Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக் காரணம்!
ச.நாகராஜன்
வைரஸ் என்றால் என்ன?
டாக்டர் சுப்ரமண்யன் நாராயண் தரும் தகவல் இது. இவர் பரிசுகளை வாங்கிய ஒரு எழுத்தாளர். ஆலோசகர். ஆய்வாளர்.
ஒரு வைரஸின் எடை 0.85 ஆட்டோகிராம் ஆகும். அதாவது ட்ரில்லியன் கிராமில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு.
ஒரு மனிதனை வியாதிக்குள்ளாக்கும், 70 பில்லியன் வைரஸ்கள் ( ஒரு பில்லியன் என்றால் 100 கோடி) 0.0000005 கிராம் தான்! இப்போது உலகில் உள்ள கேஸ்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகம் என்பதால் உலகில் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ்களின் மொத்த எடை சுமார் ஒரு கிராம்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் விஷயம் இது தான்:-
மனிதர்கள் வாழும் இந்த பூமி என்னும் கிரகம் ஒரு கிராம் வைரஸுக்கு முன் மண்டியிடுகிறது.
நமது பகட்டு பற்றிய மாத் தோற்றங்களும் அறிவியல் முன்னேற்றமும் இவ்வளவு தான். ( ஒரு கிராமுக்கும் குறைவான, உயிருடன் இருக்கும் ஒன்று என்று சொல்வதற்குக் கூட லாயக்கில்லாத ஒரு உயிரினம் மொத்த மனித இனத்தையும் தன் முன் மண்டியிட வைத்திருக்கிறது.
அடக்கமாக இருங்கள்!
(மனித) இனம் என்று அறியப்படும் ஒன்று ஒரு கிராம் வைரஸுக்கும் குறைவானது தான்!
ஆதாரம், நன்றி : Truth Weekly, Vol 89 No 21 Dated 3-9-2021
*
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது.
VIRUS – What It Is:
Dr Subramanyan Narayan, award-winning author, consultant and researcher, writes as follows:
The weight of a virus is measured at 0.85 attograms or about one millionth of a trillion grams.
70 billion viruses that will make a person sick will be about 0.0000005 grams. Since the total number of cases worldwide is now over 2 million, the total weight of the rogue viruses that have descended on the world comes to about 1 gram.
At the end of the day that means:
The entire planet (or let us say mankind) is on it’s knees with just 1 gram of virus taking over!
So much for our illusions of self grandeur and achievements in science. (Less than 1 gram of an organism that cannot even be called to be alive and the whole human race is at it’s knees.
Be humble….
What we know as a race is lesser than the weight of the Virus.
Source and Thanks : Truth Weekly, Vol 89 No 21 Dated 3-9-2021
***
INDEX
Virus weight, one gram virus, Human race is at it’s knees,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
SOMA- A HALLUCINATIVE DRUG OR ELIXIR? PART -3
Second part was posted yesterday under the title
‘EINSTEIN IS 50% RIGHT, DARWIN IS 100 % RIGHT – RIG VEDA THROWS MORE LIGHT (Post No.10101)’
Let us look at the remaining mantars in the hymn RV 9-97 on Pavamana Soma:-
Mantra 43 of RV.9-97
Flow onward Righteous Slayer of the Wicked;
Drive away our enemies and sickness
Blend your milk with the milk that cows afford us
We are Your Friends; And You are Indra’s Friend!.
xxx
9-97- 44 onwards…………….
You are a Spring of Treasure; Pour us a fount of Honey/meath
Pour down Riches on us FROM THE OCEAN
(These words show that there was a big maritime trade between India and the Middle East and Africa; Bogazkoi Inscription of 1340 BCE prove that there was well established Vedic Hindus settlement in Turkey and Syria).
You are strong; you are wise;
You are sun-bright; you are chariot borne; truly potent.
You were poured forth like the longing of the pious.
Soma ! your daughter is earth. You cover her with your clothes.
You are singing like a priest in the assembly/ gathering.
You find three -fold refuge in the waters.
You are sweetest in waters, rich in meath and holy.
You are truthful-minded.
Flow to the song inspiring car borne (Asvins)
Flow to mighty Indra
Pour on us garments that shall clothe us suitably;
Please send us chariot drawing horses that may bring us treasures bright and
Golden
Send us in streams Celestial Riches.
Send us what earth contains so that we may acquire possessions and
Rsihood in Jamadagni’s manner
You are full of wisdom
You are glorious; flow on for us to the famed ford
May the Foe-queller shake us down , for triumph, like a tree’s ripe fruit 60,000 treasures
Soma ! Turn away the Foolish and Unfriendly
Soma sent our enemies to sleep and slew them
You are the giver of gifts
You are wise, King of all Existence
Devas sing like the bards who sing for obtaining wealth
May we pile up together all our spoil in battle
May Varuna and Mitra, Aditi and Sindhu, Earth and Heaven give us wealth
Thus ends the hymn RV 9-97.
Though the song looks like a battle cry it is not a battle cry.
They pray for status of a Rishi (Rsihood); they pray for the destruction of their sins; they also pray for earthly riches and celestial riches.
