Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
please correct and read
பிழைத்திருத்தம் –
பாதாசம் – பாதரசம் வி பனை – விற்பனை மைரோ –மைக்ரோ பாயன்படுத்தி- பயன்படுத்தி
6 Nov 2019 – பாதரச மணி
பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! (Post No.7184). mica. Written by
LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 6 NOVEMBER 2019. Time in London …
Pictures are taken from various sources; beware of copyright
rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
நான் எழுதி 27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அலமாரியில் சேகரித்து வைத்த தினமணி பேப்பர் கட்டிங்ஸ் (paper cuttings) பழுப்படைந்து உதிர்ந்து போகின்றன. ஆயினும் மரகதத்தின் (Emerald) மதிப்பு குறையவில்லை. என்னுடைய 21-6-1992 கட்டுரையைப் படியுங்கள். அத்துடன் இந்த பிளாக் (blog)கில் வெளியாகும் நவரத்தினக் (Nine Gems) கட்டுரைகளைப் படியுங்கள்; ‘நவரத்தினக் குருமா’வைவிட ருசியானவை இவை!
ஐம்பதுக்கும்
மேற்பட்ட ரத்தினக் கட்டுரைகள் இங்கே கிடைக்கும்
23 Apr 2012 – Queen Elizabeth will shine as long as the Kohinoor
shines on her crown jewels!! Posted 23rd … ((posted by swamiindology.blogspot.com AND
tamilandvedas.com)) … பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். ….. நடிகர் நடிகையர்க்கு சங்கம் வைக்கும் பொழுது போக்கற்ற ….. நவ காளிதாசன் என்று புகழ்கிறார்.
8 Jan 2017 – Tagged with முத்து தோன்றும் இடங்கள். முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524).
Research Article … https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/.
15 Oct 2017 – கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST
No.4302). Written by S.NAGARAJAN. Date:15 October 2017. Time uploaded in
London- 5–51 am. Post No. 4302. Pictures shown here are taken from …
23 Apr 2012 – Picture shows Hope
Diamond. (தமிழ்நாட்டில்
பல குடும்பங்களில், குறிப்பாக
பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் …
5 Apr 2018 – Pictures shown here
are taken from various sources such as Facebook friends, Books, Google and
newspapers; thanks. Pictures may be subject to copyright laws. WARNING: PLEASE
SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG … TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி, …
21 Apr 2015 – Posts about Gems in Vedas
written by Tamil and Vedas. … Probably they imported the jewellery or the
idea from India. 1.Candra denotes gold …
27 Sep 2013 – Following are some
of the gems from Atharva Veda: … There are over 600 articles on Vedas,
Hindu Culture, Tamil and Sanskrit literature in …
13 Feb 2012 – Tamil and Vedas … Kalidasa’s praise of
Himalayan gems is sung by Sangam poets as well. … “Brought by the cart, gems and
gold from the Northern Mountain … (Please read my article :How did
Shakespeare know Cobra …
9 Feb 2015 – http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html.
Pearls in the Vedas and Tamil Literature- posted by …
Pictures are taken from various
sources; beware of copyright rules; don’t use them without permission; this is
a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி
21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி
கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4
ச.நாகராஜன்
அன்புத் திருவுருவங்களே!
இதயத் தூய்மையை அடைய முயலுங்கள். இதுவே உங்களது முக்கியமான
முயற்சியாக இருக்கட்டும். இதய சுத்தியுடன் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். இதய சுத்தியை
அடைய நீங்கள் புனிதமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். யார் சமைக்கிறாரோ அவருக்குப்
புனிதமான உணர்வுகள் இருக்க வேண்டும்.பண்டைய காலத்தில் ஆசாரமான பிராமணர்கள் தங்கள் மனைவி
சமைத்த உணவைச் சாப்பிடுவதையே வலியுறுத்துவர். இதற்குக் காரணம் என்னவெனில் இல்லத்தரசிகள்
தங்கள் குடும்பம் முழுவதும் நலமாக இருக்க வேண்டுமெனபதற்காகவே உணவைச் சமைப்பர். இதற்கு
மாறாக நீங்கள் சமையற்காரரை நியமித்தால், கடவுளுக்குத் தான் தெரியும் என்ன உணர்வுகளுடன்
உணவை அவர்கள் சமைத்தார்கள் என்று! சமைப்பவரின் புனிதமற்ற எண்ணங்கள் உணவுக்குள் புகும்,
அது உங்கள் மனதை விஷமாக்கும்.
