Find the eight famous towns in India beginning with letter M
1.Uttarpradesh temple of Lord Krishna near Brindavan. Capital of Surasena kingdom ruled by Kamsa.
2.Madhya Pradesh town absolutely wonderful architectural heritage. It has nine great monuments of great antiquity including Mitawali circular temple, built by great dynasties like the Gurjara-Pratiharas, the Kachhapaghatas etc.
3.If anyone says Dasara procession, this Karnataka town name will be named immediately
4.Kerala town in Malappuram district; The remains of pre-historic symbols including Dolmens, Menhirs, and Rock-cut caves that have been found from various parts of indicates human life at the region in the Stone Age.
5.Capital of Pandya country; now with the world famous Meekashi Sundareswar temple
6. Bihar town famous for its Mithila paintings. These paintings are created mostly by women. Natural colours are used and paintings are done on canvases, walls, floors of sacred places, etc .centre of ‘Maithili’ culture.
7. The hill station is in the foothills of the Garhwal Himalayan range. Uttarakhand has this beautiful place.
8.Andhra Pradesh town renowned for the Chennakesava Swamy temple built here during the reign of the Haihaya Kings.
கன்பூசியஸ் Confucius சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 3
உலக மஹா மேதை வள்ளுவர். உலகிலுள்ள பெரிய தத்துவ ஞானிகள் சொன்ன எல்லா விஷயங்களையும் நமக்கு பஞ்சாமிர்தமாக, ரோஜா குல்கந்தாகக் கொடுத்துவிட்டார். இதனால் தமிழ் மொழி உலகின் தலை சிறந்த மொழிகளில் ஓரிடத்தைப் பெற்றது.
யாமறிந்த புலவரிலே
வள்ளுவர் போல் , இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
என்று பாரதி சும்மாவா சொன்னான் ?
வள்ளுவன் தன்னை உலகினுக்கே– தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்றும் பாரதி சொன்ன வாக்கு வேத வாக்கு.
உலகம் போற்றும் சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பொன்மொழிகளுடன் இதோ மேலும் சில ஒப்பீடுகள்:
மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்- என்று கன்பூசியஸ் சொன்னார்.
வள்ளுவர்., மேலும் ஒருபடி சென்று மன்னிப்பதோடு நின்றுவிடாதீர்கள்; அவர்களே வெட்கப்படும்படி நன்மையும் செய்துவிடுங்கள் என்கிறார். ஏனெனில் அவர்கள் அதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்–குறள் 314
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]
பொருள்
மணக்குடவர் உரை
இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் (தண்டித்தல்) நெறி கூறியது.
பாரதியும் பாடினான்
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)
XXX
உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.– இது கன்பூசியஸ் சொன்ன பொன்மொழி
வள்ளுவர்.இதையே அழகான உவமையுடன் சொல்கிறார் ,
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு–குறள் 595
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
பொருள்
ஒரு தாமரைப்பூவின் தண்டு அந்தக் குளத்தின் நீர்மட்டத்தைப் பொறுத்தது; அது போல மக்களின் ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அவர்கள் உயர்வு இருக்கும் .
ஆகையால் எதையும் சாதிக்க முடியும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் தேவை
XXX
நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்! — கன்பூசியஸ்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்–குறள் 620
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
விதியையும் கூட மதியால் வெல்லலாம். நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் , முயற்சி திருவினை ஆக்கும் என்பது வள்ளுவர் வாதம் .மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்- என்பது குறளின் பொருள் ஆகும்
ஒரு உயர்ந்த மனிதர் பேசுவதற்கு முன்பே செயல்படுகிறார், பின்னர் அவரது செயலுக்கு ஏற்ப பேசுகிறார்.— கன்பூசியஸ் பொன் மொழி
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்-குறள் 664
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
பெரியாருக்கும் சிறியாருக்கும் என்ன வித்தியாசம். சிறியோர் என்பர் வெறும் வாய்ச் சவடாலோடு நிற்பார்கள் . பெரியவர்களோ செயல்களை செய்த பின்னர்தான் அதை வெளியே சொல்லுவார்கள் . இதை வள்ளுவன் தெளிவாக விளம்புகிறான் :
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8
ச.நாகராஜன்
இரட்டைக் குழந்தைப் பிறப்பில் ஒரு சோகம்!
ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் இது.
கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண்மணி சிட்னி மருத்துவமனை ஒன்றில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 27 வாரங்களிலேயே அந்தக் குழந்தைகள் பிறந்து விட்டன. (ஆறே முக்கால் மாதம் தான் கர்ப்பவாசம்!) ஒவ்வொரு குழந்தையின் எடையும் இரண்டு பவுண்டுகள் தான்!
சின்னக் குழந்தையான எமிலி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் அந்தக் குட்டியின் சகோதரனான ஜேமி (Jamie) மூச்சு விடவில்லை.
20 நிமிடங்கள் கடுமையான முயற்சியை மேற்கொண்ட பின்னர் மருத்துவமனை பணியாளர்கள் தங்கள் முயற்சி தோல்வி அடைந்ததை ஒட்டி கேட்டிடம் ஜேமி பிழைக்கவில்லை என்று கூறினர்.
கேட்டிடம் டாக்டர், ‘உனது பையனுக்கு ஏதாவது பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறாயா’ என்று கேட்ட போது கேட், “ஆம், ஜேமி என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்றார்.
அந்தக் குழந்தையைக் கையில் அடக்கமாக வைத்திருந்த அந்த டாக்டர், “நாம் ஜேமியை இழந்து விட்டோம். அவனால் பிழைக்க முடியவில்லை. சாரி” என்று கூறினார்.
திடுக்கிட்டு சோகத்தில் ஆழ்ந்த கேட் பிளாங்கட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஜேமியை வெளியே எடுத்துப் பார்த்தார். குழந்தையிடம் அசைவே இல்லை.
கங்காரு கவனிப்பு! (Kangaroo Care)
சேனல் 7இல் ‘Today Tonight’ நிகழ்ச்சியில் “பின்னால் பேசும் போது ஓக் கூறினார்: “என் தோளுடன் குழந்தையை அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். எனது கவுனை எடுத்து விட்டு குழந்தையை எனது மார்போடு அணைத்துக் கொண்டு கையால் அவனைச் சுற்றி வைத்துக் கொண்டேன்.”
ஒரு இயக்கமும் குழந்தையிடம் இல்லை. கேட் குழந்தையிடம் பேச ஆரம்பித்தார். அவனது பெயர் ஜேமி என்றும் அவனுக்கு ஒரு சகோதரி உண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் மட்டுமல்ல தொடர்ந்து அவன் வாழும் போது அவனுடன் தாங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்பினோம் என்பதைக் கூறிக் கொண்டே இருந்தார்.
இரண்டு மணி நேரம் இப்படிக் கழிந்தது.
பிறகு உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் குழந்தையிடம் தோன்ற ஆரம்பித்தன!
மூச்சு விட ஜேமி திணறியது.
அது நிர்பந்தப்படுத்தப்பட்ட ஒரு செயல் என்று டாக்டர்கள் கூறினர்.
ஆனால் கேட் விடவில்லை.
குழந்தையை அங்கும் இங்கும் தாலாட்டி அசைத்துக் கொண்டே இருந்தார். குழந்தை இன்னும் அதிகமாக மூச்சு விட அவஸ்தைப்பட்டுத் திணறுவதைக் காண்பித்தது.
பிறகு சீராக இந்தத் திணறல் தொடர ஆரம்பித்தது. கேட் உடனே ஜேமிக்கு மார்பிலிருந்து பாலை எடுத்து விரலால் கொடுக்க ஆரம்பித்தார். அதை எடுத்துக் கொண்ட குழந்தை இப்போது சீராக மூச்சு விட ஆரம்பித்தது.
