போப்பாண்டவரும் தஞ்சாவூர் அபிராமி பட்டரும்! (Post No.3530)

 

Written by S NAGARAJAN

 

Date: 10 January 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

 

Post No.3530

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

நகைச்சுவையுடன் ஒரு நல்ல கருத்து

 

 

வாடிகன் போப்பாண்டவரும் தஞ்சாவூர் அபிராமி பட்டரும்! – கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் ?

 

by ச.நாகராஜன்

 

 

ஒருமுறை தஞ்சாவூர் அபிராமி பட்டர் இத்தாலிக்குச் சென்றார். அங்கு வாடிகனில் போப்பாண்டவர் தங்கி இருக்கும் பிரம்மாண்டமான பீடத்திற்குச் சென்று போப்பாண்டவரிடம் நலம் விசாரித்தார். போப்பாண்டவரும் மகிழ்ச்சியுடன் அபிராமி பட்டரை வரவேற்றார்.

 

 

பேச்சுக்கிடையே போப்பாண்டவரின் அருகில் இருந்த அழகிய பெரிய சிவப்பு போனைப் பார்த்தார் அபிராமி பட்டர்.

“இதென்ன, சற்று வித்தியாசமான போனாக இருக்கிறதே?” என்று கேட்டார் அவர்.

 

 

போப்பாண்டவர் புன்னகையுடன், “ஆமாம், வித்தியாசமானது தான். இது கடவுளுடன் பேசுவதற்கான ஹாட் லைன்” என்றார்.

அபிராமி பட்டர் மெல்லிய புன்சிரிப்புடன், “எனக்குக் கொஞ்சம் லைன் தர முடியுமா? கடவுளிடம் சற்றுப் பேச விரும்புகிறேன்” என்றார்.

 

 

“ஆஹா! அதற்கென்ன, இதோ தருகிறேன் லைன்! என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்” என்றார் போப்.

மனம்  மகிழ்ந்த அபிராமி பட்டர் கடவுளிடம் பேசலானார். ‘எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்று தனது ஆசையைச் சொன்னார்.

கடவுளும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அனுக்ரஹித்தார்.

ஒரு நிமிடம் ஓடிப் போனது.

 

 

மகிழ்ச்சியுடன் பட்டர் போப்பாண்டவருக்கு நன்றி தெரிவித்தார்.

“ஒரு நிமிடம்” என்ற போப்பாண்டவர், “ நீங்கள் பேசியதற்கான கட்டணம் நூறு டாலர்” என்றார்.

 

திகைத்துப் போன பட்டர், “நூறு டாலரா” என்று கூவினார்.

“ஆமாம். இது ஹாட் லைன் இல்லையா! அதுவும் கடவுள் இருக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதோ! அங்கே இருக்கிறார்” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிய போப் “அதனால் தான் இவ்வளவு சார்ஜ்” என்றார்.

 

 

அபிராமி பட்டரும் நூறு டாலரை போப்பிடம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினார்.

நாட்கள் நகர்ந்தன.போப்பாண்டவர் இந்தியா விஜயத்தின் போது மறக்காமல் தஞ்சாவூர் வந்து அபிராமி பட்டரை அவர் குடிலில் பார்த்தார்.

 

நலம் விசாரித்த போப்பாண்டவரை அபிராமி பட்டர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார்.

 

பேச்சினிடையே அபிராமி பட்டரின் அருகில் இருந்த அழகிய பெரிய ஒரு பச்சை வண்ண போனைப் பார்த்த போப்பாண்டவர், “இதென்ன? சற்று வித்தியாசமான போனாக இருக்கிறதே” என்றார்.

“ஆமாம், வித்தியாசமானது தான். இதன் மூலம் கடவுளுடன் உடனுக்குடன் பேசலாம்” என்றார்.

 

போப்பாண்டவருக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

“எனக்குக் கடவுளிடம் சற்று அவசரமாகப் பேச வேண்டும். லைன் தர முடியுமா?” என்று கேட்டார்.” உங்களுக்கு இல்லாமலா” என்ற அபிராமி பட்டர் உடனுக்குடன் கடவுளிடம் பேசுவதற்கான லைனைப் போட்டு போப்பாண்டவரிடம் தந்தார்.

 

 

மகிச்சியுடன் போப்பாண்டவர் பேசலானார். எவ்வளவு உலகப் பிரச்சினைகள். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்சினை. அத்துடன் தான் தீர்வு காண வேண்டியவற்றையும் பேசினார்.கடவுள் போப்பாண்டவரை அனுக்ரஹித்தார்.

 

 

போன் பேசி முடிந்ததும் போப் அபிராமி பட்டருக்குத் தன் மனமார்ந்த நன்றியைச் சொன்னார்.

 

 

“ஒரு நிமிடம்” என்ற பட்டர், “இதற்கான சார்ஜை நீங்கள் தர வேண்டும். சார்ஜ் பத்து ரூபாய்” என்றார்.

போப் திகைத்துப் போனார். அவர் பேசியதோ பதினைந்து நிமிடங்கள். வெறும் பத்து ரூபாய் தானா?

 

“சரியாகப் பாருங்கள். வெறும் பத்து ரூபாய் தானா! பதினைந்து நிமிடங்கள் பேசி இருக்கிறேன்” பிரமித்தவாறே போப் கேட்டார்.

ஆனால் அபிராமி பட்டரோ, “ஆமாம், பத்து ரூபாய் தான். இங்கு இது லோக்கல் கால். கடவுள் இங்கேயே தான் இருக்கிறார்!” என்றார்.

 

*

கடவுள் எங்கே, எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்று மன்னன் ஒருவன் கேட்ட சிக்கலான கேள்விக்கு ஞானி ஒருவர் சிரித்தவாறே,”அவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான்” என்றார்.

அதற்கு அர்த்தம் என்ன என்று மன்னன் கேட்ட போது ‘உள்ளார்ந்து கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்தான் இல்லையா, பகவான்! அதனால் தான் சொன்னேன், அவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்று.’ என்றார்.

 

 

“திரௌபதியும் இதயத்தில் உறைபவனே என்ற அர்த்தத்தில் ஹ்ரூஷீகேசா என்று அலறிக் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து பரந்தாமன் அவள் துயரைத் தீர்த்தான், இல்லையா!”

 

 

ஞானி சிரிக்க, மன்னன் பெரிய தத்துவத்தைப் புரிந்து  கொண்டான்.

 

 

உள்ளுவார் உள்ளத்துள் உளன் என்பது தேவார வாக்கு. டைரக்ட் டயலிங் (Direct Dialing) ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது!

