திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் -40 (Post No.12,857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,857

Date uploaded in London – –   28 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 40

கோவில் எண்கள் –45,46

45.திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில்

தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்தப் புகழ்பெற்ற (Trichambaram Krishna Temple) கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. இதை வடக்கு குருவாயூர் என்று அழைப்பர். இது வட கேரளத்தில் உள்ள முக்கியக் கோவில். கண்ணனுர் (கண்ணூர்) மாவட்டத்தில் இருக்கிறது .

கம்சனை வதம் செய்துவிட்டு வந்த கிருஷ்ணனை, அதே ருத்ர ரூபத்தில் காட்டுகிறது இங்குள்ள கிருஷ்ணன் சிலை .

சிறப்பு அம்சங்கள்

சம்பர வனத்தில் சம்பர மகரிஷி தவம் செய்து இறைவனுடன் ஐக்கியமான புண்ய பூமி இது.

இந்தக் கோவிலில் உள்ள ஓவியங்கள் கண்களைக் கவரும் வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. சிற்பங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பங்களும் ஓவியங்களும் 200 முதல் 400 ஆண்டுப் பழமையானவை. இங்கு அமைக்கப்பட்ட மரச் சிற்பங்கள் பாகவத புராண (கிருஷ்ணர் வரலாறு) நிகழ்ச்சிகளை சித்தரிக்கின்றன

இங்கு துர்க்கை அம்மன் குளத்துக்கு நடுவில் கோவில் கொண்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்தது.  துர்கா உறையும் குளம் புண்ய தீர்த்தம் என்பதால் யாரும் குளிக்க அனுமதி இல்லை. கோடை காலத்திலும் கூட குளம் வற்றாமல் ஒரே மட்டத்தில் நிற்பது ஒரு அதிசயமே

கோவில் வரலாறு

கேரளத்தின் ஒரு பகுதியை எலி வம்சத்தினர் ஆண்டார்கள். ஸம்ஸ்க்ருதத்தில் எலி வம்சத்தை மூஷக வம்சம் என்பார்கள். அதுல என்னும் கவி, மூஷக வம்ச காவியத்தை இயற்றினார். 11-ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆண்டார்கள் அந்த வம்ச அரசர்களில் ஒருவரான வலபன் என்பவன் திருப்பணி செய்ததை காவியம் குறிப்பிடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது என்பது புலப்படுகிறது .

இரண்டு வினோத வழக்கங்கள்

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் ஆனக்கொட்டில் இருக்கும் அங்கே பல யானைகளைக் காணலாம். ஆனால் திருச் சம்பரம்கோவிலில் யானைகள் இல்லை; கிருஷ்ணன் கொன்ற கம்சனின் யானையின் பெயர் குவலயா பீடம். அவன் யானையைக் கொன்றபின்னர் கம்சனின் வம்சத்தையே துவம்சம் செய்தான். அதனால் இந்தப் பக்கமே யானைகளைக் கொண்டுவரக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இதைச் சோதிக்க முற்பட்ட ஒரு முஸ்லீம் வியாபாரியும் மன்னிப்புக் கேட்கும் சம்பவம் நடந்தது. அவர் வாங்கிய புதிய யானையில் கோவிலைச் சுற்றி பவனி வந்தார். கிழக்கு கோபுரம் அருகில் அந்த யானை வந்த பொழு து இடி ஓசையுடன் கோவில் கதவுகள் திறந்தன. யானை முன்கால்களை மடித்து அமரவே, மாவுத்தன் தூக்கி எறியப்பட்டான். வியாபாரியும் தவற்றை உணர்ந்து கோவிலுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார் .

இன்னொரு வினோத வழக்கம், சந்நிதி திறந்தவுடன் நைவேத்தியத்தை கிருஷ்ணனுக்கு படைப்பது ஆகும். ஏனென்றால் கம்சனைக் கொன்ற பின்னர், கண்ணன், பசியுடன் இருந்ததால் யசோதையிடம் சென்று அம்மா, சோறு போடு என்றானாம்.

துலுக்கப்படைகள் அட்டூழியம்

திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்  இடிக்காத இந்துக் கோவில்கள் வட கேரளத்தில் இல்லை. திருச்சம்பரம் கிருஷ்ணன் கோவிலும் முஸ்லீம்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் கடந்த 200 ஆண்டுகளில் கோவில் திருப்பணிகள்  அடுத்தடுத்து நடந்தன. ஆயினும் நடுவிலுள்ள கர்ப்பக்கிரகப் பகுதி சதுர வடிவில் உள்ளதால் இது பழைய பகுதி என்பது வரலாற்று அறிஞர்களின் துணிபு.

இலஞ்சி மர அற்புதம்

கடுமையான தோல் நோயுடைய ஒருவர் ஆறாத புண்களுடன் இந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்தார்; கோவில் திறந்தவுடன் கண்ணனைத் தரிசித்துவிட்டு கோவிலுக்கு வெளியேயுள்ள இலஞ்சி மரத்துக்கு அடியில் அமர்ந்து பிராத்தனை செய்து வந்தார். மரத்தின் காய்கள் உடலில் விழும்போது வலியால் அலறுவார் ; கண்ணா இப்படி என்னைக் கொடுமைப்படுத்துகிறாயே என்று அலறியவுடன் மரம், காய் காய்ப்பதையே நிறுத்திவிட்டது; அவருக்கும் நோய் குணமானது இதை நினைவுபடுத்தும் வகையில் திருவிழாக்காலத்தில் கண்ணன் உருவம் மரத்துக்கு முன்னால் நிறுத்தப்படும். பக்தர்கள் அதன் இலையில் மோதிரத்ததை வைத்து தமது கோரிக்கைகளை எடுத்துரைப்பார்கள்.

வினோத விழா

கும்ப மாதத்தில் (மார்ச்) ஆண்டு உற்சவம் நடக்கும். அப்போது 6 கி.மீ. தொலைவிலுள்ள தாராம்குளங்கரை கோவிலிலிருந்து பலராமர் சிலை ஊர்வலமாக வரும். இரண்டு இடங்களிலும் யானைகள் தடை செய்யப்பட்டதால் கிருஷ்ணர், பலராமர் உருவங்களை அர்ச்சகர்கள் தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே வருவார்கள் ; இரவு முழுதும் இந்த ஆட்டம் நடக்கும் ; இவை எல்லாம் கோவிலுக்கு வெளியேயுள்ள மைதானத்தில் நடப்பதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்க்க வருகிறார்கள் .

முன் காலத்தில் கோவிலுக்குள் இந்த டான்ஸ்/ நடனம்  (திடம்பு நிருத்யம்) நடந்தது. ஒரு பக்தை இதைக்காண முடியாமல் வருந்தி பிரார்த்தித்தார். அப்போது நடனம் ஆடிய அர்ச்சகர்கள் மெய் மறந்து கோவிலுக்கு வெளியே 2 பர்லாங் தூரம் சென்று பூக்கொத்து இல்லத்தில் இருந்த பக்தை முன்னர் ஆடினார்கள். அவர்கள் தலையில் சுமந்து வந்த விக்கிரகங்களை அம்மையாரும் தரிசித்து மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து இப்போதும் கோவிலுக்கு வெளியே இந்த நடனம் நடக்கிறது .