கேட்டின் உடலானது ஒரு ‘இன்குபேடர்’(Incubator) போலச் செயல்பட்டு
குழந்தையின் உடலை கதகதப்பாக வைத்து அதன் மூச்சை சீராகச் செயல் பட வைத்தது. இப்படி டாக்டர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.
இது கங்காரு கவனிப்பு (Kஎன்ற ஒரு கொள்கையை உறுதிப்படுத்தியது.
கங்காரு தனது குட்டிகளைத் தன் மார்பில் உள்ள பையில் வைத்து மார்போடு அணைத்து வளர்க்கும்.
அது கேட்-ஜேமி விஷயத்தில் நடந்து அந்தக் கொள்கையை உறுதிப்படுத்தியது.
காலம் வரும் முன்னே காலன் வரமாட்டான் – ஒரு போதும்!
இதை மெய்ப்பிக்கும் வகையில் நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
இந்தச் செய்தி ஆஸ்திரேலியா நாடெங்கும் பரவி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதை லண்டன் செய்தி நிறுவனமான IANS உலகெங்கும் பரப்பியது
நமது நாட்டில் Times of India, இந்தச் செய்தியை 2010, ஆகஸ்ட் 28ஆம் தேதி Kolkata பதிப்பில் வெளியிட்டது.
தகவல், நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில இதழான TRUTH Volume 78 Issue 24 Dated 24-9-2010)
1.This Punjab city is popular for its textile industry and is often referred as the Manchester of India. Historical attractions include Fort, Maharana Ranjit Singh War Museum, Phillaur Fort etc.
2. Dudhwa National Park, is here and is the only national park in Uttar Pradesh It is home to a large number of rare and endangered species .
3.This Andhra town isfamous for its sculptures; it is connected with Jatayu of Valmiki Ramayana.
4.This railway division in Assam is famous for being the biggest divisional headquarters of the Northeast Frontier Railway and the biggest junction in the North-Eastern part of the country. The town is also the gateway to the visually enchanting hill-tract .
5.This village in Haryana is famous for its Surajkund masonry tank of tenth century CE.
6.Capital of Uttar Pradesh; Bara Imambara – is the architectural marvel
7. It is a beautiful retreat away from the chaos of the city, is one of the most popular tourist destinations in Maharashtra. Often called the ‘Jewel of Sahyadri’ and the ‘City of Caves’, this hill station boasts of a spectacular setting that includes lush green valleys, stunning waterfalls, serene lakes and remarkable caves.
8. traditional boundary between India and Tibet
1.LUDHIANA, 2.LAKHIMPUR, 3.LEPAKSHI, 4.LUMDING, 5.LAKHARPUR,6.LUCKNOW, 7.LONAVALA, 8.LANAK LA
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 24
110.ஸ்ரீ காமாட்சி சாரதா ஸ்ரீ சக்ர கோவில் Sri Kamakshi Sharada Sri Chakra Temple, Hebbur
துமகூரிலிருந்து 23 கி.மீ.
ஹெப்பூரில் ஆதி பராசக்தியின் ஸ்ரீ சக்ர கோவில் இருக்கிறது. ஸ்ரீ கோதாண்டாஸ்ரம மடம் இதை நிர்வகித்து வருகிறது பஞ்ச லோகத்தாலான ஸ்ரீ சக்ரம் 300 ஆண்டுப் பழமை உடைத்து. காமாக்ஷி சாரதா 4 கரங்களில் பாச, அங்குச, புஸ்தக, அக்ஷமாலா சகிதம் காட்சி தருகிறாள் . ஸ்ரீ சக்ர பீடத்தின் மேல் அவள் நிற்கிறாள் .