***********

Spiritual Message though a Village Woman (Post No.3529)

4692c-pot2bwomen252c2btribal

Written by London swaminathan

 

Date: 9 January 2017

 

Time uploaded in London:- 17-45

 

Post No.3529

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Hindu saints are great writers. They propagate great ideals through simple similes or imageries. When those examples are seen in our day to day life, it goes straight in to our head and heart. Ramakrishna Paramahmasa was one who propagated the highest ideals in Hindu literature through parables, pithy sayings and similes. It is a strange coincidence that a Tamil saint who lived approximately 1000 years before Sri Ramakrishna Paramahamsa also used the same simile.

 

An ascetic or a Yogi is like a water carrying village woman. She fetches water from a faraway well or tank in five or six metal pots piled up one over the other on her head. Juts to avoid the boredom, she gossips with other women watch fun on her way, but always remember the water pots on her head. An ascetic or Yogi also does everything like an ordinary man but always remember God. Though the women artistes in the Circus, Folk dance and Acrobats also do such things they are trained for it. But a village woman is just an ordinary person bt with extraordinary talent in carrying and balancing the water pots.

 

I have given below the sayings of Paramahamsa and Pattinathar; I have already written about Pattinathar. Please read my post: “Eyeless Needle changed the Life of a Millionaire”- posted on 2nd January 2017.

9c281-water2beverywhere

Pattinathar Verse:-

What though  they do, what though they undergo,

The liberated are ever poised in Silence.

With easy skill she  sports a gait

Flourishing her hands Twain.

Yet the house maid has an eye on the water pot

She carries on her head – Pattinathar Poem

 

ca850-water2bpot

Ramakrishna Sayings: –

As a boy holding to a post or pillar whirls about it with headlong speed without any fear of falling, so perform your worldly duties   fixing your hold firmly on god ,and you will be free from danger.

 

As the village maidens in India carry four or five pots of water placed one over the other upon their heads, talking all the way with one another about their joys and sorrows, and yet do not allow a single drop of water to spill, so must the traveller in the path of virtue walk along his route. In whatever circumstances, he may be placed, let him always take heed that his heart does not swerve from the true path.

 

The magnetic needle always s to the North, and hence it is that the sailing vessel does not lose her direction. So long as the heart of man is directed towards God, he cannot be lost in the ocean of worldliness.

 

–Subham–

 

 

 

 

‘தாதி மனம் நீர்க்குடத்தே தான்’: பட்டினத்தாரும் பரமஹம்சரும்! (Post No.3528)

Written  by London swaminathan

 

Date: 9 January 2017

 

Time uploaded in London:- 9-35 am

 

Post No.3528

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ராம கிருஷ்ண பரமஹம்சரும் பட்டினத்தாரும் ஒரு அருமையான விஷயத்தை நமக்கு எளிய, கண்கண்ட காட்சி மூலம் விளக்குகிறார்கள்.

 

தண்ணீர் குடத்தை தலையில் சுமந்து வரும் பெண்ணோ காய்கறிக்கூடை அல்லது மீன் கூடைகளை தலையில் சுமந்து வரும் பெண்களோ வழியில் யாரைக் கண்டாலும் நின்று கொண்டு அரட்டை அடிப்பார்கள். போகும், வரும் வழியில் இருக்கும் விஷயங்களை வேடிக்கையும் பார்ப்பார்கள். ஆயினும் அவர்கள் தலையில் உள்ள நீர்க்குடமோ, கூடையோ கீழே விழாது. இதைக் கரக ஆட்டத்திலும் கழைக்கூத்தாடி ஆட்டத்திலும் கூட பார்க்கிறோம். ஆனால் கரக ஆட்டக்காரிகளும்  கழைக்கூத்தாடிகளும் அதற்காகவே சிறு வயது முதல் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள். குடும்பப் பெண்களும் கூட தலையிலுள்ள பாரம் கீழே விழாமல் பாதுகாப்பது ஒரு அதிசயமே. இது சந்யாசியின் மனத்தைப் போன்றது ஒரு யோகியின் மனத்தைப் போன்றது.

 

 

உலகிலுள்ள சாதாரண மனிதன் செய்யும் எல்லாத் தொழில்களையும் அவர்களும் செய்வார்கள். ஆனால் சந்யாசியின்  சித்தம் மட்டும் , காம்பஸிலுள்ள முள் எப்போதும் வடக்கு திசையையே காட்டி நிற்பது போல இறைவனையே நோக்கி இருக்கும். இதை பகவத் கீதையிலும் எவ்வளவோ இடங்களில் கண்ணபிரான் வலியுறுத்துகிறான். நாம் சந்யாசியின் உண்மை இயல்பை அறியாமல் அவர்களையும் நம்மைப்போல ஒருவர் என்று நினைத்து விடக்கூடாது.

இப்போது பட்டினததார் பாடலைப் படியுங்கள்; நன்கு விளங்கும்:-

எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும்

முத்தர் மனம் இருக்கு மோனத்தே — வித்தகமாய்க்

காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும்

தாதி மன நீர்க்குடத்தே தான்

–பட்டினத்தார் பாடல்

பொருள்:-

என்ன காரியம் செய்தாலும் என்ன நிலைமைக்கு உள்ளானாலும் முக்தி அடைந்த மஹான்கள் எப்போதும் மவுன நிலையில் இருப்பர் (மனத்துக்குள்); ஒரு பெண் அழகாக நடை நடந்து, இரு கைககளையும் ஒய்யாரமாக வீசி நடந்து வந்தாலும் அந்தப் பெண்ணுக்கு மனது முழுதும் தலையிலுள்ள நீர்க்குடத்தின் மேல்தான் என்பதை அறிவாயாக!

 

ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்

இதையே ராம கிருஷ்ண பரமஹம்சரும் எளிய மொழியில் செப்புவார்:-

காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் ஈஸ்வரனை நாடி இருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் (சம்சார சாகரம்) திசை தப்பி போக மாட்டான்.

— ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்

 

நமது கிராமத்துப் பெண்மணிகள், ஒன்றன் மீதொன்றாக நாலைந்து தண்ணீர்ப் பானைகளைத் தலையின் மீது வைத்துக்கொண்டு நடந்து செல்லும்போது ஒருவரோடொருவர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகின்றனர். ஆயினும் ஒரு சொட்டுத் தன்ணீரைக்கூட சிந்த விடுவதில்லை. அது போலவே தர்ம மார்கத்தில் நடக்கும் மனிதனும் நடக்க வேண்டும். எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தாலும் , அவனுடைய மனம் உண்மை நெறியை விட்டுக் கொஞ்சமேனும் விலகாமல், அவன் சதா ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

— ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்

 

பட்டினத்தார் பாடலையும் பரமஹம்சரின் பொன்மொழிகளையும் ஒப்பிடும்போது அது நம் மனத்தில் பசும ரத்தாணி போல பதியும்!

