சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–

கீதையின் மஹிமை: சிருங்கேரி ஆசார்யர்!(Post No.3025)

34thjagadguru

Article Written S NAGARAJAN

Date: 1st August 2016

Post No. 3025

Time uploaded in London :– 5-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஞான ஆலயம், இந்த மாத இதழில் (ஆகஸ்ட் 2016) வெளியாகியுள்ள கட்டுரை

முன்னுக்குப் பின் முரணாக இருப்பது அல்ல கீதை; முக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்துவது கீதை என்பதை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யாளின் மஹிமை பொருந்திய சம்பாஷணை காலத்தை வென்ற ஒன்று!

 

கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

 

ச.நாகராஜன்

 

அறிஞர்கள் போற்றும் கீதை

கீதையின் பெருமையைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை. எமர்ஸன், தோரோ, எட்வின் ஆர்னால்ட் உள்ளிட்ட மேலை நாட்டு அறிஞர்கள் கீதைக்கு உயரிய புகழாரம் சூட்டியுள்ளனர்.

மஹாத்மா காந்திஜிக்கு கீதையே வாழ்க்கை வழிகாட்டி. குறிப்பாக கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள கடைசி 19 ஸ்லோகங்களில் (ஸ்தித் ப்ரஜ்ஞஸ்ய என்பது முதல் ப்ரஹ்ம நிர்வாணம்ருச்சதி என்பது முடிய உள்ள ஸ்லோகங்கள்) தான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் அனைத்தும் அடங்கி விட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

“கீதை பிரபஞ்ச தாய். அவள் யாரையும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டாள். அவளது கதவைத் தட்டுக்கின்ற யாருக்கும் கதவு அகலத் திறந்தே இருக்கும்”  (The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks.) என்று உளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அவர் கீதையின் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஸ்வாமி விவேகானந்தர் பாரதநாடெங்கும் சுற்றுப் ப்யணம் செய்யும் போதும் வெளி நாட்டிற்குச் சென்ற போதும் அவர் கையில் உடன் எடுத்துச் சென்றது கீதையே.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னுடன் இறுதி வரை வைத்திருந்தது பகவத் கீதையே.

 

 

கீதையைத் தினமும் படித்து வர வேண்டும் என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கட்டளை.

 

ஆதி சங்கரரோ பகவத் கீதா கிஞ்சித் தீதா என்று பகவத் கீதையைக் கொஞ்சமாவது படித்தவனுக்கு யம பயம் இல்லை, ஆண்டவனின் அனுக்ரஹம் உண்டு என்று பஜகோவிதத்தில் உறுதி பட அருளியிருக்கிறார்.

 

தினமும் கீதையைப் படிக்கும் போது தோன்றும் சந்தேகங்கள் பல. அவற்றை உரிய ஆசார்யர்களிடம் தெளிவு படுத்திக் கொண்டால் உத்வேகம் பிறக்கும். கீதை காட்டும் பாதையை நன்கு உணரவும் முடியும்.

sringeri 14a

sringeri Sharda Peetham temple to the right and the vidyashankara temple in sringeri. credit T. NARAYAN

 

ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹா ஆசார்யாள்

 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி பீடம் சரஸ்வதி அன்றாடம் நர்த்தனம் ஆடும் ஞான பீடம் என்பதை அனைவரும் அறிவர். அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்களோ வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள்.

 

 

34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954).இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கும் ஒன்று!

சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது.

 

 

அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது.

 

 

சிறந்த உளவியல் நிபுணரான அவர்  ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன  முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு  முந்தைய தினம் ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார்.

 

அவரைப் பார்த்த ஆசார்யாள்,”அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே!” என்றார்.

 

 

திகைத்துப் போன டாக்டர் குழப்பத்துடன் மௌனமாக நின்றார்.

“என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா?” என்று ஆசார்யாள் வினவினார்.

 

 

டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்டர் சேகரித்த தகவல்களை நினைவுபடுத்தும் வண்ணம் அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

 

 

கண்களில் நீர் மல்க விடை பெற்றுக் கொண்ட டாக்டர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’,. என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவும் மாறி விட்டார்.

 

sathyamurthy

சத்தியமூர்த்தியின் சந்தேகங்கள்

 

மைசூர் ராஜ்யத்தில் பருவமழை பொய்த்துப் போக அனைவரும் ஆசார்யரை வேண்ட அவர் அருளினால் பெய்யோ பெய்யென்று  மழை கொட்டித் தீர்த்தது. அண்டை ராஜ்யமாக அமைந்த மதராஸ் பிராந்தியமும் பயனடைந்தது.

 

 

இதையெல்லாம் உணர்ந்த தேசபக்தரான தீரர் சத்தியமூர்த்தி ஆசார்யரைச் சந்தித்து நன்றி தெரிவித்து தன் மரியாதையைச் செலுத்தினார்.

 

அவரை உட்கார்த்தி வைத்த ஆசார்யார் கீதையின் பெருமையையும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் விளக்கலானார். சத்தியமூர்த்தி கட்டாயமாக திரும்பிச் செல்ல வேண்டிய

ஷிமோகா செல்லும் பஸ் நேரமும் தாண்டியது. “நாளை போகலாம்” என்று கட்டளையிட்டு விட்டார் ஆசார்யர்.

பின்னால் தான் தெரிந்தது அந்த பஸ் பெரும் விபத்துக்குள்ளானது என்று!

 

சத்தியமூர்த்தி ஆசார்யரின் சம்பாஷணையால் திகைத்துப் போனார். ஏனெனில் அவர் கீதையை தினமும் படிப்பவர். அதில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஆசார்யரிட்ம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்பது அவரது எண்ணம்,

 

 

ஆனால் அவர் அதைச் சொல்லாத போதே அதற்கான சந்தேக விளக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆசார்ய்ர் தன் உரையில் சொல்லி விட்டார்.

 

 

இதைச் சத்தியமூர்த்தி நாத் தழுதழுக்க சொல்ல ‘என்ன சந்தேகங்கள், நான் என்ன விளக்கம் சொன்னேன்’ என்றார் ஆசார்யர்.

