அருணகிரிநாதரும் தமிழும்! – 1 (Post No.11,387)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,387

Date uploaded in London – –    23 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 1

ச.நாகராஜன்

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

1) திருப்பரங்குன்றம்

வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்

பாடல் எண் 14 – சருவும் படி எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வளமான தமிழைப் பயில்கின்றோர் பின்னால் திரிகின்றவன்

2) திருச்செந்தூர்

தமிழினி தென்காற் கன்றிற்

   றிரிதரு கஞ்சாக் கன்றைத்

     தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்

சிவ வடி வங்காட் டுஞ்சற் குருபர

பாடல் எண் 26 அவனி பெறுந்தோட்டம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தமிழ் போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, அன்று அற்புதமாக நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு பேரின்ப உண்மையாம் மங்களப் பொருளைக் காட்டிய சற்குருபரனே!

3) திருச்செந்தூர்

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழைரு

   செவி குளிர இனியதமிழ்     பகர்வோனே

பாடல் எண் 28 : அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவனான அகத்தியனின் உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர இனிய தமிழை ஓதியவனே!

4) திருச்செந்தூர்

தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே

பாடல் எண் 52 : கொடியனைய எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தமிழில் வல்லவனே! உயர்ந்த பரம் பொருளாகிய சங்கரன் வணங்கும் தம்பிரானே!

5) திருச்செந்தூர்

புகலரியதாம் த்ரி சங்கத்

   தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்

     புவியதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்

புனிதம் இலி  மாந்தர் தங்கள்

   புகழ் பகர்தல் நீங்கி நின் பொன்

       புளக மலர் பூண்டு வந்தித்   திடுவேனோ

பாடல் எண் 60 : தகர நறை பூண எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சொல்வதற்கு அரியதாம் முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும் பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும் புனிதமில்லாத மக்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பேசுதலை விட்டு விட்டு உனது அழகிய இன்பம் தருகின்ற திருவடி மலர்களை மனதில் கொண்டு துதிக்க மாட்டேனோ?

6) திருச்செந்தூர்

தகைக்கும் தனி திகைக்கும் சிறு

   தமிழ்த் தென்றலி னுடனேநின்

றெரிக்கும் பிறையெனப் புண்படு

   மெனப் புன்கவி சிலபாடி

     இருக்கும் சிலர்

பாடல் எண் 64 : தரிக்குங்கலை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தனிமையில் நின்று திகைக்கின்றேன். மெல்லிய இனிய தென்றல் காற்றுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன் என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.

தமிழ்த் தென்றல் – இனிய தென்றல்

7) திருச்செந்தூர்

மழுக்கைக் கொண்ட சங் கரர்க்குச் சென்று வண்

  தமிழ் சொற் சந்தமொன்று அருள்வோனோ

பாடல் எண் 71 : நிதிக்குப் பிங்கலன் எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  மழுவைக் கையில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே!

8) திருச்செந்தூர்

துணைச் செம்பொற் பதத்து இன்புற்று

 எனக்கென்று அப் பொருள் தங்கத்

     தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்

பாடல் எண் 79 :பருத்தந்த எனத்  தொடங்கும் பாடல்

பொருள் :  உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படியாகத் தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய்!

9) திருச்செந்தூர்

முந்து தமிழ் மாலை கோடிக் கோடி

   சந்தமொழு நீடு பாடிப் பாடி

     முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே

பாடல் எண் 91 : முந்து தமிழ் மாலை கோடிக் கோடி எனத்  தொடங்கும் பாடல்

 பொருள் :  மொழிகளில் முந்தியுள்ள தமிழ் மொழியில் பாமாலைகளை கோடிக் கோடிக் கணக்கில் சந்தப் பாக்களின் வகையில் நீண்டனவாகப் பாடிப் பாடி அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல்… 

10) திருச்செந்தூர்

வாய்ப்புற்ற தமிழ் மார்க்கத் திண் பொருள்

   வாய்க்குச் சித்திர முருகோனே

பாடல் எண் 93 : மூப்புற்றுச் செவி கேட்பற்று எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என ருத்திரசன்மனாக வந்து அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே!

விளக்கம் : இந்தப் பாடல் விளக்கும் சம்பவம் இது:

மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் ஒரு உரையை எழுதினார். அந்த உரையே சிறந்த உரை என்று சங்கப் புலவர்களிடையே முருகனே ருத்திரசன்மனாக வந்து நிலை நாட்டினான்.

இதைத் திருவிளையாடல் புராணத்தில் விளக்கமாகக் காணலாம். 

*** 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

 புத்தக அறிமுகம் – 95

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. சூரியனிலிருந்து பூமியை நகர்த்தப் போகிறார்களா?

 2. சூரியனில் வெடிப்பு – பூமியைப் பாதிக்குமா? 

 3. நிலவில் குண்டு போட அமெரிக்கா திட்டம்  

 4. பூமி ஒரு குக்கிராமம்  

 5. புதிய கோணத்தில் பூமியின் வளர்ச்சி….

 6. சூடாகும் பூமி    

 7. ஓஸோன் துளை பெரிதாகிறது   

 8. விண்வெளிச் சாலை  

 9. விண்கலத்தின் ஓட்டுநர் அறை எப்படி இருக்கும்?  

10. ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்த நாஸா.  

11. விண்வெளியில் குப்பை கூட்ட லேசர் விளக்குமாறு

12. விண்வெளி ஜோதி

13. வானிலையை மாற்றும் நட்சத்திர ரகசியம்  

14. சிரியஸ் நட்சத்திரம்   

15. அமெரிக்காவில் சுனாமி ஆபத்து  

16. அண்டார்டிகா ஆபத்து 

17. அண்டார்டிகா பனி நெடுஞ்சாலை 

18. பனி மனிதன் இருக்கிறானா?

19. பனி மனிதன் இருக்கிறான்  

20. முதல் மனிதன் தோன்றியது எங்கே?   

21. தூக்கம் விளக்கும் ரகசியங்கள்    

22. ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? 

23. அரிய வகை மரம்

24. நோய் தீர்க்கும் மூலிகைகள் 

25. சிகரெட்டும் போதைப் பொருளே  

26. அபாயத்தில் மனித குலம்   

27. லோகி பேர்ட்

28. ஆயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்த அபூர்வ மேதை 

29. காலப் பயணம்   

30. மூளையை நூறு விழுக்காடு முழுவதுமாகப் பயன்படுத்த ஏழு

   அதிசய வழிகள்  

31. சித்திரவதை

32. வியர்வை ஊசி!  

33. பெண்களைக் கவரும் நீலக் கண்கள்    

34. டெலிவிஷனிலிருந்து விஷப்புகை

35. செயற்கைப் பெண் இயந்திரம் தயார்                                              

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

This amazing book consists of incredible phenomenon and peculiar astonishing facts from all over the world. Interesting to read about the use of Laser Cannons to sweep up the galaxial garbage and also America’s plan to bomb the moon and galaxial road. The statistical analysis of imagining the earth as a tiny city excites the readers wondrously. This book also contains segments such as igloo men, first man of the world and time travel etc. 