If one reads all the 58 Mantras and see the inner meaning, they pray to god for all the good things in life. Here Soma stands for GOD. And another point to be noted is God is a friend. This found throughout the Rig Veda. And they pray for the group, not for him alone. Always we and us and not I and me!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் ( Part 2
ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் சொன்னது முழுதும் சரி
உலகப் புகழ் பெற்ற பெளதீக விஞ்ஞானி ஐன்ஸ்டைன் (ALBERT EINSTEIN) என்ன சொன்னார்? ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் ; இதுதான் பிரபஞ்சத்தின் மிக வேகமான பொருள். இதை யாரும் மிஞ்ச முடியாது ;அப்படி மிஞ்சும் ஒரு விண்கலம் தயாரித்தால் அதில் செல்வோர் என்றும் மார்க்கண்டேயன் போல வாழ்வான். அவனுக்கு மூப்பு என்பதே இல்லை. இதுவரை மனிதன் சென்ற விண்கலத்தின் (MANNED SPACECRAFT) அதிக வேகம் மணிக்கு 26,000 மைல்தான். வினாடிக்கு அல்ல. பிரபஞ்சத்தில் மனிதன் இல்லாத விண்கலம் (UNMANNED) அடைந்த வேகம் மணிக்கு 3 லட்சம் மைல்தான் . ஆனால் ரிக் வேதம் என்ன சொல்கிறதென் றால் பிரபஞ்சத்தின் அதிக வேகமான பொருள் மனதுதான் (MIND). மனத்தின் மூலமாக ஒரு வினாடிக்குள் லண்டனிலிருந்து டில்லிக்குச் சென்று திரும்பிவிடலாம். புளூட்டோ கிரகத்துக்கும் ஒரு வினாடியில் சென்று திரும்பிவிடலாம் ; அது சரி மனம் என்னும் வாகனம் உள்ளதா ? அதில் செல்ல முடியுமா? அப்படிச் செல்லுவதை யாராவது நம்புவார்களா ? இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள் இதை தினமும் நம்புகிறார்கள்
பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனக் கிரியையில் காயத்ரீ தேவியை இருதயத்துக்குள் வந்து அ மரும்படி சைகை (முத்திரை) செய்கின்றனர். ஜபம் முடிந்தவுடன் “அன்புள்ள தாயே நீங்கள் வசிக்கும் பூமியிலுள்ள மிக உயர்ந்த மலை உச்சிக்கே திரும்பிச் செல்லுங்கள்” என்று வ ழி அனுப்பி வைக்கிறார்கள். ஆக எங்கிருந்தோ காயத்ரீ ஒரு வினாடிக்குள் வந்து விடுகிறாள்!
பூமிக்கு அப்பாலுள்ள , இறந்து போன முன்னோர்களையும் இப்படி வருடத்துக்கு 94 முறை அழைத்து எள்ளும் நீரும் இறைக்கின்றனர் . இதில் என்ன அதிசயம் என்றால் ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் தர்ப்பைப் புல்லில் அமரும்படி கடவுளர்களை ரிஷிகள் அழைக்கிறார்கள். அதே போல பிராமணர்கள் இன்றும் தர்ப்பைப் புல்லைத் தாம்பாளத்தில் வைத்து இறந்து போன முன்னோர்களை அதில் உட்கார வைக்கிறார்கள் ; கிரியை முடிந்தவுடன் எந்த ஆகாய வழியில் வந்தீர்களோ அந்தப் பாதையிலேயே திரும்பிச் செல்லுங்கள் என்று GOOD-BYE ‘குட் பை’ சொல்கிறார்கள். ஆக அப்போதும் எங்கோ ஓரிடத்திலிருந்து பூமிக்கு அவர்கள் ஒரு நொடிப்பொழுதில் வருகிறார்கள்.ஆனால் கண்களால் காண முடிகிறதா? சிலருக்கு மட்டுமே முடியும்
ஏன் என்றும் சொல்கிறேன். ஒரு சின்னப் பையனைக் கூப்பிட்டு சந்திரனுக்கு மனிதன் போக முடியுமா? என்று கேளுஙகள் . ஓ போக முடியுமே ;நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG போயிருக்கிறார் என்பான். ஆனால் அது போலச் சென்றவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. அதுவும் அனைவரும் 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்றார்கள் . இதெல்லாம் அபூர்வாமாக நிகழக்கூடியவை. எல்லோராலும் செய்ய முடியாது. இது போலவே பல அபூர்வ சம்பவங்களை ராமாயணம், மஹாபாரதத்தில் படிக்கிறோம். மாதரி என்ற PILOT பைலட் செலுத்திய விண்கலத்தில் அர்ஜுனன், இந்திரலோகம் சென்று திரும்பியது, ராமாயணத்தில் இறந்து போன தசரதன் ராமன் முன்னர் தோன்றியது , புராணத்தில் ரேவதி நாட்சத்திரக் கதை இப்படி எத்தனையோ உண்டு .
ஒருவரை ஒளி வடிவில் மாற்றி ‘மனோ வேக’த்தில் அனுப்ப முடியும்
. இதை சோம ரசம் பற்றிய பாடல்களிலும் காண முடிகிறது. தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றுதான் பொருள். அதீத சக்தி படைத்தோர் இப்படி ஒளியாக மாறி, ‘மனோ வேக’த்தில் செல்லலாம். த்ரி லோக சஞ்சாரியான நாரதர் இப்படிச் செல்லுவதை பழைய திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இப்போது மேலை நாடுகளில் விஞ்ஞான புனைக்கதை படங்களிலும் வெளிக் கிரஹ வாசிகள் இப்படி திடீரென்று ஒளி ரூபத்தில் வந்து செல்வதைக் காட்டுகிறார்கள். இது வெள்ளைக்காரன் நம்மைக் ‘காப்பி’ (COPY CAT) அடித்து செய்யும் பல செயல்களில் ஒன்று.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகம் சரியே. அதை மிஞ்ச மனத்தால் முடியும். இதனால்தான் ராமாயண மஹாபாரதத்திலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் மனோ வேகம் (SPEED OF MIND) என்ற சொல் வருகிறது. இதனால் எங்கும் நொடிப் பொழுதில் செல்ல முடியும்; நமக்கு அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரை (PROXIMA CENTAURI) . 4.25 ஒளி ஆண்டு தொலைவில் (LIGHT YEAR) உளது. இதற்குப் போய்வர 9 ஒளி ஆண்டுகள் தேவை. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் சென்றால் !
மனிதன் ஏறிய விண் கலமோ இதுவரை மணிக்கு 26000 மைல்கள்தான் சென்றுள்ளது. ஆனால் மனோ சக்தி உடையோர் ஒரு நொடிப்பொழுதில் சென்று திரும்பி விடலாம். அங்கு ஏதெனும் செய்ய நினைத்தால் ஒளி ரூபத்தில் சென்று செய்யலாம். இப்படி ஒளி ரூபத்தில் மாறும் கடவுளர், சோமம் என்னும் மூலிகை முதலியன பற்றி ரிக் வேதம் நெடுகிலும் காணலாம்.
XXX
டார்வின் கொள்கை சரியே !