111.கைத்தல சென்னகேசவ கோவில் Sri Kaidala Chennakeshava Swamy Temple
தும்கூரிலிருந்து 6 கி.மீ
புகழ் பெற்ற சிற்பி ஜனக ஆசாரியும், அவரது மகன் தங்கன ஆசாரியும் கட்டிய கோவில். இந்த ஊரில் பிறந்த ஜனக ஆசாரி பிழைக்க வழியில்லாமல் தவித்த போது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமாநுஜரைத் தரிசித்ததாகவும் அவரது வேண்டுகோளின்பேரில் கோவில்களைக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது பிட்டிதேவன் என்ற பெயர்கொண்ட மன்னன் , ராமாநுஜரைத் தரிசித்து தனது மகளின் நோயை அவர் தீர்த்துவைக்கவே பரம பாகவதனாக மாறி விஷ்ணு வர்த்தனன் என்று பெயர் ஏற்றான் . ராமானுஜர் வேண்டுகோளின்படி அவன் ஜனகாச்சாரியைக் கொண்டு கோவில் களைச் சமைத்தான். இங்குள்ள சென்ன கேசவர் , அந்த ஆசாரியின் கடைசி சிற்பம் என்றும் அது அற்புதமாக வந்துள்ளது என்றும் பக்தர்கள் கூறுவார்கள் அந்த ஆசாரி ஒரு கையை இழந்து, இறை அருளால் கை பெற்ற .கதைகளும் புழக்கத்தில் வலம் வருகின்றன.
எடியூர் ஸ்ரீ சித்த லிங்கேஸ்வர கோவில் EDIYUR SIDDHALINGESVARA SAMADHI
வீர சைவ துறவி சித்தலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு இருக்கிறது .அவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆகையால் வீரசைவர்களுக்கு இது ஒரு புனிதத் தலம்
Gali mantapa
112. சித்ர துர்கா குகைக் கோவில்கள் CHITRADURGA CAVES AND TEMPLES
சித்ர துர்கா அருகிலுள்ள சந்திர வல்லி குகைகள் பல்லாயிரம் ஆண்டு வரலாறு (PRE-HISTORIC AND KADAMBA DYNASTY) படைத்த இடம். அங்கு பழங்கற்கால, உலோக கால சின்னங்கள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குந்தல தேசத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றுச் சின்னங்களும், கடம்ப வம்ச மயூர சர்மனின் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன ஒரு குகையில் சிவலிங்கம், மற்றும் தியான அறை உளது .
ஒபவா என்ற வீராங்கனை, ஹைதர் அலியை எதிர்த்து போரிட்ட இடம் இது.
Hidimbeshwar Temple ஹிடம்பேஸ்வர கோவில்
நாயக்கர் ஆட்சி செய்த இடம் இது. இந்த இடம் மஹாபாரத ஹிடம்பன், ஹிடும்பி, கடோத்கசன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது. கோட்டை கொத்தளங்கள் நிறைந்த இடம். கோட்டையில் உள்ள 18 கோவில்களில் இதுவும் ஒன்று.
அடுமல்லேஸ்வர் கோவில் அருகில் உள்ளது.
சித்ர துர்க கோட்டைக்குள் உள்ள பல கோவில்களில் சித்தேஸ்வரர் கோவிலும் ஒன்று கோட்டையின் மேல்தளத்தில் 18 கோவில்களை நாயக்க மன்னர்கள் கட்டினார்கள்.நாயக்கர்களின் குல தெய்வம் ஏக நாதேஸ்வரி ..கோட்டையின் நுழை வாயிலில் பராசக்தியின் பாத சுவடுகள் பொறிக்கப்பட்டுள்ளன .பல்குணேஸ்வர , கோபால கிருஷ்ண சந்நிதிகளும் இருக்கின்றன.
