Salt Doll Stories explain Brahman

Sri_Ramakrishna

By London Swaminathan
Post No 948 Date 1st April 2014.

Salt Doll Stories & Chemistry Experiments explain ‘Satyam, Janam, Anantam Brahma’

Brahman is the word used for God in the Upanishads. Sri Sathya Sai Baba popularised the Taittiriya Upanishad line ‘Satyam Jnanam Anantam Brahma’ through his sweet and beautiful Bhajan song, meaning God is Truth, God is Knowledge and God is Infinite. Though great philosopher saints Shankara , Ramanuja and Madhwa elaborated on this line, experiencing Brahman is explained the best in the short and crisp stories of Sri Ramakrishna Paramahamsa.

Earlier, the Vedic seers explained great doctrines through simple experiments like we do it today in the chemistry labs of schools and colleges. Many chemical salts are used in the laboratory for qualitative and quantitative analysis experiments. Vedic seers asked young students to bring a handful of salt and asked them to put it in a glass of water. Then questions were asked to find where the salt had gone and how it disappeared, did the water taste differently in various parts of the cup etc. Through this simple experiment seers explained the nature and qualities of God. They used the tiny seeds of the Banyan tree as well. Tamil saints and Siddhas (enlightened souls) also used the same salt doll similes in their verses. Earliest reference comes from a 2000 year old Tamil book called Kalitokai.

best ice use it

Ramakrishna’s Stories

Story 1
A salt doll went to measure the depth of the ocean. It wanted to tell others how deep the water was. But this it could never do, for no sooner did it get into the water than it melted. Now, who was there to report the ocean’s depth?
What Brahman is cannot be described in Samadhi one attains the knowledge of Brahman – one realises Brahman. In that state reasoning stops altogether, and man becomes mute. He has no power to describe the nature of Brahman.

Story 2
Once four friends, in the course of a walk, saw a place enclosed by a wall. The wall was very high. They all became eager to know what was inside. One of them climbed to the top of the wall. What he saw on looking inside made him speechless with wonder. He only cried Ah! Ah! And dropped in. he could not give any information about what he saw. The others too climbed the wall, uttered the same cry,’ Ah! Ah!’ and jumped in. now who could tell what was inside!
What Brahman is cannot be described. Even he who knows it cannot talk about it.

scaling wall

Story 3
The husband of a young girl has come to his father in law’s house and seated in the drawing-room with other young men of his age. The girl and her friends are looking at them through the window. Her friends do not know her husband and ask her pointing to one young man, “Is that your husband? “No”, she answers, smiling. They point to another young man and ask if he is her husband. Again she answers, “No”. They repeat the question referring to a third, and she gives the same answer. At last they point to her husband ask, “Is he the one?” She says neither yes nor no, but only smiles and keep quiet. Her friends realize that he is her husband.

One becomes silent on realising the true nature of Brahman.

There is a proverb in Tamil, “Those who have seen never talk; those who talk have never seen (the God)” (Kandavar Vindilar; Vindavar Kandilar).

ice-sculpture-350

A Siddha by name Sivavakkiyar uses the simile of mixing water with salt to establish the truth that Lord Vishnu and Lord Shiva are one and the same. Once the water is mixed with the salt it becomes unseparable. Shiva and Vishnu are one.

Another Tamil saint Tirumular says in Tirumanthiram that the dumb are trying to describe that which cannot be described.

The following Upanishad line is translated in Tamil verses by several Tamil saints in several of their verses:

Yato vacho nivartante aprapya manasa saha (Whence all speech turn back with the mind, not reaching It). Taittiriya Upanishad

Mozikkum winaivukkum ettatha nin tirumurtham (Abirami Andhati) in Tamil.

ocean

Contact swami_48@yahoo.com

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!

Sri_Ramakrishna

சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 தேதி ஏப்ரல் 1, 2014.

கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:

நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.

யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.

best ice use it

நான்கு சுவையான கதைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.

கதை 1:– ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

கதை 2: புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

ice-sculpture-350

கதை 3:- ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

கதை 4: நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

scaling wall

இந்த நாலு எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.

“கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”– என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம் உய்விக்க முயற்சி செய்கிறார்கள். “சேரவாரும் ஜெகத்தீரே”– என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும் நாம் போகாவிட்டால் “கடைவிரித்தேன் கொள்வரில்லையே”— என்று வருத்தப் படுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம் காட்டும் உண்மை:

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்.

.பகவத் கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’= எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள் எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும்.என்று விளக்க வந்த உவமை இது.

ocean

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரஞ் சேர்பரமும் விட்டுக்
கப்புறு சொற்பத மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே (திருமந்திரம்,2905)

பொருள்: தண்ணீரில் உப்பைப் போட்டால் எப்படி இரண்டறக் கலக்கிறதோ அது போல இறைவன் பக்தனுள் இணைந்துவிடுவான் அல்லது பக்தன், இறைவனுக்குள் ஒடுங்கிவிடுவான். பராபரம்= இறைவன், பரம்=பக்தன். பேருயிர் என்னும் இறைவனில் நம் ஆருயிர் இணைந்துவிடும் அத்வைத நிலை. அத்வைதம்= இரண்டில்லை, ஒன்றே.

longexposurewaves-7

கலித்தொகையில் உப்பு பொம்மை

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்று கலித்தொகை. அதில் கடற்கரையில் உப்பினால் செய்யப்படும் பாவை உறைந்து நெகிழ்ந்து விடுவதுபோலத் தன் உயிர் உகுந்துவிடும் என்று தலைவன் கூறுகிறான்:

நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற
உப்பியல் பாவை உறையுற்றது போல
உக்குவிடும் என் உயிர் —(கலி 138/16-17)

பொருள்: காம நோய் என்னும் கடலில் நீந்தும் உப்பு பொம்மை கரைவது போல நான் கரைந்து மறைந்து விடுவேன். இந்தப் பாடல் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியில் வருகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அதே கதைதான். ஆனால் பிரம்ம ஞானக் கடலுக்குப் பதில் காமக்கடல் பற்றி நல்லந்துவனார் பாடுகிறார்.

சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. உபநிடதங்களில் ஆலமர விதை, மனிதனின் கேசம் (முடி) ஆகியவற்றை மேலும் மேலும் சின்னதாகப் பிரித்துக் கொண்டே போகும் உவமைகள் மூலம் நமக்கு விளங்க வைக்கின்றனர். படித்து இன்புறுக.

Contact swami_48@yahoo.com

Agni in the Oldest Tamil Book ‘Tolkappiam’

durga from indonesia

Durga from Java, Indonesia in US museum

By London Swaminathan
Post no.946 Dated 31st March 2014.

The oldest Tamil book available today is Tolkappiam, a grammatical treatise. It is dated around first century BC. It has got clear references to Vedic Gods Indra and Varuna along with Vishnu, Skanda and Durga. They have the Tamil names Venthan, Varunan, Mayon, Seyon and Kotravai respectively. But the reference to Agni is not that clear. Tolkappiar mentioned three deities Kodinilai, Kanthazi and Valli in one of his Sutras in the third chapter ( Porul Adhikaram—Purath thinai Iyal).

