‘இருப்பது பொய், போவது மெய்’ -பட்டினத்தார் பொன்மொழிகள்– Part 2 (Post No.3519)

Compiled by London swaminathan

 

Date: 6 January 2017

 

Time uploaded in London:-  9-03 am am

 

Post No.3519

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

முதல் பகுதி நேற்று “செத்தாரைப் போலத் திரி” என்ற தலைப்பில் வெளியானது. இது இரண்டாம் பகுதி

23.வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்

போதுற்று எப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வம் என் தேடிப் புதைத்த திரவியமென்

காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே

xx

 

24.ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்

அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்

நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கிட்டபடி

என்றென்றிரு மனமே உனக்கே உபதேசம் இதே

xx

25.பேய் போற்றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்

தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர் ஞானந் தெளிந்தவரே

xx

 

 

26.ஊரீர் உமக்கோர் உபதேசம் கேளும் உடம்படங்கப்

போரீர் சாணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையில்

சாரீர் அனதலைச் சுற்றத்தை நீங்கிச் சக்நகைக்க

ஏரீர் உமக்கவர் தாமே தருவர் இணையடியே

xxx

 

27.ஓம்காரமாய் நின்ற வத்துவிலே ஒரு வித்து வந்து

பாங்காய் முளைத்த பயனறிந்தால் பதினால் உலகும்

நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்

ஆங்காரமானவர்க்கு எட்டாக் கனி வந்தமர்ந்திடுமே

 

xxx

 

28.நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிச்சை நமனைவெல்ல

வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம் மதியாமல் அரும்

பேய்க்குண்டு நீறு திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி

நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே

 

xxx

29.வானத்தின் மீனுக்கு வந்தூண்டில் இட்ட வகையது போல்

போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே

xx

30.நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி

ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்த்ர யோக நிலை

நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசனைகள் சர்ப்பனையே

 

xx

31.மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்தீ

ஐயாநின் மாயை யுருவெளித்டோற்றம் அகிலத்துள்ளே

மெய்யாய் இருந்தது நாட்செல நாட்செல வெட்ட வெறும்

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே

xxx

32.உளியிட்ட கல்லையு ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்

புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே

ஒளியிட்ட தாளிரண்டுள்ளே இருத்துவது உண்மையென்று

வெளியிட்டடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே

xxx

33.முன்னையிட்ட தீ முப்புரத்திலே

பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்

அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ முள்க மூள்கவே!

 

xxx

 

34.அத்தி முதல் எறும்பீறான உயிர் அத்தனைக்கும்

சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகா – மெத்தப்

பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி

இசிக்குதையா காரோணரே

xxx

35.ஒன்பது வாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே

அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாஞ்சாயே! – வன்கழுக்கள்

தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப் பிட்டுக்

கத்திக் குத்தித் தின்னக் கண்டு

xxx

36.முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலார் ஆசை

நடுச்சங்க நல்விலங்கு பூட்டும் — கடைச் சங்கம்

ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்

xxx

37.இருப்பது பொய் போவது மெய்யென்று எண்ணி நெஞ்சே

ஒருத்தருகும் தீங்கினையென்னாதே – பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய் கழுகு

தம்மததென்று தாமிருக்க தான்

 

xxx

38.எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்

முத்தர் மனமிருக்கு மோனத்தே— வித்தகமாய்க்

காதி விளையாடி இருகைவீசி வந்தாலும்

தாதி மன நீர்க்குடத்தேதான்

xxx

39.நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலமொன்றும் அறியாத நாடியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக்  கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளை யிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

 

xxx

 

40.பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கு இரங்கிப்

பரவையார் உடலை மாற்ற

ஏவலராகி இரவெலாம் உழன்ற

இறைவனே ஏகநாயகனே

 

–சுபம்-

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1 (Post No3518)

Picture of Paul Watson

 

Written by S NAGARAJAN

 

Date: 6 January 2017

 

Time uploaded in London:-  6-21 AM

 

 

Post No.3518

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

30-12-2016 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் 309ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்ட கட்டுரை

 

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1

ச.நாகராஜன்

t

“நீரும், காற்றும் மிகவும் இன்றியமையாத இரண்டு செல்வங்கள். அவற்றைச் சார்ந்தே உயிரினங்கள் இருக்கின்றன. அவை இப்போது உலகின் மிகப் பெரிய குப்பைத் தொட்டிகளாக மாறி விட்டன!” – ஜாக்கஸ் வெஸ் காஸ்டோ

 

 

நாளுக்கு நாள் மோசமாகி வரும் உலகின் சுற்றுப்புறச் சூழ்நிலை பற்றி, ஐ,நாவின் உலக சுகாதார நிறுவனம் அவ்வப்பொழுது தன் கவலையைத் தெரிவித்து வருகிறது.

நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நல்ல காற்றையும் நல்ல நீரையும் தர மாட்டோம் என்பதோடு பல உயிரினங்களை அழித்த பாவத்திற்கும் நாம் ஆளாவோம் என்பதை உணர வேண்டிய கடைசி கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்,

 

 

    அந்த அளவிற்கு கார்பன் நச்சுப் புகை வளி மண்டலத்தைச் சூழ்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டீஸல் வாகனங்கள். ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் படிம எரிபொருள்களால் ஓடும் வாகனங்கள் நாம் உயிர் வாழத் தகுதியற்ற நச்சுச் சூழ்நிலையை உருவாக்கி விட்டன,

 

 

     இந்த நிலையில் சில உத்வேகமுள்ள உத்தமர்கள் தங்கள் தலைப் பொறுப்பாக சூழ்நிலையைப் பாதுகாக்க விழைந்துள்ளனர்.

 

புத்துலகம் படைக்க விழையும் இவர்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவர்களுடன் இணைந்து நாமும் நம்மாலான பணிகளைச் செய்தால் உலகை நல்ல விதமாகக் காத்த நல்லவர்களின்  பட்டியலில் நாமும் இணைவோம்,
சில நல்லவர்களின் உத்வேக மூட்டும் பணிகளைப் பார்ப்போம்:

 

 

அமோரி லோவின்ஸ்

 

 

கார்,லாரி போன்ற வாகனங்கள் டீஸலை உபயோகிக்காத ஒரு உலகத்தைப் பற்றிக் கனவு காணும் அமோரி லோவின்ஸ் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இவருக்கு வயது 70. அமெரிக்கரான இவரை பிரபல டைம் பத்திரிகை 2009ஆம் ஆண்டு உலகின் செல்வாக்குள்ள நூறு பேர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது!

 

    “மின்சார பவர் ஸ்டேஷன்கள் வேண்டாம். கட்டிடங்களும் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களும் உருவாக்கும் ஆற்றலே தொழிற்சாலைகளை நடத்தப் போதுமானதாக இருக்கும். மின்சாரத்தை உருவாக்காத எந்த ஒரு வீட்டையும் காண முடியாது. கார்பன் நச்சுப்புகையே வெளியேறாது.

தொழிற்சாலைகள் கழிவாக எதையும் வெளியேற்றாது.”

 

 

     இப்படியெல்லாம அதிரடியாகச் சொல்லும் லோவின்ஸ் அதற்கான தனது திட்டத்தையும் விவரிக்கிறார்.

 

ஹைப்பர் கார் என்ற இவரது திட்டத்தின் படி உருவாக்கப்படும் கார்கள் கார்பன் ஃபைபர் ஹைப்ரிட் பெட்ரோலையும் மின்சக்தியையும் கொண்டு கார்களை இயக்கும். இதனால் கார்பன் புகை வெளிவராத சூழ்நிலை உருவாகும்.

 

 

     இந்தக் காரை கவனமாக ஓட்டுவதன் மூலம் இரு மடங்கு திறனைப் பெறலாம். காரின் எடையை மிகவும் குறைத்து விட்டு அதில் பயோ எரிபொருளையும் பயன்படுத்தினால், ரீ சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய பாட்டரிகளையும் பொருத்தி எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மின்சக்தியை சார்ஜ் செய்து கொண்டால் இன்னும் அதிக லாபத்துடன் வண்டியை இயக்கலாம் என்கிறார் அவர்.

 

 

   அவரது அறிவுரையை ஏற்று டொயோடா நிறுவனம் புது வித கார்களை வடிவமைத்து வருகிறது. அமெரிக்க ராணுவத்தின் ஏராளமான வாகனங்களுக்கு பல லட்சம் டாலர்களை செலவழிக்கும் பெண்டகனும் கூட அவரை அழைத்து ஆலோசனை கேட்டு அதன் படி நடந்து வருகிறது.

 

காப்டன் பால் வாட்ஸன்.

 

கடலில் வாழும் உயிரினங்களைக் காக்கும் காப்பாளராகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்ட காப்டன் பால் வாட்ஸன் ஒரு அதிரடி வீரர். 66 வயதாகும் இவர் நேரடியாக களத்தில் இறங்குபவர். தனக்கே சொந்தமான இரண்டு கப்பல்களை உலகின் பெருங்கடல்களில் உலவ விட்டு திருட்டுத்தனமாக திமிங்கிலம் சுறாமீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களைக் கொல்பவர்கள் மீது நேரடித் தாக்குதல் நடத்துகிறார்,

இதனால்  மிரண்டு போன பல உலக நாடுகள் இவரைக் கடல் தீவிரவாதி என்று திட்டுகின்றன. ஆனால் கடல் பற்றிய விதிகளை நன்கு அறிந்த இவர், அநியாயத்திற்கு எதிராகத்தானே நான் செயல்படுகிறேன் என்கிறார்.

 

 

    ஈக்வடார் நாடு இவரைத் தனது அதிகாரபூர்வமான கடல் காப்பாளராக அறிவித்துள்ளது. ஆகவே கடல் வாழ் உயிரினங்களை அநியாயமாகக் கொல்வோரையும் கடலை மாசுபடுத்துவோரையும் இவர் கைது செய்கிறார். உலகின் கடல் வளத்தையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க சுற்றுப் புறக் காவல் படை என்று ஒரு படை தனியாக வேண்டும் என்பது இவரது வேண்டுகோள்.