கோவிலில்பெரிய பீமன் முரசு
மலை மீது ஏறிச் சென்றால் நல்ல சிற்பங்களைக் காணலாம். பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் பெரிய முரசு இருக்கிறது
ஹிட ம்பேஸ்வர கோவிலில் உள்ள முரசு குறிப்பிடத்தக்கது பத்து அடி சுற்றளவும், ஆறு அடி உயரமும் உள்ள ஒரு உருளை பீமனின் முரசு என்று சொல்லப்படுகிறது இது இரும்புத் தகடுகளால் செய்யப்பட்டது கோவிலின் வாயிலில் ஒற்றைக்கல் தூண் நிற்கிறது.
மலை அடிவாரத்தில் சித்தேஸ்வர கோவில் இருக்கிறது கோபால கிருஷ்ணர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தியவை.
கோட்டையின் கீழ்தளத்தில் உத்சவம்பா கோவிலும் இருக்கிறது. இப்படி ஒரே கோட்டையில் நிறைய கோவில்கள் இருப்பது சிறப்பு அம்சம் .
லிங்காயத்துக்களின் முக்கிய மடமான முருகாராஜேந்திர மட ம் அருகில் இருக்கிறது
கோட்டையில் விழும் மழை நீரை சேமித்து மீண்டும் பயன்படுத்த சில அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கோட்டைக்குள் தண்ணீர் தட்டுப்பாடே இராது .
அங்கி மட வட்டாரத்தில் பஞ்சலிங்கேஸ்வர கோவில் இருக்கிறது. அங்கு 5 லிங்கங்கள் உள்ளன.
கோட்டையில் துப்பாக்கி மருந்து உற்பத்தி செய்யும் ஆலைகளும் இருந்த தடயங்களைக் காணலாம்
113.ஹரிஹர் கோவில் HARIHAR HARIHARESWARA TEMPLE
வீர நரசிம்ம மன்னாரின் தளபதி 1228-ல் கட்டிய ஹரிஹரேஸ்வர கோவில் ஹரிஹர் என்னுமிடத்தில் இருக்கிறது. சிவனின் வலதுபுறமும் விஷ்ணுவின் இடது புறமும் ஒரே சிலையில் அமைந்த சங்கர நாராயணனே ஹரியும் ஹரனும்.ஆவர் . இந்தக்கோவில் ஹொய்சாளரின் உன்னத சிற்பக்கலைக்கு எடுத்துகாட்டாக அமைந்து இருக்கிறது.
வள்ளுவரின் குறட்பாக்களை நூற்றுக்கணக்கான பெரியோர்களின் பொன் மொழிகளுடன் ஒப்பிடமுடிகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அத்தனை பெரியோர்கள் சொன்னதையும் அவர் நமக்கு ஜுஸ் Juice பிழிந்து கொடுத்து இருக்கிறார் ; வள்ளுவர் (Tiru Valluvar) சீன மொழியைப் படித்ததில்லை ; ஆயினும் கன்பூசியஸ் எதிரொலியைக் குறளில் கேட்க முடிகிறது. வள்ளுவர் பாலி (Pali) மொழி படித்தாரோ இல்லையோ; ஆயினும் தம்ம பத (Dhammapada) எதிரொலியைக் கேட்க முடிகிறது ; வள்ளுவன் மாபெரும் சம்ஸ்க்ருத மொழி அறிஞன் என்பதில் சந்தேகமே இல்லை; இதனால் சம்ஸ்க்ருத இலக்கியத்தின் தாக்கத்தை முதல் குறளிலிருந்து கடைசி குறள் வரை காண முடிகிறது . வால்மீகி முதல் வள்ளுவர் வரை என்ற என்னுடைய தமிழ் புஸ்தகத்தில் இதைக் காட்டியுள்ளேன். நான் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் எண்ணங்களும் அப்படியே இருப்பதைக் காட்டி இருக்கிறேன்; வள்ளுவர் யாரையும் காப்பி Copy அடிக்கவில்லை. அவர் பிறவியிலேயே மஹா மேதாவி ; ஒரு அவதாரம் என்று சொன்னாலும் மிகையல்ல. உலகில் எங்கும் காண முடியாத புதுமையைச் செய்தார். உலக மஹா அறிஞ ர்களின் அத்தனை பொன்மொழிகளையும் சுருக்கி வரைந்தார் .
