WE HAVE AT LEAST 45 WORDS FOR ELEPHANT IN TAMIL NIKANDU/thesaurus (See My Earlier Article)
Since ancient Tamils considered Tamil and Sanskrit two eyes of the same man they never differentiated the two words in dictionaries and thesauruses. There is no Tamil dictionary or nikandu/thesaurus without Sanskrit words. In fact, my research shows that there are more Sanskrit words in these so-called Tamil dictionaries.it shows Tamils considered both of them their own mother tongues. It is true with Tamil literature as well. They used both the languages as if their own mother tongues. There is another reason which supports my theory that both the languages came from the same root; devotees of Siva believe that both the languages came from the sound of kettle drum of Lord Siva
Kari in Tamil means charcoal or elephant. But other meanings such as hand, witness, black pepper, accusation are also there.
In Sanskrit Kaarin and Karin are used for elephant. And Hasti, Ibha, Gaja are also used.
Now the question is KARI a Tamil word or not?
If we take it chronologically it comes first only in Sanskrit.
Wilson in his translation of the Rig Veda finds it in 4-34-3 of Rig Veda. Most famous Sanskrit lexicon/ thesaurus Amarakosa lists many names for elephant including Kari.
I can interpret it in two ways. The animal which is black (kari in Tamil) is Kari; so it is a Tamil world
The animal which has a prominent hand/trunk (Kara= Hand) is Karin; so it is Sanskrit.
One rare and interesting co incidence is both Kari in Tamil and Ibha in Sanskrit mean ‘Number Eight’ as well!
Kari is found in more ancient literature in Sanskrit. Mahabharata, Kiratarjuniya, Amarakosa etc and the authors used Karin for elephant.
In Tamil, Kari means Charcoal or that which is burnt to ash. For elephant, Sangam poets used Vezam, Yaanai, Kaliru and seldom used Kari.
xxx
Etymology of Elephant from Sanskrit
The English word Elephant is derived from Sanskrit ‘Ibah’, which is found in the Vedas. It changed to Erepa in Phoenician. R/L changes are seen through out the world. Panini was the first one to put it in grammar. Erepa became elepha in Greek and Latin. Elephant is a holy animal for Hindus .All the temples and Mutts do Go Puja (cow worship) and Gaja Puja (elephant worship). The oldest picture of elephant is in the Indus seal. That shows Hindus are the one who took it to different parts of the world. It is part of Chatur Anaga of army and Chaturanga/chess game as well.
Asvaghosa , who came after Kalidasa, also refers to elephants with the names , Gaja, Gajendra, Hasti, Kari, Karin , Kunjara, Kalabha, Vaarana, Naag, Rsabha, Dvipa and Dviipendra. Many names are in the Amarakosa.
Egypt, though an African country, did not use elephant at all . We cant see it Egyptian Pyramid paintings . Only after contacting with Hindus they learnt to control horses and elephants .
Hastin, Gaja, Karin , Rsabha and Ebha are all found in the Vedic literature
The chess game that was invented by Hindus also made elephant as part of the four fold army. The name of Asvattama, the elephant, was used to defeat the Kauravas. All the elephants have special names in Hindu books.
Asvaghosa says
The elephants are found in the forests of Himalayas. They caught them with the help of elephant catchers. Sometimes they became wild and were controlled with help of Ankusa.
To be continued………………………….
tgs- Elephant, etymology, Ibha, Indus seal, Rig Veda
பல நூல்கள் 32 சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிக் குறிப்பிட்டாலும் அவை என்னவென்ன என்று சொல்லுவதில்லை. பரஞ்சோதி முனிவர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் உக்கிர குமார பாண்டியன் திரு அவதார படலத்தில் இது பற்றித் தெளிவாகப் பாடி இருக்கிறார்..
சாமுத்திரிகா லட்சணம் என்ற சாஸ்திரம் 64 கலைகளில் ஒன்று. உடல் உறுப்புகளின் அமைப்பைக் கொண்டு ஒருவனின் குணாதிசயங்களை சொல்லும் அபூர்வ இந்து சமய அறிவியல் உண்மை ஆகும். இதை மேல் நாட்டினர் கூட இன்னும் சரிவர ஆராயவில்லை. அவ்வப்போது வரும் கட்டுரைகள் மூலம் சில செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள். ஆனால் இந்துக்கள் இதுபற்றி நூல்களே எழுதிவிட்டனர். பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த பழைய தமிழ் நூலின் பல பக்ககங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன்.
ராம பிரானை வருணிக்கும் வால்மீகியும் கம்பனும் அவருக்கு முழங்காலைத் தொடும் அளவுக்கு நீண்ட கைகள் இருந்ததைச் சொல்ல தவறுவது இல்லை. ஆஜானு பாஹு, அரவிந்த லோசனம் (தாமரைக் கண்ணான் உலகு- குறள் ) என்று வருணிப்பர். நீண்ட கண்கள் இருப்பதைத் தாமரை இதழ்க்கண் போன்ற கண் என்பர். வள்ளுவன் கூட அதைச் சொல்லிவிட்டான் (குறள் 1103).
இதை விஞ்ஞான ரீதியிலும் விளக்கலாம். ஆதி காலத்தில் ஈட்டி, வேல் வருவதற்கு முன்னர் மனிதர்கள் வில், அம்பு களைப் பயன்படுத்தி வேட்டை ஆடினார்கள்; பகைவரை மாய்த்தார்கள் ; அதில் வெற்றி பெறுபவன் நீண்ட கைகளை உடையவனா கத்தான் இருப்பான். அம்பினை இழுத்து இழுத்து கைகள் நீண்டுவிடும்; அவனுக்குப் பிறக்கும் சந்ததியினரும் அப்படியே ஆஜானு பாஹு வாகப் பிறப்பர் ; அவர்களே வில் வித்தைக் கலையில் , போரில், சிறந்து விளங்கியிருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். சாமுத்ரிகா சாஸ்திரம் இப்படி அனுபவ ரீதியில் கண்டு பிடிக்கப்பட்டதே.
பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் :
அவயவ உறுப்புகளில் உன்னத உறுப்பு ஆறு , நீண்ட உறுப்பு ஐந்து, சூக்கும உறுப்பு ஐந்து, குறுக்க உறுப்பு நான்கு, அகல உறுப்பு இரண்டு, சிவந்த உறுப்பு ஏழு, ஆழ்ந்த உறுப்பு மூன்று ஆகிய 32 உறுப்புகள் அதற்கான இலக்கண நூலில் சொல்லப்பட்டுள்ளன . அவைகளை விரித்துரைப்பின் ,
வயிறு, தோள் , நெற்றி , நாசி, மார்பு, கையடி இவை (6) ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திரன் ஆவான்.
கணவனுடன் சிதைத்தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறும் “சதி” (SATI) என்னும் வழக்கத்தை ரிக் வேதமோ, மனு நீதி நூலோ குறிப்பிடவில்லை. வால்மீகி ராமாயணமும் (வா.ரா. ) இது பற்றிப் பேசவில்லை. இடைச் செருகல் என்று கருதப்படும் உத்தர காண்டத்தில் மட்டும் வேதவதி , அவருடைய தாயார் இப்படி இறந்ததாகக் கூறுகிறார். அந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை. தசரதன் மனைவியரோ, வாலியின் மனைவியரோ அப்படி இறக்கவுமில்லை.
Xxx
விலை மாதரும் ஆடல் அழகிகளும்
ஆண்களை மகிழ்விக்கும் “கணிகா” மகளிர் (COURTESANS) பற்றியும் வால்மீகி பாடி இருக்கிறார்.அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகத்துக்கு கணிகா” மகளிர் அழைத்து வரப்பட்டனர்.
ராமர் வனவாசத்திலிருந்து திரும்பி வந்தபோது வரவேற்பு கொடுத்தவர் அணியில் அவர்களும் இருந்தனர்.
கலைகளில் வல்லவர்களான அவர்களை அரண்மனை சேவைக்கும் அழைத்தனர் (2-3-17,6-127-3/4, 1-10-5)
சில ஸ்லோகங்களை மட்டும் காண்போம்
पताकाः च பாவட்டாக்களும் , आबध्यन्ताम् கட்டப்படட்டும் , राजमार्गः च தேசீய நெடுஞ்சாலை முழுதும் , सिंच्यतां च தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படட்டும் सर्वे எல்லா , तालावचराः நடிகர், நடிகையரும் , स्वलङ्कृताःநன்கு அலங்கரிக்கப்பட்ட , गणिकाः च ஆடல் அழகிகளும் , नृपवेश्मनःஅரண்மனை , द्वितीयाम् இரண்டாவது , कक्ष्याम् அறைக்கு , आसाद्य அழைத்துவரப்பட்டு , तिष्ठन्तु அமரும்படி செய்யுங்கள்
(ராமர் பட்டாபிஷேகத்துக்காக ) சாலைகள் முழுதும் தோரணம் கட்டுங்கள் ; தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யுங்கள்;நடிகர், நடிகையர், அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அரண்மனையின் இரண்டாவது அறையில் அமர்த்துங்கள்
ஆடல் அழகிகளை அனுப்பி ரிஷ்ய ச்ருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவரை ஏமாற்றி அழைத்துவர ஏற்பாடு:-
रूपवत्य: அழகான , स्वलङ्कृता: அலங்காரம் செய்துகொண்ட/ மேக் அப் போட்டுக்கொண்ட , गणिका: கவர்ச்சிக் கன்னிகள் , सत्कृता: தகுந்த மரியாதையோடு , तत्र அங்கே , गच्छन्तु போகட்டும் , विविधोपायै: பல்வேறு சேஷ்டைகள் செய்து , प्रलोभ्य மயக்கி , इह இங்கே , आनेष्यन्ति அழைத்துவாருங்கள்
அழகிய, அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அனுப்பிவையுங்கள் அவர்கள் பலவகையான வழிகளில் ஆசை காட்டி மரியாதையுடன் இங்கே (கலைக்கோட்டு முனிவரை) கொண்டுவரச்செய்யுங்கள்.
இதிலிருந்து அக்காலத்தில் ஆண்களை மயக்கி, சொக்கவைத்து இழுக்கும் ஆடல் அழகிகள் இருந்ததை அறியலாம் ; சிலப்பதிகார மாதவியிடத்திலும் இதைக் காண்கிறோம். சங்க இலக்கியத்தில் அக நானூறு, குறுந்தொகை, நற்றிணை , கலித்தொகை முதலிய நூல்களில் ஏராளமான பரத்தையர் (கவர்ச்சிக் கன்னிகள்) பற்றிய விஷயங்கள் வருகின்றன என்பதையும் குறிப்பிடுதல் பொருத்தம்
காம சூத்திரம் நூல் எழுதிய வாத்ஸ்யாயனரும் வேசியர் 64 கலைகளிலும் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்பார். (காம சூத்திரம் 1-3-20)
XXXX
ராம- ராவண யுத்தம் முடிந்து ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் ஆடல் அழகிகள் பற்றிய குறிப்பைக் காண்கிறோம் : ” புராண கதைகளைச் சொல்லும் , அரசர்களின் வம்ச புகழ்பாடும் பாணர்கள் , இசைக்கலை வல்லுநர்கள், ஆடல் அழகிகள் எல்லோரும் வரட்டும்.ராமனுடைய சந்திரன் போன்ற குளிர்ச்சிமிக்க, ஒளிபொருந்திய முகத்தைக் காண, ராஜமாதாக்கள் , மந்திரிகள் , பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்கள் சங்கத்தினரும் குடும்பத்தினரும் இங்கே கூடட்டும் என்று வால்மீகி பாடியிருப்பதையும் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் – 9
ச.நாகராஜன்
17
இன்ஃபைனைட் ஹோட்டல்!