உலகின் பல்வேறு அதிசய நிகழ்வுகளையும், வித்தியாசமான செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல். விண்வெளியில் குப்பையைக் கூட்ட லேசர் விளக்குமாறு தேவைப்படும் எனும் செய்தி அதிசயிக்க வைக்கிறது. நிலவில் குண்டு போட அமெரிக்கா எடுத்திருக்கும் திட்டம், விண்வெளிச் சாலை போன்றவை பிரமிக்க வைக்கின்றன. பூமியை ஒரு குக்கிராமமாகக் கற்பனை செய்தால் எப்படி இருக்கும் என ஒரு புள்ளியியல் விவரணை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இன்னும் பனிமனிதனைப் பற்றிய செய்திகள், உலகின் முதல் மனிதனைப் பற்றிய சேதிகள், காலப்பயணம் என பலதரப்பட்ட விஷயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது இந்நூல்.*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs Lesson 16 (8 Birds in One Stone)- Post No.11,386

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,386

Date uploaded in London – 22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Tamils divided the entire living beings into two divisions

உயர் திணை Uyar Thinai= Higher beings (Devas, Gods, Human beings)

xxx

அஃறிணை Ah Rinai = that which is not higher (animals, in animate objects)

You use the same verb for in animate objects and animals

Xxx

 Today I gave you eight verbs in two tables; that is eight mangoes in one stone in Tamil or 8 birds in one stone in English.

If u know the stem and suffix you will be able to do the conjugation.

NEW VERBS

Kala= mix= கல

Ira = die= இற

Iza (ila) = lose = இழ

xxx

In another table

Ala = measure= அள

Kada= pass by = கட

Mudi = finish = முடி

Tholai = lose something = தொலை

Kalai  -= shuffle, change the order, disperse கலை

xxx

இதுவரை நாம் கற்றதை நினைவு கூறுவோம்

Remember – Irregular verbs such as Vaa= come and Po=Go do not obey the rules; you just memorise them.

xxxx

நிகழ்காலம் Present

Add KIRA and then PGN suffix

வினைச் சொற்களுடன் ‘கிற’ என்பதைச் சேர்த்து இறுதியில் தன்மை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஆண் , பெண் , ஜடப்பொருள் அல்லது அஃறிணை  என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இறுதியில் ஒருவரா பலரா என்பதற்கு ஏற்றவாறு விகுதியை சேர்க்கவேண்டும் .

‘கிற’ என்பதையும் கின்ற KINDRA is also similar to KIRAஎன்பதையும் பயன்படுத்தலாம். ஆனால் அது பேச்சு வழக்கில் அதிகம் இல்லை

சாப்பிடுகிறேன் ,சாப்பிடுகின்றேன்

xxx

வருங்காலம் Future

Add V or PP and then PGN

மேற்கூறி யது போலவே ; ஆனால் கிற என்பதற்குப் பதிலாக வ் அல்லது ப் ப் என்பதை பயன்படுத்துவோம்

சாப்பிடுவேவ்  sasppiduVen

படிப்பேன் padiPPen

இறந்த காலம்  Past Tense (very difficult 7 different types with sub divisions as well

ஏழு வகுப்பு வினைச் சொற்களும் வேறு வேறு விதமாக செயல்படும்

xxx

கட்டளை வாக்கியம் Command or Request (Imperative)

ஒருமையில் வினைச் சொல்லை அப்படியே பயன்படுத்தலாம்

வா, போ , செய், சாப்பிடு , படி

பன்மை அல்லது மரியாதை கொடுக்கையில் உங்கள் என்பதை சேர்க்க வேண்டும்

அப்படிச் சேர்க்கையில் இடையில் சில எழுத்துக்களை சேர்ப்போம் அல்லது நீக்குவோம் Add Ungal following  morphophonemic rules

xxxx

Negative Imperative

எதிர்மறை கட்டளை வாக்கியங்களில்

ஆதே அல்லது ஆதீர்கள் என்பதை வினை எச்சகத்துடன் சேர்க்கவும்

Add AATHE or AATHEERKAL

To be continued………………………….

 Tags- 8 verbs

தீ எரிக்காது- இந்து மத அற்புதம்-3 (last part)-Post No.11,385

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,385

Date uploaded in London – 22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடக்கூடாது என்று சீதா தேவி வெளியிட்ட வேண்டுகோளை அக்கினி பகவான் ஏற்றான் . ஏனெனில் அவள் கற்புக்கரசி.; மனம், மொழி, மெய் மூன்றின் மூலம் வேறு ஆடவணை நினையாத பெண்களுக்கு அற்புத சக்தி உண்டு என்று வள்ளுவனும் சொன்னான்.

சீதையின் ஸ்லோகங்களை வால்மீகி முனிவரின் வாயிலாகத் தொடர்ந்து பார்ப்போம்:- இவை சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள்

हनुमज्जनकश्चापि पुच्छानलयुतोऽनिलः।।5.53.33।।

ववौ स्वास्थ्यकरो देव्याः प्रालेयानिलशीतलः।

ஹநுமஜ் ஜனகஸ் சாபி  புச்சானலயுதோ அனிலஹ

வவெள ஸ்வாஸ் த்ய கரோ தேவ்யாஹா ப்ராலேயானில சீதலஹ 

தெய்வீகப்  பெண்ணின் (சீதையின்) மனதைச்  சாந்தப்படுத்தும் முகமாக,  வாயு பகவானும் அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ மீது குளிர்ந்த காற்றை வீசினான்.

(அனல = அனல்/ தீ ; அநில= காற்று; சீதல   = குளிர்ச்சி), புச்சம்= வால்

Xxx

दह्यमाने च लाङ्गूले चिन्तयामास वानरः।।5.53.34।।

प्रदीप्तोऽग्निरयं कस्मान्न मां दहति सर्वतः।

தஹ்யமானே ச லாங்கூலே சிந்த்யாமாச வானரஹ

ப்ரதீப்தோ அக்னிரயம்  கஸ்மான்ன மாம் தஹதி ஸர்வதஹ 

வால் எரியும்போது , எல்லா பக்கங்களிலும் எரியும் தீ  எப்படி தன்னைச் சுடவில்லை என்று அந்த வானரமும் வியப்புற்றது .

வானர = மனிதக் குரங்கு= வன+ நர = வனத்தில் வாழும் மனிதன்/நரன்

லாங்கூலம் = வால் ; தஹ்ய = தகித்தல் ; மாம் = என்னை; சிந்த்யா = சிந்தித்தது ; அக்னி = தீ

Xxx

दृश्यते च महाज्वालः करोति न च मे रुजम्।।5.53.35।।

शिशिरस्येव सङ्घातो लाङ्गूलाग्रे प्रतिष्ठितः।

த்ரச்யதே ச மஹா ஜ்வாலஹ கரோதி  ந ச மே ருஜம்

சிசிரஸ்யேவ ஸங்காதோ  லாங்கூலாக்ரே ப்ரதிஷ்டிதஹ

இந்த பெரிய தீ எனக்கு கெடுதல் எதையும் செய்யவில்லை ; என்னுடைய வாலில் ஐஸ் கட்டியை வைத்தது போலல்லவா இருக்கிறது (மேலும் வால் பகுதிக்கு மேல், தீ பரவவும் இல்லை )