 

 

சத்தியமூர்த்தியின் மனதில் எழுந்த சந்தேகங்களும் அதற்கு ஆசார்யரின் விளக்கமும் எந்த ஒரு கீதை பக்தரையும் மகிழச் செய்யும். அவற்றில் சில:

 

  • அர்ஜுனன் கர்மயோகத்தைச் செய்ய வேண்டியவன். போர் புரியும் தருணத்தில் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவனிடம் கண்ணபிரான் ஏன் சாங்கிய யோகத்தையும் சந்நியாச தர்மத்தையும் கூறினார். அவசியமே இல்லையே

 

பதில்: கீதை அர்ஜுனனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை.அவனை முன் வைத்து உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதை கண்ணன் எடுத்துரைத்தார்.

  • கர்மண்யேவாதிகாரஸ்தே (கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது கீதை 2-47) என்றும் ஸ்வகர்மணா த்வமர்ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (பரம்பொருளைத் தம் கட்மையைச் செய்தலென்ற பூஜையினால் மகிழ்ச்சிபெறச் செய்து சித்தி பெறுகிறான் கீதை 18-46) என்றும் கூறி கர்மாக்களால் தான் மோக்ஷ பலன்கள் கிடைக்கும் என்று கூறிய பகவானே ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (எல்லா தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை கீதை 18-66) என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே

 

பதில் : முன்பு சொன்ன அதிகாரி பேதம் என்ற காரணமே இங்கும் பொருந்தும். ஸித்தி என்பதை சித்த சுத்தி என்று வைத்துக் கொண்டால் அது கர்மங்களைச் செய்பவருக்கு என்று ஆகும். சர்வதர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மங்களையும் துறத்தல்) என்றால் அது ஞானாதிகாரிக்கான விஷயமாக ஆகி விடும்.

  • முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் விஷாதம் (துக்கம்) சொல்லப்பட்டிருக்கும் போது இறுதியில் தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி (அங்கு ஸ்ரீ என்னும் லக்ஷ்மி,ஜயம்,நீதியும் நிலைத்திருக்கும் கீதை 18-78), என்று சொல்லப்படுகிறது.. ஆரம்பம் முடிவுடன் பொருந்தவில்லையே!

 

பதில் : கீதையின் முதல் அத்தியாயம் ஒரு அறிமுக முகவுரை தான். இரண்டாவது அத்தியாயத்தில் அஸோஸ்யானஸ்ய சோகஸ்த்வம் (வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய் கீதை 2-11) என்பதில் தான் கீதா சாஸ்திரம் துவங்குகிறது. அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:” (உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே கீதை 18-66) என்பதுடன் கீதை  முடிகிறது. அஸோஸ்யானய (வருந்தத் தகாதவர்கள்) என்று ஆரம்பித்து மாஸுச (வருந்தாதே) என்று முடிவதால் ஆரம்பமும் முடிவும் அற்புதமாகப் பொருந்தி வருவது தெளிவாக விளங்குகிறது.

 

 

கேள்வி: இப்படி எடுத்துக் கொண்டால் அர்ஜுனனைப் பார்த்து நீ என்றும் உன்னை என்றும் கூறுவதால் அது அர்ஜுனனுக்கு மட்டும் தானே பொருந்தும். மற்றவர்களுக்கு கீதோபதேசம் இல்லையா? அது அர்ஜுனனுக்கு மட்டும் தானா?

பதில் : அர்ஜுனன் என்ற பதத்திற்கு அமரகோசத்தில் வெளுப்பானவன்,பரிசுத்தன், சித்த சுத்தி உடையவன் என்று அர்த்தங்கள் கூறப்படுகிறது. முக்கிய்மானவ்னை முன்னிலைப்படுத்திச் செய்வதே உபதேசம். ஆகவே அர்ஜுன பதத்தின் அர்த்தத்துட்ன் பொருந்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.

 

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக சத்தியமூர்த்தி கூறி அதற்கான பதிலைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் இந்த உரையினால் கிருஷண – அர்ஜுன சம்வாதத்தை நேரில் கேட்டது போல மகிழ்ந்தனர்.

 

 

காலத்தை வென்ற கீதையை அனுதினமும் ஒதி வந்தால் அர்த்தமும் புரியும்; அனுக்ரஹமும் கிடைக்கும்!

*************

 

Efficiency Anecdotes (Post No. 3024)

efficiency

Compiled by london swaminathan

Date: 31 July 2016

Post No. 3024

Time uploaded in London :–  20-34

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

T A Edison

circa 1871: Thomas Alva Edison (1847 – 1931) American scientist, inventor and industrialist.

Manufacturing Anecdote

 

Alfred O.Tate was riding one afternoon through central jersey when Edison pointed from a ridge to a lovely valley through which a stream meandered.

Tate, said Edison, see that valley?

It is a beautiful valley, Tate replied.

Well, said the inventor, I am going to make it more beautiful. I am going to dot it with factories.

 

xxx

 

 

4719 Parts in a Car!

 

A New Yorker on one of the Ford Motor Company’s tours of inspection for visitors lagged behind the party at one point and found himself  alone with Henry Ford. Ford nodded to him; then pointing to a completed automobile, said, there are exactly 4719 parts in that car.

 

Greatly struck with Fords grasp of affairs– and with his own — the visitor, talking subsequently with one of the company’s engineers, asked him lightly if it were true such and such a model had exactly 4719 parts.

I am sure I don’t know, the engineer said,

I can’t think of a more useless piece of information.

h ford

Xxx

Who is running the company?

 

One of Chauncey Depew’s stories:

Some years ago, a few days after I had sailed for Europe, a man went into my office and said,

“I want to see Chauncey Depew

He has gone to Europe, my coloured porter told him

Well, I want to see his secretary

He has also gone to Europe

Then I want to see Cornelius Vanderbilt

He is in Newport

Oh, I guess I want to see W K Wanderbilt

He is also in Newport.

You don’t tell me. Well, may I see the first Vice President?

He is out of town

Is the third Vice President in.

No, he is in Europe

Is the superintendent I A?

No, he is up the road some where

How about the general passenger agent?

He has gone to Cape May

Who in thunder is running this road, anyway?

I guess it do be running itself.

 

Xxx

3D Knob - Maximize Efficiency

3d illustration of knob set at maximum for efficiency

Two Kinds of Reports!

 

An assistant rushed into William S.Knudsens officiate one day, very upset because a certain report was missing. How could they act?

