குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)

Written by London swaminathan

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 19-40

 

Post No.3407

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

மேல் நாடுகளில் குகைகள் பற்றி ஆராய்வோருக்காக (Speleology) சங்கங்கள் உள்ளன. உலகில் எங்கு குகைகள் இருந்தாலும் அங்கு சென்று நவீன கருவிகளை வைத்து முதலில் ஆராய்ந்துவிட்டு பின்னர் கயிறு கட்டி உள்ளே இறங்குவர். பின்னர் அது பற்றிய சுவையான தகவல்கள் வெளியாகும். நமது இந்தியாவில் ஏராளமான குகைகள் உள்ளன. மேகாலயாவில் உள்ள குகைகளைப் பற்றி கூட ஒரு ஆங்கிலக் கட்டுரை வந்தது.

 

வால்மீகி ராமாயணத்தில் கதையின் முக்கியத் திருப்பமே குகை மூலமகத்தான் வந்தது. கிஷ்கிந்தையில் குகைக்குள் போன வாலி வரவில்லை என்றவுடன், பயந்து போனதம்பி சுக்ரீவன் அதன் வாயிலை மூடவே வந்தது வம்பு! பின்னர் நடந்த கதை எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.

 

இமயமலையில் நைமிசாரண்யம் என்னும் இயற்கை அழகு மிக்க பூமி அருவிகளும், அடவிகளும் (காடு), குகைகளும் வனவிலங்குகளும் நிறைந்த இடம். அங்குதான் முனிவர்கள் தங்கி புராணக் கதைகளைக் கேட்டனர்; எழுதினர்; யாக யக்ஞங்களைச் செய்தனர்.

இதே போல கிஷ்கிந்தையிலும் குகைகள் இருந்தது வாலியின் கதை மூலம் தெரிகிறது. கிஷ்கிந்தை குகைகள் பற்றிக் கம்பன் கூறும்  பாடலைக் காண்போம்:

 

சரம்பயில்நெடுந்துளி நிரந்த புயல் சார

உரம் பெயர்வு இல் வன் கரி கரந்துற ஒடுங்கா

வரம் பகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்

முரம்பினில் நிரம்பல முழைஞ்சியடை நுழைந்த

கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானில் பரவிக்கிடந்த மேகங்களில் இருந்து மழை கொட்டியது அம்புகள் சரமாரியாக வந்ததுபோல இருந்தது. அப்போது தேன்கூடுகளில் இருந்து தேன் வழிந்தது. அப்பொழுது அந்த யானைகள்  மழையைப் பொறுக்க முடியாதபடி குகைக்குள் ஒவ்வொன்றாக நுழைந்தன.

 

இப்பொழுது நாம் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்ப்போம்; யானைகள் நுழையும் அளவுக்கு பெரிய வாயில்கள்!! அவ்வளவு யானைகளுக்கும் இடம் தரும் அளவுக்கு அகன்ற ஆழமான குகைகள்! இப்படி இருந்ததாம் கிஷ்கிந்தைப் பகுதி.

 

(முழை=குகை, பிரசம்=தேன்கூடு)

 

முழை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பரிபாடல், அகநானூறு, புறநானூறு பாடல்களில் வருகிறது. பேகன் ஆண்ட மலைப் பகுதியில் பெரிய குகைகள் இருந்தனவாம். அகநானூறு பாடல் ஒன்றில் இரவுநேரத்தில் தன்னைக் காண வரவேண்டாம்; ஏனெனில் மலைக்குகைகளில் புலிகள் இருக்கின்றன என்று காதலனுக்கு காதலி கூறுகிறாள்.

 

குகை என்ற சம்ஸ்கிருதச் சொல் சங்கப் பாடல்களில் கிடையாது. முழை என்ற சொல்லே நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

காளிதாசன் பாடலில் குகைகள்

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன், குமாரசம்பவம் என்னும் காவியத்தில் முதல் 18 பாடல்களில் இமய மலையை அற்புதமாக வருணிக்கிறான். அதில் இரண்டு பாடல்களில் குகைகளைப் பற்றியும் சொல்கிறான். கிம்புருஷப் பெண்கள், இமயமலைக் குகைகளில் இருப்பதாகவும் மேகங்கள் குகைகளின் வாயிலில் தவழ்ந்து செல்லுகையில் அவை திரை போல இருந்து அவர்களுக்கு உதவின என்றும் பாடுகிறான்.

 

சங்க இலக்கியப் பாடல்களில் குகை (முழை)

அகம்-168, பரி-8, 19, புற. 147, 157, 158.

