பூமிக்கு ஓர் அலங்காரமாய், சிறந்த பொருள்களைக் கொடுத்து, அறிவினிடத்ததாய் (வயல்களுக்கு உரியதாய்), அமைந்த அகப்பொருளிலக்கணத் துறைவகைகளை உடையதாய், (வெப்பந்தணியத் தக்க இடத்தை உடைய நீராடு துறைகளை உடையதாய்) ஐந்திணை நெறி அளாவி – ஐந்து திணைகளின் இலக்கணத்தைத் தழுவி (ஐவகைகளின் நிலங்களின் வழியைச் சேர்ந்து), சவி உற தெளிந்து – செவ்வையாகத் தெளிந்து தண் என்ற ஒழுக்கமும் தழுவி – குளிர்ச்சியான நல்லொழுக்கத்தையும் கொண்டு, (குளிர்ச்சியாயப் பெருகும் தன்மையை உடையதாய்) சான்றோர் கவி என கிடந்த – சான்றோர் செய்த கவி போலப் பொருந்தி உள்ள கோதாவரியினை – கோதாவரி நதியை வீரர் கண்டனர்.
பலவகை அலங்காரம் கொண்டிருத்தல், உலகில் உயர்ந்தோரால் கொண்டாடப்படுதல், சிறந்த அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருளை உணர்த்துதல், தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவை விளைத்தல், அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்யச் செய்ய நன்கு புலப்படும் ஆன்ற பொருளை அறிவுக்கு உரியதாதல், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் தமிழ் இலக்கணம் ஐந்தினுள் பொருளின் பகுதியாகிய அகம், புறம் என்ற இரண்டில் அகத்தில் களவு கற்பு என்னும் ஒழுக்கங்களைக் கூறுதல்,குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்தின் ஒழுக்கங்களைக் கூறுதல், விளங்க வைத்தல் என்னும் அழகை முழுதுமாகத் தருதல், தண் என்று நல்லொழுக்கத்தை உணர்த்துதல் என இப்படி கவிதையின் சிறப்பைக் கூறி அது அப்படியே பெருகி ஓடும் கோதாவரி நதிக்கு ஒப்பிடுவது மிக்க சிறப்புடையதாகும்.
கோதாவரி நங்கை இராமன் முதலியோர் வருவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள். தெய்வ நதியான அவள் தனது தாமரை போன்ற முகம் மலர தனது அலைகளான கைகளால் பூக்களை வாரித் தூவி அவர்களை வணங்குகிறாள்.
இதை இரண்டாம் பாடல் விவரிக்கிறது:
“வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம் பொலிய வாசம்
உண்டுறை குவளை யொண்கணொருங்குற நோக்கி ஊழின்
தெண்டிரைக் கரத்தின் வாரித் திருமலர் தூவி”
என்று கூறுகிறான் கம்பன்.
இராவணன் சீதையைத் தூக்கிச் செல்ல, சீதை பல பொருள்களைப் பார்த்து இரங்கிப் புலம்புகிறாள்.
சீதை கோதாவரியைப் பார்த்து
‘கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
மாதாவனையாய் மனனே தெளிவாய்
ஓதாதுணர்வாருழையோடினை போய்
நீதான் வினையேனிலை சொல்லலையோ
என்கிறாள்.
கோதாவரி நதி இயல்பாகக் குளிர்ந்துள்ளது.
உள் நெகிழ்ச்சி உடையது. ஆகவே அன்னை போன்றது. அகம் தெளிந்துள்ளது.
இப்படிப்பட்ட அரும் நதியிடம் தன் நிலைமையைப் பற்றிக் கூறுமாறு சீதை வேண்டுகிறாள்.
ஆக கம்பனின் கவித் திறம் கோதாவரியை வர்ணிக்கும் போது உச்சகட்டத்தை அடைகிறது.
ஏனெனில் கவிதையின் இலக்கணத்தையும் கோதாவரியை காரணமாக வைத்துச் சொல்லி விடுகிறான் இல்லையா?!
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என வாங்கு;
பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15
மாண் இழை அரிவை காப்ப,
வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.
This prayer song was composed by Tamil Sangam poet Nallanthuvanar, who is praised by another famous Sangam poet Maruthan Ilanagan. This gives a full description of Lord Siva and his great actions.