பரிணாமக் கொள்கை (THEORY OF EVOLUTION BY CHARLES DARWIN) இயற்றிய சார்ல்ஸ் டார்வின் நீரின் மூலமே உயிர் வாழ்வன தோன்றின என்கிறார். நாம் சொல்லும் மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை இந்த பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம் . ரிக் வேதத்தில் சோமம் பற்றிய இந்தப் பாடலிலும் நீர்தான் உயிர்வாழ்வனவற்றின் மூலம் என்ற வரிகள் வருகின்றன .
ஆகவே ஐன்ஸ்டைன் 50 சதம் வெற்றி; டார்வின் 100 சதம் வெற்றி என்று நான் சொல்லுவேன்
PART 2
FROM RIGVEDA 9-97
இனி ரிக் வேதத்தின் சோமம் பற்றிய துதிக்குத் திரும்புவோம் . இதோ இராண்டாம் பகுதி:–
வேகமாக, சுகத்தைக் கொடுக்கும், உணவைப் பெருக்கும் மழையைக் கொட்டுக ; அன்புள்ள குழந்தைகளை நாடும் உறவினன் போல் உன் சொந்தக்காரனானான காற்றுகளுடன் வருக
நீ சுத்தமாகும்போது என் பாவ முடிச்சுக்களையும் அவிழ்த்து விடுக
பசுமை நிறமுள்ள நீ குதிரை போல கர்ஜிக்கிறாய் ;
நீ மனிதர்களின் நண்பன்; வருக
நீ நறுமணம் மிக்கவன்; ஆயிரம் தாரைகள் உடையோன்; போரில் கிடைக்கும் செல்வம் கிடைக்க பெருகுக .
ஒளிவீசும் சோமரசம் கட்டவிழ்த்து விடப்பட்ட குதிரை போல பாய் கின்றது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:
ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!
ச.நாகராஜன்
இது கொரானாக் காலம்! பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் விஷயங்கள்! ஆகவே அனைவருக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும்.
உற்றார், உறவினர், நண்பர்கள், ஏனையோர் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, கைகளைச் சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல், வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை, கால்களைச் சுத்தம் செய்தல், வீட்டிற்குள் வரும் பொருள்களைச் சற்று வெயில் பட வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தல், கண்டிப்பாக இரண்டு கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்ளல் ஆகியவை பற்றி ஏராளமான செய்திகளைக் கேட்டு அவற்றை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.
நல்லது. ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசம் திணற, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றி நாடெங்கும் பேச்சாக இருக்கிறது.
ஆகவே ஆக்ஸிஜன் சுவாசம் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் சுவாசம் என்பது மூளை ஆற்றலை வலுப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் கூட உகந்த ஒன்று என்பதால் இது காலம் காலமாக அறிவியல் அறிஞர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இதை ‘க்ரியேடிவ் ப்ரெத்’ (Creative Breath) என்கிறோம்.
சுவாசத்தை ஒழுங்கு படுத்தினால் அது மனதைச் சாந்தப் படுத்துகிறது. தெளிவான மனமே படைப்பாற்றலுக்கான அடிப்படைத் தளம். பிரச்சினைகளைத் தீர்க்கவும் தெளிவான மனம் வேண்டும். இதற்கான பல வழிகளில் முக்கியமான வழி ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும் சுவாச முறை.
அறிவியல் நோக்கில் மூளையில் உள்ள ஆக்ஸிஜன் அளவு (Levels of Oxygen in the brain) நியூரோ டிரான்ஸ்மிட்டரான செரோடோனின் அளவுடன் (tied to the levels of the neurotransmitter Serotonin) இணைக்கப்படுகிறது.
இந்த செரோடோனின் அளவை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவன் மூலம் ஒழுங்கு படுத்தலாம். அதிக அளவில் செரோடோனின் மூளையில் இருந்தால் எரிச்சல், மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்டவற்றிற்கு நாம் உள்ளாவோம். ஆகவே இந்த செரோடோனின் அளவைக் குறைத்தால் மிகப் பெரிய அளவில் ஓய்வு கிடைக்கும். மூளையின் உள்ளுணர்வு ஆற்றல் கூடும்.நேரிலாச் செயல்கள் அதிக இசைவாகப் பாயும். (Nonlinear activities to flow more smoothly).
யோகா மூலம் பிராணாயாமம் செய்யும் போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி நன்கு அறிவோம். ஆகவே அது பற்றி மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
செரோடோனின் அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய, நாம் சுவாசிக்கும் காற்றின் மின் தரத்தைப் (Electrical Quality of the air we breath) பற்றி இங்கு பார்ப்போம்.
காற்றில் உள்ள பாஸிடிவ் அல்லது நெகடிவ் ஐயான்கள் (Positive or negative Ions in the air) தான் காற்றின் மின் தரத்தை அளக்க உதவுகிறது. நெகடிவ் ஐயான்ஸ் என்பது இடம் பெயர்ந்த எலக்ட்ரான்கள் ஆகும். அது அருகிலுள்ள மூலக்கூறுகளுடன் (molecules) தங்களை இணைத்துக் கொள்பவை. இவை நெகடிவாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த நெகடிவ் தன்மை தான் நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.
ஒரு நீர்வீழ்ச்சி அருகே – குற்றால நீர்வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்வோமே – நீங்கள் நின்று கொண்டிருந்தால், பச்சைப் பசுமையான காட்சிகள் இருக்க ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டப்பட்ட உணர்வை அடைகிறீர்கள். இங்கு நெகடிவ் ஐயான் உள்ள காற்றின் விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள். சாதாரணமான நாம் வசிக்கும் ஊர்களில் சுத்தக் காற்று உள்ள இடங்களில் ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு 2000 முதல் 4000 வரை நெகடிவ் ஐயான்கள் உள்ளன.
இதே நெகடிவ் ஐயான்கள் அருமையான நீர்வீழ்ச்சியின் அருகில் ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு ஒரு லட்சம் நெகடிவ் ஐயான்கள் என்ற அளவுக்கு உயர்கிறது. நல்ல தரமான ஒரு நெடுஞ்சாலையில் இது ஒரு கியூபிக் செண்டிமீட்டருக்கு 100 என்ற அளவில் இருக்கிறது.