 

காளிதாசன் குமார சம்பவம் – 1-12, 1-14

 

–SUBHAM–

 

Amusing and Eccentric (Zanies) Anecdotes (Post No.3406)

Compiled by London swaminathan

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 8-34 AM

 

Post No.3406

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

Riding on the subway during fairly a crowded hour a man was started to see sitting opposite him in the car a man reading his newspaper and paying no attention whatever to a pair of pigeons which were seated one on each of his shoulders. Many stations further on, when the crowd was thinned out somewhat, he could repress his curiosity no longer. Stepping across the aisle he accosted the man, saying

“I beg your pardon, but would you mind telling me what those pigeon s are doing on your shoulders?”

The man looked up from his newspaper and said,

“I don’t know. They got on at 14th street.”

 

Xxxx

 

Bottle Breaker

A man stepped briskly up to a swanky cocktail bar at the Waldorf in  New York and snapped at the barkeeper, Martini

He got the drink and the bartender was astounded to see him toss the contents over his left shoulder and then proceed to nibble off the rim of the glass. Having finished this crispy morsel he slapped down the remains and said,

Another

Another was served and the performance was repeated.

Say, said the bartender, leaning over the bar,

Are you crazy?

No,said the man snappily, it’s simply that  I like only the rim of the glass.

But, said the bartender, the stem is the best part!

 

Xxx

 

Lincoln’s Dream

Lincoln once dreamed he was in some great assembly, and the people drew back to let him pass, whereupon he heard some one day,

He is a common looking fellow

In his dream Lincoln turned to the man and said,

Friend, the Lord prefer s common looking people; that is the reason why he made so many of them.

Xxx

 

Caesar’s wife must be above suspicion!

A simple youth coming to Rome from the country was observed to resemble Augustus so much that it was the subject of general conversations. The emperor ordered him to appear at court, and inquired of him if his mother had ever been in Rome.

No, answered the innocent youth, but my father has.

 

–Subham–

 

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்! (Post No.3405)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 1st December 2016

 

Time uploaded in London: 5-50 AM

 

Post No.3405

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

புத்தரின் சீடர் ஆனந்தர் வாழ்வில்!

 

மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்!

ச.நாகராஜன்

 

புத்தரின் சீடரான ஆனந்தர் மிக அபாரமான அறிவும் சிறந்த பண்புநலன்களும் உடையவர்.

எந்த சிக்கலான பிரச்சினைக்கும் யாருக்கும் துன்பம் இல்லாதவாறு தீர்வைக் காண்பவர்.

இதை விளக்கும் ஒரு சம்பவம் உண்டு.

ஒரு முறை மன்னன் பசநாடி மிகுந்த கோபத்துடனும் துக்கத்துடனும் இருந்தான். காரணம், அந்தப்புரத்தில் இருந்த போது அவன் மகுடத்தில் இருந்த ஒரு இரத்தினக் கல்லைக் காணோம் என்பது தான்.

அந்தப் புரத்தில் இருந்த அனைவரையும் நன்கு சோதிக்குமாறு மந்திரியிடம் அவன் உத்தரவு பிறப்பித்தான்.

ஆனால் பயன் ஏதுமில்லை.

 

 

அந்தப்புரப் பெண்மணிகளும் அங்கு வேலை பார்த்தோரும் மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்கள்

கவலையுடன் அவர்கள் அனைவரும் ஆன்ந்தரை நாடினார்கள்..

என்ன விஷயம் என்று கேட்டார் ஆனந்தர்.

அவர்கள் நடந்ததை விளக்கினர். ஆனந்தர் நேராக  மன்னனிடம் வந்தார்.

மன்னா! கவலைப்பட வேண்டாம். இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்த்து விடலாம் என்றார்.

மன்னன், “பூஜ்யரே, அது எப்படி சாத்தியம். அனைவரையும் நன்கு சோதித்து விட்டோமே. இனி என்ன வழி?” என்று கேட்டான்.

:”மன்னா! அங்குள்ள ஒவ்வொருவரிடமும் சிறிது வைக்கோலையும் களிமண் உருண்டையும் கொடுத்து அவர்கள் விரும்பிய இடத்தில் அவற்றை வைக்கச் சொல்” என்றார் ஆனந்தர்.

 

அதன்படியே உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டது. அனைத்து களிமண் உருண்டைகளும் சேகரிக்கப்பட்டன. ஆனந்தர் அவற்றைக் கவனமாகச் சோதித்தார். திருடியது யாராக இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி களிமண் உருண்டைக்குள் இரத்தினக் கல்லை வைத்து விடுவார் என்று அவர் எண்ணினார். ஆனால் அந்த உருண்டைகள் எதிலும்இரத்தினக்கல் இல்லை.

