நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள் (Post No.3170)

rudraksah-mala-with-gold

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 September 2016

Time uploaded in London:5-42 AM

Post No.3170

Pictures are taken from various sources; thanks.

 

 

 

ருத்ராக்ஷ மஹிமை

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 stars4

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் தனித்தனியே உண்டு.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான அதிதேவதையும் உண்டு.

அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இதை அணிபவர்களுக்கான பலன்கள் மகத்தானவை.

 

எண்   நட்சத்திரம்         அதி தேவதை  அணிய வேண்டிய

                                          ருத்ராக்ஷம்

  • அசுவனி கேது           நவ முகம்
  • பரணி சுக்ரன்         ஷண்முகம்
  • கார்த்திகை சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ரோஹிணி சந்திரன்  த்வி முகம்
  • மிருகசீர்ஷம் செவ்வாய் த்ரி முகம்
  • திருவாதிரை ராகு       அஷ்ட முகம்
  • புனர்பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
  • பூசம் சனி          சப்த முகம்
  • ஆயில்யம் புதன்         சதுர் முகம்
  • மகம் கேது        நவ முகம்
  • பூரம் சுக்ரன்       ஷண்முகம்
  • உத்தரம் சூர்யன்      ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ஹஸ்தம் சந்திரன்    த்வி முகம்
  • சித்திரை செவ்வாய்  த்ரி முகம்
  • சுவாதி ராகு        அஷ்ட முகம்
  • விசாகம் ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • அனுஷ்ம் சனி          சப்த முகம்
  • கேட்டை புதன்          சதுர் முகம்
  • மூலம் கேது          நவ முகம்
  • பூராடம் சுகரன்         ஷண்முகம்
  • உத்தராடம் சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • திருவோணம் சந்திரன்    த்வி முகம்
  • அவிட்டம் செவ்வாய்   த்ரி முகம்
  • சதயம் ராகு         அஷ்ட முகம்
  • பூரட்டாதி ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • உத்தரட்டாதி சனி          சப்த முகம்
  • ரேவதி புதன்         சதுர் முகம்

 

ஒவ்வொரு முகத்திற்கான பலன்களையும் நமது நூல்கள் தந்துள்ளன. அவற்றை இனி காண்போம்.

*********

Music Mystery in Asvamedha Yajna! (Post No.3169)

aaroganam

Compiled  by London swaminathan

Date: 19 September 2016

Time uploaded in London:15-15

Post No.3169

Pictures are taken from various sources; thanks.

 

“Several pentatonic and hexatonic series of notes (Taanas) of music were named after Vedic rites. For example

Ni-dh-pa-ma-ga-ri- was called Agnistoma

Ri-nidha-pa-ma-ga- was known as Asvamedha

And

Ma-ga-sa-ni-dha-pa was called Mahaavrata

This musical aspect of the rites needs further investigation”. (See Matanga’s Brhaddesi. Also see Bharata Muni’s Natyasastra (Ghosh 1967)

 

–from Subhash Kak’s ‘The Asvamedha’

Xxx

saregamapadhani

Astronomy in Asvamedha Yajna

The Asvamedha rite is the ritual sacrifice of the Sun (time) to regenerate it. The narrative touches upon the inner and outer Asvas through the symbolism of the horse.

The Satapata Brahmana says that the year begins with full moon of Phalguna (SB 6-2-2-18), which is when the Asvamedha was performed. On the other hand, in the Mahabharata the performance culminates on the full moon of Caitra(Mbh 14-76).The beginning of the year used in the M Bh is different from the one in the SB.

 

The precession of the earth causes the month to shift with respect to seasons at a rate of 2000 years per month, therefore a time gap of about 2000 years exists between its descriptions in the SB and in the MBh. The word ‘precession’ is from the fact that that this circuit runs opposite to that of the normal sequence, so in the precessional shift, Caitra precedes Phalguna. Thus the M BH appears to remember a tradition that was earlier than that of the SB.

 

Recent estimates of the date of the SB using new hydrological evidence are relevant o his discussion. Briefly, it is now believed that the Sarsvati river dried up around 1900 BCE due to a massive earthquake that caused its tributary Yamuna to be captured by the Ganga. Since the Rig Veda lauds the Sarasvati as the great River that flows from the mountain to the sea,this Veda should be prior to the date of 1900 BCE. According to other authorities, the river stopped flowing all the way to the sea a thousand years earlier, which is why the Harappan sites are not all the way down to the sea, and 1900 BCE represents a further desiccation which led to a collapse of the Harappan economy.

The astronomical references in the SB about the Krittikas never swerving from the east and the Saptarishis rising from the north correspond to this general time period. In a new study Achar argues that these observations indicate around 3000 BCE. The SB itself recorded old tradition, so its own compositional date could be several centuries later.

precession_animation_small_new

Earth’s precession makes the seasons shift by a nakshatra every thousand years.

Asvini- 200 BCE

Bharani – 1200 BCE

Krittika – 2200

Rohihi – 3200

Mrgasiras – 4200

The lists in the brahmanas begin with the Krttikas indicates that it was drawn up in the third millennium BCE. The legend of cutting off of Prajapatis head indicates a time when the year began with Mrgasirsa in the fifth millennium BCE.

The SB story of the marriage between the seven sages, the stars of Ursa Major, and the Krittikas is elaborated in the Puranas where it is stated that the Rishis remain for a hundred years in each nakshatra. In other words, during the earliest times in India there existed centennial calendar with a cycle of 2700 years. Tis Saptarishi calendar is still used in certain parts of India even today.

 

Its current beginning is taken to be 3076 BCE., but the notices by the Greek historians Pliny and Arrian suggest that, during the Mauryan times, this calendar was taken to begin in 6676 BCE. All this indicates that there was a very ancient tradition of calendars in India.

 

The holding of the Asvamedha in Caitra points to this rite having been celebrated in the 3rd or 4th Millennium BCE.

–from Subhash Kak’s ‘The Asvamedha’

f7wobble

–Subham–

அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168)

krishna_advising_on_the_horse_sacrifice

Written  by London swaminathan

Date: 19 September 2016

Time uploaded in London:9-19 AM

Post No.3168

Pictures are taken from various sources; thanks.

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 2 

 

 

அஸ்வமேத யக்ஞத்தில், — ஓராண்டுக் காலம் பல நாடுகளுக்குச் சென்றுவந்த குதிரையைக் கழுத்தை நெறித்துக் கொன்றார்கள் — அந்தக் குதிரையுடன் மஹாராணி இரவு முழுவதும் கணவன் – மனைவி போல  நெருங்கிப் படுத்திருக்க வேண்டும் —  அப்பொழுது ஆபாச வசனங்களை மற்ற பெண்கள் சொல்ல வேண்டும் — என்று மட்டும் எழுதி அந்த யக்ஞத்தைக் கொச்சைப்படுத்தும் வெளிநாட்டுப் படை எடுப்பா ள ர்களும் அவர்களின் உள்நாட்டுத் திராவிட அடிவருடிகளும் அந்த யாகம் பற்றிய முழு விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் புரியவில்லை; கேட்டால் நமக்கும் புரியாது. அவர்கள் ஆபாச வசனங்களை  மட்டும் பரிமாறிக் கொள்ளவில்லை. பல விடுகதைகள்,  புதிர்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; அதில் ஒரு குஷ்ட ரோகியும் பங்கு பெற்றார். இதற்கெல்லாம் என்ன பொருள் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.