கன்பூசியஸ் (Confucius) என்ற சீன தத்துவப் பேரறிஞர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அவரை இன்று உலகம் முழுதும் போற்றுகிறது . தேசீய சீனா என்னும் தைவான் (Taiwan) நாட்டில் (பார்மோசா தீவு) அவர் பிறந்த தினம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதோ மேலும் சில ஒப்பீடுகள் :-
நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.- என்று கன்பூசியஸ் (Confucius) சொன்னார்
வள்ளுவர் சொல்கிறார் : “அட கொஞ்சமாவது யூ ட்யூபில் You Tube அல்லது கோவில் உபன்யாசங்களில் அல்லது ரேடியோவில் நல்லதைக் கேளுங்கள்; உங்களுக்கு இமயமலை அளவுக்கு புகழ் ஓங்கிவிடும் என்கிறார்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.– குறள் 416
[பொருட்பால், அரசியல், கேள்வி]
:எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.– என்பது இதன் பொருள் வள்ளுவர் பயன்படுத்திய சொற்களைக் கவனியுங்கள்
ஆன்ற பெருமை ; அதன் பொருள் ஆன்ற : adj. ஆல்-. சால்-. Excellent, grand, splendid; மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.ராணம் )
Xxxxx
ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.– என்று கன்பூசியஸ் (Confucius) சொன்னார்.
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.– கன்பூசியஸ் (Confucius)
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு– குறள் 467
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
ஸம்ஸ்க்ருதச் சொல் – கருமம்
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
இதில் வள்ளுவர் பயன்படுத்திய ஒரு புது வினைச் சொல்லை கவனிக்கவேண்டும் துணிக = துணிச்சலுடன் இறங்கு!
இன்னும் ஒரு குறளில் வெற்றி நிச்சயம் என்கிறார் :-
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்–குறள் 666
உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Xxxxx
ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!– கன்பூசியஸ் (Confucius)
சொன்னது
வள்ளுவரோ இன்னும் ஸ்ட்ராங்STRONG காகவே பாடுகிறார்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு-– குறள் 204
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
காரணமே இல்லாமல் ஒருவனுக்கு தீங்கு நினைத்தால் தர்மம் உனக்குக் கல்லறை தோண்டிவிடும் !
இதையும் விட ஸ்ட்ராங் STRONG ஆக இன்னும் ஒன்றும் சொல்கிறார்; நாம் செய்யும் தீவினைகளோ நல்ல வினைகளோ நம்மை நிழல்போல தொடர்ந்து வருமாம்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உறைந் தற்று– குறள் 208
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
ஸம்ஸ்க்ருத புராணங்களில் இதை சித்திர குப்தன் என்பர். அதன் தமிழ் அர்த்தம் = மறைவான DRAWING ட்ராயிங் = ரகசிய சித்திரம். SECRET PICTURE= GUPTA CHITRA அதாவது யமனிடம் உள்ள கம்பியூட்டர் அமெரிக்காவில் நாஸா NASA ‘S SUPER FAST COMPUTER நிறுவனத்தில் உள்ளதை வீட சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டர் ; நமது தீய எண்ணங்களைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு, நாம் இறக்கும் நாளில் எமனுக்கு முன்னதாக PRESENTS ப்ரசன்ட் செய்யுமாம்; அந்த சித்ர குப்தன் அக்கவுண்ட் புக் ACCOUNT BOOK படி எமதர்ம ராஜன் நமக்கு தீர்ப்பு வழங்குவான். கணக்குத் தப்பாமல் தீர்ப்பு சொல்லுவதால் அவனுக்கு தர்மராஜன் JUSTICE KING என்றும் பெயர் . வள்ளுவர் சித்ர குப்தனை நிழல் SHADOW என்று மொழிபெயர்க்கிறார் !