ஆனந்தர் யோசித்தார். தன் திட்டத்தைச் சற்று மாற்றினார்.

“மன்னா! ஒரு அறைக்குள் பெரிய குடம் நிறையத் தண்ணீரை வை. அந்த அறைக்கு முன்னால் திரை ஒன்று தொங்கட்டும். அனைவரையும் அங்கு சென்று குடத்தின் நீரால் கையை அலம்பச் சொல்” என்றார்.

அனைவரும் அறைக்குள் சென்று திரைக்குப் பின்னால் இருந்த குடத்து நீரால் கையை அலம்பி விட்டு வந்தனர்.

பின்னர் ஆனந்தர் மன்னனுடன் அந்த அறைக்குள் நுழைந்தார்.

குடத்திலிருந்த நீரைக் கொட்டினார். குட்த்தின் உள்ளே இரத்தினக்கல் இருந்தது.

மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தார்ன். அவரது கூர்மையான அறிவையும் பிரச்சினையை யாருக்கும் பாதகமில்லாமல் அணுகி உடனே அதைத் தீர்த்ததையும் வெகுவாகப் போற்றினான்.

அவரைப் பணிந்து ஆசியை வேண்டினான்.

ஆனந்தர் தன் வாழ்நாள் முழுவதும் புத்தரின் போதனைகளின் படி வாழ்ந்து காண்பித்தார்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, உடனடியாக யாவருக்கும் இசைந்த முறையில் தீர்வைக் காண்பார்.

புத்தருக்கு  உகந்த சீடர் அவரே என்பதைக் காட்டும் ஏராளமான சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தன. அனைத்துமே அருமையானவை!

*******

 

42 திருவாசகப் பொன்மொழிகள் (Post No.3404)

டிசம்பர் 2016  காலண்டர்

Compiled by london swminathan

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 22-09

 

Post No.3404

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

December 2016  ‘Good Thoughts’ Calendar

டிசம்பர் 12 : கார்த்திகை தீபம், 13- சர்வாலய தீபம், 13- மிலாடி நபி,  25- கிறிஸ்துமஸ்; ஏகாதசி- 10, 24/25; பௌர்ணமி -13;  அமாவாசை-28; முகூர்த்த தினங்கள்–1, 4, 5, 9

 

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே – எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் எனும் தேன்

xxx

டிசம்பர் 1 வியாழக்கிழமை

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

xxx

டிசம்பர் 2 வெள்ளிக்கிழமை

உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

xxx

டிசம்பர் 3 சனிக்கிழமை

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ச்சுடரே

 

xxx

டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை

 

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே

xxxx

டிசம்பர் 5 திங்கட்கிழமை

 

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவந்தாள் வனங்கி

xxxx

 

டிசம்பர் 6 செவ்வாய்க்கிழமை

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி

………. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

—சிவபுராணம்

 

xxx

 

டிசம்பர் 7  புதன்கிழமை

 

மன்னு மாமலை மகேந்திரமதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

–கீர்த்தித் திரு அகவல்

xxxx

டிசம்பர் 8 வியாழக்கிழமை

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொருகோடியின் மேற்பட விரிந்தன

–திருவண்டப்பகுதி

 

xxx

டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை

சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாட் சேட்சியன் காண்க

பக்தி வலையிற் படுவோன் காண்க

–திருவண்டப்பகுதி

xxxx

டிசம்பர் 10 சனிக்கிழமை

 

ஆறுகோடி மாயா சக்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

ஆத்தமானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

–போற்றித் திரு அகவல்

xxx

 

டிசம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

மிண்டியமாயாவாதம் என்னும்

சண்டமாருதஞ் சுழித்தடித்தார்த்து

உலோகாதயனெனும் ஒண்டிறர்பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 12 திங்கட்கிழமை

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 14  புதன்கிழமை

 

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி

 

கருங் குருவிக் கன்றருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

–போற்றித் திரு அகவல்

xxx

டிசம்பர் 15 வியாழக்கிழமை

நாடகதாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றே

–திருச்சதகம்

xxxx

 

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை

 

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவனடியாரடியாரோடு

மேன்மேலுங் குடைந்தாடி ஆடுவோமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 17 சனிக்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடும் இரண்டும் அறியேனையே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

–திருச்சதகம்

xxx

டிசம்பர் 19 திங்கட்கிழமை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

–திருவெம்பாவை

xxx

டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப்பேணு பெருந்துறையில்

–திருவம்மானை

xxx

 

டிசம்பர் 21  புதன்கிழமை

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்

திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி

–திருப்பொற்சுண்ணம்

xxxx

டிசம்பர் 22 வியாழக்கிழமை

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்காயிரம்

திருநாம் பாடி நாம் தெள்ளெணங் கொட்டாமோ

–திருத்தெள்ளேணம்

xxx

டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை

 