டேவிட் ஹில்பெர்ட் (David Hilbert பிறப்பு : 23-1-1862 மறைவு :14-2-1943) ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கணித மேதை.உலகின் அனைத்து கணித மேதைகளாலும் மதிக்கப்பட்டவர். இன்ஃபினிடி செட் (Infinity Set) என்பதை விளக்கும் விதமாக அவர் ஒரு சிந்தனை சோதனையைச் (Thought Experiment) செய்தார். அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல் அல்லது ஹில்பர்ட் ஹோட்டல் என்பதாகும். அது அனைவரையும் கவர்ந்த ஒன்று. இன்ஃபினிடி என்பது எல்லையற்ற கணக்கற்ற ஒன்று.
அவரது சிந்தனை சோதனை இது தான்!
மிக நீண்ட ஒரு விமானப் பயணத்தை மேற்கொண்டு அலுத்து களைத்து அவ்வளவாகத் தெரியாத ஒரு பெரிய நகரத்திற்கு நீங்கள் வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் திகைப்பைத் தரும் வண்ணம் அங்கு ஒரு ஹோட்டலிலும் உங்களுக்குத் தங்க அறை கிடைக்கவில்லை. கடைசியாக அங்கு ஒரு மிகப்பெரிய ஹோட்டல் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள்.
அதன் பெயர் இன்ஃபைனைட் ஹோட்டல். அங்காவது ஒரு அறை கிடைக்காதா என்று அங்கு நீங்கள் விரைகிறீர்கள்.
பெயருக்குத் தகுந்தாற் போல எண்ணிக்கை கடந்த அறைகள் அங்கு இருக்க வேண்டுமல்லவா!
அங்கு வரவேற்பு டெஸ்கில் இருந்த ரிஸப்ஷனிஸ்டைப் பார்த்து எனக்கு ஒரு அறை வேண்டும் என்கிறீர்கள்.
அவர் சற்று தலையை ஆட்டியவாறே, “மன்னிக்க வேண்டும், எல்லா அறைகளும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார்!
“என்ன, இது இன்ஃபைனைட் ஹோட்டல் ஆயிற்றே” என்கிறீர்கள்.
“ஆமாம்! அது உண்மை தான்! ஆனால் அறைகள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன” என்கிறார் அவர்.
சற்று யோசித்துப் பார்த்த உங்களுக்கு ஒரு அருமையான யோசனை உதிக்கிறது.
“எனக்கு நிச்சயமாக ஒரு அறை வேண்டும். நீண்ட பயணத்திற்குப் பிறகு களைத்துப் போய் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்!” என்கிறீர்கள்.
உங்களைப் பார்த்த அவர், “நிச்சயமாக, சொல்லுங்கள் என்ன உதவி?” என்கிறார்.
“ஹோட்டலிலோ எண்ணிக்கை அற்ற அறைகள் இருக்கின்றன. முதலாம் அறையில் இருப்பவரை அடுத்த அறைக்கு மாற்றுங்கள். அடுத்த அறையில் இருப்பவரை அதற்கு அடுத்த அறைக்கு மாற்றுங்கள். காலியாக இருக்கும் முதல் ரூமை எனக்குத் தந்து விடுங்கள். இப்படி மொத்த பேரையும் அடுத்தடுத்த அறைக்கு மாற்றி விட்டீர்கள் என்றால் முதலில் எத்தனை அறைகள் ஒதுக்கி இருந்தீர்களோ அதே எண்ணிக்கையில் தானே மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இருக்கும். எல்லோருக்கும் அறை உண்டு; எனக்கும் உண்டே!” –
என்று முடிக்கிறீர்கள் நீங்கள்!
உங்களது இந்த யோசனை எப்படி?
இது இன்ஃபினிடி என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுவதுமாக விளக்குகிறதல்லவா!
அனைவரும் இதைக் கேட்டு ரசித்தனர்; இன்றளவும் ரசித்துக் கொண்டு இருக்கின்றனர்!
18
டெஸ்கார்டஸின் கடவுள்!
டெஸ்கார்டெஸ் (Descartes) பிரான்ஸின் பணக்கார குடும்பம் ஒன்றில் பிறந்தவர். (பிறப்பு 31-3-1596 மறைவு 11-2-1650).தெய்வ நம்பிக்கை உள்ள கத்தோலிக்கர். ராணுவத்தில் தன்னார்வல படை வீரராக அவர் சேர்ந்தார். ப்ராடஸ்டெண்டுகள் கத்தோலிக்கர்களுடன் சண்டையிட்ட 30 வருட ப்ரேக் (Siege of Prague) முற்றுகையிலும் அவர் கலந்து கொண்டார்.
ஒரு சமயம் தெற்கு ஜெர்மனியில் பயணம் செய்கையில் அவர் பிரபல கணித மேதையும் விஞ்ஞானியுமான ஜோஹன் ஃபால்ஹேபரைச் (Johann Faulhaber) சந்தித்தார். ஜோஹன் விஞ்ஞானி மட்டுமல்லாமல் ஒரு தெய்வீக யோகியும் கூட. அவர் கணிதத்திலும் தெய்வீக யோகத்திலும் தனது சில கொள்கைகளை டெஸ்கார்டஸுக்குக் கற்பித்தார். அதிலிருந்து டெஸ்கார்டஸுக்கு அவற்றில் அதிக ஆர்வம் பிறந்தது.
அவருக்கு கணித மேதையான ப்லெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) சிறந்த நண்பராக விளங்கினார்.
பாஸ்கல் தான் தியரி ஆஃப் பிராபபலிடியைக் (Theroy of Probability) கண்டவர்.
அவருக்கும் தெய்வ நம்பிக்கை உண்டு.
“கடவுளை நம்பு. அவரை நம்பினால் இறப்பிற்கு பின் அவர் நம்மைக் காப்பார்; ஒருவேளை கடவுள் இல்லை என்றாலும் நமக்கு ஒரு நஷ்டமும் இல்லை; ஆனால் நம்பாமல் இருந்தாலோ நரகத்திற்கு அல்லவா போக வேண்டி இருக்கும் “ என்றார் அவர்.