நெகடிவ் ஐயான்களை அதிகப்படுத்துவதானது மூளையில் உள்ள ஆல்பா மூளை அலைகளை அதிகப்படுத்தி மூளை வளத்தைக் (amplitude) கூட்டுகிறது.
இது வேறு விதமான உணர்வை உள்ளத்தில் ஏற்படுத்துகிறது. இந்த ஆல்பா அலைகள் பல்வேறு மூளைப் பகுதிகளுக்கும் பாய்வதன் மூலமாக தெளிவான மன நிலை ஏற்படுகிறது. நல்ல கவனக் குவிப்பு ஏற்படுகிறது. மொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
ஆகவே கொரானா காலத்தில் மரம் அடர்ந்த வனப் பகுதி, நல்ல பூங்காக்கள், கடற்கரை, நீர்வீழ்ச்சி உள்ள இடங்களில் சென்று ஆக்ஸிஜனை அதிகம் பெறலாம், ஆனால் லாக் டவுன் என்று இருக்கும் போது வீட்டிலேயே மூன்று விதமான பயிற்சிகளை ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட நாம் பயன்படுத்தலாம்.
ஆழ்ந்து சுவாசத்தை உள்ளிழுத்துப் பின்னர் விடுவது. மூச்சை சில விநாடிகள் நிறுத்துவது மூளையை ஆக்ஸிஜன் மயமாக்குகிறது. தெளிவான மனத்தைத் தருகிறது. ஆல்பா மூளை அலைகளைப் பரவச் செய்கிறது.
இரண்டாவது பழைய கால நாசித் துவார யோகா முறையைப் பயன்படுத்துவது. இதை யோகா மாஸ்டரின் மூலமாக நன்கு கற்ற பின்னரே செய்ய வேண்டும். சூரிய நாடி, சந்திர நாடி (இடை, பிங்கலை பற்றி நன்கு அறிவோம்) ஆகிய இரு நாடிகளில் மாறி மாறி சுவாசத்தைச் செலுத்தலே இந்த வழி. இந்த வழியை தினமும் 10 நிமிடங்கள் மட்டும் செய்து வந்தால் அது அதிகப் பயனைத் தரும்.
அடுத்த வழி முடிந்த வரை சுவாசத்தை நிறுத்திப் பின்னர் விடுவது. இதை ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த ஜப்பானிய அறிவியல் அறிஞரான யோஷிரோ நகாமட்ஸ் (Yoshiro Nakamats) பரிந்துரைக்கிறார்; ஏராளமான தனது கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் தான் நீச்சலின் போது நீரில் அமிழ்ந்து இருந்து மூச்சை நிறுத்திக் கொள்வது தான் என்பது அவரே கூறியுள்ள காரணம்.
ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்து கொள்ள ஆக்ஸி மீட்டரை வாங்கி வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் தேவைப்பட்டபோது பார்க்கலாம்.98, 99 என்ற அளவு வந்தால் சரி. ஆனால் 88 என்ற அளவு வந்தால் அது அபாயத்தின் அறிகுறி.85 என்று மீட்டர் அளவைக் காட்டினால் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும். 80 என்று அளவு வந்தால் உடலின் முக்கிய அங்கங்கள் அபாயத்தில் இருக்கின்றன என்று அர்த்தம். இந்த Blood Oxygen level chartஐ ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு வீட்டில் வைத்துக் கொள்வது அவசியம். (ஆக்ஸி மீட்டரின் விலை ஆன் லைன் மூலமாகப் பெற சுமார் ரூ 899/)
ஆக்ஸிஜன் அளவை வீட்டில் அதிகரிக்க ஒரு சுலபமான வழி ஜன்னல் கதவுகளைத் திறந்து வைப்பது தான். ஜன்னல் அடைக்கப்பட்டால் காற்றோட்டம் இன்றி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது நிச்சயமாகி விடும். காற்றோட்டமே இல்லாத வீடு என்றால் ஒரு ventஐ நிறுவலாம்.
மரங்கள் ஆக்ஸிஜனை நல்ல பெரிய அளவில் தருகின்றன. சுற்றுப்புறச் சூழல் மாசுகளை அகற்றுகின்றன. ஆகவே மரம் உள்ள வீடுகள் ஆக்ஸிஜனை அதிக அளவில் காற்றில் தருகின்றன. அமெரிக்க ஆய்வு ஒன்று, ஒவ்வொரு மரமும் 30000 டாலர் அதாவது சுமார் 2100000 ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை உருவாக்குகிறது என்று கூறுகிறது.
வீட்டிற்குள் ஆக்ஸிஜன் அளவைக் கூட்ட இன்னொரு சுலபமான வழி அதற்கென உள்ள செடிகளை வளர்ப்பது தான். 1800 சதுர அடி உள்ள ஒரு வீட்டில் 14 முதல் 17 செடிகளை வைத்தால் அதன் பலன் அபாரமாக இருக்கும். என்ன செடிகளை வைப்பது? மணி ப்ளாண்ட் (Money Plant), சைனீஸ் எவர்க்ரீன்ஸ் (Chinese Evergreens) உள்ளிட்ட பல செடி வகைகளைச் சொல்லலாம். சந்தையில் சுலபமாகக் கிடைப்பவை இவை.
இதையெல்லாம் மீறி 6 லிட்டர் ஆக்ஸிஜன் கேன் இப்போது சந்தையில் விற்பனைக்கு வந்து விட்டது. (விலை சுமார் ரூ 455/).
தண்ணீர் கேனைப் பார்த்து விட்டோம், இதோ ஆக்ஸிஜன் கேனையும் பார்க்கப் போகிறோம். காலம் கலி காலம், இல்லை இல்லை, கொரானா காலம் அல்லவா!
மொத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி வருவது வரவேற்க வேண்டிய ஒன்று தான்!
ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை:
ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் வருட சந்தா ரூ 120/
திருநெல்வேலியிலிருந்து வெளி வருகிறது.
ஆசிரியர் R.C.ராஜா தொலைபேசி எண் 98431 57363
மின்னஞ்சல் முகவரி : editor@tamilhealthcare.com 10, Vaiyapurai nagar, Tirunelveli Town 627006 Tamilnadu, India
கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PART TWO OF SOMA- A HALLUCINATIVE DRUG OR ELIXIR?