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ

–திருச்சாழல்

xxx

டிசம்பர் 24 சனிக்கிழமை

மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்

தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட

புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

–திருப்பூவல்லி

xx

டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை

பாலகனார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

கோலச் சடையற்கே உந்தீ பற

குமரன்றன் தாதைக்கே உந்தீபற

–திருவுந்தியார்

xxx

 

டிசம்பர் 26 திங்கட்கிழமை

 

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

—–திருத்தோணோக்கம்

xxxx

டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை

தேன்பழச் சோலை பயிலுஞ்

சிறுகுயிலேயிது கேள் நீ

வான் பழித்திம் மண்புகுந்து

மனிதரை  யாட்கொண்ட வள்ளல்

—குயிற்பத்து

xxxx

டிசம்பர் 28 புதன்கிழமை

தந்ததுன் றன்னைக் கொண்டதென்றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது என்பால்

–கோயில் திருப்பதிகம்

xxxx

டிசம்பர் 29 வியாழக்கிழமை

பவளத் திருவாயால்

அஞ்சேலென்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே

–ஆசைப்பத்து

xxxx

டிசம்பர் 30 வெள்ளிக்கிழமை

 

சொல்லும் பொருளும் இறந்த சுடரை

நெல்லிக்கனியைத் தேனைப் பாலை

நிறையின் அமுதை அமுதின் சுவையை

–புணர்ச்சிப்பத்து

xxxx

 

டிசம்பர் 31 சனிக்கிழமை

 

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பா

பரகதி கொடுத்தருள் செய்யும்

சித்தனே

–அருட்பத்து

xxx

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொடில்லை கண்டேனே

–கண்டபத்து

xxxx

சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும்

ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு

–கண்டபத்து

xxxx

பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

பிறைசேர் சடையாய் முறையோவென்

றழைத்தால் அருளா தொழிவதே

அம்மானேயுன் அடியேற்கே

–குழைத்தபத்து

 

xxx

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்டமுழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற் கரியோய் நீ

வேண்டியென்னைப் பணி கொண்டாய்

–குழைத்தபத்து

xxx

 

மற்றுமோர் தெய்வந்தன்னை

உண்டென நினைந்தெம் பெம்மாற்

கற்றிலாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

–அச்சப்பத்து

xxx

ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்

பிரான் தன் அடியவர்க்கு

மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே

–திருப்பாண்டிப் பதிகம்

xxxxx

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் ச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே

—திருப்புலம்பல்

xxx

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான்

–திருவெண்பா

xxxx

இன்பம்பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்து…….

–திருவெண்பா

xxxxxxxxxxx

முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்

–திருவெண்பா

 

xxx

உய்யுநெறி காட்டுவித்திட்

டோங்காரத் துட்பொருளை

ஐயனெனக் கருளியவா

றார்பெறுவார் அச்சோவே

—அச்சோப்பதிகம்

 

 

 

—subham—

Stupidity Anecdotes (Post No.3403)

Compiled by London swaminathan

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 19-20

 

Post No.3403

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

To the city of Washington come all kinds of tourists, from visiting nobility to the representatives of the smallest communities.

 

A lady from a small upstate New York town was a member of a touring party. Arriving at Washington Monument, the guide took them all to the very top of the structure. Overwhelmed by the many and varied sights, the woman cried in an ecstatic and somewhat incoherent tones

Why, why, there is the White House…. And there is the Capitol. Look over there… It is the Lincoln memorial! Then looking about with a slightly bewildered and rather disappointed air, but where’s the Washington monument?

 

Xxxx

 

Smoky! Smoky!

St.Louis , notwithstanding improvements carried out in recent years, has been in its time one of the most famous smoky cities of America

One of its established city offices was that of Smoke Inspector. This post of such legitimate importance degenerated through the years into a political plum. At last, after one election, it fell in to the hands of an appointee of utter incompetence, who shortly after taking office, was shocked to learn that he must make a monthly report.

He submitted there upon the following

Have inspected the smoke of St. Louis for the month of December, 19– and have found it to be of good quality.

 

Xxx

Stupid Lady at Shakespeare’s Birth Place

Stupidity is not the monopoly of any race or religion though we hear lot of jokes about a community or religious group.

A lady visiting Stratford –on-Avon, the birth place of Shakespeare, showed even more than the usual fervour. She had not recovered when she reached the railway station, for she remarked to a friend as they walked on the platform: “To think that it was from this very platform the immortal bard would depart whenever he journeyed to town!”

