மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி! (Post No.12,978)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,978

Date uploaded in London – — 2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மாலைமலர்

மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி!

                                                                     ச.நாகராஜன்

மின்னல் வேக மன்னன் 

மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் ப்ரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம் இவரைக் கண்டு பிரமித்தது  இவரது அபாரமான வேகத்தினால் தான். 

அவரைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ‘ஒன் இன்ச் பஞ்ச்’ என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியிலிருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமான அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர். இந்த ஒரு இஞ்ச் குத்தின் வேகத்தை ஒருவாறாகக் கணக்கிட்ட நிபுணர்கள் அது மணிக்கு 190 கிலோமீட்டர் இருந்ததாகக் கூறினர். (மிகக் கொடூரமான புயலின் வேகம் கூட அதிக பட்சம் மணிக்கு 117 கிலோமீட்டர் தான்!) 

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் சைனா டவுனில் உள்ள ஒரு சீன மருத்துவமனையில்  1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி லீ ஹோய்-சூன் மற்றும் கிரேஸ் ஹோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ப்ரூஸ் லீ.

சீன பஞ்சாங்கத்தின்படி அவர் பிறந்த வருடம் டிராகன் வருடம். அதே போல பிறந்த நேரமும் கூட காலையில் வரும் (7 முதல் 9 மணி வரை வரும்) டிராகன் நேரம் தான். அதிர்ஷ்டமான நேரத்தில் பிறந்த அவருக்கு இளமையில் பெயர் – லிட்டில் டிராகன்! 

இளம் வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் தோற்றமளித்தார்.

குழந்தையுடன் பெற்றோர் ஹாங்காங் நகருக்கு குடி பெயர்ந்தனார்.

இளம் வயதிலேயே தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த

ப்ரூஸ் லீ ஹாங்காங் நகரில் அந்தக் காலத்தில் மிக சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தெருச்சண்டைகளில் ஈடுபட்டார். வீட்டுக் கூரைகளிலும் இது நடைபெறுவது வழக்கம்,

நகரத்தையே அச்சுறுத்திய ஒரு பிரபல ரௌடியின் மகனை தெருச்சண்டை ஒன்றில் வீட்டுக்கூரை மீது புரட்டி எடுத்தார் ப்ரூஸ் லீ.

அவனுக்கு கைமுறிவு ஏற்பட்டது; பல் தெறித்து விழுந்தது.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ப்ரூஸ்லீயின் தாயார் இது போல நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரை வெளியே மீட்டு வந்தார்.

அமெரிக்கா திரும்பல்

அமெரிக்காவில் பிறந்த காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் பெற்றோர் ப்ரூஸ் லீயை அமெரிக்காவிற்கே அனுப்பத் தீர்மானித்தனர். சியாட்டிலில் குடியேறிய ப்ரூஸ் லீ அங்கு குங் பூ பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.

தற்காப்புக்கலையில் விசேஷ கவனம் செலுத்திய அவர் தனது திறமையினால் ஜீத் குனோ டோ என்ற புதிய முறையை வகுத்தார். இந்த முறை ஒரு புதிய பரிமாணத்தை உலகிற்குக் காண்பிக்கவே ப்ரூஸ் லீயின் புகழ் தற்காப்புக் கலை வட்டாரத்தில் பெரிதாகப் பரவியது.

கல்லூரியில் சேர்ந்த ப்ரூஸ்லீ படிப்பை விட தனது குத்துச்சண்டையில் அதிக கவனம் செலுத்தினார். கல்லூரியிலிருந்து வெளியேறினார்.

தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொலைக்காட்சித் தொடர்

‘தி க்ரீன் ஹார்னெட்’ என்று ஒரு தொடர். அதில் கடோ என்ற பாத்திரத்தில் நடித்த ப்ரூஸ் லீ ஒரு காட்சியில் பாட்மேனுடனான சண்டையில் தோற்க வேண்டும். முடியாது என்று மறுத்து விட்டார் லீ. பின்னர் பேட்மேனும் இவரும் டிரா செய்வதாக கதை திருத்தப்பட்டது. அவ்வளவு தன்மானம் உள்ளவர் ப்ரூஸ் லீ. 

என்றும் வெற்றிஎவருடனும் வெற்றி!

ப்ரூஸ் லீயின் உயரம் 172 செண்டிமீட்டர். எடை 64 கிலோ.

கடுமையான பயிற்சியின் மூலம் அவர் தனது இரு விரல்களைக் கீழே பூமியில் வைத்து உடலைத் தூக்கி நிறுத்துவார். இதைப் பார்த்த மற்றவர்கள் வியந்தனர். 

சியாட்டிலில் இருந்த போது யோய்ச்சி நகாசி என்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் ப்ரூஸ் லீயை வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்தார். முதலில் அவரை அலட்சியமாக ஒதுக்கிய லீ ஒரு கட்டத்தில் அவரது சவாலை ஏற்க வேண்டியிருந்தது. சரியாக பதினோரு விநாடிகளில் இரண்டே அடிகளில் அவரை வீழ்த்தினார் ப்ரூஸ் லீ. பிரக்ஞையை இழந்து தள்ளிப் போய் விழுந்த நகாசிக்கு மண்டையில் பலத்த காயம் பட்டது. இப்படி சில விநாடிகளில் எதிராளியை வீழ்த்தும் அவரது  கை முஷ்டிக்கும் அதன் வீச்சிற்கும் அனைவரும் பயந்தனர்; வியந்தனர்.

சக் நாரிஸ் என்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் அவருடன் நட்பு பாராட்டினர்.

ஒரு முறை சக் நாரிஸிடம், “ நீங்களும் ப்ரூஸ் லீயும் சண்டை போட்டால் யார் ஜெயிப்பார்கள்?” என்று கேட்ட போது, “சந்தேகம் என்ன, ப்ரூஸ் லீ தான்!” என்று பதிலளித்தார் அவர்.

மனைவியும் மக்களும்

1964, ஆகஸ்ட் 17ஆம் நாளன்று லிண்டா என்ற பெண்ணை லீ திருமணம் செய்து கொண்டார். ப்ரண்டன் லீ என்ற மகனும் ஷானன் லீ என்ற மகளும் அவருக்கு உண்டு.

ப்ரண்டன் லீ பிற்காலத்தில் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்தார். ஷானன் லீ நடிகையானார். 

திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்

வாழ்நாளில் ஐந்தே ஐந்து திரைப்படங்களில் தான் நடித்தார் ப்ரூஸ் லீ.

தி பிக் பாஸ்  (The Big Boss – 1971)

ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி (Fist of Fury – 1972)

 வே ஆஃப் தி ட்ராகன்(Way of the Dragon – 1972)

எண்டர் தி ட்ராகன்(Enter the Dragon – 1973)

கேம் ஆஃப் டெத் Game of Death – 1978)

உலகப் புகழ் பெற்ற படமான ‘எண்டர் தி ட்ராகன்’

அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின்னாலேயே திரைக்கு வந்தது.

‘கேம் ஆஃப் டெத்’ படமோ’ அவர் மறைந்த பிறகே முடிக்கப்பட்டது. திடீரென அவர் மறைந்ததால் கதையும் மாற்றப்பட்டது. இதில் அவரது பிரேத ஊர்வலம் அப்படியே எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.

இவர் நடித்த ஐந்து திரைப்படங்களே எதிர்காலத்தில் மற்றவர்கள் 168 படங்களை எடுக்க உத்வேகம் ஊட்டியது!

 எண்டர் தி ட்ராகன் 

உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ‘எண்டர் தி ட்ராகன்’ திரைப்படம் ப்ரூஸ் லீ மறைந்த சில தினங்களுக்குப் பிறகு 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

99 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத் தயாரிப்பின் போது அவர் பட்ட கஷ்டம் அதிகம். ஏராளமான காயங்கள், ஒரு காட்சியில் பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. ஷூட்டிங்கை நிறுத்த கூடாது என்று சொல்லி உரிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது அவர் வழக்கம். மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டவாறே நடித்துக் கொண்டே இருந்தார் அவர்.

3500 லட்சம் அமெரிக்க டாலரை ஈட்டியது இந்தப் படம்.

தற்காப்புக் கலை பற்றி வெளி வந்த படங்களில் உலகின் தலையாய படமாக இன்றளவும் திகழ்வது இந்தப் படமே! 

மறைவு 

ப்ரூஸ் லீயின் மறைவு எவ்வளவு அகாலமானதோ அவ்வளவு சோகமானதும் கூட. 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் மறைந்தார்.

 இயல்பாகவே அதிக உஷ்ணத்தை அவர் உடலால் தாங்க முடியவில்லை. அவரது உடலிலிருந்து வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டன. அவருக்கு வலிப்புகள் வருவதுண்டு. தலைவலி வேறு உண்டு.