.xxxxxx

46. வேட்டைக்கொரு மகன் கோவில்கள் 150

சிவ பெருமானை வேட்டைக்கொரு மகன் என்ற பெயரில் வேடுவன் (கிராத மூர்த்தி) வடிவத்தில் Vettakkorumakan Temple வணங்கும் 150 கோவில்கள் கேரளத்தில் உள. அவை பாலுசேரி, நீலாம்பூர், காயங்குளம் கிருஷ்ணாபுரம், எருவட்டிக்காவு, ஆலப்படம்பா, நீலேஸ்வரம், கோட்டக்கல், கோழா, ஒலசா படிஞ்சாரேப்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன.

அர்ஜுனன், சிவ பெருமானை வேண்டி பாசு பத அஸ்திரம் பெற்ற கதை எல்லோருக்கும் தெரியும்; காட்டில் சிவனை நோக்கி தவம் செய்கையில் மூகன்  என்ற அசுரன் பன்றியாக வந்து தவத்தைக் கலைக்கவே அர்ஜுனன் அம்பு எய்தான்; வேடர்கள் உருவத்தில் சிவனும் பார்வதியும் வந்திருந்ததால் சிவனும் பன்றி மீது அம்பு விட்டார். பன்றி இறந்தவுடன் யார் விட்ட அம்பு பன்றியைக் கொன்றது யார்?என்று பட்டிமண்டபம் நடத்தினர். அது கைகலப்பில் முடிந்தது; சிவன் மீது அர்ஜுனன் விட்ட அம்புகளை எல்லாம் வேட்டுவச்சி பார்வதி மலர் அம்புகளாக மாற்றினாள் . சிவனை வேட்டைக்கொரு மகன் என்று அழைத்து பழங்குடி இன மக்கள் கோவில் எழுப்பினர் .

பாலுசேரி என்னும் ஊர் கோழிக்கோட்டிலிருந்து 25 கே.மீ. வட கேரளம் எனப்படும் மலபார் பகுதியில் வேட்டக்கொரு மகன் கோவில்கள் அதிகம். அந்த வட்டார ராஜ வம்சத்தினர் அவரை வழிபட்டனர் .

ஐயப்பனை ஹரிஹர புத்ரன் என்று அழைப்பது போலவே வேட்டைக் கொரு மகனையும் சிவன்-    பார்வதி பிள்ளை என்று கருதும் கதையும் உண்டு. அவன் சிறுவயதில் அதிக விஷமங்களைச் செய்யவே,  கானகம் வாழ் ரிஷி முனிவர்கள் கவலையுற்று இறைவனிடம் முறையிட்டனர் விஷ்ணுவும் வேடன் போல வந்து ஒரு தங்க சூரிகாவை (கத்தி) காட்டினார்; அதை அவன் வேண்டவே, மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவனிடம் அளித்தார். அவன் முதலில் நுழைந்த இடம் பாலுசேரி கோட்டை.

அங்குள்ள கோவிலில் கொடி மரமும் கோபுரமும் இல்லை. ஆயினும் வருவோருக்கு எல்லாம் உணவு படைக்கப்படும் பாடல்கள் மூலம் வழிபடும் வினோத வழக்கம் இருக்கிறது ; அது தவிர பெரிய உருவத்தில் சித்திரங்களை வரைந்து, விழா முடிந்த பின்னர் அந்த வண்ணப்பொடியை விபூதி போல பிரசாதமாக வழங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆண்டுதோறும் ஐயப்பன் மண்டலபூஜை காலத்தில் 41 நாள் உற்சவம் நடக்கும் ;நாற்பத்தி ஒன்றாம் நாளில் வேட்டக்கொருமகன் உருவம் தரையில் சித்திரமாக வரையப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூஜை செய்யப்படுகிறது. சில கோவில்களில் இவ்வுருவம் 20x 12 அடி நீள அகலம் இருக்கும் .

பெரும்பாலான  கோவில்களில் இரண்டு கரங்கள் மற்றும் உருட்டி விழிக்கும் கண்கள், தாடி, முறுக்கு மீசையுடன் வேடன் உருவில், வலது தோளின் பின்புறம் அம்புறாத்துணி, வலக்கையில் உடைவாள், இடக்கை வேல், வில் இரண்டையும் சேர்த்துப் பிடித்திருக்க, கால்களில் தண்டை அணிந்த நிலையில் காட்சி தரும் வேட்டைக்கொரு மகன் படங்களே வழிபாட்டில் உள்ளன. சில இடங்களில் மட்டும் இதே உருவத்தில் சிலைகள் இருக்கின்றன ; இவரை வணங்கினால் பயம் விலகும் என்பது நம்பிக்கை .

பகவதி கோவில்களில் நடத்தப்பெறும் ‘களமெழுத்துப் பாட்டு’ போன்று இக்கோவிலிலும் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது தேங்காய் எறிச்சல், வெளிச்சப்பாடு ஆகியன நடக்கும்

பந்தீராயிரம் விழா : இந்தக் களமெழுத்துப் பூஜையின் போது இங்குள்ள இறைவனை மகிழ்விக்கச் செய்யும் சடங்காக ‘வேட்டக்கொருமகன் பாட்டு’ இடம் பெறுகிறது. இப்பாட்டின் ஒலிக்கேற்ப 12,000 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.

–SUBHAM–

TAGS- வேட்டைக்கொரு மகன்,  கோவில்கள் , 12000 தேங்காய் , களமெழுத்துப் பாட்டு, கிராதமூர்த்தி, பாசுபத அஸ்திர கதை, திருச் சம்பரம், கிருஷ்ணன் கோவில், பாலுசேரி

அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்! (Post.12,856)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,856

Date uploaded in London –  –  28  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்!

ச.நாகராஜன்

ஶ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையில் பல சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு.

இவற்றைப் புராணங்களிலும், மஹாபாரதத்திலும், பின்னால் எழுந்த நூற்றுக் கணக்கான நூல்களிலும் காணலாம்.

ஶ்ரீ கிருஷ்ணரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு இது:

பலியின் புதல்வன் பாணன். அவன் மிகப் பெரும் வலிமை வாய்ந்த அசுரன்.

அவனுக்கு ஆயிரம் கரங்கள். ஒரே சமயத்தில் ஐநூறு வில்களை எடுத்து ஐநூறு பாணங்களைத் தொடுத்து அவனால் விட முடியும். அப்படி ஒரு வல்லமை!

அவன் ஒரு சிவ பக்தன். கடுமையான தவத்தை நெடுங்காலம் மேற்கொண்ட அவன் சிவ தரிசனம் பெற்றான்.

அவன் விசித்திரமான ஒரு வரத்தை சிவனிடம் யாசித்தான். தன் அரண்மனை வாயிலில் வாயில் காப்போனாக சிவன் இருக்க வேண்டும் என்ற வரம் அது.

சிவனும் வரத்தை ஈந்தார். வாயிலைக் காக்கும் பணியை மேற்கொண்டார்.

பாணனுக்கு அழகான ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் உஷா.

ஒரு நாள் தனது கனவில் அவள் அழகிய ராஜகுமாரன் ஒருவனைக் கண்டாள். அவனோடு மிகவும் சந்தோஷமாக வாழ்வதாக அந்தக் கனவில் அவள் கண்டாள்.