 

Copied from my previous post

 

Xxxx

Mirror! Mirror!

There are many versions of the old hill- billy looking glass story. The oldest war horse of them all is the version in which the mountaineer, finding a mirror, peers at it and remarks

So — that’s the no count varmint the old lady’s taken up with.

 

Whereupon his wife, finding the mirror where he had left it, snorted in indignation

So that’s the old hag he is running after.

A somewhat newer version is that of the mountain lad, some 24 years of age, unshaven , untrimmed and unwashed . Peering among the purchases which his father had brought back in the wagon from the settlement he came across a large wall mirror . He burst into laughter. His mother coming out, demanded to know what he was laughing at.

Pa’s bought a wolf, chuckled the young man.

–Subham—

 

 

நல்ல கர்மங்களும் தீய கர்மங்களும் (POST NO.3402)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 30 November 2016

 

Time uploaded in London: 4-56 AM

 

Post No.3402

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

புத்த தரிசனம்

 

நல்ல கர்மங்களும் தீய கர்மங்களும் – அரசனின் கேள்வியும் ஆனந்தரின் பதிலும்!

 

ச.நாகராஜன்

 

நல்ல கர்மங்கள் எவை? தீய கர்மங்கள் எவை?

கோசல நாட்டு அரசன் பசநாடிக்கு சந்தேகம் வந்தது. அவன் புத்தரின் சீடரான ஆனந்தரின் காலில் அடி ப்ணிந்து விழுந்து கேட்டான்.

 

மன்னன்: பூஜ்யரே! முட்டாள்களும் புத்தியற்றவர்களும்  மற்றவர்களைப் புகழ்கின்றனர் அல்லது இக்ழ்கின்றனர். அவர்கள் சொல்வதை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. பண்டிதர்களும் புத்திசாலிகளும்  மற்றவர்களைப் புகழும் முன்னர் அல்லது விமரிசிப்பதற்கு முன் எதையும் ந்னகு ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்க்கின்றனர். அவர்கள் சொல்வதை நான மதிக்கிறேன். பூஜ்யரே! எந்த கர்மங்கள் அல்லது செயல்கள் துறவிகளாலும் பிராமணர்களாலும் இகழப்படுகின்றன? அதை எனக்குச் சொல்லி அருளுங்கள்!

 

ஆனந்தர்: மன்னனே! உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை திறமையற்று இருக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்.

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு, மனம் ஆகியவற்றால் திறமையற்ற செயல்கள் என்று கருதப்படுகின்றன?

 

ஆனந்தர்:  உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை தீமை விளைவிக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு, மனம் ஆகியவற்றால் தீமை விளைவிக்கும் செயல்கள் என்று கருதப்படுகின்றன?

 

 

 

ஆனந்தர்:  உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவைஎவை அடக்கி ஆளும் கொடுமையைச் செய்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல் வாக்கு மனம் ஆகியவ்ற்றால் அடக்கி ஆளும் கொடுமையைச் செய்வதாகக் கருதப்படுகின்றன?

 

ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எவை எவை துன்பத்தை விளைவிக்கின்றனவோ அவையே அந்தச் செயல்களாகும்.

 

 

மன்னன்: எந்தச் செயல்கள் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் துன்பத்தை விளைவிப்பதாகக் கருதப்படுகின்றன?

 

ஆனந்தர்: உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் எந்தச் செயல்கள் தன்க்கோ அல்லது பிறருக்கோ கடும் தொல்லையைக் கொடுக்கிறதோ அல்லது தனக்கும் பிறருக்கும் சேர்ந்து தொல்லை கொடுக்கிறதோ எது திறமையற்ற செயல்களைக் கூட்டி திறமையுள்ள செயல்களைக் குறைக்கிறதோ அவையே அந்தச் செயல்களாகும். மன்னா!இவையே துறவிகளாலும் பிராமணர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன.

 

 

பின்னர் மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் போதனையின் சாராம்சத்தை ஆனந்தர் சுருக்கமாக இப்படி விளக்கி அருளினார்:

 

“எந்தக் கருமங்கள் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் சந்தோஷத்தைத் தருகிறதோ, எவை ஒருவருக்கும் கடும் தொல்லையை உருவாக்காமல் இருக்கிறதோ எவை திறமையுள்ள செயல்களைச் செய்ய வைக்கிறதோ  அவையே துறவிகளாலும் பிராமணர்களாலும் விரும்பப்ப்டுகிறது. வெறுக்கப்படுவதில்லை!

 

நல்ல கர்மம் எது, தீய கர்மம் எது என்ற ஐயத்திலிருந்து மன்னன் தெளிந்தான். அன்றிலிருந்து பிறருக்கு துன்பம் தருவதை உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் தவிர்த்தான். சந்தோஷம் தருவதை ஊக்கமுடன் செய்தான்.