 1973, மே 10ஆம் தேதி ஹாங்காங்கில் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் ப்ரூஸ் லீ திடீரென மயங்கி விழுந்தார்.மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டு, மனிடால் என்ற மாத்திரையைத் தந்து மூளை வீக்கத்தை சரி செய்தனர்.

இதே மூளை வீக்கமும் தலைவலியும் திரும்பவும் 1973 ஜூலை 20ஆம் தேதி அவருக்கு ஏற்பட்டது. தலை வலிப்பதாக ப்ரூஸ் லீ சொல்லவே தைவான் நடிகையான பெட்டி டிங் பெய் ஒரு வலி நிவாரண மாத்திரையை கொடுத்தார். சிறிது ஓய்வு எடுக்கச் சென்ற லீ எழுந்திருக்கவே இல்லை. ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது லீ இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். மறைந்த போது அவருக்கு வயது 32.

உடல் பரிசோதனையைச் செய்த டாக்டர் 1400 கிராம் இருக்க வேண்டிய மூளை 1575 கிராமாக வீங்கி இருப்பதைச் சொல்லி மூளை வீக்கத்தினால் அவர் இறந்து விட்டதாக தனது முடிவை தெரிவித்தார்.

ஆனால் இன்றளவும் அவர் மரணம் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

அவரது உடல் சியாட்டிலில் லேக் வியூ சிமெட்ரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 வெற்றி பெற ப்ரூஸ் லீ தரும் அறிவுரை 

“சிரஞ்சீவியாக இருக்க ஒரே வழி, அனைவரும் எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வது தான்!” என்று கூறிய ப்ரூஸ் லீ, தான் கூறியபடியே அனைவரின் நினைவிலும் இன்றளவும் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.

இந்த நிலையை அடைய எளிய வழிகளையும் அவர் கூறி இருக்கிறார். அவற்றில் முக்கியமானவை இதோ:

1. “பத்தாயிரம்  உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.

“ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும்” என்றார் அவர்.

தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது. அகல உழுவதை விட ஆழ உழு; என்றும் பத்து இடங்களில் பத்து அடி தோண்டுவதை விட ஊற்று இருக்கும் இடத்தை நிர்ணயித்து நூறு அடி தோண்டு என்றும் தமிழில் முன்னோர்கள் கூறியுள்ளதை நினைவு கூரலாம்.

2. தண்ணீர் போல நெகிழ்வுடன் இருங்கள்! எந்தத் தடையையும் எதிர் கொண்டு நெகிழ்வுடன் சென்று அதை மீறி தனது இயல்பாக இருக்கும் தண்ணீரிலிருந்து ஏராளமான பாடத்தைக் கற்கலாம்.

3. வேரை அறிந்து  கொள்ள முயலுங்கள். எது இலை, எது கிளை, எது அழகான மலர் என்ற விவாதத்தில் இறங்க முயல வேண்டாம். வேரை அறிந்து கொண்டால்  மலர் மலரும் விதம் உங்களுக்குத் தானே புரிந்து விடும்!

4. அறிவது மட்டும் போதாது; அறிவதைச் செயலில் கொண்டு வர வேண்டும். விருப்பப்பட்டால் மட்டும் போதாது. அதை அடைய செயலில் இறங்க வேண்டும்..

5. ஒரு நாளைக்கு ஒரு சிறிது முன்னேற்றமாவது அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பயிற்சியே வெற்றி தரும் என்று நிரூபித்த அதிசய மனிதர் ப்ரூஸ் லீ!

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 4 (Post No.12,977)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,977

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 4

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

XXXXX

சில்லரை விஷத்திற்கு

31. ஆடுதீண்டாப்பாளை வேர், கவுத்தும்பை வேர்,  வெள்ளெருக்கு வேர் , மருக்காறை வேர், இவைகளை சமநிடை எடுத்து அறைத்து , உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் , கருவழலை- தண்ணிப்பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் தீரும்  

xxxx

32 . ஆனை  நெருஞ்சியிலையை  சிறுநீர் விட்டறைத்து இடித்து சாறு பிழிந்து சுமார் அரைக்கால்படி உள்ளுக்கு  கொடுத்தால் மேற்படி விஷங்கள் நிவர்த்தியாகும் ; பார்வதி பரணீயம் என்னும் சாஸ்திரத்தில் சகலவித சர்ப்பத்திற்கும் ஜாதி, நிறம், குறி, அடையாளமும் அதற்கு அனுபோகமான மருந்துகளும் வெகு விபரமாய்ச் சொல்லியிருக்கிறது .

xxxx

முள்ளு வெளிப்பட

33 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து முத்தையாக்கி காலில் முள்ளு  தைத்த இடத்தில் வைத்துக்கட்டி மறுதினம் அவிழ்க்க முள்ளு வெளியில் வந்துவிடும் .

xxxxx

குதிக்கால் வெடிப்புக்கு

34 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து பில்லைதட்டிக்  காயவைத்துச் சுட்டு அந்த சாம்பலை தேன்விட்டிழைத்து, குதிக்கால் வெடிப்பு, ஆசன வெடிப்பு இதுகளுக்கு இரண்டு வேலை தடவ வெடிப்புகள் மாறிவிடும் .

xxxx

வயிற்றுக்கடுப்புக்கு

35.ஆலம் விழுதை எருமைத்தயிர் விட்டரைத்து ஒரு பலம் எடுத்து எலுமிச்சம்பழ ரசம் ஒரு பலம் விட்டுக் கலந்து கொடுக்கவும். இப்படி இரண்டு மூன்று வேளை கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும் .

xxxxx

36 . ஆசனக்கடுப்புக்கு புகை

ஆமையோட்டையிடித்து  பொடிசெய்து நெருப்பில் தூவி அந்தப்புகையை அபானத் துவாரத்திற் பிடிக்க . ஆசனக்கடுப்பு உடனே தீரும் .

Xxxx

37 . ஆண்குறி புண் வீக்கத்திற்கு

ஆதளைப் பாலை ஆண்குறி  தோலின் மீது உண்டாகும் புண், ரிணம்  இதுகளுக்குத் தடவி , அலரிப்பூவைக் கசக்கி அதன்மேல் வைத்துக்கட்டி னால் வீக்கம் வாடிப்போகும்; புண் ஆறிவிடும் .

xxxxx

38 .புழுவெட்டுக்கு

ஆனைத்தந்தத்தை சுட்டுப் பொடியாக்கி தேனில்குழைத்து புழுவெட்டினாலாவது  மற்ற எவ்விதத்தாலாவது மயிர் உதிர்ந்துபோன இடத்தில் எட்டுநாள் தடவி வந்தால் மயிர் முளைக்கும் .

xxxxx

39 .மயிர் கருப்பாகத் தைலம்

னைத்தந்தத்தின் பொடி பலம் ஐந்து —  எட்டு படி தண்ணீரில் போட்டு ஒருபடியாய்க் காய்ச்சி அதில் ஒரு படி நல்லெண்ணெய் விட்டு சவுரிக்கொடி அவுரித் தழை , கரணங்  கண்ணி சிவந்த ஆலம் விழுது இவைகளின் சாறு  வகைக்குப்படி கால் –  ஒன்றாய்க்கலந்து பதமாய்க் காய்ச்சி,  வடித்து சிரசில் பதமிட்டுவந்தால் மூன்று மாதத்தில் எப்பேர்க்  கொற்ற நகையும் மாறிவிடும் .

தைலபதம், எண்ணெய் பதம், மெழுகுபதம் இவைகளை பார்வதி பரணீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது .

xxxxx

40 .ஒக்காளத்திற்கு

ஆளிவிரை ஒரு பலம் எடுத்து 4 பலம் ஜலத்தில் ஒரு ராத்திரி  ஊறவைத்து  காலையில் எடுத்து மல் துணியில் கொட்டிப்பிழிந்து ஒரு பலம் வெள்ளை சக்கரைபோட்டுக் கலக்கி சாப்பிடவும். பத்து நாலா சாப்பிட அழலை, ஒக்காளம், நரம்புக்குத்து, வலி,வாந்தி,  வீக்கம்,  விரைவாதம் தீரும்.

–subham—

Tags-  முனிசாமி முதலியார்,   மூலிகை அதிசயங்கள், Part 4, ஒக்காளம் மயிர் கருப்பாகத் தைலம் , ஆண்குறி புண்,  வீக்கத்திற்கு, புழுவெட்டுக்கு

London Swaminathan’s New Book on Hindu Saints, Temples & Historical Atrocities

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Strange Stories about Hindu Saints, Temples

and Historical Atrocities ( book title)

CONTENTS

1.The Mysterious disappearance of Great Hindu Saints

2.Rebirth is True : New Evidence from Newspaper

3.Interesting Titbits from Confucius life!

4.‘Don’t Chase Two Rabbits’: Paramahamsa and Confucius

5.Rapist on run gave up after being fed!

6.The Tortoise Mystery: Can we live for 300 years?