 

அஸ்வமேதத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குதிரை என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிரௌத சூத்திரங்கள் சொல்லுகின்றன. நெற்றியில் கருப்புப் பொட்டுடன் இருக்கும் வெள்ளைக் குதிரை அல்லது பழுப்பு குதிரையாக இருக்கலாம். ஆது ஆயிரம் பசு மாடுகளின் விலைக்குச் சமமானதக இருக்க வேண்டும் என்றும் சொல்லும். எல்லா குதிரைகளையும், பந்தயத்தில் தோற்கடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அது சூரியனின் அடையாளம். அதன் மீது இதுவரை யாரும் ஏறி சவாரி செய்திருக்கக்கூடாது!

இந்தக் குதிரைக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை எல்லாம் பார்த்தால் அப்படி ஒரு குதிரை கிடைக்குமா என்று வியப்போம்!

 

அஸ்வமேத யக்ஞம் நான்கு புரோகிதர்களால் செய்யப்படும். அரசனின் நான்கு மனைவியர் கூடவே இருக்க வேண்டும். குதிரையைத் தொடர்ந்து 400 வீரர்கள் செல்ல வேண்டும். அரசனுடன் எட்டு ஆலோசகர்கள் செல்ல வேண்டும் . எல்லாம் நான்கு என்ற எண்ணின் மடங்குகள்! ஏன்?

 

நான்கு புரோகிதர்களும் ஒரு வாரத்துக்கு முன் சந்திப்பர். அப்பொழுது அரசன் கொடுத்த அரிசிக் கஞ்சியை சாப்பிடுவர். அரசன் ஒவ்வொரு புரோகிதருக்கும் 1000 பசுமாடுகளும் தங்கமும் தருவான். அவர்கள் நால்வரும் அரசனின் கழுத்தில் தங்கச் சங்கிலி ஒன்றைக்கட்டுவர். குதிரையைத் தர்பைப் புல்லைக் கொண்டு சுத்தம் செய்வர்.

(இன்றும்கூட பிராமணர்கள் தர்பைப் புல்லை வைத்துதான் சுத்தப்படுத்துவார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி பின்பற்றப்படும் ஒரு வழக்கம் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை!).

 

அஸ்வமேதக் குதிரை ஓராண்டுக்கு அது இஷ்டப்பட்ட இடங்களுக்கு எல்லாம் செல்லும்’ அந்த நாடுகள் எல்லாம் அரசனின் தலைமையை ஏற்கவேண்டும். அல்லது அவனுடன் சண்டை போட்டு வெல்ல வேண்டும்.

அச்வமேதக் குதிரையைச் சுற்றி 100 குதிரைகள் செல்ல வேண்டும்.

அந்தப் பிரதான குதிரைக்கு ஒவ்வொரு ராணியும் 1000 முத்துகள் உடைய மாலையைச் சூட்டவேண்டும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லும். 4X1000 = 4000 முத்துக்கள்.

 horse-sacrifice2

எனது கருத்து:

இந்த முத்துகளும், யாகத்தில் கொடுக்கப்பட்ட தங்கமும் எங்கிருந்து வந்தன? தென் கடல் முத்தாக இருந்தால் வேத காலத்திலேயே அவர்களுக்கு தென்னாட்டு உறவு இருந்தது தெரிகிறது. மற்ற நாட்டு முத்தானால் அவர்களுக்கு கடல் சார் வணிக உறவுகள் இருந்தது நிரூபணமாகிறது. சில பரதேசிகள், வேத கால இந்துக்களுக்கு “கடல்” என்றால் என்ன என்று தெரியாது என்று எழுதின!

 

 

யக்ஞத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பிட்ட எண்ணுடைய காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், 13 ஆசீர்வாதங்கள், 13 கம்பங்கள் என்று பல எண்கள் குறிப்பிடப்படுகின்றன; ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பாட்டாலும் இது மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட யாகம் என்பதை அறிய முடிகிறது.

எனது கருத்துகள்:

ரிக் வேதத்திலேயே மூன்று மண்டலங்களில் குறிப்பிடப்படும் அஸ்வமேதம், வேத கால மக்கள் கணிதத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும் அது மட்டுமல்ல. தங்கமும் ஆயிரக்கணக்கான பசுமாடுகளும் அவர்களுடைய செல்வ வளத்தை காட்டும். நூற்றுக் கணக்கான குதிரைகள் பயன்படுதப்பட்டன. அரிசிச் சோறு பயன்படுத்தப்பட்டதால் அவர்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.

 

வேத காலத்தில் அரசர்கள் இருந்ததும் அவர்கள் பெரிய யாகங்களை நடத்தி தனது தலைமையை நிலைநாட்டியதும் இந்த யக்ஞத்தால் புலனாகிறது. ஆரியர்களை நாகரீகம் தெரியாத நாடோடிகள் என்று எழுதிய பரதேசிகளுக்கு இது செமை அடி கொடுக்கிறது. ஒரு பக்கம் அஸ்வமேதத்தைக் குறை கூறி எழுத பல உண்மைகளை மறைத்து அரைகுறை விஷயங்களை எழுதியதும் அம்பலம் ஏறுகிறது.

(பரதேசி = வெளிநாட்டான்)

உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்ற யக்ஞங்கள் இல்லை. ஆனால் இமயம் முதல் குமரி வரை இந்த யாக யக்ஞங்கள் இருந்ததை புறநானூற்றுப் பாடல்கள் உரைக்கின்றன. இவ்வளவு பெரிய பரப்பில் இவ்வளவு பெரிய நாகரீகம்–கலாசாரம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. இன்றைய பரப்பளவில் பாரதம், உலகில் ஏழாவது பெரிய நாடு. 2000 ஆண்டுகளுக்கு முன்னரோ உலகில் நாம்தான் “ஒரே கலாசாரம்” உள்ள பெரிய நாடு.

 

யக்ஞத்தில் பயன்படுத்தப்பட்ட மிருகங்களை எண்ணிப் பார்த்தால் 609 என்று வருகிறது ஆனால் அவை அனைத்தும் இறுதியில் உயிருடன் விடப்பட்டன என்றே தெரிகிற து அகநானூற்றில் கூட, வெளியே உலாவரும்  வேள்விக்குண்ட ஆமை ஒன்றை உவமையாகக் கூறுகின்றார் ஒரு புலவர்.

 

மேலும் இந்த யக்ஞம் பற்றி விரிவாகப் பேசும் சதபதப் பிராமணம் என்னும் நூலே உயிர்ப்பலியை எதிர்த்துப் பேசுகிறது. யாகத்தில் மாவினால் செய்யப்பட்ட உருவங்களைப் போடுவதே சிறந்தது என்றும் செப்புகிறது. அடையாளபூர்வமாக ஓரிரு மிருகங்கள் பலியிடப்பட்டதாகவும் ஊகிக்க முடிகிறது.

 

இன்று,  மதத்தின் பெயரால் பலியிடப்படும் மனிதர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், மற்றும் உணவுக்காக (சாப்பிடுவதற்காக) நாள் தோறும் கொல்லப்படும் கோடிக்கணக்கான உயிரினங்களை ஒப்பிடுகையில் இது ஆற்று மணல் துகள் அளவே என்று சொல்லலாம்.  ஏனெனில் அஸ்வமேதம் செய்த  அரசர்களின் எண்ணிக்கை இந்திய வரலாற்றில் மிகக்குறைவு. சுமார் 30 பேர்தான் . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதற்கும் குறைவே. ஆகையால் உலகில் யாரும் இது பற்றிப் பேச தார்மீக உரிமை இல்லை.

aswamedha

குஷ்டரோகி!