I POSTED THE FIRST PART HERE YESTERDAY COVERING 30 OUT OF 58 MANTARS IN THE RIGVEDIC HYMN 9-97 ON PAVAMANA SOMA.
EINSTEIN’S PHYSICS TELLS US THAT THE FASTEST OBJECT IN THE UNIVERSE IS LIGHT WHICH TRAVELS AT THE SPEED OF 1,86,000 MILES PER SECOND. ACCORDING TO PHYSICS, WE CAN NEVER REACH THIS SPEED AND THE MAXIMUM SPEED WE HAVE REACHED SO FAR IS 3 LAKHS MILES PER HOUR (NOT SECOND). IF THERE IS A HUMAN BEING IN THE SPACE CRAFT THEN WE REACH ONLY 26,000 MILES PER HOUR. OUR NEAREST STAR IS 4-25 LIGHT YEARS AWAY. IT MEANS IF YOU HAVE A VEHICLE THAT TRAVELS AT THE SPEED OF LIGHT YOU CAN REACH THE STAR IN 4-25 YEARS.
BUT HINDUS IN THE RIG VEDA SAYS THE FASTEST IS ‘MIND’. BUT ONE MAY ASK CAN I TRAVEL IN THE ‘MIND VEHICLE’? ‘YES’ SAYS RIG VEDIC RISHIS/SEERS. THE MIND CHANGES A PERSON INTO LIGHT AND THEN YOU CAN TRAVEL A LOT MORE FASTER! WE SEE THIS IN SCIENCE FICTION MOVIES OR TV SERIALS. SOMEONE APPEARS SUDDENLY IN THE FORM OF LIGHT FROM NOWHERE AND SAYS HE OR SHE IS FROM ANOTHER PALNET. THIS IS ACTUALLY FROM THE RIG VEDA. (We believe we can travel to any place in the universe by thought. Your thought will transfer your energy into light and again with the speed of thought you will be there in a fraction of a second. This is repeated umpteen times in Puranic mythology; Deva means light)
DARWIN SHOWED US THE EVOLUTION BEGAN IN WATER/ FISH. WE HAVE MATSYA/FISH AVATARA AS THE FIRST INCARNATION OF VISNHU. NOW RIG VEDA SAYS EVERY LIVING BEING CAME FROM WATER.
WE WILL LOOK AT THE LAST 28 MANTRAS IN THE HYMN RV.9-97. IT IS SUNG BY SEVERAL SEERS. ALL THE NAMES ARE IN THE INDEX OF RIG VEDA.
Soma Filter in Indus Valley seals
First let us discuss whether Einstein is right or Rig Vedic seers are right.
Einstein is PARTLY right in saying light is the fastest. But can we beat it with anything else?
‘Yes’ says the seers. They say Soma (plant) becomes light in one mantra. And in another mantra the rishis/ seers praise its speed as Thought Speed.
What we get from it is one can become light and travels faster than light.
Is it believable?
Yes. If I wanted to travel to the nearest star Proxima centauri, I use my thought and travel. You can also travel to New York from London in a second and comeback in the next second mentally.
But has anyone used it? Hindus use it every day at least three times a day. When a Brahmin does Gayatri mantra thrice a day he invites Gayatri from a faroff mountain and install her in his heart. When he finishes his prayer, he says ‘Good Bye, Mother! Please go back to your mountain abode’. She is nearer and farther to you!
A Hindu does a ceremony for departed souls over 90 times a year called Tarpanam or Titi. He invokes the dead people from his father side and mother side. He asks them to come via sky path/route and sit on the Dharba grass spread in front of him. Throughout the Rig Veda we see the same method. All rishis invoke all gods on sacred Dharba grass!
When the TARPANAM OR TITI ceremony is over in 15 minutes or so, they address the departed souls ‘please go by your same sky route to your abode’.
This shows Hindus belief of bringing anyone from any far away place in a second in prayer. I do invoke my forefathers on sacred Dharba grass and invoke Goddess Gayatri thrice a day from her mountain abode. If you believe in it, you believe Einstein is only partly right. He doesn’t know the Mind speed, which is used from Rig Vedic days to Puranic days (Mano Veham).
Falcon in Indus Valley and Rigvedic Fire altar
NOW BACK TO HYMN 9-97
The race of cattle is your gift; when born you made Surya/ sun rich with brightness.
You are bright; you follow the Path of Order. You are Life Eternal.
You are a Heavenly Eagle; you look down from sky. You poured streams at the God’s Feast.
Our hymns and Trushtup songs unite in soma.
Flow for our welfare;
You generate abundance;
Singer of true songs;
Ever watchful;
He by whose dear help men gain all their wishes shall yield the precious ‘madhu’ to a victor.
Soma the bounteous helped us with his lustre.
Our ancient rishis who knew the foot steps found light and stole the cattle from the mountain.
(This is repeated hundreds of times. It may be that miserly merchants Pani/ Phoenicians stole and hid all their treasures in the mountain caves and Vedic Hindus got them back by fighting )
DARWIN THEORY OF EVOLUTION
In the first vault of heaven loud roared the Ocean, King of all being, Generating Creatures.
Soma , Child of Waters chose the Gods , performed that great achievement.
He gave strength to Indra and Generated Light into Surya/ Sun
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் (Post No.10,100)- part 1
ரிக் வேத கால இந்துக்கள் அபூர்வ மூலிகையான சோம லதையை (லதா= கொடி) ப் பிழிந்து ஒவ்வொரு நாளும் மூன்று முறை இறைவனுக்குப் படைத்தனர். இது ஒரு விதமான ஆனந்தம், சக்தி, உற்சாகம் அளிக்கும் மூலிகை.
