimes like an unclean spirit, feeling no distinction between cleanliness and its opposite. Sometimes like an inanimate object, being struck dumb by seeing God within and without. Sometimes, like a child, he attaches his mind to nothing, and goes about with his clothes bundled in his arms. But when he works for the goo of others, he is as brave as a lion,
—From Sayings of Sri Ramakrishna
—subham—
Tags- Gunas, behaviour of saints, realised ones, Ramakrishna, his cancer, Adi Sankara, Viveka Chudamani, Narada, Appar, Lover, God, Sadasiva Brahmendral,
ஆந்திர பூமியில் புகழ்பெற்ற 5 நரசிம்மர் கோவில்கள் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20
ஆந்திர- தெலுங்கானா மாநிலங்கள் நரசிம்மர் வழிபாட்டில் முன்னிலையில் நிற்கின்றன . அங்குள்ள நரசிம்மர் கோவில்களை பஞ்ச (5) அல்லது நவ(9) நரசிம்மர் கோவில்கள் என்று பிரித்துள்ளார்கள்.
நரசிம்மர் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று. பிரஹலாதன் என்ற சிறுவனைக் காப்பாற்றுவதற்காக , விஷ்ணு சிங்க முகத்துடன் தோன்றி நாஸ்தீகனான ஹிரண்யகசிபுவைக் கிழித்தெறிந்தார்.
நரசிம்மர் கோவில்களில் யோக நரசிம்மர், லெட்சுமி நரசிம்மர் , உக்ர நரசிம்மர் என்று பல வகைகள் உண்டு
புகழ்பெற்ற பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் யாவை ?
இவற்றில் மூன்று ஆந்திரத்திலும் இரண்டு தலங்கள் தெலுங்கனாவிலும் உள்ளன. காடுகளுக்கு இடையே மலைப்பாங்கான பகுதிகளிலோ அல்லது கிருஷ்ணா நதிக்கரையிலோ அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
அஹோபிலம் என்னும் இடத்தில் மட்டுமே நவ நரசிம்மர்களும் உண்டு (முன்னர் வெளியான கட்டுரையில் விவரங்கள் உள்ளன.
முதலில் மங்களகிரி-பனகல நரசிம்மர் கோவிலைத் தரிசனம் செய்வோம் .
எங்கே இருக்கிறது ?
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா அருகில் இருக்கிறது. விஜயவாடா நகரிலிருந்து 13 கி.மீ மட்டுமே. நல்ல அருமையான சாலை போடப்பட்டுள்ளது. உள்ளுர் பஸ்களும் மங்களகிரி வரை செல்கின் றன.
யானை உருவத்தில் அமைந்துள்ள குன்றின் மேல் கோவில் இருக்கிறது. பங்கல நரசிம்மர் என்றும் மக்கள் சொல்லுவார்கள் இந்த இடத்துக்கு வேதாத்ரி, தோத்தாத்ரி, தர்மாத்ரி என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
நமுசி என்ற அரக்கனை துவம்சம் செய்த இடம் என்றும் அவன் ரத்தம் ஓடிய ஆறு சிவப்பானதாகவும் கதை. இப்போது அந்த ஓடை வெறும் சிவப்பு மணலுடன் காணப்படுகிறது
சிறப்புகள் என்ன ?
தென் இந்தியக் கோவில்களில் உயரமான கோபுரம் உடைய கோவில்களில் இது குறிப்பிடத்தக்கது.
பானகம் என்னும் ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் உடைய வெல்லநீரை எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். பாதி வெல்ல நீரை நரசிம்மர் வாய்க்குள் விட்டால், அதை அவர் விழுங்கும் சப்தம் கேட்கும். பாதி பானகத்தை மட்டும் சிலையின் வாயில் ஊற்றிவிட்டு மிச்சசத்தை நமக்கு பிரசாதமாகக் கொடுப்பர்.
இந்தக் கோவிலின் வரலாறு சாதவாஹனர் காலம் முதல் துவங்குவதால் 2300 ஆண்டுகள் வரலாறு இருக்கிது . சாத வாஹனர் காலம் துவங்கி விஜய நகர பேரரசசு காலம் வரை வழிபடப்பட்டுள்ளதை அறிகிறோம்.