 

There are two kinds of reports, Knudsen said calmly

One says you can’t do it. The other says it has been done. The first kind is no good. The second kind you don’t need.

Xxx

 

When Charles M Schwab had not yet become a great man in his own right in the field of steel, he worked for Andrew Carnegie.

The little Scotsman taught him the hard lesson of the commercial world, that one day’s laurels are of little use on the next.

All records broken yesterday, Schwab wired to his chief.

In reply to which, Carnegie telegraphed, what have you done today?

 

Xxx

Don’t get too busy!

 

A sage bit of advice is contained in a rebuke delivered to no less a personage than William Jeffers, head of the Union Pacific Railway, by one of his employees.

Jeffers was traveling in his official car.

At a certain stop, the engineer dismounted from his cab and came into the president’s car and asked him a question concerning some details of their immediate route. Being preoccupied with some papers before him, Jeffers absently gave an obviously erroneous reply.

Angrily the engineer snorted, “that doesn’t make sense. Don’t ever get so busy that you haven’t got time to think”.

Whereupon he turned and strode back to the cab.

 

Xxxx

 

ஆகஸ்ட் 2016 காலண்டர் (Post 3023)

yasotha feeding krishna,fb

உலக அறிவு பற்றி 31 பொன் மொழிகள்

Compiled by london swaminathan

Date: 31 July 2016

Post No. 3023

Time uploaded in London :–  16-38

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஆகஸ்ட் மாத (துன்முகி ஆடி-  ஆவணி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– ஆகஸ்ட் 2-ஆடிப் பெருக்கு/ஆடி அமாவாசை;

5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம்

18-ஆவணி அவிட்டம்/யஜூர் உபாகர்மா/ரக்ஷா பந்தன்;

25-ஜன்மாஷ்டமி/கோகுலாஷ்டமி

 

அமாவாசை – 2

பௌர்ணமி – 18

ஏகாதசி – 14, 28

ஆகஸ்ட் முகூர்த்த நாட்கள் – 21, 22, 29

when_is_Nag-Panchami_in_2016

ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 140 (உலக மக்கள் செய்வதைப் பின்பற்றாதவன் முட்டாள்)

 

ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்  வையத்து அலகையா வைக்கப்படும்– குறள் 850 (கடவுள் இல்லை என்று சொல்பவன் பேய்)

 

ஆகஸ்ட் 3 புதன்கிழமை

ஊரோடு ஒத்து வாழ்

 

ஆகஸ்ட் 4 வியாழக்கிழமை

காணாதான் காட்டுவான் தான் காணான் –குறள் 849 (முட்டாளுக்கு உபதேசம் செய்பவன் முட்டாள் ஆகி விடுவான்)

 

ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.

 

ஆகஸ்ட் 6 சனிக்கிழமை

ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்

 

ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக்கிழமை

தனியாகச் சிரிக்காதே (ந கல்வேகாகின்யா ஹஸிதவ்யம்)

krishna flute, fb

ஆகஸ்ட் 8 திங்கட்கிழமை

பூனை இல்லாத போது, எலிகள் விளையாடும் ( ந பிடாலோ பவேத்யத்ர  தத்ர க்ரீடந்தி மூஷகா:)

 

ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை

தெரியாத இடத்தில் தனிமையில் சுற்றாதே (நைகாகீ சஞ்சரேத்வீபினம்)

 

ஆகஸ்ட் 10 புதன்கிழமை

அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைப் புகழ்வர் (சேஷ்டிதம் சகலை: சர்வம் ச்வானுரூபம் ப்ரசஸ்யதே)

 

ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை

ஆடு போல தின்னு, யானை போல குளி ( அஜவச்சவர்ணம் குர்யாத்கஜவத் ஸ்நானமாசரேத்)

 

ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை

குருடர்களின் ராஜ்யத்தில், ஒற்றைக்கண் உடையோன் ராஜா ( அந்தகானாம் காணோ ராஜா)

 

ஆகஸ்ட் 13 சனிக்கிழமை

மரியாதை தெரியவனுக்கு மரியாதை காட்டினால் சோபிக்காது ( அமர்யாதேஷு மர்யாதா க்ரியமாணா ந சோபதே)

 

ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை

மேற்பார்வையிடாத விவசாயம் நஷ்டமடையும்  (அவஸ்யம் விபலா யாதி க்ருஷி: ஸ்வேனானவேக்ஷிதா)

RAKSHABANDAN1

ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை

மருந்துக்குதவாத வேரும் இல்லை, மந்திரத்தில் பயன்படாத எழுத்தும் இல்லை (உருப்படாதவன் என்று எவனும் இல்லை)

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்

 

ஆகஸ்ட் 16 செவ்வாய்க்கிழமை

தெய்வீக செயல்களையும், முன்னோர் செய்ததையும் கேள்வியால் துளைக்காதே (திவ்யானுபாவம் பூர்வேஷாமவிசார்யம் ஹி சேஷ்டினாம்)

 

ஆகஸ்ட் 17 புதன்கிழமை

நிலவு வானில் வலம் வந்தால், நட்சத்திரங்கள் அவைகளை தானாகப் பின்பற்றும் (ஆகதே சந்த்ரே சமாகதானி சர்வ நக்ஷத்ராணி)

 

ஆகஸ்ட் 18 வியாழக்கிழமை

கட்டளையிட்டாலும் தனது கழுதை மீது ஏறமாட்டான் வண்ணான் ( ஆக்ஞாபிதஸ்து ரஜகோ நைவாரோஹதி கர்தபம்)

 

ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை

காற்றடிக்காலத்தில் இடி இடித்தாலும் மின்னல் வெட்டினாலும் மழை பெய்யாது ( உச்சை: சரத்ஸு கர்ஜந்தோ நைவ வர்ஷந்தி வாரிதா:)

 

ஆகஸ்ட் 20 சனிக்கிழமை

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு

 

ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை

ஒரு முள்ளால் மற்றொரு முள்ளை எடு ( கண்டகேநைவ கண்டகம்)

upa2005_2

ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை

அழைக்காத இடங்களுக்குப் போகாதே (க்வாபி ந கச்சேத் அனாஹூத:)

 

ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை

ராஜ பாட்டையில் நடை போடு (கந்தவ்யம் ராஜ பதே)

 

ஆகஸ்ட் 24 புதன்கிழமை

நீரில் குதிக்காமல் நீந்தக் கற்க முடியாது (ஜலாவகாஹனம் த்யக்த்வா ந கோபி தரணக்ஷம:)