கனவிலிருந்து விழித்தெழுந்த பின்னரும் அந்த அழகிய ராஜகுமாரனை அவளால் மறக்க முடியவில்லை.

அவளுக்கு ஒரு தோழி. அவள் பெயர் சித்ரலேகா.

சித்ரலேகாவிற்கு அபூர்வமான ஒரு கலை தெரியும். 

தான் கண்ட அல்லது கற்பனை செய்யும் எந்த உருவத்தையும் அவளால் வரைய முடியும்.

அவளிடம் உஷா தான் கண்ட கனவைச் சொல்லவே, பல ராஜ குமாரர்களின் படத்தை வரைந்து காண்பிக்க ஆரம்பித்தாள் சித்ரலேகா.

அநிருத்தனின் படமும் அதில் ஒன்று.

அதைப் பார்த்த உஷா அசந்து போனாள்.

அச்சு அசலாகத் தன் கனவில் வந்த அதே உருவம் தான் அது!

சித்ரலேகா தனது யோகசக்தியினால் தனது அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை அலாக்காகத் தூக்கி வந்து உஷாவிடம் ஒப்படைத்தாள்.

அநிருத்த்தனும் உஷாவும் மிகவும் சந்தோஷமாக உஷாவின் அரண்மனைப் பகுதியில் பல தினங்களைக் கழித்தனர்.

திடீரென்று ஒரு நாள் அநிருத்தனை பாணன் கண்டு விட்டான்.

அவனைக் கட்டிப் போட்ட பாணன், ஒரு தனி அறையில் அவனை அடைத்து விட்டான்.

அநிருத்தன் யார்?

ருக்மணிக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் பிறந்தவர் பிரத்தியும்னன்.

பிரத்தியும்னனுக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் பிறந்தவர் அநிருத்தன். அதாவது அவர் கிருஷ்ணரின் பேரனாவார்.

கிருஷ்ணரின் ராஜ்யத்தில் அநிருத்தனைக் காணோமே என்று அனைவரும் தவிக்கலாயினர். தேவரிஷி நாரதர் த்வாரகைக்கு வந்த போது அநிருத்தனைப் பற்றிய சரியான தகவலை விரிவாகத் தந்தார்.

பாணனின் சோணிதபுரத்தை நோக்கி கிருஷ்ணரின் தலைமையில் யாதவர் படை வெகுண்டெழுந்து சென்றது.

அங்கு காவல் காத்ததோ சிவபிரான். அவர் யாதவர் சேனையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்.

இரண்டு தெய்வீக சக்திகள் தம் தம் படையைக் காக்க ஶ்ரீ கிருஷ்ணரின் யாதவ சேனையின் அதிரடித் தாக்குதலைத் தாங்க மாட்டாத பாணனின் படை பயந்து பறந்தோடியது.

பாணன் நேரடியாகப் போர்க்களத்தில் குதித்தான்; கிருஷ்ணரை எதிர் கொண்டான்.

பாணனின் ஆயிரம் கரங்களில் இரு கைகளைத் தவிர அனைத்தையும் வெட்டினார் கிருஷ்ணர்.

சிவனின் வேண்டுகோளுக்கிணங்க பாணனை உயிரோடு விட்டார் ஶ்ரீ கிருஷ்ணர்.

ஶ்ரீ கிருஷ்ணர் அநிருத்தனையும் உஷாவையும் மீட்டு தன்னுடன் த்வாரகைக்கு அழைத்துச்  சென்றார்.

***

Part 4 with Kasi Temples, Ganga River, Hindu Cremation  ; Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,855

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 4 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part four, rare pictures of Kasi also known as Benares and Varanasi are posted; we see different temples, River Ganges, Pilgrims’ bathing and how Hindus cremate dead bodies on the banks of Ganga. One picture shows the plan of city of Kasi

xxxx

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

Dead body

Durga Temple, Kasi

Simultaneous cremation 

Dead bodies are washed

City Plan, Varanasi, Benares, Kasi

Nandhi/ Bull in front of Shiva

Hindu Pilgrims

Idol of Ganga Devi

–subham—

Tags-German book, year 1928, rare pictures, part 4, Hindu pilgrims, pictures of cremation, River Ganga, Kasi, city plan, Varanasi, Benares

ஷீரடி சாய்பாபா பொன்மொழிகள்: ஜனவரி 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.12,854)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,854

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஜனவரி 1 புத்தாண்டு விழா, 12 விவேகானந்தர் ஜெயந்தி, 14 போகிப் பண்டிகை, 15 பொங்கல், 16 மாட்டுப்;பொங்கல் , திருவள்ளுவர், 17 உழவர் நாள்; 25 தைப்பூசம், 26 குடியரசு தினம் ; 30 காந்தி நினைவு தினம் .

அமாவாசை – ஜனவரி 10; பெளர்ணமி 25. ஏகாதஸி – 7, 21

xxxx

ஜனவரி 1 திங்கட் கிழமை

இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்தபின் , நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. அவரே பொறுப்பேற்று உங்களை வழி  நடத்துவார் .

xxxx

ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை

இந்த உலகத்தில் ஒரு மதம் மட்டுமே உள்ளது; அது அன்பு மதம். இந்த உலகத்தில் ஒரே மொழிதான் உள்ளது. அது இதயத்தின்  மொழி,

xxxx

ஜனவரி 3 புதன் கிழமை

கடின உழைப்பால் பெறும் பொருளே நிலைத்து நிற்கும்.

xxxx

ஜனவரி 4 வியாழக் கிழமை

கோபம், பொறாமை, ஆணவம் ஆகிய மூன்றும் கொடிய நோய்கள். அதிலிருந்து விலகியே இருங்கள்.

xxxx

ஜனவரி 5 வெள்ளிக் கிழமை

அன்பே மிக உன்னதமானது ; அன்பு அலைகள் மேலெழும்பினால் உலகம் சுபிட்சம் ஆகிவிடும் .

xxxx

ஜனவரி 6 சனிக் கிழமை

நானிருக்க பயம் ஏன் ?

xxxx

ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை

கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழுக்கள் வரை எந்த உயிரிடத்திலும் உயர்வு தாழ்வு காட்ட வேண்டாம் .

xxxx

ஜனவரி 8 திங்கட் கிழமை

என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

XXXX

ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை

நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

XXXX

ஜனவரி 10 புதன் கிழமை

நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

XXXX

ஜனவரி 11 வியாழக் கிழமை

நோயிலும் வறுமையிலும் வாடுவோருக்கு உதவுவதன் மூலம் கடவுளின் அன்புக்குப் பாத்திரர் ஆக முடியும்.

xxxx

ஜனவரி 12 வெள்ளிக் கிழமை

ஒருவன் தன் உடலில் சரிகைத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆடம்பர அலங்காரத்துடன் இருக்கிறான். மற்றொருவன் கந்தைத் துணியை உடுத்திக் கொள்கிறான். இரண்டின் பலனும் உடலைப் போர்த்திக் கொள்வதேயன்றி வேறில்லை. அறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான், வயிறு நிறைந்து பசி தீருவதே அது.

xxxx

ஜனவரி 13 சனிக் கிழமை  

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.

xxxx

ஜனவரி 14  ஞாயிற்றுக் கிழமை

கோபம் என்பது கொதிக்கும் நீரைப் போன்றது ;அதை தேக்கி வைத்தாலும் அடுத்தவர் மீது ஊற்றினாலும் ஆபத்து தான். அமைதியாக இருந்து ஆற வைப்பது ஒன்றே அற்புத வழி.