 

–subaham–

தமிழில் உள்ள யமகப் பாடல்கள்! (Post No.3527)

Research article Written by S NAGARAJAN

 

Date: 9 January 2017

 

Time uploaded in London:-  5-22 am

 

 

Post No.3527

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

6-1-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!

.நாகராஜன்

 

தமிழின் எல்லையில்லாப் பெருமை

 

செம்மொழிகளில் எல்லாம் உயரிய செம்மொழியாக விளங்கும் தமிழுக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒரு சிறப்பு யமகம் என்னும் மடக்கணியைக் கொண்டுள்ள பாடல்களாகும்.

 

ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வர வேண்டும் அப்படி வரும் சொற்கள் ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தர வேண்டும். இப்படி அமையும் செய்யுள் அணியை யமகம் அல்லது மடக்கு அணி என்று கூறுவர்.

 

 

இப்படி செய்யுள் அமைப்பதற்கு  மொழி வளமை வாய்ந்த ஒன்றாக இருத்தல் வேண்டும். சொற்கள் ஏராளமான பொருள்களை இயல்பாகக் கொண்டிருப்பதோடு, அவை வழக்கில் இருந்து வரவும் வேண்டும். எழுத்துக்கள் அழகுற ஒன்றுடன் ஒன்று இணைந்து வெவ்வேறு பொருள் தரும் சொற்களை உருவாக்கவும் வேண்டும்.

 

 

உலகில் இந்த மடக்கு அணியை உரிய முறையில் அமைக்க வல்ல மொழிகள் சிலவே உண்டு. சம்ஸ்க்ருதம் போன்ற சில மொழிகளில் யமகம் அமைக்க முடியும். ஆங்கிலம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில்  மடக்கணிப் பாடல்களை அமைக்க முடியாது.

 

சுமார் 15000 பாடல்களுக்கும் மேலாக இப்படி மடக்கணிப் பாடல்களைக் கொண்டிருக்கும் உலகின் ஒரே மொழி தமிழ் மொழியே.

 

வாக்கிற்கு அருணகிரியின் யமக ஜாலம்

 

 

கந்தர் அந்தாதி 100 பாடல்களைக் கொண்டது. அருணகிரிநாதர் இயற்றியது.  சி,சீ,செ,சே, தி,தீ,தெ,தே என்னும் எட்டு எழுத்துக்களில் ஒன்றைக் கொண்டு மட்டுமே தொடங்கும் பாடல்களை உடையது. அவருடன் வாதுக்கு வந்த வில்லிப்புத்தூரார் பொருள் கூற முடியாது தோற்றுப் போன பாடலையும்  உள்ளடக்கியது.

 

அதில் ஒரு மடக்குப் பாடலைப் பார்க்கலாம் :

 

திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்                

திவாகர கன்ன புரைக் குழை வல்லி செருக்குரவ்ந்          

 திவாகர கன்ன சுகவாசகதிறல் வேல் கொடென்புந்                      

திவாகர கன்ன மறலியிடாதுயிர்ச் சேவலுக்கே (செய்யுள் 15):

 

எளிதில் பொருளைப் புரிந்து கொள்ள முடியாத இந்த யமகப் பாடலை முதலில் சொற்களைச் சரியாகப் பிரித்துக் கொண்டு பார்த்தால் பொருள் எளிதில் விளங்கும்.

 

திவா கரகன்ன கொடை பாரி என்று உழல் தீன அல் ஈர்

திவாகர கன்னபுரக் குழை வல்லி செருக்கு உர

(அந்) தி வாகு அர கன்ன சுக வாசக திறல் வேல் கொடு என்

(புந்) தி வா கர கன்ன மறலி இடாது  உயிர் சேவலுக்கே.

 

 

என்று  இப்படிப் பிரித்துக் கொண்டால் பொருள் சுலபமாக விளங்கும்!

 

 

.திவா – பகல் பொழுதில் தானம் கொடுக்கும்

கரகன்ன – கையை உடைய கர்ணனே!

கொடைபாரி – பாரி வள்ளலைப் போன்ற கொடை வள்ளலே!

என்று – என்று இப்படிப் பலபேரிடம் புகழ்ந்து பேசி,

உழல் – என்னன உழல வைக்கும்

தீன – வறுமை என்னும்

அல் – இருளை

ஈர் – பிளக்கக் கூடிய

திவாகர – ஞான சூரியனே!

கன்ன புரக்குழை – கர்ணபூரம் என்றா ஆபரணத்தைத் தரித்திருக்கும்

வல்லி – வள்ளிநாயகி

செருக்கு – பெருமிதத்துடன் தழுவும்

உர – மார்பை உடையவனே!

அந்தி வாகு – மாலைப் பொழுதின் நிறத்தை உடைய

அர – சிவபிரானின்

கர்ண – காதில்

சுக வாசக – இனிமையான ஓம் என்னும் பிரண்வத்தை உபதேசித்தவனே!

கர –ஒளிந்து

மறலி கன்னமிடாது – எம்ன் என்னைக் கொள்ளை கொள்ளாதபடி உயிர் சேவலுக்கே – உயிரைக் காபாற்றுவதற்காக

திறல் வேல் கொடு – வலிமை வாய்ந்த வேலாயுதத்தை ஏந்தி வந்து

 

என் புந்தி வா – என்னுடைய இதயத்தில் நீ வீற்றருள்வாயாக!

அற்புதமாக இப்படி நூறு செய்யுள்களைக் கொண்ட கந்தரந்தாதியை உலகிற்குத் தந்த அருணகிரிநாதரை வாக்கிற்கு அருணகிரி என்று போற்றுவதில் வியப்பே இல்லை.

 

 

    

வில்லிப்புத்தூராரின் சொல் ஜாலம்

 

அடுத்து சொல்லின் செல்வரான வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் பல யமகச் செய்யுள்களை அழகுறப் பாடியுள்ளார்.

அவற்றில் ஒன்றைப் பார்க்கலாம்..

 

ஆதி பருவத்தில் அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சருக்கத்தில் பத்தாவது பாடலாக் இது அமைகின்றது.

அர்ச்சுனன் நாக லோகம் சென்று உலூபியின் மாளிகையில் அவளோடு இன்புற வாழ்கிறான்.அவள் இராவானைப் பெறுகிறாள்.