 

 

    இவர் காக்கும் கடல் வாழ் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில்  மட்டும்  ஒரு லட்சத்தையும் தாண்டுகிறது. இவரை சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பெரிதும் மதித்து நேசிக்கின்றனர்.

 

 

குறிப்பிடத் தகுந்த இன்னும் சிலரையும் அடுத்துப் பார்ப்போம்..

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி.யான வில்லியம் ப்ராட்ஃபோர்ட் ஷாக்லி (William Bradford Shockley) ஜங்ஷன் டிரான்ஸிஸ்டரைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசை 1956ஆம் ஆண்டு பண்டீன் மற்றும் ப்ராட்டெய்ன் ஆகிய விஞ்ஞானிகளோடு இணைந்து பெற்றுக் கொண்டவர். அவருக்கு கறுப்பர் பற்றிய விசித்திரமான கொள்கைகள் உண்டு.

 

 

   கறுப்பு அமெரிக்கர்கள் மரபணு ரீதியாகவே தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர் கருதினார். அவர்களின் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தாவிடில் மொத்த அமெரிக்காவின் அறிவு கூர்மையே சேதமாகி விடும் என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அனைவரின் வெறுப்புக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார்.ஆனால் அவர் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

 

 

     அவரை எதிர்த்து ஆங்காங்கே கூட்டங்கள் நடந்தன. அவரை வழி மறித்து எதிர்ப்பைத் தெரிவிப்பதும் தொடர்ந்தன. ஆனால் இதற்குக் கூட அவர் அசரவில்லை.

 

 

    ஒரு நாள் அவரை எதிர்த்து கோஷம் போட்டவர்களின் மைக் செட்டுடன் இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் வேலை செய்யவில்லை. என்ன செய்வதென்று அவர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

     ஷாக்லியோ நேராக அந்த ஒலிபெருக்கிகளின் அருகே சென்று அதை ரிப்பேர் செய்ய ஆரம்பித்து கச்சிதமாக அதைச் சரி செய்து விட்டார்.\

 

 

    ஷாக்லியின் இந்த ஷாக் ட்ரீட்மெண்டைக் கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.ஆனால் அவரோ தன் வழியில் வழக்கம் போலச் சென்றார்.

 

     கொள்கை மாறுபட்டிருந்தாலும் உதவி செய்வது என்பது ஒருவரின் கடமை என்பதை அந்த விஞ்ஞானி நிரூபித்துக் காட்டி விட்டார்.

*******.

Who are the Despicable Five? What are the Five Things to be Avoided? (Post No.3517)

Compiled by London swaminathan

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  15-29

 

Post No.3517

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

Five Despicable People

anyavaadii =who gives wrong answer

kriyaa dvesii = who hates to work

nopasthaataa = who is not present

niruttara = who does not answer

aahuta prapalaayii = who runs away after being called

 

anyavaadii kriyaa dvesii nopasthaataa niruttara:

aahuta prapalaayii ca hiina: panchavidhasmrta:

Naradasmrti: 2-33

 

xxx

Five Things to avoid during Twilight (Sandhyaakaala)

aahaara = food

maithuna = copulation

nidraa = sleep

sampaatha = studying scriptures

adhvani gati = travel

 

aahaaram maithunam nidraam sampaatham gatimadhvani

etaani pancha karmaani sandhyaayaam varjayet budhah

xx

 

Five Witnesses

likhitah = written document

smaaritah = narrated/ recounted

yadrcchaabhijna = unexpected and unobstructed intruder

guudhah = spy

Uttara saakssii = listener of witness’s statements

 

likhitah smaaritas caiva yadrcchaabhijna eva ca

guudhah Uttara saakssii ca saakshii panchavidha krtah

Naradasmrti: 1-27

xx

 

Five that belongs to Everyone (universal)

vaapi = lake

kuupa = well

tadaaka = tank

devaalaya = temple

kujanmaa = tree

vaapikuupatadaagaanaam devaalayakujanmanaam

utsargaatparatah svaamyamapi kartum na sakyate

–Panchatantra 3-92

 

xxx

 

Five to be Remembered:

(from my previous post)

You must always remember the following Five:-

Janani – Mother

Janmadaataa- Father

Vidyaadaataa – Teacher

Raastra – Motherland

Dharmopadestaa – Teacher of Dharma

 

Janani Janmadata ca suvidyam pradadati yah

Raastram Dharmopadestaa ca pancakam santatam smaret

 

–subham–

செத்தாரைப் போலத்திரி – பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1 (Post No.3516)

 

Amathur Temple, Picture by C.Vedanarayanan

Compiled by London swaminathan

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  12-42

 

Post No.3516

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Golden Sayings of Tamil saint Pattinathar- Part 1

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு

பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்

அடி சார்ந்து நாம் உய்யவேண்டுமென்றே அறிவாரில்லையே

 

xx

 

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்

தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்

உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்

x

 