7.Clairvoyant predicted Middlesbrough woman’s £12,050 Postcode Lottery

8.Great Demand for Astrologers in London

9.Swamiji Krishna’s Miracles!

10.More Miracles by Swamiji Krishna

11.British massacred Muslims in India

12.Death Sentence to Naked Muslim Saints

13.Homer’s Iliad did a Miracle! Power of Words

14.How did Two Japanese Cities escape from American Atom bombs?

15.Englishman mocking at ‘Lazy’ Dravdidans!

16.Gemmology in Brhat Samhita

17.Kohinoor Diamond: Interesting Anecdote by Hallam Murray

18.Diamond hunting in Anantapur, Kurnool regions on in monsoon season

19.Eight Types of Pearls in Varahamihira’s book;  20 Types of Pearls in Tamil Book

20.Hindus’ belief in Gem Stones

21.Pearl in Foreign Languages

22.Nagaratna/ Cobra Jewel, Rubies and Emeralds in Brhat Samhita

23.How did Shakespeare know about the Indian Co-bra Jewel-Nagaratnam?

24.Dheeran Chinnamalai, a fighter to the last!

25.Strange Stories about 50 Ganesh Temples in Tamil Nadu – 1

26.Ganesh who ate the Prasad: Strange Stories from Tamil Temples-Part 2

27.Strange Stories from Ganesh Temples in Tamil Nadu -3

28.Vatapi Ganapathim Bhaje!

29.World’s Largest Shivalinga Temple opened in Assam

30.My Visit to Kukke Subrahmanya Temple

31.My Visit to Selaiyur Skandhashram Temple

32.My Trip to Thirukkadavur Shiva Temple

33.My Visit to Udupi Sri Krishna Temple

34.Hampi -Hindu Wonder destroyed by Muslim Invaders

35.Two Hindu Wonder Ovens

36.Mirror Temples! Hindu Wonders!!

37. Saraswati Statue in Saudi Arabia

38. Unique Hindu Temple in Mauritius

39.Sound of Indian Pungi Music Does Wonders- Report Swiss Scientists

40.Hide and Seek Game in Sangam Tamil literature

41.Albert Einstein on Cluttered Desk!

42.Patriotism: Bismarck and Californians!

43.Names Make it or Mar it

44.The Man Who ‘Discovered’ Yosemite!

*****************

Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

Foreword

This book has a collection of articles to cater to the needs of people with different tastes. They can be classified under five broad categories. 1) Temples, 2) Saints and Miracles, 3) Stories about Gem Stones , 4) Historical incidents and 5) Anecdotes . I struggled a lot to find a common title to the book and at last decided at the current title after several additions, commissions, and omissions.

The story of diamonds in Hindu literature starts with Bhagavata Purana. During Lord Krishna’s days,  the Syamantaka diamond caused murder and mayhem. I have written about it under  the title Hope Diamond in another book published already. Since these are written as separate articles for my blog over a period of 12 years, one can open any chapter and read it. There are over 40 topics dealing with the subjects mentioned above. In some articles I have added my personal experience as well. Hope our readers also find them interesting.

London swaminathan

October 2023

swami_48 @ yahoo.com

—– SUBHAM—

TAGS- BOOK ON SAINTS, HISTORICAL ATROCITIES, FESTIVALS.

QUIZ வைஷ்ணவ தேவி கோவில் பத்து QUIZ (Post No.12,976)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,976

Date uploaded in London – –   1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.104

1.வைஷ்ணவ தேவி கோவில் எங்கே இருக்கிறதுஎப்படிப் போகவேண்டும்?

xxxx

2.வைஷ்ணவ தேவி கோவிலின் சிறப்பு என்ன?

xxxxx

3.கோவிலுக்குச் செல்ல காட்டுப்பாடுகள் உண்டா ?

xxxx

4.கோவிலுக்குப் போவதற்கு குறுகிய குகை வழியாகச் செல்ல வேண்டுமா ?

xxxx

5.கோவிலுக்குள் யாரைத் தரிசனம் செய்யலாம் ?

xxxx

6.திருப்பதி மலை ஏறுவோர் கோவிந்தா கோஷம் போடுவார்கள்சபரிமலை ஏறுவோர் சரணம் ஐயப்ப கோஷம் எழுப்புவார்கள்வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்லும் கோடிக்கணக்கான பக்தர் எழுப்பும் கோஷம் என்ன ?

xxxxx

7.பாண கங்கா ஆறு எங்கே இருக்கிறதுஅதற்கும் தேவிக்கும் என்ன தொடர்பு ?

XXXX

8.பைரவன் காட்டிக்கும் ஐரோன்கட்டி BHAIRON GHATTI  க்கும் வைஷ்ணவ தேவிக்கும் என்ன தொடபு?ர்

XXXX

9.அர்த்த குமாரி / குவாரி குகை Ardhkumari cave என்பது என்ன?

XXXX

10.கோவில் எப்போதும் திறந்திருக்குமா ?

XXXX

விடைகள்

1.இந்தியாவின் வடகோடி மாநிலமான ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பிரதேசத்தில் திரிகூட மலையின் மேல் வைஷ்ணவ தேவி குகைக்கோயில் (VAISHNO DEVI TEMPLE) அமைந்துள்ளது . கத்ரா KATRA  என்பது அடிவார ஸ்தலம்; இங்கிருந்து கால்நடையாகவும் யாத்திரை செல்லலாம். தற்காலத்தில் ஹெலிகாப்டர் வசதி, பாட்டரியால் இயங்கும் கார் வசதிகள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் கால் நடையாக செல்ல முடியாதவர்கள்  குதிரை மீதும், பல்லக்கிலும் சவாரி செய்வார்கள். இதற்கான வசதிகள் அங்கே உண்டு . ஒவ்வொன்றுக்கும் கட்டணம் உண்டு.

.ஜம்மு நகரிலிருந்து 42 கி.மீ தொலைவில் கத்ரா உள்ளது .

5200 அடி உயரத்தில் கோவில் இருப்பதால் 14 கி.மீ பல ஏறுவதற்கு மணி நேரம் ஆகும். மிகவும் கடினமான ஏற்றம்

ஹெலிகாப்டர், பாட்டரி கார் வேண்டியோர் கோவிலின் அதிகாரபூர்வ வெப்சைட்டில், ஆன் லைன் வழியாக டிக்கெட்டும் வாங்கலாம்.

பாட்டரி காரில் ஏறுவதற்கு ஆறு  கி.மீ செல்ல வேண்டும் .மேலும்  எட்டு கிலோமீட்டரில் கார் மூலம் கோவிலை அடையலாம் ; இது வயதான பயணிகளுக்கு பாதி தூரம்  உதவும் சர்வீஸ்.

Helicopter services start from Katra on the foothills and the flight will drop you at Sanjhichatt. This visit to the sacred Shrine, enveloped by the clouds is the beginning of a breathtaking heli-hop.

The flight from Katra to Sanjichhat takes a total of approx. 08 minutes.

One way fare from Katra to Sanjichhat or Sanjichhat to Katra (Fare Rs.1830/- ) per passenger and Katra-Sanjichhat-Katra (Fare Rs.3660/-) per passenger.

Vaishnodevi Bhawan/temple is approx. 2.5 Km. from Helipad Sanjichhat.

 xxxxx

2.நாட்டிலேயே அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்கள்  பட்டியலில் வைஷ்ணவ தேவி கோவில் முதல் ஐந்து  இடங்களுக்குள் உள்ளது , அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது  வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1 .2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும்.

xxxx

3.உண்டு. கத்ரா நகரில் பதிவு செய்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் .

விமானப்பயணம் போல கத்தி கபடா , சிகரெட் முதலியவற்றுக்கு அனுமதி இல்லை ; முஸ்லீம் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தக் கட்டுப்படுகள். மேலும் இந்திய பாதுகாப்புப்படைகள் 24 மணி நேரமும் இந்த இடத்தைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளன . உடைக் (Dress Code) கட்டுப்பாடுகளும் உண்டு.

xxxx

4.முன்னர் இப்படி குகை வழியாகச் செல்ல வேண்டியிருந்தது . இப்போது இரண்டு செயற்கை சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுவிட்டன. உள்ளே, வெளியே என இரண்டு வழிகள்;  கோவில் தொடர்பான சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே குகைப்  பாதை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியும் இதன் வழியாகச் சென்றால் அதைக்கடக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது .இதனால் சுரங்க வழிகள் கட்டப்பட்டன.

xxxxx

5. கோவிலுக்குள் சக்தியை / தேவியை தரிசிக்கலாம். துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் இருப்பிடமாக   கருவறை கருதப்படுகிறது

மனித உருவில் ஒரு பக்தனுக்கு அருள்பாலித்த தேவி தனது உருவத்தை மறைத்து,  ஐந்தரை அடி உயரம், மூன்று தலைகள் (பிண்டி) உள்ள பாறையாக மாறினாள்; இதுவே குகையில் உள்ள மூலவர். இது தவிர உற்சவ மூர்த்திகள் இருக்கின்றன.