பின்னர் அங்கிருந்து மீண்டு அருச்சுனன் கிழக்கு நோக்கிச் செல்வதைச் சொல்லும் பாடல் இது.

 

நாகாதிபன்மகண் மைந்தனலங் கண்டு மகிழ்ந்து            

நாகாதிபன்மகன் மீளவு நதியின் வழி வந்து                    

நாகாதிபன் வண்சாரலி னன்னீர்கள் படிந்து

நாகாதிபன் விடுமும்மதநாறுந்திசை புக்கான்

 

 

இதன் பொருள்:

நாக அதிபன் மகன் –சுவர்க்க லோகத்துக்குத் தலைவனான இந்திரனின்  மகனான அர்ச்சுனன்

நாக அதிபன்  மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து – ஒரு நாகராஜனது மகளான உலூபியிடம் தோன்றிய அந்தப் புத்திரனது அழகைக் கண்டு மகிழ்ந்து

மீளவும் நதியின் வழி வந்து – மீண்டும் பில வாயிலாக கங்கா ந்திக்கு வந்து சேர்ந்து

நாக் அதிபன் வண் சாரலின் நல் நீர்கள் படிந்து – மலையரச்னாகிய இமயமலையினது அழகிய சாரலிலுள்ள அழகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, அந்த வடதிசையிலிருந்து கிளம்பி

நாக அதிபன் விடு  மும்மதம் நாறும் திசை புக்கான் – யானைகளுக்குத் தலைவனான ஐராவதம் என்னும் யானை சொரிகிற  மூன்று வகை மதஜலங்கள் மணம் வீசப் பெற்ற கிழக்குத் திசையை அடைந்தான்.

எப்படி ஒரு சொல் ஜாலம்!

 

 

கவிச் சக்கரவர்த்தியின் யமகப் பாடல்

 

அடுத்து கவிச் சககரவர்த்தியாகிய கம்பர் ராமாயணத்தில் தகுந்த் இடங்களில் பல யமகப் பாடல்களை மனம் கவரும் வண்ணம் அழகுற அமைத்துள்ளார்.

 

சுந்தரகாண்டத்தில் ஊர் தேடு படலத்தில அடுத்தடுத்து நான்கு யமகப் பாடல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று இது.

 

 

அஞ்சு வணத்தி னாடை யுடுத்தா ளரவெல்லாம்            

அஞ்சு வணத்தின் வேக மிகுத்தா ளருளில்லாள்             

அஞ்சு வணத்தி னுத்தரி யத்தா ளலையாரும்                        

அஞ்சு வணத்தின் முத்தொளி ராரந் தணி கொண்டாள் 

 

இலங்கா தேவியின் தோற்றத்தை கம்பன் இந்தப் பாடலில் வர்ணிக்கிறான்.

 

பாடலின் பொருள் :

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் – வெண்மை,செம்மை, கருமை,பொன்மை, பசுமை ஆகிய ஐந்து நிறங்கள் கொண்ட ஆடையை உடுத்தி இருந்தாள்

அரவெல்லாம் அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் – பாம்புகளெல்லாம் கண்டு பயப்படும் க்ருடனைப் போன்ற கடும் வேகம் கொண்டவள்

அருள் இல்லாள் – இரக்கம் என்பதே சற்றும் இல்லாதவள்

அம் சுவணத்தின் உத்தரியத்தாள் – அழகிய பொன்னாலான மேலாடையை உடையவள்

அலை ஆரும் – அலை பொருந்திய

அம் – கடல் நீரில்

சு – அழ்கான

வள் – ஒளி பொருந்திய

நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சங்கினின்று பிறந்த முத்துக்கள் ஒளி வீசும் மாலையாகிய அணிகலனைத் தரித்திருந்தாள்.

எப்படி இலங்கா தேவியின் வர்ணனை?

 

இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள்

 

யமக அந்தாதிகள் தமிழில் ஏராளம் உண்டு. கலம்பகம் உள்ளிட்ட நூல்களிலும் யமகப் பாடல்கள் இலக்கணப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

நந்திக் கலம்பகம், காசிக் கலம்பகம், திருமயிலை யம்க அந்தாதி, திருவாலவாய் யம்க அந்தாதி,திருவரங்கத்து யமக அந்தாதி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் யமகப் பாடல்களை அழகுறக் கொண்டுள்ளன. தமிழில் உள்ள யம்கப் பாடல்களை மட்டும் தொகுத்தால் அற்புதமான் தமிழ் மொழியின் சிறப்பை உலகினருக்கு எடுத்துக் காட்டும் ஒன்றாக் அது அமையும்!

 

 

புலவர்களுக்குச் சவாலான யமகப் பாடல்களை சுலப்மாக அமைத்துப் பாடிய கவிஞர்களின் வல்லமையையும் தமிழின் வன்மையையும் நினைத்து நினைத்துப் பெருமைப் படலாம். பெருமைப் படுவதோடு அவ்வப்பொழுது சில பாடல்களையாவது படித்து மற்றவர்களோடு பகிர்ந்து மகிழலாம்!

 

**********

 

 

2016ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் புத்தகங்கள்! (Post No.3525)

Written by S NAGARAJAN

 

Date: 8 January 2017

 

Time uploaded in London:-  15-09

 

 

Post No.3525

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 2016ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் புத்தகங்கள்!

ச.நாகராஜன்

t

“அறிவியலைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவெனில் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது உண்மை தான்!”       

                             – நீல் டி க்ராஸ் டைஸன்

 

 

ஏராளமான அறிவியல்  புத்தகங்கள் மேலை உலகில் ஆங்கில  மொழியில் புத்தகச் சந்தையில் நாளுக்கு நாள் வந்து குவிகின்றன. அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் சுவையான புத்தகமே!

 

 

இருந்தாலும் சிறப்பான புத்தகங்கள் என்ற முதல் வரிசைப் புத்தகங்களில் இடம் பெறுபவற்றை அறிவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அப்படிச் சுட்டிக் காட்டப்படும் புத்தகங்களுள் ஒன்று – டைம் டிராவல் : எ ஹிஸ்டரி (Time Travel : A history)

 

 

இதை எழுதியவர் ஜேம்ஸ் க்ளெக் (James Cleitk). 62 வயதாகும் இந்த அமெரிக்க எழுத்தாளரின் பல புத்தகங்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 

ஏற்கனவே விண்வெளியில் ஏராளமான பயணங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்ட மனித குலம், காலத்தில் பயணம் செய்வதை ஏன் விரும்புகிறது என்பதை முதலில் ஆய்வு செய்கிறார் நூலாசிரியர்.