According to the oldest commentator Ilampuranar, Kodinilai is the Sun, Kanthazi is Fire (Agni) and Valli is the Moon. It is mentioned in his rule/Sutra on the prayer. Anyone will readily agree with him given the mention of the Vedic gods Indra and Varuna by Tolkappiam. But the strangest thing about these words Kodinilay and Kanthazi is that they are not found anywhere in the Sangam Tamil literature. Another strange thing about this book is that it never mentioned about Lord Shiva. Foreigners who wrote about the Indus Valley civilisations wrote that Dravidians worshipped Lord Shiva. But the oldest book never mentioned it. Sangam Tamil literature has many references to Shiva without using the word ‘’Shiva’’. His attributes as we in the Yajur Veda such as Trinetra, Neelakanda etc, are there in the Sangam Tamil literature.

three_fires_1

Brahmin’s Three Fires: Kanchi Paramacharya’s Talk

Another interesting reference to Fire God is in another Tamil book. It is about the Three Fires that are found in Brahmin’s house. But this is from Sangam Tamil literature, not from Tolkappiam. I will give it in the words of Kanchi Paramacharya Swamiji (1894—1994):–

“In a Tamil work as ancient as the Purananuru, there is a reference to God with his long matted hair chanting the Vedas all the time, the Vedas with the six limbs (Sadanga). I read this in an article recently. The following appears in another Purananuru passage: The rulers of three Tamil Kingdoms – Cera, Cola and Pandya – were always at war. But on one occasion the three were seen together as friends in the same place. The old lady Avvai saw the three kings together and was immensely delighted. She wished to compare the scene to something worthy. And how did she express her idea? “The three of you”, she said, “seen together remind me of the three sacred fires in a Brahmin’s household, garhapatyagini, ahavaniyagni and dakshinagni.”
Even after the Sangam period, the Tamil rulers continued to give away gifts of lads free of tax to Brahmins. They promoted scriptural learning by establishing Vedic schools throughout the land.
(Tamil version of this article carries all the original references).

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Cave

‘No Basis for Aryan –Dravidian Race theory’

Kanchi Paramacharya said,

“Researchers in modern times propagate the view that the Vedas came to the south from the north, that the south had another religion and religious texts. This view of theirs, along with the theory that Northerners are Aryans and the Southerners are Dravidians, had created a conflict among the people. But if you truly examine Sanskrit and ancient Tamil texts you will find no basis for such a view or for the race theory. The researchers say that one should not be deceived by placing blind faith in the Shastras. But, in the end, what obtains today? Many people have come to accept the view of these researchers without examining it properly; merely because the research scholars concerned claim that their view is ‘rational; and ‘scientific’.

In the Vedas and Shastras there are indeed matters that have to be accepted in faith. But there are also scriptural aspects that can be examined rationally. If we inquire into such texts together with the ancient works in Tamil we will realise that the race theory is baseless. The fact that there was such a thing as Tamil religion will also be seen to be unfounded. It is a matter for regret that wrong notions have arisen with regards to subjects of great value, along with lack of faith in the Shastras. All these must go and the Vedic culture flourishes again, a culture that brings good to all the worlds and all the creatures. This is the prayer we must always make to the Lord”.

Kanchi Paramacharya’s Talk as in pages 741 and 745/6 of Hindhu Dharma, Bharatiya Vidya Bhavan, Mumbai. Year of Publication 2000.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi,Jharkand.

Please read my earlier posts:
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book
Three Tamil Sangams: Myth or Reality
Contact swami_48@yahoo.com

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

durga in MBPuram
Durga (Mahishasura Mardhani) in Mahabalipuram,Tamil Nadu

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 945 தேதி- 31st March 2014.

முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.

சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.

தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)

என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.

முல்லை= திருமால்
குறிஞ்சி = முருகன்
மருதம் = இந்திரன்
நெய்தல் = வருணன்

durga from indonesia

Durga from Java, Indonesia in US Museum.

கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.

கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

three_fires_1

புறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ

இந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:

“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது? என்று திகைத்தார்.

இமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா? அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.

பிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே!! நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Caves

கண் இமைக்காத தேவர்கள்

தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.
தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.

இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–

“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)

இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi (Jharkahand)

தென்புலத்தார் வழிபாடு

இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–

1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)
2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்
3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)
4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்
5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்
6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)

என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.

சங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book

Contact swami_48@yahoo.com

Krishna’s Names in the Bhagavad Gita

krishna green

Compiled by London Swaminathan
Post No.944 Date: 30th March 2014.

Achyuta = One who never falls from his position, immovable
Arisudana = Slayer of enemies
Madhusudana = Slayer of Demon Madhu
Madhava = Lakshmi’s Husband
Purushottama = Supreme Person
Keshava = Having fine hair; slayer of Keshin
Keshi nishudana = Slayer of the demon Keshin
Bhagavan = One who possesses six kinds of Splendours
Bhuta Bhavan =Origin of all beings
Bhutesh = Lord of all beings
Deva Deva = God of all beings
Jagatpati = Ruler of the worlds
(Sloka 10-15 has got five names of Krishna!)
Janardana = Annihilator of ignorance, liberator of men
Visveshvara = Lord of the universe
Hrishikesha = Master of the senses
Krishna = Black
Yadava = Descendent of Yadu
Sakha = O comrade
Govinda = Herdsman or Giver of enlightenment
Vasudeva = Son of Vasudeva
Varshneyan = Born in Vrshni’s clan
Jaganivasa = Source of universe
Yogeswara = God of Yoga
Vishnu = Omnipresent

krishna-arjuna

Arjuna’s names

Arjuna =Pure , white
Bharata = Descendent of Bharata
Dhanamjaya = Winner of wealth
Gudakesa = Having the hair in a ball, who has conquered sleep
Kapi dwaja = Having Flag of Monkey
Partha = Son of Prtha
Paramtapa = Oppressor of the enemies
Pandava = Pandu’s son
Savyachacin = Left handed
Anakan =sinless
Kauntheyan = Son of Kunti
Krdee = crowned
Kurunandana = Born in Kura clan

Books used Bhagavad Gita commentary by Swami Chidbhavananda and Dr S Radhakrishnan.
Contact swami_48@yahoo.com

அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!!

neela vannan

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 943 தேதி 30 March 2014

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன. அதில் அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள், அவைகளின் பொருள் என்ன என்று பார்ப்போம். ஒரே நூலில் கண்ட பெயர்கள் இவை.

நாம் எல்லோரும் நம் நண்பர்களைப் பட்டப் பெயர்கள் சொல்லி அழைப்போம். அதில் முக்கால்வாசி அர்த்தம் இல்லாத கேலிப் பெயர்களாகவே இருக்கும். நாம் பள்ளிக்கூடத்திலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு வைத்த பெயர்களோ வெளியே சொல்ல முடியாது!! ஆனால் அர்ஜுனனும் கண்ணனும் நண்பர்கள் தான். எவ்வளவு அழகாக ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்!

ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்கள்:

ஹ்ருஷீகேசன் = இந்திரியங்களுக்கு ஈசன்
அச்யுதன் = தன் நிலையிலிருந்து வழுவாதவன்
கிருஷ்ணன் = கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார்படும் துயரம் துடைப்பவன்
கேசவன் = அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்
கோவிந்தன் = ஜீவர்களை அறிபவன்
மதுசூதனன் = மது என்ற அசுரனை அழித்தவன்
ஜநார்தனன் = மக்களால் துதிக்கப்படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)
மாதவன் = திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ணேயன் = வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
அரிசூதனன் = எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷூதனன் = கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன் = வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
புருஷோத்தமன் = பரம புருஷன்
பகவான் = ஷட்குண சம்பன்னன்
யோகேச்வரன் = யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு = எங்கும் வியாபகமாய் இருப்பவன்
ஜகந்நிவாசன் = உலகுக்கு இருப்பிடம்
யாதவன் = யதுகுலத்தில் தோன்றியவன்

krishna_arjun

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:

அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்
தனஞ்ஜயன் = அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் = குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி = கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = இடது கையால் அம்பு எய்பவன்

ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் தந்த பட்டியல் இது. நான் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் இணைத்திருக்கிறேன்.
Contact swami_48@yahoo.com

தமிழ், சம்ஸ்கிருத மொழிகளின் அழகே அழகு!

siva uma

Lord Shiva with Uma (Parvati)

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 942 தேதி 30 மார்ச் 2014.

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: ‘நெய்யப்பம் தின்றால் ரெண்டுண்டு காரியம்’; அதாவது நெய்யப்பம் சாப்பிட்டால் சுவையான அப்பத்தை சாப்பிட்ட பலன் ஒன்று. இரண்டாவது பலன் என்ன? மீசையுள்ள ஆண்பிள்ளைகள் அந்த நெய்யை மீசையில் உரசும்போது மீசை அழகாக கண்ணங்கரேல் என்று வளரும்! அதே போல தமிழனாகப் பிறந்தவனுக்கும் இரண்டு பலன்கள் கிடைக்கின்றன. சம்ஸ்கிருத மொழியின் அழகை ரசிக்கும் போது அதை தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரு மடங்கு இன்பம் எய்தலாம்.

வடமொழியும் தென் மொழியும் நம் இரு கண்கள். இந்த இரண்டையும் அறிந்த ஒருவனால் மட்டுமே பாரதீய கலாசாரத்தை நூறு விழுக்காடு அறிய முடியும். தமிழில் இருண்ட மேகம் மழை பொழிவதைப் போல கவி மழை பொழிந்தவர் காளமேகப் புலவர். அவர் வாயைத் திறந்தாலே, சிலேடை மழை பொழிவார். எல்லாம் இரட்டுற மொழிவார். சில நேரங்களில் புகழ்வது போல இருக்கும் ஆனால் அது இகழ்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் இகழ்வது போல இருக்கும் ஆனால் அது புகழ்ச்சியாக இருக்கும்.

WhitePumpkins

இதோ ஒன்று:-

சிவ பெருமானும் பூசுணிக்காயும் ஒன்றே !!
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு — வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசுணிக்காய் ஈசனைப் போன்று.

பொருள்:- பூசணிக்காய்க்கு அடியில் காம்பு உடையது. மேல் பாகம் வெள்ளை நிற சாம்பல் பூசப்பட்டது போல இருக்கும். கொடியில் படர்வது. வளைந்த தழும்புகளுடன் அதன் உடல் இருக்கும்.(மாசுணம்=சாம்பல்).

சிவன் தன் கால்களை நந்தியின் மீது (காளைவாகனம்) வைத்திருப்பார். திரு நீறு பூசி உடல் வெளுப்பாகக் காணப்படுவார். பூங்கொடி போன்ற உமை அம்மையை ஒருபுறம் வைத்திருப்பவர். வளைந்த பாம்பை (மாசுணம்=பாம்பு) அணிந்தவர். காஞ்சி காமாட்சியின் வளைத் தழும்பை உடலில் தாங்கியவர். ஆகையால் பூசணிக்காயும் சிவனும் ஒன்றே!!

rada krisna

இதோ ஒரு சம்ஸ்கிருத சிலேடைக் கதை:

ராதா ராணி வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உலகமே அறியும். இருந்தபோதிலும் உடனே கதவைத் திறந்துவிட்டால் காதலின் சுவையே போய்விடும் அல்லவா! ஆகையால் ராதா ஒரு நாடகம் ஆடினாள்:–

ராதா: யாரது? கதவைத் தட்டுவது?
கண்ணன்: நான் தான் ஹரி (வந்திருக்கிறேன்).

ராதா: இங்கு நீ சாப்பிடக் கூடிய மிருகங்கள் எதுவும் இல்லை. இங்கு ஏன் வந்தாய்? (வடமொழியில் ஹரி என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு)

க: — அட என்னைத் தெரியவில்லையா? நான் மாதவன்.
ரா:– வசந்த காலம் வர இது உரிய தருணம் இல்லையே? (மாதவ என்றால் வசந்த காலம் என்ற பொருளும் வடமொழியில் உண்டு)

க:- ராதா! நான் ஜனார்தனன். உனக்கு என்னை நன்றாகத் தெரியுமே!
ரா:– உன்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் காடுதான் லாயக்கு. போய் யாரை வேண்டுமானாலும் தொல்லைப் படுத்து.

(ஜனார்தனன் என்றால் அஞ்ஞானத்தையும் அநீதி செய்வோரையும் அழிப்பவன் என்று ஒரு பொருளும் அநாவசியமாகத் தொல்லை கொடுப்பவன் என்று ஒரு பொருளும் உண்டு. விக்ன விநாயகனைக் கூட கஷ்டங்களைப் போக்குபவன், தீயோருக்கும் தன்னை வணங்காதோருக்கும் கஷ்டம் கொடுப்பவன் என்று நாம் சொல்லுவோம். முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரன் என்று அருணகிரி பாடியதையும் அறிவீர்கள்))

க: இளம் கன்னியே! தயவு செய்து கதவைத் திற. நான் மதுசூதனன் வந்திருக்கிறேன்.
ரா:- ஓஹோ! நீதான் த்விரேபனா? ( மதுசூதனன் என்ற பெயர் மது என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணனுக்கு வந்தது. இன்னும் ஒரு பொருள் மதுவை உண்ணும் தேனீ. கிருஷ்ணன் ராதாவிடம் மட்டுமின்றி மற்ற கோபியருடனும் போவது ராதாவுக்குப் பிடிக்காது. ஆகையால் தருணம் பார்த்து இப்படி வடமொழியில் தாக்கினார். ‘த்விரேப’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தேனீ என்றும் ஜாதியைவிட்டு விலக்கப்பட்டவன் என்றும் பொருள். அதாவது உன்னை வீட்டை விட்டு விலக்கிவிட்டோம். வீட்டின் கதவு திறக்காது, போ, போ!!