பல சாது சன்யாசிகளால் பாடப்பெற்ற தலம் இது. சிருங்கேரி சங்கராசார்யார்களில் ஒருவர் நரசிம்மரை வழிபட்டு துதிகளை இயற்றியுள்ளார். ஸ்ரீ கிருஷ்ண சைதன்யப் பிரபு 1310-ல் வந்து சென்றதையும் அறிகிறோம். ராமாநுஜாசாரியாரும் வந்தார்.
யானை வடிவான குன்று ஆதலால் கல்வெட்டுகளில் ஹஸ்திகிரி, யானை மலை என்றே குறிப்பிட்டுள்ளனர். மதுரை அருகிலுள்ள யானை மாலையிலும் பாண்டியர் கால நரசிம்மர் கோவிலும், நிறைய கல்வெட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது
இந்த யானை மலை பற்றி இன்னும் ஒரு கதையும் மக்களிடையே வழங்குகிறது. பரியாத்ரா என்ற மன்னரின் மகன் ருஷ்ய சுருங்கி இங்கே தவம் செய்து தானே யானையாக வந்து குன்று ஆகி நரசிம்மருக்கு கோவில் அமைக்க இடம் ஆனான் என்பது அந்தக் கதை
சுமார் 400 படிகளைக் கடந்தால் கோவிலை அடையலாம்.
மங்களகிரி நரஸ்மிம்மர் சிலையின் வாய் அகலமாகக் காணப்படும்.சுமார் 15 செ .மீ. திறந்த வாய்; இதுஒரு குடைவரைக் கோவில். சிற்பங்கள் அதிகம் இல்லை. லெட்சுமி சந்நிதி, பின்புறம் அமைந்துள்ளது. கருடனுடைய சிலை கோவிலுக்கு வெளியே இருப்பதால், முன்னர் வேறு ஒரு கோவில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
முஸ்லீம் சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோவிலின் புகழ் மங்கியது. பின்னர் அமராவதி வெங்கடாத்ரி நாயுடு 153 அடி உயர ராஜ கோபுரத்தை எழுப்பினார். 11 நிலைகள் கொண்ட இந்த கோபுரம் ஒல்லியாக (slender) இருக்கும்.
xxxx
அதிசயக் கிணறு கண்டுபிடிப்பு
2023ம் ஆண்டு கோவில் வளாகத்தில் ஒரு ஆழமான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது முதலில் கோவில் குளம் என்று நினைத்து தோண்டிப்பார்த்தனர். ஆனால் அது 152 அடி ஆழம் வரை சென்றது. வடக்கிலுள்ள படிக்கட்டு கிணறு போல அமைக்க நினைத்து ஒருவேளை பாதியில் நிறுத்திவிட்டா ர்களோ என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலுள்ள மண்ணை 3500 லாரிகளில் ஏற்றி அனுப்பினார்கள். இது விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் – அதாவது 400 முதல் 600 ஆண்டுகளுக்கு முன்னர்— தோண் டப்பட்டிருக்கலாம் இந்த இடத்தில் கல்வெட்டுகள், தாமிர நாணயங்கள் முதலியனவும் கிடைத்தன.
மங்களகிரியில் மேலும் இரண்டு பழைய கோவில்கள் உள .அவை ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணர் கோவில்கள் ஆகும்.
–SUBHAM—
TAGS- ஆந்திர பூமியில் புகழ்பெற்ற 5 நரசிம்மர் கோவில்கள் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 20
Three great saints Sankara, Tirumular and Sri Ramakrishna Paramahamsa (RKP) use the Knot to teach us something spiritual.
Here is Sri R K P’s famous quote:
Granthi means knot is Sanskrit
Grantha means book is Sanskrit
Grantha does not always means a holy scripture, but often it comes to mean a granthi or a knot. If a man does not read it with an intense desire to know the truth, and renouncing all vanity, the mere reading of books only gives rise to pedantry, presumption, egotism etc., which will be an encumbrance on his mind like so many knots.
In the kingdom of God, reason, intellect and learning are of no avail. There the dumb speak, the blind see and the deaf hear.
To explain God after merely reading the scriptures is like explaining to a person city of Banaras after seeing it only on map.
xxxx
Sankara used the word knot to mean ignorance. Many of us would have experienced a difficult situation where we tried to untie a knot. We would have struggled. If we remember that, the image of knot in the mind or heart will be understood clearly.