1.Brahmins who study six subjects are taught Vedas by you.
2.You took the Ganges water in your hair to control its tremendous speed.
3.You burnt down the three flying metal forts (TRI PURA) in the sky (what I guess as Space Stations in orbit built by demons/Asuras where shiva used his laser weapon).
4.You are capable waging war where you never show your back- don’t run away—
5.You have blue throat– see the previous part about Siva drinking poison to save humanity
6.You have eight hands – such sculptures are seen in South East Asian temples
7.You did a dance called KODUKOTTI to the accompaniment of kettle drum where you took different postures. Kotti is the Armageddon dance at the end of the world. Hindus believe in cyclical yugas unlike Abrahamic religions.
8.You did Pandarangam dance to burn down the flying castles and smeared the ash in your forehead of the burnt down demons.
9.You also did another dance with the skull of brahma. He plucked out one of the five heads of brahma to control his arrogance.
10. Siva wears Tiger skin and Kondrai Flower garland.
No one can reject this prayer song because all that is said here is confirmed by Sangam poets elsewhere. On the basis of which voluminous devotional literature called Tevaram and Tiruvasagam came out from the great Four Saivite saints.
Xxx
நீ சிவபெருமானைப் போல வாழ்க.Long Live like Lord Siva
புறநானூறு 91 Pura Nanuru Verse 91
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி 5
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்
By Poetess Avvaiyaar on Athiyaman Anji
Whitish (with holy ash) forehead with crescent moon and sapphire colour throat Siva).
Xxx
புறநானூறு 55Purananuru 55
பாடல்
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, 5
Tamil poet Maruthan Ilanagan compared Pandya Nanmaran to the Third Eye of Lord Siva. Siva is unique in having Third Eye. Poet says the other two Tamil Kings Chera and Choza are like two normal eyes; but you are unique like the Third Eye of the Spot Necked God who with one arrow shot destroyed the Three Forts for saving Devas and he did it by using the snake as the bow string.
All the Puranic lore are known to every Tamil in ancient Tamil Nadu.
Xxx
Ravana lifting Kailash
கலித்தொகை 38
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
Venkai in Tamil has two different meanings: Tiger and a particular tree. Since it has got yellow flowers it looked like tiger, particularly when it sheds its flowrers on a rockunder the tree. So all Tamil poets punned on this word Venkai. The most celebrated poet Kabilar sings in Kalittokai (38):
An elephant in rut mistakes a Venkai tree fully in blossom to a tiger and in great anger it gores into its trunk with its tusks but the poor animal was unable to take off its tusks from it like Ravana who attempted to lift up the Kailas mountain with his arms but shrieked and suffered, when caught under pressure.
To be continued……………………………..Tags- Ravana, Kailash, Siva, Tripurantaka, Blue throat, Siva Dance
எங்கோ கிடைத்த பொருளை அதை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கவிபாடிய ஒரே புலவர் அம்பலவாண கவிராயர் ஒருவர்தான்
இரண்டு சம்பவங்கள் — நேர்மைக்குப் பரிசு
1,000 வெள்ளியுடன் பணப்பையைத் தொலைத்த வெளிநாட்டு ஊழியரிடம் அதைப் பத்திரமாக ஒப்படைத்த மற்றொரு ஊழியர் (பிப்ரவரி 2022 செய்தி)
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஹபிப் கான், இந்த மாதம் 14ஆம் தேதி, தமது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் 1,000 வெள்ளி ரொக்கம், வங்கி அட்டை, வேலை அனுமதி அட்டை அனைத்தும் இருந்தன.
உடனடியாக தமது Facebook பக்கத்தில் பதிவு ஒன்றைச் வெளியிட்டார்.
பணப்பையைக் கண்டால் தம்மை உடனே தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அவரது பதிவைப் பார்த்த பலர், உடனடியாக அதைப் பகிர்ந்தனர்.
பதிவு கிட்டத்தட்ட ஆயிரம் முறை பகிரப்பட்டது.
பணப்பையைக் கண்டெடுத்த ஜாகிர் ஹுசைன் எனும் மற்றொரு வெளிநாட்டு ஊழியரையும் அந்தப் பதிவு எட்டியது.