Meanwhile, Vaishnavi decided to shed off her human form and assuming the face of a rock she immersed her self into meditation forever. Thus Vaishnavi, in the form of a five and a half feet tall rock with three heads or the Pindies on the top is the ultimate destination of a devotee. These Pindies constitute the Sanctum Sanctorum of the holy cave known as the shrine of Shri Mata Vaishno Devi Ji, which is revered by one and all.

xxxx

6.,“ஜெய் மாதா தி” Glory/Victory to Mother. அன்னையின் நாமம் வாழ்க/ வெல்க!

xxxxx

7.கத்ரா நகரிலிருந்து புறப்படும் யாத்ரீகர்கள் முதலில் சந்திப்பது இந்த ஆறுதான். சுமார் 2 கி.மீ. தொலைவு.

தேவியானவள் திரிகூட மலைக்குச் செல்லுகையில்  அவருடன் வந்தவருக்கு தாகம் எடுக்கவே தேவி ஒரு அம்பு   விட்டு இந்த ஆற்றை உருவாக்கினாள் என்பது ஐதீகம். பெரும்பாலான யாத்ரீகர்கள் இங்கே குளித்துவிட்டு மலை ஏறத்துவங்குகிறார்கள் .

XXXXX

8.திரிகூட பர்வதத்தின் மற்றொரு சிகரத்தின் உச்சியில் இருப்பது பைரவர் கோவில். இதுதான் அதிக உயரமான இடம் . தேவியைத் தரிசித்த பின்னர் இங்கும் வந்து சிவனை தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் மூன்று கி.மீ பாதை மிகவும் ஏற்றம் கொண்டது.  இப்போது கம்பி வழி ரயில் பாதை ROPE CAR போட்டுவிட்டதால் ஐந்தே நிமிடத்தில் கோவிலை அடையலாம்.

xxxxx

9.பவன் என்று அழைக்கப்படும் கோவிலை அடைவதற்கு முன்னால்  அர்த்த குமாரி / குவாரி குகை இருக்கிறது . இங்கு ஒரு மகானுக்கு தேவி தரிசனம்  தந்தாள் ; மேலும் பவனை அடையும் முன்னர் ஒன்பது மாதங்களுக்கு இந்தக் குகையில் தங்கி இருந்தாள் என்பதால் புனித இடமாகக் கருதப்படுகிறது . இது 15  அடி நீள குகை ; இதை கர்ப்பா ஜூன் என்பர்.

XXXX

10.ஆண்டு முழுதும் கோவில் திறந்திருக்கும். ஆயினும் ஏப்ரல் முதல் அக்டோபர்  வரை  பருவ நிலை நன்றாக இருக்கும்.; போகும் வழி முழுவதும் நல்ல வசதிகளை செய்து இருக்கிறார்கள்; சாப்பிடுவதற்கு, தங்கி ஓய்வு எடுப்பதற்கு, மின்சார விளக்குகள் ஆகிய அனைத்தும் உண்டு . ஆகையால் எந்த நேரமும் பயணம் செய்யலாம்.

–subham—

Tags– வைஷ்ணவ தேவி,  கோவில் பத்து,  QUIZ  ,

ராம நாம மஹிமை – 7 (Post No.12,975)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,975

Date uploaded in London – — 1  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழா நன்கு தெய்வீகமாக நடந்து முடிந்துள்ளது.  ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது ஏழாவது கட்டுரை! 

ராம நாம மஹிமை – 7

ச.நாகராஜன்

தர்மம் சத்தியத்திலேயே நிலைநிறுத்தப்படுகிறது

சத்யமேகபதம் ப்ரஹ்ம சத்யே தர்ம: ப்ரதிஷ்டித: |

சத்யம் ஏகாக்ஷரமாகிய ஓம் என்ற ஒரே பதத்தால் தான் குறிக்கப்படுகிறது. தர்மம் சத்தியத்திலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் 14 – 7

*

ராமர் ஒருபோதும் தெளிவற்றுப் பேசமாட்டார்

ராமோ த்விநார்பிபாஷதே |

ராமர் ஒருபோதும் தெளிவற்று முன்பு ஒரு உரை, பின்பு அதற்கு மாறாய் வேறொரு உரை என்று பேசமாட்டார்.

அயோத்யா காண்டம் 18 – 30

*

தர்மத்திலேயே சத்தியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

தர்மோ ஹி பரமோ லோகே தர்மே சத்யம் ப்ரதிஷ்டிதம் |

உலகத்தில் தர்மமே உயர்ந்தது. உலகம் சத்தியத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. (நிலைநிறுத்தப்பட்டுள்ளது)

அயோத்யா காண்டம் 21 – 40

*

வீர்யம் இழந்தவனே விதிக்கு வசப்படுவான்

விக்லவோ வீர்யஹீனோ ய: ச தைவமனுவர்ததே | வீராஸ்ஸம்பாவிதாத்மானோ ந தைவம் பர்யுபாஸதே ||

வீரியத்தை இழந்த ஒருவனே விதிக்கு வசப்படுவான். ஏற்ற பிறவிக்குணங்களை உடைய வீரர்கள் விதிக்கு வசப்படமாட்டார்கள்.

அகஸ்மாத்தாய் ஒரு கஷ்டம் ஒருவனுக்கு சம்பவிக்குமாயின் அது நிவாரணமாய்ச் செய்ய வேண்டியவற்றை நிச்சயிக்க திறமையற்று சிந்தை கலங்கியவனாய் அந்த கஷ்டத்தை விலக்குவதற்கு வேண்டியதாகிய சக்தி இல்லாதவனாயிருக்கிறவன் எவனொருவனோ, அவன், அகஸ்மாத்தாய் நேர்ந்த கஷ்டத்தை அனுபவிக்கின்றான்; ஏற்ற பிறவிக் குணங்களையுடைய வீரர்கள் அகஸ்மாத்தாய் நேர்ந்த ஓர் கஷ்டத்திற்கு ஆட்படமாட்டார்கள்.

இங்கு வீர்ர்கள் என்ற சொல் வருகிறது.

வீரர்கள் யார்?

ஒரு காரியத்தை மேற்கொண்ட போது, காரியங்களை வீணாக்காத வண்ணம் முடிக்கும் குணமாகிய “பராக்ரமம்” என்பதையும், சரியாய் ஓர் தொழிலை நிச்சயிக்கும் குணமாகிய “விக்ரமம்’ அல்லது ‘மனோபலம்’ என்பதையும் எதையும் எப்போதும் தரும விதி வழுவாது செய்யும் குணமாகிய ‘தர்மசீலத்வம்’ என்பதையும் எவர்கள் கொண்டிருக்கிறார்களோ அவர்களே வீரர்கள் ஆவர்.

அயோத்யா காண்டம் 23 – 16

**

கணவனை விட்டுப் பிரிதல் சுமங்கலிக்கு கொடிய பாதகம்!

பர்து: கில பரித்யாகோ ந்ருசம்ஸ: கேவலம் ஸ்த்ரியா:

ஒரு பெண்ணுக்கு (சுமங்கலிக்கு) கணவனைப் பிரிதல் என்பது பாரம்பரியமாக முற்றிலும் விலக்கத்தக்கதான கொடிய பாதகம்.

அயோத்யா காண்டம் 24 – 12

**

கணவனே சுமங்கலிக்கு தெய்வம்

ஜீவந்த்யாஹி ஸ்த்ரியா பர்தா தைவதம் ப்ரபுரேவ ச |

உயிரோடிருக்கும் ஒரு சுமங்கலிக்கு  அவளது கணவனே பிரபு. ஏன் அவனே தெய்வம்.

அயோத்யா காண்டம் 24 – 21

**

கணவனுக்கு பணிவிட செய்பவள் ஸ்வர்க்கம் செல்கிறாள்!

பர்து: சுஷ்ருஷயா நாரீ லபதே ஸ்வர்கமுத்தமம் |

கணவனின் மனதிற்கு இசைந்தபடி ஏவல் செய்வதால் ஒரு சுமங்கலி உத்தமமான ஸ்வர்க்கத்தை அடைகிறாள்.