 

 

 ஒரு வரலாறு படைக்கவா, ஒரு மர்மத்தைத் துலக்கவா, அல்லது பழைய காலத்தில் நடந்தவற்றைத் திருப்பிப் பார்க்கவா? அல்லது ஒரு நம்பிக்கைக்காவா? அல்லது நம்முடைய ஆற்றல் எவ்வளவு தூரம் போகிறது என்பதைக் கண்டு களிக்கவா? ஒரே ஒரு முறை கிடைத்த மனித வாழ்க்கையைத் தவறாகத் தொலைத்து விட்டோமே என்ற வருத்தத்தைப் போக்கிக் கொள்ளவா?

      பயணம் பற்றிய பெரிய உண்மை ஒன்று இருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை தான் – மரணத்தை நோக்கி!

 

    ஹெச்.ஜி.வெல்ஸ் 1895ஆம் ஆண்டு எழுதிய டைம் மெஷின் என்ற நாவல் ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்தது.

அது எழுதப்பட்ட காலத்தை விட இன்று ஏராளமான தொழில் நுட்பங்களில் நாம் தேர்ந்திருக்கிறோம்.

 

 

   புதிய கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஏராளம். ஒன்றை இன்னொன்று வலுப்படுத்துகிறது. மின்சாரம், ரெயில், விமானப் பயணம், டார்வினின் பரிணாம வளர்ச்சி, தொல்லியல் கண்டுபிடிப்புகள், அடாமிக் க்ளாக் உள்ளிட்ட துல்லியமாக எதையும் நிர்ணயிக்க உதவும் நவீன சாதனங்கள்! அடேயப்பா எத்தனை, எத்தனை!!

 

 

     காலம் பற்றி பழைய காலம் முதல் இன்று வரை அறிஞர்கள்,விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள் ஆகியோர் கூறியவற்றைத் தொகுத்து வழங்கும் க்ளெய்க் பல கேள்விகளை முன் வைக்கிறார்.

 

 

     இனி நடக்க இருப்பவற்றை முன்னாலிருந்து வருவது போலவும் நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பின்னால்  போய்விட்டதாகவும் ஏன் கூறுகிறோம். வருபவற்றைப் பற்றிப் பேசும் போது வானத்தைச் சுட்டிக் காட்டி அங்கிருந்து வருவதாக அனைவரும் ஏன் சொல்கிறோம்?

 

      காலம் என்பது தான் என்ன?

     நிகழ்ச்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதன் தடத்தை எப்படி நாம் பாதுகாத்துத் தொடர்பு கொள்கிறோம் என்பது தான் காலம். (What is time? Things change, and time is how we keep track.)

 

 

           14 அத்தியாயங்களில் 352 பக்கங்களில் காலத்தைப் பற்றி அலசி ஆராயும் சுவையான இந்தப் புத்தகம் ஏன் காலப் பயணத்தில் மனிதன் இவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறான் என்ற கேள்விக்கு விடையைத் தருகிறது,

 

காலப் பயணத்தில் நமக்குள்ள ஆர்வம் மரணத்திலிருந்து தப்பிச் செல்லவே தான்!

 

 

சுவையான இன்னும் பல அறிவியல் புத்தகங்களில் ஒன்று ஹிடன் ஃபிகர்ஸ் என்பது. இதை எழுதியவர் அமெரிக்கப் பெண்மணியான மார்காட் லீ ஷெட்டர்லி. இவரது தந்தை நாஸாவில் வேலை பார்த்தை விஞ்ஞானி.

 

 

இந்த நூலில் மறக்கப்பட்ட ஏராளமான பெண் விஞ்ஞானிகளைப் பற்றியும் நாஸாவில் கம்ப்யூட்டர் பிரிவில் ஆராய்ச்சி செய்து விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக ஆக்க அடிகோலிய பெண்களைப் பற்றியும் லீ விவரிக்கிறார்.

மறக்கப்பட்ட இவர்களைப் பற்றி 2010ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதே பெயரில் இவரது புத்தகம் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

 

 

பெண்மணிகளுக்கு உரிய புகழையும் பாராட்டையும் தரத் தவறிய உலகத்தைச் சுட்டிக் காட்டும் இவரது நூல் ஒரு விழிப்புணர்வு ஊட்டும் நூலாகும்.

இது அனைவரையும் ஈர்த்துள்ளது; குறிப்பாக பெண் குலம் இதைப் புகழ்கிறது.

 

இன்னொரு சுவையான புத்தகம்,  ‘மரங்களுள் ஒளிந்திருக்கும் வாழ்க்கை!’ (The Hidden Life of Trees)

 

உலகில் தோன்றியவற்றில் பழமையானது மரங்கள். மனிதனின் மௌனமான தோழர்கள் மரங்களே! மனித குலத்தின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணத்திற்கான சாட்சியும்  மரங்களே தான். மனிதர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதும் மரங்களே. அவர்களுக்கு போதனை செய்யும்  ஆச்சரியகரமான போதகர்களும் மரங்களே!

இதை சுவையான விதத்தில் விவரிக்கிறார் ஜெர்மானிய எழுத்தாளரான பீட்டர் ஒலிபென்.

 

 

சிக்கலான விஷயங்களை  மௌன பாஷையில் வாசனை, சுவை, மின்சாரத் துடிப்பு ஆகியவை மூலமாக  மரங்கள் எப்படிப் “பேசித்” தெரிவிக்கின்றன என்பதை காடு பற்றிய ஆராய்ச்சியாளரான ஒலிபென் கூறும் விதமே தனி!

 

   மரங்கள் சுவாசிக்கின்றன. மரங்கள் குடிக்கின்றன. அவைகள் பேசுகின்றன. ஞாபக சக்தியைக் கொண்டிருக்கின்றன. காடுகளை சூப்பர் ஆர்கானிஸம் (சூப்பர் உயிரினம்) என்று சொல்லலாம். காடுகளில் பொதிந்திருக்கும் மர்மங்கள் விஞ்ஞானிகளாலும் கூட கண்டுபிடிக்க முடியாதவை!

     இப்படி அத்தியாயம் அத்தியாயமாக மரத்தின் ஒளிந்திருக்கும் வாழ்க்கையைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் ஒலிபென்.

 

    மேலே உள்ள மூன்று நூல்களின் ஆசிரியர்களும் ஏராளமான விருதுகளைப் பெற்றவர்கள் என்பது  குறிப்பிடத் தகுந்த விஷயம்!