உடனே ஹபிபைத் தொடர்பு கொண்டு அவரிடம் பணப்பையைத் திருப்பிக் கொடுத்தார் ஜாகிர்.
பணப்பையில் அனைத்தும் பத்திரமாக இருந்ததைக் கண்டு ஹபிப் நெகிழ்ந்துபோனார்.
ஹுசைனை மனமாரப் பாராட்டி அவர் வெளியிட்ட பதிவும் இணையவாசிகளிடையே பரவியது.
“உழைத்து ஈட்டிய பணம் நிச்சயம் பத்திரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு இவ்வளவு பேர் மனமுவந்து உதவுவர் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.”
என்று நெகிழ்ச்சியுடன் பதிவில் குறிப்பிட்டார் ஹபிப்.
XXXX
நேர்மைக்குப் பரிசு
“நேர்மைக்கு கிடைத்த பரிசு” – வீதியில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த பெண் JANUARY 2022 NEWS
ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி பகுதியில் மூன்றே முக்கால் சவரன் தாலிக்கொடியை தவறவிட்டுள்ளார். இந்த நகையை அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் கண்டெடுத்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ருக்மணியின் செயலை பாராட்டும் விதமாக காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இப்படி வாரம் தோறும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளன .கண்டெடுத்த பொருளைத் திருப்பிக்கொடுக்க பெரிய மனது இருக்க வேண்டும் .அம்பலராயக் கவிராயர் தவிர யாரும் இதைப் பாடலில் எவரேனும் வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே .
XXX
உண்மை என்பதை மதிக்கும் ஒரே நாடு பாரதம் தான். சத்யமேவ ஜயதே என்ற உபநிஷத வாக்கியத்தை நாட்டின் சின்னத்தில் பொறித்த நாடு இந்தியா . இதைத் தமிழில் மொழிபெயர்த்து, வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை தமிழ்நாடு அரசும் பொறித்துள்ளது தாயார் சொன்ன ஹரிச்சந்திரன் கதை மஹாத்மா காந்திஜியின் வாழ்வை எப்படி மாற்றி, உலகப் புகழ்பெற வைத்தது என்பதை நாம் அறிவோம்.
வேத பாட சாலைக்குள் சிறுவன் நுழைந்த வயதில் முதல் பாடம் சத்யம் வத / உண்மையே பேசு என்பதாகும்.
குலம் கோத்திரம் தெரியாத சத்யகாம ஜாபாலா என்ற சிறுவன் கதை உபநிஷதத்தில் உள்ளது. எனக்கு அம்மா பெயர் மட்டுமே தெரியும்; அப்பா பெயர் தெரியாது; இதை அம்மாவே சொன்னாள் என்று சிறுவன் ஜாபாலா சொன்னதைக் கேட்ட குரு நெகிழ்ந்து போனார். நீ உண்மை பேசுவதால் வேதம் பயில அருகதை உடையவன் நீ என்று அவர் அறிவிக்கிறார்.
XXX
வி ஜி எஸ் என்ற வி ஜி சீனிவாசன் எங்களுக்கு மதுரை சேதுபதி உயர்நிலைப்பலள்ளியில் தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்படுத்திய குருநாதர் ஆவார். அவர் சொல்லிக்கொடுத்த நேர்மைக்கான வழி ஒன்றையும் நினைவு கூறுதல் பொருத்தம். யாராவது கள்ள நாணாயம் அல்லது கள்ள ரூபாய் கொடுத்து உங்களை ஏமாற்றினால் நீங்கள் அதை நைஸாக வேறு ஒருவரிடம் கொடுத்து ஏமாற்றாதீர்கள் ; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள் என்றார் . இதன் மூலம் ஏமாற்றும் சுழற்சியை நாம் வெட்டிவிடுகிறோம்
ரோட்டில் பணம் கிடைத்தால், அதை இழந்தவரிடம் சேர்ப்பிக்க முடியாவிட்டால், ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது கோவில் உண்டியலில் போட்டுவிடலாம். பணத்தை இழந்தவரிடம் கடவுளே சேர்ப்பித்து விடுவார்.