 Xxxx

ஜனவரி 15 திங்கட் கிழமை

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக நினைவில் வைக்கிறேன். யார் என்னை அன்புடன் கூவி அழைக்கிறார்களோ அவருக்கு நான் தாமதமின்றி உதவுகிறேன்.

Xxxx

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை

கர்மங்களைக் குறைத்துக்கொள்ள ஒரே வழி அவைகளை  தைரியமாக அனுபவிப்பதுதான். அதற்கான சக்தியை நான் தருகிறேன்  .அப்போது துன்பம் என்ற எண்ணம் வராது .

Xxxx

ஜனவரி 17 புதன் கிழமை

நீ எதைச் செய்தாலும் நான் அறிவேன் ; உனது செயல்களை நல்லதாகவும் நடத்தை சரியாவையும் இருந்தால், அவற்றை ஆசீர்வதித்து உடனிருந்து கவனித்துக் கொள்வேன் .

Xxxx

ஜனவரி 18 வியாழக் கிழமை

மனம் முரட்டுத் தனமானது; அதை அடக்குவது எளிதல்ல; அதன் தயவு இல்லாமல் கடவுளைக் காணவும் முடியாது.

Xxxx

ஜனவரி 19 வெள்ளிக் கிழமை

ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

 Xxxx

ஜனவரி 20 சனிக் கிழமை

துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

Xxxx

ஜனவரி 21 ஞாயிற்றுக் கிழமை

இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

xxxx

ஜனவரி 22 திங்கட் கிழமை

என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.

 xxxx

ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை

என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.

xxxxx

ஜனவரி 24 புதன் கிழமை

நீ என்னை அடைந்தால் நான் உன் மீது கடைக்கண் பார்வை செலுத்தி அருள் மழை பொழிவேன்.

xxxx

ஜனவரி 25 வியாழக் கிழமை

எப்போதும் கடவுளை நினை; அப்போது  அவர் என்ன செய்கிறார் என்பது உனக்குத் தெரியும்

xxxx

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை

தேவையற்ற சண்டை சச்சரவுகளிலிருந்து விலகியே நில்.

xxxx

ஜனவரி 27 சனிக் கிழமை

நீ கடவுளைத்  துதி ; நான் கடவுளின் அடிமைதான் .நான் உங்களுடைய தொண்டருக்குத் தொண்டன் .

xxxx

ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை

லாபமும் நஷ்டமும் பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளில்தான் உள்ளது .

xxxxx

ஜனவரி 29 திங்கட் கிழமை

காம இச்சசைகளுக்கு அடிமையானோருக்கு முக்தி என்பது கிடைக்காது.

xxxx

ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.

 xxxx

ஜனவரி 31 புதன் கிழமை

 என்னிடன் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

BONUS SAYING

மனத்தை மகிழ்ச்சியோடு வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். கவலை, அவசரம், பயம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் .

–subham–

TAGS– ஜனவரி 2024,   நற்சிந்தனை,  காலண்டர், ஷீரடி சாயிபாபா,  பொன் மொழிகள், சாய்பாபா

திப்பு சுல்தான் இடித்த தளிப்பறம்பா சிவன் கோவில் – 39 ( Post No.12,853)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,853

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 39

 கோவில் எண்கள் –43,44

43.தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவில்

கண்ணனூரிலிருந்து (கண்ணூர் ) 25 கி.மீ தூரத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் இருக்கிறது. கேரள மாநில 108 சிவன் கோவில் பட்டியலில் இதைக் காணலாம்.

இந்த வட்டாரத்தில் 3 கோவில்கள் இருக்கின்றன ; கர்ப்பிணிப் பெண்கள் மூன்றையும் தரிசிக்க வேண்டும் என்பது மலையாளி இந்துக்களின் சம்பிரதாயம் ; அவையாவன :

1.தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வரர் சிவன் கோவில் Rajarajeshwara Temple at Taliparamba

2..த்ரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் Trichambaram Krishna Temple

3.கஞ்சிரகாட் வைத்தியநாதர் (சிவன்) கோவில் Kanhirangad Sree Vaidyanatha Temple

தளிப்பறம்பா ராஜராஜேஸ்வர  சிவன் கோவிலுக்கு சில பர்லாங் தூரத்தில் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது ; தளிப்பறம்பாவிலிரு ந்து 6 கி.மீ தொலைவில் வைத்தியநாதர் சிவன் கோவில் இருக்கிறது . இவைகளை வணங்கும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு நல்ல ஆயுள் ஆரோக்கியமும், பெரிய பதவிகளும் உள்ள பிள்ளைகள் பிறக்கும் என்பது வட்டார இந்துக்களின் நம்பிக்கை.

ராஜ ராஜேஸ்வர சிவன் கோவிலின் சிறப்புகள்

தட்சன் நடத்திய யாகத்தில் சிவ பெருமானை அவன் அவமதித்ததால் பார்வதி தேவி, யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள்; சதி என்னும் வழக்கம் அப்போது தோன்றியது. சதியின் உடலைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம்  ஆடினார் சிவன். அப்போது  பார்வதி தேவியின் உடற்கூறுகள் விழுந்த இடங்கள் எல்லாம் மாபெரும் சக்திக் கேந்திரங்களாக மாறின. சிலர் 51 இடங்கள் என்பர்; மேலும் சிலர் 108 இடங்கள் என்பர். சக்தி தேவியின் தலை விழுந்த இடமே தளிப் பறம்பு என்பது மலையாளிகளின் நம்பிக்கை.

திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்

இந்தக் கோவிலுக்கு 7 நிலை ராஜ கோபுரம் இருந்தது ; மத வெறி பிடித்த  திப்பு சுல்தானின் துலுக்கப்  படைகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை இடித்தன ; அவர்களில் படைத் தளபதி  ஒருவனை பாம்பு கடித்து இறக்கவே ஓடிவிட்டனர். இடிபாடுகளை இன்றும் காணலாம்.

கோவிலின் தோற்றம் – சுவை மிகு கதைகள்

பார்வதிக்கு சிவன் மூன்று லிங்கங்களை அளித்து பூஜை செய்ய உதவினார். மாந்தாதா என்ற சூரிய வம்சத்து அரசன், சிவனை வேண்டி தவம் புரியவே ஒன்றை அவனுக்குக் கொடுத்தார். அவன் பூஜை செய்த லிங்கம் காலப்போக்கில் பூமிக்குள் புதையுண்டது . அவனது வம்சத்தில் தோன்றிய முசுகுந்தன், தவம் இயற்றி இரண்டாவது லிங்கத்தைப் பெற்றான். அதுவும் காலத்தின் கோலத்தினால் மறையவே மூஷக வம்ச கேரள அரசன் சதஸோமன் , சிவனை வேண்டவே அவனுக்கு மூன்றாவது லிங்கம் கிடைத்தது. அதை அவன், அகஸ்தியர் சொன்னபடி, இங்கே நிறுவினான். பிற்காலத்தில் சூரிய வம்சத்தில் உதித்த ராம பிரானும் இங்கே வந்து சிவனை வழிபட்டார்  என்பது ஐதீகம். ஆக, கோவிலின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது.