 

புத்தரின் போதனையை மற்றவர்களுக்குச் சொல்ல ஆனந்தர் கோசல நாட்டை விட்டுக் கிளம்பினார்.

*****

 

Rough and Ready Anecdotes (Post No.3401)

Compiled by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 20-10

 

Post No.3401

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

Charles Fox, the English statesman, once asked a tradesman for his vote. the tradesman answered,

“I admire your abilities, but damn your principles”, to which Fox replied,

“My friend, I applaud your sincerity, but damn your manners.

xxxx

A bad man rushed into a saloon brandishing his guns and shooting to the right and left. he stood in the middle of the floor and shouted,

“All you dirty skunks get out of here!”. The bar was virtually emptied in one wild burst of confusion, but as the smoke cleared it revealed one imperturbable man calmly finishing his drink at the bar. the bad man lumbered over to him.

“Well”, said the other, “there was sure a lot of them, wasn’t there?”

 

xxx

A legend has it that Will Rogers once walked up to the gate of Buckingham Place and said to the guard,

“ I am Will Rogers and I have come to see the King” The guards drew themselves up haughtily and Rogers continued,

“You tell him that when the Prince of Wales was out my way, he told me to look up his old man sometime, so here I am”. Rogers was admitted, had a long chat with the king and stayed to lunch.

xxxx

An ambitious youth once sent his first manuscript to Dumas, asking the distinguished novelist to become his collaborator. the latter was astounded at the impertinence, angrily seizing his pen he wrote, “How dare you, sir, yoke together a noble horse and a contemptible ass?”

 

he received the following reply:

“How dare you, sir, call me a horse?”

His anger vanished and he wrote,

“Send on your manuscripts, my friend; I gladly accept your proposition.”

 

xxx

Clyde Fitch tells the following story of Whistler. The artist was in Paris at the time of Coronation of King Edward, and at a reception one evening a duchess said to him:

I believe you know King Edward, Mr Whistler.”

“No, Madame, replied Whistler.

“Why  ,that is odd, she murmured, “ I met the King at a dinner party last year, and he said that he knew you”

“Oh, said the painter, that was just his brag”.

 

–Subham–

ஓரெழுத்து தமிழ் சொற்கள் (Post No.3400)

Compiled by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 10-30 AM

 

Post No.3400

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் பல உள்ளன. ரங்கூனிலிருந்து வெளியான தமிழ்ப் பிரகாசிகை நூலிலுள்ள மூன்று பக்கங்களை இங்கு வெளியிடுகிறேன்.

 

 

 

-SUBHAM–

 

திருவாசக வெளியீடு: டாக்டர் போப் தரும் அதிசயத் தகவல்! (Post No.3399)

Written by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 8-43 AM

 

Post No.3399

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு டாக்டர் ஜி.யூ. போப். வெளிநாட்டினராகப் பிறந்தும், கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு வாழ்நாளை அர்ப்பணித்தும் கூட திருவாசகத்தாலும் தமிழாலும் ஈர்க்கப்பட்டு அதில் கரைந்தவர் அவர். மாக்ஸ்முல்லர் எப்படி சம்ஸ்கிருதக் கடலில் சங்கமித்தாரோ அதே போல தமிழ்க் கடலில் சங்கமித்த்வர் ரெவரெண்ட் ஜி.யூ. போப் (Rev G U Pope). இருவரும் வேறு உள்நோக்கத்தோடு இந்துமதக் கடல் பார்க்க வந்தனர். அதிலுள்ள முத்துக்களையும் கொஞ்சம் எடுப்போமே என்று கடலில் நுழைந்தவர்கள் கரைந்து விட்டனர். ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொன்ன உப்பு பொம்மை கதைதான் நினைவுக்கு வருகிறது. கடலின் ஆழத்தைக் காணப் புறப்பட்ட உப்பு பொம்மை, சில அடி ஆழத்துக்குச் செல்வதற்குள் கரைந்து விட்டது. யாரே இந்து மதக் கடலின் ஆழத்தை அறியவல்லார்?

 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு. போப், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். அவர் 1900 ஆம் ஆண்டில் திருவாசகப் புத்தகத்ததை எப்படி வெளியிட்டார் என்ற அதிசயச் செய்தியை அவரே அப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார். இதோ அந்த முன்னுரை:–

“இன்று என்னுடைய எண்பதாவது பிறந்த தினம். நான் எழுதி வைத்த குறிப்புகளைப் பார்க்கப் போனபோது நான் 1837 ஆம் ஆண்டில் தமிழ் கற்கத் துவங்கினேன் என்பது தெரிந்தது. நீண்டகாலத்துக்கு தமிழ் அன்னையின் பக்தனாக இருந்தேன்; அது முடிவுக்கு வருகிறது என்றே தோன்றுகிறது. என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான இலக்கியப் படைப்பை சமர்ப்பணம் செய்து இப்பணியை முடிக்கும்போது மிகவும் உணர்ச்சி வசமாகி விட்டேன்.