செய்நன்றி
மேற் கூறிய இரண்டு பணம், நகை கண்டெடுப்பு சம்பவங்களிலும் அவர்கள் செய்த உதவிக்கு உடனே நன்றி மறக்காமல் பதில் உதவியும், நன்றி யும் கிடைப்பதை பார்க்கலாம்.
வள்ளுவனும்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு –குறள் 110
xxxx
புறநானூறு
“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறநா 34:1-7) என்று புறநானூறு இயம்பும். இது வால்மீகி இராமாயண சுலோகத்தின் மொழிபெயர்ப்பு (See my earlier article)
(ஒருவர்) செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய் தீமையை
மறந்தபேரும் – ஒருவர் செய்த கெடுதியை மறந்தவர்களும், திரவியம்
தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல் சித்தம் வையாத பேரும் –
பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச்
செலுத்தாதவர்களும், கை கண்டு எடுத்த பொருள் கொண்டுபோய்ப்
பொருளாளர் கையில் கொடுத்தபேரும் – கையினாலே கண்டெடுத்த
பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க்
கொடுத்தவர்களும், காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும் – உலகில் ஒருவர் செய்த அறம்
கெடுதலுறாமற் காப்பாற்றுகின்றவரும், பொய் ஒன்று நிதி கோடிவரினும்வழக்கு அழிவு புகலாத நிலைகொள் பேரும் – நிலையற்ற செல்வத்தைக்
கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத
நிலையுடையவரும், புவிமீது தலைபோகும் எனினும் கனவிலும் பொய்ம்மை
உரையாத பேரும் – உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்
பொய் புகலாதவரும், இங்கு இவரெலாம் ஐய சற்புருடர் என்று உலகர்
அகம் மகிழ்வர் – இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய
நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.
இந்தப் பாடலில் உள்ள ஏனைய கருத்துக்களை முன்னரே விளக்கியுள்ளேன். பிறன்மனை நோக்காதவரை பேராண்மை — மஹா வீரம் — உடையவர் என்றான் வள்ளுவன். இந்தியாவில் இருவருக்கு மட்டுமே இந்த மாவீரர் பட்டம்; ஜிதேந்திரியர்களான — ஐம்புலன் வென்ற — சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் — அனுமன் — ஆகிய இருவருக்கு மட்டுமே மாவீரர் பட்டம் கிடைத்தது என்பதை முன்னேரே சொன்னேன்.
— சுபம் —-
tags- செய் நன்றி, நேர்மைக்கு பரிசு, உண்மை, பிறர் பொருள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 7
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
55) திருத்தணிகை
சேவற்கொடி யொடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
பாடல் எண் 300 – ‘வார் உற்று எழும்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளி ஜோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!
56) குன்றுதோறாடல்
உன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
பாடல் எண் 303 – ‘அதிருங் கழல் பணிந்து’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீயே புகலிடம் என்று மெய் நிலையைக் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும், சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!
57) குன்றுதோறாடல்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞானமூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பாடல் எண் 306 – ‘வஞ்சக லோப மூடர்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருள்வாயாக!
58) ஆறு திருப்பதி
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
பாடல் எண் 307 – ‘அலைகடல் நிகராகிய’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொதுமகளிருடன் இன்பமாகக் கூடி அவர்களுடைய பாரமான மார்பங்கங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை உனது திருவடி இணையினைப் பெறுமாறு இனி அருள்வாயாக!
59) காஞ்சீபுரம்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே
பாடல் எண் 314 – ‘புன மடந்தைக்கு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திக்குகள் தோறும் உள்ள யாவருக்கும் எடுத்து உபதேசிக்க, இனிமேல் நீ சற்று தயை கூர்ந்து வெட்சி மாலை மணம் வீசும் சிறிய சதங்கை அணிந்துள்ல உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
60) காஞ்சீபுரம்
பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே
பாடல் எண் 316 – ‘செறி தரும் செப்பத்து’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காஞ்சீபுரத்தில் நின்று அருளும் பெருமா நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று மனத்தின் செயல் எல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?!
61) காஞ்சீபுரம்
மற்றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
பாடல் எண் 319 – ‘தசைதுறுந் தொக்கு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பிறர் யாவரும் இகழும் படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும் அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?!