லக்ஷ்மி புரம்

இந்த ஊரின் பழைய பெயர் லக்ஷ்மி புரம் ; பெரும் த்ரி கோவில் என்றும் சொல்லுவார்கள் .

கோழிக்கோடு ஜாமொரின் (இந்து மன்னர்கள்) களில் ஒருவர் பெரிய சிவ பக்தர்; அவர் கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து மாயமாக மறைந்தார்; தொலை தூரத்திலுள்ள திருவாங்கூர் மன்னர்களும் ஒவ்வொரு பட்டாபிஷேகத்தின்போதும் இந்தக் கோவிலுக்கு ஒரு யானையை தானம் செய்வார்கள்; திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, இந்த ஊர் நம்பூதிரி பிராமணர்களையும் வேத பாராயணத்துக்கு அழைத்தார்.  பெரும் த்ரிகோவில் அப்பனைத் தவிர , வேறு எந்த மன்னரைப் போற்றும் ஜெபத்திலும் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லி அழைப்பை நிராகரித்தனர்

பார்கவம்மா என்பவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து 15,000 பிராமணர்களை இங்கு குடியேற வழிசெய்தார் என்று கேரள மஹாத்ம்யயம் சொல்லும். மயூர வர்மா என்ற மன்னர் பிராமணர்களுக்கு நிறைய நிலம் ஒதுக்கினார் கல்வி, கேள்விகளில் இந்த ஊர்ப்பிராமணர்களுக்கு நிகரானவர் எவருமிலர் என்ற அளவுக்கு புகழ்க்கொடி நாட்டினர் .

சிவ யோகி கதை

ராகவேந்திரா என்ற இயற்பெயர் கொண்ட ஒருவர் தமது தவத்தினால் சிவ யோகி என்றும் அத்யாச்ரமி என்றும் பெயர் பெற்றார். வேணாட்டின் மன்னர் ரவி வர்மா குலசேகரர் (1299-1314)  காலத்தில் அவர் வாழ்ந்தார். சிவ யோகி போல மன்னரும் மாபெரும் அறிஞர்.. ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் சிவ யோகி மடம் இருக்கிறது. சிவ பெருமானே அவருக்கு காட்சி தந்ததாக பக்தர்கள் நம்புவர் .

காசி நகரத்தில் அறிஞர்கள் கூடி வாதப் பிரதிவாதங்களில்  இறங்குவது போல தளிப்பரம்பாவும் சான்றோர் குழுமும் இடமாகத் திகழ்ந்தது . தமிழ்ச் சங்கப்பலகை போல சான்றோர் மட்டுமே நுழையும் மண்டபங்களும் இருந்தன. அவர்களுக்கு கைகளுக்கு காப்புகளும் சால்வைகளும்  வழங்கப்பட்டன.

உத்தண்ட சாஸ்திரி கதை

கோழிக்கோடு ஜாமோரின் (இந்து மன்னர்கள்)  அரசவையில் ஆஸ்தானக் கவிஞர் உத்தண்ட சாஸ்திரி. ; அவர் நிர்குண உபாசகர்; கோவில் சிலைகளை வணங்க மாட்டார். கோவிலுக்கு விஜயம் செய்கையில் கைகூப்பி நிற்க மட்டும் செய்வார்; கீழே விழுந்து நமஸ்கரம் செய்தல், தொட்டுக் கும்பிடுதல் போன்றவை இராது ; ஆயினும் ராஜ ராஜேஸ்வர சிவலிங்கத்தைக் கண்ட மாத்திரத்தில் தன்னை அறியாமலே ஹர ஹர மஹாதேவ என்று கோஷமிட்டார்.; கீழே விழுந்து நமஸ்கரித்தார்.  நெடுஞ்சாண் கிடையாக  விழுந்ததோடு நில்லாமல்,  சமஸ்கிருதத்தில்  சிவன் மீது பாடல் எட்டுக் கட்டினார் அந்தக் கவிஞரின் கோகிலா சந்தேச நூலில், வட கேரளத்தின் தளிப்பரம்பா ,த்ரிசம்பரம்  , திருநாவாய், முதலிய முக்கியக் கோவில்களைக் காணலாம்.

கேரள  பாணி கோவில்

கோவிலின் அமைப்பு பிரமிடு வடிவ கூரையுடனும் முன்னும் பின்னும் தாழும் 2 கூரைகளுடனும் உள்ளது. பலிக் கல்லில் வினோத உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.1524-ம் ஆண்டில் கோவிலுக்கு நடந்த திருப்பணி பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது .

ஒரு வினோத வழக்கம் என்னவென்றால் இந்தக் கோவிலில் பகல் நேரத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை; இரவு பூஜை முடிந்த பின்னரே இறைவனைத் தரிசிக்கலாம்..

சிவராத்திரி, விஷு பண்டிகை நாட்களிலும் மாத பிரதோஷ காலத்திலும் பெரும் கூட்டம் கூடுகிறது .

தென் இந்தியாவில் பிற கோவில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரஸ்னம் பார்ப்பது வழக்கம். பிரஸ்னம், வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும்.

கோவிலுக்குள்  இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கான தடை இருந்த போதும், 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிறித்துவரான திரைப்பட நடிகை மீரா ஜாஸ்மின் இக்கோவிலுக்குள்  நுழைந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் அதற்கான பரிகார பூஜைக்கான தொகையை மீரா ஜாஸ்மின் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.

தளிப் பறம்பு  கோவிலில் நெய் அமுது படைப்பது ஒரு சம்பிரதாயம். இதனால் இங்கே செல்லுவோர் சிறு குப்பிகளில் கிடைக்கும் நெய் பிரசாதத்தை வாங்கி வருவார்கள்

xxxxx

44. காஞ்சிரக் காடு வைத்தியநாதர்/ சிவன் கோவில்

தளிப் பறம்பு  கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் நுழைய தடை இருந்ததால்  ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இன்னும் ஒரு கோவிலை மன்னர் சத சோமன் கட்டினார் . இங்கே ஏனைய கோவில்களைப்போல பெண்கள் எந்நேரமும் சிவனை (வைத்தியநாதர்) வழிபட அனுமதி உண்டு 

பொதுவாக கணவனின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் திங்கட்கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிக்கிறார்கள்; இதனால் திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் கூட்டம் அதிகம் இருக்கும் .ஆனால் காஞ்சிரக் காடு கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதான்  பெண்கள் கூட்டம் அதிகரிக்கும்; ஏனெனில் அங்கு சிவன்சூரிய அம்சம் பெற்றவர்; தனுர் மாத திருவாதிரை நாள் பெரிய விழா ஆகும் ; பிரதோஷ நாட்களிலும் கூட்டம் இருக்கும் .

—சுபம் —-

Tags– உத்தண்ட சாஸ்திரி,  கதை, சிவ யோகி ,திப்பு சுல்தான் ,தளிப்பறம்பா,  ராஜ ராஜேஸ்வரர்,  சிவன் கோவில் , காஞ்சிரக் காடு, வைத்தியநாதர்

காளத்தீ கண்டத்தே,  நெற்றியிலே,  கரத்திலே, அங்கமெங்கும் சிவனே! (Post No.12,852)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,852

Date uploaded in London –  –  27  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

காளத்தீ கண்டத்தேநெற்றியிலே, கரத்திலேஅங்கமெங்கும் சிவனே!