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான்  இனிச் சென்று

ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே

xx

மந்திக் குருளையொத் தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்

சிந்திக்குஞ் சிந்தையை யானென் செய்வேன் எனைத் தீதகற்றிப்

புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்

எந்தைக் குரியவன் காணத்தனே கயிலாயத்தானே

(மற்கட நியாயம், மார்ஜர நியாயம் பாடல்)

xx

வீடு நமக்கு திருவாலங்காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ

நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம் தர நன்நெஞ்சமே

ஈடுநமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே

xx

அம்பலத் தரசனை யானந்தக் கூத்தனை

நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்

திருச்சிற்றம்பலத் தொளிரும் சிவனை

நினைமின் மனமே, நினைமின் மனமே

x

ஆசைக் கயிற்றிலாடும் பம்பரம்

ஓயா நோய்க்கிட மோடு மரக்கலம்

மாயா விகாரம் மரணப் பஞ்சரம்

சோற்றுத் துருத்தி கானப் பட்டம்

x

ஆசைக் கயிற்றிலாடும் பம்பரத்தைக்

காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை

மக்கள் வினையின் மயங்கும் திகிரியைக்

கடுவெளியுருட்டிய சகடக் காலை

 

x

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன்வாயில் மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டுமே வழிக்கேது துணை

தினையா மன வெள்ளளவாகினும் முன்பு செய்த தவம்

தனை யாளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

(வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை யாரோ?)

xx

பாவச் சரக்கொடு பவக் கடல் புக்குக்

காமக் காற்றொடுத் தலைப்பக்

கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை

இருவினை விலங்கொடு இயங்கும் புற்கலனை

x

Amirthakateswarar Temple

எண்சாணுடம்பு மிழியும் பெருவழி

மண்பாற் காமம் கழிக்கும் மறைவிடம்

நச்சிக் காமுக நாய்தானென்றும்

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்

திங்கட் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி

 

xx

அண்டரண்டமும் அனைத்துள புவனமும்

கண்ட அண்ணலை கச்சியிற் கடவுளை

ஏகநாதனை இணையடி இறைஞ்சுமின்

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே

xx

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத் தச்சன்

வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்

கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி  அப்பால்

எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

 

xx

நன்னாரில் பூட்டிய சூத்திரப் பாவைதன் நார்தப்பினால்

தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப் போல்

உன்னாலி யானும் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்

என்னாலிங் காவதுண்டோ இறைவா கச்சி ஏகம்பனே

xx

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியா

திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சி ஏகம்பனே

 

xx

கல்லாப் பிழையும்  கருதாப் பிழையும்   கசிந்துருகி

நில்லாப் பிழையும்   நினையாப் பிழையும்   நின் அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும்  துதியாப் பிழையும்  தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும்  பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

 

xx

 

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்

பாவி என்று நாமம் படையாதே — மேவிய சீர்

வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே

செத்தாரைப் போலே திரி

xx

பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்

துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் துறந்தோர் தமக்கு

இருத்தி அமுதிட மாட்டார் அவரை இம்மாநிலத்தில்

வருத்திக்கொண்டேன் இருந்தாய் இறைவா கச்சி ஏகம்பனே

xx

ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே

xx

கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்றுகொன்று

தின்றேன் அதன்றியும் தீங்கு செய்தேன் அது தீர்க என்றே

நின்றேன் நின் சந்நிதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய்

என்றே உனை நம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே

xx

ஊட்டு விப்பானும் உறங்கு விப்பானும் இங்கொன்றோடொன்றை

மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்றவினை

காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி

ஆட்டு விப்பானும் ஒருவனும் உண்டே தில்லை அம்பலத்தே

xx

பிறவாதிருக்க வரந்தரல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவாதிருக்க மருந்துண்டு கானிது எப்படியோ

அறமார் புகழ்த் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்

மறவாதிரு மனமே அதுகாண் நன் மருந்துனக்கே

–Subham–

 

அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் (Post No. 3515)

Written by S NAGARAJAN

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  6-27 AM

 

 

Post No.3515

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

இந்திய வரலாறு – பி. என். ஓக்கின் புதிய கண்ணோட்டம்

 

இந்திய வரலாற்றை அதிசயக்கத்தக்க முறையில் ஆய்வு செய்து ஏராளமான புத்தகங்களை எழுதிய அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் ஹிந்து தர்மத்தின் புகழையும் பெருமையையும் உலகறியச் செய்தவர்களில் ஒருவர்.

 

 

1917ஆம் ஆண்டு  மார்ச் மாதம் இரண்டாம் தேதி பிறந்து 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மறைந்தார்.

 

90 வயது நிறைவாழ்வு வாழ்ந்த புருஷோத்தம நாகேஷ் ஓக்கை பி.என், ஓக் என்றே உலகம் அறிந்தது.

 

ஹிந்து வரலாறு சின்னாபின்னாபடுத்தப்பட்டு திரித்து, மாற்றி, சிதைத்து எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மனிதர் கொதித்தெழுந்தார். முறையாக வரலாற்றை ஆய்வு செய்யத் தொடங்கினார். இன்ஸ்டிடியூட் ஃபார் ரீ ரைட்டிங் இண்டியன் ஹிஸ்டரி என்ற ஒரு அமைப்பை நிறுவித் தன் ஆய்வு முடிவுகளை உலகினருக்கு அறிவித்தார். இதிஹாஸ் பத்ரிகா என்ற வரலாற்று இதழ் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். மதத்திற்கெல்லாம் தாய் மதமாக ஹிந்து மதம் இலங்கியது என்பதே இவர் வரலாற்று ஆய்வின் உயிரோட்டமான தத்துவமாக இருந்தது.