— TO BE CONTINUED……………………….
Tags- சித்திர குப்தன், நாஸா, சூப்பர் கம்ப்யூட்டர், கன்பூசியஸ் , வள்ளுவர்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜப்பானிய நாடோடிக் கதை!
கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது? ஜப்பானிய நாடோடிக் கதை தரும் காரணம்!
ச.நாகராஜன்
ஜப்பானிய நாடோடிக் கதைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இவை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக் காட்டுபவை.
கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?
காரணத்தைச் சொல்கிறது ஒரு ஜப்பானிய குட்டி நாடோடிக் கதை.
ஹிரோயும் அவோயும் சகோதரர்கள்.
ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள்.
ஹிரோய் தவறான வழியில் நிறைய பொருள் சம்பாதித்து வந்தான்.
ஆனால் அவோய் நியாயமான வழியில் குறைவாகச் சம்பாதித்தான்.
ஒரு சிறிய குடிசையில் அவன் வசித்து வந்தான்.
அன்றாட வாழ்க்கைக்கே அவன் அல்லல்பட்டுக் கொண்டிருந்தான்.
புத்தாண்டு தினம் வந்தது.
அவோய் இறைவனுக்கு நிவேதனமாக ஏதாவது தர வேண்டும் என்று எண்ணினான். அதை அளித்த பின்னரே அவன் உணவு உண்ண வேண்டும்.
கையில் ஒன்றும் இல்லை.
நேராக ஹிரொய் மாளிகைக்குச் சென்று ஒரு கேக் தருமாறு கேட்டான். ஆனால் ஹிரொய் இல்லை என்று கை விரித்தான்.
மனம் சோர்ந்து அவோய் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.
வயதானவர் ஒருவர் ஒரு ரொட்டித் துண்டுடன் வழியில் நின்று கொண்டிருந்தார். அதை அவோயிடம் கொடுத்த அவர், ‘இதைச் சாப்பிடு’ என்றார்.
”இறைவனுக்கு படைப்பதற்கு முன்னர் நான் எதையும் சாப்பிட மாட்டேன். பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர இதை நான் சாப்பிட மாட்டேன்” என்றான் அவோய்.
“சரி” என்ற பெரியவர் தொடர்ந்து சொன்னார் :”நேராகக் கோவிலுக்குப் போ. அங்கு முதலில் பார்ப்பவரிடம் இதை கொடுத்து அரைக்கும் கல்லைக் கேள். அவர் தருவார். அதை வாங்கிக் கொள்“ என்றார்.
அவோய் ரொட்டித் துண்டுடன் கோவிலுக்குச் சென்றான்.
அங்கு கோவில் வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.
“அந்த ரொட்டித் துண்டை எனக்குத் தா” என்று கேட்டது.
அவோய் அதை உடனே கொடுத்தான். ‘எனக்கு அரைக்கும் கல்லைத் தா” என்றான்.
கோவிலின் உள்ளே சென்ற தேவதை ஒரு அரைக்கும் கல்லைக் கொண்டு வந்து தந்தது. “இதோ பார், இதன் கைப்பிடியைச் சுற்றி அரைத்தவாறே நீ என்ன நினைத்தாலும் அது நடக்கும்” என்று கூறி விட்டு மறைந்தது.
அரைக்கும் கல்லை எடுத்துக் கொண்டு தன் வீடு வந்த அவோய், அதை அரைத்தவாறே, ‘இது ஒரு மாளிகையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று தனக்குத் தானே கூறினான்.
என்ன ஆச்சரியம். அவனது குடிசை மாளிகையாக மாறியது.
கல்லை அரைத்தவாறே தனக்கு வேண்டியதை எல்லாம் பெற்றுக் கொண்டான் அவோய்.