டெஸ்கார்டஸ் 1628இல் ஹாலந்து சென்றார். 1637ஆம் ஆண்டு தனது பிரசித்தமான “The Discourse on the Method” என்ற நூலை வெளியிட்டார்.அவரது இந்த புத்தகம் ப்ராடஸ்டெண்டுகளுக்கு ஆத்திரத்தைத் தந்தது. அவரை மன்னிப்புக் கடிதம் எழுதுமாறு அவர்கள் வற்புறுத்தினர். இதனால் மனம் வருந்தி அவர் ஸ்வீடனுக்குக் கிளம்பினார். ஆனால் 1650ஆண்டு ப்ளூவினால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஆனால் அவரது மரணம் பற்றிய மர்மம் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தெய்வ நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் முரண்பாடு இல்லை ஏ என்ற கொள்கையை அவர் கொண்டிருந்தார். இதனால் அனைவராலும் அவர் மதிக்கப்படுகிறார்.
***
புத்தக அறிமுகம் – 62
சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க்கவிதைகளும் அறிவுரைகளும்!
பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமுமே.
இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த நூல்கள் ஓலைச் சுவடிகளாக உள்ளன; பாரதத்திலேயே கல்வெட்டுக்களில் இலக்கியச் செல்வம் பொதிந்திருக்கிறது. இன்னும் முறையாக அவை தொகுக்கப்படவில்லை.
சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். அதில் தனி ஒரு இடத்தை சுபாஷிதங்கள் பெறுகின்றன.
பல தனிப்பாடல்களைத் தொகுத்து உள்ள தொகுப்பு நூல்களும் ஏராளமாக உள்ளன.
இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன்.
அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் – 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்களை அடுத்து இந்த நூல் வெளியாகிறது.
கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.
இவற்றை www.tamilandvedas.com ப்ளாக்கில் வெளியிட்ட லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
நன்றி சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன் 10-9-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
I HAVE WRITTEN THREE ARTCILES ON SAMUDRIKA LAKSHANA FROM 2012. PLEASE SEE THE LINKS AT THE END OF THIS ARTICLE
Samudrika lakshana is the study of body features of a man or woman and interpret his /her characteristics, behaviour etc. on the basis of the features. It is a Hindu science practised by Hindus for thousands of years. 2000 year old Kamasutra of Vatsyayana lists this science as one of the 64 arts. The proof for it lies in the Valmiki Ramayana and Mahabharata. Whenever they describe a heroic type of man the poets will use the Sanskrit words Aajaanu Baahu; the meaning is one who is blessed with long arms which touch one’s knees. Rama is described Aaajaanu Baahu by Valmiki. Tamils also followed it in Kambaramayana and other books. If we look at the scientific background, before weapons made of iron were made men were using bow and arrow. Naturally if a man who practises archery more , his arms grow longer and longer generation after generation. It can be interpreted from another angle as well. One who has longer arms will easily excel in shooting arrows; naturally he becomes a hero.
In Tamil Thiruvilaiyadal Purana we have more information about excellent body parts.
What is Thiruvilaiyadal Purana?
It is a Tamil book written by atleast 300 years ago by Paranjothi Munivar. It tells us the story of Lord Shiva’s miracles in Madurai, the temple town of Tamil Nadu. Most famous Meenakshi Sundareswarar temple is located in Madurai and the 64 leelas/ playings of Lord Siva are in this Purana. They are enacted even today as temple festivals in Madurai. There is an earlier book with the same name written by Perumpatrappuliyurar. Both deal with the same subject
In the chapter about Ukkira Kumara Pandya, there is a good description of commendable or admirable body features. Ukkira kumara was the son of Somasundara Pandya (Lord of Madurai temple). He is said to have 32
Exceptional body features (Samudrika Lakshana).
One will become an Indra (like Vedic hero Indra) if the following 6 body parts are prominent: stomach, shoulder, forehead, nose, chest, palm.
Following 5 parts should be longer: eyes, head, hand, nose, chest.
Life span will increase if the following 5 parts are smaller: hair, body, finger nodes, nail, tooth.
Wealth will increase if the following 4 parts are narrower: tongue, back, ankle, genital part
More pleasure will be obtained if the following 7 parts are reddish: sole, palm, eyes, lips, palate, tongue, nail.
It will be good if head and forehead are broad.
If belly button, ikalvali (meaning is not found for this Tamil word) and Voice are deeper that person will be in the forefront.
OLD ARTICLES
Scientific proof for Samudrika Lakshana – Tamil and Vedas
19 Jan 2020 — It is the study of body parts and their connection to a person’s behaviour and character. It is one of the 64 arts listed in Vatsyayana’s Kama …
सः राघवः அந்த ராமன்/ராகவன் , अभिक्रान्ताम् அவளிடம் வந்த போது , मातरम् அன்னையை , उपसंगृह्य மரியாதையுடன் வணங்கினான் , बाहुभ्याम् (அவள்) இரு கைகளாலும் , परिष्वक्तः கட்டி அனைத்து , मूर्धनि உச்சம் தலையில் , उपाघ्रातश्च முத்தம் கொடுத்தாள்.