 

வேத நாகரிகத்தின் வரலாறு

 

ஏசு கிறிஸ்து, வாடிகன் சிடி, காபா,வெஸ்ட் மினிஸ்டர் அப்பே, தாஜ்மஹால் பற்றிய இவரது ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ப்லரை கோபம் கொள்ள வைத்தன.

 

வோர்ல்ட் வேதிக் ஹெரிடேஜ்  – எ ஹிஸ்டரி ஆஃப் ஹிஸ்டரிஸ் (World Vedic Heritage – A History of Histories) என்ற இவரது புத்தகம் மிக அருமையான புத்தகம். 92 அத்தியாயங்களில் 1312 பக்கங்களில் பல்வேறு அதிசயமான தகவல்களைத் தொகுத்து இதில் அவர் தந்திருக்கிறார்.

 

இதில் இவர் கூறும் முக்கிய செய்திகளில் இரண்டை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

 

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

Did Jesus Ever Lived  என்ற (76ஆம்) அத்தியாயத்தில் ஏசு பற்றிய பல்வேறு தகவல்களை முறையாக இவர் ஆய்வு செய்கிறார்.

பின்னர் அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது இது தான்:

 

“Thus from beginning to end the Jesus story is one big fiction which developed as a mushroom growth gathering heterogeneous elements in its meandering course over centuries after it had acquired a head-start with the grouse of an ambitious, short- tempered, angry man called Saus alias Paul expelled from the management of the Christ cult.

 

 

It is hoped that the above details would help people who believe in logic to realize how the whole foundation of Christianity is entirely fictious despite its colossal spread and size.” (Page 1003)

 

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

தாஜ்மஹல் உண்மையில் தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறும் இவர் அதற்கான் ஆதாரங்களை அள்ளித் தருகிறார்.

 

பிரம்மாண்டமான தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இன்று பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க அனுமதித்தால் இந்த உண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பது இவரது வாதம்

இவரது கூற்று:

 

“The marble Taj Mahal in Agra (India) is surrounded by numerous such palatial, red stone pavilions which escapes visitor’s attention, being misled by the concoted Shahjahan-Mumtaz legend. The Taj Mahal is Tejo-Mahalaya a Hindu temple-palace complex built several centuries before the 5th generation. Mogul ruler Shahjahan, (Reference, our research book titiled – THE TAJ MAHAL IS A TEMPLE PALACE). Shajahan requisioned the edifice, robbed it of its costly fixtures and furniture (such as silver doors, gold-railings, gems stuffed in the  marble grill, strings of pearl hanging on the Shivling amd the  legemdary  peacock throne) and misused it recklessly as a Muslim cemetery. Thus history has been turned so topsy turvy as to credit the very person who robbed, ravaged and descrated the Taj Mahal with having built it. Such is the appalling state of history all the world over,” (Page  1246)

 

இப்படிப்பட்ட ஏராளமான செய்திகள் பக்கத்திற்குப் பக்கம் தரப்படுகின்றன; நம்மை பிரமிக்க வைக்கின்றன.

 

 

சரியான ஹிந்து நாகரிக வரலாற்றுக்காக உழைத்தவர்

 

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் சர் ஆர்தர் கானன் டாயிலின் நாவலில் வரும் லாஜிக், அகதா கிறிஸ்டியின் நாவலில் வரும் மர்மம், இர்விங் வாலஸ் நாவல்களில் வரும் எதிர்பாரா திடுக்கிடும் திருப்பங்கள் போன்றவற்றை இந்திய வரலாற்றில் காண முடியும் என்பதை ஓக் நிரூபிக்கிறார்.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக சில காலமும், பத்திரிகையாளராக சில காலமும், இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரியாக நீண்ட காலமும் பணியாற்றிய இந்திய வரலாறு எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து, அதன் உண்மையான வரலாறு என்ன என்பதை ஆய்வு செய்து தருவதிலேயே ஓக் தனது வாழ்நாள் முழுவதையும் செல்வழித்து அர்ப்பணித்தார்.

 

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் இலக்கான மகத்தான வாழ்வு வாழ்ந்த அவர் வேத நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த பெரும் மேதை என்றே சொல்லலாம்!

 

********

 

Bhagavad Gita Simile used by Ancient Tamil Poets! (Post No.3514)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  20-56

 

Post No.3514

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

If one studies the similes used by ancient Sanskrit poets and Tamil poets one will find out that Indians had a unique culture spreading over a vast landmass, that was the largest country in the world 2000 years ago. The simile used by Lord Krishna in Bhagavad Gita is found in the oldest Tamil book Tolkappiam and Sangam Tamil literature. Kalidasa and other Sanskrit poets also used the simile in umpteen places. This explodes the divisive Aryan- Dravidian Race Theory. Hundreds of similes are unique to Tamil and Sanskrit literature which are not found in any other literature or culture in the world.