363. By this Samadhi are destroyed all desires which are like knots, all work is at an end, and inside and out there takes place everywhere and always the spontaneous manifestation of one’s real nature.
423. If the heart’s knot of ignorance is totally destroyed, what natural cause can there be for inducing such a man to selfish action, for he is averse to sense-pleasures?
dehasya mokṣo no mokṣo na daṇḍasya kamaṇḍaloḥ | avidyāhṛdayagranthimokṣo mokṣo yatastataḥ || 558 ||
558. For the giving up of the body is not Liberation, nor that of the staff(danda) and the water- bowl (Kamandalu); but Liberation consists in the destruction of the heart’s knot which is Nescience (Ignorance).
xxxx
Tirumular says,
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே.
Tattva Jnanis Crush Karma
The Tattva Jnanis realize the Self;
The Gordian knot of Karma Past
They cut asunder;
Future Karmas they seize and crush,
By Grace of Siva,
Whom they hold,
High on their heads.
Tirumular meant problems or effects of Past Karma (in the previous births). Saints can make them ineffective. Or saints can avoid them in the present birth, because they already knew the negative effects it caused iin their previous births
xxxx
Greeks also used the word Knot
Gordian knot- proverbial term
Gordian knot, knot that gave its name to a proverbial term for a problem solvable only by bold action. In 333 bc, Alexander the Great, on his march through Anatolia, reached Gordium, the capital of Phrygia. There he was shown the chariot of the ancient founder of the city, Gordius, with its yoke lashed to the pole by means of an intricate knot with its end hidden. According to tradition, this knot was to be untied only by the future conqueror of Asia. In the popular account, probably invented as appropriate to an impetuous warrior, Alexander sliced through the knot with his sword, but, in earlier versions, he found the ends either by cutting into the knot or by drawing out the pole. The phrase “cutting the Gordian knot” has thus come to denote a bold solution to a complicated problem.
or
The “Gordian Knot” is a metaphor for an intractable problem eventually solved by the ability to “think outside the box” to achieve success.
—Subham—
Tags- Knot, Granthi, Grantha, Viveka Chudamani (VC), Ramakrishna, Tirumular, Knotty Problem, Research Notes on VC-31
The Annual Chariot Procession of London Murugan Temple was held today/ Sunday 4-8-2024 in Eastham in London.
Key words:
Murugan – Tamil name of Subrahmanya or Skanda or Shanmukha or Guha.
Chariot Procession – Ratha Yatra
Eastham- East London.
Kaavadi- Kanwar (yatra)
As every year, it was attended by a lot of people. The chariot went through streets near East ham underground. All the shops and most of the Hindu residents offered coconuts, flowers and fruits to the Gods. Devotees were fed at the temple In the afternoon.
The special item this year Kavadi dance by young children. Tamil musicians were playing on drums and pipes. All along the route, Tamil restaurants were distributing water, fruit juice, Sundal (boiled and spiced pulses) etc.
Many women came with traditional Milk pots on their heads. At the end the milk will be sued for Abishaekam in the temple.
Pictures taken by London swaminathan.
முருகன் கோவில் தேர்த் திருவிழா 4-8-2024
ஆண்டுதோறும் நடக்கும் இலண்டன் முருகன் கோவில் தேர்த் திருவிழா, இன்று 4-8-2024 வழக்கமான
கோலாகலத்துடன் நடந்தேறியது .நூ ற்றுக்கணக்காண பக்தர்கள் முருகன்/ஸ்கந்தன் /சுப்ரமணியன் தேருடன் நடந்து வந்தனர்.. வழி நெடுகிலுமுள்ள இந்திய உணவகங்கள் , வீடுகள் தேங்காய் , பழம் , பூ, வெற்றிலை பாக் குடன் அர்ச்சனை செய்தனர். பழ ரசம், தண்ணீர் பாட்டில், சுண்டல் முதலிய பிரசாதங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள் .ரயில் நிலையத்தை ஒட்டிய முக்கிய வீதிகள் வழியாக ரதம் சுமார் மூன்று மணி நேரத்துக்கு பவனி வந்தது.