 

அறிவியல் ஆர்வலர்களின் சாய்ஸ் எப்போதுமே சிறப்பாகத் தான் இருக்கும்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

எர்னஸ்ட் ஹெய்ன்ரிச் ஹெக்கட்  (Ernst Heinrich Haecket)  என்பவர்  ஜெர்மானிய விஞ்ஞானி. தத்துவஞானியும் கூட. எம்ப்ரியோலோஜி (Embryology) எனப்படும் கருவியலில் பல கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தவர் அவர். சூழ்நிலையியல் எனப்படும் ஈகாலஜி ( Ecology) என்ற வார்த்தையை உருவாக்கியவரும் அவரே.

அவருக்கு விநோதமான பழக்கம் ஒன்று உண்டு. தனது படுக்கை அறையில் உள்ள திறந்த ஜன்னலுக்கு எதிரில் நின்று  கொண்டு தன் கை முஷ்டியால் மார்பைக் குத்திக் கொண்டே இருப்பாராம். இப்படிச் செய்தால் சுவாசிப்பது ஆழ்ந்து இருக்கும் என்று அவர் நம்பினார்.

 

சில சமயம் வீட்டிலிருந்து காலேஜுக்குப் போகும் போது காலேஜை அடையும் வரை இரண்டு கை முஷ்டிகளாலும் மார்பில் ஓங்கிக் குத்திக் கொண்டே போவது அவர் வழக்கம். போகும் வழியில் இருப்பவர்களெல்லாம் இந்த விநோதமான காட்சியைப் பார்த்து அதிசயிப்பர்.

ஆனால் இந்த விநோதமான பழக்கம் அவரைப் பொறுத்த மட்டில் அவரது நம்பிக்கையை வீண்போக்கவில்லை. அவர் 85 வயது வரை நலமுடன் வாழ்ந்தார்.

விஞ்ஞானியின் விசித்திரப் பழக்கம் நீடித்த ஆயுளைத் தந்தது ஆச்சரியமூட்டும் உண்மை!

*********

. 

 

முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)

Research Article by London swaminathan

 

Date: 8 January 2017

 

Time uploaded in London:- 6-28 am

 

Post No.3524

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி

நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்

கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்

இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே

—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.

 

இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.

 

1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்

3.இப்பி = முத்துச் சிப்பிகளும்

4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்

5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்

6.நந்து = சங்கும்

7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு

8.மீன்றலை = மீன் தலை

9.கொக்கு= கொக்கின் தலை

10.நளினம் = தாமரை

11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து

12.சாலி = செந்நெற் கதிர்க்குலை

13.கழை = மூங்கில்

14.கன்னல் = கரும்பு

15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்

16.கட்செவி = பாம்பு

17.கார் = மேகம்

18.இந்து = சந்திரன்

19.கரா =முதலை

20.உடும்பு= உடும்பின் தலை

 

Nose ring with pearls; picture from wikipedia

காளிதாசனும் இதையே சொல்கிறான்:

ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!

 

முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-

 

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.

காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

 

யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;

 

தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-

முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173

 

காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.

பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.

 

xxx

 

Ambergris from Sperm Whale used in perfumes

கீழ்கண்டபகுதி நான் எழுதிய பழைய கட்டுரையிலிருந்து:-

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

 

xxx

 

கடல் தரும் ஐந்து செல்வங்கள்

 

ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோடைந்து

 

இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்

 

ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு,   பவளம், முத்து, உப்பு என்பன

 

 

அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.

Amber from trees with insects trapped inside.

MY OLD ARTICLES: _

 

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

 

1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

 

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!! Posted on 12 -2 -2015

 

–subham–

 

Bull Fighting in the 1890s (Post No.3523)

Compiled by London swaminathan

 

Date: 7 January 2017

 

Time uploaded in London:-  20-41

 

Post No.3523

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 
“There are several other kinds of amusement, some of them of a vulgar character, Bull fighting is one of them.

The bull fighting must not be regarded as like the familiar bull-fighting in Spain, or any other western country. This fight is called ‘sallikattoo’, and takes place during the day.

 

A large plain is chosen for the purpose and the villagers collect money among themselves with which to meet the necessary expenditure. They send out invitations to the people of other villages and inform them of the fixed day for bull-fight. This news spreads abroad among all classes of the people who come in numbers in bands and parties, both men and women to the spot appointed. The people of the village who have arranged the bull fight erect temporary sheds at their own cost in order to accommodate their visitors. As it is a public meeting place, the sellers of various articles flock to it with their different kinds of goods.

At about eight O clock in the morning all assemble in the plain. Sometimes there are thousands of people met on such occasions. Several fighting bulls will be brought by the villagers from different districts. The owner of each bull ties a new cloth around its neck. In  some cases the owner puts money in a corner of the cloth. He takes the bull to the headman of the assembly and bows his head to him. Then the headman inquiries concerning the parentage and name if he does not happen to know him. Then be asks the herald or the crier to beat his drum three times. This is a sign for the people to understand that a fighting bull will be let loose in the midst of the assembly. This is a signal also to the men who have come to fight the bull, and take the cloth and the money its neck that they must hold themselves in readiness. The owner of the bull takes him to the centre of the assembly, and there be lets him loose by warning the bult to take cate of and to make his way through the crowd to his shed.

 

As soon as ever the bull is set free, ten or fifteen men come to the front of the assembly without either stick or knife, and they face the bull manfully. Some of the clever bulls defend themselves hours together, hurting many of those men, and sometimes killing one or two; at last they escape from their hands and go home, leaping and frisking for joy. There are many bulls who are known to be great fighters and who allow anyone to take the cloths from their necks. Whoever takes the cloth considered to be a is hero. The bullocks are brought in to fight, one after another, the whole day through, and sometimes this terrible struggle between man and beast will be continued for two or three days. Some of the owners of the bulls offer a large sum of money to anyone who can arrest their bulls before the assembly.

 

These beasts are very knowing and clever in their fighting; they stand quietly before the assembly, and do not run or jump but if anyone approaches them, they hit him with their horns or legs as quickly as a flash of lightning. The people who come to witness the fight occupy the ground for half a mile in a crescent form. Some will sit and some will stand, just as they may please, and most of them will be exposed to the wind and the sun; but this they consider as nothing compared with the pleasure they derive from watching the bull-fight. The public do not pay a penny on occasions of this kind.

 

–Subham–

சாயம்காலத்தில் செய்யக்கூடாத ஐந்து செயல்கள் (Post No.3522)

9311b-cocnut2bsunset

Translated by London swaminathan

 

Date: 7 January 2017

 

Time uploaded in London:-  5-56 am

 

Post No.3522

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பொழுது சாயும் நேரத்தில் செய்யக்கூடாத 5 கரியங்கள் என்ன?

வெறுக்கத்தக்க ஐந்து பேர் யார், எவர்? ஐந்து சாட்சிகள் யார்?