வெள்ளைக்காரர்கள் நமது மதத்துக்கு எதிரியானதாலும், நமது மதத்தை நம்பாததாலும், நமது மதத்தைப் பின்பற்றாததாலும் அவர்களுக்கு இது என்னவென்றே தெரியவில்லை. ஆகையால் இதை மயக்கம் ஊட்டும் போதை மருந்து என்று எழுதிவிட்டனர். இதை R TH GRIFFITH கிரிப்பித் வெளியிட்ட ரிக் வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்திலேயே காணலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் பாடிய 450 புலவர்களுக்கே சோம மூலிகையைப் பற்றித் தெரியாது. யூபம் , வேதம், கங்கை, அமிர்தம், இமயம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் புறநானூற்றில் கூட சோமம் என்ற மூலிகை பற்றிய குறிப்பு கிடையாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமற்போன இந்த அற்புத மூலிகை பற்றி வெள்ளைக்காரன் உளறிக்கொட்டி கிளறி மூடியதில் வியப்பொன்றுமில்லை . ஆனால் பிற் கால பாண்டியர் கல்வெட்டுகளில் இதைப் பயன்படுத்தியவர்களை மனோ சுத்த சோமயாஜி — மன தைச் சுத்தப்படுத்தும் சோமயாகம் செய்தவர் என்று புகழ்கிறது காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சோம யாகம் செய்தவர்களுக்கு அரசுக்கு நிகரான வெண் குடை கொடுக்கப்படும் செய்தியை மொழிகிறார்.
ரிக் வேதத்தில் பல நூற்றுக் கணக்கான இடங்களில் சோம மூலிகை பற்றிய மந்திரங்கள் உள்ளன. பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட ரிக் வேதத்தில்- 6000 ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் – ஒன்பதாவது மண்டலம் முழுதும் ‘பவமான சோம’ என்ற கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது . சோம என்பதற்கு பல பொருள் உண்டு. சந்திரன் என்ற பொருளும், மலைகளில் விளையும் சோமம் என்ற மூலிகைக்கும் அதிகமாகப் பயன்படும் சொல். ரிக் வேதத்தில் 9-97 துதியில் உள்ள 58 மந்திரங்களின் மூலம் சோமத்தின் ரஹஸ்யத்தைக் காண்போம் .
அதற்கு முன்பாக வெள்ளைக்காரன் கட்டுக்கதைதையைத் தவிடு பொடியாக்கும் சில விஷயங்களை சொல்கி றேன் .
ஸோமரசத்தை எல்லாக் கடவுளரின் பெயரிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை தீயில் ஆஹுதி செய்தார்கள்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் இப்படிச் செய்தார்கள்.
அந்த மூலிகையைக் கடவுள் என்று சொல்லி ஆடிப்பபாடி மந்திரங்களை முழக்கி கற்கள் இடையே வைத்து பிழிந்து ஆட்டு ரோமத்தால் ஆன சல்லடை வழியே வடிகட்டி மரத்தால் ஆன வட்டில்கள், பாண்டங்களில் சேகரித்தார்கள்.
சிந்து சமவெளியில் இதுவரை என்ன என்றே தெரியாத ஒரு சாதனம் காளை மாட்டு முத்திரைகளுக்கு அடியே உள்ளது. இது சோமரச சாதனம் என்பது பெரும்பாலோரின் கருத்து.
இப்போது நமக்கு நாமே சில தடைகளை எழுப்பி விடை காண்போம்.
இருபதுக்கும் மேலான இடங்களில் சோம மூலிகையை பருந்தும் கழுகும் கொண்டுவருவதாக ரிக் வேதம் முழுதும் புலவர்கள் பாடுகின்றனர். இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. சந்திரனையும் கருடனையும் அமிர்தம் தொடர்புபடுத்தி புராணக் கதைகள் பேசுகின்றன. அவற்றுடன் தொடர்புடையன போலும் !
போதை ஊட்டும் பொருளானால் அதை ராத்திரியில் குடித்துவிட்டு கும்மாளம் போடும் வெள்ளைக்காரர்களை நாம் இன்றும் பார்க்கிறோம். எவனாவது அதி காலையில் நதியில் குளித்துவிட்டு அதைச் சாப்பிடுவானா? அதுவும் மந்திரம் சொல்லி பெரும்பகுதியை கடவுளுக்கு என்று சொல்லி தீயில் ஊற்றி வீணடிப்பானா? சிந்தித்துப் பாருங்கள்.
.’இதுதான் சோமம்’, ‘அதுதான் சோமம்’, என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வெள்ளைக்காரப் பயல்கள் அதை ஏன் இன்று பயிரிடக்கூடாது? கொக்கோ கோலா போல ஒரு மணிக்கு கோடி டாலர் சம்பாதிக்கும் தொழிலிலை ஏன் செய்யவில்லை? இன்று போதை மருந்து விற்பனை நிமிடத்துக்கு பலகோடி டாலர் என்று நாம் பத்திரிகையில் படிக்கிறோமே . ஏன் சோமத்தைப் பயிரிடவில்லை?இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்:-
சோமம் ஒரு அபூர்வ குளிகை ; ஒரு அதிசய மூலிகை. அது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் வருணனை ரிக் வேதத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை உள்ளது . அது உடலுக்கு சக்தி, உற்சாகம், நீண்ட ஆயுள் தரும்; அதை சாப்பிடுவோருக்கு வீரம் மிக்க புதல்வர்கள் பிறப்பார்கள்; அவர்களுக்கு ஏராளமான செல்வம் கிட்டும்; மனம் சுத்தம் அடையும் என்பதை பின்வ ரும் 58 மந்திரங்கள் காட்டுகின்றன . அப்படியே 58 மந்திரங்களையும் கொடுக்காமல் BULLET POINTS புல்லட் பாயிண்டுகளில் தருகிறேன்.
ரிக் வேதம் – 9-97- 1 முதல் 58 வரை
பல ரிஷிகள் பாடிய கவிதை RV.9-97; மொத்தம் 58 மந்திரங்கள் / செய்யுட்கள்
நீ மஹான், நீ கவிஞன்; நீ மங்கள போர்க் கவசங்களை அணிந்தவன்;
நீ துதிகளைப் போற்றுபவன்; நீ எல்லாம் அறிந்தவன்.
கடவுள் விருந்தில் விழித்திருப்பவன் .
புகழ் உள்ளவர் இடையே மிக்க புகழ் படைத்தவன்
புவியில் பிறந்தவன்; அன்புக்குரியவன்
சோமனைப் பாடுவோம் ; மகத்தான செல்வம் பெற சோமனைப் பாடுவோம்
வழிபடுவோருக்கு மகத்தான செல்வம் கிடைக்க அவன் இந்திரனிடம் செல்கிறான்.