 

யாகத்தின் முடிவில் எல்லோரும் ஊர்வலமாகச் சென்று ஒரு குளத்தில் குளிக்க வேண்டும். வருண பகவானுக்காக ஒரு குஷ்ட ரோகியின் தலையில் வெண்ணை அபிஷேகம் செய்யப்படும். அந்த மனிதனை 1000 பசுக்கள் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டும் என்று சாங்க்யாயன ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது.அவன் அத்ரி குலத்தைச் சேர்ந்த பிராமண குஷ்ட ரோகியாக இருக்க வேண்டும்! ஏனெனில் வருண பகவான் குஷ்டரோகி வடிவம் எடுக்கிறாராம். அவனை ஆற்றில், வாய்க்குள் நீர் புகும் வரை, முழ்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பிவிடுவர். பின்னர் அதே இடத்தில் எல்லோரும் குளித்துவிட்டு புத்தாடை அணிவர்.

 

சிறைக்கதிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களையும் குளிக்கச் செய்து விடுதலை செய்துவிடுவார்கள்.

 

மஹாபாரதம், ராமாயணம் முதலிய சம்ஸ்கிருத நூல்களில் அஸ்வமேதம் பற்றிப் பல செய்திகள் உள்ளன.

 

வள்ளுவனும் மனுவும்

 

அவி சொரிந்  தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து ண்ணாமை நன்று (குறள் 259)

 

தீயில் அவியைப் போட்டு ஆயிரம் வேள்விகளைச் செய்வதைப் பார்க்கிலும் ஒன்றன் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருப்பது மேலானது.

அவி= அரிசிச் சோறு+நெய்

 

இது மனு ஸ்மிருதியின் எதிரொலி; அவர் கூறியதையே வள்ளுவரும் வேறு விதமாகக் கூறுகிறார் (மனு. 5-53)

“ஓராண்டுக்கு ஒரு அஸ்வமேத யக்ஞம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு நூறு அஸ்வமேதம் செய்பவருக்கு என்ன பலன் கிடைக்குமோ அது ஒருவன் புலால் உணவைச் சாப்பிடாததால் கிடைக்கும்.”

 

100 அஸ்வமேதம் செய்தால் அவர்களுக்கு இந்திரன் பதவி கிடைக்கும் என்றும் நமது சாத்திரங்கள் சொல்லும். அந்த அளவுக்குப் பெருமை பொருந்தியது மாமிசம் உண்ணாமை!

 

Books used:-

 

The Asvamedha – by Subhas Kak; 2002

 

The Vedic horse sacrifice –  by Stephen Fuchs

 

Xxx

 

My Old Article on the same subject

 

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London

No.1255; Dated 27th August 2014.

 

 

–சுபம்–

மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! – 2 (Post No.3167)

theresa-oz

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டுத் தொடரவும். 

Written by S NAGARAJAN

Date: 19 September 2016

Time uploaded in London: 6-54 AM

Post No.3167

Pictures are taken from various sources; thanks.

 

 

தெரஸா நடத்திய இல்லங்களுக்கு நூறு நாடுகளிலிருந்து எழைகளும் நோயாளிகளும் புகலிடம் கேட்டு வந்தனர்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் தங்கள் நோய்களைத் தீர்க்க ஒரு டாக்டரை வேண்டி வந்தவர்கள். இதர ஒரு பங்கினர் இறக்கும் தருவாயிலிருந்த தங்களுக்கு ஆதரவு வேண்டி வந்தவர்கள்.

 

ஆய்வின் படி இங்கு வருகை புரிந்த டாக்டர்கள் சுகாதாரமற்ற நிலை இல்லங்களில் இருப்பதைக் கண்டனர். இங்கு வாழவே தகுதியில்லாதபடியான சூழ்நிலையும் இருந்தது. அவர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் மிகுந்த குறைபாடு இருந்தது. உணவு இல்லை, வலியைக் குறைக்கும் நிவாரண மாத்திரைகள் இல்லை.

இவற்றை வாங்கவோ நிதிக்குக் குறைச்சலே இல்லை. ஏனெனில் லட்சோப லட்சம் டாலர்கள் இந்த இல்லங்களை நடத்துவதற்கென வந்து குவிந்து கொண்டிருந்தது!

அறக்கட்டளைகள் நிதியைத் திரட்டிக் கொண்டே இருந்தன.

 

மதர் தெரஸா தன் நோய்க்கான சிகிச்சைக்கு நவீன சிகிச்சையை அமெரிக்காவில் பெற்றார். ஆனால் இவர்களோ…!

மூன்று ஆய்வாளர்களும் ஆவணங்களில் பழைய ரிகார்டுகளைத் தோண்டி எடுத்தனர். அதில் ஒரு பிரதான விஷய்ம் அவர் 1968ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிரப்ல பி.பி.சி நிலையத்தைச் சேர்ந்த மால்கம் மகரிட்ஜுடனான (Malcom Muggeridge) சந்திப்பு..

mother-teresa-souvenir-sheet

மால்கம் மகரிட்ஜ் அபார்ஷன் பற்றி கத்தோலிக்கர்களின் தீவிர கொள்கையைக் கொண்டவர். அபார்ஷன் கூடவே கூடாது என்பது அவரது தீவிரமான  கொள்கை. இதை மதர் தெரஸாவும் பிரதிபலித்ததை அவர் சந்தோஷ்மாக ஏற்றுக் கொண்டார்.

ஆக மகரிட்ஜ் தன் கொள்கைக்கு ஆதரவாளரான  மதர் தெரஸாவை முன்னிலைப் படுத்த – ப்ரொஜெக்ட் செய்ய கங்கணம் பூண்டார்.

1969இல் அவர் மதர் தெரஸாவைப் பற்றிய ஒரு படத்தை எடுத்தார். அதில் தான் மதர் தெரஸாவின் முதல் போட்டோகிராபிக் அற்புதம் பதிவு செய்யப்பட்டது.

இதை கோடக் நிறுவனம் சந்தைப்படுத்தியது.

மகரிட்ஜின் மீடியா ப்ரொஜெக் ஷன் வெற்றிகரமானது!

 

தெரஸா மறைந்த பிறகு ஒரு விசேஷ சலுகையைப் போல அவரை ‘beadutification’  செய்வதற்கான குறைந்த பட்ச காலமான ஐந்து ஆண்டுகளை அது விலக்கியது.

ஆய்வு கண்டுபிடித்த ஒரு மிராகிள் பற்றிய விவரம் சுவையானது.

 

மோனிகா பெஸ்ரா (Monica Besra) என்பவருக்கு கடுமையான அடி வயிற்று வலி இருந்தது. மதர் தெரஸாவினால் “ஆசீர்வதிக்கப்பட்ட”  ஒரு மெடால்லியன் (Medallion) ரஅவர் அடி வயிற்றில் வைக்கப்பட்டது.

அவ்வளவு தான், வலி போயே போச்சு!

ஆய்வாளர் லாரிவீ கூறுகிறார்: “ மோனிகாவின் டாக்டர்கள் இதை வேறு விதமாக (அற்புதம் இல்லை என்று) கருதுகிறார்கள். அவர் Ovarian cyst மற்றும் tuberculosis  வியாதியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அதற்கான உரிய மருந்துகள் தரப்பட்டன. அந்த மருந்துகளினால் தான் அவர் குண்மானார் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.”

ஆனால் வாடிகன் வேறு விதமான முடிவை ஏடுத்தது. அவரது அற்புதத்தால் தான் மோனிகா குணம்டைந்தார் என்று அது “அறிவித்தது.”.

லாரிவீ தன் ஆய்வின் முடிவை ஜாக்கிரதையாக்வே முடிக்கிறார்.

 

theres-satmp

ஒரு வேளை தெரஸாவின் எல்லையற்ற புகழும் ஆற்றலும் நோயாளியிடம் ஒரு பாஸிடிவான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமானால் அதற்காக நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார் அவர்.

இது தவிர பின்னால் வந்த தகவல்கள் மதர் தெரஸா ஏழைகளை ஆதரித்து நோயாளிகளைக் குணப்படுத்த முன்வந்ததன் அடிப்படை மதமாற்றமே, இதை அவரே முன்னிலைப் படுத்தியுள்ளார் என்று அந்தத் தகவல்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றன..