xxxx
கடும் தவத்தினாலேயே ராமன் போன்ற ஒரு குழந்தை பிறக்க முடியும் என்றும் வால்மீகி காட்டுகிறார் 2-20-48
उपवासैश्च योगैश्च बहुभिश्च परिश्रमैः।
दुःखं संवर्धितो मोघं त्वं हि दुर्गतया मया।।2.20.48।।
உபவாஸைஸ்ச யோகைஸ்ச பஹு பி ஸ்ச பரிச்ரமைஹி
துக்கம் ஸம் வர்த்திதோ மோகம் த்வம் ஹி துர்கதயா மயா
त्वम् நீ , दुर्गतया मया துரதிருஷ்டம் மிக்க என்னால் , उपवासैश्च நோன் பிருந்தும் , योगैश्च யோகத்தைப் பின்பற்றியும் , बहुभिः பல , परिश्रमैश्च முயற்சிகள் செய்தும் , दुःखम् கஷ்டப்பட்டு , मोघम् வீணாகிப் போய்விட்டதே , संवर्धितः வளர்த்ததெல்லாம்
நோன்பு, தவம் மூலம் பெற்று உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல போய்விட்டது என் துர்பாக்கியம்தான் (கெளசல்யாவின் புலம்பல்)
இதையே வள்ளுவனும் எதிரொலிக்கிறான்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல் 70
மகனுடைய குண நலன்களைக் கண்டவர்கள் இவன் தந்தை எந்த அளவுக்கு நோன்பு இருந்து — தவம் செய்து — இவனைப் பெற்று இருக்கவேண்டுமென வியப்பர்.
xxx
பெண் சந்யாசிகள்
ஆண்களைப் போலவே பெண்களும் துறவற வாழ்க்கை வாழ்ந்ததையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். அவர்களை பிக்ஷுணி , தபஸ்வினி ,ப்ரவ்ரஜிதா என்ற சொற்களால் அழைக்கிறார் .
அத்தகைய சன்யாசினிகள் நடுக்காட்டில் ஆஸ்ரமத்தில் வசித்தனர். அவர்களுக்கும் முறையான குரு உண்டு. சபரி போன்ற தவசியர் இலை-தழை உடைகளையும் மான்தோலையும் அணிந்து வாழ்ந்தனர் பம்பா நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்த சபரியின் குரு மாதங்க முனிவர்
पितुः தந்தையினுடைய गेहे வீட்டில் कन्यया நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது , मया என்னால் , मम मातुःஎன்னுடைய தாயார் , अग्रतः முன்பாகவே, साधुवृत्तायाः சாதுவாக வாழும் , भिक्षिण्या ஒரு பெண் சந்நியாசி , इह இந்த உலகில் वनवासः காட்டில்தான் வாழமுடியும் என்று சொன்னதைக் , श्रुतः கேட்டேன் .
பெண் சன்யாசிகளும் காட்டில் வாழ்ந்ததை இது காட்டுகிறது.
xxxx
पश्य मेघघनप्रख्यं मृगपक्षिसमाकुलम्।
मतङ्गवनमित्येव विश्रुतं रघुनन्दन।।।3.74.21।।
பஸ்ய மேக கண ப்ரக்யம் ம்ருக பக்ஷி ஸமாகுலம்
மதங்க வனம் இத்யேவ விஸ்ருதம் ரகுநந்தன
रघुनन्दन ரகு குலத்தில் உதித்தவனே , मेघघनप्रख्यम् கரிய மேகம் போல இருண்டு கிடக்கும் , मृगपक्षिसमाकुलम् fபிராணிகளும் பறவைகளும் நிறைந்த இந்த இடம் , मतङ्गवनमित्येव மதங்க முனிவரின் வனம் /காடு , विश्रुतम् என்ற புகழ் பெற்றது , पश्य அதைக் காண்பாயாகுக.
அடர்ந்த காடு ; கரிய மேகக் கூட்டம் போல இருண்டு கிடக்கும் காட்டில் மிருகங்களும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இதுதான் மதங்க முனிவரின் வனம் /காடு என்று புகழ்பெற்றுள்ளது
இதிலிருந்து மதங்க முனிவரின் கீழ், அவரைக் குருவாக ஏற்று பெண் சன்யாசினியாகிய சபரி வசித்தது புலனாகிறது
महावने இந்தப் பெரிய காட்டில் , भावितात्मानः நமக்கு மேலுள்ளவனை நினைந்து ते அவர்கள் मे गुरुवः என்னுடைய குருமார்களான , इह இங்கே , मन्त्रवत् மந்திரங்களினாலும் , मन्त्रपूजितम् அந்த மந்திரங்கள் மூலம் , तीर्थम् புனித நீரோடு , जुहवाञ्चक्रिरे யாக்கங்களைத் செய்தனர் .
என்னுடைய குருமார்கள் இந்த பெரிய வனத்தில் பெரிய கடவுளைப் போற்றி மந்திரங்கள் சொல்லி யாக யக்ஞங்கள் செய்தனர்.புனித நீர் கொணர்ந்து யாக திரவியங்களால் பூஜித்தனர்
நடுக்காட்டில் அவர்கள் செய்த யாக யக்ஞங்களை இந்த ஸ்லோகம் வருணிக்கிறது. அது மட்டுமல்ல; ராமாயண காலத்தில் பெண்துறவிகளும் அத்தகைய இருண்ட காட்டில் வசித்தனர் என்பதையும் சொல்கிறது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் … 8
ச.நாகராஜன்
14
ஆவாகாட்ரோவின் மறுக்கப்பட்ட விதி!
பிரபல விஞ்ஞானியாக இன்று கொண்டாடப்படும் ஆவாகாட்ரோ (Amedeo Avogadro 1776-1856) அவர் வாழ்நாளில் சரியாக மதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம். சிறந்த கனவானாகத் திகழ்ந்த அவர் ஒரு வக்கீல். பின்னர் பள்ளி ஆசிரியர். பின்னால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஆனார்.
அவர் விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். வெவ்வேறு வாயுக்கள் ஒரே கன அளவைக் கொண்டிருந்தால், உஷ்ணநிலையும் அழுத்தமும் ஒரே அளவாகவும் அவை கொண்டிருந்தால், அவை சமமாக ஒரே எண்ணிக்கையில் அணுத்துகளைக் கொண்டிருக்கும் என்று (Equal volumes of different gages contains an equal number of molecules provided they are at the same temperature and pressure.) அவர் கூறினார்.
ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் பலரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
ஆனால் அவர் மறைந்த பிறகு 1870ஆம் ஆண்டு தான் இது சரி தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
இப்போது அவரது விதி ஆவாகாட்ரோஸ் லா (Avogadro’s Law) என்று அழைக்கப்படுகிறது.