 

Lord Krishna says (Sutra Manigana Iva) :

There is nothing whatsoever higher than Me, O Dhanjanjaya. All this strung in Me, as clusters of gems on a string 7-7

 

Commenting on this couplet Swami Chinmayananda says: “To show that the Self is one and the same in all forms, it has been said that the Lord is the common factor in all forms in the universe. He holds them all intact as the string holds all the pearls in a necklace. These words have deep significance. Not only is it beautiful in its poetic suggestion, but it has also a very exhaustive philosophical implication. The pearls in the necklace are necessarily uniform and homogenous, and its thread, which is generally unseen, passes through the central core of every pearl, and holds them all, the big and the small, into a harmonious ornament of beauty. Here is an instance wherein we see Shri Veda Vyasa typically expressing himself as the poet-philosopher of the world.

 

Tolkappaiam written by Tolkappiar, is considered the oldest book available in Tamil. It is dated around First Century BCE. Definitely later than Bhagavad Gita. We find the simile in Tolkappiam as well. Like Sanskrit, Sutra means a book and a thread in Tamil also; in Tamil the word used is Nuul= Thread or Book.

 

Tolkappiar used the word Sutra following Panini. He never hesitated to use a Sanskrit word. In the Sutra 1426:

Like orderly arranging the gems in a string, arranging the same types is called Othu.

 

Tamil Veda Tirukkural written by Tiruvalluvar also used the Bhagavad Gita simile:-

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

 

Thus Krishna’s “Sutra Manigana Iva” simile has become popular 2000 years ago. Avadhutopanishad also has this.

Kalidasa used this imagery in His Raghuvamsam and Vikrama Urvaseeyam:-

Though a dunce, I have a way in through the epic already rendered by Valmiki like the thread that easily goes through the diamonds already bored- (Raghuvamsa 1-4)

 

This King of Anga made the wives of his enemies to throw off their ornaments and weep for their husbands shedding tears larger than pearls on to their breasts which appeared like pearl necklaces. The king took the real necklace and gave them tear necklace- Raghu.6-28

 

A lady was halfway through her stringing of gems for her girdle. The thread was tied to her thumb. When she came to know about Aja’s visit she rushed to the window to see him. All the gems fell and scattered leaving only the thread still knotted to her thumb 7-10

 

These women engrossed at splashing water on each other are unable to give a thought to the severance and slithering of their pearl necklaces from their bosom, for the water drops as large as pearls are hopping on their bosoms which they think necklace of pearls – 16-62

These similes of Raghuvamsa were used by Tamil poets in Sangam literature.

Sangam Tamil poets used the similes in the following places:

 

Kudavayil Keerathanar has used this imagery twice in his poems in Akananuru (289 and 315)

 

Eyinanthai Ilankeeranar (Akam.225) used the broken pearl necklace image in his verse.

 

Kurunthokai Poets Kundriyanar and Kavan Mullai Poothanar and  Marudan Ilanagan of Marudakkali also followed his predecessors.   All of them used the unstringed or broken necklace images.

 

Thus, we see One Thought- One Culture from Kanyakumari to Kashmir. Before the foreigners came they didn’t know any divisions in the community such as Aryan or Dravidian races.

-Subham-

 

 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  15-53

 

Post No.3513

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட  முடியாது.  ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!

 

தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

 

ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை

 

மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய

மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ

-பகவத் கீதை 7-7

தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.

 

இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது

யேன ஸர்வமிதம் ப்ரோதம்  ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:

 

தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்

 

நூற்பா=சூத்ரம் 1426

நேரின மணியை நிரல்படவைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி  வைப்பது

ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்

 

பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.

 

சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.

 

இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)

 

பொருள்:-

கோத்த மணியின் ஊடே விளங்கும்  நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.

 

காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:

 

ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3

எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4

 

 

இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28

 

(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)

 

ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10

 

பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர  முடியவில்லை.-ரகுவம்சம்.18-62

 

பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.

 

சங்கத்   தமிழ் இலக்கியத்தில்

 

அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்

பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்

கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர

பொருள்:-

குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.

 

குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்

கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்

அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப

வறு நிலத்து உதிரும் அத்தம்

 

பொருள்:-

நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….

 

 

 

இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”

கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”

பொருள்:-

 

உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய  அணையைச் சேர்த்து………………………………….

 

இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.

 

குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை

 

பொருள்:-

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………

 

குறுந்தொகை  104-ல் காவன் முல்லைப்  பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளமேயும்

 

பொருள்:-

தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை,  விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..

கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

 

தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை  கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை  காணலாம்.

 

“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்

 

–சுபம்—

 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4 (Post No. 3512)

Written by S NAGARAJAN

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  4-52 AM

 

 

Post No.3512

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 18

இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 4,5,6,8 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4

 

                        ச.நாகராஜன்

 

 

பரிபாடலில் நான்காம் பாடல்

 

பரிபாடலின் நான்காம் பாடல் 73 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்ட நாகனார். திருமாலைப் பற்றிய அழகான பாடல் இது.  இதில் இரணியனைக் கொன்று பிரகலாதனைக்  காப்பாற்றிய வரலாறு வருகிறது. பிரகலாதன் என்ற பெயரையும் இதில் காணும் போது புராணங்கள் பாரதம் முழுவதிலும் பரவி இருந்தமை தெரிய வருகிறது. வராக அவதாரத்தின் சிறப்பு, கருடக் கொடியின் பெருமை போன்றவை சிறப்பு வாய்ந்த சொற்களால் வர்ணிக்கப்படுகிறது.