62) காஞ்சீபுரம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
பாடல் எண் 338 – ‘கமலரு சோகாம்பர’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
63) காஞ்சீபுரம்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யே தருத் தருள்வாயே
பாடல் எண் 343 – ‘சீசி முப்புரக் காடு’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற் கமல மலரை என் மீது தரிக்கச் செய்து அருள்வாயாக!
64) காஞ்சீபுரம்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே
பாடல் எண் 345 – ‘படிறொழுக்கமும்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அந்த) கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற எனது இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
நான் எழுதிய கீழ்கண்ட புஸ்தகங்களில் இந்துமதம் உலகம் முழுதும் இருந்தததற்கான வரலாற்று, இலக்கிய , தொல்பொருட் துறைச் சான்றுகளை கொடுத்துள்ளேன் ; படித்து மகிழுங்கள்
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
முட்டாள்கள் பற்றி வள்ளுவன், பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை :
வள்ளுவன் 1330 அருங் குறள்களை யாத்தான்;பர்த்ருஹரி 300 பாக்களில் வரிக்கு வரி குறள் போலவே பேசுகிறார். பஞ்சதந்திரம் இயற்றிய பிராஹ்மணன் விஷ்ணுசர்மனோவெனில் கதைக்குள் பொன் மொழிகளைப் பொழிகிறார். நாம் எல்லோரும் பஞ்சதந்திரம் என்றால், ஏதோ மிட்டாய், சாக்லெட் சாப்பிடும் சின்னப் பயல்களுகான கதை என்று நினைப்போம். ஆனால் அதில் திருக்குறளையும் பர்த்ருஹரியையும் விடக் கூடுதல் அறிவுரை உளது. நிற்க.
அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவான்.
இதற்கு பஞ்ச தந்திரம் எழுதிய விஷ்ணு ஸர்மா ஒரு நல்ல கதை சொல்லுவார்.
ஒரு காட்டில் குளிர்காலம் வந்தது; குரங்குகள் வாடைக் காற்றில் வாடின. மாலை நேரம் வந்தது; அப்பொழுது மின்மினிப் பூச்சிகள் ‘பளிச் பளிச்’ சென்று ஒளி உமிழ்ந்து பறந்தன. ஒரு குரங்குக்கு நல்ல யோஜனை பிறந்தது. ஒரு மின்மினிப் பூச்சியைப் பிடித்து, காய்ந்த இலை, சருகுகளுக்கு அடியில் வைத்து தீ எரிவதாகக் கற்பனை செய்து கொண்டு கை,கால்களைத் தடவி சூடு உண்டாக்கின. குளிரால் மிகவும் வாடிய ஒரு குண்டுக் குரங்கு வாயால் ஊதி மேலும் தீயை எழுப்ப முயன்றது. இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த தூக்கணங் குருவிக்கு ஒரே சிரிப்பு. இந்த முட்டாள் குரங்குகளுக்கு கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லுவோம் என்று மரத்தின் மேலிருந்து சொன்னது:
ஓ, குரங்குகளே! அது தீப்பொறி அன்று; வெறும் பூச்சிதான்; அதனால் தீ உண்டாகாது- என்று.
குரங்குகளோ இதை செவிமடுக்கவில்லை. அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.
குருவிக்கு வருத்தம்; கொஞ்சம் நன்றாகக் காதில் ஓதுவோம் என்று பறந்து வந்து ஒரு குரங்கின் காதில் முன் சொன்னதை ஓதியது. கோபம் அடைந்த அந்தக் குரங்கு குருவியைப் பிடித்து, ஒரு பாறையில் மோதிக் கொன்றது.
இது போலப் பஞ்சதந்திரக் கதைகளில் நிறைய கதைகள் முட்டாளின் சிறுமைதனைப் பேசும்
விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,
பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;
பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;
குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது
என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;
மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,
தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி
வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை
குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும்
இவ்வாறு ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் இடையிலும் முடிவிலும் விஷ்ணுஸர்மா பாடிக்கொண்டே கதை சொல்லுவார்.