அன்னம் பிரம்மா.ஆகவே அது புனிதமான உணர்வுகளுடன் தயாரிக்கப்பட
வேண்டும். உடல் சுத்தம் மட்டும் போதாது. மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள்
தயாரிக்கும் உணவிற்கான காய்கறிகள் தர்மமான வழியில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக கணவன் காய்கறிகளைச் சந்தையிலிருந்து கொண்டு வருகிறான். அவன் தனது பதவி அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்து பணம் தராமல் அதைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விற்பனை செய்பவர்களே
தவறான வழியில் அதைப் பெற்று வந்திருக்கலாம். அப்படிப்பட்ட கறிகாய்களைச் சாப்பிடும்
போது உங்கள் மனம் தூய்மையை இழக்கிறது. நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உங்களது உணவு
தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வதில்லை. புனிதமற்ற உணவு உங்களைப் புனிதமற்ற செயல்களைச்
செய்ய வைக்கிறது.
அன்புத் திருவுருவங்களே!
உங்களது உணவை
இறைவனுக்குச் சமர்ப்பித்த பின்னரே அதை நீங்கள் உண்ணுங்கள். அப்போது தான் உணவு புனிதமாகிறது.
உங்கள் புத்தியைப் பிரகாசிக்க வைக்கிறது. ஒருசமயம் சிவானந்த ஆசிரமத்தின் அருகில் ஒரு
ஆசிரமத்தில் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பக்தியுள்ள ஆத்மா.ஒரு நாள் வயதான
ஒரு வியாபாரி அவரது இளம் மனைவி இறந்த பதினோராம் நாள், அவரிடம் ஆசிரமத்தில் உள்ளவர்களின்
உணவைத் தயாரிப்பதற்காக நன்கொடை அளித்தார்.
வியாபாரி பணக்காரர் என்பதால் பெண்ணின் தந்தையை பணம்
காட்டி மயக்கி பெண்ணை மணந்து கொண்டார். தனது விதியை நொந்தவாறே அந்தப் பெண் அந்த வியாபாரியின்
வீட்டில் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையின் மீது வெறுப்புற்று
அவள் கங்கையில் குதித்துத் தன் உயிரை விட்டாள். வியாபாரி அவளது ஈமச் சடங்கைச் செய்வதற்காக
பதினோராம் நாள் அதைச் செய்து கொண்டிருந்தார்.
ஆசிரமத்தில் சமைக்கப்பட்ட உணவை ஏற்கக்கூடாது என்ற
பழக்கம் இருந்தது.ஆகவே அந்த வியாபாரி சமைப்பதற்கு ஆகும் செலவைக் கொடுத்தார்.ஆசிரமத்தின்
இதர சகாக்களுடன் அந்த சந்யாசியும் உணவை உண்டார். அன்று அவருக்கு உறக்கம் சரியாக வரவில்லை.
ஒரு இளம் பெண் அவரது கனவில் வந்தாள்.
அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் இப்படி: “ புலனின்பத்திற்காக
நான் ஒருபோதும் ஏங்கியதில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு வந்ததில்லை. அப்படியிருக்க
எனக்கு ஏன் கெட்ட கனவு வரவேண்டும்?”
அவரது தியானத்திலும் அதே காட்சியை அவர் கண்டார்.