 

ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை

ஜாதியின் பேரில் யாரையாவது மதிக்க முடியுமா? மிதிக்க முடியுமா? (ஜாதிமாத்ரேன கிம் கசித்தன்யதே பூஜ்யதே க்வசித்)

 

ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை

இரண்டு கட்சிகளும் அவன் சமரசம் செய்வதை ஏற்கவில்லை; அவனோ தீர்ப்பு சொல்லத் துடிக்கிறான் (அஸ்வீக்ருதோபி பக்ஷாப்யாம் ந்யாயம் கர்தும் சமுத்யத:)

 

ஆகஸ்ட் 27 சனிக்கிழமை

அடடா! மரத்தின் உச்சியில் பலாப்பழம்; நாவில் நீர் சுரக்கிறது(ஓஷ்டே தைலம் தரௌ சாஸ்தே சுபக்வம் பனசம் பலம்)

krishna in sky

ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்

 

ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை

(கழுத்தைச் சுற்றி தங்கச் சங்கிலி; கோவில் மாடத்தில் போய்த் தேடுகிறார்கள் (கண்டே ஹிரண்மயீ மாலா ம்ருக்யதே மந்திரே தரே)

 

ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை

படத்திலுள்ள சிங்கம், நிஜ சிங்கம் செய்யும் வேலையைச் செய்யுமா? (கிம் சித்ரோ லிகித: சிம்ஹ: சத்ய சிம்ஹ க்ரியாம் ஸ்ப்ருசேத்)

 

ஆகஸ்ட் 31 புதன்கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.

 

–Subham–

 

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10 (Post No.3022)

nps2000buddha_colored

Article Written S NAGARAJAN

Date: 31 July 2016

Post No. 3022

Time uploaded in London :– 5-38 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 10

ச.நாகராஜன்

 

coin buddha

ஆலயத்தை புனருத்தாரணம் செய்வதற்காக பல காத தூரம் நடந்து ஹேமு மரம் என்ற இடத்தை ஸு யுன் அடைந்தார்.

அங்கு செல்லும் சாலை மிகவும் கரடு  முரடாக இருந்தது. ஒரே வளைவுகள். பல வருடங்களாக அது கேட்பாரற்று கவனிப்பாரற்று இருந்திருக்கிறது போலும்!

அங்கிருந்த உள்ளூர்வாசிகள் அங்கு ஒரு துறவி இருக்கிறார் என்றும் தனியாக தான் ஒருவராகவே அந்த சாலையை அவர் சீர் படுத்தி வருகிறார் என்றும் ஸு யுன்னிடம் கூறினர்.

அவர் எந்த ஒரு நன்கொடையையும் கேட்பதில்லை என்றும் தான் உயிர் வாழத் தேவையான குறைந்த ப்ட்ச உணவை  மட்டும் அவர்களிடமிருந்து பெற்று வருகிறார் என்பதையும் ஸு யுன் அறிந்தார். பல பத்து ஆண்டுகளாக அந்த நீண்ட நெடுஞ்சாலையை அவர் சீர் படுத்தி வருகிறாராம்!

இப்போது 90 சதவிகிதம் அந்தப் பணி முடிந்து விட்டதாம்!

அங்குள்ள ஆலயத்தை உள்ளூர்வாசிகள் புனருத்தாரணம் செய்வதாகச் சொன்ன போதும் அவர் தன் வேலையான சாலைப் பணியில் ம்ட்டுமே ஈடுபட்டு வந்தாராம்.

அவரைப் பார்க்க ஸு யுன் விரைந்தார்.

ஒரு மண்வெட்டி கூடையுடன் அந்தத் துறவி சாலையில் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கூப்பிய கரங்களுடன் ஸு யுன் அவரிடம் விரைந்து சென்றார். நமஸ்கரித்தார்.

அவர் ஸு யுன்னைக் கண்டு கொள்ளவே இல்லை.. ஸு யுன்னைப் பார்த்த அவர், எதுவும் பேசாமல் தனது தங்குமிடமான ஆலயம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.

ஆலயத்தில் தன் கருவிகளை வைத்த அவர் அமர்ந்தார். ஒன்றுமே பேசவில்லை. அவர் எதிரேயே ஸு யுன்னும் அமர்ந்தார்.

அடுத்த நாள் காலையில் அரிசியைக் களைந்து உலையில் போட்ட போது ஸு யுன் அடுப்பை மூட்டினார்.

சாப்பிடும் போது அவர் ஸு யுன்னை அழைக்கவில்லை. ஸு யுன்னோ தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு உண்டார்.

மண்வெட்டியை  எடுத்துக் கொண்டு அவர் சாலையை நோக்கி விரைய ஸு யுன்னும் கூடையை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் போனார்.

சாலையில் பள்ளங்கள் சீராக்கப்பட்டன. வேலை தொடர்ந்தது.

 

இப்படியாக 10 நாட்கள் கழிந்தன. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

ஒரு நாள் மாலை ஆலயத்திற்கு வெளியே இருந்த பாறை ஒன்றில் அமர்ந்த ஸு யுன் தியானம் செய்ய அமர்ந்தார்.நேரம் கழிந்தது.

ஆனால் ஸு யுன் உள்ளே செல்லவில்லை. வயதான அந்த துறவி பின்னால் வந்து கூப்பிட்டார்: “அங்கே நீங்கள் என்ன செய்து  கொண்டிருக்கிறீர்கள்?”

கண்ணை மெதுவாகத் திறந்து பார்த்த ஸு யுன் பதில் கூறினார் இப்படி:-“ நான் சந்திரனைப் பார்க்க விரும்பி இங்கு அமர்ந்திருக்கிறேன்.”

 

“சந்திரன் எங்கே இருக்கிறது?”

“அற்புதமான ரோஜா வண்ண ஒளியாக இருக்கிறது!”

அவர் கூறினார்: “பொய்மைக்கு இடையில் மெய்யை அரிதாகவே தான் காண முடியும்!  வானவில்லைப் பார்த்து பிரகாசமான ஒளி என்று தவறாக நினைத்து விடக் கூடாது!”