Date: 21 September 2018
xxx
Here is verse 15 of Arappalichura Sataka by Ambalavana Kavirayar
சில புலவர்கள் மனதை அடக்குவது எவ்வளவு கடினம் என்பதற்கு செய்ய முடியாத விஷயங்களின் பட்டியலைத் தருகிறார்கள் ; இன்னும் சிலர் பெண்களை நம்பக்கூடாது என்பதற்கு ஒரு பட்டியலைத்
தருகிறார்கள். அவைகளை ஒப்பிடும்போது அம்பலவாண கவிராயர் சொல்லுவது நன்றாகப் புரியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடும் முட்டாள்களை பிடிவாதக்காரர்களையும் நாம் தினசரி வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறோம்.முட்டாள்களுக்கு அறிவுரையும் வழங்கக்கூடாது . தமிழிலும் ஒரு சொல் வழக்கு உண்டு. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவனைப் போல பாசாங்கு செய்வோரோனை எழுப்பமுடியாது ; முட்டாள்களைத் திருத்த முடியாது
वरं पर्वतदुर्गेषु
भ्रान्तं वनचरैः सह
न मूर्खजनसम्पर्कः
सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥
வரம் பர்வத துர்கேஷு
ப்ராந்தம் வனசரை ஸஹ
ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ
ஸுரேந்த்ர பவனேஸ்வபி- நீதி சதகம்
பொருள்
முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட
காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்..
வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-
குறள் 834, 835
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்- 834
நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு-835
ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.
He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him. He who knows not, and knows that he knows not, is simple. Teach him. He who knows, and knows not he knows , is asleep. Wake him. He who knows, and knows that he knows is wise. Follow him.
—subham—
Tags- முட்டாள், அறப்பளீசுர சதகம், பர்த்ருஹரி, பஞ்ச்ச தந்திரம், குறள் , திருத்த முடியாது , அம்பலவாணர், செயற்கருஞ் செயல்
Lord Siva has been a very popular God among Tamils for over 2000 years. Two things are noticeable in Sangam Tamil books. His name SIVA did not appear anywhere in Sangam books. Like Rig Veda other names of him such as Rudra, Neelakanta, Tri Purantaka, Trayambaka, Crescent moon Bearer etc are used by Sangam Tamil poets. Another noticeable feature is his full appearance is described. This confirms that his paintings or idols or statues were there in nook and corner of Tamil Nadu. Later Tamil epic Silappadikaram confirmed the existence of temples of gods in Tamil Nadu.
Except Prof. Wilson, all others argued that the name SIVA சிவ did not find a place in the Rigveda. Sivaya Namah appeared first in the Yajur Veda (Rudram -Chamakam). In the same way Sivaya Namah appeared in Tamil only from sixth century CE only. Tamil saints Appar, Sambandar and Manikaavasagar spread it from the devotional period. No where in Sangam poems the name Siva occurred.
xxx
MR RUDRAKSHA
Another interesting feature is Tamils translated the Sanskrit names of SIVA verbatim.
ருத்ர- Rudra
Mr Rudraksha of Kadiyalur கடியலூர் உருத்திரங்கண்ணனார்- Kadiyalur Uruththirankannanar is the author of Sangam Poems Perumpaanaatruppadai and Pattinappaalai. His name is the exact translation of RUDRAKSHA- Rudra+ Aksha.
கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA
This is confirmed by the doyen of Tamil literature U Ve Sa and Kanchi Paramacharya (1894-1994). They translated Kamak Kanniyar (kaamakkanniyaar) as Kamakshi. Aksha= Eye.
So Sangam Tamil poets had the name of Kamakshi and Rudraksha
XXX
NEELAKANTA நீலகண்ட/ நீலமணிமிடற்று- Tamils were great masters of Hindu Puranas. When the Milky Ocean was churned by the Devas and Asuras, poison and Amrita came out. Lord Siva drank the poison to save the humanity, but Uma, his wife, got shocked and stopped it halfway through his throat. So he is called Blue Necked or Sapphire Necked.