 

பல ஆண்டுகளுக்கு முன், நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அப்போது இப்படி ஒரு புத்தகம் வெளியிடும் திட்டம் என் மனதில் இல்லை. ஒரு நாள் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன், என் கல்லூரித் தலைவருடன் (பாலிலோல் கல்லூரி மாஸ்டர்) நடந்து கொண்டிருந்தேன். எக்களுடைய சம்பாஷனை திடீரென்று தமிழ் வரலாறு, இலக்கியம், தத்துவம் பற்றித் திரும்பியது. நீண்ட உரையாடலின் நடுவே ஒரு இடைவெளி நேரிட்டது. என்னுடைய மாஸ்டர் எப்போதுமே வேகமாகப் பேசக்கூடியவர். திடீரென்று ‘அதை நீ அச்சிட்டே ஆகவேண்டும்” என்றார்.

 

நான் 80 வயதுக்காரன் என்ன பதில் சொல்லுவானோ அதையே அவரிடம் சொன்னேன்: மாஸ்டர் நான் என்ன சாகாவரம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா? இதை வெளியிடத் துவங்கினால் அதை முடிக்க நீண்ட காலம் ஆகும். இப்போது அவர் முகத்தை பார்த்தேன்; அவர் என்னை நோக்கித் திரும்பினார். அவருடைய வெண்தாடி மீதும் அன்பே உருவான முகத்தின் மீதும் நிலவொளி பட்டொளி வீசிப் பரவியது. அவர் அன்போடு என் தோளின் மீது கைகளைப் போட்டார் — ஒரு நீண்ட பணியை எடுத்துக்கொண்டுவிட்டால் அது முடியும் வரை நீ மரணம் அடைய மாட்டாய். இது நீண்டகாலம் வாழவுள்ள ஒரு வழி! அது நிறைவடையும் வரைக்கும் நீ வாழ்வாய்” என்று சொல்லி முடித்தார்.

இதை அவர் சொன்னபோது எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் சொன்ன சொற்கள் மட்டும் என் மனதில் அசரீரி போல எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நான் களைபுற்றபோதெல்லாம் அந்த ஆரூடச் சொற்கள் எனக்கு உத்வேகம் ஊட்டின. அவர் இப் பூவுலகில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால் அவர் சொன்ன காரியம் நிறைவேறிவிட்டது.

 

அந்த அன்பான ,சிறந்த, பொறுமை மிக்க பெஞ்சமின் ஜோவெட் அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகிறேன். இது எல்லாம் அவருக்கே சமர்ப்பணம். என்னுடைய நன்றியையும் மரியாதையையும் தெரிவித்து வணங்குகிறேன்.

 

குற்றம் குறையுள்ள இந்தப் புத்தகத்துக்கு என்னுடைய, அவருடைய, தலைவன் (GOD) ஆசி கூறட்டும்”.

 

பாலிலொல் கல்லூரி

ஏப்ரல் 24, 1900                                                   ஜி யூ போப்

பார்ப்பானுக்கு அழகு எது? (Post No.3398)

Written by S NAGARAJAN

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 5-45 AM

 

Post No.3398

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 14

 

இந்தக் கட்டூரையில் அகநானூற்றில்ல் வரும் 24 ஆம் பாடலில் ஒரு அந்தணன் செய்ய வேண்டியது யாகமே என்று குறிப்பிடப்படும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 

 

 பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

 

                       ச.நாகராஜன்

 

அகநானூறு

அந்தணருக்குத் தொழில் எது என அகநானூறில் ஒரு புலவர் தரும் விளக்கம் 24ஆம் பாடலில் வருகிறது.

பாடலைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

இவர் வேளாள குலத்தைச் சேர்ந்த பெரும் புலவர். இவரது மகன் தான் பெரும் புகழ் வாய்ந்த சீத்தலைச் சாத்தனார்.

யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடலை புறநானூறு (166ஆம் பாடல்) கட்டுரையில் (கட்டுரை எண் 5) பார்த்தோம்.

கீழே உள்ள பாடலில் புலவர் பிரான், யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கையே தொழிலாகும் என்று இழித்துக் கூறுகிறார்.