வழக்கமான நாயன , மிருதங்க இசையுடன் காவடி ஆட்டமும் இந்த ஆண்டு நடந்தது. சிறுவர்கள் ஆடிய சிறப்பான காவடி ஆட்டம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது .நிறைய பெண்கள் பால்குடம் எடுத்தனர் ..
சுமார் 3 மணிநேர யாத்திரையின் முடிவில் மக்களுக்கு சுவையான கோவில் பிரசாதம் கிடைத்தது..
-SUBHAM—
Tags- முருகன் கோவில், தேர்த் திருவிழா, 4-8-2024, London Murugan/Skanda Temple , Ratha Yatra, Chariot Procession.
(முக்கிய படங்கள் விக்கி பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி உரித்தாகுக.)
முகலிங்கம் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19
எங்கே இருக்கிறது ?
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் அருகில் இருக்கிறது. ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து சுமார் 48 கி.மீ. தொலைவு. விசாகப்பட்டிணத்திலிருந்து 170 கிமீ. அறு நூறு ஆண்டுகளுக்கு கொடி கட்டிப்பறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது . தொல்பொருட்த் துறையின் பாதுகாப்பில் உள்ள சின்னம்.
இது வம்சதாரை என்னும் ஆற்றின்கரையில் அமைந்த சிவன் கோவில். இந்த வட்டாரம் வர்லேஆற்றுச் சிறப்பு வாய்ந்த இடம்.
என்ன சிறப்புகள் ?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கீழைச் சாளுக்கிய வம்ச அரசர்களின் தலை நகராக இருந்தது . முகலிங்கேஸ்வர், அநியங்க
பீமலிங்கேஸ்வரர் , சோமேஸ்வர் என்ற மூன்று லிங்கங்களை இந்த வளாகத்தில் காணலாம் சோமேஸ்வர் கோவில் ஊருக்கு வெளியே யுள்ளது.
கோவில் எட்டாம் நூற்றாண்டில் கங்க வம்ச அரசர்களால் கட்டப்பட்டது. இங்கு நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் பல நூறு ஆண்டுகளின் வரலாற்றை அறிய முடிகிறது. கோவில் கலிங்க பாணியில் (ORISSA) நிறுவப்பட்டுள்ளது.
தொல்பொருட்துறை சின்னம் ஆனாலும் இப்போதும் வழிபாட்டில் உள்ளது. சிவராத்ரி போன்ற உற்சவ காலங்களில் பல்லாயிரம் பக்தர்கள் குவிகிறார்கள் .
இங்குள்ள நிறைய சிற்பங்கள் ஒப்பற்றவை; வேறு எங்கும் காண முடியாதவை. மும்மூர்த்திகள் சிற்பம் அவைகளில் ஒன்று
கங்க வம்சத்து அரசர்கள் தங்களை உத்கல த்ரிகலிங்க தேசத்து மன்னர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்த இடத்தின் பழைய பெயர் கலிங்க நகரம். இந்த இடத்தில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. சோமேஸ்வர் கோவில் ஊருக்கு வெளியே யுள்ளது.
முகலிங்கம் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. இது பஞ்சாயதன வகைக்கோவில் ; அதாவது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணநாதன், மஹேஸ்வர ஆகிய ஐவர் உருவங்களும் இருக்கும். கோபுரம் ஆமலக வடிவில் இருக்கும்.
சுவாமியின் திருநாமம் முகலிங்கேஸ்வர்; பழைய பெயர் மதுகேஸ்வரா என்பதைக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.
அருகிலுள்ள ஒரிஸ்ஸா (Odisha, Orissa) மாநிலத்தின்- கலிங்க தேசத்தின்– தாக்கத்தைக் காணலாம் . இது கலிங்க- குப்த வம்ச கலைகளின் கலப்பு என்பது வரலாற்று நிபுணர்களின் துணிபு .
ஒரு மன்னன் சிம்மசனத்தில் அமர்ந்து எதிரியை அவமானப் படுத்தும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.. காமரணவ என்ற மன்னன் 941-978க்குள் கோவிலைக் கட்டினான் என்று ஒரு கல்வெட்டு கூறும்.
லிங்கம் என்ன கல்லினால் ஆனது என்பது தெரியவில்லை. ஆனால் பால்வண்ண லிங்கம்..