எது எப்படியோ மதர் தெரஸா புனிதராக்கப்பட்டு விட்டார்.

 

இப்படி புனிதராக்கும் ஒரு வழக்கம் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே உண்டு. ஹிந்து மதத்தில் நிச்சயமாக இல்லை.

ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரிலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் வாழ்ந்த வள்ளலார் வரை அற்புதங்களை நிகழ்த்துவது என்பது ஹிந்து ஞானிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோருக்கு சர்வ சாதாரணம். ஹிந்துமதத்தில் சித்திகள் பெரிது படுத்தப்படுவதில்லை. இது சகஜம், இதற்கும அப்பாற்ப்ட்டு இறை நிலைக்கு உயர வேண்டும் என்பதே ஹிந்து மதம் சுட்டிக் காட்டும் இறைநெறி.

சரி, மதர் தெரஸா ஒரு புனிதர் தான், கிறிஸ்தவர்களுக்கு – ஆய்வாளர்கள் அப்படி இல்லை என்று சொன்ன போதிலும்!

இப்போது கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!

– முற்றும்

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு, 2-3-13 இதழ்

Maamsam and Hamsam: Sanskrit Wordplay!(Post No.3166)

 

meat

Compiled  by London swaminathan

Date: 18 September 2016

Time uploaded in London:16-34

Post No.3166

Pictures are taken from various sources; thanks.

 

Sanskrit language is very rich with lot of riddles and puzzles. Manu in his smrti (Law book) deals with one or two things. He explains why MEAT (maamsam) is called Meat. He also tells us why NARAYANA is called Narayana. This shows his interest in languages and Linguistics. Elsewhere others explain the significance of the word HAMSAM (swan) and why great saints are called PARAMAHAMSA. Let us look at these interesting explanations: –

 

He whose “MEAT” in this world do I eat will in the other world “ME EAT”. Wise men say that this is why meat is called meat – Manu 5-55

The translation of this much quoted verse is based on  that of Charles Lanman, who attempted to recapture the Sanskrit pun: Meat is called Maamsa because he ( sa) eats  me (Maam) in the other world if I eat him now.

Sa = he

Maam = me

xxxx

swan

 

HAMSA (swan)

A similar pun is made in the Vedantic  texts on the metaphor for the soul, the swan (hamsa), said to express the identity of the individual soul (aatman) and the world-soul (brahman): I AM HE (aham sa)

Aham = I (jeevaatman)

Sa = he (Paramaatman)

One who realised this truth is Parama Hamasa as in Sri Ramakrishna Paramahamsa and Paramahamsa Yogananda.

xxx

 

narayana

Meaning of Narayana

Narayana was the creator of Brahma, who, according to Manu, was so called beacause the wters (nara; Neer in Tamil) were his first ayana or place of motion. Water is always used as plural in Sanskrit).

The name is found for the first time in the Satapata Brahmana. Narayana is another name of Vishnu.

 

Aapo naaraa iti proktaa apau vai narasuunava:

Taa yadasyaayanam puurvam tena naaraayanah smrutah

Manu 1-10

 

The waters are born of man, so it is said; indeed the waters are the children of the primordial. And since they were his resting place in ancient time, therefore he is traditionally known as Narayana. (Manu 1-10)

xxx

 

Following is from my article posted on Tamil or Sanskrit: Which is older? posted on 16 July 2014.

 

Is NEER a Tamil word or Sanskrit word?

Regarding Tamil words in Sanskrit:

No language is pure in the world. Our forefathers were NOT language fanatics. They freely used Sanskrit words in Sangam literature and later Tirukkural. In the same way Tamil words are in later classical Sanskrit. But I doubt about it in Vedic Sanskrit. I have shown that even great linguists like Suneet Kumar Chatterji are wrong to claim that ‘Neer’ (water) in Rig Veda is Tamil. I have shown that it is in the oldest Greek mythology (Nereids=Water Nymphs). When a word is found in other Indo European languages it is not counted as Dravidian even in etymological dictionaries. But old linguists misled many others and so ‘Neer’ is shown as Dravidian. I have also shown that Kapi and Tuki in the Bible are Sanskrit words. Please read my article “Sanskrit in The Bible”.

In this context, my pet theory is Tamil and Sanskrit originated from a common source on the Indian soil. This is what saints like Paranjothy Munivar and others believed 300 years ago. If we believe our Puranas and Tamil commentators, we accept that Agastya from the north came to South India and codified grammar for Tamil. He was sent by Shiva to balance the population (Please read my article “Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures”; posted on 2nd February 2013). Naturally Agastya would have done it on the basis of Sanskrit grammar. But even Shiva accepted Tamil as a separate language and entrusted the grammar work to great Agastya. Even Lord Shiva recognised the greatness and uniqueness of Tamil. Do we need any other certificate?

 

–Subham–

 

சூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்: கம்பன் தகவல் (Post No.3165)

anajaneyavijayawada

Written by London swaminathan

Date: 18 September 2016

Time uploaded in London:10-31 AM

Post No.3165

Pictures are taken from various sources; thanks.

 

அனுமனை– ஆஞ்சநேயனை — மாருதியை – சொல்லின் செல்வன் என்றும் மாபெரும் இலக்கண மேதை என்றும் அனைவரும் போற்றுவர்.

அனுமனை நினைத்தேலேயே சொல்வன்மை பெருகும் என்று சம்ஸ்கிருத துதி சொல்லும்:

 

புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

 

அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால்  இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.

 

கம்பன் சொல்கிறான்- இந்த சொல்வன்மைக்குக் காரணம் அவன் சூரியனிடம் இலக்கணம் படித்ததே என்று.

 

வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் அவனை “நவ வியாகரண பண்டிதன்” என்று போற்றுகிறது. கம்பன் அவனைப் போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது:–

 

 

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட

புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்

குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ

பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா

 

—அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:

ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை அணிந்த அனுமனைக் காணமுடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?

 

(அனுமன் தனது சுய ரூபத்தை காட்ட பேருருவம் எடுத்ததைக் கூறும் பாடலுக்கு அடுத்து வரும் பாடல் இது)

anjaneya-in-yaga-fire

Anjaneya is seen in Yajna Fire
நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்.

 

அனுமன் கற்ற நவ (9) வியாகரணம் என்ன என்பதை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சந்திர சேகர இந்திர சரஸ்வதி அவர்களின் சொற்களில் காண்போம்:-

 
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வியாகரணம் : வேதத்தின் வாய்
இலக்கண நூல்கள்
இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள்.

 

‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.
சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.
வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.
பர்த்ருஹரியின் “வாக்யபாதயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

–Subham–

மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! -1 (Post No.3164)

mother-teresa-indian-stamp

Written by S NAGARAJAN

Date: 18 September 2016

Time uploaded in London: 6-10 AM

Post No.3164

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்தக் கட்டுரையில் அடுத்து வரும் முதல் பாராவை கட்டுரை ஆரம்பத்திலும் முடிவிலும் படிக்க வேண்டும்! இது ஒரு அன்பு வேண்டுகோள்!

 

மதர் தெரஸாவைக் குறை சொல்வது நமது நோக்கமல்ல. ஏழைகளுக்கு உதவி செய்யும் ஒவ்வொருவரும் இறைவனின் சந்நிதானத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பவரே. ஹிந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவருக்கும் இதில் சிறிதளவும் ஐயமில்லை. இதை எழுதும் ஹிந்துவான எமக்கும் இதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

மீடியாக்கள் அடிக்கும் கூத்தைச் சற்று உற்று நோக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை!