xxx
TRI PURA ANTAKA த்ரிபுராந்தக- Lord Siva destroyed Three Space Stations of demons that were flying in the orbit . So he is known as the Destroyer of Three Forts
TRAYAMBAKA த்ரயம்பக- Lord Siva is famous for his Third Eye- The Eye of Wisdom. When Manmata came to give him the sexual desire , he was burnt alive with his Wisdom Eye. This is called Third Eye. Tamils sang about it whenever they mentioned Manmata (Churner of Mind). So siva was called Three Eyed= TRAYAMBAKA= Three Eyed. Sangam poets translated it verbatim as முக்கண்ணான்.
xxx
ஈர்சடை அந்தணன்/ பிறைநுதல் Wet Hair and Crescent Moon
Sangam Tamils knew the story of Descent of Holy River Ganga from the sky . To control its tremendous force Siva took it in his hair and let it in manageable speed on land and so his hair is always wet/ ஈர்சடை அந்தணன்.
Even today in Tamil Nadu temples, the Abisheka of Siva is very popular. He is called Abhisheka Priya while Vishnu is called Alankara Priya
Siva likes bathing and Vishnu likes decorations (with dress and jewels).
Siva is sporting the crescent moon on his forehead பிறைநுதல்.
Since Sangam Tamils described all these minute details, we are certain that they were seeing it in various places in pictures and idols.
xxx
MR RED
Red colour signifies auspiciousness and perfection.
Siva, Sivaniya (Tolkappiyar’s favourite word) ,Sivappu in Tamil are synonyms for red and perfection செம்மை, செந்தமிழ்.
Rudra is also Red, Red Faced in Sanskrit. The famous mantra Rudra and Chamaka of Yajur Veda shows both these (auspiciousness, perfection) aspects. All orthodox Brahmins recite it every day and the bathing of God is done with this mantra in all Siva temples many times a day.
Tamil poets of Sangam Age never missed a chance in mentioning this RED colour of Siva. They called him Mr Red or Mr Red Body. Because of his rosy red body, his hair also is portrayed reddish in colour. They compared it with flame.
Two thousand years ago, Tamil poets described all Hindu gods in colourful pictures which shows they were deep into Puranic lore. If one reads all these descriptions in Tamil one will date all the Sanskrit Puranas in BCE period. Sanskrit Puranas must be very popular in BCE. All the Gods’ descriptions in Tamil are nothing but verbatim translations of those works.
TAMIL REFERENCES
Now I will give all Tamil references from Sangam Literature:
Lord Siva is RED like dusk
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின், மற்று இவள்
அகநானூறு Akananuru 360
The sky in dusk looked like two great gods (Red like Siva, and dark like Vishnu)
In the payer verse of Akananuru also, the poet said செவ்வான் அன்ன மேனி– body like dusky red sky
Purananuru 56 portrayed him as one with flame coloured and loose/ untied hair புறநானூறு 56 எரி மருள் அவிர்சடை
Xxx
பிறைநுதல்
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
கலித்தொகை 104-11
In these two short sentences Siva is shown with crescent moon sporting , three eyed, shiny ,light emitting , lowered/untied hair.
Xxxx
ARUDRA STAR GOD
Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is( golden red) like Shanbaga flower
எந்த தேசத்தில் வசிக்க விரும்ப வேண்டும் என்பதைப் பற்றி நாரத மஹரிஷி காலவருக்குக் கூறுகிறார்.
இந்த சம்வாதம் சாந்தி பர்வத்தில் 293வது அத்தியாயத்தில் காணலாம்.
அவற்றில் சில முக்கிய கருத்துக்களைக் கீழே காணலாம்:
சிஷ்யோபாத்யாயிகாவ்ருத்திர்யத்ர ஸ்யாத் சுசமாஹிதா |
யதாவச்சஸ்த்ரசம்பன்னா கஸ்தம் தேஷம் பரித்யஜேத் ||
எந்த தேசத்தில் குரு சிஷ்யர்களுடைய செய்கையானது சாஸ்திரப்படி ஏற்பட்டதும் நன்றாக ஸ்தாபிக்கப்பட்டதுமாய் இருக்கிறதோ அந்த தேசத்தை எவன் தள்ளுவான்?
ஆகாஷஸ்தா த்ருவம் யத்ர தோஷம் பூயுவிபஸ்சிதாம் |
ஆத்மபூஜார்பிகாமோ வை கோ வஸேத் தத்ர பண்டித: ||
எந்த இடத்தில் வெளியிலுள்ளவர்கள் வித்வான்களுக்கு நிச்சயமாக தோஷத்தைச் சொல்லுவார்களோ அந்த தேசத்தில் தனக்கு கௌரவத்தை விரும்பும் எந்தப் பண்டிதன் தான் வசிப்பான்?