கோவில் சுவர்களில் இராமாயண, மஹாபாரதக் காட்சிகளை சிற்பங்களாகச் செதுக்கியுள்ளனர். இவை தவிர சிற்பங்களிலேயே, பூ, கொடி , செடிகளும் உள .
ஒரு அதிசயம் என்னவென்றால் பார்வதிக்கோ அம்மனுக்கோ சிலை இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது!
ஊருக்கு வெளியே சோமேஸ்வரர் கோவில் இருக்கிறது இது த்ரிரத்ன பாணியில் கட்டப்பட்டிருக்கிறது; இந்தக் கோவிலின் சிறப்பு ஆதி சங்கரர் ஸ்தாபித்த அறு வகைச் சமயங்களில் சைவ, வைஷ்ணவ, சாக்த, காணாபத்ய சிற்பங்கள் இருப்பதாகும் . செளர , கெளமார சிற்பங்கள் குறைவு.
பிரம்மா, நரசிம்மர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் , மகிஷாசுர மர்த்தனி சிலைகள் கண்ணைக்கவரும் வகையில் உள்ளன.
இந்த வட்டாரத்தில் நிறைய சிவன் கோவில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவைகளை பல ராமன் அமைத்ததாகவும் நம்புகின்றனர். மஹாபாரத யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்ன பலராமன் அந்தக்காலத்தில் நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்தது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது
. அருகிலேயே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மஹேந்திர கிரி இருக்கிறது. அங்கு மலை மேல் ஐந்து சிவலிங்க கோவில்கள் உள்ளன. இவைகளை பஞ்ச பாண்டவர்கள் வழிபடடதாகக் கூறுகின்றனர். 13 ஆண்டுக்கால வனவாச காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் செல்லாத இடம் எதுவும் இந்தியாவில் இல்லை. இதே போல ராமனும் 14 ஆண்டுக்கால வனவாசத்தில் இந்தியா முழுதுமுள்ள தலங்களை தரிசித்தார் . அவருக்குப் பின்னர் ஆதி சங்கரர் நாடு முழுதும் வல ம் வந்து மடங்களை நிறுவியதை நாம் அறிவோம்; சென்ற இடமெல்லாம் அவர் ஸ்ரீ சக்கரம், மஹா மேரு , ஸ்படிக லிங்கங்களை நிறுவியத்தையும் நாம் கோவில் வரலாறுகள் மூலம் அறிவதால் மக்கள் நம்பிக்கை — செவி வழி செய்திகள் –உண்மையே.
—SUBHAM—
TAGS- முகலிங்கம் கோவில், ஆந்திர மாநிலத்தின், 108 புகழ்பெற்ற, கோவில்கள் PART-19
தாவர வகை உணவு என்னும் கறிகாய் வகை உணவான சைவ உணவு வகைகளைச் சாப்பிடுவோருக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவது மிகவும் குறைவு என்பதோடு அவர்களுக்கு கான்ஸர் அபாயமும் குறைவாகவே ஏற்படுகிறது என்பதை 20 வருட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உடல் பருமன் ஆகாமல் இருக்க வேண்டுமா, அதற்கும்,
இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதற்கும் சைவ உணவே ஏற்புடையது.
சமீபத்தில் அறிவியல் அறிஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் சைவ உணவு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான 48 மருத்துவ ஆய்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றின் முடிவுகளை ஆராய்ந்தனர்.
எல்லாவித மாமிச உணவு வகைகள், முட்டை ஆகியவற்றோடு பால் வகைகள், தேன் உள்ளிட்ட விலங்குகளினால் உருவாக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் தவிர்ப்போர் உண்மையான சைவ உணவு சாப்பிடுவோர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
இது மட்டுமல்ல புரொஸ்டேட் கான்ஸர் என்ற அபாயகரமான நோயும், கோலன் கான்ஸர் என்ற நோயும் கூட சைவ உணவு சாப்பிடுவோருக்கு வருவது குறைவாகவே இருக்கிறது என்கின்றன ஆய்வின் முடிவுகள்.
இத்தாலியில் நடந்த ஆய்வுகள்
இத்தாலியில் உள்ள போலோகொனா நகரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜிகல் ஸயின்ஸஸ்-ல் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளரான ஃப்டெரிகா குரால்டி (Federica Guaraldi MD, PhD, Institure of Neuralogical Sciences in Bologna, Italy) இவ்வாறு தெரிவிக்கிறார்.