பசுமை நிறத்துடனும் சுத்தமானவனாகவும் பெருகுக
இன்பம் ஊட்டும் உன் ரசம், இந்திரனை போருக்குத் தயார் செய்யட்டும்
(ரிக் வேதம் முழுதும் போர், பகைவன், பசு, குதிரை, செல்வம், தங்கம், வீரப் பு தல்வர்கள் , வீடு ; குகைகளில் மறைத்து வைக்கப்பட்ட பசுக்களை மீட்டல், தர்ப்பைப் புல்லை பரத்துதல், சோம ரசம் ஆகியன ஆயிரக்கணக்கான இடங்களில் வருகிறது ; இவைகளில் சொல்லப்படும் இந்தச் சொற்களுக்கு மறைமுக அர்த்தம் வேறு !!)
சோமன் காட்டுப் பன்றி போல உறுமுகிறான்
பகைவரை மிரட்டும் வாத்தியங்களை நண்பர்கள் வாசிக்கிறார்கள்
சோமன் தனி வழியில் செல்கிறான். அவனை முந்துவதற்கு எவருமிலர்.
கூரிய கொம்புள்ளவன் ; ஒளி வீசுவோன்.
பகலில் தங்க நிற ஒளி வீசுவான்; இரவில் வெள்ளி நிற ஒளி உமிழ்வான்
ஆற்றலின் அரசன்; அரக்கர்களை வீழ்த்துகிறான்.
இந்திரனுக்கு இன்பம் தந்து குஷிப் படுத்துகிறான்
இனிப்பானவன்; சுத்தப் படுத்துபவன்.
பருவத்துக்குப் பொருத்தம் உடைய காந்தி/ஒளி உடையவன்
அவனை பத்து சகோதரிகள் (விரல்கள்) களைந்து அனுப்புகிறார்கள்
பசுக்களைத் தொடர்ந்து செல்லும் காளை போல சோமன் விண்ணிலும் மண்ணிலும் ஓடுகிறான்.
அவனுடைய சப்தம் இந்திரன் சப்தம் போல (இடி முழக்கம்) முழங்குகிறது
சுவைக்க இனியன் ; பாலைச் சொரிபவன் ;
ஒளி நிற ஆடை அணிந்த சோமனே , மேகங்களை உன் ஆயுதங்களால் வசப்படுத்து.
நாங்கள் நல்ல வழிகளையும் செல்வத்தையும் பெற உதவி செய்
அரக்கர்களை தண்டாயுதத்தால் அடி .
(இதுவரை 16 மந்திரங்களின் சுருக்கம் கண்டோம்; மேலும் தொடர்வோம்)
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!
ச.நாகராஜன்
அற்புதமான நாயன்மார்களின் வரலாற்றை அரும் சொற்களால் தமிழ்ப் பாக்களாகப் புனைந்தவர் சேக்கிழார். அதில் மெய்ப்பொருள் நாயனார் புராணம் தமிழகத்தின் இன்றைய அவல நிலையை விளக்குகிறது.
தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ள நடு நாட்டை ஆண்டு வந்தார் மெய்ப்பொருளார்.
வேத நெறி வழுவாமல் ஆகமங்கள் பால் பெரும் பற்றுக் கொண்டு சிவனடியார்களைப் போற்றி அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அறம் பிறழாது ஆண்டு வந்தார் அவர்.
“மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடலாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக் கன்பர் தாளலால் சார்பொன்றில்லார்”
உமையம்மையை தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் திருக்கோயில் அனைத்திலும் நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு ஆகிய அனைத்தையும் குறைவின்றி அவர் நடத்தி வந்தார்.
மெய்ப்பொருளாரை வெல்லக் கருதிய பகைவன் ஒருவனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
என்ன செய்தான் அவன்? நேருக்கு நேர் நின்று வெல்ல முடியாத அவன் அவரது கோயில் பற்றையும் சிவப் பற்றையும் ஆகம விதிகளின் மீது அவர் கொண்ட பக்தியையும் கண்டான்; சதித் திட்டம் தீட்டினான்.பின்னர் என்ன நடந்தது?
சேக்கிழார் அற்புதமாகக் கூறுகிறார் இப்படி:-
“மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்”
அற்புதமாக விவரிக்கிறார் இப்படி சேக்கிழார் பெருமான்! வஞ்சகனான அவன் மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன். அவன் பெயர் முத்த நாதன்.
தத்தன் என்ற அரசனின் மெய்க்காவலனையும் சிவனடியார் என்ற பொய்வேடத்தால் தள்ளி விட்டு அரசனின் அந்தரங்கப் படுக்கை அறைக்குள் நுழைந்தான் அந்த கபட வேஷதாரி.
படுக்கையில் மன்றலங் குழல் மென் சாயல் மாதேவியான அரசியைக் கண்ட பின்னும் முத்தநாதன் வெளியே போகவில்லை.
அரசனும் எழுந்தான். அவனிடம் ஆகப் பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் முத்தநாதன். உலகில் வேறெங்குமே இல்லாத ஆகமம் என்னிடம் இருக்கிறது என்றான்.
ஆகமம் வழுவாது அறநெறியுடன் கோவில் பூஜைகளை நடத்தும் மெய்ப்பொருளார் மிகவும் மகிழ்ந்து அவனை தவிசின் மேல் – அதாவது மிகப்பெரிய ஆசனத்தில் – அமர்த்தி அருள் செய்க என்றார்.
அந்த நயவஞ்ககப் பாவி புத்தகத்தை எடுத்துத் திறப்பது போல அதன் உள்ளிருந்த வாளை எடுத்து மெய்ப்பொருளார் மீது தான் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்தான்.
அந்த நயவஞ்சக வேலையைக் கூட அருளாளர் சேக்கிழார் பிரானால் கூற முடியவில்லை. “தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய” என்கிறார்.