லாங்கூல அக்ரே – வாலின் நுனியில் மட்டும்; ப்ரதிஷ்டிதஹ = நிலையாக நிற்கிறதே

xxxx

अथवा तदिदं व्यक्तं यद्दृष्टं प्लवता मया।।5.53.36।।

रामप्रभावादाश्चर्यं पर्वत स्सरितां पतौ।

அதவா ததிதம் வ்யக்தம் யத் த்ருஷ்டம் ப் லவதா மயா

ராம ப்ரபாவாதாஸ்சர்யம் பர்வத ஸரிதாம் பதெள

ராமபிரானின் சக்தியால்தான் இது நிகழ்கிறது . நான் கடலைக் கடக்கும்போது கூட எனக்கு பாதுகாப்பு தருவதற்காக (ஓய்வு எடுப்பதற்காக ) ஒரு அற்புத மலை எழுந்து நின்றது (இப்போது வால் எரியாமல், சுடாமல் இருப்பதற்கும் ) ராமனின் சக்திதான் என்பது வெளிப்படை

Xxx

यदि तावत्समुद्रस्य मैनाकस्य च धीमतः।।5.53.37।।

रामार्थं सम्भ्रमस्तादृक्किमग्निर्न करिष्यति।

யதி தாவத்  ஸமுத்ரஸ்ய  மைநாகஸ்ய  தீமதஹ

ராமர்த்தம் ஸம்ப்ரமஸ்தா த்ரவ்கிமக்னீர்  ந கரிஷ்யதி

கடல் என் மீது காட்டிய அக்கறை காரணமாக , புத்திசாலியான மைநாக மலையே எனக்காக எழுந்து வந்ததே ! மலை கூட ராமனுக்கு சேவை செய்கையில் தீ செய்ய முடியாதது என்ன ?

xxx

सीतायाश्चानृशंस्येन तेजसा राघवस्य च।।5.53.38।।

पितुश्च मम सख्येन न मां दहति पावकः।

ஸீதாயாஸ் சா ன்ருசம் ஸ்யேன தேஜஸா ராகவஸ்ய ச

பிதுஸ்ச  மம  ஸக்யேன ந மாம் தஹதி பாவகஹ

சீதையின் உறுதியான கற்புராமனின் சக்தி அக்னி பகவானுடன்  உள்ள என் தந்தையின் நட்புறவு ஆகியவற்றால்தான் தீ என்னை எரிக்கவில்லை .

மம பிதுஸ்  ஸக்யேன= என் தந்தையின் நட்புறவு ; பாவக = தீ

இந்த கடைசி ஸ்லோகத்த்தில்தான் வால்மீகி முத்தாய்ப்பு வைக்கிறார். ஒரு அற்புதம் நிகழ்கையில், ஒரு மனிதன், மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஏற்பட்டு வியப்புறுவான் என்ற உளவியலை (Psychology) இங்கே பார்க்கிறோம். ஸீதா, ராமனின் மஹத்தான சக்தியைப் புகழ்ந்துவிட்டு இறுதியில் மட்டும் தன் குடும்பத்தை நினைக்கிறார் ; காற்றுக்கும் தீ க்கும் உள்ள நட்புறவு இயற்கையில் நாம் காண்பதே ; அதை வாயு புத்திரனான அனுமன் கடைசியில் நமக்குக் காட்டுகிறான் . வால்மீகி முனிவரின் எளிய சம்ஸ்க்ருத நடையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். உலகம் முழுதும் தோன்றிய 3000 ராம காதைகள்  , பாடல்கள், கிருதிகள் , திரைப்படங்கள், டிவி சீரியல்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷன் வால்மீகி. காலத்தால் அழியாத காவியத்தை நமக்கு அளித்தவர் வால்மீகி!!

— சுபம் —

 தீ எரிக்காது-, இந்து மத அற்புதம்-3 , சுந்தர காண்டம், வால்மீகி 

யோகி ஆதித்ய நாத் கேட்கும் ஒரு கேள்வி ? (Post No.11,384)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,384

Date uploaded in London – –    22 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகி ஆதித்ய நாத் கேட்கும் ஒரு கேள்வி பதிலை செகுலரிஸ்டுகள் சொல்வார்களா?

ச.நாகராஜன் 

யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது நிலை பற்றி இப்படித் தெளிவாகக் கூறுகிறார்.

1. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஹிந்து மதத்தை  மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் இஸ்லாத்தை மதிக்கிறேன்.

2. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஶ்ரீ ராமரை மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் அல்லாவையும் மதிக்கிறேன்.

3. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு கீதைக்கும் இராமாயணத்திற்கும் மதிப்புக் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு நான் குர்-ஆனுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.

4. இஸ்லாமியர் எந்த அளவுக்கு ஹனுமான்ஜிக்கு மதிப்புக் கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு நான் மஹம்மது நபி அவர்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.

5. ஒரு முஸ்லீம் கோவிலை எந்த அளவுக்குப் புனிதம் என்று கருதுகிறாரோ அதே அளவிற்கு மசூதியை நான் புனிதம் என்று மதிக்கிறேன்.

6. இஸ்லாமிய ஆண்கள் ஹிந்துப் பெண்களுக்கு எந்த அளவு மதிப்பைத் தருகிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமியப் பெண்களுக்கும் மதிப்புத் தருகிறேன்.

7. இஸ்லாமியர் ஹிந்துப் பண்டிகைகளை எந்த அளவு மதிக்கிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமிய பண்டிகைகளை மதிக்கிறேன்.

இப்படி இருக்கும் போது என்னை  மதவெறியன் என்று எப்படிச் சொல்ல்லாம்?

நன்றி : ட்ரூத் ஆங்கில வார  தொகுதி 90 இதழ் 5 13-5-2022

இதன் ஆங்கில மூலம் இதோ:

I. Brilliant Yogi Adityanath says:

1. I respect Islam to the same extent that a Muslim respects Hinduism.”

                      2. “I respect Allah as much as a Muslim respects Lord Ram.”         

                   3. “I give the same respect to the Quran as a Muslim gives to the Gita or Ramayana.”

4. “I respect Prophet Mohammed as much as Muslims respect Lord Hanumanji.”

5. “I consider a mosque as pure as a Muslim considers a Mandir pure.”

6. “I respect Muslim women as much as Muslim men respect Hindu women.”

7. “I respect Muslim festivals as much as Muslims respect Hindu festivals.” “

Then how can I be called communal?” –from Social Media

Thanks : Truth

Source  : Truth Weekly Volume 90 Issue இதழ் 5  Dated 13-5-2022

***

புத்தக அறிமுகம் – 94

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. செவ்வாயில் மனிதன் இறங்குவது நிச்சயம்                        

2. செவ்வாயில் மனித முகம்                                        

3. சூரியன் இறக்கும் நாள்                                      

4. பூமியின் மீது 76 லட்சம் அணுகுண்டுகள் மோதும் நாள்       

5. 2028ல் பூமி சுக்கு நூறாகச் சிதறுமா?                               

6. இன்னொரு பூமி எங்கே?                                     