விஞ்ஞானத்தில் மரபணுக் கொள்கையை முதலில் கண்டுபிடித்தவர் க்ரெகர் மென்டெல். (காலம் :20-7-1822- 6-1 18841884). இவர் ஒரு உயிரியல் வல்லுநர். காலநிலை பற்றிய அறிவியல் நிபுணர். ஒரு கணித மேதையும் கூட.
இவர் ஒரு துறவி. வம்ச பரம்பரை பற்றிய சரியான விதிகளை இவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். இந்த விதிகளே பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் உயிரினங்களில் மரபணு அம்சங்களைப் பின் தொடரச் செய்கிறது என்று கண்டுபிடித்தார் அவர்.
ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இது அறியப்படவில்லை. அவர் மறைந்து 16 ஆண்டுகள் ஆன பின்னரே, 1900ஆம் ஆண்டு வாக்கில் தான் இது சிறப்பாகக் கொண்டாடப்பட ஆரம்பித்தது. அவர் தனது ஆய்வை மறைவதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பேயே, 1866ஆம் ஆண்டே, பிரசுரித்தார்; உலகிற்கு அறிவித்தார்.
இதை அறிவித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர் தனது மடத்தின் மடாதிபதியாக ஆனார். தனது வாழ்நாள் முழுவதும் மடத்தை நிர்வகித்து வந்தார்.
16
கொண்டாடு என்பதை பிரம்மசாரியாக இரு என்று மாற்றிய கதை!
ஒரு ஆவணத்தை காபி செய்வதில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உயிரியல் விஞ்ஞானிகளின் மாநாடு ஒன்றில் ஒரு விஞ்ஞானி கூறிய ஜோக் இது:
ஒரு மடாலயத்தில் துறவி ஒருவர் புதிதாகச் சேர்ந்தார். அவர் அங்குள்ள துறவிகள் அனைவரும் அங்குள்ள பழைய புத்தகங்களில் அவரவருக்குப் பிடித்த ஏதோ ஒரு புத்தகத்தைக் காபி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.
புதிய துறவி மடாலயத்தில் கீழே இருந்த நிலவறைக்குச் செல்ல ஆரம்பித்தார்.
ஏன் அங்கு போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது புத்தகத்தின் ஒரிஜினல் கையெழுத்துப் பிரதியை நான் பார்க்க விரும்புகிறேன். அதனால் அங்கு போய் அதை எடுத்துப் பார்த்து காபி செய்யப் போகிறேன் என்றா.
சிறிது நேரத்தில் நிலவறையிலிருந்து ‘ஓ’ என்ற கூக்குரலும் அழுகுரலும் கேட்டது.
அனைவரும் அங்கு ஓடிப் போய்ப் பார்த்தனர். புதிய துறவி அலறிக் கொண்டிருந்தார்.
என்ன விஷயம் என்று கேட்ட போது ஒரிஜினல் புத்தகத்தைக் காண்பித்து அவர் கூறினார் : நீங்கள் காபி அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்வது தவறு. ‘பிரம்மசாரியாக இரு’ என்று சொல்லவில்லை புத்தகம். ‘கொண்டாடு’ என்று அல்லவா சொல்லி இருக்கிறது என்றார். (The Word is CELEBRATE, not CELIBATE)
காபி அடித்த புத்தகத்தைப் பார்த்து பிரம்மசாரிகளாக இருந்த அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.
இதைச் சொன்னவர் உயிரியல் அறிவியலில் பேராசிரியரான மார்க் பாகல் (Professor of biological Sciences, Mark Pages, University of Reading)
ஆகவே, ஆவணத்தைப் படி எடுப்பவர்கள் சரியாக உன்னிப்பாகக் கவனித்து படி எடுக்க வேண்டும்!
உலகின் பழம் பெரும் மொழியாகிய தெய்வத் தமிழ் இறைவனிடமிருந்து தோன்றிய மொழி என்பதை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்டவை தெள்ளத் தெளிவாக விளக்குவதை அனைவரும் அறிவர்.
காலம் காலமாக பல்லாயிரக் கணக்கில் கவிதை மழை பொழிந்து வந்துள்ளனர் தமிழ் வளர்த்த புலவர்கள்.
இவர்கள் ஆங்காங்கே உடனுக்குடன் இயற்றிய தனிப் பாடலகள் பல்லாயிரமாகும்.
அவற்றைத் தொகுத்து வெளியிடும் பல முயற்சிகளும் நடந்துள்ளன.
குறிப்பாக திரு மு,இராகவையங்காரின் பெருந்தொகை, திரு உ.வே.சாமிநாதையரின் தனிப்பாடற்றிரட்டு, திரு மு.ரா. கந்தசாமி கவிராயர் தொகுத்த தனிச் செய்யுட் சிந்தாமணி ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.
இவற்றிலுள்ள சில பாடல்களைப் பற்றி அவ்வப்பொழுது www.tamilandvedas.com இணைய தளத்தில் எழுதி வந்தேன்.
அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இதை நூலாக அழகுற வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு சமயோசித ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தத் தனிப்பாடல்கள் அனைவருக்கும் அளவில்லா தமிழ் இன்பத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
இதை விரும்பி வரவேற்றுப் பாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
வாருங்கள் கவிதை உலகில் நுழைவோம்.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
26-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
ஒரு மனைவியின் கடமை, வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை செய்வதே என்று வால்மீகி கருதுகிறார்
கணவர் என்பவர் நகரத்தில் இருந்தாலும் , காட்டில் இருந்தாலும், பாவியாக இருந்தாலும் , குணவானாக இருந்தாலும், கணவரிடத்தில் அன்பாக இருப்பவர் சிறந்த மேலுலகங்களுக்குச் செல்வார்கள்
यासाम् எந்தப் , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும் वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).