மன்னன் வீழ்ந்தான். நயவஞ்சக முத்தநாதனை ஒரு நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட தத்தன் ஓடி வர அவனை மெய்ப்பொருளார் தடுக்கிறார்.”அவன் சிவ வேடம் பூண்டதால் அவனை ஒன்றும் செய்யாதே; அவனைப் பத்திரமாக வெளியே கொண்டு விடு” என்றார்.
அரச ஆணை! தத்தன் அப்படியே செய்தான்.
பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்த முத்தநாதன் தப்பித்தான் அரசனிடமிருந்து.
தெய்வத்திடமிருந்து அவன் தப்ப முடியுமா?
24 பாடல்களில் மெய்ப்பொருள் நாயனார் புராணத்தை வார்த்தை வார்த்தையாக அனுபவித்து பக்தியுடன் அனைவரும் படிக்க வேண்டும்.
இன்று கோவிலில் பொய்த்தவ வேடம் கொண்டு நுழைந்திருக்கும், இன்னும் புக நினைக்கும், முத்தநாதன்களை எளிதில் அடையாளம் காணலாம்.
தத்தனாக உள்ளே பாய்ந்து முத்தநாதன்களை மொத்தமாக மொத்தி அனுப்ப முயலலாம்.
கோவில்களையே கொள்ளையிடத் துடிக்கும் இந்த முத்தநாதன்களை மெய்ப்பொருளார் இன்று இருந்தால் மன்னிக்கவே மாட்டார் இல்லையா?
முத்தநாதன்களை இனம் காண வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்!
சிலை திருட்டு, கோவில் நகைத் திருட்டு என்று இன்ன பிற கொள்ளைகளைச் செய்யும் திருடர்களை சிறந்த காவல்துறையான தமிழகக் காவல் துறையிடம் இனம் காட்ட வேண்டுவதும் நம் கடமை; அதே போல சிவ வேடம் தரித்து புதிய ஆகமம் இருப்பதாகக் கூறி உள்ளே வரும் முத்தநாதன்களையும் போலீஸிடம் தான் சொல்ல வேண்டும்!
பக்தர்கள் செய்வார்களா?
***
INDEX
சேக்கிழார் பெருமான், மெய்ப்பொருள் நாயனார் புராணம், ஆகமம் பால் மதிப்புக் கொண்ட அரசனை முத்தநாதன் பொய் வேடம் பூண்டு ஏமாற்றுதல், புதிய ஆகமம் இருப்பதாகக் கூறு கொலை செய்யல், ஆலயம் பாதுகாக்க சிலைத் திருட்டுக்காரர்களை போலீஸிடம் சொல்ல வேண்டும்.
முக்கியக் குறிப்பு:-பகுத்தறிவுகளுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மெய்ப்பொருள் நாயனாரும் பிராமணர் இல்லை; இச்சரிதத்தை அழகுத் தமிழில் சொல்லும் சேக்கிழார் பிரானும் பிராமணர் இல்லை! எதையும் தவறாகத் திசை திருப்பும் பல தமிழக ஊடகங்களுக்காகத் தான் இந்த குறிப்பு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PLEASE READ THE ATTRIBUTES THE HINDU SEERS GIVE TO SOMA PLANT AND THE BENEFITS THEY TALK ABOUT IN THER MANTARS IN THE RIGVEDA. THEN YOU CAN EASILY DECIDE WHAT IT IS.
IT IS A SHAME THAT WE DON’T HAVE IT TODAY. SOME HALF BAKED OR FULLY BAKED IDIOTS IDENTIFIED WITH X PLANT OR Y PLANT. HAD THEY REALLY KNOW THE PLANT THEY WOULD HAVE MADE BILLIONS OF DOLLLRS EVERY DAY BY CANNING AND SELLING IT.
I EVEN HAVE A SUSPICION THAT IT IS EQUAL TO AMRITA BECAUSE EAGLE-AMRITA STORY IN LAATER PURANAS IS IN THE RIG VEDA AS FALCON BRINGING IT FROM THE SKY OR MOUNTAIN.
FALACON, EAGLE AND HAWK ARE ASSOCIATED WITH THE SOMA PLANT IN 20 TO 30 MANTRAS.
All he quoted Mantras are from the ninth mandala of the Rig Veda. This Mandala has 114 hymns with 1108 Mantras.
xxx
Here is what the seers say about the Soma Juice:– RV.9-97
You are a mighty SAGE
You are watchful
You are far seeing
You are wearing battle ready raiment.
Let us sing praises to gods loudly and send soma for mighty riches
He has come for our great bliss
You are nobler than the noblest
A prince among us
You preserve us evermore with blessings
Come here with the gods for bounty
You are roaring like a BOAR
The SWANS brought their restless spirit to our dwellings
Friends come and sing in concert praising Soma
Soma appears silvery in night and golden in day light.
Soma has sharp horns and brings forth abundance
Soma bathed in milk excites Indra and make him joyful; Indra slays the demons.
As soma is purified, he pours out treasurers
Soma is GOD and he sprinkles on other gods
Soma / Indu has wearing qualities by seasons
Soma , the RED BULL bellowing to the cattle advances, causing the heaven and earth to roar and thunder
Soma is sweet, meath rich plant
You send us good paths ; show us good path
Pour on us rain from the sky
Let it be healthy
Send us breeze
You are a friend of human beings
Unties me from the knots of sin.
Flow on with thousand streams and give us strength to conquer heroes
Soma flows like unyoked horses
May soma grant us riches sought with longing
Soma gives riches to generous people
Soma is very wise
He who beholds man kind
King supreme of deities and mortals
Treasure lord of riches
Soma is like a speedy HORSE
Give us ample food thousandfold
After you are purified, find out riches
Give us children who will be heroes and give us houses.
Rich in all boons, the best of cheerers
Make heaven and earth well established
You are swifter than thought
You are a LION
Sprung from the gods
You are forerunner of abundant riches
A wise king will not treat his friend unkindly
Like a son following his father’s wishes, grant to this family success and safety.
I have covered only 30 mantras out of 58 in this one hymn (RV 9-97).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)
ஆங்கில மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக் காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில் வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.
London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996
முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!
இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .
ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club) அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?
அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.
தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.
மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.
சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.
பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!
வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?
தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.
ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில், எல்லோரையும் அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!
குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.
ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.