7. வானத்தில் வைரச் சுரங்கம்                                  

8. மறைந்த விண்கலங்கள்                                     

9. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்                            10. ராட்சஸ அலைகள் உண்மையே – ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானிகள்    

11. மேகத்தில் பாக்டீரியாக்கள்!                                       

12. பனி மனிதனின் கால்                                            

13. தேவை நல்ல தூக்கம்                                            

14. உலகை மாற்றிய ஆறு தாவரங்கள்                               

15. சார்லஸ் பாபேஜ்                                           

16. வருகிறான் இயந்திரன்                                           

17. மூளைக்கும் பயிற்சி தேவை                                      

18. அறிவியல் புதிர்                                            

19. மிஸ் மெமரி                                                

20. பிளாஸ்டிக் நுரையீரல்                                            

21. எதிர்காலத்தைக் கலக்க இருக்கும் சயின்டிஃபிக் சினிமா            

22. கண்ணில் அணியும் சினிமா                                      

23. மூளை உள்ள எதிர்கால வீடு                                     

24. காற்றில் எழுதும் எழுத்தையும் பிடிக்கும் பேனா                   

25. ஆக்ஸிஜன் குளியல்                                             

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Knowing the human brain is the most important invention of the country and this book serves in understanding the left and right section of the human brain and its impact on the human behavior and actions. Researches have proved that a human brain is never utilized to 100% of its capability. This book answers the 100% utilization issue and tells us the ways and means for cent percent usage of our brains to the full capability. A must read of all age groups.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனை என்றால் அது மனித மூளை பற்றிய ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். இடப்பக்க, வலப்பக்க மூளைப் பகுதிகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கும் நூல். மனிதர்களின் மூளை அதன் தகுதிக்கேற்பச் செயல்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான செயல்பாட்டிற்கான முறைகள் இந்நூலில் எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. கூடவே, எதிர்கால நியூரல் எந்திரங்கள், மாற்று எரிபொருள், தாவரங்களின் அறிவு ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 1’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*tags- யோகி ஆதித்யநாத்

Learn Tamil Verbs -Lesson 15 -Imperative Negative (Post No.11,383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,383

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

FREE TAMIL LESSONS

THOSE WHO WANT TO JOIN SKYPE TAMIL CLASS BEGINNING IN NOVEMBER 2022, PLEASE CONTACT ME-

swami_48@yahoo.com

IT IS ABSOLUTELY FREE. THURSDAYS;  London Time GMT 12 NOON; Indian Time : EVENING 5-30 PM (17-30). ONE HOUR ONLY.

MEDIUM OF INSTRUCTION – ENGLISH; IT WILL BENEFIT ‘Non-Tamils’.

Xxx

LESSON 15

I AM POSTING TWO MORE TAMIL VERBS TODAY:

PANNU – MAKE, DO

KOL – KILL ; IS CONJUGATED LIKE Mel= Chew, Vel=Win, Sol=say  (but past tense is different for Sol=say, tell)

Xxx

Negative Imperative கட்டளை வாக்கியங்கள் (எதிர்மறை/ எதிர்ப்பதம் )

Add ஆதே to the INFINITIVE of the verb ,  or ஆதீர்கள் (for plural or respectful singular)

(Strictly speaking Infinitive Stem)

போக +ஆதே = போகாதே ,

வர+ஆதே = வராதே

போகாதீர்கள் , வராதீர்கள் (Used for more than one person; or one person whom you  want to give respect  due to Age or Status)

செய்ய +ஆதே = செய்யாதே

செய்ய +ஆதீர்கள் =, செய்யாதீர்கள்

சாப்பிட + ஆதே = சாப்பிடாதே

சாப்பிட + ஆதே = சாப்பிடாதே

சாப்பிட + ஆதீர்கள்  = சாப்பிடாதீர்கள்

Xxx

INFINITIVES

தமிழ் வினைச் சொற்கள் ‘அ’ ஒலியில் முடியும்

வா= வர To come , போ= போக To go, சாப்பிடு =சாப்பிட To eat,

தூங்கு = தூங்க; To sleep

Xxx

Note words ending  உ with sound

கொடு = கொடுக்க (க்க ) To give

எடு(க்க ) To Take

படு  (க்க ) To lie down or to sleep

விடு  (க்க ) To leave

சொடு  (க்க ) To click

To be continued…………………………….Tags- Tamil verbs, Make, Kill, Imperative, Negative

Tamil Hindu Encyclopaedia – 15 (ARUNDHATI அருந்ததி)-Post.11,382

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,382

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Arundhati is praised very high in Sangam Tamil literature and later literature. She was the model of conjugal excellence and a woman of paragon virtues. Tamils even used just Northern Star (vada meen) to mention her. Ancient Tamils were great Hindus and they made Arundhati a part of their life. They followed what exactly said about Arundhati in Sanskrit scripture. Natrinai verse say that Seven Stars are worshipped by the Tamils.

On the day of wedding, the couple were taken out to show the star in the Northern Sky. The woman is advised to be as chaste as Arundhati and her husband is advised to stick to his wife like Vasistha.  It is a double star system in the Ursa Major/ Great Bear/ Dipper/ Sapta Rishi constellation in the Northern Sky. People living in India and other parts of Northern Hemisphere can easily see the Seven Stars in the night.

2000 year old Sangam literature referred to her in the following books:

Arundhati –   Ainkuru -442-4

Xxx

Seeing / viewing Arundhati star in the night of the Wedding Day–  Pathitup paththu 89-17

xxx

Vada meen – Northern star –

Kali 2-21; Puram 122-8;

Post Sangam Tamil epic- Silappadikaaram 1-27;5-229

Xxx

In Puram verse 122, the Brahmin poet Kabilar praised the wife of Chieftain Malayamaan Thiru Mudik Kaari as chaste as Vada meen/northern star (Arndhati); he also added that the three great Tamil Kings seek your help. You donated all your lands to Brahmins who perform Yagas. Now you have only your wife only who is like Arundhati.

Kalittokai verse 2–21 :Poet Paalai Paatiya Pernkatunko also praised the wife of a king as chaste as Northern Star which is worshipped by everyone.

Xxx

Ainkuru nuuru poet Peyanaar used the name Arundhati praising her for chastity.

Xxx

Rare Medical Information

Perum Kundrur Kizaar (kilaar), author of verse Pathitup paththu 89-17 gives us one rare , scientific information.

He mentioned that newly married woman sees the star on the wedding day and your wife is chaste like that star while praising the Chera/Kerala king.

He added the star is seen also to ‘measure one’s life’. Since Arundhati and Vasistha stars in the Sapta Rishi Mandala are double stars,one revolving the other,  less luminous Arundhati is faintly visible at times. If one has a ‘good vision’ to see it that person is considered healthy. If one is not able to see it his/her days are numbered (Read my research article on Alcol ; Valluvar also called it ‘ghost’,  like the Arabs; since it is seen sometimes and disappears at some times Valluvar used Alakai in Tiruk Kural to refer to Ghost; Alakai= alcol/Arabic word)

Following is from my old article :- 

Chaste Woman Arundhati in Literature!

Research Article Written by London swaminathan
Post No.1130; Dated 25 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

Dravidian Tamil politicians and foreign “scholars” have been fooling the academic world for long with their Racist Aryan Dravidian Theory. But those who read the 27,000 lines in 2389 Sangam Tamil poems composed by 461 poets, 2000 years ago, will be wonderstruck when they know that the same culture, beliefs, customs, history were shared by the people of India from the Northernmost Himalayas to the Southernmost Kanyakumari. There are hundreds and hundreds of examples in the Sangam corpus.

Though Tamils have a beautiful story around the chaste woman Kannaki, they never used her name anywhere in the 27000 + lines. Only Arundhati, wife of the great Rishi (sage) Vasistha was used throughout Tamil literature- both Sangam and Post Sangam periods. In Sanskrit scriptures Arundhati’s name is synonymous with chastity. It is found in all the works. But not many people know that she was praised by many Tamil poets of the Sangam Age.