ஸு யுன் பதில் கூறினார்:” என்னைத் தழுவும் ஒளி இறந்த காலமும் அல்ல; நிகழ்காலமும் அல்ல, இடையறாமல் வரும் அது எதிர்மறையானதும் அல்ல; உடன்மறையானதும் அல்ல!”

 

அதைக் கேட்ட அவர் கலகலவென்று சிரித்தார்.

ஸு யுன்னின் கரங்களைப் பற்றினார். “மிகுந்த நேரம் ஆகி விட்டது. ஆலயத்தினுள் செல்ல்லாம்” என்றார் அவர்.

மறு நாள் உற்சாகமாக அவர் பேசத் தொடங்கினார்.

அவர் பெயர் சான் ஸியூ.24 வயதிலேயே அவர் உலகைத் துறந்து விட்டார்.  ஜின் சான் மடாலயத்தில் சேர்ந்த அவர் தன் அலை பாயும் மனதை ஒரு நிலைப்படுத்தினார்.

பின்னர் சீனாவில் உள்ள புனித மலைத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

திபெத்திற்குச் சென்ற அவர் பர்மா வழியே மீண்டும் சீனா திரும்பினார்.

 

இங்குள்ள சாலை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த அவர் அங்குள்ள மக்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டார். தரணிம்தார போதிசத்துவரால் நிர்மாணிக்கப்பட்ட அந்த சாலையை சீர்திருத்த கங்கணம் பூண்டார்.

பல பத்து வருடங்கள் ஓடி விட்டன. சாலை சீரடையும் பணி முடியும் தருவாய் வந்து விட்டது. இப்போது அவருக்கு வயது 83!

 

எந்த ஒரு நல்ல நண்பரையும் அவர் இதுவரை காணவில்லை.

நல்ல கர்ம பலன்களைக் கொண்ட ஸு யுன்னை இப்போது அவர் கண்டு விட்டார்.

ஆகவே மனம் திறந்து தன்னைப் பற்றி இது வரை யாரிடமும் கூறாத விஷயங்களை ஸு யுன்னிடம் அவர் கூறினார்.

ஸு யுன்னும் மகிழ்ந்து தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறினார்.

மறு நாள் காலை. பொழுது புலர்ந்தது. காலை உணவை அருந்தி விட்டு ஸு யுன் விடை பெற்றார். இருவரும் கலகலவெனச் சிரித்தனர். சிரித்தவாறே ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

-தொடரும்

31 Quotations on Worldly Wisdom from Sanskrit Literature (Post No.3921)

krishna flute, fb

August 2016 Good Thoughts Calendar

Compiled by london swaminathan

Date: 30 July 2016

Post No. 3921

Time uploaded in London :– 21-18

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Festivals in August:

 August 2-Aadi perukku/ Aadi Amavasya;

5-Adi Puram;

6- Naga Chturthi, 7-Naga Panchami;

12-Varalakshmi Vrata;

15-Indian Independence Day;

18-Raksha Bandhan/Yajur Upakarma;

19-Gayatri Japam;

25-Janmashtami/Gokulashtami

 

Auspicious Days: 21, 22, 29

Full Moon/Purnima- August 18

New Moon/Amavasya-  August 2

Ekadasi Fasting Days: 14 and 28

 krishna in sky

August 1 Monday

Chew like a goat, bathe like an elephant– (Sanskrit Proverb)

 

August 2 Tuesday

In the kingdom of the blind, the one eyed is the king–(Sanskrit Proverb)

 

August 3 Wednesday

There is no syllable that is not a sacred chant (mantra), nor a root that is not a medicine (Subhaasita ratna bhaandaagaara

and Ratna Samuccaya)

 

 

August 4 Thursday

Agriculture, devoid of personal supervision, is bound to fail– Kahaavatnaakar

 

August 5 Friday

When the moon comes, the stars follow unbidden- Pratijnaa yaugandharaayana

 

August 6 Saturday

 

Even though ordered the washerman will not mount his donkey– Kahaavatnaakar

 

August 7  Sunday

The autumnal clouds that ever thunder, shower never(Sanskrit Proverb).

 krishna statue

August 8 Monday

Once in someone’s hand, the weapon, though your very own becomes his — Kahaavatnaakar

 

August 9 Tuesday

Sans leaf, flower, or fruit, how can the goddess worshipped?– Kahaavatnaakar

 

August 10 Wednesday

Be not a lone wanderer in the woods — Satopadesaprabandha

 

August 11 Thursday

In the absence of attire, the anklets do not appear beautiful — Kahaavatnaakar

 

August 12 Friday

O friend! Do not roast Bengal-gram grain by grain — Kahaavatnaakar

August 13 Saturday

Holy water is not defiled by a crow sipping it — Padmapraabhrtaka

 

August 14  Sunday

When cats are away, the mice play–(Sanskrit Proverb)

 

 krishna,nettancode

 

August 15 Monday

Creepers in a garden are not to be robbed of their flowers — Mrccakatika and Caarudatta

 

August 16 Tuesday

In the Kaliyuga there is no purity either in matter or mind Visvagunaadarsacampu

 

August 17 Wednesday

In a land of mendicants, what work will a waherman have? –Caanakyasataka

 

August 18 Thursday

Laugh not alone –Pratimaanaataka

 

August 19 Friday

Difficult to safeguard what is given for safe keeping –Svapnavaasavadatta

 

 

August 20 Saturday

Question not the divine gestures and deeds of the ancient Kathaasarisaagara

 

August 21  Sunday

 For one who has not seen ghee, sesame oil tastes delicious —

Subhaasita ratna bhaandaagaara

yasotha feeding krishna,fb

 

August 22 Monday

Lo! A ripe jackfruit on the tree and the mouth is watering –Kahaavatnaakar

August 23 Tuesday

One thorn removes another — Panchatantra

August 24 Wednesday

The golden chain is around one’s neck, yet, the search for it is on in the temple crevice–(Sanskrit Proverb)

August 25 Thursday

Can a painted lion ever do anything that a real lion can? Rajatarangini

 

August 26 Friday

Never go anywhere uninvited — Satopadesaprabandha

 

August 27 Saturday

All eulogise the actions that suits them — Kahaavatnaakar

 

August 28  Sunday

None can learn to swim without plunging into waters — Kahaavatnaakar

RAKSHABANDAN1

August 29 Monday

Can anyone be harmed or honoured on the basis of caste? –Hitopadesa

 

 

August 30 Tuesday

Beggars are mindless of castes — Kahaavatnaakar

 

August 31 Wednesday

Festivals ought not to be so monstrous as to repulse others

 

 upa2005_2

Source:- Suuktisudhaa, Chinmaya International Foundation ( Those who need the matter in Nagari script as well as in English transliteration, may buy the book)

 –Subham–

 

 

மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்! (Post No.3020)

constituition

Article Written S NAGARAJAN

Date: 30 July 2016

Post No. 3020

Time uploaded in London :– 9-18 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்!