(அம்மா, அப்பாவுக்குப் பிள்ளைகள் மீது கோபம் வந்தால் சீ, வெளியே போ! என்று சொல்லிவிட்டு, பின்னர் கொல்லைப்புறம் வழியாக வந்தாலும் ‘உள்ளே வந்து சாப்பிடு, சனியனே!’ என்று அன்பு காட்டுவது போல ராதாவும் கொஞ்சம் ‘பிகு’ செய்துகொண்டாள்).

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய நூல்கள் அனைத்தையும் ஒருவர் படித்து முடிக்க நூறு பிறவிகள் எடுத்தாலும் போதாது. சரஸ்வதி தேவி சொன்னாள், “கற்றது கை மண் அளவு; கல்லாதது உலக அளவு” என்று. நாம் எல்லோரும் சொல்லலாம், ”கற்றது கடுகு அளவு; கல்லாதது இமய மலை அளவு” என்று!

contact swami_48@yahoo.com

“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை மாற்றுக!!!

Indus_girl

“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை மாற்றுக! இனி அது கங்கைச் சமவெளி நாகரீகம்!!

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 941 தேதி மார்ச் 29, ஆண்டு 2014.

சிந்து சமவெளி நாகரீகம் பற்றி நேற்று காலையில் பத்திரிக்கையில் ஒரு சுவையான செய்தி வெளியாகி இருக்கிறது. மிகவும் வியப்பான செய்தியும் கூட! நாற்பது ஆண்டுக் காலமாக இதை ஆராய்ந்து வரும் எனக்கு இது ‘நீ சொல்வது சரியே’ என்று ஒரு தொல் பொருட்த் துறை நிபுணர் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தது போல இருந்தது. முதலில் செய்தியைக் காண்போம்:–

ஹரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் மாவட்டம் உள்ளது. அங்கே ராகிகாரி என்னும் இடத்தில் இரண்டு பெரிய மணல் மேடுகள் உள்ளன. இவைகளை முறையாகத் தோண்டத் துவங்கிவிட்டனர். இது வரை சிந்து சமவெளி எழுத்துகளுடன் சில சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. இது 350 ஹெக்டேர் பரப்புக்கு வியாபித்து இருக்கிறது. அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. இதில் வியப்பான விஷயம் என்ன?

இந்தத் துறையில் நிபுணரும் இப்போதைய அகழ்வாராய்ச்சியின் டைரக்டருமான டாக்டர் ஷிண்டே வாய்மொழியாகவே கேட்போம்:– “தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தில்தான் இந்த நாகரீகத்தின் முதல் கட்டம் இருந்ததாக இதுவரை கருதி வந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் Kunal, Bhirrana, Farmana, Girawad and Mitathal முதலிய பல இடங்களில் சிந்துவெளிச் சின்னங்கள் கிடைத்துவருகின்றன. இவை எல்லாம் கி.மு 5000 ஆண்டு வரை நம்மை பின்னுக்கு இழுத்துச் செல்கின்றன. இப்பொழுது ராகிகாரியில் தோண்டி வருகிறோம். இது கக்கர் நதி வடிநிலம். இங்கே அந்த சின்னங்கள் கிடைப்பது உறுதியானால் சிந்துவெளி நாகரீகம் இங்கே தோன்றி பின்னர் சிந்து நதிக்குப் பரவியது உறுதி செய்யப்படும்” என்றார் ஷிண்டே!

Indus priest

இதுதான் வியப்பான செய்தி. இனி சிந்து வெளி நாகரீகம் சிந்து வெளியும் அல்ல. முன்னர் கருதியது போல சரஸ்வதியும் அல்ல. கங்கைச் சமவெளி நாகரீகம் என்றே அழைக்க வேண்டும். இதுவரை இரண்டாயிரம் இடங்களில் இந்த மாதிரி சின்னங்கள் கிடைத்துவிட்டன. முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர். பிறகு விண்வெளியிலிருந்து விண்கலங்கள் எடுத்த படங்களும், பூமிக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட அணுக் கதிரியக்க தண்ணீரும் அங்கே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி ஓடியதைக் காட்டியன. உடனே சரஸ்வதி நதி நாகரீகம் என்று எழுதத் துவங்கினோம். இப்பொழுது யமுனை நதி வடிநிலத்தில் அதைவிடப் பெரிய நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் இனி கங்கைச் சமவெளி நாகரீகம் என்றே அழைக்க வேண்டும். இதில் எனக்கு என்ன மகிழ்ச்சி? இதோ சொல்கிறேன்.

இந்த பிளாக்—குகளில் இதுபற்றி இருபதுக்கும் மேலான கட்டுரைகளை எழுதிவிட்டேன் (கீழே பட்டியலைக் காண்க).எல்லாவற்றிலும் நாகரீகம் இந்தியாவில் தோன்றி, மெதுவாக உலகம் முழுதும் போனது என்று எழுதிவருகிறேன். ஆரிய திராவிட வாதம் என்பது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும், பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டவும், இந்தியாவைத் துண்டு போடவும் வெளிநாட்டினர் செய்த சதி என்றும் ஆதரங்களுடன் காட்டி வருகிறேன். இப்பொழுதைய பத்திரிக்கைச் செய்தி, நாகரீகம் என்பது மஹாபாரத கால இந்திரப் பிரஸ்தம், குருக்ஷேத்திரமமருகே தோன்றி வெளியே சென்றது என்பதை நிரூபிக்கப்போகிறது!

indus 2 (2)

இந்திரனும் கிழக்கும்
பிராமணர்கள் செய்யும் தினசரி பூஜைகளிலும் ஹோம குண்டங்களிலும் இந்திரனை கிழக்கில் உள்ள திக் தேவதையாகவே வணங்குவர்.–வருணனுக்கு மேற்கு திசை– வெள்ளைக்கார அறிஞர்கள் கதை கட்டிவிட்டதைப் போல இந்திரன் மத்திய ஆசியாவில் இருந்து குதிரை மீது ஏறி ஈரான் (பாரசீகம்) வழியாக இந்தியாவுக்குள் பிரவேசித்து இருந்தால், அவருக்கு கிழக்கு திசையைக் கொடுத்திருக்க மாட்டார்கள். மேலும் வடமொழியில் கிழக்கு திசைக்கு பூர்வ திசை என்று பெயர். இதன் பொருள் ‘’முதல் திசை, பழைய புராதன திசை’’. சூரியன் உதிப்பதை வைத்து இப்படிப் பெயர் வைக்கவில்லை. இதன் காரணமாக வைத்தால் சூரியன் தொடர்பான பெயரையே வைத்திருப்பர்.

இதற்கு முன் நான் எழுதிய வேறு ஒரு கட்டுரையில் உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்தில் கங்கைச் சமவெளி நதிகளின் பெயர்கள் கிழக்கில் இருந்து துவங்கி வரிசையாக சொல்லப் பட்டிருப் பதையும் குறிப்பிட்டு இருந்தேன். மேற்கிலிருந்து அவர்கள் போயிருந்தால் முதலில் மேற்கில் உள்ள ஆறுகளின் பெயர்களையே சொல்லியிருப்பர்.