Who is Arundhati?
Arundhati is the wife of sage Vasistha, one of the seven celebrated sages. They are known as Sapta Rishis. She was distinguished for her chastity. She was the daughter of Kardama Rishi.

Chaste women are compared to Arundhati. The Bodhayana Grhyasutra rules that a married couple should see the star Arundhati and the pole star on the first day of their marriage.

Legend has it each of the primeval sages had his own wife. Of these the wives of six sages excluding that of Vasistha fell in love with Agni and gave their breast milk to Subramanya . These six became KRITHIKA NAKSHATRAS (PLEIADES );

But Arundhati stood firm in her chastity and attained an honourable place as an auspicious star fit to be seen by chaste and pure women so that they might ever lead holy lives (Mahabharata Vanaparva ,chapter 226-230)

There is another story about Arundhati in the scriptures. She was born as a low caste woman as Akshamala (Manu Smriti 9-23) and elevated to wife of a great sage. Great Tamil poet introduces Vasistha as the husband of Arundhati. Such was her elevated status in Tamil! Kamban says the “husband of Arundhati “ (Vasistha) left for Mithila to take part in the wedding of Rama with Sita in a pearl Palanquin surrounded by 2000 Brahmins.

Tamil Weddings
Main part of Tamil wedding is “Standing on the grinder stone and looking at the Arundhati Star” (Ammi mithiththal and Arundhati Kaattal in Tamil). Every couple must look at the Arundhati Star before entering the bed room for their First Night. Nowadays they do it symbolically even in the day time!!

For those who do not know the ancient Hindu astronomy some tips:
Ancient Hindus including illiterates were well versed with all the essential herbs, hymns and 27+ stars in the sky. In addition to the 27 stars in the region of 12 zodiacal signs, they were familiar with all the planets and the stars like Druva (Pole Star), Sapta Rishi Mandala ( Ursa Major or Great Bear or Big Dipper or Wagon constellation), Abhijit (Vega) stars in the north and Agastya (Canopus) and Tri Sanku (Southern Cross) stars in the south.

If you at sky in the northern direction, you will see seven stars like a flying kite.
Of the seven stars, the last but one (in the tail of the kite) is Vashista Nakshatra. It is a double star system – one revolving the other! The ingenious Hindus named them Vashista and Arundhati. Alcor is the name given for Arundhati and Mizar is the name given to Vasishta in the astronomy books. Alcor is used to test the visual acuity.

Ancient Tamils worshipped the Seven Stars representing Seven Rishis: Atri, Brhu, Kutsa, Vashista, Gautama, Kashyapa and Angirasa.
Ref.Natrinai – 231-2 (worshipful Seven Stars)

They believed worshipping chaste woman will wash away their sins:
Paripatal: 20-68 (sinthikkat thirum piniyaat sererka)

Following are the references to Arundhati
Pathitrupathu : 31-27/28; 89—17/19
Ainkuru nuru 442-4
Purananauru: 122
Perumpanatrupatai:- Lines 302/303
Kalitokai:- 2-21
In all these places either a queen or a heroine is praised as chaste as Arundhati or Arundhati herself is praised.
Post Sangam Works: —Thirikadukam 1-1
Tamil epic Silappadikaram 1-27; 1-63 (Here heroine Kannaki is praised as a chaste woman like Arundhati.)

When poets use one as a simile that must be superior to the person or thing compared and that must be known to everyone. The Tamil examples show that Arundhati was a household name in Tamil Nadu. All these references explode the myth of Aryans invading or infiltrating into India. There was only one culture 3000 years ago and that was Hindu culture. The beauty is there is an uninterrupted respect for Arundhati until today!

Arundhati-Nyaya
Sanskrit Language has got several techniques for teaching different subjects. When they teach philosophy they, use Arundhati Nyaya.

To show to a person the star Arundhati in the sky, one points out at first to a big star in the north and says that that big star is Arundhati. The person is first led to a big star that is clearly seen. Then after rejecting that star the real star is shown. The person is guided step by step towards the goal. Even so, a spiritual aspirant is led gradually to the Supreme Truth which is formless and impersonal.

 tags- Arundhati, Wedding Night, Chaste woman, Seven Stars, Sapta Rishi, Ursa Major

தீ எரிக்காது — இந்து மத அற்புதம் -2 (Post No.11,381)

Ravana abducting Sita Devi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,381

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நேற்று வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதியைக் காண்போம்.

அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடக்கூடாது என்று சீதா தேவி வெளியிட்ட வேண்டுகோளை அக்கினி பகவான் ஏற்றான் . ஏனெனில் அவள் கற்புக்கரசி.; மனம், மொழி, மெய் மூன்றின் மூலம் வேறு ஆடவணை நினையாத பெண்களுக்கு அற்புத சக்தி உண்டு என்று வள்ளுவனும் சொன்னான்.

சீதையின் ஸ்லோகங்களை வால்மீகி முனிவரின் வாயிலாகத் தொடர்ந்து பார்ப்போம்:- இவை சுந்தர காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள்

 श्रुत्वा तद्वचनं क्रूरमात्मापहरणोपमम्।।5.53.26।।

वैदेही शोकसन्तप्ता हुताशनमुपागमत्।

ச்ருத்வா  தத் வசனம் க்ரூர ஆத்மாப ஹரணோ  உபமம்

வைதேஹி சோக  ஸந்தப்தா  ஹுதாசன  உபாகமத்


(உன்னுடன் பேசிய செம்முகக் குரங்கின் வாலில் அரக்கர்கள் தீ மூ ட்டிவிட்டனர்  என்ற) செய்தியைக்  கேட்ட சீதா தேவி துயரத்தில் துடித்தாள் ; தன்னைக் கடத்தியது போல இதுவும் (ராவணனின் ) கொடூர செயல் என்னு கருதினாள் . அக்கினி பகவானுக்கு வேண்டுகோள் விடுத்தாள்

(கண்ணகி அழைத்தவுடன் அக்கினி பகவான், பிராமணன் வடிவில் அவள் முன் தோன்றி ‘தாயே கட்டளை இடுங்கள்’ என்று வணங்கியதாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் இயம்பியதை இங்கே ஒப்பிடலாம் )

xxx

मङ्गलाभिमुखी तस्य सा तदाऽसीन्महाकपेः।।5.53.27।।

उपतस्थे विशालाक्षी प्रयता हव्यवाहनम्।

மங்களஅபிமுகி  தஸ்ய ஸா ததாஸ் ஸீன் மஹா கபேஹே

உபதஸ்தே விசாலாக்ஷி ப்ரயதா ஹவ்யவாஹனம்

பெரிய குரங்கின் (அனுமனின்) உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று கருதிய, அகன்ற கண்களைக் கொண்ட சீதை , இருதயபூர்வமாக  அக்கினி தேவனை வேண்டினாள்

மஹா கபி = பெரிய குரங்கு/அனுமன் ; விசால அக்ஷி = அகன்ற/ அழகிய கண்களை உடைய ; ஸா = அவள்/சீதை ; ஹவ்யவாஹனம் = அக்கினி தேவன் ; பிராமணர் அளிக்கும் அவியை /ஹவிஸை இறைவனுக்கு சுமந்து செல்லுவோன். pray / prayer என்ற ஆங்கிலச் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றன. தமிழில் பிரார்த்தனை என்கிறோம்