 

1.எல்லோருக்கும் பொதுவான ஐந்து பொருள்கள்

வாபீ = ஏரி

கூப= கிணறு

தடாக = குளம்

தேவாலய= கோவில்

குஜன்மா= மரம்

 

வாபீகூபதடாகானாம் தேவாலயகுஜன்மானாம்

உத்சர்காத்பரத: ஸ்வாம்பயமபி கர்தும் ந சக்யதே

–பஞ்சதந்திரம் 3-92

d426d-lochness2blake252clatha

xxx

2.வெறுக்கத்தக்க ஐந்து வகையினர்

 

அன்யவாதீ = தவறான விடை/பதில் அளிப்பவர்

க்ரியா த்வேஷி = வேலை செய்வதை வெறுப்பவர்

நோபஸ்தாதா= கூட்டத்துக்கு வராதவர்

நிருத்தர-= பதில் சொல்லாமல் மவுனம் சாதிப்பவர்

ஆஹூதப்ரபலாயீ= கூப்பிட்டவுடன் ஓடிப்போகும் ஆசாமி

 

அன்யவாதீ க்ரியத்வேஷீ நோபஸ்தாதா நிருத்தரஹ

ஆஹூதப்ரபலாயீ ச ஹீனஹ பஞ்சவிதஹ ஸ்ம்ருதஹ

நாரத ஸ்ம்ருதி 2-33

 

xxx

3.சாயங்காலத்தில்– சூரிய அஸ்தமன நேரத்தில்- செய்யக்கூடாத ஐந்து செயல்கள்:

 

ஆஹாரஹ= உணவு

மைதுன= உடலுறவு

நித்ரா= தூக்கம்

சம்பாட= வேத சாஸ்த்ரப் படிப்பு

அத்வனி கதிஹி = பயணம்

 

ஆஹாரம் மைதுனம் நித்ராம் சம்பாடம் கதிமத்வனி

ஏதானி பஞ்சகர்மாணி சந்த்யாயாம் வர்ஜயேத் புதஹ

 

xxxx

document

4.ஐந்து சாட்சிகள் யார்?

லிகித:ஸ்மாரிதஸ்சைவ யத்ருச்சாபிக்ஞ ஏவ ச

கூடஸ்சோதர ச சாக்ஷீ பஞ்சவித: க்ருத:

–நாரத ஸ்ம்ருதி: 1-27

லிகிதஹ= எழுத்துமூலமான பத்திரம்

ஸ்மாரிதஹ= வாக்குமூலம்

யத்ருச்சாபிக்ஞா =எதிர்பாராமல் வந்தவர்

கூடஹ = உளவாளி

உத்தரசாக்ஷீ = சாட்சிகள் கூறுவதைக் கவனிப்பவர்

 

–subham–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 26 (Post No.3521)

Written by S NAGARAJAN

 

Date: 7 January 2017

 

Time uploaded in London:-  5-14 AM

 

 

Post No.3521

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 26

 

by ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 87. இந்த வருடம் யூனான் மாகாணத்தில் ஏராளமான பிரச்சினைகள் வெடித்தன. இராணுவ வீரர்கள் நினைத்த வீடுகளுக்குளெல்லாம் நுழைந்து அட்டகாசம் செய்தனர். மக்கள் அறுவடை செய்ய வயல்வெளிகளுக்குச் செல்லவே பயந்தனர்.

 

 

ஸு யுன் நேராக ராணுவ கமாண்டரின் அலுவலகத்திற்குச் சென்றார். மக்களின் துன்பங்களை எடுத்துச் சொன்னார். உடனே பிட்சுக்களுடன் தங்கள் வயல்வெளிகளுக்குச் செல்லும் எந்த விவசாயிகளையும்  ராணுவ வீரர்கள் அநாவசியமாக தொந்தரவு செய்யக் கூடாது என்று கமாண்டர் உத்தரவைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆலயத்திற்கு வந்து விட்டனர். அங்கு அரிசி, க்ஞ்சி ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

 

 

கையிருப்பு தீர்ந்தவுடன் வெறும் தண்ணீரிலேயே வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிட்சுக்களுக்கும் நீரே ஆகாரம்.. தங்களால் பிட்சுக்களும் வெறும் தண்ணீரை மட்டும் ஏற்பதைப் பார்த்து விவசாயிகள் அழுதனர்.

 

நிலைமை சீரானவுடன் தான் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினர். இந்த அனுபவத்தால் பல விவசாயிகள் மடாலயத்தை எப்படியேனும் பாதுகாப்பது என்ற உறுதியுடன் தன்னார்வத் தொண்டர்களாக மாறினர்.

 

மடாலயத்தின் தலைமைப் பொறுப்பில் ஸு யுன் இருந்ததால் சூத்ரங்களை அவர் ஓதி வந்ததோடு, சான் தியானத்தையும் பல வாரங்கள் சொல்லித் தந்தார்.

 

இந்த கால  கட்டத்தில் பட்டுப் போன் பல மரங்கள் தீடீரென்று தழைத்து பசுமையாயின! அவற்றில் தாமரை போன்ற மலர்கள் அரும்பின. ஆலயத் தோட்டத்திலோ அனைத்துக் கறிகாய்களும் அபரிமிதமாக விளைந்தன. அங்கு  மல்ர்கள் பச்சைத் தாம்ரை வண்ணத்தில் தோன்றின. நிற்கும் நிலையில் உள்ள புத்தரைப் போல அந்த ம்லர்கள் விகசித்ததால் அது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

 

 

இந்த அபூர்வமான நிகழ்வை உபாசகர் ஜாங் ஜூ ஜியான் ஒரு கதையாக வர்ணித்து கல்வெட்டில் பொறித்தார். அது மடாலயத்தில் வைக்கப்பட்டது.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 88. இந்த வருடம் சூத்ரங்களின் விளக்கம் ஸு யுன்னால் வழக்கம் போல விவரிக்கப்பட்டன. அத்துடன் சான் தியானமும் நடத்தப்பட்டது. பல்வேறு கூடுதல் ஹால்களும் கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டன. மணி வைக்கப்பட்டிருந்த கோபுரமும் புதுப்பிக்கப்பட்டது.