அயோத்யா காண்டம் 24 – 26

**

 வேதம் விதித்த தர்மம்

சுஷ்ருயாமேவ குர்வந்தி பர்து: ப்ரியஹிதே ரதா|

ஏஷ தர்ம: புரா த்ருஷ்டோ லோகே வேதே ஸ்ருத: ஸ்ம்ருத: ||

கணவனுக்கு மனம் கோணாமல் ஹிதம் விளைவிப்பதில் ஊக்கமுடையவளாய் சுஷ்ருஷை (பணிவிடை) செய்வதையே ஒருத்தி செய்து வர வேண்டும். இந்த தர்மம் உலகின் அனாதியான அனுஷ்டானம். வேதத்தில் பிரசித்தியாக உள்ளது. ஸ்மிருதியிலும் விதிக்கப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் 24 – 25

****

London Swaminathan’s New book On Havans, Homas, Yagas and Yagnas


Posted on 31-1-2024

Book title — Guide to Hindu Homa (Havan) and Festivals

Contents

1. 1.Four Hundred  Types of Yagas

1.a.Ganapati Homam -Guide to Hindu Homams (Havan)

2.Nava Graha Homam

3.Ayush Homam

4.Aavahanthi Homam

5.Jayathi Homam

6. Mrtyunjaya Homa

7.Ati Rudra Yagam

8.Vastu Homa

9.Purusha Sukta Homa, Sri Sukta Homa and Gayatri Homa

10.Chandi Homam, Bhagavad Gita Homam, Pratyankara sulini homam

11.Sudarsana Homam : Hindu Guide to Havan ,Homas and Yagas

12.Things needed for Puja, Havan, Homa and Yagna

13.Hindus’ Great Investment Festival Akshaya Trithiyai

14.Hindus celebrate Four Navaratris with Little Girl Puja

15.No one can beat Hindus in Fasting– Sir Monier Williams-1

16.No one can beat Hindus in Fasting– 2

17.No one can beat Hindus in Fasting– 3

18.Strange Hindu Vratas that Manu recommends!

19.Hindu Swastika Festival

20.Akshaya Navami Day is Important because of Rama’s Meeting with Bharata

21.Mahalaya Amavasai and Ancestors Worship

22. Ancestor Worship in Japan- Feast of Lanterns

23.Who named the Days of the week?

24.Is Saturday a Good Day ?- Part 1

25.Is Saturday a Good Day ?- Part 2

26. The Great Lamp Festival- Karthikai Deepam

27.An Interesting study of Boons and Curses

28.Haloes are Real: New Scientist

29.Phenomenal Memory Power of Hindu Ascetics!

30.Three Books on a ‘Deity with a Thousand Names’: Vishnu Sahasranama

***********************

Front Cover Picture- Gajalakshmi Lamp in Chennai Museum

 Foreword

Hindu ‘Fire ceremonies’ called Yaga, Yagna, Homa, and Havan are observed by the Hindus for thousands of years. My book is a collection of my articles written over ten years on this subject. I have added the festivals celebrated by the Hindus as well. It is not a comprehensive one. There are many more not reported here. But important rituals and fasts are covered in it. In the last section of the book,

 I have included my articles on Boons and Curses and  Haloes and Importance of Days of the  Week. In a way, they are all related to the title of book.

The fire ceremonies fall into a category which can be done only by the priests. Other festival rituals are done by housewives. Some may seek help from the priests. Hindus living in different parts of India celebrate some festivals on a grand scale. It differs from region to region; Hindus have celebrations all through the year. If a person keeps a festival calendar with him, then the person can enjoy festivals for all 365 days. This book serves as a short guide to those who want to know the basic details.

London swaminathan

2024

Swami_48@yahoo.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Book Title – Guide to Hindu Homa (Havan) and Festivals

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – 2024

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles and 116 Tamil and English Books

Visited 15 Countries:

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Greece and Sri Lanka

தூக்க மாத்திரை சாப்பிடலாமா?  உறக்கத்தைப் பாதிக்கும் 2 நோய்கள் (Post No.12,974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,974

Date uploaded in London – –   31 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

தூக்க மாத்திரை சாப்பிடலாமா?  உறக்கத்தைப் பாதிக்கும் இரண்டு நோய்கள் !

நம்முடைய நல்ல தூக்கத்தைக் கெடுக்கும் இரண்டு நோய்களை பற்றி அறிவது நன்மை பயக்கும் . உடலில் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனுக்கு மெலடோனின் / மெலடானின் Melatonin என்று பெயர் . 55  வயதைத் தாண்டியவர்களுக்கு மாதக்கணக்கில் தூங்குவது கஷ்டமாக இருந்தால் டாக்டர்கள் இதை எழுதிக்கொடுப்பார்கள் . பிரிட்டனில் டாக்டர்கள் சீட்டு எழுதிக் கொடுத்தால் (On Prescription)  மட்டுமே மருந்துக் கடைக்காரர் கொடுப்பார்கள் . பல நாடுகளில் நீங்களே வாங்கலாம் ; ஆனால் அது வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகையால் டாக்டர்களிடம் போனால் சரியான டோஸ் / அளவு தருவார்கள் . Melatonin is a hormone that occurs naturally in your body. Brand names in Britain: Circadin, Adaflex, Ceyesto, Slenyto, Syncrodin.

xxxx

உறக்கத்தைப் பாதிக்கும் இரண்டு நோய்கள்

தூக்கமின்மை – இன்சோம்னியா – INSOMNIA

மூச்சுத்திணறல்  – ஸ்லீப் அப்னியா – SLEEP APNEA

மெலடானின் குறைவினால் ஏற்படும் நோய்களுக்கு மருந்து, மாத்திரை உதவும் .

உடலில் இயற்கையாகச் சுரக்கும் மெலடானினை செயற்கையாக தயாரித்துக் கடைகளில் விற்கிறார்கள் ;. 55  வயதைக் கடந்தவர்களுக்கே டாக்டர்கள் இதைக் கொடுப்பார்கள் . ஜெட் லாக் JET LAG  எனப்படும் விமானப் பயணக் களைப்பு ,  உளைச்சல், உடலில், காலில் வலி  முதலிய பல கார ணங்களை இது சமாளிக்கும் . உடனே தூக்கம் வர உதவும். ஆயினும் தூங்கும் நேரத்துக்கு ஒரு சில மணி நேரம் முன்,  மாத்திரையை எடுக்கலாம். ஏனெனில் இது வேலை செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்.

பொதுவாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே இதை உபயோகிக்கலாம்.. சிலருக்கு இது தலைவலி, வாந்தி களைப்பு ஆகியவற்றைத் தரலாம். மதுபானம் சாப்பிடுவதும் புகை பிடிப்பதும் இதன் செயல்பாட்டினைத் தடுத்துவிடும்; மூலிகை மருந்துகளை உபயோகிப்பது நல்லதல்ல  அப்படி எடுத்தால் எப்போதும் தூக்கக் கலக்கம் (DROWSINESS)  இருக்கும்

Melatonin takes around 1 to 2 hours to work.

You’ll usually take melatonin for up to 13 weeks but some people may need it for longer.

Some people may get a headache, or feel tired, sick or irritable the day after taking melatonin.

Drinking alcohol or smoking while taking melatonin can stop it working as well as it should.

If you’re taking melatonin to help you sleep, do not take any herbal remedies which may affect sleep at the same time. This may make you very drowsy.

XXXX

ஸ்லீப் அப்னியா SLEEP APNEA

மூச்சுத்திணறி பெரிய குறட்டை விட்டு, பக்கத்தில் தூங்குவோரையும் எழுப்பிவிட்டு கஷ்டப்படுவோருக்கு , கஷ்டப்படுத்துவோருக்கு மூச்சு விட உதவும் கருவி உதவும் . ஸ்லீப் அப்னியா SLEEP APNEA என்று அழைக்கப்படும் இந்த நோய் ஏன் ஏற்படுகிறது என்றால் நாக்கு நழுவி மூச்சுக் குழாயின் / சுவாசக் குழாயின் மேல் விழுகிறது. உடனே பெருமூச்சுவிட்டு மீண்டும் சுவாசிக்கும் சக்தியைப் பெறுவோம் ; அதாவது மூச்சு நின்று மீண்டும் துவங்கும். மூச்சு விடும் கருவியைப் பொருத்திக்கொண்டு தூங்கினால் அது எப்போதும் சுவாச வழியைத் திறந்து வைக்கும் .

Sleep Apnea: Sleep apnea occurs when individuals breathing starts and stops periodically throughout the duration of sleeping causing excessive snoring or gasping for air.