ஆகவே சச்சிதானந்தம் என்ற பெயர் கொண்ட தன் குருவிடம்
சென்று தனது பிரச்சினையைச் சொன்னார்.
“ஸ்வாமி! நான் ஏன் அப்படிப்பட்ட புனிதமற்ற காட்சிகளைக்
கண்டேன்?”அவரது குரு அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.
அவர் வியாபாரிக்குச் செய்தி அனுப்பி அவரை வரச் சொன்னார்.
அவரிடம் பேசினார். அவரது மனைவியின் அகால மரணத்திற்கான காரணத்தை அறிந்தார். ஈமச்சடங்கிற்காக
சமைத்த உணவை அந்த சந்யாசி உண்டதாலேயே அவள் அவரது காட்சியில் தோன்றுகிறாள் என்பதை அவர்
தெரிந்து கொண்டார்.
அன்றைய தினத்திலிருந்து அந்த சந்யாசி சமைத்த உணவைச்
சாப்பிடுவதை நிறுத்தி விட்டு பழம் மற்றும் பாலை மட்டும் உண்டு வாழ ஆரம்பித்தார்.
பிக்ஷான்னம் தேஹ ரக்ஷணார்த்தம்!
( தேஹ ரக்ஷணத்திற்கு உணவு அவசியம்)
ஒரு கார் ஓடுவதற்கு பெட்ரோல் தேவை. அதே போல உடல் நன்கு
இருக்க உணவு தேவை. சில சமயம் நீங்கள் கெட்ட கனவைக் காண்கிறீர்கள், தியானத்தின் போது
கெட்ட காட்சியைக் காண்கிறீர்கள். இது புனிதமற்ற உணவின் விளைவு.
ஆகவே சமைப்பதற்கு முன்னர், அதற்கான சாமான்கள் நல்ல
வழியில் பெறப்பட்டதா என்று விசாரிக்க வேண்டும்.
பின்னரே உணவு உண்ணத் தக்கதாக ஆகிறது.
உணவை உட்கொள்ளும் முன்னர் நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.
ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர்
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம சமாதினா
புனிதமான உணர்வுகளுடன் நீங்கள் பிரார்த்தித்தால் உணவு
தூய்மையாகிறது.
ஒரு சமயம் விக்ரமாதித்த மஹாராஜா ஒரு பெரிய சபையைக் கூட்டினார். அவர் ஒரு
கேள்வியைக் கேட்டார்: “ புத்தி பெரிதா, மேதஸ் பெரிதா?”
சபையில் பங்கு கொண்டோர் மேதஸ் தான் பெரிது என்று கூறினர்.
ஆனால் அவர்களின்
கருத்தை விக்ரமாதித்தன் ஏற்கவில்லை. அவர் கூறினார், “புத்தியே பெரிது, ஏனெனில் அது
ஆத்ம ஞானத்தைக் கொண்டிருப்பதால் அதுவே பெரிது.”
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
கம்-னு நிரப்புங்க; எல்லாம் ஐந்தெழுத்துச் சொற்கள்; தங்கம், வங்கம், பங்கம் என்பது போல கம்-னு முடியும் சொற்கள்
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மஹாபாரதத்தில்
சோழர் குல மூதாதரையான மாமன்னன் மாந்தாதா, அவருடைய தந்தை யவனஸ்வாவின் உடலில்
இருந்து பிறந்தவர். மாபாரதம் முழுதும் சிகண்டி போன்ற திருநங்கைகள், துர்யோதனாதிகள் போன்ற டெஸ்ட் ட்யூப்
(சோதனைக் குழாய்) குழந்தைகள் மற்றும் அச்சுப் பதிவு பிறப்புகள் (க்ளோன்ங்), ஜராசந்தன் போன்ற ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகள் என ஏராளமான அதிசயப் பிறவிகள் இருக்கின்றனர். நான் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 21-6-1992 தினமணியில் எழுதிய ‘பிலிப்பைன்ஸ் ஆண் கர்ப்பம்’ பற்றிய செய்தியை இத்துடன்
இணைத்துள்ளேன். இன்று காலை அவரைப் பற்றிய லேடஸ்ட் செய்திக்காக கூகுள் செய்த போது
அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 2017ல் ஒரு ஆணுக்கு, குழந்தை பிறக்கும் போதே இறந்து
பிறந்ததையும் 2019ல் அமெரிக்காவில் ஒரு ஆணுக்குக்
குழந்தை பிறந்ததையும் படித்தேன்.