आर्यस्वभावानाम् ஆர்ய/பண்புள்ள பாவனை கொண்ட , स्त्रीणाम् பெண்களுக்கு , दुश्शीलः கெட்ட குணமுள்ள , कामवृत्तो वा or அல்லது கெட்ட நடத்தையுள்ள , धनैः பணமுடைய , परिवर्जितो वा or devoid of அல்லது பணமில்லாத , पतिः கணவன் , परमम्உயர்ந்த , दैवतम् தெய்வமே .
பண்பாடுமிக்க பெண்களுக்கு , கணவன் ஒழுக்கம் குறைந்தவன் ஆனாலும் , கெட்டவன் ஆனாலும், பணமிருந்தாலும் ,பணமில்லாதவன் ஆனாலும், கணவனே கண்கண்ட/உயர்ந்த தெய்வம்
xxxx. .
नातो विशिष्टं पश्यामि बान्धवं विमृशन्त्यहम्।
सर्वत्र योग्यं वैदेहि तपः कृतमिवाव्ययम्।।2.117.24।।
நாதோ விசிஷ்டம் பஸ்யாமி பாந்தம் விம்ருசந்த்யஹம்
ஸர்வத்ர யோக்யம் வைதேஹி தபஹ க்ருதமிவாவ்யயம்
वैदेहि வைதேஹி , अहम् Iநான் , सर्वत्र எல்லாவிதத்தி லும் , विमृशन्ती சிந்தித்துப் பார்த்ததால்,, कृतम् செய்யப்பட்ட , अव्ययम् அழியாத , योग्यम् தகுந்த , तपः इव lதவம் போன்றதே , अतः அப்படிப்பட்ட கணவனைவிட , विशिष्टम् சிறந்த , बान्धवम् உறவினை , न पश्यामि நான் பார்த்ததில்லை .
ஓ ஸீதா ? யோசித்துப்பார்த்தால் ஒரு கணவனை விட நல்ல நன்பண் யாரும் எனக்குத் தென்படவில்லை.அவர் அழியாத முடியாத தவ வலிமை போன்றவர்.
xxx
கணவனின் அச்சுதான் மனைவிக்குப் பிறக்கும் ஆன் குழந்தை என்ற நம்பிக்கையும் இருந்தது.அதனால்தான் அவளுக்கு ‘ஜாயா’ என்று பெயர் என மனு (9-8) செப்புகிறார்
அதில் ஒன்று : மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! – என்பதாகும்.
இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.
அது இதோ:
குட்டி ஆமை ஒன்று மலை மீதும், சமவெளி மீதும், அதில் அருகில் பாய்கின்ற நதியிலும் விளையாடுவது வழக்கம்.
நல்ல புத்திசாலி ஆமை அது.
ஒரு நாள் அந்த ஆமை மலையிலிருந்து கீழே வந்த போது யானை ஒன்று எதிர்த்தாற் போல வந்தது.
ஆமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த யானை, “குட்டி ஆமையே, வழியிலே வராதே. என் காலில் அகப்பட்டால் நீ மிதிபட்டுச் சாவாய்” என்று கூறியது.
“ஊம். உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு” என்று கூறியது ஆமை.
யானை சிரித்தது. “போ, போ” என்று கூறி விட்டுத் தன் வழியே சென்றது.
அடுத்த நாளும் யானை வந்தது. ஆமையைப் பார்த்தது. பரிதாப்பப்படு தான் முந்தைய நாள் சொன்னதையே திருப்பிச் சொன்னது.
ஆமையும் பதிலுக்கும். “நானும் உன் அளவு வலிமை பெற்றவன் தான்.
சந்தேகம் இருந்தால் நாளைக்கு இதே நேரம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். அப்போது உனக்குத் தெரியும், எனது வலிமை பற்றி” என்றது.
யானை சிரித்தது. போட்டிக்கு மறு நாள் வர ஒத்துக் கொண்டது.
யானை அங்கிருந்து தன் வழியே சென்றதும் ஆமை ஒரு நீளமான கயிறைத் தயார் செய்தது.
அருகிலிருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. அதிலிருந்த நீர் யானை அலறியது.
“என் கிட்டே வராதே! நசுங்கிச் சாவாய்” என்றது அது.
ஆமை உடனே, “உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு. வேண்டுமானால் நாளைக்கு ஒரு போட்டி வைத்துக் கொள்ளலாம். இதோ பார், ஒரு கயிறு! இதை உன் வாயில் வைத்துக் கொள். நான் ரெடி என்று சொன்னவுடன் நீ இழு! அப்போது என் வலிமை உனக்குத் தெரியும்” என்றது.
நீர் யானை சிரித்தது.
“சரி, நாளை பார்ப்போம். நான் ரெடி” என்றது.
மறு நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு யானை வந்தது. அதை மலைக்கு மேலே தன் இருப்பிடத்திற்கு வருமாறு ஆமை அழைத்தது.
யானை மலை உச்சிக்கு ஆமை இருந்த இடத்திற்குச் சென்றது.
ஆமை கயிறின் ஒரு முனையை யானையிடம் கொடுத்து, “நான் ரெடி என்று சொன்னவுடன், நீ கயிறை இழு! யார் வலிமை என்பது தெரியும்” என்றது.
யானை தன் மனதில் இந்த ஆமைக்கு எவ்வளவு தைரியம் என்று நினைத்துக் கொண்டே கயிறை வாங்கித் தன் வாயில் வைத்துக் கொண்டது.
குடுகுடுவென்று மலையை விட்டு இறங்கிய ஆமை நதிக்குள் சென்று அங்கு காத்துக் கொண்டிருந்த நீர் யானையிடன் கயிறின் இன்னொரு
முனையைக் கொடுத்தது.
சரியாக யானைக்கும் நீர் யானைக்கும் சமதூரத்தில் வந்து நின்ற ஆமை, “ரெடி! இழுக்கலாம்!” என்றது.
யானை இழுக்க, நீர் யானை இழுக்க இரண்டினாலும் நகரவே முடியவில்லை.