மூச்சுத் திணறி மீண்டும் மூச்சுவிடும் நோயைப்பற்றி 18 ஆண்டுகளுக்கு ஆராய்ந்தார்கள் . 48 வயதில் ஆய்வு துவங்கியது அவர்களில் 58  சதவிகித்தனர் மட்டுமே 66  வயது வரை வாழ்ந்தார்கள்; அதாவது  குறைவான ஆயுளில் இறந்தது தெரிந்தது. இதே ஆராய்ச்சியில் பங்கு கொண்டவர்கள் 94  சதவிகிதம்  கூடுதல் ஆண்டுகள் வசித்தனர் . அவர்களுக்கு இந்த நோய் கிடையாது ; இறந்தவர்களில் பலருக்கு மாரடைப்பு , ஸ்ட்ரோக் ஏற்பட்டு இறந்தனர் . ஆகையால் நோயைக் குணப்படுத்த CPAP மெஷினை / கருவியைப் பயன்படுத்த வேண்டும் ; முதலில் அது ஒரு தொல்லையாக இருக்கும் ; பின்னர் பழகிப்போய்விடும்

CPAP (continuous positive airway pressure)

XXXX

One study followed people with and without sleep apnea for 18 years, starting at age 48. In the group that had sleep apnea, only 58% were still alive at age 66, compared to 94% of those without sleep apnea. That’s a 6- or 7-fold increased risk of death, mainly due to heart attack and stroke, “so it’s really important to get it treated,”

The standard therapy, called CPAP (continuous positive airway pressure), which uses a machine to keep airways open, can be cumbersome and hard to stick with, but most patients can adjust over time, experts said.

xxx

கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் தூங்குவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. அவர்களுக்குச்ச்  சரியான தூக்கம் கிடைக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது . ஏழு மணி எரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை தூங்குவது நீண்ட கால ஆரோக்கியத்தை அளிக்கிறது ;எனக்கு 5 அல்லது 7 மணி தூக்கம் போதும் என்று பெருமை அடித்துக்கொள்ளுவோர் பிற்காலப் பிரச்சனைகளுக்கு வித்திடுகிறார்கள் என்றே அர்த்தம்

Falling asleep anywhere anytime isn’t the sign of a good sleeper. It’s the sign of someone who is sleep-deprived.

Evidence suggests seven to nine hours of sleep provides the most optimal health and well-being. People who think they can get away with sleeping less are likely setting themselves up for health problems later on.

Lying in bed does not count as time sleeping.

படுக்கையில் படுக்கும் நேரம் எல்லாம் தூங்கும் நேரம் அல்ல; அதைக் கணக்கில் சேர்க்கக்கூடாது .

மன உளைச்சல் தராத சில செயல்களைச் செய்யலாம். நல்ல கதைகளைப் படிக்கலாம் ; படங்களைப்  பார்க்கலாம்

முக்கியமாக அறிய வேண்டிய விஷயம் ; நாம் தூங்கினாலும் மூளை தூங்காது ; அப்போதுதான் அது வேகமாக வேலை செய்து அசுத்தங்களை அகற்றுகிறது ; நினைவில் வைக்க வேண்டிய முக்கிய விஷயங்களை சேகரித்து வைக்கிறது ; அடுத்த நாள் வேலைக்கு ஆயுத்தத்தமாகிறது

Finally, experts say, sleep is not a time when the brain is “turned off.” The brain is not passive during sleep, but instead is actively firing, clearing waste, storing memories and preparing for the day.

வாழ்க தூக்கம்! வளர்க தூக்கம்!!

–subham –

Tags- உறக்கம் தூக்கம் , இரண்டு நோய்கள் , மெலடானின் , தூங்க உதவும் கருவி , மெஷின்

QUIZ கேதார்நாத் பத்து QUIZ (Post No.12,973)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,973

Date uploaded in London – –   31 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.103

1.கேதார்நாத் எங்கே இருக்கிறதுஎப்படிப் போகலாம் ?

xxxx

2.கேதார்நாத் என்றால் என்ன அர்த்தம் ?

Xxxx

3.கேதார்நாத் சிவனைப் பாடிய அடியார்கள் யார் இந்தக் கோவிலைக் காட்டியவர் யார் ?

xxxx

4.பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கேதார்நாத் செய்தியில் அடிபடக்காரணம் என்ன ?

Xxxx

5.கேதார்நாத் கோவில் ஆண்டு முழுதும் திறந்திருக்குமா ?

xxxx

6.இங்கே ஓடும் நதியின் பெயர் என்ன இது அமைந்த மலையின் பெயர் என்ன ?

xxxx

7.பீமன் – காட்டெருமை மோதல் கதை என்ன ?

xxxx

7.பாண்டவர் சிவ தரிசனத்துக்காக காத்திருந்தபோது ஒரு காட்டெருமை வந்தது. அதை பீமன் தாக்கினான் . அதன் முகம் இருந்த இடத்தில் முக்கோண சிவலிங்கம் தோன்றியது ;  பாண்டவர் அடையாளங்களைக் காட்டும் பல சின்னங்கள் உள்ளன . பாண்டு மஹாராஜா இறந்த பாண்டு கோஷ் என்னும் இடம் அருகில் உள்ளது .

xxxx

8.கோவிலுக்குள் சிவலிங்கத்தோடு வேறு என்ன மூர்த்திகளை தரிசிக்கலாம் ?

xxxx

9. ஆதி சங்கரர்  சமாதி எங்கே இருக்கிறது ?

xxxxx

10.அர்ச்சகர் பற்றிய புதுமை என்ன ?

xxx

விடைகள்

1. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில், இமய மலையின் உச்சியில் கேதார்நாத் இருக்கிறது.  கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது .தற்காலத்தில் ஹெலிகாப்டரில் சென்று இறங்கி சிவ லிங்கத்தைத் தரிசனம் செய்யலாம்.

கௌரிகுண்டில் இருந்து நடைபாதை வழியாக 18 கிமீ மலையேறிச் செல்லலாம் .பாதை குறுகலாக உள்ளதால் எந்த வாகனமும் செல்ல முடியாது. நடந்து தான் செல்ல வேண்டும். துவாதச ஜோதிர்லிங்க தலங்கள் எனப்படும் 12  சிவன் கோவில்களில் இதுதான் நாட்டின் வடகோடியில் உள்ளது.

xxxx

2.கேதார என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிலம் என்று பொருள்; முக்தி தரும் தாவரம் அங்கே வளருவதால்  இந்தப் பெயர் ஏற்பட்டதாக காசி கேதார மஹாத்ம்யம் கூறும் ; ஆங்கிலத்தில் செடார் CEDAR என்று அழைக்கும் மரம் , கேதார் என்பதன் மருவு என்றும் சொல்லலாம். அந்த மரங்கள் இமயமலையில் அதிகம் . இதை தேவதாரு (தேவர்களின் தரு/ மரம்) Cedrus deodara அல்லது deodar செடார் என்று சொல்லுவார்கள் . எப்படி பத்ரீ/ இலந்தை மரம் பெயரில் பத்ரீனாத் அழைக்கப்படுகிறதோ அப்படியே கேதார் / செடார் மரத்தின் பெயரில் கேதார் நாத அழைக்கப்படுகிறது

xxxx

3.இது சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் இருக்கிறது . இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், இக்கோவிலை அவர்களே கட்டியதாகவும் கருதப்படுகிறது

.xxxx

4. கேதார்நாத், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிப்படைந்தது. கோவிலைச் சுற்றி இருக்கும் பகுதிகள் பெரும் சேதமடைந்தாலும், கோவில்  வளாகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு பெரிய பாறை உருண்டு வந்து கோவிலுக்கு முன்னே நின்றது ; அது கோவிலை இடிக்கவில்லை என்பது அதிசயமே.

xxxx

5.கேதார்நாத்  கோவில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலத்தில்   விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்தில் பூஜையில் வைக்கப்படுகின்றன. இது , பஞ்ச கேதார தலங்கலு ள் ஒன்றாகும்.

xxxx

6.மந்தாகினி என்னும் நதிக்கரையில் கேதார்நாத் அமைந்துள்ளது .இது கங்கையில்  கலக்கும் நதி; இமயமலையின் ஒரு பகுதியான கார்வால் குன்றில் கோவில் இருக்கிறது .

xxxx

8.கோவிலுக்குள் பாண்டவர்கள், கிருஷ்ணர், நந்தி தேவர், வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம்.  கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது. அருகில்  சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோவிலும் உள்ளது.

கேதார்நாத்துக்கு தெற்கில் பைவரவர் கோவில் இருக்கிறது . மேலும் கோவிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் நேரு மலை ஏறும் பயிற்சி நிறுவனம் அமைத்த ருத்ர குகை இருக்கிறது Rudra Cave . இங்கு தியானம் செய்ய சகல நவீன வசதிகளும் உண்டு . பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து தியானம் செய்தார்.

xxxx

9.ஆதி சங்கரர்  உத்தரகண்டிலுள்ள பல கோவில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி  கோவி லுக்கு பின்புறம் உள்ளது.

xxxx

10.பத்ரீநாத்தில் ராவல் என்னும் கேரள நம்பூதிரி பிராமணர்களை ஆதிசங்கரர் பணியில் அமர்த்தினார் ; கேதார் நாத்தில் வீர சைவ அர்ச்சகரை நியமித்தார் .

கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூசைகளை தலைமை அர்ச்சகரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே  செய்கின்றனர். குளிர்காலத்தில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது..

–subham—

Tags-கேதார்நாத், ஆதிசங்கரர் சமாதி, ருத்ர குகை, பாண்டவர் , முக்கோண சிவலிங்கம்

தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 2 (Post No12,972)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,972

Date uploaded in London –  –   31 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

25-1-2024 அன்று ஞானமயம் சார்பில் நடைபெற்ற தைப்பூச நன்னாள் விழாவில் ZOOM வாயிலாக இணையதளத்தில் நடந்த ஒளிபரப்பில் ச.நாகராஜன் ஆற்றிய உரையின் இறுதிப் பகுதி.