 

 

நின்னோர் அன்னோர் அந்தணர் அருமறை (வரி 65)

என்ற இந்த வரியால், “திருமாலின் பெருமை அளப்பதற்கு அப்பாற்பட்டது. அது அந்தணர் ஓதும் வேதத்தால் உரைக்கப்படுகிறது” என்பது விளக்கப்படுகிறது.

 

 

ஐந்தாம் பாடல்

அடுத்ததாக, பரிபாடலின் ஐந்தாம் பாடல் 81 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணகனார். முருகனைப் பற்றிய அழகான பாடல் இது. முருகனிடம், “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; அருளும் அன்பும் அறனும் மூன்றும்” மட்டுமே யாம் வேண்டுவது என்னும் வரிகள் மனதை உருக்குபவை.

இதில் வரும்,

 

“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து”  (வரிகள் 22,23)

 

என்பதன் பொருள் :

ஆதி அந்தணன் என்பது புராதன பிராமணனான பிரம்மம்.அந்த ஆதி அந்தணன் புவி என்னும் ரதத்தில் எப்படி நன்கு ரதத்தை நடத்துவது என்பதை அறிந்து வேதத்தை குதிரைகளாகக் கொண்டு புவி மீது நடத்துகிறான்.

 

 

ஆறாம் பாடல்

 

அடுத்ததாக, பரிபாடலின் ஆறாம் பாடல் 106 அடிகளைக் கொண்ட நீண்டதொரு சுவையான பாடல்..

இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். வையையின் பெருமையை மிக அழகுற விளக்கும் பாடல் இது. வையையில் வெள்ளம் கரையையும் உடைத்துக் கொண்டு ஓட மகளிரும் ஏனையோரும் புனலாடுதல் உள்ளிட்ட பல காட்சிகளை அழகுறப் படம் பிடித்துக் காட்டும் பாடல் இது.

ஓடி வரும் வெள்ளத்தால் அந்தணர் கலக்கம் அடைகிறார்களாம். அதைப் பாடல் அழகுறச் சொல்கிறது இப்படி:

 

 

நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து                         வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை                         புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு (வரிகள் 43-45)

 

புலம் என்றால் வேதம். புலம் புரி என்பதால் வேதம் ஓதும் அந்தணர் என்பது சொல்லப்படுகிறது.  அவர்கள் மணத்துடன் கரை புரண்டோடும் ஆறு கண்டு (நாறுபு நிகழும் யாறு கண்டு) இது வேறு பல மணம் கொண்டு அழிந்தது என்று (வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை) வேதம் ஓதும் அந்தணர் மருண்டு கலங்கினர் (புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு)

அழகான வையைப் பற்றி விளக்கும் அற்புதமான பாடல் இது.

 

எட்டாம் பாடல்

 

அடுத்ததாக, பரிபாடலின் எட்டாம் பாடல் 130 அடிகளைக் கொண்ட நீண்டதொரு அழகிய பாடல்..

இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். திருப்பரங்குன்றின்  மாண்பினை இதை விடச் சுவையாகக் கூற முடியாது என்ற அளவில் பரங்குன்றின் சிறப்பை விளக்கும் அற்புதப் பாடல் இது.

இமய மலையை ஒக்கும் சிறப்புடைய குன்று எது தெரியுமா?

பதிலைப் பாடல் தருகிறது இப்படி:

“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்                     இமயக் குன்றினில் சிறந்து”    (வரிகள் 11,12)

 

முருகன் உறைந்து அருள் புரியும் மலை இமயத்தில் சிறந்ததாக இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

“யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்                            மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்”                                         

(வரிகள் 8,9)

 

தேவர்கள், அசுரர்கள், முதுமொழி எனப்படும் வேதம் ஓதுவதில் நிபுணர்களான தவ முதல்வரும் வந்து சேரும் இடம் திருப்பரங்குன்றமே!

பரங்குன்றின் அருமை பெருமைகளை தேர்ந்தெடுத்த தமிழ்ச் சொற்களால் உரைக்கும் இந்தப் பாடலை அனைவரும் படித்தல் வேண்டும்.

 

அரு மறை, வேதம், புலம், முது மொழி என்று இப்படி, பல சொற்களால் வேதம் புகழப்படுவதையும் அதை ஓதும் அந்தணர் மேன்மை உரைக்கப்படுவதையும் இந்தப் பரிபாடல் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன..

**********

 

 

 

Feet are ruled by Brahma, Heart is ruled by Rudra (Post No.3511)

Compiled by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  19-14

 

Post No.3511

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Medical Astrology says which planet rules which part of the body. Though there is no scientific evidence for that, astrologers believe in it and ‘treat’ their customers accordingly. In the same way Hindu scriptures gives details about the body parts and their rulers and the respective mantras.