 

எல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.

 

அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில்  முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.

மூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

 sl constitution.jpg

ஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)

 

தங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது!

வாழ்க ஸ்ரீலங்கா!

 

அடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது!

வாழ்க அயர்லாந்து!

 

அடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்!

 

அங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு! புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ!

 

ஹிந்து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக!

 

வாழ்க நேபாளம்!

 nepal-constitution

ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா …  ??

 

ஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.

ஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.

ஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா?

 

(More secular than the so called secular in real sense, is it not?)

 

மத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து  மதம் தான், இல்லையா!

 

சிந்திக்க வேண்டும்!

**********

Salaries Anecdotes (Post No.3019)

posh-car-

Written by London Swaminathan

Date:29 July 2016

Post No. 3019

Time uploaded in London :–  9-12 AM

( Pictures are taken from various sources;thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Lavish Life!

A young man, employed at a very modest salary by a bank, began conspicuously to lead a lavish life, dressing flashily, buying a car, and otherwise giving evidence of sudden wealth.

Finally, the personnel manager felt called upon to speak about the matter and asked, “How is it that you, who are only receiving a salary of 20 dollars a week, can spend what must certainly be 75 dollars or more a week?

Why, it is very simple, the clerk replied unabashed, there are more than 200 employees here and every payday I raffle of my salary at 50 cents a ticket.

 

Xxx

chicago

Borrowing is Better!

A group of newspaper men were talking about the various has-beens that they had known. One old timer topped off this session by telling them about once a prominent Chicago newspaper man whom he had met just recently.

I ran into him the other day and he looked fit to bust. I asked him what the trouble was.

“Why, says he, I have just been offered a job isn’t Joe, Mo . And am I insulted.”

“Insulted, why should be that an insult?” I asked.

“It is the salary, it is the salary”, he shouts.

“They offered me 12 dollars a week”.

“Well, I didn’t want to insult him further by suggesting that he had not earned even that much in a long time so I just said, well that is better than nothing”.

“The hell it is, said the one-time big shot”.

“Why I can borrow more than that right here in Chicago”.

Xxx

Sealskin Wife!

The coloured sexton of a wealthy church had a very stylish mulatto wife.  Finding his domestic income not quite equal to his expenses, he decided to apply for an increase in salary. So he wrote a letter to the committee in charge with this explanation at the close

“It is mighty hard to keep a sealskin wife on a muskrat salary”.

(mulatto= a person of mixed white and black ancestry)

Xxx

Draw-a-Church-Step-1

Raise in Salary!

At a meeting of the church board the minister announced that he had had a call to go to another parish.

After wishing him well in his new field, one of the deacons asked “How much salary he was to get”.

“Three hundred dollars”, the minister replied.

“That is fine”, said the deacon, “I don’t blame you for going. But parson, don’t you think you should be a bit more exact in your language. That isn’t a call, that’s a raise”.

–Subham–

 

பானை உடைத்தவன் பாக்கியசாலி! (Post No.3018)

-font-b-Ceramics-b.jpg

Translated  by London Swaminathan

Date:28 July 2016

Post No. 3016

Time uploaded in London :–  8-16 AM

(Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

எழுத்துத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்:–

பிறருடைய கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் முதலியவற்றை மீண்டும் பயன்படுத்துகையில் எழுதியோருடைய பெயர்கள், வெளியிட்டவர்களின் பெயர்களை நீக்காமல் பகிருங்கள்; எழுத்தைத் திருடினால் உங்கள் மனைவி, மகள்கள், சொத்து, சுகம் இவைகளை வேறு ஒருவன்  திருடிவிடுவான் என்பதை அறியீரோ!

xxx

vase large_1027_2083145b

பீங்கான் தட்டுகள், குடங்கள்,பூக்கள் வைக்கும் ஜாடிகள், அலங்காரப் பொருட்களை விற்கும் கடையில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள். அவனுக்கோ கை நடுக்கம்.

 

நல்ல பூ வைக்கும் ஜாடியை உடைத்துவிட்டான்.

முதலாளி விரைந்தோடி வந்தார்.

 

இதோ பார், இதற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உனக்கு வேலை.

 

இதன் விலை என்ன?

முதலாளி: 300 டாலர். அவ்வளவு பணம் உன்னிடம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆகவே வாரா வாரம் உனது சம்பளத்தில் ஒரு டாலர் கழித்து வருவேன்.

ரொம்ப நல்லது, முதலாளி! எனக்கு 300 வாரங்களுக்கு வேலை இருக்கிறதே! அதுவே போதும்!!

 

.////

சந்தேகப் பங்காளிகள்!

 

இரண்டு பேர் கூட்டு சேர்ந்து வியாபாரம் நடத்தி வந்தனர். இருவரும் விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சென்றனர். கடலில் நீந்தக் குதிக்கும்போது ஒரு பார்ட்னர் சொன்னார்:-

 

அடக் கடவுளே? கடையின் கதவைப் பூட்டினேன். ஆனால் பணப் பெட்டியைப் பூட்ட மறந்து விட்டேன்!

 

மற்றொரு பங்காளி: அதனால் என்ன?

 

ஆமாம், ஆமாம், அதனால் ஒன்றுமில்லை! நீதான் என்னுடன் இருக்கிறாயே!!

 

////

confident-businessm

தன்னம்பிக்கை வாழ்க!

 

உலக வணிக கண்காட்சிக்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதற்குப் பொறு ப்பான குரோவர் வேலனைச் சந்திப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருந்தது. அவரைக் காண பலரும் காத்திருந்தனர்.

 

ஒருவருக்கு வேலை இல்லை. அவரைச் சந்தித்து வேலை வாங்க துடியாய்த் துடித்தார். அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

 

ரிசப்ஷன் (RECEPTION) பெண்மணியிடம் குரோவர் வேலன் அலுவலக அறை எது? என்று கேட்டார்.