பொதுவாக
இத்தகைய ஆண்கள் திருநங்கைகளைப் போன்றவர்கள். ஆயினும் இரு பாலரின் ஜனன உறுப்புகளும்
இருக்கும்.இதில் பல ரகம் உண்டு.
ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் 54 ஆண்கள் கர்பமடைந்தனர்!
23 May 2017 – மஹாபாரதம் உண்மையே; ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் (Post No.3934) …
Twins) ஆபரேஷன், நமக்குத் தெரியாத அதிசயப் பறவைகள், அலிகளாகப் (Transgender) பிறந்தோர் ஆபரேசன் … குழந்தை பிறப்பில் பெரிய புரட்சியே நடைபெறப் போகிறது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
ஆண்டுதோறும் பல
தலங்களிலும் திருவிழாக் காலத்தில் வேடுபறி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குக்
காரணம் என்ன?
சுந்தரமூர்த்தி
நாயனார் வரலாறைப் படித்தால் அதற்கான காரணம் நன்கு விளங்கும்.
பரவையார் மீது
காதல் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆகவே நிறையப் பொருள் சம்பாதிக்க விரும்பினார்.
கொடுங்கோளூருக்குச்
சென்று அங்கு சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு அடியவர்கள் முன் நடக்க சுந்தரர் திருமுருகன்பூண்டித் தலத்திற்கு
வந்தார்.
திருமுருகன்பூண்டி
என்ற திருத்தலம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவிநாசி-திருப்பூர்
சாலையில் அவிநாசியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
இங்குள்ள ஆலயம்
முருகநாதேசுவரர் ஆலயமாகும்.
சுந்தரரிடமிருந்து
தமிழ்ப்பாடல் பெற விரும்பிய முருகாவுடையார்,
சிவகணங்களை வேடுவர் உருவத்தில் அனுப்பி சுந்தரரிடமிருந்து வழிப்பறி செய்து வருமாறு
தூண்ட அவர்கள் அவ்வாறே செய்தனர்.
இதனை அறிந்த நாயனார்
முருகன்பூண்டி ஆலயத்தை அடைந்து ஒரு திருப்பதிகம் பாடி இறைவனின் அருளை வேண்டினார்.
ஒவ்வொரு தலத்திலும்
திருவிழாக் காலத்தில் இந்த நிகழ்ச்சி தான் வேடுபறி என்ற பெயரில் இன்றளவும் நடைபெற்று
வருகிறது.
இந்த நிகழ்ச்சியை கொங்குமண்டல சதகம் தனது
பதினைந்தாம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.
பாடல் :
கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்
சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர்
சொற்றமிழ்க்கா
அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்
வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : பரவையாரின் மீது கொண்ட அளவற்ற
காதலினால் பொருளாசை கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம் பதிகம் கேட்க விரும்பிய
திருமுருகன்பூண்டித் திருத்தலம் உறையும் எம்பெருமான், நாயனாரின்
திருவடிகூட்டத்தார்கள் சுமந்து வந்த பொன்முடிப்புகளைப் பறித்துக் கொண்டதும் கொங்கு
மண்டலமே என்பதாம்.