இதை www.facebook.com/gnanamayam என்ற தளத்தில் கேட்கலாம்.

தைப்பூச நன்னாளில் வழிபாடு! – 2

ச.நாகராஜன்

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்னும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

என்று பாடி அருளினார் அப்பர் பிரான்.

சங்க நிதி, பத்ம நிதி இரண்டும் தந்து புவியுடன் வானை அரசாளத் தந்தால் கூட அவற்றை மதிக்க மாட்டோம். அவர் சிவபிரானை வழிபடாவிடில்.

அந்த செல்வம் ஸ்டாக் மார்க்கெட்டில் 1641 புள்ளி குறைந்தாற் போல திடீரென்று குறையும். ஆனால் அங்கமெல்லாம் தொழுநோய் கொண்டு ஆ உரித்துத் தின்னும் புலையன் என்றாலும் அவன் சிவபிரானை வழிபடுவானாகில் அவனே நான் வணங்கும் கடவுள் என்றார் அவர்.

சிவபிரானையே இப்படி மதிக்கும் போது தகப்பனுக்கே பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய தகப்பன் சாமியான முருகனுக்கு எவ்வளவு மகிமை என்பதைச் சொல்லவே வேண்டாம்.

முருகனின் பெருமை அபாரமானது. சூரபன்மன் பல அண்டங்களில் தனது ரிஸர்வ் படையை வைத்திருந்தான். முருகபிரானோ முதலில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்து முதலில் ரிஸர்வ் படைகளை ஒழித்தார்.

சூரன் பயந்தான். பின்னர் அவனை வதம் செய்தார் முருகபிரான்.

முருகனை எப்படி வழிபடுவது?

தத் சிந்தனம்

முதலில் அவனையே நினைக்க வேண்டும்.

தத் வாக்யம்

அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

தத் அவலோக்யம்.

அவன் புகழ் பேசும், பெருமை கூறும் நல்லோருடனேயே நெருங்கிப் பழக வேண்டும்.

தத் சிந்தனம், தத் வாக்யம் தத் அவலோக்யம் என்ற இந்த மூன்றையும் கடைப்பிடித்தால் வருவது

தத் பரம்.

அவனாகவே ஆகி விடலாம்.

இப்படி வழியை நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் கூறுகிறார்.

இந்த பக்தி வழியால் பெறுவது என்ன?

அதையும் அவரே கூறுகிறார்.

புமான் அதாவது மனிதனானவன்,

த்ருப்த பவதி

திருப்தியை அடைகிறான். எளிதில் அடைய முடியாதது திருப்தி. அதை ஒருவன் அடைய  முடியும்.

பின்னர் அம்ருத பவதி. எப்போதும் இன்பநிலை அவனை ஆட்கொள்ளும்.

அந்த அம்ருத நிலையை அவன் அடைகிறான்.

பின்னர் சித்த பவதி.

சித்தர் என்றால் அனைவருக்கும் தெரியும். எண்வகை சித்திகளைப் பற்றி நாம் அறிவோம். அப்படி சித்தராக ஆகிறான்.

அருணகிரிநாதர் திருப்புகழில் அனைத்தையும் உரிய முறையில் வேண்டுகிறார்.

இக பர சௌபாக்யம் அருள்வாயே.

இக லோக சௌபாக்யம் மட்டுமல்ல, பர லோக சௌபாக்யம் அருள்வாயே என்கிறார்.

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி என்று கூறுகிறார்.

மதியால் வித்தகன் ஆனால் மட்டும் போதாது. அந்த வித்தக புத்தியைக் கொண்டு ஃப்ராடு வேலைகளில் ஈடுபடலாம். ஆகவே உடனேயே மனதால் உத்தமனாகி என்கிறார்.

இப்படி இரட்டை இரட்டையாக அவர் கூறும் மொழிகள் நாம் வேண்டுவனவற்றைத் தவறில்லாமல் வேண்டுவனவாக அமைகின்றன.

திருப்புகழைப் பாடாதே கோவிலுக்குச் செல்லாதே என்பவர் பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாது.

திருப்புகழைப் பழிப்பவர் என்ன ஆவர்?

இதையும் அருணகிரிநாதரே கூறுகிறார்:

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்

   செகுத்தவர் உயிர்க்கும் சினமாக

   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

       திருப்புகழ் நெருப்பென் றறிவோம் யாம்

என்பது அவர் வாக்கு.

திருப்புகழை ஓதினால் என்ன கிடைக்கும்?

இதையும் அவரே விளக்குகிறார்:

நினைத்ததுமளிக்கும் மனத்தையுமுருக்கும்

   நிசிக்கருவறுக்கும் பிறவாமல்

   நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்

   நிறைப்புகழ் உரைக்குஞ் செயல்தாராய்.

நெருப்பையே எரிக்கும். அக்னிக்கு அக்னி என்கிறார் அவர்.

ஆகவே இதை ஓதுவோருடன் மட்டுமே இணைவோம், செல்வோம்!

If you come with You

If you don’t without you

If you appose inspite of you.

வந்தால் உன்னுடன். வராவிட்டால் நி இன்றி, எதிர்த்தால் உன்னையும் மீறி என்பதே இதன் பொருள்.

இந்த நன்னாள் முருகபிரான் வள்ளியை மணம் புரிந்த நாள். தெய்வானையுடன் ஏற்பட்ட ஊடல் தீர்ந்து முருகன் தெய்வானை வள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு கூடி பக்தருக்கு அருள் பாலிக்கும் நாள் இது.

பக்தன் ஒருவன் மலைப்பாதையில் செல்ல வேண்டி இருந்தது.

கடுமையான பாதை. முள் ஒரு பக்கம்; சகதி ஒரு பக்கம்.

‘கடவுளே எனக்கு உதவி புரிய மாட்டாயா’ என்று அவன் ஓலமிட்டான்.

பகவானின் குரல் கேட்டது  – உனக்கு என்ன பிரச்சனை என்று.

மலைப்பாதை கரடு முரடாக இருக்கிறதே; இந்த பாதை நல்ல பாதையாக மாறும் வரைக்கும் எனக்கு நீ உதவி செய்தால் போதும் என்றான் பக்தன். கடவுள் சரி என்றார்.

கடவுளுக்கும் பக்தனுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது – கடவுள் கூடவே வருவதாக. நான்கு பாதங்கள் பூமியில் தென்பட்டன. கடவுளின் பாதம் இரண்டு முன்னே செல்ல, பக்தனின் பாதம் பின்னே சென்றது.

நான்கு காலடிகளைக் கண்ட பக்தன் மனம் மிக மகிழ்ந்தான்.

பாதை இன்னும் கரடு முரடானது. திடீரென்று இரண்டு பாதங்கள் மட்டுமே தென்பட்டது.

பக்தன் அலறினான்:

‘கடவுளே கடவுளே என்னைக் கை விட்டு விட்டீரே, God has never broken a promise ever spoken என்பார்களே, எனக்கு கொடுத்த Promise ஐ நீங்கள் காப்பாற்றவில்லையே. இரண்டு பாதங்கள் தானே தெரிகிறது. உங்களது தடங்களைக் காணோமே’ என்றான் பக்தன்

‘அட முட்டாளே நீ பார்ப்பது எனது பாதங்களை. உன்னை என் தோள் மீது தூக்கிக் கொண்டு சுமக்கிறேன், உன்னால் இந்தப் பாதையில் நடக்க முடியாது என்பதால்’ என்றார் கடவுள்.

இப்படி கஷ்டமான காலங்களில் முருகன் நம்மைத் தோள் மீது சுமந்து செல்வார்.

இதற்காக நாம் முருகனுக்கு எதுவும் விசேஷமாகச் செய்ய வேண்டியதில்லை.

வெள்ளை நிற மல்லிகையோ

   வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்ந்த

   மலர் எதுவோ?

வெள்ளை நிறப் பூவுமல்ல

   வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி

     உத்தமனார் வேண்டுவது.

ஆம், உள்ள்ன்புடன் முருகனைத் துதித்தால் போதும். அவன் அருள் கிடைக்கும்.

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

சுமார் 267 இடங்களில் அவர் அருள்வாயே என்று கூறி முருகனின் அருளை வேண்டுகிறார்.

எல்லாவற்றையும் இங்கு கூற முடியாது என்றாலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம்  

    பஞ்சஇந் த்ரிய வாழ்வைக்

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்

   கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே

பாடல் எண் 15 –  தடக்கை பங்கயம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஐம்பொறிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த வாழ்வை, நொடியிலே வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்ய என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!

 திருப்பரங்குன்றம்  

    துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்

     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்

       துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே

பாடல் எண் 16 –  பதித்த செஞ்சந்த எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்குத் தந்து அருள்வாயாக!