ஆஹா, மதர் தெரஸா – நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா – கடைசி கடைசியாக புனிதர் ஆகி விட்டார்.

 

 

வாடிகனில் உள்ள போப் ‘மனமுவந்து” இதை அங்கீகாரம் செய்து அவரை ;லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் “புனிதராக” அறிவித்து விட்டார்!

மகிழ்ச்சி!

 

 

ஏழைகளுக்கு உதவி சிறிதளவே செய்தாலும் ஒருவர் போற்றப்பட வேண்டியவரே! அந்த வகையில் மகிழ்ச்ச்சி!!

ஆனால் உலகில் “ப்ரொஜெக்ட்” செய்யப்படும் விதத்தில் அவர் அந்த ப்ரொஜெக்ஷனுக்கு ஏற்புடையவரா?

இல்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஆய்வு இன்று எடுக்கப்பட்டதில்லை. 2013ஆம் ஆண்டு  மார்ச் மாதம் கனடிய பத்திரிக்கையான “Relegieuses”  என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒன்று.

பிரசுரமான போதே கடும் விமரிசனத்திற்கு உள்ளாகிய கட்டுரை இது.

 

theresa-1

அவரைப் பற்றி மூவர் ஆய்வை நடத்தினர். Sergi Larivee மற்றும் Genevieve Chenard றஆகிய  இருவர் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். சைக்கோஎஜுகேஷன் (Psychoeducation) பிரிவில் பணியாற்றுபவர்கள் இவர்கள். மூன்றாமவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் கல்விப் பிரிவில் வேலை பார்ப்பவர். பெயர் Carole Snechal.

 

சுருக்கமாக ஒரே வரியில் ஆய்வின் முடிவைச் சொல்ல வேண்டுமெனில் அன்னை தெரஸா “anything but a saint” – ‘புனிதரைத் த்விர வேறு என்ன வேண்டுமானாலும்” என்று சொல்லலாம்.

ஊடகங்களின் திட்டமிட்ட டியூனும் தீவிரமான பிரச்சாரமும் அவரை புனிதர் ஆக்கி விட்டன!(a creatuib if orchestrated and effective media campaign)

 

வாடிகன் அவரது மனிதப் பண்பு என்ற பக்கத்தை உன்னிப்பாகப் பார்க்கத் தவறி விட்டது என்கிறது ஆய்வு,

 

எல்லையிலாத் துன்பத்திற்கு ஆட்பட்டு அவரிடம் வந்த நோயாளிகளின் துன்பத்தை அவர் புகழ்வதிலேயே (gloryfying the suffering) குறியாக் இருந்தாரே தவிர அந்த நோயைப் போக்க அவர் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்கிறது ஆய்வு.

இந்த ஆய்வில் மூன்று ஆய்வாளர்களும் அன்னை தெரஸாவைப் பற்றி வெளிவந்த அனைத்து பிரசுரங்களையும் ஆவணங்களையும் முறையாக் ஆராய்ந்தனர் பின்னரே அவரது உள்ளீடற்ற சித்திரத்தை (Hallowed image) றஆய்வு மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தெரஸா மறைந்த போது 517 இல்லங்களை – ஆதரவற்று இறப்போருக்கான இல்லங்களைக் – (missions or homes for dying) கொண்டிருந்தார்!

 

 

இந்த மிஷன்களுக்கு வந்த பணத்திற்கோ குறைச்சல் இல்லை. கோடிக் கணக்கில் டாலர்கள் – உல்கெங்கிலுமிருந்து பணம், பணம், பணம்!

இந்த மிஷன்களுக்கு ஏராளமான டாக்டர்கள் வருகை புரிந்து வந்தனர்.

 

 

இவற்றில் பல கல்க்த்தாவில் அமைந்திருந்தன. இந்த இல்லங்கள் ஏழைகளையும் ஆதரவற்று இறக்க இருப்போரையும் “அன்புடன்” அறைகூவி வரவேற்றன!

– அடுத்த கட்டுரையுடன் முடியும். கட்டுரையின் முடிவில் முதல் பாராவைத் திருப்பிப் படிக்க வேண்டும்.

 

–subham–

Asvamedha: New Explanation (Post No.3163)

horse-sacrifice2

Written by London swaminathan

Date: 17 September 2016

Time uploaded in London:21-41

Post No.3163

Pictures are taken from various sources; thanks.

Interesting Titbits about Asvamedha Yajna- Part 2

 

The Asva medha is performed by a king who is assisted by his FOUR wives and FOUR different priests address them with mantras.

 

Description of the sacrifices as follows:

It is a three-day Soma sacrifice. It is done in spring. Six or seven days before the full moon in the month of Phalguna, the four priests, the Adhvaryu, the Hotr, the Brahmin and Udgatr meet. The Adhvaryu cooks rice meal and the king gives the rice meal and gold plates to four priests. The four queens are also present and  the horse is purified with Dharba grass (SB 13-4-1/8, 13-1-1/2)

My comments:

Vedic society had kings and that too, rich kings with lot of gold. Rice is used so they were not from Europe or central Asia. They were sons of the soil i.e. a tropical country like India. The mathematics behind the construction of altars show their mathematical skills. So they are advanced in knowledge and they were not nomads as projected by half- baked foreign writers.

aswamedha

400 soldiers

The horse selected for the Yajna is black in the forepart and white in the back part. It has a mark on its forehead. It is allowed to roam for a year. FOUR HUNDRED soldiers followed it!

(look at the mysterious 4, 400 etc)

The horse is surrounded by 100 more horses and the king is surrounded by EIGHT councillors.

 

The horse can wander into any country. If it is not challenged by the king of the country that means he accepts the sovereignty of the performing king. If he challenges the horse the Yajna performing king will fight with him. After a year the horse returns and then the fire sacrifice is done in which horse or a figure of horse is sacrificed. Some rites such as the chief queen lying with the straggled horse for one night and other queens speaking obscene dialogue is also in the scripture. The priests exchange lot of riddles.

 

Mysterious numbers!

A lot of numbers are used and the reason for such numbers is also explained in the scriptures. This shows their obsession with numbers; some examples:-

Prajapati -17; 16 and 13 represent domestic and wild animals; queens weave 101 pearls into the mane and tail; primary numbers linked to Asvamedha are 21, 260 and 337 representing the number of stakes, the number of wild animals and the number of domestic animals. So lot of organisation is required to do an Asvamedha.

 

Since Rig Veda links King Traiaruna with Asvamedha, the Vedic society was highly civilized and organised.

The hydraulic research in the Sarasvati basin and the precession of the earth mentioned in the Vedas scriptures show the Vedas must be composed before 1900 BCE or 3000 BCE. Latest news says that even the Indus valley civilisation is older than 3000 BCE. All the dates must be recalculated and Max Muller’s date should be thrown into dust bin.

My comments
The numbers show that they were highly literate and numerate.

According to Apastamba Srauta Sutra (20-15) each of the four wives of the king should hang 1000 pearls around the neck of the sacred horse. 4X1000 = 4000 pearls!

 

The use of 1000s of pearls for all the horses show that they were sea faring people. If they had imported from other places that shows their vast geographical knowledge and maritime trade.

The Darba grass used in the Vedic time is still used by the Brahmins in their ceremonies. It shows a continuous tradition followed from Kantyakumari to Kashmir for thousands of years. No culture in the world has such a long tradition on such a vast land. If any other religion shows any other custom like this, we know the date is long after the Vedic period.

The presence of women in all Vedic ceremonies is a must. This shows the highest respect shown to women by the Hindus. No other culture insists that women must be present and participate. From the Vedic days till this day women must be present for all the Hindu ceremonies.