இந்த நிகழ்ச்சியை திரு அவிநாசிப் புராணம்
இப்படிக் கூறுகிறது:
மூடியசெஞ் சடைவுடையீர் முருகவனம் பதியுடையீர்
கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல
தேடுமலை வளநாடு புரந்தருளுச் சேரலர்கோன்
பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்
சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தில் ஒரு
பதிகம் பாடினார். அதில் ஒரு பதிகத்தின் முதல் பாடல் இது:
பிரசித்தி பெற்ற
திருமுருகன்பூண்டித் தலத்தில் தான் துர்வாச மஹரிஷி கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக்
கொண்டு வந்தார் என்பதும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்.
Pictures are taken from various sources; beware of
copyright rules; don’t use them without permission; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000
மபியா
கும்பல் பற்றி இன்னும் இதாலியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அவர்களுடைய செயல்பாடு உலகம் முழுதும் பரவி இருப்பது பற்றியும் அவர்கள் வெவ்வேறு
விதங்களில் செயல்படுவது பற்றியும் வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு
வருகின்றன. ஆயினும் இதாலி,
அமெரிக்கா, மெக்ஸிகோ போலீசாரின் தீவிர
நடவடிக்கையால் அவர்கள் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. அவவ்வப்போது
குற்றவாளிக் கும்பல் கைது பற்றித் தகவல் வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அவர்களுடைய
சித்திரவதை உத்திகள், அவர்கள் தோண்டி வைத்த சுரங்கங்கள்
பற்றியும் தகவல் வருகிறது. இதோ நான் தினமணியில் 1992-ல் எழுதிய மபியா கும்பல் பற்றிய கட்டுரை.
Pictures are
taken from various sources; beware of copyright rules; don’t use them without
permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
TEN
BOOKS/MANDALAS OF RIG VEDA:
The Books
are called Mandalas (10)
The chapetrs
or sections are called Anuvakas(85)
The hymns
are called Suktas (1017 –with appendix 1028)
1st
Mandala- Various seers’ hymns are in this book
2nd
Mandala- Sage Grtsamada
3rd
mandala- Sage Visvamitra
4th
Mandala- Vamadeva
5th
Mandala- Atri
6th
Mandala- Bharadwaja
7th
Mandala- Vashista
8th
Mandala- Kanva and Angiras comosed the hymns
9th
Mandala- Hymns pertaining to Soma
10th
Mandala- Several poets
Hymns are
mainly religious-in praise of Vedic Gods
But secular
poems are also there.
XXXX
TEN INCARNATIONS IN ONE STATUE
50. TEN
INCARNATIONS OF VISHNU
Matsya avatar- Incarnation as Fish
Kurma Avatar- Incarnation as Tortoise
Varaha Avatar- Incarnation as boar
Narasimha avatar- Incarnation as Man-Lion
Vamana Avatar- As a short man
Parasurama Avatar- Incarnation as Rama with a
dagger
Rama Avatar- Incarnation as King Rama
Krishna- Incarnation as Krishna
Balarama/Buddha- Incarnation as Balaram/Buddha
Kalki- Yet to come ;on a white horse
Balarama is replaced by the Buddha in some of
the listings
Avatar means reincarnation. God says in the
Bhagavad Gita that he would come to earth whenever there is decline in
righteousness to destroy the evil and protect the good people. Other than these
ten there were many more avatars. One tradition maintains that there were 18
and another 24 Avatars.
XXX
BATTLE OF
TEN KINGS IN RIG VEDA
The Dasarajna or the
Battle of the Ten Kings, is an important historical event alluded to in various
hymns of the Rig Veda.
Sudas was the king of Bharata Kingdom. He belonged to Trstu
family. At first Visvamitra was their priest. He led him to victorious
campaigns on the banks of Vipas and Sutudri. Later there was some
misunderstanding and Vasistha was appointed as the priest and Visvamitra was
sacked. Thereupon a long and bitter rivalry ensued between the two priests and,
in revenge, Visvamitra led ten kings against the Bharata kingdom.