ச.நாகராஜன்

சொக்கநாதப் புலவர் தமிழின் தலை சிறந்த புலவர்களுள் ஒருவர்.

அவர் சிவபிரானை நோக்கினார். உடலெங்கும் விஷாக்கினி. வியந்து பாடுகிறார் இப்படி:

காளத்தீ கண்டத்தே காளத்தீ நெற்றியிலே

காளத்தீ யுன்றன் கரத்திலே – காளத்தீ

அங்கமெங்கும் வெவ்வழலை யாற்றினாள் ஞானப்பூம்

கங்கையென்னும் பெண்ணொருத்தி கண்டு

பாட்டின் பொருள்:

கண்டத்தே காளத்தீ – உனது கழுத்திலே காளத்தீ உண்டு

நெற்றியிலே காளத்தீ – நெற்றியில் காளத்தீ உண்டு

உன்றன் கரத்திலே காளத்தீ – உன் கையிலே காளத்தீ உண்டு

அங்கமெங்கும் காளத்தீ – உனது உடல் முழுவதும் காளத்தீ உண்டு.

வெம் அழலை – இந்த வெம்மையாகிய நெருப்பை

ஞானப்பூம் கங்கையென்னும் – ஞானத்தையும், பூ பொலிவையும் உடைய கங்கை என்னும்

பெண்ணொருத்தி கண்டு – பெண் ஒருத்தி கண்டு

ஆற்றினாள் – தணித்தாள்

காளத்தீ என்றால் விஷாக்கினி ஆகும். முதலில் உள்ள காளத்தீ பாற்கடலில் பிறந்த ஆலகால விஷத்தை சிவபிரான் கண்டத்திலே தாங்கியதைக் குறிக்கிறது.

அடுத்து இரண்டாவதாக வரும் காளத்தீ சிவபிரானின் நெற்றியிலே உள்ள நெற்றிக் கண் நெருப்பைக் கூறுகிறது.

அடுத்து மூன்றாவதாக வரும் காளத்தீ சிவபிரானின் கையிலே உள்ள நெருப்புருவமாகிய மழுவைக் குறிக்கிறது.

நான்காவதாக வரும் காளத்தீ சிவபிரானின் மேனி முழுவதும் நெருப்பாய் இருத்தலைக் குறிக்கிறது.

இப்படி அழல் உருவமாக அமைந்துள்ள சிவபிரானை கங்கை என்ற பெண் கண்டாள்; அதைத் தணித்தாள்.

கங்கையைத் தலையில் கொண்ட சிவபிரானின் தணல் வெப்பம் தணிந்தது!

ஞானப்பூ என்பதற்கு ஞானமாகிய அழகு என்ற ஒரு பொருளும் உண்டு.

இப்படி சிவபிரானைப் போற்றும் சொக்கநாதப் புலவர் சிவபிரானின் திரு நடனத்தைக் காண்கிறார்.

பாடுகிறார் இப்படி:

அம்பலா வின்னொருகா லாடினா லாகாதோ

உம்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ – சம்புவே

வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்குந் தித்தியென

ஒற்றிப் பதஞ்சலிக்கு மூர்

பாடலின் பொருள் :

சம்புவே – சிவபிரானே

வெற்றிப் பதஞ்சலிக்கும் – வெற்றியை உடைய பதஞ்சலி மஹரிஷியின் பொருட்டும்

வெம்புலிக்கும் – கொடிய புலிக்காலர் பொருட்டும்  (வியாக்ரபாதரை இது குறிக்கிறது)

தித்தி என ஒற்றி – திதி என ஒற்றியாடி

பதம் சலிக்கும் – பாதம் ஓய்தற்குரிய

ஊர் – ஊராகிய

அம்பலவா – பொன்னம்பலவா

இன்னொரு கால் ஆடினால் ஆகாதோ – இன்னொரு காலால் ஆடினால் தகாதோ

உம்பர் எல்லாம் கண்டது – தேவர்கள் எல்லாம் பார்த்தது

எனக்கு ஒப்பு ஆமோ – எனக்கு சம்மதியாகுமோ!

இன்னொரு காலால் எனக்காக ஆடக் கூடாதா என்கிறார் புலவர்.

இப்படிப்பட்ட அற்புதமான தனிப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.

***

Part 3 with Strange Hindu Saints ; Rare Pictures from 1928 German book on Hinduism- (Post No.12,851)


A Hindu saint’s head is buried in sand.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,851

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

This is part 3 from the book.

There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.

In part three strange Hindu saints are pictured. Several Hindu saints “torture” themselves by lying on a bed of nails or hanging sharp instruments from different parts of their body. But for them it is not at all “torture”. They want to show the world that Hindus treat body as a shirt or an upper garment which can be discarded easily. And they wanted to show pain, or no pain depends upon your mental status. What is pain for us is NOT a pain for them.

xxxx

Brahmins worship Sun and Goddess,  3 times a day.

Title -Der Indische Kulturkreis

By H G VON

K DOHRING

Title – Heilige Statten Indiens

By H V GLASENAPP

YEAR 1928, MUNCHEN

–subham—

Tags-German book, year 1928, rare pictures, part 3, Hindu saints, pictures

Shirdi Sai Quotes : January 2024 ‘Good Thoughts’ Calendar (Post.12,850)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,850

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

January 1 – New Year Day;  12- Swami Vivekananda Jayanthi;  14- Bogi Pandikai; 15- Makara Sankranathi- Pongal  16- Cow/Go Pongal , Tiruvalluvar Day; 17 Farmers day; 25 Thai Poosam, 26 Republic Day ; 30 Gandhiji Death Anniversary .

New Moon Day – January 10; Full Moon Day 25. Ekadasi Hindu Fasting Days- 7, 21

xxxxxx

January 1 Monday

The wise are cheerful and content with their lot in life.

xxxx

January 2 Tuesday

If you are wealthy, be humble. Plants bend when they bear fruit.
xxxx
January 3 Wednesday

Spend money in charity; be generous and munificent but not extravagant.

Xxxx

January 4 Thursday

Get on with your worldly activities cheerfully, but do not forget God.

xxxx

January 5 Friday

Whatever creature comes to you, human or otherwise, treat it with consideration.

xxxx

January 6 Saturday
See the divine in the human being.

Do not bark at people and don’t be aggressive, but put up with others’ complaints.

Xxxx

January 7 Sunday

God is not so far away. He is not in the heavens above, nor in hell below. He is always near you.

xxxx

January 8 Monday

If anyone gets angry with another, they wound me to the quick.
If you cannot endure abuse from another, just say a simple word or two, or else leave.
xxxx

January 9 Tuesday

I stay by the side of whoever repeats my name.

Do not be idle: work, utter God’s name and read the scriptures.

xxxx

January 10 Wednesday

What God gives is never exhausted, what man gives never lasts.