Xxx

यद्यस्ति पतिशुश्रूषा यद्यस्ति चरितं तपः।

यदि चास्त्येकपत्नीत्वं शीतो भव हनूमतः।।5.53.28।।

யத்யஸ்த்தி பதி சுஷ்ரூஷா யத்யஸ்த்தி சரிதம் தபஹ

யாதி சாஸ்யேகபத்நீத்வம்  சீதோ  பவ ஹநூமதஹ

ஓ , அக்கினி தேவனே ! நான் என் கணவனுக்கு உரிய பணிவிடை செய்திருப்பேன் ஆகில், நான் பெண்களுக்குரிய விரதங்களைக் கடைப்பிடித்திருப்பேன் ஆகில், என்னுடைய கணவன் ஒருவனிடத்தில் மட்டுமே விசுவாசம் செலுத்தியிருப்ருப்பேன் ஆகில் , அனுமன் இடத்தில் நீ குளிர்ச்சியாக இருப்பாயாகுக

பதி =கணவன் ; சுஷ்ரூசை = பணிவிடை ; சீத = குளிர்ச்சி ; நாம் சீதோஷ்ணம்/தட்ப வெப்பம் என்று சொல்லுவோம் ; பவ = இருப்பாயாகுக ; ஏக பத்நீத்தவம் = ஒருவனுக்கு ஒருத்தி கொள்கை

(இந்த இடத்தில் அப்பர் பெருமானை நாம் நினைவு கூறுதல் பொருத்தம்; மஹேந்திர வர்மன் (600 CE ) என்ற பல்லவ மன்னன், அப்பரை சுண்ணாம்புக் காளவாயில் தூக்கி எறிந்த போது அவர் ‘நம சிவாய ‘என்று சொன்னவுடன் ,அக்கினி அவரைத் தொடவில்லை )

xxxx

यदि किञ्चिदनुक्रोशस्तस्य मय्यस्ति धीमतः।।5.53.29।।

यदि वा भाग्यशेषो मे शीतो भव हनूमतः।

யதி கிஞ்சித் அனுக்ரோசஸ் தஸ்ய மய்யஸ்தி தீமதஹ

யதி வா பாக்ய  சேஷோ  மே  சீதோ பவ ஹனூமதஹ

என்னிடத்தில், அறிவில் சிறந்த  ராமனுக்கு, சிறிதளவாவது கருணை இருக்கும் என்றால் , எனக்கு கொஞ்சமாவது அதிர்ஷ்டம் இருக்கிறது என்றால் ; அனுமன் இடத்தில் குளிர்ச்சியைக் காட்டுவாயாக (அவனைச் சுடாதே )

xxxx

यदि मां वृत्तसम्पन्नां तत्समागमलालसाम्।।5.53.30।।

स विजानाति धर्मात्मा शीतो भव हनूमतः।

யதி மாம் வ்ருத்த ஸம்பன்னாம்  தத் ஸமாகமலாலஸாம்

ஸ விஜா னாதி தர்மாத்மா சீதோ பவ ஹனூமதஹ

இராமபிரான் நேர்மையானவன் என்றால், நான் தூய்மையானவள் என்றால் , நான் என் கணவனுடன் மீண்டும் சேரவேண்டும் என்று உண்மையாக நினைப்பவள் என்றால் , அனுமனிடத்தில் குளிர்ச்சியைக் காட்டு

(மற்றவர் துயரப்படும்போது,  ஒரு நல்ல உள்ளம் படைத்த பெண்ணின் மனதில் என்ன தோன்றும் என்பதற்கு சீதை உதாரணம். அவள் தன்னுடைய தவ வலிமை மட்டுமின்றி ராமனின் தவ வலிமையையும் உரிமையுடன் பயன்படுத்தி, அனுமனைக் காப்பாற்றுகிறாள் )

Xxxx

यदि मां तारयेदार्यस्सुग्रीवः सत्यसङ्गरः।।5.53.31।।

अस्माद्धुःखाम्बुसंरोधाच्छीतो भव हनूमतः।

யதி மாம் தாரயே தார்யஸ் ஸுக்ரீவஹ   ஸத்யஸ ங்கரஹ

அஸ்மாத்  துக்காம்புஸரோதாச் சீதோ பவ ஹனூமதஹ

சுக்ரீவன், அவன் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவானேயாகில் , அவன் என்னை இந்தத் துன்பக் கடலிலிருந்து மீட்பானேயாகில் அனுமனிடத்தில் குளிர்ச்சியைக் காட்டு

Xxxx

ततस्तीक्ष्णार्चिरव्यग्रः प्रदक्षिणशिखोऽनलः।।5.53.32।।

जज्वाल मृगशाबाक्ष्या श्शंसन्निव शिवं कपेः।

ததஸ் தீக்ஷ் ணார்ச்சிரவ்யக்ரஹ ப்ரதக்ஷிண சிகோ அனலஹ

ஜஜ் ஜ்வால ம்ருகசாபாக்ஷயா  சசம் ஸன்னிவ  சிவம் கபேஹே

(இப்படி சீதை பிரார்த்தனை செய்தவுடன் ) எரியும் சுவாலை (அக்கினி தேவன்) மான்விழி உடைய சீதையை நோக்கி வலமாக வந்தது  அனுமனுக்கு அக்கினி தேவன் மங்களத்தையும் பாதுகாப்பையும் நல்குவான் என்று உணர்த்தியது .

(இந்த இடத்தில் சகுன சாஸ்திரத்ததைக் காண்கிறோம்; தமிழ்த் திரைப்படங்களில் கூட ஒருவர் இறப்பதைக் காட்ட, டைரக்டர்கள் விளக்கு அணைவதைக் காட்டுகிறார்கள் ; சுடர்விட்டுப் பிரகாசிப்பதும், யாகத்தில் தீ வலமாகச் சுற்றி எரிவதும் நல்ல சகுனங்கள்/ நிமித்தங்கள் என்று கருதப்படுகிறது )

 சிவம் = நன்மை பயக்கும்; மங்களகரமான ; ப்ரதக்ஷிணம்= வலமாக ; ம்ருகசாபாக்ஷயா= மான்விழியாள் /சீதை

To be continued………………………………..

TAGS-  தீ எரிக்காது, இந்து மத அற்புதம் 2, சீதை, அக்கினி தேவன்

திருச்செந்தூர் நிரோஷ்ட யமக அந்தாதி- 2 (Post No.11,380)

 

WRITTEN BY B. KANNAN

Post No. 11,380

Date uploaded in London – 21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXXXX

(First part of this article was posted here yesterday)

பாடல் 7-ஐப் பார்ப்போம்

சாரங்கஞ் சங்கரி கட்கிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்

சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்

சாரங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா

சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே

பதம் பிரித்தால்,

சாரங்கம்(மான்) சங்கரி கட்கு(கண்) இச்சித்து ஏய்ந்தகைச் சங்கரனார்

சாரங்கம்(வில்) சங்கு அரிதாம் சக்கரம் கையில் தாங்கினன் சேய்(மன்மதன்)

சார் அங்கம் சங்கரியா நண்ணினர்க்கு அந்தத் தந்திரத்து ஆ

சாரம் கஞ்சம்(செந்தாமரை) கரிதே எனச்செய் நின சரண் தந்ததே

உமாதேவியின் கண்ணழகு காண அவரைப் பார்த்த கண் வாங்காது மான் இருந்தாற் போல் அந்த மான் ஏந்திய இடது கரத்தையுடைய ஈசனும், சார்ங்கம் எனும் வில், பாஞ்ச சன்யம் எனும் சங்கு, அருமையான ஆழி முதலியவற்றையும், திருக்கரத்தில் கொண்ட திருமாலின் மைந்தன் மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கிய யோக நிலையிலிருந்த மகேசனுக்கு, சிறந்த சிவாகம சீலத்தை, செந்தாமரை மலரையும் கருநிறமாக நாணச் செய்யும் உமது திருவடி மலர்கள் உதவின.