Until today no one can say for sure what Soma plant was. Because the Western society is highly addictive to drugs they can’t think of anything other than narcotic substances. But the eighth mandala of Rig Veda which is fully devoted to Soma, speaks of magical powers of the Soma plant. No culture in the world will dedicate one full section/chapter for narcotic drug, that too in praise of it!

 

krishna_advising_on_the_horse_sacrifice

Lepers in the Ceremony

Why a leper is involved in the Asvamedha remains a mystery; no can explain it or justify it. A leper is washed in the same place where every participant bathes and he is honoured with dakshina (fees); actually he is also one of the objects of sacrifice. This shows that no one is thrown into fire, but it is only symbolic.

In various groups 609 animal victims were listed for the sacrifice; 312 of them were domestic animals and 260 of them were wild animals. But they were all released at the end; may be a symbolic sacrifice of a goat or ram was done.

Catholic missionary Abbe J A Dubois who lived in India from 1792 to 1823 gave a detailed description of this yajna. He says the King of Amber (Jaipur) did an Asvamedha and gave one lakh rupees as dakshina to the chief priest. In today’s money it would be millions of rupees.

 

Puranas talk about another king called Asvamedhadattan. He belongs to Lunar dynasty and his mother was Vaitheki and Janamejayan was his grandson.

 

Satapata Brahmana gives details about Asvamedha yajna. The general impression is that a horse was sacrificed in the fire at the end. But Satapata Brahmana (here afterwards SB) itself says that prior to King Syaaparna Saayakaayana, sacrifice of several animals took place, but now it is limited to the Aja (goat)—SB 6-2-1-39.

In Sanskrit Aja means grains as well. SB also adds that plants are appropriate for sacrifice. So we can conclude that at one stage animal sacrifice was completely abandoned and only plants or animals made up of flour were sacrificed.

 

Mahabharata explains what is happening in the world (12-5):-

“I see no being which lives in the world without violence. Creatures exist at the mercy of one another; the strong consume the weak. The mongoose eats mice, just as the cat eats the mongoose. The dog kills the cat, and the wild beasts eat the dog. Man eats them all. Everything that moves and is still food for someone”

This is very true until today. SB and scriptures like Bhodayana (22-1) and Aupamanyava (16-6-2) Srauta sutras say that a clay or golden replica of animals were sacrificed. More over Atharva Veda says that Inner Yajna is superior to outer one (AV 7-5-4/5). So even at the Vedic times Yajna attained several meanings.

Some people even interpret astronomical events are given as Yajnas. That is how we got all animal signs in zodiac. SB speaks of creation of the universe by Prajapati (6-1) where Asva, Rsaba, Aja, Kurma come before the creation of the earth. RV 1-164-2 and Nirukta (4-4-27) define Asva as the Sun.

 

My Comments:

Vedic literature is very vast. But here we see a big leap from animal sacrifice to symbolic sacrifice with clay model and late lot of astronomical explanations. But the foreign authors date them within a short span which is impossible. No culture in the wold changed that quickly. Foreign writers select some passages which suits them for their novel revolutionary theories and hypotheses. And no two foreign “scholars” agree on any topic! So Indian tradition is the best to follow.

 

Aurobindo’s Interpretation

Aurobindo explains Asvamedha in his Vedic Glossary as follows: –

Asvamedhaaya means for the horse sacrifice. The Horse Sacrifice is the offering of Life Power with all its impulses, desires, enjoyments to the divine existence. The Life-Soul (Dwita) is itself the giver of the sacrifice which it performs when by the power of Agni it attains to vision on its own vital plane, when it becomes, in the figure of the hymn, the illumined seer Ashwamedha (RV 5-27-4)

 

Books used:-

The Asvamedha – by Subhas Kak; 2002

 

The Vedic horse sacrifice –  by Stephen Fuchs

My Old Article on the same subject

Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London

No.1255; Dated 27th August 2014.

 

–Subham–

 

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162)

kumara-4842-1bv-344-31

Written by London swaminathan


Date: 17 September 2016

Time uploaded in London: 14-30

Post No.3162

Pictures are taken from various sources; thanks.

 

அஸ்வமேத யக்ஞம் என்றால் என்ன?

இது அரசர்கள் மட்டும் செய்யக்கூடியது. தங்கள் ஆட்சியை விஸ்தரிக்க – விரிவாக்க — அதிகாரத்தை நிலைநாட்டச் – செய்யும் வேள்வி. யாகக் குதிரையை இறுதியில் பலி கொடுக்கும் வேள்வி இது.

 

இது எப்போது துவங்கியது?

ரிக் வேத காலத்திலேயே இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டு வரை இது நடந்தது. ராமாயணம், மஹாபாரதம், புராணங்களிலும், கல்வெட்டுகளிலும் இது பற்றிய தகவல்கள் உள. இதை நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவை.

 

அதிசயம் 1

இந்த வேள்வியில் 4, 400  முதலிய நான்கின் மடங்கிலுள்ள எண்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சங்கத் தமிழர் வாழ்விலும் இதே போக்கைக் காணலாம். 18 மேல் கணக்கு நூல்களிலும் , 18  கீழ்க்கணக்கு நூல்களிலும் இதே போல 4, 40, 400  எண்களிலேயே பல நூல்கள் தொகுக்கப்பட்டன. இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் பார்க்கவும்.

 

 

அதிசயம் 2

யாகத்தில் விடப்பட்ட குதிரைக்கு 1000 முத்துக்களாலும், தங்கத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த முத்துக்கள் எங்கிருந்து வந்தன? “பாண்டிய கவாடம்” என்னும் முத்து பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் குறிப்பிடுகிறான். தமிழ் நாட்டிலிருந்து முத்து  போயிருந்தாலும், குஜராத்திலிருந்து போயிருந்தாலும், இது வரை வெள்ளைக்காரர்கள் எழுதிய தவறான கருத்துகளுக்கு இது வேட்டு வைக்கும்.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் என்பதே தெரியாது என்றும், அவர்கள் கங்கை நதிக்ரையில் கூட குடி புகவில்லை என்றும், அவர்கள் நாடோடிகள் என்றும் பல அரை வேக்காடுகள் எழுதிவைத்துள்ளன. ஆனால் உலகின் பழைய நூலான ரிக் வேதமோ அஸ்வமேதம் பற்றி குறைந்தது மூன்று மண்டலங்களில் பேசுகிறது. தங்கம் முத்து என்பவை நாகரீக வளர்ச்சியையும், செல்வ வளத்தையும் பூகோள வீச்சையும் காட்டுகிறது.

 

அதிசயம் 3

அஸ்வ மேத யாகத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரைக்கு 34 விலா எலும்புகள் இருப்பதாக வேதம் குறிப்பிடுகிறது. இது இந்திய வகைக் குதிரையாகும். ஆரியர்கள், மத்திய ஆசியாவிலிருந்து வந்தனர் என்று பல அரை வேக்காடுகள் எழுதியுள்ளன. ஆனால் வேதமோ இந்திய குதிரைகள் பற்றிப் பேசுகின்றன!

அதுமட்டுமல்ல. இந்த 34 என்ற எண் 27 நட்சத்திரங்களையும் 5 கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் குறிக்கும் என்றும் வியாக்கியானம் உள்ளது. இது உண்மையாகில் வேத காலத்திலேயே நமக்கு இந்த வானவியல் தெரியும் என்று விளங்குகிறது .பல அரைவேக்காடுகள்,  நாம் இவற்றை கிரேக்கரிடமிருந்து கற்றதாக எழுதிவைத்துள்ளன.