The ten kings were from the kingdoms of Puru, Yadu, Turvasa, Anu
and Drhyu, Alina, Paktha, Bhalanas, Siva and Visvanin.
In the bloody and
decisive battle on the banks of River Parusni, the Bharats emerged victorious,
utterly routing the ten kings. The kings of Anu and Druhyu kingdoms were
drowned, while Purukutsa, King of the Puru Kingdom met his death.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஆதிசங்கரரின்
அத்வைத வேதாந்தத்தைப் (நீயே கடவுள்/ தத் த்வம் அஸி) பின்பற்றும் சந்யாசிக்கள்
பத்து சிறப்புப் பெயர்களைக் கொண்டிருப்பர். சிருங்கேரி மடத்திலுள்ள
சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘பாரதி’ என்றும் காஞ்சி மடத்தின்
சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘சரஸ்வதி’ என்றும் இருக்கும். இதுபோல மொத்தம் பத்து சிறப்பு
அடைமொழிகள் உண்டு. அவையாவன
பாரதி, சரஸ்வதி, புரி, தீர்த்தர், ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, சாகர என்ற பின்னொட்டுகள் (suffix) மடாதிபதிகளின் பெயருடன் சேர்க்கப்படும். எடுத்துக் காட்டாக காஞ்சிப்
பெரியவர் சந்திரசேகர இந்திர சரஸ்வதி என்றும், அவருக்கு
அடுத்தவர் ஜய இந்திர சரஸ்வதி என்றும் , அடுத்து
வந்தவர் விஜய இந்திர சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஏனைய
மடங்களின் சிறப்பு பின்னொட்டுகள் (SUFFIX OR EPITHETS):-
துவாரகா
பீடாதிபதிகள் – ஆஸ்ரம அல்லது தீர்த்த
கோவர்தன
மடாதிபதிகள் – வன அல்லது ஆரண்ய
பத்ரிநாத்
ஜோதிர் மடாதிபதிகள் – கிரி, பர்வத, சாகர
பல
பெயர்களிலும் இயற்கை அம்சங்கள் (காடு, மலை, நீர்நிலை, ஊர், காட்டிலுள்ள குடிசை) ஒட்டிக்கொண்டு இருப்பதை நோக்கவும். அல்லது
சரஸ்வதி (பாரதி) பெயர் இருக்கும்.
xxx
சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்:–
குருநானக், அங்கத, அமர்தாஸ், ராம்தாஸ், குரு அர்ஜுன் தேவ், ஹரிகோவிந்த, ஹரி ராய், ஹரி கிருஷ்ண, குரு தேஜ்பகாதூர், குரு கோவிந்த சிம்மன் (பாரதியாரால் பாடப்பட்டவர்)
xxxx
உபசாரங்கள்
பத்து
இறைவனைப்
பூஜிக்கையில் 32 வகை உபசாரங்கள் செய்ய வேண்டும்; அதில் பாதி 16 (ஷோடஸ); அதுவும் முடியாவிடில் குறைந்தது 10
உபசாரம் செய்வர்; அவையாவன-
தச
ராக்ஞ யுத்தம் எனப்படும் பத்து அரசர் போர் ரிக் வேதத்தில் பல கவிஞர்களாலும்
பாடப்பட்ட போர்- இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சி. அந்த பத்து ராஜாக்கள்
யாவர்:–
அனு, த்ருஹ்யு, புரு, துர்வாசு, யது, பக்த, பலானஸ், அலின, விசானின், சிவ (சிம்யூ, வைகானஸ் என்ற பெயர்கள் அவர்களில் சிலருடைய
மாற்றுப் பெயர்கள்). இவர்கள் அனைவரும் வசிஷ்டரைக் குருவாகக் கொண்ட சுதாஸைத்
தாக்கினர். சுதாஸ் வெற்றி வாகை சூடினார்.