வேளாண்  மரபினரான இவர் அந்தணர் மீதும் வேதம் வகுக்கும் யாகங்களின் மீதும் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை இந்தப் பாடல் மூலம் அறிய  முடிகிறது. தலைவன் சொன்னதாகவோ அல்லது படைக்களத்தில் பாசறையில் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகவோ இந்தப் பாடல் அமைகிறது.

பாடல் இதோ:

வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த                            

வளை களைந்து ஒழிந்த கொழுத்தின் அன்ன                 

தலை பிணி அவிழா கரி முகப் பகன்றை                      

சிதரல் அம் துவலை தூவலின்  மலரும்                     

தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்                    

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை                   

விசும்பு உரிவது போல வியல் இடத்து ஒழுகி                      

மங்குல் மா மழை தன் புலம் படரும்                            

பனி இருங்கங்குலும் தமியன் நீந்தி                                  

தம் ஊரோளே நன்னுதல் யாமே                               

கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து                           

  நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுச்                            

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி                             

கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு

தழங்கு குரல்  முரசமொடு முழங்கும் யாமத்து

கழித்து உறை செறியா வாளுடை எறுழத் தோள்                    

இரவு துயில் மடிந்த தானை                                          

உரவுச் சின வேந்தன் பாசறையேமே

 

வேளாப் பார்ப்பான் என்றால் தனக்கு விதிக்கப்பட்ட நியமங்களைச் சரிவரச் செய்யாத அந்தணன் என்று பொருள் வளை அரம் துமித்த என்றால் நன்கு  கூர்மையாக்கப்பட்ட அரம் என்று பொருள் வளை களைந்து என்றால் அந்த அரத்தினால் வளைகளைக் களைந்து சங்கை அறுத்தல் என்று பொருள்.

         “இது தை மாதத்தின் கடை நாள் அன்று குளிர்ந்த மழைத் துளிகள் விழும் போது துளிர்க்கும் பகன்றை அரு,ம்புகளானவை, யாகம் செய்யாத பார்ப்பான் சங்கு அறுத்து அதில் மிகுதியாக இருக்கும் சங்கின் மேல் பகுதிகளைப் போல  (ஒழிந்த கொழுந்தின் அன்ன தலை) இருக்கிறது” என்கிறார் புலவர்.

வேளாப் பார்ப்பான் எனப்படும் யாகம் செய்யாத அந்தணன் சங்கை அறுக்கும் தொழிலைச் செய்வது இங்கு இழுக்காகக் குறிப்பிடப்படுகிறது.

பெரிய கருத்த  மழை மேகங்கள் வானமே உதிர்ந்தாற் போல மழை பெய்விக்க தெற்கே பனி இருளில் நன்னுதல் கொண்ட  அவள் மட்டும் நகரில் தனியே இருப்பாளே நான் இங்கு போர்க்களத்திலுள்ளேன். சினம் கொண்ட  மன்னன் உறையிலிருந்து எடுத்த வாள் உள்ளே போடப்படாமல் உள்ளது என்று அடுத்துக் கூறும் கவிஞர்  பாடலில் போர் நடைபெறும் களத்தின் கடுமையை விரிவாக விளக்குகிறார்.

இந்தப் பாடலைப் பாடியவர் வேதம் ஓதுதலும் அது வகுத்த விதிமுறைப்படி யாகம் செய்தலுமே அந்தணரின் கடமை என்பதைத் தெளிவாக்குகிறார்!

அகநானூறு பாடல்களை இயற்றியுள்ள புலவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. தமிழால் இணைந்த ஓர் குல மக்கள் இவர்கள்.

அந்தணர், அரசர், எயினர், இடையர்,கூத்தர், தட்டார்,வணிகர், வேளாளர் ஆகியோர் தமிழின் மீதுள்ள காதலால் பல பொருள் பற்றிச் சிறக்கப் பாடியுள்ளனர். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இலங்கி இருந்தமையை இது காட்டுகிறது.

 

சங்க காலத்தில் அந்தணர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்ததும், வாழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது.

அந்தணர்கள் என்று எடுத்துக் கொண்டால்,

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்,

கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

கபிலர்,

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்,

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்,

நக்கீரனார்,

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,

மதுரை இளங்கௌசிகனார்,

மதுரைக் கணக்காயனார்,

மதுரைக் கௌணியன் தத்தனார்,

மாமூலனார் ஆகிய புலவர்களை அகநானூற்றுப் புலவர்களாகக் குறிப்பிடலாம். இவர்களின் பாடல்கள் அகநானூறில் இடம் பெற்றுள்ளன. படித்து மகிழலாம்.

இவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பைப் பற்றியும் தனியே தான் எழுத வேண்டும்!

******