 

அஸ்வமேத யாகத்தில் வரும் குதிரை சூரியனைக் குறிக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

gupta-empire-samudragupta-i-c-330-70-av-dinar-7-70g

அதிசயம் 4

இந்திய அரசர்கள் அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் தங்கக் காசுகளை வெளியிட்டனர். குதிரை பொறித்த குப்தர் கால தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதே போல பெருவழுதி என்ற பெயருடன் குதிரை பொறித்த நாணயம் கிடைத்துள்ளது. இது புற நானூறு குறிப்பிடும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ராஜசூய வேள்வி செய்த குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் பெருவழுதியும் அஸ்வமேதம் செய்திருக்கலாம். இதை காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் குறிப்பால் உணர்த்துவதை ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆக, தமிழர்கள் வேறு கலாசாரம் உடையவர்கள் என்ற வெளிநாட்டுக்கா ரன் வாதத்துக்கு இது பயங்கர வேட்டு வைக்கிறது.

 

புறத்துறை நூல்களில் பத்து வரிக்கு ஒரு முறை இந்துமத குறிப்புகளைக் காணலாம்.

 

அதிசயம் 5

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதி நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகத்தில் காளைமாடு முத்திரைகள் உண்டு ஆனால் பசு மாடுகள் படம் இல்லவே இல்லை. அது போல குதிரை எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் குதிரை படம் இல்லை. ஒரு வேளை  பசுவும், குதிரையும் புனிதம் என்பதால் முத்திரையில் போடாமல் இருந்திருக்கலாம்.

 

ரிக்வேதத்தில் அஸ்வமேத என்ற பெயரில் ஒரு அரசன் இருந்ததாகப் பாடியுள்ளனர் (RV 5-27-4/6; 8-68-15)

 

அதிசயம் 6

குஷ்டரோகிகள், அஸ்வமேத யாகத்தில் இடம்பெறுகிறார்கள். ஏன் என்றே தெரியவில்லை. வெள்ளைக் குதிரை, மற்றும் வெள்ளைக் குதிரையில் கருப்புக் காதுடைய குதிரைகள் புகழப்படுகின்றன. சிந்து வெளி, சரஸ்வதி நதிப் பகுதி குதிரைகள் புகழப்படுகின்றன.

 

அதிசயம் 7

தாவர, பிராணிகள் உலகத்தில் புழுப்பூச்சிகள் முதல் பெரிய காட்டு மிருகங்கள் வரை 609 மிருகங்கள் அஸ்வமேதத்தில் பங்குபெற்றன. இவைகள் அனைத்தும் கொல்லப்படவில்லை, விடுதலை செய்யப்பட்டன என்றே பலரும் கருதுகின்றனர். காட்டு மிருகங்களைக் கொல்லாமல் விட்டது பற்றிய தெளிவான குறிப்புளது. அந்த அளவுக்கு வனவிலங்குகலைப் பாதுகாக்கும் நாகரீக முதிர்ச்சி பெற்று இருந்தனர்.

 

அகநானூறில் வேள்விக்குண்ட ஆமை உவமை ஒரு புதிராக இருந்தது. அதுவும் அசுவமேத யாக குண்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆமையாக இருக்கலாம் (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்)

 

அதிசயம் 8

ஆரியர்கள் அங்கிருந்து வந்தனர் , இங்கிருந்து வந்தனர் என்று பிதற்றும் பேர்வழிகளுக்கு ஒரு யாகமோ யக்ஞமோ, ஒரு சுயம்வரமோ அப்பகுதியில் நடந்ததாக இன்று வரை காட்ட முடியவில்லை;  மிகவும் கஷ்டப்பட்டு சில பிராணிகள் படுகொலையை ஒப்பிட முயற்சி செய்கின்றனர். ஒன்று கூட பொருந்துவ தில்லை.அத்தகைய ஆராய்ச்சிகளைப் பார்கையில் நமக்குச் சிரிப்பும் பரிதாபமும்தான் வரும். இந்துக்கள் உலகம் முழுதும் சென்றதால் அவர்கள் மொழியின் தாக்கம் அவர்கள் மீது அதிகமாகவும் மற்ற விஷயங்கள் குறைவாகவும் இருக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஈரான் (பாரசீகம்) வரை நமது ஆட்சி இருந்ததால் அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அவர்கள் இங்கிருந்து குடியேறிய ஒரு பிரிவினர் ஆவார்கள்.

 

ஆனால் இரண்டயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இமயம் முதல் குமரி வரை இந்தப் பண்பாடு ஒரே மாதிரியாக இருந்ததற்குச் சான்றுகள் உள. இந்த அளவுக்கு வேறு எங்கும் சான்றுகள் இல்லை.

 

malayalam-coin

அதிசயம் 9

 

அஸ்வமேதத்தின்போது ஏராளமான தட்சிணை கொடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பசுமாடுகள், நூற்றுக் கணக்கான குதிரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் அந்த நேரத்தில் பிராமணர்கள் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் . அரசாட்சியையே கேட்டாலும் கொடுக்க வேண்டும் ஆனால் அக்கால பிராமன்ணர்கள் அப்படி எக்குத் தப்பாக எதுவும் கேட்கவில்லை. துரோணர் மட்டும் பரசுராமர் செய்த அஸ்வமேதத்தில் பங்கு பெறாமல் வேடிக்கை பார்க்கும் பிராமணர்களில் ஒருவராக நின்றபோதும் எனக்குத் தனுர்வேதம் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். பரசுராமனும் அவ்வாறே செய்தார்.

 

 

அதிசயம் 10

வேள்வி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அக்கினியில் ஆகுதி செய்வது என்பது மட்டும் பொருள் அல்ல. யஜூர்வேதத்திலேயே யாகக் குதிரையின் கண்களை சூரியனாகவும், தலையைக் காலைப் பொழுதாகவும், வாயு தேவனை மூச்சாகவும், சந்திரனைக் காதுகளாகவும் ஒப்பிடும் பகுதிகள் உள்ளன. வேத இலக்கியத்தை அப்படியே பொருள் கொள்ளாமல் அதிலுள்ள தத்துவங்களை உணரவேண்டும்.

 

 

 

அதிசயம் 11

யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேதம் யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய் யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம். பரசுராமர், ஆண்டுக்கு ஒன்று வீதம்    100 அஸ்வமேதம் செய்தவர். இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).

 

 

அதிசயம் 12

அஸ்வமேத யக்ஞத்தின்போது புதிர்கள் போடுவதுண்டு. அவர்கள் மந்திரங்கள் புதிர்கள் நிறைந்ததாகவும் சில ஆபாச வசனங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இவைகள் ஏன் இப்படி உள்ளன? உண்மைப் பொருள் என்ன என்பது எவரும் அறியார். வேத கால சமூகம் இலக்கியம் தெரிந்தவர்கள்’ நாகரீகத்தின் உச்சியைத் தொட்டவர்கள் என்பது இதனால் விளங்கும். வெளிநாட்டு, உள்நாட்டு அரை வேக்காடுகள் எழுதியது போல அவர்கள் மாடு மேய்த்த நாடோடிகளும் அல்ல, காலனி பிடிக்க வந்த வெள்ளைக்க ரர் போன்ற பரதேசிகளும் அல்ல!

 

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியில் மேலும் பல விஷயங்களைக் காண்போம்.

தொடரும்……………………………..

 

–SUBAM–

 

பார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்? வர்ணம் வேறு, ஜாதி வேறு- பகுதி-3 (Post No.3161)

brahmin4

Written by London swaminathan

Date: 17 September 2016

Time uploaded in London: 7-30 AM

Post No.3161

Pictures are taken from various sources; thanks.

 

வேதங்களையும், பிராமணீயத்தையும் பல இடங்களில் புகழ்ந்து பாடிய பாரதி, சில இடங்களில் பிராமணர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். இது ஏன்? என்று பார்ப்போம்.

 

பாரதியே ஒரு பிராமணன் என்பதையும் வேதங்களைக் கற்றவன் என்பதையும்,  தீவிர தெய்வ நம்பிக்கை உடையவன் என்பதையும் மறந்து விடக்கூடாது.