ஆக டாக்டர் ஷிண்டே சொல்லுவதையும் இந்திரன் பற்றிய குறிப்பு,, கங்கைச் சமவெளி நதிகளின் பட்டியல் ஆகியவற்றையும் பார்க்கையில் நாகரீகம் என்பது இந்தியாவில்தான் தோன்றியது என்பது உறுதியாகி வருகிறது.

இதுவரை உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இரண்டு:– 1.மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகில் பரவத் துவங்கியது.2. நாகரீகம் என்பது மேற்கில் துவங்கி மெதுவாக கிழக்கில் பரவியது. இதே போல வடக்கில் இருந்து தெற்கே போனது.
இதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைத்த தொல்பொருட் துறை தடயங்களாகும் பாபிலோனியா, எகிப்து போன்ற இடங்களில் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. நமது புராண இதிஹாசங்கள் இதைவிடப் பழமையான (கலியுக தோற்றம் கி.மு 3102) விஷயங்களைச் சொன்னாலும் நம்மிடம் தொல்பொருட் சின்னங்கள் இன்றி இலக்கியக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஆகையால் உலகம் நம்ப மறுக்கிறது. இந்தியப் பருவ நிலை, சிந்து கங்கை ஆகியவற்றின் அடிக்கடி மாறும் போக்கு ஆகியவற்றால் நம்மிடையே சின்னங்கள் எதுவும் இல்லை. அப்படிக் கிடைத்தால் நமது அதிர்ஷ்டமே. இப்பொழுதைய ராகிகாரி அகழ்வாராய்ச்சி சொல்லப்போகும் விஷயங்களைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

ஆயினும் சிந்து சம்வெளி நாகரீகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள் திட்டமிட்டு பரப்பிய வதந்திகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்து வருகின்றன— தவிடு பொடி ஆகி வருகின்றன. அவை என்ன?

yogi-seal-2

1.சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்பவும் ஆட்சியைப் பிடிக்கவும் ஒரு புதிய கொள்கையை கண்டு பிடித்தனர். இந்தியாவில் ஆரியர்கள், திராவிடர்கள் என்று இரண்டு இனங்கள் உண்டென்றும் ஒரு இனம் மத்திய ஆசியாவில் இருந்தும், மற்றொரு இனம் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்தும் இந்தியாவுக்குள் வந்ததாகவும் கதைகள் எழுதினர். அவர்கள் சொல்ல விரும்பியது ஆரியர்களும் திராவிடர்களும் வந்தேறு குடியினர் என்பதுதான்!!

2.பின்னர் சிந்து சமவெளி நாகரீகம் தோண்டி எடுக்கப்பட்டவுடன் திராவிடக் கோழைகளை, ஆரிய வீரர்கள் 3000 மைல்களுக்கு ஓட,ஓட விரட்டி காடு மலைகளுக்கும் தமிழ் நாட்டுக்கும் அனுப்பிவைத்தனர் என்று கதைகள் எழுதினர். திராவிடர்களுக்கு போண்டா மூக்கு, சுருட்டை முடி, குட்டையன், காட்டுமிராண்டி, கருப்பன் என்றும் ஆரியர்கள் உயரமானவர்கள், கூரிய மூக்கு, வெள்ளைத் தோல், நீண்ட முடி, குதிரை வீரர்கள் என்று படம் போட்டும் புத்தகம் வெளியிட்டனர்!! (காண்க எF.டி உட் புத்தகம்)

3.சிந்துவெளியில் மிருகங்கள் புடை சூழ இருக்கும் ஒரு முத்திரையைப் பார்த்து இவர்தான் ‘ஒரிஜினல் சிவா’, யஜூர் வேதத்தில் வரும் ருத்திரன் ‘போலி சிவா’, ஆரியப் பார்ப்பனர்கள் இரண்டையும் திறமையாக இணைத்து விட்டனர் என்று புதுக் கதைகளை விட்டனர். முருகனையும் கந்தனையும் ஆரிய, திராவிட இனவாதத்துக்குள் இழுத்து எது அசல், எது போலி என்று ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர்.

4.சிந்துவெளியில் கிடைத்த சில சின்னங்களை மனிதர்களின் ஆண்குறி, பெண்குறிச் சின்னங்கள் என்று சொல்லி அவைகளை வணங்கிவரும் சைவத் தமிழர்களை அவமானப்படுத்தினர். இப்பொழுது அமெரிக்க பெண்மணி வெண்டி டோனிகர் இதை மீண்டும் எழுதிய புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தடைசெய்ய வைத்துவிட்டனர்.

5.இந்தியர்களுக்கு வரலாறே கிடையாது. முதல் மன்னரே மௌர்ய சந்திரகுப்தன்தான் என்றும் புத்தகம் எழுதிக் கொடுத்தனர்.

OLYMPUS DIGITAL CAMERA

மேற்கூறிய எல்லாவற்றையும் ஹரிஜன தலைவர் பாபாசாஹேப் அம்பத்கர், மஹாத்மாகாந்தி, சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீ அரவிந்தர், காஞ்சி மஹாபெரியவர் போன்றோர் அவர் தம் எழுத்துக்களில் மறுத்துரைத்தனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பல்லாயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களிலும், அவைகளுக்குப் பின்வந்த தேவார திருவாசக திவ்யப் பிரபந்தத்திலும் 80,000 தமிழ் கல்வெட்டுகளிலும் இந்த இன வாதக் கொள்கைகளுக்கு சான்றே இல்லை என்பது மட்டுமில்லை. இதற்கு மாறான தகவல்களும் இருக்கின்றன.

நானும் கிடைத்த ஆதாரங்களை கீழ்கண்ட கட்டுரைகளில் சொல்லிவிட்டேன். மீண்டும் அதை எழுதாமல் உங்களுக்கு நேரம் கிடைக்கையில் படிக்க வேண்டுகிறேன்:

எனது முந்தைய கட்டுரைகள்:

‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
‘Dravidians are Invaders’
Who are Dravidians ? Part- 2 Post No. 761 dated 26/12/13
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள் கட்டுரை எண் 765; தேதி 29/12/2013
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
809 கால்டுவெல் பாதிரியார் தவறுகள் 30-1-14

Aryan Chapatti and Dravidian Dosa!
Aryan Hitler and Hindu Swastika
Are these customs Aryan or Dravidian?
Megasthenes didn’t know Buddha!
‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

harappatablet89

Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012

Vedic God Varuna in Oldest Tamil Book
Valmiki in Tamil Sangam Literature
Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)
Were Moses and Jesus ‘Aryans’?
Very Important Date: 23rd October 4004 BC! (posted on 30-1-14)
Ad6

‘ஜொராஸ்த்ரர் யார்? காஞ்சி சுவாமிகள் உரை pdf எண் 758, தேதி 25/12/13
Who was Zoroaster? Why Did Parsees ‘Return’ to Gujarat? (pdf) Post No 759 dated 25th December 2013.
பார்ஸீ மத- இந்து மத ஒற்றுமைகள் கட்டுரை எண்: 760; தேதி 26th December 13.
826 How Western Educated ‘Bandicoot’ killed ‘Indian Rats’? Date: 7-2-2014

ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்
ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்
ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள்!
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்துசமவெளியில் பேய் முத்திரை (20/8/12)
நாகராணி: சபரிமலை முதல் சிந்துவெளிவரை

திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் !
திராவிடர்கள் யார்?
தொல்காப்பியத்தில் வருணன்
தொல்காப்பியத்தில் இந்திரன்

Bull Fight,Indus Seal, Delhi Museum

சோம பானமும் சுரா பானமும்
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

Contact Swaminathan_48@yahoo.com

Change “Indus” Valley Civilization to “Ganges” Valley Civilization!! ‘Ulta’!!