திருப்பரங்குன்றம்  

    இசைத்திடுஞ் சந்த பேதம்

      ஒலித்திடுந் தண்டை சூழும்

         இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே

பாடல் எண் 20 –  வரைத்தடங் கொங்கை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த நினது திருவடிகளாகிய தாமரைகளைத் தந்து அருள்வாயாக!

திருச்செந்தூர் 

     செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்

       திருவடியி லணுகவர – மருள்வாயே

பாடல் எண் 28 –  அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்

பொருள் : என்னை நெருங்கியுள்ள நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும், என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக உனது உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் அருள்வாயாக!

திருச்செந்தூர்

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு

   மலர்தாட் கமல  மருள்வாயே

பாடல் எண் 72 –  நிலையாப் பொருளை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நினது மலர்த் தாமரையைத் தந்தருள்வாயாக!

இப்படி முருகனின் அருளைப் பெறுவதே நமக்கு வேலையாக இருக்கட்டும்.

மிகச் சிறந்த முருகன் அடியார் ஒருவரைப் பார்த்து உங்கள் வேலை என்ன என்று கேட்டார் பக்தர் ஒருவர்.

தோகை மேல் உலவும் கந்தன் சுடர் கரத்திருக்கும் வெற்றி

வாகையே சுமக்கும் வேலை வணங்குவதே எமக்கு வேலை

என்றார் அவர்.

வேலை வணங்குவதே எமக்கு வேலை என்ற அவர் சொற்படி நாமும்

வெற்றி தரும் வேலை வணங்குவதை வேலையாகக் கொள்வோம்.

இந்த வாய்ப்பினைத் தந்த ஞானமயம் குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்து எனது உரையினை முடிக்கின்றேன்.

நன்றி வணக்கம்.

***

Tips for Better Sleep

Article lifted from U S A Today dated 30-1-2024

Posted here on 30-1-2024

Most of us struggle to get a good night’s sleep. Here’s what experts suggest.

KAREN WEINTRAUB   USA TODAY, 30-1-24

Almost everyone is familiar with the sensation of tossing and turning in bed, finding sleep elusive.

For some, that’s a rare event. For others, it’s every night.

There are myriad reasons. Biology. Time of life. Illnesses.

But for most people, there are ways to improve both the quantity and quality of sleep.

These strategies take knowledge, discipline, ingenuity and maybe a good fan – not medication or gizmos and gadgets, according to experts. The vast majority of people can even continue their caffeine habits. At least, in moderation and in the morning.

“The best sleep comes when we’re practicing the healthy sleep strategies that set us up for success at night,” said Rebecca Robbins, an investigator in the division of Sleep and Circadian Disorders at Brigham and Women’s Hospital in Boston.

How to fall asleep fast: ‘Don’t try so hard’

For the roughly 15% of people who struggle to consistently get a good night’s sleep, researchers like Harvard University’s Dr. Charles Czeisler have a lot of advice, starting with a simple suggestion: Don’t worry so much.

Even a well-rested person takes 15 to 20 minutes to fall asleep and older people take the same amount of time to fall asleep or fall back asleep as younger ones. “It’s important not to throw in the towel on the night just because you have awakened,” Czeisler said.

Sleep hygiene

The term “sleep hygiene” refers to good habits and practices that can help people sleep well most nights.

Here are some basics:

  • Go to bed and wake up at roughly the same time every night. Drastically different bedtimes will confuse your body clock and make it harder to fall asleep.
  • While some people might need a bedtime snack to fall asleep, others find food before bed disruptive. “Breakfast of kings, lunch of princes, dinner of paupers,” works best for most people, Robbins said. In other words, eat a lot in the morning, modestly in midday and not as much at night.
  • Avoid drinking “nightcaps.” While alcohol at night might help people fall asleep initially, it has been shown to disrupt sleep later and makes sleep apnea worse.
  • If you’re sensitive to caffeine, avoid consuming too much, especially in the afternoon. If you’re not sure, try an experiment for a week, cutting back or eliminating it entirely.
  • Manage stress. Meditation or breathing exercises can help decompress.
  • Keep naps short and not close to bedtime.
  • Get as much natural light as you can in the morning. This sets up circadian rhythms and helps with alertness in the morning.
  • Some sleep researchers have special lights in their homes or software on their computers (f.lux is one) to limit exposure to blue light in the evenings. Blue light is what signals “morning!” to the brain.
  • Have a bedtime routine. This includes turning off devices like phones and bright lights and other stimulating activities for a period of time.
  • Feel the need for noise? Opt for a fan, not the television, said Dr. James Rowley, president of the American Academy of Sleep Medicine board of directors. “There’s no yelling and no car crashes” on a fan. Even reading can be too stimulating for some.
  • A phone “needs to be face down on the side of the bed being charged and it should not be on you,” Rowley said.

Medications can work, but at a cost

Drugs developed as sedatives work pretty well in the short term, Rowley said.

He worries more about people using drugs designed for other purposes like allergy or cold medicines that have sedation as a side effect. “That’s where a lot of us get upset,” Rowley said, speaking about the feelings of sleep specialists.

One patientwho recently came into his office, was taking an “all natural” sleep aid that included about 15 ingredients, all of which might interact with other medications. “You have to be cautious,” he said.

Melatonin has not been shown to be effective for insomnia in any research trial.  In addition, most people do not use it correctly, using either too high a dose or taking it too close to bedtime to make a difference, Rowley said.  

“If melatonin’s going to help you, it’s probably going to help at .5 to 3 (mg),” Rowley said. “Not that it’s great for insomnia, but if it’s something you want to try, low doses are probably better than high doses.”

Plus, Martin said, “If you have a hard time staying asleep and you’re taking melatonin in the evening, it might actually make your problem worse, not better.”

At least one new drug therapy is now in late-stage clinical trials, but researchers said they’re withholding judgement until they see whether new medications perform better than existing ones or than behavioral changes.

Much better than medications so far is a kind of talk therapy called cognitive behavioral therapy for insomnia or CBT-I, Martin said.

CBT-I trains people to avoid behaviors and ways of thinking that make their insomnia worse.

“The way people think and the actions they take are what sustains their insomnia problems,” Martin said. “If we can help people get into bed in a better mindset and structure their sleep and wake habits and routines in a way that makes sleep most likely to happen when they’re in bed, that seems to get people back on track.”

When to get medical help: sleep apnea

People who have true sleep issues need to have them addressed by a specialist, the experts said. And sleep problems are more common with advancing age.

Many physical and mental ailments are associated with sleep problems. People with ADHD, autism or depression often report problems with sleep, for instance. Getting help with sleep issues may limit other symptoms.

Typically, a sleep issue that lasts more than about three months, should be treated, as should sleep apnea, which is often characterized by loud snoring and choking that wakes someone up (and often the person next to them).

One study followed people with and without sleep apnea for 18 years, starting at age 48. In the group that had sleep apnea, only 58% were still alive at age 66, compared to 94% of those without sleep apnea. That’s a 6- or 7-fold increased risk of death, mainly due to heart attack and stroke, “so it’s really important to get it treated,” Czeisler said.

The standard therapy, called CPAP (continuous positive airway pressure), which uses a machine to keep airways open, can be cumbersome and hard to stick with, but most patients can adjust over time, experts said.

One widely used brand was recalled in 2021 year, stigmatizing the industry and confusing patients. Supply chain problems with the microchips used in the devices meant many people went without CPAP machines for long periods. These barriers unfortunately persist and limit treatment of an already complex and hard-to-address condition Robbins said.

Other apnea treatments include implantable devices, which are increasingly being covered by health insurance, and surgery.

Busting myths about sleep

In a study published in 2020, Robbins and Czeisler, among other experts, weighed in on 20 popular myths about sleep. Robbins recently offered a take on some of the most enduring ones.

Falling asleep anywhere anytime isn’t the sign of a good sleeper. It’s the sign of someone who is sleep-deprived.

Evidence suggests seven to nine hours of sleep provides the most optimal health and well-being. People who think they can get away with sleeping less are likely setting themselves up for health problems later on.

Older adults don’t need less sleep than younger ones, though they often get less, because they don’t sleep as well and are more likely to have disrupted sleep.

When you sleep does matter. Eight hours of shut-eye in the middle of the day are not as restful as eight hours in the darkness, though it’s better than less sleep.

Lying in bed does not count as time sleeping.

Staying in bed isn’t a good idea if you can’t fall asleep. Instead, experts suggest changing your environment, doing low-stress activities for a little while before trying again to fall asleep. That doesn’t mean picking up your phone or getting work done, but maybe taking a warm shower or doing some stretching until you feel tired.

Finally, experts say, sleep is not a time when the brain is “turned off.” The brain is not passive during sleep, but instead is actively firing, clearing waste, storing memories and preparing for the day.

In general, Robbins said, the public has begun to realize sleep is just as important as diet and exercise in maintaining health.

“Gone are the days of bragging about not getting enough,” she said.–subham—

Tags- sleep, tips, USA today.