Be contented and cheerful with what comes.

xxxx

January 11 Thursday

If you avoid rivalry and dispute, God will protect you.
xxxx

January 12 Friday

I have to take care of my children day and night and give an account to God of every paisa.

xxxx

January 13 Saturday

People abuse their own friends and family, but it is only after performing many meritorious acts that one gets a human birth. Why then come to Shirdi and slander people?
xxxx

January 14 Sunday

What you sow, you reap. What you give, you get.

xxxx

January 15 Monday

I will not allow my devotees to come to harm.

If a devotee is about to fall, I stretch out my hands to support him or her.

xxxx

January 16 Tuesday

I think of my people day and night. I say their names over and over.
My treasury is open but no one brings carts to take from it. I say, “Dig!” but no one bothers.
xxxx
January 17 Wednesday

My people do not come to me of their own accord; it is I who seek and bring them to me.
xxxx


January 18Thursday

This body is just my house. My guru has long ago taken me away from it.

xxxx

January 19 Friday

Those who think that Baba is only in Shirdi have totally failed to know me.
xxxx

January 20 Saturday
I cannot do anything without God’s permission.

Xxxx

January 21 Sunday

God has agents everywhere and their powers are vast.

Xxxx

January 22 Monday

Give food to the hungry, water to the thirsty, and clothes to the naked. Then God will be pleased.

xxxx

January 23 Tuesday

Saburi (patience) ferries you across to the distant goal.

The four sadhanas and the six Sastras are not necessary. Just has complete trust in your guru: it is enough.

xxxx
January 24 Wednesday

Why fear when I am here?

xxxx

January 25 Thursday

I am formless and everywhere; I am in everything and beyond. I fill all space.

xxxx

January 26 Friday

If one devotes their entire time to me and rests in me, need fear nothing for body and soul.

xxxx
January 27 Saturday

My business is to give blessings. My eye is ever on those who love me.

xxxx
January 28 Sunday
I get angry with none. Will a mother get angry with her children? Will the ocean send back the waters to the rivers?
xxxx

January 29 Monday
Surrender completely to God.

xxxx

January 30 Tuesday

Trust in the Guru fully. That is the only sadhana.

xxxx
January 31 Wednesday
I am the slave of my devotee.

Whatever you do, wherever you may be, always bear this in mind: I am always aware of everything you do.
—subham—

BONUS QUOTES
Do not be obsessed by the importance of wealth.

Do not kick against the pricks of life.

xxxx
Speak the truth and truth alone.
No one wants to take from me what I give abundantly.

Do not fight with anyone, nor retaliate, nor slander anyone.

—–SUBHAM—

TAGS- Shirdi, Sai Baba, Quotes, January 2024, Calendar

முல்லைக்கல் ,திருநக்கரா  கோவில்கள் – PART 38 (Post No.12,849)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,849

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 3

கோட்டயம், ஆலப்புழை கோவில் எண்கள் –41, 42

41முல்லைக்கல் தேவி கோவில்

முல்லைக்கல் ராஜ ராஜேஸ்வரி கோவில்

ஆலப்புழை நகரில் முல்லை மலர்த் தோட்டத்தில் அமைந்த தேவி கோவில் இது. பல வினோத அம்சங்கள் இந்தக் கோவிலுக்கு இருக்கிறது.

முல்லை, மல்லிகை, பிச்சி முதலிய மலர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை; இவைகளை ஜாஸ்மின் JASMINE என்ற பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பார்கள் .

முதலில் சிறப்பு அம்சங்களைக் காண்போம்.

தேவியை பகவதி, துர்கா, அன்னபூர்ணேஸ்வரி என்று பல பெயர்களில் அழைப்பார்கள் . ஏனெனில் முதலில் இருந்தது அன்னபூர்ணேஸ்வரி விக்கிரகம் .

தேவிக்கு மேல் கூரை கிடையாது. வானத்தைப் பார்த்து நிற்கிறாள் .

முன்னாலுள்ள கோபுரத்தைத் தவிர கேரள பாணியில் எதுவும் இல்லை.

பின்னால் ஆனைக்கொட்டிலும், இறைவியைச் சுற்றி கணேசர், சுப்பிரமணியர், நாகர், நவக்கிரகங்கள் கிருஷ்ணர் , ஹனுமார், ஐயப்பன் சந்நிதிகள் இருக்கின்றன.

கோவிலின் தோற்றம் பற்றிய சில கதைகள்

செம்பகசேரி தம்புரான்/ ராஜா முல்லை மலர்த் தோட்டத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் தேவியே வந்து பூப்பறிப்பதைக் கண்டதாகவும் அதனால் அங்கு தேவிக்கு கோவில் எழுப்பியதாகவும் சிலர் சொல்லுவர்.

குளத்துநாட்டிலிருந்து வந்த பிராமணர் ஒருவர், தான் கொண்டுவந்த தேவி சிலையை முல்லை மலர்ச் செடிக்கு அடியில் வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்றுவிட்டுத் திரும்பியகாலையில் சிலையை எடுக்க முயற்சித்தார். ஆனால் சிலை நிலத்தில் வேரூன்றிவிட்டது.தேவியின்  திருவுளத்தை அறிந்த பிராமணர் அங்கேயே கோவில் கட்ட ஏற்பாடு செய்தார் .

சிப்பாய்கள் கொண்டு வந்த சிலை என்றும், திப்பு சுல்தான் படைகளுக்கு அஞ்சி மலபாரிலிருந்து வெளியேறிய நம்பூதிரிப் பிராமணர்கள் கொண்டுவந்த சிலை என்றும், கொடுங்கல்லூர் பகவதியை வணங்கிய தம்புரான் அவளை தன்னுடைய ஊரான ஆலப்புழைக்கு கொண்டுவர விரும்பியதாகவும் அவளே கனவில் தோன்றியவுடன் ஆலப்புழையிலேயே கோவில் எழுப்பியதாகவும் எண்ணற்ற கதைகள் .

சுமார் 500 ஆண்டுப் பழமை உடையது .

முதலில் இருந்த அன்னபூரணி சிலையை  யாரோ ஒருவர் கட்டித் தழுவ, அதில் விரிசல் ஏற்பட்டவுடன் 1962ம் ஆண்டில் புதிய ராஜ ராஜேஸ்வரி தேவிசிலை நிறுவப்பட்டது .

41 நாள் சிறப்பு விழா

நவம்பர்- டிசம்பரில் நடக்கும் 41 நாள் சிறப்பு  உற்சவம் மிகவும் புகழ்பெற்றது; கடைசி 11 நாட்களில் உற்சவத்தோடு இசை, கூத்து, உபன்யாசம் போன்றவையும் நடைபெறும்; வழக்கமான யானை ஊர்வலம் அன்னதானம் முதலியனவும் இருக்கும். இதைத் தவிர நவராத்திரி காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

பிரசாதங்களும் இக்கோவிலில் தனித்துவம் உடையவைதான். உளுந்து வடை முதல் இனிப்பு பணியாரங்கள் வரை பலவும் தேவிக்குப் படைக்கப்படுகின்றன.

XXXXXXX

42.திருநக்கரா மகாதேவர் கோவில், கோட்டயம்

கோட்டயம் நகரின் நடுவிலுள்ள சிவன் கோவில் இது.