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 89. இந்த வருடம் புத்தரின் சிலைகளைப் புதிதாகச் செய்வதற்காக உபாசகர் வாங் ஜியூ லிங்குடன் ஸு யுன் ஹாங்காங்கிற்குப் பயணமானார். குவாங் டாங் மாகாண கவர்னரான ஜெனரல் சென் ஜென் ரு ஹாங்காங்கிற்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி ஸு யுன்னை காண்டன் நகருக்கு விஜயம் புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு யி யாங் யுவான் சானிடோரியத்தில் ஸு யுன் தங்கலானார். அங்கு கவர்னருடன் நெங் ரெப் மடாலயத்திற்கு ஸு யுன் சென்றார். காவோ சி என்ற இடத்தில் இருந்த  மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஸு யுன்னை கவர்னர் வேண்டினார். ஆனால் ஸு யுன் அந்த அழைப்பை மறுத்தார்.பல இடங்களுக்கும் சென்ற ஸு யுன் அசோகர் ஆலயத்திற்கும் சென்றார். பின் அங்கிருந்து மாஸ்டர் வென் ஷியுடன் ஷாங்காய் நகர் சென்றார். புது வருடமும் வந்தது.

 

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 90 வருடத்தின் முதல் மாதத்தில் ஷாங்காயிலிருந்து ஸு யுன் மவுண்ட் கு-வுக்குத் திரும்பினார். கப்பற் படை மந்திரியான யாங் ஷு ஜுவாங் ஸு யுன்னைச் சந்தித்து  கு ஷான்  மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டினார். சங்கத்தில் சேரும் போது முதன் முதலில் அங்கு தான் ஸு யுன் தன் தலையை மழித்துக் கொண்டார். அந்த நினைவு அவருக்கு வந்தது. அந்த நீங்காத நினைவுகளுடன் தனது குருவின் அபாரமான குணங்கள் அவர் மனதில் நிழலாடின. அந்த அழைப்பை எப்படி மறுக்க முடியும்?

ஸு யுன் தனது பொறுப்பை உதறி விடத் தயாரில்லை. உடனே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

-தொடரும்

**********

 

 

Stone cutters of Tamil Nadu and the Story behind Madurai Temple (Post No.3520)

Incomplete Raya Gopuram of Madurai in Tamil Nadu

Compiled by London swaminathan

 

Date: 6 January 2017

 

Time uploaded in London:-  17-14

 

Post No.3520

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

The village stone cutter belongs to the five artisans of the village. He generally lives where there is solid rock which will suit his purposes. He opens his workshop under the burning sun on the open rock. He has a few chisels of different kinds and some iron hammers. With these simple tools he turns out some really good and useful work. He makes the stone for grinding curry materials; the mortar in which to pound rice and the mills– which are primitive in style– for grinding the flour. He can also make stone steps, pillars, beams, doorposts, jars, stands, troughs for watering the cattle and other useful articles that are required for domestic use.

 

He is not a monthly or annually paid artizan, but he receives suitable payment from the people for all the articles with which he supplies them. He does not go about to collect grain and vegetables from the villagers. If any villager chooses to give him a gift in the form of grain or fruit, of course, he is only too happy to accept it.

 

The skill of the famous Indian stonemasons has been displayed in the erection of the temples of India. The remarkable way in which groups of animals and human figures are carved out of the solid rock in some of the most famous ancient Hindu temples, speaks volumes for the skilfulness of the Indian stonemason. There is a temple (consecrated to the Hindu god Subramanian, the second son of the god Siva) at Kalugumalai, in the Tinnevelly district of Southern India, which is noted for its singular situation under a solid rock. The cave itself is well worth a visit and the carvings in solid rock are simply marvellous.

 

In the temple of Srirangam, in the Trichinopoly district, there are several indications of the skill of the stonemason. There are many beautiful pagodas, which shoot up into the sky to a lofty height, in the midst of hundreds of palm-trees and mango-trees, between the two great rivers, the Kavery and the Kollidam. The beautiful and attractive stone pillars, which stand in some of the temple mandapam(cloisters) were first conceived in the mind of the stonemason and then fashioned into shape by his skilful hands. At the bottom of the pillar is the figure of a bear ten feet in height; in the middle of the pillar is a horse about eight feet in height; on the back of the horse there is a hero holding a long spear in his hand, which is passing through the bear that holds up the pillar. On the top of the pedestal there hangs different kinds of Indian fruits. There are several pillars of this kind, and they differ only in the form given to the animals.

 

The stonecutters also make innumerable gods and goddesses for the people. They make gods with human bodies and animal heads, or with animal bodies and human heads. Their fingers have formed images of all the living creatures of India and placed them in the sacred buildings of the Hindu community.

 

It is a general complaint that the ancient Indians did not leave any proper record of the history of their land. The stonecutters have to some extent made up for this deficiency. They have told the histories and mysteries in the works of their bands. The inscriptions carved by them in various temples some two to three thousand years ago are still read with interest, and they are often used in deciding the disputes as to the rights of the peasants, the priests, and the princes of the land.

Story behind the Madurai Temple Tower

There are many stories connected with the scientific knowledge of the stonemasons. There is a beautiful and even magnificent temple in the historical and ancient city of Madurai. This temple was built by the founders of the Pandyan dynasty, and afterwards much improved by Terumal Naick (Thirumalai Nayakar), the latest Hindu ruler of Madura. In this temple there is a royer gopuram (the great pagoda) which was built by Terumal Naick. There are two large stone pillars in this royer (Rayar) gopuram. A certain stonemason, by order of the king, brought the stones from the mountain, and placed them in the pagoda, and then died. His son came, and attempted to follow in the footsteps of his father in erecting the royal monument to the goddessMeenatchi, and then he died. By-and-by his son came to the temple to pay his vows. As he entered the royer gopuram saw the great stone pillars. As he looked at them he thought that his grandfather had made a mistake in bringing of the stones and placing it in the sacred place, and he gave expression to his feelings while he was standing in the temple, saying that the temple was polluted according to building science, inasmuch as in one of the two huge pillars a frog was still alive at a certain spot towards the top of the pillar. This statement was brought to the notice of the king, and the man was summoned at once into his presence. The king asked the stonemason, “Have you said that my temple is polluted on account of one of the pillars being placed in the main entrance of the temple?”

“Yes, Your hHghness,’”politely said the man.

“If you cannot prove your statement to be true, remember your head will be severed from your body,” said the king in a very severe tone of voice.

 

Having placed his life as the pledge for the truth of his the stonemason boldly asked the king to follow him to the temple. The king and his courtiers went. The stonemason requested one of the servants of the king to place a ladder beside the pillar and to go up to the top, and break off a certain portion of the pillar with a hammer. When several small pieces had been broken off a stone frog actually fell down to the great surprise of the king and the advisers. The king immediately ordered his servants to bring gifts from the palace, and these be presented to the stonemason, and he even bestowed upon him royal honours.

 

Source: Indian Village Folk, T B Pandian, London Year 1897
-Subham-