8.வாசுதேவ என்ற முத்திரையுடன் முடியும் பாடல்கள் யாருடையவை ?
Xxxx
9.துகாராம் மராத்தி மொழியில் பாடிய அபங்கங்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ?
xxxx
10.அபங்கம் பாடிய யார் ‘ஏக ஜநார்த்தனி’ என்ற முத்திரை வைத்துப் பாடல்களை இயற்றினார் ? ஏன் ?
xxx
விடைகள்
1.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் தேவாரத்தைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தமிழ் பரப்பினார். அவருடைய விக்ரகங்கள் அனைத்தும் டான்ஸ் ஆடும் போஸில்தான் இருக்கும். அவர் தனது பாடலில் முத்திரை வைத்து– அதாவது தனது பெயரை — பல வகைகளில் சொல்லி, பாடி முடிப்பார் ; நமக்குத் தெரிந்து இந்தியாவில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வழக்கத்தைத் துவக்கியவர் சம்பந்தர்தான்
xxxxx
2.சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடத்தில் கிருதிகள் இயற்றிய புரந்தரதாசர்தான் கர்நாடக இசையின் பிதாமஹர் . அவருடைய முத்திரை புரந்தர விட்டல; இந்த வரியுடன் பாடல் முடியும்
xxxxx
3.சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். தியாகராஜர், ஞான சம்பந்தர், புரந்தரதாசர் போல, தனது பெயரையே பயன்படுத்தினார்
பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ப்ரஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு
ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன
xxxx
4.வேதத்தில்தான் முத்திரை வைத்துப் பாடும் வழக்கம் தோன்றியது ; பல ரிஷிகள் ஒரு குறிப்பிட்ட வகையில் துதிகளை முடிக்கின்றனர்; இன்னும் பலர் தனது பெயரையே சொல்லிப்படுகின்றனர். ஞான சம்பந்தர் ரிக்வேதத்தை அதிகமாகப் புகழ்வதால், முத்திரை வைத்துப் பாடுவதை ரிக்வேதத்தில் கற்றார் என்றால் அது மிகையாகாது
xxxxx
5.உண்டு ;மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்
கபீர் கஹதா – கபீர் பாடல்கள்
xxx
6.ஜெயதேவர் பாடிய நூல் கீத கோவிந்தம் . இதில் 24 அஷ்டபதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஜெயதேவரின் பெயருடன் முடியும் .
எடுத்துக் காட்டாக , முதல் அஷ்டபதி முடியும் வரிகள்
ஸ்ரீ ஜயதேவ கவே: இத முதிதம் உதாரம்
ஸ்ருணு ஸுகதம் ஸுபதம் பவஸாரம்
கேசவ த்ருத தஸவித ரூப (ஜயஜக தீஸஹரே
xxxx
7.பாபநாசம் சிவன் தனது முத்திரையாக “ராமதாஸ” என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார்.
xxxx
8.கோவை மாவட்டத்தில் பிறந்த மைசூர் வாசுதேவாவாச்சாரியார் (1865- 1961) முத்திரை வாசுதேவ ;சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார் பல சமஸ்தானங்கள், மடங்களில் பெரிய விருதுகளை பெற்றார்.
xxxx
9.அவை துகா மனே என்ற முத்திரையுடன் முடியும்
xxxx
10.ஏக்நாத்
ஏகநாத் என்பது பாடிய மகானின் பெயர்; அவருடைய குரு ஜனார்த்தன சுவாமி. இரண்டையும் இணைத்து இப்படி ஏக ஜநார்த்தனி முத்திரை வைத்தார் .
XXXXX
TAGS- முத்திரை, பாடகர், இந்துஸ்தானி, கர்நாடக இசை, பாடல் இயற்றியோர் , கிருதிகள், கீர்த்தனைகள் , சங்கீத மும்மூர்த்திகள், SIGNATURE