The following chart gives the details:

1.Region in Body –   Elements—  Deity—  Bija Mantra

Feet to Knees –                  Earth —        Brahma—lam

Knees to Generative organ-    Water –   Vishnu—vam

Generative organ to Heart    —  Fire      —  Rudra – ram

Heart to Eye Brows          — Air          — Maruta  — yam

Eye brows to Head         — Space    — Sankara  — ham

 

2.Five Jnanendriyas  – Sense Organs

Naasikaa-Nose, Jihvaa- Tongue, Caksuh- Eye,

Tvak- Skin, Srotra- Ear

 

3.Five Karmendriyas- Motor Organs

Vak-Tonge, Paani- Hand, Paada- Feet, Paayu- Organ of excretion, Upastha- Organ of Creation

4.Pancha Bhutas – Five Elements

Prithvii- Earth, Ap- Water, Tejas- Fire, Vayu- Air, Aakaasa – Space

5.Five Tanmatras – Subtle Elements

Gandha- Smell, Rasa- Taste, Ruupa – Vision/colour, Sparsa – Touch, Sabda- Sound.

Source: sankhya sanketa kosa (Encyclopaedia of Numerals) , Volume-1, The Kuppuswami Sastri Research Institute, Chennai-600 004, Year 2011

 

-Subham-

‘இனிய தமிழ்நாடு’ – கம்பன் பாராட்டு (Post No. 3510)

Written by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  7-58 am

 

Post No.3510

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழ் மொழியைப் பாராட்ட வாய்ப்பு கிடைத்தால் கம்பன் நழுவ விடுவானா? பால காண்டத்தில் அவன் துவக்கிய பாராட்டுரை கிஷ்கிந்தா காண்டம் வரை நீடிக்கிறது. அகத்திய மகரிஷியைக் குறிப்பிட்ட

போதெல்லாம் தமிழையும் சேர்த்தே பாடினான்.

 

இப்பொழுது, சீதையைத் தேடுவதற்குப் புறப்பட்ட வானரங்கள் ஒவ்வொரு திசையை நோக்கியும் பட்டாளம் பட்டாமாகப் புறப்பட்டார்கள். தென் திசை நோக்கிச் சென்ற வானரங்கள் குறித்து கம்பன் பாடுகிறான்:–

 

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ

மனையின் மாட்சிகுலாம் மலை மண்டலம்

வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்

இனிய தென்  தமிழ்நாடு சென்றெய்தினார்

-ஆறுசெல் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானர வீரர்கள், நீர்வளம் கொண்ட சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, இல்லறத்தின் சிறப்புமிக்க சேரநாட்டைச் சேர்ந்தார்கள். அங்கும் சீதையைக் காணாமல், இனிய தமிழ் வழங்கப் பெறுகின்ற தென் பாண்டிநாட்டைச் சேர்ந்தார்கள்.

அத்திருத் தகு நாட்டினை அண்டர்நாடு

ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ

எத்திறத்திலும் ஏழ் உலகும் புகழ்

முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்

 

பொருள்:_

ஏழ் உலகத்திலும் புகழப்படுகின்ற முத்துக்களையும் இயல்-இசை-நாடகம் என்ற மூன்று தமிழையும் தன்னிடத்தில் தோற்றுவித்து பெருமை பெறுவதால் செல்வத்தால் சிறப்பு பெற்ற அந்தப் பாண்டிய நாட்டை தேவர் உலகம் ஒத்திருக்கும் என்றால் அது ஏற்புடையதுதானே.

 

முத்தும் முத்தமிழும் தந்த நாடு பாண்டியநாடு!

 

இதைத் தொடர்ந்து வரும் மூன்றாவது பாட்டிலும்

 

என்ற தென் தமிழ்நாட்டினை எங்கனும்

சென்றுநாடித் திரிந்து திரிந்தினார்

பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்

துன்றல் அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்

 

பொருள்:

ஒழுக்கத்தில் சிறந்த அந்த வானரர்கள், அழகிய தமிழ்நாடு என்று மேலே சிறப்பிக்கப்பட்ட பாண்டிய நாட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். அடர்ந்த இருள் போன்ற கூந்தலை உடைய சீதையைக்  காணாமல்,  துன்பம் கொண்டவர்களாகி இறக்கும் நிலமைதனை எட்டிப்பார்த்து மேலே சென்றார்கள்.

 

இதை சங்க காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் 30,000 வரிகளில் ஏறத்தாழ 20 இடங்களில் மட்டுமே தமிழ் என்ற சொல்லைக் காணலாம்!

 

தமிழ்நாடு என்ற சொல் பரிபாடல் திரட்டில் (9-1) என்ற ஒரே இடத்தில் மட்டும் காணப்படும். பொதுவாகத் திரட்டில் வரும் விஷயங்கள் பிற்காலத்தியவை என்ற கருத்து உண்டு.

 

ஆனால் தமிழகம் என்ற சொல் மிகப்பழைய பகுதியான புறநானூற்றிலேயே (168-18) காணப்படுகிறது.

 

அந்த காலப் புலவர்கள், தமிழ்  வாழ்க என்று வெறும் கூச்சல் போடுவோர் அல்ல. ஆக்கபூர்வமான வேலைகள் செய்து தமிழை வளர்த்தவர்கள்!

 

—Subahm–