 

ரிஷப்ஷன் பெண்:- அவர் மிகவும் (BUSY) ‘பிஸி; இப்பொழுது நீங்கள் அவரைச் சந்திக்க முடியாது.

 

அவர் விறு விறு என்று அந்த அறையை நோக்கி நடந்தார்.

 

பெண்: – அன்பரே! அவரை இப்பொழுது சந்திக்க முடியாது என்று சொன்னேனே! காதில் விழவில்லையா?

 

ஏ, பெண்ணே! நான் காலையிலும் மாலையிலும் கடவுளுடனேயே இரு முறை பேசுகிறேன். உங்கள் முதலாளியுடன் பேச முடியாதா? என்று சொல்லிக் கொண்டே குரோவரின் அறைக்குள் நுழந்தார்.

அவருக்கு வேலை கிடைத்துவிட்டது!

 

தன்னம்பிக்கை வாழ்க!

 

////

whistling

பாடினாலும் வேலை!

 

எட்வார்ட் ஹாரிமேன் என்பவர் பெரிய ரயில்வே கம்பெனியின் அதிபர். அவரிடம் பல அதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்..

ஒரு நாள் அவர் திடீரென அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தார்.

ஒரு அதிகாரி மேஜையின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு ஜாலியாக ‘விசில்’ அடித்து பாடிக்கொண்டிருந்தார்.

 

முதலாளியைப் பார்த்தவுடன் தூக்கிவாரி போட்டது.

உடனே நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.

 

சரி! நம்முடைய ‘சீட்டு’ இன்று கிழிந்தது– வீட்டுக்கு அனுப்பிவிடுவார் முதலாளி என்று நடுங்கினார்.

 

முதலாளி சொன்னார்: அட! இவ்வளவு கடுமையான வேலையிலும் உனக்கு நிதானமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கிறதே.

வெரி குட் (ரொம்ப நல்லது)

/////

 

ஏமாற்றியவருக்கு இரட்டைச் சம்பளம்!!

 

ஜேம்ஸ் கார்டன் பென்னெட் என்பவர் பெரிய பத்திரிக்கை முதலாளி. கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுபவர். யாரும் மதுபானம் குடித்துவிட்டு அலுவலத்துக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.

 

ஒரு பத்திரிகை அலுவலக ஊழியர்,  ‘ஓஸி’யில் கிடைத்த மதுபானத்தை  நன்றாக மாந்திவிட்டு அலுவலகத்துக்கு வந்தார். முதலாளி எங்கே இந்த அறைக்குள் வரப்போகிறார் என்று எண்ணி இருந்தார்.

 

அவரது “அதிர்ஷ்டம்” பென்னெட் உள்ளே நுழைந்தார். உடனே இந்த குடிகார பத்திரிக்கை ஊழியர் கொஞ்சம் பிரிண்டிங் இங்க் — மையை முகத்தில் பூசிக் கொண்டார்.

 

பென்னெட், அவரை, ஒரு பார்வை பார்த்தார். போர்மன் (FOREMAN), யார் இந்த ஆள்?

 

உடனே அவர் அவர் பெயரைச் சொன்னார்.

Ink-face-black-eyes-Ilaria-Berenice

முதலாளி: கடுமையாக உழைப்பவர் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிகிறது. இன்று முதல் அவருக்கு இரட்டைச் சம்பளம் கொடுங்கள்!

 

–SUBHAM—

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்! (Post No.3017)

Gallant

Article Written S NAGARAJAN

Date: 29 July 2016

Post No. 3017

Time uploaded in London :– 6-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

29-7-16 பாக்யா  இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்!

.நாகராஜன்

vision

மனதில் நினைப்பதை அறிவது என்பது குழந்தைகளின் மாயாஜாலக் கதைகளிலிருந்து இப்போது நிஜமாக ஆகிறது’                    – டெய்லி மெயில் பத்திரிகை                 

உலகம் மாறுகிறது! வேகமாக!! விளையாட்டாக முன்பு பேசியதெல்லாம் வினையாக ஆகிறது.

‘ஆமாம், இவரு நாம நினைச்சதை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாரில்லை!’ என்று கேலியாகப் பேசியதெல்லாம் பழைய கதையாக ஆகி விடப் போகிறது.

ஒருவர் என்ன நினனக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமில்லை. அதை திரையிலும் பார்க்க முடியும், இனிமேல்!

அறிவியல் காட்டும் அற்புதங்களில் இதுவும் ஒன்றாகச் சேரப் போகிறது!

அமெரிக்காவில் புரட்சிகரமான கண்டுபிடிப்பு வரிசைகளில் ஒன்றாக நினைத்ததைப் படமாகக் காட்டும் முயற்சி வெற்றியை நோக்கி பீடு நடை போடுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் குழு ஒன்று, இரு தன்னார்வலர்கள்  வீடியோ ஒன்றைப் பார்க்கும் போது அவர்களின்  மூளைகளை ஸ்கேன் செய்து அந்த முடிவுகளை வைத்து அவர்கள் பார்த்தனவற்றை மறுபடியும் உருவாக்க முய்னறு வெற்றி பெற்றுள்ளது!

இந்தக் குழுவினரின் கண்டுபிடிப்பு இப்போது துல்லியமாக இல்லை என்றாலும், இந்த உத்தியின் மூலமாக ஒருவர் மனதில் நினைப்பதைச் சித்திரமாக திரையில் படமிட்டுக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து விட்டது!

ஒரு மனிதனை நினைத்த போது விஞ்ஞானிகள் ஒரு மனிதனின் படத்தையும் அவன் பின்னணியில் ஆகாயத்தையும் உருவாக்க முடிந்திருக்கிறது.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாக் காலண்ட் (Professor Jack Gallant) இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

how it works

“நீங்கள் பார்க்கும் எதையாவது விவரிக்க வேண்டுமென்றால் இப்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அல்லது அதைப் படமாக வரைந்து காட்ட வேண்டியிருக்கிறது. இது சில சமயம் சரிப்பட்டு வருவதில்லை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப உத்தியானது குற்றம் ஒன்றைப் பார்த்த ஒருவர் என்ன பார்த்தார் என்பதைத் துல்லியமாக மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர உதவும்” என்கிறார் அவர்.