By London Swaminathan
Post No 940 Dated 28th March 2014.

Following this morning’s news report of the discovery of an “Indus” valley site on the Ganges plains larger than Harappa, I wrote this article.

(Ulta is a Hindi word meaning opposite, Upside Down)
28TH_HARAPPA_1813531f
Latest Harappa site at Hisar District.

I have been doing research on the “Indus” Valley Civilization as an amateur historian for the past 40 years. I have read over 100 books on the civilization in the University of London library and from books in my personal collection. I have attended Asko Parpola’s lecture in London and had a few minute chat with him after his talk in 1994. I have written more than 20 articles on “Indus” Valley Civilization in this blog. I have read all the fifty plus interpretations on the undeciphered script of the Indus valley.

Do you ask, “So what?….. Do you want us to recommend an award for you for this tiny work? There are people who have done more work than you”…… My answer is “NO,NO”. I don’t expect anything other than you read my article. The reason being I am convinced that I am on the right track when I wrote in my blog “Indus Valley: A New Approach required” on 29th May 2011.

Calling the greatest civilization of the world as “Indus” Valley Civilization itself is wrong. Most of the scholars agree on it because more than 2000 sites have been discovered since the excavation of Mohenjo-Daro and Harappa on the banks of River Indus. Satellite information from space and ground water analysis by the nuclear scientists show that the mighty River Saraswati was flowing through North India long ago. Even today Hindus believe that the three rivers Ganga Yamuna and Saraswati joining at Prayag and this confluence is called Triveni Sangamam.

Bull Fight,Indus Seal, Delhi Museum

Why INDRA was allocated EAST?
The latest news about the discovery of a site at Rakhigarhi in Hisar District of Haryana throws new light on the civilisation. The new site covers 350 hectares which is larger than the Harappan site. First of all it is not Indus or Saraswati civilisation any more. It goes up to the River Ganga/Yamuna palins now. The second point is that civilisation traveled from the East towards West and not vice verse as scholars thought until now. What is the proof?

yogi-seal-2

In Hindu literature, Indra, the main Vedic deity is allocated the direction East and Varuna, the West. This shows that Indra was established well in the East. Brahmins offer everything for Indra only towards the East. Hindus believe that everything must be started from the East and in Sanskrit it is called Purva Disa meaning the First or the Ancient Direction. If it is because of sun rise they would have given some other name associated with the Sun. It is not so. I have already shown in one of my posts that the Rig Veda names all the Gangetic rivers starting from the East. This also shows this culture started from the East.This belied the western theories that Indra came from Central Asia via Iran or any other route. If they have slowly migrated towards east all the rivers in the west would have come first in their hymns.
The best proof came from an archaeologist this (28/3/12) morning:

Dr. Shinde, a specialist in Harappan civilization and Director of the current excavation at Rakhigarhi, said: “It was earlier thought that the origin of the early Harappan phase took place in Sind, in present-day Pakistan, because many sites had not been discovered then. In the last ten years, we have discovered many sites in this part [Haryana] and there are at least five Harappan sites such as Kunal, Bhirrana, Farmana, Girawad and Mitathal, which are producing early dates and where the early Harappan phase could go back to 5000 BCE. We want to confirm it. Rakhigarhi is an ideal candidate to believe that the beginning of the Harappan civilisation took place in the Ghaggar basin in Haryana and it gradually grew from here. If we get the confirmation, it will be interesting because the origin would have taken place in the Ghaggar basin in India and slowly moved to the Indus valley. That is one of the important aims of our current excavation at Rakhigarhi.”

Now we know how all the western theories had failed. So called scholars, who are mostly foreigners and Marxists, belittled everything Hindu. They mislead the entire world from the very beginning. In space technology even if a fraction of a millionth of a second in calculations go wrong,the satellite will be far away from the target. In Tamil we call it “Muthal Konal Mutrum Konal= if it is wrong in the beginning it will be absolute disaster at the end.

Ad6

In any history and in any part of the world there have been conflicts from the very beginning of human civilization. The Economist says at least 50 conflicts are happening at any given minute. None of them is interpreted as racial conflict. In any two parts of the world there are always differences in food, dress, languages, accents, dance, music etc. Only in India these have been interpreted as Aryan-Dravidian! In New Guinea Island more than 700 languages are spoken. It remains a big puzzle for anthropologists and linguists. No one interpreted it as 700 different races in one island. In Britain where I live, four regions have different cultures, languages or dialects. Britain is just the size of one state in India!

indusking

If you want a good number jokes, keep a highlighter pen in your hand, read a book on Indian history, culture or arts and underline wherever they mention Aryan or Dravidian. You will be amazed to see the number of highlighted words! Whether it is music or dance or food everywhere you will see a big divide! Just for a compare and contrast exercise, take any history book of any other country, you will see equal number of differences or conflicts without the mention of race. Tamil kings Chera, Choza and Pandya fought among themselves for over 1500 years. The foreign scholars did not insert any Aryan or Dravidian race there because they wanted to divide India by fomenting hatred between the North and the South to break India. Anyone who studies Christian Missionary letters such as Bishop Caldwell’s will understand it.

Swami Vivekananda told that the day religion dies in this country that will be the end of this country. It will go into pieces. Knowing this, foreign elements always give financial, moral and other support (like awards, prizes) to those who write against India or Hinduism. We can see this very clearly in the mass media. No other religion except Hinduism is criticized in the mass media around the world.

krokodil

What went wrong?
First of all the foreign “scholars” spread a deliberate lie that India consists of two races Aryans and Dravidians. None of the Sangam Tamil book or the earlier Sanskrit books supported this RACE theory. Later Swami Vivekananda, Mahatma Gandhi, Harijan leader BR Ambedkar, Kanchi Paramacharya (1894-1994) and Sri Aurobindo opposed this theory. But yet the old history books written by the British are still followed in our curriculum. Now the race theory is proved wrong because of the variations in the dates of the decline of Indus civilization and the date of Rig Veda as given by Max Muller and Co.

The second lie was that the Indus Valley people worshiped sex symbols and old form of Shiva called Pasupati. I have already published the pictures of Pasupati from Bahrain, Ireland etc. I have also proved that in the ancient cultures, at least one God in every culture was called Pasupati (Master of the animals or Mistress of the Animals). I have also shown that Vishnu Sahasranama of Mahabharata have got more attributes to Indus Gods than Rudram or Chamakam of Yajur Veda. So it is not Shiva. It is a Hindu God.