யத்ர சம்லோடிதா லுப்தை: ப்ராயஷோ தர்மசேதவ: |
ப்ரதீப்தமிவ சைலாந்தம் கஸ்தம் தேசம் ந சம்த்யஜேத் ||
எந்த தேசத்தில் லோபிகளாலே தர்மத்தின் அணைகள் பெரும்பாலும் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்த தேசத்தை, முந்தானை பற்றி எரிகின்ற ஆடையைப் போல யார் தான் விடமாட்டான்?
யத்ர தர்மமநாஷங்காச்சரேயுர்வீதமத்ஸரா: |
பவேத் தத்ர வஸேஸ்ஸைவ புண்யஷீலேஷு சாதுஷு ||
எந்த தேசத்தில் பயமும் மத்ஸரமுமின்றி ஜனங்கள் தர்மத்தைப் பின்பற்றுகின்றார்களோ அங்கே பிறக்க வேண்டும். புண்ணியசீலர்களான சாதுக்களிடத்தில் வசிக்க வேண்டும்.
தர்மமர்தோநிமித்தம் ச சரேயுர்யத்ர மானவா: |
ந த்ஜாமமிசேவேஜ்ஜாது தே ஹி பாபக்ருதோ ஜனா: ||
எந்த தேசத்தில் பணத்தை அடைவதற்காக தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களிருக்கும் இடத்தின் அருகே ஒரு போதும் வசிக்கக் கூடாது. அவர்கள் பாவத்தை அல்லவா செய்கின்றனர்!
எந்த இடத்தில் ஜனங்கள் பாவத் தொழிலால் உயிர் வாழ விரும்புகிறார்களோ அந்த இடத்திலிருந்து பாம்பு இருக்கும் வீட்டை விட்டு ஓடுவது போல வேகமாக ஓட வேண்டும்.
யத்ர ராஜா தர்மநித்யோ ராஜ்ய தர்மேண பாலயேத் |
அபாஸ்ய காமான் காமேஷோ வஸேத் தத்ரவிசாரயன் ||
எந்த நாட்டில் எல்லா செல்வங்களும் உள்ள அரசன் காமங்களை விலக்கி தர்மத்தை நித்தியமாகக் கொண்டு தர்மத்துடன் நாட்டை பரிபாலனம் செய்வானோ அந்த நாட்டில் விசாரிக்காமல் வசிக்க வேண்டும்.
யதாஷீலதா ஹி ராஜான்: சர்வான் விஷயவாஸின: |
ஸ்ரேயஸா யோஜயத்யாஷு ஸ்ரேயஸி ப்ரத்யுபஸ்திதே ||
அரசர்களின் சீலத்துக்கும் ஸ்வபாவத்திற்கும் தக்கபடி மக்களும் இருப்பார்கள் அல்லவா? தமக்கு நன்மை ஏற்பட்ட போது தேசவாசிகளான அனைவரையும் சீக்கிரம் ச்ரேயஸோடு சேர்ப்பிப்பார்கள்.
இப்படி ஒரு நீண்ட உரையை நாரதர் காலவரிடம் நிகழ்த்தினார்.
(அதன் சாரம் மேலே தரப்பட்டுள்ளது.)
தர்மத்துடன் வாழும் அரசன் இருக்கும் இடத்தைச் சேர்.
வித்வான்கள் மதிக்கப்படும் இடத்தைச் சேர்.
எங்கே சாதுக்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே சேர்.
தர்மத்தை தர்மத்திற்காகச் செய்ய வேண்டுமே அல்லாது பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யக் கூடாது.
அரசன் தர்மத்துடன் நாட்டை அரசாண்டால் அவனிடமிருக்கும் அனைத்து நலன்களும் மக்களையும் சேரும்.
எந்த நாடு மேன்மையை அடையும் என்பதற்கான காரணங்களை தேவரிஷி நாரதர் கூறுவது பொருள் படைத்த ஒன்றாக அமைகிறது.