நீண்ட வடிவிலுள்ள கேரளத்தின் நடுப்பகுதியில் கோட்டயமும் ஆலப்புழையும் இருக்கின்றன

தேக்கம்கூர் மன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார் ; 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது பரசுராமர் பிரதிஷ்டை செய்த சிவன் என்பது ஐதீகம் மேலும் இதை சுயம்பூ (தானாக உதித்த) லிங்கம் என்பார்கள் .

கோவிலின் தோற்றம் பற்றி வழக்கம்போல பல கதைகள் உண்டு

மன்னருக்கு திருஸூர் வடக்குநாதன் மேல் அலாதிப் பிரியம். ஆயினும் வயது ஆக ஆக அவரால் திருசூர் வரை யாத்திரை செய்ய இயலவில்லை. இது மனத்தை வருத்தியது; ஒருநாள் இரவில் கனவில்,  வடக்குநாதர் தோன்றி,  மன்னர் இருக்கும் இடத்திற்கே தான் , வருவதாகச் சொன்னார். அதே நேரத்தில் வயலை  உழுதுகொண்டிருந்த விவசாயிகள் பூமிக்கடியிலிருந்து லிங்கத்தையும் நந்தியையும்  கண்டெடுத்தனர். மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ; உடனே கோவில் எழுப்பினார்  அந்தக் கோவில் நக்கரா குன்றின் மீது அமைக்கப்பட்டது . முன்னரே தான் அழைத்துவந்த ஒரு ஏழை நம்பூதிரிப் பிராமணரையே பூஜைக்கு அமர்த்தினார் .

2 சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோவிலில் உள்ள மரச் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடு உடையவை .

கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள ஓவியங்கள் காமச்சுவை மிக்கவை.

கோவில் விழாக்கள்

மீனம்/ மார்ச் மாதத்தில் நடக்கும் ஆராட்டு உற்சவத்தால் இக்கோவில் மிகவும் பிரசித்தம் அடைந்தது; அந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்

பண்டிகைக் காலத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சபரிமலை விழாக்காலத்தில் எல்லா ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வருகின்றனர் ; ஆயினும் முதலில் கண்ட பத்து நாள் ஆராட்டு உற்சவம்தான் சிறப்பானது. கோட்டயம் நகரம் முழுதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். எங்கும் தோரணங்கள் அசைந்தாடி பக்தர்களை வருக வருக என்று வரவேற்கும்.

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் கர்பக்கிரக  வட்டாரத்துக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைய முடியாது ஆனால் இக்கட்டுரையில் கண்ட கோட்டயம்,  ஆலப்புழை  கோவில்களில்  எல்லோரும் தரிசனம் செய்யலாம் .

—subham—

Tags- கேரளம் , PART 38, முல்லைக்கல்,   கோவில், திருநக்கரா ,மகாதேவர்,  கோட்டயம், ஆலப்புழை , தேவி

நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்! (Post No.12,848)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,848

Date uploaded in London –  –  26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்!

ச.நாகராஜன்

உலகின் ஆகப்பெரும் விஞ்ஞானிகளில் ஒருவர் நிகோலா டெஸ்லா.

தோற்றம் :28-6-1856

மறைவு : 7-1-1943

இவர் ஒரு படைப்பாளி. எலக்ட்ரிகல் எஞ்ஜினியர். மெக்கானிகல் எஞ்ஜினியர். எதிர்காலத்தைக் கண்டவர். ஆன்மீகவாதி. மனிதகுலத்தின் மீது அபார பற்றுக் கொண்டவர்.

உலகம் இன்று ஒளிர்வதே இவரால் தான்! ஆம், இவர் தான் ஏ.சி. எனப்படும் ஆல்டர்னேடிங் கரண்டைக் கண்டுபிடித்தவர் இவரே. பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர் இவர்.

இவரது வாழ்க்கையை ஒவ்வொருவரும் படிப்பது இன்றியமையாதது.

 வளமான வாழ்க்கைக்கு நிகோலா டெஸ்லா ஏழு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவையாவன:

1) மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதீர்கள்.

இந்த உலகம் நம்மிடமிருந்து என்ன எடுத்துக் கொள்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை விட, நாம் இந்த உலகத்திற்கு என்ன தருகிறோம் என்பதில் கவனம் வையுங்கள்!

2) உள்முகமாகப் பார்ப்பது உங்களைத் தெளிவாகப் பார்க்க உதவும்.

ஆழ்ந்து உள்முகமாகப் பார்ப்பது உங்களது உண்மையான ஆத்மாவைக் காண்பிப்பதோடு, இந்த வாழ்க்கையில் உண்மையாகவே நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை உணர வழி வகுக்கும்.

3) மற்றவர்களை விட முன்னேறிச் செல்வது ஓகே தான்!

உண்மையான கண்டுபிடிப்பாளர்கள் ஓகே தான் – அவர்களது கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட! விட்டு விடாதீர்கள்! நீங்கள் எவ்வளவு திறன் உடையவர்கள் என்பதில் கர்வம் கொள்ளுங்கள்.

4)ஒருபோதும் கற்பதையும் படிப்பதையும் விட்டு விடாதீர்கள்!

உலகம் ஏராளமான கருத்துக்களையும் யோசனைகளையும் தருகிறது. பத்திரிகைகளை வெறுமனே புரட்டுவதை விட எப்படி அனைத்தும் உருவாக்கப்படுகின்றன என்பது உண்மையான படைப்பாளர்களை ஊக்குவிக்கும்.

5) பொறுமையாக இருங்கள், முன்னே சென்று கொண்டே இருங்கள்!

பொறுமை என்பது ஒரு நெடிய பயணம். உங்களது கனவுகளை நனவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றிய கவலை வேண்டாம். அவற்றை நனவாக்கப் பாடுபட்டுக் கொண்டே இருங்கள்.

6) படைப்பாற்றலை நிறுத்தி விடாதீர்கள்

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும் சரி, ஒருபோதும்

படைப்பதை நிறுத்தி விடாதீர்கள். உலகம் இன்னும் சற்று நல்லதாக ஆக உங்கள் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.

7) பணம் மட்டுமே தான் எல்லாம் என்பதல்ல

படைப்பது படைப்பதற்காகவே தான். பரிசுகள் வரும் என்றால் அது நல்லது தான். வரவில்லையெனில், நீங்கள் படைத்திருப்பதே பெரும் செல்வம் தான்!

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக :

7 life lessons from Nikola Tesla

Once you learn the 7 life lessons from Nikola Tesla you’ll live a much better life.

§  Don’t pay attention to what others are doing.

instead of focusing on what the world can take form us, we need to focus on what we can put into the world.

§  Looking inward, help you see clearer.

Reflection is an important part of being your authentic self and being true to what you want in life.

§  It’s okay to be ahead of everyone else

Tesla reminds us that real creators are okay with people not accepting their ideas. Don’t give up. Be proud of what you are capable of.

§  Never stop learning and reading

The internet is full of information and ideas. Rather than sift through journals, reading stories and ideas of how things were done can ignite real creativity in people.

§  Be patient and just push on

Patience goes a long way. Don’t worry about how long it will take to achieve your dreams. Just keep working on them.

§  Never stop creating.

No matter what anyone says- even you, don’t stop making things. Use your talent to help make the world better.

§  Money isn’t everything.

Tesla cheers us to create for creation’s sake. If there are rewards to be had, great: but if not, creation can be reward enough.

***