OLYMPUS DIGITAL CAMERA

The third thing is the hypothesis of the Soviet and Finnish scholars fifty years ago. This is the biggest blunder. They mislead every scholar in the world and as a result we have not yet deciphered the Indus script. The classification of languages as Indo Aryan and Dravidian itself is a big blunder. If there are any two languages that are closer to one another that is TAMIL and SANSKRIT. No other language is closer to Tamil than Sanskrit. I am not talking about the influence due to geographical proximity. The internal structure of the languages itself is one and the same. Since this is a big topic I will prove it separately.

Being a Tamil, I am at an advantageous (vantage) position to look at it from the top of the ‘language hill’. I have read umpteen articles about Tamil’s relationship with Japanese, Korean, Turkish, and Finnish! If all these funny theories are right, Tamils don’t belong to Indian soil!! The fact of the matter is that any two languages have some words similar. Russian and Israeli linguists have proved it. Famous Tamil dancer Mrs Padma Subramaniam went to Australia and noticed scores of Indian words in the songs of aborigines! Of course she would have noticed it because Kanchi Paramacharya has pointed out way back in 1932 that they have Shiva dance with Vibhuti on their body like a Brahmin! The world had only one religion in the past before all these Semitic and other oriental religions were founded by known prophets. Hindus have neither a known prophet nor a starting date. Even Krishna was very humble in Bhagavad Gita saying that it was an ancient doctrine that he was teaching Arjuna!

harappatablet89

So now is the time to rewrite our history. We know from Mahabharata that Jayadratha and Sindhu Dwipa Ambareesh ruled Indus Valley. From Ramayana, we know that Lava and Kusha invaded Indus valley. We know that Drupada ruled Punjab and Gandhari’s father ruled Afghanistan. If we stitch them together we will get a beautiful cloth – as beautiful as ancient India.

Please read my previous posts on the same subject:
Indus Valley: New Approach Required (posted on 29 May 2011), Serpent Queen: Indus Valley to Sabari Malai (18 June 2012), Flags: Indus Valley-Egypt Similarity (15-10-2012), Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (21-1-2012), Human Sacrifice in Indus Valley and Egypt (31-10-12), Open Sesame: Pass Word to Heaven (23-12-13), Indus Valley Case: Lord Indra Aquitted (28-12-13), The Sugarcane Mystery:Indus Valley and the IKshwahu Dynasty (19-11-11), Human Sacrifice in Indus Valley and Egypt, Vishnu Seal in Indus Valley civili sation. Ghosts in Indus Valley (19-8-12), Tiger Goddess of Indus Valley (22-8-12) Human Sacrifice in Indus Valley (31 Oct 2012)

indus 2 (2)
All these articles are in Tamil as well.

Contact swami_48@yahoo.com

புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர்

my_tattoo_by_kiyannaori

Compiled by London Swaminathan
Pot No 939 dated 28th March 2014.

சம்ஸ்கிருதம் பற்றி பல அறிஞர்கள் சொன்ன பொன் மொழிகளில் சுவாமி விவேகாநந்தர் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானது:

“ என்னுடைய ஐடியா (எண்ணம்/விருப்பம்) என்னவென்றால் காடுகளிலும், மடாலயங்களிலும் மறைந்து கிடக்கும், புத்தகங்களில் உள்ள நம்முடைய ரத்தினக் குவியலை வெளிக் கொணர்வதுதான். ஒரு சிலரின் உடைமைஅகளாக உள்ள அவற்றை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை அவைகள் பாமர மக்கள் எளிதில் அணுகமுடியாத நூற்றாண்டுக் கணக்கில் பழமையான சம்ஸ்கிருத மொழியில் இருக்கின்றன. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர், அறியாதவர் ஆகிய எல்லோரின் பொதுச் சொத்தாக இதை ஆக்க வேண்டும்.

இதில் கஷ்டம் என்ன வென்றால் நமது பெருமைமிகு சம்ஸ்கிருத மொழிதான். நாம் எல்லோரையும் சம்ஸ்கிருத அறிஞர்களாக்கும் வரை இந்தக் கஷ்டம் நீடிக்கும். முடிந்தால் இதைச் செய்யலாம். நான் என் அனுபத்தைச் சொன்னால் இது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கும் புரியும். வாழ்நாள் முழுதும் இந்த மொழியைப் படித்து வருகிறேன். ஆயினும் ஒவ்வொரு புத்தகமும் புதிதாகவே தோன்றுகிறது. அப்படியானால் கொஞ்சமும் இதைப் படிக்க நேரமில்லதவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்கள்.ஆகையால் தாய் மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதோடு சம்ஸ்கிருதமும் சொல்லித் தரவேண்டும். ஏனென்றால் சம்ஸ்கிருதச் சொற்களின் கம்பீரமும் ஒரு சமூகத்துக்கு பலத்தையும், கௌரவத்தையும், சக்தியையும் தரும்.

paninin big

கீழ்மட்டத்தில் இருந்தவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர ராமானுஜர், சைதன்யர், கபீர் போன்றோர் செய்த அரிய பெரிய பணிகள் அபூர்வமான பலன் தந்தன. ஆனாலும் அந்த மஹாபுருஷர்கள் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் அவைகள் அடைந்த தோல்விகளையும் விளக்க வேண்டும். இத்தான் ரகசியம். அவர்கள் கீழ்ஜாதி மக்களை உயர்த்தினர். ஆனால் சம்ஸ்கிருதத்தைப் பரப்பவில்லை. மாபெரும் மஹான் புத்தன் கூட பொது மக்கள் சம்ஸ்கிருத படிப்பதை நிறுத்தியன் முதல் தவறான பாதையில் அடி எடுத்துவைத்தார். உடனடியாக கை மேல் பலன் வேண்டும் என்று எண்ணி மக்களின் பேச்சு மொழியான பாலி மொழியில் சொற்பொழிவாற்றினார். மக்களுக்கும் நன்றாகப் புரிந்தது. மகத்தான பணி! அகல நெடுக விரிந்தது, பரந்தது அவர்தம் பணி. ஆனால் அத்தோடு சம்ஸ்கிருதத்தையும் அவர் கற்பித்திருக்க வேண்டும்.

என்ன நடந்தது? அறிவு பெருகியது. ஆனால் மதிப்பு போய்விட்டது. அவர்களிடையே பண்பாடு இல்லை. ஒரு நாட்டின் கலாசாரம்தான் பயங்கரமான அதிர்ச்சிகளை சமாளிக்க வல்லது. அறிவு எக்கச்சக்கமாக இருக்கலாம்.. அது நல்லது செய்யாது. ரத்தத்தில் பண்பாடு இருக்க வேண்டும். நாமும் பார்க்கிறோம். நவீன காலத்தில் சில நாடுகளில் அபாரமான அறிவு வளர்ச்சியை. என்ன கண்டோம்? அவர்கள் எல்லாம் புலிகள், காட்டுமிராண்டிகள். காரணம் பண்பாடு இல்லை.”