 

சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல தலைவர்கள் அந்தணர்களே. ஆனால் அதை    விட அதிக அளவுக்கு வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்ததும் அந்தணர்களே. இவர்களில் பலர்,  பாரதிக்கு எதிராக நின்றனர். உளவும் சொன்னார்கள்.

 

பாரதியின் சீர்திருத்தக் கருத்துகளை ஜீரணிக்கும் அளவுக்கு அறிவின் வளர்ச்சியும் பல பிராமணர்களுக்கு இல்லை. மனைவி செல்லம்மாவுடன் கைகோர்த்து, ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி, தெருக்களில் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. அதைக் கிண்டலும் செய்தார்கள்.

 

 

இதற்கெல்லாம் மேலாக பெரும்பாலான பிராமணர்கள் வேதங்களின் உண்மைக் கருத்துகளைப் பின்பற்றாமல் சடங்குகளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தனர். இன்னும் பலரோ எந்த வித அனுஷ்டானங்களையும் பின்பற்றாமல் — அதாவது சந்தியா வந்தனம் முதலியன செய்யாமல் — பிறப்பினாலும், பூணுல் போட்டதாலுமே — தாங்கள்தான் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று எதிர்பார்த்தனர். இந்த போலித் தனத்தை பாரதி ஏற்கவில்லை. மற்ற விஷயங்கள் அவனது பாடல் வரிகளிலேயே இலகு தமிழில், பழகு தமிழில் உள்ளன. நான் விளக்கத் தேவை இல்லை.

brahmin3

வேதம் அறிந்தவன் பார்ப்பான்

 

வேதங்களில், நான்கு வர்ணம் என்று தொழில் ரீதியில் ஜாதியை அணுகியதை, பாரதி ஏற்கிறான். அவனே அதைப் பாடலிலும் தருகிறான்:-

 

வேதம் அறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

(நாய்க்கன் = அரசன்)

 

 

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை

 

நாலு வகுப்பும் இங்கு ஒன்றே- இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே- செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

இதே கருத்து ரிக் வேதத்தின் புருஷ சூக்த மந்திரத்தில் இருப்பதை முதல் பகுதியில் கொடுத்துள்ளேன்.( இது மூன்றாவது கட்டுரை.)

 

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

 

மேலவர், கீழவர் என்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியை எல்லாம் – இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும்நன்மை யுண்டென்பான்

(கண்ணன் என் தந்தை – பாடல்)

 

 

bharati-stampz

பேராசைக்காரனடா பார்ப்பான்!

 

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் – ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் — இவர்

ஏதுசெய்தும் காசு பெறப் பார்ப்பார்.

 

பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்

பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை…………….

………………………………………. (வரிகள் கிடைக்கவில்லை)

 

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்

பிச்சுப் பணம் கொடு எனத் தின்பான்

கொள்ளைக் கேசெந்—————-(வரிகள் கிடைக்கவில்லை)

 

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்

 

……………………….

…………………………………(வரிகள் கிடைக்கவில்லை)

 

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு

பாயும் கடி நாய்ப் போலீசு – காரப்

பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு (fees)”

 

பூணூல் போட்டுக் கொண்டதால் மட்டும் உயர்வு என்ற கொள்கையை பாரதி ஏற்கவில்லை. மஹாபாரதம் சொல்லுவது போல (முதல்  இரண்டு பகுதியில் காண்க), குண நலன்களால் பிராமணனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆகையால் வெள்ளைக்கரனை எப்படி “துரை” என்று சொல்லக்கூடாதோ அப்படி பிராமணர்களையும் இனிமேல் “ஐயர்” (பண்பாடுமிக்க உயர்ந்தோர்) என்று சொல்லாதீர்கள் என்றார்:-

bharati-b-w

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே

ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (ப்ராக்ருதம்)= ஐய(ர்)-தமிழ்

பொருள்: பண்பட்ட மக்கள், மதிப்பிற்குரியோர்.

 

சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் மனு ஸ்மிருதியில் ஏராளமான இடை செருகல் நுழைக்கப்பட்டன. அதில் பல ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளன. ரிக் வேதத்தில் முதற்கொண்டு இடைச் செருகல், பிற்சேர்க்கை கண்டு பிடித்த வெளி நாட்டு “அறிஞர்களும்”, அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் மனு ஸ்மிருதியை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டனர். ஏனெனில் திட்டுவதற்கு அதில் நிறைய சரக்குகள் இருந்தன. அந்த மனு நீதி எங்கேயும் பின்பற்றப்பட்டு சூத்திரர்களை தண்டித்ததாக வரலாறு இல்லை. அவரவர் குற்றத்துக்கு ஏற்பவே தண்டனைகள் கொடுக்கப்பட்டன. வெள்ளைக்கா ரன் காலத்திலும் அவனை எதிர்த்த பிராமணர் அனைவரும் தூக்கில் போடப்பட்டனர் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படி இறந்தோர் ஏராளம் (குறிப்பாக வங்கத்தில்). இந்த மனு நீதியைத் “தமது” என்று சொல்லிய சில பேதைகளைக் கண்டிக்கும் முகத்தான் பாரதியும் பாடினான்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

 

பாரதிக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழில் அதிகப் பாடல்களைப் பாடிய கபிலன் என்ற “புலன் அழுக்கற்ற அந்தணாளன்”, பாரியின் மகள்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று மாப்பிள்ளை வரன் தேடினான். இது போல ஜாதிக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து எறிந்து, மனு நீதியைப் பின்பற்றாமல், பணியாற்றியோர் ஏராளம். மயில் வளர்க்கும் கீழ் ஜாதி மக்களை அழைத்து மாபெரும் மௌர்ய சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய சாணக்கியன் கடைசி வரையில் குடிசையில் வாழ்ந்தான். மனு தர்மமும் கூட பிராமணன் பொருளே சேர்த்துவைக்கக் கூடாதென்கிறது..

 

இந்தப் பிண்ணனியில் பாரதியின் வரிகளைப் படித்தால் அவன் ஏன்

சாத்திரத்தை “சதி” என்று சொன்னான் என்று தெளிவடைவோம்.

brahmin2

முன்னாள் ராஷ்டிரபதியும், தத்துவ வித்தகருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், அவரது பகவத் கீதை வியாக்கியானத்தில், ஜாதிகள்/வர்ணம் பற்றி விள்ளக்குகையில்,  கீழ்கண்ட ஸ்லோகங்களைக் கொடுத்துள்ளார்:-

 

அந்த்யஜோ விப்ர ஜாதி ச ஏக ஏவ சஹோதர:

ஏக யோனி ப்ரசூதஸ் ச ஏக சாகேன ஜாயதே

 

அந்தணர்களும், ஐந்தாவது ஜாதியினரும் சஹோதர்களே; அவர்கள் ஒரு தாயிடத்தில் பிறந்தவர்களே (பழைய கால ஸ்லோகம்)

 

ஏகவர்ணம் இதம் பூர்வம் விஸ்வம் ஆசீத் யுதிஷ்டிர

கர்மக்ரியா விஷேசேன  சாதுர்வர்ண்யம் ப்ரதிஷ்டிதம்

 

ஓ, யுதிஷ்டிரா! ஆதிகாலத்தில் ஒரே ஜாதிதான் இருந்தது; தொழில் வேறுபாட்டால் நான்கு பிரிவுகளாக அவை பிரிக்கப்பட்டன.

 

எல்லாரும் ஓர் குலம்

 

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம்

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — ஜய ஜய ஜய

பாரத சமுதாயம் வாழ்கவே  – சுப்பிரமணிய பாரதி

 

–Subham–