தெய்விகப் பார்வை மானின் நோக்கிற்கு இடம் செய்த மாதேவர், காம நோக்கில் அணுகிய மால் மகனின் உடலைப் பொசுக்கினார், பஞ்சாயுதபாணியாய் இருந்தும் திருமாலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. செந்தாமரையை நாண வைத்த செந்தி லாண்டவன் திருவடிகள் உரிய இப்பேற்றைச் சிவனாருக்கு உதவினதாம் “செந்தில் அத்தா! என்கதி என்னவாகும்? எனக்கு அப்பேறு எப்போது கிடைக்கும், என்று இறைஞ்சுகிறாராம் சிவப்பிரகாச சுவாமிகள்.

12-ம் செய்யுளில் கோவை அவிநாசியில் முதலை விழுங்கியச் சிறுவனை ஆளுடை நம்பிகள் ஈசனிடம் முறையிட்டு உயிர்ப்பித்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது.

“முப்புரமாவது மும்மல காரியம்” எனும் தத்துவக் குறிப்பு இழையோடும் 15-ம் பாடல் ஈசன் முப்புரம் எரித்தக் கதையைச் சொல்கிறது. சிவனின் நெற்றிக் கண்ணி லிருந்து வெளிப்பட்ட அருட்பொறிகள் ஆறையும் கங்கை தன் அலைக்கைகளால் தாங்கியதால் கங்கை தனயன் எனும் பொருளில் செவ்வேள் காங்கேயன் என அழைக்கப்படுகிறான் என்ற விளக்கத்தை 29-ம் பாடலில் தருகிறார்.

நாள்கள் கோள்கள் நலமில்லை என்று நையாதே;வாய்ப்பான செல்வம் இல்லை யென்று வருந்தாதே; மனை மக்கள் சுற்றம் சரியில்லை என்று மாழ்காதே; உடல் பிணி கண்டு உலையாதே தொல்லை அனைத்தும் தொலைய வேண்டுமேல், வா, செந்தூரான் திருவடிகளைத் தியானம் செய். கதிர்வேலா, ” நல்ல இடங்காண் இரங்காய் இனி” என்று இறைஞ்சு என்கிறார் வேறொரு பாடலில். சாக்கிய நாயனார் விருத்தாந்தமும் இன்னொரு இடத்தில் சொல்லப்படுகிறது.
தட்சனின் மனத்திமிரை அழித்து அவனைச் சிவகணத்தவருள் ஒருவனாக்கிக் கொண்ட சிவனாரின் அருமைப் புதல்வன் குமரன், ஐந்தாம் சங்கர சொரூபர் அகத்தியருக்குச் செந்தமிழும், சிவஞானமும் சித்திக்கச் செய்தான். செந்திலம்பதி யில் உறையும் அப்பெருமானை அடிபணிந்தால், உருத்திரப் பதவி, வைகுந்த மற்றும் பிரம்மப் பதவிகளை அவ்வள்ளல் வழங்குவான் என்கிறார் மற்றொரு இடத்தில்.

 28-ம்செய்யுளைப் பார்ப்போம்……

கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன

கணக்காக நானலைந் தெய்த்தே நெழிற்செந்திற் கந்தநெற்றிக்

கணக்காக னார்தந்த நின்றனை யேயெனிக் காதலினாற்

கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே.

பதப் பிரிவு: கண(கூட்டம்)க் காகம் நாய்கள் தின் காயம்(உடல்) நிலை எனக் கண்ணி(நினைத்து), என்ன கணக்கு ஆக நான் அலைந்து எய்த்தேன்? (சோர்வ டைந்தேன்) எழில் செந்தில் கந்த! நெற்றிக் கண் அக்குஆகனார்( எலும்பு மாலை அணிந்தவர்) தந்த நின்றனையே, இனிக் காதலினால் கண (நினைத்தபடி)க் கா(காப்பாற்றும்), கனா நிகர்த்தே அழி அங்கத்தின் காதல் அற்றே.

பொருள்: காக்கைக் கூட்டங்களும், நாய்களும் தின்னும் உடலை நிரந்தரம் என நம்பி, எந்த நோக்கத்துக்காக உழன்று இளைத்தேனோ தெரியவில்லையே! திருச்செநூரில் உறையும் கந்தவேளே, கனவைப் போல் அழியும் இவ்வுடல் மீதுள்ளப் பற்று ஒழிந்து,

நெற்றிக் கண்ணும், எலும்பு மாலையும் தரித்த சிவனார் அருளியு உம்மையே இனி ஆர்வமுடன் தியானிக்கச் செய்து கதியற்ற என்னைக் காப்பாயாக!

ஏன்றாவது ஒருநாள் அழியும் உடல் இது. அதை உணராமல் என்றும் நிலைத்திருக் கும் என எண்ணியிருந்தது எவ்வளவு முட்டாள்தனம்? அங்கங்களின் வளர்ச்சியும், தளர்ச்சியும் கனவு போல் தோன்றிக் கழியும் உடலல்லவோ இது?

“பாலனான பருவம்போம் பன்னுகுமாரப் பருவம்போம்

கோலமான தருணம்போம் கோலை யூன்றிக் குனிந்தெழுந்து

காலன் மாய்க்க அனைவர்களும் கல்லென்றழுது பேர்மாற்றி

ஏலப் பிணமென் றொருபெயரிட்(டு) இடுகாட் டிடுதல் ஒரு தலையே!

சூரிய உதயம், அதன் அஸ்தமனம் இரண்டையும் தினமும் கண்கொண்டுப் பார்த்தும், இளங்கன்று வளர்ந்து பசு,காளை,எருது எனவாகிப் பின் மரித்துவிடும் நிலையினைப் பார்த்தும் கூட,தோன்றியப் பொருளுக்கு ஒருநாள் அழிவு உண்டென்பதை அறியாதார் விழியிலா மாந்தர் என்கிறார் திருமூலர் .(திருமந்திரம் பாடல் 49)

ஆகவே உடல் பற்றை நீக்கி எப்போதும் உன்னையே நினைக்கும்படி செய்து என்னைத் தடுத்தாட்கொள்வாயாக! என்று வேண்டுகிறார்.

பற்றற்றான் தாளைப் பற்றினால் உள்ள பிறபற்று ஒழியும் என்பதற்கேற்ப, கந்தா, உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். அநியாய எப்பிறப்பையும் எனக்கு அளித்திடாதே!

சிவனார் அருளியச் செல்வமே! ஆணவ இருளை அகற்றி, உத்தம உயிர்களை ஒளி மயமாக்கும் ஞானசக்தியாம் வேல் கரத்து விமலா, திருச்செந்திலில் எழுந்தருளியி ருக்கும் காங்கேயா, உன் பாதங்களில் சரணடைகிறேன் என்று உருகுகிறார்.