இது பற்றிய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் இந்த சோதனை எப்படி மூளை ஸ்கேன்கள் ஒருவரின் உள்ளார்ந்த எண்ணங்களைப் படமாகக் காட்ட முடியும் என்பதற்கான முத்தாய்ப்பான சோதனையாக அமைந்துள்ளது.

இன்று சர்வ சாதாரணமாக மருத்துவ மனைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (Functional magnectiv resonance imaging – fMRI) ஸ்கேனரை வைத்து அமெரிக்க குழுவினர் இரண்டு தன்னார்வலர்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும் போது  அவர்களின் மூளைகளை ஸ்கேன் செய்ததன் விளைவே இந்த சோதனையை வெற்றியாக்கியது.

ஒரு கணினியில் அவர்கள் தங்கள்  முடிவுகளை ஏற்றினர். அதில் அவர்கள் நினைத்த எண்ணங்களுக்கான வண்ணங்கள், உருவங்கள், இயக்கங்கள், செயல்பாடுகளில் ஏற்படும் பாட்டர்ன் எனப்படும் ஒழுங்குகள் ஆகியவற்றைத் தொகுத்தனர்.

பிறகு கம்ப்யூட்டர் மென்பொருளில் தன்னார்வலர்கள் இன்னொரு வீடியோவைப் பார்த்து அதனுடைய ஸ்கேன் முடிவுகளை ஏற்றினர்.

இப்போது கணினியிடம் அவர்கள் பார்த்ததைப் படமாக வரையுமாறு ஆணையிட்டனர்.

கணினி தந்த முடிவைப் பார்த்த பேராசிரியர் காலண்ட் அசந்து போனார்.

அவரது முடிவுகள் இன்னும் பரம இரகசியமாக உள்ளன என்றாலும் அவர் பெற்ற வெற்றியை உலகம் அறிந்து விட்டது!

துல்லியத்திற்கு மிக நெருங்கியவையாக கணினியில் படங்கள் அமைந்துள்ளன!

இன்னொரு சோதனையில் காமடி நடிகர் ஸ்டீவ் மார்டின் வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்ததை அப்படியே கணினி சித்தரித்துப் படமாக்கிக் காண்பித்தது. ஆனால் அவர் முகத்தைக் காண்பிக்க முடியாமல் அது திணறியது. ஆனால் எதிர்காலத்தில் அதனுள் உள்ளிடும் தகவல்கள் துல்லியமாக் அனைத்தையும் காட்டும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து மகிழ்கின்றனர்.

jack-gallant-engineering-thoughts

இன்னொரு சோதனையில் அதில் கலந்து கொண்டவர்களிடம் வானத்தின் பரப்பையும் அதில் விமானம் ஒன்று பறந்து செல்வதையும் காண்பித்தனர்.

கணினி வானத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. விமானத்தை அதனால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. ஆனால் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டால் எதையும் கணினி காண்பிக்கும் என்பது உறுதி.

‘நீங்கள் நினையுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பிடித்துத் திரையில் காட்டுகிறோம்’, என்கின்றனர் விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன்!

இந்த் புது விதமான உத்தி உலகில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை நினைத்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது, இல்லையா!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜப்பானில் பிறந்து அமெரிக்க  குடிமகனாக இன்று வாழ்பவரான ஷுஜி நகாமுரா (Shuji Nakamura – தோற்றம் 22-5-1954) ஒரு பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பெற்றார். லைட் எமிட்டிங் டையோடுகளைச் சுருக்கமாக நாம் இப்போது எல் இ டி (LED) என்கிறோம். ப்ளூ எல் இ டி கண்டுபிடிப்பிற்காக நகாமுரா நோபல் பரிசைப் பெற்றார்.

1979 ஆம் ஆண்டு மாஸ்டர் டிகிரியைப் பெற்ற அவர் டோகுஷிமா என்ற சிறிய நகரத்தில் இருந்த  நிசியா கெமிக்கல் (Nichia chemical) என்ற கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பலத்த போட்டியின் காரணமாக அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

 

ucsb_nakamura

1988இல் நகாமுரா நிறுவனத்தின் உரிமையாளரான் ஒகவா நொபுவோவிடம் நேரடியாகச் சென்றார். 30 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தருவதோடு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் ஆராய்ச்சி செய்ய அனுமதியையும் வேண்டினார். அவரே ஆச்சரியப்படும்படி உரிமையாளர் சரி என்று சொல்லி விட்டார்,

நகாமுரா தனது இடைவிடாத ஆராய்ச்சியினால் ப்ளூ எல் இ டிக்களை உருவாக்கும் உத்தியைக் கண்டு பிடிக்கவே கம்பெனி பெருத்த லாபம் அடைந்தது. கற்பனைக்கு எட்டாத அளவு லாபம்! ஆனால் நிறுவனமோ நகாமுராவைக் கண்டு கொள்ளவே இல்லை.

2000ஆம் ஆண்டில் நிறுவனம் நகாமுராவிடம் தனது கண்டுபிடிப்பை யாரிடமும் சொல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

கலிபோர்னியா பல்கலைக் கழகமோ இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று நகாமுராவுக்கு அறிவுரை வழங்கியது.

நகாமுராவின் மீது நிசியா, வணிக ரகசியங்களை வெளியிடுவதாக வழக்கு ஒன்றைத்  தொடர்ந்தது. நகாமுராவும் பதில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

1930 லட்சம் டாலரை (ஒரு டாலர் சுமார் 67 ரூபாய்கள்) த்னது கண்டுபிடிப்பிற்கான தொகையாக நகாமுரா கேட்டார். கம்பெனி வழங்கியதோ வெறும் 180 டாலர்கள் தான்!

இறுதியாக 81 லட்சம் டாலர் தர கம்பெனி சம்மதித்தது. நகாமுராவிற்கு இதில் ஏமாற்றம் தான்! என்றாலும் வெறும் 180 டாலரிலிருந்து 81 லட்சம் டாலரைத் தர கம்பெனி சம்மதித்ததை வழக்கின் வெற்றியாக அவர் ஏற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றில், குறிப்பாக ஜப்பானிய வணிக நிறுவன வரலாற்றில் இந்த வழக்கு குறிப்பிடத்தகுந்த வழக்காக அமைந்து விட்டது.நகாமுரா இன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல; பெரிய பணக்காரரும் கூட!

*********