ஆதாரம்: சுவாமி விவேகாநந்தரின் முழு சொற்பொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், ஆங்கில வெளியீடு, அத்வைத ஆஸ்ரம, கல்கத்தா, 700 014. வெளியீடு 1990

sanskrit-tattoo

“ இந்தியாவிடமுள்ள மிகப் பெரிய பொக்கிஷம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், இந்தியாவின் மிகச் சிறந்த பாரம்பர்யச் சின்னம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், உடனே தயங்காமல் பதில் சொல்வேன்: சம்ஸ்கிருத மொழியும், சம்ஸ்கிருத இலக்கியத்தில் அடங்கி இருக்கும் எல்லா விஷயங்களும் என்று.
—இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முள் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பரோ
(கம்ப ராமாயணம் தற்சிறப்புப் பாயிரம், செய்யுள் 10)

சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழி என்றும் மூன்று ராமாயணங்களில் தான் பின்பற்றுவது வால்மீகி ராமாயணத்தையே என்றும் கம்பர் சொல்கிறார்).

sound creation

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

இதில் வடமொழியும் தமிழ் மொழியும் சிவனிடமிருந்து தோன்றின. ஒன்றை பாணினிக்கும் மற்றொன்றை அகத்தியனுக்கும் அருளினார். இரண்டும் தொடர்புடைய மொழிகள் என்று பரஞ்சோதி முனிவர் கூறுகிறார்.

இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலிவ்
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம் என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

“சம்ஸ்கிருத மொழி – எந்தத் தொல் பழங்காலத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கட்டும் — அதன் அமைப்பு அற்புதமானது. கிரேக்க மொழியை விட சிறப்புடையது — லத்தீன் மொழியை விட வளம் பெற்றது – இந்த இரண்டு மொழிகளுடனும் சொல்லமைப்பிலும், இலக்கணத்திலும் சம்ஸ்கிருதம் நெருக்கமானது, ஆனால் கட்டமைப்பில் அவற்றை விட செம்மைப் படுத்தப்பட்டது – இதை தன்னிச்சையாக நடந்ததென்று சொல்லலாம் – ஆயினும் மொழிவரலாறு தெரிந்த எவரும் ஒரே மூலத்தில் இருந்து இவை மூன்றும் வந்தன என்பதை ஒதுக்கமுடியாது –மூன்றையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கும்—மூல மொழி இப்போது இல்லாமற் போயிருக்கும்.– இதே போல வேறு ஒரு வகையில் காதிக், கெல்டிக் மொழிகளையும் சொல்லலாம். பாரசீக மொழியையும் இந்த அணியில் சேர்க்கவேண்டும்.
–வில்லியம் ஜோன்ஸ் (1744 – 1796 ), மொழியியல் அறிஞர்

sanskrit-latvian similar words

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894 – 1994)

“காஞ்சீபுரத்தில் காமாக்ஷி ஸந்நிதியில் ஊமை ஒருவர் உபாஸனை செய்து மஹா கவி ஆனார். அவர் அம்பிகையின் விஷயமாக 500 ச்லோகம் செய்திருக்கிறார். மூகபஞ்ச சதி என்று அவற்றின் பெயர். அவை மிகவும் சுவையுள்ளனவாக இருக்கும். ஸம்ஸ்க்ருதம் தெரியாவிடின் அவைகளின் ரஸத்தை அனுபவிக்கமுடியாது. ஸம்ஸ்க்ருதம் தெரிந்தால் மூககவி, காளிதாசன் முதலியவர்களுடைய வாக் மாதுர்யத்தை ( சொல் இனிமை) அனுபவிக்கலாம். பகவத் பாதளுடைய (ஆதி சங்கரர்) வாக் மஹிமையை அனுபவிப்பதற்கும் ஸம்ஸ்க்ருத ஞானம் வேண்டும். இந்த மூன்றுக்காகவாவது எல்லோரும் சம்ஸ்கிருதம் வாசிக்க வேண்டும்.

“நம்முடைய மதம் எப்படிப் பொது மதமோ அது போல ஸம்ஸ்க்ருதம் பொதுப்பாஷை. அதற்கும் ஊர் இல்லை.தெலுங்கு, தமிழ், இந்துஸ்தானி முதலியவற்றிற்குத் தேசம் உண்டு. ஸம்ஸ்க்ருதத்துக்குத் தேசமே இல்லை. இந்த ஸம்ஸ்க்ருதத்தைச் செத்துப்போன பாஷை என்று சிலர் சொல்லுகிறார்கள்.

எங்கள் அம்மாவுக்கு எனக்கு முன் ஒரு குழந்தை இருந்தது. அவள் ஒரு ஞானி. அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டது. அதற்காக அவள் அழவில்லை. அம்மாவுக்கு என்னிடம் நிரம்பப் பிரியம். ஒரு நாள் நான் அவளைப் பார்த்து, “ அம்மா பெரியவன் செத்துப் போனதற்கு நீ அழவில்லை; நான் செத்துப் போனால் அழுவாயோ மாட்டாயோ?” என்று கேட்டேன் “நீயும் அவனைப் போல பிள்ளைதானே; அவன் உடம்பில் செத்துப் போனான், நீ மனசில் செத்துப் போ” என்றாள். செத்துப்போன மனசை உடையவனாக வேண்டும் என்பது அவள் எண்ணம். அந்த மாதிரிதான் ஸம்ஸ்க்ருதம் செத்துப் போயிற்று.

தனக்கு என்று ஒரு இடம் இருந்தால் பயம் இருக்கும். எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸம்ஸ்க்ருதம் . இப்பொழுது லோகத்திலுள்ள பாஷைகள் எல்லாவற்றிலும் ஸம்ஸ்க்ருதம் கலந்திருக்கிறது. அவற்றில் பெரும்பலானவை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து உண்டானவை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் கலந்திருக்கின்றன. தமிழ் செய்யுளாக இருந்தால் அதற்கு உரை ஸம்ஸ்க்ருதம் ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு, தோஷம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம். தேச பாஷையிலுள்ள கடினமான சொற்களுக்கு ஸம்ஸ்க்ருத வார்த்தைகளால் அர்த்தம் சொல்லி விளங்க வைக்கிறோம்.

சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்புதானே சாகிறது. அது உயிரோடு இருக்கிறது. பின்பு சாகிறது. உயிர் இல்லாதபோது அது செத்துப் போகிறது. உயிருக்கு மற்றோர் உயிர் ஏது? அது எப்பொழுதும் செத்ததுதான். ஸம்ஸ்க்ருதம் எல்லா பாஷைக்கும் உயிராக இருக்கிறது.
sanskrit comparative chart

இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவியிருந்தன. நமது மதத்துக்கு வேதம் பிரமாணம். எல்லா மதமும் நம்முடைய மதங்களே. எல்லாம் சேர்ந்து மறுபடியும் ஒன்றாகிவிடலாம். அஹம்பாவம் இல்லாமல் அன்பொடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமாகக் கேட்பார்கள். மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமான மதமாக ஆகும்”.
— (12-10-1932-ல் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு).

இந்த சொற்பொழிவு 15 ஜூலை 2012–ல் சம்ஸ்கிருதத்துக்கு உயிர் இருக்கிறதா? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி..

contact swami_48@yahoo.com

sanskrit-letters