இது போன்று அருளாளர்கள் அருளிச் செய்த இத்தகு நிரோட்ட யமக அந்தாதிப் பாடல்களைப் படிக்கும் போது, நம் இதழ்கள் ஒட்டவில்லையாயினும், மனம் இறை வனோடு ஒட்டி-உறவாடி இரண்டறக் கலந்து விடுவதை, இச்செய்யுள்களை ஆழ்ந்து கற்போரால் நன்கு உணர முடியும்.

            செந்தில் வேல் முருகனுக்கு அரோஹரா!

 Tags- திருச்செந்தூர் ,நிரோஷ்ட யமக அந்தாதி, B Kannan

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67 (Post No.11379)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,379

Date uploaded in London – –    21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் தொடரில் நாம் இங்கு பார்க்க இருப்பது ஒரு முக்கியமான கட்டுரை.

தமிழ்த் தாத்தா என்றும் உ.வே.சா என்றும் சிறப்பாக அழைக்கப்படும் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதன் அவர்களைத் தெரியாத தமிழர் இருக்க முடியாது. (தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942).

மஹாகவி பாரதியா அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ள கவிதை குறிப்பிடத் தகுந்த ஒன்று.

“பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய்! அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்!
இறப்பின்றித் துலங்கு வாயே!”

என்று மஹாகவி பாரதியார் இறப்பின்றித் துலங்குவாயே என்று போற்றிப் புகழ்ந்த மேதை திரு உ.வே.சா அவர்கள்.

பாரதியாரைப் பற்றிய அவரது ஒரு முக்கியமான சொற்பொழிவு  உண்டு.

1936ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸின் பொன் விழாவில் சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டது.

அப்போது அந்த விழாவில் கலந்து கொண்டார் உ.வே.சா. அப்போது அவருக்கு வயது 81.

அதில் அவர் பேசிய பேச்சு அருமையான ஒன்றாகும்.

அதில் அவர் கூறுகின்ற சில கருத்துக்களை அவர் பேசியபடியே இங்கு பார்க்கலாம்.

“தெய்வத்தினிடத்திலும் தேசத்தினிடத்திலும் பாஷையினிடத்திலும்

அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாட வேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்து கொண்டே இருந்தது….

சென்னையில் இவர் இருந்த காலத்தில் நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிசென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு வருவார். பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார்….

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். இவர் சங்கீதத்திலும் பழக்கம் உள்ளவர்….

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும் நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன…..

இவருடைய வசனத்தைப் பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன்….

பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அருத்த புஷ்டியுடையது. வீர ரசம், சிருங்கார ரசம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன். பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்….

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிநாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலிய இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும்.

அற்புதமான உ.வே.சா அவர்களின் உரையில் ஒரு பகுதி மேலே தரப்பட்டுள்ளது.

முழுவதையும் பாரதி ஆர்வலர்கள் படிப்பது இன்றியமையாதது.

***

 புத்தக அறிமுகம் – 93

மாயாலோகம் (பாகம் 3)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. பார்வையற்றவர் மலையேறி உலக சாதனை படைக்கும் அதிசயம்! 

 2. அதிசய மாயாஜால நிபுணர் டேவிட் ப்ளெய்ன்!

 3. 65 வருடங்களாக உணவு உட்கொள்ளாத யோகி பற்றிய திரைப்படம்  

   கேன்ஸ் விழாவில்!    

 4. புலன் கடந்த பார்வையாளர் – குடா பக்ஸ்   

 5. மஹாவதாரம் பாபாஜி – 1   

 6. மஹாவதாரம் பாபாஜி – 2   

 7. மஹாவதாரம் பாபாஜி – 3   

 8. மஹாவதாரம் பாபாஜி – 4   

 9. உலகின் அதிர்ஷ்டக்கார பெண்மணி!   

10. சோகுஷின்புட்சு – மம்மி ஆவதற்காக புத்தபிட்சுக்கள் செய்து

   கொள்ளும் தற்கொலை!

11. மரணப் பள்ளத்தாக்கு – 1    

12. மரணப் பள்ளத்தாக்கு – 2    

13. கிரகம் விட்டு கிரகம் செல்லும் விண்கலம் வருகிறது!  

14. இன்னொரு பூமி கண்டுபிடிப்பு!    

15. பெல்மெஸ் முகங்கள் 

16. கடலடியில் ஆறு ஓடுகிறதா? மெக்ஸிகோ அதிசயம்!    

17. அரசை எதிர்க்காதீர்கள், ஆபத்து! – (இந்தியாவில் அல்ல!!)

18. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 1

19. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 2

20. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 3

21. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 4

22. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 5

23. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 6

24. தீவிரவாதிகளைக் கண்டறிய புதிய சாதனங்கள் தயார்!!  

25. உலக மக்களை இணைக்கும் பேஸ்புக் 

26. செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை!    

27. முடிவுரை       

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book serves as a perfect gift for children at home. Originated from a series of articles in a tamil weekly called Bhagya, the last part of the collection is called Mayalogam. It talks about religious perspective, nature of human beings and amazing astronomical facts.

‘பாக்யா’ வார இதழின் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்ற ‘மாயாலோகம்’ தொடரின் கடைசிப் பாகம்! ஆன்மிக அவதாரங்கள், மனிதர்களின் விசித்திர குணாதிசயங்கள், அதிசயமான பிரதேசங்கள், விண்வெளியின் வியப்பூட்டும் விந்தைகள் எனப் பல சுவையான கட்டுரைகளைக் கொண்ட இந்நூலைப் படித்துப் பாருங்கள்! சிறுவர்களுக்கும் பரிசளியுங்கள்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ மாயா லோகம்’ -பாகம் 3’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

** 

Learn Tamil Verbs: Imperative -Positive ( Lesson 14)-Post No.11,378

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,378

Date uploaded in London – 20 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

What is Imperative?

It is a command or a request.

We always use it with a person or persons in front of us.

If it is a child or a servant or someone younger to you  in age or status, you just use the verb root.

Do செய், Come வா, Go போ, Sit உட்கார், Eat சாப்பிடு, Read படி.

If it is more than one person you use plural by adding Ungal /உங்கள் suffix.

Even if it is one person you are addressing, you may give respect by adding உங்கள்

Xxx

When you add , you have to follow morphophonemic rules.

What is it? You insert certain letter or you drop certain letter and then add உங்கள்/ungal

Come வா, Go போ are irregular verbs; that means they don’t follow the rues. You simply learn it from teacher or book

Vaarungal வா- வாருங்கள் – vaarungal  (spoke form வாங்க Vaanga)

Pongal போ – போங்கள் – Pongal (spoken form போங்க Ponga)

Seyyungal) செய்- செய்ய் + உங்கள் = செய்யுங்கள் (look at YYய்ய்)

Sollungal சொல்- சொல்ல் + உங்கள் = சொல்லுங்கள்  (look at LLல்ல்)

Padiyungal படி – படி ய் + உங்கள் = படியு ங்கள் (look at only one Y ய்)

Padungal படு +உங்கள் = படுங்கள் (look at Uஉ; it is dropped)

Saappitungal சாப்பிடு + உங்கள் = சாப்பிடுங்கள் (look at Uஉ; it is dropped)

There are certain rules for it and they are known as Morphophonemic rules.

I will give the rules in another lesson.

Tomorrow we will see Imperative Negative.

Xxx

Two more Tamil verbs are attached:

Podu- drop போடு

Thodu – touch தொடு

To be continued ………………………………………..Tags- Tamil lesson 14, Imperative, Positive, verbs Touch, Drop