சமபலம் கொண்டிருந்ததால் நெடு நேரம் இழுத்தது தான் மிச்சம்.
“போதும்” என்று கூவிய ஆமை நீர் யானையைப் பார்த்து, “என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது.
நீர் யானை வியப்புடன் தலையை ஆட்டி விட்டு நதிக்குள் சென்று மறைந்தது.
மலை மேலிருந்து அப்போது இறங்கி வந்த யானை கயிறின் இன்னொரு முனையை வாயில் கவ்விக் கொண்டிருந்த ஆமையை வியப்புடன் பார்த்தது.
“என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது ஆமை.
வியப்புடன் ஆமையைப் பார்த்த யானை, “ஆஹா! நீ சொல்வது உண்மை தான்! என்னளவு பலம், ஏன், என்னை விட கூடவே பலம் வாய்ந்தவன் நீ” என்று பாராட்டி விட்டுத் தன் வழியே சென்றது.
சரி, கதையின் நீதி என்ன?
மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!
இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!
இது ஜைரியன் நீதிக் கதைகளுள் (Zairean Fables) ஒன்று.
‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)
Get others to do the work for you, but always take the credit! இது தான் அவர் கூறும் ஏழாவது விதி!
‘இது தான் இந்தியா’ என்ற எனது நூலை அடுத்து பொன்னொளிர் பாரதம் என்ற இந்த நூல் வெளியாகிறது.
இந்தியாவின் அறப்பண்புகளையும், சிறப்பு அம்சங்களையும் நாம் தெரிந்து கொண்ட வேளையில் ஒரு முக்கியமான சந்தேகம் எழுவது இயல்பு.
இப்படிப்பட்ட அரும் தேசம் எதனால் பல நூற்றாண்டுகள் அன்னியர் பலரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதே அது. கலைகளில்
சிறந்தது, அறப் பண்புகளில் சிறந்தது, வீரத்தில் சிறந்தது ஏன் வீழ்ந்து பட்டிருக்க வேண்டும்?
இதற்கான பல காரணங்களில் தலையாய காரணங்களாக நம் முன் இரண்டு காரணங்கள் அறியப்படுகின்றன.
ஒன்று நம்மிடையே ஒற்றுமை இல்லை.
இரண்டாவது வீரத்தையும் பொறுமையையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை அறிந்து கொள்ளத் தவறி, அறப்பண்புகளையே முற்றிலுமாகக் கடைப்பிடித்து எல்லையற்ற சகிப்புத்தன்மையை மேற்கொண்டது தான்!
இந்த சகிப்புத்தன்மையை ஆக்கிரமிப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு தங்களது அரக்க குணங்களுக்கேற்ப பிரித்தாளும் சூழ்ச்சி, சிரித்துப் பேசியவாறே முதுகில் குத்தச் செய்வது, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட எண்ணற்ற வழிகளைக் கையாண்டு நம்மை அடிமைப் படுத்தினர்; சுரண்டினர். என்றாலும் கூட அறப்பண்புகள் ஒரு நாளும் அதைக் கடைப்பிடித்தோரை கை விடாது என்பதை அறிவிக்கும் வண்ணம் நம் நாடு சுதந்திரம் பெற்றது; இப்போது வலிமையான நாடாக, உலகிற்கு பண்டைய காலம் போல வழி காட்டும் தேசமாக ஆகி வருகிறது.
கடந்த பல நூற்றாண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல.
அவற்றில் முக்கியமானவை ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் சகிப்புத்தன்மையை எல்லை மீறி கடைப்பிடித்து நம்மை கோழைகளாக வெளி உலகம் கருதும் அளவு நடப்பது கூடாது என்பவையே அவை கடந்த காலத்தில் ஆங்காங்கே தேசம் முழுவதும் ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. ஆகவே மறக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை வெளிக் கொணர்ந்து அதிலிருந்து உத்வேகத்தை நமது நாட்டு இளம் தலைமுறையினர் பெற வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியில் ஒரு சிறு துளியே இந்த நூலாக அமைகிறது.
இதில் நமது வீரர்களின் வீரம், ஆக்கிரமிப்பாளர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது.
இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுரைகள் வெளி வந்து அவை ஒரு கலைக் களஞ்சியமாகத் தொகுக்கப்பட வேண்டும்.
பொன்னொளிர் பாரதத்தின் உண்மையான வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரைகளில் சில கட்டுரைகள், ஞான ஆலயம், ஶ்ரீ ஜோஸியம் பத்திரிகைகள் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக்கில் பிரசுரிக்கப்பட்டவை. இதை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக,
கட்டுரைகளில் பெரும்பாலானவை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான ட்ரூத் இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்தவை.
அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தேன்.
ட்ரூத்(TRUTH – www.sdpsorg.com இதழ் சாஸ்திர தர்ம பிரசார சபாவினால் கடந்த 90 ஆண்டுகளாக வாரம் தோறும் தவறாமல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதில் வெளியாகும் அருமையான கட்டுரைகள் நமக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பவை.
அதன் ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் அவர்கள் எனது உற்ற நண்பர். எனது இந்தப் பணியில் ஊக்கம் தருபவர்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோச. நாகராஜன்
5-9-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
As usual thousands of devotees took part in the Jagannath ratha yatra in central London today 4-9-2022. It took nearly two hours to cover the distance between Hyde Park Corner to Trafalgar Square in London. Volunteers maintained the traffic without any disturbance to the general public Thousands of general public took videos and photos and had free food at the square. Many from other religions joined the devotees and danced all along the route. It covered main stations like Green Park, Piccadilly Circus, and Charing Cross. Young and old danced to the tune of Hare Rama, Hare Krishna chorus for hours. At the Trafalgar Square along with the tasty food entertainment was also provided. Book shops were selling Bhagavata and Bhagavad Gita books. It was a memorable scene.
Some pictures are given below; over 100 pictures and three short videosare posted in Facebook from 4th September onwards:-