எப்படி சைவ உணவுகள் இப்படி கொடும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதை ஆய்வு ஆராயவில்லை. எவ்வளவு உண்டால் இந்த அபாயக் குறைவு வரும் என்பதையும் அவர்கள் ஆராயவில்லை. ஆனால் சைவ உணவு மட்டுமே உண்பவர்களை அவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர்.
அத்தோடு ஆரோக்கியமற்ற கறிகாய் வகைகள், பழச்சாறுகள்,, உருளைக்கிழங்கு சிப்ஸ் (வறுவல்) சோடா ஆகியவை உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வாளர் டேவிட் கோரி (David Gori Md, PhD) வலியுறுத்துகிறார்.
சைவ உணவுகள் நல்லவை என்பதற்கான ஒரு முக்கிய காரணம் அவற்றில் பைபர் எனப்படும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த பைபர் வகை உணவுகளே கான்ஸர் அபாயத்தைக் குறைக்கின்றன, இதயக் கோளாறுகள் வராமல் காக்கின்றன என்கிறார் மூத்த இயக்குநரான மிகாலா கரிஸன் (Micaela Karisen Phd, MSPH, Senior Director) என்னும் ஆய்வாளர்.
நார்ச்சத்து (பைபர்) அதிகம் உள்ளவை
பைபர் அதிகம் உள்ள உணவுப்பொருள்கள் யாவை?
பீன்ஸ், உலர்ந்த அத்திப்பழம், பாதாம் பருப்பு, பச்சை பட்டாணி, ப்ராக்கோலி, சியா விதைகள், பெர்ரி, பேரிக்காய், வாழைப்பழம், பார்லி, ஓட்ஸ், பாஸ்தா, கேரட், பீட் ரூட், முட்டைகோஸ், கீரை, தக்காளி உள்ளிட்டவற்றில் பைபர் அதிகம் உள்ளது.
இவற்றை அன்றாடம் உரிய வகையில் உணவாக எடுத்துக் கொள்வது நீடித்த நன்மையை நல்கும்.
வள்ளுவரின் கொள்கையும் அறிவுரையும்
இது ஒரு புறமிருக்க சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆன்மீக ரீதியாகவும் அறநூல்களின் அறிவுரையாகும்.
திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே (26-ம் அதிகாரம் – புலால் மறுத்தல்) இதற்கென ஒதுக்கியிருக்கிறார்.
தன் உடம்பை பெருக்கச் செய்ய இன்னொரு உடம்பைத் தின்கின்றவனுக்கு அருள் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251)
பொருளை வைத்துக் காப்பாற்றாதவருக்கு பொருள் உடையவர் என்ற சிறப்பு இருக்காது. (அசைவ உணவு மேற்கொள்ளும்) புலால் தின்பவர்க்கு அருள் உடையவராக இருக்கும் சிறப்பு இல்லை.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு (குறள் 252)
ஊன் உண்ணாதிருத்தலே உயிர்கள் உடல் பெற்று வாழும் நிலைமை. ஊன் தின்பவரை நரகம் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒரு போதும் அவனை வெளியே விடாது.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு (குறள் 255)
அது மட்டுமல்ல, முத்தாய்ப்பாக இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளாக ஒரு அதிசய உண்மையை அவர் எடுத்துரைக்கிறார்.
ஒரு உயிரையும் கொல்லாமல் புலால் உணவை மேற்கொள்ளாதவனை அனைத்து உயிர்களும் கை கூப்பி தொழும் என்கிறார் திருவள்ளுவர்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும் (குறள் 260)
ஆகவே அறநெறிகளின் வழிமுறைப்படியாகவும், அறிவியல் ஆய்வுகளின் தேர்ந்த முடிவுகளின் படியும் சைவ உணவே ஏற்புடைய உணவு என்பது தேர்ந்து தெளிந்த உண்மை.
அசைவ உணவை மேற்கொள்பவர்களுக்கு நரகத்திலிருந்து வெளி வர கதவு திறக்கவே திறக்காதாம்; வள்ளுவரின் கொள்கை இது!
சைவ உணவை மேற்கொள்வோரை எல்லா உயிரும் கை கூப்பித் தொழுமாம். வள்ளுவரின் அறிவுரை இது.